Showing posts with label மனிதநேயம். Show all posts
Showing posts with label மனிதநேயம். Show all posts

Saturday, October 25, 2014

மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.

இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும்.

மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல.

மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

ஒரு தாய் மக்கள்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும்.

இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது.

மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். 

திருக்குர்ஆன் 39:13

இஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள் வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.

பிறருக்கு உதவு

சிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.

“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்?” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்?” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரீ 1445

ஏழையும் இறைவனும்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப் போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும் இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை” என்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4661)

மனிதர்களிடம் இரக்கம்

மனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு முத்திரை பதித்த சான்று.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி),
நூல்: புகாரி 7376

போரில் மனித நேயம்

போர் என்றாலே மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட களமாகப் பார்க்கும் உலகம் இது. போர் என்று வந்து விட்டால் சிறியவர், பெரியவர், குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என ஒருவர் விடாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் கொன்றொழிக்கும் அழிவுக் கலாச்சாரம் தான் இன்றைய போர்முறை. சர்வதேச நாடுகளில் எந்த ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் என்றால் பொதுமக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களே அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் இஸ்லாம் மாத்திரம் தான் போர்க்களத்தையும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய களமாகப் பார்க்கிறது. ஆகவே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், போருக்குத் தொடர்பில்லாத அப்பாவிகள் ஆகியோரைப் போரில் கொல்ல இஸ்லாம் தடைவிதிக்கின்றது. அவற்றைப் பெரும்பாவமாக அறிவிப்பு செய்கின்றது.

நடைமுறை உலகில் சிறு குற்றமாகக் கூட பார்க்காத ஒன்றை இஸ்லாம் பெரும்பாவம் என்று குறிப்பிடுவது மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் மதிப்பை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இன்னும் எண்ணற்ற செய்திகள், இஸ்லாம் மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கம் என்பதை சான்றளிக்கின்றது. அது எங்கேயும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை.

இப்படி தீவிரவாதத்திற்கு எதிராக, மனிதநேயத்திற்கு ஆதரவாக தனது சாட்டையைத் தீவிரமாக சுழற்றும் இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?

அறிவிலிகள், மனிதநேயமற்ற சில காட்டுமிராண்டிகள் செய்யும் தீவிரவாதச் செயலால் அவர்கள் சார்ந்த மதத்தை தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாத, நியாயமற்ற செயலாகும்.

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்

இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் இஸ்லாம் தனது பெயரிலும், கொள்கையிலும், செயல்பாட்டிலும் அமைதியை மையமாகக் கொண்டது. அதன் முகமும் அகமும் சாந்தியை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல் ஸலாம் என்பதாகும். ஸலாம் என்றால் அமைதி அடைதல், பாதுகாப்புப் பெறுதல் என்பது இதன் பொருள். இஸ்லாம் என்றால் சரணடைதல், கட்டுப்படுதல் என்று பொருள்.

அதாவது படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதை இது குறிக்கின்றது. இதன்படி, படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர் முஸ்லிம் ஆவார். பெயர் அடிப்படையில் இஸ்லாம் வன்முறைக்கு அப்பாற்பட்டது; அந்நியப்பட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமையோ, பிற சமுதாயத்தவரையோ சந்திக்கும் போது கூறுகின்ற முகமன், “அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதாகும். பதிலுக்கு அவர், “வ அலைக்கும் ஸலாம்’ என்று கூறுவார். இந்த இரண்டு வாசகங்களுக்கும் பொருள், “உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக!’ என்பதாகும்.

முகத்துக்கு நேராகச் சந்திக்கும் போதும், மறைமுகமாக தொலைபேசி, இணையதளம் போன்ற ஊடகங்களின் வழியாகவும் தெரிவிக்கின்ற வாழ்த்துக்களில் முஸ்லிம்கள் பரப்புவது இந்த அமைதியைத் தான்.

இஸ்லாத்தில் சிறந்த செயல் எது? என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்படுகின்றது. அதற்கு அவர்கள் அளிக்கின்ற பதிலைப் பாருங்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 12

இஸ்லாத்தில் சிறந்தது எது என்ற கேள்விக்கு முதலாவதாக, பசித்தோருக்கு உணவளித்தல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறுகின்றார்கள். இதில் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற பாரபட்சம் இல்லை.

இரண்டாவதாக, முஸ்லிம், பிற மதத்தவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஸலாம் எனும் வாழ்த்தைக் கூறி அமைதியைப் பரப்பச் சொல்கின்றார்கள்.

ஒருவர் தனக்குக் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருப்பார். அவரை நோக்கி, ‘உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. ஒருவர் தனது குழந்தை இறந்து விட்ட சோகத்தில் இருப்பார். அவரிடமும், “உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. இப்படி இன்பம், துன்பம் என எந்த நிலையில் இருந்தாலும் அனைவர் மீதும் ஸலாம் எனும் அமைதியைப் பரப்பச் சொல்கின்றது இஸ்லாமிய மார்க்கம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமான’ அல்லது “அறுபதுக்கும் அதிகமான’ கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளைதான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 51

மக்களுக்கு ஊறு விளைவிக்கின்ற பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதும் அந்த இறை நம்பிக்கையின் ஒரு கிளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஒரு பாதையில் முஸ்லிம்கள் மட்டும் நடக்க மாட்டார்கள். அனைத்து மதத்தினரும் தான் நடப்பார்கள். அவர்களுடைய கால்களைப் பதம் பார்த்து, புண்ணாக்கி, புறையோடச் செய்து அவர்களது உயிர்களுக்கே உலை வைக்கின்ற கல், முள் போன்றவற்றைப் பாதையிலிருந்து அகற்றுவது முஸ்லிம்களின் இறை நம்பிக்கையின் ஓரம்சம் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதாவது, ஒரு முஸ்லிமின் அடிப்படைக் கொள்கையே மற்றவர்களை இன்னல், இடையூறுகளிலிருந்து பாதுகாப்பது தான் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது.

காலைப் பதம் பார்க்கின்ற கல், முள்ளையே அகற்றச் சொல்லும் இஸ்லாம், ஆளையே கொல்லுகின்ற குண்டுகளை வைக்கச் சொல்லுமா என்று நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கüலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 2472

இப்படிப் பாதையிலிருந்து கற்கள், முற்களை அகற்றுவதற்காக ஒரு முஸ்லிமுக்கு இறைவன் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகின்றான் என்றால், பேருந்துகள், இரயில்கள், விமானம் போன்ற போக்குவரத்துக்களிலும் அவை வந்து நிற்கும் நிலையங்களிலும், மக்கள் குழுமுகின்ற வணிக வளாகங்களிலும், அவர்கள் பயணிக்கின்ற பாதைகளிலும் குண்டு வைத்துக் குலை நடுங்கச் செய்யும் ஒருவனுக்கு இந்தக் கருணைமிகு இறைவன் என்ன தண்டனை வழங்குவான்? நிச்சயமாக நரகத்தைத் தான் தண்டனையாக வழங்குவான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதுதான் முஸ்லிம்களின் சரியான நிலைப்பாடாகும்.

ஒரு முஸ்லிமின் செயல்பாடு பிறருக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் உபத்திரமாக, ஊறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட இஸ்லாமிய போதனைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

“முஃமின் – இறை நம்பிக்கையாளர் யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: திர்மிதி 2551

“பிற மனிதனுக்கு உனது கையினால், நாவினால் இடைஞ்சல் அளிக்காமல் இருந்தால் நீ ஒரு முஸ்லிம்’ என்று கூட நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் அவ்வாறு சொல்லாமல், “மனிதர்கள் உன்னுடைய நாவினால், கையினால் பாதுகாப்புப் பெற வேண்டும்’ என்று சொல்கிறார்கள். உன்னிடமிருந்து பிறர் பாதுகாப்புப் பெறுவதை நீ தீர்மானிக்கக் கூடாது; ஏனெனில் நீ ஏற்படுத்திய பாதிப்பின் தன்மை உனக்குத் தெரியாது; பாதிக்கப்படுபவர் அல்லது மற்றவர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

அந்த அளவுக்கு, ஒரு முஸ்லிம் தனது நாவினாலும், கையினாலும் பிற மக்களுக்குத் துன்பம் தரக் கூடாது என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6018

அண்டை வீட்டுக்காரர் முஸ்லிமாகவும் இருக்கலாம்; முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம். மொத்தத்தில் அண்டை வீட்டுக்காரருக்கு இடையூறு செய்யக்கூடாது என்று பொதுவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இந்த அளவுக்கு இஸ்லாம் தெளிவாகக் கூறியிருந்தும், இதற்கு நேர்மாற்றமாக முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் எதிராக, பொது இடங்களிலும் மக்கள் கூடும் சந்தைகளிலும் குண்டு வைப்பவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்? அத்தகையோர் இஸ்லாத்தின் பார்வையில் ஒருபோதும் முஸ்லிம்கள் அல்லர்.

இறைவனுக்குப் பல அழகான பெயர்கள் உள்ளன. அவற்றில் “ஸலாம்’ என்பதும் ஒன்று. இதன் பொருள் அமைதியானவன் என்பதாகும். இறைவனின் திருப்பெயரும் அமைதியானவன் என்று அமையப் பெற்றிருக்கும் போது அமைதியான அந்த இறைவன் இந்த அமளி துமளிகளை எப்படி ஆதரிப்பான்?

அல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான். தான் நாடியோருக்கு நேரான பாதையைக் காட்டுகிறான்.

அல்குர்ஆன் 10:25

மொத்தத்தில் இஸ்லாம் என்றால் உயிருக்கு உத்தரவாதம்! உடமைக்கு உத்தரவாதம்! கற்புக்குக் காவல் அரண்! பெண்களுக்குப் பாதுகாப்பு!

இஸ்லாம் என்றால் அமைதி! இஸ்லாம் என்றால் அபயம்!

இதனால் தான் இந்த மார்க்கத்தின் அதிபதி இதை ஓர் அமைதி மார்க்கம் என்று கூறுகின்றான்.

பாதுகாப்பான ஒரு வீட்டில் இருக்கும் போது அதில் வெயிலின் கொடூரம் கிடையாது. குளிரின் கொடுமை கிடையாது. கொட்டும் மழை கிடையாது. குலை நடுங்க வைக்கும் இடியோ, கண்ணைப் பறிக்கும் மின்னலோ இதில் தெரியாது. இவை அத்தனைக்கும் ஓர் இல்லம் பாதுகாப்பாக இருப்பது போல் ஒரு மனிதனின் வாழ்வுக்குப் பாதுகாப்பாக இஸ்லாம் இருக்கின்றது. அந்தப் பாதுகாப்பு இல்லமான இஸ்லாம், ஒருபோதும் பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை ஆதரிக்காது.

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்ற கருத்தை அனைவரும் ஏற்கின்றனர். அந்த அடிப்படையில், முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்கின்ற பயங்கரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் சமுதாயமோ, இஸ்லாமிய மார்க்கமோ பொறுப்பாகாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இஸ்லாம் ஓர் ஆக்க சக்தி! அது அழிவு சக்தி அல்ல என்பதை நம்மைச் சுற்றியுள்ள சமுதாயங்களிடம் கொண்டு செல்வோம். சாந்தி, சமாதானம், ஆக்கம், அமைதி இவையே இஸ்லாம் என்பதை தமிழகத்திலும், இந்தியாவிலும் மட்டுமின்றி தரணியெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.

Wednesday, January 15, 2014

மனித உயிர்கள் புனிதமானது (வீடியோ)

மனித உயிர்கள் புனிதமானது (வீடியோ)



Saturday, August 31, 2013

மனித நேயப்பணியில் தடம் பதிக்கும் தவ்ஹீத் ஜமாஅத்! (வீடியோ)

மனித நேயப்பணியில் தடம் பதிக்கும் தவ்ஹீத் ஜமாஅத்! (வீடியோ)

Friday, April 05, 2013

விருதுநகரில் ஒரு வியத்தகு மனிதநேயப்பணி!

விருதுநகரில் ஒரு வியத்தகு மனிதநேயப்பணி

vir
விருதுநகர் மாவட்டம், விருதுநகரைச் சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை உறுப்பினராகிய ஐ.ஷேக் அப்துல்லாஹ் என்பவர் அங்குள்ள செந்தில் குமரன் கல்லூரியில் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றார். (மேலுள்ள புகைப்படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளவர்) தனது சொந்த வேலை காரணமாக 10.03.13 அன்று விருதுநகரிலிருந்து சுமார் 25கி.மீட்டர் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் என்ற கிராமத்திற்கு சென்றிருந்தார்.


 அன்று இரவு 11 மணிக்கு தனது வேலையை முடித்து விருதுநகருக்கு திரும்பும் போது, சங்கரலிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இரண்டு பவுன் தங்கச் செயின் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதைக் கண்டெடுத்து அதன் உரிமையாளர் யாரேனும் நகையைத் தேடி அங்கு வருகிறார்களா என அரை மணி நேரம் வரை காத்திருந்து, யாரும் தேடி வராததால் விருதுநகர் திரும்பிவிட்டார். மறுநாள் அது தங்க நகைதானா என்பதை ஆய்வு செய்து தங்க நகைதான் என்பதையும் அதன் எடை 13கிராமும் 820 மில்லியும் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்.

டிஎன்டிஜே நிர்வாகிகளிடம் ஆலோசனை:

பின்னர் நமது ஜமாஅத் நிர்வாகிகளிடம் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை, தான் கண்டெடுத்த விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்து என்ன செய்யலாம் என்பதை நமது விருதுநகர் நிர்வாகியுடன் ஆலோசித்துள்ளார்.

டிஎன்டிஜேயின் வழிகாட்டுதல்:

பிறருக்கு உடமையான பொருட்கள் கீழே கிடந்து கண்டெடுக்கப்பட்டால் அதுகுறித்து ஒரு வருடகாலம் மக்களுக்கு அறிவிப்புச் செய்ய வேண்டும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஓர் ஆண்டு வரை அதைப் பற்றி விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நமது நிர்வாகியின் ஆலோசனையின்படி இது குறித்து விளம்பரப்படுத்த முடிவெடுத்தார்.

கடந்த மார்ச் 10ஆம் தேதி கீழே கிடந்து ஒரு தங்க நகையை எடுத்துள்ளோம். அதைத் தவறவிட்டவர்கள் அதன் அடையாளத்தைச் சொல்லி பெற்றுக் கொள்ளவும் என்ற வாசகங்கள் அடங்கிய ஒரு அறிவிப்பை அவரே தயார் செய்துள்ளார்.

 ஏ4 சைஸ் தாளில் கலர் ஸ்கெட்ஜைப் பயன்படுத்தி அவரே தனது கைப்பட மேற்கண்ட வாசகங்களை எழுதி பல பிரதிகள் தயாரித்துக்கொண்டு, கல்லூரி விடுமுறை நாளன்று விருதுநகரிலிருந்து சங்கரலிங்கபுரம் சென்று மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பல பகுதிகளில் இவரே ஒட்டியுள்ளார்.

இவர் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் தேவையுடையோராக இருந்தும்கூட கீழே கண்டெடுத்த நகையை உரியவரிடம் ஒப்படைக்க அதன் உரிமையாளர் அடையாளத்தைக் கூறி பெற்றுக் கொள்ளலாம் என வாசகத்தை எழுதி பொது மக்கள் பார்வைக்கு தன்னால் முடிந்த அளவுக்கு விளம்பரப்படுத்தி வந்துள்ளார்.

 இவரிடம் இதுகுறித்து கேட்டபோது, இதை போஸ்டராக அடித்து பரவலாக அனைத்து பகுதிகளிலும் ஒட்டி எப்படியாவது அந்தப் பொருளுக்கு உரியவரிடம் அதை ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் போஸ்டர் அடிக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. அதனால்தான் கைகளாலேயே எழுதி இந்த அறிவிப்பை தயார் செய்தேன் என்று அவர் கூறியது நம் நெஞ்சை நெகிழச் செய்தது.

அறிவிப்பு ஒட்டப்பட்ட மறுநாள் இரவு 7 மணியளவில் சங்கரலிங்கபுரத்தில் ஸ்வீட் ஸ்டால் வைத்திருக்கும் ஒரு சகோதரர் நமது உறுப்பினரைத் தொடர்பு கொண்டு எங்க ஊர் விசேஷத்திற்காக வந்த இடத்தில் எங்க ஊரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது இரண்டு பவுன் செயினை தொலைத்து விட்டு அழுததாகவும், அந்தப் பெண்ணையே போன் செய்ய சொல்வதாகவும் கூறியுள்ளார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சிறிது நேரத்தில் திண்டுக்கல்லிருந்து அய்யாசாமி என்பவருடைய மனைவி பேசுவதாக ஒரு பெண்மணி நமது உறுப்பினருக்கு போன் செய்தார். அவர் அந்த நகையைப் பற்றிய முழு அடையாளத்தையும் தெரிவித்தார்.

அந்தப் பெண்ணிடம் நகையின் பில்லைக் கொண்டு வந்து காட்டி நகையைப் பெற்றுக் கொள்ளுமாறு நமது உறுப்பினர் கூற, அந்தப் பெண்ணும் கணவரும் மறுநாள் மாலை விருதுநகர் வந்தனர். அத்தம்பதியினர் அவரின் செயலை கண்டு வியந்தனர். இதுபோன்ற ஒரு இளைஞரை இந்தக் காலத்தில் பார்ப்பது மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது என்றும், இப்படியும் இளைஞர்கள் இருக்கின்றார்களா என்று எங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது என்றும் அவரிடம் கூறியுள்ளனர். அதற்கு நமது உறுப்பினரோ இவ்வாறு எங்களை நடக்கச் சொல்லி வழிகாட்டுவது எங்களுடைய இஸ்லாமிய மார்க்கம்தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு காட்டியுள்ள வழிமுறையின் பிரகாரம்தான் நாங்கள் நடந்து வருகின்றோம். எங்களுக்கு இந்த உலக வாழ்வு என்பது முக்கியமல்ல; மறுமை வாழ்வு என்று ஒன்று உள்ளது. அதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதும், நம்மைப் படைத்த இறைவனது திருப்பொருத்தத்தைப் பெற வேண்டும் என்பதும்தான் எங்களது குறிக்கோள் என்பதை அவர் விளக்க தூய இஸ்லாமிய கொள்கையும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதைக்கேட்டவுடன் அவர்களது வியப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. அந்த நகையானது தங்களது மகளுக்கு அவரது மாமனார் வீட்டில் அளித்தது என்றும், குழந்தை பெற்றுக்கொள்ள எங்களது வீட்டில் எனது மகள் வந்துள்ளார் என்றும், அவர் குழந்தை பெற்றுத் திரும்பும்போது இந்த நகை இல்லாமல் சென்றால் அவர்கள் கேள்வி கேட்பார்களே! நாங்கள் எப்படி அதற்கு பதில் சொல்லப்போகின்றோம் என்றும் நாங்கள் அழுது கொண்டிருந்தோம். நீங்கள் செய்த இந்த உதவியை நாங்கள் மறக்கவேமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

எங்களை உங்களது வீட்டிற்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்று தம்பதியர் அவரிடத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். உங்களுடைய பெற்றோர்களை சந்தித்து உங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில்தான் நகையைத் தரவேண்டும் எனக் கூறி விடாப்பிடியாக நின்றுள்ளனர்.

இறுதியாக நமது உறுப்பினர் நகையைப் பெற்றுக் கொள்ள வந்த தம்பதியர் இருவரையும் நமது டிஎன்டிஜே விருதுநகர் மர்கஸிற்கு அழைத்து வந்துள்ளார்.

சங்கரலிங்கபுரத்தில் அவர்கள் நகையைத் தொலைத்துவிட்டு பேருந்து நிலையத்தில் இரவு 11.00 மணி வரை தேடி அழுததாகவும் அவர்களுக்கு ஸ்வீட் கடைக்காரர் உதவ முன் வந்ததாகவும் கூறினர். ஸ்வீட் கடைக்காரர் போக்குவரத்து அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு அவர்கள் வந்த பேருந்தில் தேடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அன்று அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த இடத்திலிருந்து சில அடிதூரத்தில் இருந்துதான் நமது உறுப்பினர் அந்த நகையை கீழே கண்டெத்துள்ளார்.

நமது விருதுநகர் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் அவர்களின் பில்லை வாங்கிப் பார்த்துவிட்டு அவர்கள் நகைதான் என உறுதி செய்து விட்டு உரியவரிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் நம் நிர்வாகிகள் அவர்களுக்கு இஸ்லாம் குறித்த போதனைகளை எடுத்துக் கூறி தாவா செய்துள்ளனர். மேலும், மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் அவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளனர். அவர்கள் அதை பெற்றுக்கொண்டு நமது உறுப்பினருக்கு ஒரு தொகையை அன்பளிப்பாக தர முன்வந்தனர். அவர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக சில நோட்டுக்களை எடுத்து நமது உறுப்பினரது கையில் திணிக்க, அதைப் பெற மறுத்த நமது உறுப்பினரும், நமது கிளை நிர்வாகிகளும் அவர்களுக்கு இது குறித்து விளக்கமளித்துள்ளனர்.

இப்போது நாங்கள் உங்களிடம் இந்தப் பணத்தைப் பெற்றோமானால் நாங்கள் இந்தப் பணத்திற்காகத்தான் இந்த வேலையைச் செய்தோம் என்று ஆகிவிடும். நாங்கள் நம்மை படைத்த இறைவனது திருப்தியை நாடித்தான் இதைச் செய்தோமே அன்றி இந்த உலக வாழ்வில் கிடைக்கும் ஆதாயத்திற்காக இந்த உதவியை நாங்கள் செய்யவில்லை என்று நமது நிர்வாகிகளும், உறுப்பினரும் விளக்கமளிக்க இப்படியும் ஒரு மனிதர்களா? இந்த அளவிற்கு வழிகாட்டக்கூடிய ஒரு அழகான மார்க்கமா? என்று நமது சகோதரர்களை நினைத்தும், இஸ்லாமிய மார்க்கம் குறித்தும் உயர்ந்த எண்ணத்துடன் அந்தத் தம்பதியினர் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றுள்ளனர்.

இருப்பினும் அத்தம்பதிகள் பள்ளிவாசலுக்கோ, வேறு ஏதேனும் ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்கோ தங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனக்கூறி அவர்களின் முகவரியை கொடுத்துவிட்டு இஸ்லாத்தின் மீதான மதிப்பு உயர்ந்தவர்களாகவே ஊர் திரும்பிச் சென்றனர்.

இன்றைய மீடியாக்களில், குறிப்பாக திரைப்படங்களில் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் அப்பாவி பொது மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பங்கம் விளைவிப்பவர்கள் என ஒருவிதப் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது அவப்பெயரை தொடர்ந்து சுமத்துகின்ற இச்சூழலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்றைய இளைஞர்களை ஏகத்துவக் கொள்கையில் வார்த்தெடுப்பதன் மூலம் அனைத்து தீய கேடுகளை விட்டும் தடுத்து, பல சமூக சேவைகளில் ஈடுபடுவதன் மூலம் பிறமத சகோதரர்களிடமும் இந்த தூய இஸ்லாத்தை சரியான முறையில் கொண்டு சேர்த்து, இளைஞர்களுக்கு மறுமை வெற்றிக்கான பாதையைக் காட்டி வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்…
இன்றைய காலகட்டத்தில் பற்பல சம்பவங்களை நாம் காண்கின்றோம்.

விபத்து நேர்ந்து குற்றுயிரும் கொலை உயிருமாக கிடக்கக்கூடியவர்களிடமிருந்து கிடைத்தவரை வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடுவோர் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் கிடைத்த தங்க நகையை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக கைகளாலேயே அது குறித்த அறிவிப்பு வாசகங்களை எழுதி, எந்த இடத்தில் தங்க நகை கிடைத்தோ அந்த ஊருக்கே சென்று விளம்பரப்படுத்தி, சம்பந்தப்பட்டவரிடம் அந்த நகையை நமது உறுப்பினர் ஒப்படைத்திருக்கும் இந்தச் சம்பவம் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்த ஜமாஅத்தின் பயிற்சிப் பாசறையில் உருவாக்கப்படக்கூடிய ஒவ்வொரு இளைஞர்களும் இதுபோன்றுதான் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி ஒரு இளைஞரா என்று நீங்கள் எண்ணி வியக்க வேண்டாம். இஸ்லாத்தை சரியான முறையில் போதித்து அதை பின்பற்றச் சொல்லும் இந்த ஜமாஅத்தில் உள்ளவர்கள் அனைவருமே இப்படித்தான் இருக்கின்றார்கள் என்று நகையைப் பெற வந்தவர்களிடம் நமது நிர்வாகிகள் கூற அவர்களுக்கு வியப்புக்குமேல் வியப்பு.

இதுபோன்ற மனித நேயப்பணிகளை இன்னும் அதிகமதிகம் நமது சகோதரர்கள் செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

வாங்கிய வரதட்சணையைத் திருப்பிக் கொடுக்கும் அதிசயம்!

திருமணம் முடிப்பதற்காக பெண் பார்க்கும் போது மணமகன் வீட்டார் பெண்ணிடத்தில் பல லட்சம் ரூபாய்கள் ரொக்கமாகவும், நகையாகவும், வீடு, இரண்டு சக்கர வாகனம், கார் என்று கொள்ளையடிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

இப்படி இளைஞர் சமுதாயம் பணத்திற்காகவும், நகைக்காகவும் ஆளாய்ப் பறக்கும் இவ்வேளையில் இந்த ஜமாஅத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களும், இளைஞர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும் பெண் வீட்டாரிடத்தில் நயா பைசா கூட வாங்க மாட்டோம். மாறாக, நாங்கள் பெண்ணுக்கு மஹர் கொடுத்து மணம் முடிப்போம் என்று உறுதி பூண்டு திருமணம் முடித்து வரும் நிகழ்வுகளைக் காண்கின்றோம். அப்படிப்பட்ட ஒரு அப்பழுக்கற்ற சமுதாயத்தை இந்த ஜமாஅத் ஏகத்துவப் பிரச்சாரத்தின் வாயிலாக வார்த்தெடுத்து வருகின்றது.

வரதட்சணை வாங்குவது பாவம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே வாங்கிய வரதட்சணையைப் பெண் வீட்டாரிடம் திரும்ப ஒப்படைக்கும் அதிசய நிகழ்வுகளும் நடந்து வருவதை அறிந்து அனைவரும் பூரித்துப் போகின்றனர். வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுத்து தாங்கள் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்ளும் நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

பணத்தை ஹலாலான வழியில் தான் சம்பாதிக்க வேண்டும். ஹராமான வழியில் சம்பாதித்த பணமானது இந்த உலகத்திலும் நமக்குக் கேட்டைத்தான் ஏற்படுத்தும், மறுமையிலும் அதனால் கேடுதான் ஏற்படும் என்பதை உணர்ந்ததால்தான் கீழே கிடந்த பொருளை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்வுகளும், வாங்கிய வரதட்சணையை திரும்ப ஒப்படைக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

உதாரணத்திற்கு ஒரேயொரு நிகழ்வை இங்கு சுட்டிக்காட்டியுள்ளோம். இதுபோன்று ஆயிரக்கணக்கான சகோதரர்கள் தாங்கள் செய்த தவறுக்கு வருந்தி வாங்கிய வரதடசணையை திருப்பிக் கொடுத்து வருகின்றனர்.

நன்றி   http://www.tntj.net/141757.html

Wednesday, January 16, 2013

அல்கசீம் மண்டல TNTJ வின் மனித நேயப் பணி



அல்கசீம்  மண்டல TNTJ வின் மனித நேயப் பணி 



அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்ய செல்லும் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகளையும் ,துயரங்களையும் எத்தனை முறை எடுத்து கூறினாலும் இன்னும் பணத்தாசை பிடித்த ஏஜெண்டுகளால் அப்பாவி பெண்கள் தொடர்ந்து எமாற்றப்பட்டுக்கொண்டுத்தானிருக்கின்றனர்.

ஏழைப்பெண்களின் வறுமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஏஜெண்டுகள் அவர்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளையும் ஆசைகளையும் காட்டி தங்களின் பையை நிரப்பிக்கொள்கின்றனர்.

அங்கு போய் பார்த்தால் அத்தனையும் பொய் என்பதை உணர்ந்துகொள்வார்கள். இருப்பினும் தங்களின் விதியை நினைத்துக்கொண்டு அடிமாட்டு சம்பளத்திற்கு இடுப்பு ஒடிந்து போகுமளவிற்கு மாய்ந்து மாய்ந்து வேலை பார்க்கின்றனர்.
அப்படி ஏமாற்றப்பட்ட பெண்தான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பஹ்மிதா என்ற பெண்.

பஹ்மிதாவின் கணவர் சில மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் ஊனமாகிவிட , குழந்தைகளை வைத்து குடும்பத்தை பராமரிக்க முடியாமல் பெரிதும் கஷ்ட்டப்பட்டு வந்துள்ளார்.

இவரின் இக்கஷ்ட்டத்தை கேள்விப்பட்ட அப்பகுதியைச்சேர்ந்த ஒரு ஏஜென்ட், பஹ்மிதாவிடம் நீ வெளிநாடு சென்றால் உன் பிரச்சனை அத்தனையும் தீர்ந்து விடும் என்று ஆசைக்காட்டி அவரிடம் ஒரு பெரும் தொகையை பெற்றுக்கொண்டு அவரை சவூதி அரேபியாவிற்கு அனுப்பிவிட்டுள்ளார்.
சவூதி வந்த பஹ்மிதா, உண்ண சரியான உணவும், இருக்க சரியான இருப்பிடமும் இல்லாமல் இரண்டு நாள் பட்டினியாக கிடந்துள்ளார்.
அதன் பிறகு ஒரு வீட்டில் போய் விட்டுள்ளனர், அங்கு வேலைப்பளு செம்மையாக அவரை பிழிந்தெடுக்க ,ஏற்கெனவே ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அரபு நாட்டு புழுதிக்காற்றும், நடுங்க வைக்கும் குளிரும் அவரை மேலும் வாட்டி வதைதுள்ளது.

இந்நிலையில் அவருடைய கணவரிடம் தன் கஷ்ட்டத்தை கூறி அழுது, தன்னை எப்படியாவது தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யுமாறு கெஞ்சியுள்ளார்.
அவருடைய கணவர் ஈரோடு மாவட்ட டிஎன் டிஜெ தலைவரை அணுகி நிலைமையை கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்ட தலைவர் மாநில பொதுச்செயலாளருக்கு தகவல் தெரிவிக்க, மாநில பொதுச்செயலாளர் சவூதி அரேபியா அல்கசீம் மண்டல தலைவரை தொடர்ப்புக்கொண்டு பாதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு உதவுமாறும், அப்பெண்ணை உடனே தாயகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில் அல்கசீம் மண்டல செயலாளர் நாச்சியார் கோவில் ஜாஹிர்ஹுசைன் அவர்களின் பெரும் முயற்ச்சியினால் சம்பந்தப்பட்ட அரபியிடம் பேசி , பயனத்திற்குண்டான விமான டிக்கெட்டை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் போட்டு கடந்த10.01.2013 அன்று தாயகம் அனுப்பிவைக்கப்பட்டார்.

அச்சகோதரி தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகளுக்கு தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். எல்லாபுகழும் அல்லாஹ்விற்கே.
நம் நாட்டிலேயே நல்ல சம்பளத்துடன் கூடிய வீட்டு வேலைக்கு பணிப்பெண்கள் கேட்டு, ஏராளமான விளம்பரங்கள் நம் உணர்வு பத்திரிகையிலேயே வருகிறது, அப்படியிருக்க அதை விட்டு விட்டு வெளிநாடு வந்து மொழியும் தெரியாமல், ஆட்களும் தெரியாமல் குறைந்த சம்பளத்திற்கு மானம் மரியாதையை இழந்து கஷ்ட்டப்பட வேண்டுமா என்பதை சமுதாயத்திலுள்ள ஏழை சகோதரிகள் சிந்திக்க வேண்டும்.

நன்றி : http://www.tntj.net/126720.html

Saturday, August 04, 2012

தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகளுக்கு உதவுவீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

தவ்ஹீத் ஜமாஅத் மறுமையை வெற்றியை அடிப்படையாக கொண்டு கீழ்காணும் தொண்டு நிறுவனங்களை நடத்திவருகிறது.

இதற்கு செலவாகும்  தொகையை ரமலானில் திரட்டி சிறப்பாக நடத்திவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நிறுவனங்களில் இருக்கும் நபர்களுக்கு மாத செலவு அடிப்படையில் தொகை கணக்கிடப்பட்டுள்ளது (அந்த விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது).

இந்த தொகையை ஜக்காத் நிதியில் இருந்து வழங்கலாம். இவர்கள் ஜக்காத் கொடுக்க வேண்டியவர்களில் அடங்குவர்.

இதற்கான நன்கொடையை வழங்க சகோதரர் அதிரை ஹைதர் அலி அவர்களை 96776 - 26656 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இந்த நிறுவனங்களை பற்றிய விபரம் வீடியோவாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம் (திருமங்கலம், மதுரை):


















அல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம் (அவனியாபுரம், மதுரை):




















அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம் (சுவாமிமலை, கும்பகோணம்) :



அர்ரஹ்மான் சிறுமியர் ஆதரவு இல்லம் (அவனியாபுரம், மதுரை):





அர்ரஹீம் முதியோர் இல்லம் (பண்டாரவாடை, தஞ்சை):




Sunday, May 13, 2012

அதிரையில் ரத்த தான முகாம் - 16.05.2012

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன் 5:32)


இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 16.05.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற உள்ளது. 

நாள்: 16.05.2012 (புதன்கிழமை)
நேரம்: காலை 10 மணி முதல் 2 மணி வரை
இடம்:
வெஸ்டன் மழலையர் பள்ளி, 
வெற்றிலைகாரத் தெரு,
அதிராம்பட்டிணம்

மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல, நமது இரத்தத்தால் வெளிப்படுத்துவோம்.

தொடர்புக்கு: 96295 33887, 96291 15317, 94431 88653, 99441 91505


Sunday, April 01, 2012

தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேய பணி : சவூதியில் இறந்த தமிழக தொழிலாளரின் உடலை நெல்லைக்கு அனுப்பிய தவ்ஹீத் ஜமாஅத்


ஜித்தா: சவூதி அரேபியாவில் தபூக்-மதீனா நெடுஞ்சாலையில் இறந்து கிடந்த நெல்லையைச் சேர்ந்த அழகர்சாமி பெருமாள் பிள்ளையின் உடலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளை நிர்வாகிகள் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.


கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி காலை சவூதி அரேபியாவின் தபூக்- மதீனா நெடுஞ்சலையில் பணிபுரியும் இடத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக செய்தி அறிந்த தபூக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் இறந்து கிடப்பவர் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கம்பனேரியைச் சேர்ந்த அழகர்சாமி பெருமாள் பிள்ளை என்பது தெரிய வந்தது.



உடனே இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த தபூக் அப்துல் ரஹ்மான் இந்திய துணை தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தார். தூதரகத்தின் வழிகாட்டுதலின்படி இறந்தவரின் ஸ்பான்சருக்கு தகவல் அனுப்பப்பட்டது. பிறகு அவரது உடலை போலீசாரின் உதவியுடன் தபூக் மன்னர் காலீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபப்ட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்குப்பின் அவர் மாரடைப்பால் மேலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. 



அழகர்சாமி அவர்களின் அனைத்து விபரங்களையும் சேகரித்து கடந்த 13/01/2012 அன்று இந்திய தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. இந்திய தூதரகத்தின் வழி காட்டுதலின்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கடையநல்லூர் கிளையின் மூலம் கடையநல்லுர், கிருஷ்ணாபுரத்திலுள்ள அழகர்சாமியின் மனைவி முருகேஷ்வரி, மகன் சுடலைதுரை மற்றும் உறவினர்களையும் சந்தித்து பவர் ஆப் அட்டர்னி கடிதம் பெறப்பட்டது. இதையடுத்து உடலை ஊருக்கு அனுப்ப ஜித்தாவிலுள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் சவுதி உள்துறை அமைச்சகத்திலும் உள்ள வேலைகள் விரைந்து முடிக்கபப்ட்டன.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளையின் நிர்வாகிகள் தபூக்கிலுள்ள காவல்துறை சான்று பெறுதல், துணை அமைச்சகங்கள் அனுமதி பெறுதல், மருத்துவமனை அறிக்கை பெறுதல் என அலுவலக பணிகளை பல சிரமங்களுக்கு மத்தியிலும் உடலை அனுப்புவதற்க்கான ஏற்பாடுகளை செய்து முடித்தனர். பின்பு கடந்த 19/03/2012 அன்று மறைந்த அழகர்சாமி சடலத்தை இந்தியா அனுப்பி வைத்தனர்.



இந்த சடலத்தை கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பெற்று இறந்தவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே இறந்தவரின் முதலாளியை சந்தி்தத தபூக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் இழப்பீட்டு தொகை கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் அவரோ தானே ஒரு ஆளை வைத்து லாரி வாடகைக்கு விடுவதால் பெரிய இழப்பீட்டுத் தொகையை கொடுக்க முடியாது என்றார். இறுதியில் இறந்தவரின் 10 நாட்கள் சம்பளத்தை ஒரு மாத சம்பளமாகத் தருவதாகக் கூறி 1000 சவூதி ரியால் கொடுத்தார். அந்த தொகையும், அவரது பொருட்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் கடையநல்லூர் முஜாஹிதீன் மூலம் இறந்தவரின் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.