Saturday, June 30, 2012

தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறார்கள்? (வீடியோ)

தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறார்கள்? (வீடியோ)

உரை: ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி

Friday, June 29, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 29.06.2012


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 29.06.2012


Thursday, June 28, 2012

சுகாதாரத்துறை அளித்த விளக்கம் சரியா? - விளக்கம் என்ற பெயரில் ம.ம.கவின் முகத்தில் கரி பூசிய சுகாதாரத்துறை!


விளக்கம் என்ற பெயரில் ..கவின் முகத்தில் கரி பூசிய சுகாதாரத்துறை :

இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது என்று தவ்ஹீத் ஜமாஅத் குற்றம்சாட்டி போராட்டத்தில் இறங்க, மற்ற முஸ்லிம் அமைப்புகளும் இந்த துரோகத்தை பெயரளவில் கண்டிக்க, ..கட்சியும் தடாலடியாக கணடன அறிக்கை வெளியிட என்று தமிழக அரசியல் களம் சூடு பறந்தது.

ஆரம்பத்தில் முஸ்லிம்கள் திட்டமிட்டு வஞ்சிங்கப்பட்டுவிட்டார்கள்; புறக்கணிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கண்டன அறிக்கை வெளியிட்ட ..கட்சியினர் பிறகு அந்தர்பல்டி அடித்து இடஒதுக்கீட்டில் துரோகம் நடக்கவில்லை என்று தமிழக அரசுக்கு முட்டுக்கொடுத்தனர். தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்தினர்.

இந்த விஷயத்தில் ..கட்சியினர் செய்த துரோகத்தைக் கண்டித்து மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டத்தை 24.06.12 ஞாயிறன்று நடத்தவுள்ளோம் என்று கடந்த 22.06.12 வெள்ளிக்கிழமை அன்று அறிவிப்பு நாலாபுறமும் பறக்க ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்கப்போகின்றது என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்த பரபரப்பான நேரத்தில், இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அறிவித்த 24.06.12 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11மணியளவில்,  இந்த ஒப்பந்த மருத்துவர்கள் தேர்வை பொறுப்பேற்று நடத்திய தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, இது குறித்த ஒரு அறிக்கையை அன்றைய மாலை நேர பதிப்பாக வெளிவரக்கூடிய இதழ்களில் வெளியிட்டு மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு மருத்துவர்கள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் : மருத்துவத்துறை அதிகாரிகள் விளக்கம்என்ற அந்த செய்தியை பார்த்த பிறகுதான் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்ட செய்தி மேலும் உறுதி செய்யப்பட்டது.

மேலும் தாங்கள் செய்த தவறை மறைக்க வேண்டும் என்பதற்காக பல செட்டிங் வேலைகளை செய்து விளக்கம் என்ற பெயரில் உளறிக் கொட்டி மாட்டிக்கொண்டுள்ளனர் என்பது அந்த அறிக்கையின் வாயிலாக தெள்ளத்தெளிவாக விளங்கியது.

சுகாதாரத்துறை அளித்த இந்த உளறல் விளக்கத்தின் மூலம் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் அம்பலமானது.

தமிழக அரசு செய்த இந்த துரோகத்திற்கு ஆதரவாக ஜால்ரா தட்டிக்கொண்டு, அவர்களுக்கு கூஜா தூக்கிக் கொண்டிருந்த ..கவின் முகத்தில் மருத்துவத்துறையின் அந்த அறிக்கை கரியை அள்ளிப்பூசியது.

அந்த அறிக்கையில் உள்ள முரண்பாடுகளையும், குழப்பங்களையும் இப்போது அலசுவோம்.

இதோ அந்த அறிக்கை:

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும்  நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு  ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள மொத்தம் 835 மருத்துவர் மற்றும் சிறப்பு மருத்துவர் காலிப் பணியிடங்கள் வேலை வாய்ப்பகம் மூலம் பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு நிரப்பிடுவதற்கு 2.1.12 அன்று ஆணை வெளியிடப்பட்டது.

அவற்றுள்  682 எம்.பி.பி.எஸ். மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1:5 விகிதாசாரப்படி மருத்துவர்கள் பதிவு மூப்புப் பட்டியல் பெறப்பட்டது. அதில் இனச் சுழற்சி முறைப்படி பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பைச் சார்ந்தவர்களுக்குரிய ஒதுக்கீடு 24 ஆகும்.

முதற்கட்டமாக  வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 2448 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதில் 88 பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் நபர்களின் பெயரும் அடங்கும்.
ஜனவரி 20 மற்றும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் பணி நியமன கலந்தாய்வு நடத்திட திட்டமிட்டு 09.01.2012 அன்று அனைவருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இணையதளத்திலும் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சில முஸ்லீம் சமுதாய மருத்துவர்கள்  இணையதளத்திலிருந்த பட்டியலிலுள்ள  முஸ்லீம் நபர்களைவிட பதிவு  மூப்பு உடையவர்களாக இருந்தால்  வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகியதைத் தொடர்ந்து, 20.01.2012 அன்று பதிவு தேதியின்படி 122 பிற்படுத்ப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் தவறுதலாக விடுபட்டுள்ளது என்று வேலைவாய்ப்பு அலுவலகத்திருந்து ஓர் பட்டியல் பெறப்பட்டது.

அவ்வாறு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பின்னர் வழங்கப்பட்ட 122 நபர்களும் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட 88 நபர்களைக் காட்டிலும் பதிவு தேதியின் அடிப்படையில் முதுநிலை பெற்றவர்கள் என்பதால் தந்தி வாயிலாக கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி மாதம் நடைபெற்ற கலந்தாய்வின்போதே பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்திற்கான ஒதுக்கப்பட்ட 24 காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டது. மேலும், பொதுப் பிரிவின் கீழ் வேலை வாய்ப்பக அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 28 முஸ்லீம் சமுதாயத்தினருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பணிநியமனக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 33 பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் (16.11.2010 முதல் 14.12.2011 வரையிலான) பணியில் சேர தேர்வு செய்ததின் பேரில் காத்திருப்போர் பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே  மீதமுள்ள 423 எம்.பி.பி.எஸ். காலி பணியிடங்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1349 நபர்களின் பட்டியல் பெறப்பட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பிற்ப்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினரைவிட முந்தைய தேதியில் (2008, 2009 மற்றும் 11/2010) பதிவு செய்த பிற சமுதாயத்தினர் இடம் பெற்று இருந்தனர்.

காத்திருப்போர்  பட்டியலில் வைக்கப்பட்டுள்ள  பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் மருத்துவர்கள் மேற்கூறிய  1349 நபர்களில் பட்டியலில் இருந்தவர்களுக்குப் பிறகு பதிவு செய்தவராதலால் அவர்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. முதற்கட்ட பணிநியமன கலந்தாய்விலேயே பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுகத்தினருக்கான இடஒதுக்கீடு (3.5 சதவீதம்) 24 நபர்கள் மற்றும் பொது பிரிவு 28 நபர்களும் ஆக மொத்தம் 52 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே  மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பணி நியமனக் கலந்தாய்வின்போது மற்ற சமுதாயத்தினரைச் சார்ந்தவரை கொண்டு 371 காலிப் பணியிடங்கள் இனச் சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட்டது. தற்பொழுது இன்னமும் நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்கள் 52 ஆகும்.

இவற்றை  நிரப்ப மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் கோரப்பட உள்ளது. பெறப்படும் பட்டியலில் பதிவுத் தேதியின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் நபர்களை உரிய இடத்தில் பொருத்தி பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையின் வாயிலாக வெளிவந்த துரோகம் :

இந்த அறிக்கையில் 682 மருத்துவர்கள் நியமனம் செய்ய ஆனை பிறப்பிக்கப்பட்டதாகவும், அதற்குத்தான் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டியல் கோரப்பட்டதாகவும், அதில் 122 முஸ்லிம்களின் பெயர் விடுபட்டு விட்டதாகவும், அதை பலர் சுட்டிக்காட்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகிய பிறகுதான் விடுபட்ட அந்த 122 முஸ்லிம்களின் பெயர் பட்டியலை வாங்கி அவர்களுக்கு தந்தி மூலம் கவுன்சிலிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறுகின்றது மருத்துவத்துறை.

அப்படியானால் முஸ்லிம்களை அழைப்பதில் மட்டும் இப்படி திட்டமிட்டு தவறுகள் நடப்பது ஏன்?
முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் பொடுபோக்கா?

இப்படி விடுபட்ட முஸ்லிம்களின் பட்டியலை, அவர்களுக்கு தந்தி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்ட செய்தியை, அவர்களின் விபரங்களை இன்று வரைக்கும் இணையதளத்தில் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்திருப்பது ஏன்?

தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தி, பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்த பிறகு அலறி அடித்துக் கொண்டு இப்போது இந்த உண்மைகளை வெளியில் கக்கும் மர்மம் என்ன?

இதைக்கேட்க நாதியில்லை என்பதாலா? எவ்வளவுதான் நாம் இதில் துரோகம் செய்தாலும் எச்சில் பிழைப்பு பிழைக்கும் சில வாலாட்டும் நாலுகால் கூட்டம் இதற்கும் முட்டுக்கொடுத்து துரோகம் செய்யும் அதிகாரிகளை காப்பாற்றிவிடுவார்கள் என்ற தைரியத்திலா?

122 முஸ்லிம்களை திட்டமிட்டு புறக்கணித்துவிட்டு, பிறகு பிரச்சனை கிளம்பிய பிறகுதான் இந்த கவுன்சிலிங்கிற்காக தந்தி மூலம் அழைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி இந்த அறிக்கையின் வாயிலாக நமக்குத் தெரியவருகின்றது. இது முதல் துரோகம்.

செய்த துரோகத்தை இனி வரக்கூடிய காலங்களில் சரிசெய்வோம்: அடுத்தபடியாக 1349 பேர்களை அழைத்ததில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று நாம் சொன்ன குற்றச்சாட்டிற்கு சரியான பதில் இந்த அறிக்கையில் அளிக்கப்படவில்லை.

மாறாக இனிமேல் முஸ்லிம்களின் பட்டியலை வாங்கி தகுதியான முஸ்லிம் பிரதி நிதிகளை நியமிப்போம். செய்த துரோகத்தை இனி வரக்கூடிய காலங்களில் சரிசெய்வோம் என்ற ரீதியில்தான், தாங்கள் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் முகமாகத்தான் இந்த அறிக்கையின் வாசகங்கள் அமைந்துள்ளன.

அதாவது தேவைப்படும் இடங்கள் 682. அதில் 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடங்கள் 24.

இந்த 24 இடங்களையும் முதல் முதலில் அழைக்கப்பட்ட கவுன்சிலிங்கிலிலேயே முஸ்லிம்கள் 24 பேரை நியமித்துவிட்டோம் என்று விளக்கம் கூறி சப்பைக்கட்டு கட்டுவார்களேயானால்இவற்றை நிரப்ப மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் கோரப்பட உள்ளது. பெறப்படும் பட்டியலில் பதிவுத் தேதியின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் நபர்களை உரிய இடத்தில் பொருத்தி பணி நியமனம் மேற்கொள்ளப்படும்என்று மருத்துவத்துறை கூற வேண்டிய அவசியம் என்ன?

அதுதான் 682 பேர்களை நியமித்ததில் 24 முஸ்லிம்களை 3.5 சதவீத அடிப்படையில் நியமித்துவிட்டீர்களே!  பிறகு மறுபடியும் ஏன் முஸ்லிம்களை அழைக்க வேண்டும்.

ஆக, “குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்என்ற அடிப்படையில் தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக செட்டிங் கணக்குகளை யோசித்து யோசித்து வெளியிடுகின்றனர் என்பது இதன் வாயிலாக தெளிவாகின்றதா? இல்லையா?

வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் கோரப்பட உள்ளது. பெறப்படும் பட்டியலில் பதிவுத் தேதியின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் நபர்களை உரிய இடத்தில் பொருத்தி பணி நியமனம் மேற்கொள்ளப்படும்என்று தங்களது விளக்க அறிக்கையில் கூறி,
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முஸ்லிம்கள் பட்டியல் பெறப்பட்டு தகுதியான முஸ்லிம்கள்  உரிய இடத்தில் பொருத்தி பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்ற இந்த அறிக்கையின் வாசகங்களின் மூலம், ஜால்ரா மன்னருக்கு செருப்படி கொடுத்து அவர்களது முகத்தில் கரி பூசப்பட்டுள்ளதா? இல்லையா?

ஜால்ரா மன்னர் சொன்னது என்னவென்றால், “முஸ்லிம்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டதுஎன்று. ஆனால் மருத்துவ தேர்வாணையமோ, “நாங்கள் முழுமையாக வழங்கவில்லை. சில முஸ்லிம்கள் விடுபட்டுள்ளனர். மறுபடியும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டியலை வாங்கி முஸ்லிம்களுக்கு சரியான பிரதிநிதித்துவத்தை இனிமேல்  வழங்குவோம்என்கின்றது. இப்போது புரிகின்றதா? இவர்களின் சமுதாய துரோகம்.

அடுத்து மருத்துவத்துறையின் அடுத்த கட்ட மோசடி அவர்களது அறிக்கையின் வாயிலாக அம்பலமாகின்றது. அவர்கள் தங்களது விளக்க அறிக்கையில்,

பணிநியமனக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 33 பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் (16.11.2010 முதல் 14.12.2011 வரையிலான) பணியில் சேர இடம் தேர்வு செய்ததின் பேரில் காத்திருப்போர் பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறதுஎன்று கூறியுள்ளனர்.

14.12.2011 தேதிக்கு பின்னர் பதிவு செய்த முஸ்லிம் அல்லாதவர்களையெல்லாம் பணியமர்த்த அழைப்பு விடுத்துவிட்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு புதியதாக பதிவு செய்தவர்கள் பட்டியலை பெற்று அதில் உள்ளவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கினால் அது துரோகமா? இல்லையா?

இந்த அப்பட்டமான துரோகத்தை இந்த விஷயத்தில் இந்த அதிகாரிகள் செய்துள்ளார்களா? இல்லையா?

2012ல் ஜனவரி மாதம் வேலைக்கு ஆட்களை எடுப்பதாக இருந்தால் அதற்கு முன்னரே காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்கும் முஸ்லிம்களுக்கு இடமளித்துவிட்டல்லவா அடுத்தவர்களை அழைக்க வேண்டும். “இதை கேட்பார் யாருமில்லையா?” என்று தலையங்கம் எழுத ஆள் இல்லாத காரணத்தினால்தான் இந்த நெறிமுறையும் கூட பேணப்படுவதில்லை.

அதாவது 16.11.2010 முதல் 14.12.2011 வரையிலான கலந்தாய்வில் 33 முஸ்லிம்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்யாமல் அப்படியே பத்திரமாக பாதுகாப்பாக அவர்களது பட்டியலை வைத்துக் கொண்டுள்ளார்களாம். அதற்கு முன்னரே பதிவு மூப்பு அடிப்படையில் பதிவு செய்து பணி நியமனத்திற்காக காத்திருக்கும் 33 முஸ்லிம்கள் என்ன கிள்ளுக்கீரையா? இவர்களது இந்த அறிக்கையின் வாயிலாக இந்த துரோகமும் தற்போது தெரிய வந்துள்ளது.

இதையெல்லாம் கண்டிக்க இந்த ஜால்ரா மன்னர்களுக்கு துப்பில்லையே!

இதற்கிடையே மீதமுள்ள 423 எம்.பி.பி.எஸ். காலி பணியிடங்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1349 நபர்களின் பட்டியல் பெறப்பட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினரைவிட முந்தைய தேதியில் (2008, 2009 மற்றும் 11/2010) பதிவு செய்த பிற சமுதாயத்தினர் இடம் பெற்று இருந்தனர்.

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் மருத்துவர்கள் மேற்கூறிய 1349 நபர்களில் பட்டியலில் இருந்தவர்களுக்கு பிறகு பதிவு செய்தவராதலால் அவர்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை”  என்று நாம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளது சுகாதாரத்துறை.

அதாவது அழைக்கப்பட்ட 1349 நபர்களில் இரு முஸ்லிம் கூட இல்லையே என்ற நமது கேள்விக்கு இதுதான் விடையாம். இதிலும் இவர்கள் செய்துள்ள தில்லுமுல்லுகள் அம்பலமாகின்றது.

பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினரைவிட முந்தைய தேதியில் (2008, 2009 மற்றும் 11/2010) பதிவு செய்த பிற சமுதாயத்தினர் இடம் பெற்று இருந்தனர்.

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் மருத்துவர்கள் மேற்கூறிய 1349 நபர்களில் பட்டியலில் இருந்தவர்களுக்கு பிறகு பதிவு செய்தவராதலால் அவர்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை”  என்று அப்பட்டமான பொய்யை இந்த விஷயத்தில் அள்ளிவிட்டுள்ளனர்.

அதாவது 1349 பேர்களில் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்பதற்கு இவர்கள்கூறும் காரணம், பதிவு மூப்பு அடிப்படையில் இந்த 1349 பேருக்கு முன்பாக எந்த முஸ்லிமும் விண்ணப்பிக்க வில்லை. அதனால்தான் அந்த பட்டியலில் 1349 பிற மதத்தவர்கள் மட்டும் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்குப் பிறகுதான் மற்ற முஸ்லிம்கள் பதிவு செய்திருப்பதால் இந்த 1349 பேரில் யாரும் முஸ்லிம் இல்லை என்று தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யை சொல்லி இதில் தாங்கள் செய்த தவறை மறைக்கப்பார்க்கின்றனர்.

ஆனால் இதில் இவர்கள் செய்த தில்லுமுல்லுகளை தற்போது ஆதாரத்துடன் நிரூபிக்கின்றோம்.

அதாவது நெல்லையைச் சேர்ந்த ஹாஜா மைதீன் என்ற முஸ்லிம் சகோதரர் பதிவு செய்தது 2011 ஆம் ஆண்டு நம்பர் 25ஆம் தேதி. பதிவு மூப்பு அடிப்படையில் இந்த ஹாஜா மைதீனைப் போன்ற பல முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கு அழைப்பு வராதா என்று காத்திருக்கும் போது அவர்களை புறந்தள்ளிவிட்டு, திட்டமிட்டு புறக்கணித்து விட்டு அவர்களுக்கு பிறகு 6.1.2012 ஆம் ஆண்டு பதிவு செய்த பாரதிராஜன் என்ற பிற்படுத்தப்பட்ட சகோதரரை இவர்கள் அழைத்துள்ளார்கள் என்றால் இந்த விஷயத்தில் இவர்கள் செய்த துரோகமும், அந்த துரோகத்தை முறைக்க இவர்கள் செய்த மோசடியும் அம்பலமாகின்றதா? இல்லையா?

திடீரென்று 423 காலிபணியிடங்கள் முளைத்தது எப்படி?

அறிக்கையில் இடம்பெற்றுள்ள மேற்கூறிய வாசகத்தில், “இதற்கிடையே மீதமுள்ள 423 எம்.பி.பி.எஸ். காலி பணியிடங்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1349 நபர்களின் பட்டியல் பெறப்பட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டதுஎன்று கூறி உளறியுள்ளனர்.

அதாவது, மொத்தம் பணி நியமனம் செய்யப்பட வேண்டிய இடங்கள் 835. அதில் 682 இடங்களுக்கு பணிநியமனம் வழங்கியுள்ளோம் என்று இவர்கள் சொல்வார்களேயானால், மீதம் உள்ள காலிப்பணியிடங்கள் 153தான். ஆனால் 423 காலிப்பணியிடங்கள் என்று அதிலும் குழப்பம் செய்து அறிக்கை வெளியிடுகின்றார்கள்.

இந்த அளவிற்கு கூறுகெட்டு அறிக்கை வெளியிடும் இந்தத் துறைதான் மருத்துவர்களை நியமிக்கும் துறையாம். விளங்கிப்போய்விடும். முதலில் இவர்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும். அதுதான் சரியாகப் படுகின்றது.

முதற்கட்ட பணிநியமன கலந்தாய்விலேயே பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுகத்தினருக்கான இடஒதுக்கீடு (3.5 சதவீதம்) 24 நபர்கள் மற்றும் பொது பிரிவு 28 நபர்களும் ஆக மொத்தம் 52 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதுஎன்று இவர்கள் கூறுவதிலும் நமக்கு இன்னும் முழுநம்பிக்கை வரவில்லை.

52 முஸ்லிம்களுக்கு இவர்கள் இடஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவின் கீழ் சேர்த்து பணி நியமனம் வழங்கியிருப்பார்களேயானால் இவ்வளவு கலேபரத்திற்குப் பிறகும் அந்த தேர்வு செய்யப்பட்ட முஸ்லிம்களின் பட்டியலை இதுவரை அவர்கள் வெளியிடாதது ஏன்?

நமது ஜால்ரா மன்னர்தான், “எனக்கு அவர் தந்தார்; இவர் தந்தார்என்று கூறிக்கொண்டு, கையில் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு திரிகின்றார். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை அரசு தரப்பு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகும் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட முஸ்லிம்களின் பட்டியலை வெளியிடுவதற்கு தயக்கம் காட்டுகின்றார்கள் என்றால், நாம் போராட்டம் நடத்திய பிறகு தமிழக அளவில் இந்தப் பிரச்சனை பூதாகரமாக ஆக்கப்பட்ட பிறகு, வேறு வழியின்றி, 52 முஸ்லிம்களை அவசர அவசரமாக தேர்வு செய்து, ஏற்கனவே இவர்கள் சொன்னது போல, பணி நியமன ஆணையையும் நமது போராட்டத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு தந்தி அடித்து தெரிவித்துள்ளார்களோ என்னவோ தெரியவில்லை.

மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பணி நியமனக் கலந்தாய்வின்போது மற்ற சமுதாயத்தினரைச் சார்ந்தவரை கொண்டு 371 காலிப் பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட்டது. தற்பொழுது இன்னமும் நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்கள் 52 ஆகும்என்று கூறி மறுபடியும் குழப்புகின்றனர். 371 காலிப் பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட்டது எப்படி? திடீரென்று எப்படி 52 காலிப்பணியிடங்கள் முளைத்தன என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை.

இறுதியாக, இவற்றை நிரப்ப மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் கோரப்பட உள்ளது. பெறப்படும் பட்டியலில் பதிவுத் தேதியின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் நபர்களை உரிய இடத்தில் பொருத்தி பணி நியமனம் மேற்கொள்ளப்படும்என்று சொல்லி முஸ்லிம்கள் சரியான அளவிற்கு நிரப்பப்படுவார்கள் என்று கூறியிருப்பதால் இனிமேலும் இதில் எவ்வித திருகுதாளங்களோ, தில்லுமுல்லுகளோ செய்யாமல் சரியான முறையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்.

ஆக மொத்தத்தில் எப்படியோ போகட்டும், முஸ்லிம்களுக்கு அவர்களது விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுத்தால் இந்தப் பிரச்சனையை தவ்ஹீத் ஜமாஅத் விட்டுவிடும். அதைவிடுத்து தாங்கள் செய்த துரோகத்தை நியாயப்படுத்த முயல்வார்களேயானால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் என்பதை மட்டும் தற்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.

அதுபோக இப்படி முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் துரோகத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் களம் காணும் போது, இந்த சமுதாய துரோகிகள், “போராட்டம் நடத்த வேண்டாம்; அதை கொச்சைப்படுத்தி முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்து இப்படி கேவலப்படாமலாவது இருக்கட்டும்என்று இந்த சமுதாய துரோகிகளை எச்சரிக்கின்றோம்.

நன்றி: ததஜ இணையதளம்

Monday, June 25, 2012

காணாமல் போன கண்டன அறிக்கை - ஜால்ரா இயக்கத்தின் உண்மை முகம்!


சமீபத்தில் இட ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் முற்றுகை பேராட்டம் நடத்தியது. இந்த பேராட்டம் நடந்த பிறகு ஆளும் கட்சிக்கு அடிமைகளாக இருக்கும் இயக்கத்தினர், ஆளும் கட்சிக்கு வழக்கம் போல்  ஜால்ரா தட்டியுள்ளார்கள்.

இந்த ஜால்ராவை வைத்துக்கொண்டு சிலர் தவ்ஹீத் ஜமாஅத் ஏதோ விளம்பரத்திற்காக பேராட்டம் நடத்தியதை போல் ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

இட ஒதுக்கீடு முறைகேட்டை, கலைஞர், முஸ்லிம் லீக் காதர் முகைதீன் ஆகியோர் கண்டித்தனர். தவ்ஹீத் ஜமாஅத் இதற்காக போராட்டம் நடத்தியது. இப்போது இவர்கள் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று ஜால்ரா தட்டியுள்ளார்கள். இவர்களுக்கு சமுதாய அக்கரையிருந்தால், தவ்ஹீத் ஜமாஅத்தின் பேராட்டத்தை பாராட்டி இருக்க வேண்டும். நாம் தான் அடிமைகளாக மாறிவிட்டோம், இவர்களாவது சமுதாயத்திற்கு ஒரு துரோகம் இழைக்கப்படுவதை உணர்ந்தவுடன் பொங்கி எழுகிறார்களே என்று. இவர்கள் அதை செய்யவில்லை. மாறாக, எதையுமே சுயமாக சிந்திக்க தெரியாத இவர்கள், தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் அறிவித்தவுடன், தங்களின் அதிகாரபூர்வ (காணாமல் போகும் செய்திகளையே) இணையதளத்தில் இடஒதுக்கீடு முறைகேட்டை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுயிருந்தார்கள். 

அந்த அறிக்கை இதோ. இப்போது அந்த அறிக்கையை அவர்களது இணையதளத்தில் காணவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் விளம்பரத்திற்காக போராட்டம் நடத்தியது என்றால், விளம்பரத்திற்காக கண்டன அறிக்கை வெளியிடலாமா? கழக கண்மணிகளுக்கு புரிந்தால் சரி. 


(கழக கண்மணிகளே, உங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் வரும் செய்திகள் அனைத்தையும் ஸ்கீரீன் சாட் போட்டு வையுங்கள். அப்போது தான் உங்களின் இயக்கத்தின் சால்ராவை புரிய முடியும்)

ஸ்கீரீன் சாட் எடுத்து வைத்த முஹம்மது உபைஸ் அவர்களுக்கு நன்றிகள்!

தானே புயல் நிவாரணத்தை பாராட்டி, தானே புயல் வராதா என்று தமிழக மக்கள் ஏங்குவதாக ஜால்ரா தட்டி, அதிமுகவினர் கூட அடிக்காத ஜால்ராவை அடித்த பேராசிரியர், இதில் ஜால்ரா தட்டி இருக்கிறாரா இல்லை என்பதை காலம் பதில் சொல்லும்.

தொடர்புடையவை:

Sunday, June 24, 2012

தப்லீக் ஜமாஅத்தின் வழிகேடுகள் (வீடியோ)

தப்லீக் ஜமாஅத்தின் வழிகேடுகள் (வீடியோ)

Friday, June 22, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 22.06.2012


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 22.06.2012


Wednesday, June 20, 2012

வழிகெட்ட ஸலஃபி கொள்கை - குழப்பவாதிகளிடம் சில கேள்விகள்!


இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்கள் பாடுபட்டு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய இஸ்லாத்தை மக்களுக்கு வாழ்க்கை நெறியாக விட்டுச் சென்றுள்ளார்கள். இறைவனுடைய இந்த மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் அருமைத் தோழர்களும் பெரும்பெரும் தியாகங்களைச் செய்தார்கள்.

குர்ஆனும் நபிமொழி மட்டுமே மார்க்கம். இந்த இரண்டும் அல்லாத வேறெதுவும் மார்க்கமில்லை என்று குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாகக் கூறுகின்றன.  எனவே மனிதர்களின் சுயக் கருத்துக்கள் கலந்துவிடாமல் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய தூய்மையான மார்க்கமாக இஸ்லாம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் தியாகத்தையும் நபித்தோழர்களின் தியாகங்களையும் அர்த்தமற்றதாக்கும் வகையில் இன்றைக்குச் சிலர் குர்ஆனும் நபிமொழிகளும் மட்டுமே மார்க்கம் என்ற இஸ்லாத்தின் பாதுகாப்புச் சுவரை உடைக்க நினைக்கின்றனர். இந்த இழிசெயலைச் செய்வதற்கு இவர்கள் நபித்தோழர்களை ஆயுதமாகப் பயன்படுத்தி நபித்தோழர்களையும் அதனைத் தொடர்ந்து சலபுக் கொள்கையில் உள்ள இமாம்களையும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.

தங்களுடைய இந்த வழிகேடான கொள்கையை நிரூபிப்பதற்கு இவர்கள் வைக்கும் வாதங்களையும் ஆதாரங்களையும் பார்த்தால் இவர்கள் மத்ஹபுவாதிகளையும் தரீக்காவாதிகளையும் மிஞ்சிவிட்டார்கள் என்பதை பொதுமக்கள் கூட அறியலாம். இவர்கள் ஆதாரமாகக் காட்டும் செய்திகளுக்கும் வாதங்களுக்கும் சரியான பதிலை பல வருடங்க்ளுக்கு முன்பே நாம் கொடுத்துள்ளோம், அதை முறையாக எதிர்கொள்ள திராணியில்லாமல் பொது மக்களைக் குழப்பிவருகின்றனர்.
 


இது குறித்து முழுவிபரம் அறிய நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலை வாசிக்கவும்
.

நாம் இவர்களிடம் கேட்கின்ற கேள்விகளுக்கும் நம்முடைய ஆதாரங்களுக்கும் பதில் சொல்லாமல் பாமர மக்களைத் தேடிச் சென்று குழப்பும் செயலைச் செய்து வருகின்றார்கள்.

எனவே இந்த நோட்டீஸின் வாயிலாக இவர்களிடம் நாம் சில கேள்விகளைக் கேட்கிறோம். இந்தக் கேள்விகளுக்கு இவர்கள் சரியான பதிலை ஆதாரத்துடன் கூற வேண்டும். இதை இவர்கள் செய்யாவிட்டால் இவர்கள் வழிகேடர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

நீங்கள் சரியான ஓரிறைக் கொள்கையாளர்களா?

ஏகத்துவம் என்றால் இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளும் அதிகாரங்களும் அவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது. அவன் அல்லாத வேறு யாரிடமும் இவை இல்லை என்று நம்புவதாகும். இறைவனுக்கு மட்டும் உரிய பல அதிகாரங்களில் ஒன்று பிறருக்கு இருப்பதாக நம்பினாலும் அது ஏகத்துவத்திற்கு எதிரான நம்பிக்கையாகும்.

அனைத்தையும் இறைவனே செய்கிறான் என்று நம்பும் ஒருவன் குழந்தை பாக்கியம் கொடுக்கும் ஆற்றல் மட்டும் இறந்துபோன அல்லது உயிருடன் உள்ள ஒருவருக்கு உள்ளது எனக் கூறிவிட்டால் அவன் ஏகத்துவத்தை விட்டு வெளியேறிவிடுகிறான்.

தர்ஹா வழிபாட்டையும் பித்அத் அநாச்சாரங்களையும் ஒரு பக்கம் எதிர்த்துக்கொண்டு மறுபக்கம் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுபவர்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள்.
பின்வரும் வசனம் மார்க்கத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது எனக் கூறுகின்றது.

أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ(3)39

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.

அல்குர்ஆன் (39 : 3)

எனவே நபித்தோழர்கள் கூறுவதெல்லாம் மார்க்கம் என்று கூறும் நீங்கள் ஓரிறைக் கொள்கையாளர்களா?

நீங்கள் நபிவழி நடப்பவர்களா?

தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் வருவதற்கு முன் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டை மக்கள் அறியாது இருந்தனர். முன்னோர்கள், பெரியார்கள், இமாம்கள் எதைக் கூறினாலும் அதை மார்க்கச் சட்டமாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படை. இவ்விரண்டிலும் கூறப்பட்டவை மட்டுமே இஸ்லாம். இவ்விரண்டிலும் இல்லாத விஷயங்கள் ஒருக்காலும் மார்க்கமாக முடியாது என்று குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : முஸ்லிம் (1573)

மத்ஹபைப் பின்பற்றிக் கொண்டிருந்த மக்களிடம் இது போன்ற எண்ணற்ற ஆதாரங்களை எடுத்துச் சொல்லி குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டின் பால் அவர்களை அழைத்தோம். அல்லாஹ்வின் கிருபையால் பலர் மத்ஹபிலிருந்து விடுபட்டார்கள்.

இவ்வாறு மத்ஹபிலிருந்து விடுப்பட்ட நீங்கள் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி இன்றைக்கு வேறொரு மத்ஹபில் சிக்கியுள்ளீர்கள். அன்றைக்கு மத்ஹபுவாதிகள் தங்களுடைய வழிகேடான கொள்கைக்கு எந்த வசனங்களை ஆதாரமாக காட்டினார்களோ அதே வசனங்களை இன்றைக்கு நீங்கள் நபித்தோழர்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஆதாரமாகக் காட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள்.

இமாம்களையும், பெரியார்களையும் பின்பற்றுவது மத்ஹபு என்றால் நபித்தோழர்களைப் பின்பற்றுவதும் மத்ஹபு தான்.  நீங்கள் அன்றைக்கு எந்த வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறி மத்ஹபுகள் கூடாது எனக் கூறினார்களோ அதே வசனங்களும் ஹதீஸ்களும் நபித்தோழர்களைப் பின்பற்றுவது என நீங்கள் எடுத்துள்ள நிலைபாட்டிற்கு எதிராகவே உள்ளன.

இந்த அடிப்படையில் நீங்களும் மத்ஹபுவாதிகளாக இருந்து கொண்டு ஜம்மிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்று பெயர் வைத்து குர்ஆன் ஹதீஸைக் கடைபிடிக்கும் ஏகத்துவவாதிகளைப் போல் காட்டிக்கொள்வது ஏன்?

நபித்தோழர்களுக்கு இறைச் செய்தி வந்ததா?

முஸ்லிம்கள் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீச் செய்தியை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! 

அல்குர்ஆன் (7 : 3)

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்றால் நபித்தோழர்களுக்கு இறைவனிடமிருந்து வஹீ வந்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வேறு யாருக்கும் வஹீ வரவில்லை என்று நீங்களும் நம்பும் போது நபித்தோழர்களைப் பின்பற்றலாம் என்று எப்படி கூறலாம்?

நபித்தோழர்கள் நபிமார்களா?

குர்ஆன் வசனத்துக்கு மற்ற குர்ஆன் வசனங்களைக் கொண்டோ அல்லது நபிமொழிகளைக் கொண்டோ விளக்கம் கொடுத்தால் அந்த விளக்கத்தை ஏற்கலாம். இதனால் குர்ஆன் ஹதீஸ் என்ற வட்டத்தை நாம் தாண்டியவர்களாக ஆகமாட்டோம். இந்த அடிப்படையில் தான் தவ்ஹீத் ஜமாத் குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கின்றது.

எந்த ஆதாரத்தையும் காட்டாமல் குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.

وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ(44)16

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் (16 : 44)

நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததைப் போன்று அதற்குரிய விளக்கமும் இறைவனிடமிருந்து அருளப்பட்டது. இதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ (17) فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ (18) ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ (19)75

(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

அல்குர்ஆன் (75 : 17)

குர்ஆனுக்கு நபித்தோழர்கள் கொடுக்கும் விளக்கங்களுக்கு ஆதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது சரியா? தவறா? என்றெல்லாம் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று ஜாக் மற்றும் சலபுக் கொள்கையைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

எனவே விளக்கம் என்ற பெயரில் நபித்தோழர்களின் கருத்துக்களை ஏற்க வேண்டும் என்று கூறும் நீங்கள் நபித்தோழர்களை நபிமார்களின் இடத்தில் வைத்து விட்டீர்கள்.

மார்க்கம் பாதுகாக்கப்படவில்லையா?

நபித்தோழர்கள் சிறப்புக்குரியவர்கள். மதிப்புக்குரியவர்கள் என்று நம்ப வேண்டும். அதே நேரத்தில் அவர்களைப் பின்பற்றக்கூடாது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை.   

ஏனென்றால் இஸ்லாம் இறைவன் புறத்திலிருந்து வந்த மார்க்கம் என்பதால் இந்த மார்க்கத்தில் தவறான கருத்துக்கள் எதுவும் இல்லை. ஆனால் நபித்தோழர்கள் உட்பட மனிதர்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தாலும் அவர்கள் கூறிய மார்க்க விசயங்கள் அனைத்தும் அவர்கள் சுயமாகச் சொன்னவை அல்ல. மாறாக இறைவன் கூறியதை அப்படியே கூறினார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் கூறிய மார்க்க விசயங்களில் தவறு வர வாய்ப்பில்லை.

இந்த பாதுகாப்புத் தன்மை நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. நபித்தோழர்களுக்கும் இல்லை. இதை மக்களுக்குப் புரிய வைப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் மார்க்க விசயங்களில் நபித்தோழர்களிடத்தில் ஏற்பட்ட சில தவறுகளை நாம் சுட்டிக்காட்டினோம்.

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் நாம் சுட்டிக்காட்டிய செய்திகளை மறுக்காமல் அவை நபித்தோழர்களிடம் ஏற்பட்ட தவறுகள் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

நம்முடைய கேள்வி என்னவென்றால் மார்க்க விசயங்களில் நபித்தோழர்கள் தவறான தீர்ப்பு அளிக்க வாய்ப்பு இருக்கின்ற போது அவர்கள் கூறியதைக் கண்மூடிக்கொண்டு மார்க்கமாக ஏற்க வேண்டும் என்று கூறினால் இந்தக் கூற்று நம்முடைய மார்க்கத்தின் பாதுகாப்பில் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லையா?

மார்க்கம் முழுமையாகவில்லையா?

இஸ்லாமிய மார்க்கத்தை முழுமை செய்துவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் (5 : 3)

நபித்தோழர்களின் விளக்கம் இல்லாமல் மார்க்கத்தை விளங்க முடியாது என்றால் அல்லாஹ்வின் மார்க்கம் முழுமையடைவில்லை என்று கூற வேண்டி வரும். இது குர்ஆனுக்கு எதிரான கூற்றாகும்.

உங்கள் யூகம் மார்க்கமாகுமா?

நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் செய்யாத எந்த ஒரு காரியத்தையும் செய்யமாட்டார்கள். அவர்கள் ஒரு காரியத்தை செய்தால் நிச்சயம் அதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் இருக்கும். எனவே நபித்தோழர்களைப் பின்பற்றுவது தவறில்லை என்று வாதிடுகின்றீர்கள்.

மார்க்க விசயங்களில் நபித்தோழர்கள் தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் நீங்கள் இவ்வாறு வாதிடுவது மடமையாக உங்களுக்குத் தெரியவில்லையா?

முத்தலாக் விசயத்தில் (முஸ்லிம் : 2932) நபி (ஸல்) அவர்கள் ஒரு முடிவு எடுத்திருக்க உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமான முடிவை எடுத்து செயல்படுத்தினார்களே. உமர் (ரலி) அவர்கள் எடுத்த முடிவு நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு எடுத்த முடிவா?

தயம்மும் தொடர்பான வசனத்தையும் நபிமொழியையும் ஆதாரமாகக் கொண்டு தயம்மும் செய்யக்கூடாது என அபூமூசா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்களே (புகாரி 346). இது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு எடுத்த முடிவா?

53 : 11 வது வசனம் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்ததைப் பற்றி பேசுகிறது என நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்திருக்க இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்களே (முஸ்லிம் : 284) இது நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்ட விளக்கமா?

தமத்துவு முறையிலும் கிரான் முறையிலும் ஹஜ் செய்வதை உஸ்மான் (ரலி) அவர்கள் தடுத்துள்ளார்களே (புகாரி : 1563) இது நபி (ஸல்) அவர்களிடமிருந்து உஸ்மான் (ரலி) அவர்கள் கேட்டதா?

நீங்கள் சஹாபாக்கள் விசயத்தில் இவ்வாறு யூகம் செய்தது போல் தாபியீன்கள் தபஅ தாபியீன்கள் அதற்கு அடுத்து வந்தவர்கள் விசயத்திலும் யூகம் செய்ய முடியும்.

தாபியீன்கள் சஹாபாக்களிடமிருந்து கேட்காமல் கூறமாட்டார்கள் என்று யூகித்து தாபியீன்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?

தபஅ தாபீயீன்கள் தாபியீன்களிடம் கேட்டிருப்பார்கள் என்று யூகித்து தபஅ தாபியீன்களை பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?

இதனடிப்படையில் முன்னோர்கள் பெரியார்கள் இமாம்கள் ஆகியோரைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?

பட்டியல் எங்கே?

நபித்தோழர்களும் மனிதர்களே. மார்க்க விசயங்களில் அவர்களிடம் தவறுகள் ஏற்பட்டுள்ளது. இதற்குரிய சான்றுகளை நாம் சொல்லும்போது நாங்கள் தனித்தனி நபித்தோழரின் கருத்துக்களை ஏற்பதில்லை. அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டு எடுத்த முடிவையே ஏற்போம் என்று கூறுகின்றீர்கள்.

அப்படியானால் ஒரு வருடம் நிறைவடையும் வரை ஸகாத் இல்லை என்பதற்கும் பெருநாள் தினத்தில் அல்லாஹு அக்பர் என்ற வாசகத்துடன் கூடுதலாக சில வாசகங்களை சேர்த்துச் சொல்வதற்கும் இன்னும் பல மார்க்க விசயங்களுக்கு தனித்தனி நபித்தோழர்களின் கூற்றுக்களை நீங்கள் ஆதாரமாக ஏன் காட்டுகிறீர்கள்? இவற்றை ஆதாரமாகக் கொண்டு மார்க்க சட்டங்களைக் கூறுவது ஏன்?

ஒரு மார்க்க விசயத்தில் அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டதாக எந்த ஒன்றையும் உங்களால் ஒருக்காலும் காட்ட முடியாது. ஏனென்றால் நபித்தோழர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பிரிந்து கிடந்தனர். இவ்வாறிருக்க அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டார்கள் என்று எப்படிக் கூற முடியும்? எனவே மார்க்கத்தில் பொய் சொல்வதை முதலில் விட்டுவிடுங்கள்.

அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டுக் கூறிய மார்க்க விசயங்களை நீங்கள் பட்டியலிட வேண்டும். இதைச் செய்யாவிட்டால் இல்லாத ஒன்றை கற்பனை செய்து இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள் என்பதை மக்கள் புரிவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது உமர் (ரலி) அவர்கள் உட்பட பல நபித்தோழர்கள் நபியவர்களின் மரணம் பற்றி அறிவிக்கும் ஒரு வசனத்தை மறந்து விட்டார்கள். இந்தச் செய்தி புகாரியில் 4454 வது செய்தியாக இடம்பெற்றுள்ளது.

ஒரு ஊரில் கொள்ளை நோய் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை நபி (ஸல்) கூறியுள்ளார்கள். இந்தச் செய்தி பல நபித்தோழர்களுக்குத் தெரியவில்லை. இது புகாரியில் 5729 வது செய்தியாக இடம்பெற்றுள்ளது.

எனவே பல நபித்தோழர்கள் செய்தால் அது மார்க்கமாகிவிடும் என்று எப்படிக் கூற முடியும்?

நபித்தோழர் தனித்து கருத்து கூறினால் அது மார்க்கம். இல்லை. பல நபித்தோழர்களின் கூற்று மார்க்கம் என்று நீங்கள் எடுத்துள்ள நிலைபாட்டுக்கு எந்தக் குர்ஆன் வசனமும் நபிமொழியும் ஆதாரமாக உள்ளது?

எனவே வழக்கம் போல் தவ்ஹீத் ஜமாத்தினர் நபித்தோழர்களை ஏசுகிறார்கள். அவமதிக்கிறார்கள்  என்று பல்லவி படிக்காமல் நாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். நபித்தோழர்களின் சிறப்புகளை பட்டியலிட்டுவிட்டு நழுவிச் செல்லக்கூடாது.

அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்வானாக.

உங்கள் கொள்கையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்கள் அகில உலகத் தலைவர்களையோ உங்கள் தமிழகத் தலைவர்களையோ அழைத்து வந்து எங்களுடன் விவாதிக்க முன்வாருங்கள். அப்படி வந்தால் உங்களுக்கும் கப்ரு வணங்கிகளுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதையும் உங்களுக்கும் மத்ஹப்வாதிகளுக்கும்  அடிப்படை ஒன்றுதான் என்பதையும் உங்களின் நடைமுறையும் தரீக்காவதிகளின் நடைமுறையும் ஒன்றுதான் என்பதையும் நாம் நிரூபித்து உங்களின் வழிகேட்டை உங்களுக்குப் புரியவைக்க தயாராக இருக்கிறோம்.

நன்றி: ஆன்லைன் பீஜே

Tuesday, June 19, 2012

தமிழகத்தைப் புரட்டிப் போட்ட தவ்ஹீத் எழுச்சி (கூத்தாநல்லூர்) - வீடியோ

தமிழகத்தைப் புரட்டிப் போட்ட தவ்ஹீத் எழுச்சி (கூத்தாநல்லூர்)

உரை : P J

சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரை வைத்துக்கொண்டு, பித்அத் செய்வதையே கொள்கையாக கொண்டுள்ள சுன்னத் அல்லாத ஜமாஅத்தினரின் முகத்திரை கிழித்து  எறிந்த பீஜே அவர்களின் கூத்தாநல்லூர் உரை.



Friday, June 15, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 15.06.2012


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 15.06.2012


Wednesday, June 13, 2012

PJ பற்றி அவதூறு பரப்பும் கோவை அய்யுப்!


பள்ளி கட்டுவதற்காக பணம் வாங்கிவிட்டு அதனை மோசடி செய்ததாக பி.ஜெ மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவதூறாக பல இடங்களில் பேசி வரும் கோவை அய்யுப் என்ற பொய்யன் தொடர்பாக தெரிந்து கொள்ளுங்கள்.



தனது பேச்சிற்கு எவ்வித ஆதாரமும் காட்ட முடியாமல் பொய்யைப் பரப்பும் இவரைப் போன்றவர்களை இன்னும் நம்புபவர்கள் இனியாவது உண்மையை புரிவார்களா?


இவர் பற்றி மேலதிக தகவல்களுக்கு!


மறுமையை பற்றி அழுது அழுது பேசும் இந்த மகானின் உண்மை முகத்தை கோவை ஜாக் சகோதரர்களிடமும் கோவை மக்களிடம் விசாரித்து பாருங்கள். 

இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம், தேர்வாணயம் முற்றுகை : தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!


முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்!

முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே!!

தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.




நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை. அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.

இந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.

மேலும் 34 ஆசிரியர்களில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை

இதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:

அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்.

ஆசிரியர்கள் பற்றிய விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர். சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும். ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன?

இந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும். முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் கூறியுள்ளதோடு சென்னை கிரீன்ஸ் ரோட்டிலுள்ள டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க, மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை 14.06.12 வியாழன் அன்று காலை 11மணிக்கு நடத்துவது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் அறிவித்துள்ளது.

பயிற்சி ஒப்பந்த மருத்துவர்கள் பணிநியமனத்தில் மட்டுமல்லாது, நூலகர்களை பணியமர்த்திய விஷயத்திலும் இந்த துரோகம் தொடர்கின்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை. இது போன்று தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 32 மாவட்டங்களிலும் இதுதான் நிலை என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு முஸ்லிம்களை அனைத்து அரசுப்பணிகளிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகின்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் ஆகியவை மூலம் போட்டித் தேர்வு நடத்தி, தமிழக அரசு பணியாளர்களை நியமித்து வருகிறது. இதுபோல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையிலும் ஏராளமானோரை தமிழக அரசு பணிக்கு நியமித்து வருகிறது.

இது போக சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல்லாயிரம் பேரை மாவட்ட ஆட்சியர் மூலம் தேர்ந்தெடுக்கிறது. நகராட்சி மூலம் பேட்ஜ் டிரைவர் போன்றவர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த அரசு வேலை வாய்ப்புகள் அனைத்திலும் முஸ்லிம்கள் 3.5 சதவீத அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. மாறாக வஞ்சக எண்ணத்துடன் இவர்கள் ரகசியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று முஸ்லிம்கள் குமுறுகின்றனர்.

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து முஸ்லிம்களை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மற்றொரு புறத்தில் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடையும் பறிக்கும் அ.தி.மு.க. வின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழக அரசு உடனே வெள்ளையறிக்கை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசின் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம்களுக்கான 3.5சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும். வாய்ப்புத் தராமல் முஸ்லிம்களை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.