Showing posts with label ரங்கநாத் மிஸ்ரா. Show all posts
Showing posts with label ரங்கநாத் மிஸ்ரா. Show all posts

Thursday, July 08, 2010

சன் நியுஸ் வீடியோ: பிரதமர் & சோனியா காந்தி சந்திப்பு (நியு டெல்லி பிரஸ் மீட்)

கடந்த 6-7-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இது பற்றிய செய்தி இன்று (8-7-2010) சன் நியுஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

Tuesday, July 06, 2010

சோனியாகாந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த TNTJ நிர்வாகிகள்! (முழு விபரம்)

பிரதமருடன் தவ்ஹீத் ஜமாஅத் சந்திப்பு

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள்.

பகல் 12.25 முதல் 12.35 வரை காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து இட ஒதுக்கீட்டை  வலியுதித்தினார்கள்.

இது குறித்த முழு விபரம் வருமாறு:

மாநாட்டுக்கு முதல் நாள் ஜூலை மூன்றாம் தேதியன்று பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தனி இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்துவதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கோரும் இரு கடிதங்கள் தயார் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் மூலம் இருவருக்கும் சேர்ப்பிக்கச் செய்தோம்.

மாநாடு நடத்துவது மட்டும் போதாது. இட ஒதுக்கீடு தரும் இடத்தில் இருப்பவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? இட ஒதுக்கீடு தரும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா? இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுப்பூர்வமான மாநாடு மற்றும் பேரணி குறித்த தகவல்கள் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்தச் சந்திப்பை விரும்பினோம்.

பிரதமரும் சோனியா காந்தி அவர்களும் நேரம் ஒதுக்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நேரம் ஒதுக்கினாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நேரம் ஒதுக்குவார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கவில்லை.

மாநாடு முடிந்த மறுநாளே ஆறாம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.

தமிழக வரலாறு காணாத அளவுக்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் உணர்ச்சிப் பிளம்பாகக் கலந்து கொண்ட தகவல் உளவுத்துறை மூலமும் மாநாட்டில் கலந்து கொண்ட சகோதரர் ஜெ. எம். ஹாருன் அவர்கள் மூலமும் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவருக்கும் செய்திகள் சென்றடைந்ததே இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் காரணமாக இருந்தது. பிரதமரி சந்திப்பின் போது இதைக் கண்டு கொண்டோம்.

தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் பி. ஜைனுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம் ஹாரூன், தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அஹமது ஆகியோர் காலை 7.00 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு குறித்த நேரத்தில் பிரதமரை சந்திக்கச் சென்றோம். வழக்கமான பாதுகாப்பு சோதனை முடிந்தபின் பிரதமர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டோம்.

அனைவரிடமும் பிரதமர் கைகுலுக்கி வரவேற்றார். திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பி. ஜே. வழங்கினார்கள். குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பிரித்துப் பார்த்து கண்களில் ஒற்றிக் கொண்ட பின் நன்றி நன்றி நன்றி எனக் கூறினார்.

இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் பிரதமருக்கு சால்வை வழங்கினார்கள். தேசிய லீக் தலைவார் பஷீர் அஹமது அவர்கள் ஏல்க்காய் மாலை வழங்கினார்கள்.

இதன் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லட்டர் பேடில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி எழுதப்பட்ட கோரிக்கை மனுவை வழங்கினோம்.

பிரதமருக்கு அருகில் பிரதமர் இருக்கை போல் ஒரு இருக்கையும் வலது இடது புறங்களிலும் எதிரிலும் சோபாக்கள் போடப்பட்டு இருந்தன.

தனது அருகில் போடப்பட்ட இருக்கையில் பி. ஜே. அவர்களை பிரதமர் அமரச் செய்தார்கள். இந்த இருக்கையில் மத்திய கேபினட் அமைச்சர் தவிர யாரும் அமர வைக்கப்பட மாட்டார்கள். இந்தக் கண்ணியத்தை பிரதமர் தங்களுக்கு மட்டும் வழங்கினார் என்று பின்னா ஹாரூன் அவா;கள் பீஜேயிடம் கூறினார்கள். ஆனால் இது பீஜேவுக்கு வழங்கப்பட்ட கண்ணியம் அல்ல. மாநாட்டுக்கு வந்த இதற்காக உழைத்த துஆ செய்த அனைவருக்குமான கண்ணியமே இது என்று பீஜே கூறினார்.

பதினைந்து நிமிட நேரம் முஸ்லிம்களின் அவல நிலையையும், காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியையும் பி. ஜே. தமிழில் கூற, ஹாரூன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார்கள்.

மாநாட்டைப் பற்றியும், கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்டத்தைப் பற்றியும் பி. ஜே. தெரிவித்த போது தெரியும், ரிப்போர்ட் வந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்கள்.

ஷம்சுல்லுஹா, அப்துல் ஹமீது, ரஹ்மத்துல்லா ஆகியோரும், பஷீர் அஹமது, ஹரூன் பாய் ஆகியோரும் ஆங்கலத்தில் இட ஒதுக்கீடு குறித்து பல வகையிலும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தார்கள்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிரதமர் நீதிபதி மிஸ்ரா அவர்களின் அறிக்கை வந்தது முதல் அது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தருவோம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்துக்கு பிரதமர் தந்த மரியாதையும் முக்கியத்துவமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தன. லட்சக்கணக்கான மக்கள் பட்ட கஷ்டமும் உழைப்பும் துஆக்களுமே இதற்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.

நின்று கொண்டே மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பக் கூட நேரமில்லாத பிரதமர் நாங்களாக எழும் வரை கலகலப்பாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள். காரணம் தீவுத் திடலை நிறைத்த மக்கள் சக்தி தான் என்பதை நாங்கள் எங்களுக்குள் நினைவுபடுத்திக் கொண்டோம்.

அடுத்ததாக காங்கிரஸ் தலைமை அதிகார மையத்தின் நம்பர் ஒன் ஆகக் கருதப்படும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களைச் சந்திக்கச் சென்றோம். ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டதால் குறித்த நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டது.

எத்தனையோ வேலைப் பளுவில் இருக்கும் பெரும் தலைவர்கள் மற்றவர்களுக்காகக் காத்திருக்க மாட்டார்கள். ஒரு விநாடி காலதாமதமானாலும் யாரையும் சந்திக்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் செக்யூட்டிகள் நமது சந்திப்பை கேன்சல் செய்து விட்டதாகக் கூறினார்கள். ஆனால் ஹாரூன் பாய் அவர்கள் தொடர்பு கொண்டு தாமதத்துக்கான காரணம் பற்றி தெரிவித்தவுடன் எங்கள் காலதாமதத்தைப் பொருட்படுத்தாமல் உடனே எங்களை வரச் சொன்னார்கள்.

சோனியா காந்தி அவர்களை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தோம். அவருக்கும் குர்ஆன் ஆங்கில மொழிபெயா;ப்பு மற்றும் அந்த மாமனிதா ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுத்தோம். கோரிக்கை மனுவையும் அளித்தோம். பிரதமரிடம் எடுத்துச் சொன்னது போல் முழுமையாக கோரிக்கைகளை அவர்களுக்கும் விளக்கினோம்.

அபுல்கலம் ஆஸாத் அறக்கட்டளை மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் மீது தமக்கு உள்ள அக்கரையை சோனியா விளக்கிக் கூறினார். இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள்.

இருபெரும் தலைவர்களின் சந்திப்பும் இட ஒதுக்கீடு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

சந்திப்பு இனிப்பாக இருந்தாலும், வாக்குறுதி நம்பும்படி இருந்தாலும் இட ஒதுக்கீடு தான் அடுத்த தேர்தலில் மையக் கருத்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இட ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றினால் அதன் பலனக் காங்கிரஸ் அறுவடை செய்யும். இட ஒதுக்கீடு அளிக்கத் தவறினால் இந்தச் சந்திப்பு எந்த வகையிலும் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.

புது டில்லியில் இருந்து கோவை ரஹ்மதுல்லாஹ்.

குறிப்பு:
ஜேஎம் ஹாரூன் அவார்களுக்கும் நமக்கும் கொள்கையில் வேறுபாடு இருந்தாலும் இந்த மாபெரும் மக்கள் திரளை சமுதாய நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வம் எங்கள் ஆர்வத்தை விட குறைந்ததாக இல்லை. மேலும் தேசிய லீக் தலைவர் பஷீர் அவர்கள் மாநாட்டூக் நீங்கள் அழைக்காவிட்டால் கூட நான் உரிமையுடன் வந்து கலந்து கொள்வேன் எனக் கூறி ஹாரூன் அவர்களுடன் சேர்ந்து இந்த சரித்திரம் காணாத மக்கள் சக்தியக் காட்டி மக்களூக்கு நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும் என்று முனைப்பு காட்டியது குறிப்பிடத் தக்கது.

Saturday, April 17, 2010

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் முக்கிய அம்சங்களும் பரிந்துரைகளும்

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஒரு சிறு குறிப்பு :

1926 -ல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைகத்தில் சட்டம் படித்தவர்.

ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் 1950-ல் வழக்கஞராக பணியை துவக்கினார்.

1969-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார்.

1981-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியானார்.

1983-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார்.

25.9.1990. முதல் 24.11.1991 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

மக்கள் தொகை (பக்கம் 13):

முஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி)

முஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17):

1. முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 %

அதாவது 40.9% முஸ்லீம்களுக்கு எழுதபடிக்க தெரியாது.

2. முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர்

3. முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

4. 10-ஆம் வகுப்பு வரை – 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

5. 12-ஆம் வகுப்புவரை – 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர்

குடி இருப்புகள் : (பக்கம் 23)

1. முஸ்லீம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.

2. முஸ்லீம்களில் 41.2% பேர் அடிப்படைகட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர்.

3. மீதமுள்ள 23.76% முஸ்லீம்கள் பேர் மட்டுமே வசிக்கதகுந்த வீடுகளில்வாழ்கின்றனர்.

வறுமை கோட்டிற்க்குகீழ் வாழ்பவர்கள்: (பக்கம் 25):

இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரைவிடவும் முஸ்லீம்கள்தான் அதிகம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.

1. நகர்புரத்தில் 27.22 % முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.

2. கிராமபுரத்தில் 36.92% முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.
அதாவது 100-க்கு 36 முஸ்லீம்கள் உணவு உடை, இருப்பிடம் இல்லாமல் வாழ தகுதி அற்ற நிலையில் வாழ்கின்றனர்.

வறுமைகோடு என்றால் என்ன ?

அரசு 13 காரணிகளை வைத்துள்ளது இதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களாக கருதபடுவர்.

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் பக்கம் 69, 185 முதல் 188 வரை வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களின் தகுதிகள் வரையருக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணக்கள் (டிவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், (நிரந்தர வருமானம் இல்லாமல்) கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள். இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது.

இந்தியாவில் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் (வறுமை கோட்டிற்க்கு கீழ்) வாழ்கின்றன்ர். தமிழகத்தில் 5 -இல் ஒரு முஸ்லீம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றார்

மாதவருமானம் (பக்கம் 30):

ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களின் சராசரி மாத வருமானம் ரூ.1832.20 (ஒரு குடும்பத்திற்கு).

பரிந்துரைகளில் சில :

1. இந்திய அரசியல் அமைப்புசட்டம் Article 16 (4) விதி -படி சிறுபாண்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லீம்களுக்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை ஜனதொகையில் 73% உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்கப்படவேண்டும். சில இடங்களில் 10% இடத்திற்க்கு முஸ்லீம்கள் கிடைக்கவில்லை என்றால் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு அந்த இடங்களை வழங்கவேண்டும்.(பெரும்பாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்ககூடாது)- (பக்கம் 150,152)

2. கல்வி வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடும். பிற சிறுபாண்மை மக்களுக்கு 5% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும். (பக்கம் 152)

3. SC/ST-க்கு இருப்பது போல் முஸ்லீம்களுக்கும் கல்வி கற்பதர்க்கான Eligibility criteria தகுதிகள் (மதிப்பெண்) தளர்ந்தபட வேண்டும். விண்னப்பங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும். கல்வி கட்டணமும் குறைக்கப்பட வேண்டும்.

4. முஸ்லீம்களுக்காக அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலும் பல்கலை கழங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும் இந்த பல்கலை கழங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி முஸ்லீம் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் பல்கலை கழகங்களாக மாற்றப்பட வேண்டும். (பக்கம் 151)

5. அங்கன்வாடிகள், நொவோதியா விதியாலயாஸ் (பள்ளிகள்) போன்றவை முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தபட வேண்டும். முஸ்லீம்களின் குழைந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லீம் குடும்பங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். (பக்கம் 151)

6. முஸ்லீம்/கிருத்துவர்களாக மதம் மாறும் தலித்துகளுக்கு அவர்களின் சலுகை மீண்டும் கிடைக்கபெற வழிவகை செய்ய வேண்டும் (பக்கம் 153).

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் இரண்டாவது வால்யூமில் (பகுதி) பிற (அரசு மற்றும் அரசு சார) அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் பரிந்துரைகளும் உள்ளது. அதில் தேர்ந்தெடுத சில பரிந்துரைகளில் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.

அந்த பரிந்துரைகளில் சில :

1. கல்வியில் பின் தங்கி உள்ள முஸ்லீம் மாணவர்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்க வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2).

2. சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லீம்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரவேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2).

3. (பொருளாதாரத்தில் பின் தங்கிய) முஸ்லீம்களுக்கு சமையல் கேஸ் இனைப்பு மிக குறைந்தவிலையில் வழங்கபட வேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2).

4. அரசின் நலதிட்ட உதவிகள் பெருவதில் முஸ்லீம்கள் பெருமளவில் பின் தங்கிஉள்ளனர், எனவே அரசின் நலதிட்ட உதவிகள் பற்றி முஸ்லீம்களுக்கு அரசு விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நல திட்ட திட்ட உதவிகள் முஸ்லீம்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2).

முஸ்லீம்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்க்கு இந்த பரிந்துரைகள் கட்டாயம் நடைமுறைபடுத்தபடவேண்டும். இந்த அறிக்கை அமல்படுத்தபட்டால் IAS,IPS, IFS , உள்துறை, உளவுதுறை என எல்லா மத்திய அரசு பணிகளிளும் 10-ல் ஒரு முஸ்லீம் இருக்க முடியும்.

காலத்தே பயிர் செய் எனபதுபோல் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நாம் நமது குரலை அரசுக்கு உரக்க தெரிவிக்கவேண்டும்.

இந்திய அளவில் முஸ்லீம்களின் உரிமையை மீட்க நடக்கும் முதல் மாநாடாகவும் முன்னோடி மாநாடாகவும் திகழ தலைநகர் சென்னையை நோக்கி திரண்டு வருங்கள்.

இட ஒதுக்கீட்டால் பெரிதும் பயன் பெருவது மாணவர்கள் தான், எனவே மாணவர்களே! வருங்காலாத்தை வளமாக்கிட காலம் தாழ்த்தாமல் களப்பணியை ஆற்றிட களம் இறங்குங்கள். இன்றே ஆயத்தமாகுங்கள். மாநாட்டு வரலாற்றில் சரித்திரம் படைக்க மாநாட்டை மக்கள் வெள்ளம் ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

தொகுப்பு: S.சித்தீக், M.Tech, TNTJ மாணவர் அணி

Monday, March 08, 2010

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை அமல்படுத்த கோரி சென்னையில் ஜூலை 4ல் மாபெரும் மாநாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கடந்த 07-03-2010 ஞாயிறு அன்று மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைமையில் ஈரோடு பவானி மெயின் ரோட்டில் அமைந்துள்ள கே.கே.எஸ்.கே. மஹால் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இது மாநில மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி துவக்க உரையுடன் காலை 10.30க்கு ஆரம்பமானது.

பின்னர், பெருகிவரும் ஜமாஅத்தின் பணிகள் நிமித்தமாக கூடுதலாக ஒரு துணைத்தலைவர் பொறுப்பின் அவசியத்தை மாநிலத்தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

கூடுதல் துணைத்தலைவர் பொறுப்பிற்கு மாநிலச் செயளாலர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வை மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில மேலாண்மைக்குழு இணைந்த கூட்டுக்கூட்டம் நியமித்ததற்கு மாநில செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வாதாரக் கோரிக்கையான மத்திய அரசில் இடஒதுக்கீட்டு கோரிக்கையை வென்றெடுக்கவும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அம்சங்களை வலியுறுத்தவும் ஜூலை4 ஆம் தேதி சென்னை தீவுத் திடலில் முஸ்லிம்களின் கோரிக்கை மாநாட்டை நடத்த வேண்டியதன் அவசியத்தை மேலாண்மைக்குழு உறுப்பினர் பீ.ஜைனுல் ஆபிதீன் விளக்கி செயற்குழுவின் ஒப்புதலைப் பெற்றார். அதைத்தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது எப்படி? என்ற ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க மாநாட்டுக்குழு அமைக்கப்பட்டு அந்த குழுபற்றிய அறிவுப்பும் வெளியிடப்பட்டது. வழக்கம்போல் நடத்தப்படும் கோடை கால நல்லெழுக்கப் பயிற்சி தொடர்பாகவும் மாவட்ட வாரியாக ஆலோசனைகள் பெறப்பட்டன.

மாவட்ட நிர்வாகத்தின் பணிகளை இன்னும் வீரியப்படுத்த, அவர்களை ஊக்குவிக்கும் முகமாக டிஎன்டிஜேயின் ரியாத் மண்டலம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. தங்களது மாவட்டத்தின் செயல்பாடுகளை உடனுக்குடனே தவ்ஹீத் ஜமாஅத்தின் http://www.tntj.net/ இணையதளத்திற்கு அதிக செய்திகளை அனுப்பி வைத்து முதலிடம் பெற்ற இரமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ. 18,000ம், இரணடாம் இடம்பெற்ற கோவை மாவட்டத்திற்கு ரூ. 17,000ம், மூன்றாம் இடம் பிடித்த தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு ரூ. 15,000ம் வழங்கப்பட்டது.

மேலும் அதைத் தொடர்ந்து பத்து இடங்களை பிடித்த மாவட்டங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் 39 மாவட்டங்களுக்கும் பீ.ஜே. மொழி பெயர்த்த 156 திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு மாற்று மத அன்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பு நிர்ணய சட்டம் குறித்தும் அதில் செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மற்றங்கள் குறித்த விளக்கத்தையும் பீ.ஜே. செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

அதில் மேலாண்மைக்குழுவின் அதிகார வரம்பு என்ன? மாநில நிர்வாகத்தின் வரவு செலவுகளை சரி பார்க்க தணிக்கைகுழு அமைக்கப்பட்டதன் விபரங்களையும் அவர் விளக்கினார். மேலும் தணிக்கை குழுவின் தலைவராக அன்வர்பாட்ஷா, உறுப்பினர்களாக சைஃபுல்லாஹ் ஹாஜா, அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி, தம்மாம் தவ்ஃபீக், துபை முஹம்மது சர்புதீன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதற்கான அங்கீகாரத்தையும் செயற்குழு வழங்கியது. அதைத்தொடர் ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு செயற்குழு இனிதே நிறைவு பெற்றது.

07-3-2010 மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டில் காங்கிரஸின் துரோகமும் டி.என்.டி.ஜே.யின் போராட்டமும்

1. 2004 ல் நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தனது விசாரணை அறிக்கையை 2007ல் மத்திய சமர்ப்பித்தார். அதை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதிக்காமல் பத்திரிக்கைகள் மூலம் அறிக்கை விபரம் கசியத்தொடங்கிய பிறகு மிகவும் தாமதமாக 2009ல் நாடாளுமன்றத்தில் கமிஷன் அறிக்கையை மட்டும் சமர்ப்பித்துவிட்டு அரசின் நடவடிக்கை அறிக்கையை கூட சமர்ப்பிக்காமல் கமிஷன் அறிக்கையின் மீதும் விவாதிக்காமல்? சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் பச்சை துரோகம் செய்துவரும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

2. இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஜூலை 4 ல் சென்னைத் தீவுத் திடலில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைப்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக்கோரி 15 லட்சம் முஸ்லிம்களை திரட்டி கோரிக்கையை வென்றெடுப்பது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

3. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக கடந்த 2004 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை பிடித்தது. முழு ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தும் வெறும் கமிஷனை அமைத்ததைத் தவிர இடஒதுக்கீட்டிற்காக வேறு எந்த முயற்சியும் காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவில்லை. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைக்குப் பிறகு பொதுக்கருத்து எட்டப்பட வேண்டும் என்ற சாக்கைச் சொல்லி இடஒதுக்கீட்டை தள்ளிப்போட்டு வருகின்றது. காங்கிஸின் இந்த மெத்தனப்போக்கையும் அலட்சியப்போக்கையும் வன்மையாகக் கண்டிப்பதுடன் ரங்கனாத் கமிஷன் அறிக்கையை உடனே அமுல்படுத்துமாறு மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

ஆந்திர இடஒதுக்கீடு பறிப்புக்கு கண்டனம்

4. அண்மையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. மூன்றாவது முறையாக ஆந்திர உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்து முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டில் மண்னை அள்ளிப்போட்டுள்ளது. உடையில் கறுப்புச் சட்டையும் உள்ளத்தில் காவிச் சிந்தனையும் கொண்ட நீதிபதிகள் இந்த நீதித்துறையில் குடியேறி இருப்பதை தெள்ளத்தெளிவாக இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மத அடிப்படையிலான ஒதுக்கீடுதான் என்ற விபரம் பாமரனுக்கும் தெரிந்த உண்மையாகும். அத்துடன் ஆந்திரத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது முஸ்லிம்களில் பிற்பட்டோர்கள் என்ற அடிப்படையில் தான் என்பது மற்றொரு உண்மையாகும். இந்த உண்மைகளுக்குப் புறம்பாகவும் மாநிலத்தில் உள்ள ஒரு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு போதுமான அளவு பிரதிநிதித்துவம் இல்லை என அரசு கருதினால் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற 16(4) பிரிவு அரசியல் சட்டத்துக்கு எதிராகவும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை மதரீதியானது என்று காரணம் காட்டி ரத்து செய்திருப்பது முஸ்லிம்களுக்கு இழைத்த மாபெறும் அநீதியும் அநியாயமும் ஆகும். ஆந்திர நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு இழைத்த இந்த அநியாயத்தையும் அக்கிரமத்தையும் இம்மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது.

புதுவை மாநில அரசுக்கு கோரிக்கை

5. புதுவை மாநிலத்தில் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 2.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாக புதுவை சட்டமன்றத்தில் புதுவை காங்கிரஸ் அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தை சட்டமாக்குவோம் என்றும் ஆந்திராவைப் போன்று புதுவையில் வட்டியில்லா கடன் வழங்குவோம் என்றும் புதுவை காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் கடத்துகின்ற புதுவை அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு உடனே அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு புதுவை அரசை இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுள்ளது.

மேற்குவங்க அரசுக்கு நன்றி

6. முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ள மேற்குவங்க அரசை இச்செயற்குழு பாராட்டுகின்றது. அத்துடன் அம்மாநிலத்தில் 25 சதவீதம் முஸ்லிம்கள் வாழுகின்றனர். அவர்களின் அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்குமாறு அம்மாநில அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

சாமியார்கள் ஒடுக்கப்படவேண்டும்

7. இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் மனிதன் ஒருபோதும் கடவுளாக முடியாது. மனிதனுக்கு எந்த கடவுள் தன்மையும் கிடையாது. மனிதத்தன்மையை விட்டு மனிதன் மாறி தெய்வீகத்தன்மை அடைய முடியாது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே தரகர்கள் இருக்கக்கூடாது என்பது இஸ்லாத்தின் கடவுள் கொள்கையாகும். இந்தக் கடவுள் கொள்கையை மக்கள் புரியாத காரணத்தினால் ஒழுக்கமிக்க சாதாரண மனிதனை விட சாமியர்களை கடவுளாக நம்பி ஏமாறுகின்றனர். மக்களின் இந்த அறியாமையை பயன்படுத்தி பல சாமியார்கள் மக்களை ஏமாற்றிவருகின்றனர். எனவே மனிதன் கடவுளாக முடியாது என்ற அடிப்படையை மக்கள் விளங்கி சாமியர்களின் சதிவலையில் விழாமல் தங்களை காத்துக்கொள்ள வேண்டுமென அனைத்து சமுதாய மக்களையும் இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

8. இந்த சாமியார்களின் பட்டியலில் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தவர் நித்யானந்தா என்ற மோசடி பேர்வழி. இந்த நித்யானந்தா மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக, கர்நாடக மற்றும் மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

9. நாடு முழுவதும் ஆன்மீகத்தின் பெயரால் வளம் வருகின்ற இந்த சாமியார்கள் ஏராளமான நிலங்களை வளைத்துப்போட்டுள்ளனர். மேலும் பல்லாயிரம் கோடி அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அவர்களிடத்தில் உள்ளன. அவர்கள் அவற்றை எந்த வழியில் பெற்றார்கள் என்பதை மத்திய மாநில அரசுகள் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் மூலம் கண்டுபிடித்து முறைகேடாக அவர்களிடம் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

10. கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க உதவுகின்ற இந்த ஆசிரமங்களுக்கு அளிக்கின்ற வரிச்சலுகைகளை ரத்துசெய்ய வேண்டுமென மத்திய அரசை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

11. தங்களை கடவுளர்களாக காட்டிக்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக ஆசிரமங்கள் என்ற பெயரில் சொத்துக்களை குவித்து வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்ற பிரபலமான ஆண் பெண் சாமியார்களின் பாதங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் விழுந்து வணங்கி ஆசிபெறுவதால் இந்த சாமியார்களின் சட்டவிரோதமான செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு அதிகாரிகள் தயங்குகிறார்கள். சாமியர்களின் பெருக்கத்திற்கு இதுவே காரணம் என்று இச்செயற்குழு கருதுகிறது. மதச்சார்பின்மையை காக்கின்ற வகையில் மத்திய மாநில அமைச்சர்களும் அதிகாரிகளும் இவர்களுடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

12. மதத்தின் பெயரால் செவிடர்களை செவியேற்கச் செய்கின்றோம். குருடர்களை பார்க்கச் செய்கின்றோம் முடவர்களை நடக்கச் செய்கின்றோம் என்று மந்திரம் செய்வதாக நேரிலும் தொலைக்காட்சியிலும் நடத்தப்பட்டுவரும் அனைத்து மதத்தவர்களின் நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டுமென மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

புனே குண்டுவெடிப்பு

13. புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பை இந்த மாநில செயற்குழு கண்டிக்கின்ற அதே வேளையில் கண்காணிப்புக் கேமராவில் கூட குற்றவாளி யார்? என்று கண்டுபிடிக்க முடியாதபோது விசாரணைக்கு முன்பே எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதை இச்செயற்குழு கண்டிக்கின்றது.

14. மராட்டியம் மராட்டியர்களுக்கே என்று குரலெழுப்பி மும்பையில் இனவெறி தாக்குதலை நடத்திய சிவசேனா மற்றும் நவநிர்மான் சேனா அமைப்பினர்களின் மீது சட்டப்படி தயவுதாட்சணையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது..

15. தொடர்ந்து இந்தியர்களின் மீது இனவெறித்தாக்குதல் நடத்திவருகின்ற இனவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கின்ற ஆஸ்திரேலிய அரசை இம்மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

விலைவாசி உயர்வு

16. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருவதற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்த விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அநியாய வரிகளே காரணமாக உள்ளன. விவசாயி பாட்டாளி மற்றும் பொதுமக்களை மிகப்பெரும் அளவில் இது பாதிப்பதால் மத்திய அரசு உடனே பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப்பெறுவதுடன் பிற நாடுகளைப் போன்று நமது நாட்டிலும் பெட்ரோல் டீசலுக்கு வரி விதிப்பதை கைவிடவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

17. சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ஆதாரம் உரியோருக்கு வழங்கப்படாமல் அப்படியே திரும்ப அனுப்பப்படுகின்றது. முஸ்லிம்கள் இந்த நிதி கோரி விண்ணப்பிக்கும் போது அந்த நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றே சம்பந்தப்பட்டத் துறையினர் பதிலளிக்கின்றனர். இந்த அநீதியை உடனே தடுத்து நிறுத்தி உரியவருக்கு நிதி கிடைக்க ஆவண செய்யுமாறு மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

ஊடக கருத்து சுதந்திரம் பறிப்புக்கு கண்டனம்

18. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வரதராஜரின் மரணம் மர்மமாக நீடிக்கிறது. அது ஒரு படுகொலை என பலமான ஐயம் எழுவதால் காவல் துறை விசாரணையை சரியான கோணத்தில் கொண்டுசென்று உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர கேட்டுக்கொள்வதுடன் இது தொடர்பான செய்தியை வெளியிட்ட மக்கள் தொலைக்காட்சியின் மீது தாக்குதல் நடத்திய மார்க்ஸிஸ்ட் கட்சியினரை இம்மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஈரோட்டில் தொழிற் பூங்கா

19. நூறாண்டு காலமாக தோல் தொழிலில் சிறப்புற்று விளங்கும் ஈரோடு மாநாகரில் தோல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக ஈரோட்டில் தோல் தொழில் பூங்காவை ஏற்படுத்தித்தர வேண்டுமென இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

மகளிர் இடஒதுக்கீடு

20. பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம தொகுதிகளில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட வகை செய்யும் சட்ட மசோதாவை நாளை (8.3.2010) பிரதமர் தாக்கல் செய்ய போவதாக தெரிகிறது. இந்த முடிவு எதிர் காலத்தில் இந்திய அரசியலில் கேலிக்கூத்தாகத்தான் அமையும். எதார்த்தத்தில் ஒட்டுமொத்த மகளிர் ஜனத்தொகையில் 33 சதவிகிதம் பெண்கள் அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. மேலும் எந்த ஒரு அரசியலில் கட்சியிலும்கூட மொத்த உறுப்பினர்களில் 33 சதவிகித பேர் பெண்களாக இல்லை. சில மகளிர் அமைப்பினர்களின் பெண் பிரமுகர்களின் கோரிக்கைத்தானே தவிர ஒட்டு மொத்த பெண் சமுதாயமும் தனக்கு அரசியலில் இட ஒதுக்கீடு கேட்டு போராடவில்லை. ஒரு கட்சியின் வளர்ச்சிக்கான களப்பணியாகிய பிரச்சாரம் சுவரொட்டி ஒட்டுதல்இ சிறை செல்லுதல், இன்னபிற தியாகங்களை செய்வதில் 5 சதவிதம் கூட பெண்கள் இல்லாத நிலையில் 33 சதவிகிதம் அளிப்பது அநீதியாகும். இந்தியாவை விட அதிகமாக கல்வி அறிவிலும் பெண் உரிமையைப்பற்றியும் பேசும் மேற்கத்திய நாடுகளில் கூட 10 சதவிகிதம் பெண்கள்கூட அரசியலில் இல்லை எனும் போது கல்வி அறிவிலும் அரசியல் ஈடுபாட்டிலும் மிகவும் பின்தங்கியுள்ள இந்திய பெண்கள் சமுதாயத்தின் மீது வலிய திணிப்பதாகவே அமையும். மேலும் ஒரு குறிப்பிட்ட சில ஆணாதிக்க அரசியல்வாதிகளின் கைப்பாகையாகவே அந்த பெண்கள் இருப்பார்கள். இதை உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்பட்ட பெண்கள் பிரதிநிதிகள் விஷயத்தில் நாட்டுமக்கள் நிதர்சனமாக கண்டுவருகிறார்கள். எனவே இந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு அநீதி என இந்த செயற்குழு தீர்மானிக்கிறது.