Showing posts with label தர்மம். Show all posts
Showing posts with label தர்மம். Show all posts

Sunday, July 05, 2015

உங்களின் ஃபித்ராவை (நோன்புப் பெருநாள் தர்மம்) வாரி வழங்கிடுவீர்

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை ஒவ்வோரு வருடமும் ஃபித்ரா வசூல் செய்து ஃபித்ராவை பெற தகுதியானவர்களை வீடு தேடி சென்று வினியோகம் செய்து வருகிறது. பெருநாளில் உணவு சமைப்பதற்கான பொருள்கள் உள்பட இறைச்சி வாங்குவதற்கு பணமும் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த காலங்களில் சுமார் 600 எழை குடும்பங்கள் பயன்பெற்றன.

நமது ஊரில் வசதி படைத்தவர்கள் சரியான முறையில் ஃபித்ராவை வழங்கினால், நமது ஊரில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களும் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்.

எனவே, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் நமது அதிரை சகோதரர்கள் உங்களின் ஃபித்ராவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளைக்கு அனுப்பி தாருங்கள். உங்களின் ஃபித்ராவை அனுப்ப கீழ்காணும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்:

ஒரு நபருக்கு ஃபித்ரா தொகையாக ரூபாய் 100 (நூறு) நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.



தலைவர்
பீர் முஹம்மத் (+91-80153-79211)

செயலாளர்:
பக்கீர் முகைதீன்  (+91 95008 21430)

பொருளாளர்:
A.K. மீரா முகைதீன் (+91 99448 24510)

துணைத்தலைவர்
அப்துல் ஜப்பார் (+91-96295-33887)



குறிப்பு: உங்களின் பகுதிகளில் வசிக்கும் ஃபித்ராவை பெற தகுதியான வீடுகள் பற்றிய விபரங்களையும் மேலே உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தலாம். 

ஃபித்ராவின் சட்டங்களை அறிய இங்கே சொடுக்கவும்.


Friday, July 11, 2014

எப்படி ஜக்காத் கொடுக்க வேண்டும்?

எப்படி ஜக்காத் கொடுக்க வேண்டும்?


Saturday, July 05, 2014

ஃபித்ரா ஊருக்கா அல்லது தெருவுக்கா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர், மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தருமமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
நூல்: புகாரி 1503    
அதிரையில் இருக்கும் மக்களில் ஃபித்ரா தர்மம் வாங்க கூடிய சூழலில் உரியவர்கள் என்று கணக்கிட்டால், 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளனர்.  ஊரில் வாழும் ஏனைய 80 சதவிகித மக்களும், அவர்களுக்கே கொடுக்கும் நிலை உள்ளதால், வெளிநாட்டில் வாழும் அதிரை சகோதரர்கள் தங்களுக்கும், தங்கள் வருமானத்தில் சார்ந்து இருப்பவர்களுக்கும் உள்ள கடமையான ஃபித்ரா தொகையை கீழ்க்கண்ட சகோதரர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • அல் அய்ன் அபுதாபி ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. ஜஃபருல்லாஹ் @ +971507510584
  • துபாயில் ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. நஸீர் @ +971501545251சகோ. ஷாகுல் +971505063755
  • அமீரக வடக்கு மண்டலம் (ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குஅய்ன் & ஃபுஜைரா) ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. பிஸ்மில்லாஹ் கான் @ +971503576076
  • மற்ற நாடுகளில் உள்ளவர்கள், அருகிலிருக்கும் TNTJ கிழையின்மூலம் அனுப்பவும்.

ஏன் எங்களிடம்  கொடுக்கவேண்டும்?
·       வசூலிக்கப்படும் தொகை, நம்மூருக்கு தேவைப்படும் அளவிற்கு அனுப்பப்படுகிறது
·  நம்மூரில் உள்ள உரியவர்களுக்கு கொடுத்த பின், மீதம் இருக்கும் ஃபித்ரா தொகை, பிற ஊர்களில் இருக்கும் ஏழைகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
·        விநியோகிக்கப்பட்ட ஃபித்ரா தொகையின் விபரம் கொடுக்கப்படும்.

எங்களின் இந்த ஃபித்ரா (நோன்பு பெருநாள் தருமம்) நிதி திரட்டும் பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

- அமீரக அதிரை தவ்ஹித் ஜமாத்



Thursday, July 03, 2014

ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம்

ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம்


ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமா கும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர் மத்தை வழங்குவது அவசியம் ஆகும். ஒரு ஸாவு என்பது சுமார் இரண்ட ரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்

 இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமை யாக்கப்பட்டுள்ளது.

 நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாக வும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கி னார்கள்.

 அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

 நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்க ளின் சார்பில் வழங்கும்போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.





 ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுத்தல்

 ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

 ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்க ளில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யமன் பகுதிக்கு அனுப்பினார்கள்.

 (புகாரி 1395, 1496, 4347)



 அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதா?

 முஸ்லிம்களில் உள்ள செல்வந்தர்கள், முஸ்லிம்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளதா? இரண்டுக்கும் இடம் தரக் கூடிய வகையில் இது அமைந்துள்ளது.

இரண்டாவது கருத்தில்தான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்ப தைப் பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் கோத்திரத்தின ரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். இது உங்களுக்கு உரி யது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது” என்று அவர் கூறினார்... (புகாரி 6979)

 பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதி யைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸி லிருந்து அறியலாம்.

 எனவே ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம்.

 மேலும் ஏழைகளுக்கு உணவாக பயன்படுவதற்காகவே ஃபித்ரா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

 வசதிபடைத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திரட்டி ஏழைகள் அதிகம் வாழும் பகுதியில் விநியோகம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பொருள் வசதி படைத்த நாடுகளில் வசிப்போர் ஏழைகள் வசிக் கும் பகுதிக்கு அனுப்பினால்தான் ஃபித்ராவின் இரண்டு நன்மைகளையும் பெற முடியும்.

சென்ற வருடங்களில் நமது அதிரைக்கு  ஃபித்ரா வசூல் செய்த நமது ஊர் சகோதரர்கள் தெருவுக்கு தெரு அதாவது  மேலத் தெருவில் வசூல் செய்து மேலத் தெருவில் விநியோகம் செய்வது போன்று ஒவ்வொரு தெருவுக்கும் தனித்தனியாக வசூல் செய்தார்கள்

இது போன்று நமது ஊரின் ஒவ்வொரு தெருவின் சகோதரர்களும் ஃபித்ரா கொடுக்கும் சக்தி பெற்ற நிலையில் இல்லை என்பதே கண்கூடு

வசதி படைத்தவர் வசதி இல்லாதவர்களுக்கு ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்ற நிலைபாட்டின் படி ஏழைக்கு கொடுக்க வேண்டும் என்பதை மட்டும் நோக்கமாக கொண்டு ஜாஹிலியா காலத்தை போன்று தெரு பாகுபாடு ,ஊர் பாகுபாடு பாராமல் ஏழை என்ற ஒரே பார்வையில் சகோதரர்கள் தங்கள் ஃபித்ரா தொகையை வழங்குங்கள்

வளைகுடாவில் வாழும் அதிரை சகோதரர்கள் தங்களுக்கும், தங்கள் வருமானத்தில் சார்ந்து இருப்பவர்களுக்கும் உள்ள கடமையான ஃபித்ரா தொகையை கீழ்க்கண்ட சகோதரர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • அல் அய்ன் & அபுதாபி ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. ஜஃபருல்லாஹ் @ +971507510584
  • துபாயில் ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. நஸீர் @ +971501545251 மற்றும் ஷாகுல் 00971505063755
  • அமீரக வடக்கு மண்டலம் (ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குஅய்ன் & ஃபுஜைரா) ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. பிஸ்மில்லாஹ் கான் @ +971503576076
  • மற்ற நாடுகளில் உள்ளவர்கள், அருகிலிருக்கும் TNTJ கிளையின்மூலம் அனுப்பவும்.


ஏன் எங்களுக்கு கொடுக்கவேண்டும்?
·         வசூலிக்கப்படும் தொகை, நம்மூருக்கு தேவைப்படும் அளவிற்கு அனுப்பப்படுகிறது
·  நம்மூரில் உள்ள உரியவர்களுக்கு கொடுத்த பின், மீதம் இருக்கும் ஃபித்ரா தொகை, பிற ஊர்களில் இருக்கும் ஏழைகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
·         விநியோகிக்கப்பட்ட ஃபித்ரா தொகையின் விபரம் கொடுக்கப்படும்.

எங்களின் இந்த ஃபித்ரா (நோன்பு பெருநாள் தருமம்) நிதி திரட்டும் பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

Monday, September 23, 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் கூட்டுக் குர்பானி திட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் கூட்டுக் குர்பானி திட்டம்

ஏக இறைவனின் திருப்பெயரால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைகிளையின் சார்பாக நபிவழியில் கூட்டுக் குர்பானி திட்டம்

பங்கு ஒன்றுக்கு 1100 ரூபாய் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல் )அவர்களுடன் நங்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டு சேர்ந்தோம்
                              அறிவிப்பாளர் :ஜாபிர் (ரலி )நூல் முஸ்லீம் 2325


நாங்கள் நபி (ஸல் ) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது .ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஓர் ஒட்டகத்தில் பத்து பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்

  அறிவிப்பாளர் :இப்னு அப்பாஸ் (ரலி )நூல் திர்மீதி 1421 நசாயி 4319 இப்னுமாஜா  3122

குர்பானி தோல் மூலம் ஏழைகள் நலம் நாடுவீர் !!

ஒர் ஒட்டகத்தை குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல் ) அவர்கள் ஒப்படைத்தார்கள் .அதன் மாமிசத்தையும் ,தோலையும் அதன்மீது கிடந்த (கயிறு ,சேணம் போன்ற )வை களையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்கு கூலியாக அதில் எதனையும் வழங்கக்கூடாது என்றும் எனக்கு கட்டளை இட்டார்கள் .அதன் கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்
அறிவிப்பாளர் :அலி (ரலி )நூல் புகாரி 1710 முஸ்லீம் 2320

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை வருடம் தோறும் குர்பானி தோல்களை வசூல் செய்து ஏழைகள் முன்னேறும் வகையில் தையல் இயந்திரம் ,கிரைண்டர் ,போன்ற பொருட்களும் ,கல்வி உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளும் அதிரையில் உள்ள ஏழைகளுக்கு வழங்கி வருகிறது .அல்ஹம்துலில்லாஹ் .

காலம் முழுவதும் வசூலில் நடைபெறும் மதரசாக்களும் ,குறிப்பிட்ட ஒரு சிலரும் தோலை வாரிசெல்வதால் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர் .உங்கள் குர்பானி தோல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் வழங்கி ஏழைகளுக்கு அதன் பயனை வழங்கிடுவீர்

குறிப்பு :குர்பானி தோல் விற்ற பணத்தில் ஐந்து பைசா கூட இயக்க வளர்ச்சிக்கோ வேறு எந்த பணிகளுக்கோ செலவிடபடாது என்று உறுதிக் கூறுகிறோம்

உங்கள் குர்பானி தோல்களையும்,பங்கினையும் தருவதற்கு தொடர்பு கொள்ள


செல் :

8015379211
9629533887
9500516109
9500299337
9677626656
9944824510

நீங்கள் போன் செய்தால் ,வீடு தேடி வந்து குர்பானி  தோல்களை பெற்றுக்கொள்வோம்

Tuesday, July 30, 2013

Thursday, June 27, 2013

Saturday, June 22, 2013

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக தையல் மிஷின் வாழ்வாதார உதவி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக நெசவுத்தெருவை சார்ந்த சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக தையல் மிஷன் ஒன்று வழங்கப்பட்டது.

Thursday, August 23, 2012

அதிரையில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்பில் ஃபித்ரா வினியோகம்!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இந்த வருடம் ஃபித்ராவாக ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்பில் ஃபித்ரா பொருட்களை பெற தகுதியானவர்களை தேடி சென்று வழங்கியது.  அல்ஹம்துலில்லாஹ்.

இந்த ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்தில் 87,640 ரூபாய் அதிரை கிளை வசூல் செய்தது.  மீதமுள்ள 63,800 ருபாய் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையால் அதிரை கிளைக்காக வழங்கப்பட்டது. இந்த தொகை மூலம் நமது ஊரில் வசிக்கும் 600 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இவற்றிக்கான கணக்கு விபரம் கீழே தரப்பட்டுள்ளது. ஃபித்ராவிற்காக வசூல் செய்யப்பட்ட தொகை அந்த பணிக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.



Thursday, January 12, 2012

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ரூ.10 லட்சம் நிதியுதவி


சென்னை: தானே புயல் பாதித்த கடலூர் மற்றும் புதுவை பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிதியுதவி அளித்துள்ளது. 

இது குறித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தானே புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் டிசம்பர் 31ம் தேதி முதல் அந்தப் பகுதிகளில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையைச் சேர்ந்தவர்கள் உடனடியாகக் களமிறங்கி அந்த மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களின் அத்தியாவசியத் தேவையான தண்ணீர், பால், உணவு ஆகியவற்றை உடனடியாக அவர்களுக்கு ஏற்பாடு செய்து தந்தனர். இன்னும் சில கிளைகளில், பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்கள். ஆனால் தானே புயலால் வீடுகளை இழந்தவர்களும், கூரைகள் இடிந்தவர்களும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

10 லட்சம் நிதியுதவி 

அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமையில் மாநிலச் செயலாளர்கள் எழும்பூர் சாதிக், அம்பத்தூர் யூசுப், மவ்லவி ஜமால், சமூக ஆர்வலர் தஸ்தகீர், துறைமுகம் கிளைத் தலைவர் ஷரீப் ஆகியோர் அடங்கிய நிவாரணக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறங்கியது. தானே புயலால் கடும் சேதத்தைச் சந்தித்த கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளையும் பார்வையிட்டனர். 

பண்ருட்டி பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து எவ்வித ஆதரவும் இன்றி நின்ற மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தலா ரூ. 2,000த்தை முதல் கட்ட நிவாரண உதவியாக வழங்கினார்கள். இதுவரை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மற்றும் புதுவையில் உள்ள தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகின்றனர்.

நன்றி: தட்ஸ்தமிழ்

மேலும் விபரங்களுக்கு:


Friday, October 29, 2010

அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தின் கூட்டுக் குர்பானி திட்டம்

படத்தை பெரிதாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்

Sunday, August 29, 2010

ஃபித்ராவின் சட்டங்கள்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.

ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்:

இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது. நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

கொடுக்கும் நேரம்:

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி 1503, 1509

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.

பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

“இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை” என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.

ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ‘ரமளான் ஜகாத்’ என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.

இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்” என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது. எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.

எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.

ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.

நபித்தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.

எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது. 

நன்றி: www.tntj.net