Showing posts with label புதிய தலைமுறை TV. Show all posts
Showing posts with label புதிய தலைமுறை TV. Show all posts

Thursday, January 03, 2013

“இஸ்லாமிய பெண்களை போன்று அனைவரும் ஆடை அணிய வேண்டும்” மதுரை ஆதினத்தின் கருத்து சரியானதே! 82% வினர் ஆதரவு: புதிய தலைமுறையின் கருத்து கணிப்பு



பாலியல் வன்முறைகளை தடுக்க அனைத்து பெண்களும் முஸ்லிம் பெண்களை போன்று சுய கட்டுப்பாட்டுடன் ஆடைகளை அணிய வேண்டும் என்ற மதுரை ஆதினத்தின் கருத்து குறித்து புதிய தலைமை இணையதளம் கடந்த டிச 30 அன்று கருத்து கணிப்பு நடத்தியது.
இதில் 82 சதவிகிதத்தினர் மதுரை ஆதனித்தின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அல்ஹம்மதுலில்லாஹ்.
இஸ்லாமிய சட்டம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பதையும், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பதற்கு பெண்ணியம் பேசியவர்கள் எந்த ஹிஜாப்பை ஆயுதமாக எடுத்தார்ளோ அந்த ஹிஜாப் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு அல்ல அவர்களை ஆண்களின் வக்கிர எண்ணங்களிலிருந்து பாதுகாப்பதற்கு தான் என்பதை இன்றைக்கு உலகம் ஒத்துக் கொண்டுள்ளது. எல்லாபுகழும் இறைவனுக்கே…

Saturday, September 15, 2012

அமெரிக்க தூதரக முற்றுகை புதிய தலைமுறை TV செய்தி


அமெரிக்க தூதரக முற்றுகை புதிய தலைமுறை TV செய்தி

 




 

சென்னையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் : அண்ணாசாலையில் போக்குவரத்து முடங்கியது



முகமது நபிகளை விமர்சித்து அமெரிக்கர் இயக்கிய திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க தூதரகம் முன்பு தொடங்கிய போராட்டம் மேலும் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணாசாலை மசூதி முன்னர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.முகமது நபிகளை விமர்சித்து திரைப்படம் எடுத்த அமெரிக்க இயக்குனரின் படத்தை எரித்தும், அமெரிக்க தேசியக் கொடியை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து அமெரிக்க துணை தூரகத்திற்கு முன்னர் குவிந்த போராட்டக்காரர்கள் அமெரிக்காவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அங்கேயும் தொடர்ந்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர்.
ஸ்தம்பித்தது அண்ணாசலை : இந்நிலையில் சாதாரணமாகவே பரபரப்பாக இருக்கும் அண்ணாசாலையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்தை முடக்க வேண்டாம் என போராட்டக்காரர்களை கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அங்கே கூட்டம் கலைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயார் நிலையில் வஜ்ரா : போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றால், போராட்டுக் குழுவை கலைப்பதற்காக போலீஸார் கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனத்துடன் தயாராக இருந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றதால் அமைதி ஏற்பட்டது.
தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரம்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

http://puthiyathalaimurai.tv/new/?p=31957