Sunday, August 31, 2014

'நபிவழி மறந்தோரே நரகத்தை அஞ்சிடுவீர்' (வீடியோ) அதிரை

சென்ற ஆண்டு அதிரையில் நடைபெற்ற மார்க்கவிளக்க பொதுக்கூட்டத்தில் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி  அவர்கள் 'நபிவழி மறந்தோரே நரகத்தை அஞ்சிடுவீர்' என்ற தலைப்பில் ஆற்றிய உரை (வீடியோ)






Saturday, August 30, 2014

சாலையை சீர்செய்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி

கடைத்தெருவில் இருந்து காலேஜ் ரோடு வழியாக காதர் முகைதீன் ஆண்கள் பள்ளி, கல்லூரி மற்றும் E C R க்கு வாகனத்தில் செல்பவர்களுக்கு, ஆதே போல் அங்கிருந்து இந்த வழியாக வருபவர்களுக்கும் நீண்ட நாட்களாக E C R சாலையை இனைக்கும் இடத்தில் குண்டும் குழியுமாக வாகனங்கள் சிரமம்யின்றி ரோட்டை அடைய முடியாத நிலை இருந்தன இதனால் பல வாகனங்களும் சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகளும் சிரமத்திற்கு சில நேரங்களில் விபத்திற்கு உள்ளாயினர். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பேரூராட்சி தலைவரை அனுகி அதிகமான விபத்துக்களை ஏற்படும் இந்த சாலை இனைப்பை சீர்செய்யும் படி கேட்டுக்கொள்ளப்பட்டன இந்த கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் இந்த சாலை இனைப்பை சீர் செய்வதற்கு ஏற்பாடு செய்து பணிகள் நடைபெறுகிறது இந்த சாலை இனைப்பை சீர்செய்த பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துனைத்தலைவர், செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துகொள்கிறது



Monday, August 25, 2014

பட்டுக்கோட்டை காவல் நிலைய முற்றுகை வாபஸ்

அஸ்ஸலாமு அலைக்கும்

முஸ்லிம் சகோதரரை தரக்குறைவாக பேசி தாக்கிய போக்குவரத்து காவலர் S.l. பிச்சை முத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலைய முற்றுகை போராட்டம் அறிவித்து இருந்தோம் .இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ADSP முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்று ஒரு வாரகாலம் அவகாசம் அளிக்க பட்டு இருந்தது

இதன் தொடர்ச்சியாக
 SI பிச்சைமுத்து கண்ணனை Suspend செய்து மேல் நடவடிக்கைக்காக RDO விசாரணைக்கும் அனுப்ப உத்தரவு இட்ட  காரணத்தினால் மாவட்ட நிர்வாகம்
மாநிலத்தின் ஒப்புதலோடு காவல் நிலைய முற்றுகை வாபஸ் என்று முடிவுசெய்யப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ் 

Sunday, August 24, 2014

பெண்கள் பயான் நிகழ்ச்சியில் பரிசுகள் அறிவிப்பு


தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக பெண்கள் பயான் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடுத்தெரு அயிஷா மகளிர் அரங்களில் நடைபெறுகிறது. இதில் பெண்கள் மார்க்கத்தை தெரிந்துக்கொள்வதற்கு ஆர்வப்படுத்தும் விதமாக 15.8.2014 முதல் பயான் செய்தவற்றில் இருந்து மூன்று கேள்விகள் கேட்கப்பட்டு 3 கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தவர்களில் ஒருவருக்கு ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி ஆகிய இரண்டு மாத இதழ்களும் ஒரு வருட சந்தா பதிலளித்தவர்களின் முகவரிக்கு அதிரை கிளை சார்பாக செலுத்தப்பட்டது. 

மேலும் இனி வரும் வாரங்களில் சரியான பதிலளிப்பவர்களுக்கு ஏகத்துவம் தீன்குலப்பெண்மணி போன்ற மாத இதழ்களும் குர்ஆன் தமிழாக்கம்,  புகாரி தமிழாக்கம், மற்றும் தவ்ஹீத் மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்களில் எதாவது ஒன்று வழங்கப்படும்

Thursday, August 21, 2014

முதலில் கவனம் செலுத்தவேண்டிய காட்டுக்குளம்







மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நமதூருக்கு அருகில் உள்ள முதல்சேரிக்கு வந்தடைந்துவிட்டன. கடந்த சில வருடங்களாக அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு சொந்தமான காட்டுக்குளத்தை தூர்வாராமல் பேரூராட்சி அலட்சியமாக இருந்துவருகிறது

பேரூராட்சியால் அதிராம்பட்டினத்தில் பாதிக்கு அதிகமான பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிதண்ணீருக்கான ஆழ்குழாய்கள் காட்டுக்குளத்தை சுற்றி போடப்பட்டுள்ளது இந்த வருடம் நீர் மட்டம் குறைந்தவுடன் பேரூராட்சியால்  குளத்தை சுற்றி பல போர்கள் புதிதாக போடப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் தங்குதடையின்றி கிடைப்பதற்கு வசதியாக காட்டுக்குளத்தை தூர்வாரி குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு பேரூராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் பேரூராட்சிக்கு சொந்தமான போர்களில் அதிகமான தண்ணீர் எடுப்பதால் காட்டுக்குளத்தை சுற்றியுள்ள வீடுகளிலும் தண்ணீர் மட்டம் இறங்கியுள்ளது இதை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகமும்  தெரு ஜமாத்தினரும் தெரு சங்கங்களும் குடி தண்ணீர் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக முதலில் காட்டுக்குளத்தை நிறப்புவதற்கு முயற்சிக்கவேண்டும்

Tuesday, August 19, 2014

கொள்கையற்ற அதிரை தாருத் தவ்ஹீத் மற்றும் மீடியா மெஜிக் நிஜாமின் விவாத அழைப்பை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கிறது! 22ஆம் தேதிக்குள் விவாத ஒப்பந்தம் சம்பந்தமாக பதில் தர கெடு!!

தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான  நல் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா) 16.8.2014 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 12.30 வரை நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகளும் கலந்துக்கொண்டார்கள் கிளை மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் அனுகுமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று மாநில துனைத்தலைவர்கள் சையது இபுராகீம் மற்றும் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி இருவரும் கலந்துக்கொண்டு உரையாற்றினார்கள்


Monday, August 18, 2014

பட்டுக்கோட்டை காவல் நிலையம் முற்றுகை தள்ளிவைப்பு

முஸ்லிம் சகோதரரை தரக்குறைவாக பேசி தாக்கிய போக்குவரத்து காவலர் S.l. பிச்சை முத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி நாளை பட்டுக்கோட்டை காவல் நிலையம் முற்றுக்கை என்று அறிவிப்பு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செய்யப்பட்டு இருந்தது இது தொடர்பாக இன்று பகல் 12 மணியளவில் பட்டுக்கோட்டையில் நஞ்சை மாவட்ட ADSP முன்னிலையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் பிச்சை முத்துவை பணி குறைப்பு (Degraded) செய்து ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ADSP ஒரு வாரம் கால அவகாசத்தில் துரை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் முற்றுகை போராட்டம் வரும் 26-08-2014 அன்று மாற்றப்பட்டுள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்)

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமணம் !

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இன்று ( 16-08-2014 ) மாலை 4.30 மணியளவில் நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில் மேலத்தெருவை சேர்ந்த அப்துல் ஹமீத் அவர்களின் மகன் சகாபுதீன் மணமகன் ரூபாய் 10,000/-த்தை மஹராக மணமகளின் பொறுப்பாளரிடம் கொடுத்து மணமுடித்தார்.

இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி.'இஸ்லாமிய திருமணங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.














அதிரையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக 16-8-2014 நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் சகோ. செய்யது இப்ராஹீம் அவர்கள் கலந்து கொண்டு சகோதரர் சகோதரிகளின்  கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!







  




 

TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம்



TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..

அபுதாபி அதிரை TNTJ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 15.08.2014 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 7.40 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.

அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது, அதில், ரமலானில் ஃபித்ரா அமீரக திர்ஹம்ஸ் 3,840/- வசூலிக்கப்பட்டதையும், அதிலிருந்து ஊருக்கு ரூபாய் 18,000/- விநியோகிக்கப்பட்டதையும் விளக்கப்பட்டது. மீதமுள்ள தொகை தலைமைக்கு அனுப்பபட்டு தேவையுள்ள ஊர்களில் விநியோகம் செய்யப்பட்டதையும் விளக்கப்பட்டது.

மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.



ஜசாக்கல்லாஹ்..



Tuesday, August 12, 2014

லாரல் பள்ளி மானவர்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் தீர்வு

லாரல் பள்ளியில் படித்து வரும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் துளை துரத்தில் இருந்து  பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் நீண்ட காலமாக வண்டிப்போட்டை பஸ் நிறுத்திலிருந்து லாரல் பள்ளி  வாகனத்தில் ஏறிச்செல்வதும் ஒரு சில  நேரங்களில் பள்ளி வாகனத்தை தவறவிடுவதும் என பல சிறமங்களை சந்தித்துவந்தனர்

இதை அறிந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் லாரல் பள்ளியின் தாளாலரை நேரில் சந்தித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கோரிக்கை வைத்தனர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று தாளாலர் அவர்கள் திங்கள் முதல் அதிரை பெரிய ஜும்ஆ பள்ளி அருகில் புதிதாக பஸ் நிறுத்தத்திற்கு அனுமதியளித்தார்கள் அதன் படி திங்கள் முதல் சானாவயல் கீழத்தெரு மற்றும் அதை சுற்றியுள்ள மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜும்ஆ பள்ளி நிறுத்தத்திலிருந்து ஏறிச்செல்கிறார்கள் இந்த பஸ் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்த தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மாணவர்களும் பெற்றோர்களும் நன்றியும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்


Sunday, August 10, 2014

தேவை நிவாரணமல்ல! நியாயம்!

ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகியவை ஹஜ் மாதங்களாகும். அதன் முதல் மாதமான ஷவ்வால் மாதம் துவங்கி விட்டது. ஹஜ்ஜுக்கான முஸ்லிம்களின் பயணங்களும் துவங்கி விட்டன. மனிதர்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காக, ஓங்கச் செய்வதற்காக மக்காவில் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் நடத்தப்படுகின்ற ஓர் ஒற்றுமை மாநாடு தான் ஹஜ் என்று சொல்லலாம்.

நிறம், நாடு, மொழி, இனம், குலம், கோத்திரம் ஆகியவை மனித சமுதாயத்தை அடையாளம் காட்டுகின்ற அளவுகோல் தானே தவிர அவை மனித சமுதாயத்தைக் கூறு போடுகின்ற பிரிவினைக் கோடுகள் அல்ல என்று திருக்குர்ஆன் தெளிவுபடக் கூறுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும்இ கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

இதனுடைய செயல்திட்டம் தான் ஹஜ் எனும் மாநாடாகும்.

கருப்பினத்தைச் சார்ந்த ஆப்பிரிக்கரையும், வெள்ளை இனத்தைச் சார்ந்த ஐரோப்பியரையும், வெவ்வேறு மொழிகள் பேசுகின்ற பல்வேறு இனத்தவர்களையும், தலைவர்களையும், குடிமக்களையும் ஒரே வெள்ளை ஆடை உடுத்தச் செய்து, உங்களில் நிறம், நாடு, மொழி, இனம், குலம், கோத்திரம், ஆண்டான், அடிமை என்ற பேதம் இல்லை. நீங்கள் எல்லோரும் ஆதமுடைய மக்கள் என்று அல்லாஹ் இந்த மாநாடு மூலம் மனித சமுதாயத்திற்கு உரைக்கவும் உணர்த்தவும் செய்கின்றான்.

உலகத்தில் எந்த ஒரு முனையிலும், எந்த ஒரு மதத்திடமும், சித்தாந்தத்திடமும் உலக மக்களை ஒன்றிணைக்கின்ற செயல்திட்டம் அறவே இல்லை. இஸ்லாத்தில் மட்டுமே அது இருக்கின்றது. மனித குலத்தை ஒரு கயிற்றில் இணைக்கின்ற சக்தி இஸ்லாத்தில் மட்டும் தான் இருக்கின்றது.

உலக மக்களுக்கு இந்த உண்மையை ஹஜ் மாநாடு உணர்த்துகின்ற அதே வேளையில், முஸ்லிம்களுக்குக் குறிப்பாக ஒரு உண்மையை உணரச் செய்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி 6011

இந்த சகோதர பாச உணர்வையும், ஒற்றுமையையும் இறுகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு ஹஜ் உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஃமின்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.

(இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி 2446

ஈமானிய கட்டமைப்பு என்பது இறுகப் பிணைந்த ஒரு கட்டட அமைப்பை ஒத்திருக்க வேண்டும் என்பதையும் இந்த ஹஜ் மாநாடு கோடிட்டுக் காட்டுகின்றது.

இதைத் தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

'மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்'' (என்றும் கூறினோம்.)

அல்குர்ஆன் 22:26, 27

இந்த ஒற்றுமை உணர்த்துதலும் ஹஜ்ஜின் பலன்களில் உள்ளது தான். ஆனால் ஹஜ்ஜின் மூலம் இந்த விளைவுகளை இஸ்லாமிய உலகம் கண்டிருக்கின்றதா என்றால் இல்லை.

இஸ்லாமிய, ஈமானிய உடலின் கை, கால்கள் உடைக்கப்படுகின்றன; கண்கள் குத்தப்படுகின்றன; காதுகள் அறுக்கப்படுகின்றன. இஸ்லாமிய கட்டமைப்பு எதிரிகளால் உடைக்கப்படுகின்றது. அதில் ஓட்டைகளும் உடைசல்களும் விழுந்து ஒட்டுமொத்த கட்டடத்தையும் பாதிக்கச் செய்கின்றன. இதற்கு நிதர்சனமான, நேரடியான எடுத்துக்காட்டு தான் பாலஸ்தீனம்.

மூன்று இஸ்ரேலிய இளைஞர்களை ஹமாஸ் இயக்கத்தினர் கடத்திவிட்டனர் என்று குற்றம் சாட்டி, அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பாலஸ்தீனத்தில் மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல், தரைவழித் தாக்குதல் நடத்தி, பெண்கள்இ பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் என்று பாராமல் அழித்து வருகின்றது. மக்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளையும் மனிதநேயமற்ற யூத வெறியர்கள் குண்டு வீசித் தகர்த்து வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு விட்டனர்.

சிறுநீரகம் இழந்து டயாலிஸிஸ் செய்து கொள்கின்றஇ இதயநோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொள்கின்றஇ கை கால்களை இழந்து சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளையும் இஸ்ரேல் கொன்று குவிக்கின்றது. இதுவரை வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இப்போது தரைவழித் தாக்குதல் தொடுத்து தனது அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றது.

கொத்துக் கொத்தாக குழந்தைகளின் பிணங்கள், அவர்களை மடியில் கிடத்திக் கொண்டு கதறும் தாய்மார்கள்இ தாய் தந்தையரின் பிணத்தின் அருகே என்ன நடக்கின்றது என்று அறியாமல் அனாதையாக நிற்கும் மழலைகள் என பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகள் அன்றாடம் பாலஸ்தீனத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

மேற்கத்திய நாடுகளும் அயோக்கிய நாட்டு சபையும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இராக்கில் பேரழிவு ஆயுதங்களை சதாம் வைத்திருக்கிறார் என்று பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி, இராக்கின் மீது போர் தொடுத்து, அதுவரை ஷியா, சன்னி, குர்து இன மக்கள் அனைவரையும் ஒரே ஆளுமையின் கீழ் வைத்திருந்த சதாமைத் தூக்கில் போட்டு, அந்த நாட்டையே இரத்தக் களறியாக்கிய அமெரிக்க வெறிநாய் இன்று பாதிக்கப்படும் பாலஸ்தீன மக்களுக்காகக் களமிறங்கவில்லை. காரணம், தன்னை வளப்படுத்துகின்ற எண்ணை வளம் பாலஸ்தீனத்தில் இல்லை. அது இருந்திருந்தால் மனித குலத்தைப் பாதுகாக்கின்றேன் என்ற பெயரில் படையெடுத்து ஊடுருவல் நடத்தியிருக்கும்.

வளமும் வலிமையும் உள்ள இஸ்லாமிய நாடுகள் வழக்கம் போல் சில நிவாரணங்களை விமானங்கள் மூலம் அனுப்பிவிட்டு, இஸ்ரேலின் இந்தக் கோரத் தாக்குதலைக் கண்டிக்கத் திராணியற்று மரணத்திற்கு நிகரான மவுனத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கின்றன. பாலஸ்தீன மக்களுக்கு இப்போதைய தேவை நிவாரணம் அல்ல. நியாயம்.

'எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும், சிறுவர்களுக்காகவும் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?
அல்குர்ஆன் 4:75

இந்த வசனம் கூறும் அந்தப் பரிகாரத்தைத் தான் பாலஸ்தீன மக்கள் இறைவனிடம் கோருகின்றார்கள். இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுக்க நியாயமான காரணம் இருந்தும் போர் தொடுக்காமல் இவ்வுலக வாழ்க்கை வசதிகளை அனுபவித்துக் கொண்டு வாளாவிருக்கின்றனர்.

இவர்கள் மீது இறைவன் இதுபோன்ற நிலையை ஏவி விட எவ்வளவு நேரம் ஆகும் என்பதை மறந்து வாழ்கின்றனர். ஒருக்கால் இவர்களை இம்மையில் இறைவன் தண்டிக்காமல் விட்டாலும் மறுமையில் அவன் விடப்போவதில்லை.

எனவே ஹஜ் மாநாடு முஸ்லிம் சமுதாயத்திற்குத் தருகின்ற ஒற்றுமைப் பாடத்தை அரபு நாடுகள் உணர்ந்து நடக்க வேண்டும்.

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 8.8.14(வீடியோ)

பிரச்சார கலத்தில் சோர்வு கொள்ளவேண்டாம்



Saturday, August 09, 2014

மத்திய அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்பாட்டம்

இன்று 9.8.14 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் துன்டிக்க வழியுரித்தி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பட்டுக்கோட்டையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துக்கொன்டு அந்த இடமே அதரும் வகையில் தங்களுடை கண்டன கோசங்களை எழுப்பினார்கள் இறுதியில் மாநில துனை பொதுச்சொளலார் முஹம்மது யூசுப் கண்டன உரை நிகழ்த்தினார்கள்