இசையில் ஏஆர் ரஹ்மானை தூக்கி சாப்பிட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள்!
நாங்கள் அரசியலுக்கு போனால் அரசியல் சாக்கடையை சந்தன அருவியாக மாற்றி விடுவோம் என்று சவடால் விட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள் மயிலாடுதுறையில் ஹைதரி அலியை எம்பி ஆக்க இசை அமைக்கும் அற்புத காட்சி. தவ்ஹீத் வேண்டாம் என்றவர்கள் எப்படி தருதலைகளாக மாறுகிறார்கள் என்பதற்கு தமுமுக சார்பாக வெளியிடப்பட்ட இந்த வீடியோவே சாட்சி.
இசை கூடாது என்று கட்டுரை போடும் தமுமுகவின் கள்ள ஆதரவாளர்கள் இவற்றை கண்டிப்பார்களா?
அதிராம்பட்டிணத்தில் கந்தூரியின் இசை அடிக்கிறார்கள் அது தவறு என்று சொல்லும் தமுமுக மாவட்ட செயலாளர், தமுமுகவினரே இசை அடிக்கும் போது கண்டிக்காமல் இருப்பது தான் மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பதா?
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.
நூல்: புகாரி 5590