Tuesday, January 31, 2012

ஜெர்ரி தாமஸ் ஒட்டம் எடுத்தது ஏன்? - Why did Jerry Thomas Run Away from the Debate?


பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் நடைபெற்ற விவாதத்தில் மரண அடி வாங்கிய பின் ஜெர்ரி தாமஸ் கூட்டம் ஓட்டம் எடுத்தது.

முழு விபரம் அறிய கீழ்காணும்  வீடியோவை பார்வையிடவும்.


மேலும் விபரஙகளுக்கு இங்கே சொடுக்கவும்.

Sunday, January 29, 2012

மீலாதும் மௌலூதும் வழிகேடு - தேவ்பந்த் மதரஸாவின் ஃபத்வா

மீலாதும் மௌலூதும் வழிகேடு - தேவ்பந்த் மதரஸாவின் ஃபத்வா தமிழில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Saturday, January 28, 2012

ஒட்டம் எடுத்தார் ஜெர்ரி தாமஸ் - Jerry Thomas Ran Away!!


'பைபிள் இறை வேதமா?' என்ற தலைப்பில் சென்ற வாரம் நடைபெற்ற விவாதத்தில் மரண அடி வாங்கிய ஜெர்ரி தாமஸ் என்பரின் தலைமையிலான பாதிரியார்கள், 'குர்ஆன் இறை வேதமா?' என்ற தலைப்பில் இன்று (28.01.2012) நடைபெற இருந்த விவாதத்திற்கு வராமல் எஸ்கேப் ஆகிவிட்டார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்.

ஏன் இவர்கள் ஒடினார்கள் என்பதை பிஜே அவர்கள் விளக்கும் வீடியோ:


Friday, January 27, 2012

ஜூம்ஆ உரை ஆடியோ -27.01.2012

















மவ்லித் ஒரு ஆய்வு

மவ்லித் ஒரு ஆய்வு

உரை: பி ஜே







Wednesday, January 25, 2012

இறுதி நபித்துவம் (வீடியோ)

இறுதி நபித்துவம் -  மேலப்பாளையம்

உரை  - பி ஜே

பைபிள் இறைவேதமா? கிறிஸ்தவர்களைச் சிந்திக்க வைத்த கிறிஸ்தவ விற்பனர்களைத் தினற வைத்த விவாதம்!

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது.உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல்குர்ஆன் 21 : 18)

என்ற இறைவனின் வசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக கிறித்தவர்களுடனான விவாதம் இறைவனின் தனிப்பெரும் கிருபையால் சிறப்பாக நடந்தது.

கடந்த ஜனவரி 21 மற்றும் 22, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாட்கள் சென்னையிலுள்ள சர் பிட்டி. தியாகராயர் அரங்கத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும், கிறித்தவ அறிஞர் ஜெர்ரி தாமஸ் தலைமையிலான குழுவினருக்கும் இடையே பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த விவாதம் நடந்தது.

இந்த பரபரப்பான விவாதத்தில், பைபிள் இறைவேதமாக இருக்க முடியாது என்பதை கிறித்தவ மக்களே சந்தேகத்துக்கு இடமில்லாத வகையிலும், தெள்ளத் தெளிவாகவும் விளங்கிக் கொள்ளும் விதத்திலும் அடுக்கடுக்கான சான்றுகள் வைக்கப்பட்டன.

ஆட்டம் கண்ட அறிஞர்கள் :

பைபிள் இறைவேதம் தான் என்பதை நிரூபிப்பதற்காக விவாதம் செய்ய வந்துவிட்டு, விவாதத்தை ஆரம்பித்த பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆங்கில மொழிப்புலமை பெற்ற கிறித்தவ அறிஞர்களால் பைபிள் இறைவேதம்தான் என்பதற்கு இந்த விவாதத்தில் ஒரு ஆதாரத்தைக்கூட எடுத்து வைக்க முடியவில்லை என்பதுதான் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம்.

ஆரம்பம் முதலே குர்ஆனில் இறைவன், தவ்ராத் மற்றும் இஞ்சீலைப் பற்றிக் கூறியுள்ள வசனங்களை எடுத்து வைத்துக் கொண்டு குர்ஆனில் சொல்லப்பட்ட தவ்ராத்தும், இஞ்சீலும் இதுதான். எனவே இதை நீங்கள் நம்புங்கள் என்று சொல்லி காமெடி செய்தனர்.

தவ்ராத்திலும், இஞ்சீலிலும் நேர்வழி இருந்தது என்றும், ஒரே இறைவனைத்தான் வணங்க வேண்டும் என்றும், மூன்று கடவுள்கள் இல்லை என்றும், கடவுளுக்கு மகன் இருக்க முடியாது என்றும், தீண்டாமை இல்லை என்றும் தெளிவாக திருக்குர்ஆன் கூறுகின்றது.

தவ்ராத்தும், இஞ்சீலும் குர்ஆனை மெய்ப்பிக்கும் என்றும் குர்ஆனில் உள்ளது. இதற்கெல்லாம் எதிராக உள்ள செய்திகளை மனிதக்கரங்களால் எழுதி வைத்துக் கொண்டு, இதை தவ்ராத் என்றும் இஞ்சீல் என்றும் நம்புங்கள் என்று எங்களை நம்பச் சொன்னால் நாங்கள் எப்படி நம்புவது என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டவுடன் கிறிஸ்தவ அறிஞர்கள் ஆட்டம் கண்டு விட்டனர்.

ஆரம்பமே அமர்க்களம் :

பைபிள் இறைவேதம் இல்லை என்பதற்கு ஆதாரமாக எடுத்த எடுப்பிலேயே அதிலுள்ள ஆபாசங்களை அள்ளிப் போட, ஆரம்பமே அமர்க்களமானது.

கடவுளுடைய வேதம் என்று சொல்லிக் கொண்டு நீங்கள் வைத்துள்ள இந்த வேதம், செக்ஸ் புத்தகங்களை மிஞ்சக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது என்றும், இது எப்படி இறைவேதமாக இருக்க முடியும் என்று கேட்டு ஆதாரங்களை அள்ளிப்போட, போட கிறிஸ்தவ அறிஞர்கள் என்று தங்களை சொல்லிக் கொண்டவர்கள் விழி பிதுங்கினர்.

உன்னதப்பாட்டா? மன்மதப்பாட்டா? :

பைபிளில் உள்ள உன்னதப்பாட்டு என்ற ஒரு மகத்துவமிக்க(?) உன்னதமான ஒரு ஆகமத்தில், கள்ளக்காதலர்கள் செய்யும் காமச்சேட்டைகளும், ஆபாச வர்ணனைகளும் முதலில் பட்டியல் போடப்பட்டன.

பனை மரத்தில் ஏறுவதும், குலை பறிப்பதும், துவாரத்தில் கையை விடுவதும், வெள்ளைப்போளம் வடிவதும் என்று வரும் வாசகங்களை வாசித்து இதுதான் இறைவேதமா? என்று நாம் கேட்க, இவ்வாறு நீங்கள் வர்ணிப்பது ஏதோ படம் பார்த்துவிட்டு வந்து விளக்குவது போல உள்ளது என்று எதிர்தரப்பினர் கேள்வியெழுப்பினர்.

பைபிளை படித்தாலே படம் பார்த்தது போலத்தானே உள்ளது என்று நாம் கூற வாயடைத்துப் போயினர்.

இப்படிப்பட்ட ஆபாசங்களை நியாயப்படுத்த இது போன்ற காமச்சேட்டைகள் கணவன் மனைவி இடையே நடந்த விஷயம் என்று சப்பைக்கட்டு கட்டி பதில் வர, நீ என் அண்ணனாகவும், என் தாயிடத்தில் பால்குடித்த சகோதரனாகவும் இருந்திருந்தால் உன்னைக் கண்ட இடத்திலெல்லாம் முத்தமிடுவேனே! என்று காமச்சேட்டை செய்யும் காதலி சொல்கிறாளே! இப்படித்தான் கணவன் மனைவி பேசிக்கொள்வார்களா? என்று பீஜே கேள்வியெழுப்ப அப்படியே அதைவிட்டுவிட்டு அடுத்த மேட்டருக்கு தாவிவிட்டனர்.

தொடரும் அசிங்கங்கள் :

ஆபாச வர்ணைனை அசிங்கத்தை எடுத்து வைத்ததைத் தொடர்ந்து

அண்ணனும் தங்கையும் உடலுறவு கொண்ட அசிங்கம்,

தன் மகளை திருமணம் முடித்துத்தர 100 நுனித்தோலை தனது மகளுக்காக மஹர் கேட்ட சவுல் ராஜாவின் அசிங்கம், அதற்கு தாவீது ராஜா 200 நுனித்தோல்களை கொண்டு வந்தக் கொடூரம்.

ஆண்களின் மர்ம உறுப்புகளின் அளவுகளை பற்றியே விதவிதமாக விளக்கும் பரிசுத்த(?) வேதாகமத்தின் பரிசுத்த(?)வரிகள்,

மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே நடைபெற்ற அசிங்கங்களை புனித பைபிள் விவரிக்கும் அசிங்கம்,

பெற்ற தகப்பனோடு மகள்கள் உடலுறவு கொண்ட கேவலம்,

மகளுக்கு திருமணம் முடிக்க ஆளில்லாவிட்டால் பெற்ற தகப்பனே மகளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; அது பாவமல்ல என்று சொல்லும் கேவலத்திலும் கேவலம்,

சந்தேகப்படும் மனைவியைக் கண்டுபிடிக்க அற்புதமான(?) ஆபாச ஐடியா,

கர்த்தர் யாகோபுடன் ரெஸ்ட்லின் சண்டை போட்ட கதை,

கர்த்தர் யாகோபுடன் சண்டை போட்ட போது யாகோபுடைய தொடைச்சந்துக்குள் கையைவிட்ட ஆபாசம் கர்த்தர் தீர்க்கதரி ஒருவரை அம்மணமாக நடக்க சொன்ன ஆபாசம்,

கர்த்தரே அம்மணமாக ஓடிய கேவலம்,

கர்த்தர் நரியைப்போல ஊளையிட்ட விஷயம்,

பாவாடையை தூக்கிக் காட்டுவதாக பைபிள் விவரிக்கும் விபரீத வர்ணனை

விதை நசுங்கியவன் மற்றும் ஊன முற்றவர்கள் தேவாலயத்தினுள் வரக் கூடாது என்ற அநீதியான சட்டம்

ஒருவர் தனது தகப்பனை ஏசுவுக்காக தியாகம் செய்தால் அவருக்கு நூறு அப்பாக்கள் கிடைப்பார்கள் என்று கூறும் உளறல்

இது போன்ற கேவலமான விஷயங்கள் இறைவனுடைய வார்த்தைகள் என்று சொல்லப்படும் வேதத்தில் இருந்தால் இது வேதமா? அல்லது வேறு எதுவுமா? என்று நாம் கேட்க, கேவலப்பட்ட எதிர்தரப்பினரால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை.

பைபிளில் கைவரிசையைக் காட்டியது அம்பலம் :

இவர்கள் தற்போது வைத்திருக்கும் பைபிளின் வரலாறு என்ன?

அதில் இவர்கள் தற்போது என்னென்ன கைவரிசையை காட்டியுள்ளார்கள்?

அதில் நீக்கப்பட்ட வசனங்கள் என்னென்ன?

பல வசனங்களை மட்டும் நீக்கவில்லை; பல ஆகமங்களையே நீக்கியுள்ள அவலம்

பைபிளின் மூலப்பிரதிகளின் லட்சணம் என்ன?

பரிசுத்த ஆவியால் உந்தி எழுதப்பட்ட பைபிள் வசனங்களில் அடைப்புக்குறி போட்டு ஆவிகள் பேசிய அதிசயம் எப்படி?

ஏசுவுடைய காலத்தில் இருந்த பழைய ஏற்பாட்டில் இவர்கள் தற்போது விளையாடிய ஆட்டங்கள் என்னென்ன?

இவர்கள் தற்போது வைத்துள்ள புதிய ஏற்பாடு என்பது என்ன என்றே ஏசுவுக்குத் தெரியாது

சினாடிகானஸ், வாடிகானஸ் என்று இவர்கள் எடுத்து வைத்திருக்கும் மூலப்பிரதிகளின் நம்பகத்தன்மை என்ன?

கிரேக்க மொழியில் உள்ள மூலப்பிரதிகளில் உள்ள குளறுபடிகள் இவை அனைத்தும் ஆதாரப்பூர்வமாக அதன் மூலப்பிரதிகளில் இருந்து ஸ்கேன் செய்யப்பட்ட ஆதாரங்களை அக்குவேறு ஆணிவேறாக எடுத்துப்போட்டவுடன், தாங்கள் பைபிளில் செய்த தில்லுமுல்லுகள் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டதை கண்டு ஆட்டம் கண்ட கிறிஸ்தவ அறிஞர்கள், அதிலிருந்து நழுவி ஓடுவதற்கு, மூலமொழியிலிருந்து எடுத்துக்காட்டி விமர்சனம் செய்வதற்கெல்லாம் கிரேக்க மற்றும் ஹீப்ரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.

இதைப்பற்றி எங்களுக்கும் முழு அறிவு இல்லை; உங்களுக்கும் முழு அறிவு இல்லை. எனவே நாம் அதைப்பற்றி இங்கே பேச வேண்டாம் என்று அசடு வழிந்தனர்.

சவால் விட்டதும் சறுகிவிட்ட எதிர்தரப்பினர் :

உங்களுக்கு இது குறித்து அறிவு இல்லை என்று ஒப்புக்கொண்டு விட்டீர்கள். ஆனால் எங்களுக்கு இது குறித்து அறிவு இல்லை என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம். எனக்கு கிரேக்கமும், ஹீப்ருவும் தெரியும். பேச இயலாதே தவிர, வாசித்து அர்த்தம் வைக்கும் அளவுக்கு தெரியும்.

அராமிக்தான் எனக்கு தெரியாது. நாங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் மூலமொழியில் இருந்து ஒப்பீடு செய்து நிரூபிக்க தயார்! நீங்கள் அதை மறுக்க தயாரா? என கலீல் ரசூல் பகிரங்க சவால்விட எதிர் தரப்பினர் கப்சிப்.

நமக்கு ஆதரவாக ஆதாரத்தை அளித்த பாதிரிமார்கள்:

இரண்டு மூலப்பிரதிகளில் இருந்து அவற்றில் உள்ள வேறுபாடுகளை அடுக்கடுக்காக கலீல் ரசூல் அவர்கள் அள்ளிப் போட்டவுடன், இரண்டு மூலப்பிரதிகளிலிருந்து அதிலுள்ள வேறுபாடுகளை அள்ளிப்போட்டுக் கொண்டு இருக்கிறீர்களே! மூலப்பிரதிகள் இரண்டு மட்டுமா? உள்ளது.

கிட்டத்தட்ட 27,000 (இருபத்து ஏழாயிரம்) மூலப்பிரதிகள் உள்ளன. அவற்றைப்பற்றி உங்களுக்குத் தெரியாது என்று கூற, இரண்டு மூல மொழிபெயர்ப்பிலிருந்தே ஆயிரக்கணக்கான முரண்பாடுகளை காட்டிக் கொண்டிருக்கின்றோம். அதுவே இவ்வளவு இருந்தால், 27000 (இருபத்து ஏழாயிரம்) மூலப் பிரதிகளில் எத்தனை குளறுபடிகள் இருக்கும்? நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு என்ன? நீங்கள் சொல்லும் பதில் என்ன? எங்களுக்கு ஆதரவாக கூடுதல் ஆதாரத்தையல்லவா நீங்கள் தருகின்றீர்கள் என கேள்வியெழுப்பிய வுடன் தேவையில்லாமல் உளறிவிட்

டோமோ என்று தங்களது உளறலை தங்களின் மவுனத்தின் வாயிலாக ஒப்புக் கொண்டு விட்டனர் கிறிஸ்தவ அறிஞர்கள்.

பரபரப்பாக்கிய விஷப்பரீட்சை:

கிறித்தவ பாதிரிமார்களுக்கு அவர்களுடைய உண்மை விசுவாசத்தைச் சோதிப்பதற்காக பைபிளில் இருந்து பீஜே அவர்கள் வைத்த விஷப்பரீட்சைதான் கிறித்தவ விவாதத்தில் மிக மிக பரபரப்பாக்கிய மற்றும் ஹைலைட் ஆன விஷயம்

பைபிள் புதிய ஏற்பாடு பகுதியில் மாற்கு 16வது அதிகாரத்தில்,

17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.

மேற்கண்டவாறு கர்த்தர் சொல்லியுள்ளாரே! நீங்கள் உண்மையான விசுவாசிகளாக இருந்தால் இதோ விஷபாட்டில் இங்கே உள்ளது.

இந்த விஷத்தை இப்போதே நீங்கள் குடித்து, பைபிள் இறைவனுடைய வேதம் என நிரூபியுங்கள் என்று சொல்லி அவர்கள் கையில் விஷத்தை கொடுக்க, ஆடிப்போன எதிர்தரப்பினர் இப்படியெல்லாம் கர்த்தரை பரீட்சை பார்க்கக் கூடாது என்று சொல்லி அசடு வழிந்தனர்.

மேலும், இது போல ஒரு பரீட்சையை சாத்தான் ஏசுவிடத்தில் செய்யச்சொன்ன போது இயேசு மறுத்து விட்டார். எனவே நாங்கள் கர்த்தரை பரீட்சை பார்க்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு, புகாரியில் நபிகளார் சொன்னதாக ஒரு செய்தி உள்ளது. யார் அஜ்வா பேரீச்சம்பழத்தை சாப்பிடுகின்றாரோ அவருக்கு விஷமோ சூனியமோ ஒன்றும் செய்யாது என்று வரக்கூடிய ஹதீஸை குறிப்பிட்டு, இந்த விஷத்தையும், பேரீச்சம்

பழத்தையும் நீங்கள் சாப்பிட்டு முஹம்மது நபி இறைத்தூதர்தான் என்பதை நிரூபியுங்கள் என்று கூறி அந்த விஷ பாட்டிலையும், பேரீச்சம்பழத்தையும் நமக்கு அளித்தனர்.

உயிருக்குப் பயந்து கொண்டு பைபிளை பொய்யாக்கிய கேவலம்:

பேரீச்சம்பழத்தையும், விஷபாட்டிலையும் நமக்குக் கொடுக்க, இப்படி, “யார் அஜ்வா பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகின்றாரோ அவருக்கு விஷமோ சூனியமோ ஒன்றும் செய்யாது” என்று வரக்கூடிய செய்தி பொய்யான செய்தி. இதை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பல வருடங்களுக்கு முன்பே இது போன்ற செய்திகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

குர்ஆனுக்கு முரண்படும் இத்தகைய செய்திகளை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று எங்களது நிலையை தெளிவுபடுத்தியுள்ளோம். நீங்கள் சுட்டிக்காட்டியது பொய்யான செய்தி.

நாங்கள் சொல்வது போல, பைபிளில் உள்ள மாற்கு அதிகாரத்தில் வரும் விஷம் குடிக்கும் செய்தி பொய்யான செய்தி என்று நீங்கள் சொல்லிவிட்டால் நாங்கள் உங்களை விஷம் குடிக்க சொல்ல மாட்டோம் என்று பீஜே அறிவித்தார்.

கர்த்தரை பரீட்சை பார்க்கலாம்:

கர்த்தரை பரீட்சை பார்க்கக்கூடாது என்பதால் தானே நீங்கள் விஷத்தை குடிக்க மாட்டேன் என்கிறீர்கள். பைபிளை நன்றாகப் படித்துப் பாருங்கள். யாத்திரகாமம் 17வது அதிகாரத்தில் மோசேவுடன் பயணித்த மக்கள் கர்த்தரை பரீட்சை பார்க்க, தண்ணீர் கேட்டனர். அவர்களை மோசே திட்டிவிட்டு அற்புதத்தை கொண்டு வந்தார். அதைப்போல, இயேசுவிடத்திலும் அவரை சோதித்துப் பார்ப்பதற்கு, ஒரு அடையாளம் கேட்டதாகவும், அவர் ஒரு அடையாளத்தை அறிவித்ததாகவும் உள்ளது.

அதுமட்டுமில்லாமல், தன்னை நம்பாத மக்களிடத்தில் அவரை நம்பவைப்பதற்காக இயேசு அற்புதம் நிகழ்த்தியதாக உள்ளதே எனவே நம்பவைக்க அற்புதம் செய்துள்ளதால், நீங்கள் இப்போது விஷம் குடித்து அற்புதம் செய்து பைபிள் இறைவேதம்தான் என்று நிரூபித்துவிட்டால் அதை நாங்கள் ஏற்றுக் கொண்டு விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கின்றோம் என்று பீஜே அறிவித்து விஷபாட்டிலை திரும்பவும் அவர்களிடம் தூக்கி கொடுக்க, பைபிளை உண்மையென்று நிரூபிப்பதை விட அவர்களுக்கு பைபிளை விட தங்களது உயிர்தான் பெரிது என்று விஷத்தைக் குடிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

அதுமட்டு மல்லாமல் பைபிள் இறைவேதமில்லை என்று தாங்களே தங்களது செய்கையின் வழியாக சாட்சி கொடுத்தனர்.

பேப்பர் வெயிட்டைக்கூட நகர்த்த முடியாமல் தலைகுனிந்த பேரறிஞர்கள் :

அடுத்ததாக,

கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 17:20

அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

லூக்கா 17:6

மேற்கண்ட வசனங்களை பீஜே அவர்கள் வாசித்துக் காண்பித்து உங்களில் யாருக்கேனும் கடுகளவு விசுவாசமிருந்தால், இந்த மலையைப்பார்த்து நகர்ந்து கடலில் போய் விழு என்று கட்டளையிட்டால் அது அப்படியே கேட்கும் என்று சொல்லும் பைபிள் உண்மையிலேயே இறைவேதமாக இருக்குமானால், இதோ ஒரு பேப்பர் வெயிட் இங்குள்ளது.

நீங்கள் மலையை எல்லாம் நகர்த்திக் காட்ட வேண்டாம். இதோ இந்த பேப்பர் வெயிட்டை மட்டும் கொஞ்சம் நகர்த்திக் காட்டுங்கள் என்று சவால்விட, தங்களுக்கு கடுகளவு கூட விசுவாசமில்லை; பைபிள்இறைவேதமுமில்லை என்று தங்களது செய்கையின் மூலம் நிரூபித்து தலைகுனிந்தனர்.

உலகம் முழுவதும் பார்க்கப்பட்ட விவாதம்:

இந்த நேரடி விவாதம் நமது ஆன்லைன்பீஜே இணையதளம் மற்றும் tntj.net மற்றும் ஜீஸஸ் இன்வைட்ஸ் மற்றும் தவ்ஹீத் வீடியோ ஆகிய இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருவாரியான மாவட்டங்களில் தங்களது மர்கஸ்களில் இணையதளத்தின் வாயிலாக நேரடி ஒளிபரப்பை ஒளிபரப்பு செய்து அதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்தனர்.

அதுமட்டுமில்லாமல், லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகள், மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலும் உள்ளவர்கள் இந்த நேரடி விவாதத்தை கண்டுகளித்து தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

விவாதம் நடைபெற்ற ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு நாளும் 23000 (இருபத்தி மூவாயிரம்) சிஸ்டங்கள் வழியாக இந்த நேரடி ஒளிபரப்பு பார்க்கப்பட்டுள்ளது.

ஒரு சிஸ்டத்தில் குறைந்தது 5 பேர் பார்த்திருந்தாலும் கிட்டத்தட்ட ஒன்னேகால் லட்சம் பேர்கள் பார்த்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், மாவட்டங்களில் பல மர்கஸ்களில் ஒரு சிஸ்டத்திலேயே ஸ்கோப் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் மொபைல் போன் வழியாகவும் நேரடி ஒளிபரப்பை பார்க்கும் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

நேரடி ஒளிபரப்பு பணியை நமது இணையதள வெப்மாஸ்டர் அப்பாஸ் அவர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தார்.

சிறப்பாக அமைந்த ஆங்கில மொழியாக்கம்:

நாம் தமிழில் வைக்கும் வாதங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கர்நாடக நிர்வாகிகளான பெங்களூர் முஹம்மது கனி மற்றும் பெங்களூர் யூசுப் ஆகியோர் மிகச் சிறந்த முறையில் மொழிபெயர்த்தனர். பீஜே மற்றும் நமது குழுவினர் வைத்த வாதங்களை முழுமையாக கிரகித்து உணர்வுப்பூர்வமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்த விதம் இந்த விவாதம் உலகம் முழுவதும் சென்றடைய வழிவகுக்கும் வகையில் அமைந்தது.

எந்த விவாதத்திலும் நடக்காத அதிசயம்:

இறுதியாக ஜெர்ரி தாமஸ் நிறைவுரை ஆற்றும் போது சில கேள்விகளை எழுப்பினார். அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பீஜே அரை மணி நேரத்துக்கு முன்பு தான் விளக்கமாக பதில் கூறி இருந்தார்.

இது பற்றி பீஜே தனது நிறைவுறையில் குறிப்பிடும் போது பதில் சொன்ன பிறகு கேள்வி கேட்கும் அதிசயத்தை இப்போது தான் நாம் பார்க்கிறோம்.

இவர்கள் எந்த அளவுக்கு குழம்பியுள்ளனர் என்று எடுத்துக் காட்டினார்.

பைபிள் இறைவேதம் என்பதற்கு ஒரு ஆதாரத்தையும் இவர்கள் காட்டவில்லை என்பதையும் பீஜே எடுத்துக் காட்டினார்.

குர்ஆனில் தவ்ராத் இஞ்சீல் பற்றி கூறியது தான் பைபிள் இறைவேதம் என்பதற்கு ஒரே ஆதாரமாக இவர்கள் கூறினார்கள்.

முஸ்லிம்களை அவர்களின் நம்பிக்கையை வைத்தே ஏமாற்றி வசப்படுத்த நினைத்தனர் அதில் இவர்கள் தோல்வி அடைந்தனர்.

ஒரு முஸ்லிமாவது இவர்கள் வாதம் செய்ததை நம்புகிறீர்களா? என்று பீஜே கேட்டார். ஒரு முஸ்லிமும் கை உயர்த்தவில்லை.

ஒவ்வொரு தரப்புக்கும் 150 பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர் ஆனால் முஸ்லிம் தரப்பில் ஒருவர் கூட வெளியேறவில்லை. ஆனால் கிறித்தவ தரப்பில், பொறுக்குமணிகளாக கூட்டி வந்த 150 பேரில் 85 பேர் இவர்களின் உளறலைப் பார்த்து வெளியேறி விட்டனர் என்பதையும், இங்கு இந்த விவாதத்தை பார்த்துக் கொண்டிருந்த கிறுஸ்தவ பார்வையாளர்களில் பாதிபேர் எப்படி உங்களது வாதம் சரியில்லை என்பதை உணர்ந்து பாதியிலேயே வெளியேறினார்களோ அது போலத்தான் இந்த விவாதத்தை டிவிடிக்கள் மற்றும் இணையதளம் வாயிலாக பார்ப்பவர்களும், உலகமக்களும் உணர்வார்கள் என்பதையும் பீஜே எடுத்துக் காட்டினார்.

இறைவனுடைய மகத்தான அருளால், பைபிள் இறைவேதமல்ல; அது மனிதக்கரங்களால் எழுதப்பட்ட, பொய்களும், முரண்பாடுகளும், தவறுகளும், கேடுகெட்ட ஆபாசங்களும், உளறல்களும், நிறைந்த ஒரு மனித உளறல்தான் என்பது மீண்டும் நிரூபணமானது. அல்ஹம்துலில்லாஹ்

“உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது” என்றும் கூறுவீராக!
அல்குர்-ஆன் 17 : 81



விவாதத்தின் ஒரு காட்சி

Tuesday, January 24, 2012

நபிவழித் திருமணம் - சிரிக்க வைக்கும் கேள்விகளும் பதில்களும்

சமீபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிலால் நகர் பள்ளியில் நடத்தி வைத்த நபிவழித் திருமணத்தை பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்தியின் கருப்பொருள், நபிவழித் திருமணங்களுக்கு தடைபோடும் ஜமாஅத்தார்கள் மத்தியில், பிலால் நகர் ஜமாஅத்தினர் திருமண பதிவேடு தந்து, பள்ளியிலேயே திருமணத்தை நடத்திக்கொள்ளுங்கள் என்ற சொன்னதை வைத்து, பிற ஜமாஅத்தார்கள் இவ்வாறு செய்வார்களா? என்று எழுதியிருந்தோம். இதை பார்த்தவுடன் பலருக்கு வயிற்றெரிச்சல் கிளம்பியது. 

இதை பார்த்தவுடன் ஒரு சகோதரர், நீங்கள் மட்டும் தான் நபிவழியில் திருமணம் செய்துள்ளீர்களா? என்று கேட்டுள்ளார். சகோதரா, நாங்கள் மட்டும் தான் நபிவழியில் திருமணம் செய்துள்ளோம் என்று நாங்கள் எங்கே குறிப்பிட்டுள்ளோம்? மற்றவர்களை தூய்மையற்றவர்கள் என்று கூறுவது நியாயமா? என்றும் கேட்டுள்ளார் அந்தச் சகோதரர், நாங்கள் எங்களது செய்தியில் அவ்வாறு மற்றவர்களை தூய்மையற்றவர்கள் என்று எங்குமே கூறவில்லையே! நீங்கள் கேட்கும் கேள்விகளை பார்த்தால்,  எங்கோ  பிரச்சினை இருப்பது போல் தோன்றுகிறது, இருந்தாலும் அதை கிளற விரும்பவில்லை. நபிவழித் திருமணம் என்று சொல்லுவதால், அது நபிவழித் திருமணங்களாக ஆகிவிடாது. லட்சம் லட்சமாக வரதட்சனை வாங்கி நடத்தப்படும் திருமணங்களை கூட, நமது ஆலிம்கள், 'திருமணம் எனது வழிமுறை' என்ற நபி (ஸல்) அவர்களின் ஹதீசை சொல்லித்தான் நடத்துகிறார்கள். அந்த ஆலிம்கள் நபி (ஸல்) அவர்களின் ஹதீசை சொல்லி ஆரம்பிப்பதால், அது நபிவழித் திருமணமாகாது. 

நபிவழியில் யார் திருமணம் செய்தாலும் அது பாராட்டப்பட வேண்டியது என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. நாம் இதுபோன்ற திருமணங்களை பகிரங்கப்படுத்துவதற்கு காரணம், மக்களை இவ்வாறு செய்யுங்கள் என்று தூண்டுவதற்காக தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், ஒன்றை அடித்துச் சொல்லுவோம், அதிரையில் அதிகமாக நபிவழித் திருமணங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் நடத்திவைத்துள்ளது. இதை தம்பட்டம் அடிப்பதற்காக நாங்கள் சொல்லவில்லை (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரையில் இதுவரை நடத்திய நபிவழித் திருமணங்கள் பற்றி அறிய). நீங்கள் மற்றவர்கள் அனைவரும் நபிவழித் திருமணத்தை ஒரு நாளுக்கு ஐந்து பத்து என்று நடத்துவதை போல் பேசுவதால், இதை சொல்ல வேண்டிய நிர்பந்தம் எற்படுகிறது.

அடுத்தாக, அதே சகோதரர் நீங்கள் இது போன்ற திருமணங்களை செய்து பெருமையடிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறார். உங்களின் திருமணத்தை நீங்களே தம்பட்டம் அடிப்பது பெருமை. உங்களின் திருமணம் பாராட்டப்பட வேண்டிய அளவுக்கு இருந்து, அதை மாற்றவர்கள் பெருமையாக சொன்னால், அது தம்பட்டம் ஆகாது. அதுதான், இந்த திருமணத்திற்கும், மணமகன் வந்து இங்கு தம்பட்டம் அடிக்கவில்லை. நபிவழித் திருமணங்களை ஜமாஅத்கள் அங்கரிக்க வேண்டும், வரதட்சனை திருமணங்களை தடைசெய்ய வேண்டும், மக்களும் எளிமையான நபிவழித் திருமணங்களை நடத்த முன்வர வேண்டும், திருமணங்களில் நபி (ஸல்) அவர்கள் காட்டிதந்த சுன்னத்கள் அனைத்தும் பேணப்பட வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் தான் இந்த செய்தி பதியப்பட்டது. இது பெருமையாகாது என்பது குர்ஆன் ஹதீசை விளங்கியிருந்தால் நன்றாக புரியும்.

அதேபோல், எளிமையான திருமணங்கள் நடக்கத்தான் செய்கிறது என்கிறார். எளிமையான திருமணங்கள் அனைத்தும் நபிவழித் திருமணம் அல்ல, வரதட்சனை இல்லாத திருமணங்கள் அனைத்தும் நபிவழித் திருமணங்கள் அல்ல.

நபிவழித் திருமணங்கள் என்றால், அல்லிக்குத்து பைனகுமா போன்ற எந்த பித்அத்தும் இருக்க கூடாது, வரதட்சனை இருக்கக்கூடாது, பெண் வீட்டு விருந்து இருக்கக்கூடாது, திருமணத்தில் நபி (ஸல்) காட்டிய அனைத்து வழிமுறைகளும் பின்பற்றபட வேண்டும். இதை வைத்து, உங்களின் திருமணம் நபிவழித் திருமணமா? என்று முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

அடுத்து, நாம் நடத்திய திருமணம் நபிவழித் திருமணம் இல்லை என்பதற்கு இவர்கள் கண்டுபிடித்த விஷயம் மணமகன் தாடி வைக்கவில்லை என்பதாகும். நபிவழித் திருமணத்திற்கு தாடி வைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மணமகன் தாடி வைக்கவில்லை என்றால், மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தை செய்யவில்லை என்று தான் ஆகுமே தவிர, தாடி வைக்காத காரணத்தினால், இது நபிவழித் திருமணம் அல்ல என்று மார்க்கம் அறிந்தவர்கள் சொல்ல மாட்டார்கள், காரணம் தாடி திருமணத்திற்காக பிரத்யேகமாக சொல்லப்பட்ட சுன்னத் அல்ல. ஒருவர் தாடி வைத்துள்ளாரா? இல்லையா? என்பதை நேரில் பார்க்கும் போது தான் தெரியும், காரணம், சிலருக்கு தாடியே வளர்ந்து இருக்காது, சிலருக்கு அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும். மணமகனை நேரில் பார்க்காதவர்கள், போட்டேவை பார்த்து தாடி வைக்கவில்லை என்கிறார்கள். இவர்களால் கண்டுபிடிக்க முடிந்த தவறு இது ஒன்று தான். இருந்தாலும் மணமகன் தாடி வைத்துள்ளார் என்பதை போட்டேவை Zoom செய்து பார்க்கும் எவரும் புரிந்துக்கொள்வார்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள காழ்புணர்வு தான், அவர்கள் செய்யும் ஒரு நல்ல செயலை உங்களால் ஏற்க முடியாமல் போவதற்கு காரணம். இதற்கு முன் சில இணையதளங்களில், பல திருமணங்களை பற்றி பில்டப் கொடுத்து, அழகான திருமணம் என்றெல்லாம் தம்பட்டம் (உங்கள் பாணியில்) அடித்தார்கள், அப்போது எல்லாம் நீங்கள் வாய்திறக்கவில்லை என்பதை நடுநிலையாளர்கள் அவதானிக்காமல் இல்லை. இதே திருமணத்தை பற்றி வேறு ஒரு இணையத்தில் புகழும் கூட்டம், தவ்ஹீத் ஜமாஅத் செய்த காரணத்தினால், வயிற்றெரிச்சல் தாங்காமல், இவர்களிடம் எப்படியாவது தவறை கண்டுபிடிக்க வேண்டும் என்று துடிக்கிறது.

இறுதியாக, தனிநபர் தாக்குதல்களை அனுமதிக்க மாட்டோம் என்று நியாயம் பேசுபவர்கள், மணமகன் தாடி வைக்கவில்லை (அவர் வைத்து இருந்தும் கூட) என்ற தனிநபர் தாக்குதலை அனுமதித்தது ஏன்? தாடி என்பது ஐந்து அல்லது ஆறு நபர்கள் சேர்ந்து செய்யும் சுன்னத்தா? அல்லது உங்களின் நியாய தத்துவம் வேற்று கிரகத்தினருகானதா? (தாடி இருப்பதாக மறுப்பு தெரிவித்தும் இதுவரை வெளியிடவில்லை)

எனவே, நீங்கள் மற்றவர்கள் மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணத்தால், நபிவழியை எதிர்க்காதீர்கள் என்பதை அறிவுரையாக சொல்லி முடிக்கிறோம்.

Sunday, January 22, 2012

நபிவழித் திருமணத்தை பள்ளியில் நடத்த அனுமதித்த பிலால் நகர் ஜமாஅத்தினர், மற்ற ஜமாஅத்தார்கள் அனுமதிப்பார்களா?

அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வளைந்து கொடுக்காத தீவிர பிரச்சாரத்தால், சமீப காலமாக நபிவழித் திருமணங்கள் அதிகரித்துள்ளன. 
மேலத்தெரு மற்றும் கிழத்தெருக்களில் நபிவழித் திருமணத்திற்கு ஜமாஅத்தார்கள் திருமண பதிவேட்டை தந்து, நீங்கள் நபிவழியில் திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள்.

பிலால் நகர் ஜமாஅத்தார்கள், இதற்கு ஒருபடி மேல சென்று நபிவழி திருமணத்திற்கு பதிவோடு தந்து, பள்ளிலேயே திருமணத்தை நடத்திக்கொள்ளுங்கள் என்றார்கள். பிலால் நகர் ஜமாஅத்தார்கள் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.

கடந்த 22.1.2012 நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமகன் 3 கிராம் மோதிரம் மஹராக கொடுத்து திருமண விருந்தும் மணமகன் செலவில் வழங்கினார், அல்ஹம்துலில்லாஹ்.


பிலால் நகர் பள்ளியில் நடைபெற்ற இந்த திருமணத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் நடத்திவைத்தார்.

நபிவழியை நடைமுறைப்படுத்தியதற்காக பள்ளியில் அடிக்கப்பட்டவர்களுக்கு, இன்று பள்ளியிலேயே நபிவழித் திருமணங்களை நடத்த அனுமதி கிடைத்து இருப்பது அல்லாஹ்வின் அருள் தான். அல்ஹம்துலில்லாஹ்.

வரதட்சணை திருமணங்களுக்கு பட்டுக் கம்பளம் விரித்து, நபிவழித் திருமணத்திற்கு அனுமதி மறுக்கும் ஜமாஅத்தார்கள், அல்லாஹ்வுக்கு அஞ்சி தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.




இவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிரானவர்களா?

வருகின்ற பிப்ரவரி 14 யில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற இருகின்ற முஸ்லிம்களின் இடஒதுக்கிடு அர்பாட்டத்தின் விளம்பர போர்டு அதிரையில் அனைத்து பகுதியிலும் T N T J சார்பாக வைக்கப்பட்டுள்ளது அதில் நடுத்தெருவில் உள்ள செக்கடி மேட்டிலும் ஒரு போர்டு வைக்கப்பட்டது அதை முஸ்லிம்களின் இடஒதுக்கீடு எதிராக உள்ள சில விஷமிகள் கிழித்துள்ளார்கள். இவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிரானவர்களா?

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்ஆ தொழுகையில் திரண்ட பெண்கள்

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இடம் பற்றாக்குறையால் இதுவரை ஆண்கள் மட்டுமே தொழுது வந்தார் இந்த வார வெள்ளிக்கிழமை (20.1.2012) முதல் ஜும்ஆ தொழுகைக்கு பெண்களுக்கு தனியாக இடம் ஏற்பாடு செய்துதரப்பட்டது. எவ்வித விளம்பரம் இன்றி சுமார் 100 க்கும் அதிகமான பெண்கள் ஜும்ஆ தொழுகையில் கலந்துக்கொண்டார்கள்.






இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு - தொடர் 5


'இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய நூல் இங்கு தொடராக வெளியிடப்படும். முழு நூலையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.





தொடர் - 5:

சிறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்:

சிறுவர்கள் பசியை பொறுக்கமாட்டார்கள். முதலில் தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆவல் அவர்களிடத்தில் அதிகமாகவே இருக்கும். எனவே உணவு பரிமாறும் போது முதலில் சிறியவர்களுக்கே கொடுக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதலாவதாகப் பழுக்கும் கனி கொண்டுவரப்பட்டால், "இறைவா! எங்கள் நகரத்தில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! எங்கள் கனிகளிலும் எங்கள் (அளவைகளான) "முத்'து மற்றும் "ஸாஉ' ஆகியவற்றிலும் (தற்போதுள்ள) வளத்துடன் மற்றொரு மடங்கு வளத்தை வழங்குவாயாக'' என்று பிரார்த்தித்து விட்டு, அங்கு வந்திருக்கும் குழந்தைகளில் மிகச் சிறிய குழந்தைக்கு அந்தக் கனியைக் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (2660)

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்:

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியமாகும். நாம் எவ்வளவு தான் திருத்துவதற்கு முயற்சி செய்தாலும் அல்லாஹ் நாடாவிடால் நம் குழந்தைகள் நல்லவர்களாக உருவெடுக்க முடியாது. எனவே இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் உதவியை அவசியம் கேட்க வேண்டும்.

இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் தான் அவன் நல்லவனாக முடியும். எனவே தான் நபிமார்கள் தங்கள் பிள்ளைகள் நல்லவர்களாகத் திகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் ; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்).

அல்குர்ஆன் (2 : 128)

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.)

அல்குர்ஆன் (14 : 40)

"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!'' என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (25 : 74)

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று அவன் கூறினான். "எனது வழித் தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது'' என்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் (2 : 124)

செலவு செய்வது கடமை:

கஞ்சத்தனம் செய்யாமல் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவது தந்தையின் மீது கடமை. சில பெற்றோர்கள் தேவையில்லாத செலவுகளை செய்கிறார்கள். வீண்விரயம் செய்வது கூடாது.

அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை.

அல்குர்ஆன் (2 : 233)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரது உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர், அவருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : முஸ்லிம் (1819)

ஒரு மனிதன் தன் குடும்பத்திற்காக செலவிடும் எந்தத் தொகையும் வீணாக போவதில்லை. அல்லாஹ்விடம் நன்மையை நாடி செலவு செய்தால் கண்டிப்பாக இறைவன் அதற்குக் கூலி தருகிறாôன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தினர்க்குச் செலவு செய்தால் அது அவருக்குத் தர்மமாகிவிடும்.

அறிவிப்பவர் : அபூமஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (55)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் தம் குடும்பத்தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசு (தீனார்) அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும்.

அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : புகாரி (3936)

நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கின்ற எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அüத்தே தீருவான்; உங்கள் மனைவியின் வாயில் நீங்கள்  ஊட்டும்  ஒரு கவளம் உணவாயினும் சரியே'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : புகாரி (3936)

வீண்விரயம் செய்வது கூடாது:

செலவு என்ற பெயரில் வீண்விரயம் செய்வது கூடாது. வீண்விரயம் செய்வது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் (17 : 27)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வீண்விரயமும் பெருமையும் இல்லாமல் சாப்பிடுங்கள். தர்மம் செய்யுங்கள். (விரும்பிய ஆடையை) அணிந்துகொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : நஸயீ (2512)

தனது வருமானத்திற்குத் தகுந்தவாறு பிள்ளைகளுக்கு செலவு செய்ய வேண்டும். கடன் வாங்கி தாரளமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

அல்குர்ஆன் (65 : 7)

தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வது சிறந்தது:

குழந்தைகளின் வருங்கால வாழ்க்கைக்காக செல்வங்களை சேமித்து வைப்பது சிறந்த செயலாகும். இவ்வாறு செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்கüடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : புகாரி (3936)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தம் சின்னஞ் சிறிய பிள்ளைகளுக்குச் செலவிடுகின்றவரைவிட அதிக நற்பலன் அடைந்துகொள்ளும் மனிதர் யார்? (ஏனெனில்) அவர் தம் பிள்ளைகளைச் சுய மரியாதையோடு வாழச் செய்கிறார். அல்லது அவர் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு உதவி, அவர்களைத் தன்னிறைவுடன் வாழச் செய்கிறான்'' என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
நூல் : முஸ்லிம் (1817)

சிறுவர்களுக்கு சலாம் கூறுதல்:

சிறுவர்கள் பெரியவர்களுக்கு சலாம் சொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். என்றாலும் சலாம் கூறும் முறையை சிறுவர்களுக்கு கற்றுத்தருவதற்காக நபி (ஸல்) அவர்கள் முதலில் சிறுவர்களுக்கு சலாம் கூறினார்கள். இவ்வாறு நாம் செய்யும் போது குழந்தைகள் இதைப் பார்த்து மற்றவர்களை சந்திக்கும் போது முந்திக்கொண்டு சலாம் கூறுவார்கள். 

(ஒரு முறை) அனஸ் பின் மா-க் (ர-) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துவந்தார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸாபித் அல்புனானீ (ரஹ்)
நூல் : புகாரி (6247)

விளையாட அனுமதிக்க வேண்டும்:

விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு அவசியமானது. விளையாடுவதால் குழந்தைகள் மகிழ்ச்சியுறுகிறார்கள். சுறுசுறுப்புடனும் ஆரோக்யத்துடனும் திகழ்கிறார்கள். சிறுவர்கள் விளையாடுவதை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள். 

நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்துகொண்டு) திரைக்குள் ஒüந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பிவைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (6130)

(ஒரு முறை) நான் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். உடனே நான் (ஓடிச் சென்று) ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (செல்லமாக) என் தோள்களுக்கிடையே ஒரு தட்டு தட்டிவிட்டு, "நீ போய் முஆவியா (பின் அபீசுஃப்யான்) அவர்களை என்னிடம் வரச்சொல்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (5074)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போகமாட்டேன்'' என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது.

நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். "அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம்; செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொன்னேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (4626)

இடஞ்சல் தரும் விளையாட்டுகளுக்கு அனுமதிக்கக்கூடாது:

விளையாட்டு என்றப் பெயரில் மற்றவர்களுக்கு இடஞ்சல் தருவதை பெற்றோர்கள் சம்மதிக்கக்கூடாது. நமது குழந்தைகளால் யாரேனும் அவதியுற்றால் அப்போது அவர்களை கண்டிக்கத்தவறக்கூடாது. பிறருக்கு சிரமம் தருகின்ற அடிப்படையில் விளையாடுவதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், "சிறு கற்களை எறியாதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்' அல்லது "சிறுகற்களை எறிவதை வெறுத்துவந்தார்கள்'. மேலும், நபி அவர்கள் "அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது ; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)' என்று சொன்னார்கள்'' எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்' அல்லது "சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்' என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்'' என்று சொன்னேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ர-)
நூல் : புகாரி (5479)

விளையாட்டுக் கருவிகளை வாங்கித்தர வேண்டும்:

சிறுவர்கள் விûளாயட்டில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கித்தரும் போது மகிழ்ச்சியடைவார்கள். இதனால் பெற்றோரின் மீதான பாசம் அவர்களுக்கு அதிகரிக்கும்.

கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை எங்கள் சிறுவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

அறிவிப்பவர் : ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி)
நூல் : புகாரி (1960)

அனுமதி கேட்டு உள்ளே வர வேண்டும்:

அந்தரங்க உறுப்புக்களை சிறுவர்கள் பார்க்காதவாறு பெற்றோர்கள் நடந்துகொள்ள வேண்டும். சிறுவன் தானே என்று கருதி அலட்சியமாக இருப்பது தவறு. குறிப்பிட்ட நேரங்களில் வீட்டிற்குள் சிறுவர்கள் வரும் போது அனுமதி பெற்று வர வேண்டும் என்ற வழிமுறையை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் (24 : 58)

தவறு செய்யும் போது கண்டிக்க வேண்டும்:

பிள்ளைகள் மேல் வைத்துள்ள பாசத்தினால் அவர்கள் தவறு செய்யும் போது கண்டிக்காமல் இருந்துவிடக்கூடாது. பெரும்பாலான குழந்தைகள் கெட்டுச் சீரழிந்ததற்கு பெற்றோர்களின் அளவுகடந்த பாசம் தான் காரணம். பிள்ளைகளை கண்டிப்பதன் மூலம் அவர்களுக்கு நன்மைத் தான் செய்கிறோம் என்பதை பெற்றொர்கள் கவனத்தில் வைக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும்.

அல்குர்ஆன் (66 : 6)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கüல் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாüயாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (2409)

பெற்றோர்களின் அலட்சியப்போக்கினால் பிள்ளைகள் தவறானப் பாதைக்குச் சென்றால் மறுமையில் பெற்றோர்களுக்கு எதிராக பிள்ளைகளே அல்லாஹ்விடத்தில் வாதிடுவார்கள். இருமடங்கு அவர்களுக்குத் தண்டனைத் தருமாறு இறைவனிடம் கேட்பார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலைக்கு நாமும் நமது பிள்ளைகளும் சென்றுவிடக்கூடாது என்றால் பிள்ளைகளை இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும்.

"எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள். "எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' எனவும் கூறுவார்கள்.

அல்குர்ஆன் (33 : 67)

சிறுவர்கள் மார்க்கம் தடுத்தக் காரியங்களைச் செய்யும் போது சிறுவர்கள் தானே என்று பெற்றோர்கள் கண்டும் காணாமல் செல்கிறார்கள். இது தவறாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள்.

ஆரம்பித்திலிருந்தே தூய இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்கும் போது இஸ்லாம் என்ற ஒளி அவர்களின் சொல் செயல்பாடு ஆகியவற்றில் கலந்துவிடுகிறது. இளைஞர்களாக மாறினாலும் சிறுவயதில் கற்றுக்கொடுக்கப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள் அவர்களிடத்தில் தொடர்ந்து நீடித்திருக்கும்.

தன் பேரக்குழந்தைகளில் ஒருவர் தவறு செய்ய முற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரரைத் தடுத்ததோடு அவருக்கு நல்லுபதேசமும் செய்தார்கள். 

மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு "முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?'' எனக் கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (1485)

பிள்ளைகளை சபிக்கக்கூடாது:

பிள்ளைகள் தவறு செய்யும் போது தாய்மார்கள் காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளால் பிள்ளைகளை திட்டுகிறார்கள். சபிக்கிறார்கள். இதனால் தான் பெண்கள் அதிகமாக நரகத்திற்குச் செல்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கோபம் ஏற்படும் போது நிதானத்தைக் கடைபிடித்து குழந்தைகளைத் திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜ்ஜுப் பெருநாள்' அல்லது "நோன்புப் பெருநாள்' தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, "பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகüல் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது'' என்று குறிப்பிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?'' எனப் பெண்கள் கேட்டதும். "நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்கüன் புத்தியை, அறிவிலும் மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி (304)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு வாய்மையாளர் அதிகமாகச் சாபமிடுபவராக இருப்பது தகாது'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (5062)

அன்சாரிகளில் ஒருவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அதில் ஏறினார். பிறகு அதைக் கிளப்பினார். ஆனால், அது சிறிது (சண்டித்தனம் செய்து) நின்று விட்டது. அப்போது அவர் "ஷஃ' என அதை விரட்டிவிட்டு, "உனக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!'' என்று சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தமது ஒட்டகத்தைச் சபித்த இந்த மனிதர் யார்?'' என்று கேட்டார்கள். "நான்தான், அல்லாஹ்வின் தூதரே!'' என்று அந்த அன்சாரி பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதிலிலிருந்து இறங்கிவிடு! சபிக்கப்பட்ட ஒரு பொருளோடு எங்களுடன் நீர் வர வேண்டாம். நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக் கெதிராகவோ உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (5736)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டி-ல் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் "ஜுரைஜ்' என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) "அவருக்கு நான் பதிலüப்பதா? தொழுவதா?' என்று கூறிக் கொண்டார். (பதிலüக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், "இறைவா! இவனை விபசாரிகüன் முகங்கüல்  விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!'' என்று கூறி விட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு "இது ஜுரைஜுக்குப் பிறந்தது' என்று (மக்கüடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூ செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, "குழந்தையே! உன் தந்தை யார்?'' என்று கேட்டார். அக்குழந்தை, "(இன்ன) இடையன்'' என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்து கொண்ட அந்த மக்கள், "தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், "இல்லை, கüமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்'' என்று கூறிவிட்டார்.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (3436)

கோபத்தில் குழந்தைக்கு எதிராக தாய் கேட்கின்ற பிரார்த்தனையை அல்லாஹ் உடனே அங்கீகரித்துவிடுகின்றான். மேற்கண்ட செய்தியில் ஜ‚ரைஜ் என்வரின் தாய் "இறைவா! இவனை விபசாரிகüன் முகங்கüல்  விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!'' என்று கோபத்தில் பிரார்த்தித்துவிடுகிறார். இதை அல்லாஹ்வும் ஏற்றுக்கொண்டு விடுகிறான். மிக கவனமாக வார்த்தைகளை வெளியில் விட வேண்டும்.

கல்வி கற்றுத்தர வேண்டும்:

குழந்தைகளுக்கு கல்வியறிவு கிடைக்கச் செய்வது குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான அம்சம். மார்க்கக் கல்வி உலகக்கல்வி ஆகிய இரண்டையும் குழந்தைகள் பெறுவது அவசியம.

கல்வியற்றக் குழந்தைகள் நாகரீகம் தெரியாமலும் நல்லவற்றிலிருந்து தீயதை பிரித்தரியாமலும் வளர்கின்றன. இவ்வுலகத்திலும் மறுஉலகத்திலும் மனிதன் சிறப்பாக வாழ்வதற்கு கல்வி உதவியாக இருக்கிறது.

கல்விக்கூடத்திற்கு செல்லமாட்டேன் என்று குழந்தை அடம்பிடித்தால் அடித்தாலாவது அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோர்கள் கண்டிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.

மார்க்கக் கல்வியை அறிந்துகொள்வதற்கு காலை மாலை மத்ரஸாக்களுக்கு அனுப்பலாம். கல்வியைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இஸ்லாம் சமத்துவத்தை போதிக்கிறது. ஆனால் கல்வியைப் பெற்றவன் உயர்ந்தவன் என்றும் கல்வி அற்றவன் தாழ்ந்தவன் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.

அல்குர்ஆன் (39 : 9)

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் (58 : 11)

உலகக்கல்வி மார்க்கல்வி என்று இஸ்லாம் தனித் தனியாகப் பிரிக்கவில்லை. மாறாக பலனுள்ளக் கல்வி பலனற்றக் கல்வி என்று இருவகையாகப் பிரிகிறது. உலகக்கல்வியை பலனுள்ள வகையில் பயன்படுத்தினால் அதன் மூலமும் இறைவனை நெருங்க முடியும்.

மனிதன் நேர்வழி பெறுவதற்கு உலக்கல்வி மட்டும் போதாது. இன்றைக்கு உலகக்கல்வியில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்ற எத்தனையோபேர் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் செய்துகொண்டிருக்கிறார்கள். காரணம் என்னவென்றால் அவர்களிடத்தில் மார்க்கத்தைப் பற்றிய அறிவு இல்லை என்பது தான்.

எனவே உலகக்கல்வியுடன் மார்க்க அறிவை சேர்த்து கற்றுத்தரும் போது தான் பலனுள்ளக் கல்வி கிடைக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (3358)

உபதேசம் செய்ய வேண்டும்:

பிஞ்சு உள்ளத்தில் முதன் முதலில் விதைக்கின்ற கருத்துக்கள் பெரும் மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தும். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களை நம் குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய பாணியிலே சொல்லிக்கொடுக்க வேண்டும்.

முக்கியமாக இணைவைப்பு என்றால் என்ன? அது எவ்வளவு பெரிய பாவம்? இணைவைப்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை என்ன? அல்லாஹ்வின் வல்லமை எவ்வளவு பெரியது? அவனது கருணை எவ்வளவு மகத்தானது? நாம் யாரிடத்தில் கையேந்த வேண்டும்? யாரைப் பின்பற்ற வேண்டும்? நபி (ஸல்) அவர்களை எவ்வளவு உயர்வாக நேசிக்க வேண்டும்? என்பதையெல்லாம் குழந்தைகளுக்கு முதலில் விளக்கிச் சொல்ல வேண்டும்.

மனிதனிடத்தில் இருக்க வேண்டிய நற்குணங்களையும் இருக்கக்கூடாத தீய குணங்களையும் எடுத்துக்கூறி நல்லவர்களாக வாழ வேண்டும் என்று உபதேசம் செய்ய வேண்டும்.

நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவ்வாறு உபதேசம் செய்ததை அல்லாஹ் திருக்குர்ஆனில் விவரிக்கிறான்.

"என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.

அல்குர்ஆன் (2 : 132)

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? "எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?'' என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது "உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்றே (பிள்ளைகள்) கூறினர்.

அல்குர்ஆன் (2 : 133)

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது "என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் (31 : 13)

என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

"நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).

அல்குர்ஆன் (31 : 16)

முத்தான உபதேசங்கள்:

சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அற்புதமான உபதேசங்களை செய்துள்ளார்கள. இந்த உபதேசத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனதில் நிலைநிறுத்த வேண்டிய முத்தான அறிவுரைகளாகும்.

சிறுவனே உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத்தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்.

நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னை பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய். நீ சந்தோஷமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப்பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவிதேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவிதேடு.

நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கிவிட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கிவிட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு தீங்கு செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டது. ஏடுகள் காய்ந்துவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : திர்மிதி (2440)

இமாம் பைஹகீ அவர்கள் எழுதிய அல்களாஉ வல்கத்ரு என்ற நூலில் இந்த ஹதீஸ் சரியான அறிவிப்பாளர் தொடரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக நடக்க வேண்டும் என்பதன் பொருள் அவனது கட்டளைகளை செயல்படுத்த வேண்டும் அவன் தடுத்தவைகளை தவிர்ந்துகொள்ள வேண்டும் என்பதாகும்.

சிறுவர்கள் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை எளிதில் விளங்கிக்கொள்வதற்காக சுருக்கமாக கேள்வி பதில் கோணத்தில் புத்தகங்கள் உள்ளது. பெற்றோர்கள் அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கலாம். 
பெற்றோர்களை மதிக்க வேண்டும் என்று உபதேசம் செய்ய வேண்டும்

பெற்றோர்களை மதித்து நடக்குமாறு கூறும் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் குழந்தைகளிடம் எடுத்துக்கூற வேண்டும்.

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

அல்குர்ஆன் (4 : 36)

"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்று கேட்பீராக!

அல்குர்ஆன் (17 : 23)

நபி (ஸல்) அவர்கüடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பதுமாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (2653)

"ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்கüல் உள்ளதாகும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : புகாரி (5973)

அன்னையரைப் புண்படுத்துவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஃகீரா பின்ஷ‚அபா (ரலி)
நூல் : புகாரி (5975)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்றார். "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பிறகு, உன் தந்தை'' என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (5971)

நான் நபி (ஸல்) அவர்கüடம் "கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவது'' என்றார்கள். "பிறகு எது?'' என்று கேட்டேன். "தாய் தந்தையருக்கு நன்மை செய்வது'' என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (5970)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüடம், "நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?'' என்று கேட்டார்கள். அவர், "ஆம் (இருக்கிறார்கள்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு'' என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : புகாரி (5972)

குகையில் மாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர் பெற்றோர்களிடத்தில் நல்லவிதமாக நடந்துகொண்டதால் அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான் என்று புகாரியில் 5974 வது ஹதீஸ் கூறுகிறது. இது போன்ற சம்பவங்களைக் கூறி உபதேசம் செய்யலாம்.

நபித்தோழர்களின் வாழ்க்கையில் நடந்த படிப்பினை தரும் சம்பவங்களை கதைகள் சொல்வது போல் கூற வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை குழந்தைகள் விரும்புகின்ற விதத்தில் சிறிது சிறிதாக எடுத்துரைக்க வேண்டும்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்

Friday, January 20, 2012

மவ்லீதும் மீலாதும்

மவ்லீதும் மீலாதும்

ஜூம்ஆ உரை ஆடியோ - 20.01.2012

















Wednesday, January 18, 2012

மேலத்தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டம்


T N T J யின் அதிரைக்கிளையின் சார்பாக 17.01.2012 செவ்வாய்கிழமை மேலத்தெருவில் அல் பாக்கியத்துஸ் ஸாலிஹத் பள்ளி அருகில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சகோதரர் பக்கீர் முகம்மது அல்தாபி இஸ்லாத்தின் பெண்களின் நிலை அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும் சகோதரா் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இறுதி நபியின் இறுதிப்பேருரை என்ற தலைப்பிலும் மற்றும் சகோதரர் சிகாபுதீன் MISC அவர்களும் உரைநிகழ்த்தினார்கள் இதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்துக்கொண்டார்கள் (இன்ஷா அல்லாஹ் இதன் வீடியோ விரைவில் வெளியிடப்படும்)