Showing posts with label அதிரை. Show all posts
Showing posts with label அதிரை. Show all posts

Wednesday, October 22, 2014

புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்! - அதிரையில் புகாரி ஷரீப் மஜ்லிஸ் என்ற பெயரில் நடைபெறும் நிகழ்ச்சியின் நாடகம்!!


புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்!

இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் குர்ஆனும் ஹதீஸ்கள் மட்டுமே ஆகும். ஹதீஸ்கள் பல அறிஞர்களால் தொகுக்கப்பபட்டு, அவை பல்வேறு கிரந்தங்களாக உள்ளது. புகாரி, முஸ்லிம், இப்னு மாஜா, திர்மிதீ, அபூதாவூத், நஸயீ என பல்வேறு கிரந்தங்கள் உள்ளன. அவற்றில் பல தற்போது தமிழ் மொழியிலும் வந்துள்ளன.

ஒரு முஸ்லிம் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஏற்று அதனை தமது வாழ்வில் செயல்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஹதீஸ் கிரந்தத்தை மட்டும் தூக்கிபிடிப்பது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.

நமது ஊர் ஜாவியா பள்ளிவாசலில் வருடா வருடம் புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் புகாரி ஹதீஸ் தொகுப்பில் உள்ள சில ஹதீஸ்களை மக்களுக்கு விளக்குகிறோம் என்ற பெயரில் யாருக்கும் புரியாத வகையில் விளக்குவார்கள். இவர்கள் நடத்தும் பயானில் எல்லா ஹதீஸ் கிரந்தங்களிலும் உள்ள முக்கியமான ஹதீஸ்களை விளக்கினால் இவர்களை சரி காணலாம். இவர்கள் அவ்வாறு செய்யாமல், புகாரி என்ற ஒரு கிரந்தத்தை மட்டும் முன்னிலைப்படுத்துகிறார்கள். சரி, அதிலாவது இவர்கள் உண்மையாளர்களாக இருக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை என்பதை புகாரி ஹதீஸ் தொகுப்பில் இருந்து எடுத்துவைக்கும் ஹதீஸ்களை பார்த்தால் புரியும்.

புகாரி ஹதீஸ் தொகுப்பில் புகாரி மஜ்லிசை நடத்துபவர்களுக்கு எதிராக பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை இவர்கள் வேண்டுமென்றே மக்களுக்கு விளக்காமல் தவிர்க்கிறார்கள்.

மேலும், நமது ஊரில் புகாரி மஜ்லிஸ் ஆரம்பிக்கப்பட்ட பிறகு காலாரா நோய் ஓடிவிட்டது என்ற ஒரு பொய்யையும் சேர்த்து சொல்லி வருகிறார்கள்.

ஒருவருக்கு நோயை தருவதும் அல்லாஹ்,நோயை அகற்றுவதும் அல்லாஹ் என்று ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். நோய் நல்லவர்களுக்கும் வரும் தீயவர்களுக்கும் வரும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் காலரா நோய் நுழையாது என்று முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். புகாரி ஹதீஸ் மஜ்லிஸ் நடத்தினால் காலரா வராது என்று எந்த ஹதீஸூம் இல்லை. இவர்களின் இந்த கப்சாவை நாம் நம்பினால், இன்று பெரும்பாலான ஊர்களில் காலரா நோய் வருவது இல்லை, எனவே அங்கு எல்லாம் புகாரி மஜ்லிஸ் நடத்தினார்களா? என்று கேட்க வேண்டிவரும்.

மேலும், நமது ஊரில் நடக்கும் புகாரி மஜ்லிஸில் தப்ரூக் என்று நார்சா வழங்கப்படுகிறது. இவற்றை மக்கள் தங்களது செலவில் கொடுக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் நேர்சையாக தான் தப்ரூக் வழங்குகிறார்கள். தங்களது நேர்ச்சைகளில் சேவல், கோழி போன்றவற்றையும் மக்கள் வழங்குகிறார்கள். அல்லாஹ் அல்லாதவர்களின் மீது நேர்ச்சை செய்வது இணை வைப்பாகும். நேர்ச்சையினால் தப்ரூக் என்ற நார்சா வழங்குபவர்களும் சேவல் கோழி போன்றவற்றை வழங்குபவர்களும் அல்லாஹ்விற்கு தான் நேர்ச்சை செய்து வழங்கிறார்களா? என்பது கேள்விக்குறியே!

கீழ்காணும் ஹதீஸ் நேர்ச்சை செய்யும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறார்கள்.

புவானா என்ற இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு மனிதர் நேர்ச்சை செய்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன் என்று தெரிவித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்தில் வழிபாடு நடத்தப்படும் சிலைகள் ஏதும் அங்கே உள்ளனவா எனக் கேட்டார்கள். இல்லை என்று நபித்தோழர்கள் விடையளித்தனர். அறியாமைக் கால திருவிழாக்கள் ஏதும் அங்கே நடக்குமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நபித்தோழர்கள் இல்லை என்று விடையளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக! ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்திலும் தன் கைவசத்தில் இல்லாத விஷயத்திலும் நேர்ச்சை இல்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)
நூல்: அபூதாவூத்

குர்ஆன் ஹதீஸ்களுக்கு நேர் முரணாக புகாரி மஜ்லிசை நடத்துத்துபவர்கள் (சுன்னத் வல் ஜமாஅத்தினர்) போற்றி புகழும் அறிஞர்களின் கருத்துகள் இருந்தாலும், அவற்றை தூக்கிவிசி விட்டு, குர்ஆன் ஹதீஸின் கருத்துகளை இவர்கள் ஏற்பார்களா? என்றால் இல்லை என்பதை தான் இவர்களின் செயல் நிருபித்து வருகிறார்கள்.

இவர்கள் புகாரி ஹதீஸ் தொகுப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதில் உள்ள ஹதீஸ்களையாவது தங்களின் சொல்லிலும் செயலிலும் காட்டுவார்களா? என்றால் அதுவும் இல்லை என்பதை புகாரி ஹதீஸ் தொகுப்பில் இடம்பெறும் கீழ்காணும் ஹதீஸ்களை படித்தால் புரியும். நாம் யாரை குறிப்பிட்டு இந்த வாதத்தை வைக்கிறோம் என்றால்  பொதுமக்களை பார்த்து அல்ல. புகாரி மஜ்லிசை நடத்துபவர்களையும் அதில் சொற்பொழிவாற்றுபவர்களையும் நோக்கி தான் நமது கேள்விகள்!

குறிப்பு: இவர்களிடம் உள்ள வழிகேட்டை நிரூபிக்க குர்ஆனிலும் புகாரி உள்பட மற்ற ஹதீஸ் கிரந்தங்களிலும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் நாம் இங்கே அடுக்கவில்லை. காரணம், புகாரி ஹதீஸ் தொகுப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழச்சி நடத்துவதால், புகாரியில் உள்ள ஹதீஸ்களையாவது செயல்படுத்துங்களேன் என்று கேட்பதற்காகவும், இவர்களுக்கு எதிராக புகாரியில் உள்ள ஹதீஸ்களை இவர்கள் மக்களிடம் மறைக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்துவும் தான் இந்த ஆக்கம்.

இணைவைப்பு என்ற ஒரு கொடிய பாவம்:

இணைவைப்பு என்பது கொடிய பாவம். தர்ஹாவில் அவ்லியாக்களிடம் கேட்பது இணைவைப்பு என்று என்றைக்காவது புகாரி மஜ்லிஸில் கேட்டது உண்டா? அடக்கஸ்தலங்களை வணங்கும் இடமாக ஆக்க கூடாது என்றும், அடக்கஸதலங்களை வணக்க தளங்களாக மாற்றிய யூத நஸராக்களின் மீது சாபம் உண்டாவது போல், கப்ரை வணங்கபவர்கள் மீதும் உண்டாகும் என்று என்றாவது புகாரி மஜ்லிஸில் கேட்டது உண்டா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூத, நஸராக்களை அல்லாஹ் சபித்து விட்டான். (ஏனென்றால்) தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை தர்ஹாக்களாக எடுத்துக்கொண்டனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 1330

தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், ''நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்'' என்று சொல்லிவிட்டு ''பிறகு எது?'' என்று கேட்டேன். ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது என்று சொன்னார்கள். நான், ''பிறகு எது?'' என்று கேட்க, அவர்கள், ''உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரீ (4477)

அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873

'எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 4497

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர் வழி பெற்றோர். (6:82) என்ற வசனம் இறங்கியதும், 'அநீதி செய்யாதவர் நம்மில் எவரிருக்க முடியும்?' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் ' (31:13) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 32, 3360, 3428, 3429, 4629, 4776, 6918

ஆயிரம் முறை அழைத்தால், அப்துல் காதர் ஜெய்லானி நேரில் வந்து ஆஜர் ஆவார் (சம்மன் இல்லாமல்) என்று மக்களை வழிகேடுப்பவர்களே? என்று நீங்கள் திருந்த போகிறீர்கள். 

நபி (ஸல்) அவர்களை கூட வரம்பு மீறி புகழக்கூடாது!

நபி (ஸல்) அவர்கள் தன்னை வரம்பு மீறி புகழக்கூடாது என்று சொன்ன ஹதீஸ் புகாரி தொகுப்பில் இருந்தபோதும், நபி (ஸல்) அவர்களை பாவங்களை மன்னிக்க கூடியவரே என்றும், துன்பங்களை அகற்ற கூடியவரே என்றும் மௌலுது பாடல்களை பாடி, இந்த ஹதீசை புறம் தள்ளுவது சரியா?

'கிறித்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்! அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் கூறுங்கள்' என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலி
நூல்: புகாரி 3445, 6830

பித்அத் (நூதனம் - மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட) நிராகரிக்கப்படும்:

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத அனைத்தும் வழிகேடு, அது நரகில் சேர்க்கும் என்பதை கீழ்காணும் ஹதீஸ் நமக்கு சொல்லுகிறது. இது புகாரியில் தான் இடம்பெற்றுள்ளது.

இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதை மறைத்து, கூட்டு துஆ, திருமணத்தில் அல்லிகு பயனகூகுமா என்ற துஆ, 3ஆம் பாத்திஹா, 7ஆம் பாத்திஹா, 40 ஆம் பாத்திஹா, புரியாம் பாத்திஹா, ஸலாத்துன் நாரியா, மிராஜ் நோன்பு, பராஆத் நோன்பு என ஆயிராக்கணக்கான பித்அத்தை புகாரி மஜ்லிசை நடத்துபவர்கள் தடுக்காமல், அதை செய்யபவர்களாகவே இருக்கிறார்களே? பொதி சுமக்கும் கழுதைகள் என்று குர்ஆன் கூறுவது இவர்களை தானே?

'நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்' எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி),
நூல்கள்: புகாரி 2697

தொழுகைக்கு நபி (ஸல்) அவர்களே முன்மாதிரி:

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் எவ்வாறு ஒவ்வோரு செயலையும் செய்தார்கள் என்று தெளிவாக ஹதீஸ்கள் இருக்க, ஷாபி சொன்னார், ஹனஃபி சொன்னார் என்று நபி (ஸல்) அவர்களின் ஹதீசை புறம்தள்ளி, ஷாபி, ஹனஃபி போன்ற மனிதர்களின் சொல்லை இறைவாக்காக நினைத்து, அதை தொழுகையில் செய்வது சரியா?

'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்' எனக் கூறி அனுப்பினார்கள்.

நூல்: புகாரி 631, 6008, 7246

நேர்ச்சை யாருக்கு?

பல அரியாத மக்கள் அவ்லியாக்கள் எனப்படுவோரின் பெயரால் நேர்ச்சை செய்கிறார்கள். புகாரிலேயே அல்லாஹ்விற்கு மட்டும் தான் நேர்ச்சை செய்ய வேண்டும் என்றும், வேறு யாருக்கும் நேர்ச்சை செய்யக்கூடாது என்றும் ஹதீஸ் உள்ளது. இந்த ஹதீசை என்றாவது விளக்கி சொல்லக் கேட்டுயிருக்கிறீர்களா? புகாரி மஜ்லிஸிற்கு வரும் கோழிகளில் பல அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்யப்பட்டது என்பது ஊர் அறிந்த ரகசியம்.

"யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ, அதை அவர் நிறைவுசெய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ,அதை நிறைவேற்றலாகாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6696

தராவீஹ் தொழுகை உண்டா?

தராவீஹ் என்ற ஒரு தொழுகை கிடையாது என்று கீழ்காணும் ஹதீஸ் சொல்லுகிறது. இதையும் நாம் மதிக்கும் ஆலிம்கள் (?) புகாரி மஜ்லிஸில் விளக்கவில்லை.

'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விளக்கம் அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)
நூல்: புகாரீ 1147, 2013, 3569

பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்கக்கூடாது!

பெண்கள் பள்ளக்கு வருவதை தடுக்கககூடாது என்று கீழ்காணும் ஹதீஸ் சொல்லுகிறது. இந்த ஹதீசை என்றாவது விளக்கியிருப்பார்களா?

மூத்திரத்தால் சூரத்துல் பாத்திஹாவை எழுதச்சொல்லும், மத்ஹபு குப்பைகளை தூக்கபிடிக்கும் ஹைதர் அலி ஆலிம்சா (?) அவர்கள் இந்த ஹதீசை என்றாவது படித்துயிருப்பாரா?

"பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: புகாரி 900, 873, 5238)

பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: புகாரி 865, 899)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

(நூல்: புகாரி 578, 372, 867, 872)

பெற்றோரின் நேர்ச்சையை பிள்ளைகள் நிறைவேற்றுவது:

ஒருவர் மரணித்துவிட்டால், மரணம் அடைந்த வீட்டில் சோகம் குறைவதற்கு முன், எங்களுக்கு சோறு போடு என்று பிச்சை கேட்கும் ஆலிம்சாக்களே! நீங்கள் இஸ்லாத்தையா? பின்பற்றுகிறீர்கள்? நபி (ஸல்) மரணம் அடைந்தவரின் வீ ட்டிலுள்ளவர்கள், சோகத்தில் இருப்பார்கள். எனவே, அண்டைவீட்டார்கள் அவர்களுக்கு சமைத்து கொடுங்கள் என்று சொன்ன ஹதீசை கேள்விபட்டுயிருக்கிறீர்களா? நாங்கள் இஸ்லாத்தை பின்பற்றினால் தானே, எங்களிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று  நீங்கள் (ஆலிம்சாக்கள்) நினைக்கலாம். நீங்கள் நினைப்பது சரி தான், உங்களிடம் இந்த கேள்வியை கேட்கக்கூடாது தான், இருந்தாலும் சில அப்பாவிகள், நீங்கள் தான் இஸ்லாத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் என்று நினைக்கிறார்களே!

சரி, இஸ்லாத்தில் இல்லாத 3ஆம் பாத்திஹா, 7ஆம் பாத்திஹா, 40 ஆம் பாத்திஹாவை செயல்படுத்தும், புகாரி மஜ்லிஸினர், பெற்றோர்கள் ஏதேனும் நேர்ச்சை செய்து, அதை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டால், அதை அவர்களின் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் என்ற கீழ்காணும் ஹதீசை என்றாவது புகாரி மஜ்லிஸில் விளக்கியிருக்கிறார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் மீது ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பில் அதை நான் நிறைவேற்றலாமா?' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம், அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது' என்றார்கள். மற்றொரு அறிவிப்பில் பதினைந்து நோன்பு எனக் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1953

இஸ்லாத்தில் துறவறம் இல்லை:

கீழ்காணும் ஹதீசை எடுத்துக்காட்டி, 4 மாதம், ஒரு வருடம் என குடும்பத்தை கவனிக்காமல், பெட்டியை தூக்கும் தப்லீக்வாதிகளுக்கு அது தவறு என்று விளக்கியது உண்டா?

நபித்தோழர்களில் சிலர் நான் மணமுடிக்க மாட்டேன் என்றும், வேறு சிலர் நான் உறங்காமல் தொழுது கொண்டிருப்பேன் என்றும், மற்றும் சிலர் நான் விடாமல் நோன்பு நோற்பேன் என்றும் பேசிக் கொண்டனர். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது, இப்படியெல்லாம் கூறியவர்களின் நிலை என்னவாகும்? என்று கூறிவிட்டு, நான் நோன்பும் வைக்கிறேன்; அதை விட்டு விடவும் செய்கிறேன். நான் தொழவும் செய்கிறேன்; உறங்கவும் செய்கிறேன். பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவரவல்லர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5063

திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் அவசியம்:

பெண்களின் சம்மதம் இல்லாமல் நமதூரில் எத்தனை திருமணங்கள் நடக்கின்றன. இதனால், திருமணம் நடந்த பின், சிறிது காலத்திலேயே எத்தனை விவாகரத்துகள் நடக்கின்றன. நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைப்படி, கன்னிப்பெண்ணாக இருந்தாலும், விதவை பெண்ணாக இருந்தாலும், தனக்கு தேர்வு செய்யப்படும் மணமகனை தனக்கு பிடித்துயிருக்கிறதா? என்ற சம்மத்தை பெண்ணிடம் சம்மதம் பெற வேண்டும் என்று புகாரி மஜ்லிஸினர் என்றாவது கூற கேட்டது உண்டா?

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6971, 6964, 5137

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)
நூல்: புகாரி 5139, 6945, 6969

திருமண விருந்தை (வலிமா) மணமகனே கொடுக்க வேண்டும்:

திருமணத்தில் மணமகளின் வீட்டினரிடம் வண்டி வண்டியாக சாப்பாடு வாங்கிறார்கள் நமதூரில். கீழ்காணும் ஹதீஸ் மணமகன் தான் வலிமா கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறது. இந்த ஹதீசை என்றாவது விளக்கியிருப்பார்களா? நமது கண்ணியமிக்க ஆலிம்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 டீ லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)
நூல்: புகாரி 5172

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421

நல்ல காலம் கெட்ட காலம் இல்லை:

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்கும் பழக்கம் இன்று தவ்ஹீத் எழுச்சியால் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். இன்றும் சிலர் நல்ல காலம் கெட்ட காலம் பார்க்க தான் செய்கிறார்கள். வேதனை என்னவெனில், நல்ல காலம் கெட்ட காலத்தை பார்த்து கொடுப்பதே ஆலிம்கள் என்ற கல்ல பேர்வழிகள் தான். கீழ்காணும் ஹதீஸ்கள் என்றாவது விளக்கப்பட்டு இருக்குமா?

ஆதமுடைய மகன் காலத்தைக் குறை கூறுகிறான். காலத்தைக் குறை கூறுபவன் என்னையே குறை கூறுகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என் கையில் தான் அதிகாரம் இருக்கிறது. இரவு பகலை நான் தான் மாறி மாறி வரச் செய்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4826, 6181, 7491

திருமணத்தில் ஒதப்பட வேண்டிய துஆ என்ன?

திருமணத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத அல்லிகு பயனகுமா என்று ஆரம்பாமாகும் ஒரு துஆவை நமது கண்ணியமிக்க (?) ஆலிம்கள் ஒதிவருகிறார்கள். அந்த துஆவில் பல நபிமார்களுக்கு மனைவியாக குர்ஆன் ஹதீஸில் சொல்லப்படாதவர்களை இவர்களே மனைவியாக கற்பனை செய்து சொல்லுகிறார்கள் (உதாரணத்திற்கு, யூசுஃ நபியின் மனைவியாக சுலைஹா என்ற பெண்னை). பித்அத்தை சப்பை செய்த இவர்கள், திருமணத்தில் மணமக்களுக்காக ஒத வேண்டிய துஆவை என்றாவது விளக்கியிருக்கிறார்களா?

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது பாரகல்லாஹு லக (அல்லாஹ் உனக்கு பரகத் - புலனுக்கு எட்டாத பேரருள் - செய்வானாக) எனக் கூறினார்கள்.

புகாரி 5155, 6386

சிறுவர்களுக்கு ஸலாம் சொல்லுவதை வழக்கமாக கொண்ட நபி (ஸல்) அவர்கள்:

நமது ஊரில் ஆலிம்கள் எனப்படுவோர் சிலர், நாம் ஸலாம் சொன்னால் கூட. சரியான முறையில் பதில் அளிப்பது இல்லை. காரணம், அகம்பாவம். ஆனால், நபி (ஸல்) சிறுவர்களுக்கு கூட ஸலாம் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஹதீஸ் விளக்கப்பட்டுள்ளதா?

(ஒரு முறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துவந்தார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸாபித் அல்புனானீ (ரஹ்)
நூல் : புகாரி (6247)


ஸஹருக்காக பாங்கு:

கீழே உள்ள ஹதீசை படித்தால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆம், கீழ்காணும் ஹதீசை வைத்து தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்லுகிறது. இதை எதிர்க்காத ஆள் இல்லை. தப்லிக் ஜமாஅத்தினர், போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர், உலக பிறை நேசர்கள். கள்ள தவ்ஹீத் இயக்கங்கள், தடம்புரண்ட ஜாக், அரசியிலில் போய் நாறிப்போனவர்கள், வரதட்சனை திருமணத்தில் மூக்குபிடிக்க திண்றுவிட்டு தவ்ஹீத் பேசும் உத்தம புத்திரர்கள், நாள்தோறும் இணைவைப்பு காரியங்களை அரங்கேற்றும் இயக்கத்தில் இருந்து கொண்டு அவர்களை தவ்ஹீத் என்று பொய் சாட்சியம் கூறும் பழைய தவ்ஹீத்வாதிகள், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

கீழ்காணும் ஹதீஸின் அடிப்படையில் ஸஹர் பாங்கு சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத் எந்த அளவுக்கு குர்ஆன் ஹதீஸூக்கு முக்கியத்துவம் தருகிறது என்று விளங்கும்

இந்த ஹதீசை புகாரி மஜ்லிஸில் கண்டது உண்டா? கேட்டது உண்டா?

'(ரமலானில் விடிவதற்கு முன்) இரவிலே பிலால் பாங்கு சொல்வார்கள். எனவே, இப்னு உம்மி மக்தூம் அவர்கள் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (சஹர் உணவு) உண்ணுங்கள். பருகுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 617

சூரியன் மறைந்தவுடன் விரைந்து நோன்பு திறக்க வேண்டும்:

சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறங்கள் என்று தவ்ஹீத் பள்ளியில் பாங்கு சொன்னால், பள்ளியை கொளுத்துவோம் என்கிறார்கள். ஆனால், புகாரியிலேயே அவ்வாறு தான் செய்ய வேண்டும் என்று ஹதீஸ் உள்ளது. இப்போ, யார் ஹதீசை பின்பற்றுகிறார்கள்? சுன்னத் வல் ஜமாஅத் என்போர் போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று இது காட்டவில்லையா?

நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புகாரி 1957

இந்தத் திசையிலிருந்து இரவு நம்மை நோக்கி வந்து, அந்தத் திசையில் பகல் பின்னோக்கிச் சென்று சூரியனும் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா (ரலி)
நூல்: புகாரி 1954


வலியுறுத்தப்பட்ட சுன்னத் தாடி!

தாடி வைப்பதின் முக்கியத்துவத்தை கீழ்காணும் ஹதீஸ் நமக்கு காட்டுகிறது. ஆனால், நமது குட்டி முல்லாக்கள் இந்த ஹதீஸ்களை மக்களுக்கு காட்டாமல், மார்க்கத்தில் இல்லாத தொப்பி அணியாமல் பள்ளிக்கு வந்தால், விட மாட்டேம் என்று அப்பாவிகளை எழுதி போட வைத்தது யார்? இந்த கண்ணியமிக்க உலமாக்கள் தானே?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்போருக்கு மாறு செய்யுங்கள். தாடியை வளர விடுங்கள். மீசையை கத்தரியுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 5892

லைலத்துல் கத்ர் ரமலானில் கடைசி பத்தில் ஒற்றை படையில் வரும்:

லைலத்துல் கத்ர் ரமலானில் கடைசி பத்தில், ஒற்றை படையில் தான் வரும் என்கிறது கீழ்காணும் ஹதீஸ் (புகாரியில் உள்ளது). ஆனால், நமதூரில் உள்ள ஆலிம்களுக்கு மட்டும் தனியாக வஹி வந்ததோ என்னவோ தெரியவில்லை. 27ஆம் இரவு மட்டும் லைலத்துல் கத்ர் வரும் என்ற நினைப்பில், தமாம் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற நீண்ட துஆ என்ற பெயரில் குர்ஆன் வசனங்களை ஒதி, பெரிய துஆ ஓதுகிறோம் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இந்த ஹதீசை விளக்குவது எப்போது?

லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2017, 2020

27 ஆம் இரவு, 28 ஆம் இரவு, 29 ஆம் இரவுகளில் தமாம் என்ற பெயரில் மல்லிக்கை பூ தோரணம் கட்ட புகாரியில் எதேனும் ஹதீஸ் உள்ளதா? 

மாதவிடாய் பெண்கள் உள்பட அனைவரும் பெருநாள் தினத்தில் மைதானத்திற்கு வரவேண்டும்!

பெருநாள் தொழுகையை மைதானத்தில் தான் தொழ வேண்டும் என்று கீழ்காணும் ஹதீஸ் சொல்லுகிறது. இது புகாரியில் தான் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீசை என்றாவது விளக்கியிருப்பார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் மக்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும். அன்றைய நாளின் பரகத்தை எதிர்நோக்கி அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தக்பீர் கூற வேண்டும். அவர்களோடு இவர்களும் துஆச் செய்ய வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 971

மேலே சொல்லப்பட்ட ஹதீஸ்களை படித்தால், இரு உண்மைகள் புரியும். ஒன்று, சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர், நபி (ஸல்) அவர்களின் சுன்னத் பின்பற்றுவர்கள் அல்ல என்பது. இரண்டு, குழப்பவாதிகள் என்று அவப்பெயர் சூட்டப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்துகளை எத்தகைய தடையையும் மீறி பின்பற்றுகிறார்கள் என்று.

மேலே நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ்களுக்கு, அதை இப்படி புரியக்கூடாது என்று அப்படி தான் புரிய வேண்டும் என்று கண்ணியமிக்க ஆலிம்களோ அல்லது அவர்களுக்கு கூஜா தூக்கபவர்களோ  கூறினால், தவ்ஹீத் ஜமாஅத்துடன் இது சம்பந்தமாக விவாதிக்க வரும்படி அழைக்கிறோம். விவாதத்தில் உங்கள் வண்டவாலங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும், இன்ஷா அல்லாஹ் (ஏற்கனவே, பல முறை தண்டவாளத்தில் ஏற்றப்பட்டுள்ளது என்பது வேறு விஷயம்).

நாம் குறிப்பிட்டுள்ள போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரை ஆதரிக்கும் அக்மார்க்(?) தவ்ஹீத்வாதிகளும் சிந்திக்க வேண்டும்.

இறுதியாக, புகாரி மஜ்லிசை முன்னின்று நடத்தும் கேரளத்து ஆலிம்சா எந்த அளவுக்கு நபி வழியை பின்பற்றுகிறார் என்பதையும் சேர்த்து விளக்க வேண்டியுள்ளது.

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

நபிகள் நாயகத்துக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) இதை அறிவிக்கிறார்.

நூல்கள் : அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

நபி (ஸல்) அவர்கள் தனக்காக யாரும் எழுந்து கூட நிற்க கூடாது என்றார்கள். பல நேரங்களில், நபி (ஸல்) அவர்களை முதல் முறையாக பார்க்க வந்த பலர், யார் முஹம்மது என்று கேட்கும் அளவுக்கு, நபி (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள். ஆனால், கேரளத்துகாரர் தான் ஜூம்ஆ தொழ செல்லும் போது, மார்க்கம் தெரியாத அப்பாவி மாணவர்களை தனக்காக குடைபிடித்து வர செய்கிறார். இரண்டு மூன்று மாணவர்கள் கேரளத்துகாரரை குடைக்குள் வாரம் வாரம் ஜூம்ஆ தொழ அழைத்து வருகிறார்கள் . எதற்கு குடை பிடிக்கணும், வார வாரம் நமது ஊரில் மழை பெய்கிறதா? என்று நீங்கள் கேட்கலாம். அந்த குடை மழைக்காக அல்ல, வெயில்பட்டால் கறுத்து போய்விடுவார் அல்லவா? அதற்காகத்தான் குடை. மேலும், கேளரத்துகாரர், தொழும் பள்ளிக்கு சென்று, அவர் செருப்பை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். தொழுக சொல்லும் போது செருப்பு மேற்கு திசையை நோக்கி கழட்டப்பட்டு இருக்கும், தொழுது முடித்த பிறகு அதே செருப்பு கிழக்கு திசையை நோக்கி திரும்பி இருக்கும். எப்படிங்க இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று நீங்கள் கேட்கலாம். இது அதிசயமும் இல்லை அற்புதமும் இல்லை. அந்த கேரளத்து மார்க்க அறிஞருக்காக (?) அவரின் மாணவர்கள் செய்யும் சேவை. எந்த அளவுக்கு நபிவழியை பின்பற்றுகிறார் பார்த்தீர்களா?

முதலில் வருபவருக்கு தான் பள்ளியில் முதல் வரிசையில் இடம். ஆனால், கேளரத்துகாரர் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து முதல் சஃபில் (வரிசையில்) இடம் பிடித்துவிடுவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அமர்ந்து இருப்பவரை எழுப்பி விட்டு, அந்த இடத்தில் அமர வேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 626

எந்த ஒரு சபையிலும் ஒருவரை எழுப்பிவிட்டு அமர கூடாது என்கிறது மேல் உள்ள புகாரி ஹதீஸ். கேரளத்துக்காரர் குர்ஆன் ஹதீசை பின்பற்றவில்லை என்று புரிகிறதா? இன்னும் இல்லை என்றால் உங்களுக்கு ஏதே பிரச்சினை இருக்கிறது.

இந்த புகாரி மஜ்லிஸில் நடைபெறும் பள்ளியில் அஹ், அஹ் என்று திக்ரு செய்வதற்கு எதோனும் ஹதீஸ்கள் புகாரி உண்டா? சத்தம் போட்டு திக்ரு செய்வதற்கும், ஆடி கொண்டு திக்ரு செய்வதற்கும் ஏதோனும் ஹதீஸ்கள் புகாரியில் இருந்தால் கேட்டு சொல்லுங்கள்.

பக்கசார்பு இல்லாமல் நாம் எடுத்து வைத்துள்ள வாதங்களை பார்த்தால், தவ்ஹீத் ஜமாஅத் தான் உண்மையான சுன்னத் வல் ஜமாஅத் என்பதும். சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் உள்ளவர்கள் சுன்னாவை பின்பற்றுபவர்கள் அல்ல என்பதும் தெளிவாகும்.

எனவே, முன்னோர்கள் சொன்னார்கள், மூதாட்டிகள் சொன்னார்கள் என்ற மாயையை விட்டுவிட்டு, குர்ஆன் ஹதீசை மட்டும் பின்பற்றி, மறுமையில் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவர்கள் நடத்தும் புகாரி மஜ்லிஸ் என்பது வயிறு நிரப்ப தான் என்பதை மேலே உள்ள ஹதீஸ்களை படித்தால் விளங்கும்.

"அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

                                                                                      அல்குர்ஆன் 2:170

Saturday, October 12, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 11.10.13(வீடியோ) - புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கப்சாக்களும் நாடகங்களும்!

புகாரி ஹதீஸை தொகுத்தவரின் உண்மையான பெயர் என்ன?
சஹாபாக்கள் காலத்தில் இருந்து யார் யார் எல்லாம் ஹதீஸ்களை தொகுத்தார்கள் அவர்களின் பெயர் என்ன? 

புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கப்சாக்களும் நாடகங்களும்!

 

தொடர்புடையவை:

புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்!

இஸ்லாத்தில் இல்லாத பூமி பூஜை செய்யும் மௌலானா மௌலவி ஹஜ்ரத் கிப்லா முஹம்மது குட்டி (?)!




Friday, October 04, 2013

Friday, September 27, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 27.09.13(வீடியோ )





அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 27/09/13



Saturday, September 21, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் (வீடியோ ) 20.09.13

அதிரை  தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 20.09.13



Saturday, September 14, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 06.09.13(வீடியோ )

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 06.09.13



Friday, August 23, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 23/08/13(வீடியோ )

சுய பரிச்சோதனை 

உரை சகோதரா் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 23/08/13(வீடியோ ) from Adiraitntj on Vimeo.

Sunday, August 04, 2013

Sunday, July 28, 2013

Sunday, July 21, 2013

Saturday, July 20, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 12/07/13(வீடியோ )

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை






Saturday, July 06, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 05.07.13(வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை
உரை :சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

அபூபக்கர் (ரலி ) அவர்களின் சிறப்பு

உரை :அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

Friday, June 28, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.06.13( வீடியோ)


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை
உரை :சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

அபூபக்கர் (ரலி ) அவர்களின் சிறப்பு

உரை :அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.06.13 from Adiraitntj on Vimeo.

ஆயிஷா (ரலி) அவர;கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜெருசலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு (இரவில்) கொண்டு செல்லப்பட்ட போது அதிகாலையில் இதைப் பற்றி மக்கள் (ஆச்சரியமாகப்) பேசிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை நம்பி உண்மைப்படுத்திய சிலர (கொள்கையை விட்டும்) தடம் புரண்டாரகள். சில இணைவைப்பாளர்கள் அபுபக்கர (ரலி) அவரகளிடம் சென்று இன்று இரவு பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உமது தோழர (முஹம்மது) கூறிக் கொண்டிருக்கிறாரே அதைப் பற்றி நீர்
என்ன நினைகிறீர? என்று கேட்டாரகள். அதற்கு அபுபக்கர்(ரலி) அவரகள் இவ்வாறு அவர (முஹம்மத்) கூறினாரா? என்று கேட்டார;கள். அதற்கு அவரகள் ஆம் என்றவுடன் முஹம்மத் இதை சொல்லியிருந்தால் திட்டமாக அவர உண்மை தான் சொன்னார; என்று அபு+பக்ர (ரலி) அவரகள் கூறினாரகள். இன்று இரவு பைத்துல் முகத்தஸிற்குச் சென்று பகல் வருவதற்கு முன்பே அவர திரும்பினார்  என்பதையா உண்மை என்று நீர் நினைக்கிறீர? என்று இணை வைப்பாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் இதை விட பாரதூரமான விஷயங்களில் எல்லாம் அவரை உண்மையாளர்
என்று நான் கருதிக் கொண்டிருக்கிறேன். வானத்திலிருந்து காலையிலும் மாலையிலும் (இறைச்) செய்தி (வருவதாக முஹம்மத் கூறுவதையும்) உண்மை என்று நான் நம்புகிறேன் என்று கூறினார் எனவே தான் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு அஸ்ஸித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர) என்ற பெயர் இடப்பட்டது.

நூல் : ஹாகிம் பாகம் : 10 பக்கம் : 250



3675. 
அனஸ்(ரலி) அறிவித்தார் 
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகீயோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்" என்று கூறினார்கள். 
 புகாரி 3675

3671. முஹம்மத் இப்னு ஹனஃபிய்யா (ரஹ்) அறிவித்தார். 
நான் என் தந்தை (அலீ - ரலி - அவர்கள்) இடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு மக்களில் யார் சிறந்தவர்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அபூ பக்ர் அவர்கள்" என பதிலளித்தார்கள். நான், '(அவர்களுக்குப்) பிறகு யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு உமர் அவர்கள் (தாம் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள். 'பிறகு (மக்களில் சிறந்தவர்) உஸ்மான்(ரலி) தாம்" என்று (என் தந்தை) சொல்லிவிடுவார்களோ என நான் அஞ்சியவனாக, 'பிறகு (மக்களில் சிறந்தவர்) நீங்கள் தாமே!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'நான் முஸ்லிம்களில் ஒருவன்; அவ்வளவு தான்" என்று பதிலளித்தார்கள்.3660. ஹம்மாம் இப்னு அல்ஹர்ஸ்(ரஹ்) அறிவித்தார். 
"(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்" என்ன அம்மார் இப்னு யாசிர்(ரலி) சொல்ல கேட்டேன்.466. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் 'அல்லாஹ், தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா? எனத் தேர்ந்ததெடுக்க ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடம் உள்ளதையே தேர்ந்தெடுத்தார்" என்றார்கள். (இதைக் கேட்ட) அபூ பக்ரு(ரலி) அழலானார்கள். 'இந்த மதுஹகூழ் ஏன் அழகிறார்? தன்னிடம் உள்ளது வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா என்று ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தபோது அந்த அடியார் இறைவனிடம் உள்ளதைத் தேர்ந்தெடுத்தால் அதற்காக அழ வேண்டுமா என்ன?' என்று நான் மனதிற்குள் கூறிக் கொண்டேன். அந்த அடியார் நபி(ஸல்) அவர்கள் தாம். (தங்களின் மரணத்தையே அவ்வாறு குறிப்பிட்டார்கள் என்பதைப் பிறகு அறிந்து கொண்டேன்) அபூ பக்ரு(ரலி) எங்களை விட அறிவில் சிறந்தவராக இருந்தார்கள். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
"அபூ பக்ரே! அழ வேண்டாம்! நட்பின் மூலமும் செல்வத்தின் மூலமும் மனிதர்களிலேயே எனக்குப் பேருதவியாக இருந்தவர் அபூ பக்ரு தான். என் உம்மத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஏற்றுக் கொள்வதென்றால் அபூ பக்ரையே ஏற்றிருப்பேன். என்றாலும் இஸ்லாம் என்ற அடிப்படையிலான சகோதரத்துவமும் நேசமும்தான் (இஸ்லாத்தில்) உண்டு. பள்ளியில் (என் இல்லத்திற்கு வருவதற்காக) உள்ள அபூ பக்ரின் வாசல் தவிர ஏனைய வாசல்கள் அடைக்கப்பட வேண்டும்."467. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் எந்த நோயினால் மரணமடைந்தார்களோ அந்த நோயின்போது தம் தலையில் ஒரு துணியால் கட்டுப் போட்டவர்களாக வெளியே வந்து மேடை மீது அமர்ந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பின்பு 'தம் உயிராலும் பொருளாலும் எனக்கு அபூ குஹாஃபாவின் மகன் அபூ பக்ரை விட வேறெவரும் பேருதவியாக எவரையேனும் உற்ற நண்பராக நான் ஏற்படுத்திக் கொள்வதென்றால் அபூ பக்ரையே ஏற்படுத்திக் கொள்வேன். என்றாலும் (தனிப்பட்ட உதவிகளுக்காக நேசிப்பதை விட) இஸ்லாமிய அடிப்படையிலான நேசமே சிறந்தது. அபூ பக்ரின் வழியைத் தவிர என்னிடம் வருவதற்காகப் பள்ளிவாசலிலுள்ள எல்லா வழிகளையும் அடைத்து விடுங்கள்!" என்று கூறினார்கள்.
3660. ஹம்மாம் இப்னு அல்ஹர்ஸ்(ரஹ்) அறிவித்தார். 
"(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்" என்ன அம்மார் இப்னு யாசிர்(ரலி) சொல்ல கேட்டேன். 
3661. அபுத் தர்தா(ரலி) அறிவித்தார். 
நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (நபி - ஸல் - அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருககும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, 'அங்கே அபூ பக்ர்(ரலி) இருக்கிறார்களா?' என்று கேட்க வீட்டார், 'இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூ பக்ர்(ரலி) பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன்." என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். 'பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?' என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி) மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.
3662. அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார். 
நபி(ஸல்) அவர்கள் 'தாத்துஸ் ஸலாஸில்'எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆயிஷா" என்று பதிலளித்தார்கள். நான், 'ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷாவின் தந்தை (அபூ பக்ர்)" என்று பதிலளித்தார்கள். 'பிறகு யார் (பிரியமானவர்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)" என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.

3655. இப்னு உமர்(ரலி) கூறினார். 
நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூ பக்ர்(ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களையும் பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம்.
3685. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
உமர்(ரலி) (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர். அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) தாம். அவர்கள், 'உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!" என்று பிரார்த்தித்துவிட்டு, '(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள் தாம் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி - ஸல் - அவர்கள் மற்றும் அபூ பக்ர் - ரலி - அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்" என்றும் 'நானும் அபூ பக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம்" என்றும் 'நானும் அபூ பக்ரும் உமரும் புறப்பட்டோம்" என்று சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன். 

3919. நபி(ஸல்) அவர்களின் ஊழியரான அனஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவர்கள் தம் தோழர்களில் அபூ பக்ர்(ரலி) மட்டுமே கருப்பு - வெள்ளை முடி உடையவர்களாக இருந்தார்கள். அன்னார் மருதாணியாலும், 'கத்தம்' எனும் (ஒரு வகை) இலைச் சாயத்தாலும் தம் (தாடி) முடியைத் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள்.

6679. இப்னு ஷிஹாப் (முஹம்மத் இப்னு முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா (ரஹ் - அலைஹிம்) ஆகியோர், நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா(ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என இறைவன் (தன்னுடைய வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொரு வரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். (அதில் பின்வருமாறு உள்ளது:) 
அப்போது அல்லாஹ், '(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம்' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11-20) பத்து வசனங்களை அருளினான். (ஆயிஷா(ரலி) கூறினார்:) என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்' என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். -மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். -அப்போது அல்லாஹ், 'உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்' எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) வசனத்தை அருளினான். 
அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்' என்றும் கூறினார்கள்.
3092. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, நபியவர்களின் மகள் ஃபாத்திமா அவர்கள் தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தரும்படி அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அது இறைத்தூதர்(ஸல்), அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த, (எதிரி நாட்டிலிருந்து கிடைத்த) செல்வங்களில் நபியவர்கள்விட்டுச் சென்ற சொத்தாகும்.
3093. ஃபாத்திமாவுக்கு அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள். ஆனால், இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் பேசுவதைவிட்டுவிட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்துவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தனி நிதியாக)விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துக்களிலிருந்தும் மதீனாவில் இருந்த அவர்கள் தர்மமாகவிட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார். அபூ பக்ர்(ரலி) ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்த எதனையும் நான் செய்யாமல் விட மாட்டேன். ஏனெனில், அவர்களின் செயல்களில் எதனையாவது நான்விட்டுவிட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று அஞ்சுகிறேன்" என்றார்கள். (அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் தருமமாகவிட்டுச் சென்ற சொத்தை உமர் அவர்கள், அலீ அவர்களுக்கும் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் (அதன் வருமானத்திலிருந்து தம் பங்கின் அளவிற்கு எடுத்துக் கொள்ளும் படி) கொடுத்துவிட்டார்கள். கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்துக்களை உமர் அவர்கள் (யாருக்கும் கொடுக்காமல்) நிறுத்தி வைத்துக் கொண்டு, 'அவ்விரண்டும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தருமமாகவிட்டுச் சென்றவை. அவை நபி(ஸல்) அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களுக்கு ஏற்படும் (திடீர் பொருளதாரப்) பிரச்சினை(கள் மற்றும் செலவினங்)களுக்காகவும் (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்றார்கள். 
இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) (இந்த ஹதீஸை அறிவித்த போது), 'அந்த (கைபர், ஃபதக் பகுதியிலிருந்த) இரண்டு சொத்துக்களும் இன்று வரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பிலேயே) இருந்து வருகின்றன" என்றார்கள்.

Friday, June 21, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 21.06.13(வீடியோ )


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்
உரை :யாசர் அரஃபாத் இம்தாதி
தலைப்பு  பராஅத் இரவு



அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 21.06.13 from Adiraitntj on Vimeo.

Friday, June 14, 2013

அதிரை கடற்கரைத் தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

அதிரை கடற்கரைத் தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் 

இன்று 14.06.13 இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெருவில் மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது !

இதில் சகோதரர் Y.அன்வர் அலி அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பிலும்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர்  சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி அவர்கள் இஸ்லாம் என்றால் என்ன என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்களும், பெண்களும் பெரும் திரளாக பங்கு பெற்று பயன் பெற்றார்கள்.









Friday, June 07, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் - 07.06.13


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் - 07.06.13
உரை: அஷ்ரஃபதின் ஃபிர்தவ்சி

மிஃராஜ் பயணம்



. மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன்.10 அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்(17:1)



நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அதற்கு வானவர் 'அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள். 

வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார். 

இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். 'இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள். 

பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தில் காவலரிடம் 'திற' எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரலி), 'வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் வானத்தில் ஆதம்(அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை' என்று கூறினார். 

'ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் இத்ரீஸ்(அலை)' என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள். 
பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள். 
பின்னர் ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் ஈஸா(அலை)' என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள். 
பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!" என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இவர் இப்ராஹீம்(அலை)' என்று கூறினார்கள். 
இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து) 

"அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். பின்னர் ஜிப்ரீல்(அலை) என்னை 'ஸித்ரதுல் முன்தஹா' என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 
கூறினார்கள்: என அபூ தர்(ரலி) அறிவித்தார். (புஹாரி 349)


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நான் ('மிஅராஜ்' எனும் விண்ணுலகப் பயணத்தின்போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு நான்கு நதிகள் (ஓடிக் கொண்டு) இருந்தன. இரண்டு நதிகள் வெளியேயும், இரண்டு நதிகள் உள்ளேயும் (ஓடிக் கொண்டு) இருந்தன. வெளியே இருக்கும் இரண்டு நதிகள் நீல் மற்றும் யூப்ரடீஸ் நதிகளாகும். உள்ளே இருக்கும் இரண்டு நதிகள் சொர்க்கத்திலுள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு நதிகளாகும். அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. பால் கிண்ணம், தேன் கிண்ணம், மதுக் கிண்ணம் ஆகியன தாம் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து (அதை) அருந்தினேன். அப்போது என்னிடம், 'நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்' என்று சொல்லப்பட்டது. 
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா(ரஹ்) அவர்களிடமிருந்து ஹிஷாம், ஸயீத், ஹம்மாம்(ரஹ்) ஆகியோர் (சொர்க்கத்து) நதிகள் குறித்து மேற்கண்டபடி அறிவித்தார்கள். (ஆனால்,) மூன்று கிண்ணங்கள் பற்றி அவர்கள் (தம் அறிவிப்பில்) குறிப்பிடவில்லை.(புஹாரி5610)

3207. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள். பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்" என்றார்கள். பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்" என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது. .(புஹாரி3207)




ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) அறிவித்தார் 
'(வளைந்த) வில்லின் இரண்டு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்' எனும் (திருக்குர்ஆன் 53:9, 10) வசனங்களைக் குறித்து இப்னு மஸ்வூத்(ரலி) எங்களுக்குப் பின்வருமாறு தெரிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரின் நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள். (புஹாரி4856)


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான் '(வானவர்) ஜிப்ரீலே! இது என்ன?' என்று கேட்டேன். அவர் 'இதுதான் உங்களுடைய இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸா' என்றார். 'அதன் மண்' அல்லது 'அதன் வாசனை' நறுமணமிக்க கஸ்தூரியாகும். 
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.154 
'வாசனை' யா(தீப்)? 'மண்ணா' (தீன்)? என்பதில் அறிவிப்பாளர் ஹுத்பா இப்னு காலித்(ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.  (புஹாரி6581)

அபூ தர்(ரலி) அறிவித்து வந்ததாக அனஸ்(ரலி) அறிவித்தார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை (முகடு) பிளக்கப்பட்டது. (அங்கிருந்து வானவர்) ஜிப்ரீல் அவர்கள் இறங்கி (வந்து) என் நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை, 'ஸம்ஸம்' தண்ணீரால் கழுவினார்கள். பிறகு, நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தட்டு ஒன்றைக்கொண்டு வந்து என் நெஞ்சில் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு, என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறினார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்கு வந்தபோது வானத்தின் காவலரிடம், 'திறங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவர், 'யார் அது?' என்று கேட்டார். ஜிப்ரீல் அவர்கள், 'இதோ ஜிப்ரீல்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், 'உங்களுடன் வேறெவராது இருக்கிறரா?' என்று கேட்டார். அவர்கள், 'என்னுடன் முஹம்மத் அவர்கள் இருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், '(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா?' என்று கேட்க, ஜிப்ரீல் அவர்கள், 'ஆம், திறவுங்கள்" என்று கூறினார்கள். (முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு) நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒருவர் இருந்தார். அவரின் வலப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தன்னுடைய வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தன்னுடைய இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) 'நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!" என்று கேட்டேன். அவர், 'இவர் ஆதம்(அலை) அவர்கள்; அவர்களின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அவர்களின் சந்ததிகள். அவர்களில் வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரக வாசிகள். எனவே, தான் அவர்கள் வலப்பக்கம் (சொர்க்கவாசிகளான) தம் மக்களை பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப்பக்கம் (நரக வாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது (வேதனைப்பட்டு) அழுகிறார்கள்" என்று பதிலளித்தார்கள். 
பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் (இன்னும் உரயத்திற்கு) ஏறிச் சென்றார்கள். பிறகு, இரண்டாம் வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், 'திறவுங்கள்" என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின்னர் வாயிலைத்) திறந்தார். 
அனஸ்(ரலி) தொடர்ந்து கூறினார்கள்: 
"நபி(ஸல்) அவர்கள், வானங்களில் இத்ரீஸ்(அலை), ஈசா(அலை) இப்ராஹீம்(அலை) ஆகியோரைக் கண்டதாகக் கூறினார்களே தவிர அவர்களின் இருப்பிடங்கள் எங்கிருந்தன என்று அவர்கள் எனக்குக் குறிப்பிட்டுக் கூறவில்லை. அவர்கள் ஆதம்(அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம்(அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே கூறினார்கள்" என்று அபூ தர்(ரலி) கூறினார். 
அனஸ்(ரலி) மேலும் கூறினார்கள்: 
"ஜிப்ரீல்(அலை) அவர்கள் இத்ரீஸ்(அலை) அவர்களைக் கடந்து சென்றபோது, 'நல்ல இறைத் தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், 'இவர் இத்ரீஸ் என்று கூறினார்கள். பிறகு மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அவர்கள், 'இவர் மூஸா" என்று கூறினார்கள். பிறகு நான், ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!" என்று கூறினார்கள். பிறகு நான் ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், '(இவர்) ஈசா" என்று பதிலளித்தார்கள். பிறகு நான் இப்ராஹீம் அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், 'நல்ல நபியே, வருக! நல்ல மகனே, வருக!" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு, 'இவர் இப்ராஹீம்" என்று ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
இப்னு அப்பாஸ்(ரலி), அபூ ஹய்யா(ரலி) ஆகிய இருவரும் அறிவித்ததாக இப்னு ஹஸ்கி(ரலி) கூறினார் 
' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்தபோது அங்கு நான் (வானவர்கள் விதிகளை எழுதிக் கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன். 
இப்னு ஹஸ்கி(ரஹ்) அவர்களும் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் கூறினார்கள்கள் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அப்போது அல்லாஹ் என்மீது (என் சமுதாய்யத்தாருக்காக) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான். அதைப்பெற்றுக் கொண்டு நான் திரும்பியபோது மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது மூஸா அவர்கள், 'உங்கள் சமுதாயத்தவர் மீது என்ன கடமையாக்கப்பட்டது" என்று கேட்டார்கள். நான், 'அவர்களின் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அவர்கள், 'அப்படியானால் உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று (சற்று குறைத்துக் கடமையாக்கும்படி) கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது" என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி) கேட்டேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூஸா அவர்களிடம் திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறி முன்பு போல் ("உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது") என்று கூறினார்கள். (நான் அவ்வாறே திரும்ப இறைவனிடம் சென்று இன்னும் குறைக்கும்படி கோர) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூஸா அவர்களிடம் மீண்டும் கூறியபோது, 'உங்களுடைய இறைவனிடம் திரும்பச் சென்று இன்னும் குறைத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் அதற்கு சக்தி பெறமாட்டார்கள்" என்று கூற, நான் திரும்பிச் சென்று, என் இறைவனிடம் (இன்னும் சற்று குறைக்கும்படி) கேட்டேன். அதற்கு அவன், 'அவை ஐந்து (வேளைத் தொழுகைகள்) ஆகும். அவையே (பிரதிபலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். (ஒரு முறை சொல்லப்பட்ட சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை" என்று கூறினான். உடனே, நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், 'உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். நான், 'என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்" என்று பதிலளித்தேன். பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு (வானுலகின் எல்லையான) 'சித்ரத்துல முன்தஹா'வுக்குச் சென்றார்கள். அப்போது அவையென்னவென்று நான் அறிய முடியாத படி பல வண்ணங்கள் அதைச் சூழ்ந்து மூடியிருந்தன. பிறகு நான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். அப்போது அங்கே முத்தாலான கூடாரங்களைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் வீசும்) கஸ்தூரியாக இருந்தது.  (புஹாரி3342)


 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா அவாக்ளை 'ஷனூஆ' குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் பெரும் பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம். 
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
"தஜ்ஜால் உள்ளே நுழைந்து விடாமல் மதீனா நகரத்தை வானவர்கள் காவல் காப்பார்கள்" என்று நபி(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.(புஹாரி3239)




இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். 
என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.(புஹாரி3241)






(((bbbbbujh