Showing posts with label நபிவழித் திருமணம். Show all posts
Showing posts with label நபிவழித் திருமணம். Show all posts

Monday, June 23, 2014

கடற்கரைத் தெருவில் நடைபெற்ற நபிவழித் திருமணம்!

தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி அவர்களின் இல்லத்தில் இன்று (22-06-2014) காலை 11.00 மணியளவில் நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.

இதில் சென்னை ஆவடியை சேர்ந்த கபீர் அவர்களின் மகன் அப்துல் மாலிக் மணமகனுக்கு கடற்கரைதெருவை சேர்ந்த அஹமது ஜலீல் அவர்களின் மகளை 40 கிராம் தங்கத்தை மஹராக மணமகளின் சகோதரரிடம் கொடுத்து மணமுடித்தார்.

இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் புதுக்கோட்டை மாவட்ட பேச்சாளர் முஜாஹிதீன் மணமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார். இதில் கடற்கரைதெரு ஜமாஅத் நிர்வாகிகள், உட்பட பல கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.





Sunday, June 15, 2014

மேலத்தெருவில் நடைபெற்ற நபிவழி திருமணம்!

மேலத்தெரு சூனா வீட்டு அலி அக்பர் அவர்களின் மகன் தையுப் (தம்பி ராஜா) மணமகனுக்கு இன்று (15.6.2014) காலை 11.30 மணிக்கு  மணமகன் இல்லத்தில் 24 கிராம் தங்கத்தை மஹராக மணமகளின் தந்தையிடம் கொடுத்து நபிவழித் அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில் மாநில பேசாளர் கபுர் மிஸ்பாயி மணமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார்கள்.


Wednesday, April 23, 2014

தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமணம்

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சார்ந்த சகோதரர் சுல்தான் இப்ராஹீம் அவர்களின் மகன் சுலைமான் மணமகனுக்கு அதிரை தவ்ஹீத் பள்ளியில் நேற்று  22-04-2013  மாலை 5 மணியளவில் மணமகன் 10 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்து நபிவழி திருமணம் நடைபெற்றது. இதில் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாமிய திருமணங்கள் எப்படி நடைபெற வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.





Tuesday, February 18, 2014

அதிரை கடல்கரைத் தெருவில் நடைபெற்ற நபிவழித் திருமணம்!

தொண்டியை சேர்ந்த முஹம்மது பாருக் அவர்களின் மகன் முஹம்மது செய்யது மணமகனுக்கு அதிரை கடற்கரைதெருவில் நேற்று [17-02-2014] மாலை 5 மணியளவில் நபிவழி திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன் 11 பவுன் தங்க நகையை மஹராக மணமகளின் வீட்டாரிடம் கொடுத்து மணமுடித்தார்.

இதில் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தாயி Y.அன்வர் அலி அவர்கள் 'மஹரின் அவசியம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் கடற்கரைத்தெரு ஜமாஅத்தினர் உட்பட பல கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு காலத்தில் ஆடம்பர திருமணங்கள் மட்டுமே நடைபெற்று வந்த நிலை மாறி, நபிவழித் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது மட்டுமின்றி, சுன்னத் வல் ஜமாஅத்தின் பள்ளி நிர்வாகிகளும் நபிவழித் திருமணங்களுக்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்க ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சிகரமான செய்தி. பிலால் நகர் பள்ளிவாசலின் நிர்வாகத்தினர் தங்களின் பள்ளியிலேயே நபிவழித் திருமணங்களுக்கு அனுமதி தந்து, ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தினர். அதை தொடந்து தற்போது, கடல்கரைத் தெரு ஜமாஅத்தினர் நபிவழித் திருமணத்தில் பங்கேடுத்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். அதிரையில் உள்ள மற்ற ஜமாஅத்தினரும் இந்த செயலை செய்ய முன்வர வேண்டும்.


இனி, நாங்கள் வரதட்சனை மற்றும் அனாச்சாரங்கள் இல்லாத நபிவழித் திருமணங்களை மட்டும் தான் நடத்தி வைப்போம் என்று ஜமாஅத்தினர் முடிவு எடுக்க வேண்டும். வரதட்சனையும் ஆடம்பர திருமணமும் நமது ஊரை விட்டு, விரட்டப்பட்டு நபிவழித் திருமணம் மட்டுமே நடந்தால், திருமணம் செய்து சிறிது காலத்திலேயே வெளிநாடுகளுக்கு சென்று, தங்களின் சகோரிகளின் திருமணத்திற்கு செல்வம் திரட்ட செல்லும் நமது சகோதர்களின் கண்ணீர் கதை முடிவுக்கு வரும், இன்ஷா அல்லாஹ்.





Sunday, November 17, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற நபி வழி திருமணம்

கீழத்தெருவைச் சேர்ந்த அப்துல் ரெஜாக் அவர்களின் மகன் ராஜா என்கிற ஹாஜா நசுருதீன் மணமகனுக்கு அதிரை தவ்ஹீத் பள்ளியில் இன்று [ 17-11-2013 ] காலை 11 மணியளவில்  நபி வழி முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன் 2-1/4 பவுன் தங்க நகையை மஹராக மணமகளின் பொறுப்பாளரிடம் கொடுத்து மணமுடித்தார்.

இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி நடைமுறையில் திருமணங்கள் எப்படி நடக்கின்றன இஸ்லாமிய திருமணங்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.






Monday, October 21, 2013

C.M.P லைனில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

அதிராம்பட்டிணம் C.M.P லைனில் சார்ந்த சகோதரர் Y அன்சாரி அவர்களின் மகன் முஹம்மதின் திருமணம் 19.10.13 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மணமகனின் இல்லத்தில் நடைபெற்றது. திருமணத்தில் துவக்கமாக சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்கவேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அதனை தொடர்ந்து மணமகன் 38 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்து நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் எழிமையாக திருமணம் முடிந்தது மணமகன் சார்பாக வலிமாவாக டீ மற்றும் பிஸ்கட் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்









Thursday, August 22, 2013

அதிரை பிலால் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமணம்!

அதிரை பிலால் நகரைச் சார்ந்த அப்துல்லா அவர்களின் இல்லத்திருமணம்  பிலால் பள்ளியில் இன்று [22.8.2013] காலை 11 மணியளவில் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் கனவன் மனைவியின் கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் தெரு ஜமாத்தார்கள் உட்பட பலர்  கலந்துகொண்டார்கள்.




Monday, August 19, 2013

அதிரையில் நடைபெற்ற நபிவழி திருமணங்கள்

அதிரையில் நேற்று 18.8.2013 ஞாயிற்றுக்கிழமை இரு இடங்களில் நபி வழி திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்கள் நபி வழி திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்று உரையாற்றினார்கள். 

மேலத்தெருவை சார்ந்த சகோதரா் லியாக்கத் அலி இல்லத்தில் நடைபெற்ற நபி வழி திருமணம் மணமகன் 8 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்தார்கள்







நெசவுத்தெருவை சார்ந்த சகோதரர் பஷிர் அகமது இல்லத்தில் நடைபெற்ற திருமணத்தில் மணமகன் 18 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்தார்கள்


Sunday, May 26, 2013

அதிரையில் நடைபெற்ற நபிவழி திருமணம்

அதிரையில் நடைபெற்ற நபிவழி திருமணம்

அதிரை கடற்கரை தெருவை சார்ந்த மணபெண்னுக்கும் கும்பகோணம் நாச்சியார் கோவிலை சேர்ந்த மணமகனுக்கும் இன்று 26.05.13 நபிவழிப்படி திருமணம் நடைபெற்றது

இதில் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து மார்க்க பிரச்சாரம் பண்ணினார்கள். இதில் திரளான தவ்ஹீத் சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ் !!!