Wednesday, January 11, 2012

ஆர்ப்பாட்டம் ஹராமா? கூறுகெட்ட ஸலஃபிகளின் குதர்க்கவாதம்


ஆர்பபாட்டம் ஹராம் என்று மார்க்கத்தின் அடிப்படை கூட தெரியாத அதிரை குழப்பிகள் கூட்டம் ஃபத்வா வழங்கியுள்ளது.

பொதுவாக, தவ்ஹீத் ஜமாஅத் மெண்டல்களை கண்டுகொள்வது இல்லை. அந்த அடிப்படையில், இவர்களை நாம் கண்டுக்கொள்ளவில்லை. ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்ற கருத்தில் சிலர் இருப்பதால், இவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், எமது தெளிவான பதில்களை நாம் கொடுத்தேம். நமது பதில்களில் மரணஅடி வாங்கிய இந்த குழப்பி கூட்டம், இப்போது தலை கால் புரியாமல் உளறுகிறது.

கப்ர் வணங்கி கூட தனக்கு பதில் தெரியாவிட்டால், வெட்கப்படுவான். இந்த குழப்பி கூட்டத்திற்கு வெட்கம் மானம் சூடு சுரனை என்று எதுவுமே கிடையாது. நாம் எங்களின் கேள்விகளுக்கு பதில் கொடுங்கள் என்றால், பழைய சரக்குகளை காப்பி போஸ்ட் செய்வதை தவிர இவர்களால் ஒன்று செய்ய முடியாது. 

இவர்கள் இறுதியாக எடுத்துவைத்த வாதம், ஆர்ப்பாட்டம் ஹராமாம். குர்ஆன் ஹதீஸில் அடிப்படையில் தவறு என்று நிறுவ வேண்டும். அதைவிடுத்து, இவர்கள் மார்க்க அறிஞர் என்று கருதும் ஒருவரின் ஃபத்வாவை அப்படியே உண்டு கக்கியிருக்கிறார்கள்.

இவர்கள் எடுத்துவைத்த ஃபத்வா இது தான்:

கேள்வி : இஸ்லாமிய உம்மத்தின் பிரச்சனைகளை தீர்க்க ஆர்ப்பாட்ட பேரணிகளை உருவாக்குவது தஃவா வழிமுறையை சார்ந்ததா ? 

பதில் : எங்களுடைய மார்க்கம் குழப்பமானது அல்ல . எங்களுடைய மார்க்கம் ஒழுக்கமானது, ஒழுங்கானது, சாந்தமானது, அமைதியானது. இந்த பேரணி ஆர்பாட்ட ஊர்வலங்கள் முஸ்லிம்களின் நடவடிக்கைகளை சேர்ந்தது அல்ல.இன்னும், முஸ்லிம்கள் அதற்கு பரீட்சியமானவர்களும் அல்ல . 

எனவே, இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், கருணையான மார்க்கம், ஒழுக்கமான மார்க்கம். குழப்பமான , ஒழுங்கில்லாத , பித்னாக்களை உண்டு பண்ணக் கூடிய மார்க்கம் அல்ல . அது தான் இஸ்லாம். உரிமைகள் , ஷரியாவில் சொல்லித்தரப்பட்ட, அனுமதித்த வழிமுறையில் கேட்டு பெறப்படும். இந்த பேரணி ஊர்வலங்கள் முஸ்லிம்களின் இரத்தங்களை ஓட்டும், முஸ்லிம்களின் சொத்துக்களை அழிவில் கொண்டு சேர்க்கும். எனவே, இவைகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல. 

ஷேக் ஸாலிஹ் அல் பவுஸான் ஹபிதஹுல்லாஹ்.
மஜ்மூ ' பதாவா வ ரசா 'இல் பாகம் 2 , இலக்கம் 141, 143, 146

நமது விளக்கம்:

//கேள்வி : இஸ்லாமிய உம்மத்தின் பிரச்சனைகளை தீர்க்க ஆர்ப்பாட்ட பேரணிகளை உருவாக்குவது தஃவா வழிமுறையை சார்ந்ததா ? 

பதில் : எங்களுடைய மார்க்கம் குழப்பமானது அல்ல . எங்களுடைய மார்க்கம் ஒழுக்கமானது, ஒழுங்கானது, சாந்தமானது, அமைதியானது. இந்த பேரணி ஆர்பாட்ட ஊர்வலங்கள் முஸ்லிம்களின் நடவடிக்கைகளை சேர்ந்தது அல்ல.இன்னும், முஸ்லிம்கள் அதற்கு பரீட்சியமானவர்களும் அல்ல . 

எனவே, இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், கருணையான மார்க்கம், ஒழுக்கமான மார்க்கம். குழப்பமான , ஒழுங்கில்லாத , பித்னாக்களை உண்டு பண்ணக் கூடிய மார்க்கம் அல்ல . அது தான் இஸ்லாம். உரிமைகள் , ஷரியாவில் சொல்லித்தரப்பட்ட, அனுமதித்த வழிமுறையில் கேட்டு பெறப்படும்.//

மேலே சொல்லப்பட்டுள்ள எல்லா விஷயத்தையும் நாங்கள் ஏற்கிறோம்.

//இந்த பேரணி ஊர்வலங்கள் முஸ்லிம்களின் இரத்தங்களை ஓட்டும், முஸ்லிம்களின் சொத்துக்களை அழிவில் கொண்டு சேர்க்கும். எனவே, இவைகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல. //

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய எந்த பேராட்டத்திலும் இதுவரை இரத்தம் ஒட்டப்படவில்லை. முஸ்லிம்களின் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தப்படவில்லை என்பது மெண்டல்களாகிய அதிரை குழப்பி கூட்டம் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்களின் புஷ்வான ஃபத்வா இது தான். இந்த ஃபத்வா வழங்கிய அறிஞரை நாம் குறை கூறவில்லை. காரணம், இந்த ஃபத்வா முஸ்லிம்களின் நாடுகளில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்ற பெயரில் மக்களும் அரசுகளும் மோதிக்கொண்டன, அதை தான் ஃபத்வா கண்டிக்கிறது.

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்ற உங்களின் அடிப்படையில் கொள்கைக்கு ஆதாரம் தர முடியாத நீங்கள், இது போன்று சம்பந்தம் இல்லாத ஃபத்வாகளை காட்டி மக்களை மடையர்களாக ஆக்க வெட்கப்பட வேண்டும்.

மேலே உள்ள ஃபத்வாவை காட்டி உளறிவிட்டு, மட ஸலஃபி சில அவதூறான வரிகளை எழுதியுள்ளார்.

மட ஸலஃபியின் வரிகள்:

//இந்த ஆர்பாட்ட வழிமுறைகள் உலகுக்கு அறிமுக படுத்தியவர்கள் காந்தியும் லெனின் போன்றவர்களும் ஆவார்கள். இந்த வழிமுறைகளை கையாண்டு , தமது உரிமை வெல்ல என்ற பெயரில் முஸ்லிமான ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்குகின்றனர். அத்தோடு , இஸ்லாம் வன்மையாக தடுத்த உருவம் 
செதுக்குவதை கூட கையாண்டு , அந்த உருவங்களை எரித்து முழுமையாக இறை மறுப்பாளர்களின் வழிமுறையை கையாண்டு அமைதி போராட்டம் என்று வேறு பெயரிட்டு கொள்கிறார்கள். //

ஒரு விஷயத்தை பற்றி எழுதும் போது, செய்திகளை ஆராய்த்து எழுத வேண்டும். இந்த மட கூட்டத்திற்கும் மார்க்க அறிவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உலக அறிவும் சைபர் தான்.

பேராட்டத்தை அறிமுகம் செய்தவர்கள் காந்தியும் லேனினுமாம். என்ன ஒரு கண்டுபிடிப்பு. நீங்கள் பயன்படுத்தும் கணிணியை அறிமுகம் செய்தது யார் தெரியுமா? நீங்கள் அணியும் பேண்ட என்ன யஹ்யா சில்மியின் கண்டுபிடிப்பா? 

பெண்கள் வீதிக்கு வருகிறார்களாம். என்ன ஒரு தத்துவம். நபி (ஸல்) அவர்கள் போரில் உதவி செய்வதற்கு பெண்களை அழைத்து வந்துள்ளார்கள் என்பது மடாதிபதிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பேராட்டங்களில் உருவ பொம்மையை எரித்ததை நீர் பார்த்ததுண்டா? அல்லது உங்கள் மடாதிபதி பார்த்துள்ளரா?  அல்லது தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் போராட்டங்களுக்கு சிலை செதுக்கி தருவது தான் உம் வேலையா? தவ்ஹீத் ஜமாஅத் உருவ பொம்மையை எரிப்பதை ஏற்கவும் இல்லை, அதை செய்யும் இல்லை. இந்த மார்க்கம் தெரியாத மட கூட்டம் உண்மையை ஆய்வு செய்து எழுத வேண்டும்.

இத்துடன் எமது பதில்கள் நிறுத்தப்படுகின்றன. நீங்கள் எமது வாதங்களுக்கு பதில் சொன்னால், பதிலடி தொடரும். இல்லாவிட்டால், கொடுத்த அடியே போதும் என்று கருதுகிறோம்.