Sunday, March 29, 2015

பல்பு வாங்க இப்படி ஒரு ஆவலா ?

அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு!



சமீபத்தில் நமது ஊரில் சகோ அப்துந்நாசர் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி வெகு சிறப்பான முறையில்  நடைபெற்றது. அதில் பலவிதமான கேள்விகளை  நமது  ஊர் சகோதரிகள் கேட்டனர். அவை அனைத்திற்கும் அழகிய முறையில் தெளிவான ஆதாரங்களுடன் விளக்கம்  அளிக்கப்பட்டது. இந்த கேள்வி பதில்  மூலம் பலர் பயன்பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்!

இதை பொறுக்காத ADT என்ற அமைப்பின் ‘அவதூறு பரப்பிகள்’ வழக்கம் போல் தங்கள் குணத்தை வெளிபடுத்தி, கேளுங்கள் மக்கழே.. கேளுங்கள்..!

//முழுமையாக வெளியிடும் 'திராணி' உண்டா?

ததஜவினர் அடித்துவிடும் தங்களுடைய பத்வாவில் உண்மையாளர்களாகவும், உறுதியானவர்களாகவும் இருந்தால் 14.03.2015 அன்று ததஜவினர் அதிரையில் நடந்திய நிகழ்ச்சியின் காணொளியை முழுமையாக பதிய வேண்டும் ஆனால் நமதூர் பெண்களால் நிகழ்ச்சியின் இறுதியில் எழுப்பப்பட்ட கீழ்க்காணும் முக்கிய கேள்வியையும் அதற்கான மவ்லவி அப்துல் நாசரின் பதிலையும் கத்தரித்து விட்டு காணொளியை பதிந்தது ஏன்? இனியாவது வெட்டி ஒழித்த பகுதிகளை மீண்டும் பதிவார்களா?//

இப்படி  ஒரு செய்தியை பரப்பினார்கள். இதில் இருந்த  உண்மை என்ன என்பதை நாங்கள் தெரியபடுத்த கடமைப்பட்டுள்ளோம். நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தப்பின், வஆஹிர் தஃவானா.. என‌ துஆவெல்லாம் ஓதி  நிறைவு பெற்றப்பின் வீடியோ பதிவு நிறுத்தப்பட்டது.

அதற்கு  மேலும்  சகோதரிகள் கேள்வி கேட்டார்கள். அந்த சூழ்நிலையில்தான் அப்படி கேட்கப்பட்ட  கேள்விகளுக்கு சகோதரர் அப்துந் நாசர் பதில் அளித்தார்கள் என்பதை  தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாங்கள் சத்தியத்தில் நிலைத்திருக்கும்வரை எந்த ஒன்றையும் கத்தரிக்கவோ, நீங்கள் பரப்பும் அவதூறுகளுக்காக அதை மீண்டும் நூல் வைத்து தைக்கவோ வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை! “பெண்களின் கிடிக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டு முழித்த ததஜ மவ்லவி அப்துல் நாசரின் நிலை” என்று குறிப்பிட்டிருந்த அந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவருக்குமே தெளிவாக தெரியும்.. அந்த கேள்விகளின் நிலையும், சகோதரரின் பதிலில் உள்ள விளக்கமும்!

மனமுரண்டாக மறுப்பவர்களுக்காக சுருக்கமாக இங்கே:
குர்ஆனுடைய (2: 102) இந்த வசனத்துக்கு ‘அல்லாஹ் நாடினால் சூனியக்காரர்கள் பாதிப்பை ஏற்படுத்த சக்தி பெறுவார்கள் என்றால், அல்லாஹ் மாதிரியே அவர்களுக்கும் சக்தி கிடைக்க அல்லாஹ் நாடுவானா?’ என்று மீண்டும் மீண்டும் சகோதரர் அப்துந் நாஸர் அவர்கள் கேட்டும்கூட, அதற்கு பதில் சொல்ல இயலாமல் அடுத்த கேள்விக்கு தாவுகிறார்கள். இதுதான் கிடிக்கிப் பிடியா?? அப்துந் நாஸர் எடுத்து வைத்த வாதம் கிடிக்கிப் பிடியா? ‘ஒவ்வொன்றுக்கும் தாவித் தாவி போகக்கூடாது’, ‘இவ்வளவு ஆதாரத்தை வைத்துக் கேட்டிருக்கிறேன்.. அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் போகக்கூடாது’ என்றெல்லாம் அவ்வப்போது சகோதரர் அறிவுறுத்தவும் செய்கிறார். ஒன்றைவிட்டு இன்னொன்றுக்கு தாவிச் செல்லும் இதே நிலைதான் ஒவ்வொரு கேள்விக்கும் அங்கே நிலவியது.

இந்த இடத்தில் நாம் அந்த சகோதரிகளை குறை சொல்வதற்காக இதைக் குறிப்பிடவில்லை. "அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுத்துவிடுகிறான்" (புஹாரி 71) என்ற நபிகளாரின் பொன்மொழிக்கேற்ப, அசத்தியத்தின் பக்கம் இருக்கும் அந்த சகோதரிகளுக்கும் அல்லாஹ்தஆலா சத்தியத்தின் பக்கம் விரைவில் தெளிவைக் கொடுக்கட்டும், இன்ஷா அல்லாஹ்! ஆனால், சகோ அப்துந் நாஸரின் எதிர் கேள்விகளுக்கு அந்த சகோதரிகள் மறுபதில் சொல்ல இயலாமல் அடுத்தடுத்த கேள்விகளுக்கு அவர்கள் நகர்ந்ததை அப்படியே மறைத்துவிட்டு, சகோ அப்துந் நாஸர் மாட்டிக் கொண்டு முழித்ததாக கைக்கூசாமல் எழுதி வைத்துள்ளவர்களுக்கே இந்த விளக்கம்!

ஆக, நாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்பது அந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைத்து சகோதரிகளுக்கும் தெரியும். அப்போது கேள்வியை கேட்டதாக உங்களிடம் சொன்ன சகோதரிகள், வீடியோவை அனைத்துவிட்ட  பின்தான்  இந்த கேள்வியைக் கேட்டோம் என்று  உங்களிடம் சொல்லி  இருப்பார்கள் என்றே  நம்புகிறோம். வழமைப்போல் உண்மையை மறைத்து திசை திருப்பி கேள்வி கேட்க மட்டுமே தெரிந்த அவர்கள், அவர்களின் அவதூறு வேலையை செவ்வனே செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் அருளால் அவர்கள் செய்த பித்தலாட்டத்துக்கு அவர்கள் மேடையிலேயே பதில் கிடைக்க அல்லாஹ் உதவி செய்துவிட்டான். தான் செய்த ஆய்வையே என்னவென்று தெரியாமல்  மறந்துப்போன ஆய்வாளர், நேற்று நமதூரில் பேசுகிறேன் என்று ஏற்கனவே ADT எடுத்த அவதூறு வாந்தியை இவர் பங்கிற்கு திரும்ப எடுக்க முயற்ச்சிக்கும்போது,  நமது நிகழ்ச்சிக்கு வந்த சகோதரிகள் உண்மையில் நடந்தது என்ன என்பதை அங்கேயே தெரியப்படுத்திவிட்டார்கள், அல்ஹம்துலில்லாஹ்..!!

“சகோதரிகள் அங்கேயே உண்மையை போட்டுடைத்ததை அப்படியே வெளியிடும் திராணி இப்போது இவர்களுக்கு இருக்கின்றதா?” என்று நாங்கள் கேட்கும் நிலைக்கு திரும்பக் கொண்டு வந்து  நிறுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!

சகோ பிஜெ குர்ஆன்  தமிழாக்கத்தில் தவறு, முகம் மறைத்தல் போன்ற அனைத்து கேள்விகளையும் எடிட் பண்ணாமல் அப்படியே வெளியிடுவீர்கள் என்று  நம்புகிறோம். எங்களிடம்  தற்சமயம் ஆடியோ மட்டும்  இருப்பதால் வீடியோ வை தாமதம் இல்லாமல்  வெளியிடுவீர்கள் என்ற ஆவலுடன்..!

அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். நாமும் அவர்கள் அறியாதவாறு பெரும் சூழ்ச்சி செய்தோம்.  (அல்குர்ஆன் 27 : 50)

Friday, March 27, 2015

அல்-ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி பாடத் திட்டங்கள்

இன்ஷா அல்லாஹ்
அல்-ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வெகு விரைவில் துவக்கம்….!
நடத்தப்படவுள்ள பாடத் திட்டங்களில் சில…

இஸ்லாமிய சட்ட திட்டங்கள்

அரபு மொழியியல்

 சொல் இலக்கணம்

சொற்றொடர் இலக்கணம்

இஸ்லாமியக் கொள்கை விளக்கம்,

நபிகளார் வரலாறு

இஸ்லாமிய ஒழுக்கங்கள்

திருக்குர்ஆன் ஓதும் சட்டங்கள், மனனம்,

திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் விளக்கவுரை

ஹதீஸ் கலை

வாரிசுரிமை சட்டங்கள்
தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் மாதம் இருமுறை கல்லூரிக்கு வருகை வந்து பாடம் நடத்துவார்கள்


இன்னும் பல இன்ஷா அல்லாஹ்….

பெரும்பாலான சகோதர சகோதரிகளின் கோரிக்கைக்கு இணங்க மூன்றாண்டு ஆலிமா பாடத் திட்டம் ஒரு வருடமாக மாற்றப்பட்டு துவங்கப்பட உள்ளது. சேர விருப்பமுடையோர் உடனடியாக விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.


விண்ணப்பம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9944824510, 9500821430

Thursday, March 26, 2015

கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு தான்!

கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு தான்!
                                                                                             ஜாஃபர் நிஷா பின்த் ஷேக் ஃபரீத்


அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் நபியை தங்களின் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்ட பிறகு தொழுகை என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாத்தின் இரண்டாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ள இந்த தொழுகையை முஸ்லிம்களில் பலர் புறக்கணித்து வருகின்றனர். சிலர் பெயரளவில் இந்தத் தொழுகையைத் தொழுது வருகின்றனர். பிறருக்குக் காட்டுவதற்காகவும் கவனமில்லாமலும் தொழும் இத்தகைய தொழுகையாளிகளை திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கண்டிக்கிறான். தொழுகையை புறக்கணிப்பது எப்படிப் பாவமோ தொழுகையில் பொடு போக்காக இருப்பதும் பாவம் தான்.

தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவனே அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை . தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர். (திருக்குர்ஆன். 107: 1-7)

அநாதையை விரட்டுவோரும் ஏழைக்கு உணவளிக்க தூண்டாதவர்களும் பிறருக்கு காட்டுவதற்காக தொழுபவர்களும் மறுமையை நம்பாதவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் கவனமில்லாமல் தொழுவோருக்குக் கேடு தான் என்றும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.

இன்று பலர் தொழுகையில் நின்றாலும் அவர்களின் கவனெல்லாம் வேறு எங்கோ இருக்கும். வெறுமனே குனிந்து நிமிர்வது மட்டுமே தொழுகை என்று இவர்கள் நினைக்கின்றனர். இன்னும் சிலர் தொழுகையிலேயே தூங்குவார்கள். தொழுகையில் என்ன ஓதிக் கொண்டிருக்கிறோம்? எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை கூட உணராமல் தொழுவோரும் உண்டு.

பொருள் தெரியாமல் ஓதினாலும் திருக்குர்ஆனுக்கு நன்மை உண்டு என்றாலும் அதையும் முறையாக ஓதுகிறோமா? வேக வேகமாக ஓதி விட்டு வேக வேகமாக ருகூவு, ஸஜ்தா செய்து விட்டு தொழுகையை நிதானமின்றி முடித்து விடுகிறோம். இது எப்படி இறைவனால் ஏற்கப்படும்? என்பதை நாம் சிந்திப்பதில்லை.

ஒரு நேரம் தொழுவது, ஒரு நேரம் தொழாமல் இருப்பது என்று தொழுகையைத் திருடுவோரும் இருக்கிறார்கள். இந்தத் தொழுகையில் என்ன பயன் இருக்கிறது? இப்படிப்பட்ட கவனமற்ற தொழுகையாளிகளுக்கு நன்மைக் கிடைக்காது, கேடு தான் ஏற்படும் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் கூறுகிறது.

மேலும் இத்தகைய தொழுகை நயவஞ்சகத்தின் அடையாளம் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் எச்சரித்துள்ளார்கள்.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறி களாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (அல்குர்ஆன். 4:132)

ஃபஜ்ர், இஷா ஆகியத் தொழுகைகளைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (657)

தொழுவதற்கு நேரமில்லை என்று சொல்லி லுஹர், அஸர், மஹ்ரிப், இஷா ஆகிய நான்கு தொழுகைகளையும் வேண்டுமென்றே விட்டு விட்டு மொத்தமாக இரவில் களா என்ற பெயரில் சிலர் தொழுது வருகின்றனர். இதுவும் தொழுகையில் பொடுபோக்காக இருப்பது தான். 


நாம் நினைத்த நேரத்தில் தொழுவதற்காக இறைவன் தொழுகையைக் கடமையாக்கவில்லை. ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனி நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் தான் அதை நிறைவேற்ற வேண்டும்.

நாம் நம்மையறியாமல் தூங்கி விட்டாலோ மறந்து விட்டாலோ நினைவு வந்தவுடன் விட்ட தொழுகையைத் தொழுவது தான் களாவாகும். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கிறார்கள். வேண்டுமென்று தொழுகையை விடுவது களாவாகாது. தொழுகையைப் பாழாக்குவதாகத் தான் ஆகும்.

தொழுகையில் பொடுபோக்காக இருப்பதே பாவம் என்றால் அறவே தொழாமல் இருப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.தொழ நேரமில்லை, சுத்தமாக இல்லை என்றெல்லாம் பல்வேறு சாக்கு போக்குகள் சொல்லி தொழுகையைப் பலர் புறக்கணிக்கின்றனர். 
டி.வி பார்க்கவும் சினிமாவுக்கு போகவும் ஊர் சுற்றவும் புறம் பேசவும் பொருளாதாரம் திரட்டவும் பல மணி நேரங்களை செலவளிக்கும் நாம் தொழுகைக்காக மட்டும் நேரம் இல்லை என்பதை இறைவன் ஏற்றுக் கொள்வானா?
இவ்வுலகில் காற்று மழை, உணவு, மலைகள், சூரியன், சந்திரன் என அனைத்தையும் நாம் அனுபவிப்பதற்காக படைத்த இறைவன், அவனை வணங்குவதற்காகவே நம்மைப் படைத்திருக்கிறான். இறைவன் படைத்த நோக்கத்தை நிறைவேற்றவும் அவனுக்கு நன்றி செலுத்தவும் இனி வரும் காலங்களிலாவது தொழுகையில் பொடுபோக்காக இருப்பதைத் தவிர்த்து உள்ளச்சத்துடன் தொழுவோம். சுவர்க்கத்தைப் பெறுவோம்!

குற்றவாளி களிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்க வில்லை'' எனக் கூறுவார்கள்.  (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளை1 பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்க ளிடம் வரும் வரை'' (எனவும் கூறுவார்கள்). எனவே பரிந்துரைப்போரின் பரிந்துரை அவர்களுக்குப் பயன் தராது . (அல்குர்ஆன். 74:40-48)


Wednesday, March 25, 2015

செய்யான குளம் அருகில் நடைபெற்ற தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தெருமுனைப்பிரச்சாரம் இன்று (25.03.2015) இஷா தொழுகைக்கு பிறகு காட்டுப்பள்ளித்தெரு செய்யான குளம் அருகில் நடைபெற்றது இதில் மாவட்ட தாயி அன்வர் அலியும் அதனை தொடர்ந்து மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி முடநம்பிக்கை என்ற தலைப்பில் தாயத்து, தகடு, தட்டு, பில்லி, சூனியம் ஆகியவை இஸ்லாத்தின் இல்லை என்று விளக்கி உரை நிகழ்த்தினார்கள் இதில் 50 க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள்





Monday, March 23, 2015

தெருமுனைப்பிசச்சாரம் அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25.3.2015 புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு பிலால் நகரில் (செய்யான குளம் அருகில்) மார்க்கவிளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெறவுள்ளது இதில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி முடநம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்கள் அனைவரும் இதில் கலந்துக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை


இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்


வருகின்ற 27.3.2015 வெள்ளிக்கிழமை ஆயிஷா மகளிர் அரங்கில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்


கேள்விகளுக்கு பதிலளிப்பவர்
அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

நேரம் 

மாலை  4.30 முதல் 6.00 வரை



Sunday, March 22, 2015

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 20.03.2015 (வீடியோ)

மனிதன் படைக்கப்பட்டது அல்லாஹ்வை வணங்குவதற்கே


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 20.03.2015 (வீடியோ)

Friday, March 20, 2015

திருமண நிலைப்பாடு : திருத்தங்களும் தீர்வுகளும்

திருமண நிலைப்பாடு
திருத்தங்களும் தீர்வுகளும்
"கல்யாணம் முடித்தேன்! கடனாளியாகி விட்டேன்!''
"வட்டிக்கு எடுத்து வகையாகத் திருமணம் நடத்தினேன்! இப்போது வீட்டை விற்றுவிட்டு, வீதிக்கு வந்து விட்டேன்!''
இப்படிப்பட்ட புலம்பல்கள் நமது செவிப்புலன்களில் வந்து விழுகின்றன. இது யாருடைய புலம்பல்? பெண் வீட்டுக்காரனின் புலம்பல் தான். திருமணம் என்று வந்ததும் பொருளாதாரம் காலியாகிப் போய்விடுகின்றது. இது பொருளாதார ரீதியிலான பாதிப்பு என்றால் இன்னொரு புறம் வாழ்வாதார ரீதியிலான பாதிப்பும் ஏற்படுகின்றது.
அந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள். இன்று கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கருவிலேயே பொசுக்கப்பட்டு விடுகின்றனர். தப்பித் தவறி பிறந்து விட்டால் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியெறியப்படுகின்றனர்.
கால்நடையிலிருந்து காட்டு விலங்குகள் வரை தாங்கள் ஈன்ற குட்டிகளை உயிரைக் கொடுத்து, பாசத்தைக் கொட்டி வளர்க்கும் போது, பகுத்தறிவுப் பிராணியான இந்த மனித இனம் மட்டும், தான் பெறுகின்ற பிள்ளைகளில் ஆணா? பெண்ணா என்று பேதம் பார்த்து, பெண்ணினத்தை அழிக்கின்றது என்றால் அதற்குக் காரணம் என்ன?
வரதட்சணைக் கொடுமை! வாட்டுகின்ற திருமணச் செலவு! இவை தான் இதற்குரிய பதில்.
இதற்காக எந்த ஜமாஅத்தும், எந்த இயக்கமும் இதற்குரிய நடைமுறை செயல்பாட்டுத் திட்டத்தில் இறங்கவில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே அந்தத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 23388
இந்த ஹதீசுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் எளிய திருமணத்திற்கு இலக்கணமாகச் செயல்படும் விதத்தில் மண்டபத் திருமணத்திற்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்தது. இதுகுறித்து ஏகத்துவம் 2011 டிசம்பர் இதழில், "மலைக்க வைக்கும் மண்டபத் திருமணங்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
மண்டபத் திருமணத்திற்கு தஃப்தர் உண்டு, தாயீ இல்லை என்ற சட்டம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் முதல் உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் பொதுவான சட்டம். இந்தச் சட்டத்தில் அனுமதியின் வாசல் விரிவாகவும் விசாலமாகவும் திறக்கப்பட்டிருந்தது.
நேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிமாக்கி, அவர்களுக்கு (தன்னைப் பற்றிய) அச்சத்தையும் வழங்கினான். (அல்குர்ஆன் 47:17)
இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவதற்கேற்ப திருமண நிலைப்பாட்டில் இன்னும் சிறந்த வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும் விதமாக, கடந்த 12.11.2013 அன்று நடைபெற்ற மாநில உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் மண்டபத்தில்  நடைபெறும் திருமணங்கள் சம்பந்தமாக பின்வருமாறு ஆலோசிக்கப்பட்டது.
மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் மண்டபங்களில் நடத்தப்படும் திருமணங்களில் கலந்து கொண்டாலும், தங்கள் குடும்பத்து திருமணங்களை மண்டபத்தில் நடத்தினாலும் அவர்கள் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டை நாம் எடுத்து செயல்படுத்தி வருகிறோம்.
விருந்தில் கலந்து கொள்வது, தங்கள் குடும்பத் திருமணங்களை நடத்துவது இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு அந்த நிலைபாட்டில் ஒரு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கிளை மாவட்ட நிர்வாகிகள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கிளைப் பேச்சாளர்கள், மாநிலப் பேச்சாளர்கள், மாவட்ட கிளை அணிச் செயலாளர்கள் தமது திருமணத்தையோ, தமது பொறுப்பில் உள்ள  சகோதர சகோதரிகள் திருமணத்தையோ, தனது பிள்ளைகள் திருமணத்தையோ மண்டபத்தில் நடத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் எனவும்,
மண்டப திருமணங்களில்  (நபி வழியில் மார்க்கம் தடை செய்யாத வகையில்) நடைபெறும் திருமண விருந்தில் கலந்து கொள்வோர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் அந்தத் திருமணம் சமுதாயத்திற்கு சரியான முன் உதாரணத்திற்கு உட்பட்டதா என்பதை அல்லாஹ்விற்கு அஞ்சி அவரவர் முடிவு எடுத்துக் கொள்வது எனவும் திருத்தம் செய்ய ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஒருசில கட்டங்களில் வீடுகளில் நடக்கும் திருமணங்களில் பந்தல், பரிமாறப்படும் பந்திகளுக்கு நாற்காலிகள் என்று மண்டபத்தை விடப் பன்மடங்கில் செலவு விஞ்சி விடுகின்றது. எளிய திருமணம் என்ற இலக்கணம் இங்கு தகர்க்கப்பட்டு விடுகின்றது. மண்டபத்தில் நடக்கும் திருமணம் எளிமையாக அமைந்து விடுகின்றது. இதைக் கவனத்தில் கொண்டு கீழ்க்காணும் முடிவு எடுக்கப்பட்டது.
சில நேரங்களில் மண்டப திருமணம் வீட்டில் நடக்கும் திருமணத்தை விட குறைந்த செலவுடையதாக இருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது. வீட்டில் நடத்த முடியாமல் கடும் எதிர்ப்பு இருக்கும் போது மண்டபத்தில் நடத்தும் நிர்பந்தமும் சில நேரங்களில் ஏற்படும்.
இது போன்ற நிலை உள்ளதா என்பதை கிளையும் மாவட்டமும் தக்க முறையில் பரிசீலித்து, பரிந்துரை செய்தால் அப்போது மட்டும் அதை அனுமதிப்பது என்றும் திருத்தம் செய்யப்படுகிறது.
மண்டபத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு தாயிக்களை அனுப்பவதில்லை என்ற நிலைபாடு அப்படியே நீடிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
திருமண விருந்து
எளிய திருமணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மண்டபத் திருமணத்திற்கு சில கட்டுப்பாடுகளை தவ்ஹீத் ஜமாஅத் விதித்திருக்கின்றது. இருப்பினும், மண்டப விருந்தில் மட்டும் ஒரு நெருடல் இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் கீழ்க்காணும் ஹதீஸ் தான்.
ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா - மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி 5177, முஸ்லிம் 2816, 2819
விருந்தைப் புறக்கணித்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார் என்று ஹதீஸில் வருவது தான் இந்த நெருடலுக்குக் காரணம்.
இதற்கும் அல்லாஹ்வின் அருளால் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒரு நல்ல தீர்வு எடுக்கப்பட்டது. இப்படி ஒரு தீர்வை அடைவதற்கு உதவிய அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
விருந்தழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வரும் நபிமொழியில் சொல்லப்படும் செய்தி என்ன என்பதை ஆய்வு செய்யும் போது, விருந்துகளில் கெட்ட விருந்து வலிமா விருந்தாகும், அதில் பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். விருந்தழைப்பை யார் மறுத்தாரோ அவர் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தவராவார் என நபி(ஸல்) கூறியதாக வருகிறது.
இந்த நபிமொழியை மேலோட்டமாகப் பார்க்கும் போது விருந்தழைப்பை மறுக்கக்கூடாது என்று நாம் புரிந்து கொள்வோம். ஆனால் இந்த நபிமொழியின் துவக்கத்தில் சொல்லப்படும் வார்த்தைகளைக் கவனிக்கும் போது இதற்குத் துணையாக வரும் மற்ற ஹதீஸ்களைப் பார்க்கும் போது விருந்து குறித்து நபிகளார் கூறிய உண்மையான பொருள் புலப்படும்.
ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு நடத்தப்படும் விருந்தளிப்பு கெட்டவிருந்து எனக் கூறும் நபியவர்கள் அந்த விருந்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என நிச்சயம் கூறியிருக்க மாட்டார்கள்.
விருந்து குறித்த இந்தச் செய்தியை அறிவிக்கும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் "எனக்கு ஆட்டின் கால்குழம்பு விருந்தாக அளிக்கப்பட்டாலும் அதை (அற்பமாகக் கருதாமல்) ஏற்றுக் கொள்வேன்'' என நபி(ஸல்) கூறியதாக வருகிறது.
இந்த இரண்டு ஹதீஸையும் இணைத்து பொருள் கொடுத்தால் விருந்தழைப்பு குறித்து நபிகளார் சொன்னது என்ன என்பதை பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்
விருந்துகளில் கெட்ட விருந்து வலிமா விருந்தாகும், அதில் பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். (ஏழைகள் விடுக்கும்) விருந்தழைப்பை யார் மறுத்தாரோ அவர் நபியவர்களுக்கு மாறு செய்தவராவார் என ஹதீஸ் கூறுகின்றது.
ஏழை என்பதற்காக ஒருவரை விருந்துக்கு அழைக்காமல் இருப்பதையும் ஏழை அழைத்தார் என்பதற்காக அவருடைய விருந்தழைப்பைப் புறக்கணிக்கக்கூடாது என்பதையும் தான் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன என்று நபிகளாரின் கூற்றைப் புரிந்துகொண்டால் எந்தக் குழப்பமும் இருக்காது.
விருந்தழைப்பை மறுக்கக் கூடாது என்று கூறி மண்டபத் திருமணத்திற்கு ஆதரவு கொடுத்து, எளிமையான திருமணத்தை அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடக்கூடாது.
அதே சமயம் கிளை அல்லது மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் மண்டபத் திருமணத்தில் கலந்து கொள்வதை காரண காரியத்தை அலசி மாநிலத் தலைமை எடுக்க இயலாது. சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொள்ளும் இந்தத் திருமண விருந்து எளிமையானது தானா அல்லது ஆடம்பரமானதா என்பதை அல்லாஹ்வுக்கு பயந்து முடிவெடுத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இறையச்சமுள்ளவர்களுக்கு இமாமாக நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எனவே மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் தனது இல்லத் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றால் அதில் கலந்துகொள்ளக் கூடாது எனவும் நிர்பந்தமான சூழல் ஏற்பட்டு மண்டபத்தில் திருமணம் நடத்தப்பட்டால் அவர் சார்ந்திருக்கும் கிளை, மாவட்ட நிர்வாகம் அவரை மண்டபத் திருமணத்தில் கலந்துகொள்ள பரிந்துரைத்தால் அப்போது அவர் பங்கேற்கலாம்.
ஆடம்பரத்தில் சிக்குண்டு சிதறும் சமுதாயத்தின் நிலையை மாற்றுவதற்காக எளிமையானத் திருமணத்திலே பரக்கத் உண்டு என்ற நபிமொழியை பரவலாக நடைமுறைப்படுத்த வேண்டிய உன்னதமான நோக்கத்திலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


-மார்ச் ஏகத்துவம் 2015

Wednesday, March 18, 2015

உலக ஆசை!

உலக ஆசை!

ஹீன் பின்த் ஜாஹிர் ஹுஸைன்

இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் அல்லாஹ் அதை எதற்காகப் படைத்திருக்கிறானோ அந்த நோக்கத்தை அது செயல்படுத்துகிறது. இறைவனுக்கு அடிபணிந்து நடக்கிறது. ஆனால் பகுத்தறிவுள்ள மனிதன் மட்டுமே தான் படைக்கப்பட்ட காரணத்தை மறந்து விட்டு அழிந்து போகும் இந்த உலகமே பெரிது என வாழ்கிறான். தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யும் இவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று இறுமாப்பில் வாழ்கிறான்.

மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை கிடையாது என நம்புவோரின் நிலை இதுவென்றால் மறுமை வாழ்க்கையை நம்பும் முஸ்லிம்களும் இதில் விதி விலக்கல்ல. உலக ஆசையில் அல்லாஹ்வையும் மறுமையையும் மறந்து வாழ்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வை ஆராய்ந்தால் இந்த உலகத்தை நாம் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதியளித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பை நாங்கள் தயாரித்துத் தருகிறோம். அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்''எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'எனக்கும் இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும் அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும் இவ்வுலகத்துக்கும் உள்ளது'' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.

இதை நபிகள் நாயகத்தின் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: திர்மிதி,இப்னுமாஜா

நாம் வெளியூருக்கு பயணம் செய்தால் வீடு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியூரில் நமது வேலையை முடிப்போம். அதே போல் தான் இந்த உலகமும். இது நிரந்தரம் கிடையாது. நாம் அனைவரும் மறுமையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பவர்கள் தான்.

இந்த உலகம் என்பது வெறும் வீணும் விளையாட்டுமே என்று அல்லாஹ்வும் தன் திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்.

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? அல்குர்ஆன். 6:32)

இவ்வுலகை விட மறுமை தான் சிறந்தது என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது நாம் மறுமையைப் பெரிதாக நினைக்கிறோமா?

தங்கள் பிள்ளைகள் உலகக் கல்வியில் முன்னேற வேண்டும் என்று தான் பெற்றோர்கள் விரும்புகிறார்களே தவிர மார்க்கக் கல்வி கற்று ஆலிமாக ஆலிமாவாக வர வேண்டும் என்று விரும்புவதில்லை. இத்தனைக்கும் மார்க்கக் கல்வி கற்க இலட்சக்கணக்கில் செலவழிக்கத் தேவையில்லை, சீட் கேட்டு அலையத் தேவை இல்லை. மிக இலகுவாக கிடைக்கும் மார்க்கக் கல்விக்கு இவர்கள் மதிப்பதில்லை. ஒரு வேளை பணிரெண்டாம் வகுப்பில் ஃபெயிலாகி விட்டால்  மதரஸாவில் சேர்க்க நினைக்கிறார்களே தவிர மார்க்கப் பிரச்சாரராக தங்கள் பிள்ளைகள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் மிகக் குறைவு. மறுமையில் வெற்றியைத் தேடித் தரும் மார்க்கக் கல்வியில் இவர்களின் நிலை இது.

அது போல் இவ்வுலகில் பணம் வீடு நகை என எல்லா வசதிகளுடனும் சொகுசுகளுடனும் வாழ விரும்புவோர் நிரந்தரமான சொர்க்கத்தின் இன்பங்களை அடைய ஆசைப்படுவதில்லை.

அதே நேரத்தில் இந்த உலகத்தை ஆசைப்படக் கூடாது என்று நாம் சொல்லவில்லை. இவ்வுலகம் என்பது காஃபிருக்கு தான் சுவர்க்கமே தவிர முஸ்லிமைப் பொருத்த வரை ஒரு சிறைச்சாலை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதின் அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.உலகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து  மறுமையை மறந்து விடக் கூடாது.

நாம் மரணித்த பிறகு நம்மை பின் தொடரும் மூன்று காரியங்களைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்

'ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும்.

 அவைநிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி'என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி நூல்: முஸ்லிம் 3084

நாம் கஷ்டப்பட்டு சேர்த்த செல்வமோ நம் மீது அதிகமான பாசம் செலுத்தும் குடும்பமோ மரணத்திற்குப் பிறகு நம்மைப் பின் தொடராது. மாறாக நாம் செய்யும் நல்லமல்களே நம்முடன் வரும். எனவே அதிகமான நன்மைகளை நாம் செய்ய வேண்டும்.

 நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள் (அல்குர்ஆன். 98:7) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது கடலில் நம் விரலை முக்கியெடுத்தால் எந்த அளவிற்கு தண்ணீர் சொட்டுமோ அந்த அளவு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இந்த அற்ப உலகத்தில் சிறிது செல்வம் நமக்குக் கிடைத்ததும் சிலருக்கு ஆணவமும் ஆடம்பரம் எனும் பெயரால் காசைக் கரியாக்கும் பழக்கமும் திமிரும் வந்து விடுகிறது. மற்றவர்களை மட்டமாக நினைக்க ஆரம்பித்து விடுகின்றனர். மேலும் உலக ஆசைக்கு அடிபணிந்து சினிமா, மது, சூது என சீரழிந்து விடுகின்றனர். ஆனால் தாங்கள் செய்யும் இந்த தவறுகளால் நிரந்தரமாக கிடைக்க இருக்கிற மறுமையின் இன்பங்களை இழக்க வேண்டி வரும் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள். இனி வரும் காலங்களிலாவது மறுமைக்காக வாழும் நன்மக்களாக நாம் மாறுவோம். அதிக நன்மை புரிவோம்.

குறிப்பு : ஒவ்வொரு வாரமும்  பெண்கள் பயான்  நடைபெறும்போது  ஒரு மாணவி  பயான் செய்கிறார்  அதனை இங்கே தருகிறோம்

Monday, March 16, 2015

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் அதிரை வீடியோ (14/03/15)

அஸ்ஸலாமு  அலைக்கும்  கடந்த  14/03/15 அன்று அதிரையில் நடந்த இஸ்லாம்  ஓர் எளிய மார்க்கம்  நிகழ்ச்சியில் சூனியம் சம்மந்தமாக  அதிக கேள்விகள் கேட்கப்பட்டது

இதில் சகோதரர் அப்துன் நாசர் Misc அவர்கள் கேள்விகளுக்கு சிறப்பான  முறையில்  பதில் அளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்


















Sunday, March 15, 2015

மருத்துவ உதவி

அதிராம்பட்டினம் திகலர் தெருவை சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை சிறுவனின் மருத்துவ செலவிற்காக அதிரை கிளை மூலம் வசூல் செய்யப்பட்ட தொகை ரூ 17,400 சிறுவனின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்மா பயான் (13/03/15)

தவ்ஹீத் பள்ளி ஜூம்மா  பயான்
நாள்  13/03/15
உரை  அப்துல் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி




Friday, March 13, 2015

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இஸ்லாம்  ஓர் எளிய மார்க்கம்

அஸ்ஸலாமு  அலைக்கும்  வரும்  சனிக்கிழமை  14/03/15 மாலை  4.00 மணியளவில் நமது  ஊர் CMP லைன்   அன்சாரி  காக்கா  வீட்டில்  பெண்களுக்கான  இஸ்லாம் ஓர் எளிய  மார்க்கம்  நிகழ்ச்சி  நடை பெரும்

இதில்  சகோதரர்  அப்துந்நாசர்   அவர்கள் கேள்விகளுக்கு  பதில் அளிப்பார் இன்ஷா அல்லாஹ்




அ த த வினருக்கு அறை கூவல்!

நாம் எதை கேள்வியாகக் கேட்டாலும் பதில் அ த த வின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடுவதில்லை. கள்ள வெப்ஸைட்டில் வரக் காரணம் அவர்கள் சொல்லும் பதில் சரியில்லை என்பது அவர்களுக்கே தெரியும். பாவம்!

திராணியிருந்தால் மேலத்தெரு சுன்னத் வல்ஜமாஅத் பள்ளிவாசல் குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் பின்பற்றும் ஜமாஅத் என்பதையும் அப்துல் மஜீத் மவ்லவி பக்கா தவ்ஹீத்வாதி என்பதையும் உங்கள் அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் வெளியிடுங்கள். நபிவழியில் ஜனாஸா தொழுகை நடத்தியது தவறு. சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் தான் ஜனாஸா தொழுகை நடத்தியிருக்க வேண்டும் என்பதையும் தர்காவை வழிபடுபவர் இணைவைக்கும் இமாம் அல்ல என்பதையும் உங்கள் அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் வெளியிடுங்கள். பதில் சொல்கிறோம் .

இன்னொரு அறைகூவலையும் அ த தவினருக்கு வைக்கிறோம். உங்கள் கருத்துப் படி மேலத் தெருவில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  ஜும்மா பள்ளிவாசல் இயங்கும் போது நீங்கள்  ஜும்மாவுக்கென தனியாக பள்ளிவாசல் உருவாக்கியது ஏன்? ஜும்மா பள்ளியில் தொழுவோர் உங்கள் பார்வையில் முஸ்லிம்கள் இல்லையா? நீங்கள் அவர்களை முஸ்லிமென ஒத்துக் கொண்டால் உங்கள் பள்ளியைக் கலைத்து விடத் தயாரா?

இன்னொரு அறைகூவலையும் அ த தவினருக்கு முன் வைக்கிறோம்.

அ த தவினர் அப்துல் மஜீத் மௌலவியை தொழுகை நடத்தும் வேலைக்கு அழைத்து வந்தால் நாங்கள் சேர்த்துக் கொள்ளத் தயார்! அழைத்து வர அ த த தயாரா?

இன்னொரு அறை கூவலையும் முன் வைக்கிறோம். நீங்கள் சொல்கிற அதே ஜும்மா பள்ளியில் இமாமத் செய்யும் இமாமை உங்கள் தனிப் பள்ளியில் இமாமாக சேர்த்துக் கொள்ளத் தயாரா?

நாங்கள் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் கேள்வி மட்டுமே கேட்கக் கூடாது. அது உங்களிடம் பதில் இல்லை என்பதையே காட்டுகிறது. உங்களுக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும். பதில் சொல்லத் தெரியாது என்பது எங்களுக்கு தெரியும். அதை உண்மைப்படுத்தும் வகையில் இல்லாமல் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலை சொல்ல வேண்டும். அதுவும் உங்கள் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலிருந்து சொல்ல வேண்டும்.

முடியும் இல்லாமல், மூலையும் இல்லாமல், வேறு வேலையும் இல்லாமல், அ த த வின் சம்மதமும் இல்லாமல் உளரும் தனி நபர்களின் தனிப்பட்ட விமர்சனங்களுக்கு இனி பதில் தர மாட்டோம். எதுவாக இருந்தாலும் அதிகாரப் பூர்வமாக வந்தால் மட்டுமே பதிலளிப்போம் என்பதை சொல்லிக் கொள்கிறோம்.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.
அல்குர்ஆன். 21:18

Wednesday, March 11, 2015

மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்

இன்று இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு ரஹ்மத் நூலகம் அருகில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்தில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் மற்றும் மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்

ஜனாஸாவை காரணமாக வைத்து தவ்ஹீத் ஜமாஅத்தை மேலத்தெருவுக்கு வரவிடாமல் தடுப்பதற்கு எல்லாவேலைகளையும் செய்த அ  த த குழுவிற்கு தெருமுனைப்பிரச்சாரத்தில் கூடி கூட்டத்தின் மூலம் மக்களும் ஜமாஅத்தினரும் பதிலளித்துள்ளனர் வேடதாரிகளை மக்களுக்கும் ஜமாத்திற்கு அடையாளம் காட்டி அல்லாஹ்விற்கே எல்லாபுகழும்










சுன்னத் ஜமாஅத்தினரை தூண்டிவிடும் அ த த குழு


தமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் இது போன்ற போர்டுகள் வைத்து ஜனாஸா தொழுகையில், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் சுன்னத் வல்ஜமாஅத்தினருக்கும் பிரச்சனைகள் வந்ததுண்டு, கலவரம் நடந்ததுண்டு. ஆனால் அதிரையில் அல்லாஹ்வின் உதவியால் இதுவரை அப்படி ஒரு பிரச்சனை வந்ததில்லை. ஆரம்ப காலத்தில் தொழுகை, தொப்பி, விரலசைத்தல், மத்ஹப் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், ஜனாஸா பிரச்சனை, எங்கள் மையவாடியில் அடக்கக்கூடாது என்பன போன்ற ஈனத்தனமான பிரச்சனைகள் அதிரையில் வந்ததில்லை. அல்ஹம்துலில்லாஹ்! இனி வரவும் செய்யாது என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. 


ஆனால் சமீபத்தில் அதிரையில் நடந்த ஒரு நபிவழி தொழுகையின் மூலம் கலவரத்தை உண்டு பண்ணி, அதன் மூலம் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும், அதிரை பெரிய ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கும் இடையில் ஒரு பிரச்சனையை உண்டு பண்ண பேராவல் கொண்டு, அனைத்து ஹதீஸ்களையும் ஏற்றுக்கொள்ளும் முஸ்லிம்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பவாத கூட்டம் பெரிய ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திடம், 'உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் சிறு பிரச்சனைகள் இருக்கிறது, அதை பேசி தீர்த்துக்கொள்வோம். இவர்களின் ஜனாஸாவை நமது மையவாடியில் அடக்கம் செய்ய விடக்கூடாது' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அடடா.. என்னே அற்புத கோரிக்கை..!!!

அனைத்து ஹதீஸ்களையும் பின்பற்றும் முஸ்லிம்களே..! உங்களிடம் சில கேள்விகள்: 

- நீங்கள் பிரச்சனை பண்ண விரும்பிய ஜனாஸா தொழுகை நபிவழி தொழுகையா இல்லையா ?

- வீட்டில் பெண்களுடன் சேர்ந்து ஜனாஸா தொழுகை வைப்பது நபிவழியா இல்லையா?

- ரசூலுல்லாஹ் இப்படி தொழ வைத்து இருக்கிறார்களா இல்லையா?

'இல்லை; இது நபிவழி இல்லை, ரசூலுல்லாஹ் அப்படி தொழ வைத்ததே இல்லை, தவ்ஹீத் ஜமாத்தினர்தான் முதன் முதலில் அதிரையில் வீட்டில் பெண்கள் தொழுகையுடன் சேர்த்து ஜனாஸா தொழுகை தொழ வைத்துள்ளனர், அதனால்தான் நாங்கள் எதிர்க்கிறோம்' என்று சொல்லுங்கள். உங்கள் நேர்மையை பாராட்டுகிறோம். அல்லது,

'ஆமாம்; ரசூலுல்லாஹ் அப்படி தொழ வைத்துள்ளார்கள், அது நபிவழிதான், நாங்கள்தான் ஆத்திரத்தில் கண்ணை மறைக்க ஏதோ உளறி விட்டோம், நாங்கள் செய்தது தவறுதான்' என்று சொன்னாலும்கூட உங்கள் நேர்மையை பாராட்டலாம். 

அதை விடுத்து, ஜனாஸாவில் பிரச்சனையே பண்ணாத நமது அதிரை பள்ளி நிர்வாகிகளுக்கு பிரச்சனையை கிளப்பிவிட்டு, தூபமிட்டு கலவரம் உண்டு பண்ணி நீங்கள் சாதிக்கப்போவது என்னவென்று யோசியுங்கள்! 

ஆரம்பத்தில் தவ்ஹீத் சிந்தனையே இல்லாத நமது ஊரில் பல அனாச்சாரங்கள் நடந்தபோது தவ்ஹீத் சிந்தனை உள்ளே நுழைந்தது. அதிரையில் தவ்ஹீத் சிந்தனை வீறுகொண்டு எழுந்தது, அல்ஹம்துலில்லாஹ்! 

நாள் ஆக ஆக தவ்ஹீத் என்ற வார்த்தையின் வட்டங்கள் குறுகலாயிற்று. பல குழுக்களாக பிரிந்து சென்றீர்! இன்று நீங்கள் ஒரு தனிப்பள்ளி கண்டுள்ளீர்கள்! தவ்ஹீத் ஜமாஅத்தினராகிய நாங்கள் ஒரு தனி பள்ளி கண்டு இருக்கிறோம். 

நமது பெரிய ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தினர் நமக்குள் நடக்கும் இந்த பிரிவினையை கண்டுக் கொள்ளவே மாட்டார்கள்; கண்டு கொள்ளவுமில்லை. 

இன்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஜனாஸாவை மையவாடியில் அடக்கம் செய்யவிடக் கூடாது என்று கோரிக்கை வைத்து இருக்கும் உங்களை என்னவென்று சொல்வது ??

கம்ப்யூட்டருக்கு பின்னால் உட்கார்ந்து முகம் மறைத்துக் கொண்டு பிஜெயானிகள், பிஜே அடிமைகள் இவர்கள் ஜனாஸாவை பள்ளிக்குள் விடக்கூடாது என்று கொக்கரிக்கும் கொள்கை குன்றுகளாக மாறிவிட்ட உங்களிடம் ஒரே வேண்டுதல்! 

கம்ப்யூட்டரின் மானிட்டர் திரையைவிட்டு உங்கள் கண் திரைக் கொண்டு உங்களுக்கு முன்னால் நிற்பவர்கள் யார் என்று பாருங்கள்! ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவன் உங்கள் முன்னால் நிற்பான்.. உங்கள் உடன் பிறப்புக்கள், உங்கள் பெற்றோர், உங்கள் குழந்தைகள் என‌..! 

இவர்களுக்கு எதிராகத்தான் நீங்கள் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தினரிடத்தில் கோரிக்கை வைத்து இருக்கிறீர்கள். கலவரமே நடக்காத அதிரையில் கலவரம் நடக்க தூண்டுகிறீர்கள்! என்ன ஒரு வெட்கக்கேடான செயல் இது..!!

உங்களுக்கு எதிராக இன்று தவ்ஹீத் ஜமாஅத்தினராக நிற்கும் அனைவருக்கும் குடும்பம் உண்டு. கொள்கையால் இன்று பிரிந்து எதிர் அணியில் நிற்கலாம். நாளை ஜனாஸா தொழுகையில் பிரச்சனை உண்டு பண்ணி ஜனாஸாவை கூறுபோட்டு வெற்றி களிப்பில் கொண்டாட நீங்கள் ஆசைப்படலாம். ஆனால் ஒன்றை மறந்து விட்டீர்களே சகோதர்களே! அது என்ன.. ஜனாஸா என்றால் எவன் வீட்டிலோதான் விழும், நமது வீட்டில் விழாது நாம் எல்லாம் சாகா வரம் எடுத்து வந்துவிட்டோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறீர்களா..?!

மரணத்தை நினைவு கூறுங்கள்.!!

ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் உண்டு! 
ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் உண்டு!

(7:34) وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ ۖ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ 

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள். (7:34)

Tuesday, March 10, 2015

அல் ஹிக்மா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி விண்ணப்பம்

அல் ஹிக்மா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவிகளின் பெற்றோர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளையின் செயலாளர் சகோதரர் பக்கீர் முகைதீனை தொடர்பு கொண்டு ரூ 100 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளுங்கள் தொடர்புக்கு : +919500821430




Monday, March 09, 2015

ஆட்டுத்தோல் போர்த்திய நரிகளின் முகமூடி கிழிந்தது!



ஆட்டுத்தோல் போர்த்திய நரிகளின் முகமூடி கிழிந்தது!


அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!

அதிரை தாருல் (ஃபித்னா) தவ்ஹீதினரால் நடத்தப்படும் கள்ள வெப்ஸைட் ஒன்றில் சகோதரர் மஹ்ஸின் அவர்கள் வீட்டில் நபி வழியில் நடைபெற்ற ஜனாஸா தொழுகையை விமர்சித்து எழுதியிருந்தனர்.

இவர்களுக்கு குர்ஆனும் தெரியாது, ஹதீஸும் தெரியாது. இந்நிலையில் ஹதீஸையெல்லாம் போட்டு நம்மைக் கிண்டல் செய்கின்றனர். சரி அதுவாவது ஆதாரப்பூர்வமான செய்தியா? என்று கோவையில் இன்று வரை நாறிக்கொண்டிருக்கும் மன்மதக் குஞ்சு மற்றும் இவர்கள் கொண்டாடும் இலங்கை மன்மதக் குஞ்சு அல்லது ரதி மீனா பஸ் ஸ்பெஷல் மன்மதக் குஞ்சு அல்லது இவர்களைப் பின்னால் இருந்து இயக்கும் ஓரினச் சேர்க்கை புகழ் ஆலிம்சா (இன்னொரு மைனர் குஞ்சை அவசியம் கருதி தவிர்த்து இருக்கிறோம் )ஆகிய எவரிடமாவது இந்த ஹதீஸ் குறித்து கேட்டு இருக்கலாம் .
அப்படிக் கேட்காமல் விமர்சிக்க துவங்கும் போதே பொய்யான ஹதீஸை சொல்லியே தங்கள் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸா?

3020 حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَزِيدَ الْكُوفِيُّ حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ عَنْ غُطَيْفِ بْنِ أَعْيَنَ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي عُنُقِي صَلِيبٌ مِنْ ذَهَبٍ فَقَالَ يَا عَدِيُّ اطْرَحْ عَنْكَ هَذَا الْوَثَنَ وَسَمِعْتُهُ يَقْرَأُ فِي سُورَةِ بَرَاءَةٌ اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ قَالَ أَمَا إِنَّهُمْ لَمْ يَكُونُوا يَعْبُدُونَهُمْ وَلَكِنَّهُمْ كَانُوا إِذَا أَحَلُّوا لَهُمْ شَيْئًا اسْتَحَلُّوهُ وَإِذَا حَرَّمُوا عَلَيْهِمْ شَيْئًا حَرَّمُوهُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ السَّلَامِ بْنِ حَرْبٍ وَغُطَيْفُ بْنُ أَعْيَنَ لَيْسَ بِمَعْرُوفٍ فِي الْحَدِيثِ رواه الترمذي

என் கழுத்தில் தங்கத்தால் ஆன சிலை இருக்கும் நிலையில் நபிகளாரிடம் சென்றேன். அப்போது இந்த சிலையை எரிந்துவிடுங்கள் என்று கூறினார்கள். பின்னர் பராஅத் (தவ்பா) அத்தியாயத்தின் (31 வது வசனமான) அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், கடவுள்களாக்கினர். என்பதை ஓதினார்கள். மேலும் இவர்கள், அவர்களை வணங்கவில்லை.
மாறாக  அவர்கள் ஏதாவது ஒன்றை ஹலால்  என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) இவர்களும் ஹலாலாக்கிக்கொள்வார்கள். ஏதாவது ஒன்றை அவர்களுக்கு ஹராம் என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) ஹராமாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல் :திர்மிதீ (3020)
இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் குதைஃஃப் பின் பின் அஃயன், அல்ஹுஸைன் பின் யஸீத் என்ற இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளதால் இது பலவீனமான செய்தி. ஆதாரப்பூர்வமானதல்ல. எந்த செய்தியை வைத்து பிஜேயானிகள் என்று எங்களை விமர்சிக்கிறார்களோ அதுவே ஹதீஸல்ல எனும் போது இவர்களின் ஆரம்பமே கிழிந்து தொங்குகிறது.

போலி ஒற்றுமை

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் மதீனாவில் வாழ்ந்த யூதர்களும் கிறித்தவர்களும் நெருப்பு வணங்கிகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்தியத்திற்கு எதிராக போலி ஒற்றுமையைக் காட்டியது போல் இவர்கள் அதிரை ஜும்மா பள்ளி நிர்வாகத்துடன் ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனர்.

அதிரை ஜும்மா பள்ளி நிர்வாகத்திற்கு எங்களையும் தெரியும் உங்களையும் தெரியும். நீங்கள் தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்கும் போது மட்டுமே அவர்களுடன் ஒன்று சேருவீர்கள் என்பதையும் நிர்வாகத்திற்கும் பதவிக்கும் ஆசைப்படும் போலி தவ்ஹீத்வாதிகள் நீங்கள் என்பதையும் பதவிக்காக தவ்ஹீதையும் விற்கும் தவ்ஹீத் வேஷம் போடும் கூட்டம் நீங்கள் என்பதையும் அவர்கள் விளங்காமல் இல்லை.

 ஒரு காரியம் சுன்னத்தாக இருக்குமேயானால் எந்த விமர்சனத்திற்கும் அஞ்சாமல் உயிரைக் கொடுத்தும் அதை நாங்கள் நிலை நாட்டுவோம் என்பதையும் அவர்கள் விளங்கி வைத்துள்ளனர். ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதையாக நீங்கள் அதிரை ஜும்மா பள்ளி நிர்வாகத்திற்காக அழாமல் வேறு வேலையிருந்தால் பாருங்கள். உங்களையெல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகக் கருத மாட்டார்கள்

ஜனாஸா தொழுகையை நபிவழிப்படி நடத்துவதிலேயே எங்கள் கவனம் இருந்ததால் பள்ளிவாசலில் அறிவிப்புச் செய்வது பற்றி கவனமில்லாமல் இருந்து விட்டோம். அது தவறு தான். ஜும்மா பள்ளி நிர்வாகத்திடம் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் வீட்டில் ஜனாஸா தொழுகை நடத்தியதோ பள்ளியில் அடக்கம் செய்ததோ தவறு என்று இவர்கள் நம்மை சாடுகிறார்கள், சுன்னத் வல் ஜமாஅத்தினரை தூண்டி விடுகிறார்கள் என்றால் இவர்கள் தவ்ஹீத்வாதிகளல்ல, நபிவழியைக் கிண்டல் செய்யும் கூட்டம் நபிவழியை எதிர்க்கும் கூட்டம் என்பதை மக்கள் மீண்டும் விளங்கிக் கொண்டுள்ளனர்.
இவர்களின் தவ்ஹீத் சாயம் மீண்டும் வெளுத்துவிட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

இவர்களின் இரட்டை முகம்

தவ்ஹீத் ஜமாஅத்தினர் நபிவழியைக் கடைப்பிடித்தால் கூட தர்ஹாவை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாலும் கூட தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நபிவழியை எதிர்க்கும் அளவுக்கு இவர்களிடம் பொறாமையும் வஞ்சகமும் காழ்ப்புணர்வும் தவ்ஹீத் எதிர்ப்பும் தலைக்கேறியுள்ளது.
தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்கும் போது சுன்னத் வல் ஜமாஅத்தினரை தவ்ஹீத்வாதிகள் என்று கூறும் அளவுக்கு இவர்கள் தரம் தாழ்ந்து போய் விட்டனர்.

அதே நேரத்தில் மார்க்கம் தெரியாதவர்கள் செய்யும் எந்த பித்அத்தையும் இப்படி இவர்கள் எதிர்த்ததுண்டா? என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

இணைகற்பிப்பவர்கள் நரகத்திற்கு அழைக் கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக் கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான் அல்குர்ஆன் 2:221)

மேற்கண்ட வசனங்கள் இணைவைப்பவருக்கு பள்ளிவாசலை நிர்வாகம் செய்யத் தகுதியில்லை என்றும் அவர்கள் நரகத்தின் பக்கம் அழைப்பவர்கள் என்றும் கூறுகின்றன.
இணைவைப்பவர்களைப் புறக்கணிக்குமாறும் பல வசனங்கள் வருகிறது. அந்த அடிப்படையில் இணைவைக்கும் இமாம்கள் பின்னால் தொழுவதைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.
இணைவைக்கும் இமாம்களின் இணைவைப்பை விமர்சிக்க இவர்கள் துணிந்தார்களா?
மவ்லித் ஓதும் இமாம் இணைவைப்பவர் என்று சொல்ல இவர்களுக்கு திராணி இருக்கிறதா?
இணை வைத்து மக்களை வழிகெடுக்கும் இமாம்களைக் கண்டிக்கத்  துப்பில்லாமல் நம்மை கண்டிக்கின்றனர்.
தர்காவை வழிபட்டுக் கொண்டிருக்கும் இமாமின் பின்னால் மவ்லூத் ஓதி வரும் இமாமின் பின்னால் ஜனாஸா தொழுமாறு நம்மை அழைக்கிறார்கள்.
தர்ஹாவை வழிபடும் இமாம் பின்னால் நின்று தொழலாம் என்று இவர்கள் வாதிப்பார்களேயானால் முதலில் இவர்களின் ஆய்வாளர் (?)களிடம் அதைக் கேட்டு ஃபத்வா வெளியிடட்டும்.

அப்போது இவர்கள் அனைவரின் சாயமும் வெளிப்படும்

வீட்டில் ஜனாஸாத் தொழுகை நடத்தக் காரணம் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஐவேளைத் தொழுகையில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத்தில் கலந்து கொண்டது போல் ஜனாஸா தொழுகையிலும் பங்கேற்றுள்ளனர்.

அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.
அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ்
நூல்: ஹாகிம் 1/519

பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளக்கூடாது என்றால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்கள். மேலும் வீட்டிலும் ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்பதையும் மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல் அவர்களது அறையின் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் தொழுகை நடத்தினார்கள். 'ஜனாஸாவைப் பள்ளிக்குள் கொண்டு வரும் வழக்கம் (நபியின் காலத்தில்) இருந்ததில்லை' என்று மக்கள் பேசிக் கொண்டனர். இதை மக்கள் குறை கூறுவது நபிகள் நாயகத்தின் மனைவியருக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் கிடைத்தது. உடனே அவர்கள் 'தங்களுக்கு அறிவு இல்லாத விஷயத்தைக் குறை கூற மக்கள் என்னே அவசரம் காட்டுகிறார்கள்? பள்ளிவாசலுக்குள் ஜனாஸாவைக் கொண்டு சென்றதற்காக எங்களைக் குறை கூறுகின்றனர். ஸுஹைல் பின் பைளா அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் தான் தொழுகை நடத்தினார்கள்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1616, 1615, 1617

பெண்கள் எப்படி ஜனாஸா தொழுகையில் சேரலாம் என்று நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்யவில்லை. ஜனாஸாவை எப்படி பள்ளிவாசலுக்குள் கொண்டு வரலாம் என்று தான் நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்ததாக இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே பெண்கள் ஜனாஸா தொழுகையில் பங்கெடுப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததன் காரணமாகவே நபித்தோழர்கள் இதை ஆட்சேபிக்கவில்லை என்று அறியலாம்.
ஐவேளைத் தொழுகைக்கும் ஜனாஸாதொழுகைக்கும் பள்ளிவாசலுக்கு வருவதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் நடத்தப்படும் தவ்ஹீத் பள்ளியைத் தவிர வேறு எங்கும்பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதாலும் வீட்டில் ஜனாஸா தொழுகை நடத்த நபிவழியில் அனுமதி உண்டு என்ற காரணத்தினாலும் தான் வீட்டில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது.


வீட்டில் அடக்கம் செய்தல்


பள்ளிவாசலில் தொழ வைக்காமல் வீட்டில் தொழுகை நடத்தியவர்கள் வீட்டிலேயே அடக்கம் செய்ய வேண்டியது தானே என்று கேட்கின்றனர்.
வீட்டில் அடக்கம் செய்யக் கூடாது என்று நபிமொழிகளில் வந்த செய்திகள் கூட இந்த கூமுட்டைகளுக்குத் தெரியவில்லை.
'(கடமையில்லாத) உங்கள் தொழுகைகளில் சிலவற்றை உங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளுங்கள். வீடுகளை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 432, 1187

வீடுகளை மண்ணறைகளாக ஆக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்திருப்பதால், குடியிருக்கும் வீட்டில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது.
உங்களால் இது போன்ற நபிவழியை நடைமுறைப்படுத்த துப்பில்லாவிட்டாலும் தைரியம் இல்லாவிட்டாலும் தவ்ஹீத் ஜமாத்தினர் நடைமுறைப்படுத்தும் போது அதை ஆதரிக்காவிட்டாலும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்யாமல் இருங்கள். சத்தியப் பிரச்சாரம் செய்தவர்களைத் தடுத்ததினால் தான் இஸ்ரவேலர்களில் ஒரு கூட்டம் குரங்குகளாக மாற்றப்பட்டனர் என்பதையும் பயந்து கொள்ளுங்கள் என்பதையும் மார்க்கம் தெரியாமல் மார்க்கத்திற்கு எதிராக எதையாவது உளறி வைக்காதீர்கள் என்பதை மக்கள் இவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

இணைவைப்பு அரங்கேறும்  பள்ளியில் அடக்கம் செய்தது ஏன்?

ஜனாஸா தொழுகைக்கு பள்ளிவாசலைப் புறக்கணித்து விட்டு அங்கு அடக்கம் செய்தது ஏன்?  என்று போலி தவ்ஹீத் பேசுவோர் கேட்கின்றனர்.
இந்தக் கேள்வியை அந்தப் பள்ளிவாசல் நிர்வாகம் கூட கேட்கவில்லை. காரணம் இணைவைக்கும் இமாம் பின்னால் நாம் தொழ மாட்டோம் என்பதும் மவ்லித் ஓதப்படும் பள்ளியில் நாம் தொழ மாட்டோம் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

சில மஸாயில்களில் கருத்து வேறுபாடு அவர்களுக்கும் நமக்கும் மத்தியில் இருந்தாலும் தவ்ஹீத் திருமணத்தை நடத்தி வைத்தல், ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்தல் போன்ற விசயங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தினருடன் பள்ளி நிர்வாகம் சுமூகமான போக்கையே மேற்கொள்கின்றனர். ஆனால் அதை இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நம் இமாமை எப்படிப் புறக்கணிப்பது? பாரம்பரியமிக்க நம் பள்ளியை எப்படிப் புறக்கணிப்பது? இவர்களை எப்படி இங்கே அடக்கம் செய்ய அனுமதிப்பது? என்று ஜனாஸாவை அடக்கம் செய்ய விடக் கூடாது என்ற கோரிக்கையை வைப்பதன் மூலம் இவர்கள் தவ்ஹீதுக்கு எதிரிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களை நம்பும் ஒரு சிலர் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும். இல்லையானால் தவ்ஹீத்வாதிகளின் ஜனாஸாவை இணைவைக்கும் இமாம் குளிப்பாட்டுவார், தொழுகை நடத்துவார், ஏராளமான சடங்குகள் நமது மரண நேரத்திலும் நடைபெறும் சூழல் உருவாகி விடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

ஜூம்மா பள்ளியினருக்கும்  இவர்களுக்கும் சில மசாயில்களில் மட்டும் தான் கருத்து வேறுபாடாம் மற்றபடி இவர்களும் அவர்களும் ஒன்று என்று ஒற்றுமை பேச வந்து இருக்கும் வெட்கங்கெட்ட போலி தவ்ஹீத் வாதிகளே அதிரையில் தவ்ஹீத் பள்ளி கட்டும்போது ஒற்றுமை வேஷமிட்டு ஜூம்மா பள்ளியில் தொழுத நீங்கள் தனிப்பள்ளி கண்டதின் அவசியமென்ன என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா  உங்களுக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் என்ற நப்பாசையில் ஒற்றுமை பேசும் அயோக்கியர்களே !!

5057. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள்: அவர்கள் குறைந்தவயது கொண்ட இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள், வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன எய்த) அம்பு (அதன் உடலுக்குள் பாய்ந்து மறுபுறமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களின் இறைநம்பிக்கை(யும் மார்க்க விசுவாசமும்) அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயம் வரை) செல்லாது. எனவே, அவர்களை நீங்கள் எங்கு எதிர்கொண்டாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களை ஒழிப்பது, அவர்களைக் கொன்றவர்களுக்கு மறுமை நாளில் நற்பலனாக அமையும்' என்று கூறினார்கள்.
என அலீ(ரலி) அறிவித்தார். 67

இப்படி  ஒரு ஹதீஸை போட்ட அயோக்கியர்களே அத்தகைய அயோக்கியர்களை ரசூலுல்லாஹ் அடையாளத்தோடு விளக்கியதை  நாங்கள்  போடுகிறோம் பார்த்துகொள்ளுங்கள்
7562. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'கிழக்குத் திசையிலிருந்து (-இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறு பக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்குத் (தானாகத்) திரும்பாத வரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவேமாட்டார்கள்' என்றார்கள்.
'அவர்களின் அடையாளம் என்ன?' என்று வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மொட்டைபோடுவ(தை ஒரு மரபாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)து தான் (அவர்களின் அடையாளம்)' என்று பதில் சொன்னார்கள்.

மொட்டை போடாமலே யாருக்கு இங்கே சொட்டை என்பதை எழுதியவன்  யோசிக்கட்டும்


//குர்ஆனையும் ஸஹீஹான அனைத்து ஹதீஸ்களையும் ஏற்றுக் கொண்ட, இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுகின்றவர்கள் //

என்று  தங்களை  பற்றி  கூறி கொள்வார்களாம்  நபிவழியில்  நடந்த  இந்த ஜனாஸா தொழுகையை  வைத்து  குளிர்  காய  வருவார்களாம் என்னங்கடா லாஜிக் இது ??