Showing posts with label ததஜ. Show all posts
Showing posts with label ததஜ. Show all posts

Wednesday, November 05, 2014

அப்பாஸ் அலி நீக்கம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விளக்கம்

அப்பாஸ் அலி நீக்கம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விளக்கம்

கொள்கைச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நம் ஜமாஅத்தில் பிரச்சாரகராக இருந்து வந்த அப்பாஸ் அலி குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் விஷயத்தில் கொள்கை முரண்பாடு கொண்டு விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் நம் ஜமாஅத்தில் இருந்து விலகியுள்ளது உண்மையாகவே வரவேற்கத்தக்கதாகத் தான் ஜமாஅத் கருதுகிறது.

அவரது செயல்பாடும் நிலைபாடும் ஜமாஅத்திற்கு உகந்ததாக இல்லை என்பதற்காக அவர் பல முறை உயர் நிலைக்குழுவில் கண்டிக்கப்பட்டுள்ளார்.

அது குறித்து சுருக்கமாக சில தகவல்களைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

வெளிநாடுகளுக்கு பிரச்சாரப் பணிக்காக ஜமாஅத்தின் சார்பில் ஜமாஅத்தின் செலவில் அனுப்பப்படுவோர் எக்காரணம் கொண்டும் அங்குள்ள கிளைகளிடமோ தனி நபர்களிடமோ அன்பளிப்புகள் மற்றம் சன்மானம் பெறக் கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இது குறித்து 09.04.12 அன்று பகிரங்கமாகவும் ஜமாஅத் சார்பில் எல்லா மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் அப்பாஸ் அலி மட்டும் இதை மீறி பெரிய அளவில் அளிக்கப்பட்ட அன்பளிப்புகளையும் பணத்தையும் பெற்று வந்தார். இது பின்னர் தெரிய வந்த போது உயர் நிலைக்குழுவிலை வைத்து கடுமையாக்க் கண்டிக்கப்பட்டு வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தார்.

ஆன்லைன் பீஜேயில் கேள்விக்குப் பதில் அளிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக ஒரு கேள்விக்கு இவ்வளவு என்று ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே பதில் கொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு மீண்டும் பொய்யான கணக்குக் காட்டி பணம் பெற முயற்சிக்கும் போது அதை சைய்யத் இப்ராஹீம் சுட்டிக்காட்டியதுடன் நிர்வாகக்குழுவில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார்.

இதுபோன்று நெல்லையிலிருந்து சென்னைக்கு ஜுமுஆ உரை நிகழ்த்த வந்த போது ஜுமுஆ செய்த கிளையில் போக்குவரத்துப் பணம் பெற்ற பின் மாநிலத் தலைமையில் போக்குவரத்துச் செலவு கேட்ட போது மாநிலச் செயலாளர் சாதிக் அப்பாஸ் அலியிடம் ‘ உங்களுக்கு அந்தக் கிளையிலேயே பணம் கொடுத்திருப்பார்களே எனக் கேட்ட பின் சுதாரித்து பணம் வேண்டாம் எனக் கூறினார். இதற்காகவும் நிர்வாகக்குழுவில் கண்டிக்கப்பட்டார். இதில் இருந்து அவர் பணத்துக்காக எதையும் செய்யும் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்

பிஜே அவர்கள் இது குறித்து அவருக்கு அறிவுரை கூறினார்.இப்படி நடந்து கொண்டதை அவரும் உணர்ந்து வருத்தம் தெரிவித்தார்,

இவரது இந்தப் பணத்தாசை இவரைக் கொள்கையை விட்டு வெளியேற்றி விடும் என்று நிர்வாக குழுவில் ஆலோசனை செய்யும் அளவுக்கு இவரது நிலை இருந்தது.

இவர் பண விஷயத்தில் சரியாக இல்லை என்பதால் வெளிநாட்டு மண்டலங்களுக்கு மீண்டும் பழைய சுற்றறிக்கை அனுப்பப்பட்டதுடன் உணர்விலும் போடப்பட்டது.

ஆனால் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு பத்து நாட்களுக்கு முன் சவூதிக்கு பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டவர் இப்போதும் ஜமாஅத் நிலைபாட்டை மீறி அன்பளிப்புகள் பெற்று வந்துள்ளார்,

இது குறித்து ஜமாஅத் விசாரிக்கும் என்பதற்காக அவர் அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று கருதுகிறோம்.

இதுபோன்ற காரணங்களினால் அவர் வெளியேற வேண்டியவர் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. .

அடுத்ததாக ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமாக தனிப்பட்ட நபர்களிடம் இவர் பேசியுள்ளார் என்ற விபரம் தெரிய வந்து 12.11.2013 அன்று இது குறித்து பேசுவதற்காக உயர் நிலைக் குழு கூட்டப்பட்டது.

தர்கா வழிபாட்டுக்காரர்களும் மத்ஹபு வழிபாட்டுக்காரர்களும் செய்வதை நாம் விமர்சிக்கக் கூடாது. அவர்கள் கூறுவதற்கும் ஆதாரம் உண்டு எனக் கூறினார். உயர்நிலைக் குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு ஹதீஸ் பற்றி பேசும் போது பீஜே அவர்களிடம் இதைப் பலவீனமாக ஆக்கிவிடுவோமா என்று அப்பாஸ் அலி கேட்டார். பலவீனமான ஹதீஸை பலவீனம் என்று சொல்வது வேறு. சரியான ஹதீஸைப் பலவீனமாக்குவோமா என்று கேட்பது வேறு என்று பீஜே அவர்கள் அதைக் கண்டித்த விபரத்தையும் சபையில் அம்பலப்படுத்தினார்.

நமக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் பலவீனமாக்கி விடுவோமா என்ற கேட்டவர் தற்போது இறை அச்சத்தைக் காரணம் காட்டியுள்ளார். இவர் எந்த ஆதாயத்துக்காக மாறினார் என்பதையும் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

உயர்நிலைக்குழுவில் இருந்த ஒவ்வொருவரும் இதைக் கடுமையாகக் கண்டித்தனர். ஒரு பாமரனுக்கு உள்ள கொள்கைத் தெளிவு கூட உங்களுக்கு இல்லை என்று ஆலிமல்லாத உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் அவரிடம் கேட்கும் அளவுக்கு எல்லா வழிகேட்டையும் நியாயப்படுத்தினார்.

எனவே நீங்கள் தெளிவு அடையும் வரை பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும் மேலாண்மைக் குழு உறுப்பினர் பொறுப்பை விட்டும் விலகுமாறு உயர் நிலைக் குழு உத்தரவிட்டு அவ்வாறு ராஜினாமா செய்தார்.

இத்தனை ஆண்டுகள் ஜமாஅத்தில் இருந்துள்ளார் என்பதால் இஸ்லாமியக் கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து நீக்க வேண்டாம். வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அகீதா அல்லாத இலக்கணம் உள்ளிட்ட பாடம் மட்டும் நடத்தட்டும் என்று மேலாண்மைக் குழுத் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டதால் அப்போது நீக்கப்படவில்லை.

புரியாமல் இருந்து விட்டேன். எம் ஐ சுலைமான் அவர்கள் விளக்கம் சொன்ன பிறகு புரிந்து கொண்டேன். எனவே என்னைப் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துங்கள், நான் மனக்குழப்பத்தில் உண்மை அறியாமல் பேசிவிட்டேன் என்று வருத்தம் தெரிவித்தார்.பிறகு 03.03.2014 முதல் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.அன்று முதல் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லி பத்து நாட்களுக்கு முன்னர் வரை ஒரு மாதம் ரியாத் ஜித்தா தம்மாம் ஆகிய மண்டலங்களில் பிரச்சாரம் செய்த போது சூனியம் குறித்து ஜமாஅத்தின் நிலைபாட்டைப் பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக குரானுக்கு முரன்படும் செய்திகள் குறித்து ஆய்வு செய்வதாகக் கூறும் இவர் கடந்த சில மாதங்களில் குரானுக்கு முரன்படும் செய்திகள் குறித்தும் சூனியம் குறித்தும் மாவட்டங்கள் தோறும் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சிகளில் பிரதான தலைப்பாக எடுத்து அமைப்பின் நிலைப்பாட்டையே பேசினார்.

ஆனால் தற்போது சவுதிக்குப் பயணம் செய்து வந்த பின் அமைப்பிலிருந்து விலகுவதாகவும் அமைப்பின் கொள்கை குறித்து பல மாதங்கள் ஆய்வு செய்ததாக சொல்லும் இவரது இரட்டை நிலை இவர் பணத்திற்காக எதையும் செய்வார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

எனவே பணத்திற்காக கொள்கையை பனயம் வைக்கும் இவரது நடவடிக்கைகளும் கொள்கையிலிருந்து இவர் தடம்புரண்டதும் நிரூபனமான காரணத்தினல் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். இயக்கம் தொடர்பாக இவருடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை அப்பாஸ் அலியின் இந்த நடவடிக்கையால் ஜமாஅத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இவரை விட பன்மடங்கு பிரச்சாரம் செய்துவந்த ஹாமித் பக்ரி ,இணைவைப்பிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவிட்டு பின்னர், தான் கொண்ட கொள்கையிலிருந்து வழிகெட்டு கப்ருவணங்கியாகயாக மாறிவிட்டார். அவர் தடம்புரண்டபோது. உறுதியுள்ள கொள்கைச் சகோதரர்களிடம் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதுபோலத்தான் அப்பாஸ் அலியின் நிலையும். அப்பாஸ் அலி கொள்கை மாறிப்போனதால் அவருக்கு உலக ஆதாயம் ஏற்படலாம். ஆனால் சூனியம் குறித்தும் குர்ஆனுக்கு முரன்படும் செய்திகள் குறித்தும் மக்கள் மன்றத்தில் அவர் விளக்கமளிக்க முன்வந்தால் நமது கொள்கை சகோதரர்கள் அவருடைய கடந்த கால விளக்கங்களை வைத்தே அவரின் அசத்தியக்கொள்கையை அம்பலத்துவார்கள். இதனால் சத்தியம் மேலோங்கத்தான் செய்யும் இன்ஷாஅல்லாஹ்.

”உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதி ஆக்கி வைப்பாயாக்” நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனை நாமும் கேட்போமாக.

இப்படிக்கு

ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
பொதுச் செயலாளர்

Saturday, April 12, 2014

அதிமுகவிற்க அளித்த ஆதரவு வாபஸ் – தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

அதிமுகவிற்க அளித்த ஆதரவு வாபஸ் – தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

டிஎன்டிஜே யின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (12.04.14) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாநிலத் தலைமையகத்தில் கூடியது.

இதில் அதிமுகவிற்க அளித்த ஆதரவை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அடுத்து என்ன நிலைபாடு எடுப்பது என்பது குறித்து வருகின்றது திங்கள் கிழமை ஆலோசித்து அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் முடிவு பத்திரிக்கையாளர்களிடம் விளக்கப்பட்டது.

Wednesday, April 09, 2014

மம கட்சியை ஏன் தோற்கடிக்க வேண்டும்?

மம கட்சியை ஏன் தோற்கடிக்க வேண்டும்?



Tuesday, April 08, 2014

வாழ்வுரிமைக்கே வாக்குரிமை!

நாடு விடுதலையடைந்த பிறகு 1992ஆம் ஆண்டு வரை தமிழக முஸ்லிம்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்கு வங்கியாகவே இருந்தனர். 1992ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் இஸ்லாமிய சமுதாயம் காங்கிரஸ் கட்சியை அடையாளம் கண்டது. எனினும் இதன் பலனாய் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகள் திராவிடக் கட்சிகளை நோக்கியே சென்றன.

இக்கால கட்டத்தில் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வந்த தவ்ஹீத் ஜமாஅத், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. ஆரம்பத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் என்ற வட்டத்தில் மட்டும் நின்ற தவ்ஹீத் ஜமாஅத், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் சமுதாயப் பணி என்ற இலட்சியத்தையும் கையிலெடுத்து தனது வட்டத்தை வரிவாக்கம் செய்தது. அதன் எதிரொலி தான் தமுமுக என்ற இயக்கத்தின் உதயமாகும்.

தவ்ஹீதுவாதிகளின் உழைப்பிலும், தியாகத்திலும் தமிழகத்தில் அரசியல்ரீதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அந்தப் புரட்சியின் விளைவாக 1998ல் தேர்தல் புறக்கணிப்பு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தது.

1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை கோவையில் 19 முஸ்லிம்களை அநியாயமாக சுட்டுக் கொன்றது.

முஸ்லிம்களை அநியாயமாக சுட்டுக் கொன்ற காவல்துறை கயவர்களின் மீது - காட்டு மிருகங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் கருணாநிதி என்று சமுதாயம் காத்திருந்தது. ஆனால் கருணாநிதியோ அந்தக் காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல! முஸ்லிம்களின் உயிரைப் பறித்து, உதிரம் குடித்த காட்டுவிலங்குகளுக்கு விருது வழங்கிக் கவுரவித்தார். எரிகின்ற முஸ்லிம்களின் இதயங்களில் எண்ணையை ஊற்றினார்.

அந்தப் பாதிப்பையும் கொதிப்பையும் வெளிப்படுத்தும் விதமாகத் தேர்தல் புறக்கணிப்பை தமுமுக சார்பில் அறிவித்தோம். அதனுடைய வீரிய பிரச்சாரம் மக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கும் வேளையில்தான் கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இது தமிழகத்தில் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலும் பிஜேபிக்கு சாதகமான பலனை அளித்தது. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணி தோல்வியடைந்து, அதிமுக அணி வென்றது.

அதிமுக ஆதரவில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாரதீய ஜனதா அரசை 13 மாதங்களில் ஜெயலலிதா கவிழ்த்தார். 1999ஆம் ஆண்டு நாடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைச் சந்தித்தது. 1999 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தலையொட்டி ஜூலை 4, 1999ல் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தினோம். தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்து கொண்டு, அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தோம்.

2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படாததாலும், திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததாலும் எந்தக் கட்சியையும் முழுமையாக ஆதரிக்காமல் சமுதாய ரீதியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்து ஆதரித்தோம். அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இதன் பின்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவதைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. எனவே இடஒதுக்கீட்டை மையமாக வைத்து திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்தோம். இவையனைத்தும் தமுமுக தவ்ஹீதுவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள்.

இதன் பின்னர் தேர்தல் காலங்களில், களங்களில் கண்ட அரசியல் தலைவர்கள் சந்திப்பு, மரியாதைகள் போன்றவை தமுமுகவை பதவி மோகத்தில் தள்ளியது. அதனால் தவ்ஹீதுவாதிகள் தமுமுகவிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உருவானது. இந்த ஜமாஅத், 2006, ஜனவரி 29 அன்று குடந்தை குலுங்கும் அளவுக்கு மாபெரும் பேரணியை நடத்தியது.

அதன் விளைவாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நீதிபதி ராஜரத்தினம் தலைமையில் இடஒதுக்கீட்டிற்கான ஆணையம் அமைத்தார். அந்த அடிப்படையில் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்தது. எனினும் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்திருந்த கோபம் காரணமாக திமுக வென்றது. தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு இல்லாமல் இருந்தால் அதிமுக பலமான எதிர்க்கட்சியாக வந்திருக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் அப்போது எழுதினார்கள்.

திமுக ஆட்சிக் காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு திமுக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கியது. இதற்கு நன்றிக்கடனாக தவ்ஹீத் ஜமாஅத் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதவரளித்தது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

2011 சட்டமன்றத் தேர்தலிலும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை உயர்த்தித் தரும் கட்சிக்கு ஆதரவு என்ற நிலைபாட்டை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தக் கோரிக்கையை அதிமுக கண்டுகொள்ளவில்லை. திமுக ஏற்றுக் கொண்டது. இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திமுகவை ஆதரித்தது. மின்வெட்டு, ஊழல் போன்ற திமுக எதிர்ப்பு அலையில் திமுக தோல்வியைத் தழுவினாலும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதிமுக அசைந்து கொடுக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் காலத்தில் தான் சமுதாயத்தின் கோரிக்கையை ஏறிட்டுப் பார்க்கும்; என்னவென்று கேட்கும். இதைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகமே ஸ்தம்பிக்கின்ற வகையில் ஜனவரி 28, 2014 அன்று சென்னை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய நான்கு மண்டலங்களில் தமிழகம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

இதன் விளைவாக அதிமுக அரசு, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து அறிக்கை அளிக்குமாறு மாநில பிற்பட்டோர் நல வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது. அரசியல் சட்டப்படி, இதுதான் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற்கான வழிமுறையாகும். இந்த அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வருகின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தனது ஆதரவை அளிக்கின்றது.

இதுவரை இஸ்லாமிய சமுதாயம் தனது வாக்குரிமையை உணராமல் இருந்தது. விழலுக்கு இறைத்த நீராக ஆக்கிக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு உதவாக்கரை எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உருவாக்குவதற்காக சமுதாயத்தின் வாக்குகள் பாழாகிக் கொண்டிருந்தன; பயனற்றுப் போயின.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக இப்போது இடஒதுக்கீடு என்ற சமுதாய நலனை மையமாகக் கொண்டு, வாழ்வுரிமையை ஆதாரமாகக் கொண்டு அதன் வாக்குரிமை சுழல்கின்றது.

இரு திராவிடக் கட்சிகளுமே இடஒதுக்கீடு எனும் முஸ்லிம்களின் வாழ்வுரிமையை தேர்தல் களத்தில் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றன. சட்டமன்றம், நாடாளுமன்றம் சென்று சாதிக்காமல் சந்தியில் நின்று தவ்ஹீத் ஜமாஅத் சாதித்திருக்கின்றது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! இனி இந்த இடஒதுக்கீடு எனும் வாழ்வுரிமை கிடைக்க ஒட்டுமொத்த சமுதாயமும் ஓரணியில் நின்று அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

இன்றைய அரசியல்வாதிகளின் ஒன்றிரண்டு எம்.பி. சீட்டுக்களைப் பார்க்காமல் நாளைய நமது தலைமுறையின் மருத்துவ, பொறியியல், தொழிற்கல்வியின் சீட்டுக்களையும் அரசு வேலைவாய்ப்புகளையும் கவனத்தில் கொண்டு, சமுதாய நலனை முன்னிறுத்தி அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். நமது வாழ்வுரிமைக்காக வாக்களிக்க வேண்டும்.

இப்போது சட்டமன்றத்தில் இருக்கின்ற இரண்டு மமக உறுப்பினர்கள் சமுதாயத்திற்காக எதையும் கிழித்துவிடவில்லை. தாங்கள் சார்ந்திருந்த கூட்டணிக் கட்சியைப் புகழ்வதிலும், எதிர்க்கட்சியை விமர்சிப்பதிலும் தான் தங்கள் பதவிக்காலத்தைக் கழிக்கிறார்களே தவிர இடஒதுக்கீட்டிற்காக எதையும் சாதிக்கவில்லை. சமுதாயத்தின் பெயரைச் சொல்லி, தமது ஆதாயத்தை மட்டும் பார்க்கும் இவர்களுக்கு வாக்களிப்பது சமுதாயம் தன்னையே நாசத்தில் தள்ளுவதற்குச் சமமாகும்.

மமகவின் நிலை இதுவென்றால், தேர்தல் சமயத்தில் மட்டும் முஸ்லிம் கட்சி என்ற வேஷம் போடும் எஸ்டிபிஐ கட்சி, பாரதீய ஜனதா வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றது. தமிழகத்தில் வடசென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி தொகுதிகளில் போட்டியிடுவதாகக் கூறும் எஸ்டிபிஐ, இனவெறியைப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்; கோயில் - தர்கா திருவிழாக்களுக்கும், பொங்கல் தீபாவளி பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்லி டிஜிடல் பேனர் வைப்பார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் முஸ்லிம் கட்சி அல்ல, எல்லா சமுதாயத்திற்கும் பொதுவான கட்சி என்பார்கள். ஆனால் தேர்தல் போட்டி என்று வந்தால் முஸ்லிம் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள். இவர்களின் சந்தர்ப்பவாதத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிடம் பேரம் பேசி, இவர்களுக்கு சீட் கிடைக்காததால் இப்போது சமுதாய வேஷம் தரித்துக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கென்று எந்தக் கொள்கையும் கிடையாது. இவர்களை ஆதரிப்பதால் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து, அது நரேந்திர மோடியின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உதாரணமாக ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக, திமுக இரண்டு பெரிய கட்சிகளுமே முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியுள்ளன. எனவே இந்தத் தொகுதியிலிருந்து ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. வெற்றி வாய்ப்பு இல்லாத பாரதீய ஜனதா கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தி, முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

அதிமுக, திமுகவிலுள்ள முஸ்லிம் வாக்குகள் கணிசமாகப் பிரிந்தால் அது அங்கு போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளருக்கு சாதகமாகவே அமையும். இது தெரிந்து, வேண்டுமென்றே பாரதீய ஜனதாவை வெற்றிபெற வைக்கும் நோக்கில் இவர்கள் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

மேலும் இவர்கள் அதிகப்பட்சமாக பத்தாயிரம் வாக்குகள் வாங்கினாலும் அதனால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. இதை வைத்து அடுத்த தேர்தல்களில் இவர்கள் திமுக, அதிமுகவுடன் பேரம் பேசுவதற்கு வேண்டுமானால் இந்த வாக்குகள் பயன்படும். சமுதாயத்திற்கு இதனால் கேடு தான் விளையும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பத்தாயிரம் வாக்குகள் பெற்ற மமக இதைத் தான் செய்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவே இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு வாக்களிப்பது பாரதீய ஜனதாவுக்கு நேரடியாக வாக்களிப்பதற்குச் சமம். நம்முடைய கைகளாலேயே நாசத்தைத் தேடிக் கொள்ளும் மோசமான செயல் இது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 2:195

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:29

இஸ்லாம் என்றாலே சமுதாயத்திற்கு நன்மையை நாடுவது தான்.

நபி (ஸல்) அவர்கள், "மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவது தான்'' என்று கூறினார்கள். நாங்கள், "யாருக்கு (நலம் நாடுவது)?'' என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத் தாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 57

நம்முடைய வாழ்வுரிமைக்கு வாக்களித்து, நம்முடைய சமுதாய நலனைக் காப்போம்; நாசத்தைத் தவிர்ப்போம்.
 நன்றி ஏகத்துவம்

Saturday, April 05, 2014

திமுகவே அல்லது அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று எந்த உத்திரவாதமும் தர முடியாது - பீஜே

திமுகவே அல்லது அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று எந்த உத்திரவாதமும் தர முடியாது - பீஜே

[திமுகவே அல்லது அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் என்ற எந்த வித  உத்திரவாதத்தையும் தர முடியாது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பம் முதல் சொல்லி வருகிறது. தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சகோதரர் பிஜே அவர்கள் உணர்வு வார இதழில் கேள்விகள் பகுதியில் ஜெயலலிதா மற்றும் கலைஞர் பாஜகாவுடன் சேர முகந்திரம் இருப்பதை விளக்கி பதில் அளித்து இருந்தார். இதை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொய்யை பரப்புவதையே தொழிலாக கொண்ட ஒரு இணையதளம், ஜெயலலிதா பாஜகாவுடன் கூட்டணி வைப்பார் என்று பீஜே சொல்லிவிட்டார் என்று திரித்து செய்தி வெளியிட்டுயிருந்தார்கள். முழமையான பதிலை வெளியிடாமல், பாதி பதிலை வெட்டி வெளியிட்டுயிருந்தார்கள். பின்னர் சிலர் கேள்வி எழுப்பியவுடன் முழமையான செய்தியை வெளியிட்டுயிருந்தார்கள். செய்தியை திரித்து வெளியிட்டும் இவர்களுக்கு எந்த பலனும் கிட்டவில்லை. உணர்வில் வந்த கேள்வியையும் பதிலையும் முழுமையாக இங்கு வெளியிடுகிறோம்.]

நரேந்திர மோடியைப் பிரதமராக்க நான் துணை போகமாட்டேன் என்று ஜெயலலிதா இன்றுவரை கூறவில்லையே?

நரேந்திர மோடியைப் பிரதமராக்க நான் துணை போகமாட்டேன் என்று ஜெயலலிதா இன்றுவரை கூறவில்லை. கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதுபற்றி ஜெயலலிதா தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று மேடை தோறும் கேள்வி எழுப்பியும் வாய் திறக்காமல் இருக்கிறாரே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

காங்கிரஸ் தனது மதவாதப் போக்கில் இருந்து திருந்திக் கொண்டால் காங்கிரஸை மன்னிக்கத் தயார் என்று கருணாநிதி கூறுவதன் பொருள் என்ன?

ஜெயலலிதாவும், கருணாநிதியும் தேர்தலுக்குப் பின் தமக்கு ஆதாயம் தரும் முடிவைத்தான் எடுப்பார்கள். மத்திய ஆட்சியில் தமக்கும் பங்கு இருந்தால்தான் தமிழகத்துக்கு நன்மை செய்ய முடியும் என்ற பதிலை ரெடிமேடாக வைத்துள்ளனர்.

இருவரையும் இந்த விஷயத்தில் நாம் பிரித்துப் பார்க்க முடியாது.

கருணாநிதியை எடுத்துக் கொண்டால் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர முயற்சித்து, பா.ஜ.க சேர்த்துக் கொள்ளாததால், கூட்டணி வைக்காமல் போனவர்.

புதிய தலைமுறை தொலைக் காட்சியில் பா.ஜ.கவைச் சேர்ந்த பெண் தலைவி ஒருவர், திமுக சார்பில் கலந்து கொண்ட தலைவரை நோக்கி “எங்களை மதவாத சக்தி என்று சொல்லும் நீங்கள், எங்களுடன் கூட்டணிக்கு கெஞ்சினீர்கள், நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம் என்று சொன்னார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த திமுக தலைவர, இதை மறுக்கவில்லை. உலகமே பார்த்துக்கொண்டு இருந்த இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்ட குற்றச்சாட்டை திமுக தலைமை இன்று வரை மறுக்கவில்லை.

தேர்தலுக்குப் பின்னால் பார்த்துக் கொள்வோம் என்ற அடிப்படையில்தான் அவர்களுக் கிடையே முடிவாகியுள்ளது என்பது, உன்னிப்பாக கவனிக்கும் அனை வருக்கும் தெரிகின்றது.

இதனால்தான் திருச்சிக்கு மோடியின் முதல் வருகையை எதிர்த்து சில முஸ்லிம் அமைப்புகளும், தமிழர் அமைப்புகளும் போராட்டம் நடத்தியபோது இதைக் கருணாநிதி கண்டித்தார்.

ஏற்காடு இடைத்தேர்தலில் பா.ஜ.க ஆதரவைக் கேட்டு கடிதம் எழுதினார்.

தினமலருக்கு அளித்த பிரத்தியோகப் பேட்டியில் ”மோடி எனது நண்பர்” என்றார்.

தேர்தலுக்குப் பின்னால் பா.ஜ.க.வை ஆதரிக்கலாமா என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம் என்றும் கூறினார்.

இதனால் முஸ்லிம் வாக்குகள் முழுமையாக திசை மாறுவதை உணர்ந்து, மோடியும் ராகுலும் அல்லாத ஒருவர் பிரதமராக, ஆதரவு தெரிவிப்போம் என்று பல்டி அடித்தார்.

ராகுல் பிரதமராக ஆதரவு இல்லை என்ற சொல்லில் இருந்தும் பல்டி அடித்து காங்கிரஸை மன்னிக்கத் தயார் என்று மாற்றினார்.

காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிட்டால் காங்கிரஸை ஆதரிப்போம் எனக் கூறி, பா.ஜ.க போலவே காங்கிரசும் மதவாதக் கட்சி என்று இப்போது கூறுகிறார். இதுதான் இவரது கடைசி நிலையாக உள்ளது. (இதன் பிறகு அடிக்கும் பல்டிகள் எத்தனை என்று இனிமேல் தெரிய வரும்)

மதவாதக் கட்சியாக காங்கிரஸ், இருந்தது இல்லை. மதவாதத்தைக் கைவிடுவதாக காங்கிரஸ் அறிவிக்கத் தேவையில்லை. கைவிடுவதாக அறிவித்தால் இதற்கு முன் மதவாதத்தில் அக்கட்சி இருந்ததாக ஆகிவிடும். காங்கிரஸ் எதை அறிவிக்காதோ அதை அறிவிக்குமாறு கருணாநிதி கேட்கிறார்.

காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிடுவதாக அறிவிக்கவில்லை. எனவே பாஜக காங்கிரஸ் இரண்டுமே மதவாதக் கட்சிகள்தான். இரண்டில் ஒன்றைத்தான் ஆதரிக்க முடியும் என்பதால் பாஜகவை ஆதரிக்கிறேன் என்று தேர்தலுக்குப் பின்னால் சொல்வதற்காகவே காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிடுவதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பத்தினிப் பெண்ணிடம் போய் இனிமேல் விபச்சாரம் செய்ய மாட்டேன் என்று, அறிவித்தால்தான் உன்னை நம்புவேன் என்று சொல்வதுபோல அவரது கடைசி வாக்குமூலம் உள்ளது.

முஸ்லிம்களை ஏமாற்றுவதற்குரிய டயலாக்குகளும் அவரிடம் உள்ளது. அவரை ஆதரிக்கும் முஸ்லிம் இயக்கத்தினர் அதை எடுத்துக்காட்டி பிரச்சாரம் செய்கிறார்கள். இந்துத்துவா சக்திகளை ஏமாற்றும் டயலாக்குகளும் அவரிடம் உள்ளன. அவரை நம்பும் பா.ஜ.க.வினர் அதை மேற்கோளாகக் காட்டி தேர்தலுக்குப்பின் திமுகவின் ஆதரவைத்தான் கோருவோமே தவிர, அதிமுகவின் ஆதரவைக் கோரமாட்டோம் என்று கூறுவது இதனால்தான்.

காங்கிரஸ் குறித்தும், மோடி குறித்தும் இந்த இரண்டு மாதத்தில் ஆயிரம் பல்டி அடித்தவருக்கு தேர்தல் முடிந்தபின் இன்னொரு பல்டி அடிப்பது எளிதானதுதான்.

தேர்தலுக்குப் பின் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க, நான் ஒரு போதும் துணை நிற்கமாட்டேன் என்று கருணாநிதி, தெளிவாகக் கூறவேண்டும் என்று ப.சிதம்பரம் கூறுகிறார்.

அப்படி தெளிவாகக் கூறினாலும் கருணாநிதி அதை அப்பட்டமாக மீறுவதற்கு வெட்கப்பட மாட்டார். இது கருணாநிதியின் நிலை.

ஜெயலலிதா தன்னைப் பிரதமர் என்று நேரடியாக சொல்லாவிட்டாலும் அப்படித்தான் ஆரம்பத்தில் காட்டிவந்தார்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் மூன்றாவது அணியில் அங்கம் வகித்தார். கம்யூனிஸ்டுகள் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ராஜ்ய சபா சீட்டு வழங்கினார்.

மம்தா, சந்திரபாபு நாயுடு போன்றவர்களின் ஆதரவையும் திரட்டினார்.

இப்படி அவர் காட்டிக் கொண்டாலும், பாஜக ஆட்சி அமைக்க தனது எம்பி.க்கள் பலம் உதவுமானால் நிச்சயம் அவர் பாஜகவை ஆதரிக்கத் தவற மாட்டார்.

நான் ஒரு போதும் மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்று அவர் கூறவேண்டும் என்று ப.சிதம்பரம் கேட்கிறார்.

நான், ஒரு போதும் மோடியை ஆதரிக்க மாட்டேன் என்று ஜெயலலிதா சத்தியம் செய்து கூறினாலும் நம்மைப் பொறுத்தவரை அதை நம்ப மாட்டோம்.

1999ல் நாம் நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில், அவர் இதுபோல் கூறினார். நான்தான் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினேன். நானே அதைக் கவிழ்த்துவிட்டேன். இனி ஒரு போதும் பா.ஜ.கவை ஆதரிக்கமாட்டேன் எனக்கூறிவிட்டு பின்னர் பா.ஜ.கவுடன் சேர்ந்தார்.

”எனவே ஜெயலலிதாவாக இருந்தாலும், கருணாநிதியாக இருந்தாலும் நாங்கள் பாஜகவை ஆதரிக்கவே மாட்டோம் என்று தெளிவான வார்த்தைகளால் சத்தியம் செய்து சொன்னாலும் அறிவுடைய மக்கள் அதை நம்பமாட்டார்கள்.”

ஆனால் கருணாநிதி, இரு முகம் காட்டி இருவகையாக பேசுவதால், இவர் பாஜகவை ஆதரிக்கமாட்டார் என்று அப்பாவிகள் நம்புவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஜெயலலிதா பாஜக பற்றி வாய் திறக்காததால் அவர் பாஜக பக்கம்தான் போவார் என்று அப்பாவிகள் நம்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

”ஜெயலலிதா கருணாநிதி இருவர் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல், இருவரது கடந்த கால செயல்பாடுகளைச் சீர்தூக்கி பார்க்கும் மக்கள் தான் இதைப்புரிந்து கொள்வார்கள்.”

கருணாநிதி, பாஜகவை ஆதரிக்க மாட்டேன் என்பதுபோல பேசுகிறார். ஆனால் ஜெயலலிதா வாய் திறக்கமாட்டேன் என்கிறார் என்பதை மட்டும் பார்க்கும் அப்பாவி முஸ்லிம்களின் ஆதரவை ஜெயலலிதா, இழப்பார். ஜெயலலிதா, பாஜகவை ஆதரிப்பார் என்ற பிரச்சாரம் ஓரளவு எடுபடக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன.

ஆனால் “கருணாநிதி பாஜக பக்கம் போகமாட்டார் என்று நம்பும் இவர்கள் பின் ஏமாறுவார்கள். இருவருமே பாஜகவின் இரகசிய நண்பர்கள் என்று நம்புவதால் நமக்கு எந்த ஏமாற்றமும் ஏற்படாது.
எனவே ஜெயலலிதாவின் மவுனம் முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கு இருந்த ஆதரவைக் குறைக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை நாம் உறுதிபடக் கூறிக்கொள்கிறோம்.”

ஆட்சி அமைக்க 272 எம்பிக்கள் ஆதரவு தேவை என்பதை நாம் அறிவோம்.
பாஜக.வுக்கு அந்த அளவு பெரும்பான்மை கிடைக்கும் என்று பாஜகவிடம் விலை போன ஊடகங்கள் கூட, கருத்துக் கணிப்பில் கூற முடியவில்லை.
கடைசியாக பாஜக ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கும், பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கட்சிகளுக்கும் சேர்த்து 233 இடங்கள் கிடைக்கும் என்கிறார்கள். எனவே, இன்னும் நாற்பது எம்பி.க்களின் ஆதரவு தேவைப்படும். இதற்காக பல்வேறு மாநிலக் கட்சிகளிடம் பாஜக பேரம் பேசும்.
அதிமுக 20, திமுக 20 என்ற அளவில் வெற்றி பெற்றால் இரு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவைத்தான் பெறமுடியும். இரு கட்சிகளுமே பாஜகவுக்கு ஆதரவு அளிக்க போட்டி போடுவார்கள். ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடி என்று ஊழல் செய்ய உதவும் பதவிகளை அடைய இருவரும் துடிப்பார்கள்.
ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து சம்பாதித்ததை(?) விட பல மடங்கு ஒரே ஒரு மத்திய அமைச்சர் பதவியின் மூலம் சம்பாதிக்க முடியும். இதை இருவருமே எளிதாக விட்டுவிட மாட்டார்கள்.
இருவருமே பாஜகவை ஆதரிக்க போட்டி போடும்போது, 13 மாதங்களில் ஆதரவை வாபஸ் பெற்று வாஜ்பேய் ஆட்சியைக் கவிழ்த்த ஜெயலலிதாவை விட, கருணாநிதியைத்தான் பாஜக தேர்வு செய்யும். குஜராத் கலவரம் போன்ற இன அழிப்பு நடந்தாலும், கருணாநிதி நம்மை உறுதியாக ஆதரிப்பார் என்றுதான் பாஜக நினைக்கும்.

நாற்பது இடங்களையும் ஜெய லலிதா கைப்பற்றினார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மானம் கெட்ட பாஜக அதிமுகவின் ஆதரவை நாடும். அதிமுகவும் ஆதரிக்கும்.

நாற்பது இடங்களையும் திமுக வென்றாலும் இதுதான் நடக்கும்.
ஆட்சியில் பங்கேற்று பதவிகளைப் பெற்று தம்மை வளப்படுத்திக் கொள்வதற்குத்தான் அரசியல் நடத்துகிறார்களே தவிர, சேவை செய்வதற்கு அல்ல.
பாஜகவுக்கு கிடைக்கும் என்று கணிக்கப்பட்ட 233 இடங்கள், காங்கிரசுக்குக் கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும் இதே நிலைதான் ஏற்படும்.
திமுக 20, அதிமுக 20 என்று வெற்றி பெற்றாலும் இருவரும் காங்கிரசை ஆதரிக்க நான், நீ என்று போட்டி போடுவார்கள். 3ஜி ஊழல் பிரச்சினை வந்தபோது, திமுகவை கழற்றிவிட்டால் காங்கிரசை ஆதரிக்க நான் தயார் என்று ஜெயலலிதா பகிரங்கமாக அறிவித்ததை நாம் மறந்து விட முடியாது.
ஆனால் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு காங்கிரஸை ஆதரிக்க முன்வந்தாலும் காங்கிரஸ், திமுக ஆதரவைத்தான் ஏற்றுக்கொள்ளும். ஜெயலலிதா, சோனியாவை அவமானப்படுத்தியதை காங்கிரஸ் மறக்காது.
எல்லா தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றினால், தனது ஆதரவினால் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றால் இரண்டு கட்சிகளுமே மானத்தை இழந்து கூட்டு சேருவார்கள்.
காங்கிரசுடன் பாஜக கூட்டுசேராது, அதிமுகவுடன் திமுக கூட்டுசேராது என்பது மட்டுமே இன்றைய நிலையில் உறுதியானது.
மற்ற யாருடனும், யாரும் கூட்டு சேருவார்கள். அரசியல் என்பது பதவி பெற்று சம்பாதிப்பதற்குத்தான். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முடிவாகச் சொல்வது என்றால் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே பாஜகவுடன் சேர்வதால் லாபம் கிடைக்கும் என்றால் சேர்வார்கள். ஆனால் ஜெயலலிதா, பாஜக பற்றி வாய் திறக்காமல் இருப்பது, நுணுக்கமான விஷயத்தைப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்களின் ஆதரவை இழக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
இடஒதுக்கீட்டுக்காக ஆதரிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் முஸ்லிம்களின் ஆதரவில் சிறிய அளவிலாவது இந்த மவுனம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஜெயலலிதா உணர்வது, அவருக்கு நல்லது.

Monday, March 31, 2014

அனைவரும் சேர்ந்து போராடலாமே? போட்டி போட்டுக் கொண்டு ஏன் அருகில் பள்ளிவாசல் கட்டி ஜும்ஆ நடத்த வேண்டும்?

அனைவரும் சேர்ந்து போராடலாமே? போட்டி போட்டுக் கொண்டு ஏன் அருகில் பள்ளிவாசல் கட்டி ஜும்ஆ நடத்த வேண்டும்?


Sunday, March 30, 2014

TNTJ அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு ஏன்?

TNTJ அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு ஏன்?


Wednesday, March 19, 2014

அதிமுகவின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் தவ்ஹீத் பள்ளிக்கு வருகை - விமர்சன விளக்கம்

அதிமுகவின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் தவ்ஹீத் பள்ளிக்கு வருகை - விமர்சன விளக்கம்

அதிமுகவின் தஞ்சை தொகுதி வேட்பாளர் பரசுராமன் அவர்கள் நமது மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிக்கு கடந்த 12 ஆம் தேதி வருகை தந்தார். இது குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவற்றிற்கு விளக்கம் தருவது எங்களின் கடமை என்ற அடிப்படையில் அது பற்றி எழுந்த விமர்சனங்களுக்கு இங்கே பதில் தருகிறோம்.

இது பற்றி வந்த முதாவது விமர்சனம், மாற்று மதத்தினர் பள்ளிவாசலுக்கு வரலாமா என்பதாகும். மாற்று மதத்தினர் பள்ளிக்கு வரலாம், அவ்வாறு நபி (ஸல்) காலத்தில் வந்துள்ளார்கள். மாற்று மதத்தினர் பள்ளியில் இருந்து குர்ஆன் ஒதப்படுவதை செவியேற்றுள்ளார்கள். மாற்று மதத்தினர் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாதவர்கள் இமாம் நின்று தொழ வைக்கும் இடத்திற்கு வரலாமா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மாற்றுமதத்தினரும் இவ்வாறு தானே தூய்மையற்றவர்களாக இருந்து இருப்பார்கள். மாற்று மதத்தினர் பள்ளிக்கு வரலாம் என்ற அனுமதி ஹதீஸ்களில் உள்ளது, பள்ளியில் இந்த இடத்திற்கு வரலாம் இந்த இடத்திற்கு வரக்கூடாது என்ற எந்த தடையும் இல்லாத போது இமாம் இருக்கும் இடத்திற்கு வருவது சரியா? என்று கேள்வி எழுப்புவது அர்த்தமற்றது. இது பற்றி முழுமையாக இங்கே விளக்கப்பட்டுள்ளது.

அடுத்து, தவ்ஹீத் பள்ளிக்கு வருகை தந்த அதிமுகவின் வேட்பாளர் தவ்ஹீத் பள்ளியில் வைத்து, 'இதயதெய்வம்' என்று பேட்டி கொடுத்தார் என்ற ஒரு தவறான தகவலை சிலர் என்ன நடந்தது என்று தெரியாமல் பரப்பியுள்ளார்கள். தவ்ஹீத் பள்ளிக்கு ஆதரவு கேட்டு வந்த அதிமுகவின் வேட்பாளருக்கு, கூளை கும்பிடு போடாமல், அவருக்கு என்று தனி மரியாதை செய்யாமல், தரையில் அமர வைத்து, அந்த வேட்பாளருக்கு 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற புத்தக்தையும் வழங்கி அழைப்புப்பணி செய்யப்பட்டது. தவ்ஹீத் பள்ளியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, அதிமுகவின் வேட்பாளர் 'இதயதெய்வம்' போன்ற எந்த ஒரு வார்த்தையும் பயன்படுத்தவில்லை. ஒரு வேளை அது போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருந்தாலும், அது அவரின் கொள்கை, அவ்வாறு பேசுவது தவறு என்று சூட்டிக்காட்டியிருப்போம். தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளுடன் பேசிவிட்டு, பள்ளியை விட்டு வெளியே வந்த அதிமுக வேட்பாளரிடம், அதிரை நியூஸ் இணையதளத்தை சார்ந்தவர்கள் பேட்டி எடுக்கும் போது தான், 'தமிழகத்தின் காவல் தெய்வம்' என்று அதிமுக வேட்பாளர் குறிப்பிட்டார். சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வரும் போது எடுக்கப்பட்ட பேட்டி வீடியோவில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சில நிர்வாகிகளும் தென்படுகிறார்கள். இது தான் நடந்த சம்பவம். இவ்வாறு தான் நடந்தது என்பதை அதிரை நியூஸ் இணையதளமும் சம்பந்தப்பட்ட ஆக்கத்தில் தெரிவித்துள்ளது.

கண்டதையும் தெய்வம் என்ற நினைக்கும் ஒருவர் எங்கும் அதை சொல்லுவார், தவ்ஹீத் ஜமாஅத்திடம் பேசும் போது இவ்வாறு சொன்னால் அதை நாம் கண்டிப்போம். அதிரையில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிஜே அவர்கள் பேசும் போது, அந்த மேடையில் ஸ்டாலினும் வாக்கு கேட்டு வந்தார், அந்த மேடையில் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்த வேண்டும் திமுகவினர் எவ்வளவோ கெஞ்சினர், தவ்ஹீத் ஜமாஅத் அதை அனுமதிக்கவில்லை. வெடி சத்தம் கூட எங்களுக்கு கேட்கக்கூடாது, வெடி கூட வெடிக்கக்கூடாது என்று கட்டளை போட்டது தவ்ஹீத் ஜமாஅத். இதை திமுகவினர் ஏற்றுக்கொண்டனர்.

அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறோம் என்று கிளம்பிய தவ்ஹீத் (?) பேசிய தமுமுகவினரே, 'வாக்கள பெருமக்களே  வணக்கம்' என்று நோட்டிஸ் அடிக்கும் போது, கண்டதும் தெய்வம் என்று நம்பும் அந்த வேட்பாளரிடம் எதை எதிர்பார்க்க முடியும். தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜூம்ஆ மேடையில் வந்து அதிமுக வேட்பாளர் உரையாற்றி, அதில் 'தமிழகத்தின் காவல் தெய்வம்' என்று சொன்னதை போன்று பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

தவ்ஹீத் பள்ளிக்கு வெளியே அதிரை நியூஸ் தளத்தினர் பேட்டி எடுக்கும் போது சொன்ன இந்த வார்த்தையை, தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் பேசும் போது அதிமுக வேட்பாளர் குறிப்பிட்டதை போன்று கதையை உருவாக்கி பரப்புகிறார்கள். இவ்வாறு சொல்லக்கூடியவர்கள் இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக அவதூறு சொல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றால், அதற்காக எதையும் செய்வேன் என்ற கொள்கையில் உள்ளவர்களின் அவதூறு தான் இது.


அவதூறு சுமத்துபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும். அதிமுகவை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கிறது என்றால், அதிமுகவினர் கோவிலுக்கு சென்றால் கூட விமர்சனம்  செய்ய ஆட்கள் நிறைய உண்டு. அடுத்தாக, தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரிக்கிறது, திமுகவை சார்ந்த பேரூராட்சித் தலைவருடன் நடுத்தெருவில் தனி அமர்வு என்றும் சந்தேகத்தை ஒருவர் கிழப்புகிறார். நட்பு முறையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியின் கடையில் அமர்ந்து  பேசிக்கொண்டு இருந்த பேரூராட்சித் தலைவரையும் தவ்ஹீத் ஜமாஅத்தை ஏதே கள்ள ஒப்பந்தம் போடுவதை போல அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் அவதூறு செய்கிறார்கள். நடுத்தெருவை சார்ந்த பேருராட்சி தலைவர், நடுத்தெருவில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்தவரின் கடையில் அமர்ந்து பேசுவது ஏதே புதிதாக நடக்கும் விஷயம் அல்ல. தனது மானம் போனாலும், தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அவதூறு பரப்புவோம் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு நல்ல புத்தி வர பிரத்திப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

நூல்: முஸ்லிம் 6


இந்த விமர்சனத்தை முதலில் எடுத்து வைத்தவரின் தவ்ஹீத் (?) கொள்கையே கொடி கட்டி பறக்கிறது. கவிஞரை புகழ்ந்து எழுதும் போது. இறையருட்கவிமணி (இறையருள் பெரும் கவிஞர்) என்று எழுதிய தவ்பா செய்த தவ்ஹீத்வாதி தன்னையும் சீர் தூக்கி பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் நாளை நடப்பதை எல்லாம் அறிய கூடியவர் என்று வரக்கூடிய மௌலூது வரிகளின் இணைவைப்பு உள்ளது என்று பிரச்சாரம் செய்தவர்கள், இன்று கவிஞருக்கு இறையருள் வருகிறது என்று எழுதும் அளவுக்கு வந்து விட்டோமே என்று எண்ணிப்பார்க்க வேண்டும். ஹஜ்க்கு சென்று வரக்கூடியரை 'ஹாஜி' என்றும், 'அல்ஹாஜ்' என்றும் எழுதுபவர்களை விமர்சனம் செய்தோமே! இன்று அதை நாமே செய்கிறோமே, அதுவும் அக்மார்க் தவ்ஹீத் நாங்கள் என்று சொல்லிக்கொண்டே இவ்வாறு செய்கிறோமே என்று சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். மௌலூது ஒதும் இமாம், இணைவைக்கும் இமாம் இவர்களை பின்பற்றி தொழ கூடாது என்று திருக்குர்ஆன் வசனத்தை எடுத்துக்காட்டி சொன்னாமே, இன்று நாம் இணைவைக்கும் இமாம் மற்றும் மௌலூது ஓதும் இமாம் இவர்களை பின்பற்றி தொழுகிறோமே! என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இதையெல்லாம் நாம் விமர்சனம் செய்வதற்காக சொல்லவில்லை. மாறாக, இது போன்ற வழிகேடுகளை விட்டு மீண்டு வாருங்கள் என்று காட்டவே இவ்வாறு சொல்லுகிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து கொண்டு தான் தவ்ஹீத்வாதியாக இருக்க வேண்டும் என்பதல்ல, தவ்ஹீத் ஜமாஅத்தை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், தவ்ஹீத் கொள்கையில் நீங்கள் உறுதியாக இருக்கலாம், உண்மையான கொள்கையை விட்டுவிடுவது மறுமையில் என்ன பலனை தரும்?? சிந்தித்து செயல்படுவது நல்லது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல். 


அல்குர்ஆன் 3:8

புகைப்பட உதவி: அதிரை நியூஸ்

சிவசேனாவிற்கு ஆதரவு கடிதம் எழுதிய அதிமுகவிற்கு ஆதரவா?

சிவசேனாவிற்கு ஆதரவு கடிதம் எழுதிய அதிமுகவிற்கு ஆதரவா?


Saturday, March 08, 2014

பிஜேவின் ஆசிரியர் யார்? ஆசிரியரை வைத்து தான் நேர்வழி தீர்மானிக்கபடுமா?


ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்கள் குர்ஆனுடன் முரண்பட்டால் அந்த ஹதீஸ்களை ஏற்கக்கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுகிறது. இதே கருத்தை நமக்கு முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் பலர் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள் (அந்த அறிஞர்களின் நிலைபாட்டை அறிய இங்கே சொடுக்கவும்). இதை போன்று முஸ்லிம்கள் வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதையும், ஸஹாபாக்கள் மற்றும் அதற்கு பின்னர் வந்த ஸலஃபுகள் போன்றவர்களை பின்பற்ற கூடாது என்பதையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்கிறது (ஸஹாபாக்களை ஏன் பின்பற்றக்கூடாது?

தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்கு பதில் சொல்ல முடியாத ஸலஃபி மத்ஹபினர், பிஜே படித்த இடம் சரியில்லை. எனவே, அவரின் கருத்தை ஏற்கக்கூடாது என்று எல்லோரையும் சிரிக்க வைக்கின்றனர். 

அல்லாஹ், தான் விரும்பியோருக்கு நேர்வழி காட்டுவான் என்பதையே இவர்கள் மறுக்க பார்க்கிறார்கள். எப்படிப்பட்ட வழிகேட்டில் இருப்பவரையும் அல்லாஹ் நாடினால் நேர்வழியில் செலுத்துவான் என்பதை பாமர முஸ்லிம் கூட அறிந்து வைத்துயிருப்பதை இவர்கள் மறுக்கிறார்கள். 

ஒருவர் அறிஞராக வருவதற்கு அவர் மதரஸாவில் படித்து இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. பிஜே தான் எப்படிப்பட்ட மதரஸாவில் பாடம் பயின்றேன் என்பதை பற்றி கூறிப்பிடும் போது, கப்ர் வணங்களிடமும், மத்ஹபுபை நியாயப்படுத்துபவர்களிடமும் தான் பாடம் பயின்றேன் என்கிறார். இதை பிடித்துக்கொண்டு, இந்த குழப்பி கூட்டம், பார்தீர்களா? பிஜே சரியான ஆட்களிடம் படிக்கவில்லை. எனவே, அவர் சொல்லுவதை ஏற்கக்கூடாது என்று உளறுகிறார்கள். தமிழ்நாட்டில் தவ்ஹீதை பிரச்சாரம் செய்பவர்கள் தவறான் மதரஸாக்களில் தான் பாடம் பயின்றனர். பிஜே சரியானவர்களிடம் பாடம் படிக்கவில்லை என்பவர்கள், மற்றவர்களை பற்றி வாய்திறக்கவில்லை. இதிலிருந்தே இவர்களின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

மதீனா பல்கலைகழகத்தை இந்த ஸலஃபி கூட்டம் அங்கீகரிக்கிறது. இந்த மதீனா பல்கலைகழகத்தில் படித்த சிலர் தர்ஹா வழிபாடு கூடும் என்று கூட கூறுகிறார்கள். ஜாக் என்ற அமைப்பை சார்ந்தவர்களை இவர்கள் வழிகேடர்கள் என்று கூறுகிறார்கள் (வெளிப்படையாக அல்ல, ரகசியமாக.காரணம் வெளிப்படையாக பிஜேவை மட்டும் எதிர்ப்பது ஸலஃபிகளின் வழிமுறை). ஜாக் அமைப்பில் பல மதனிகள் (அதாவது மதீனா பல்கலைகழகத்தில் படித்தவர்கள்) இருக்கிறார்கள். அதாவது, இவர்களின் கருத்துப்படி, நல்ல இடத்தில் படித்த வழிகேடர்கள். ஒருவர் நேர்வழி பெறுவதற்கு அவர் படிக்கும் இடம் ஒரு பொருட்டல்ல என்பதை இந்த குழப்பிகளே கூறுகிறார்கள். 

ஒருவர் படிப்பதை வைத்துதான் நேர்வழி பெறுகிறார் என்றால் மதீனாவில் படித்தவர்களில் பலர் ஸலஃபி கொள்கையை எதிர்ப்பது ஏன்? என்பதை இந்த குழப்பிகள் விளக்க வேண்டும்.

தவ்ஹீதை நிலைநாட்டிய அறிஞர்களான முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், இப்னு தைமிய்யா, அல்பானி போன்றவர்கள் ஹம்பலி மத்ஹபை அடிப்படையாக கொண்டவர்களிடம் தான் பாடம் பயின்றார்கள் என்பது அல்பானியின் போரப்பிள்ளைகளான இந்த ஸலஃபிகளுக்கு தெரியவில்லை. இவர்கள் தாங்களின் ஆய்வுகளினால் தான் இந்த சமுதாயத்திற்கு பல நல்ல விஷயங்களை தந்து சொன்றுள்ளார்கள் என்பது இந்த குழப்பிகளுக்கு புரிய வாய்ப்பில்லை.

இவர்களின் ஷேக் அவர்கள், அல்பானி அவர்களிடம் பாடம் பயின்றவர் என்று சொல்லி வந்தார். பின்னர் (சில விஷயங்களில் சிக்கி கொண்ட பின்) அல்பானியின் சபைகளில் அமைந்து பயன்பெற்றவர் (அதாவது, அல்பானியின் பயானை கேட்டவர்) என்று மாற்றிவிட்டார்கள். இப்படிப்பட்ட, இந்த சேக்கு சில்மி சில கவர்ச்சிகரமான ஃபத்வாகளை வழங்கினார். அதாவது, சுய இன்பம் ஹலால், இஸ்லாத்தில் இன்றும் அடிமை பெண்கள் உண்டு (அதாவது பெற்றோர்களின் அனுமதியுடன் எத்தனை பெண்களையும் அடிமையாக வைத்துக்கொள்ளலாம்) போன்ற ஃபத்வாகளை வழங்கினார். சுய இன்பம் செய்வது ஹராம் என்பதை சூரத்துல் முஃமினூன் அத்தியாத்தின் முதல் பதினோறு (1-11) வசனங்களை படிக்கும் எவரும் புரிந்துகொள்வார். ஆனால், இந்த அறிஞருக்கு (?) இது புரியவில்லை. பலர் கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன், ஒரு ஸஹாபி தான் இவ்வாறு ஃபத்வா கொடுத்துள்ளார் என்று திசை திருப்பினார். 

அதை போல, அடிமை பெண்கள் இன்றைக்கும் உண்டு என்றார். ஃபத்வா என்ற பெயரில் இவர் உளறுவது வழக்கம் என்பதால், இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. இவரின் உளறலுக்கு ஒருவர் வரிக்கு வரி பதில் கொடுத்து, சில்மியின் மூக்கை உடைத்தார். அவரின் கேள்விகளுக்கு, அல்மானியின் மாணவர் இன்னும் பதில் சொல்ல முடியவில்லை. 

இவரிடம் சரக்கு இல்லாத காரணத்தினால் தான், தன்னை பின்பற்றுபவர்களை வைத்து, சில்மிக்கு அந்த அறிஞர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார், இந்த அறிஞர் டிப்லோமா வழங்கியுள்ளார் என்று பாராட்ட வைத்துள்ளார். 

நபி (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்ற ஸஹாபாக்கள் கூட, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்றவர்கள் என்று கூறி பெருமை கொள்ளவில்லை. அல்பானியிடமும் இன்னும் சில அறிஞர்களிடமும் பாடம் படிப்பதை இவர் பெருமையாக நினைக்கிறார். 

ஷேக் ஷேக் என்று போற்றப்படும் சில்மிக்கு மார்க்க அறிவு மிகவும் குறைவு என்பது இலங்கையில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும். இதனால், இலங்கையில் உள்ள பல கத்துகுட்டிகள் இவரின் மார்க்க விரோத ஃபத்வாகளை பற்றி விவாதிக்க அழைத்தபோது, ஒடி ஒளிந்துவிட்டார். 

இவருக்கு தமிழ் படிக்க தெரியாது, சரிவர தமிழ் பேசவும் முடியாது. பிஜேவின் தமிழாக்கத்தை படிக்காமலே தவறு கண்டுபிடித்தவர்களில் இவரும் ஒருவர். இவரின் பெயரை முழுமையாக இங்கு எழுதினால், அரை பக்கத்திற்கு வரும். இவரின் மார்க்க முரணான விஷயங்கள் தேவைப்பட்டால் பின்னர் விளக்கப்படும்.

ஸலஃபிகளை பின்பற்ற வேண்டும் என்று ஆதாரங்களே இல்லாமல், வளைத்து நெளித்து ஆதாரம் சொல்லும் சகோதரர்கள், கீழ்காணும் இறை வசனத்தின் அடிப்படையில் வஹீயை மட்டும் பின்பற்ற முன்வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! 
அல்குர்ஆன்: 7:3

ஸஹாபாக்களை பின்பற்றுவது கடமை என்றவர்கள் நமது வாதங்களுக்கு பதில் தர முடியாமல் ஒட்டம் எடுத்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக! 

(அல்குர்ஆன் 17:81)

'உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடுதான்'. 

(அல்குர்ஆன் 21:18)

ஸலஃபிகளின் வாதங்களை முறிக்கும் இன்னும் சில ஆக்கங்கள் விரைவில், இன்ஷா அல்லாஹ்.

தொடர்புடையவைகள்: 


* ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா? கட்டுரை | வீடியோ



Monday, February 03, 2014

ஸஹாபாக்களை பீஜே விமர்சித்தாரா?

ஸஹாபாக்களை பீஜே விமர்சித்தாரா?


Wednesday, January 29, 2014

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் - பத்திரிக்கை செய்திகள் - தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் - பத்திரிக்கை செய்திகள் - தமிழ்,  ஆங்கிலம்,  இந்தி, மலையாளம், தெலுங்கு