Showing posts with label சமுதாய பணி. Show all posts
Showing posts with label சமுதாய பணி. Show all posts

Friday, February 15, 2013

அதிரையில் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 15.02.2013 அன்று அதிரை தக்வா பள்ளி அருகில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மௌலவி யாசிர் இம்தாதி அவர்கள் 'இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பிலும், மௌலவி ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் 'நபிவழி மறந்தோரே நரகத்தை அஞ்சிடுவீர்' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் பெரும்திரளாக பெண்களும் ஆண்களும் கலந்துகொண்டனர். இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் அதிகமாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.

பொதுக்கூட்டம் தவ்ஹீத் ஜமாஅத் அதிரை மற்றும் முத்துப்பேட்டை கிளைகளின் இணையதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

விரிவான செய்திகள் விரைவில் இன்ஷா அல்லாஹ்.

பொதுக்கூட்ட வீடியோ விரைவில் வெளியிடப்படும்.


பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர் ஆன் ஹதிஷை மட்டும் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

2. அதிராம்பட்டிணம் பேருந்து நிலையத்த்லிருந்து கடைத்தெரு வழியாக மகிழங்கோட்டை செல்லும் சாலையை புதிய தார்சாலையாக போர்க்கால அடிப்படையில் அமைத்து தரும்படி சம்மந்தப்பட்ட துறை மற்றும் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்..

3. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இஸ்லாமியர்களுக்கு இருக்கின்ற தனி இடஓதுக்கீட்டீனை உயர்த்தி தருவோம் என்று திருச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

4. முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்று விஷ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மனஉறுதியை பாராட்டுவதோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

5. விஷ்வரூபம் திரைபடத்திற்கு ஆதரவாக பேசிய அதிரை சேர்மன் அஸ்லத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

6. அப்சல் குருவை தூக்கிலிட்டு நீதியை சாகடித்த மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்

7. கடந்த சில மாதமாக அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாளாக இருந்த வெள்ளிகிழமையை ஞாயிற்று கிழமையாக நிரந்தரமாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் காதிர் முகைதீன் பள்ளி நிர்வாகத்தை கண்டிப்பதோடு சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியபடுத்திக்கொள்கிறோம். இது மீண்டும் தொடர்ந்தால் அதிரையில் பொதுமக்களை திரட்டி காதிர் முகைதீன் பள்ளி முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.




















Thursday, August 23, 2012

அதிரையில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்பில் ஃபித்ரா வினியோகம்!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இந்த வருடம் ஃபித்ராவாக ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்பில் ஃபித்ரா பொருட்களை பெற தகுதியானவர்களை தேடி சென்று வழங்கியது.  அல்ஹம்துலில்லாஹ்.

இந்த ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்தில் 87,640 ரூபாய் அதிரை கிளை வசூல் செய்தது.  மீதமுள்ள 63,800 ருபாய் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையால் அதிரை கிளைக்காக வழங்கப்பட்டது. இந்த தொகை மூலம் நமது ஊரில் வசிக்கும் 600 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இவற்றிக்கான கணக்கு விபரம் கீழே தரப்பட்டுள்ளது. ஃபித்ராவிற்காக வசூல் செய்யப்பட்ட தொகை அந்த பணிக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.



Tuesday, October 12, 2010

அதிரை TNTJ வின் வாழ்வாதார உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 29.09.2010 அன்று கடல்கரைத்தெருவில் வசிக்கும் ஏழை பெண்ணிற்கு வாழ்வாதார உதவியாக ஒரு தையல் மெஷின் வழங்கப்பட்டது.


இதை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

Wednesday, September 22, 2010

'முஸ்லிம்கள் சமுதாய பணி செய்ய முன்வர வேண்டும்!' - பெருநாள் உரை

முஸ்லிம்கள் சமுதாய பணிகள் செய்ய வேண்டியதின் அவசியத்தை விளக்கி சகோதரர் பி.ஜே அவர்கள் ஆற்றிய பெருநாள் உரை.