Wednesday, January 11, 2012

அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் தரக்கூடாது, ஆனால் தரலாம் - உளறும் குழப்பி கூட்டம்


தன்னை மடையன் என்று கருதுபவனுக்கு ஒரு விஷயத்தை புரியவைத்துவிடலாம், ஆனால், தன்னை அறிவாளி என்று நினைக்கும் மடையர்களுக்கு என்ன தான் செய்தாலும், எந்த விஷயத்தையும் புரியவைக்க முடியாது. 

மார்க்க அறிவு இல்லாத மடையர்களாக இருந்து கொண்டு, தாங்களை அறியாளிகள் என்று கருதுபவர்களில் முதன்மையானவர்கள் யஹ்யா சில்மி என்ற படித்த ஜாகிலை பின்பற்றும் முரிதுகள். இந்த கூட்டத்தில் தமிழ் உலகத்திலேயே முதன்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முப்பது ஜாகில்கள் உள்ளனர். இவர்களில் சிலர் தான் இப்போது பிஜேவின் ஆய்வுகளை, ஆய்வு செய்கிறார்கள். 

இவர்கள் வைத்த வாதங்களுக்கு நாம் அடுக்கடுக்கான பதில்களை தந்துள்ளோம். அவைகளை படிக்காமல் (அல்லது படித்துவிட்டு, படிக்கதாது போல்) அது எங்கே இது எங்கே என்று முக்கியமான குற்றச்சாட்டுகளை பற்றி பேசாமல், உணவில் உப்பு கம்மி, காரம் அதிகம் என்பது போல சம்பந்தம் இல்லாத விஷயங்களை பேசி மழுப்பி வருகிறார்கள்.

ஒரு விஷயத்தை பற்றி விவாதிக்கும் போது, நமது வாதங்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு பதில் சொல்ல வேண்டும், நமது வாதங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் தர வேண்டும். இதைவிடுத்து, கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தராமல், சம்பந்தம் இல்லாத விஷயங்களை பேசுவது, நாம் தவறான கொள்கையில் உள்ளோம் என்பதற்கு சான்று. இதை தான் குருட்டு ஸலஃபிகள் செய்துகொண்டுள்ளார்கள்.

குருட்டு ஸலஃபிகள் வைத்த எல்லா வாதத்திற்கும் நாம் பதில் அளித்துள்ளோம், அவர்களின் வாதங்களில் நாம் கேள்வியும் கேட்டுள்ளோம். இவற்றுக்கு பதில் சொல்ல முடியாத குருட்டு ஸலஃபிகள், படித்த ஜாகில் யஹ்யா சில்மி உளறி தள்ளிய சம்பந்தம் இல்லாத செய்திகளை பதில் என்ற பெயரில் போட்டு பக்கத்தை நிரப்பி வருகிறார்கள்.

ஸஹாபாக்களை பின்பற்றுவது, குர்ஆனோடு முரண்படும் ஸஹீஹான ஹதீஸ்களை நிறுத்திவைப்பது போன்ற விஷயங்களுக்கு நமது மரணஅடி பதிலுக்கு பிறகு அவற்றை விட்டுவிட்டார்கள்.

இப்போது அவர்கள் பிடித்துக்கொண்டுள்ள விஷயம் என்னவேனில், அதாவது அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் கொடுக்க கூடாது. இதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம் அதே நேரத்தில், சில ஹதீஸ்கள் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரணாக இருப்பதை போன்று வரும் ஹதீஸ்களை வேறு வகையில் விளங்க வேண்டும். இதை ஸலஃபி அறிஞர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

புகாரியில் நாம் அல்லாஹ்வை நோக்கி நடந்தால் அவன் நம்மை நோக்கி ஓடிவருகிறான் என்று ஒரு ஹதீஸ் இடம்பெறுகிறது. இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் பண்பை குறிக்கிற ஹதீஸாகும்.

ஹதீஸ்:

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான் என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி (7405)

இந்த ஹதீசை குருட்டு ஸலபிகள் கூட்டம் உள்பட பெரும்பாலானவர்கள், அல்லாஹ் நம்மை நோக்கி ஒடி வருவான் என்றே அல்லது நடந்து வருகிறான் என்றே நம்பவில்லை. அல்லாஹ்வின் அருள் நம்மை நோக்கி வருகிறது என்று கூறுகிறார்கள். அல்லாஹ்வின் பண்பிற்கு விளக்கம் தரக்கூடாது என்றால் இதற்கு ஏன் அப்பா விளக்கம் கொடுக்கிறீர்கள்? அல்லாஹ் முதல் வானத்திலும் உள்ளான், அல்லாஹ்வின் அருளை தேடி ஓடுபவர்களை நோக்கி ஓடவும் செய்கிறான் என்று கூற வேண்டியது தானே?

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தர காரணம் என்னவென்றால், அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் கருத்திற்கு எதிராக இந்த ஹதீஸின் கருத்து இருக்கிறது. அதனால், இந்த ஹதீஸ்சை நாம் அல்லாஹ்வின் அருள் நம்மை நோக்கி வருகிறது என்று சமீபத்தில் வாழ்ந்த அறிஞர்கள் விளக்கம் தந்துள்ளனர். இந்த முட்டாள் ஸலஃபிகளுக்கு இந்த ஹதீஸும் தெரியவில்லை, இதற்கு அறிஞர்கள் கொடுத்த விளக்கமும் தெரியவில்லை.

அதைபோல், கீழ் உள்ள ஹதீசையும் நாம் விளங்க வேண்டும் என்று பிஜே கூறுகிறார்:

இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: புகாரி 1145, 6321, 7494

இந்த ஹதீஸின் நேரடி பொருளை எடுத்தால், உலகில் எந்த ஒரு விணாடியிலும், இரவின் முன்றாம் பகுதி இருந்துகொண்டே இருப்பதால், அல்லாஹ் முதல் வானத்திலேயே தான் இருக்கிறான் என்றாகிவிடும். இந்த விளக்கம் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற குர்ஆன் ஹதீஸின் கருத்துடன் போதும். இதனால், பிஜே அவர்கள் அல்லாஹ்வின் அருள் இரவின் முன்றாம் பகுதியில் இறங்குகிறது என்று விளங்க வேண்டும் என்கிறார். இந்த விளக்கத்தை எங்கள் முன்னோர்கள் சொல்லாமல் பிஜே எப்படி சொல்லாலாம் என்கிறது ஸலபி பக்தர்கள் கூட்டம். 

பூமி உருண்டை என்பதும், உலகின் எதாவது ஒரு பகுதியில் இரவின் முன்றாம் பகுதி இருந்துக்கொண்டே உள்ளது என்பதும் ஸஹாபாக்களுக்கும் அதற்கு பின்னர் வந்தவர்களுக்கும் தெரியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதனால், அவர்களுக்கு இந்த விளக்கம் முரணாக இருந்து இருக்காது.

முன்னோர்கள் மேல் கொண்ட பக்தியின் காரணத்தினால், ஸலஃபிகளின் விளக்கம் குர்ஆனுடன் மேதினாலும் பரவயில்லை என்று இந்த மடையர்கள் கூட்டம் குதிக்கிறது. 

குர்ஆன் ஹதீஸ் ஞானம் உள்ளவர்களுக்கு பிஜே அவர்களின் விளக்கம் எத்தகையது என்பது புரியும். முட்டாள்களாக இருப்பதால் தான், சில்மி என்ற மாங்கா மடையரிடம் மாட்டிக் கொண்டு தவிர்க்கிறார்கள், இந்த மார்க்க தெரியாத அதிரை குழப்பிகள்.