Showing posts with label இனிய மார்க்கம். Show all posts
Showing posts with label இனிய மார்க்கம். Show all posts

Sunday, October 19, 2014

முத்துப்பேட்டையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்! - பிஜேபி மாநில செயலாளர் கருப்பு முருகானந்ததிற்கு அழைப்பு !

கருப்பு முருகானந்தம் இல்லம் உட்பட வீடு வீடாக சென்று மாற்று மத சகோதரர்களுக்கு அழைப்பு!

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பிறமத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கொய்யா மஹாலில் நாளை 19-10-2014 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதற்கான அழைப்புபணி இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது மங்களூர் செம்படவன்காடு ஜாம்புவானோடை. கல்லடிகொல்லை போன்ற முத்துப்பேட்டையை சுற்றியுள்ள. கிராமங்களில் வீடுவீடாக பத்திரிக்கை. கொடுத்து அழைப்பு கொடுக்கப்பட்டது

நாம் பத்திரிக்கை கொடுத்து இந்த நிகழ்ச்சியை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் சொல்லிவிட்டு அழைப்பு பணி செய்யும்போது

பிறமத மக்கள் நம்மிடம் காட்டிய மரியாதையும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட விதமும் நெகிழவைத்து விட்டது.

வீட்டுக்கு வந்த நீங்கள் சாப்பிட்டு விட்டுதான் போகனும் என்று கூறியதும் டீ யாவது குடியுங்கள் என வற்புறுத்தியது

மழை கடுமையாக பெய்கிரதே குடையாவது தரட்டுமா என் அக்கரையோடு விசாரித்தது நீங்கள் நேரடியாக வீடுதேடி வந்து அழைத்துள்ளீர்கள். அவசியம் வருகிறோம் என கூறியது போன்ற சம்பவங்கள் நமக்கு புதுமையாக இருந்தது

தாவாவை இன்னும் வீரியமாக செய்தால் மிக எளிதாக பிறமத மக்களை வென்றடுக்கலாம் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது

இதில் முக்கியமாக ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லை பகுதியில் வீடு வீடாக பத்திரிக்கை கொடுத்து அழைப்பு செய்தபோது

பிஜெபி பொதுசெயளாலர் கருப்பு என பட்டம் சூட்டிகொண்ட முருகானந்தம். வீட்டிற்கு சென்றோம்

அவரின் அரசாங்க பாதுகாவலர் துப்பாக்கியோடு நம்மை எதிர்கொண்டார் நாம் எதற்காக வந்துள்ளோம் என்பதை சொன்னதும் காத்திருக்க சொன்னார்

தகவல் போனதும் உடனே வெளிவந்த முருகானந்தம் நம்மை வரவேற்றார் நாம் நடத்தும் நிகழ்ச்சியை பற்றி விளக்கிசொல்லிவிட்டு இஸ்லாம் குறித்த சந்தேகங்களை கேள்வியாக கேளுங்கள் என அழைத்தோம்.

அவசியம் வருவதாக உறுதியளித்தார் தேனீர் அருந்திவிட்டு செல்லும்படி கூறினார் அதை இதமாக மறுத்துவிட்டு திரும்பினோம்.

இந்த இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் நிகழ்ச்சிக்கான அழைப்புபணி வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் என்று சொல்லலாம் இந்த நிகழ்ச்சி வெற்றிபெற நீங்களும் துவா செய்யுங்கள்.

தகவல்: முத்துபேட்டை அன்சாரி


Saturday, June 01, 2013

சிங்கள மொழியில் குவைத்தில் நடந்த “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்”

அரபு மண்ணில் ஓர் அறிவுப் புரட்சி - சிங்கள மொழியில் குவைத்தில் நடந்த “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்"



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ குவைத் மண்டலம் சார்பாக  கடந்த 31-5-2013 வெள்ளிக்கிழமை அன்று மத்திய கிழக்கு நாடுகளில் முதன் முறையாக உலக அளவில் இரண்டாவது முறையாக சிங்கள மொழியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
நிகழ்ச்சி குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் புத்த மத சகோதர சகோதரிகள் கேட்ட கேள்விகளுக்கு இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள SLTJ யின் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் தெளிவான முறையில் பதிலலித்தார்.

ஹலால் பிரச்சினை ஏன்?
முஸ்லிம்கள் ஏன் தாடி வைக்கிறார்கள்?
ஹிஜாப் பெண்ணடிமைத் தனமில்லையா?
கஃபத்துல்லாஹ் புத்த கோயில் தானே?
பொதுபல சேனாவின் நோக்கம் தான் என்ன?
மாற்று மதத்தவர்களை மக்காவில் நுழைய ஏன் அனுமதிப்பதில்லை?
நபிகளாரின் பலதார மனம்,
மற்றும் முஸ்லி ஆண்களுக்கு ஏன் நான்கு திருமண அனுமதி?

போன்ற இஸ்லாத்தைப் பற்றிய பல முக்கிய கேள்விகள் கேட்க்கப்பட்டது.

இது போன்ற நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்துங்கள் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கள சகோதரர்கள் கோரிக்கை வைத்தனர்.

நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட பதிலும், வந்தவர்களை முஸ்லிம்கள் உபசரித்த விதமும் எங்களுக்கு இஸ்லாமியர்கள் மீது நன் மதிப்பை உயர்த்தியுள்ளது என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சகோதரர் கூறியது மனதை நெகிழச் செய்தது.


நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் நிகழ்ச்சி முடிந்து சென்று கொண்டிருந்த ஒரு சிங்கள சகோதரர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத அவரது நண்பரை தொடர்பு கொண்டு “அற்புதமான ஒரு நிகழ்ச்சியை தவற விட்டு விட்டீர்கள்” என கடிந்து கொண்டது  நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து இரவு ஒன்பது மணிக்கு முடிந்த நிகழ்ச்சியில் வந்திருந்த அனைவருக்கும் மண்டலம் சார்பாக மாலை சிற்றுண்டியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரங்கத்தில் இலவசமாக நூறு பேறுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, பலதார மனம் ஏன்?, இஸ்லாத்தில் இல்லறம், யார் இந்த முஹம்மது (ஸல்) அவர்கள்? ஆகிய நூல்களும் “யார் இந்த பொதுபல சேனா?” என்ற DVD யும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.