Showing posts with label ஸஹர் பாங்கு. Show all posts
Showing posts with label ஸஹர் பாங்கு. Show all posts

Thursday, June 12, 2014

ஸஹர் பாங்கு : நபிவழியை நடைமுறைப்படுத்துங்கள்! - நபிவழியை முஸ்லிம்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால், ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக்கூடிய ஏற்பாடு நபி (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.

பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தீன்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சியமாகி இருந்தது. ரமழான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுப்ஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபி (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

‘பிலாலின் அதான் (பாங்கு) ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில், (இரவில்) நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும் உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அதான் (பாங்கு) சொல்வார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ 

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), 
நூல்: புகாரி 621

‘பிலால் இரவில் அதான் (பாங்கு) சொல்வார். இப்னு உம்மி மக்தூம் அதான் (பாங்கு) சொல்லும் வரை நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 
நூல்: புகாரி 5299,7247 முஸ்லிம், நஸயீ

மேற்கண்ட நபிமொழியை நடைமுறைப்படுத்தும் முகமாக அனைத்தப் பள்ளிவாசல்களிலும் சஹர் நேரத்தில் பாங்கு சொல்லி நபிவழியை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அறிவிப்பு:

கடந்த வருடங்களில் அதிரை ECR ரோட்டில் உள்ள 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் ஸஹருக்காக பாங்கு சொல்லப்பட்டது போல், இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் ஸஹருக்கு பாங்கு சொல்லப்படும். இந்த பாங்கு பற்றிய செய்தியை எல்லா சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

ஸஹருக்காக பாங்கு சொல்லுவது நபிவழி என்பதற்கு மேலே உள்ள நபிமொழிகள் சான்று. இந்த நபிவழியை அமல்படுத்த அதிரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை கேட்டுக்கொள்கிறது.