Monday, December 31, 2012

முத்துபேட்டை காவல்துறையை கண்டித்து போராட்டம்

முத்துபேட்டை காவல்துறையை கண்டித்து போராட்டம் 


















டெல்லி கற்பழிப்பு தீர்வு என்ன (வீடியோ)?

டெல்லி கற்பழிப்பு தீர்வு என்ன?

Sunday, December 30, 2012

மாற்று மத சகோதரருக்கு தாவாஹ்


தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை சார்பாக கடந்த 24.12.2012 அன்று மாற்றுமத சகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் நூல் கொடுத்து அவருக்கு தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்




மாலேகான் குண்டுவெடிப்பு- ஆர்எஸ்எஸ் தீவிரவாதி கைது


டெல்லி: 2006ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை சனிக்கிழமை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர். இவர் குண்டு வைத்த கும்பலைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மனோகர் சிங், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம், குர்தகேடி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருபவரான மனோகர் சிங், 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி மாலேகான் நகரில் உள்ள ஹமீதா மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார். அங்கு சைக்கிள் வெடிகுண்டை வைத்த நான்கு பேரில் இவரும் ஒருவர். இந்தக் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டு வைத்த நால்வரில் மனோகர் சிங் போக, மற்ற மூவராக ராஜேந்திர் செளத்ரி, ராம்ஜி கல்சங்க்ரா, தான் சிங் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் கல்சங்க்ரா தலைமறைவாக உள்ளார். தான் சிங், செளத்ரி ஆகியோர் 2 வாரங்களுக்கு முன்புதான் கைது செய்யப்பட்டனர். இந்த இருவருக்கும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாலேகான் குண்டுவெடிப்பில் முதலில் முஸ்லீ்ம்களைத்தான் விசாரணை அமைப்புகள் சந்தேகப்பட்டு வந்தன. ஆனால் 2010ம் ஆண்டுதான் முதல் முறையாக இதில் இந்து தீவிரவாதம் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலத்திற்கு வந்தது. முதலில் சுவாமி அசீமானந்த் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கைதானார்கள். தற்போது இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது.

நன்றி : http://tamil.oneindia.in/news/2012/12/30/india-rss-member-nia-net-2006-malegaon-blast-167088.html

முத்துப்பேட்டையில் மனித உரிமை மீறல் – காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்:


முத்துப்பேட்டையில் ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலி முஸ்லிம்களைக் கண்டித்தும், தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் இதுவரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும், TNTJ வினர் மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெறக்கோரியும் மாபெரும் கண்டன் ஆர்ப்பாட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் 31.12.12 அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற இருக்கின்றது. இதில் மாநில பேச்சாளர் தாவூது கைசர் அவர்கள் கண்டன உரையாற்றுகின்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை நமது இணையதளத்தில் நேரடியாக காணலாம்.

Saturday, December 29, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.12.12(வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.12.12

உரை :சகோதரர் அஷ்ரஃ ப்தீன்  ஃபிர்தவ்ஸி


இஸ்லாமிய குற்றவியல் சட்டம் கொடுமையானாதா ?
இஸ்லாத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா ?
ஸ்டவ் வெடித்து பெண்கள் இறப்பது எதனால் ?
வரதச்சனை கொடுமைகள் நடப்பது எதனால் ?
கற்பழிப்புகள் நடப்பது எதனால் ?
இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் என்ன ?
அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.12.12 from Jahir on Vimeo.

Friday, December 28, 2012

தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலக ஜும்மா உரை 28.12.12(வீடியோ)

தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலக ஜும்மா உரை 28.12.12

தலைப்பு :அடக்குமுறை
உரை :சகோதரர் யூசுஃப்



தலைமை ஜும்மா உரை 28.12.12 from Jahir on Vimeo.

Thursday, December 27, 2012

மலாக்கா கிளை பயான்


மலாக்கா கிளை பயான் 


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் மலாக்கா கிளையில் 25.12.2012 அன்று காலை அதிரை  தாஜ் ரெஸ்டோரென்டில் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மலாக்கா கிளை செயலாளர் தம்ரின் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.மண்டல பேச்சாளர் சகோ.யாசர் அரபாத் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பிறகு tntj பொது செயலாளர் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அழைப்புப் பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


தொழுகை from Adiraitntj on Vimeo.

அழைப்பு பணி from Adiraitntj on Vimeo.

Tuesday, December 25, 2012

ஹாஜா ஒலி அப்பா அவ்லியாவுக்கு ஆப்பு!



ஹாஜா ஒலி அப்பா அவ்லியா வைச்ச ஆப்பு! - இணைவைத்த நிலையில் மரணத்தைத் தழுவினார் அதிரை அலாவுதீன்.

ஹாஜா ஒலி அப்பா(?)வால் காப்பாற்ற முடியவில்லை ? அதிரையின் அவுலியா நேசர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

23/12/2012 அன்று அதிரை ஹாஜா ஒலி தர்ஹாவில் ஹத்தத்து இரவு அன்று மண்டகப்படி எடுத்து வந்து அவுலியா(?)வின் கபுரில் சந்தனம் பூசுவதற்காக கபுருக்கருகில் சென்றதும் கதவை மூடி விட்டனர் தர்ஹா நிர்வாகிகள்.

ஏற்கனவே சாம்பிரானி, ஊதுவத்தி எறிந்து கபுர் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் புகை மண்டலமாகி இருந்துள்ளது.

கதவைப் பூட்டியதும் லோ ப்ரஷர் நோயாளியான அலாவுதீன் புகை மண்டலத்தில் சிக்கி மூச்சுத் திணறி இறந்து விட்டார்.

அதிக நேரமாகியும் கதவு திறக்காதது கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் கதவைத் திறக்க தர்ஹா நிர்வாகிகளிடம் கோரியதும் கதவு திறக்கப்பட்டது மரக் கட்டையாக கிடந்த அலாவுதீனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் குடும்பத்தினர்.

ஏக இறைவனுக்கு இணைவைத்த நிலையில் மரணித்த இவருடைய மறுமை வாழ்வை நினைக்கும் போது நெஞ்சு கணக்கிறது.

மன்னிப்பு கிடையாது அல்லாஹ் எச்சரிக்கிறான்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48.

இன்னும் எத்தனைப் பேரை நரகிற்கு அனுப்பும் பணியை இந்த தர்ஹா நிர்வாகிகள் செய்வார்களோ தெரியாது ?

மறுமையில் மனிதர்களின் கால்களில் மிதிபடும் தர்ஹா நிர்வாகிகள்.

இவர்களால் நரகிற்கு அனுப்பப்படுபவர்கள் மறுமையில் அவர்களால் காலில் இட்டு மிதிக்கப்படுவார்கள் என்பதை அறிய வில்லை? அல்லது அறிந்தும் மறுக்கின்றனர்.

எங்கள் இறைவா! ஜின்களிலும், மனிதர்களிலும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏக இறைவனை) மறுத்தோர் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 41:29

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

திருக்குர்ஆன் 7:194

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:18)

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்' (என்பதைக் கூறுவீராக!)

(அல்குர்ஆன் 2:186)

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! 'அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 7:191 195)

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 10:106)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)


அல்லாஹ்வை தவிர எவரும் யாரையும் அழிக்கவோ காக்கவோ முடியாது என்று உறுதியாக நம்புவோம்.

எந்த அவ்லியாவிற்கும் எந்த சக்தியும் கிடையாது என்று சவால் விடுகிறோம். உண்மையில் அவ்லியாவிற்கு சக்தியிருந்தால், தவ்ஹீத் கொள்கையை ஏற்றுள்ள மக்களின் மீது கை வைத்து பார்க்கட்டும்.

நன்றி அதிரை பாருக் (சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது)

Monday, December 24, 2012

தவ்ஹீத் பள்ளியில் ஆழ்குழாய் (போர் ) போடப்பட்டது

தவ்ஹீத் பள்ளிக்கு ஆழ்குழாய்  (போர்) போடவேண்டிய அவசியம் ஏற்பட்டதால் ஒரு மாதத்திறகு முன்பு ஜீம்மாவில் அறிவிப்பு செய்து அல்லாஹ்வின் அருளாள் போர் போடுவதற்கு தேவையான பணம் முழுமையாக வந்து சேர்ந்தது அல்ஹம்துலில்லாஹ் போர் வேலை நல்லபடியாக முடிந்தது அதற்கு உதவிகள் செய்த சகோதர, சகோதரிகளுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி தருவானாக








இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்."  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)  நூல்:புகாரி1410

2:272. (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.


காவல் துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்து சனிக்கிழமை மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் (நேரடி ஒளிபரப்புடன்)


காவல்துறை மிருகங்களைக் கண்டித்து விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும் நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
திருவல்லிக்கேணியில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும்.
பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.
இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ள யுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும், சிறைக்கு முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்
29 -12-2012 அன்று நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டத்திலும் பங்கு கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது.
அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது, அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களால் முஸ்லிம்களின் போராட்டத்தை நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம் என்று திமிராகப் பேசிய DC கிரி என்பவனையும் AC செந்தில் குமரன் என்பவனையும் பதவி நீக்கம் செய்யாமல் முஸ்லிம் சமுதாயம் ஓயாது என்பதை உணர்த்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Sunday, December 23, 2012

நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்கள் கைது! காவல்துறை அராஜகம்!! – டிஎன்டிஜே முற்றுகைப்போர்!!!


நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்கள் கைது! காவல்துறை அராஜகம்!! – டிஎன்டிஜே முற்றுகைப்போர்!!!

டிசம்பர் 21ஆம் தேதி அன்று உலகம் அழியப்போவதாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட புரளி குறித்து தெளிவுபடுத்துவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தென்சென்னை மாவட்ட ஜாம்பஜார் கிளை சார்பாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

கடந்த உணர்வு 17 : 17 இதழில் 18ஆம் பக்கத்தில் வெளியியான, “டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? – கலவர பீதி கிளப்பி காசு பார்க்கும் ஊடகங்கள்! அறியாமையில் மக்கள்!!” என்ற செய்தியை துண்டுபிரசுரமாக அந்தக் கிளையினர் விநியோகம் செய்துள்ளனர்.

இந்த துண்டுபிரசுரம் விநியோகித்தற்காகத்தான் தென்சென்னை மாவட்ட ஜாம்பஜார் கிளை தலைவர் யாகூப் அவர்களை நள்ளிரவு 2.30 மணிக்கு திருவல்லிக்கேணி பகுதி ஏ.சி.செந்தில் குமரன் என்பவரது தலைமையில் சென்ற காவல்துறையினர் கைது செய்து நள்ளிரவு வேட்டையாடியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தென்சென்னை மாவட்டத் தலைவர் அப்துர்ரஹீம், மாவட்ட துணைச் செயலாளர் நூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் வீடுகளிலும் அத்துமீறி புகுந்த காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் அங்கிருந்த பெண்களை ஏசி உள்ளனர்.

நமது நிர்வாகிகளின் வீடுகளில் இருந்த பெண்கள், “எங்களது வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத சமயத்தில், அதுவும் நள்ளிரவு நேரத்தில் அத்துமீறி எப்படி நீங்கள் நுழையலாம்? அப்படி ஆண் போலீஸ் மட்டும் தனியாக நுழையலாமா? மீறி நுழைவதாக இருந்தால் பெண் போலீஸை அழைத்து வாருங்கள் என்று சொல்ல, அதையும் உதாசீனப்படுத்திய காவிக்கரை படிந்த காவல்துறையினர் நமது சகோதரிகள் இருந்த வீடுகளில் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுகளைக் காலில் போட்டு மிதித்து முஸ்லிம்கள் வீட்டில் நள்ளிரவு சோதனை நடத்திய காவல்துறையினர் அங்கிருந்த முஸ்லிம் பெண்களை கேவலமான அறுவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல் நமது சகோதரர்கள் வீடுகளுக்குள் நள்ளிரவில் படுக்கையறை வரை புகுந்து சோதனை செய்கின்றோம் என்ற பெயரில் இந்தக் கேவலச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அன்றைய தினமே அதிகாலை 4.30 மணிக்கு டி-1 காவல்நிலையத்திற்கு மாநிலச் செயலாளர் யூசுப் தலைமையில் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் கமர்தீன், அப்துல்லாஹ் ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்றனர். இந்த சம்பவத்திற்கு சூத்திரதாரியாக இருந்த ஏ.சி.செந்தில் குமரனைச் சந்தித்து, “இப்படி நள்ளிரவில் புகுந்து கைது செய்துள்ளீர்களே! இது சரியா? எனக்கேட்டதற்கு, நாங்கள் கைது செய்தது சரிதான். உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். இவர்கள் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக இந்தச் சதி வேலையைச் செய்துள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிய வந்தது.

முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு:

உடனடியாக தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். முஸ்லிம்கள் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து அராஜகம் செய்த காவல்துறையின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், இதற்கு சூத்திரதாரியாக செயல்பட்ட திருவல்லிக்கேணி ஏ.சி.செந்தில் குமரன் என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் டி-1 காவல்நிலையத்தை சம்பவம் நடந்த அதே தினமான சனிக்கிழமை மாலை 4மணிக்கு முற்றுகையிடுவதாக காலை 11மணிக்கு, டிஎன்டிஜே தென்சென்னை மாவட்டம் சார்பாக அறிவிப்புச் செய்யப்பட்டது.
குறித்த நேரத்திற்கு முன்னரே மக்கள் காவல்நிலையத்திற்கு அருகில் குவியத் தொடங்கினர்.

மிகப்பெரிய மக்கள் திரள் திரள உள்ளதாக உளவுத்துறை மூலம் அறிந்த காவல்துறை, போராட்டக் களத்தில் போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே வலுக்கட்டாயமாக கைதுப் படலத்தைத் துவக்கினர்.
நீங்கள் கைது செய்வதற்கு நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். எங்களது உணர்வுகளை மக்கள் மத்தியில் வெளிக்காட்ட விடுங்கள். பிறகு நாங்களே கைதாகின்றோம் என்று நமது மாநில நிர்வாகிகள் கூற அதையும் கேட்காத காவல்துறை நமது சகோதரர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனங்களில் ஏற்ற முயற்சிக்க அங்கு நடந்த தள்ளுமுள்ளின் காரணமாக தடியடி நடத்தி நமது சகோதரர்களுக்கு இரத்தக்களறியை ஏற்படுத்தினர்.

மற்ற கூட்டங்களிலெல்லாம் யார் மீதும் தடியடி நடத்தப்பட்டால் அவர்கள் அனைவரும் ஓடிவிடுவார்கள். ஓட்டமெடுத்ததன் விளைவாக அந்த இடத்தில் போராட்டம் நடந்ததற்குண்டான எந்த அறிகுறிகளும் தெரியாத வண்ணம் அந்த இடம் மாறிவிடும்.

ஆனால் நமது சகோதரர்களோ எதற்கும் அஞ்சாமல் உறுதியோடு நின்றதைக் காணும்போது நமது சகோதரர்கள் எப்படி வார்த்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிந்தது. தடியடி நடத்துவதே கூட்டம் கூடவிடாமல் கலைப்பதற்குத்தான். ஆனால் தடியடி நடத்தப்பட்ட பிறகுதான் மக்கள் சாரை சாரையாக அணிவகுத்து அதே இடத்தில் குழுமத் தொடங்கினர்.
சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆக்ரோஷத்துடன் காவல்நிலயத்தை முற்றுகையிட்டனர். போலீஸ் அராஜகம் ஒழிக என்ற கோசங்கள் விண்ணைப் பிளந்தன.

பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் முற்றுகையிட்டனர். ஆயிரத்திற்கும் நெருக்கமான சகோதர, சகோதரிகள் கைது செய்யப்பட்டு பல மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஆக்ரோசத்துடன் கோசமிட்டுக் கொண்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.

இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கொந்தளித்த கொதிப்பின் வெளிப்பாடு மக்களது முகங்களில் தெரிந்தது. உணர்ச்சிப் பிளம்பில் வெகுண்டெழுந்த மக்கள் அனைவரும் கைது செய்து வாகனங்களில் ஏற்றும் வரை அவர்களை ஆசுவாசப்படுத்தி போராட்டக்களத்தில் நிற்க வைப்பது கடினமான காரியமாக தென்பட்டது.

அனைவரையும் கைது செய்து ஏற்றிச் செல்லும் அளவிற்கு காவல்துறையில் வாகன வசதியும் இல்லை. அவர்கள் கொண்டு வந்த வாகனங்களும் போதவில்லை. எனவே உடனடியாக மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் ஒரு அறிவிப்பைச் செய்தார்.

கட்டுப்பட்டு நடந்த கட்டுப்பாடு மிக்க கூட்டம்:

மக்கள் குறைவாக இருந்தபோது, சொற்பமான மக்களை போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே கைது செய்ய நிர்பந்தப்படுத்தி தடியடி நடத்தினீர்கள். ஆனால் இப்போது எங்களைக் கைது செய்ய உங்களுக்கு வாகனங்கள் போதவில்லை.

நீங்கள் எங்களைக் கைது செய்ய பலவந்தப்படுத்தி தடியடி நடத்தியுள்ளீர்கள். இந்த தடியடிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். எங்களது உரிமைகளைப் பெறுவதற்காக உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டோம். அப்படிப்பட்ட கொள்கை உறுதி மிக்க கூட்டம்தான் இந்தக்கூட்டம்.

இதுபோன்ற பல தடியடிகளையும், இன்னல்களையும் சந்தித்துத்தான் நாங்கள் இங்கு நின்று கொண்டிருக்கின்றோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, அனைவரும் எந்தவிதமான சப்தமுமில்லாமல் அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும் எனவும் மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் கட்டளையிட்டதும் அனைவரும் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

பேச்சுவார்த்தைக்கு அழைத்த காவல்துறை:

அனைவரும் அமைதியான முறையில் கலைந்து சென்றதும் காவல்துறையினர் நமது மாநில நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஜாயிண்ட் கமிஷனர் ரவிக்குமார் மற்றும் டி.சி.கிரி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.

இரவு 7மணிக்கு ஆரம்பமான பேச்சுவார்த்தை 1மணி நேரம் நீடித்தது. அதில் நள்ளிரவுக் கைதுக்கு வருத்தம் தெரிவித்த காவல்துறை உயர் அதிகாரிகள், தடியடி நடத்தியதற்கும் வருத்தம் தெரிவித்தனர்.

ஏற்கனவே 23 முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து போராட்டம் நடத்துவதாகச் சொல்லி அதில் பலவிதமான அசம்பாவிதங்களை அரங்கேற்றி, முஸ்லிம் அமைப்புகள் என்றாலே அவர்கள் இப்படித்தான் என்ற அவப்பெயரை ஏற்படுத்திவிட்டனர். அதுதான் இந்த தடியடியை கீழ்மட்ட போலீசார் நிகழ்த்துவதற்குக் காரணம் என்றும், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டதாகவும், இனியொருகாலம் இதுபோல நடக்காது என்றும் கூறி, மண்டபத்தில் கைது செய்து வைத்துள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க உத்தரவிடுவதாகவும் அவர்கள் கூறினர். ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை திரும்பப் பெறுவது குறித்தும் பேசப்பட்டது.
கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நமது சகோதர, சகோதரிகள் இரவு 8.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

அத்துடன் துண்டுப்பிரசுரம் வினியோகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் மீது போடப்பட்ட வழக்கை திங்கட் கிழமை நீதிமன்றத்தில் திரும்பப்பெறுவதாகவும் உறுதியளித்தனர்
.
ஒரு காலத்தில் முஸ்லிம்கள் தி.மு.க.வின் வாக்கு வங்கிகளாக இருந்தனர். கருணாநிதி ஆட்சியில் டிசம்பர் ஆறு வரும்போதெல்லாம் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து காவல் துறையினர் நடத்திய வெறியாட்டம் காரணமாக தி.மு.க.வை முஸ்லிம்கள் நஞ்சென வெறுத்தனர். முஸ்லிம்கள் தக்க பாடம் கற்பித்தவுடன் இந்த அராஜகம் முடிவுக்கு வந்தது.

அதே அராஜகத்தைத்தான் செந்தில் குமரன் என்ற காவி அதிகாரி மூலம் அ.தி.மு.க. அரசு ஆரம்பித்து வைத்துள்ளது.

வினியோகிக்கப்பட்ட பிரசுரம் வழக்குப் பதிவு செய்யத் தக்கதல்ல என்றாலும் ஒரு வேளை வழக்குப் போடுவதாக இருந்தால் தவ்ஹீத் ஜமாத்துக்கு தெரிவித்தால் வழக்கு போடப்பட்டவர்களை போலீஸில் அல்லது நீதி மன்றத்தில் ஒப்படைக்க தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்காகவே காவிச் சிந்தனையுடன் இந்த அராஜகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கொலை கொள்ளை போன்ற பாதகச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் அதைக் தடுக்க வக்கில்லாத காவல் துறையினர் நோட்டீஸ் கொடுத்ததற்காக இப்படி நடந்து கொண்டது முஸ்லிம்களை அச்சுறுத்தவும் அவர்களின் உரிமைகளைப் பறிக்கவும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

போடப்பட்ட பொய் வழக்கு வாபஸ் பெறப்பட்டால் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்ற போதும் எதிர்காலத்தில் இது போல் நடக்காமல் இருக்க செந்தில் குமரன் உள்ளிட்ட காவி அதிகாரிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தவும் அதை வென்றெடுக்கவும் எத்தகைய வழிமுறையைக் கையாள்வது என்பது குறித்தும் நிர்வாகக் குழு கூடி தக்க முடிவை அறிவிக்கும். இன்ஷா அல்லாஹ்

அதிமுக அரசு இனிமேல் காவிச் சிந்தனையுடன் தான் நடக்கும் என்ற அறிகுறிகள் அதிகமாகி வருகின்றன. முஸ்லிம்களின் எதிர்காலம் கவலைக்குரியதாக இருக்கக் கூடாது என்பதற்கு ஏற்ற நடவடிக்கையை தவ்ஹீத் ஜமாஅத் செய்யும். எந்த அடக்குமுறைக்கும் இந்த ஜமாஅத் அடங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
துண்டுபிரசுரத்தில் இருந்தது என்ன? :

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக விநியோகம் செய்யப்பட்ட துண்டுபிரசுரத்தில் “உலகம் அழியப்போகின்றது என்று பரப்பப்படும் பீதிக்குள்ளான மக்களை ஆசுவாசப்படுத்தும் வகையிலும், எப்போது உலகம் அழியும் என்பது குறித்த செய்திகளை அல்லாஹ்வும், அவனுடைய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் எப்படி தெளிவுபடுத்தியுள்ளார்கள் என்ற செய்திகளையும் கொண்டவையாக அமைக்கப்பட்டிருந்தன.

அதில் கடலூரில் உள்ள வடலூரில் வள்ளலார் ஏற்றிவைத்த தீபம் அணைந்துவிட்டதாகவும், வள்ளலார் ஏற்றிவைத்த தீபம் அணைந்த காரணத்தால்தான் உலகம் அழியப்போகின்றது என்று பரப்பப்படும் பீதியை போக்கும் வகையிலும் விழிப்புணர்வு வரிகள் இடம்பெற்றிருந்தன.
வள்ளலார் ஏற்றிவைத்த தீபம் அணைந்த காரணத்தால் உலகம் அழியப்போகின்றது என்று சிலர் வந்தந்தி பரப்பி வருகின்றனர். அவர் ஏற்றி வைத்த தீபம் அணைவது இருக்கட்டும், அதை ஏற்றிவைத்த வள்ளலாரே இறந்துவிட்டாரே! இந்த செய்தியை மக்கள் சிந்திக்கமாட்டார்களா? என்று கேட்கப்பட்ட கேள்விதான் இந்து முன்னணி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இன்னபிற சங்பரிவார கும்பல்களின் மனதை புண்படுத்திவிட்டதாம்.
காரணம் நம்முடைய துண்டு பிரசுரத்தில் வள்ளலார் இறந்துவிட்டதாக குறிப்பிட்டிருக்கின்றோம். ஆனால் வள்ளலார் இறக்கவில்லை. இன்றுவரை அவர் உயிரோடு இருக்கின்றார். உயிரோடு உள்ளவரை இறந்துவிட்டார் என்று சொல்லி எங்களது மனதை புண்படுத்திவிட்டார்கள் முஸ்லிம்கள். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என்பதுதான் சங்பரிவாரக் கும்பலின் குற்றச்சாட்டு.

இந்த துண்டுபிரசுர விநியோகத்தைக் கண்டித்து அனைத்து சங்பரிவார அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கடந்த 20.12.12 வியாழக்கிழமை அன்று சாலை மறியல் செய்தனர். அதில் 25க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களது தூண்டுதலின் பேரில் காவி கயவர்களுக்கு ஆதாரவாகத்தான் இந்த நள்ளிரவு கைது படலத்தை காவல்துறை அரங்கேற்றியுள்ளது.
தீபம் அணைந்து விட்டதால் உலகம் அழியும் என்று சொன்னால் அழியப் போகும் உலகத்தில் இந்து அல்லாத மக்களும் உள்ளனர். அவர்கள் அழியப்போகிறார்கள் என்று சொல்வது எங்களை பாதிக்கிறது என்று நாம் புகார் கொடுத்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?


Saturday, December 22, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 14.12.12(வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா
உரை :சகோ அப்துல் ரஹ்மான் ஃ பிர்தவ்ஸி



அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 14.12.12 from Adiraitntj on Vimeo.

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 21.12.12(வீடியோ)


உரை சகோ அஷ்ராப்தீன் ஃபிர்தவ்சி

நரகம் எவ்வாறு இருக்கும் ?
குலம்,ஜாதி பார்க்கலாமா?
படைப்பினங்களை வணங்கலாமா ?
கொலைசெய்வது கூடுமா ?
தற்கொலை செய்வது கூடுமா ?
வட்டி வாங்கலாமா ?

21.12.12.உலகம் அழியாது








Thursday, December 20, 2012

டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியாது! - மாற்றுமத சகோதரர்களுக்கு விழிப்புணர்வு நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 20-12-2012 அன்று டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியாது ! என்ற தலைப்பில் மாற்றுமத சகோதரர்களுக்கு விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் செய்தது அல்ஹம்துலில்லாஹ்.











Wednesday, December 19, 2012

போப் ஆண்டவர் வாக்கு மூலம்!


டிசம்பர் 25-ல் ஏசு பிறந்தார் என்பது தவறு : போப் ஆண்டவர் வாக்கு மூலம்! – கிறித்தவ மக்கள் அதிர்ச்சி!!

கிறித்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கிறித்தவ சகோதரர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.  

 போப் ஆண்டவர் அறிவித்துள்ள இந்தச் செய்தி இத்தனை ஆண்டுகள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த கிறித்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமா? ஏசு பிறந்த ஆண்டு எது என்பதும் தவறாகவே மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் போப் ஆண்டவர்.

தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் :

 16வது "பென்னடிக்ட்" போப் ஆண்டவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள ஜீஸஸ் ஆஃப் நஸ்ரேத் : தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் ('Jesus of Nazareth: The Infancy Narratives') என்ற புத்தகத்தின் 3ம் பாகத்தில், இயேசு பிறந்த நாள் என்று சொல்லப்பட்டு வரும் "டிசம்பர் 25" என்பது தவறு, இயேசு பிறந்ததாக நம்பப்படும் வருடத்திலும் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது என்ற உண்மையை கூறியுள்ளார்.

 டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றீர்களே!அதற்கு பைபிளில் ஆதாரம் உள்ளதா என கிறித்தவ சகோதரர்களிடத்தில் கேட்டால் பதில் இல்லாமல் இருந்து வந்தது. போப் ஆண்டவரின் விளக்கம் அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

 இதற்கு முன்பும் இயேசுவின் வரலாற்றில் தவறுகள் உள்ளன, என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், கத்தோலிக்க நிறுவனரான "போப்" ஒருவரே இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது, இதுவே முதல் முறையாகும்.

 இந்த புத்தகம், 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பல நாடுகளிலும் விநியோகம் செய்ய அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் என்ற இந்த நூல் இதற்கு முன்பு இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. தற்போது போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட் எழுதியுள்ள மூன்றாம் பாகம் என்பது ஏசுவுடைய சிறு வயது முதலான நிகழ்வுகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் போப் அவர்கள் ஏசுவின் பிறப்பு குறித்து பேசும்போதுதான் இந்த உண்மை வெளிவந்துள்ளது.

 தற்போது பரவலாக நம்பப் பட்டு வரும் இயேசுவின் பிறந்த வருடம் தவறு என்றும், அதற்கு சில வருடங்களுக்கு முன்னரே இயேசுவின் பிறப்பு நிகழ்ந்துள்ளது எனவும் போப்பாண்டவர் அறிவித்துள்ளார்.

 நிகழ்காலத்தில் பெரும்பாலான மக்களால் பாவிக்கப்பட்டு வரும் காலண்டர் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான டியானிசியஸ் எக்ஸிகுஸ் (Dionysius Exiguus) என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர்தான் இந்த ஆண்டுக்கணக்கை தவறாக கூறிவிட்டார் என்று போப் தெரிவித்துள்ளார்.

 இதற்கு முன்னரும் கூட இயேசுவின் பிறந்த தினம் குறித்து கிறித்தவர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. இதில் பெரும்பாலான கிறித்தவர்கள் இயேசு கி.மு6 தொடக்கம் முதல் கி.மு4 இடையிலான காலப் பகுதியில் பிறந்திருக்கலாம் என நம்புகின்றனர். அதில் வேடிக்கை என்னவென்றால் கி.பி மற்றும் கி.மு என்று பிரிப்பதே இவரது பிறந்த நாளை வைத்துத்தான் எனும்போது அவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதிலேயே கருத்து வேறுபாடு வருவது ஏசுவின் வரலாறு எந்த அளவிற்கு பலவீனமான வரலாறாக அமைந்துள்ளது என்பதை படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அடுத்த அதிர்ச்சித் தகவல் :

 உலகில் வாழும் சுமார் ஒரு பில்லியன் கத்தோலிக்கர்களின் மதத் தலைவரான 85 வயதுடைய 16ஆம் பெனடிக்ட் போப்பாண்டவர் அவர்கள் இப்புத்தகத்தில் தெரிவித்துள்ள மற்றுமொரு கருத்து அனைத்து கிறித்தவ சகோதரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்தகவல் என்ன தெரியுமா? கிறித்தவ மதத்தில் கழுதைகள் உட்பட ஏனைய விலங்குகள் இயேசுவின் பாரம்பரிய பிறப்பு வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவ்விலங்குகளுக்கும் கிறித்தவ மதத்துக்கும் துளிகூட சம்பந்தம் இல்லையென்றும் கூறியிருப்பதுதான்.

 இது மட்டுமல்லாமல், கிறித்தவ மதத்தில் குறிப்பிடப்படும் தேவதைகள், ஆடு மேய்ப்பவர்களுக்கு இயேசு பிறக்கப் போகிறார் என்று முன்னறிவிப்பு செய்து பாடல் பாடியதாக வரக்கூடிய சம்பவங்களும் பொய் என்றும் அதற்கு எவ்விதமான சான்றுகளும் இல்லை என்றும் போப்பாண்டவர் கூறியுள்ளார்.

மாட்டுத்தொழுவத்தில் ஏசு பிறந்தார் என்பதும் பொய்யாம்:

 அதுமட்டுமல்லாமல் ஏசு மாட்டுத்தொழுவத்தில் பிறந்ததாகக் கூறி மாட்டுத்தொழுவம் போன்று கொழு பொம்மைகளை அமைத்து கிறித்தவர்கள் பில்டப் கொடுப்பார்கள். போப் ஆண்டவர் அவர்கள் அது குறித்த உண்மைகளையும் போட்டு உடைத்துள்ளார். மாட்டுத்தொழுவத்தில் ஏசு பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 கிறித்தவர்கள் தங்களது மத ஆதாரமாக பைபிளைத்தான் வைத்துள்ளனர். உண்மையைச் சொல்வதாக இருந்தால் இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றியோ, பிறந்த தினத்தைப் பற்றியோ, பிறந்த ஆண்டைப் பற்றியோ பைபிளில் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இவற்றைப் பற்றிய ஒருமித்த கருத்து என்றைக்கும் ஏற்பட்டதில்லை. பல குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன.

 இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி என்று நிரூபிக்க முடியாது. பல காலங்களில் இயேசுவின் பிறந்த நாள் என்று பல நாட்கள் கிறிஸ்தவர்களால் கருதப்பட்டு, கொண்டாடப்பட்டு வந்துள்ளன. சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவை இயேசுவின் பிறந்த நாளைப் பற்றிய தகவலைப் புறக்கணித்தன.

 இயேசுவின் நெருங்கிய தோழர்களால், இயேசுவின் தாயாரும் சகோதரரும் உயிரோடிருக்கும்போது எழுதப்பட்டதாகக் கருதப்படும் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றி தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

மத்தேயுவுக்கும், லூக்காவுக்கும் முரண்பாடு:

 ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மத்தேயு, ஏரோது என்ற மன்னன் இயேசுவைக் கொல்ல திட்டம் தீட்டியதையும், அதனால் ஏசுவின் தாயார் மரியாளும், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட யோசேப்பும், குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிப் போனதாகவும் கூறுகிறார். ஆனால் லூக்கா இந்த நிகழ்வுகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை.

 இவ்வளவு முக்கியமான நிகழ்வை பரிசுத்த ஆவி ஏன் சொல்லாமல் விட்டது என்று நமக்கு பெரும் சந்தேகம் ஏற்படுகின்றது. ஆனால், நாற்பது நாட்கள் சுத்திகரிப்பு நிறைவேறிய பின்பு இயேசுவை பகிரங்கமாக ஆலயத்துக்கு கொண்டு வந்ததாக லூக்கா கூறுகிறார். ஏரோது உண்மையில் இயேசுவை கொலை செய்ய விரும்பியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்திருக்கலாம். எகிப்துக்கு ஓடிப் போனதாக மத்தேயு சொன்னதும், ஆலயத்திற்குக் கொண்டு வந்ததாக லூக்கா சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.  

 மேற்கண்ட முரண்பாடுகளும் இது குறித்து பைபிளில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் கட்டுக்கதைகள்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இது குறித்த செய்தியை சகோதரர் பீஜே அவர்கள் தனது "இதுதான் பைபிள்" என்ற நூலில் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார். அது குறித்த செய்தியை கீழே உள்ள செய்தியில் காண்க!

சூழ்நிலைத் தடுமாற்றம்:

கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குத் தோன்றி, ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத் தேடுவான். ஆதலால் நீ எழுந்து பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிப் போய் நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து இரவில் பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குப் போய் ஏரோதுவின் மரண பரியந்தம் அங்கே இருந்தான்.

(மத்தேயு 2:13,14)

 இயேசு பிறந்தபோது ஏரோது என்னும் கொடிய அரசன் ஆட்சி புரிந்ததாகவும் அவன் குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதாகவும் அதற்குப் பயந்து இயேசுவின் பெற்றோர் இயேசுவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்குச் சென்றதாகவும் மேற்கண்ட வசனத்தில் மத்தேயு கூறுகிறார். ஏரோது இறந்த பிறகு கூட அவனது மகன் அரகெலாவு என்பவர் ஆட்சிக்கு வந்ததால் அதற்குப் பயந்து கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்கு வராமல் நாசரேத்து எனும் ஊருக்குச் சென்றதாகவும் மத்தேயு (2:19-23) கூறுகிறார்.

ஆனால் லூக்காவோ இயேசு பிறந்தபோது சர்வ சாதாரணமான நிலை நிலவியதாகக் கூறுகிறார்.

 அவர்கள் பெத்லகேமிலேயே இருந்ததாகவும் அங்கிருந்து எருசலேமுக்கு வந்து போனதாகவும் அவரது பெற்றோர் வருஷம்தோறும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போவார்கள் எனவும் லூக்கா கூறுகிறார்.

(லூக்கா 2:15-52)

 ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும் அவர்கள் எகிப்துக்கு ஓடிப் போனதையும் அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும் எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்தச் சமயத்தில் சர்வ சாதாரணமான நிலைமை நிலவியதாகவும் ஆண்டு தோறும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகிறார்.

 பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டவற்றில் ஏன் இந்த முரண்பாடு?

 லூக்கா கூறுவது போல் சாதாரணமான நிலைமை இருந்ததா?

 மத்தேயு கூறுவது போல் பயங்கரமான நிலை நிலவியதா?

 ஆண்டுதோறும் எருசலேமுக்கு வந்து போவார்கள் என்பது உண்மையா?

 அல்லது கர்த்தரின் கனவுக் கட்டளைப்படி எகிப்திலேயே இருந்தது உண்மையா?

 ஒவ்வொரு சுவிசேஷக்காரரும் அவருக்குத் தோன்றியதையும் கேள்விப்பட்டதையெல்லாம் எழுதியிருக்கிறார்களேயல்லாமல் கர்த்தரின் தூண்டுதலால் எழுதவில்லை என்பதற்கு இது போதுமான சான்று அல்லாவா? இனியும் இதை இறைவேதம் என்று சொல்ல முடியுமா?

உண்மையை ஒப்புக்கொண்ட போப்:

 போப் ஆண்டவர் தனது நூலில் மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோர் ஏசுவின் பிறப்பு விஷயத்தில் முரண்பட்ட செய்திகளை சொல்கின்றனர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வாறு ஒப்புக்கொண்டுவிட்டு அதை சரிக்கட்டுவதற்கு அவர் ஒரு காரணத்தை சொல்லியுள்ளார். மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோரின் நோக்கம் வரலாற்றை மிகச் சரியாக எடுத்துரைக்க வேண்டும் என்பது அல்ல; மாறாக நம்பிக்கையின் ஒளியை உலகிற்கு பரப்புவதுதான் என்று கூறியுள்ளார்.  

 போப் ஆண்டவர் கூறுவது உண்மையாக இருக்குமேயானால், முரண்பட்ட செய்திகளை அவர்கள் கூறியிருக்கக் கூடாது. அவ்வாறு இருவரும் முரண்பட்ட செய்திகளைக் கூறுவதே அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் ஒளியை இருளச் செய்துவிடுகின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

எதற்குமே ஆதரமில்லை:

 கிறித்தவ சகோதரர்கள் மிகவும் விமர்சையாகக் கொண்டாடக்கூடிய இரண்டு பெரும் பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ்; மற்றொன்று ஈஸ்டர் சண்டே.

 கிறிஸ்துமஸ் என்பது ஏசுவின் பிறந்த தினம் என்றும், ஈஸ்டர் என்பது ஏசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு உயிர்த்தெழுந்த தினம் என்றும் கிறித்தவ சகோதரர்கள் நம்புகின்றனர்.

 இதில் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ஆம் தேதி என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்பதை போப் ஆண்டவர் அவர்களின் ஒப்புதல் வாக்குமுலத்தின் மூலம் அறிந்து கொண்டோம். சரி! ஈஸ்டர் சண்டே என்பதற்காவது ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று பைபிளின் அடிப்படையில் ஆய்வு செய்தால் அந்த ஆய்வு முடிவுகளும் கிறித்தவ சகோதரர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகத்தான் உள்ளது. அது குறித்த அதிர்ச்சித்தகவல்களை ஈஸ்டர் சண்டேவா? ஈஸ்டர் மண்டேவா? என்ற தனிக்கட்டுரையில் காண்க!

நன்றி    
http://onlinepj.com/katturaikal/dec25-il-easu-printhar-enpathu-thavaru/

Tuesday, December 18, 2012

வேண்டாம் தர்ஹா வழிபாடு ! கந்தூரியை கண்டித்து பேனர்

வேண்டாம் தர்ஹா வழிபாடு
அதிராம்பட்டினத்தில் நடைப்பெறும் கந்தூரி விழாவை கண்டித்து வைக்கப்பட்ட பேனர்!