Wednesday, January 25, 2012

பைபிள் இறைவேதமா? கிறிஸ்தவர்களைச் சிந்திக்க வைத்த கிறிஸ்தவ விற்பனர்களைத் தினற வைத்த விவாதம்!

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது.உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல்குர்ஆன் 21 : 18)

என்ற இறைவனின் வசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக கிறித்தவர்களுடனான விவாதம் இறைவனின் தனிப்பெரும் கிருபையால் சிறப்பாக நடந்தது.

கடந்த ஜனவரி 21 மற்றும் 22, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாட்கள் சென்னையிலுள்ள சர் பிட்டி. தியாகராயர் அரங்கத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும், கிறித்தவ அறிஞர் ஜெர்ரி தாமஸ் தலைமையிலான குழுவினருக்கும் இடையே பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த விவாதம் நடந்தது.

இந்த பரபரப்பான விவாதத்தில், பைபிள் இறைவேதமாக இருக்க முடியாது என்பதை கிறித்தவ மக்களே சந்தேகத்துக்கு இடமில்லாத வகையிலும், தெள்ளத் தெளிவாகவும் விளங்கிக் கொள்ளும் விதத்திலும் அடுக்கடுக்கான சான்றுகள் வைக்கப்பட்டன.

ஆட்டம் கண்ட அறிஞர்கள் :

பைபிள் இறைவேதம் தான் என்பதை நிரூபிப்பதற்காக விவாதம் செய்ய வந்துவிட்டு, விவாதத்தை ஆரம்பித்த பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆங்கில மொழிப்புலமை பெற்ற கிறித்தவ அறிஞர்களால் பைபிள் இறைவேதம்தான் என்பதற்கு இந்த விவாதத்தில் ஒரு ஆதாரத்தைக்கூட எடுத்து வைக்க முடியவில்லை என்பதுதான் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம்.

ஆரம்பம் முதலே குர்ஆனில் இறைவன், தவ்ராத் மற்றும் இஞ்சீலைப் பற்றிக் கூறியுள்ள வசனங்களை எடுத்து வைத்துக் கொண்டு குர்ஆனில் சொல்லப்பட்ட தவ்ராத்தும், இஞ்சீலும் இதுதான். எனவே இதை நீங்கள் நம்புங்கள் என்று சொல்லி காமெடி செய்தனர்.

தவ்ராத்திலும், இஞ்சீலிலும் நேர்வழி இருந்தது என்றும், ஒரே இறைவனைத்தான் வணங்க வேண்டும் என்றும், மூன்று கடவுள்கள் இல்லை என்றும், கடவுளுக்கு மகன் இருக்க முடியாது என்றும், தீண்டாமை இல்லை என்றும் தெளிவாக திருக்குர்ஆன் கூறுகின்றது.

தவ்ராத்தும், இஞ்சீலும் குர்ஆனை மெய்ப்பிக்கும் என்றும் குர்ஆனில் உள்ளது. இதற்கெல்லாம் எதிராக உள்ள செய்திகளை மனிதக்கரங்களால் எழுதி வைத்துக் கொண்டு, இதை தவ்ராத் என்றும் இஞ்சீல் என்றும் நம்புங்கள் என்று எங்களை நம்பச் சொன்னால் நாங்கள் எப்படி நம்புவது என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டவுடன் கிறிஸ்தவ அறிஞர்கள் ஆட்டம் கண்டு விட்டனர்.

ஆரம்பமே அமர்க்களம் :

பைபிள் இறைவேதம் இல்லை என்பதற்கு ஆதாரமாக எடுத்த எடுப்பிலேயே அதிலுள்ள ஆபாசங்களை அள்ளிப் போட, ஆரம்பமே அமர்க்களமானது.

கடவுளுடைய வேதம் என்று சொல்லிக் கொண்டு நீங்கள் வைத்துள்ள இந்த வேதம், செக்ஸ் புத்தகங்களை மிஞ்சக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது என்றும், இது எப்படி இறைவேதமாக இருக்க முடியும் என்று கேட்டு ஆதாரங்களை அள்ளிப்போட, போட கிறிஸ்தவ அறிஞர்கள் என்று தங்களை சொல்லிக் கொண்டவர்கள் விழி பிதுங்கினர்.

உன்னதப்பாட்டா? மன்மதப்பாட்டா? :

பைபிளில் உள்ள உன்னதப்பாட்டு என்ற ஒரு மகத்துவமிக்க(?) உன்னதமான ஒரு ஆகமத்தில், கள்ளக்காதலர்கள் செய்யும் காமச்சேட்டைகளும், ஆபாச வர்ணனைகளும் முதலில் பட்டியல் போடப்பட்டன.

பனை மரத்தில் ஏறுவதும், குலை பறிப்பதும், துவாரத்தில் கையை விடுவதும், வெள்ளைப்போளம் வடிவதும் என்று வரும் வாசகங்களை வாசித்து இதுதான் இறைவேதமா? என்று நாம் கேட்க, இவ்வாறு நீங்கள் வர்ணிப்பது ஏதோ படம் பார்த்துவிட்டு வந்து விளக்குவது போல உள்ளது என்று எதிர்தரப்பினர் கேள்வியெழுப்பினர்.

பைபிளை படித்தாலே படம் பார்த்தது போலத்தானே உள்ளது என்று நாம் கூற வாயடைத்துப் போயினர்.

இப்படிப்பட்ட ஆபாசங்களை நியாயப்படுத்த இது போன்ற காமச்சேட்டைகள் கணவன் மனைவி இடையே நடந்த விஷயம் என்று சப்பைக்கட்டு கட்டி பதில் வர, நீ என் அண்ணனாகவும், என் தாயிடத்தில் பால்குடித்த சகோதரனாகவும் இருந்திருந்தால் உன்னைக் கண்ட இடத்திலெல்லாம் முத்தமிடுவேனே! என்று காமச்சேட்டை செய்யும் காதலி சொல்கிறாளே! இப்படித்தான் கணவன் மனைவி பேசிக்கொள்வார்களா? என்று பீஜே கேள்வியெழுப்ப அப்படியே அதைவிட்டுவிட்டு அடுத்த மேட்டருக்கு தாவிவிட்டனர்.

தொடரும் அசிங்கங்கள் :

ஆபாச வர்ணைனை அசிங்கத்தை எடுத்து வைத்ததைத் தொடர்ந்து

அண்ணனும் தங்கையும் உடலுறவு கொண்ட அசிங்கம்,

தன் மகளை திருமணம் முடித்துத்தர 100 நுனித்தோலை தனது மகளுக்காக மஹர் கேட்ட சவுல் ராஜாவின் அசிங்கம், அதற்கு தாவீது ராஜா 200 நுனித்தோல்களை கொண்டு வந்தக் கொடூரம்.

ஆண்களின் மர்ம உறுப்புகளின் அளவுகளை பற்றியே விதவிதமாக விளக்கும் பரிசுத்த(?) வேதாகமத்தின் பரிசுத்த(?)வரிகள்,

மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே நடைபெற்ற அசிங்கங்களை புனித பைபிள் விவரிக்கும் அசிங்கம்,

பெற்ற தகப்பனோடு மகள்கள் உடலுறவு கொண்ட கேவலம்,

மகளுக்கு திருமணம் முடிக்க ஆளில்லாவிட்டால் பெற்ற தகப்பனே மகளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; அது பாவமல்ல என்று சொல்லும் கேவலத்திலும் கேவலம்,

சந்தேகப்படும் மனைவியைக் கண்டுபிடிக்க அற்புதமான(?) ஆபாச ஐடியா,

கர்த்தர் யாகோபுடன் ரெஸ்ட்லின் சண்டை போட்ட கதை,

கர்த்தர் யாகோபுடன் சண்டை போட்ட போது யாகோபுடைய தொடைச்சந்துக்குள் கையைவிட்ட ஆபாசம் கர்த்தர் தீர்க்கதரி ஒருவரை அம்மணமாக நடக்க சொன்ன ஆபாசம்,

கர்த்தரே அம்மணமாக ஓடிய கேவலம்,

கர்த்தர் நரியைப்போல ஊளையிட்ட விஷயம்,

பாவாடையை தூக்கிக் காட்டுவதாக பைபிள் விவரிக்கும் விபரீத வர்ணனை

விதை நசுங்கியவன் மற்றும் ஊன முற்றவர்கள் தேவாலயத்தினுள் வரக் கூடாது என்ற அநீதியான சட்டம்

ஒருவர் தனது தகப்பனை ஏசுவுக்காக தியாகம் செய்தால் அவருக்கு நூறு அப்பாக்கள் கிடைப்பார்கள் என்று கூறும் உளறல்

இது போன்ற கேவலமான விஷயங்கள் இறைவனுடைய வார்த்தைகள் என்று சொல்லப்படும் வேதத்தில் இருந்தால் இது வேதமா? அல்லது வேறு எதுவுமா? என்று நாம் கேட்க, கேவலப்பட்ட எதிர்தரப்பினரால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை.

பைபிளில் கைவரிசையைக் காட்டியது அம்பலம் :

இவர்கள் தற்போது வைத்திருக்கும் பைபிளின் வரலாறு என்ன?

அதில் இவர்கள் தற்போது என்னென்ன கைவரிசையை காட்டியுள்ளார்கள்?

அதில் நீக்கப்பட்ட வசனங்கள் என்னென்ன?

பல வசனங்களை மட்டும் நீக்கவில்லை; பல ஆகமங்களையே நீக்கியுள்ள அவலம்

பைபிளின் மூலப்பிரதிகளின் லட்சணம் என்ன?

பரிசுத்த ஆவியால் உந்தி எழுதப்பட்ட பைபிள் வசனங்களில் அடைப்புக்குறி போட்டு ஆவிகள் பேசிய அதிசயம் எப்படி?

ஏசுவுடைய காலத்தில் இருந்த பழைய ஏற்பாட்டில் இவர்கள் தற்போது விளையாடிய ஆட்டங்கள் என்னென்ன?

இவர்கள் தற்போது வைத்துள்ள புதிய ஏற்பாடு என்பது என்ன என்றே ஏசுவுக்குத் தெரியாது

சினாடிகானஸ், வாடிகானஸ் என்று இவர்கள் எடுத்து வைத்திருக்கும் மூலப்பிரதிகளின் நம்பகத்தன்மை என்ன?

கிரேக்க மொழியில் உள்ள மூலப்பிரதிகளில் உள்ள குளறுபடிகள் இவை அனைத்தும் ஆதாரப்பூர்வமாக அதன் மூலப்பிரதிகளில் இருந்து ஸ்கேன் செய்யப்பட்ட ஆதாரங்களை அக்குவேறு ஆணிவேறாக எடுத்துப்போட்டவுடன், தாங்கள் பைபிளில் செய்த தில்லுமுல்லுகள் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டதை கண்டு ஆட்டம் கண்ட கிறிஸ்தவ அறிஞர்கள், அதிலிருந்து நழுவி ஓடுவதற்கு, மூலமொழியிலிருந்து எடுத்துக்காட்டி விமர்சனம் செய்வதற்கெல்லாம் கிரேக்க மற்றும் ஹீப்ரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.

இதைப்பற்றி எங்களுக்கும் முழு அறிவு இல்லை; உங்களுக்கும் முழு அறிவு இல்லை. எனவே நாம் அதைப்பற்றி இங்கே பேச வேண்டாம் என்று அசடு வழிந்தனர்.

சவால் விட்டதும் சறுகிவிட்ட எதிர்தரப்பினர் :

உங்களுக்கு இது குறித்து அறிவு இல்லை என்று ஒப்புக்கொண்டு விட்டீர்கள். ஆனால் எங்களுக்கு இது குறித்து அறிவு இல்லை என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம். எனக்கு கிரேக்கமும், ஹீப்ருவும் தெரியும். பேச இயலாதே தவிர, வாசித்து அர்த்தம் வைக்கும் அளவுக்கு தெரியும்.

அராமிக்தான் எனக்கு தெரியாது. நாங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் மூலமொழியில் இருந்து ஒப்பீடு செய்து நிரூபிக்க தயார்! நீங்கள் அதை மறுக்க தயாரா? என கலீல் ரசூல் பகிரங்க சவால்விட எதிர் தரப்பினர் கப்சிப்.

நமக்கு ஆதரவாக ஆதாரத்தை அளித்த பாதிரிமார்கள்:

இரண்டு மூலப்பிரதிகளில் இருந்து அவற்றில் உள்ள வேறுபாடுகளை அடுக்கடுக்காக கலீல் ரசூல் அவர்கள் அள்ளிப் போட்டவுடன், இரண்டு மூலப்பிரதிகளிலிருந்து அதிலுள்ள வேறுபாடுகளை அள்ளிப்போட்டுக் கொண்டு இருக்கிறீர்களே! மூலப்பிரதிகள் இரண்டு மட்டுமா? உள்ளது.

கிட்டத்தட்ட 27,000 (இருபத்து ஏழாயிரம்) மூலப்பிரதிகள் உள்ளன. அவற்றைப்பற்றி உங்களுக்குத் தெரியாது என்று கூற, இரண்டு மூல மொழிபெயர்ப்பிலிருந்தே ஆயிரக்கணக்கான முரண்பாடுகளை காட்டிக் கொண்டிருக்கின்றோம். அதுவே இவ்வளவு இருந்தால், 27000 (இருபத்து ஏழாயிரம்) மூலப் பிரதிகளில் எத்தனை குளறுபடிகள் இருக்கும்? நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு என்ன? நீங்கள் சொல்லும் பதில் என்ன? எங்களுக்கு ஆதரவாக கூடுதல் ஆதாரத்தையல்லவா நீங்கள் தருகின்றீர்கள் என கேள்வியெழுப்பிய வுடன் தேவையில்லாமல் உளறிவிட்

டோமோ என்று தங்களது உளறலை தங்களின் மவுனத்தின் வாயிலாக ஒப்புக் கொண்டு விட்டனர் கிறிஸ்தவ அறிஞர்கள்.

பரபரப்பாக்கிய விஷப்பரீட்சை:

கிறித்தவ பாதிரிமார்களுக்கு அவர்களுடைய உண்மை விசுவாசத்தைச் சோதிப்பதற்காக பைபிளில் இருந்து பீஜே அவர்கள் வைத்த விஷப்பரீட்சைதான் கிறித்தவ விவாதத்தில் மிக மிக பரபரப்பாக்கிய மற்றும் ஹைலைட் ஆன விஷயம்

பைபிள் புதிய ஏற்பாடு பகுதியில் மாற்கு 16வது அதிகாரத்தில்,

17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.

மேற்கண்டவாறு கர்த்தர் சொல்லியுள்ளாரே! நீங்கள் உண்மையான விசுவாசிகளாக இருந்தால் இதோ விஷபாட்டில் இங்கே உள்ளது.

இந்த விஷத்தை இப்போதே நீங்கள் குடித்து, பைபிள் இறைவனுடைய வேதம் என நிரூபியுங்கள் என்று சொல்லி அவர்கள் கையில் விஷத்தை கொடுக்க, ஆடிப்போன எதிர்தரப்பினர் இப்படியெல்லாம் கர்த்தரை பரீட்சை பார்க்கக் கூடாது என்று சொல்லி அசடு வழிந்தனர்.

மேலும், இது போல ஒரு பரீட்சையை சாத்தான் ஏசுவிடத்தில் செய்யச்சொன்ன போது இயேசு மறுத்து விட்டார். எனவே நாங்கள் கர்த்தரை பரீட்சை பார்க்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு, புகாரியில் நபிகளார் சொன்னதாக ஒரு செய்தி உள்ளது. யார் அஜ்வா பேரீச்சம்பழத்தை சாப்பிடுகின்றாரோ அவருக்கு விஷமோ சூனியமோ ஒன்றும் செய்யாது என்று வரக்கூடிய ஹதீஸை குறிப்பிட்டு, இந்த விஷத்தையும், பேரீச்சம்

பழத்தையும் நீங்கள் சாப்பிட்டு முஹம்மது நபி இறைத்தூதர்தான் என்பதை நிரூபியுங்கள் என்று கூறி அந்த விஷ பாட்டிலையும், பேரீச்சம்பழத்தையும் நமக்கு அளித்தனர்.

உயிருக்குப் பயந்து கொண்டு பைபிளை பொய்யாக்கிய கேவலம்:

பேரீச்சம்பழத்தையும், விஷபாட்டிலையும் நமக்குக் கொடுக்க, இப்படி, “யார் அஜ்வா பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகின்றாரோ அவருக்கு விஷமோ சூனியமோ ஒன்றும் செய்யாது” என்று வரக்கூடிய செய்தி பொய்யான செய்தி. இதை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பல வருடங்களுக்கு முன்பே இது போன்ற செய்திகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

குர்ஆனுக்கு முரண்படும் இத்தகைய செய்திகளை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று எங்களது நிலையை தெளிவுபடுத்தியுள்ளோம். நீங்கள் சுட்டிக்காட்டியது பொய்யான செய்தி.

நாங்கள் சொல்வது போல, பைபிளில் உள்ள மாற்கு அதிகாரத்தில் வரும் விஷம் குடிக்கும் செய்தி பொய்யான செய்தி என்று நீங்கள் சொல்லிவிட்டால் நாங்கள் உங்களை விஷம் குடிக்க சொல்ல மாட்டோம் என்று பீஜே அறிவித்தார்.

கர்த்தரை பரீட்சை பார்க்கலாம்:

கர்த்தரை பரீட்சை பார்க்கக்கூடாது என்பதால் தானே நீங்கள் விஷத்தை குடிக்க மாட்டேன் என்கிறீர்கள். பைபிளை நன்றாகப் படித்துப் பாருங்கள். யாத்திரகாமம் 17வது அதிகாரத்தில் மோசேவுடன் பயணித்த மக்கள் கர்த்தரை பரீட்சை பார்க்க, தண்ணீர் கேட்டனர். அவர்களை மோசே திட்டிவிட்டு அற்புதத்தை கொண்டு வந்தார். அதைப்போல, இயேசுவிடத்திலும் அவரை சோதித்துப் பார்ப்பதற்கு, ஒரு அடையாளம் கேட்டதாகவும், அவர் ஒரு அடையாளத்தை அறிவித்ததாகவும் உள்ளது.

அதுமட்டுமில்லாமல், தன்னை நம்பாத மக்களிடத்தில் அவரை நம்பவைப்பதற்காக இயேசு அற்புதம் நிகழ்த்தியதாக உள்ளதே எனவே நம்பவைக்க அற்புதம் செய்துள்ளதால், நீங்கள் இப்போது விஷம் குடித்து அற்புதம் செய்து பைபிள் இறைவேதம்தான் என்று நிரூபித்துவிட்டால் அதை நாங்கள் ஏற்றுக் கொண்டு விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கின்றோம் என்று பீஜே அறிவித்து விஷபாட்டிலை திரும்பவும் அவர்களிடம் தூக்கி கொடுக்க, பைபிளை உண்மையென்று நிரூபிப்பதை விட அவர்களுக்கு பைபிளை விட தங்களது உயிர்தான் பெரிது என்று விஷத்தைக் குடிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

அதுமட்டு மல்லாமல் பைபிள் இறைவேதமில்லை என்று தாங்களே தங்களது செய்கையின் வழியாக சாட்சி கொடுத்தனர்.

பேப்பர் வெயிட்டைக்கூட நகர்த்த முடியாமல் தலைகுனிந்த பேரறிஞர்கள் :

அடுத்ததாக,

கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 17:20

அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

லூக்கா 17:6

மேற்கண்ட வசனங்களை பீஜே அவர்கள் வாசித்துக் காண்பித்து உங்களில் யாருக்கேனும் கடுகளவு விசுவாசமிருந்தால், இந்த மலையைப்பார்த்து நகர்ந்து கடலில் போய் விழு என்று கட்டளையிட்டால் அது அப்படியே கேட்கும் என்று சொல்லும் பைபிள் உண்மையிலேயே இறைவேதமாக இருக்குமானால், இதோ ஒரு பேப்பர் வெயிட் இங்குள்ளது.

நீங்கள் மலையை எல்லாம் நகர்த்திக் காட்ட வேண்டாம். இதோ இந்த பேப்பர் வெயிட்டை மட்டும் கொஞ்சம் நகர்த்திக் காட்டுங்கள் என்று சவால்விட, தங்களுக்கு கடுகளவு கூட விசுவாசமில்லை; பைபிள்இறைவேதமுமில்லை என்று தங்களது செய்கையின் மூலம் நிரூபித்து தலைகுனிந்தனர்.

உலகம் முழுவதும் பார்க்கப்பட்ட விவாதம்:

இந்த நேரடி விவாதம் நமது ஆன்லைன்பீஜே இணையதளம் மற்றும் tntj.net மற்றும் ஜீஸஸ் இன்வைட்ஸ் மற்றும் தவ்ஹீத் வீடியோ ஆகிய இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருவாரியான மாவட்டங்களில் தங்களது மர்கஸ்களில் இணையதளத்தின் வாயிலாக நேரடி ஒளிபரப்பை ஒளிபரப்பு செய்து அதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்தனர்.

அதுமட்டுமில்லாமல், லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகள், மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலும் உள்ளவர்கள் இந்த நேரடி விவாதத்தை கண்டுகளித்து தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

விவாதம் நடைபெற்ற ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு நாளும் 23000 (இருபத்தி மூவாயிரம்) சிஸ்டங்கள் வழியாக இந்த நேரடி ஒளிபரப்பு பார்க்கப்பட்டுள்ளது.

ஒரு சிஸ்டத்தில் குறைந்தது 5 பேர் பார்த்திருந்தாலும் கிட்டத்தட்ட ஒன்னேகால் லட்சம் பேர்கள் பார்த்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், மாவட்டங்களில் பல மர்கஸ்களில் ஒரு சிஸ்டத்திலேயே ஸ்கோப் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் மொபைல் போன் வழியாகவும் நேரடி ஒளிபரப்பை பார்க்கும் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

நேரடி ஒளிபரப்பு பணியை நமது இணையதள வெப்மாஸ்டர் அப்பாஸ் அவர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தார்.

சிறப்பாக அமைந்த ஆங்கில மொழியாக்கம்:

நாம் தமிழில் வைக்கும் வாதங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கர்நாடக நிர்வாகிகளான பெங்களூர் முஹம்மது கனி மற்றும் பெங்களூர் யூசுப் ஆகியோர் மிகச் சிறந்த முறையில் மொழிபெயர்த்தனர். பீஜே மற்றும் நமது குழுவினர் வைத்த வாதங்களை முழுமையாக கிரகித்து உணர்வுப்பூர்வமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்த விதம் இந்த விவாதம் உலகம் முழுவதும் சென்றடைய வழிவகுக்கும் வகையில் அமைந்தது.

எந்த விவாதத்திலும் நடக்காத அதிசயம்:

இறுதியாக ஜெர்ரி தாமஸ் நிறைவுரை ஆற்றும் போது சில கேள்விகளை எழுப்பினார். அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பீஜே அரை மணி நேரத்துக்கு முன்பு தான் விளக்கமாக பதில் கூறி இருந்தார்.

இது பற்றி பீஜே தனது நிறைவுறையில் குறிப்பிடும் போது பதில் சொன்ன பிறகு கேள்வி கேட்கும் அதிசயத்தை இப்போது தான் நாம் பார்க்கிறோம்.

இவர்கள் எந்த அளவுக்கு குழம்பியுள்ளனர் என்று எடுத்துக் காட்டினார்.

பைபிள் இறைவேதம் என்பதற்கு ஒரு ஆதாரத்தையும் இவர்கள் காட்டவில்லை என்பதையும் பீஜே எடுத்துக் காட்டினார்.

குர்ஆனில் தவ்ராத் இஞ்சீல் பற்றி கூறியது தான் பைபிள் இறைவேதம் என்பதற்கு ஒரே ஆதாரமாக இவர்கள் கூறினார்கள்.

முஸ்லிம்களை அவர்களின் நம்பிக்கையை வைத்தே ஏமாற்றி வசப்படுத்த நினைத்தனர் அதில் இவர்கள் தோல்வி அடைந்தனர்.

ஒரு முஸ்லிமாவது இவர்கள் வாதம் செய்ததை நம்புகிறீர்களா? என்று பீஜே கேட்டார். ஒரு முஸ்லிமும் கை உயர்த்தவில்லை.

ஒவ்வொரு தரப்புக்கும் 150 பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர் ஆனால் முஸ்லிம் தரப்பில் ஒருவர் கூட வெளியேறவில்லை. ஆனால் கிறித்தவ தரப்பில், பொறுக்குமணிகளாக கூட்டி வந்த 150 பேரில் 85 பேர் இவர்களின் உளறலைப் பார்த்து வெளியேறி விட்டனர் என்பதையும், இங்கு இந்த விவாதத்தை பார்த்துக் கொண்டிருந்த கிறுஸ்தவ பார்வையாளர்களில் பாதிபேர் எப்படி உங்களது வாதம் சரியில்லை என்பதை உணர்ந்து பாதியிலேயே வெளியேறினார்களோ அது போலத்தான் இந்த விவாதத்தை டிவிடிக்கள் மற்றும் இணையதளம் வாயிலாக பார்ப்பவர்களும், உலகமக்களும் உணர்வார்கள் என்பதையும் பீஜே எடுத்துக் காட்டினார்.

இறைவனுடைய மகத்தான அருளால், பைபிள் இறைவேதமல்ல; அது மனிதக்கரங்களால் எழுதப்பட்ட, பொய்களும், முரண்பாடுகளும், தவறுகளும், கேடுகெட்ட ஆபாசங்களும், உளறல்களும், நிறைந்த ஒரு மனித உளறல்தான் என்பது மீண்டும் நிரூபணமானது. அல்ஹம்துலில்லாஹ்

“உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது” என்றும் கூறுவீராக!
அல்குர்-ஆன் 17 : 81



விவாதத்தின் ஒரு காட்சி