Showing posts with label தவ்ஹீத் ஜமாஅத். Show all posts
Showing posts with label தவ்ஹீத் ஜமாஅத். Show all posts

Friday, September 26, 2014

அவதூறு சுமத்தி விட்டு ஓட்டமெடுக்க முயலும் மீடியா மொஜிக்கர் நிஜாமுதீனை விரட்டும் தவ்ஹீத் ஜமாஅத்!

அவதூறு சுமத்தி விட்டு ஓட்டமெடுக்க முயலும் மீடியா மொஜிக்கர் நிஜாமுதீனை விரட்டும் தவ்ஹீத் ஜமாஅத்!

தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞரும், சினிமா தியோட்டரில் மார்க்க ஆய்வு செய்யும் மார்க்க மேதையுமான அதிரை மீடியா மெஜிக் நிஜாம் என்பவர் விவாதத்தில் தப்பிக்க போடும் வித்தைகளை தோலூரித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்று (26.09.2014) அனுப்பட்ட கடிதம்.




Tuesday, May 27, 2014

தனித்து நின்றால் தான் அது ஏகத்துவம் (வீடியோ)

தனித்து நின்றால் தான் அது ஏகத்துவம்




Saturday, April 12, 2014

அதிமுகவிற்க அளித்த ஆதரவு வாபஸ் – தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

அதிமுகவிற்க அளித்த ஆதரவு வாபஸ் – தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

டிஎன்டிஜே யின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (12.04.14) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாநிலத் தலைமையகத்தில் கூடியது.

இதில் அதிமுகவிற்க அளித்த ஆதரவை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அடுத்து என்ன நிலைபாடு எடுப்பது என்பது குறித்து வருகின்றது திங்கள் கிழமை ஆலோசித்து அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் முடிவு பத்திரிக்கையாளர்களிடம் விளக்கப்பட்டது.

Tuesday, April 08, 2014

வாழ்வுரிமைக்கே வாக்குரிமை!

நாடு விடுதலையடைந்த பிறகு 1992ஆம் ஆண்டு வரை தமிழக முஸ்லிம்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்கு வங்கியாகவே இருந்தனர். 1992ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் இஸ்லாமிய சமுதாயம் காங்கிரஸ் கட்சியை அடையாளம் கண்டது. எனினும் இதன் பலனாய் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகள் திராவிடக் கட்சிகளை நோக்கியே சென்றன.

இக்கால கட்டத்தில் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வந்த தவ்ஹீத் ஜமாஅத், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. ஆரம்பத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் என்ற வட்டத்தில் மட்டும் நின்ற தவ்ஹீத் ஜமாஅத், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் சமுதாயப் பணி என்ற இலட்சியத்தையும் கையிலெடுத்து தனது வட்டத்தை வரிவாக்கம் செய்தது. அதன் எதிரொலி தான் தமுமுக என்ற இயக்கத்தின் உதயமாகும்.

தவ்ஹீதுவாதிகளின் உழைப்பிலும், தியாகத்திலும் தமிழகத்தில் அரசியல்ரீதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அந்தப் புரட்சியின் விளைவாக 1998ல் தேர்தல் புறக்கணிப்பு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தது.

1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை கோவையில் 19 முஸ்லிம்களை அநியாயமாக சுட்டுக் கொன்றது.

முஸ்லிம்களை அநியாயமாக சுட்டுக் கொன்ற காவல்துறை கயவர்களின் மீது - காட்டு மிருகங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் கருணாநிதி என்று சமுதாயம் காத்திருந்தது. ஆனால் கருணாநிதியோ அந்தக் காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல! முஸ்லிம்களின் உயிரைப் பறித்து, உதிரம் குடித்த காட்டுவிலங்குகளுக்கு விருது வழங்கிக் கவுரவித்தார். எரிகின்ற முஸ்லிம்களின் இதயங்களில் எண்ணையை ஊற்றினார்.

அந்தப் பாதிப்பையும் கொதிப்பையும் வெளிப்படுத்தும் விதமாகத் தேர்தல் புறக்கணிப்பை தமுமுக சார்பில் அறிவித்தோம். அதனுடைய வீரிய பிரச்சாரம் மக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கும் வேளையில்தான் கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இது தமிழகத்தில் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலும் பிஜேபிக்கு சாதகமான பலனை அளித்தது. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணி தோல்வியடைந்து, அதிமுக அணி வென்றது.

அதிமுக ஆதரவில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாரதீய ஜனதா அரசை 13 மாதங்களில் ஜெயலலிதா கவிழ்த்தார். 1999ஆம் ஆண்டு நாடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைச் சந்தித்தது. 1999 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தலையொட்டி ஜூலை 4, 1999ல் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தினோம். தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்து கொண்டு, அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தோம்.

2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படாததாலும், திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததாலும் எந்தக் கட்சியையும் முழுமையாக ஆதரிக்காமல் சமுதாய ரீதியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்து ஆதரித்தோம். அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இதன் பின்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவதைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. எனவே இடஒதுக்கீட்டை மையமாக வைத்து திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்தோம். இவையனைத்தும் தமுமுக தவ்ஹீதுவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள்.

இதன் பின்னர் தேர்தல் காலங்களில், களங்களில் கண்ட அரசியல் தலைவர்கள் சந்திப்பு, மரியாதைகள் போன்றவை தமுமுகவை பதவி மோகத்தில் தள்ளியது. அதனால் தவ்ஹீதுவாதிகள் தமுமுகவிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உருவானது. இந்த ஜமாஅத், 2006, ஜனவரி 29 அன்று குடந்தை குலுங்கும் அளவுக்கு மாபெரும் பேரணியை நடத்தியது.

அதன் விளைவாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நீதிபதி ராஜரத்தினம் தலைமையில் இடஒதுக்கீட்டிற்கான ஆணையம் அமைத்தார். அந்த அடிப்படையில் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்தது. எனினும் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்திருந்த கோபம் காரணமாக திமுக வென்றது. தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு இல்லாமல் இருந்தால் அதிமுக பலமான எதிர்க்கட்சியாக வந்திருக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் அப்போது எழுதினார்கள்.

திமுக ஆட்சிக் காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு திமுக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கியது. இதற்கு நன்றிக்கடனாக தவ்ஹீத் ஜமாஅத் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதவரளித்தது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

2011 சட்டமன்றத் தேர்தலிலும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை உயர்த்தித் தரும் கட்சிக்கு ஆதரவு என்ற நிலைபாட்டை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தக் கோரிக்கையை அதிமுக கண்டுகொள்ளவில்லை. திமுக ஏற்றுக் கொண்டது. இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திமுகவை ஆதரித்தது. மின்வெட்டு, ஊழல் போன்ற திமுக எதிர்ப்பு அலையில் திமுக தோல்வியைத் தழுவினாலும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதிமுக அசைந்து கொடுக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் காலத்தில் தான் சமுதாயத்தின் கோரிக்கையை ஏறிட்டுப் பார்க்கும்; என்னவென்று கேட்கும். இதைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகமே ஸ்தம்பிக்கின்ற வகையில் ஜனவரி 28, 2014 அன்று சென்னை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய நான்கு மண்டலங்களில் தமிழகம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

இதன் விளைவாக அதிமுக அரசு, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து அறிக்கை அளிக்குமாறு மாநில பிற்பட்டோர் நல வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது. அரசியல் சட்டப்படி, இதுதான் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற்கான வழிமுறையாகும். இந்த அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வருகின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தனது ஆதரவை அளிக்கின்றது.

இதுவரை இஸ்லாமிய சமுதாயம் தனது வாக்குரிமையை உணராமல் இருந்தது. விழலுக்கு இறைத்த நீராக ஆக்கிக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு உதவாக்கரை எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உருவாக்குவதற்காக சமுதாயத்தின் வாக்குகள் பாழாகிக் கொண்டிருந்தன; பயனற்றுப் போயின.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக இப்போது இடஒதுக்கீடு என்ற சமுதாய நலனை மையமாகக் கொண்டு, வாழ்வுரிமையை ஆதாரமாகக் கொண்டு அதன் வாக்குரிமை சுழல்கின்றது.

இரு திராவிடக் கட்சிகளுமே இடஒதுக்கீடு எனும் முஸ்லிம்களின் வாழ்வுரிமையை தேர்தல் களத்தில் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றன. சட்டமன்றம், நாடாளுமன்றம் சென்று சாதிக்காமல் சந்தியில் நின்று தவ்ஹீத் ஜமாஅத் சாதித்திருக்கின்றது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! இனி இந்த இடஒதுக்கீடு எனும் வாழ்வுரிமை கிடைக்க ஒட்டுமொத்த சமுதாயமும் ஓரணியில் நின்று அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

இன்றைய அரசியல்வாதிகளின் ஒன்றிரண்டு எம்.பி. சீட்டுக்களைப் பார்க்காமல் நாளைய நமது தலைமுறையின் மருத்துவ, பொறியியல், தொழிற்கல்வியின் சீட்டுக்களையும் அரசு வேலைவாய்ப்புகளையும் கவனத்தில் கொண்டு, சமுதாய நலனை முன்னிறுத்தி அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். நமது வாழ்வுரிமைக்காக வாக்களிக்க வேண்டும்.

இப்போது சட்டமன்றத்தில் இருக்கின்ற இரண்டு மமக உறுப்பினர்கள் சமுதாயத்திற்காக எதையும் கிழித்துவிடவில்லை. தாங்கள் சார்ந்திருந்த கூட்டணிக் கட்சியைப் புகழ்வதிலும், எதிர்க்கட்சியை விமர்சிப்பதிலும் தான் தங்கள் பதவிக்காலத்தைக் கழிக்கிறார்களே தவிர இடஒதுக்கீட்டிற்காக எதையும் சாதிக்கவில்லை. சமுதாயத்தின் பெயரைச் சொல்லி, தமது ஆதாயத்தை மட்டும் பார்க்கும் இவர்களுக்கு வாக்களிப்பது சமுதாயம் தன்னையே நாசத்தில் தள்ளுவதற்குச் சமமாகும்.

மமகவின் நிலை இதுவென்றால், தேர்தல் சமயத்தில் மட்டும் முஸ்லிம் கட்சி என்ற வேஷம் போடும் எஸ்டிபிஐ கட்சி, பாரதீய ஜனதா வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றது. தமிழகத்தில் வடசென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி தொகுதிகளில் போட்டியிடுவதாகக் கூறும் எஸ்டிபிஐ, இனவெறியைப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்; கோயில் - தர்கா திருவிழாக்களுக்கும், பொங்கல் தீபாவளி பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்லி டிஜிடல் பேனர் வைப்பார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் முஸ்லிம் கட்சி அல்ல, எல்லா சமுதாயத்திற்கும் பொதுவான கட்சி என்பார்கள். ஆனால் தேர்தல் போட்டி என்று வந்தால் முஸ்லிம் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள். இவர்களின் சந்தர்ப்பவாதத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிடம் பேரம் பேசி, இவர்களுக்கு சீட் கிடைக்காததால் இப்போது சமுதாய வேஷம் தரித்துக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கென்று எந்தக் கொள்கையும் கிடையாது. இவர்களை ஆதரிப்பதால் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து, அது நரேந்திர மோடியின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உதாரணமாக ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக, திமுக இரண்டு பெரிய கட்சிகளுமே முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியுள்ளன. எனவே இந்தத் தொகுதியிலிருந்து ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. வெற்றி வாய்ப்பு இல்லாத பாரதீய ஜனதா கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தி, முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

அதிமுக, திமுகவிலுள்ள முஸ்லிம் வாக்குகள் கணிசமாகப் பிரிந்தால் அது அங்கு போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளருக்கு சாதகமாகவே அமையும். இது தெரிந்து, வேண்டுமென்றே பாரதீய ஜனதாவை வெற்றிபெற வைக்கும் நோக்கில் இவர்கள் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

மேலும் இவர்கள் அதிகப்பட்சமாக பத்தாயிரம் வாக்குகள் வாங்கினாலும் அதனால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. இதை வைத்து அடுத்த தேர்தல்களில் இவர்கள் திமுக, அதிமுகவுடன் பேரம் பேசுவதற்கு வேண்டுமானால் இந்த வாக்குகள் பயன்படும். சமுதாயத்திற்கு இதனால் கேடு தான் விளையும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பத்தாயிரம் வாக்குகள் பெற்ற மமக இதைத் தான் செய்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவே இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு வாக்களிப்பது பாரதீய ஜனதாவுக்கு நேரடியாக வாக்களிப்பதற்குச் சமம். நம்முடைய கைகளாலேயே நாசத்தைத் தேடிக் கொள்ளும் மோசமான செயல் இது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 2:195

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:29

இஸ்லாம் என்றாலே சமுதாயத்திற்கு நன்மையை நாடுவது தான்.

நபி (ஸல்) அவர்கள், "மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவது தான்'' என்று கூறினார்கள். நாங்கள், "யாருக்கு (நலம் நாடுவது)?'' என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத் தாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 57

நம்முடைய வாழ்வுரிமைக்கு வாக்களித்து, நம்முடைய சமுதாய நலனைக் காப்போம்; நாசத்தைத் தவிர்ப்போம்.
 நன்றி ஏகத்துவம்

Sunday, March 30, 2014

TNTJ அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு ஏன்?

TNTJ அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு ஏன்?


Wednesday, March 19, 2014

அதிமுகவின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் தவ்ஹீத் பள்ளிக்கு வருகை - விமர்சன விளக்கம்

அதிமுகவின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் தவ்ஹீத் பள்ளிக்கு வருகை - விமர்சன விளக்கம்

அதிமுகவின் தஞ்சை தொகுதி வேட்பாளர் பரசுராமன் அவர்கள் நமது மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிக்கு கடந்த 12 ஆம் தேதி வருகை தந்தார். இது குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவற்றிற்கு விளக்கம் தருவது எங்களின் கடமை என்ற அடிப்படையில் அது பற்றி எழுந்த விமர்சனங்களுக்கு இங்கே பதில் தருகிறோம்.

இது பற்றி வந்த முதாவது விமர்சனம், மாற்று மதத்தினர் பள்ளிவாசலுக்கு வரலாமா என்பதாகும். மாற்று மதத்தினர் பள்ளிக்கு வரலாம், அவ்வாறு நபி (ஸல்) காலத்தில் வந்துள்ளார்கள். மாற்று மதத்தினர் பள்ளியில் இருந்து குர்ஆன் ஒதப்படுவதை செவியேற்றுள்ளார்கள். மாற்று மதத்தினர் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாதவர்கள் இமாம் நின்று தொழ வைக்கும் இடத்திற்கு வரலாமா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மாற்றுமதத்தினரும் இவ்வாறு தானே தூய்மையற்றவர்களாக இருந்து இருப்பார்கள். மாற்று மதத்தினர் பள்ளிக்கு வரலாம் என்ற அனுமதி ஹதீஸ்களில் உள்ளது, பள்ளியில் இந்த இடத்திற்கு வரலாம் இந்த இடத்திற்கு வரக்கூடாது என்ற எந்த தடையும் இல்லாத போது இமாம் இருக்கும் இடத்திற்கு வருவது சரியா? என்று கேள்வி எழுப்புவது அர்த்தமற்றது. இது பற்றி முழுமையாக இங்கே விளக்கப்பட்டுள்ளது.

அடுத்து, தவ்ஹீத் பள்ளிக்கு வருகை தந்த அதிமுகவின் வேட்பாளர் தவ்ஹீத் பள்ளியில் வைத்து, 'இதயதெய்வம்' என்று பேட்டி கொடுத்தார் என்ற ஒரு தவறான தகவலை சிலர் என்ன நடந்தது என்று தெரியாமல் பரப்பியுள்ளார்கள். தவ்ஹீத் பள்ளிக்கு ஆதரவு கேட்டு வந்த அதிமுகவின் வேட்பாளருக்கு, கூளை கும்பிடு போடாமல், அவருக்கு என்று தனி மரியாதை செய்யாமல், தரையில் அமர வைத்து, அந்த வேட்பாளருக்கு 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற புத்தக்தையும் வழங்கி அழைப்புப்பணி செய்யப்பட்டது. தவ்ஹீத் பள்ளியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, அதிமுகவின் வேட்பாளர் 'இதயதெய்வம்' போன்ற எந்த ஒரு வார்த்தையும் பயன்படுத்தவில்லை. ஒரு வேளை அது போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருந்தாலும், அது அவரின் கொள்கை, அவ்வாறு பேசுவது தவறு என்று சூட்டிக்காட்டியிருப்போம். தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளுடன் பேசிவிட்டு, பள்ளியை விட்டு வெளியே வந்த அதிமுக வேட்பாளரிடம், அதிரை நியூஸ் இணையதளத்தை சார்ந்தவர்கள் பேட்டி எடுக்கும் போது தான், 'தமிழகத்தின் காவல் தெய்வம்' என்று அதிமுக வேட்பாளர் குறிப்பிட்டார். சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வரும் போது எடுக்கப்பட்ட பேட்டி வீடியோவில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சில நிர்வாகிகளும் தென்படுகிறார்கள். இது தான் நடந்த சம்பவம். இவ்வாறு தான் நடந்தது என்பதை அதிரை நியூஸ் இணையதளமும் சம்பந்தப்பட்ட ஆக்கத்தில் தெரிவித்துள்ளது.

கண்டதையும் தெய்வம் என்ற நினைக்கும் ஒருவர் எங்கும் அதை சொல்லுவார், தவ்ஹீத் ஜமாஅத்திடம் பேசும் போது இவ்வாறு சொன்னால் அதை நாம் கண்டிப்போம். அதிரையில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிஜே அவர்கள் பேசும் போது, அந்த மேடையில் ஸ்டாலினும் வாக்கு கேட்டு வந்தார், அந்த மேடையில் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்த வேண்டும் திமுகவினர் எவ்வளவோ கெஞ்சினர், தவ்ஹீத் ஜமாஅத் அதை அனுமதிக்கவில்லை. வெடி சத்தம் கூட எங்களுக்கு கேட்கக்கூடாது, வெடி கூட வெடிக்கக்கூடாது என்று கட்டளை போட்டது தவ்ஹீத் ஜமாஅத். இதை திமுகவினர் ஏற்றுக்கொண்டனர்.

அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறோம் என்று கிளம்பிய தவ்ஹீத் (?) பேசிய தமுமுகவினரே, 'வாக்கள பெருமக்களே  வணக்கம்' என்று நோட்டிஸ் அடிக்கும் போது, கண்டதும் தெய்வம் என்று நம்பும் அந்த வேட்பாளரிடம் எதை எதிர்பார்க்க முடியும். தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜூம்ஆ மேடையில் வந்து அதிமுக வேட்பாளர் உரையாற்றி, அதில் 'தமிழகத்தின் காவல் தெய்வம்' என்று சொன்னதை போன்று பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

தவ்ஹீத் பள்ளிக்கு வெளியே அதிரை நியூஸ் தளத்தினர் பேட்டி எடுக்கும் போது சொன்ன இந்த வார்த்தையை, தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் பேசும் போது அதிமுக வேட்பாளர் குறிப்பிட்டதை போன்று கதையை உருவாக்கி பரப்புகிறார்கள். இவ்வாறு சொல்லக்கூடியவர்கள் இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக அவதூறு சொல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றால், அதற்காக எதையும் செய்வேன் என்ற கொள்கையில் உள்ளவர்களின் அவதூறு தான் இது.


அவதூறு சுமத்துபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும். அதிமுகவை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கிறது என்றால், அதிமுகவினர் கோவிலுக்கு சென்றால் கூட விமர்சனம்  செய்ய ஆட்கள் நிறைய உண்டு. அடுத்தாக, தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரிக்கிறது, திமுகவை சார்ந்த பேரூராட்சித் தலைவருடன் நடுத்தெருவில் தனி அமர்வு என்றும் சந்தேகத்தை ஒருவர் கிழப்புகிறார். நட்பு முறையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியின் கடையில் அமர்ந்து  பேசிக்கொண்டு இருந்த பேரூராட்சித் தலைவரையும் தவ்ஹீத் ஜமாஅத்தை ஏதே கள்ள ஒப்பந்தம் போடுவதை போல அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் அவதூறு செய்கிறார்கள். நடுத்தெருவை சார்ந்த பேருராட்சி தலைவர், நடுத்தெருவில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்தவரின் கடையில் அமர்ந்து பேசுவது ஏதே புதிதாக நடக்கும் விஷயம் அல்ல. தனது மானம் போனாலும், தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அவதூறு பரப்புவோம் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு நல்ல புத்தி வர பிரத்திப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

நூல்: முஸ்லிம் 6


இந்த விமர்சனத்தை முதலில் எடுத்து வைத்தவரின் தவ்ஹீத் (?) கொள்கையே கொடி கட்டி பறக்கிறது. கவிஞரை புகழ்ந்து எழுதும் போது. இறையருட்கவிமணி (இறையருள் பெரும் கவிஞர்) என்று எழுதிய தவ்பா செய்த தவ்ஹீத்வாதி தன்னையும் சீர் தூக்கி பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் நாளை நடப்பதை எல்லாம் அறிய கூடியவர் என்று வரக்கூடிய மௌலூது வரிகளின் இணைவைப்பு உள்ளது என்று பிரச்சாரம் செய்தவர்கள், இன்று கவிஞருக்கு இறையருள் வருகிறது என்று எழுதும் அளவுக்கு வந்து விட்டோமே என்று எண்ணிப்பார்க்க வேண்டும். ஹஜ்க்கு சென்று வரக்கூடியரை 'ஹாஜி' என்றும், 'அல்ஹாஜ்' என்றும் எழுதுபவர்களை விமர்சனம் செய்தோமே! இன்று அதை நாமே செய்கிறோமே, அதுவும் அக்மார்க் தவ்ஹீத் நாங்கள் என்று சொல்லிக்கொண்டே இவ்வாறு செய்கிறோமே என்று சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். மௌலூது ஒதும் இமாம், இணைவைக்கும் இமாம் இவர்களை பின்பற்றி தொழ கூடாது என்று திருக்குர்ஆன் வசனத்தை எடுத்துக்காட்டி சொன்னாமே, இன்று நாம் இணைவைக்கும் இமாம் மற்றும் மௌலூது ஓதும் இமாம் இவர்களை பின்பற்றி தொழுகிறோமே! என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இதையெல்லாம் நாம் விமர்சனம் செய்வதற்காக சொல்லவில்லை. மாறாக, இது போன்ற வழிகேடுகளை விட்டு மீண்டு வாருங்கள் என்று காட்டவே இவ்வாறு சொல்லுகிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து கொண்டு தான் தவ்ஹீத்வாதியாக இருக்க வேண்டும் என்பதல்ல, தவ்ஹீத் ஜமாஅத்தை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், தவ்ஹீத் கொள்கையில் நீங்கள் உறுதியாக இருக்கலாம், உண்மையான கொள்கையை விட்டுவிடுவது மறுமையில் என்ன பலனை தரும்?? சிந்தித்து செயல்படுவது நல்லது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல். 


அல்குர்ஆன் 3:8

புகைப்பட உதவி: அதிரை நியூஸ்

சிவசேனாவிற்கு ஆதரவு கடிதம் எழுதிய அதிமுகவிற்கு ஆதரவா?

சிவசேனாவிற்கு ஆதரவு கடிதம் எழுதிய அதிமுகவிற்கு ஆதரவா?


Wednesday, January 29, 2014

மத்தியில் இட ஒதுக்கீடு தர கோரி தவ்ஹீத் ஜமாஅத் மஹாராஸ்டிரா மாநிலம் மும்பையில் நடத்திய ஆர்ப்பாட்டம்

மத்தியில் இட ஒதுக்கீடு தர கோரி தவ்ஹீத் ஜமாஅத் மஹாராஸ்டிரா மாநிலம் மும்பையில் நடத்திய ஆர்ப்பாட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அணைத்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முதல் முறையாக மும்பையில் இட ஒதிக்கீடு கோரிகையை முன்வைத்து போராட்டம் நடை பெற்றது. 
















ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் - பத்திரிக்கை செய்திகள் - தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் - பத்திரிக்கை செய்திகள் - தமிழ்,  ஆங்கிலம்,  இந்தி, மலையாளம், தெலுங்கு