Showing posts with label அல்லாஹ். Show all posts
Showing posts with label அல்லாஹ். Show all posts

Wednesday, January 11, 2012

அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் தரக்கூடாது, ஆனால் தரலாம் - உளறும் குழப்பி கூட்டம்


தன்னை மடையன் என்று கருதுபவனுக்கு ஒரு விஷயத்தை புரியவைத்துவிடலாம், ஆனால், தன்னை அறிவாளி என்று நினைக்கும் மடையர்களுக்கு என்ன தான் செய்தாலும், எந்த விஷயத்தையும் புரியவைக்க முடியாது. 

மார்க்க அறிவு இல்லாத மடையர்களாக இருந்து கொண்டு, தாங்களை அறியாளிகள் என்று கருதுபவர்களில் முதன்மையானவர்கள் யஹ்யா சில்மி என்ற படித்த ஜாகிலை பின்பற்றும் முரிதுகள். இந்த கூட்டத்தில் தமிழ் உலகத்திலேயே முதன்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முப்பது ஜாகில்கள் உள்ளனர். இவர்களில் சிலர் தான் இப்போது பிஜேவின் ஆய்வுகளை, ஆய்வு செய்கிறார்கள். 

இவர்கள் வைத்த வாதங்களுக்கு நாம் அடுக்கடுக்கான பதில்களை தந்துள்ளோம். அவைகளை படிக்காமல் (அல்லது படித்துவிட்டு, படிக்கதாது போல்) அது எங்கே இது எங்கே என்று முக்கியமான குற்றச்சாட்டுகளை பற்றி பேசாமல், உணவில் உப்பு கம்மி, காரம் அதிகம் என்பது போல சம்பந்தம் இல்லாத விஷயங்களை பேசி மழுப்பி வருகிறார்கள்.

ஒரு விஷயத்தை பற்றி விவாதிக்கும் போது, நமது வாதங்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு பதில் சொல்ல வேண்டும், நமது வாதங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் தர வேண்டும். இதைவிடுத்து, கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தராமல், சம்பந்தம் இல்லாத விஷயங்களை பேசுவது, நாம் தவறான கொள்கையில் உள்ளோம் என்பதற்கு சான்று. இதை தான் குருட்டு ஸலஃபிகள் செய்துகொண்டுள்ளார்கள்.

குருட்டு ஸலஃபிகள் வைத்த எல்லா வாதத்திற்கும் நாம் பதில் அளித்துள்ளோம், அவர்களின் வாதங்களில் நாம் கேள்வியும் கேட்டுள்ளோம். இவற்றுக்கு பதில் சொல்ல முடியாத குருட்டு ஸலஃபிகள், படித்த ஜாகில் யஹ்யா சில்மி உளறி தள்ளிய சம்பந்தம் இல்லாத செய்திகளை பதில் என்ற பெயரில் போட்டு பக்கத்தை நிரப்பி வருகிறார்கள்.

ஸஹாபாக்களை பின்பற்றுவது, குர்ஆனோடு முரண்படும் ஸஹீஹான ஹதீஸ்களை நிறுத்திவைப்பது போன்ற விஷயங்களுக்கு நமது மரணஅடி பதிலுக்கு பிறகு அவற்றை விட்டுவிட்டார்கள்.

இப்போது அவர்கள் பிடித்துக்கொண்டுள்ள விஷயம் என்னவேனில், அதாவது அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் கொடுக்க கூடாது. இதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம் அதே நேரத்தில், சில ஹதீஸ்கள் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரணாக இருப்பதை போன்று வரும் ஹதீஸ்களை வேறு வகையில் விளங்க வேண்டும். இதை ஸலஃபி அறிஞர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

புகாரியில் நாம் அல்லாஹ்வை நோக்கி நடந்தால் அவன் நம்மை நோக்கி ஓடிவருகிறான் என்று ஒரு ஹதீஸ் இடம்பெறுகிறது. இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் பண்பை குறிக்கிற ஹதீஸாகும்.

ஹதீஸ்:

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான் என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி (7405)

இந்த ஹதீசை குருட்டு ஸலபிகள் கூட்டம் உள்பட பெரும்பாலானவர்கள், அல்லாஹ் நம்மை நோக்கி ஒடி வருவான் என்றே அல்லது நடந்து வருகிறான் என்றே நம்பவில்லை. அல்லாஹ்வின் அருள் நம்மை நோக்கி வருகிறது என்று கூறுகிறார்கள். அல்லாஹ்வின் பண்பிற்கு விளக்கம் தரக்கூடாது என்றால் இதற்கு ஏன் அப்பா விளக்கம் கொடுக்கிறீர்கள்? அல்லாஹ் முதல் வானத்திலும் உள்ளான், அல்லாஹ்வின் அருளை தேடி ஓடுபவர்களை நோக்கி ஓடவும் செய்கிறான் என்று கூற வேண்டியது தானே?

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தர காரணம் என்னவென்றால், அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் கருத்திற்கு எதிராக இந்த ஹதீஸின் கருத்து இருக்கிறது. அதனால், இந்த ஹதீஸ்சை நாம் அல்லாஹ்வின் அருள் நம்மை நோக்கி வருகிறது என்று சமீபத்தில் வாழ்ந்த அறிஞர்கள் விளக்கம் தந்துள்ளனர். இந்த முட்டாள் ஸலஃபிகளுக்கு இந்த ஹதீஸும் தெரியவில்லை, இதற்கு அறிஞர்கள் கொடுத்த விளக்கமும் தெரியவில்லை.

அதைபோல், கீழ் உள்ள ஹதீசையும் நாம் விளங்க வேண்டும் என்று பிஜே கூறுகிறார்:

இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: புகாரி 1145, 6321, 7494

இந்த ஹதீஸின் நேரடி பொருளை எடுத்தால், உலகில் எந்த ஒரு விணாடியிலும், இரவின் முன்றாம் பகுதி இருந்துகொண்டே இருப்பதால், அல்லாஹ் முதல் வானத்திலேயே தான் இருக்கிறான் என்றாகிவிடும். இந்த விளக்கம் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற குர்ஆன் ஹதீஸின் கருத்துடன் போதும். இதனால், பிஜே அவர்கள் அல்லாஹ்வின் அருள் இரவின் முன்றாம் பகுதியில் இறங்குகிறது என்று விளங்க வேண்டும் என்கிறார். இந்த விளக்கத்தை எங்கள் முன்னோர்கள் சொல்லாமல் பிஜே எப்படி சொல்லாலாம் என்கிறது ஸலபி பக்தர்கள் கூட்டம். 

பூமி உருண்டை என்பதும், உலகின் எதாவது ஒரு பகுதியில் இரவின் முன்றாம் பகுதி இருந்துக்கொண்டே உள்ளது என்பதும் ஸஹாபாக்களுக்கும் அதற்கு பின்னர் வந்தவர்களுக்கும் தெரியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதனால், அவர்களுக்கு இந்த விளக்கம் முரணாக இருந்து இருக்காது.

முன்னோர்கள் மேல் கொண்ட பக்தியின் காரணத்தினால், ஸலஃபிகளின் விளக்கம் குர்ஆனுடன் மேதினாலும் பரவயில்லை என்று இந்த மடையர்கள் கூட்டம் குதிக்கிறது. 

குர்ஆன் ஹதீஸ் ஞானம் உள்ளவர்களுக்கு பிஜே அவர்களின் விளக்கம் எத்தகையது என்பது புரியும். முட்டாள்களாக இருப்பதால் தான், சில்மி என்ற மாங்கா மடையரிடம் மாட்டிக் கொண்டு தவிர்க்கிறார்கள், இந்த மார்க்க தெரியாத அதிரை குழப்பிகள்.

Tuesday, January 10, 2012

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்று கூறுவது சரியா? ஸலஃபி பக்தர்களின் அறியாமை!


கேள்வி: நீங்கள் உங்கள் மொழிபெயர்ப்பில் ''இஸ்தவா அலல் அர்ஷ்'' என்பதை ''அர்ஷின் மீது (அல்லாஹ் அமர்ந்தான்'' என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். 'இஸ்தவா' என்பதற்கு 'அமருதல்' என்ற அர்த்தம் கிடையாது. 'அமருதல்' என்பதற்கு அரபியில் 'ஜலசா' என்ற வார்த்தை தான் சரியானது என்று சிலர் கூறுகிறார்கள்.

பதில்:

அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்துள்ளான் என்று குர்ஆனில் ஏழு இடங்களில் கூறப்பட்டுள்ளது. இஸ்தவா என்ற அரபுச் சொல்லே இவ்விடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ (54)7

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (7 : 54)

إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ (3)10

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (10 : 3)

اللَّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُسَمًّى يُدَبِّرُ الْأَمْرَ يُفَصِّلُ الآيَاتِ لَعَلَّكُمْ بِلِقَاءِ رَبِّكُمْ تُوقِنُونَ(2)13

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆனூ; (13 : 2)

الرَّحْمَانُ عَلَى الْعَرْشِ اسْتَوَى(5)20

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (20 : 5)

الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ الرَّحْمَانُ فَاسْأَلْ بِهِ خَبِيرًا(59)25

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக!

அல்குர்ஆன் (25 : 59)

اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ مَا لَكُمْ مِنْ دُونِهِ مِن وَلِيٍّ وَلَا شَفِيعٍ أَفَلَا تَتَذَكَّرُونَ(4)32

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

அல்குர்ஆன் (32 : 4)

هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنْ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ(4)57

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (57 : 4)

மேற்கண்ட வசனங்கள் தான் நீங்கள் சுட்டிக்காட்டும் வசனங்களாகும். அமர்தல் என்பதற்கு ஜலஸ என்ற சொல் மட்டும் இல்லை. ஏராளமான சொற்கள் உள்ளன. அதில் இஸ்தவா என்பதும் ஒன்றாகும்.

இதே சொல் குர்ஆனில் வேறு இடங்களிலும் அமர்தல் என்ற அர்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

وَقِيلَ يَاأَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَاسَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ وَقِيلَ بُعْدًا لِلْقَوْمِ الظَّالِمِينَ(44)11

"பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!'' என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. "அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்'' எனவும் கூறப்பட்டது.

அல்குர்ஆன் (11 : 44)

இவ்வசனத்தில் அமர்ந்தது என மொழிபெயர்த்துள்ள இடத்தில் இஸ்தவா என்ற அரபுச் சொல்லே இடம்பெற்றுள்ளது. இங்கே அமர்தல் என்ற அர்த்தத்தைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் கொடுக்க இயலாது.

இதே போன்று பின்வரும் வசனத்திலும் அமர்தல் என்ற பொருளிலே இவ்வார்த்தை இடம் பெற்றுள்ளது. 

فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَنْ مَعَكَ عَلَى الْفُلْكِ فَقُلْ الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنْ الْقَوْمِ الظَّالِمِينَ(28)23

நீரும், உம்முடன் உள்ளோரும் கப்பலில் அமர்ந்ததும் "அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் (23 : 28)

எனவே இஸ்தவா என்பதற்கு அமர்தல் என்ற பொருள் இருப்பது இவ்வசனங்களின் மூலம் உறுதியாகிறது.

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஜலச என்ற அரபுச் சொல்லுக்கும் இஸ்தவா அரபுச் சொல்லுக்கும் அமர்தல் என்ற பொருள் இருந்தாலும் இவ்விரு சொல்லுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கின்றது.

ஜலச என்ற சொல் சாதாரணமாக தரையில் அமர்வதற்கும் அரபு மொழியில் பயன்படுத்தப்படும். ஆனால் இஸ்தவா என்ற சொல் சாதாரணமாக தரையில் அமர்வதற்கு பயன்படுத்தப்படாது. மாறாக உயரமான ஒரு பொருளின் மீது அமர்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

உதாரணமாக கப்பலின் மீது அமர்தல் மலையின் மீது அமர்தல் வாகனத்தின் மீது அமர்தல் மிம்பரின் மீது அமர்தல் ஆகிய அர்த்தங்களில் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இவ்வார்த்தை கூறப்பட்டுள்ளது.

வாகனத்தின் மீது அமர்தல் என்ற பொருளில் பின்வரும் வசனத்தில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

لِتَسْتَوُوا عَلَى ظُهُورِهِ ثُمَّ تَذْكُرُوا نِعْمَةَ رَبِّكُمْ إِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا سُبْحانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ(13)43

நீங்கள் அதன் முதுகுகளில் அமர்ந்து உங்கள் இறைவனின் அருட்கொடையை நினைப்பதற்காகவும், "எங்களுக்கு இவற்றை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதற்குச் சக்தி பெற்றோராக இல்லை. நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோர்'' என்று நீங்கள் கூற வேண்டுமென்பதற்காகவும் (அவற்றை வழங்கினான்).

அல்குர்ஆன் (43 : 13 14)

இந்த வசனத்திலும் அதே இஸ்தவா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2914حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ مَوْلَى أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ فَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ رواه البخاري

அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் மக்காவை நோக்கிச் செல்லும் சாலை ஒன்றில் இருந்த போது இஹ்ராம் அணிந்திருந்த தம் தோழர்களை விட்டுப் பின்தங்கி விட்டார்கள். நான் மட்டும் இஹ்ராம் அணிந்திருக்கவில்லை. அப் போது காட்டுக் கழுதை ஒன்றை நான் கண்டேன். குதிரை மீதேறி அமர்ந்து கொண்டேன்.

குதிரையின் மீதேறி அமர்தல் என்ற பொருளில் இங்கே இஸ்தவா என்ற சொல் கூறப்பட்டுள்ளது.

4278حَدَّثَنِي عَيَّاشُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ إِلَى حُنَيْنٍ وَالنَّاسُ مُخْتَلِفُونَ فَصَائِمٌ وَمُفْطِرٌ فَلَمَّا اسْتَوَى عَلَى رَاحِلَتِهِ دَعَا بِإِنَاءٍ مِنْ لَبَنٍ أَوْ مَاءٍ فَوَضَعَهُ عَلَى رَاحَتِهِ أَوْ عَلَى رَاحِلَتِهِ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள், தமது வாகனத்தில் நன்கு அமர்ந்து கொண்ட போது ஒரு பால் பாத்திரத்தை.... அல்லது தண்ணீர்ப் பாத்திரத்தை.... கொண்டு வரும்படிக் கூறி, அதைத் தம் உள்ளங்கையில் ....அல்லது தமது வாகனத்தில்.... வைத்தார்கள். பிறகு மக்களைப் பார்த்தார்கள். உடனே நோன்பை விட்டு விட்டவர்கள் நோன்பு நோற்றிருந்தவர்கüடம், "நீங்களும் நோன்பை விடுங்கள்'' என்று சொன்னார்கள்.

புகாரி (4277)

இந்தச் செய்தியிலும் நன்கு அமர்தல் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

1379أَخْبَرَنَا عَمْرُو بْنُ سَوَّادِ بْنِ الْأَسْوَدِ قَالَ أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ أَنَّ أَبَا الزُّبَيْرِ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ يَسْتَنِدُ إِلَى جِذْعِ نَخْلَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ فَلَمَّا صُنِعَ الْمِنْبَرُ وَاسْتَوَى عَلَيْهِ اضْطَرَبَتْ تِلْكَ السَّارِيَةُ كَحَنِينِ النَّاقَةِ حَتَّى سَمِعَهَا أَهْلُ الْمَسْجِدِ حَتَّى نَزَلَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاعْتَنَقَهَا فَسَكَتَتْ رواه النسائي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது பள்ளியின் ஒரு தூணாக இருந்த பேரீச்ச மரத்தின் மீது சாய்ந்து கொள்வார்கள். மிம்பர் செய்யப்பட்ட பிறகு நபி (ஸல்) அவர்கள் அதன் மீது அமர்ந்தார்கள்.

நஸாயீ (1379)

7269حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّهُ سَمِعَ عُمَرَ الْغَدَ حِينَ بَايَعَ الْمُسْلِمُونَ أَبَا بَكْرٍ وَاسْتَوَى عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشَهَّدَ قَبْلَ أَبِي بَكْرٍ فَقَالَ أَمَّا بَعْدُ فَاخْتَارَ اللَّهُ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي عِنْدَهُ عَلَى الَّذِي عِنْدَكُمْ وَهَذَا الْكِتَابُ الَّذِي هَدَى اللَّهُ بِهِ رَسُولَكُمْ فَخُذُوا بِهِ تَهْتَدُوا وَإِنَّمَا هَدَى اللَّهُ بِهِ رَسُولَهُ رواه البخاري

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த மறு நாள் முஸ்லிம்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (அவர்களை கலீஃபாவாக ஏற்று) விசுவாசப் பிராமணம் (பைஅத்) செய்து கொடுத்த போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள்.

புகாரி (7269)

மிம்பரின் மீது அமர்தல் என்ற பொருளில் இவ்விரு ஹதீஸ்களில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

லிசானுல் அரப் என்ற பிரபல அரபு அகராதி நூலில் இவ்வார்த்தைக்கு இப்பொருள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு பொருளின் மேற்பகுதியில் இருத்தல் என்று இதற்கு அர்த்தம் எனக் கூறப்பட்டுள்ளது.

لسان العرب - (14 / 408)

 وقال الأَخفش استَوى أَي علا تقول استَوَيْتُ فوق الدابة وعلى ظهر البيت أَي علَوْتُه واستَوى على ظهر دابته أَي استَقَرَّ

இஸ்தவா என்றால் மேல் இருத்தல் என்பது பொருள். வாகனத்தின் மேல் இருத்தல், வீட்டினுடைய முகட்டின் மீது இருத்தல் என்று கூறப்படும்.

லிசானுல் அரப் (பகாம் : 14 பக்கம் : 408)

எனவே இறைவன் அர்ஷ் மீது அமர்ந்து உயர்வாக இருக்கின்றான் என்று பொருள் கொள்வதே சரியானது.

இவ்வாறு அர்த்தம் செய்யக் கூடாது என்று கூறுபவர்கள் இவ்வார்த்தைக்கு வேறு விளக்கங்களைத் தருகின்றார்கள். அந்த விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணத்தின் படி பார்த்தாலும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன.

Sunday, January 08, 2012