Showing posts with label கொள்கை. Show all posts
Showing posts with label கொள்கை. Show all posts

Sunday, November 09, 2014

கொள்கையற்ற தாருத் தவ்ஹீத் அமைப்பினரை திக்குமுக்காட வைத்த விவாத வீடியோ

கொள்கையற்ற தாருத் தவ்ஹீத் அமைப்பினரை திக்குமுக்காட வைத்த விவாத வீடியோ
















கொள்கையைற்றவர்கள் யார்?

பாகம்-1

பாகம்-2

பாகம்-3

பாகம்-4

பாகம்-5

பாகம்-6

பாகம்-7

பாகம்-8

பாகம்-9

பாகம்-10

பாகம்-11

பாகம்-12

விவாதத்தின் அனைத்து பாகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய பதிவுகள்:

Saturday, November 08, 2014

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும், பின்பற்ற கூடாது என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொண்ட தாருத் தவ்ஹீத் அமைப்பினர்!

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும், பின்பற்ற கூடாது என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொண்ட தாருத் தவ்ஹீத் அமைப்பினர்!




கீழே உள்ள வீடியோவை முதலில் பார்த்து விட்டு, பின்னர் வீடியோவிற்கு கீழ் உள்ள விளக்கத்தை படியுங்கள்



மேலே உள்ள வீடியோவில் லபீலில் முமினின் என்று சொல்லி ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்கிறார், ஜமீல் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம், முன்றாவதாக எதுவும் கிடையாது என்கிறார். இவர்கள் இருவரும் வேறு வேறு தரப்பில் விவாதம் செய்பவர்கள் அல்ல. தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையில்லாத சிகமணிகளால் தாருத் தவ்ஹீத் அமைப்பு கொள்கை இருக்கிறது என்று காட்ட தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் அவர்கள் இலங்கை சென்று தேடிப்பிடித்து கொண்டு வரப்பட்ட அர்ஹம் மௌலவி. 

ஒரு பக்கம் குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்று ஜமீல் சொல்ல, அர்ஹம் மௌலலி ஸஹாபாக்களை பின்பற்றதவர்கள் சொர்க்கம் சொல்ல முடியாது என்கிறார். 

இதை பார்த்து உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது என்பதா? அல்லது சொந்த காசில் சூனியம் வைப்பது என்பதா?


இந்த லட்சணத்தில் கொள்கை இருக்கு என்று தம்பட்டம் வேறு!

Friday, November 07, 2014

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு ஆதாரம் கொண்டு வந்த கொள்கையில்லாத தாருத் தவ்ஹீத் - அதிரையில் நடைபெற்ற பரபரப்பான விவாதம்

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு ஆதாரம் கொண்டு வந்த கொள்கையில்லாத தாருத் தவ்ஹீத் - அதிரையில் நடைபெற்ற பரபரப்பான விவாதம்

தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற) அமைப்பின் சார்பாக விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் (இடமிருந்து வலது, முதலாம் நபர் (தமுமுக, மனித நேய மக்கள் கட்சியின் அதிரை கிளை பொறுப்பாளர், இரண்டாம் நபர்: தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ஜமீல், முன்றாம் நபர்: அப்துல் ஹமீத் - பாக்கர் அமைப்பின் மாநில செயலாளர், நான்காம் நபர்: லாபித் - இலங்கை அன்சார் தப்புலிக்கியின் மாணவர், நான்காம் நபர்: அர்ஹம் - இலங்கைக்கார், ஜந்தாம் நபர்: ஜமாலுதீன் - தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருலாளர். கடைசி நபர்: நிஜாமுதீன் - தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருலாளர்).
கடந்த மாதம் 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் அதிராம்பட்டிணம் பவித்ரா திருமண மண்டபத்தில் 'கொள்கையற்றோர் யார்?' என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற அமைப்பிற்கும் விவாதம் நடைபெற்றது. 


தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆதாரங்களை முன்வைப்பதற்கு முன்பாகவே, தாருத் தவ்ஹீத் அமைப்பிற் கொள்கை கிடையாது என்பதற்கு தாருத் தவ்ஹீத் அமைப்பினரே பகிரங்க ஆதாரம் கொண்டு வந்து இருந்தனர். ஆம், தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற அமைப்பின் சார்பாக விவாதம் செய்ய அழைத்து வரபட்டவர்களே, தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு ஆதாரமாக இருந்தது.


தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பின் சார்பாக விவாதத்தில் கலந்து கொண்டவர்கள்:

1. அதிரை ஜமீல் (தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர்)
2. அதிரை நிஜாமுதீன் (தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருலாளர்)
3. அதிரை ஜமாலுதீன் 
4. அப்துல் ஹமீத் (சென்னை)
5. இலங்கை அர்ஹம் மௌலவி - எஸ்எல்டீஜே அமைப்புடன் விவாதம் செய்ய ஒப்பந்தம் போட்டு விட்டு, விவாதம் செய்ய வராமல் ஓட்டம் எடுத்தவர்
6. இலங்கை ஸாபித் 

தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக விவாதம் செய்ய வந்தவர்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம் செய்ய வேண்டியது இங்கு அவசியம்.

அதிரை ஜமாலுதீன்:

அதிரை ஜமாலுதீன் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் துபாய் மண்டல தலைவராக இருந்தவர். பாக்கர் பெண் லீலைகள் காரணமாக தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தூக்கி விசப்பட்டவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்கர் கண்ட புது அமைப்பில் சேர்ந்தவர். அதிரை ஐமாலுதீன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்த நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சூனியம் இல்லை என்று தான் சொன்னது, குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க கூடாது, கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருட வருடம் ஜக்காத் கொடுக்க தேவையில்லை போன்ற விஷயங்கள் இவர் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாக இருந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தில் இவர் இருக்கும் போது இவர் நடித்துக்கொண்டு இருந்துள்ளார் என்பது இப்போது தெளிவாகிறது. இவர் பாக்கர் இயக்கம் மடிந்த பின்னர் அதிரை ஆல் முஹல்லா, ஹல்வா முஹல்லா, லட்டு முஹல்லா என்று பல பல இயக்கங்கள் ஆரம்பித்து அவையும் அழிந்த பின்னர் தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பில் மிக சமீபத்தில் தஞ்சம் புகுந்தவர். 

அப்துல் ஹமீத் (சென்னை):

இவரும் பாக்கர் மீது தொடர் பெண் குற்றச்சாட்டுகளால் தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தூக்கி எறிப்பட்ட போது, பாக்கர் கண்ட புரட்சி இயக்கத்தில் இருந்தவர் (இடையில் பாக்கரை விட்டும் பிரிந்து விட்டார்). இவர் தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். இவர் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்ககூடாது என்ற கொள்கையில் உள்ளவர். இவர் குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை ஏற்க்கூடாது என்று பேசிய வீடியோ ஆதாரத்தை நாம் கடந்த ரமலான் மாததத்தில் நமது தளத்தில் எடுத்துகாட்டினோம். இன்று வரை பதில் இல்லை. 

இலங்கை அர்ஹம் மௌலவி:

இலங்கையை சார்ந்த அர்ஹம் மௌலவி என்பவர் இதுவரை அதிரை எட்டிகூட பார்க்காதவர். இலங்கை உள்ள எஸ்எல்டீஜே அமைப்புடன் விவாதம் செய்ய ஒப்பந்தம் செய்து விட்டு ஒட்டம் எடுத்தவர். இவரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் இலங்கைக்கு சென்று இப்படி ஒரு விவாதத்தில் நாங்கள் மாட்டிவிட்டோம் என்று கொஞ்சி அழைத்து வரப்பட்டவர். இவருக்கு தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பை பற்றி இதற்கு முன்னர் கேள்வி கூட பட்டு இருக்க மாட்டார். ஒருவர் என்ன கொள்கையில் உள்ளார்கள் என்றே தெரியாமல் பறந்து வந்துள்ளார் அர்ஹம் என்பவர்.  என்ன அமைப்பு என்றே தெரியாமல் அவர்களுக்கு கொள்கை உள்ளது என்று கூவா வந்துள்ளர் அர்ஹம்.

இலங்கை ஸாபித்:

இவரும் இலங்கையில் இருந்து பிடித்து வரப்பட்டவர். இவருக்கும் தாருத் தவ்ஹீத் அமைப்பு என்ன கொள்கையில் உள்ளது என்று கூட தெரியாமல் வந்தவர். 

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை எங்கே?

ஒரு அமைப்பிற்கு கொள்கை இருக்க இல்லையா? என்பதை அந்த அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் பேசி நிருபிக்க வேண்டும். தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இருக்கு என்பதற்கு இலங்கையில் இருந்தும் சென்னையில் இருந்தும் பிடித்து வரப்பட்டவர்கள் பேசியதே தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இல்லை என்பதற்கு போதுமான ஆதாரம். அவர்களுக்கு கொள்கை இல்லை என்பதற்கு அவர்களே ஆதாரம் கொண்டு வந்து, தவ்ஹீத் ஜமாஅத் கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கொள்கை இருக்கா?

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கொள்கை கிடையாது என்பதற்கு எந்த ஒரு சான்றையும் தாருத் தவ்ஹீத் தரப்பு முன்வைக்கவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கொள்கை கிடையாது என்றால் அதன் எதிரிகள் கூட சிரிப்பார்கள். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நேரத்திற்கு இடத்திற்கும் தகுந்தாற்போல் நிறம் மாறும் தன்மை இருந்தால், தாருத் தவ்ஹீத் மேடையிலேயே பேசி இருக்கும். கொள்கையில் உறுதியாக இருப்பதால் தவ்ஹீத் ஜமாஅத் இந்த அளவுக்கு எதிர்க்கப்படுகிறது.

தாருத் தவ்ஹீத் அமைப்பு பெரும்பாலான விஷயங்களில் TNTJ வை ஆதரிக்கக்கூடிய அமைப்பு - தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் அதிரடி:

தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையற்றவர்கள் என்பதற்கு எந்த ஆதாரத்தை முன்வைக்காதது மட்டுமல்லாது, தாருத் தவ்ஹீத் அமைப்பு பெரும்பாலான விஷயங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை ஆதரிக்க கூடியது என்று ஒரு குண்டை போட்டார் தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ஜமீல் அவர்கள். அதன் வீடியோவை இங்கே காணவும். இவ்வாறு சொன்னவுடன் விவாதத்தில் பத்து கேள்வி கேட்டுவிட்டோம், பத்தெம்பது கேள்வி கேட்டுவிட்டோம் என்று காமெடி பண்ணிய பாக்கரின் ஆதாரவாளர் என்ன புலம்பி இருப்பாரே! 

ஏட்டுச் சுரைக்காய் கரிக்கு உதவாது!

கொள்கையில்லாத தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக விவாதிக்க வந்த ஒவ்வோருவரும் மற்றவருக்கு பதிலடி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். எங்களுக்கு கொள்கை இருக்கிறது எங்களுக்கு கொள்கை இருக்கிறது என்று அவர்கள் கூவினாலும், அது ஏட்டுக்சுரைக்காயாகவும் வீடியோ சுரைக்காயாகவும் தான் இருக்கும்.  அவர்களின் விவாதம் செய்ய வந்த ஒவ்வோருவருக்கும் ஒவ்வோரு கொள்கை என்று அவர்களுக்கோ நன்றாக தெரியும். ஒரு பத்து மார்க்க விஷயங்களை முன்வைத்து, இதற்கு தாருத் தவ்ஹீத் அமைப்பின் கொள்கை என்ன என்று விளக்கி எல்லா தாருத் தவ்ஹீத் நிர்வாகிகளும் கையெப்பம் இட்டு மக்களுக்கு விளக்குங்கள் என்று ஒரு சவாலை நாம் முன்வைத்தால், அதற்கு அவர்களால் பதில் தர முடியாது.

சூனியம் இருக்க இல்லையா? நீங்க முதலில் ஓரு முடிவுக்கு வாருங்கள்

சூனியத்திற்கு எதிராக இருப்பதாக தாருத் தவ்ஹீத் செயலாளர் சொல்லுகிறார், அவருக்கு பதிலடி தருகிறார் ஜமாலுதீன். யார் சொல்லுவதை பா நாங்க கேட்க. முதலில் உங்களுக்குள் ஒரு விவாதம் வைக்கக்கூடாதா?



குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க வேண்டுமா? ஏற்க கூடாதா? நீங்கள் முதலில் ஒரு முடிவுக்கு வாருங்க செயலாளர் சார்!

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்கிறார் தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் அவர்கள், அவருக்கு கவுண்டர் கொடுத்து குர்ஆனோடு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க கூடாது என்கிறார் தாருத் தவ்ஹீத் அமைப்பால் விவாதம் செய்ய அழைத்து வரப்பட்ட அப்துல் ஹமீது. யார் சொல்லுவதை பா நாங்க கேட்க? உங்களுக்கு கொள்கை இருக்கிறது என்று எப்படி வெட்கம் இல்லாமல் உங்களால் பேச முடிகிறது?

குர்ஆனுடன் மோதும் ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று சொல்லும் தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் - http://www.tubechop.com/watch/3886865

குர்ஆனுடன் மோதும் ஹதீஸ்களை ஏற்ககூடாது என்று சொல்லும் தாருத் தவ்ஹீத் அமைப்பால் அழைத்து வரப்பட்ட அறிஞர் அப்துல் ஹமீது - http://www.tubechop.com/watch/3338372

கொள்கை இல்லை என்பதை ஹாஜி அமீரும் ஏற்றுக்கொண்டாரோ!

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லாபித்  மற்றும் அர்ஹம் போன்றவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் வழிகேடர்கள் என்று ஒரு பக்கம் சொல்ல, ஜமீல் மற்றும் ஜமாலுதீன் நாங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை பெரும்பாலும் ஆதரிக்கக்கூடியவர்கள் என்று அவர்களுக்கு பதிலடி தந்தார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதில் கூட உடன்பாடு இல்லை!

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லாபித்  மற்றும் அர்ஹம் போன்றவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் வழிகேடர்கள் என்று ஒரு பக்கம் சொல்ல, ஜமீல் மற்றும் ஜமாலுதீன் நாங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை பெரும்பாலும் ஆதரிக்கக்கூடியவர்கள் என்று அவர்களுக்கு பதிலடி தந்தார்கள்.

ஆணவம் வேண்டாம்!

இன்றைய தவ்ஹீத் ஜமாஅத் முக்கயஸ்தர்களால் நிர்வாகிக்க்பட்ட இயக்கங்களில் ஜமீல் அவர்கள் இருந்த போது, ஜமீல் அவர்களுக்கே உரிய ஆணவ போக்கினால் அவருக்கு எந்த பொருப்பும் தரப்படவில்லை என்பதை விவாதத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. அதற்கு ஜமீல் அவர்கள் மௌனத்தையே பதிலாக தந்தார். தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இல்லை ஜமீல் அவர்களுக்கே நன்றாக தெரியும். இருந்த போதிலும் நான் நடத்தும் இயக்கத்தை கொள்கையற்றவர்கள் என்று சொல்லிவிட்டார்களே, எனது இமோஜ எப்படி விட்டுத்தருவது என்று ஆணவம் தான் அவரை விவாதம் அளவுக்கு வந்து, இப்படி அசிங்கப்பட வைத்துள்ளது.

விவாதம் செய்ய வந்தது தாருத் தவ்ஹீத்தா? தமுமுகவா?

விவாதம் செய்ய வந்தது தாருத் தவ்ஹீத் அமைப்பா? அல்லது தமுமுவவா? என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு தாருத் தவ்ஹீத் தரப்பின் சார்பாக நடுவர், பார்வையாளர்களில் நான்கில் முன்று பகுதியினர், தமுமுக முன்னால் மற்றும் இன்றைய தஞ்சை மாவட்ட செயலாளர்கள், தமுமுகவின் கிளை நிர்வாகிகள், தமுமுகவின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவாளர்கள் என் அனைத்து தமுமுகவினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிரை தாருத் தவ்ஹீதிற்கு கொள்கை இருக்கு என்று காட்ட உலகம் சுற்றிய வாலிபர்கள்:

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இருக்கு என்று காட்ட தாருத் தவ்ஹீத் அமைப்பினர் நாடு கடந்து, ஊர் ஊராக சுற்றி இறுதியாக சென்னையில் இருந்து அப்துல் ஹமீது என்பவரையும், இலங்கையிலிருந்து தாருத் தவ்ஹீத் என்றால் என்னவேன்றே தெரியாத இருவரையும் பிடித்து வந்தார்கள். பாவம் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். இல்லாத கொள்கையை எங்கே போய் தேடினாலும் கிடைக்குமா என்ன?

திருடும் நிருபர்களின் காமெடி:

பிஜே ஒரு வழிகேடர் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, மறுபக்கம் பிஜே கட்டுரைகளை திருடி அதை தங்களின் ஆக்கமாக காட்டி, புகழ் தேடி புகழ் போதையில் மிதக்கும் திருடும் நிருபர்கள், 'அதிரை தாருத் தவ்ஹீத் நட்சித்திரமாக மின்னியதாக காமெடி' செய்துள்ளார்கள். நான்கு நாட்கள் தாருத் தவ்ஹீத்திற்கு வக்காலத்து வாங்க அதிரைக்கு முதல் முறையாக வந்தவர்களும் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டவர்களும் விவாதத்தில் பட்ட பாடு அவர்களுக்கு தான் தெரியும். 

தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிகெட்ட கொள்கையில் தாருத் தவ்ஹீத் அமைப்பு:

கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருட வருடம் ஜக்காத் கொடுக்க தேவையில்லை என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டை தாருத் தவ்ஹீத் எதிர்க்கிறாதா? ஆதரிக்கறாதா? என்று கேட்டு சொல்லுங்கள். பின்னர் இது பற்றி பேசலாம். 

பேருராட்சி தலைவர் மீது அவதூறு சொல்லி கேவலப்பட்ட தாருத் தவ்ஹீத்:

அதிரை பேருராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவாக இருக்கும் காரணத்தினால், அஸ்லம் அவர்கள் எங்கே ஒரு திறப்பு விழாவில் குத்து விளக்கு ஏற்றியதாக ஒரு பொய்யான செய்தியை விவாத்தில் முன்வைத்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவாளராக உள்ளவர்கள் தவறு செய்தாலும் , அதை தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாக ஆகாது. தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தவறு செய்தால் அதற்கு தான் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாகும். எனினும், அஸ்லம் பற்றி செய்தி அவதூறாகும். தாருத் தவ்ஹீத் அமைப்பு விவாதத்தில் அஸ்லம் அவர்கள் மீது குற்றம் சுமத்த இன்னுமொரு காரணமும் உண்டு. தமுமுகவினருக்கும் அஸ்லம் அவர்களுக்கும் ஆகாது, தாருத் தவ்ஹீத் கலந்து கொண்ட விவாதத்தில் பின்புலத்தில் இருந்து இயக்கியதே தமுமுக தான். அவர்களால் இந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தாருத் தவ்ஹீத் வைத்த இந்த குற்றச்சாட்டை அறிந்த அஸ்லம் அவர்கள் விவாத மேடையிலேயே ஏறி, என் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டு பொய், அதற்கு ஆதாரம் தர வேண்டும் என்றார். அதற்கு தாருத் தவ்ஹீத் கொள்கையில்லா கூட்டத்தால் பதில் தர முடியாமல் கேவலப்பட்டு போனார்கள்.

மாற்று கொள்கை உள்ளவரை மேடை ஏற்றுவது:

தேவநாதன், டி.ரஜேந்தர் போன்றறோரை தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஏற்றியதாக தாருத் தவ்ஹீத் தரப்பு வாதம் வைத்தது. இதை செய்தது பாக்கர் தான் என்பதும், இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது, தாருத் தவ்ஹீத் சார்பாக விவாதம் செய்பவர்களில் அதிரை ஜமாலுதீன் மற்றும் சென்னை அப்துல் ஹமீது ஆகியோர் தவ்ஹீத் ஜமாஅத்தில் தான் இருந்தனர். அவர்களிடம் இந்த கேள்வியை கேளுங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சொல்லப்பட்டவுடன் மவுனமே பதிலாக வந்தது. மேலும், பாக்கர் செய்த காரியத்திற்க்காக அன்றே பாக்கர் கண்டிக்கப்பட்டார் என்பதையும் தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஒரு சில தருணங்களில் (மார்க்க நிகழ்ச்சி அல்லாத) வேறு அமைப்பை சார்ந்தவர்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டதும், அவை இனிமேல் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதையும் விளக்கி கூறப்பட்டது.

ரதிமினாவை பற்றி வாய் திறக்காத அந்த நபர்!

ரதிமீனா பேருந்தில் ஒரு இரவு முழுவதும் ஒரு பெண்ணுடன் சல்லாபம் செய்து கொண்டு பயணித்த பாக்கர், இன்னும் பல பெண்களுடன் சல்லாப வேளைகளில் ஈடுபட்டதாக தொடர்ந்து புகார் வந்ததை தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு விரட்டப்பட்டார். பாக்கரின் காம சோட்டைகளை சிலர் பாக்கர் போட்ட எழும்பு துண்டிற்க்காக ஆதரித்தார்கள். அவ்வாறு ஆதரித்தவர்களில் அதிரையை சார்ந்தவர் ஒருவர் முக்கியமானவர், அவரும் தாருத் தவ்ஹீத் சார்பாக விவாதிக்க வந்து இருந்தார். பாக்கரின் கேடுகெட்ட செயல்களை பற்றி எல்லாம் கேள்வி எழுப்பப்பட்ட போது அந்த நபர் அமைதியாகவே இருந்தார்.

பாக்கர் கும்பலின் உண்மையான கொள்கை என்ன?

பாக்கரின் அதிரை பக்தர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ - புதிதாக இஸ்லாத்தை தழுவியரின் மனைவியை சூறையாடிய பாக்கர்

முழு விவாத வீடியோ விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.

நான்கு நாட்கள் நடைபெற்ற முழு விவாத தொகுப்பை இங்கே காணலாம்.

தொடர்புடைய பதிவுகள்:

தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனிய சவாலும் - பொருக்கி முஜாஹித்தின் சூனிய மாணவர் முர்ஷித் அப்பாஸியின் பொய்களும், ஜால்ராக்களும்!

கொள்கையற்றவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட முர்ஷித் அப்பாஸிக்கு சவால் (வீடியோ)

திருகுதளம் செய்த தாருத் தவ்ஹீத் மீடியா மேஜிக்கர் நிஜாமும் - வீண் விளம்பரம் செய்யும் முர்ஷித் அப்பாஸும் அவரின் பக்தர்களும்!

பாக்கர் கும்பலின் உண்மையான கொள்கை என்ன?

பாக்கரின் அதிரை பக்தர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ - புதிதாக இஸ்லாத்தை தழுவியரின் மனைவியை சூறையாடிய பாக்கர்

Thursday, July 17, 2014

செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்!


பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம்.

காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை.

இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.

குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.

பள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர்.

நம்மால் அந்தப் பிள்ளைகளைத் தடுக்க முடிவதில்லை.

நம் வீட்டிலோ, வெளியிலோ ஆண், பெண் இருவர் கட்டிப் புரளும் காட்சிகளைப் பார்க்க முடியாது. குளிக்கும் பெண்கள் கூட ஆபாசமாகக் குளிப்பது கிடையாது.

ஆனால் இந்த சினிமாக் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகள், ஆபாசக் குளியல் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே காட்டப்படுகின்றன. இந்தக் காட்சிகளைத் தான் டி.வி.களில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன. இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகின்றனர். உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுகின்றனர். அவர்கள் தேர்வில் தோற்றதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதைப் பெற்றோர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

செல்லப் பிள்ளைக்கு ஒரு செல்போன்:

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம்.

1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன.

2. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.

3. SMS (Short Message Service) என்பது இப்போது Sex Message Service ஆக மாறி விட்டது. அந்த அளவுக்கு ஆபாசச் செய்திகள் இதில் பரிமாறப்படுகின்றன.

4. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள்: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

அண்மையில் நம்முடைய ரகசிய கண்காணிப்புக் குழுக்கள் மூலம், மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் சென்டர்களைக் கண்காணித்ததில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன.

பருவமடைந்த பெண் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக வாலிபர்களுடன் செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாறுகின்றனர்.

பல சந்து பொந்துகளில் சந்திப்புகளும் நடைபெறுவதை அறிய முடிந்தது.

பக்காவாக உடல் முழுவதும் முக்காடு போட்ட பருவ வயதுப் பெண்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.
ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் செல்போன் செக்ஸில் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது.

இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கீழே தருகிறோம்.

தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருத்தல்:

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர) 
நூல்: புகாரி 6243

இந்த ஹதீஸில் வருகின்ற கடைசிக் கட்ட விஷயத்தைத் தவிர அனைத்து விஷயங்களும் செல்போன்கள் வழியாக நடக்கின்றன.

கடைசிக் கட்டத்தை அடைய வேண்டும் என்று அவர்கள் உறுதி கொள்ளும் போது, ஓடிப் போக ஆரம்பிக்கிறார்கள். அப்போது நாம் கைசேதப்பட்டுப் பயனில்லை.

செல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தாவிட்டால் கீழ்க்கண்ட ஹதீஸின்படி அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைபர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளி யாவான்.

தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப் படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 893

நன்றி www.tntj.net

Thursday, March 08, 2012

தவ்ஹீத் ஜமாஅத் பிற மேடைகளை தவிர்ப்பது ஏன்?


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கெதிராக வைக்கப்படும் குற்றசாட்டுக்களில் பிரதான குற்றசாட்டாகப் பேசப்படுவது, இந்த அமைப்பினர் பிற இயக்கத்தின் மேடைகளில் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்வதில்லை என்பதாகும். இதற்கான விளக்கத்தை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம்.

ஏனெனில் ஷைத்தான் மனிதனை ஒரே வடிவத்தில் தான் வழிகெடுப்பான் என நினைக்கக்கூடாது. மாறாக ஒருவனை வழிகெடுக்க ஷைத்தான் எத்தகைய யுக்தியையும் செய்யத் தயங்க மாட்டான்.

உதாரணத்திற்கு, வரதட்சணை வாங்கக்கூடாது என்பதில் நாம் உறுதியோடு இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். இந்தத் தருணத்தில் நம்மை வழிகெடுக்க ஷைத்தான் வேறு வகையான ஆசை வார்த்தைகளைக் கூறுவான்.

நாமாகக் கேட்டால் தானே தவறு, அவர்கள் விரும்பிக் கொடுத்தால் தவறா? நாம் எதையும் பெண் வீட்டாரிடம் கேட்க வேண்டாம்; அவர்கள் தமது பெண் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசத்தினால் தானே தருகிறார்கள்; இதில் என்ன தவறு? என பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி வரதட்சணை வாங்கத் தூண்டிவிடுவான்.

அதுபோன்று தான் நம்மை சத்தியப் பிரச்சாரம் செய்ய விடாமல் பல வகையில் எதிர்த்தவர்கள், நமது பிரச்சாரத்தை முடக்க நினைத்தவர்களின் பல்வேறு சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டதால் ஷைத்தான் தற்போது நமது பிரச்சாரத்தின் வீரியத்தைக் குறைக்க புதியதொரு யுக்தியாக அசத்தியவாதிகள் வழியாகத் தூண்டிவிட்ட ஒரு வாதம் தான் “பிற மேடைகளில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை” என்பது.

இந்த வாதத்திற்குத் தெளிவான விளக்கத்தை நாம் அறிந்து கொண்டால் ஷைத்தானின் இந்தச் சூழ்ச்சியில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.

பொதுவாக பிற இயக்கத்தினர் மேடையில் பிரச்சாரம் செய்வதால் சொற்பொழிவு நிகழ்த்துவோருக்கும் அதைக் கேட்கும் மக்களுக்கும் ஏற்படும் அவலங்களையும் ஒவ்வொன்றாகக் காணலாம்.

தீமையைத் தடுக்க இயலாத நிலை!

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள். திருக்குர்ஆன் 3:110
நன்மையை ஏவி தீமையை தடுப்பதால் தான் நம்மைச் சிறந்த சமுதாயம் என அல்லாஹ் கூறுகிறான். ஆனால் பிற இயக்கத்தினருடன் பிரச்சாரம் செய்யும் பொழுது நம்மால் அவர்களின் தீமையைத் தடுக்க முடியாத அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.

உதாரணத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் நடைபெற்ற பீஸ் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தவிர அனைத்து கொள்கையுடையவருடன் இனைந்து இஸ்லாத்தை நிலைநாட்ட (?) சொற்பொழிவு நிகழ்ச்சிகளை பீஸ் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் இஸ்லாமியக் கண்காட்சி என்ற போர்வையில் வர்த்தக உலகத்தைக் காட்டும் அந்த நிகழ்ச்சியில், பொருளாதார மோகத்தின் உச்சக்கட்டமாக அக்கண்காட்சியின் வாசலில் ஒரு காரை வைத்து 6% வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஒரு கொடுமை நடந்தேறியது.

சமூகக் கொடுமை என அனைத்து தரப்பு முஸ்லிம்களாலும் அறியப்பட்ட, நிரந்தர நரகம் என்று மார்க்கம் கூறுகின்ற இந்த வட்டி என்கிற வன்கொடுமையை யாராலும் கண்டிக்க முடியவில்லை.

வட்டி ஹராம் என்பது அங்கு சென்றிருந்த ஜாக் அமைப்பினருக்குத் தெரியவில்லையா? அல்லது தனக்கு மட்டும் இறையச்சம் உள்ளது போன்று அவ்லியா வேஷம் போடும் முஃப்தி காஸிமிகளுக்குப் புரியவில்லையா? ஏன் இந்த அவல நிலை? பல கொள்கையுடைவர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தி சமரசத்திற்காக சன்மார்க்கத்தைத் தூக்கி எறியும் அவல நிலைக்கு ஆளானார்கள்.

இது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் யூசுப் எஸ்.டி.எஸ் என்பவர் அந்த பீஸ் நிகழ்ச்சியில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது சொற்பொழிவில் இந்தச் சமுதாயம் 73 கூட்டமாகப் பிரியும்; அதில் 72 கூட்டம் நரகத்திலும் ஒரு கூட்டம் சொர்க்கத்திலும் இருப்பதாகக் கூறி, அந்த ஒரு கூட்டம் என்பது ஷாஃபி, ஹனஃபி, மாலிகி, ஹன்பலி, தவ்ஹீத், அஹ்லே ஹதீஸ் அனைவரும் தான் சுவனம் செல்லும் அந்த ஒரு கூட்டம் என்று விளக்கம் தருகிறார்.

மத்ஹபுகள் கூடாது என்று பல ஆண்டுகளாக முழக்கமிட்ட ஜாக் அமைப்பினர் கலந்து கொண்ட அந்தச் சபையில் தனது கொள்கைக்கெதிராகப் பேசிய இவரைக் கண்டிக்க இயலவில்லை. கண்டிக்கத் தான் இயலவில்லை என்றால் தவறான கொள்கைகள் அரங்கேறிய அந்த மேடையைப் புறக்கணிக்க மனமும் இல்லை. மேடை மோகம் இவர்களை சத்திய பிரச்சாரத்திலிருந்து சமரசம் செய்ய வைத்துவிட்டது.

பல தரப்பட்ட கொள்கையுடையோராலும் இணைந்து நடத்தப்பட்ட இந்த பீஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தமது கொள்கையில் சமரசம் செய்ததினால் அவர்களின் கொள்கை உறுதி பீஸ் பீஸாகிப் போய்விட்டது.

இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல தரப்பட்ட கொள்கை உடையவர்களால் தீமையைத் தடுக்க முடியவில்லை என்றாலும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜாகிர் நாயக் அவர்களால் கூட இந்த தீமைகளைத் தடுக்க முடியவில்லை.

மத்ஹப், அனாச்சாரங்கள் எனப்படும் பித்அத் ஆகியவற்றை எதிர்த்தால் தானே இந்த ஜாகிர் நாயக்கால் தீமையை எதிர்க்க முடியும். இவரே அதன் ஆதரவாளராக இருந்தால் எப்படித் தடுக்க முடியும்! இந்த ஜாகிர் நாயக் வெறும் மத்ஹப் ஆதரவாளர் மட்டும் கிடையாது; கடவுள் கொள்கையில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கு ஒப்பானவர்.

ஜாகிர் நாயக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும்:

இறைவனுக்கு உருவம் இல்லை எனக் கூறி, இறைவன் எங்கும் இருக்கிறான் என்கிற அத்வைதக் கொள்கையை ஷேக் அப்துல்லாஹ் ஜ(கோ)மாலி வாதிட்ட போது, இறைவனுக்கு உருவம் உண்டு எனவும் இறைவன் அர்ஷில் இருக்கிறான் எனவும் இறைவனின் தனித்தன்மையை நிலைநாட்டி அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் மவ்லவி பி.ஜெ அவர்களால் எடுத்துரைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம்.

ஜமாலி போன்ற கோமாளித்தனமான வாதங்களைப் போன்றே தான் ஜாகீர் நாயக்கும் ரவிசங்கர் என்பவருடன் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவர் தனது உரையில், இறைவனுக்குப் பிள்ளை இல்லை, பெற்றோர் இல்லை என கூறிவிட்டு, இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை திருக்குர்ஆனும் பகவத் கீதையும் ஒரே மாதிரி தான் கூறுகிறது என இஸ்லாத்திற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்தார்.

எந்த அளவிற்கென்றால் அவர், இறைவனுக்கு உருவம் இருக்கிறது எனக் கூறினால் நீள வாக்கிலா அகல வாக்கிலா எனக் குழப்பம் வந்து விடும் எனக் கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் இது குறித்து ஒரு கேள்வியை முன் வைத்தார்.

இதோ அந்தப் பெண் கேட்ட கேள்வி:

நபி (ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? என்று கேட்டார்கள். அப்பெண், அல்லாஹ் வானத்திலிருக்கிறான் என்று கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள். நபி (ஸல்) அவர்கள் அவளது எஜமானனிடம் இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளை உரிமை விட்டுவிடு என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா பின் ஹகம் (ரலி)
நூல்: முஸ்லிம் (836)

இந்த ஹதீஸை மேற்கோள் காட்டி அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் எனத் தெளிவாக உள்ளதே இதன் விளக்கம் என்ன? எனக் கேட்கிறார்.

இதற்கு ஜாகீர் நாயக் பதில் கூறும் போது, இந்த ஹதீஸ் குறித்து நாம் அதிகம் சிந்திக்கக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறி விட்டார்கள் எனக் கூறி, இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற அப்துல்லாஹ் ஜமாலியின் கொள்கைக்கு ஆதரவாக மலுப்பலான பதிலைத் தருகிறார்.

இப்படிப்பட்ட கொள்கையுடையவர்களின் மேடைகளை நாம் பகிர்ந்தால் தீமையைத் தடுக்க முடியாமல் சமரசம் செய்த இவர்களின் நிலையைப் போன்று தான் நமக்கும் ஏற்படும். இந்த அவல நிலையை நாமும் ஒரு காலத்தில் சந்தித்து சங்கடத்திற்கு உள்ளாகியிருந்தோம்.

கடந்த 2004ல் நாம் தமுமுகவுடன் சேர்ந்து இருந்த கால கட்டத்தில் நெல்லை மாவட்டம் மேலப்பாளயத்தில் தமுமுக சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்திற்கு, தவ்ஹீத்வாதிகளால் பிரச்சாரம் செய்யப்படும் அந்த மேடைக்கு, தர்கா வழிபாட்டில் மூழ்கித் திளைக்கும் எஸ்.எஸ். ஹைதர் அலி என்பவர், அழைக்கப்பட்டார். அந்த மேடையில் ஏறிய அவர் தனது சொற்பொழிவின் இறுதியில் “நபிகளாரை கனவிலும் நனவிலும் கண்டு களிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்குத் தந்தளுள்வானாக” எனப் பிரார்த்தனை செய்து அசத்தியக் கொள்கையை அள்ளித் தெளித்தார்.

அதைக் கண்டிக்கவோ அதற்கு மறுப்பு சொல்லவோ யாருக்கும் திராணி இல்லாமல் போன அவல நிலையை ஒருவரும் மறக்க இயலாது. ஆனால் ஒரு விஷயம், இந்த மேடையில் ஹைதர் அலீ என்ற முஷ்ரிக் ஏறினால் நாங்கள் ஒரு போதும் மேடையில் ஏற மாட்டோம் என மறுத்து ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்களும் எம்.எஸ்.சுலைமான் அவர்களும் ஒதுங்கிக் கொண்டார்கள். இதைத் தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய இயலவில்லை.

இதனால் தான் பிறர் மேடையில் ஏறி நாம் பிரச்சாரம் செய்வதில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

இதுமட்டுமின்றி பிறர் மேடைகளைப் பகிர்வதால் பேச்சாளர்களுக்கு ஏற்படும் மற்றொரு அவலநிலை இதை விடப் படுமோசமானதாகும்.

இரட்டை வேட நாடகம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் செல்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
நூல்: புகாரி 7179

இரட்டை வேடம் போடுபவன் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் என்று நபிகளாரால் மிகவும் கண்டிக்கப்பட்ட ஒரு செயலை எந்த ஒரு முஸ்லிமும் செய்யக் கூடாது. குறிப்பாக சத்தியப் பிரச்சாரத்தைப் பிற மக்களுக்கு எடுத்துரைப்பவர் ஒருக்காலும் செய்யக்கூடாது. ஆனால் பிற கொள்கையுடையவர்களின் மேடைகளைப் பகிர்வதால் இரட்டை வேடம் போடும் நயவஞ்சகனாக மாறும் அவல நிலை ஏற்படும்.

நம்மோடு மேடையில் அமர்ந்திருப்பவரின் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் அவரை திருப்திப்படுத்துவதற்காகவும் அல்லாஹ்வின் மார்க்கத்தை மறைக்க வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.

பிற அமைப்பினரின் வழிகெட்ட கொள்கைகளையும் தவறுகளையும் அவர்கள் சமுதாயத்திற்குச் செய்த துரோகங்களையும் அம்பலப்படுத்தும் போது நம்மிடம் இருந்த வேகமும் வீரியமும் அந்த அமைப்பினரோடு சேர்ந்து மேடை ஏறும் போது, அவர்களோடு பழகி பல்லிளித்து, அவர்களின் குற்றங்களை நாம் ஒன்றும் அறியாதவர்கள் போன்று நடித்து மக்களை மடையர்களாக்கும் நிலை ஏற்படும்.

சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம் என்று கூறிவிட்டு லட்சக்கணக்கில் வசூலித்து மோசடி செய்து, இன்று வரை ஒழுங்காகக் கணக்குக் காட்டாத த.மு.மு.க.வுடன் சேர்ந்து நாம் பிரச்சாரம் செய்தால் இவர்களைக் கண்ணியவான்களாக்க நேரிடும்.

வட்டி இல்லா கடனுதவி பெற வந்த ஓர் அபலைப் பெண்ணின் வாழ்வில் விளையாடிய ஒழுக்கங்கெட்ட பாக்கருடன் பிரச்சாரம் செய்தால் அந்த அயோக்கியர்களை ஒழுக்க சீலராக்க நேரிடும்.

உதட்டில் தேனும் உள்ளத்தில் தேளும் கொண்ட அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் இந்தத் தன்மை பொருந்திப் போகுமே தவிர, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி பிரச்சாரம் செய்யும் நமக்கு ஒருக்காலும் பொருந்தாது.

பிற அமைப்பினரோடு பிரச்சாரம் செய்யும் பேச்சாளர்களுக்கு ஏற்படும் அவலங்களைப்போல அதைப் பார்க்கும் மக்களும் பல அவலங்களை சந்திக்க நேரிடும்.

பல்வேறு கொள்கையுடையோர் ஒன்றிணைந்து செய்யும் பிரச்சாரத்தைக் கேட்கும் மக்களுக்கு ஏற்படும் அவலங்களைப் பார்ப்போம்.

கொள்கைக் குழப்பம்:

அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் வணங்கக்கூடாது என்ற ஏகத்துவக் கொள்கையை ஏற்ற மக்கள், தான் மட்டும் ஏற்றுக் கொண்டதோடு நிறுத்தி விடாமல் பிற மக்களுக்கும் இந்தக் கொள்கை சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சத்தியப் பிரச்சாரம் எந்தப் பகுதியில் நடந்தாலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வண்ணம் அங்கு சென்று சங்கமமாகி விடுவார்கள். இப்படிப்பட்ட தியாகிகளின் கொள்கைக்கு வேட்டு வைக்கும் செயல் தான் பலதரப்பட்ட கொள்கையுடையோர் ஒரே மேடையில் சொற்பொழிவாற்றுவது!

எந்த அளவிற்கென்றால் மத்ஹபைப் பின்பற்றக்கூடாது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மட்டுமே வழிகாட்டியாகப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்கள் இது போன்ற பலதரப்பட்ட கொள்கையுடையோரால் நடத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது அந்த மேடையில் ஓர் அறிஞர், மத்ஹபைப் பின்பற்றக்கூடாது; தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும்’ என்று முழக்கமிட மற்றொரு அறிஞர், ஸஹாபாக்களை மார்க்கத்தின் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம்’ எனவும் பிரச்சாரம் செய்வார். இந்த இரண்டு உரையையும் பார்க்கும் மக்கள், எது சரியான கொள்கை என்பதைக் கண்டறியாமல் குழப்பத்திற்கு ஆளாகிவிடும் சூழ்நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டும் உள்ளது.

கடந்த காலங்களில் நெல்லை, கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள சில பள்ளிவாசல்களில் ஒரு வாரம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பிலும் ஒரு வாரம் ஜாக் அமைப்பு சார்பிலும் ஜுமுஆ பிரசங்கம் நடைபெற்று வந்தது. அப்போது ரமலான், ஹஜ் பெருநாட்களின் போது பிறை விஷயமாக நம் ஜமாஅத் சார்பில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஒரு நிலைப்பாட்டை அறிவிப்போம். அதற்கு மாற்றமாக ஜாக் தரப்பில் ஒரு நிலைப்பாட்டில் அறிவிப்பார்கள். இருவரும் ஒரே பள்ளியில் வாரம் விட்டு வாரம் ஜுமுஆ பிரசங்கம் செய்வதால் ஒருவரையொருவர் சாடிப் பேசாமல் தங்களது நிலைப்பாட்டை மட்டும் அறிவிக்கும் நிலைக்குப் தள்ளப்பட்டார்கள்.

இதனால் பார்க்கும் மக்கள் குழம்பிப் போய், பெருநாள் திங்களா? அல்லது செவ்வாயா?’ எனக் கேட்க அதற்கு அந்தச் சபையில் தர்க்க ரீதியாக பதில் சொல்லாமல் ஜாக் சார்பில் திங்கள்கிழமை பெருநாள் எனவும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் செவ்வாய்கிழமை பெருநாள் எனவும் கூறி இதனால் மக்கள் குழப்பிப் போய் தங்களின் இபாதத்தே கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். நம் ஜமாஅத் சார்பில் மார்க்க ரீதியாகப் பதில் கொடுக்கத் தெரிந்தாலும் பிற மேடைகளைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விடுமே என்கிற குறுகிய சிந்தனையே இந்த அவலத்தை ஏற்படுத்திவிட்டது.

நம்பிக்கை துரோகம்:

பலதரப்பட்ட கொள்கையுடையோர் தங்கள் கருத்துக்களையும் கொள்கைகளையும் சரிசெய்து கொள்ளாமல் சமரசத்துடனும் சுயநலத்துடனும் ஒன்றிணைந்து பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால் இந்த மக்களின் கொள்கையில் தான் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாலும் இன்னொரு பக்கம் இந்த அப்பாவி மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் செய்து அவர்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளிவிடுகின்றனர்.

தவ்ஹீத் கொள்கையை ஏற்ற மக்கள் வெறுமனே சத்தியவாதிகளின் பிரச்சாரத்தை மட்டுமே பார்த்து இந்த கொள்கையை ஏற்பது கிடையாது. மாறாக இந்தப் பிரச்சாரகர்களின் ஒழுக்கம், நேர்மை, நாணயம் ஆகியவற்றையும் பார்த்துத் தான் இந்தக் கொள்கையை ஏற்கின்றனர். இதுவே இயல்பு.

“இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?” என்று (முஹம்மதே!) கூறுவீராக

அல்குர்ஆன் 10:16

நான் சத்தியத் தூதர், என்னைப் பின்பற்றுங்கள் எனக் கூறாமல் உங்களுக்கு முன்னால் பல ஆண்டுகள் நான் வாழ்ந்துள்ளேன்; என் ஒழுக்கத்தையும் நேர்மையையும் பார்த்து இந்தக் கொள்கைக்கு வாருங்கள். என்னை நம்புங்கள் என நபி (ஸல்) அவர்கள் அம்மக்களை சத்தியத்தின்பால் அழைக்கும் போது, தனது நாணயத்தையும் நேர்மையையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

அதைப் போன்று தான் மக்களும் சத்தியப் பிரச்சாரம் செய்வோரை நன்மையை ஏவுபவராகவும், தீமையைத் தடுப்பவராகவும் மட்டும் பார்க்காமல் அவர் ஒழுக்கமுள்ளவராகவும் பார்க்கிறார்கள். ஒருவரை நாம் ஒழுக்க மாண்பு மிக்கவராகப் பார்க்கும் போது அவர் யாருடன் பழகினாலும், யாருடன் இணைந்து மேடையில் சொற்பொழிவு நிகழ்த்தினாலும் அவர்களையும் கண்ணியமானவராகவே கருதுவார்கள்.

அதற்குக் காரணம், நாம் யாரை ஒழுக்கமுள்ளவர் என்று நினைக்கிறோமோ அவர்கள் கழிசடைகளுடன் சகவாசம் வைக்க மாட்டார்கள்; என்றென்றும் ஒழுக்கமுடையோருன் மட்டுமே சகவாசம் வைப்பார்கள் என்று அவர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை இருக்கும். அதுமட்டுமின்றி இந்த சத்தியப் பிரச்சாரகர்கள் நடத்தை கெட்டோரையும் தவறான கொள்கையுடையோரையும் கண்டால் கடிந்து பேசுவார்களே தவிர அவர்களுடன் பல்லிளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கும்.

உதாரணமாக, ஒழுக்கக் கேடு மற்றும் பண மோசடியின் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட பாக்கரைப் பற்றி நாம் கடுமையாக விமர்சிக்கிறோம். அவர் கடந்த காலங்களில் அடிக்கடி திண்டுக்கல் சென்றார். ஏன் சென்றார்? எதற்காக சென்றார்? என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் இன்று அவரால் திண்டுக்கல்லில் ஒரு குடும்பம் நாசமாகி அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியான காரணத்தால், தனக்கு ஏற்பட்ட இந்தப் பாதிப்பு வேறு எந்தக் குடும்பத்திற்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பாதிக்கப்பட்ட கணவர் கண்ணீர் மல்கக் கொடுக்கிறார். “என்னுடைய மணைவி பாக்கரின் உடன் பிறந்த அக்காள் மகள் என்ற உறவைச் சொல்லி அடிக்கடி எனது வீட்டிற்கு வந்திருக்கிறார். அதுவும் நானும் எனது பிள்ளைகளும் வீட்டில் இல்லாத போது பல முறை வீட்டிற்கு வந்திருக்கிறார்; தங்கியுமிருக்கிறார். மிக நெருங்கிய உறவினர் என்று விட்டு விட்டேன். ஆனால் பின்னால் தான் தெரிந்தது, அவருக்கும் எனது மனைவிக்கும் எந்தவிதச் சொந்தமும் இல்லை என்பது” என்று அவர் தனது பேட்டியில் கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி வீடியோவில் பேட்டியாகக் கொடுத்து, அது ஒரு இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. பாக்கர் இறையச்சத்தோடு (?) கத்தி, ஆக்ரோஷமாகப் பேசுபவர், இந்த இழிசெயலைச் செய்து விட்டார் என்ற மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகத்துக்கு ஆளாக்கப்பட்டு, தனது மனைவியை தலாக் விட்டுவிட்டார்.

இப்போது கவனியுங்கள்! இப்படிப்பட்ட கழிசடைகளை வன்மையாகக் கண்டித்து ஒரு புறம் பேசிவிட்டு, மறுபுறம் அவருடன் ஒரே மேடையில் பேசி அந்தக் கழிசடைகளுக்கு நற்சான்று கொடுத்தால் அது, நம் மீது நல்லபிப்ராயம் கொண்ட மக்களுக்கு நாம் செய்யும் துரோகமே அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

சிதிலடையும் சிந்தனைத் திறன்:

எதைச் சொன்னாலும் செம்மறி ஆட்டுக் கூட்டத்தைப் போல் தலையாட்டிக் கொண்டிருந்த நாம் இன்று அல்லாஹ்வின் கிருபையால் குர்ஆனையும் நபிமொழிகளையும் சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். இவ்வாறு சிந்தித்து செயல்படுவதையே இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகிறது.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.

அல்குர் ஆன் 25:73.

அல்லாஹ்வின் வசனங்களைச் செவியேற்போர் அதைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்ற இந்த இறைவசனத்தை நம் ஜமாஅத்தின் சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் வலியுறுத்தி மக்களை சிந்திக்கத் தூண்டுகிறோம்.

எந்த அளவிற்கென்றால் கப்ர் வழிபாட்டை வலியுறுத்தி எந்த ஆலிம்சாவாவது உரை நிகழ்த்திவிட்டால் அதற்கு நாம் தனி மேடை போட்டு அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பதிலளிப்பதுடன் அந்த ஆலிம்சாவுக்கு சில கேள்விக் கணைகளைத் தொடுப்போம். அதற்கு அந்த ஆலிம் (?) பதில் சொல்ல முடியாமல் திணறிப் போய்விடுவார். அதைப் பார்க்கும் மக்கள் யாரிடம் சத்தியம் உள்ளது என சிந்தித்து உணர்வார்கள்.

ஆனால் பலதரப்பட்ட கொள்கையுடையோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தால் ஒருவரது தவறை மற்றொருவர் கண்டிக்க முடியாமல் போய்விடும். இதனால் யாருடைய கருத்துக்கள் சரியானவை எனக் கண்டுபிடிக்க முடியாமல் போய் மக்கள் சிந்திக்க மறந்து விடுவார்கள். இதனால் மீண்டும் வந்த வழியே திரும்பிப் போகும் அவலநிலைக்கு ஆளாக்கப்படுவார்கள்.

எனவே பலதரப்பட்ட கொள்கையுடையவர்களின் சமரசப் பேச்சைக் கேட்டு செல்லாக் காசாகிப் போய்விடாமல் குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மட்டும் கொள்கையாகக் கொண்டு, நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் தனித்தன்மையோடு செய்யப்படும் பிரச்சாரத்தில் பங்கேற்று ஈருலகத்திலும் வெற்றிபெற வல்ல ரஹ்மான் நமக்கு அருள்புரிவானாக.

கேக் வெட்டிய ஜாக் மவ்லவி:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பிற மேடைகளில் ஏறுவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றது. நாம் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தது, கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒரு சில கசப்பான அனுபவங்களை வைத்துத் தான்.

நமது இந்த நிலைப்பாட்டை நமக்கு எதிரான அமைப்புகள் அனைத்தும் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. இவர்களது விமர்சனம் தவறானது; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையே நியாயமானது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதோ:

நாகர்கோயில் அருகில் பின்னந்தோடு என்ற ஊரில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இந்த விழாவில் ஜாக் அமைப்பின் பேச்சாளரும், அந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிவாசலின் இமாமுமான யாஸீன் இம்தாதி போய் கலந்து கொள்கின்றார்.

ஒருவேளை, நபி (ஸல்) அவர்களின் பிறந்த தின விழா (மீலாது விழா) தான் பித்அத்; ஈஸா நபியின் பிறந்த தின விழா (கிறிஸ்துமஸ்) கொண்டாடுவது சுன்னத் என்று எண்ணுகிறார்கள் போலும்.

இதில் போய் கலந்து கொண்டு, கேக் வெட்டி, பிறந்த தின விழாவைக் கொண்டாடி ஜாக்கின் கொள்கைப் பிடிப்பை நிலைநாட்டியுள்ளார்.

இனி நபி (ஸல்) அவர்களின் பிறந்த தின விழாக்களிலும் சோறாக்கி, ஜோராக அங்கேயும் இந்தக் கொள்கைப் பிடிப்பைப் பறைசாற்றினால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.

“யார் மாற்றுமதக் கலச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூற்கள்: அஹ்மத், பஸ்ஸார்

இந்த மவ்லவி ஏதோ அறியாமல் கலந்து கொண்டிருக்கிறார் அல்லது மயக்கத்தில் போய் கலந்து கொண்டு விட்டார் என்று யாரும் கடுகளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

ஏனெனில் இவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, போகக் கூடாது என்று இருக்கிறதா? என்று ஜாக்கிற்கே உரிய தனி பாணியில் கேட்டிருக்கின்றார்.

பெண் வீட்டு விருந்து கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் போது, பெண் வீட்டு விருந்துக்குத் தடை இருக்கின்றதா? என்று ஆணித்தரமான(?) அசத்தலான (?) கேள்வியை ஜாக் கேட்கின்றது. அதே அடிப்படையில் தான் இந்தக் கேள்வியும் அமைந்திருக்கின்றது.

அந்த அடிப்படையில் நாளை இவர்கள் மீலாது விழாவும் கொண்டாடுவார்கள். கேட்டால் இதே பதிலைத் தான் தருவார்கள். போகிற போக்கைப் பார்த்தால் குராபிகளை மிஞ்சி விடுவார்கள் போல் தெரிகின்றது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

நன்றி: ஏகத்துவம்