Showing posts with label இட ஒதுக்கீடு. Show all posts
Showing posts with label இட ஒதுக்கீடு. Show all posts

Saturday, April 26, 2014

திருடும் நிருபர்களின் மிரட்டும் உளறல்களும் உண்மைகளும்! - போதும் எங்களை அடிக்காதீங்க! - பகுதி-2

திருடும் நிருபர்களின் மிரட்டும் உளறல்களும் உண்மைகளும்! - போதும் எங்களை அடிக்காதீங்க! - பகுதி-2

பொய்களை அள்ளிவிடுவோம், பதில் தந்தால் திட்டி தீர்போம்! ஓட்டப்பந்தயத்தில் எங்களை யாரும் மிஞ்ச முடியாது.திருடும் நிருபர்களின் அற்புத கொள்கை
திருடும் நிருபர்களின் மிரட்டல் உளறல்கள் பலவற்றிக்கு நமது முதல் பதிவில் பதிலடி கொடுத்து இருந்தோம். வழக்கம் போல இதற்கு பதில் சொல்ல முடியாமல் கேவலப்பட்டுள்ளார்கள். 'தவ்ஹீகான்' என்ற பெயரில் மீண்டும் தவ்ஹீதை கிண்டல் செய்து, கேட்ட கேள்விக்கு பதில் தர முடியாமல் 'திருடன் தான் திருடிவிட்டு மற்றவனை திருடன்' என்பான் என்ற கதையை ஆதாரமாக காட்டி தங்களின் திருட்டை மறைக்க பார்க்கிறார்கள். உளறி உளறி இவர்களின் அத்தனை கொள்கைகளையும் முரண்பாடுகளையும் அம்பலப்படுத்த உதவி வருகிறார்கள். இவர்கள் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் அவதூறுகளுக்கும் பதில் கொடுத்து இவர்களின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவோம். இன்ஷா அல்லாஹ். தாம் செய்யாதவற்றிக்காக பெருமைப்படுபவர்களுக்கு மறுமையில் கடுமையான தண்டனை உண்டு என்ற திருக்குர்ஆனின் போதனையை (அல்குர்ஆன் 3:188) எடுத்துக்காட்டி, இவர்களின் திருட்டை அம்பலப்படுத்தி இருக்கும் போது, அந்த குர்ஆன் வசனத்திற்கு பதில் தராமல், இஸ்லாத்தில் எந்த வகை திருட்டு கூடும் என்று இந்த மார்க்க காப்பி விற்பனர்கள் பத்வா கொடுத்துள்ளார்கள்.

ஏண்டா இப்படி உளறித்தள்ளினோம் என்று இவர்களே வருந்தும் அளவுக்கு இவர்களுக்கு தொடர் கேவலங்கள் வரும். நீங்கள் என்ன எழுதினாலும், நாங்கள் பதில் சொல்ல மாட்டோம் என்றவர்கள், நமது பதிலடி இவர்களுக்கு ஏற்படுத்திய கேவலத்தை தாங்க முடியாமல், 'பக்தர்கள்' என்றெல்லாம் தம்பி ஒருவர் திட்டுகிறார். அதிரை ததஜவினர் எங்களை காப்பாற்ற மாட்டார்களா என்றும் புலம்புகிறார் அந்த தம்பி. அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தினர் அஜால் குஜால் செய்தார்கள் என்று ஒரு ஒருவர் திட்டுகிறார். இந்த கருத்தை எழுதியவருக்கும் அதை வெளியிட்டு சந்தோஷம் அடையும் திருடும் நிருபர்களுக்கும் மானம் சூடு சுரணை இருந்தால் இதை நிரூபிக்க முன்வர வேண்டும் (இது போன்ற எதுவும் அவர்களுக்கு கிடையாது என்று முன்னர் நிரூபித்துள்ளார்கள்). 'இறைவனுக்கு பயந்து கருத்தை எழுதுங்கள்' என்று கருத்து பகுதியில் போட்டு வைத்து இருக்கும் திருடும் நிருபர்கள், இதை நீக்க முன்வரவில்லை. இவர்கள் புதிதாக உளறி உள்ள அவதூறுகளுக்கு தேவைப்படும் போது பதில் தரப்படும்.

இவர்கள் 'நேருக்கு நேர்(?)' என்ற பெயரில் உளறிய பொய்கள் பலவற்றை நாம் நமது முந்தைய பதிலில் அம்பலப்படுத்தினோம். அதில் உள்ள மேலும் மற்ற உளறல்களுக்கும் அவதூறுகளுக்கும் இந்த ஆக்கத்தில் பதில் அளிக்கிறோம். மிச்சம் உள்ள உளறல்களுக்கு அடுத்த பகுதியில் பதில் வரும், இன்ஷா அல்லாஹ்.

பிஜே மீது அவதூறு:

இவர்கள் இட ஒதுக்கீடு குறித்து உளறிய முதல் காப்பி போஸ்ட் ஆக்கத்தில், தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது பல கற்பனையான சந்தேகங்களை எழுப்பியிருந்தார்கள், அதன் அடிப்படையில் நாம் பதில் தரும் போது 'அங்கும் இங்கும் ஆட்டையை போட்டு அதையே புத்தகமாக பணம் பார்க்கத்தான் இவ்வாறு செய்கிறார்களோ' என்று நாமும் சந்தேகத்தை கிளப்பலாமா? என்று கேள்வி கேட்டுயிருந்தோம். இதற்கு பதில் சொல்ல புகுந்த 'திருடும் நிருபர் பதிப்பகம்', 'புத்தகம் போட்டு பணக்காரர் பட்டியிலில் சேர்ந்தது யார்?' என்று சகோதரர் பிஜேவை பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்தார்கள். இவர்கள் பிஜேவை பெயர் குறிப்பிடவில்லையென்றாலும், இவர்கள் பிஜேவை தான் குறிப்பிடுகிறார்கள் என்று அவர்களின் வரிகளை படிக்கும் எவரும் புரிந்து கொள்வார்கள். பிஜே மீது இவ்வாறு அவதூறு சொன்னீர்களே, அதை நிரூபிக்க திராணியிருக்கா என்று நாம் கேட்டு இரண்டு மாதங்கள் ஆக போகிறது. இது பற்றி வாய்திறக்க முடியாமல் இருந்த இவர்கள், என்னடா இவர்கள் பிஜேவின் புத்தகத்தில் இருந்து திருடவும் செய்கிறார்கள், பிஜே வழிகேடர் என்றும் சொல்லுகிறார்கள், பிஜே புத்தகம் போட்டு பணக்காரர் ஆகிவிட்டார் என்றும் சொல்லுகிறார்கள் என்று அவர்களுக்குள்ளேயே குழப்பம் எற்பட்டு, மக்கள் மத்தியில் இவர்களின் வண்டவாளம் கிழிய தொடங்கியவுடன், அதற்கு பதில் தருகிறோம் என்று மீண்டும் உளறி மாட்டியுள்ளார்கள்.

அதாவது, 'புத்தகம் போட்டு பணக்காரர் பட்டியிலில் பிஜே இடம்பெற்றுவிட்டார்' என்று எங்கே சொன்னோம் என்று கேட்டுவிட்டு, நாங்கள் சொன்னது பொதுவான விமர்சனம், புத்தகம் வெளியிடுபவர்கள் அனைவரையும் குறிக்கும் பொதுவான விமர்சனம் (எல்லாரும் அண்ணண்மார்கள் மாதிரி இருப்பார்கள் என்று நினைப்பு) என்று பச்சை பொய்யை சொல்லுகிறார்கள். இவர்கள் எந்த அளவிற்கு அல்லாஹ்வை சாட்சியாக வைத்து பொய் சொல்லுவார்கள் என்பதற்கு இவர்களின் இந்த பதில் ஆதாரம்.

அவர்களின் பதிலை முதலில் படியுங்கள்:
நாங்கள் பிஜேவை பெயர் குறிப்பிட்டு சொன்னோமா? என்று ஈனத்தனமாக வினவி, அதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக வைத்து மிரட்டுவதை பாருங்கள்.
இவர்கள் பிஜே நூல் போட்டு பணக்காரர் பட்டியிலில் இடம்பெற்றுவிட்டார் என்று பெயர் குறிப்பிடாமல் எழுதிய விஷயத்தை கீழே உள்ள படத்தில் படியுங்கள்:
பிஜே புத்தகம் போட்டு பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார் என்று இவர்கள் புழுகிய புளுகல்.
புத்தகம் போடுபவர்கள் அதை விற்பனை செய்யலாம், இவ்வாறு செய்யா விட்டால் ஒரு புத்தகமும் வெளியிடப்படாது என்பது உண்மை, ஆனால், அடுத்தவனின் ஆய்வையும் செய்தியையும் திருடி அதை புத்தகமாக ஆக்கி வெளியிடுவது தானே திருட்டு பதிப்பகம்?
நாங்கள் பிஜேவை புத்தகம் போட்டு பணக்காரர் ஆகிவிட்டார் என்று சொல்லவில்லை என்று பச்சையாக புளுகிறார்கள் என்பதை மேலே உள்ள படத்தில் இவர்கள் எழுதிய செய்திகளை படித்தாலே, இவர்கள் பிஜேவை தான் சொல்லுகிறார்கள் என்று விளங்கும் அளவுக்கு இவர்கள் தெளிவாக எழுதியுள்ளார்கள் என்பதை அறியலாம். மக்கள் மறந்திருப்பார்கள், எனவே, விட்டு அடிப்போம் என்று 'நாங்கள் பிஜேவை தான் சொன்னோமா?' என்று கேட்கிறார்கள். இவர்கள் ஒரு வேளை பிஜேவின் பெயரை குறிப்பிட்டு எழுதியிருந்தால் கூட, பிஜே என்றால் இவர் மட்டும் தான் பிஜேயா என்று கூட கேட்பார்கள். இவர்கள் பிஜேவை தான் பெயர் சொல்லாமல் சொல்லியுள்ளார்கள் என்பதற்கு இவர்களின் எழுத்தில் பல ஆதாரம் உள்ளது. முதலில் நாம் இவர்கள் மீது கேள்வி எழுப்பும் போது தான் இவ்வாறு இவர்கள் கேட்டார்கள். நாம் ஒருவரை நோக்கி குற்றம்சாட்டினால், அவர்கள் நம்மை நோக்கி தான் குற்றம்சாட்டுவார்கள் என்பது மூளை கொஞ்சம் உள்ளவனுக்கு கூட தெரியும். 

இவர்கள் பிஜேவை புத்தகம் போட்டு பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார் என்று சொல்ல ஆரம்பிக்கும் அதே பத்தியில் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தையும் பிஜேவையும் தான் சொல்லுகிறார்கள் என்பதற்கு அவர்களின் எழுத்திலேயே ஆதாரம் உள்ளது. அவர்களின் வரிகளை காணுங்கள்:
உண்மையான தாவாப் பணிக்காக அர்ப்பணிக்கப் பட்ட ஒரு பணியை களங்கப் படுத்தும் அந்த நண்பர்களின் முதுகுக்குப் பின்னால் பார்த்தால் “முதுகு அரித்தால் சொரிவது மார்க்கத்தில் கூடுமா? “ என்று மூவாயிரம் நூல்கள் போட்டு அதற்கும் அதை வெளியிடும் இயக்கத்திற்கு சேர்த்து விலை வைத்து இருப்பதும் “தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கலாமா? விளக்கெண்ணெய் தேய்க்கலாமா – ஆராய்ச்சி” என்ற தலைப்பில் ஐந்தாயிரம் சிடிகளும் அடுத்த மாநாட்டில் விற்பனை செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் காட்சிகளையும் காணலாம். தேவை இருக்கிறதோ இல்லையோ பெயர் போட்டால் விற்பனையாகும் என்று உப்புக்குப் பெறாத தலைப்புகளில் எல்லாம் நூல் வெளியிட்டு பணக்காரர்களின் பட்டியிலில் இடம் பிடித்திருப்பவர்கள் யார் என்று சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.
நாம் சிகப்பு எழுத்துக்களில் அடிக்கோடிட்டு காட்டியுள்ளவற்றை பாருங்கள். புத்தகம் போட்டு பிஜே பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றார் என்று பொய் கூறும் பத்தியின் ஆரம்பித்திலேயே இவர்கள் 'அந்த நண்பர்களின்' என்று நமது கேள்விக்கு தான் பதில் சொல்லுகிறார்கள் என்பதை காட்டுகிறார்கள். பொதுவான விமர்சனம் என்றால், 'தாவாப் பணிக்காக' என்று ஆரம்பிப்பது ஏன்? புத்தகம் போடும் அனைவரும் தஃவா செய்கிறார்களா? மார்க்கத்தில் கூடுமா?' என்று சொல்லியது ஏன்? புத்தகம் போடும் அனைவருக்கும் மார்க்கம் உண்டா? புத்தகம் வெளியிடுபவர்கள் எல்லாம் முஸ்லிம்களா? நூல்கள் வெளியிடும் இயக்கத்திற்கும் விலை வைத்து என்று எந்த இயக்கத்தை குறிப்பிடுகிறீர்கள்? புத்தகம் வெளியிடும் அனைவருக்கும் இயக்கம் உண்டே? மாநாட்டில் விற்பனை என்று யாரை சொல்லுகிறீர்கள்? புத்தகம் வெளியிடும் அனைவரும் மாநாடு நடத்துகிறார்களே?

இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தையும் பிஜேவையும் தான் சொல்லுகிறார்கள் என்பதற்கு இவர்களின் எழுத்துக்களே ஆதாரமாக உள்ளது. வழக்கம் போல திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக இந்த விஷயத்திலும் இவர்கள் மாட்டியுள்ளார்கள். 

இவ்வளவு தெளிவாக பிஜேவை குறிப்பிட்டு விட்டு, நாம் அவதூறு சொல்லுகிறாம் என்று சொல்லுவதற்கு இவர்களுக்கு எவ்வளவு தைரியம் வேண்டும். இப்படி அயோக்கியத்தனம் செய்துவிட்டு, அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்று நம்மிடம் சொல்லுவது எவ்வளவு அயோக்கியத்தனம். நீங்கள் யாரை குறிப்பிட்டு எழுதினீர்கள் என்று உங்களுக்கு நன்றாக தெரியும், மறுமையில் இதற்கு எதிரான நாங்கள் உங்களிடம் கேள்வி எழுப்புவோம், இன்ஷா அல்லாஹ். இங்கே தப்பித்தாலும் நீங்கள் மறுமையில் மாட்டுவீர்கள்.

ஹாஜி நிருபர்களும், இறையருள் நிருபர்களும்:

அடுத்து, திருடும் நிருபர்கள் தவ்ஹீத்வாதிகள் என்று தவ்ஹீத் போர்வையில் இருக்கும் வேடதாரிகள். இவர்களுக்கும் தவ்ஹீத்திற்கும் சம்பந்தம் கிடையாது. இவர்களுக்கு புகழ் கிடைக்கும் என்றால் எந்த வேடம் வேண்டுமானலும் போடுவார்கள் என்று சொல்லி, அதற்கு ஆதாரமாக, 'அதிரையில் இணைவைப்பையும் தரீக்கா கொள்கையும் பெண்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, பெண்களை வழிகெடுபவர்களில் முன்னிலையில் இருக்கும் தாஹா அவர்களை ஆகா ஓஹா என்று புகழ்ந்து எழுதியதையும், தாஹா அவர்களின் பெயருக்கு முன்னால் 'ஹாஜி' என்று எழுதி தங்களின் உண்மை தவ்ஹீதை வெளிப்படுத்தியதையும் எடுத்துக்காட்டியிருந்தோம். அது போல, 'இறையருட்கவிமணி' என்று கவிஞரை புகழ்ந்து எழுதியதையும் எடுத்துக்காட்டி, 'இறை அருளை பெறும் கவிஞர்' என்ற பொருள் வருகிறதே, அந்த கவிஞருக்கு 'இறையருள்' வருவதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டிருந்தோம். இதற்கும் வழக்கம் போல ஏன் கடுதாசி போடவில்லை என்று கேட்டுள்ளார்கள்.

ஹாஜி என்று இவர்கள் எழுதியதற்கு பதில் சொல்லுகிறாம் என்ற பெயரில் பல காமெடிகளை செய்துள்ளார்கள். அதில், முதல் காமெடி இவர்கள் ஹாஜி என்று சேர்ப்பதை இவர்கள் சுன்னத் என்றோ, பர்ளு என்றோ அல்லது நன்மையான காரியம் என்றோ செய்யவில்லையாம். நல்ல வேளை இது போன்ற திறமைசாலிகள் இருப்பது ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி போன்றவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது, தெரிந்து இருந்தால் தேடி வந்து தனது அணியில் சேர்த்து விடுவார். ஒருவர் புகைப்பிடிக்கிறார், அதை பார்த்த ஒருவர், புகை பிடிக்காதீர்கள், இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்கிறார். உடனே, புகைப்பிடிக்கும் நபர், நான் இதை சுன்னத் என்றோ, பர்ளு என்றோ அல்லது நன்மையான காரியம் என்றோ நினைத்து செய்யவில்லை என்று சொன்னால், அதை கேட்டும் நாம் எந்த அளவுக்கு சிரிப்போம். மௌலூது ஓதுபவன் நான் இதை சுன்னத் என்றோ, பர்ளு என்றோ அல்லது நன்மையான காரியம் என்றோ செய்யலில்லை என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாமா? திருடும் நிருபர்களின் கொள்கை இது தான். மார்க்கம் சம்பந்தப்பட்ட அல்லது உலகம் சம்பந்தப்பட்ட செயல்களில் மார்க்கத்தின் நேரடியான தடையோ அல்லது மறைமுகமான தடையோ இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும் அல்லவா? 

ஹஜ் என்பது மார்க்க கடமை. ஹஜ் முடிந்தவுடன் 'ஹாஜி', 'அல்ஹாஜ்' என்று தனது பெயருக்கு முன் சேர்ப்பது பித்அத் (மார்க்கத்தில் புதுமையான காரியம்). இது போன்ற செயலை நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித்தரவில்லை. நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத மார்க்கம் சம்பந்தப்பட்ட செயல் பித்அத். 

பித்அத் செய்பவர்களுக்கு நரகம் தான் செல்லுமிடம் என்பதை கீழ்காணும் நபிமொழி நமக்கு உணர்த்துகிறது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ (1560)

மேலும், ஹாஜி என்ற எழுதுவது நான் ஹஜ் செய்துள்ளேன் என்று பெருமையடிப்பதற்காக தான். இபாதத்தை புகழுக்காகவும், விளம்பரத்திற்க்காகவும் பயன்படுத்துபவர்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எந்த நன்மையும் பெற்றுத்தராது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளது. புகழ் விரும்பிகளுக்கு கடுமையான தண்டனையும் உண்டு என்று பல ஆதாரங்கள் உள்ளது.

அடுத்து, இவர்கள் ஹாஜி என்று எழுதியதற்கு காரணம், ஊரில் தாஹா அவர்களை 'தாஹா' என்றால் தெரியாதாம்,ஹாஜி தாஹா என்றால் தான் தெரியுமாம். நாம் அறிந்தவரை யாரும் அவரை ஹாஜி தாஹா என்று அழைக்கவில்லை. 'கவிஞர் தாஹா' என்று தான் அழைப்பார்கள். புகைப்படம் போட்டு அறிமுகம் செய்து இருக்கும் போது 'ஹாஜி' என்று சேர்த்து எழுதினால் தான் தெரியுமே? சமாளிக்க வேண்டும் என்று எண்ணி இவ்வாறு கேவலப்படுவது ஏன்? நாங்கள் தவறு செய்யவில்லை என்று காட்ட நிருபர்கள், கவிஞர் தாஹா என்று அறியப்பட்டவரை 'ஹாஜி தாஹா' என்று அறிப்பட்டதாக பச்சை பொய் கூறுகிறார்கள். இவ்வாறு 'ஹாஜி தாஹா' என்று அழைப்பட்டதினால் தான் நாங்கள் 'ஹாஜி' என்று சேர்த்தோம் என்று இவர்கள் சொல்லுவதிலும் பொய்யர்கள் என்பதற்கு ஆதாரம், இவர்களின் தளத்திலேயே உள்ளது.

தாஹா அவர்கள் குறித்து ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதிய இவர்கள் 'ஹாஜி' என்று சேர்த்து எழுத மறந்துவிட்டார்கள். இதை ஒரு சகோதரர், சுட்டிக்காட்டி, 'தாஹா' அவர்கள் ஹஜ்ஜை முடித்துள்ளார்கள், தாஹா அவர்களின் அனைத்து பட்டங்களையும் சேர்த்த நீங்கள், ஹாஜி என்பதை மட்டும் சேர்க்க மறந்துவிட்டீர்களே என்று கேட்டவுடன், உடனே இவர்கள் 'ஹாஜி' என்று சேர்த்து தங்களின் தவ்ஹீத் பிடிப்பை வெளிக்காட்டினார்கள். அதற்க்கான ஆதாரத்தை கீழே பாருங்கள்:

அவர்கள் தளத்திலேயே மிச்சம் உள்ள ஆதாரம். எப்படி உளறினாலும் சிக்கி கொள்ளுகிறார்கள்... பாவம்....
இவர்கள் 'ஹாஜி' என்பது அவ்வாறு அழைக்கப்பட்டார் என்று பச்சையாக பொய்க்கூறியவர்கள், இவர்கள் தளத்தில் பல பேருக்கு 'அல்ஹாஜ்' என்று சேர்த்து எழுதியுள்ளார்கள். யாரையும் அழைக்கும் போது அல்ஹாஜ் என்று பெயர் கூறி அழைப்பது இல்லை. மேடைகளில் புகழ வேண்டும் என்று இவ்வாறு அழைப்பது நடைமுறையில் உள்ளது. தவ்ஹீத் வேடமிட்டு திரிந்த இந்த நிருபர் கும்பலுக்கு, 'ஹாஜி' என்று ஹஜ் செய்தவருக்கு போட்டு எழுதக்கூடாது என்ற அடிப்படை கூட தெரியவில்லை. மேலும், ஹாஜி என்று எழுதுவது எல்லாம் உப்பு சப்பில்லாத விஷயமாம், அதுவெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லையாம், ஆம், கொள்கையே இல்லை எனும் போது இதுவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை தான். 'ஸஹாபக்களின் வாழ்வும் நமது வாழ்வும்' என்று தொடர் போடும் தம்பி, எந்த ஸஹாபியாவது 'ஹாஜி' என்று எழுதியுள்ளார்களா? என்று எடுத்துக்காட்டினால் என்ன? வண்டி வண்டியாக பொய்யை அள்ளிவிட்டுவிட்டு, அடுத்த வாரம் பொய் கூறக்கூடாது என் ஹதீஸ்கள் வெளியிடும் இவர்களின் உண்மை முகத்தை மக்கள் அறியாமல் இல்லை.

ஹாஜி என்று எழுதுவது கூடாது என்று இவர்கள் சொன்னாலும், இவர்கள் கூடாரத்தில் உள்ள பலர் சும்மா இருக்க மாட்டார்கள். 

'ஹாஜி' என்று எழுதுவது குறித்து அந்த நிருபர் கொடுத்த அற்புத விளக்கம்:

இறையருள் கவிஞருக்கு வந்ததை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டோம் பதில் இல்லை. இறையருள் என்பது மறைவான விஷயம். இது யாருக்கு கிடைக்கிறது, யாருக்கு கிடைக்கவில்லை என்பதை நம்மால் கண்டிபிடிக்க முடியாது. இதற்கு ஆதாரமாக திருமறையின் ஒரு ஆதாரமே போதுமானது.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. 
(அல்குர்ஆன் 6:59)

திருமறையின் இந்த வசனத்தையும் தாண்டி கவிஞருக்கு வந்த இறையருளை கண்டுபிடிக்க நிருபர்களுக்கு உதவிய பூத கண்ணாடியை எல்லோருக்கும் காட்டினால் நலம்.

இவ்வாறு ஹாஜி என்று எழுவதையும், இறையருள்கவிமணி என்று எழுதுவதையும் நாம் சுட்டிக்காட்டியது இயக்க மாயையாம். இது போன்ற மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயல்களை இவர்கள் செய்வதை நாம் விமர்சனம் செய்வது இது இவர்களுக்கு இயக்க மாயையாக தெரிகிறது. பிஜேவின் ஆய்வை திருடி அதை தங்கள் ஆக்கமாக காட்டுவது இயக்க மாயை இல்லையா? நீங்கள் திண்ணுவது இயக்க மலம் இல்லையா? ஹாஜி என்று எழுதுவது கூடாது என்று தம்பிமார்களுக்கு தர்பியா நடத்திய ஒழுக்க சீலர் கோவை அய்யுப் சொல்லுகிறார் என்பது ரகசியம். தர்பியா நடத்திய உத்தமன் கூட ஜாக் இயக்கத்தில் தான் இருக்கிறார். இயக்கம் கூடாது என்றால் ஒரு இயக்கத்தில் துணைத்தலைவராக இருக்கும் மன்மதனை வைத்து தர்பியா நடத்தியது ஏன்?

ஹாஜி என்று எழுதுவதும், இறையருளை பெறுபவர் என்று ஒருவரை புகழ்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்களை அடுக்க வேண்டிய தேவையில்லை. இது தவறு என்று நேற்று தவ்ஹீதை பற்றி விளங்கியவருக்கு கூட தெரியும். சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூட ஹாஜி என்று எழுதுவது தவறு என்று அதை தவிர்த்து வரும் நேரத்தில், இந்த தவ்ஹீத் நடிகர்களுக்கு இது தெரியாதது அல்லாஹ் இவர்களை எந்த அளவிற்கு வழிகேட்டில் தள்ளியுள்ளான் என்பதற்கு சான்று.

நிருபர்களின் சூனிய கொள்கை:

அடுத்து, ஒரு யூதர் சொன்னதை வைத்து, நபி (ஸல்) அவர்களையும் ஸஹாபாக்களும் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டார்கள் என்று சொல்லியதாக சொல்லுகிறார் அந்த நிருபர். இந்த சம்பவம் பற்றி ஹதீஸ் கீழே உள்ளது. நபி (ஸல்) அவர்கள் யூதரின் கூற்றில் உண்மை இருந்ததின் காரணத்தினால் தான், நபி தோழர்களுக்கு இவ்வாறு சொல்ல வேண்டாம் என்று பணித்தார்கள். ஹதீஸில் இந்த சம்பவம் தெளிவாக இருக்கும் போது, நாம் பொய் சொல்லி விட்டோம் என்று புளுகுகிறார் நிருபர்.

ஒரு யூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்தார். 'கஅபாவின் மீது சத்தியமாக' என்று கூறி நீங்களும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறீர்கள். உங்கள் தோழர்கள் உங்களை நோக்கிப் பேசும்போது 'அல்லாஹ் நாடியதும் நீங்கள் நாடியதும் நடந்துவிட்டது' என்று கூறுகின்றனர். இதன் மூலம் நீங்களும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறீர்கள் என்று கூறினார். உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இனி சத்தியம் செய்யும்போது 'கஅபாவின் மீது ஆணையாக என்று சொல்லாமல் கஅபாவின் இறைவனின் மீது ஆணையாக' என்று சொல்லுமாறு கட்டளை இட்டார்கள். 'அல்லாஹ்வும் நீங்களும் நாடியது நடந்துவிட்டது' எனக் கூறாமல் 'அல்லாஹ் நாடியது நடந்து விட்டது. பின்னர் நீங்கள் நாடினீர்கள்' என்று கூறுங்கள் என்றும் கட்டளையிட்டார்கள். 


நூல்கள்: நஸாயீ, பைஹகீ

அடுத்தாக, ஹாஜி என்று எழுதுவது தவறு என்று கூட விளங்காத அந்த நிருபர், தவ்ஹீத் ஜமாஅத்தின் சில மார்க்க ஆய்வைகளை விமர்சனம் செய்கிறார். தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வுகளை விமர்சனம் செய்பவர்கள் அது பற்றி விவாதிக்க தைரியமும் திரணியும் வேண்டும். இப்படி திராணியற்றவர்களை என்ன செய்வது? ஒருவர் குற்றம்சாட்டுகிறார், அது பற்றி பகிரங்கமாக பேசுவோம் வா என்றால், ஒடுகிறார், இவரை என்ன செய்வது?

சூனியம் குறித்து 1400 ஆண்டுகளாக யாரும் சொல்லாத கருத்தை தவ்ஹீத் ஜமாஅத் சொல்லிவிட்டதாம், தமிழில் கூட சுயமாக எழுத தெரியாமல், காப்பி அடிக்கும் இவர்கள் 1400 ஆண்டுகளில் வாழ்ந்த அத்துனை அறிஞர்களின் ஆய்வையும் கரைத்து குடித்து விட்டு, நிருபர்கள் சொல்லுகிறார்கள் (சிரிக்காதீங்க).

சூனியம் என்பது கற்பனை என்றும், அப்படி ஒன்று இல்லை என்றும் பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். நிருபர்கள் பின்பற்றும் ஷாஃபி மத்ஹபின் அறிஞர்கள் கூட சூனியம் இல்லை என்று கூறியுள்ளார்கள். யாரு சொன்னாலும், சொல்லாவிட்டாலும், நபி (ஸல்) அவர்கள் சூனியத்தை இருக்கிறது என்று நம்புபவன் சொர்க்கம் சொல்ல மாட்டான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபுதர்தா (ரலி)
நூல் : அஹ்மது (26212)

ஹஜ்ஜத்துல்விதாவில் நபி (ஸல்) அவர்கள் மார்க்கம் பூரணமாகிவிட்டது என்ற சொன்னதில் இந்த ஹதீஸூம் அடங்குமல்லவா?

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை நான் ஏற்கவில்லை என்று ஒரு சூனிய நிருபர் கூட நமது தளத்தில் வாக்குமூலம் தந்துள்ளார்.

மேலும், குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டையும் விமர்சனம் செய்கிறார்கள். ஆதாரம் வேண்டுமா என்றெல்லாம் பயந்து கொண்டே தைரியமாக கேட்கிறார்கள். அறிவிப்பாளர் அடிப்படையில் ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படாது என்று நிருப அறிஞர்கள் சொல்லுகிறார்கள். இவர்களுக்கு எந்த சுய அறிவும் கிடையாது என்று நிருபிப்பதற்காக ஒரு ஹதீசை முன்வைக்கிறோம், இது குர்ஆனோடு முரண்படவில்லை என்று அறிவாளி நிருபர்கள் நிருபிக்க வேண்டும்.

குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2876)

குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள் என்று இந்த ஹதீஸ் சொல்லுகிறது. இந்த ஹதீஸ் சொல்லும்படி எந்த குர்ஆன் வசனமும் இல்லை. குர்ஆனை பாதுகாக்கப்படும் என்பதை கீழ்காணும் வசனம் தெளிவாக சொல்லுகிறது.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் (15 : 9)

இந்த ஹதீஸ் குர்ஆனுடன் மோதுகிறது என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுகிறது. இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் அடிப்படையில் ஸஹீஹானது. இது குர்ஆனுடன் மோதவில்லை என்பதை அறிவாளி நிருபர்கள் நிரூபிக்க வேண்டும்.

ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று சொன்னால், அது நமது ஆய்வில் கோளாறாம். இதற்கு முன் வாழ்ந்த அறிஞர்கள், குர்ஆன் முரண்படுவதாக சொல்லப்படும் செய்திகளை மறுக்கவில்லையாம். எத்தனை அறிஞர்கள் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை மறுத்துள்ளார்கள் என்று காட்டடுமா? இது பற்றி விவாதிக்க தயாரா? எதையாவது அள்ளிவிடுவேன், அதற்கு பதில் தந்தால், திட்டி தீர்பேன் என்ற கேடு கெட்ட தன்மையுடன் அலைவதற்கு வெட்கமாக இல்லையா?

ஸஹாபாக்களை கண்ணியக்குறைவாக பேசிவிட்டதாகவும் அள்ளிவிடுகிறார் நிருபர். ஸஹாபாக்களை திட்டுவது கூடாது என்றும், ஸஹாபாக்களின் தியாகத்தோடு ஒப்பிடும் போது நாம் அவர்களின் கால் தூசிக்கு சமமாக மாட்டோம் என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுகிறது. ஸஹாபாக்கள் மனிதர்கள் என்ற முறையில் செய்த தவறுகளை எடுத்துக்காட்டுவது, ஸஹாபாக்களை திட்டுவதாக ஆகாது, ஸஹாபாக்கள் மனிதர்கள் என்ற முறையில் செய்த தவறுகள் மன்னிக்கப்படும் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுகிறது. ஸஹாபாக்களை திட்டுபவர்கள் வழிகேடர்கள் என்று தெளிவாக சொல்லுகிறோம். ஸஹாபாக்கள் மனிதர்கள் என்ற முறையில் செய்த தவறுகளை வரலாற்று உரையில் எடுத்துக்காட்டியதை தான் ஸஹாபாக்களை திட்டிவிட்டதாக சொல்லுகிறார்கள். நாம் ஏதோ இல்லாத விஷயத்தை சொல்லிவிட்டதை போல துடிக்கிறார்கள். நாம் சொல்லிய விஷயங்கள் ஹதீஸ் கிரந்தங்களில் உள்ளவை தான். அதற்கு ஆதாரமாக புகாரியில் இடம்பெற்றுள்ள ஹதீசை காணுங்கள்.

முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்:

அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக் அல் அன்சாரி(ரலி) - (இவருடைய தந்தை) கஅப்பின் மாலிக்(ரலி) (தபூக் போரில் கலந்துகொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார். அன்னார் எனக்கு அறிவித்தார்கள்:

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குத் தெரிவித்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்ளோது அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், 'அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?' என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்" என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அலீ(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு, (பிறரின்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆம்விடப்போகிறீர்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரைவில் தம் இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாணம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். 'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்" என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி), 'நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்" என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 4447

இப்போது இந்த ஹதீசை தேடி பிடித்து அதை தனது நூலில பதிந்த புகாரி அவர்கள் ஸஹாபாக்களை திட்டுகிறார் என்று சொல்லுவோமா? ஸஹாபாக்களை நாம் திட்டியதாக சொல்லப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில் தரப்பட்டுள்ளது.

இது பற்றி இந்திய மற்றும் இலங்கை உலமாக்கள் விளக்கம் தருகிறார்களாம், இவர்களை தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதம் செய்ய அழைத்து வர நிருபர் கும்பலுக்கு திராணி உண்டா? இப்படிப்பட்ட ஆலிம்களை நாம் பெண் பித்தர்கள் என்று சொல்லுகிறோமாம். பெண் பித்தர்களை பெண் பித்தர்கள் என்று தானே சொல்ல முடியும். எல்லாரையும் சொல்ல மாட்டோம். கேடித்தனம் செய்து கொண்டு, ஆலிம் வேஷம் போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றும் கேடுகேட்டவர்களை அவ்வாறு தானே சொல்ல முடியும். கேடிகளை வைத்து தர்பியா நடத்துபவர்கள் இதை குறை காணுவதில் ஆச்சரியம் இல்லை. கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று நாம் சிலரை விமர்சனம் செய்வதற்கு காரணம், சவூதியில் போடப்படும் சம்பளத்திற்கு ஏற்ப தங்களின் கொள்கைகளை மாற்றி வருகிறார்கள். உதாரணத்திற்கு, தவ்ஹீத் ஜமாஅத் ஹதீஸ்களின் அறிவிப்பாளருடன் ஹதீஸின் கருத்தும் சரியாக (குர்ஆனுக்கு முரண்படாத வகையில்) இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது, இதை இலங்கை இஸ்மாயில் ஸலஃபி என்பவர் ஏற்கவில்லை, இவ்வாறு இவர் சொல்லிக்கொண்டு இருக்கும் நேரத்தில் மதீனா பல்கலைகழகத்தில் இருந்து இதே கருத்தில் ஒரு ஃபத்வா வெளியிடப்படுகிறது, இதன் பிறகு, அதே இஸ்மாயில் ஸலஃபி இந்த கருத்தை பேசுகிறார், இதனால் தான் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும், சவூதி சம்பளத்திற்கு அடிமைப்பட்டவர்கள் என்றும் கூறுகிறோம், இதில் என்ன தவறை கண்டீர்கள்? அதே போல், இலங்கையில் சூனியம் குறித்து சமீபத்தில் பேசி, தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாத்திப்பேன் என்று வந்து, பின்னர் அந்தர் பெல்டி அடித்து பீஜேவுடன் மட்டும் தான் விவாதிப்பேன், இல்லையென்றால், ஸ்ரீலங்க தவ்ஹீத் ஜமாஅத்திடம் மட்டும் தான் விவாதிப்பேன் (ஸ்ரீலங்க தவ்ஹீத் ஜமாஅத்திடம் தனியாக விவாதிக்க பயந்து பின்வாங்கி விட்டார்) என்ற ஒரு கேடி மௌலவி, ஒரு பெண்ணுடன் சல்லாப பேச்சில் ஈடுபட்டு, பின்னர் மாட்டிக்கொண்டு, இனிமேல் நான் தஃவா செய்ய அருகதையற்றவன் என்று அழுது புலம்பிய ஒருவனை பெண் பித்தன் என்கிறோம், அதை சம்பந்தப்பட்ட மௌலவியே மறுக்கவில்லை. இதில் என்ன தவறு? இலங்கையில் பலர் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வுகளை விமர்சனம் செய்யும் போது, அந்த பெண் பித்தன் பேச்சு தான் என்னையும் கவரும் என்று அடம்பிடித்தால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.

கேடுகெட்ட செயல் செய்பனை அறியனையில் ஏற்றி, அவனுக்கு சமூக அங்கீகாரம் தருவது எவ்வளது பெரிய அயோக்கியத்தனம்.

மார்க்க விஷயங்களில் நாம் தில்லுமுல்லு செய்கிறோமாம், பட்டியலை எடுத்தால் தாங்காதாம். பட்டியல் போடுங்கள் பார்ப்போம், பட்டியல் போட்டு, இது பற்றி விவாதிப்போமா என்று தைரியமாக சொல்லுங்கள் பார்க்கலாம். உங்களுக்கு திராணி இருந்தால் அனைத்தையும் பட்டியல் போட்டு, அது பற்றி விவாதிக்க முன்வாருங்கள், ஹாஜி என்று எழுதுவதற்கு நீங்கள் கொடுத்த விளக்கமே உங்களின் மார்க்க அறிவை அம்பலப்படுத்திவிட்டதே!

நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் கிறிஸ்தவர்களை வழிபட அனுமதித்தார்கள், நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் படைக்கவிட்டால் இந்த உலகத்தையே படைத்து இருக்க மாட்டான். ஹாஜி என்று எழுதுவது தவறல்ல. இறையருட்கவி என்று எழுதுவது தவறல்ல என்று உங்களின் வழிகேட்டு கொள்கைகளையும் நாம் பட்டியல் இட்டோமே, முறையான பதில் வந்ததா? சமாளிக்க தான் முடிந்தது சிலவற்றிக்கு, பலவற்றிக்கு வாயே திறக்க முடியலையே! இன்னும் வெளியிட வேண்டியவை பல உள்ளது.

பத்வா செய்வார்களாம்!

அடுத்து, ததஜவால் எத்தனை சக முஸ்லிம்கள் கேவலப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று புலம்புகிறார்கள். தாங்கள் கேவலப்பட்டு போனதை எல்லாரும் மற்றவர்கள் கேவலப்படுத்தப்பட்டதை போன்று எழுதுகிறார்கள். உங்களை நாங்கள் கேவலப்படுத்தவில்லை, பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி போட்டு, உங்களை நீங்களே கேவலப்படுத்திக் கொண்டீர்கள். இவர்கள் பத்வா செய்வார்களாம். பொய்களை அள்ளிவிசிவிட்டு, அதனால் கேபலப்பட்டு போய்விட்டு, பத்வா செய்வோம் என்பது உங்களுக்கே காமெடியாக தெரியவில்லை.

கேட்ட கேள்வி அத்தனைக்கும் பதில் சொல்லுங்க பா, அப்பறம் பத்வா கொடுக்கலாம். பொய்க்கு மேல் பொய், 100 பொய்களை மறைக்க ஆயிரம் பொய் சொல்லும் உங்களுக்கு தான் கேவலத்திற்கு மேல் கேவலம் வருகிறது. கேட்ட கேள்விகளுக்க பதில் சொல்ல முடியாமல் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அஜால் குஜால் செய்தாரகள் என்று புளுகும் உங்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும், இன்ஷா அல்லாஹ். இந்த உலகில் நீங்கள் கேவலப்பட்டதை போல மறுமையில் கேவலப்படாமல் இருக்க தவ்பா செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள். கேட்ட கேள்வி அத்தனைக்கும் ஆதாரத்துடன் பதிலை அடுக்குபவர்களுக்கு பதுவா கிடைக்குமா? கேட்ட கேள்விகளுக்கு பதில் தராமல் வசைபாடுபவர்களுக்கு பதுவா கிடைக்குமா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தங்களின் நேருக்கு நேர் கட்டுரையில் பல காமெடியான தலைப்புகளை போட்டுள்ளார்கள், உதாரணத்திற்கு, 'ததஜ அதிரை கிளையின் முரண்பாடுகள்' என்ற தலைப்பிட்டுள்ளார்கள், அதில் என்ன எழுதியுள்ளார்கள் என்று படித்து பார்த்தால், அவர்களின் முரண்பாடுகளை அடுக்குகிறார்கள்.

குறிப்பு: 
திருடும் நிருபர்கள் நாம் இதுவரை எடுத்து வைத்த வாதங்களுக்கு பதில் தர முடியாமல் போய்யுள்ளதால், இவர்களின் விடுப்பட்ட சில உளறல்களை நாம் அலட்சியப்படுத்தி  விட்டுவிடுகிறோம். நாம் இதுவரை எடுத்து வைத்த வாதங்களுக்கு இவர்கள் பதில் தந்தால், இவர்களின் மற்ற வாதங்களுக்கு பதில் தருவோம், இன்ஷா அல்லாஹ்.

Tuesday, April 08, 2014

வாழ்வுரிமைக்கே வாக்குரிமை!

நாடு விடுதலையடைந்த பிறகு 1992ஆம் ஆண்டு வரை தமிழக முஸ்லிம்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்கு வங்கியாகவே இருந்தனர். 1992ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் இஸ்லாமிய சமுதாயம் காங்கிரஸ் கட்சியை அடையாளம் கண்டது. எனினும் இதன் பலனாய் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகள் திராவிடக் கட்சிகளை நோக்கியே சென்றன.

இக்கால கட்டத்தில் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வந்த தவ்ஹீத் ஜமாஅத், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. ஆரம்பத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் என்ற வட்டத்தில் மட்டும் நின்ற தவ்ஹீத் ஜமாஅத், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் சமுதாயப் பணி என்ற இலட்சியத்தையும் கையிலெடுத்து தனது வட்டத்தை வரிவாக்கம் செய்தது. அதன் எதிரொலி தான் தமுமுக என்ற இயக்கத்தின் உதயமாகும்.

தவ்ஹீதுவாதிகளின் உழைப்பிலும், தியாகத்திலும் தமிழகத்தில் அரசியல்ரீதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அந்தப் புரட்சியின் விளைவாக 1998ல் தேர்தல் புறக்கணிப்பு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தது.

1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை கோவையில் 19 முஸ்லிம்களை அநியாயமாக சுட்டுக் கொன்றது.

முஸ்லிம்களை அநியாயமாக சுட்டுக் கொன்ற காவல்துறை கயவர்களின் மீது - காட்டு மிருகங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் கருணாநிதி என்று சமுதாயம் காத்திருந்தது. ஆனால் கருணாநிதியோ அந்தக் காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல! முஸ்லிம்களின் உயிரைப் பறித்து, உதிரம் குடித்த காட்டுவிலங்குகளுக்கு விருது வழங்கிக் கவுரவித்தார். எரிகின்ற முஸ்லிம்களின் இதயங்களில் எண்ணையை ஊற்றினார்.

அந்தப் பாதிப்பையும் கொதிப்பையும் வெளிப்படுத்தும் விதமாகத் தேர்தல் புறக்கணிப்பை தமுமுக சார்பில் அறிவித்தோம். அதனுடைய வீரிய பிரச்சாரம் மக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கும் வேளையில்தான் கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இது தமிழகத்தில் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலும் பிஜேபிக்கு சாதகமான பலனை அளித்தது. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணி தோல்வியடைந்து, அதிமுக அணி வென்றது.

அதிமுக ஆதரவில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாரதீய ஜனதா அரசை 13 மாதங்களில் ஜெயலலிதா கவிழ்த்தார். 1999ஆம் ஆண்டு நாடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைச் சந்தித்தது. 1999 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தலையொட்டி ஜூலை 4, 1999ல் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தினோம். தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்து கொண்டு, அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தோம்.

2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படாததாலும், திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததாலும் எந்தக் கட்சியையும் முழுமையாக ஆதரிக்காமல் சமுதாய ரீதியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்து ஆதரித்தோம். அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இதன் பின்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவதைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. எனவே இடஒதுக்கீட்டை மையமாக வைத்து திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்தோம். இவையனைத்தும் தமுமுக தவ்ஹீதுவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள்.

இதன் பின்னர் தேர்தல் காலங்களில், களங்களில் கண்ட அரசியல் தலைவர்கள் சந்திப்பு, மரியாதைகள் போன்றவை தமுமுகவை பதவி மோகத்தில் தள்ளியது. அதனால் தவ்ஹீதுவாதிகள் தமுமுகவிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உருவானது. இந்த ஜமாஅத், 2006, ஜனவரி 29 அன்று குடந்தை குலுங்கும் அளவுக்கு மாபெரும் பேரணியை நடத்தியது.

அதன் விளைவாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நீதிபதி ராஜரத்தினம் தலைமையில் இடஒதுக்கீட்டிற்கான ஆணையம் அமைத்தார். அந்த அடிப்படையில் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்தது. எனினும் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்திருந்த கோபம் காரணமாக திமுக வென்றது. தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு இல்லாமல் இருந்தால் அதிமுக பலமான எதிர்க்கட்சியாக வந்திருக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் அப்போது எழுதினார்கள்.

திமுக ஆட்சிக் காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு திமுக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கியது. இதற்கு நன்றிக்கடனாக தவ்ஹீத் ஜமாஅத் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதவரளித்தது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

2011 சட்டமன்றத் தேர்தலிலும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை உயர்த்தித் தரும் கட்சிக்கு ஆதரவு என்ற நிலைபாட்டை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தக் கோரிக்கையை அதிமுக கண்டுகொள்ளவில்லை. திமுக ஏற்றுக் கொண்டது. இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திமுகவை ஆதரித்தது. மின்வெட்டு, ஊழல் போன்ற திமுக எதிர்ப்பு அலையில் திமுக தோல்வியைத் தழுவினாலும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதிமுக அசைந்து கொடுக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் காலத்தில் தான் சமுதாயத்தின் கோரிக்கையை ஏறிட்டுப் பார்க்கும்; என்னவென்று கேட்கும். இதைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகமே ஸ்தம்பிக்கின்ற வகையில் ஜனவரி 28, 2014 அன்று சென்னை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய நான்கு மண்டலங்களில் தமிழகம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

இதன் விளைவாக அதிமுக அரசு, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து அறிக்கை அளிக்குமாறு மாநில பிற்பட்டோர் நல வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது. அரசியல் சட்டப்படி, இதுதான் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற்கான வழிமுறையாகும். இந்த அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வருகின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தனது ஆதரவை அளிக்கின்றது.

இதுவரை இஸ்லாமிய சமுதாயம் தனது வாக்குரிமையை உணராமல் இருந்தது. விழலுக்கு இறைத்த நீராக ஆக்கிக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு உதவாக்கரை எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உருவாக்குவதற்காக சமுதாயத்தின் வாக்குகள் பாழாகிக் கொண்டிருந்தன; பயனற்றுப் போயின.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக இப்போது இடஒதுக்கீடு என்ற சமுதாய நலனை மையமாகக் கொண்டு, வாழ்வுரிமையை ஆதாரமாகக் கொண்டு அதன் வாக்குரிமை சுழல்கின்றது.

இரு திராவிடக் கட்சிகளுமே இடஒதுக்கீடு எனும் முஸ்லிம்களின் வாழ்வுரிமையை தேர்தல் களத்தில் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றன. சட்டமன்றம், நாடாளுமன்றம் சென்று சாதிக்காமல் சந்தியில் நின்று தவ்ஹீத் ஜமாஅத் சாதித்திருக்கின்றது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! இனி இந்த இடஒதுக்கீடு எனும் வாழ்வுரிமை கிடைக்க ஒட்டுமொத்த சமுதாயமும் ஓரணியில் நின்று அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

இன்றைய அரசியல்வாதிகளின் ஒன்றிரண்டு எம்.பி. சீட்டுக்களைப் பார்க்காமல் நாளைய நமது தலைமுறையின் மருத்துவ, பொறியியல், தொழிற்கல்வியின் சீட்டுக்களையும் அரசு வேலைவாய்ப்புகளையும் கவனத்தில் கொண்டு, சமுதாய நலனை முன்னிறுத்தி அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். நமது வாழ்வுரிமைக்காக வாக்களிக்க வேண்டும்.

இப்போது சட்டமன்றத்தில் இருக்கின்ற இரண்டு மமக உறுப்பினர்கள் சமுதாயத்திற்காக எதையும் கிழித்துவிடவில்லை. தாங்கள் சார்ந்திருந்த கூட்டணிக் கட்சியைப் புகழ்வதிலும், எதிர்க்கட்சியை விமர்சிப்பதிலும் தான் தங்கள் பதவிக்காலத்தைக் கழிக்கிறார்களே தவிர இடஒதுக்கீட்டிற்காக எதையும் சாதிக்கவில்லை. சமுதாயத்தின் பெயரைச் சொல்லி, தமது ஆதாயத்தை மட்டும் பார்க்கும் இவர்களுக்கு வாக்களிப்பது சமுதாயம் தன்னையே நாசத்தில் தள்ளுவதற்குச் சமமாகும்.

மமகவின் நிலை இதுவென்றால், தேர்தல் சமயத்தில் மட்டும் முஸ்லிம் கட்சி என்ற வேஷம் போடும் எஸ்டிபிஐ கட்சி, பாரதீய ஜனதா வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றது. தமிழகத்தில் வடசென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி தொகுதிகளில் போட்டியிடுவதாகக் கூறும் எஸ்டிபிஐ, இனவெறியைப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்; கோயில் - தர்கா திருவிழாக்களுக்கும், பொங்கல் தீபாவளி பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்லி டிஜிடல் பேனர் வைப்பார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் முஸ்லிம் கட்சி அல்ல, எல்லா சமுதாயத்திற்கும் பொதுவான கட்சி என்பார்கள். ஆனால் தேர்தல் போட்டி என்று வந்தால் முஸ்லிம் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள். இவர்களின் சந்தர்ப்பவாதத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிடம் பேரம் பேசி, இவர்களுக்கு சீட் கிடைக்காததால் இப்போது சமுதாய வேஷம் தரித்துக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கென்று எந்தக் கொள்கையும் கிடையாது. இவர்களை ஆதரிப்பதால் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து, அது நரேந்திர மோடியின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உதாரணமாக ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக, திமுக இரண்டு பெரிய கட்சிகளுமே முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியுள்ளன. எனவே இந்தத் தொகுதியிலிருந்து ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. வெற்றி வாய்ப்பு இல்லாத பாரதீய ஜனதா கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தி, முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

அதிமுக, திமுகவிலுள்ள முஸ்லிம் வாக்குகள் கணிசமாகப் பிரிந்தால் அது அங்கு போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளருக்கு சாதகமாகவே அமையும். இது தெரிந்து, வேண்டுமென்றே பாரதீய ஜனதாவை வெற்றிபெற வைக்கும் நோக்கில் இவர்கள் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

மேலும் இவர்கள் அதிகப்பட்சமாக பத்தாயிரம் வாக்குகள் வாங்கினாலும் அதனால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. இதை வைத்து அடுத்த தேர்தல்களில் இவர்கள் திமுக, அதிமுகவுடன் பேரம் பேசுவதற்கு வேண்டுமானால் இந்த வாக்குகள் பயன்படும். சமுதாயத்திற்கு இதனால் கேடு தான் விளையும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பத்தாயிரம் வாக்குகள் பெற்ற மமக இதைத் தான் செய்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவே இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு வாக்களிப்பது பாரதீய ஜனதாவுக்கு நேரடியாக வாக்களிப்பதற்குச் சமம். நம்முடைய கைகளாலேயே நாசத்தைத் தேடிக் கொள்ளும் மோசமான செயல் இது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 2:195

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:29

இஸ்லாம் என்றாலே சமுதாயத்திற்கு நன்மையை நாடுவது தான்.

நபி (ஸல்) அவர்கள், "மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவது தான்'' என்று கூறினார்கள். நாங்கள், "யாருக்கு (நலம் நாடுவது)?'' என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத் தாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 57

நம்முடைய வாழ்வுரிமைக்கு வாக்களித்து, நம்முடைய சமுதாய நலனைக் காப்போம்; நாசத்தைத் தவிர்ப்போம்.
 நன்றி ஏகத்துவம்

Thursday, April 03, 2014

திருடும் நிருபர்களின் மிரட்டும் உளறல்களும் உண்மைகளும்! - போதும் எங்களை அடிக்காதீங்க! - பகுதி-1

திருடும் நிருபர்கள் 'நேருக்கு நேர்'(?) என்ற பெயரில் ஒரு பெரிய ஆக்கத்தை வெளியிட்டு, அரைவேக்காட்டுத்தனமாக பல அவதூறுகளையும், பொய்களையும் அள்ளிவீசியிருந்தார்கள். அவற்றில் உள்ள எல்லா வாதங்களுக்கும் பதில் கொடுத்து திருடும் நிருபர்களின் முகத்திரையை கிழித்து எறிய உள்ளோம். எல்லாவற்றையும் ஒரு ஆக்கமாக வெளியிட்டால் படிப்பதற்கு ஏதுவாக இருக்காது என்பதால், பகுதி பகுதியாக பிரித்து வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதற்கு முன் நாம் கொடுத்த பதிலடிக்கு பதில் தர திராணியற்று கேவலப்பட்டதை போல மீண்டும் கேவலப்படுவார்கள் திருடும் நிருபர்கள், இன்ஷா அல்லாஹ். ஒவ்வோரு பகுதியும் நான்கு நாள் இடைவெளியில் வெளிவரும், இன்ஷா அல்லாஹ். 

புகழ் போதை தலைக்கு ஏறி, என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறாம் என்று கூட அறியாமல் உளறித்தள்ளிய திருடும் நிருபர்களின் முகத்திரையை நமது இணையதளத்தில் கிழிக்க வேண்டிய நிற்பந்தத்தை திருடும் நிருபர்கள் ஏற்படுத்தி தந்தார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டத்தை பற்றியும் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு பற்றியும் சில்லரைத்தனமாக உளறி, வசமாக வாங்கி கட்டினார்கள். அதில் காரைக்கால் சில்லரையின் வாந்தியை நன்றாக சுவைத்தார்கள். இவர்களின அனைத்து உளறல்களுக்கும் சம்மட்டியடி கொடுத்தோம் (நமது பதிலடியை பார்க்க இங்கே செல்லவும்). அடுத்து, நமது பதிலடிக்கு பதில் தருகிறோம் என்ற பெயரில் திருடும் நிருபர்கள், மேலும் பல அவதூறுகளையும் உளறல்களையும் அள்ளிக் கொட்டினார்கள். நமது பதிலடிக்கு பதில் என்ற பெயரில் இவர்கள் உளறியவற்றிக்கு நமது பதிலடி இவர்களுக்கு பேரிடியாக ஆனது (இவர்கள் நமது பதிலடிக்கு கொடுத்த பதிலுக்கு நாம் கொடுத்த இரண்டாவது பதிலடியை காண இங்கே செல்லவும்). நமது பதிலடி பற்றி ஒரு வார்த்தை கூட பதில் தர முடியாமல் மவுனிகளாக மாறிப்போனர்கள் கேவலப்பட்டு போனர்கள் திருடும் நிருபர்கள்.

தங்களை பெரிய அறிவாளிகளாக காட்டி புகழ் தேடுவதற்க்காக அங்கும் இங்கும் காப்பி அடிக்கும் இவர்களின் ரகசியத்தையும் நாம் வெளியே கொண்டு வந்தோம். இவ்வளவு காலமாக நாம் கொடுத்து வைத்திருந்த பில்டப் எல்லாம் உடைந்து போய்விட்டதே என்று தங்களுக்கு தாங்களே புலம்ப ஆரம்பித்தார்கள் (ஆன்லைன் பிஜேவில் இருந்து திருடி மாட்டிய திருட்டு நிருபர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய கட்டுரை இங்கே).

இதற்கிடையில், தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட இயக்கம், பிஜே வழிகேடர் என்று சொல்லி கொண்டே, பிஜேவின் புத்தகத்திலிருந்து அப்படியே திருடி அதை தங்களின் ஆக்கமாக காட்டி புகழ் தேடினார்கள். அதையும் நாம் பகிரங்கப்படுத்தி, இவர்களின் முகத்திரையை கிழித்து எறிந்தோம். ஆன்லைன் பிஜேவின் ஆக்கத்தை தங்களின் ஆக்கமாக காட்டிய இவர்கள், அந்த ஆக்கத்தில் ஆன்லைன் பிஜேவில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை சொல்லவில்லை. இதனால் தான் இவர்களை நாம் திருடர்கள் என்று அழைத்தோம். அடுத்தவர்களின் ஆக்கத்தை தனது ஆக்கமாக காட்டி புகழ் தேடுபவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என்ற திருக்குர்ஆனின் போதனையை எடுத்து காட்டிய பின்னரும் இந்த திருடர்களுக்கு எந்த பயமும் வரவில்லை. நாம் சுட்டிக்காட்டிய  பின்னரும் இது ஆன்லைன் பிஜேவில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை சேர்க்கவில்லை. பின்னர், இவர்களின் இணையதளத்தில் அங்கம் வசிக்கும் சிலர், நீங்கள் திருடுவதாக அவர்கள் சொல்லுகிறார்கள், ஒன்று திருடினோம் என்று சொல்லுங்கள், இல்லை திருடவில்லை என்று சொல்லுங்கள் என்று கேட்டவுடன், உள்ளுகுள்ளே எதிர்ப்பு கிளம்புகிறதோ என்று இவர்கள் வேறு வழியின்றி, இது ஆன்லைன் பிஜேவில் இருந்து திருடப்பட்டது என்பதை சேர்த்துள்ளார்கள்.

இந்த  நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தர கமிஷன் அமைத்த அதிமுகவிற்கு ஆதரவு என்று அறிவித்தது. நம்மை இந்த அடி அடித்து விட்டார்களே, நாம் வாய் கூட திறக்க முடியாமல் நாறடிக்கப்பட்டு விட்டோமே என்று வெறிப்பிடித்து திரிந்து கொண்டிருந்த திருடும் நிருபர்கள், ததஜ அதிமுகவை சும்மா தான் ஆதரிக்கிறது என்றும், அதிமுக அரசு கமிஷன் அமைக்கவில்லை, இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள், இவர்கள் கமிஷன் என்று சொல்லுவது இரு அரசியல் அதிகாரிகள் பேசிக்கொண்டது என்று ஒரு பத்திரிக்கை ஆதாரம் காட்டி, 'தவ்ஹீத் கான்' என்ற கள்ளப்பெயரில், தவ்ஹீதை கிண்டல் செய்து தங்களின் தவ்ஹீத் எதிர்ப்பை காட்டினார்கள். இந்த கமிஷன் அரசு அமைத்தது அல்ல, அது இரு அரசு அதிகாரிகள் பேசிக்கொண்டது என்பதற்கு ஆதாரமாக காட்டிய பத்திரிக்கை செய்தியிலேயே  'தமிழக அரசு' உத்திரவிட்டுள்ளது என்று இருப்பதை எடுத்து காட்டி, நிருபர்களின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தினோம். இவர்கள் வைத்த ஆதாரத்திலேயே இவர்களுக்கு சம்மட்டி அடி இருந்ததை இந்த கயவர்கள் உணரவில்லை. இவர்கள் வைத்த ஆதாரத்திலேயே பதில் இருப்பதை நாம் எடுத்து காட்டியது, திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக மாறியது. வழக்கம் போல இட ஒதுக்கீடு கமிஷன் பற்றி நாம் கொடுத்த பதிலடிக்கு பதில் சொல்ல முடியாமல் கேவலப்பட்டு போனார்கள் திருடும் நிருபர்கள். இட ஒதுக்கீடு கமிஷன் குறித்து இவர்களின் உளறல்களுக்கு நாம் கொடுத்த பதிலடியை காண இங்கே செல்லவும்.

நாம் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு எதிராக வரும் கேள்விகளுக்கும் வாதங்களுக்கும் பதில் சொல்லும் திராணி வேண்டும். எதற்குமே பதில் சொல்ல வக்கற்ற திருட்டு நிருபர் கும்பல், தற்போது பதில் என்ற பெயரில் உளறல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். இது பற்றி எதிராக வரும் எந்த விமர்சனத்திற்கும் நாங்கள் பதில் தர மாட்டோம் என்று தாங்கள் சொல்லுவது பொய் தான், எனவே, அடி வலுவாக இருக்கும் என்று முடிவு செய்து பதில் தர மாட்டோம் என்று சொல்லி தங்களை பொய்யர்கள் என்று அவர்களே ஒத்துக்கொண்டுவிட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த திருடும் நிருபர்கள் நமது எந்த வாதங்களுக்கும் பதில் சொல்லவில்லை. எடுத்து வைத்த அனைத்து வாதங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் கேவலப்பட்டுள்ளார்கள். நமது இந்த பதிலடியிலும் அவர்களுக்கு கேவலமே மிஞ்சும்.

அவர்களின் ஆக்கத்தில் ஆரம்பமாக இணைய கடலில் அவர்கள் செய்த புரட்சி என்று வழக்கம் போல இல்லாத ஊருக்கு வழி சொல்லும் அண்ட புளுகளுடன் ஆரம்பாகிறது கதை. இவர்கள் செய்த ஒரே புகழ்ச்சி புகழ் விரும்பிகளை ஒன்றினைத்தது தான். எனது காப்பி பேஸ்ட் கட்டுரையை நீங்கள் புகழ வேண்டும், உங்களின் காப்பி பேஸ்ட் கட்டுரையை நாங்கள் புகழ்வோம் என்ற உயரிய கொள்கை அடிப்படையில் தான் நிருபர்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

அடுத்து, இட ஒதுக்கீடு குறித்து அங்கும் இங்கும் திருடப்பட்ட செய்திகளை வைத்தும் இவர்கள் எழுதிய ஒட்டுரை (அவர்கள் பாணியில் கட்டுரை), தமிழக முஸ்லிம்களின் எண்ண ஓட்டமாம். எந்த தமிழக முஸ்லிம்கள் அவர்களின் உணர்வுகளை இந்த நிருபர்களிடம் தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை, எங்களின் உணர்வுகள் இவ்வாறு உள்ளது, அதற்கு ஏற்றால் போல் ஈ அடிச்சான் காப்பி அடிச்சு எங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள் என்று சொன்னார்கள் போல.

அடுத்து, இவர்களின் கட்டுரையில் யாரையும் தாக்கவில்லையாம், நடுநிலையாம். தவ்ஹீத் ஜமாஅத்தை குறி வைத்து, சிறை செல்லும் போராட்டம் முடிந்தவுடன் தமுமுகவின் ஏஜெண்ட் எழுதிய கட்டுரை தான் அது. யாரை தாக்கி எழுதவில்லை என்றால், தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தும் போது மட்டும் திருட்டு நிருபருக்கு கட்டுரை வருவது ஏன்? ம.ம கட்சியில் போராட்டம் நடத்தும் போது ஏன் கட்டுரை போடவில்லை? அப்போது எங்கே காப்பி அடிக்க போனீர்கள்? முஹம்மது குட்டி பூமி பூஜை செய்கிறார் என்று கட்டுரை போட்டவர்கள், தங்களின் தானே தலைவர் ஜவாஹிருல்லாஹ் அதே செயலை செய்யும் போது ஏன் கட்டுரை  போடவில்லை.

அடுத்து, இட ஒதுக்கீடு குறித்து கட்டுரை எழுதிய மூத்த கட்டுரையாளரை நாம் தாக்கி எழுதிவிட்டோமாம். சில்லரைத்தனமாக உளறினால் சம்பந்தப்பட்டவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவது இயல்பே. அந்த சில்லரைத்தனமான கட்டுரை எழுதியவர்களை நாம் பெயர் குறிப்பிட்டு கூட விமர்சனம் செய்யவில்லை. அந்த மூத்த (?) கட்டுரையாளர் திருட்டு நிருபர் தளத்தில் பல அநாகரீகமான கருத்துகளை சொன்ன போதும், வயதுக்காக நாம் மதிப்பளித்தோம். தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை நிர்வாகி எதோ ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பது போல பொய்யை காப்பி பேஸ்ட் தளத்தில் எழுதியிருந்தார், ஆதாரம் கேட்டோம். முக்காடு போட்டுக்கொண்டு ஓடிவிட்டார். மூத்த கட்டுரையாளர் வரம்பு மீறிய போதும், நாம் அவர் விஷயத்தில் வரம்பு மீறவில்லை. தங்களின் முகத்திரை கிழிந்து விட்டதே என்ற வருத்தத்தில் இவ்வாறு ஒரு பொய்யை இட்டுக்கட்டி அனுதாபம் தேடபார்க்கிறார்கள் திருடும் நிருபர்கள்.
கடைசி பத்திக்கு முதல் பத்தியை கவனிக்கவும், தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்தவர் யாரோ இவ்வாறு செய்துள்ளார் என்று புளுகும் காப்பி ஆசிரியர்.  நாம் வரம்பு மீற ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள் என்பதை சொல்லி வைக்கிறோம்.

கண்கள் இரண்டும் என்ற தொடரின் ஒட்டுரையாளர் ஆன்லைன் பிஜேவில் இருந்து காப்பி அடித்ததோடு மட்டுமல்லாமல், தவ்ஹீத் ஜமாஅத்தினர் தக்லீத்வாதிகள் என்று சொன்ன போதும் கூட, அவரின் பெயரை கூட நாம் விமர்சனத்தில் குறிப்பிடவில்லை.

அவர்கள் தளத்தில் எவ்வளவு கேவலமாகவும் தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றியும் அதன் நிர்வாகிகளை பற்றியும் எழுதலாம், அதற்கு எந்த தடையும் இல்லை என்பதால், வரம்பு மீறி கருத்துக்களை பதிந்த சில கிறுக்கர்களின் கருத்துக்களை சிலர் காட்டி எம்மிடம் விளக்கம் கேட்கும் போது, அவர் வரம்பு மீறிய அளவுக்கு நாமும் வரம்பு மீறி உள்ளோம்.

அடுத்து, நாம் வரம்பு மீறி பேசிய வார்த்தைகளுக்கு குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரம் தர முடியுமா? என்று கேட்டுள்ளார்கள். முதலில் அவர்கள் எது வரம்பு மீறிய வார்த்தை என்று எடுத்துக்காட்டி இவ்வாறு கேட்க வேண்டும். இதுபற்றி குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரம் எடுத்து வைக்க நாம் தயார். திருடுபவர்களை திருடர்கள் என்றும், அயோக்கியதனம் செய்பவர்களை அயோக்கியர்கள் என்றும், மன்மதனை வைத்து தர்பியா நடத்துபவர்களை மன்மத தர்பியா கும்பல் என்றும் அழைப்பதற்கு மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை என்று நாம் நிருபிக்க தயார், இவ்வாறு அழைப்பது தவறு, திருடனை நல்லவன் என்றும், அயோக்கியனை யோக்கியன் என்றும், மன்மதனை வல்லவன் என்றும் அழைக்க வேண்டும் என்றும் திருட்டு நிருபர்கள் ஆதாரம் தருவார்களா?

அடுத்து, கண்கள் இரண்டும் என்ற கட்டுரையின் இரண்டு தொடர்கள் முழுவதும் ஆன்லைன் பிஜேவில் திருடப்பட்டது என்பதை அம்பலப்படுத்தியதை பித்துபிடித்து ஒப்பாரி வைக்கிறார்கள் என்று விமர்சனம் செய்கிறார் அந்த நிருபர். கண்கள் இரண்டும் தொடர் வரலாறு பற்றி நாம் அம்பலப்படுத்திய பின் யாருக்கு பித்து பிடித்தது என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? நாம் திருடியுள்ளார்கள் என்று சொல்லியுள்ளோம், சும்மா சொல்லவில்லை ஆதாரத்தை வைத்து சுண்டி சொல்லியுள்ளோம். இவ்வாறு சொன்னதை நாம் கற்பனையாக சொல்லியுள்ளோம் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறார். நாம் கற்பனையாக சொன்னோம் என்றால் ஏன் எங்களுக்கு பதிலடி வரவில்லை. குற்றம் உள்ள மனசு குறுகுறுக்கும் அல்லவா? இவர்கள் தளத்தில் வந்த கட்டுரையை அப்படியே எடுத்து வைத்து, அது ஆன்லைன் பிஜேவின் எந்த ஆக்கத்தில் இருந்து திருடியது என்பதையும் காட்டிய பிறகும் நாம் கற்பனையாக சொல்லுகிறாம் என்று கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் எப்படி தான் சொல்ல முடிகிறதோ !

அடுத்து, பொய் சொல்லுபவர்கள் முரண்படுவார்கள் என்பதற்கு ஆதாரமாக கண்கள் இரண்டும் என்ற தொடரை எழுதும் சகோதரர் அந்த இரண்டு தொடரும் முழமையாக ஆன்லைன் பிஜேவில் இருந்து தான் எடுக்கப்பட்டது என்பதை சொல்லியுள்ளார். அதற்க்கான ஆதாரத்தை கீழே உள்ள படத்தில் காணவும்,



(கண்கள் இரண்டும் தொடரின் ஆசிரியர் (?) இல்லை நாம் சும்மா விளையாட்டிற்கு தான் ஆன்லைன் பிஜே லிங்க கொடுத்துள்ளேன், அது ஆன்லைன் பிஜேவிலிருந்து எடுக்கப்படவில்லை என்று வாதாடினால், காப்பி கதையை இன்னும் விபரமாக விளக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடும்).

இப்போது சொல்லுங்கள், நேருக்கு நேர் (?) கட்டுரை போட்டவர் சொல்லுவது உண்மையா? அல்லது கண்கள் இரண்டும் கட்டுரையை வெளியிட்டவர் சொல்லுவது உண்மையா?

அடுத்து, இவ்வாறு ஆட்டையை போட்டுவிட்டோம் என்றால் ஏன் உங்களின் தளத்தில் அம்பலப்படுத்துகிறீர்கள்? எங்கள் நிர்வாகத்திற்கு சொல்லியிருக்க வேண்டுமல்லவா? என்று கேட்கிறார்கள். இட ஒதுக்கீடு குறித்தும், சிறை செல்லும் போராட்டம் குறித்தும் விமர்சனம் செய்யும் போது எங்களிடம் விளக்கம் கேட்டுவிட்டு போட்டு  இருக்கலாமல்லவா? நீங்கள் விமர்சனம் செய்யும் போது ஒரு நிலை, உங்களின் அயோக்கிய தனங்களை மற்றவர்கள் எடுத்து காட்டும் போது ஒரு நிலையா? பிஜே புத்தகம் போட்டு பணக்காரர் ஆகிவிட்டார் என்று விமர்சனம் செய்யும் போது எங்களிடம் விளக்கம் கேட்டீர்களா? அவர்களின் தளத்தில் கருத்திட்டாவது இது ஆன்லைன் பிஜேவில் இருந்து ஆட்டை போடப்பட்டது என்று சொல்லி இருக்க வேண்டுமாம். உங்களின் தளத்தில் வரும் சாதகமான கருத்துக்களை வைத்துவிட்டு, பாதகமான கருத்துக்களை நீக்கும் உங்களின் நேர்மை எங்களுக்கு தெரியாதா? இந்த கருத்து ஏன் காணாமல் போனது என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?

தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றி விமர்சனம் செய்யும் போது எங்கள் தளத்தில் வந்து ஏன் நீங்கள் கருத்திட்டு கேட்கவில்லை என்று முட்டாளத்தனமாக கேட்க மாட்டோம், இவ்வாறு அறிவாளித்தனமாக கேட்கும் நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றி விமர்சனம் செய்யும் போது ஏன் இவ்வாறு அணுகவில்லை? சமாளிக்க வேண்டும் என்பதற்காக இப்படி உளற வேண்டுமா?

அடுத்து, பிஜே எத்தனை நூல்கள் எழுதியுள்ளார் என்று இவர்கள் மனனம் செய்து வைக்க முடியாதாம். எவ்வளவு முட்டாளத்தனமான வாதம். வரிக்கு வரி காப்பி அடித்தவருக்கு எங்கே இருந்து காப்பி அடித்தோம் என்று தெரியாதா? பிஜேவின் புத்தகங்களின் பெயர்களை மனனம் செய்து வைத்திருந்தால் தான் சொல்ல முடியுமா? காப்பி  அடித்தவர் கப்புனு ஆன்லைன் பிஜே ஆக்கத்தின் லிங்கை எடுத்து போட்டுவிட்டார், விளக்கம் சொல்ல வந்தவர் இப்படி உளப்பி கேவலப்படனுமா?

அடுத்து, கட்டுரை போட்ட நிருபர் ஒரு மிகப்பெரிய காமெடி செய்துள்ளார். அதாவது, காப்பி அடித்ததை பற்றி அண்ணண்மார்கள் அங்கும் இங்கும் ஆட்டை போட்டு நடத்தும் திருட்டு நிருபர் தளத்தின் இமெயில் முகவரிக்கு ஆன்லைன் பிஜேவின் தளத்திலிருந்து நீங்கள் எங்களின் புத்தகத்தை காப்பி அடித்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டு இமெயில் வரவில்லையாம். முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் உள்ளது இவர்களின் இந்த காமெடி. ஆன்லைன் பிஜேவில் இருந்து இவர்களுக்கு மெயில் வரவில்லை என்று இவர்கள் கேட்பது இவர்கள் ஏதோ தமிழகத்தில் பார்க்கப்படும் இணையதளங்களில் முதல் இடத்தில் உள்ள இணையதளத்தை நடத்துவது போல எண்ணிக்கொண்டுள்ளார்கள். உங்களால் கடுமையாக எதிர்க்கப்படும் ஒருவரின் ஆய்வை அப்படியே ஆட்டை போட்டு, அதை நீங்கள் செய்த ஆய்வாக காட்டி ஏன் புகழ் தேடுகிறீர்கள் என்று கேட்டால், இவர்களுக்கு கடுதாசி போட வேண்டுமாம்.

இவர்கள் இவ்வாறு கேட்பதற்கு ஒப்பாக ஒரு உதாரணத்தை குறிப்பிடலாம், அட்ரஸ் இல்லாத ஒரு இணையதளம் பிபிசி தளத்தில் இருந்து ஒரு செய்தி எடுத்து, தனது செய்தி போல காட்டி வெளியிடுகிறது. அதை கண்ட பிபிசியின் ஆதரவாளர், இது பிபிசியில் இருந்து போடப்பட்ட ஆட்டை என்று விமர்சனம் செய்கிறார், இதை கண்ட அந்த அட்ரஸ் இல்லாத தளத்தினர், ஏன் இவ்வாறு விமர்சனம் செய்ய வேண்டும்? எங்களுக்கு பிபிசியிடம் இருந்து இதுபற்றி எந்த இமெயிலும் வரவில்லையே? என்று கேட்டால் எப்படி விழுந்து விழுந்து சிரிப்போமோ, அது போல தான், அட்ரஸ் இல்லாத இந்த புகழ் விரும்பி இணையதளத்திற்கு ஆன்லைன் பிஜேவில் இருந்து மெயில் வர வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது. இவ்வாறு இவர்கள் காப்பி அடித்தது ஆன்லைன் பிஜேவிற்க்கோ அல்லது பிஜே அவர்களுக்கோ  தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

தெரியாமல் திருடுவது வேறு, தெரிந்து திருடுவது வேறு. காப்பி அடித்தவர் தெரியாமல் எங்கேயோ உள்ள ஆக்கத்தை எடுத்து போட்டு, அது பிஜேவின் ஆக்கமாக இருந்தால் சரி என்று சொல்லாம். ஆனால், கட்டுரை போட்டவரே ஆன்லைன் பிஜேவில் இருந்து தான் எடுத்துள்ளார், இதை அவரே ஒத்துக்கொண்டுள்ளார். உண்மை இவ்வாறு இருக்க ஒன்றும் தெரியதவர்கள் போல் நடித்து கேவலப்படுகிறார்கள்.

தெரியாமல் தவறு செய்பவர்களிடம் சுட்டிக்காட்டலாம். தெரிந்து கொண்டு தவறு செய்பவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்ததான் வேண்டும், தவறையும் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதவர்கள் போல நடிப்பவர்களின் முகத்திரை கிழித்து தொங்க போட வேண்டும். காப்பியும் அடித்துவிட்டு, ஒன்றுமே தெரியாதது போல கட்டுரை போடுபவர்களின் முகத்திரை  கிழிக்கப் படவேண்டும்

அடுத்து இவர்கள் எப்படிப்பட்ட பொய்யையும் யாருக்கும் அஞ்சாமல் சொல்லுவார்கள் என்பதற்கு ஆதாரமாக ஒரு வரியை எழுதியுள்ளார்கள், அதாவது கண்கள் இரண்டும் என்ற தொடரில், தொடர் 26 மற்றும் 27 முழுமையாக ஆன்லைன் பிஜேவில் எடுக்கப்பட்டது தான் என்பதை நாம் ஆதாரத்துடன் சூட்டிக்காட்டியுள்ளோம், இதை கட்டுரையாளரும் ஒத்துக்கொண்டு ஆன்லைன் பிஜேவிற்கான லிங் அந்த இரு தொடரிலும் பல நெருக்கடிகளுக்கு பிறகு கொடுத்துள்ளார். இது பற்றி நேருக்கு நேர் பொய் சொல்லும் நிருபர்,  கண்கள் இரண்டும் தொடரில் ஆன்லைன் பிஜேவில் இருந்து ஒரு சில தகவல்கள் எடுக்கபட்டு இருந்ததை அறிந்து ஆன்லைன் பிஜே லிங்க் தந்துவிட்டோம் என்று புளுகுகிறார். கண்கள் இரண்டும் தொடரில் இரண்டு தொடர்களும் (26 மற்றும் 27) ஆன்லைன் பிஜே தளத்தில் அப்படியே காப்பி அடிக்கப்பட்டு இருப்பதை ஆதாரத்துடன் எடுத்துகாட்டி இருக்கும் போது, 'ஒரு சில தகவல்கள்' என்று பச்சை பொய் கூறுவது ஏன்? புகழ் போதை இப்படியா உங்களை தடுமாற செய்யும்.

அவர்களின் வரிகள் கீழே,

அடுத்து, பிஜே அவர்களின் கருத்துக்களும் ஆய்வுகளும் பிற தளத்தில் வந்தால் அதன் நன்மை பிஜேவிற்கு கிடைக்கும் என்று ஏன் நல்லென்ணம் கொள்ளககூடாது என்கிறார். நல்ல எண்ணம் என்ன, ஒருவர் ஒரு நன்மையான காரியத்தை ஆரம்பித்து வைத்து, அதை செய்பவர்களின் நன்மைகளில் செய்பவருக்கு எந்த குறையுமின்றி, அதை ஆரம்பித்து வைத்தவருக்கு கிடைக்கும் என்பதை நபிமொழி தெளிவாக எடுத்துரைக்கிறது. இவர்கள் ஆன்லைன் பிஜேவில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டாலும் குறிப்பிடாவிட்டாலும், பிஜேவிற்கு நன்மை கிடைக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. அதே நேரத்தில், யாரோ  செய்த ஆய்வை தனது ஆய்வாக காட்டி புகழ் தேடும் நிருபர் கம்பெனிக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்பதை கீழ்காணும் திருக்குர்ஆனின் போதனை எடுத்துக்காட்டுகிறது. நாங்கள் உங்களை விமர்சனம் செய்தாலும், உங்களுக்கு திருக்குர்ஆனின் போதனையை எடுத்துக்காட்டி தண்டனையில் இருந்து காப்பாற்றவே எண்ணுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது. 

திருக்குர்ஆன் 3:188

முறையாக சுட்டிக்காட்டாமல், விளக்கம் கேட்காமல் எங்களை இந்த அடி அடித்துவிட்டீர்களே என்று புலம்புகிறார்கள். ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் முன் நீங்கள் அதை செய்து காட்ட வேண்டும், தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்திற்கு குளிர் நேரத்தில் முதியவர்களை ஏன் அழைத்து செல்ல வேண்டும் என்று அட்ரஸ் இல்லாதவன் எடுத்த வாந்தியில் குளிக்கும் போது, முறையாக சுட்டிக்காட்டல், விளக்கம் கேட்டல், என்பதை பற்றி யோசித்து இருக்க வேண்டும்.

சுட்டிக்காட்டினால் ஆன்லைன் பிஜே என்று போட்டு இருப்போமே என்று இந்த நிருபர்கள் சொல்லுவது பச்சை பொய்யே ஆகும். நமது தளத்தில் இவர்களின் காப்பி பேஸ்ட் அம்பலப்படுத்தப்பட்ட பின், இந்த விஷயத்தை ஒரு சகோதரர் அவர்களின் தளத்தில் கருத்தாக பதிகிறார். இவ்வாறு பதிந்தவுடன், நீங்கள் யார்? உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள், இல்லாவிடில் உங்களின் கருத்தை நீக்கி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். (இதை நாம் நமது முந்தய பதிவில் சுட்டிக்காட்டினோம், நாம் சுட்டிக்காட்டிய பின் கீழே எடுத்துக்காட்டப்பட்டுள்ள இரு கருத்துகளையும் நீக்கி தங்களை தாங்களே கேவலப்படுத்திக்கொண்டார்கள்). இப்படி பொய்க்கு மேல் பொய், பித்தலாட்டத்திற்கு மேல் பித்தலாட்டம் என்று தொடர்கிறது நிருபர்களின் அயோக்கியத்தனம். பொய்கள் இன்னும் தோலூரித்து காட்டப்பட உள்ளது, இதற்கிடையில் நேருக்கு நேர் (?) கட்டுரை போட்ட அதே நபர் பொய் சொல்லுவது குறித்து ஹதீஸ்களின் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார் என்பது அதிசயமான சம்பவம்.
காப்பி பேஸ்ட குறித்து அவர்கள் தளத்தில் ஒரு சகோதரர் பதிந்த கருத்து, இதை நாம் சுட்டிக்காட்டிய பின் காணாமல் போய்விட்டது. 
நெறியாளர் அறிமுகம் செய்ய சொல்லும் கருத்து, இந்த கருத்தும் நாம் சுட்டிக்காட்டிய பிறகு நீக்கீவிட்டார்கள் அற்புத நிருபர்கள்
எல்லாரும் நம்மை தற்போது உற்று நோக்கி கொண்டுள்ளார்களே, இவ்வாறு அயோக்கியத்தனம் செய்தால், நம்மை நார அடிப்பார்களே என்ற வெட்க உணர்வு கூட இவர்களுக்கு இல்லை.

இவ்வாறு நெறிமுறை போட்டவர்கள் அதை எல்லாருக்கும் அமல்படுத்த வேண்டும் அல்லவா? தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகள் தவறானவை (காப்பி அடிக்கப்படுவை மட்டும் சரியானவை), என்று ஒரு வீடியோவிற்க்கான லிங்கை 'அதிரை பாமரன்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். இவ்வாறு  தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக கருத்திட்டவரிடம் அறிமுகமும் கேட்கவில்லை, முகவரியும்  கேட்கவில்லை. எப்படி எல்லாம் கேவலப்படுகிறார்கள். இவர்களுக்கும் நடுநிலைக்கும் சற்றும் சம்பந்தம் இல்லை என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்றால் எங்களின் நெறிமுறையெல்லாம் குப்பை தொட்டிக்கு போய்விடும் என்று நிருபிக்கும் திருட்டு நிருபர்கள்

காப்பி குறித்து அந்த நிருபர் எழுதிய உளறல்கள் அவர்களின் முகத்திரையை அவர்களே கிழிப்பதால், அவர்கள் இது குறித்து எழுதிய அந்த பகுதி கீழே உள்ளது, வாசகர்கள் சிரிக்காமல் படிக்கவும்.....

எத்தனை பொய்கள், எத்தனை முரண்பாடுகள், எத்தனை காமெடிகள்?
ஒரு விஷயத்தை தெளிவாக இங்கு சொல்லியாக வேண்டும். சம்பந்தப்பட்ட ஆக்கத்திலேயே பிஜே நபி தோழர்களை திட்டினார், ஸஹீஹான ஹதீஸ்கள் சிலவற்றை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று மறுக்கிறார், சூனியம் கற்பனை என்கிறார், சூனியத்தை நம்புபவர்களின் பின்னால் நின்று தொழக்கூடாது என்கிறார், நபிதோழர்கள் இணைவைத்தார்கள் என்கிறார், ஒரு யூதர் வந்து நபி (ஸல்) அவர்களை திருத்தினார் என்கிறார் (இவை எல்லாவற்றை பற்றியும் விவாதிக்க திருட்டு நிருபர் கும்பலுக்கு அறிவு உள்ளது என்றால் இவர்களின் போலித்தனமான குற்றச்சாட்டையும், இவர்களின் சூனியக் கொள்கையும் விவாதிக்க அதிரை ததஜ தயாராக உள்ளது. போகிற போக்கில் இப்படி குற்றச்சாட்டுகளை அள்ளிவிட்டு, நான் இதற்கு மேல் விளக்கம் தர மாட்டேன் என்ற பேடிகளுக்கு எப்படி பதில் எழுதினால் விளங்குமோ அவ்வாறு பதில் எழுதப்படும்). மொத்தத்தில் பிஜே ஒரு பெரிய வழிகேடர் என்கிறார் அந்த சூனிய நிருபர். இப்படி சொல்லிக்கொண்டே, பிஜேவின் புத்தகத்தில் இருந்து திருடுவதற்கு வியாக்கியானமும் கொடுக்கிறார். உங்களின் கொள்கை தான் என்ன? பிஜே வழிகேடர் என்றால் பிஜேவின் ஆய்வை ஏன் திருடுகிறீர்கள்?

இந்த மானம் கெட்ட ஜென்மங்களுக்கு புரியும்படி ஒரு உதாரணம் சொன்னால் புரியலாம். ஒருவர் ஒரு பொருளை இது சுவையான பிரியாணி என்கிறார், இல்லை இல்லை இது மலம் என்கிறார் மற்றொருவர். சிறிது நேரத்தில், மலம் என்று சொன்ன அதே நபர், அதை அள்ளி பிளேட் பிளேடாக உண்ணுகிறார். மலம் என்று சொல்லிவிட்டு, அதையே உண்ணுபவரை பிரியானி திண்ணுகிறார் என்று சொல்லுவோமா? அல்லது மலம் திண்ணுகிறார் என்று சொல்லுவோமா? பிஜேவின் எழுத்துக்களும் பேச்சுகளும் வழிகேடு என்று சொல்லிக்கொண்டு, அவரின் ஆய்வை திருடி புகழ் தேடுவது பிரியாணியை மலம் என்று சொல்லிவிட்டு, அதையே (மலத்தை) உண்ணுவதற்கு சமம். இதை தான் புகழ் போதையில் திருடும் நிருபர்கள் செய்துள்ளார்கள். இந்த நிருபர்களில் கண் தானம், உறுப்பு தானம் பற்றி கூட ஒத்த கொள்கை கிடையாது, அங்கு வைக்கப்படும் விஷயத்தில் முரண்பட்டவர்களே அதிகம், இருப்பின் புகழ் போதைக்காக இவர்களுக்கு உடன்பாடு இல்லாத விஷயத்தை சொன்னாலும் அதை எதிர்க்க மாட்டார்கள்.

குறிப்பு:

நேருக்கு நேராக கட்டுரை போட்டு, அதில் லாரி லாரியாக பொய்களை அள்ள வீசிவிட்டு, இது பற்றி அதிரை ததஜ என்ன பதில் சொன்னாலும், நாங்கள் பதில் தரமாட்டோம் என்று சொன்ன திருடும் நிருபர்கள், எமது பதிலடியின் முதல் பாகம் வெளிவந்தவுடன் பதறி போய், 'தவ்ஹீத்கான்' (தவ்ஹீதை கேவலப்படுத்தி) என்ற பெயரில் வசைபாட ஆரம்பித்துள்ளார்கள். பதிலே சொல்ல மாட்டோம் என்றவர்கள், பதில் சொன்னால் கூட அதை ஏற்றுக்கொள்ளலாம், பதிலே சொல்ல மாட்டோம் என்றவர்கள், அவர்களிடம் பதில் இல்லை என்பதை நிரூபிக்க, வசைபாடலில் இறங்கியுள்ளார்கள்.  நமது இந்த பதிலடி இவர்களை இவ்வாறு அந்தர் பெல்டி அடிக்க வைத்துள்ளது. இன்னும் பல பாகங்கள் வர உள்ளது, உங்களின் முகத்திரை இன்னும் கிழிய உள்ளது. இன்ஷா அல்லாஹ். 

பதில் தர மாட்டோம் என்று வசைபாடும் முரண்பாட்டின் மொத்த உருவங்கள்.....
முரண்பாட்டிலும் பொய்களிலும் காப்பி அடிப்பதிலும் எங்களை மிஞ்ச யாருமுண்டே! - திருடும் நிருபர்கள்.....
இன்ஷா அல்லாஹ் தொடரும்.....

தொடர்புடைய ஆக்கங்கள்:

Monday, March 17, 2014

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு - திருடும் நிருபர்களின் உளறல்களும் உண்மைகளும்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வீரியமிக்க போராட்டங்களின் மூலம் சமுதாயத்திற்கு தேவையான கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து, அதை பெற்று தரும் வரை இடைவிடாது போராடும் அமைப்பு. தவ்ஹீத் ஜமாஅத்தின் நேர்மையான செயல்பாடுகளால், தவ்ஹீத் ஜமாஅத்தை அழிக்க நினைப்பவர்கள் கூட தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். 

தவ்ஹீத் ஜமாஅத் என்பது யாருக்கும் விலை போகாத அமைப்பு. இதை அதன் எதிரிகள் கூட விளங்கி வைத்துள்ளார்கள். தவ்ஹீத் ஜமாஅத் விலைபோகாத காரணத்தினால் தான், இட ஒதுக்கீட்டில் துரோகம் செய்த அதிமுக அரசை கண்டித்து ஒரு பெரும் போராட்டத்தை நடத்தியது (அதிமுக கூட்டணயில் இருந்த மமக, தமுமுக அதிமுக அரசு துரோகம் செய்யவில்லை என்று சப்பை கட்டுகட்டி கேவலப்பட்டு போனது). கலைஞர் இட ஒதுக்கீடு வழங்கிய பின், திமுகவை ஆதரித்த தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டில் துரோகம் நடந்த போது, திமுக அரசிற்கு எதிராக போராட்டத்தை நடத்தியது (அப்போது திமுக கூட்டணியில் இருந்த தமுமுக, ரோஸ்டர் என்ற பெயரில் துரோகத்திற்கு சப்பை கட்டுகட்டி, பின்னர் கேவலப்பட்டு போனது). தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் கொடுக்கும் ஆதரவு தேர்தலுக்கு மட்டும் தான், தேர்தலில் ஆதரவு கொடுத்துவிட்டால் அது அடிமை சாசனம் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் கட்சி, சமுதாயத்திற்கு துரோகம் செய்தால், அதற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் பொங்கி எழும். 

தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம்களுக்கு நடைமுறையிலுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கையை வைத்து, அதற்காக தமிழகத்தின் நான்கு நகரங்களில் சிறை செல்லும் போராட்டத்தை நடத்தியது. இதில் திரண்ட கூட்டம் அரசாங்கத்தை கதி கலங்க வைத்தது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தந்தால் அதிமுக அரசிற்கு ஆதரவு என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. இந்த நிலையில் , கமிஷன் அமைத்து அதிகரித்து தருவது தான் பாதுகாப்பானது என்று சட்ட நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில், கமிஷன் அமைத்து அதிகரித்து தாருங்கள் என்ற கோரிக்கை தவ்ஹீத் ஜமாஅத் அரசிற்கு முன்வைத்தது, அதை அதிமுக அரசு ஏற்றுக்கொண்டு கமிஷன் அமைத்துள்ளது (இது குறித்து முழுமையாக இங்கே விளக்கப்பட்டுள்ளது). கமிஷன் இல்லாமல் இட ஒதுக்கீட்டை அதிகரித்தால் நீதிமன்றத்தில் தடை வாங்கும் சாத்தியமும் உள்ளது என்பது தெரிய வந்ததால் இவ்வாறு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைத்தது

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து நடுநிலைவாதிகள் என்ற பெயரில் இருக்கும் சில நடிகர்கள், உப்பு சப்பில்லாத கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அத்தனை விமர்சனங்களுக்கும் இங்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. 

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தகம் மற்றும் ஆக்கங்களில் இருந்து திருடி (காப்பி பேஸ்ட் செய்து). தங்களின் ஆக்கம் போல காட்டி புகழ் தேட திருடும் நிருபர்கள் சில விமர்சனங்களை செய்துள்ளார்கள். நடுநிலை வேடத்தில் இவர்கள் தமுமுகவின் ஏஜண்டுகளாக இவர்கள் உள்ளார்கள் என்பதை நாம் முன்னரே சொல்லியிருந்தோம். இதற்கு ஆதாரமாக இவர்களின் சமீபத்தில் நடந்த சம்பவம் சான்றாக உள்ளது. தமுமுகவின் ஜால்ரா எம்எல்ஏ ஒருவர் முத்துப்பேட்டைக்கு வந்தபோது, இட ஒதுக்கீடு குறித்து உளறிய காப்பி பேஸ்ட் நிருபர், பேட்டி எடுக்கிறேன் என்று சென்று தாங்கள் யார் என்று காட்டினார்கள்.

தமுமுகவின் அரசியல் கட்சியான ம.ம கட்சி, எதை மக்களிடம் சொல்லி அரசியல் கட்சி ஆரம்பித்தது, கடந்த தேர்தலில் அம்மாவை எப்படி புகழ்ந்து, தற்போது அய்யாவை எப்படி புகழ்கிறது என்பது குறித்தோ, தமுமுக சமுதாயத்திற்கு செய்த துரோகங்கள் குறித்தோ அல்லது முஸ்லிம்களை அழித்த விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் ம.ம கட்சி குறித்தோ எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்காத திருடும் நிருபர்கள். தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பொய்யான பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள். 

தமுமுகவை நாங்களும் எதிர்க்கிறோம் என்று காட்ட தமுமுக குறித்து புகழ்ந்து நாலு வரிகள் எழுதிவிட்டு, இவர்களை நடுநிலைவாதிகள் என்று காட்ட முற்பட்டு அதை செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டுள்ளார்கள். தமுமுகவின் தடுமாற்றங்கள் குறித்து இவர்கள் எதிர்ப்பது உண்மையென்றால், மோடியின் சகோதரியை அடுத்த பிரதமர் என்று சொன்ன தமுமுகவை எதிர்த்தார்களா? பிஜேபியின் இல. கணேசனுடன் கைபிடித்துக் கொண்டு தமுமுக ஜவாஹிருல்லாஹ் போராட்டம் நடத்திய போது எங்கே போனார்கள்?

நான் (ஜவாஹிருல்லாஹ்) பிஜேபிக்காரனுடன் கைகோர்த்து நின்றாலும் எந்த நடுநிலைவாதியும் என்னை கேள்வி கேட்க முடியாது (மாட்டார்கள்), விமர்சனம் செய்ய முடியாது (மாட்டார்கள்). பிஜேபிகாரனுடன் கைகோர்க்கும் ம.ம கட்சியின் மாமாவிற்கு முஸ்லிம்களின் ஓட்டு தேவையா? 
இராமேஸ்வரத்தை புனித தளமாக மாற்றி அங்கு பள்ளிவாசல் கூட கட்ட முடியாமல், பாங்கு ஒளி கூட ஒளிக்க முடியாமல் செய்ய வேண்டும் (என்பது கூட தெரியாமல்) கோரிக்கை வைத்த ஜவாஹிருல்லாவை எதிர்த்து எழுதினார்களா? பிஜேபி வானதி சீனிவாசனோடு பக்கத்தில் நின்று கேக் வேட்டிய தமுமுகவின் ஹாஜா கனியை எதிர்த்து எழுதியது உண்டா?

தமுமுகவின் எம்எல்ஏ அஸ்லம் பாஷா அவர்கள் பூஜை புணஸ்காரங்களுடன் ரிப்பன் வெட்டி திறப்பு விழா (இது வேறு பூஜை) செய்ததை இவர்கள் கண்டித்தார்களா?

அரசியல் சாக்கடையில் இணைவைப்பில் திளைக்கும் தமுமுக - மமகவினர்!
அதிரையின் முஹம்மது குட்டி ஆலிம்  பாவம், அவர் தமுமுகவில் சேர்ந்து இருந்தால், திருடும் நிருபர்கள் 'பூமி பூஜை செய்கிறார்' என்று விமர்சனம் செய்து இருக்க மாட்டார்கள்
மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி இஸ்லாத்தின் சட்டத்தை ஒழிக்க நினைக்கும் ஜவாஹிருல்லாவை இவர்கள் கண்டித்தது உண்டா? இதுவெல்லாம் இவர்கள் தமுமுகவின் ஏஜேண்ட்டுகள் என்பதற்கு ஆதாரம்.(இப்போதும் கூட கருணாநிதி தூக்கு தண்டனையை ஒழிப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார்).


அதிரையின் முஹம்மது குட்டி அவர்கள் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட போது, பூமி பூஜை செய்யும் முஹம்மது குட்டி என்று கட்டுரை போட்ட இவர்கள், தமுமுகவின் மூத்த தலைவரும் அம்மா ஜால்ரா புகழுமான ஜவாஹிருல்லாஹ் சந்தனம் தடவி அடிக்கல் நாட்டு விழா செய்த போது, பூமி பூஜை செய்யும் ஜவாஹிருல்லாஹ் என்று ஏன் எழுதவில்லை? இவர்கள் இதை செய்யாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று முஹம்மது குட்டியை தாக்கி எழுதினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். இரண்டு, இவர்கள் தமுமுகவின் ஏஜேண்ட்டுகள். கொள்கை அடிப்படையில் எதிர்க்க கூடியவர்களாக இருந்ததால், இவ்வாறு தவறு செய்யும் அனைவரையும் எதிர்க்க வேண்டும். மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பெண் குடம் என்ற பலமொழிக்கு ஒப்பாக உள்ளது இவர்களின் வேடம். இவர்களுக்கு கொள்கை கிடையாது என்பதற்கு இது ஒரு சான்று.

திருட்டு நிருபர் பதிப்பகம் என்ற பெயரில் உளறிய முதல் உளறல், 7 சதவீதமாக இட ஒதுக்கீட்டை உயர்த்தினால் தான் ஆதரவு என்று சொன்ன ததஜ, எப்படி கமிஷன் போட்டவுடன் அதிமுகவை ஆதரிக்கலாம் என்பதாகும். இதற்கான பதில் எளிமையானது கமிஷன் அமைத்து ஆய்வு செய்து, இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவது தான் பாதுகாப்பானது என்பதல் தவ்ஹீத் ஜமாஅத் இதையே கடைசி நேரத்தில் கோரிக்கையாக வைத்தது. இது பற்றி இங்கு விபரமாக விளக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டிற்காக தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்திய போது, காரைக்கால் சில்லரை ஒருவனின் வாந்தியை தங்களின் மேலே ஊற்றி, என்னா மனம் என்றும், தவ்ஹீத் ஜமாஅத் குளிர் காலத்தில் முதியவர்களை போராட்டத்திற்கு அழைத்து செல்லாமா? என்று உளரிய இந்த கயவர்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி என்ன அக்கரை? இட ஒதுக்கீட்டினால் எந்த பலனும் இல்லை என்று பச்சை பொய்யை சொன்ன கயவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன?

அடுத்து, திருட்டு நிருபர் பதிப்பகம் எடுத்து வைக்கும் வாதம் என்னவெனில், தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பவர்கள் இனி வரும் காலங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு வெளியேறப்போகிறர்களாம். இவ்வாறு திருட்டு நிருபர் கும்பலுக்கு வஹி வந்தாம். தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால் தூக்கி வீசப்படுவார்கள் என்பது உறுதி. ஊழல் பேர்வழிகள், பெண் பித்தர்கள் என பலர் தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு விரட்டப்பட்டுள்ளார்கள். பெண் பித்தர்களை வைத்து தர்பியா (நல்லலொழுக்க பயிற்சி?) நடத்தி வாங்கி கட்டியது யார்? கேடுகெட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தில் இடமில்லை. தவ்ஹீத் ஜமாஅத் தவறு செய்தால், அதை விமர்சிக்கலாம், தவறு செய்வதாக அவர்கள் எண்ணினால் கூட அதை விமர்சிக்கலாம். அதற்கு அழகிய முறையில் விளக்கம் தருவோம். தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது குரோதம் கொண்ட இந்த கும்பல் பொய்யான விமர்சனங்களுடன், தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் வெளியேறுவார்கள் என்று தங்களின் குரோதத்தை வெளிப்படுத்துகிறது. ஏன் இப்படிப்பட்ட குரோதம்? தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் யரோனும் பெண் பித்தர்கள் என தூக்கி விசப்பட்டால், அவர்களை வைத்து தர்பியா நடத்தும் பிளான் எதுவும் உண்டா? ஏன் இப்படி உளறி கேவலப்படுகிறீர்கள். இவ்வாறு தங்களின் வெறியை தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது காட்ட காரணம், இவர்கள் இட ஒதுக்கீடு குறித்து உளரி வாங்கி கட்டியதற்கும், பிஜேவின் நூல்களில் இருந்து திருடி வாங்கி கட்டியதற்கும் வாய்திறக்க முடியாமல் மவுனிகளாக போன இவர்கள், தங்களின் அறிப்பை இவ்வாறு காட்டுகிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வோரு நேரத்திலும் அழிந்துவிடும் என்று பலர் மனப்பால் குடிக்கிறார்கள். ஆனால், தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வின் அருளால் கணிக்க முடியாத அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.

அடுத்து, தமிழகத்தின் தவ்ஹீத் எழுச்சியை தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு பாதித்துவிடும் என்று இந்த கள்ள தவ்ஹீத் கும்பல் அஞ்சுகிறதாம். இன்றைக்கு தவ்ஹீத் கொள்கையில் அடி எடுத்து வைக்கும் ஒரு பாமரனுக்கு கூட தெரிந்த விஷயம், ஹஜ்க்கு சென்றவர்களின் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று எழுதுவது வழிகேடு என்று, இது கூட தெரியாத உங்களுக்கு தவ்ஹீத் எழுச்சியை பற்றி என்ன அக்கரை? மேடைகளில் பலகீனமான ஹதீஸ்களை அள்ளிவிடும் உங்களுக்கு தவ்ஹீத் எழுச்சியை பற்றி என்ன இவ்வளவு பரிவு? முஹம்மது குட்டியை எதிர்க்கும் நீங்கள் அதிரையில் தரீக்கா கொள்கையில் உள்ள கவிஞர் தாஹாவை வானளாவ புகழ்ந்து எழுதியது யாருக்கும் தெரியாதா? கவிஞர் எது செய்தாலும் உங்களுக்கு அது தவ்ஹீதோ? நீங்களே தவ்ஹீத்துக்கு எதிராக இருந்து கொண்டு தவ்ஹீத் எழுச்சியை பற்றி ஏன் பேசுகிறீர்கள்? தவ்ஹீத் வேடத்தில் தவ்ஹீதை அழிக்க உங்களின் திட்டமா? கன்னிபீவி தர்ஹாவிற்கு போஸ்ட் அடிக்கும் கும்பலுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் தவ்ஹீதை பற்றி பேச தகுதியற்றவர்கள். தவ்ஹீத் கொள்கையை அல்லாஹ் பாதுகாப்பான். அது வளர்ந்து கொண்டு தான் இருக்கும். நீங்கள் போய் எதாவது கவிஞருக்கு ஜால்ரா தட்டும் வேலையை பாருங்க.


தவ்ஹீதை யாருக்கும் அஞ்சாமல், தனது எழுத்து, பேச்சு, தியாகம், பிரயாணம் என கஷ்டத்தை பாராமல் உழைத்த சகோதரர் பிஜே அவர்களை புத்தகம் போட்டு பணக்காரர் லிஸ்டில் இடம்பெற்றுவிட்டார் என்று அவதூறு சொல்லி அதை நிரூபிக்கவும் வழியில்லாமல் தவறையும் ஒப்பு கொள்ளாமல் இருக்கும் தவ்ஹீத் நடிகர்களை அல்லாஹ்விடமே விட்டுவிடுகிறோம். இது போன்ற அவதூறுகளை பரப்பும் உங்களுக்கு அல்லாஹ் தண்டனை தரட்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.

அடுத்து, தவ்ஹீத்கான் என்ற பெயரில் ஒரு உளறல் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள் திருட்டு நிருபர்கள் பதிப்பகத்தினர். இவர்கள் தவ்ஹீதை கிண்டல் செய்ய தான் இந்த பெயரை வைத்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை. தவ்ஹீத் கான் என்ற பெயர் யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. தவ்ஹீத் வேடத்தில் இருக்கும் இந்த கும்பல் தவ்ஹீதை கிண்டல் செய்கிறார்கள். நாங்கள் வைத்த வாதத்திற்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதற்க்காக, தவ்ஹீதையே கிண்டல் செய்யும் அளவுக்கு சென்றுள்ளார்கள். தவ்ஹீதை கிண்டல் அடித்தவர்கள் தடம் தெரியாமல் போய் உள்ளார்கள், அந்த லிஸ்டில் இவர்களும் சேர்ந்துள்ளார்கள். 

இவர்கள் காப்பி அடித்த விஷயத்தை அவர்களின் இணையதளத்தில் ஒரு சகோதரர் கேள்வியாக முன்வைக்கிறார். அதற்கு இவர்கள் பதில் சொல்ல முடியாமல், நீங்கள் யார்? உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள், இல்லாவிடில் உங்களின் கேள்விகள் முன் அறிவிப்பு இன்றி காணாமல் போகும் என்று தங்களின் கையலாகாததனத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஒருவர் உங்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டியது தானே, அறிமுகம் செய்தால் தான் பதில் என்பது என்ன விதி? இந்த விதியை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக உங்கள் தளத்தில் எழுதுபவர்களிடம் கேட்டீர்களா? பிஜே அதிமுகவிடம் பணம் வாங்கி கொண்டு ஆதரிக்கிறார் என்று எழுதுபவர்களிடம் ஏன் அறிமுகம் கேட்கவில்லை. பதில் இல்லை என்று இப்படி உளரி மாட்டிக்கொள்கிறீர்கள். இப்படி கேட்ட நீங்கள் தவ்ஹீத்கான் என்பது யார்? ஒரு விஷயத்தை நீங்கள் பின்பற்றாமல் மற்றவர்களை பின்பற்ற சொல்லுவது என்ன வகை வியாதி?
 இவர்களின் திருட்டை அம்பலபபடுத்தினால், அறிமுகம் என்ற பெயரில் மிரட்டல்...! (
குறிப்பு: நாம் இதை சூட்டிக்காட்டிய பின்னர் நிருபர் கும்பல் இதை அவர்கள் தளத்தில் இருந்து நீக்கிவிட்டது)
தவ்ஹீத் ஜமாஅத்தையும் பிஜேவையும் திட்டும் போது அறிமுகம் எல்லாம் தேவையில்லை.....! (குறிப்பு: நாம் இதை சூட்டிக்காட்டிய பின்னர் நிருபர் கும்பல் இதை அவர்கள் தளத்தில் இருந்து நீக்கிவிட்டது)
ரசிக குஞ்சு என்றெல்லாம் தங்களின் அரிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் புகழ் போதையில் அலையும் திருடும் நிருபர்கள். பிஜே மீது இவர்கள் எந்த அளவுக்கு வெறி பிடித்து போய் உள்ளார்கள் என்பதற்கு இவர்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளே சான்று. 'ஸ்டார் பேச்சாளர்', 'அண்ணண்', 'தொண்டரடிப் பொடியாழ்வார்' என்று தங்களின் புகழ் கட்டிடம் இடிந்து போனதால் உளரியுள்ளார்கள்.அண்ணனின் கட்டுரை எப்படி கடந்த வாரம் உங்களுக்கு இனித்தது? பிஜே பித்தலாட்டம் செய்து விட்டார் என்றால், அவரின் நூல்களை திருடும் போது இதே கொள்கை வேண்டும் அல்லவா? இவர்களுக்கு புகழ் கிடைக்கிறது என்றால் பிஜேவின் மலம் கூட மணக்கும் .

இந்த அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைய காரணம் என்ன? இவர்கள் தங்களை பெரிய அறிஞர்களாக காட்டி, அங்கும் இங்கும் தகவல்களை காப்பி அடித்து பக்கத்தை நிரப்பி வருகிறார்கள், இது நமக்கு புதிதாக தெறிந்த விஷயமல்ல. இவர்கள் இதை பல வருடங்களாக செய்து கொண்டுள்ளார்கள், இவர்களை நாம் சீண்டவில்லை, அதற்கான தேவையும் வரவில்லை. சமீபத்தில், தவ்ஹீத் ஜமாஅத்தின் மீதும் சகோதரர் பிஜே மீதும் அவதூறுகளை அள்ளி விசி, இவர்களின் முகத்திரையை கிழித்து தொங்க போட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். அறிஞர்கள் பட்டலாம் என்று பில்டப் கொடுத்த இவர்கள், எங்களின் பதிலடிகளுக்கு ஒரு வார்த்தை கூட பதிலளிக்க முடியாமல் கேவலப்பட்டு போனார்கள். யாரோ எழுதியதை வைத்து புகழ் தேடி வந்த இவர்களின் புகழ் போதை மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போனது. தவ்ஹீத் என்ற இவர்களின் வேடத்தையும் நாம் அடையாளம் காட்டினோம். இவ்வளவு காலமாக இவர்கள் கொடுத்த பில்டப் எல்லாம் உடைந்து போனது. நாம் கொடுத்த அடி, இவர்களின் கட்டுரைகளிலும் அடிவாங்கியவர்கள் கருத்திலும் புலம்புவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். நமது தொழில் ரகசியத்தை வெளியே கொண்டு வந்துவிட்டார்களே, இனி எப்படி பக்கத்தை நிரப்புவது, எப்படி புகழ் தேடி அழைவது என்று பித்து பிடித்து அலைகிறார்கள். இன்னும் சில பேரிடிகள் வர இருக்கிறது, இன்ஷா அல்லாஹ். இவர்கள் அவதூறுகளை சொல்ல சொல்ல நாம் உண்மையை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்.

திருடும் நிருபர்கள் தவ்ஹீத்கான் என்ற பெயரில் எழுதிய கட்டுரையில் உளரியதில் ஒன்று, தவ்ஹீத் ஜமாஅத்திற்கு முதல்வரிடம் இருந்து வர வேண்டிய அழைப்பு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையால் நின்னு போச்சு என்பதாகும். இவ்வாறு ஒரு விஷயத்தை சொல்லுவதாக இருந்தால், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அழைப்பு வரவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்க வேண்டும், ஆதாரம் இல்லாமல் சொல்லப்படுபவை பொய் என்று இந்த கயவர்கள் உணர வேண்டும். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு முதல்வரை வந்து சந்திக்க சொல்லி போராட்டம் முடிந்த பின்னர் பல முறை அழைப்பு வந்தது, இதை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கவில்லை, எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள், பின்னர் சந்திக்கலாம் என்று பதில் தந்தது. இது தான் உண்மை. தவ்ஹீத் ஜமாஅத்தினால் இதை நிரூபிக்க முடியும், பொய் நிருபர்கள் இதற்கு தயாரா? ஆதாரமே இல்லாமல் குற்றம் சுமத்துவதால், அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நாங்கள் சொல்லுவது உண்மை என்று சொல்ல பொய் நிருபர்கள் தயாரா? தவ்ஹீத் ஜமாஅத்திற்கு முதல்வரை சந்திக்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை, கேட்டவுடன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தான் அப்பாய்மென்ட் கிடைக்கும் (ஜெயலலிதா மற்றும் கலைஞரிடம்). ஒரு முறை கலைஞர் அவர்கள் கொடுத்த நேரத்தில் சந்திக்கவில்லை என்பதற்காக, காத்துயிருக்காமல் திரும்பிய திராணியள்ள இயக்கம் தவ்ஹீத் ஜமாஅத் (பின்னர் ஸ்டாலினே தொடர்பு கொண்டு, மன்னிப்பு கேட்டு, மீண்டும் வர சொல்லி கேட்டுக்கொண்டார்). தவ்ஹீத் ஜமாஅத்திற்கு முதல்வரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், சமுதாயத்திற்கு பலன்கள் கிடைத்தால் அதை தான் தவ்ஹீத் ஜமாஅத் விரும்பும். விஸ்வரூப பிரச்சினையில் 24 இயக்கங்கள், அரசு, தவ்ஹீத் ஜமாஅத், கமல்ஹாசன் என நான்கு பிரிவினர் இருந்த போதும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீட்க சொல்லிய நேரத்தில், தவ்ஹீத் ஜமாஅத் தனியாக இருக்காமல், 24 அமைப்பினரிடம் அந்த பொறுப்பை கொடுத்து, தன்னை முன்னிலைப்படுத்தாமல் நடந்ததை, தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான அமைப்புகள் கூட பாராட்டினார்கள்.

அடுத்தாக, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு யார் கடிதம் எழுதினார்கள் என்பதை காட்டி, ஒன்றும் நடக்கவில்லை என்று காட்ட முற்படுகிறார்கள். பார்தீர்களா முதல்வர் கடிதம் எழுதவில்லை யாரோ கடிதம் எழுதியுள்ளார்கள் என்று கொக்கரிக்கிறார்கள். இவர்களுக்கு எந்த அடிப்படை அறிவும் இல்லை என்பதற்கு இந்த கேள்வி சான்று. எப்படியாவது இவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று காட்ட வேண்டும் என்ற இவர்களின் இந்த வெறி இப்படி உளற செய்கிறது. முதல்வர் என்பவர் எல்லா வேலைகளையும் செய்ய மாட்டார். முதல்வரின் கீழ் பல்வேறு துறைகளும் அதற்குகென்று பொருப்பாளர்களும் இருப்பார்கள். ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்கிற போது, அந்த துறையினருக்கு முதல்வர் உத்திவிடுவர், அதன்படி அந்த வேலை உத்திரவிடப்பட்ட துறையினர் செய்வார்கள். இது தான் இந்த இட ஒதுக்கீடு விஷயத்திலும் நடந்துள்ளது. தமிழக அரசின் உத்திரவின் பெயரில் தான் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் முதன்மைச் செயலர் கே.அருள்மொழி என்பவர் கடிதம் எழுதியுள்ளார் என்பது உள்ளங்கை நொல்லிக்கனி. இதற்கு ஆதாரம் வேறு எங்கேயும் தேட தேவையில்லை காப்பி பேஸ்ட் நிருபர்கள் காட்டியுள்ள பத்திரிக்கை செய்தியின் முதல் பத்தியில் 'தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது' என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது (கீழே கோடிட்டு காட்டப்பட்டுள்ள வரிகளை பாருங்கள்). என்ன செய்தி வந்துள்ளது என்று கூட சரியாக படிக்காமல், அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார்கள். யாரும் உத்தரவு இடாமல், கே. அருள்மொழி கடிதம் எழுத அவருக்கு என்ன தேவை வந்தது? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள். மேலும் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் முதல்வர் பொதுக்கூட்டங்களில் எல்லாம் இந்த இடஒதுக்கீடு பற்றி எடுத்து சொல்லி ஆணையம் அமைத்து இருக்கிறேன் என்று சொல்லிவருகிறார் இது அருள்மொழி வார்த்தையா இல்லை முதல்வரின் உத்தரவா என்று இப்போதாவது விளங்குமா ?

அவதூறு மன்னர்கள் காட்டிய ஆதாரம், அவர்களுக்கே எதிராக போன சேதாரம் 
அடுத்து, பத்திரிக்கை செய்தியில் தவ்ஹீத் ஜமாஅத் என்பதற்கு பதிலாக ஜவ்ஹீத் ஜமாஅத் என்று வந்ததை காட்டி. தங்களின் அறிப்பை தீர்த்துகொள்ளுகிறார்கள். மேலும், இட ஒதுக்கீடு டாஸ்மார்க்குக்கு பொருந்துமா என்று கேட்டு தங்களின் புத்தியை காட்டியுள்ளார்கள். இட ஒதுக்கீடு என்பதை பற்றியெல்லாம் இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை, எந்தவிதமான சமுதாய அக்கறையும் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தை குற்றம் சொல்ல வேண்டும், அதற்கு எதையும் செய்வார்கள். இட ஒதுக்கீடு என்பது எல்லா அரசு துறைகளிலும் தான் தருவார்கள், மார்கத்தில் தடுக்கப்பட்ட வங்கி வேலை, டாஸ்மார்க் போன்றவற்றில் இருந்து மார்க்கப்பற்றுள்ளவர் ஒதுங்கி கொள்வார்கள். டாஸ்மார்க்கை குறிவைப்பவர்களுக்கு (அதிக போட்டி இருக்காது என்பதால் - முஸ்லிம்கள் புறக்கணிக்கும் காரணத்தினால்) அது எளிதில் கிடைக்கும்.

இந்த ஆணையம் என்பது ஒன்னுமில்லையாம், காப்பி பேஸ்டர்கள் சொல்லுகிறார்கள். 2006 ஆம் ஆண்டு இதே போன்று ஒரு ஆணையத்தை தான் ஜெயலலிதா அமைத்தார், அதை அப்போது டாய்லட் பேப்பர் என்றார்கள். பின்னர், கலைஞர் ஆட்சிக்கு வந்த போது, இதே போன்று ஒரு கமிஷன் அமைத்து, ஆய்வு செய்து தான் இட ஒதுக்கீட்டை தந்தார். இது அரசு தரப்பினர் இடையே நடந்த கடித பரிமாற்றமாம். அப்படியென்றால், 'தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது' என்று ஏன் நீங்கள் காட்டிய ஆதரத்தில் உள்ளது? சம்பந்தம் இல்லாமல் அரசு துறையினர் ஏன் கடிதம் எழுதிகொள்ள வேண்டும்? (உங்களை மாதிரி புகழ் தேடு திட்டமோ?). இவர்களின் பொய்யை அம்பலப்படுத்தும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா அவர்களே, நான் இந்த ஆணையத்திற்கு உத்திரவுவிட்டேன் என்று சொல்லி, இந்த நிருப பொய்யர்கள் மீது கரியை பூசியுள்ளார். அதிகாரத்தில் உள்ள முதல்வர் சொல்லுவதை கூட, தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். முதல்வர் நான் இதற்கு உத்திரவுவிட்டுள்ளேன் என்பது நடுநிலையான மக்களுக்கு போதுமான சான்று. இதற்கான ஆதாரம் கீழ்காணும் வீடியோவில் உள்ளது.


இறுதியாக, ஒன்றை சொல்லிக்கொள்கிறோம், ததஜவின் எழுச்சி மிக்க போராட்டங்களால் தான் 3.5 சதவீத இட ஒதுக்கீட கிடைத்தது என்பதை திருடும் நிருபர்களே ஒத்துக்கொண்டுள்ளார்கள். இட ஒதுக்கீடு கிடைத்த நேரத்தில் தமுமுக, திமுக கூட்டணியில் இருந்தது. தமுமுகவை கண்டு கொள்ளாத திமுக, தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகி, இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு எவ்வாறு தர முடியம் என்று விளக்கம் கேட்டு, தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிகாட்டுதல் படி தான் 3.5 சதவீத இட ஒதுக்கீடே கிடைத்தது. அதே போல, தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமிக்க போராட்டங்களால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும், இன்ஷா அல்லாஹ். அப்போது இந்த பொய்யர்களின் குரோதமும் வெறியும் இன்னும் உச்சிக்கு போகும்.

தோல்வியை ஒப்புக்கொள்ளும் விமர்சகர்கள்:

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாட்டை தமுமுகவின் மறைமுக தொண்டர்களும், தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழிப்பது மட்டும் தான் எங்களின் கொள்கை என்பவர்களும், நடுநிலையாளர்கள் என்ற போர்வையில் உள்ள அயோக்கியர்களும் விமர்சனம் செய்கிறார்கள். விமர்சனம் செய்பவர்கள் நேருக்கு நேராக நமது இணையதளத்தில் வந்து தங்களின் விமர்சன கனைகளை தொடுக்கலாம். எங்களை பிரித்து மேயலாம். இவர்கள் யாரும் இதை செய்ய முன்வருவது இல்லை. இதை இவர்கள் செய்யாமல் வெருண்டு ஒட காரணம், இவர்கள் பொய்யர்கள் என்று இவர்களே ஒத்துக்கொண்டுள்ளார்கள். நமது தளத்தில் யார் வந்தாலும் அவர்களின் எந்த கருத்தும் தடையின்றி வெளியிடப்பட்டு, அதற்கான பதில் தரப்படும். 

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான தளங்களில் நாம் எதையும் எழுதலாம் என்று வரம்பு மீறுபவர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். வரம்பு மீறுபவர்களின் கருத்துக்கள் இங்கே காட்டப்பட்டு, பதிலடி தரப்படும், இன்ஷா அல்லாஹ்.

பொய் ஒரு போதும் வெல்லாது:

நிருபர் கும்பல் நமது அடுக்கான வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் பதுங்குவதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான். நாம் சொல்லுவது உண்மை, அவர்கள் சொல்லுவது பொய்கள், அவதூறுகள்.


பொய்யார்கள் தோற்று ஓடுவார்கள் என்பதை அழகாக எடுத்துரைக்கும் திருக்குர்ஆன் வசனம்:

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. 
(அல்குர்ஆன் 21:18)


குறிப்பு: 
இட ஒதுக்கீடு குறித்து உளரித்தள்ளிய நிருபர் கும்பலை சார்ந்த ஒரு பெரியவர் தமுமுகவின் ஏஜேண்ட் என்று நாம் குறிப்பிட்டு இருந்தோம். அதை அவர் ஏற்றுக்கொண்டு, தன்னை தமுமுகவின் அனுதாபி என்பதை ஒத்துக்கொண்டுள்ளார். நிருபர் கும்பலில் உள்ள பலர் தமுமுகவின் ஆதரவாளர்கள், சிலர் பாக்கர் கட்சியின் அனுதாபிகள்.