Saturday, December 07, 2013

ஜாக், தமுமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஒரு வரலாற்றுப் பார்வை


ஜாக், தமுமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு வரலாற்றுப் பார்வை

இப்பிரசுரம் தஞ்சை வல்லம் மாநாட்டின் போது ஷம்சுள்ளுஹா அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டதாகும். தவ்ஹீத் கொள்கையில் புதிதாக இணைந்துள்ள சகோதரர்களுக்கு இந்த வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக அதை நமது தளத்தில் வெளியிடுகிறோம்.

தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி:

1980களுக்கு முன்னால் தமிழக முஸ்லிம்களின் நிலையும், தமிழக உலமாக்களின் நிலையும் எவ்வாறு இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிய மாட்டார்கள்.

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை அவர்களிடமிருந்து அறவே எடுபட்டுப் போயிருந்தது. திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் அனுமதிக்கப்படாத போலிச் சடங்குகளைத் தான் இஸ்லாம் என்ற பெயரால் தமிழக முஸ்லிம்கள் செய்து வந்தனர். மத்ஹபு என்ற பெயரால் முரண்பட்டுக் கிடந்தனர். போலி ஷைகுமார்களின் கால்களில் விழுந்து வணங்குவதை பெரும் பாக்கியமாகக் கருதி வந்தனர்.

இந்தக் காலகட்டத்தில் தான் மயிலாடுதுறை அருகில் அமைந்துள்ள சங்கரன்பந்தல் என்ற கிராமத்திலிருந்து தவ்ஹீத் பொறி பற்றத் தொடங்கியது.

பைஜுல் உலூம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த அரபுக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்த இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த பி.ஷைகு அலாவுத்தீன் எனும் பி.எஸ். அலாவுத்தீன், அவரது சகோதரர் மல்லவி பி.ஜைனுல் ஆபிதீன் ஆகியோர் அந்த அரபுக்கல்லூரியில் படித்துக் கொடுப்பதோடு நின்று விடாமல் மக்களை நல்வழிப்படுத்த மாதந்தோறும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலானார்கள்.

தீன் விளக்கக் குழு என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதுடன் துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும், அவ்வூரில் நிலவிய மூடநம்பிக்கைகளை எதிர்த்து வந்தனர்.

மேலப்பாளையத்தைச் சேர்ந்த மவ்லவி ஷம்ஸுல் லுஹா, மவ்லவி முஹம்மது அலி ரஹ்மானி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி போன்றவர்களும் சங்கரன்பந்தல் சிராஜுத்தீன், அப்துல் பத்தாஹ் போன்ற நண்பர்களும் இப்பிரச்சாரத்துக்குப் பக்கபலமாக இருந்தனர்.

இவர்களில் யூசுப் மிஸ்பாஹி கொள்கையில் முரண்பட்டு ஜாக் இயக்கத்தில் இன்னும் இருக்கிறார்.

இந்த நிலையில் 1984ல் தஞ்சை நகரில் ஆற்றங்கரைப் பள்ளிவாசல் வளாகத்தில் தமிழக உலமாக்கள் சபை சார்பில் வலிமார்கள் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் உரையாற்றிய எல்லா உலமாக்களுமே தர்கா வழிபாட்டை ஊக்குவித்தும் ஆதரித்தும் பேசினார்கள். ஏகத்துவ சிந்தனைவாதிகளின் இரத்தம் சூடேற்றும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலை நியாயப்படுத்தினார்கள்.

அதைக் கண்டு கொதித்துப்போன பி.ஜைனுல் ஆபிதீன், அம்மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் அனைத்தும் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரானவை என்பதைத் தக்க ஆதாரங்களுடன் "ஒரு நாடகம் அரங்கேறியது'' என்ற தûலைப்பில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு பிரசுரம் வெளியிட்டார்.

ஒரு நாடகம் அரங்கேறியது என்ற பிரசுரத்தை வாசிக்க

அப்பிரசுரத்தால் ஆத்திரம் அடைந்த உலமாக்கள் வேன்களில் வந்து இறங்கி சங்கரன்பந்தலில் பணியாற்றும் பி.ஜைனுல் ஆபிதீனை மதஸாவில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி முறையிட்டனர். கல்லூரி நிர்வாகம் அதை ஏற்க மறுத்துவிட்டாலும் உலமாக்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதித்தது.

சங்கரன்பந்தலில் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் வேறு சில பகுதிகளிலும் பிரச்சாரம் நடத்தப்பட்டு வந்தது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் மவ்லவி கமாலுத்தீன் மதனி,

கடையநல்லூரில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி,

பேர்ணாம்பட்டில் பி.அன்வர்பாஷா, ரபீக் அஹ்மது தலைமையிலான குழுவினர்,

கோவையில் அப்துல் மாஜித் உமரி,

திருச்சியில் அப்துல் மஜீத், அப்துல் சமத் தலைமையிலான குழுவினர்,

சென்னையில் உஸ்மான் கான் தலைமையிலான குழுவினர்

பிரச்சாரம் செய்து வந்தனர்.

இவர்களில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி கொள்கையில் உறுதியாக நின்று மரணித்து விட்டார். மவ்லவி கமாலுத்தீன் மதனி, ரபீக் அஹ்மது, அப்துல் மாஜீத் உமரி, அப்துல் மஜீத், அப்துல் சமத், உஸ்மான் கான் ஆகியோர் கொள்கையில் முரண்பட்டு ஜாக் இயக்கத்தில் இருந்து வருகின்றனர். அன்வர் பாஷா அவர்கள் இன்று வரை தடம் மாறாமல் உறுதியுடன் நம்மோடு இருந்து வருகிறார்.

சங்கரன்பந்தலில் பி.ஜைனுல் ஆபிதீன் தெளிவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டு மேற்கண்ட பகுதிகளில் உள்ளவர்கள் அவரைப் பேச்சாளராக அழைத்து பொதுக் கூட்டங்கள் நடத்தினார்கள். இதனால் அவர்களுக்கிடையே அறிமுகமும், ஒருங்கிணைப்பும் ஏற்பட்டது.

இதே காலகட்டத்தில் துபையில் இஸ்லாமிய விழிப்புணர்வு மையம் ஐ.ஏ.சி என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இவர்களும் தமிழ் கூறும் துபை வாழ் மக்களிடம் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

மவ்லவி முஹம்மது இக்பால் மதனி, லெப்பைக்குடிகாட்டைச் சேர்ந்த ஜஹாங்கீர், கள்ளக்குறிச்சி சுலைமான், மேலப்பாளையம் பழ்லுல் இலாஹி உள்ளிட்டவர்கள் இஸ்லாமிய விழிப்புணர்வு மையத்தை நடத்தி வந்தனர்.

(இவர்களில் ஜஹாங்கீர் கொள்கையில் உறுதியாக நின்று மரணித்து விட்டார். மற்றவர்கள் கொள்கையில் முரண்பட்டு நமக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர்.)

நஜாத் மாத இதழ்:

தமிழகத்தின்  சில பகுதிகளில் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்தாலும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் எழுத்தும், பேச்சும் பாமரர்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் தக்க ஆதாரங்களுடன் இருந்ததை ஒலி நாடாக்கள் மூலமும், துண்டுப் பிரசுரம் மூலமும் துபை இஸ்லாமிய விழிப்புணர்வு மையத்தினர் கண்டறிந்தனர்.

சங்கரன்பந்தல் மதரஸாவில் தொடர்ந்து பணியாற்ற முடியாத அளவுக்கு கெடுபிடிகள் அதிகமானதால் அங்கிருந்து வெளியேறும் எண்ணத்தில் இருந்த பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை ஐ.ஏ.சி இயக்கத்தினர் நேரிலும் தபால் மூலமும் தொடர்பு கொண்டனர்.

"உங்கள் எழுத்தாற்றலைப் பயன்படுத்தி ஏன் மாத இதழ் ஒன்றை நடத்தக் கூடாது'' என்று அவர்கள் பி.ஜைனுல் ஆபிதீனிடம் கேட்டனர். தவ்ஹீத் அடிப்படையில் நடத்தப்படும் பத்திரிகைகளை இலாபகரமாக நடத்த முடியாது என்று பி.ஜே சொன்ன போது "மாதம் மாதம் எவ்வளவு நட்டம் ஏற்படுகிறதோ அதை நாங்கள் தந்து விடுகிறோம். நீங்கள் மதஸாவை விட்டு வெளியேறி பத்திரிகை நடத்த முன் வாருங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர்.

"எழுதுகின்ற பணியை மட்டும் தான் என்னால் ஏற்க முடியும், பண விவகாரத்தை வேறு யாரிடமாவது ஒப்படைத்துக் கொள்ளுங்கள்'' என்று பீ.ஜே திட்டவட்டமாகக் கூறி விட்டார்.

அதன் பின்னர் திருச்சி அப்துல் சமத், அப்துல் மஜீத் தலைமையில் செயல்பட்டு வந்த திருச்சியில் வாட்ச் ரிப்பேர் கடை வைத்திருந்த அபூ அப்துல்லாஹ் என்பவரை நிர்வாகம் செய்ய ஐ.ஏ.சி இயக்கத்தினர் நியமித்தனர்.

ஐ.ஏ.சி யின் சார்பில் அந்நஜாத் என்ற மாத இதழ் துவக்கப்பட்டது. அதன் எழுத்துப் பொறுப்பு முழுவதும் பீ.ஜே.யைச் சேர்ந்தது. இந்த இதழ் தமிழகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் குடும்பத்திற்காக ஏராளமான சந்தாக்களை அனுப்பி பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினார்கள். இதன் காரணமாகவே தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களை நஜாத் கூட்டம் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

பத்திரிகையின் மாபெரும் வளர்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஐ.ஏ.சிக்கும் அபூ அப்துல்லாஹ்வுக்கும் மத்தியில் பண விஷயத்தில் விவகாரம் ஏற்பட்டது. ஐ.ஏ.சி பக்கம் நியாயம் இருந்ததால் ஐ.ஏ.சி பக்கம் பீ.ஜே நின்றார். மற்ற ஆரம்பகால பிரச்சாரகர்களும் ஐ.ஏ.சி பக்கம் நின்றனர்.

அபூ அப்துல்லா நஜாத் பத்திரிகையைத் தனது சொந்தப் பத்திரிகை என்று சட்டப்படி பதிவு செய்து கொண்டதால் அவர்களால் நியாயம் பெற முடியவில்லை. அந்த அநியாயத்துக்குத் துணை போகக் கூடாது என்று பீ.ஜே நஜாத் பத்திரிகையிலிருந்து வெளியேறினார். பல்லாயிரம் பத்திரிகைகள் விற்பனையை சில நூறு பிரதிகளில் கொண்டு வந்த அபூ அப்துல்லா அதைக் கோமா ஸ்டேஜில் நிறுத்தினார். அவரும் அவருடன் இருந்த சிலரும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டனர்.

ஜாக் உதயம்:

அதே காலகட்டத்தில் தான் தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே பிரச்சாரம்  செய்தவர்கள் கூட்டமாக ஒரு அமைப்பை உருவாக்கி ஏன் செயல்படக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

அனைவரும் திருச்சியில் உள்ள தேவர் ஹாலில் (இது இப்போது இல்லை) கூட்டப்பட்டு அஹ்லுல் குர்ஆன் வல்ஹதீஸ் (ஆக்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பி.ஜைனுல் ஆபிதீன் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்த இயக்கம் ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (ஜாக்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஓராண்டுக்குப் பின் தனக்கு தலைமைப் பொறுப்பு வேண்டாம். பொறுப்பு இருப்பதால் அதிகமான பிரச்சார நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியவில்லை என்று பீ.ஜே மறுத்து கமாலுத்தீன் மதனியைத் தலைவராக்குமாறு வலியுறுத்தினார். மக்கள் இதைக் கடுமையாக எதிர்த்தாலும் பீ.ஜே தனது நிலையை மாற்றிக் கொள்ள விரும்பாததால் வேண்டா வெறுப்பாக கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார்.

அதன் பின்னர் கமாலுத்தீன் தலைமையில் பி.ஜைனுல் ஆபிதீன், சம்சுல்லுஹா, அலி ரஹ்மானி உள்ளிட்ட பல அறிஞர்கள் தீவிரப் பிரச்சாரகர்களாகச் செயல்பட்டனர்.

மவ்லவி அப்துல்லா என்பவர் மதுரையில் புரட்சி மின்னல் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி வந்தார். ஏகத்துவப் பிரச்சாரத்தால் கவரப்பட்ட அவர் தனது பத்திரிகையை ஏகத்துவக் கொள்கையைப் பிரதிபலிக்கும் இதழாக நடத்த முன்வந்தார். ஏற்கனவே அந்நஜாத் பத்திரிகையை இழந்து புதிய பத்திரிகை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்த ஐ.ஏ.சி  இயக்கத்தினர் மவ்லவி அப்துல்லாஹ்வின் விருப்பத்தை ஏற்று புரட்சி மின்னலைத் தத்தெடுத்தனர். பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் உலமாக்களுடைய ஆக்கங்களைத் தாங்கி புரட்சி மின்னல் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

எதிர்ப்பு வலுத்தது:

மேடைப் பிரச்சாரம் மூலமாகவும் புரட்சி மின்னல் பத்திரிகை வழியாகவும முடுக்கி விடப்பட்ட தீவிரப் பிரச்சாரம் காரணமாக மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டது போல் எதிர்ப்பும் அதிகமானது.

“பள்ளிவாசலில் தொழத்தடை, ஊர் நீக்கம், அடக்கு முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன.

உலமாக்களால் தூண்டி விடப்பட்ட மார்க்கம் அறியாத மக்கள் தவ்ஹீத் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.

“பீ.ஜே அவர்கள் முத்துப்பேட்டை, நாகூர், மதுரை, சென்னை, முரார்பாத், பொதக்குடி, பண்டாரவாடை, லெப்பைக்குடிக்காடு, தேங்காய்ப் பட்டிணம், கோவை எனப் பல ஊர்களில் தாக்கப்பட்டார். மேலப்பாளையத்தில் கொலை முயற்சியில் மேடையேறி அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். மற்ற பிரச்சாரர்களும் ஆங்காங்கே தாக்கப்பட்டனர்.

அந்தத் தடைகளைக் கண்டு தவ்ஹீத் பிரச்சாரர்களும் கொள்கைவாதிகளும் நிலை மாறவில்லை. முன்பை விட இன்னும் உறுதியுடனும், தீவிரமாகவும் பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.

நன்றாகப் போய்க் கொண்டிருந்த பிரச்சாரத்தில் அரபு நாட்டு நிதியை மையமாக வைத்து பிரச்சனை தலைதூக்கியது.

ஜாக் தலைவராக இருந்த கமாலுத்தீன் மதனியும், மதீனாவில் படித்த மற்ற மதனிகளும், சவூதி அரசிலிருந்து சம்பளம் பெற்று வந்தனர். இந்தத் தொடர்பைப் பயன்படுத்தி சவூதி அரசுடன் தொடர்பு கொண்டு ஜாக் இயக்கத்துக்கு நிதியாரங்களைப் பெற முயன்றனர். எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மேடையில் அரபு மொழியில் பெரிய பேனரைக் கட்டி அதை வீடியோவாக்கி அதை சவூதிக்கு அனுப்புவது மட்டுமே குறிக்கோளாக ஆனது.

அரபு நாட்டிலிருந்து உதவிகள் பெற வேண்டாம் என்று பீ.ஜேயும் மதனிகள் அல்லாத மற்ற பிரச்சாரகர்களும் மறுப்புத் தெரிவித்ததால் பீஜேயை அழைக்காமலே ஆலோசனைக் கூட்டம் நடக்கலானது.

அரபு நாட்டுப் பணம் வர ஆரம்பித்துள்ளது என்பதற்காக இயக்கத்திலே சேர்ந்தவர்கள் சுய ஆதாயத்துக்காக அரபுநாட்டு நிதி உதவி பெறுவதை ஆதரித்து தூபம் போட்டனர். பள்ளிவாசல், மதரஸா, நோன்புக் கஞ்சி, தஃவா என்று பல வகைகளில் இலட்சம் இலட்சமாகப் பணம் வர ஆரம்பித்தது. என்ன வரவு என்பதும், என்ன செலவு என்பதும மதீனாவில் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் தான் தெரியுமே தவிர, ஜாக் மாநில நிர்வாகிகளுக்குக் கூட தெரியாத நிலை ஏற்பட்டது.

தங்களுக்குக் கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக தவ்ஹீத்வாதிகளே இல்லாத ஊரிலும் பள்ளிவாசல் கட்டப் பணம் வாங்குவது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக ஆனது. ஆனாலும் சிரமப்பட்டு உருவாக்கிய இயக்கம் பாழாகி விடக்கூடாது என்பதற்காக பிரச்சாரகர்கள் உள்ளிருந்து போராடி வந்தனர்.

கோவை அய்யூப் உள்ளிட்ட பலர் மீது பொருளாதார மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் பீ.ஜே யால் எடுத்துக் காட்டப்பட்டும் அவர் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டார். அதற்கு கமாலுத்தீன் மதனியும் உடந்தை என்பது உறுதியானது.

இதை பின்வரும் லின்குகளில் இருந்து அறியலாம்



அரபு நாடுகளில் நிதி உதவி பெறக்கூடாது என்பதில் பிரச்சனை ஆரம்பித்தாலிம் அதன் பின்னர் மேலும் பிரச்சனைகள் உருவாயின. அதாவது கணக்கு வழக்குகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். அனைத்து சகோதரர்களுக்கும் உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டு அவர்களுக்கு தட்டிக் கேட்கும் அதிகாரம் இருக்க வேண்டும். தலைமைப் பொறுப்பு நிரந்தரமாக ஒருவரிடம் இருக்கக் கூடாது என்பன போன்ற பிரச்சனைகள் உருவாயின.

அரபு நாடுகளில் உதவி பெறக் கூடாது;

நிரந்தரமாக பொறுப்பில் இருக்கக் கூடாது;

கொள்கைவாதிகளுக்கு தட்டி கேட்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்;

அதற்காக உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும்

என்பன போன்ற கோரிக்கைகளை கமாலுத்தீன் மதனி ஏற்க மறுத்தார். இதனால் இவர்களுடன் சேர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.

மற்ற நிர்வாகிகளுக்குக் கூடத் தெரியாமல் வரவு செலவு வைப்பது முறையா? நீங்கள் மரணித்துவிட்டால் என்னவாகும் என்று கமாலுத்தீன் மதனியிடம் பீ.ஜே நேரடியாகக் கேட்ட போது, "எல்லாக் கணக்குகளும் என் மனைவிக்குத் தெரியும்'' என்று கமாலுத்தீன் மதனி பதிலளித்தார். இவர் நிர்வாகிகளிடம் கூட கணக்குக் காட்டத் தயார் இல்லை என்றால், இதைவிட மோசடி இருக்க முடியாது என்ற எண்ணம் தவ்ஹீத் பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்த அனைத்து பிரச்சாரகர்களுக்கும் ஏற்பட்டது.

இதே காலகட்டத்தில் தான் அல்ஜன்னத் என்ற மாத இதழ் துவக்கப்பட்டது. ஐ.ஏ.சி இயக்கத்தின் ஆதரவில் புரட்சி மின்னல் நடத்தப்பட்டாலும் தன் பொறுப்பில் ஒரு இதழ் இருந்தால் நல்லது; இன்னும் அழுத்தமாக செய்திகளைச் சொல்ல முடியும என்று நினைத்து பீஜேயால் அல்ஜன்னத் மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது.

பீ.ஜேயின் சொந்தப் பத்திரிகையாக அவரது சொந்தப் பொறுப்பில் அல்ஜன்னத் நடத்தப்பட்டது. அதில் கிடைக்கும் லாப நட்டம் பீ.ஜேயைச் சேர்ந்தது என்ற அடிப்படையில் தான் அல்ஜன்னத் நடத்தப்பட்டது.

பத்திரிகையின் விற்பனை அதிகமாக இருந்தாலும், பத்திரிகையின் ஏஜெண்டுகள் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் நாளுக்கு நாள் நட்டம் அதிகரித்தது. இனிமேல் தொடர்ந்து நடத்துவது என்றால், மக்களிடம் நன்கொடை திரட்டித் தான் நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. நன்கொடை கேட்டு மக்களிடம் அறிவிப்புச் செய்தால் கடந்த கால நட்டத்தையும் ஈடு செய்யலாம். இனியும் நட்டமில்லாமல் நடத்தலாம் என்று நண்பர்கள் ஆலோசனை கூறினார்கள்.

பத்திரிகையின் லாப நட்டம் ஜமாஅத்தைச் சேர்ந்தது என்றால், நன்கொடை கேட்கலாம். எனக்குச் சொந்தமான பத்திரிகை எனும் போது நன்கொடை கேட்க மாட்டேன் என்று பீ.ஜே மறுத்து விட்டார். நான் ஆக்கங்களை எழுதித் தருகிறேன்; ஜாக் இதன் உரிமையைப் பெற்றுக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளட்டும் என்று பீ.ஜே விட்டுக் கொடுத்தார். இதற்காக எந்தத் தொகையையும் அவர் கேட்கவில்லை.

இதன் பின்னர் ஐ.ஏ.சி யின் சார்பில் புரட்சி மின்னலும், ஜாக் சார்பில் அல்ஜன்னத்தும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வலம் வந்தன. பின்னர் புரட்சி மின்னல் இதழ் அல்முபீன் என்று  பெயர் மாற்றப்பட்டது. அதுவே தற்போது ஏகத்துவம் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

“இந்தக் காலகட்டத்தில் ஷிர்க், பித்அத், லஞ்சம், லாட்டரி, சினிமா போன்ற தீமைகளை மட்டுமே எதிர்த்துப் பிரச்சாரம் அமைந்தது. அரசியல், சமுதாயப் பிரச்சனைகளில் நாம் ஆர்வம் காட்டவில்லை.

சமுதாயப்பணியில் தவ்ஹீத் ஜமாஅத்

பாபரி மஸ்ஜிதும் பயண மாற்றமும்:

இப்படியே தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணம் தொடர்ந்தது. காலம் எனும் சாலையில் 89,90,91 என்ற மைல் கற்களைத் தாண்டி 92 ஆம் ஆண்டில் அந்த நிகழ்வு நிகழ்ந்தது. 1992, டிசம்பர் 6 ஆம் தேதி அன்று பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டது தான் அந்த நிகழ்வு. பட்டப்பகலில் சங்பரிவார பயங்கரவாதிகளால் பள்ளிவாசல் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

உடைக்கப்பட்டது பள்ளிவாசல் மட்டுமல்ல! சமுதாயத்தின் முதுகெலும்பும் தான். சமுதாய இயக்கங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த லீக்குகள் சமுதாயத்தைக் காக்கின்ற ஆயுதங்களாகவும், சமுதாயத்தின் மானம் காக்கும் ஆடைகளாகவும் இருக்கத் தவறிவிட்டன.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகும் கேரளாவில் முஸ்லிம்லீக், காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து அமைச்சர் பதவியை அனுபவித்துக் கொண்டிருந்தது. இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயம், தான் ஒரு அனாதை என்பதை உணர்ந்து கொண்டது.

இத்தகைய காரணங்களால் முஸ்லிம் தலைவர்கள் சமுதாயத்தில் செல்லாக் காசானார்கள். செல்லரித்துப் போனார்கள். இந்த இயக்கங்கள்  அவரச சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருந்ததால் கேரளாவில் நாஸர் மஃதனி போன்றோர் சமுதாயப் பணி செய்யக் களமிறங்கினார்கள்.

இதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன் விருப்பமின்றியே ஒரு திருப்பம் திணிக்கப்பட்டது. சமுதாயப் பிரச்சனைகளில் தலையிட்டே ஆக வேண்டும் என்பது தலைவிதியானது.

அதுவரை தவ்ஹீத் என்ற இலக்கை மட்டும் நோக்கிப் பயணம் செய்த தவ்ஹீத் ஜமாஅத், அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் சமுதாயப் பிரச்சனைகளையும் கையில் எடுத்தாக வேண்டும் என்று முடிவுக்கு சகோதரர் பி.ஜே வந்தார். தானாக வந்தார் ன்று சொல்வதை விட அந்த முடிவுக்குத் தள்ளப்பட்டார்.

தமிழகத்தில் தலைகாட்டிய பி.டி.பி:

நாஸர் மஃதனியின் உணர்வுப்பூர்வமான உரையில் மக்கள் கவரப்பட்டனர். மக்களிடம் அப்படியொரு தேட்டமும், தணியாத தாகமும் இருந்தது. அதனால் அவரது கட்சிக்கொடி கேரள எல்லையைத் தாண்டி தமிழகக் கம்பங்களிலும் பறக்க ஆரம்பித்தது. அந்த அளவுக்குத் தமிழக முஸ்லிம் சமுதாயத்திலும் ஒரு தேட்டம் இருந்தது. பி.டி.பி (பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் பார்ட்டி- மக்கள் ஜனநாயகக் கட்சி) என்ற அவரது கட்சிக்கு தமிழகத்திலும் செல்வாக்கு ஏற்பட ஆரம்பித்தது.

ஆனால் நாஸர் மஃதனி அவர்கள் அப்போது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கொள்கையில் இருந்தார். அவரது உரை, யாஸய்யதீ, யாரசூலுல்லாஹி என்ற இணைவைப்புக் கவிதைகளுடனே துவங்கும். இதனால் அவரது இயக்கம் தமிழகத்தில் வலுப்பெறுவது தவ்ஹீத பிரச்சாரத்துக்குப் பின்னடைவாக அமையும் என்ற கவலை தவ்ஹீத் சகோதரர்களுக்கு ஏற்பட்ட்து.

ஆனால் தவ்ஹீத்வாதிகளுக்கு சிரமம் தராமல் பிடிபியின் முடிவுரையை நாசர் மதனி தானே எழுதினார். சமுதாயப் போர்க்களத்தில் ஒரு காலை இழந்தும் சிங்கமாய் கர்ஜித்துக் கொண்டிருந்த அவர் சிகரத்தைத் தொடவிருந்தார். ஆனால் அரசியல் கட்சிகளுடனான அவரது கூட்டணி அவரை ஏறிய அதே வேகத்தில் குப்புறத் தள்ளியது. முஸ்லீக் செய்த அதே பிழையை இவரும் செய்தார். அதனால் அதன் விளைவை அவர் சந்திக்க நேரிட்டது.

ஜிஹாத் கமிட்டி:

கேரளத்தில் நிலவிய வெற்றிடத்தை நிரப்புவதற்கு நாஸர் மஃதனி தேவைப்பட்டது போலவே தமிழகத்திற்கு ஒருவர் தேவைப்பட்டார். பழனிபாபா அந்த வெற்றிடச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார்.

இவரிடம் பேச்சுத்திறமை இருந்தது. ஆனால் ஏகத்துவம் இல்லை. தெளிவான இஸ்லாமியக் கொள்கை இல்லை. பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் ஒருவரை எழுப்பி, உனக்கு ஐந்து கலிமா தெரியுமா? என்று கேட்பார். இந்த ஐந்து கலிமாக்கள் என்பதெல்லாம் மார்க்கத்தில் இல்லை, இதைத் தெரிந்திருந்தால் தான் ஒருவர் முஸ்லிம் என்பதும் இல்லை என்ற மார்க்க ஞானம் கூட அவருக்கு இருக்கவில்லை.

முன்கர் நகீர் கேள்வி கேட்டால் நான் அவரிடம் எதிர்க் கேள்வி கேட்பேன். எனது பேச்சு குற்றம் என்று அல்லாஹ் என்னை நரகில் போட்டால் போடட்டும் என்றெல்லாம் அவரது மேடைப் பேச்சு அமைந்தது.

எனினும் மக்களுக்கு ஒரு தேட்டம் இருந்தது. ஒரு தேவை இருந்தது. அந்த தேட்டத்தையும், தேவையையும் பழனிபாபா நிறைவேற்றினார்.

அவரது பேச்சில் அனல் பறக்கும். ஆங்கிலம் ஆட்டம் போடும். பிசிறடிக்காத அந்தப் பேச்சு இளைஞர்களைத் தன் வசப்படுத்தியது. அதன் விளைவு அவர் சென்று வரும் ஊர்களில் கலவரத் தீ பற்றிக் கொள்ளும் என்றானது.

அந்தக் கலவரத் தீயால் உயிர்களும், உடைமைகளும் சேதமாகும். எனவே அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி சிறைவாசம்!

இங்கே நாம் இதைக் குறிப்பிடக் காரணம், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு ஒரு வெற்றிடம் நிலவியது. அதை நிரப்புவதற்கு அப்போது யாருமில்லை. சமுதாயத்திலிருந்து யார் அந்த வெற்றிடத்தை நிரப்ப முன்வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் காத்திருந்தது. அவரிடம் மார்க்கம் இருக்கின்றதா? என்ற தரத்தையெல்லாம் யாரும் பார்க்கத் தயாரில்லை.

சமுதாய உணர்வு, வீரம் உள்ள எவர் வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் தயாராக இருந்தது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

சத்தியத்திற்கு ஜாக்; சமுதாயத்திற்கு பி.டி.பி:

இந்த வெற்றிடம் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் ஒரு கேள்விப் புயலை மீண்டும் மீண்டும் கிளப்பியது. அதிலும் குறிப்பாக ஜாக்கின் மேல்மட்ட நிர்வாகக் குழு உறுப்பினருக்குக் கூட பி.டி.பி மீது பகிரங்கக் காதல்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் பாணியில், அவரது பாதையில், தங்கள் பெற்றோர், உற்றாரைப் பகைத்துக் கொண்டு ஒன்று கூடியிருக்கும் ஓர் இயக்கத்தில், அதிலும் குறிப்பாக அதை வழிநடத்தும் உயர் பொறுப்பிலிருந்து கொண்டு, ஷிர்க்கைக் கொள்கையாகக கொண்ட பி.டி.பி தலைமை மீது காதல் கொள்கிறார்; புகழ்கிறார் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் வெற்றிடம் என்ற கோளாறு தான்.

தவ்ஹீத் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடமே இந்த நிலை என்றால் தவ்ஹீத் இயக்கத்தில் உள்ள சாதாரண உறுப்பினர்களின் நிலை என்ன? உண்மையில் அவர்களிடமும் பி.டி.பியில் ஈடுபாடு இருந்தது. இன்னும் சிலருக்கு ஜிஹாத் கமிட்டியின் மீது நாட்டம் இருந்தது. இது தான் பி.ஜேவை சமுதாயப் பிரச்சனையை நோக்கி கொண்டு சென்றது.

அப்போதிலிருந்து அவரது மேடைப் பேச்சுக்கள் சமுதாயப் பிரச்சனையையும் மையமாகக் கொண்டு சுழன்றது.  மத்திய, மாநில அரசுகள், அரசியல்வாதிகள், கட்சிகள் முஸ்லிம்களுக்குச் செய்த துரோகங்களைத் தோலுரித்துக் காட்டியது.

பழனிபாபா, நாஸர் மஃதனி போன்று மக்களின் உணர்ச்சிகளை மட்டும் தூண்டி விடாமல், மக்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைத்தது. விடிவு காலம் இல்லை என்று விரக்தியில் வீழ்ந்திருந்தவர்களை வீறு கொண்டு எழ வைத்தது. அத்துடன், சமுதாய வெற்றி என்பது சத்தியக் கொள்கை மூலமே சாத்தியம் என்பதை உணர்த்தி, மக்களை அசத்தியத்திலிருந்து சத்தியப் பாதைக்கு கொண்டு வந்தது.

சத்தியப் பேச்சுடன் சமுதாயப் பேச்சையும் கலந்து கொடுக்க ஆரம்பித்த மாத்திரத்தில் ஜாக் இயக்கம் பல பரிமாணங்களில் வளர்ச்சி கண்டது. இதனால் சமுதாய மக்கள் நம் மீது கொண்டிருந்த வெறுப்பின் அளவு மிகப் பெரிய அளவில் சரிந்தது.

ஆடியோ, வீடியோ அணிவகுப்பு:

அந்தக் கட்டத்தில் வெளிநாடுகளில் இளைஞர் வட்டாரங்களில் மிக வேகமாக வலம் வந்தவை பழனிபாபா அவர்களின் ஒலி நாடாக்கள் தான். அந்த இடத்தை பி.ஜேயின் ஒலி நாடாக்கள் பிடித்தன. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! ஆடியோ,வீடியோ கேஸட்டுகள் வளைகுடா நாடுகளில் சமுதாய உணர்வுள்ள மக்களிடம் அணிவகுத்தன.

பி.ஜேயின் இந்த சத்தியப் பேச்சு அரசியல்வாதிகளையும், அதிகாரவர்க்கத்தினரையும் ஓர் உலுக்கு உலுக்கியது. தமிழகத்தையே குலுக்கியது.

யாரையும் தடாவில் கைது செய்யலாம் என்ற ஒரு குட்டி அவசரநிலைப் பிரகடன நிலை மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த கால கட்டத்தில் பி.ஜே பேசிய பேச்சுக்கள் ஓர் அக்னிப் பிரவேசமாகும்.

சத்தியப் பிரச்சாரத்துடன் சமுதாயப் பிரச்சனையையும் கையில் எடுத்ததால் மத்திய, மாநில அரசுகளின் கழுகுப் பார்வைக்கும் பி.ஜே ஆளானார். அதனால் தான் இதை ஓர் அக்னிப் பிரவேசம் என்று குறிப்பிட வேண்டியுள்ளது.

ஆனால் அதுவும் அழைப்புப் பணிக்கு அடுக்கடுக்கான பலன்களைத் தந்தது. அதிகமான ஆட்களை சத்தியத்தில் கொண்டு வந்து சேர்த்தது. இது, சத்தியப் பேச்சு என்ற ஆயுதத்தால் கிடைத்த வெற்றியாகும். அடுத்தது எழுத்துப் பணி!

மாத இதழ் அல்ல! மந்திர இதழ்!

தவ்ஹீத் ஜமாஅத்தினரின் கையில் இருந்த ஒரே ஒரு மாத இதழ் அல்ஜன்னத் தான். அன்று அது மந்திர இதழாக இருந்தது. அரசியல், சமுதாயப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு, அதில் பி.ஜே தீட்டிய நுழைவாயில் (தலையங்கம்) பகுதி வாசகர்களின் உள்ளங்களை சத்தியத்தின் பக்கம் வளைத்துப் போட்டது.

சமுதாய மாற்றத்திற்கு தவ்ஹீத் கொள்கை தான் அவசியம் தேவை என்ற சிந்தனையை அவர்களின் உள்ளங்களில் பதிவு செய்தது. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அவ்விதழ், அவர்களைச் சத்தியத்தின் பக்கம் வரவழைத்தது.

(இன்று இவ்விதழ் குர்ஆன், ஹதீஸ்  ஆகிய இரண்டு அடிப்படைகளை விட்டு விட்டு, அதற்கு எதிரான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது வேறு விஷயம்.)

தவ்ஹீத்வாதிகளின் தடா எதிர்ப்புப் பேரணி:

பேச்சு, எழுத்து என்ற இவ்விரு ஆயுதங்களைக் கொண்டு அல்லாஹ்வின் அருளால் நடத்திய அக்னிப் பிரவேசத்தின் உச்சக்கட்டம் தான், தடா எதிர்ப்புப் பேரணி! "இம்' என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற அடிப்படையில் இந்தியாவில் பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சில சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்கள் சரமாரியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

தமிழகத்தில் ஒரு குட்டி அவசர நிலைப் பிரகடனம் தான் அப்போதைய ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றது என்று உறுதியாகக் குறிப்பிடலாம்.

ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து சமுதாயமே குரல் கொடுப்பதற்கு அஞ்சிய காலம் அது! அடங்கிப் போன காலம் அது! காவல் துறையின் கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த காட்டு தர்பார் அது!

குரல் கொடுப்பவரின் குரல்வளை நெறிக்கப்படும். கூட்டம் சேர்ப்பவரின் குறுக்கு உடைக்கப்படும். இக்கால கட்டத்தில் தான் மேலைப்பாளையத்தில் திருக்குர்ஆன் மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற தடா எதிர்ப்புப் பேரணி!

அனுமதி மறுத்த அன்றைய தலைமை:

இந்தப் பேரணி நடத்துவதற்கு அன்றைய தலைமையிடம் அனுமதி கோரிய போது கமாலுத்தீன் மதனி அனுமதி தர மறுத்தார். நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு அனுமதி கிடைத்தது.

சமுதாய இயக்கங்கள் சமாதி ஆன பின், சத்திய இயக்கமான தவ்ஹீத் ஜமாஅத் (ஜாக்) நடத்திய இந்தப் பேரணியில் இளைஞர் பட்டாளம் குவிந்தது.

நஜாத்காரன், நஜாத்காரன் என்று நம்மைத் தூரவைத்த, தூக்கி எறிந்த, தூற்றி எறிந்த சுன்னத் வல்ஜமாஅத்தினர் சாரை சாரையாக அணிவகுத்தனர். சிறைக் கைதிகளை விடுவிக்கக் சொல்லி சிங்கங்களாய் கர்ஜித்தனர். பெண்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டது அந்தப் புது அத்தியாயமாகும்.

தமிழகத்தில் தடாவை எதிர்த்து யாரும் குரல் உயர்த்தாத கால கட்டத்தில், இந்தத் தாடா எதிர்ப்புப் பேரணியில் தங்கள் குழந்தை குட்டிகளுடன் தாய்மார்கள் கலந்து கொண்டது அதிகார வர்க்கத்திற்கு ஓர் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் அமைந்தது.

தமிழகம் எங்கும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்களில் பெருமளவு பெண்கள் பங்கேற்பதற்கு அடிப்படையாகவும், அஸ்திவாரமாகவும் அமைந்தது இந்த தடா எதிர்ப்புப் பேரணி தான்.

அல்லாஹ்வின் அருளால் அன்று தடா எதிர்ப்புப் பேரணியில் அடியெடுத்து வைத்த தாய்மார்கள் குடந்தை இட ஒதுக்கீட்டுப் பேரணி, சிறை நிரப்பும் போராட்டம் வரை பங்கெடுத்து, தமிழகத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முஸ்லிம் இயக்கங்களில் தாய்மார்களை அதிகமாகக் கொண்டிருக்கும் அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத் தான் என்ற தனிப் பெயரைப் பதிவு செய்வதற்கு அவர்கள் காரணமாக அமைந்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாக!

பொதுசிவில் சட்டம் என்ற புது சதித்திட்டம்:

இப்படி தடாவை எதிர்த்து ஒரு போர் நடந்து கொண்டிருக்கும் போதே மீண்டும் ஒரு போர் முழக்கம் செய்ய வேண்டிய புது சோதனை உருவெடுத்தது.

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்ட பின், உடைந்து கிடந்த சமுதாயத்தை மேலும் உடைப்பதற்கு ஒரு புதுப்பிரச்சனை பூதகாரமாகக் கிளம்பியது. புயலாகப் புறப்பட்டது. அது தான் பொது சிவில் சட்டம்.

சமுதாயம் மரண மவுனத்தில் கிடந்த சந்தர்ப்பத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும்படி சுப்ரீம் கோர்ட், மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

இப்படி ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் வெளியிட்ட மாத்திரத்திலேயே அதைச் சமுதாயம் மிருக பலம் கொண்டு எதிர்த்தாக வேண்டும். அவ்வாறு எதிர்க்க வேண்டுமென்றால் சமுதாயம் அதன் தீமையை நன்றாக விளங்கியிருக்க வேண்டும்.

பொது சிவில் சட்டத்தின் பூதாகரமான பாதகங்களை சமுதாயத்திற்குப் புரிய வைக்கும் பணியை யாரும் செய்யவில்லை. இந்த சமயத்தில் தமிழகத்தில் இந்தப் பணியை தவ்ஹீத் ஜமாஅத் தான் செய்தாக வேண்டிய நிலை.

அரசியல் பண்டிதர்கள், அரசியல் ஞானம் பெற்றவர்கள், அரசியல் சட்ட மேதைகள் என்று யாரும் அன்று தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லை. அதிலும் பி.ஜே களமிறங்கினார்.


என்ற கட்டுரை தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

சட்டம் படித்த வழக்கிறஞர்களும் விளக்குவதற்குத் தாளம் போடும் இந்தப் பொது சிவில் சட்டத்தைப் பாமரனுக்கும் விளங்கும் வகையில் மிக எளிய பரிமாணத்தில் சகோதரர் பி.ஜே அளித்திருந்தார்.

எழுத்தளவில், ஏட்டளவில் நின்று விடாமல் பொதுக் கூட்டங்களிலும் பி.ஜே உரை நிகழ்த்தினார். பொது சிவில் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் வியக்கின்ற அளவில் அவரது உரை அமைந்திருந்தது. இந்த உரை ஒளி. ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு உலகெங்கும் வாழும் தமிழ் முஸ்லலிம்களைச் சென்றடைந்தது.

வீடியோ வடிவிலும் வெளியிடப்பட்ட்து

இந்தப் பணியை அன்று எந்த இயக்கமும் செய்யவில்லை. தமிழக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் தான் இதை மக்களிடம் கொண்டு சேர்த்தது.

பொது சிவில் சட்டம் என்பது முஸ்லிம்களின் பிணத்தின் மீது தான் அமலாகும் என்ற பேச்சு மத்திய அரசின் காதில் விழுந்தது. அதனால் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுக்கு அது செவிசாய்க்கவில்லை.

இப்படிப் பொது சிவில் சட்டத்தைப் பற்றிய ஒரு பொது விழிப்புணர்வை அன்று மக்களிடம் ஊட்டியதும் உணர்த்தியதும் தவ்ஹீத் ஜமாஅத் தான். பொது சிவில் சட்டத்திற்கு எதிரான இந்தப் போர் முழக்கம், முஸ்லிம்களை தவ்ஹீதின் பக்கம் ஈர்த்தது.

இது போன்ற குழல்கள் தான் நம்மை சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுப்பதற்குத் தள்ளியது என்பதற்கு இது மற்றோர் எடுத்துக்காட்டு!

ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு கால கட்டத்தில் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகளின் இஸ்லாமிய விரோதப் போக்கு ஓர் எல்லையைக் கடந்து சென்றது. காமத்தில் மிஞ்சியது கன்னி மேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு அந்தத் தீய சக்திகள் விஷம் கக்க ஆரம்பித்தன. அப்போது சமுதாயம் மயான அமைதியில் தான் இருந்தது. அதற்கும் ஆக்கப்பூர்வமான எதிர்ப்புக்களைத் தெரிவிக்க வேண்டியவர்கள் தவ்ஹீத்வாதிகள் தான் என்ற நிலை ஏற்பட்டது.

ராஜகோபாலன் கொலை:

இப்படிப்பட்ட அக்கினிப் பிரவேசத்தின் போது மதுரையில் இந்து முன்னணி தலைவராக இருந்த ராஜகோபாலன் என்பவர் கொலை செய்யப்படுகின்றார். அதில் ஜாக் இயக்கத்தைத் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியானது. அதற்கு மறுப்பும் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாகத் தான் எஸ்.எம்.பாக்கர் தடாவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் அமைப்பு ரீதியாக ஜாக்கில் இல்லாவிட்டாலும் சமுதாயப் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்து வந்ததால் பி.ஜே யுடன் சேர்ந்து சமுதாயக் களப்பணியாற்றினார்.

(அவர் பாலியல் குற்றச்சாட்டுக்காகவும் பண மோசடிக்காகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தனி விஷயம்)



பாக்கர் தடாவில் கைது செய்யப்பட்டது தவ்ஹீத்வாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியானது. அப்போது தான் ஓர் ஆழமான சிந்தனை தோன்றுகிறது. இன்று பாக்கர் நாளை பி.ஜே என்று இந்தக் கைதுப் படலம் தொடரும். எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை முளையிலேயே கிள்ளி விட வேண்டும். அதற்கு வழி என்ன?

அப்போது வலிமையாக இருந்த ஜமாஅத் அமைப்பு ஜாக் தான். ஆனால் ஜாக்கின் தலைவர் கமாலுத்தீன் மதனி, இன்னும் சில செல்வந்தர்கள் இது போன்ற விஷப் பரீட்சைக்கு வர மாட்டார்கள்.

மதுரை ராஜகோபாலன் கொலையில் ஜாக் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் ஜாக்கில் நிதி வசூலிப்பவராக இருந்த சீன் நெய்னா முகம்மது விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி கிடைத்த்தும் பீஜேயைத் தவிர அனைத்து நிர்வாகிகளும் பல மாதங்கள் அல்ஜன்னத் அலுவகத்தின் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை.

உளவுத் துறையின் ஆந்தைப் பார்வைக்கு அல்ஜன்னத் ஆளாகியிருக்கின்றது  என்று தெரிந்த மாத்திரத்திலேயே பேர்ணாம்பட்டைச் சார்ந்த ஒரு செல்வந்தர் தலைதெறிக்க ஓட்டமெடுத்தார்.

அதில் ஒரு போதும் ஓட்டமெடுக்காத, ஆட்டம் காணாத செல்வந்தர் அன்வர் பாய் மட்டுமே!

தமுமுக உதயம்:

இவரைத் தவிர்த்து கமாலுத்தீன் மதனி உட்பட செல்வந்தர்கள் இதற்கு இசைய மாட்டார்கள். இதற்கு என்ன செய்வது? இதற்கான ஆலோசனை அல்ஜன்னத் அலுவலகத்தில் தான் நடைபெற்றது. விடை கிடைத்தது. விடிய விடியப் பேசி ஒரு விடை கிடைத்தது.

பின்னர் விஞ்ஞானி அப்துல் ஜலீல் வீட்டில் மீண்டும் ஆலோசனை நடந்தது. கூட இருந்தவர் குணங்குடி ஹனீபா அவர்கள். அவர் தான் நமக்கு அரசியல் குரு என்ற உண்மையை இங்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவர் ஆலோசனை மட்டும் தரவில்லை. ஒரு அமைப்பையும் சேர்த்தே தந்தார். அதுதான் தமுமுக.

தமுமுக என்ற பெயரில் பதிவு செய்யப்படாத ஒரு இயக்கத்தை அவர் நடத்தி வந்தார். அதற்கு கொடி கூட இருக்கவில்லை. பீஜே தான் கறுப்பு வெள்ளைக் கொடியை வடிவமைத்தார். இந்த இரண்டு வண்ணங்களையும் தேர்வு செய்யக் காரணத்தையும் விளக்கினார். இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு என்பது கருப்பு வெள்ளையின் கருத்தாகும்.

இப்போது தமுமுகவின் தலைவர்களாக வலம் வரக்கூடியவர்களுக்கு இந்த அமைப்பை உருவாக்குவதில் பெரிய பங்களிப்பு ஏதும் இல்லை. தமுமுக முதலில் வெளியிட்ட பைலாவின் முதல் பக்கத்தைதக் காணுங்கள்! இப்போதைய பொதுச் செயலாளர் 6 வது இடத்திலும், இப்போதைய தலைவர் 7 வது இடத்திலும் இருப்பதைக் காண்க.

ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட தமுமுக பைளாவின் முதல் பக்கம்

தமுமுக துவங்கும் போது ஜவாஹிருல்லாவோ, ஹைதர் அலியோ மக்களால் அறியப்பட்டவர்களாக இருக்கவில்லை. இவர்களது அழைப்பை ஏற்று வரக்கூடிய ஐம்பது பேர் கூட தமிழகத்தில் இருக்கவில்லை. மக்களை ஈர்க்கக் கூடிய சொல்லாற்றலும் இவர்களிடம் இருக்கவில்லை. கடந்த காலங்களில் சமுதாயத்துக்குத் தியாகம் செய்த வரலாறும் இவர்களுக்கு இருக்கவில்லை.

பீ.ஜே  அவர்கள் பதினைந்து ஆண்டுகள் அடி உதைபட்டு கொள்கைச் சகோதரர்களையும், பிரச்சாரகர்களையும் உருவாக்கியிருந்ததால் - அவரே தமுமுகவின்           தூணாகவும், முதல்நிலை தகுதியுடையவராகவும் இருந்தார். நெருக்கடியான காலங்களில் எந்தப் போராட்டத்திலும் அதன் தற்போதைய தலைவர் கலந்து கொண்டதில்லை. பின்வாங்கி விடுவார். இப்போது கருணாநிதியின் சிறுபான்மைப் பிரிவாக ஆன பின்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் துணிவு (?) அவருக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.                

தமுமுக வரலாறை விளக்கும் சி.டியை தமுமுக வெளியிட்டது. அதில் பி.ஜேயை இருட்டடிப்பு செய்து விட்டு தாங்களே தமுமுகவை உருவாக்கியது போல் புளுகியதால் இதைக் குறிப்பிடுகிறோம்.

பாக்கரைக் கைது செய்த காவல்துறை, மற்றவர்களையும் வேறு ஏதேனும் வழக்கில் தூக்கிப்போட்டு விடக்கூடாது. அதற்கு உடனே ஒரு தற்காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்கரின் கைதைக் கண்டித்தாக வேண்டும். அதற்கு மக்கள் கூட்டம் திரள வேண்டும். 50 பேர் திரண்டால் காவல் துறையிடம் அதற்கு ஒரு பார்வை! 100 பேர் திரண்டால் அதற்கு ஒரு பார்வை! 200 பேர் என்றால் காவல்துறையின் பார்வையில் ஒரு மாற்றமிருக்கும். 500 பேர் என்றால் அதற்கு ஒரு மரியாதை! மக்கள் நினைத்ததைச் சாதிக்கலாம். நாம் நான்கு பேர் கூடிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் என்ன பேசினாலும் அது காவல்துறையிடம் எடுபடாது. நமது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை தான் பேசும். அந்தப் பேச்சு தான் எடுபடும் என்ற அரசியல் அடிச்சுவட்டைப்  போதித்தவர் குணங்குடி ஹனீபா அவர்கள்.

இப்பேரணிக்காக தமுமுகவில் இப்போது ஆதாயம் அடைந்து வருபவர்கள் ஒரு துரும்பை எடுத்துப் போடக் கூட இயலாதவர்களாக இருந்தனர். காரைக்கால் அப்துல் ரஜாக் என்பவரை பி.ஜே தனது பிரதிநிதியாக தமிழகமெங்கும் அனுப்பி தவ்ஹீத்வாதிகளைத் திரட்டியதால் தான் அப்பேரணி சாத்தியமானது.

அவரது ஆலோசனைப்படி அந்தப் பேரணி சென்னை மன்றோ சிலைக்கருகில் திரண்டது. அங்கிருந்து கிளம்பி தலைமைச் செயலகம் நோக்கிப் புறப்பட்டது. இடையில் பாரிமுனை சிக்னலில் நிறுத்தப்பட்டது. தமுமுகவின் முதல் பொதுச் செயலாளர் பொறியாளர் அப்துஸ்ஸமது, தலைவர் குணங்குடி ஹனீபா மற்றும் சிலர் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்து விட்டு வந்தனர்.

இது தான் தமுமுகவின் முதல் பேரணி! இப்பேரணியில் மக்கள், வெள்ளம் போல் குவிந்தனர். தவ்ஹீத் மக்கள் தான் இதில் வந்து குவிந்தனர். அவர்களைப் பார்த்து மற்ற பொதுமக்களும் வந்து கலந்து கொண்டனர்.

குணங்குடி ஹனீபா அவர்கள் கூறியது போன்று இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை, காவல்துறையின் பார்வையில் கண்ணியத்தை மட்டுமல்ல! ஒரு கலக்கத்தையும் ஏற்படுத்தியது.                     

இங்கு உறுதியாக ஒரு கருத்தைப் பதிவு செய்து கொள்கிறோம். அன்று தமிழகத்தில் வலிமை பெற்ற அமைப்பு, இன்னும் சொல்லப் போனால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகின்ற மக்கள் சக்தி கொண்ட அமைப்பாக ஜாக் என்ற தவ்ஹீத் அமைப்பு தான் இருந்தது. அந்த தவ்ஹீத் மக்களை முதலீடாக, மூலதனமாகக் கொண்டு தான் தமுமுக என்ற அமைப்பு துவங்கியது என்பதை அழுத்தமாக மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

காவல் துறையின் அடுத்தக்கட்ட சுழி, அக்னிப் பிரவேசம் மேற்கொண்டிருக்கும் பி.ஜேவை நோக்கித் தானே என்ற கவலை தான் அந்த தவ்ஹீத் மக்களை இயக்கியது. அது தான் அவர்களை அங்கு வந்து குவித்தது.

பாக்கருக்காக இப்படியொரு ஆர்ப்பாட்டத்தைச் செய்து முடித்த பின்னர் சில மாத இடைவெளியில் அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆரம்பித்தது. காரைக்காலில் ஜாக்கின் கட்டுப்பாட்டில் இருந்த ஜாமிஆ புஷ்ரா பெண்கள் மதரஸாவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜே.எஸ். ரிபாயி பார்சல் குண்டு வழக்கில் கைது  செய்யப்பட்டார்.

முதல் மற்றும் கடைசி உண்ணாவிரதப் போர்:

மீண்டும் மக்கள் சக்தியைத் திரட்டி ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தும் நிர்பந்தம் ஏற்பட்டது. ஜாக் தலைமையிடம் இது தொடர்பாக பி.ஜே தொடர்பு கொண்டார். கலந்து பேசினார்.

ரிபாயீயைக் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும், நாகூர் காவல்துறை அதிகாரி இந்திரஜித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உண்ணாவிரதம் நடத்துவதற்கு தலைவர் என்ற முறையில் தவ்ஹீத் மக்களைத் திரளுமாறு அழைப்பு விடுங்கள். தமுமுக என்ற பெயரில் அழைத்தால் மக்கள் வர மாட்டார்கள் என்று பி.ஜே வலியுறுத்தினார். ஆனால் கமாலுத்தீன் மதனி அதற்கு உடன்படவில்லை.

எனது தலைமையில் உள்ள மக்களை ஹனீபாவின் பின்னால் திரளுமாறு நான் அறிவிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார். இரண்டு தலைமை ஏற்படுவதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். அப்பாவிகள் கைது செய்யப்பட்டதும் அவரது மதரஸாவில் பணியாற்றிய ஆசிரியர் கைது செய்யப்பட்டதும் அவரை எந்த விதத்திலும் பாதிக்கவேயில்லை.

நீங்கள் அழைப்பு விடுக்காவிட்டடால், பி.ஜே என்ற என் பெயரிலேயே மக்களை அழைப்பேன். நீங்கள் அழைப்பு விடுக்காமலே தவ்ஹீத் சகோதரர்கள் நிச்சம் திரளுவார்கள் என்று பீஜே எச்சரிக்கை விடுத்தார். தனது தலைமைப் பீடம் டம்மியாகி விடும் என்று அவர் அஞ்சியதால் கீழிறங்கி வந்து, ஜாக் தலைவர் என்ற பெயரில் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அதைப் பிரசுரங்களாக நாம் வெளியிட்டோம்.

கமாலுத்தீன் மதனியின் பதவி ஆசை இப்போது தான் தெளிவாக அனைவருக்கும் தெரிந்தது. தமுமுக என்பதற்கு தவ்ஹீத் மக்களைத் தவிர அன்றைக்கு கடுகளவு ஆதரவும் இருக்கவில்லை என்பதும் இதிலிருந்தும் தெளிவாகும்.

உண்ணாவிரதம் சென்னை குறளகத்திற்கு எதிரில் நடைபெறுகின்றது. மக்கள் அந்தப் போராட்டத்திற்கும் வந்து கலந்து கொண்டனர். காவல் துறையின் கண்களை மிரளச் செய்யும் அளவுக்கு மக்கள் கூட்டம், ஆம்! தவ்ஹீத்வாதிகளின் கூட்டம் வந்து குவிந்தது. குறளகத்திற்கு எதிரில் குரல் கொடுத்தோம்; கைதுக்கு  எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இவர்களில் யார் மீது கை வைத்தாலும் மக்கள் சக்தி திரளும் என்பதை ஒரு முறை அல்ல! இரண்டாவது முறையாக, வலிமையாக எடுத்துக் காட்டினோம்.

(உண்ணாவிரதம் நடத்துவது மார்க்க அடிப்படையில் கூடுமா? என்பது விவாதப் பொருளாகி, இறுதியில் கூடாது என்று முடிவானது. இதனால் அன்றிலிருந்து உண்ணாவிரதத்தைக் கை கழுவிவிட்டோம்.)

தவ்ஹீத்வாதிகளின் தலைமையாக இருந்த ஜாக்குக்கும் தமுமுகவுக்கும் பிரச்சனைகள் ஏற்படாமல் செயல்பட வேண்டும் என்று தமுமுக நிர்வாகிகள் முடிவு செய்து இது குறித்து கமாலுத்தீன் மதனியிடம் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஏனெனில் அப்போது தமுமுகவுக்கு என தனியாக எந்த ஆள் பலமும் இல்லாமல் இருந்த்து. அதனடைப்படையில் பீஜெ சென்னை புதுப்பேட்டைக்கு வந்திருந்த கமாலுத்தீன் மதனியை சந்தித்து தமுமுகவுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். இரண்டு தலமை வேண்டாம் என்று நீங்கள் கருதினால் இரண்டுக்கும் நீங்களே தலைமை ஏற்பதற்கு தமுமுக நிர்வாகிகள் உடன்படுகிறார்கள் என்று எவ்வளவோ பீஜே எடுத்துச் சொன்னார். ஆனால் கொள்கயற்றவர்களுடன் சேர்ந்து செயல்பட முடியாது என்று கமாலுத்தீன் மறுத்து விட்டார். மேலும் இந்த தமுமுக ஒரு காலத்தில் தவ்ஹீதை ஒழிக்க பாடுபடும் எனவும் கமாலுத்தின் மதனி சொன்னார். அதற்கு பீஜே அப்படி ஒரு நிலை வந்தால் நான் தமுமுகவை தூக்கி எறிந்து விட்டு தவ்ஹீதின் பக்கம் நிற்பேன் எனக் கூறி விட்டு பீஜே வெளியேறினார்.

அந்த நிலை வந்த போது பீஜெ சொன்ன படி தமுமுகவை கை கழுவினார், ஆனால் அந்த நிலை வந்த பின்னர் கமாலுத்தீன் மதனி தமுமுகவுடன் ஒட்டிக் கொண்டார்.

இதன் பின்னர் தவ்ஹீத்வாதிகளின் எழுச்சிமிகு உரையில் ஊர்கள் தோறும் தமுமுக கிளைகள் வேரூன்றின. இத்துடன் தவ்ஹீத் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இயக்கத்தில் இணைந்தனர்.

இயக்கம் வளர்ந்து விட்ட பின் இனிமேல் இயக்கம் தடை செய்யப்பட முடியாது என்ற நிலை ஏற்பட்டு, தமுமுகவுக்கு ஒரு மரியாதை ஏற்றப்பட்ட பின் பி.ஜே அமைப்பாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.

இப்போது இருப்பவர்கள் நல்ல தலைவர்கள்; இந்த இயக்கத்தை கஷ்டமான காலத்தில் நான் விட்டு விட்டு ஓடவில்லை. இனி மேல் நான் இல்லாவிட்டாலும் சிறப்பாக நடத்துவார்கள் என்று மனம் திறந்து மடல் எழுதி, பீஜே பொறுப்பிலிருந்து விலகினார்.

மாபெரும் மக்கள் இயக்கமாக ஒரு இயக்கத்தை வளர்த்துவிட்டு, அதன் முதல்நிலைத் தலைவராக இருக்கும் ஒருவர் மன நிறைவோடு ஒதுங்குவது எங்குமே நடந்திராத ஒன்று. இவர்கள் நன்றாக இயக்கத்தைக் கொண்டு செல்வார்கள் என்று பீ.ஜேயை இவர்கள் நம்ப வைத்திருந்தார்கள்.

ஆனால் பீ.ஜே முழுமையாக இயக்கத்தை இவர்கள் கையில் ஒப்படைத்த பிறகு தான் இவர்கள் நயவஞ்சக வேடம் போட்டது ஒவ்வொன்றாக அம்பலமானது.

பீ.ஜே பொறுப்பிலிருந்து விலகியது முதல், பிஞ்சிலே பழுத்த ஒருவரை ஊர்கள் தோறும் அனுப்பி, நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து, தவ்ஹீத்வாதிகளைக் களையெடுத்தனர்.

தவ்ஹீத்வாதிகளுக்கும், மற்றவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு நியாயம் கேட்டு தலைமையை அனுகினால் தமுமுக பொறுப்பில் இருப்பது என்றால் பிரச்சனைக்குரியவற்றை விட்டு விலக வேண்டும் என்று இப்போதைய தலைவரும், செயலாளரும் எச்சரிக்கும் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன.

பொறுப்பில் இருந்து பீ.ஜே விலகினாலும் அமைப்புக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. ஆலோசனை கேட்கும் போதெல்லாம் ஆலோசனை வழங்கத் தவறவில்லை. அதே சமயம் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலை போவதைக் கவனித்துக் கவலைப்பட்டார். இந்த அளவுக்கு கீழ்த்தரமாகச் செல்வார்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கவலைப்பட்டார்.

ஜாக்கில் இருந்து கொண்டே, கமாலுத்தீனின் பணத்தாசை, பதவி வெறியைக் கண்டு புளுங்கியது போன்ற நிலை ஏற்பட்டது. தவ்ஹீத் தாயிகள் மத்தியில் அதிருப்தியும், கொந்தளிப்பும் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட தவ்ஹீத்வாதிகளுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறோமே என்று வேதனைப்படும் அளவுக்கு தமுமுக தவ்ஹீதுக்கு எதிராகக் காய்களைத் திட்டுமிட்டு நகர்த்தி வந்தது.

ஜாக் தமுமுக உரசலும் விரிசலும்:

தான் தடை செய்யப்படலாம் என்ற கவலை ஜாக்கிற்கு இருந்தது. இந்த தயக்கத்தை பி.ஜே நன்கு புரிந்து வைத்திருந்தார். அதனால் தான், தன்னால் ஜாக்கிற்கு எந்தவொரு ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஜாக்கின் தலைமை நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து விலகினார்.

(இதுவே அவருக்குப் பின்னர் பாதகமானது. அவர் வளர்த்த அந்த ஜாக் இயக்கத்தில் உறுப்பினர் உரிமை கூட இல்லாமல் பறிக்கப்பட்டது.)

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜாக்கின் அரசியல், சமுதாயப் பிரிவாக தமுமுகவைச் செயல்படுத்திக் கொள்ளலாம். இதை வெளிப்படையாகக் கூட கமாலுத்தீன் மதனி செய்ய வேண்டியதில்லை, மறைமுகமாக அனுமதி தந்தால் போதும் , அதற்காக பொறியாளர் அப்துஸ்ஸமது, குணங்குடி ஹனீபா ஆகியோர் கமாலுத்தீன் மதனியிடம் பைஅத் செய்வதற்குக் கூடத் தயாராக இருந்தார்கள். (அப்போது நாம் "அமீர்' சித்தாந்தத்தை ஆதரித்த காலம் அது)

பி.ஜே உட்பட பலர் மாநில அமீரிடம் ஒரு மன்றாட்டத்தையே நடத்தினார்கள். பலப்பல அமர்வுகள்! பலப்பல கலந்தாலோசனைகள்! பல்வேறு கட்ட முயற்சிகள்! இத்தனையும் எதற்கு? இவ்வளவு நாள் வியர்வை அல்ல! இரத்தத் துளிகளால் வளர்த்த ஓர் இயக்கத்தை விட்டுப் பிரிந்து விடக் கூடாது என்பதற்காகவே!

ஜாக் என்ற கட்டமைப்பு வருவதற்கு முன்பே தவ்ஹீத் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்த சகோதரர் கலீல் ரசூல் அவர்களும், நானும் தனிப்பட்ட முறையில் கமாலுத்தீன் மதனியை நாகர்கோவிலில் போய்ச் சந்தித்தோம். நீண்ட நேரம் உரையாடினோம்; கெஞ்சினோம். கல்லும் கரையும் என்பார்கள். ஆனால் கல்மனம் கொண்ட கமாலுத்தீன் மதனி கரையவில்லை.

இதன் பின்னர் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழகம் முழுவதிலும் உள்ள தாயீக்கள் கலந்து கொண்டனர். அதில் தமுமுகவின் அப்போதைய செயல்பாடுகள் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டவை தான் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகளை குர்ஆன், ஹதீஸ் ஒளியிலிருந்து பி.ஜே எடுத்து வைத்தார். நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு கமாலுத்தீன் மதனி, நான் பரிசீலித்து விட்டுச் சொல்கிறேன் என்று இறுதியில் சொல்லி விட்டுப் போனார். பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் பேசுகின்ற மேடை தோறும் தமுமுகவை விமர்சிக்கலானார்.

கமாலுத்தீன் மதனி, தமுமுகவை அடாது விமர்சித்தாலும், விடாது நமது தரப்பில் சமரச முயற்சிகளை மேற்கொண்டோம். ஜாக் உருவாக்கத்தில் ஆரம்ப காலகட்டத்தில் பங்கெடுத்து, உழைப்பு தியாகங்கள் செய்த சகோதரர்களைத் திரட்டி மீண்டும் அதே அரிஸ்டோ ஹோட்டலில் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மக்களைத் திரட்டும் பணியில் நானும், ஸைபுல்லாஹ் ஹாஜா, அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோரும் ஈடுபட்டிருந்தோம்.

(சைபுல்லாஹ் ஹாஜாவும் நம்பிக்கை துரோகம் செய்து அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அது பற்றி அறிய சைபுல்லா நீக்கப்பட்டது ஏன்)

ஊர் ஊராகச் சென்று ஆட்களை அழைத்தோம். அதன் பின்னர் 31.08.1997 அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள இயலாமல் போனது. காரணம், அப்போது மேலப்பாளையத்தில் நடைபெற்ற சில அசம்பாவித சம்பவங்களில், சம்பந்தமில்லாமலேயே நானும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தேன்.

இந்தக் கூட்டத்திற்குப் பின் ஓர் இணக்கம் ஏற்பட்டது. ஜாக்கின் வேனை எடுத்துக் கொண்டு பி.ஜே திருச்சியில் நடைபெற்ற தமுமுக கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட அந்த இணக்கம் அற்ப ஆயுளிலேயே முடிந்து விட்டது. அந்த வருடம் ரமளான் பிறை விஷயத்தில் கமாலுத்தீன் தான்தோன்றித் தனமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் ஜாக் - தமுமுக உறவில் உரசல் அல்ல!  விரிசல் ஏற்பட்டது.

தவ்ஹீத் பிரச்சாரக் குழு உதயம்:

துளைத்தெடுத்த துரோகங்கள், வரம்பு மீறிய வாக்குமீறல்கள், அடுக்கடுக்கான அவமானங்கள் இவ்வுளவுக்குப் பிறகும் இவருடன் இருக்க இயலாது என்பதை விட இவர் நம்முடன் இருக்க விரும்பவில்லை, நம்மை வெளியேற்ற விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்டோம்.

வெளிநாட்டுத் தொடர்புகள், தொடர் வரவுகள் இவையெல்லாம் அவருக்குத் தன்னிறைவையும், தலைக்கனத்தையும் ஏற்படுத்தியிருந்தன. அதனால் ஜாக்கிலிருந்து வெளியேறி தவ்ஹீத் பிரச்சாரக் குழு என்ற இயக்கத்தைக கண்டோம். தமுமுக என்ற அமைப்பு நம்மிடம் இருந்தாலும் தவ்ஹீதுக்கு என்று தனி அமைப்பு இருக்கட்டும் என்றெண்ணி இந்த அமைப்பைத் துவக்கினோம். அதற்கு ஹாமித் பக்ரி தலைவராக இருந்தார். அதன் பிறகு நான் தலைவராக நியமிக்கப்பட்டேன்.

(ஹாமித் பக்ரி இரகசியமாகச் செயல்படும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து துரோகம் செய்ததால் அவரும் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார். அது குறித்து விபரம் அறிய)

இந்த அமைப்பின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, செய்யது முஹம்மது மதனீ, ஆர்.டி.ஓவில் பணிபுரிந்த பஷீர் ஆகியோரின் முயற்சியில், நாகர்கோவில் ஹனீபா நகர் பள்ளிவாசலில் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை சகோதரர் எம்.எஸ். சுலைமான் முன்னின்று ஏற்பாடு செய்தார்.

இந்த சமரசக் கூட்டத்திற்கு வரமாட்டேன் என்று கமாலுத்தீன் முரண்டுபிடித்தார். கடைசியில் ஒருவாறாக அவரைப் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

வாதப்பிரதிவாதங்கள்! இறுதியில் பீ.ஜே இரண்டு கோரிக்கைகளை அல்லது நிபந்தனைகளை முன்வைத்தார்.

1. ஜாக்கில் உள்ள கொள்கைவாதிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும். (நாங்கள் ஜாக் என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை நிலை இருந்தது. பி.ஜே உட்பட அனைவருக்கும் இந்தக் கதி! எனவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது)

2. நிர்வாகச் சீரமைப்பு

இன்னும் இது போன்ற சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

இதற்குப் பதிலளித்த எஸ்.கமாலுத்தீன் நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் அவர்கள் தவ்ஹீத் பிரச்சாரக் குழுவை உடனே கலைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதற்கு பி.ஜே நாங்கள் தவ்ஹீத் பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். ஆனால் மூன்று மாதங்களுக்கு இந்தப் பெயரில் செயல்பட மாட்டோம். அதற்குள் எங்கள் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். காரணம், அடிக்கடி எஸ்.கமாலுத்தீன் இப்படி வாக்குறுதி கொடுத்துவிட்டு மாறு செய்வார். வாக்குறுதியை மீறுவார். எனவே தவ்ஹீத் பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். இந்த மூன்று மாதங்களுக்குள் நாங்கள் வைத்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பி.ஜே கேட்டுக் கொண்டார். அதற்கு நாங்கள் பொறுப்பு என்று சமரசக் குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆறப்போட்டு நாறடித்தல்:

ஆறப்பட்டு நாறடிக்கும் கலையில் வல்லவர் நரசிம்மராவ். ஆனால் அவரை மிஞ்சிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது எஸ் எஸ்.கமாலுத்தீன் மதனி தான். காலை வாருவதில் கை தேர்ந்த கமாலுத்தீன் மதனி வழக்கம் போல் இந்த சமரச முயற்சியிலும் காலை வாரினார். இம்முயற்சியில் இறங்கியவர்களின் முகத்தில் கரியைப் பூசினார்.

இனிமேல் நாம் நமது வழியில் தவ்ஹீதைச் சொல்வோம் என்று பிரச்சாரக் குழு என்ற பெயரிலேயே தவ்ஹீத் பணி தொடர்ந்தது. தவ்ஹீத் இயக்கத்தில் இருந்து கொண்டே சத்தியப் பணியையும் சமுதாயப் பணியையும் சேர்த்து செய்ய வேண்டும் என்று எங்கள் முயற்சி, கமாலுத்தீனின் வறட்டுப் பிடிவாதத்தாலும் வாக்குமீறல்களாலும் தோற்றுப் போயிற்று! நாங்கள் வளர்த்த ஜாக்கை விட்டு விட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதை எடுத்துக் காட்டவே இந்தச் சுருக்க வரலாறு. இப்போது சமுதாயப் பணிக்காகத் தொடங்கிய தமுமுகவின் வரலாற்றைப் பார்ப்போம்.

அவரசப் பிரசவம்:

தமுமுக ஓர் அவசரப் பிரசவம் எனினும் அது அரைகுறைப் பிரசவமல்ல! முழுமையாகப் பிறந்த குழந்தை! ஏற்கனவே இருந்த சமுதாய இயக்கங்கள் அழிந்ததற்கான காரணங்களைக் கண்டறிந்து, அது போன்ற காரணங்கள், கரையான்கள் இதை அண்டக் கூடாது, அணுகக் கூடாது என்பதில் முழுக் கவனம் செலுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கொள்கையாகக் கொள்ளப்பட்டது.

இதனால் தமுமுகவின் ஒவ்வொரு அறிமுக்க் கூட்டங்களிலும் அடுத்த கட்டக் கூட்டங்களிலும், "நாங்கள் உங்களிடம் ஒரு போதும் எங்களுக்காக ஓட்டுக் கேட்டு வர மாட்டோம்'' என்று வாக்குறுதி அளித்தனர். "எங்களுக்கு வாக்குக் கேட்டால் எங்களைச் செருப்பால் அடியுங்கள்'' என்று கூடப் பேசியதுண்டு. இப்படி ஓர் உறுதியான குரலில், உச்சஸ்தாயில் பேசியது மக்களுடைய உள்ளங்களில் ஊடுறுவியது.

தவ்ஹீத் ஒரு தடைக்கல்லா?

வெகு வேகமாக இந்த இயக்கம் மக்களிடம் வளர்ச்சி கண்டது. இத்தனைக்கும் பி.ஜே ஒரு பக்கா தவ்ஹீத்வாதியாக இருந்தும் (தமுமுக வளாச்சிக்கு தவ்ஹீத் ஒரு போதும் தடைக்கல்லாக இருக்கவில்லை) தமுமுக மேடையில் சமுதாயப் பிரச்சனைகளை மட்டும் பேசுவோம்; அங்கு தவ்ஹீதைப் பேச மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கினார். அதன்படி அந்த இயக்கம் பெருவளர்ச்சி கண்டது.

தனிஇட ஒதுக்கீடும் தவ்ஹீத் ஜமாஅத்தும்:

தமுமுக என்ற இந்த சமுதாய இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், ஆணிவேராகவும் அமைந்தது இடஒதுக்கீடு கொள்கை தான். பாபரி மஸ்ஜித் முதல் அனைத்துப் பிரச்சனைகளுக்கும், முஸ்லிம்கள் கிள்ளுக்கீரைகளாக நடத்தப்படுவதற்கும் காரணம் சுதந்திரத்திற்குப் பிறகு, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு பறிக்கப்பட்டது தான் என்பதைக் கருத்தில் கொண்டு இடஒதுக்கீடு கோரிக்கையைக் கையில் எடுத்தது. இட ஒதுக்கீடு கிடைத்துவிட்டால் தமுமுகவைக் கலைத்து விடுவோம் என்று கூட மக்களிடம் அறிவிக்கப்பட்டது.

இந்த இட ஒதுக்கீட்டைக் கையில் எடுத்ததும், ஏற்கனவே சரிந்து விழுந்த சமுதாயம், "இது சாத்தியமா?'' என்ற கேள்வியை எழுப்பினார்கள். சாத்தியமே என்று கூறி அதை மூலை முடுக்குகளுக்கு அதன் பேச்சாளர்கள் எடுத்துச் சென்றார்கள்.

தவ்ஹீத் தாயீக்கள்தான் தமுமுக பேச்சாளர்கள்:

இடஒதுக்கீட்டுக் கொள்கையை மக்களிடம் எடுத்துச் சென்றவர்கள் யார்? அவ்வியக்கத்திற்கென்று பேச்சாளர்கள் கிடையாது. நாவலர், பாவலர் கிடையாது. வாணியம்பாடி வாத்தியார் மட்டும் பாடம் நடத்துவார். அதுவும் இந்தியாவைத் தாண்டி, செசன்யா, கஜகஸ்தான் என்று தான்.

இந்த இயக்கம் மக்களிடம் போய்ச் சேருவதற்கு தவ்ஹீத் தாயீக்கள் தான் முதலீடானார்கள். அவர்கள் தான் இந்த இடஒதுக்கீடு கொள்கையை எட்டுத் திக்குகளுக்கும் எடுத்துச் சென்றார்கள்.

விழிப்புணர்வை ஏற்படுத்திய விஜய் டிவி பேட்டி:

இடஒதுக்கீடு என்றால் என்ன? அதன் பயன் என்ன? என்ற விளக்கங்கள் கூட சமுதாயத்திற்குத் தெரியாமல் இருந்தது. காயிதேமில்லத்திற்கு மணிமண்டபம் கட்டுவதையும், மீலாது நபிக்கு விடுமுறை அறிவிப்பதையும் முஸ்லிம் சமுதாயத்திற்குச் செய்த மிகப்பெரிய சாதனைகளாகக் கருதப்பட்ட காலம் அது.

இப்படிப்பட்ட காலத்தில் தான் விஜய் டி.வியில் பி.ஜேயின் பேட்டி ஒளிபரப்பானது. "மணி மண்டபங்கள் கட்டுவதால், காயிதே மில்லத் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைப்பதால் முஸ்லிம்களுக்கு என்ன பயன்? முஸ்லிம்கள் வாழ்வுரிமை இழந்து நிற்கிறார்கள். வயிற்றுக்கு உணவில்லாமல் நிற்கிறார்கள். மண்டபம் கட்டினால் முஸ்லிம்களின் பசி போய்விடுமா? எங்களுக்குத் தேவை இடஒதுக்கீடு தான்'' என்று ஆணியடித்தாற்போல் பி.ஜே கூறிய போது, அவரைப் பேட்டி கண்ட ரபி பெர்ணாட் என்பவர் அதிர்ந்து போனார்.

முஸ்லிம்களிடம் இப்படி ஒரு கோரிக்கை இருப்பதே அப்போது தான் உலகுக்குத் தெரிய வந்தது. அந்தப் பேட்டி ஒளிபரப்பானவுடன் சட்டசபையில் கருணாநிதி அதற்குப் பதிலளித்துப் பேசினார். நாங்கள் தான் முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று வழக்கம் போல் பல்லவி பாடினார். அதன் பிறகு இந்தத் தீ தமிழகமெங்கும் பற்றிக் கொண்டது.

தவ்ஹீத் பள்ளிவாசல்களின் ஜும்ஆ மேடைகளில் இடஒதுக்கீடு பற்றிப் பேசப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இதற்குப் பிறகு எல்லா அரசியல் கட்சிகளும் இந்தக் கருத்தை எதிரொலிக்க ஆரம்பித்தன.

பாபரி மஸ்ஜித் மீட்புக் கோரிக்கை:

இடஒதுக்கீட்டிற்கான குரல் ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டிருந்த போது, இன்னொரு பக்கத்தில் பாபரி மஸ்ஜித் மீட்புக்கான போராட்டங்களை தமுமுக தொடர்ந்து நடத்தியது.

பாபரி மஸ்ஜித் இடிந்து விழுந்தது போலவே, அதை மீண்டும் எழுப்ப வேண்டும் என்ற எண்ணமும் இடிந்து விழுந்திருந்தது. அதை மறக்க முற்பட்டனர்.

அப்போது தான் தவ்ஹீத் பேச்சாளர்கள் வெள்ளி மேடைகளிலும், இதர சொற்பொழிவு மேடைகளிலும், யார் தனது பொருளைப் பாதுகாப்பதற்காக போரிட்டுக் கொல்லப்படுகின்றானோ அவன் ஷஹீத் ஆவான் என்ற ஹதீஸையெல்லாம் ஆதாரமாகக் காட்டி, பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காகப் போராட வேண்டும்; அதற்காகப் போர்க்குரல் கொடுக்க வேண்டும் என்று தூண்டினர். மஸ்ஜிதை மீட்பதற்கு முன்பாக மக்களை மறதியிலிருந்து மீட்டனர்.

இதன் விளைவாய் மக்கள் கடல் கடந்து அலை போல் டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் போராட்டங்களில் திரண்டனர். இந்தப் போராட்டங்கள் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

முதல்வர் வீட்டு முற்றுகை:

ஒரு டிசம்பர் 6 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி வீட்டை முற்றுகையிட வேண்டும் என்று தமுமுக அறிவித்தது. அதற்கும் தவ்ஹீத்வாதிகள் தயாரானார்கள். அந்த அளவுக்கு தர்பியாக்கள் நடத்தப்பட்டன.

அந்த தர்பியாக்களில் மரணத்திற்கு அஞ்சாத தியாகிகள் பற்றிப் போதிக்கப்பட்டன. குறிப்பாக மூஸா நபியவர்களிடத்தில் போட்டிக்கு வந்த மந்திரவாதிகள் ஈமான் கொண்டு, ஃபிர்அவ்னால் தண்டிக்கப்பட்ட வரலாறு பற்றிப் போதிக்கப்பட்டது. அதனால் தான் முறுக்கேறிய நரம்புகளுடன் முதல்வர் வீட்டு முற்றுகைக்கு தவ்ஹீத்வாதிகள் தயாரானார்கள். காக்கிச் சட்டை பயம் கழற்றி எறியப்பட்டது. இதற்கான அடிப்படையே தவ்ஹீத்தான். தவ்ஹீத் இல்லையேல் இந்தத் தெம்பு, திராணி, துணிச்சல் அவர்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டிருக்காது.           

முதல்வராயிருந்தும் தன் வீட்டை முற்றுகையிடுவதைக் கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. கடுமையான கைது நடவடிக்கைகள், தடுப்புச் சுவர்கள், துப்பாக்கிச் சூடு நடக்கும் என்ற மிரட்டல்கள் இவையனைத்தையும் மிஞ்சி குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கொள்கைவாதிகள் குவிந்தனர்; கைது செய்யப்பட்டனர். இப்படிப் பாபரி மஸ்ஜித் மீட்புப் போர் மக்களிடம் துவக்கி வைக்கப்பட்டது.

இதன் மாபெரும் பயன், பாபரி மஸ்ஜித் மீட்கப்பட்டதோ இல்லையோ ஆனால் சங்பரிவாரங்களின் பட்டியலில் இருந்த காசி, மதுரா போன்ற பள்ளிவாசல்கள் மீது அவர்கள் கை வைக்க அஞ்சினர்.

இதர பிரச்சனைகளுக்காக எழுச்சிப் போராட்டங்கள்:

கடந்த காலத்தைப் போன்றில்லாமல் சமுதாயத்தில் யார் அநியாயமாகக் கைது செய்யப்பட்டாலும் வீதியில் இறங்கும் வீரத்தைத் தந்தது தவ்ஹீத் கொள்கை. வீறு கொண்டு எழ வைத்தது. முஸ்லிம்களின் சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளில் அநீதி, அக்கிரமம் இழைக்கப்பட்ட போது ஆர்த்தெழும் போர்க்குணத்தை ஊட்டியது தவ்ஹீத் கொள்கை தான்.

தடையைத் தாண்டிய தமுமுக:

இக்கட்டத்தில் தான் வாழ்வுரிமை மாநாடு! இதன் பயனாய் தடையிலிருந்து தப்பியது. தமிழக வட்டத்தில் மட்டுமின்றி டெல்லியிலும் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை எதிரொலிக்கச் செய்தது.

இதன் பின்பு அவ்வப்போது தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தமுமுக நிர்வாகிகளுக்கும் அவ்வப்போது உரசல் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில் தான் மதுரை தமுக்கம் மைதானத்தில் தவ்ஹீதுக்கான ஒரு மாநாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு உதயமாகின்றது.

நஞ்சைக் கலக்கிய தஞ்சை பேரணி:

இதன் பின்பு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தஞ்சையில் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி தமுமுக ஒரு பேரணியை நடத்தியது. இந்தத் தஞ்சை பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் அந்த இயக்கத்தின் நிர்வாகிகளின் உள்ளத்தில் நஞ்சைக் கலக்கியது. இந்தக் கூட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தவ்ஹீத்வாதிகளை வெளியேற்ற வேண்டும் என்று தப்புக் கணக்குப் போட ஆரம்பித்தனர். அரசியல் கட்சிகளின் சகவாசங்கள் அவர்களின் உள்ளங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தன. அரசியல் கட்சியினர் காணும் கனவுகளை இவர்களும் காணத் துவங்கினர்.

இதற்கு முந்தைய இயக்கங்கள் நீர்த்துப் போவதற்கும் நிர்மூலமானதற்கும் அடிப்படைக் காரணம் தேர்தலில் போட்டி என்ற நிலைபாடு தான். அதனால் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற நிலைபாட்டை தமுமுக அடிப்படைக் கொள்கையாகக் கொண்டது. அந்த நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதில் பி.ஜே கண்ணும் கருத்துமாக இருந்தார்.

1. தேர்தலில் பங்கெடுப்பதைத் தடுக்கும் பி.ஜேயின் நடவடிக்கைகள்.

2 தமுமுகவின் தனித்தன்மையைத் தக்க வைப்பதிலும், பிற இயக்கங்களுடன் கலந்து விடாமல் அதைத் தடுக்க பி.ஜே கொண்டிருந்த கரிசனம், காட்டிய கண்டிப்பு

3. தமுமுக தலைவர்களிடம் நாள்பட நாள்பட தலைதூக்கிய தவ்ஹீத் கொள்கையிலேயே சமரசம் செய்யும் உணர்வு, இன்னும் சொல்லப் போனால் தவ்ஹீத் எதிர்ப்புணர்வு

ஆகியவை ஏற்கனவே உரசலில் இருந்ததை விரிசலாக்கியது. விளைவு! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயமானது.

தவ்ஹீத் கொள்கை தான் தமுமுக வளர்ச்சிக்குத் தடை என்று எழுதியே கொடுத்தனர்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயம்:

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! தவ்ஹீத்வாதிகளுக்கு, குறிப்பாக தவ்ஹீத் தாயீக்களுக்கு இது உண்மையில் ஒரு விடுதலை உணர்வை அளித்தது.

தவ்ஹீத்வாதிகளை மூலதனமாகக் கொண்டு வளர்க்கப்பட்ட ஒரு இயக்கத்தில் சமுதாய நலனுக்காக தவ்ஹீதை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் அநியாயத்திலிருந்து விடுதலை! அதாவது கண்ணை விற்று ஓவியம் வாங்கும் அக்கிரமத்திலிருந்து ஒரு விடுதலை! இந்த அநியாயங்களுக்கு விடுதலை இயக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயமானது. அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்பது பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தாக உருவெடுத்தது.

இந்த இயக்கத்தில் கண் தான் பிரதானமானது. சித்திரம் இரண்டாவது என்றானது. தவ்ஹீத் என்ற கண்ணுக்குத் தான் இங்கு முன்னுரிமை! முதலுரிமை! மற்றவை பின்னுக்கு!

எந்தச் சமுதாய நலனுக்கு தவ்ஹீத் கொள்கை பாதகமாக உள்ளது என்று நம்மை வெளியே தள்ளினார்களோ அந்த சமுதாயப் பணிகளுக்குத் தவ்ஹீத் ஒரு தடைக்கல் அல்ல என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துவங்கிய இரண்டாண்டு காலத்தில் கும்பகோணத்தில் நிரூபித்தோம்.

இது குறித்து முழு உண்மை அறிய

தமுமுகவில் இருந்து விலகியது ஏன்

தமுமுகவின் கேள்விகளும் பதில்களும்

குலுங்கியது கும்பகோணம்



"குடந்தை குலுங்கட்டும்'' என்று சொன்னோம். தவ்ஹீதை இந்த இயக்கம் முன்வைத்த காரணத்தால், நாம் இரண்டாவதாகக் கொண்ட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டான். குடந்தை குலுங்கட்டும் என்ற வார்த்தையை அவன் ஒப்புக் கொண்டான். இல்லையெனில் இவ்வளவு கூட்டத்தைக் கொண்டு வந்து குவித்திருப்பானா?

தவ்ஹீத் என்ற பெயரை நமது இயக்கத்தின் பெயரிலேயே தாங்கிக் கொண்டு, சமுதாயப் பிரச்சனைகளுக்காக அழைத்தால் மக்கள் வருவார்களா? என்ற ஐயம் தவ்ஹீத்வாதிகளிடம் இருந்தது. ஆனால் அந்த ஐயத்தை உடைக்கும் விதமாக, மக்களைக் கொண்டு வந்து கொட்டுகிறேன் என்று அல்லாஹ், குடந்தையைக் குலுங்க வைத்தான்.

தேர்தல் நேரத்தில் எங்களுக்காக வாக்குக் கேட்டு உங்களிடம் வர மாட்டோம் என்று சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுபவர்கள் இவர்கள் தான் என்று நம்மை நம்பி மக்கள் பெருக்கெடுத்தார்கள். காவிரியைத் தாங்க முடியாத குடந்தை இந்த மக்கள் கடலைத் தாங்குமா? என்ற கேள்வி எழுமளவுக்கு கும்பகோணத்தில் மக்கள் குழுமினார்கள்.

எதற்கு வாரியம் வாங்குவதற்காகவா? இலட்சக்கணக்கில் பணத்தை வாரிச் சுருட்டவா? இல்லை, தமுமுக மறந்துவிட்ட இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடந்த இந்தப் பேரணியில் கடலாய்ப் பெருக்கடுத்தனர்.

முதலில் ஒரு கட்சியில் கள்ளக் காதல் வைத்துக் கொண்டு குடந்தை பேரணியைக் கூட்டவில்லை.

கையிலே காசு வாயிலே தோசை:

இன்றைய ஆளும் திமுக, அன்றைய ஆளும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளில் இடஒதுக்கீட்டை அறிவிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் எங்கள் ஆதரவு என்று இரு கட்சிகளையும் சம தூரத்தில் வைத்திருந்தோம்.

அதிமுக முதலில் பதிலளித்தது. ஆந்திர மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீதிமன்றம் நிறுத்தி வைத்த கசப்பான அனுபவத்தையெல்லாம் கருத்தில் கொண்டு, இடஒதுக்கீடு கோரிக்கையைப் பரிசீலிப்பதற்கான ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் நீதிமன்றம் தலையிடாது. மேலும் இந்த ஆணையம் பரிந்துரைத்தால் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இட ஒதுக்கீடு அளித்தே தீரவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். எனவே இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். கும்பகோணம் பேரணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இது அமைந்தது.

இதன் அடிப்படையில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்காக உழைத்தோம். தேர்தலில் அதிமுக தோற்றாலும், திமுகவுக்குப் பெரும்பான்மை பலமில்லாத வெற்றி கிடைத்தது.

திமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட சென்னையை தனது பிரச்சாரத்தின் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தகர்த்தெறிந்தது. முஸ்லிம்களின் வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில் போட்டியிட்ட கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகியோர் கூட இழுபறி வெற்றியைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்படி ஒரு தொங்கல் வெற்றி கிடைப்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் வலிமையான பிரச்சாரம் தான் காரணம் என்பதை திமுகவே உணர்ந்தது.

திமுக ஆட்சியும் இட ஒதுக்கீடும்:

ஆட்சிக்கு வந்தாலும் இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தோம். தானைத் தலைவர் கருணாநிதியும் ஆணையத்தைத் தான் அறிவித்தார். அன்றைய முதல்வர் ஜெயலலிதா இந்தப் பணியைச் செய்த போது, வெற்றுப் பேப்பர் என்று கேலியும் கிண்டலும் செய்த தமுமுக, இப்போது அதை வரவேற்றது.

மேற்படி ஆணையத்தில் ஜெயலலிதா ஒரு முஸ்லிம் நீதிபதியை நியமித்திருந்தார். ஆனால் கருணாநிதி அறிவித்த ஆணையத்தில் முஸ்லிம்கள் யாரும் இடம்பெறவில்லை.

மேலும் இந்த ஆணையம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை ஓராண்டு என்று நிர்ணயித்திருந்தார். ஆனால் கருணாநிதி ஆணையத்தின் காலக் கெடுவை இரண்டு ஆண்டுகளாக மாற்றினார். இதை எதிர்த்து களத்தில் குதித்தது தவ்ஹீத் ஜமாஅத் தான்.

கருணாநிதியின் இந்தக் காலம் தாழ்த்தும் முயற்சியைக் கண்டித்து தமிழகமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெரும் மக்கள் கூட்டம் திரண்டது.

இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ஆணையத்தின் அறிக்கை தாக்கல் பணி நடைபெற்றது. அதில் கூறப்பட்ட பரிந்துரையின் படி இடஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்று காத்திருந்தோம். கண்கள் பூத்துப் போகும் வரை காத்திருந்தோம்.

கருணாநிதி காக்க வைத்து கழுத்தறுப்பதில் வல்லவர். அதனால் இவரிடம் அமைதி காத்தால், இஸ்லாமியர்களுக்கு இதயத்தில் இடஒதுக்கீடு எப்போதும் உண்டு என்று வசனம் பேசியே ஆட்சிக் காலத்தைக் கடத்தி விடுவார். அதனால் இவரிடம் போராடித்தான் பெற வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன்படி 2007 ஜனவரி 29 அன்று குடந்தைப் பேரணியை நினைவூட்டும் விதமாக, தமிழகமெங்கும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினோம்.

அந்தப் போராட்டத்திலேயே அடுத்தக் கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்தோம். அதன் பிறகும் இடஒதுக்கீடு என்பது கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

சிறை நிரப்பும் போராட்டம்:

மூச்சும் இல்லாமல், பேச்சும் இல்லாமல் கிடந்த இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு உயிர் கொடுக்கும் விதமாக, வாழ்வுரிமை மாநாடு நடைபெற்ற தினமான ஜூலை 4ம் தேதியைத் தேர்ந்தெடுத்து அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினோம். ஆண்களும் பெண்களும் வந்து குவிந்தனர். தாங்கள் பெற்ற பச்சிளம் குழந்தைகளுடன் வந்து குவிந்தனர்.

காவல்துறை வேனில் தொட்டில் கட்டித் தங்கள் குழந்தைகளைத் தூங்க வைத்த வரலாறு தமிழகத்தில் இதுவரை எந்தவொரு இயக்கமோ கழகமோ கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சிறை நிரப்பும் போராட்டத்தை எந் அரசியல் கட்சியும் நடத்தியதில்லை என்று உளவுத் துறையினர் வியக்கும் அளவுக்கு மக்கள் சிறை செல்லத் துணிந்தனர்.

டெல்லி சுற்றுலா:

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதே வீரியத்துடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாறிவிட்ட தமுமுக, திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழித்துக் கொண்டிருந்தது.

திமுக ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் வாரியப் பதவிகள் வாய்க்காமல் போய்விடும். ஆளும் கட்சியின் கூட்டணி என்ற பெயரில் நடத்தும் அடாவடிகளுக்கு ஆப்பு வந்துவிடும் என்று பயந்த தமுமுக, தனது சுய லாபங்களுக்காக சமுதாயத்திற்குக் குழிபறிக்கும் காரியங்களில் இறங்கியது.

இடஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உண்டு. மாநில அரசுகளுக்கு அதிகாரமே இல்லை என்று மனசாட்சியை விற்று மடமை வாதம் பேசியது தமுமுக.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் படிப்பறிவில்லாமல் மாநில அரசிடம் போய் இடஒதுக்கீடு கேட்கிறார்கள் என்ற நம்மைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தது. கருணாநிதி அரசைக் காப்பாற்றுவதற்காக, நாங்கள் டெல்லியில் போய் இட ஒதுக்கீடு கேட்கப் போகிறோம் என்று மாய்மாலம் செய்தது தமுமுக.

“ஊரான் வீட்டுப் பணத்தில் டெல்லிக்கு உல்லாசப் பயணம் சென்றது. டெல்லி சுற்றுலா சென்று மத்திய அரசை ஏதாவது அறிவிக்கச் செய்ததா? என்றால் ஒன்றுமில்லை. அழைத்த பிரமுகர்கள் கூட கல்தா கொடுத்தார்கள். ஒரு குட்டி அணி வகுப்பை நடத்தி விட்டு,  டெல்லியில் பேரணி நடத்தியதாக பீற்றிக் கொண்டது.

ஏற்கனவே உள்ள சமுதாய இயக்கங்கள் ஆளுங்கட்சியிடம் ஒரு சில சீட்டுக்களை வாங்கி விட்டு, தன்மானத்தை இழந்து பிணமானார்கள் அல்லவா? அது போன்று இவர்களும் வாரியத்தை வாங்கி விட்டு வாய் பொத்திக் கிடக்கின்றார்கள். இவர்கள் வாய் பொத்திக் கிடந்தால் கூடப் பரவாயில்லை. வாரியப் பதவியைப் பெறுவதற்காக சமுதாயத்தின் வாழ்வாதாரக் கோரிக்கையான இடஒதுக்கீட்டையே பலி கொடுக்கத் துணிந்து விட்டார்கள்.

இடஒதுக்கீட்டிற்கான இறுதி யுத்தம் - சட்டமன்ற முற்றுகை:

பதவிக்காக யாரிடமும் கையேந்துவதில்லை என்ற கொள்கையில் அன்றிலிருந்து இன்றுவரை உறுதியாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இடஒதுக்கீட்டிற்காக இறுதிவரை போராட முன்வந்தது. அதன் உச்சக்கட்டமாகத் தான் சட்டமன்ற முற்றுகையை அறிவித்தது.

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்படா விட்டால் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் சமயத்தில் சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. இனியும் தாமதிக்க முடியாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி உணர்ந்து இடஒதுக்கீட்டை அறிவிக்க முன்வந்தார். கனிமொழி மூலமாக இட ஒதுக்கீட்டிற்கான சாத்தியக் கூறுகளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்தது. அதன்படி மூன்றரை சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க முன் வந்தார் கருணாநிதி. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

நன்றி அறிவிப்புக் கூட்டம்:

இதனிடையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமிக்க போராட்டங்களால் இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகி விடும் என்ற செய்தி கசிய ஆரம்பித்தவுடன், டிசம்பருக்குள் இட ஒதுக்கீட்டை அறிவிக்கவில்லையென்றால் போராட்டம் என்ற கேலிக் கூத்தான அறிவிப்பை தமுமுக வெளியிட்டது.

அது வரை மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறிக் கொண்டிருந்த திமுகவின் சிறுபான்மைப் பிரிவினர் தமுமுக, இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதன் கிரடிட் தவ்ஹீத் ஜமாஅத்திற்குச் சென்று விடும் என்று பயந்து இப்படியொரு அறிவிப்பைச் செய்துள்ளனர் என்று மக்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர்.

இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியானவுடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது ஆதரவை திமுகவுக்கு அளிப்பதாக வாக்குறுதியும் கொடுத்து விட்டு வந்தனர். இதிலும் தங்களின் கேடுகெட்ட அரசியலை நடத்த தமுமுக முன்வந்தனர்.

தவ்ஹீத்வாதிகள் இருந்த வரை தான் தமுமுக சார்பில் இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள் நடைபெற்றன. தவ்ஹீத்வாதிகளைக் கழற்றிவிட்ட பின் இடஒதுக்கீட்டிற்காக உருப்படியான எந்தப் பேராட்டத்தையும் நடத்தவில்லை என்பதை மக்கள் அறிவார்கள். அத்துடன் திமுக ஆட்சிக்கு வந்த பின் வாரியப் பதவி பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததால், சிறுபான்மைப் பிரிவின் இடஒதுக்கீட்டுக் கோரிக்கை சுத்தமாக வீரியமிழந்தது. இதையெல்லாம் மக்களுக்கு மறக்கடிக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதி நன்றி அறிவிப்பு கூட்டத்தை மானங்கெட்டுப் போய் நடத்தினார்கள்.

மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றார்கள். ஜெயலலிதா ஒரு ஆணையத்தை அமைத்த போது வெற்றுப் பேப்பர் என்றார்கள். கருணாநிதி அந்த ஆணையத்தை மாற்றியமைத்த போதும் இதற்கும் இட ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தமில்லை என்றார்கள்.

 அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசு இடஒதுக்கீட்டை வழங்கிய போது, கருணாநிதியின் அறிவிப்பு செல்லாது என்று அறிக்கை விட்டு விட்டு ஒதுங்க வேண்டியது தானே? அவ்வாறு செய்யாமல் கோடிக்கணக்கில் செலவு செய்து நன்றி அறிவுப்புக் கூட்டம் எதற்காக நடத்த வேண்டும்? அப்போது அதிகாரமில்லை என்று சொன்னது, வாரியம் தந்த வள்ளலைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவா?

இப்போது நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்துவது, நாங்கள் தான் வாங்கித் தந்தோம் என்று கூறி மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்காக!

ஏமாற்றமளித்த இடஒதுக்கீடு:

இப்படிப்பட்ட துரோகங்களையெல்லாம் தாண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது. அத்துடன் காரியம் முடிந்து விடவில்லை. கருணாநிதி அறிவித்த இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. தமிழக அரசுத் தேர்வாணையம் வெளியிட்ட விளம்பரத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவிகித இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் கொதித்தெழுந்தது.

மூன்றரை சதவிகிதம் வழங்கப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்து, சென்னையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. கண்டனப் பொதுக் கூட்டங்களை நடத்தி சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

ஆனால் ஏற்கனவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் துரோகமிழைத்த தமுமுக இந்த விஷயத்திலும் தனது சமுதாய விரோதப் போக்கைத் தொடர்ந்தது. பதவியையும், பதவி தந்தவர்களையும் காப்பாற்றுவதற்காக வாரியடித்துக் கொண்டு, வரிந்து கட்டிக் கொண்டு, இந்தக் குளறுபடிகளை நியாயப்படுத்தினார்கள்.

ரோஸ்டர் முறை, புரோட்டா மாஸ்டர் முறை என்று வியாக்கியானம் கொடுத்தார்கள். படிப்பறிவில்லாததால் இதுவெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்குத் தெரியவில்லை என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நையாண்டி பேசினார்கள். ஆனால் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடந்திருப்பது உண்மைதான் என்று கருணாநிதியே முரசொலியில் எழுதி, இவர்களின் முகத்தில் கரியைப் பூசினர். இவர்களது சமுதாய துரோகங்களைத் தோலுரித்துக் காட்டினர்.

ஆள்பவரே சொல்லி விட்ட பிறகு இந்த அடிமைகள் என்ன செய்ய முடியும்? படிப்பறிவில்லாதவர்கள் சொன்ன அதே குற்றச்சாட்டை, முதல்வரிடம் சென்று கோரிக்கையாக வைத்துவிட்டு, மானங்கெட்டுப்போய் அதைப் பத்திரிகைச் செய்தியாகவும் அளித்தார்கள்.

இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டும் என்று இந்த படித்த (?) அறிவாளிகள் கருணாநிதியிடம் சொல்லிவிட்டு வந்தார்கள். இவர்களது அடிமைத்தனத்தையும், பதவிக்காக சமுதாயத்தை அடகு வைக்கும் போங்கையும் பார்த்து, "நாங்க எவ்வளவோ பரவாயில்லையப்பா!'' என்று ஒரு லீக் பிரமுகர் சொன்னது தான் இதில் வேடிக்கை!

உண்மையில் ஏனைய அரசியல்வாதிகள் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். அந்த அரசியல்வாதிகள் இவர்களிடம் தோற்றுப் போய்விட்டார்கள் என்றே கூற வேண்டும்.

ஆனால் மக்கள் உண்மை நிலையைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இடஒதுக்கீட்டில் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர்த்து வேறு யாரும் உரிய முறையில் குரல் கொடுக்கவில்லை என்பதை நன்றாக விளங்கி வைத்திருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடிகள் களையப்படுவதற்காக தவ்ஹீத் ஜமாஅத் காத்திருக்கின்றது. தவ்ஹீத் எழுச்சி மாநாட்டிற்குள் அவ்வாறு களையப்படவில்லை எனில், சட்டமன்ற முற்றுகைக்கான தேதி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு, வல்ல ரஹ்மான் ஏற்படுத்திய நிர்பந்தத்தால் சமுதாயப் பணிக்காகக் களமிறங்கிய தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு துரோகங்களை, குழி பறிப்புகளைத் தாண்டி இன்று வரை களத்தில் நிற்கின்றது. இவ்வாறு நிற்பதற்குக் காரணம், நீர்த்துப் போகாத அதன் நிலைபாடு! நிறம் மாறாத நெருப்புக் கொள்கை!   

இத்தனையும் எதற்கு? நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தேர்தலில் சீட் வாங்கவா? இல்லை இந்தச் சமுதாயப் பணிகளைக் கண்டு யாராவது தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பில் தான்.

இனி ஈரமைப்பில்லை! ஓரமைப்பு தான்!

உலகாதாயத்தை மட்டும் லட்சியமாகக் கொண்ட இவர்களிடம் மறுமை லாபத்தை எதிர்பார்ப்பது இலவு காத்த கிளி கதை தான் என்றெண்ணி, சமுதாயப் பாதைக்கு ஓர் அமைப்பு, சத்தியப் பாதைக்கு அதாவது ஏகத்துவ அழைப்புப் பணிக்கு ஓர் அமைப்பு என்று கண்டோம்.

சமுதாயப் பணிக்காகக் கண்ட இயக்கம் காலப்போக்கில் தவ்ஹீத் பணியை ஜீரணிக்கவில்லை. சத்தியத்திற்குக் கிடைத்த கிரெடிட்டை, பலனை மட்டும் அனுபவித்து விட்டு, சாறை உறிஞ்சி விட்டு நம்மை சக்கையாக வெளியே தள்ளியது. முகத்துக்கு நேராகப் புகழ்ந்து தள்ளிய அந்த முனாஃபிக்குகள் முதுகில் குத்தினார்கள். ஏகத்துவம் எனும் வட்டத்திற்குள் நாங்கள் வரமாட்டோம்; நாங்கள் வகுக்கும் வட்டத்திற்குள் தான் ஏகத்துவம் வர வேண்டும் என்ற நிலைபாட்டை நிறுவினர்.

இது தான் நம்மைச் சிந்திக்க வைத்தது.

சத்தியத்திற்கென்று ஒரு அமைப்பைக் கண்டோம். அதில் மதனிகள் சம்பளத்தைக் கவனத்தில் கொண்டு சமுதாயப் பிரச்சனைகளை மறுத்தார்கள்.

சமுதாயத்திற்கென்று ஒரு அமைப்பைக் கண்டோம். அவர்கள் சத்தியத்திற்குக் கதவைத் சாத்துகிறார்கள்.

இனிமேல் நமக்கு முன் இருப்பது, சத்தியத்திற்கு ஓரமைப்பு, சமுதாயத்திற்கு வேறமைப்பு என்ற அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதிவிட்டு, இரண்டிற்கும் ஒரே அமைப்பு என்ற புதிய அத்தியாயத்தைத் துவங்க வேண்டியது தான் என்று முடிவெடுத்தோம்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அது        தான் இன்று நம்மை அரவணைத்துக் கொண்டிருக்கின்ற ஓர் இயக்கம், அந்தப் பேரியக்கம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

இப்போது சத்தியம், சமுதாயம் என்ற இரு சக்கரங்களுடன் இந்த இயக்கம் தமிழகத்தில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வேளையில் ஒரு வேதனையையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

சமுதாயப் பிரச்சனையை நாங்கள் கையில் எடுக்க மாட்டோம் என்று கூறிய அந்த இயக்கமும், ஏகத்துவம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் என்று நம்மை வெளியே அனுப்பிய பங்காளி இயக்கமும் நாம் வெளியே வந்த பிறகு, பக்காவாகக் கூட்டாளிகளாகிக் கொண்டன. எதற்கு? நம்மை எதிர்ப்பதற்கு!

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.