Showing posts with label தர்பியா. Show all posts
Showing posts with label தர்பியா. Show all posts

Tuesday, May 15, 2012

அதிரையில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாம்!

அதிரையில் 1.5.2012 முதல் 12.5.2012 வரை கோடைக்கால பயிற்சி முகாம் அதிரை தவ்ஹீத் பள்ளியில் மாணவர்களுக்கு காலையிலும் மாணவிகளுக்கு மாலையிலும் நடைபெற்றது.

இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி சகோதரர் சேப்பாக்கம் இஸ்மாயில் சகோதரிகள் சபானா ஆலிமா மற்றும் சக்கூரா ஆலிமா ஆகியோர்கள் மாணவ மாணவிகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படை, முஸ்லிம்களிடம் கானப்படும் மூடநம்பிக்கைகள், தூஆக்கள், ஜனாஸாவின் சட்டங்கள்,  தொழுகையின் சட்டங்கள் போன்ற தலைப்புகளின் வகுப்புகள் நடத்தினார்கள் இறுதி நாளில் மாணவ மாணவிகளுக்கு தேர்வுகள் நடத்தி இஸ்லாமிய புத்தகங்கள் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. 










Tuesday, April 06, 2010

அதிரையில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி

அதிராம்பட்டிணம் ECR ரோட்டில் உள்ள 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் கடந்த 02.04.2010 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள்.

இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

Saturday, March 06, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்ட தர்பியா முகாம்


அதிராம்பட்டிணத்தில் உள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் 28.02.2010 அன்று தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகி மற்றும் உறுப்பினர்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது.





இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி அவர்கள் 'தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள்' பற்றி உரையாற்றினார்கள்.

பின்னர், மௌலவி மஸ்வூத் யூசுஃபி அவர்கள் 'தவ்ஹீத்வாதிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்து, தஞ்சை தெற்கு மாவட்ட பேச்சாளர் சகோதரர் உமர் அவர்கள் 'நல்ல பண்புகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி அவர்கள் 'இயக்கங்கள் ஒரு பார்வை' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.