Saturday, March 13, 2010

பீ.ஜே சவூதியில் நுழைய தடையா? பீ.ஜே நூல்களுக்கு தடையா?

சவூதி அரேபியாவிலும் இன்னபிற அரபு நாடுகளிலும் பீஜேயின் திருக்குர்ஆன் தமிழாக்கத்துக்கு தடை!

பீ.ஜே.யின் நூல்களுக்கும் தடை!

சவூதி அரேபியாவில் பீ.ஜே. நுழையத் தடை!

சவூதி உலமாக்கள் விவாதத்துக்கு அழைத்த போது பீ.ஜே பின் வாங்கி விட்டார்!

என்றெல்லாம் சில மதனிகளும் பணத்துக்காகவே தவ்ஹீதைச் சொல்லும் போலி உலமாக்களும் மக்கள் மத்தியில் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.

இது குறித்து பல்வேறு சகோதரர்கள் விளக்கம் கேட்கும்போது தக்க விளக்கம் அளித்து வந்த போதும் அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்தவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தேய்ந்து போன ரிகார்ட் போல் இதையே பயங்கரமான ஒரு செய்தியாகச் சொல்லிக் கொண்டு திரிகின்றது இந்தக் கும்பல்.

இது குறித்து விரிவாக எழுதும் அவசியத்தை ஏற்படுத்தி விட்டனர்.

அரபு நாடுகள் தான் அத்தாரிட்டியா?


இவர்கள் கூறுவது போல் எனது நூல்களை அரபு நாடுகளில் தடை செய்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். அரபு நாடுகளில் நுழைவதற்கு எனக்குத் தடை போட்டு விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இதன் காரணமாக எனது கருத்துக்கள் தவறு என்பது நிரூபணமாகி விடுமா?

அவர்கள் தான் மார்க்கத்தின் அத்தாரிட்டியா? நான் சொல்லும் கருத்துக்கள் குர்ஆன் ஹதீஸுக்கு முரண்பட்டு இருப்பதாகவோ, தவறானதாகவோ உள்ளது என்று தக்க ஆதாரத்துடன் நிரூபித்தால் தான் எனது கருத்துக்கள் தவறு என்று ஆகும் என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை. நமது கருத்துக்களை எதிர் கொள்ள அவர்களிடம் சரக்கு  இல்லாததால் இதுவே இவர்களுக்கு பெரிய ஆதாரமாகத் தெறிகிறது.

சத்தியத்தைச் சரியாக எடுத்துச் சொல்லும் யாராக இருந்தாலும் இது போன்ற அடக்குமுறைகளை எதிர் கொள்ளத் தயாராகவே இருக்க வேண்டும் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு தான் நாங்கள் களத்தில் இறங்கி இருக்கிறோம்.

இவர்கள் ஆசைப்படுவது போல் சவூதி என்ன, ஒட்டுமொத்தமாக உலகமே திரண்டு தடை போட்டாலும் நமது பயணம் நின்று விடாது. இக்கொள்கையை நம்பியவர்களின் மன உறுதியை எந்த வகையிலும் இது குலைக்காது என்பதைத் திட்டவட்டமாக நான் அறிவித்துக் கொள்கிறேன்.

கூலிக்கு தவ்ஹீத் பேசும் இந்தக் கும்பல் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது எப்போது என்னைப் பாதிக்கும்? சவூதியிலோ மற்ற அரபு நாடுகளிலோ நான் ஊதியம் பெற்று அதற்காகவே தவ்ஹீதைச் சொன்னால் அந்த நாடுகளின் கோபப் பார்வை என்னைப் பாதிக்கும்.

எந்த ஒரு கால கட்டத்திலும் நான் எந்த அரபு நாட்டு அரசிடமிருந்தோ அல்லது நிறுவனங்களிடமிருந்தோ பணமோ, பொருளோ, அன்பளிப்போ பெற்றதில்லை. சில நேரங்களில் அரபு நாடுகளில் பணி புரிவோர் இலவசமாக வழங்கப்படும் கிதாப்களை வாங்கி அனுப்பும் போது பெற்றுக் கொண்டதைத் தவிர வேறு எதனையும் நான் பெற்றுக் கொண்டதில்லை.

ஜாக் அமைப்பில் பணியாற்றிய அந்த சமயத்தில் மதனிகள் அல்லாத கஷ்டப்படும் உலமாக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு கமாலுத்தீன் மதனீ அவர்கள் மதனிகளாக இல்லாத சில தாயிகளுக்கு சிறிய அளவிலான உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால் எந்த நிறுவனத்திடமிருந்தும் நான் எதையும் பெற விரும்பவில்லை என்று மறுத்து விட்டேன். எந்தக் கால கட்டத்திலும் இதில் நான் சபலப்பட்டதே இல்லை. அப்படி இருக்கும் போது இவர்கள் ஆசைப்படுவது போன்ற தடைகள் வந்தால் அது என்னை எள் முனையளவும் பாதிக்கப் போவது இல்லை.

என்னுடைய நூல்கள் பலவற்றை சவூதியில் வெளியிட ஜாலியாத் மூலம் அனுமதி கேட்ட போது நான் அனுமதியளித்துள்ளேன்.

சில மதனிகள் நூல்கள் எழுதி அதை இலவசமாக வெளியிடப் போகிறோம் என்று கூறி உதவி அளிக்கும் நிறுவனத்துக்கு தவறான தகவல் தந்து லட்சங்களைக் கறப்பார்கள். ஒரு நூல் வெளியிட்டு பெரிய சொத்து வாங்கியவரை நான் அறிவேன்.

எனது நூல்களை வெளியிட அனுமதி கேட்கும் போது அதற்கான ராயல்டி இவ்வளவு வேண்டும் என்றால் அதைத் தருவதில் சவுதி நிறுவனங்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. அப்படி இருந்தும் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் இலவசமாக் வெளியிட அனுமதித்தேன். இந்த அனுமதிக்காக மற்றவர்கள் அடைகின்ற ஆதாயமும் எனக்கு இல்லை. இலவசமாக அவர்கள் வெளியிடும் போது அந்த நூலின் விற்பனை பெரிதும் பாதிக்கப்படும். ஏற்கனவே நான் அச்சிட்டு வைத்திருந்த நூல்கள் தேங்கும் என்ற வகையிலும் எனக்கு இழப்பு ஏற்படும்.

செய்திகள் மக்களைச் சென்றடைந்தால் சரி என்று தான் நினைத்தேனே தவிர சவூதி அரபு நாட்டுப் பனத்துக்கு பல்லிளிக்கவில்லை.

அவ்வாறு பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. (இது பின்னர் விளக்கப்பட்டுள்ளது). செய்திகள் மக்களைச் சென்றடைவதற்கு நமது சிரமம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் தான் நான் அனுமதியளித்தேன்.

இதை சுயதம்பட்டம் அடிப்பதற்காக குறிப்பிடவில்லை. அரபு நாடுகள் தடை விதித்தால் அதனால் எனக்கு எந்த நட்டமும் இல்லை என்பதற்காகவும், சவூதி அரசு மூலம் வெளியிடப்படும் எனது இலவச நூல்களை காண்பவர்கள் பீஜேக்கு இதன் மூலம் பெருந்தொகை கிடைத்திருக்கும் என்று யாரும் சொல்லி விடக் கூடாது என்பதற்காகவும் இதைக் குறிப்பிடுகிறேன்.

தடை பூச்சாண்டி ஏன்?


இந்தத் தடை பூச்சாண்டி ஏன் என்றால் அதற்கும் காரணம் உண்டு. அரபு நாடுகள் சென்ற தமிழ் கூறும் முஸ்லிம் சகோதரர்கள் அங்கே சென்றதும் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத்வாதியாக மாறி வருகிறார்கள். தங்களால் இயன்ற தஃவா பணிகளையும் சுயநல நோக்கமின்றி செய்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

சவூதியில் உள்ள ஜாலியாத்கள் எனும் தஃவா சென்டர்களில் முக்கிய மொழிகளுக்கு அம்மொழி பேசும் பிரச்சாரகர்களை நியமித்திருக்கிறார்கள். அது போல் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிமல்லாத மக்களிடமும் தூய இஸ்லாத்தைச் சொல்கிறோம் என்ற பெயரில் சம்பளம் வாங்கும் இவர்களில் பலர் அந்தப் பணியைச் செய்வதில்லை. இவர்களின் உப்புக்குச் சப்பாக நடத்தப்படும் பிரச்சாரக் கூட்டங்களூக்கும் மக்கள் செல்வதில்லை. நம்மைக் காட்டி பணம் கறக்கிரார்கள் என்று மக்கள் நம்புவதால் இவர்கள் நடத்தும் சன்மார்க்க(?) விளக்கக் கூட்டத்தை மக்கள் அங்கீகரிப்பதில்லை.

அதே சமயம் தவ்ஹீத் சகோதரர்கள் தமிழ் மொழியில் மட்டும் மார்க்கத்தை அறிந்த சிலர் மூலம் நடத்தும் பிரச்சார் நிகழ்ச்சிகளில் பெருமளவு பங்கெடுப்பார்கள். படியளக்கும் எஜமானர்களுக்கு இது தெரிந்தால் இவர்கள் தூங்கி வழிவது தெரிந்து விடும்.

இதைத் தடுக்க வேண்டுமானால் என்ன செய்யலாம்? சன்மார்க்கக் கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்களை குறிப்பாக என்னை வசைபாடுவது. என் மீது வெறுப்பை விதைத்தால் தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்ச்சிக்கு மக்கள் போக மாட்டர்கள் என்று தங்கள் பிரச்சாரப் பாணியை அமைத்துக் கொண்டார்கள். பாவம்! இவர்கள் மார்க்கம் பேசாமல் தனி நபர் தாக்குதல் நடத்தியது இன்னும் அவர்களைத் தனிமைப்படுத்தி விட்டது.

அடுத்து என்ன செய்யலாம்? 


சவூதியில் சட்டதிட்டங்கள் கடுமையானவை. அங்கே கூட்டமாக கூடி பேசினாலே பிரச்சனையாகி விடும். பீஜேக்கு தடை என்று மக்களிடம் பரப்பினால் ஆகா தடை செய்யப்பட்டவர்களின் அமைப்பில் செயல்பட்டால் நமக்கு பிரச்சனை வருமோ என்று தவ்ஹீத் சகொதரர்களூக்கு பயம் வருமாம். இதன் காரணமாக தங்கள் செயல்பாடுகளை முடக்கி விடுவார்கள். களத்தில் நிற்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள், பயந்து போய் முடங்கி விடுவார்கள். இப்படி கணக்குப் போட்டதன் விளைவு தான் இந்தப் பிரச்சாரம்.

இந்தச் சகோதரர்களை முடக்கிப் போட்டால் தான் முன்பு போல் இவர்கள் வாயில் வந்ததையெல்லாம் உளற முடியும்.

அவர்களை அச்சுறுத்தி பணிய வைக்கவே இந்த தரம் கெட்ட பொய்ப் பிரச்சாரம்.

ஆனால் அல்லாஹ்வின் நாட்டமோ, வேறு விதமாக இருந்தது. யார் இப்படி பரப்பினார்களோ அவர்களின் கூடாரம் காலியானது. இந்த இழி செயல் செய்த சில போலி உலமாக்கள் பாலியல் உள்ளிட்ட பல குற்றச் சாட்டுக்காக கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். ஆட் குறைப்பு என்ற பெயரில் சிலர் தூக்கி அடிக்கப்பட்டார்கள். பாக்கவிகளும் அஷ்ரபிகளும் சிறைக் கம்பிக்குப் பின்னால் நின்றார்கள்.

இவர்களின் மதனி செல்வாக்கோ, அரபு மொழிப் புலமையோ, ஜாலியாத் பதவியோ இவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. தவ்ஹீத் தாயியாக களத்தில் நின்ற தாயிகளுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.

உணர்வு ஏட்டில் எழுதப்படும் கட்டுரைகளைப் பற்றி போட்டுக் கொடுத்து குறிப்பிட்ட சில பக்கங்களுக்கு கறுப்புச் சாயம் பூசியதையும், சில பக்கங்களைக் கிழித்து விட்டு விற்பனை செய்ய வைத்ததையும் தவிர வேறு ஒன்றும் இவர்களால் செய்ய முடியவில்லை. அது கூட மார்க்க அடிப்படையில் செய்த இடையூறு அல்ல. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானல் சவூதி பிரமுகருக்கு ரோஜா மாலை தூவுவது போன்ற படம் இடம் பெற்று அது விமர்சிக்கப்பட்டிருந்தது. தமிழ் மொழியில் உள்ளதை இவர்கள் தான் தணிக்கைக்குச் சொல்லும் நிலையில் இருந்ததால் இதைக் கிழிக்கச் செய்தனர். இது ஒரு உதாரணமே.

மூன்றாவது திட்டம்:


சவூதியில் எனக்கோ, எனது நூலுக்கோ எந்தத் தடையும் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். ஆனால் சவூதி அரசின் கவனத்துக்கு பீஜேயைப் பற்றி கொண்டு சென்றால் நிச்சயம் தடை செய்து விடுவார்கள் என்பதால் அதற்கான புகாரையும் தயார் செய்து சவூதியின் தலைமை முஃப்திக்கு அனுப்பினார்கள்.


1. தம்மாம் ஜாலியாத்தில் பொழுதைப் போக்கும் முகம்மது ஜக்கி முகம்மது 
(இலங்கைவாசி)

2. தம்மாம் ஜாலியாத்தில் இதே போல் பொழுதைப் போக்கி சம்பளம் வாங்கும் முபாரக் மஸ்வூத் லெப்பை எனும் முபாரக் மதனி (இலங்கைவாசி)


3. இதே வேலை பார்க்கும் முகம்மது நூஹ்

ஆகிய இம்மூவரும் கையெழுத்திட்டு அந்தக் கடிதத்தை எழுதினார்கள்.

அந்தக் கடிதம் இதோ.


சவூதியின் தலைமை முஃப்தியும் மூத்த உலமாக்கள் அமைப்பின் தலைவருமான அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அவர்களுக்கு எழுதப்பட்ட நான்கு பக்கக் கடிதம் இது தான்:








இக்கடிதத்தில் இவர்கள் குறிப்பிடும் விஷயம் இது தான்.

தமிழகத்தில் ஜைனுல் ஆபிதீன் என்று ஒருவர் இருக்கிறார். இவர் இலங்கையிலும் இந்தியாவிலும் பிரபலமானவர். முஸ்லிம்களிடமும் முஸ்லிம் அல்லாதவரிடமும் பிரபலமானவர்.

குர்ஆன் சுன்னாவின் பால் அழைப்பதிலும் பித்அத்தை ஒழிப்பதிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

எழுத்து, பேச்சு, விவாதம், கருத்தரங்கம் என்று பல் துறைகளில் இவருக்கு ஆற்றல் உண்டு. கப்ர் வணங்கிகளுடனும், காதியானிகளுடனும், கிறித்தவர்களிடமும் இவர் விவாதங்கள் பல நடத்தியுள்ளார்.

இவரது பேச்சுக்கள் குறுந்தகடுகளாகவும் ஒளிப்பேழைகளாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. பாமர மக்கள் மத்தியில் இவருக்குப் பெரிய வரவேற்பு உள்ளது.

இவர் திருக்குர்ஆனைத் தமிழாக்கம் செய்துள்ளார். சில வசனங்களுக்கு விளக்கக் குறிப்புகளும் கொடுத்துள்ளார். இது இரண்டு முறை பதிப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் சில தவறுகளை நாங்கள் காண்கிறோம். அவற்றுள் சில

1. அல்லாஹ் மேகத்தில் வருவான் என்பதற்கு அல்லாஹ்வின் தண்டனை வரும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

2. ஹாரூத் மாரூத் மலக்குகள் அல்ல. ஷைத்தான்கள் என்று எழுதியுள்ளார்.

3. ஸாத் அத்தியாயத்தில் 34 வது வசனத்தில் அவரது சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தைப் போட்டோம் என்று மொழிபெயர்க்காமல் அவரை ஒரு சடலமாகப் போட்டோம் என்று எழுதியுள்ளார். சுலைமான் நபி ஒரு இரவில் நூறு மனைவியருடன் உடலுறவு கொண்டதாக வரும் ஹதீஸ்களை மறுத்துள்ளார்.

4. ரசூல், நபி என்பதற்கிடையே எந்த வேறுபாடும் இல்லை என்று எழுதியுள்ளார்.

5. ஆதம்(அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று எழுதாமல் ஒரு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று எழுதியுள்ளார்.

6. சிஹ்ர் - சூனியம் என்பது கற்பனை என்கிறார்.

7. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதாக புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை மறுக்கிறார்.

8. நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரணாக இருந்தால் அதை மறுக்க வேண்டும் என்கிறார். இத்தகைய ஹதீஸ்கள் சுமார் 50 உள்ளன எனக் கூறுகிறார்.

9. பத்து தடவை பாலூட்டினால் தான் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்று நபிகள் நாயகம்  மரணிக்கும் வரை குர்ஆனில் ஒரு வசனம் இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கும் ஹதீஸையும் இவர் மறுக்கிறார்.

10. ஸாலிம் என்ற இளைஞருக்கு பாலூட்டு அவர் உன் பிள்ளையாகி விடுவார் என்று ஹுதைபா (ரலி) அவர்களின் மனைவியிடம் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக வரும் ஹதீஸையும் இவர் மறுக்கிறார்.

11. முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரர்களைக் குறிக்காது. ஷைத்தானையே குறிக்கும் என்று எழுதியுள்ளார்.

12. பெண்கள் முகத்தை மறைக்க எந்த ஆதாரமும் இல்லை என்கிறார். இதனால் ஒழுக்கக் கேடுகள் தான் ஏற்படும் என்கிறார்.

13. குர்ஆனை எடுத்து எழுதிய நபித் தோழர்கள் சில எழுத்துப் பிழைகளை விட்டுள்ளனர். அது அப்படியே உள்ளது எனக் கூறி சில ஆதாரங்களையும் கூறுகிறார்.

14. குர்ஆனின் ஓரத்தில் ஸஜ்தா என்றும் மற்றும் சில வார்த்தைகளும் பின்னால் எழுதப்பட்ட பித்அத் என்று கூறி இவ்வாறு செய்தவர்களைக் கண்டிக்கிறார்.

15. நிச்சயமாக என்பதை அறவே தவிர்த்து விட்டார்.

இவரது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாங்கள் கண்ட தவறுகள் இவை. இவை தவிர அவரது உரைகளிலும், நூல்களிலும் இன்னும் பல தவறுகளைச் செய்துள்ளார். உதாரணத்துக்காக சில. இவை மட்டுமல்லாமல் இன்னும் உள்ளன.

1. இறைவன் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கு நேரடிப் பொருள் செய்யவில்லை.

2. இஜ்மாவையும், கியாஸையும் அறவே மறுக்கிறார்.

3. சலபிக் கொள்கையை மறுத்து கிண்டல் செய்கிறார். அவர்கள் தக்லீது செய்பவர்கள் என்கிறார்.

4. மனித உடலுக்குள் ஜின்கள் நுழைவதையும் இவர் மறுக்கிறார்.

5. நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பின் அவர்களை யாரும் கனவில் காண முடியாது என்கிறார்.

6. பலவீனமான ஹதீஸ்கள் துணைச் சான்றுகள் மூலம் சரியான ஹதீஸ் என்ற நிலைக்கு உயரும் என்பதையும் மறுக்கிறார்.

7. தாடியைக் கத்தரிக்க எந்த அளவும் நிர்ணயிக்கப்படவில்லை என்கிறார்.

8. ஆடைகளைத் தரையில் இழுபடும்படி தொங்க விடுவதால் தவறல்ல என்கிறார்.

9. ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்கிறார். ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என்கிறார்.

10. ஜும்ஆவுக்கு முன் சுன்னத் உண்டு என்கிறார்.

11. குழந்தையாக இருந்த போது நபிகள் நாயகத்தின் இதயம் பிளக்கப்பட்டதை மறுக்கிறார். அது குர்ஆனுக்கு முரண் என்கிறார்.

இவரது இத்தகைய தவறுகளை நேருக்கு நேராகவும் எழுத்து வடிவிலும் சகோதர தாயிகள் அவருக்குச் சுட்டிக் காட்டிய பின்னரும் தன் நிலையில் நீடிக்கிறார். எதிர் கருத்து சொல்பவர்களை விவாதத்துக்கு அல்லது முபாஹலாவுக்கு அழைக்கிறார்.

இவருக்கு இருக்கும் பேச்சாற்றல் காரணமாக இவர் கூறுவதை பாமர மக்கள் நம்புகின்றனர்.
அதனடிப்படையில் தங்களிடம் இது குறித்து சில விளக்கங்களை எதிர் பார்க்கிறோம்.

1. இவருடன் நாங்கள் எப்படி நடந்து கொள்வது

2. குர்ஆன் ஹதீஸ் பக்கம் மக்களை அழைப்பதற்காக இவர் பாடுபடுவதாலும், பித்அத்களை  ஒழிக்கப் பாடுபடுவதாலும் இவரைப் பற்றி மக்கள் மத்தியில் பேசக் கூடாது. அது தான் சமுதாயத்துக்கு நன்மை என்று சலபி உலமாக்கள் சிலர் கூறுகின்றனர். இது சரியா?

3. எவ்விதத் தவறும் இல்லாமல் மன்னர் பஹத் செலவில் ஒரு தமிழாக்கம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவரது தமிழாக்கத்தை விற்பதும் வாங்குவதும் கூடுமா? அவரது தமிழாக்கம் ரகசியமாக சவூதி அரேபியாவில் விற்கப்படுகிறது.

இது பற்றி தங்களின் மேலான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.

இது தான் மேற்படி மதனிமார்கள் எழுதிய புகார் பட்டியல்.

கடிதத்தில் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் கொஞ்சம் வஞ்சப் புகழ்ச்சியுடன் எழுதப்பட்டதைக் கண்டு இவர்களை நாகரிகமாக விமர்சித்தவர்கள் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. மக்களிடம் இவர்கள் செய்யும் விமர்சனம் எவ்வளவு தரம் கெட்டதாக இருந்தது என்பதை நாம் அறிவோம்.

நமது கொள்கைச் சகோதரர்கள் பற்றி உளவுத் துறையில் போட்டுக் கொடுத்து இழி செயல் புரிந்தனர் என்பதும் தம்மாமில் பிரசித்தம்.

தவ்ஹீத் பிரச்சாரம் தான் தமுமுகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை எனக் கூறி, தர்கா விழாக்களுக்கு வாழ்த்து வழங்கிய தமுமுகவின் கொள்கை இவர்களுக்குத் தடையாக இல்லை.

சில அறியாத சகோதரர்கள் தமுமுக தேவை என்று நினைக்கிறார்கள். சமுதாயத்துக்கு குரல் கொடுப்பார்கள் என்று அவர்கள் நம்புவதால் இப்படி நினைக்கிறார்கள். அந்தக் காரணமும் இவர்களுக்கு இல்லை. இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் தமுமுக இவர்களுக்கு உதவாது. தம்மாமிலும் உதவ முடியாது. அப்படி இருந்தும் தம்மாம் தமுமுகவுடன் இவர்கள் கை கோர்க்க முடிகிறது. தமுமுக நட்த்தும் தொலைக் காட்சி நிகழ்ச்சயில் முகம் காட்ட முடிகிறது. சவூதியில் ஹிஸ்ப் எனப்படும் அரசியல் அமைப்புகளுக்குத் தடை என்ற போதும் இவர்களுடன் கூடிக் குலாவ முடிகிறது.

ஜமாஅதே இஸ்லாமி, தப்லீக், விடியல் ஆகிய இயக்கங்களின் கொள்கைகளும் சவூதியின் கொள்கைக்கும் இவர்கள் ஏற்றுக் கொண்ட கொளகைக்கும் முரணானவை. இவர்களும் இரகசியமாகச் செயல்பட்டுக் கொண்டு தான் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு எதிராக எந்தப் புகாரையும் இவர்கள் அளித்ததில்லை.

சவூதியில் எதையும் தீர விசாரிப்பார்கள் என்பதால் தான் தரக் குறைவாக எதையாவது எழுதினால் மாட்டிக் கொள்வோம் என்று இப்படி ஒரு புகார் அனுப்பினார்கள்.

இவர்கள் அனுப்பிய புகாருக்குப் பின்னர் சவூதி அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இவர்கள் ஆசைப்பட்டது போல் எந்தத் தடையும் போடவில்லை.

மாறாக புகார் அனுப்பியவர்கள் வழியாக எனக்கு இரண்டு மடல்களை அனுப்பி என்னிடம் சேர்ப்பிக்கும் படியும்இ இந்தப் புகார் கடிதத்தையும் பீ.ஜே.க்கு அனுப்ப வேண்டும் என்றும் புகார் எழுதியவர்களுக்கு சவூதி அரசு உத்தரவிட்டது.

இதன் பின்னர் புகார் அனுப்பியவர்களில் ஒருவரான முபாரக் மதனி என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சவூதி அரசு உங்களுக்கு சில தகவல்களைத் தெரிவிக்க பணித்துள்ளது. உங்கள் பேக்ஸ் நம்பர் வேண்டும் என்று கேட்டார். யாருக்கும் தெரியாமல் அவர் எழுதிய புகார் கடிதத்தை அவர் வழியாகவே எனக்கு அல்லாஹ் கிடைக்கச் செய்தான்.

இவர்கள் கொளகை வாதிகள் என்றால் நாங்கள் தடை செய்ய வேண்டும் புகார் கொடுத்தவருக்கு அரசு மரியாதையா? என்று கேட்டு வெலையை உதறி இருக்க வேன்டும்.

இத்துடன் சவூதி அரசின் சார்பில் என்னிடம் சேர்ப்பிக்கச் சொன்ன கடிதங்கள் இது தான்.






தலைமை முப்தீ அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் தம்மாம் ஜாலியாத் முதீருக்கு எழுதுவதுஇ அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜைனுல் ஆபிதீன் என்பவர் செய்த திருக்குர்ஆன் தமிழாக்கம் பற்றி உங்கள் ஜாலியாத் தாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதில் பல தவறுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அழகிய முறையில் ஜைனுல் ஆபிதீனுடன் கலந்துரையாடல் நடத்த ஆர்வம் கொண்டுள்ளோம். இவ்வாண்டு (ஹிஜ்ரி 1426) ராபிதா அல் ஆலமுல் இஸ்லாமி மூலம் ஹஜ் கடமையை நிறைவேற்ற அழைப்பு விடுக்கிறோம். துல்ஹஜ் பிறை 1 முதல் ஹஜ் முடியும் வரை நமது விருந்தினராக அவரை அழைக்கும் அழைப்பிதழையும் இணைத்துள்ளோம். எனவே இந்த அழைப்பிதழை அந்தப் பெரியவரிடம் விரைந்து சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

என்பது முதல் கடிதம். 

அடுத்த கடிதம் எனக்கு எழுதப்பட்டதாகும்.

பெறுநர்: பேராசிரியர் ஜைனுல் ஆபிதீன்

இந்தியாவின் பிரச்சார தாயி.

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு உங்களை அழைக்கிறோம். அதற்கான அனுமதி எண் ......

உங்களை உபசரிக்கும் செலவு எங்களுடையது. பயணச் செலவு உங்களுடையது.

ஜனவரி 1 2006 முதல் ஜனவரி 16 2006 வரை விருந்தினராக இருப்பீர்கள்.

இஹ்ராம் நிய்யத்துடன் பிரவேசிக்க வேண்டும்.

சவூதி வருகை பற்றி ஒரு வாரம் முன்பு பேக்ஸ் மூலம் தெரிவிக்கவும்.

நீங்கள் ஒருவர் மட்டுமே வரலாம்.

இப்படி இரண்டாம் கடிதம் கூறுகிறது-

ஹஜ் அழைப்பில் ஹஜ் கிரியை முடியும் வரை இஹ்ராமுடன் தங்கவே அழைப்பு இருந்தது. விவாதித்தல் பற்றி எந்த விபரமும் காணப்படவில்லை. முப்தி அவர்களின் கட்டளையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என்பது தெரியவில்லை.

ஹஜ் முடிந்த பின் எங்கே விவாதிப்பது, அதற்கான கால அளவு எதுவுமே இதில் காணப்படவில்லை.

சாதாரண நட்பு முறையில் பேசவே அவர்கள் விரும்பியுள்ளனர் இதிலிருந்து தெரிகிறது. இந்த மதனிகள் சுட்டிக் காட்டிய விஷயங்கள் புதுமையானது அல்ல என்பதால் கண்ணியப்படுத்துவது தான் இதன் நோக்கமாக இருந்தது.

இல்லாவிட்டால் ஹஜ் இல்லாத காலங்களில் இதற்காக வரச் சொல்லி அழைப்பு அனுப்பி இருப்பார்கள். ஹஜ் பரபரப்பில் இதற்காக அழைப்பு அனுப்ப மாட்டார்கள்.

இந்த அழைப்புக்கு நாம் பதில் அளித்து கடிதம் அனுப்பினோம். அதன் கடிதம் இதோ.



(கடிதம்)

தமிழக முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக கும்பகோணத்தில் ஜனவரி 29 அன்று மாநாடு பேரணி நடத்துகிறோம்.

நானே அமைப்பில் தலைவராக இருப்பதால் இந்தக் கட்டத்தில் என்னால் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது என்று பேரணியின் நோக்கம் செயல்பாடு அனைத்தும் விளக்கப்பட்டது.

எனவே ஜனவரிக்குப் பின் இரண்டு மாத அவகாசத்தில் தாங்கள் வசதிப்படும் எந்த நாளில் என்னை அழைத்தாலும் எனது சொந்தச் செலவில் வந்து மதனிமார்கள் கூறிய புகார்கள் குறித்து நட்பு முறையில் கலந்துரையாடல் நடத்தத் தயாராக இருக்கிறேன் என்று பதில் போட்டேன்.

அந்த பதிலை முபாரக் மதனி அக்கடிதத்தில் குறிப்பிட்ட அத்தனை பேக்ஸ் எண்ணுக்கும் அனுப்பினேன்.

ஜித்தாவின் ஷிப்லி அவர்கள் மூலம் நேரடியாகவே நேரடியாகவே ஜித்தாவில் உள்ள தலைமை அலுவலகத்திலும் சேர்ப்பித்தேன்.

ஆண்டுகள் பலவாகியும் அவர்களிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

இதிலிருந்து ஹஜ்ஜுக்கு விருந்தாளியாக அழைத்து கௌரவப்படுத்தவே விரும்பியுள்ளார்; விவாதிப்பதற்கு அல்ல என்பது உறுதியானது.

இவர்களின் புகார் பைஸா பெறுமானமில்லாதது என்பது சவூதி அரசின் நடவடிக்கையில் இருந்து தெரிகிறது.

ரகசியமாக குர்ஆன் தமிழாக்கம் விற்பனை செய்யப்படுகிறது என்று இவர்கள் போட்டுக் கொடுத்தும் எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை. பொதுவாக பிரச்சாரம் தொடர்பாக எத்தகைய கடும் நடவடிக்கையை சவூதி எடுக்குமோ அவற்றில் ஒன்றைக் கூட எடுக்கவில்லை.

இது தான் நடந்த உண்மை. இது மட்டுமல்லாமல் என்னைப் பற்றி இவர்கள் எழுதிய புகார்களில் எதை இவர்கள் குறையாக சுட்டிக் காட்டினார்களோ அவை அனைத்தும் அவர்களிடம் என்னைப் பற்றி உயர்வான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது.

இதனால் தான் இது தான் பைபிள் என்ற நூலை இலவசமாக ஜாலியாத்கள் வெளியிட்டன.




இது போல் இயேசு இறைமகனா என்ற நூலையும் இலவசமாக வெளியிட்டுள்ளனர்.



பித்அத் என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையையும் புத்தகமாக வெளியிட்டனர்.


நோன்பு என்ற எனது நூலையும், திருமறையின் தோற்றுவாய் என்ற நூலையும் வெளியிட்டனர்.

 
அதற்காக என்னிடம் அனுமதி கேட்டு எழுதிய கடிதம் இதோ.




 
இன்னும் சில கடிதங்கள் தவறி விட்டன.



சவூதியில் படித்தவர்களாக இவர்கள இருந்தும்இ எனக்கெதிராக எல்லா வகையான கேடுகளையும் சவூதியில் செய்து முடிக்க எல்லா வாய்ப்புகளையும் இவர்கள் பெற்றிருந்தும் இவர்களின் எந்தத் திட்டமும் பலிக்கவில்லை.

துபை, கத்தர் போன்ற நாடுகளில் எனக்கு எதிராக செயல்பட்டவரும் இவர்களைப் போன்ற ஒரு மதனி தான். அவர் செய்த தில்லுமுல்லுகள், திருகு தாளங்கள் என்னென்ன? என்பதை அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ் விளக்குகிறேன்.

பீ.ஜே. கோடி கோடியாக பணம் சேர்த்து விட்டார் என்று புளுகுபவர்களுக்கும் பதிலளிக்க நண்பர்கள் வற்புறுத்துகின்றனர். பொது வாழ்வில் எனது நேர்மை குறித்து எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளும் அபத்தமானவைஇ உண்மைக்கு புறம்பானவை என்பதையும் அடுத்தடுத்து விளக்குவேன் இன்ஷா அல்லாஹ்.

மதனிகளாக இருந்தும் இவர்களின் தில்லுமுல்லுகளைக் கண்டு கொதித்துப் போன நல்ல மதனிகளும் உள்ளனர். நம்மால் செய்ய முடியாததை இந்தச் சாமானியர்களாவது செய்கிறார்களே என்று மகிழ்ச்சியடையும் மதனிகளை எனது இந்த விமர்சனம் கட்டுப்படுத்தாது.

Thursday, March 11, 2010

அதிரை AJ பள்ளி சுவர் இடிப்பு - கொதித்து எழுந்த முஸ்லிம்கள்

அதிராம்பட்டிணம் பழஞ்செட்டி தெருவில் உள்ள AJ பள்ளியின் சுற்றுப்புற சுவரை ஒரு பாஸிஸ்ட் JCB இயந்திரத்தை வைத்து நேற்று (10.03.2010) இரவு 10 மணி அளவில் இடித்து தள்ளியுள்ளான்.

இதனை அறிந்த முஸ்லிம்கள் AJ  பள்ளியில் திரண்டனர். உடனே, பள்ளி சுற்றுப்புற சுவரை கட்ட ஆரம்பித்தனர்.
 
AJ பள்ளிக்கு பக்கத்தில் வசிக்கும் பாலு என்பவன் தான் இந்த செயலை செய்தது. காவல்துறையையும் சட்டத்தையும் மதிக்காமல் இவ்வாறு செய்த பாலு என்ற ஃபாஸிஸ்ட்டு தலைமறைவாகிவிட்டன. இதன் பின்னர், இவனின் வீட்டை காவல்துறை சோதனையிட்டது. பள்ளியின் சுற்றுப்புற சுவரை உடனே, கட்டுவதற்கு காவல்துறை அனுமதி அளித்தது. பள்ளியின் சுற்றுப்புற சுவரை இடித்த JCB இயந்திரம் அதிகமான வேகத்தில் பட்டுக்கோட்டையை நோக்கி தப்பிவிட்டது.

இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்யவிட்டால், காவல்நிலைய முற்றுகைக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்களும் மற்ற இயக்கத்தினர் பள்ளியை முகாமிட்டுள்ளனர்.
 
விரிவான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் விரைவில்.

தகவல்: அதிரை Y. அன்வர் அலி (தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்)

Tuesday, March 09, 2010

நெசவுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிரையின் அனைத்து பகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரங்களை நடத்தி வருகிறது.



இதன் தொடர்ச்சியாக, கடந்த 08.03.2010 அன்று அதிராம்பட்டிணம் நெசவுத் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'வெட்கம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் பலர் கலந்துகொண்டு உரையை கேட்டனர்.

Monday, March 08, 2010

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை அமல்படுத்த கோரி சென்னையில் ஜூலை 4ல் மாபெரும் மாநாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கடந்த 07-03-2010 ஞாயிறு அன்று மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைமையில் ஈரோடு பவானி மெயின் ரோட்டில் அமைந்துள்ள கே.கே.எஸ்.கே. மஹால் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இது மாநில மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி துவக்க உரையுடன் காலை 10.30க்கு ஆரம்பமானது.

பின்னர், பெருகிவரும் ஜமாஅத்தின் பணிகள் நிமித்தமாக கூடுதலாக ஒரு துணைத்தலைவர் பொறுப்பின் அவசியத்தை மாநிலத்தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

கூடுதல் துணைத்தலைவர் பொறுப்பிற்கு மாநிலச் செயளாலர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வை மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில மேலாண்மைக்குழு இணைந்த கூட்டுக்கூட்டம் நியமித்ததற்கு மாநில செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வாதாரக் கோரிக்கையான மத்திய அரசில் இடஒதுக்கீட்டு கோரிக்கையை வென்றெடுக்கவும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அம்சங்களை வலியுறுத்தவும் ஜூலை4 ஆம் தேதி சென்னை தீவுத் திடலில் முஸ்லிம்களின் கோரிக்கை மாநாட்டை நடத்த வேண்டியதன் அவசியத்தை மேலாண்மைக்குழு உறுப்பினர் பீ.ஜைனுல் ஆபிதீன் விளக்கி செயற்குழுவின் ஒப்புதலைப் பெற்றார். அதைத்தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது எப்படி? என்ற ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க மாநாட்டுக்குழு அமைக்கப்பட்டு அந்த குழுபற்றிய அறிவுப்பும் வெளியிடப்பட்டது. வழக்கம்போல் நடத்தப்படும் கோடை கால நல்லெழுக்கப் பயிற்சி தொடர்பாகவும் மாவட்ட வாரியாக ஆலோசனைகள் பெறப்பட்டன.

மாவட்ட நிர்வாகத்தின் பணிகளை இன்னும் வீரியப்படுத்த, அவர்களை ஊக்குவிக்கும் முகமாக டிஎன்டிஜேயின் ரியாத் மண்டலம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. தங்களது மாவட்டத்தின் செயல்பாடுகளை உடனுக்குடனே தவ்ஹீத் ஜமாஅத்தின் http://www.tntj.net/ இணையதளத்திற்கு அதிக செய்திகளை அனுப்பி வைத்து முதலிடம் பெற்ற இரமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ. 18,000ம், இரணடாம் இடம்பெற்ற கோவை மாவட்டத்திற்கு ரூ. 17,000ம், மூன்றாம் இடம் பிடித்த தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு ரூ. 15,000ம் வழங்கப்பட்டது.

மேலும் அதைத் தொடர்ந்து பத்து இடங்களை பிடித்த மாவட்டங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் 39 மாவட்டங்களுக்கும் பீ.ஜே. மொழி பெயர்த்த 156 திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு மாற்று மத அன்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பு நிர்ணய சட்டம் குறித்தும் அதில் செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மற்றங்கள் குறித்த விளக்கத்தையும் பீ.ஜே. செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

அதில் மேலாண்மைக்குழுவின் அதிகார வரம்பு என்ன? மாநில நிர்வாகத்தின் வரவு செலவுகளை சரி பார்க்க தணிக்கைகுழு அமைக்கப்பட்டதன் விபரங்களையும் அவர் விளக்கினார். மேலும் தணிக்கை குழுவின் தலைவராக அன்வர்பாட்ஷா, உறுப்பினர்களாக சைஃபுல்லாஹ் ஹாஜா, அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி, தம்மாம் தவ்ஃபீக், துபை முஹம்மது சர்புதீன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதற்கான அங்கீகாரத்தையும் செயற்குழு வழங்கியது. அதைத்தொடர் ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு செயற்குழு இனிதே நிறைவு பெற்றது.

07-3-2010 மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டில் காங்கிரஸின் துரோகமும் டி.என்.டி.ஜே.யின் போராட்டமும்

1. 2004 ல் நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தனது விசாரணை அறிக்கையை 2007ல் மத்திய சமர்ப்பித்தார். அதை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதிக்காமல் பத்திரிக்கைகள் மூலம் அறிக்கை விபரம் கசியத்தொடங்கிய பிறகு மிகவும் தாமதமாக 2009ல் நாடாளுமன்றத்தில் கமிஷன் அறிக்கையை மட்டும் சமர்ப்பித்துவிட்டு அரசின் நடவடிக்கை அறிக்கையை கூட சமர்ப்பிக்காமல் கமிஷன் அறிக்கையின் மீதும் விவாதிக்காமல்? சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் பச்சை துரோகம் செய்துவரும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

2. இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஜூலை 4 ல் சென்னைத் தீவுத் திடலில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைப்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக்கோரி 15 லட்சம் முஸ்லிம்களை திரட்டி கோரிக்கையை வென்றெடுப்பது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

3. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக கடந்த 2004 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை பிடித்தது. முழு ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தும் வெறும் கமிஷனை அமைத்ததைத் தவிர இடஒதுக்கீட்டிற்காக வேறு எந்த முயற்சியும் காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவில்லை. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைக்குப் பிறகு பொதுக்கருத்து எட்டப்பட வேண்டும் என்ற சாக்கைச் சொல்லி இடஒதுக்கீட்டை தள்ளிப்போட்டு வருகின்றது. காங்கிஸின் இந்த மெத்தனப்போக்கையும் அலட்சியப்போக்கையும் வன்மையாகக் கண்டிப்பதுடன் ரங்கனாத் கமிஷன் அறிக்கையை உடனே அமுல்படுத்துமாறு மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

ஆந்திர இடஒதுக்கீடு பறிப்புக்கு கண்டனம்

4. அண்மையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. மூன்றாவது முறையாக ஆந்திர உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்து முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டில் மண்னை அள்ளிப்போட்டுள்ளது. உடையில் கறுப்புச் சட்டையும் உள்ளத்தில் காவிச் சிந்தனையும் கொண்ட நீதிபதிகள் இந்த நீதித்துறையில் குடியேறி இருப்பதை தெள்ளத்தெளிவாக இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மத அடிப்படையிலான ஒதுக்கீடுதான் என்ற விபரம் பாமரனுக்கும் தெரிந்த உண்மையாகும். அத்துடன் ஆந்திரத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது முஸ்லிம்களில் பிற்பட்டோர்கள் என்ற அடிப்படையில் தான் என்பது மற்றொரு உண்மையாகும். இந்த உண்மைகளுக்குப் புறம்பாகவும் மாநிலத்தில் உள்ள ஒரு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு போதுமான அளவு பிரதிநிதித்துவம் இல்லை என அரசு கருதினால் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற 16(4) பிரிவு அரசியல் சட்டத்துக்கு எதிராகவும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை மதரீதியானது என்று காரணம் காட்டி ரத்து செய்திருப்பது முஸ்லிம்களுக்கு இழைத்த மாபெறும் அநீதியும் அநியாயமும் ஆகும். ஆந்திர நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு இழைத்த இந்த அநியாயத்தையும் அக்கிரமத்தையும் இம்மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது.

புதுவை மாநில அரசுக்கு கோரிக்கை

5. புதுவை மாநிலத்தில் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 2.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாக புதுவை சட்டமன்றத்தில் புதுவை காங்கிரஸ் அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தை சட்டமாக்குவோம் என்றும் ஆந்திராவைப் போன்று புதுவையில் வட்டியில்லா கடன் வழங்குவோம் என்றும் புதுவை காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் கடத்துகின்ற புதுவை அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு உடனே அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு புதுவை அரசை இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுள்ளது.

மேற்குவங்க அரசுக்கு நன்றி

6. முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ள மேற்குவங்க அரசை இச்செயற்குழு பாராட்டுகின்றது. அத்துடன் அம்மாநிலத்தில் 25 சதவீதம் முஸ்லிம்கள் வாழுகின்றனர். அவர்களின் அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்குமாறு அம்மாநில அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

சாமியார்கள் ஒடுக்கப்படவேண்டும்

7. இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் மனிதன் ஒருபோதும் கடவுளாக முடியாது. மனிதனுக்கு எந்த கடவுள் தன்மையும் கிடையாது. மனிதத்தன்மையை விட்டு மனிதன் மாறி தெய்வீகத்தன்மை அடைய முடியாது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே தரகர்கள் இருக்கக்கூடாது என்பது இஸ்லாத்தின் கடவுள் கொள்கையாகும். இந்தக் கடவுள் கொள்கையை மக்கள் புரியாத காரணத்தினால் ஒழுக்கமிக்க சாதாரண மனிதனை விட சாமியர்களை கடவுளாக நம்பி ஏமாறுகின்றனர். மக்களின் இந்த அறியாமையை பயன்படுத்தி பல சாமியார்கள் மக்களை ஏமாற்றிவருகின்றனர். எனவே மனிதன் கடவுளாக முடியாது என்ற அடிப்படையை மக்கள் விளங்கி சாமியர்களின் சதிவலையில் விழாமல் தங்களை காத்துக்கொள்ள வேண்டுமென அனைத்து சமுதாய மக்களையும் இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

8. இந்த சாமியார்களின் பட்டியலில் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தவர் நித்யானந்தா என்ற மோசடி பேர்வழி. இந்த நித்யானந்தா மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக, கர்நாடக மற்றும் மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

9. நாடு முழுவதும் ஆன்மீகத்தின் பெயரால் வளம் வருகின்ற இந்த சாமியார்கள் ஏராளமான நிலங்களை வளைத்துப்போட்டுள்ளனர். மேலும் பல்லாயிரம் கோடி அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அவர்களிடத்தில் உள்ளன. அவர்கள் அவற்றை எந்த வழியில் பெற்றார்கள் என்பதை மத்திய மாநில அரசுகள் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் மூலம் கண்டுபிடித்து முறைகேடாக அவர்களிடம் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

10. கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க உதவுகின்ற இந்த ஆசிரமங்களுக்கு அளிக்கின்ற வரிச்சலுகைகளை ரத்துசெய்ய வேண்டுமென மத்திய அரசை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

11. தங்களை கடவுளர்களாக காட்டிக்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக ஆசிரமங்கள் என்ற பெயரில் சொத்துக்களை குவித்து வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்ற பிரபலமான ஆண் பெண் சாமியார்களின் பாதங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் விழுந்து வணங்கி ஆசிபெறுவதால் இந்த சாமியார்களின் சட்டவிரோதமான செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு அதிகாரிகள் தயங்குகிறார்கள். சாமியர்களின் பெருக்கத்திற்கு இதுவே காரணம் என்று இச்செயற்குழு கருதுகிறது. மதச்சார்பின்மையை காக்கின்ற வகையில் மத்திய மாநில அமைச்சர்களும் அதிகாரிகளும் இவர்களுடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

12. மதத்தின் பெயரால் செவிடர்களை செவியேற்கச் செய்கின்றோம். குருடர்களை பார்க்கச் செய்கின்றோம் முடவர்களை நடக்கச் செய்கின்றோம் என்று மந்திரம் செய்வதாக நேரிலும் தொலைக்காட்சியிலும் நடத்தப்பட்டுவரும் அனைத்து மதத்தவர்களின் நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டுமென மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

புனே குண்டுவெடிப்பு

13. புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பை இந்த மாநில செயற்குழு கண்டிக்கின்ற அதே வேளையில் கண்காணிப்புக் கேமராவில் கூட குற்றவாளி யார்? என்று கண்டுபிடிக்க முடியாதபோது விசாரணைக்கு முன்பே எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதை இச்செயற்குழு கண்டிக்கின்றது.

14. மராட்டியம் மராட்டியர்களுக்கே என்று குரலெழுப்பி மும்பையில் இனவெறி தாக்குதலை நடத்திய சிவசேனா மற்றும் நவநிர்மான் சேனா அமைப்பினர்களின் மீது சட்டப்படி தயவுதாட்சணையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது..

15. தொடர்ந்து இந்தியர்களின் மீது இனவெறித்தாக்குதல் நடத்திவருகின்ற இனவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கின்ற ஆஸ்திரேலிய அரசை இம்மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

விலைவாசி உயர்வு

16. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருவதற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்த விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அநியாய வரிகளே காரணமாக உள்ளன. விவசாயி பாட்டாளி மற்றும் பொதுமக்களை மிகப்பெரும் அளவில் இது பாதிப்பதால் மத்திய அரசு உடனே பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப்பெறுவதுடன் பிற நாடுகளைப் போன்று நமது நாட்டிலும் பெட்ரோல் டீசலுக்கு வரி விதிப்பதை கைவிடவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

17. சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ஆதாரம் உரியோருக்கு வழங்கப்படாமல் அப்படியே திரும்ப அனுப்பப்படுகின்றது. முஸ்லிம்கள் இந்த நிதி கோரி விண்ணப்பிக்கும் போது அந்த நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றே சம்பந்தப்பட்டத் துறையினர் பதிலளிக்கின்றனர். இந்த அநீதியை உடனே தடுத்து நிறுத்தி உரியவருக்கு நிதி கிடைக்க ஆவண செய்யுமாறு மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

ஊடக கருத்து சுதந்திரம் பறிப்புக்கு கண்டனம்

18. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வரதராஜரின் மரணம் மர்மமாக நீடிக்கிறது. அது ஒரு படுகொலை என பலமான ஐயம் எழுவதால் காவல் துறை விசாரணையை சரியான கோணத்தில் கொண்டுசென்று உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர கேட்டுக்கொள்வதுடன் இது தொடர்பான செய்தியை வெளியிட்ட மக்கள் தொலைக்காட்சியின் மீது தாக்குதல் நடத்திய மார்க்ஸிஸ்ட் கட்சியினரை இம்மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஈரோட்டில் தொழிற் பூங்கா

19. நூறாண்டு காலமாக தோல் தொழிலில் சிறப்புற்று விளங்கும் ஈரோடு மாநாகரில் தோல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக ஈரோட்டில் தோல் தொழில் பூங்காவை ஏற்படுத்தித்தர வேண்டுமென இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

மகளிர் இடஒதுக்கீடு

20. பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம தொகுதிகளில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட வகை செய்யும் சட்ட மசோதாவை நாளை (8.3.2010) பிரதமர் தாக்கல் செய்ய போவதாக தெரிகிறது. இந்த முடிவு எதிர் காலத்தில் இந்திய அரசியலில் கேலிக்கூத்தாகத்தான் அமையும். எதார்த்தத்தில் ஒட்டுமொத்த மகளிர் ஜனத்தொகையில் 33 சதவிகிதம் பெண்கள் அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. மேலும் எந்த ஒரு அரசியலில் கட்சியிலும்கூட மொத்த உறுப்பினர்களில் 33 சதவிகித பேர் பெண்களாக இல்லை. சில மகளிர் அமைப்பினர்களின் பெண் பிரமுகர்களின் கோரிக்கைத்தானே தவிர ஒட்டு மொத்த பெண் சமுதாயமும் தனக்கு அரசியலில் இட ஒதுக்கீடு கேட்டு போராடவில்லை. ஒரு கட்சியின் வளர்ச்சிக்கான களப்பணியாகிய பிரச்சாரம் சுவரொட்டி ஒட்டுதல்இ சிறை செல்லுதல், இன்னபிற தியாகங்களை செய்வதில் 5 சதவிதம் கூட பெண்கள் இல்லாத நிலையில் 33 சதவிகிதம் அளிப்பது அநீதியாகும். இந்தியாவை விட அதிகமாக கல்வி அறிவிலும் பெண் உரிமையைப்பற்றியும் பேசும் மேற்கத்திய நாடுகளில் கூட 10 சதவிகிதம் பெண்கள்கூட அரசியலில் இல்லை எனும் போது கல்வி அறிவிலும் அரசியல் ஈடுபாட்டிலும் மிகவும் பின்தங்கியுள்ள இந்திய பெண்கள் சமுதாயத்தின் மீது வலிய திணிப்பதாகவே அமையும். மேலும் ஒரு குறிப்பிட்ட சில ஆணாதிக்க அரசியல்வாதிகளின் கைப்பாகையாகவே அந்த பெண்கள் இருப்பார்கள். இதை உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்பட்ட பெண்கள் பிரதிநிதிகள் விஷயத்தில் நாட்டுமக்கள் நிதர்சனமாக கண்டுவருகிறார்கள். எனவே இந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு அநீதி என இந்த செயற்குழு தீர்மானிக்கிறது.

Sunday, March 07, 2010

வாய்க்கால் தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 06.03.2010 அன்று அதிராம்பட்டிணம் வாய்க்கால் தெரு ரஹ்மானிய்யா பள்ளிவாசல் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'கணவன் மனைவி கடமைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் பலர் கலந்து கொண்டு உரையை கேட்டனர்.

Saturday, March 06, 2010

மீலாதும் மவ்லிதும் - சொற்பொழிவு (ஆடியோ)

'மீலாதும் மவ்லிதும்' என்ற தலைப்பில் சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரை.


அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்ட தர்பியா முகாம்


அதிராம்பட்டிணத்தில் உள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் 28.02.2010 அன்று தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகி மற்றும் உறுப்பினர்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது.





இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி அவர்கள் 'தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள்' பற்றி உரையாற்றினார்கள்.

பின்னர், மௌலவி மஸ்வூத் யூசுஃபி அவர்கள் 'தவ்ஹீத்வாதிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்து, தஞ்சை தெற்கு மாவட்ட பேச்சாளர் சகோதரர் உமர் அவர்கள் 'நல்ல பண்புகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி அவர்கள் 'இயக்கங்கள் ஒரு பார்வை' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

Friday, March 05, 2010

அவிஸோ (AWISO) அறக்கட்டளையின் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் சிறப்புப் பள்ளி மூடப்பட்டது - மௌலானா ஷேக் அப்துல்லாஹ் தப்பி ஓட்டம்

அதிராம்பட்டிணம் MSM நகர் ஆதம் லைனில் அரசின் அனுமதியின்றியும், பள்ளி நடத்தப்பட்ட வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றியும் நடத்தப்பட்டு வந்த "மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் சிறப்புப் பள்ளி" குன்றியவர்களுக்கான பயிற்சி பள்ளி அரசு அதிகாரிகளால் இன்று மூடப்பட்டது. அவிஸோ (AWISO) என்ற அறக்கட்டளை சார்பில் இந்த பள்ளி கடந்த நான்கு மாதமாக நடத்தப்பட்டு வந்தது.

இவர்கள் நடத்தும் இந்த பள்ளியை அரசின் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் சோதனை செய்தனர். இன்று RDO உள்பட அரசின் முக்கிய நிர்வாகிகள் நேரில் வந்து இந்த பள்ளியை மூடினர். 

அவிஸோ அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளான மௌலானா ஷேக் அப்துல்லாஹ் மற்றும் ஷேகு அப்துல்லாஹ் ஆகியோர் தப்பி ஒடிவிட்டனர்.

அரசின் அனுமதியில்லாமல் நடத்தப்பட்ட இந்த பள்ளியை மூடிய அதிகாரிகள், இந்த பள்ளியை நடத்தியவர்களை கைது செய்யாமல் போனது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.

அவிஸோ அறக்கட்டளை நடத்திய பள்ளியை அரசு அதிகாரிகள் மூடியபோது எடுத்த படங்கள்:




சமுதாய மக்களுக்கு ஒர் வேண்டுகோள்:

நாங்கள் சமுதாய சேவை செய்கிறோம் என்று கிளம்பும் முகவரி இல்லாத பேர்வழிகளுக்கு உதவும் முன் அவர்களை பற்றி நன்றாக விசாரித்துவிட்டு அவர்களுக்கு உதவுங்கள். இந்த அறக்கட்டளை வசூல் செய்த பணத்தை என்ன செய்ய போகிறார்கள் என்பது தெரியவில்லை.

இது போன்ற முகவரி இல்லாத பேர்வழிகள் கிளம்பும் போது அவர்களை பற்றி விபரம் அறிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையையே அல்லது மாவட்ட கிளை நிர்வாகிகளையே தொடர்பு கொள்ளவும்.

தகவல்: அதிரை Y. அன்வர் அலி

Wednesday, March 03, 2010

பட்டுக்கோட்டையில் மாற்றுமத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஒரு மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.



இதை தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி அவர்கள் வழங்கினார்கள்.

குறிப்பு: TNTJ சவூதி ரியாத் மண்டலம் மாற்றுமத சகோதரருக்களுக்காக வழங்கும் 5 திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் இருந்து இது வழங்கப்படுகிறது.

Tuesday, March 02, 2010

நபிமொழி - நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறி புகழ்வது

'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல் நீங்கள் என்னை புகழ்ந்து விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடிமை. எனவே, என்னை 'அல்லாஹ்வின் அடிமை' என்றும் 'அல்லாஹ்வின் தூதர்' என்றும் சொல்லுங்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3445

Sunday, February 28, 2010

மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 08.02.2010 அன்று மேலத்தெருவில் அதிராம்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார்கள். 


Thursday, February 25, 2010

சத்திய இஸ்லாத்தை ஏற்ற டாக்டர் சவுந்தர்ராஜன் அவர்களின் உரை

சத்திய இஸ்லாத்தை ஏற்று கொண்ட சவுந்தர்ராஜன் அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்தது எப்படி என்பதை விளக்கி தஞ்சை வல்லத்தில் நடைபெற்ற 'தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில்' ஆற்றிய உரை.
  

Tuesday, February 23, 2010

புடம் போடும் புறக்கணிப்புகள்

மீலாது விழா புறக்கணிப்பு!
மவ்லிது விழா புறக்கணிப்பு!
திருமண விழா புறக்கணிப்பு!
நாற்பதாம் பாத்திஹா புறக்கணிப்பு!
பூப்புனித நீராட்டு விழா புறக்கணிப்பு!
கத்னா விழா புறக்கணிப்பு!
இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதில் புறக்கணிப்பு!
இணை வைத்த பெற்றோராயினும் ஜனாஸாத் தொழுகை புறக்கணிப்பு!
இந்நிகழ்ச்சிகள் நடக்கும் சபைகளில் மட்டுமல்ல! அவற்றின் சார்பாக நடக்கும் விருந்துகளிலும் புறக்கணிப்பு!
புது வீடு புகும் போது நடைபெறும் விருந்து அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் அங்கு மவ்லிது ஓதப்பட்டிருந்தால் அது இணை வைப்பு என்பதால் அதையும் புறக்கணிக்கும் நிர்ப்பந்தம்.
திருமணம் எனும் போது திருமண சபையில் ஓதப்படும் யாநபி பாடல், வாங்கப்படும் வரதட்சணை, வழங்கப்படும் பெண் வீட்டு விருந்து காரணமாக அதைப் புறக்கணிக்கும் நிர்ப்பந்தம்!
இவை அல்லாமல் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத மேடைகளிலும் புறக்கணிப்பு! அது இஸ்லாமிய அமைப்புகள், அல்லது பிற மத அமைப்புகள் பங்கு கொள்ளும் பொது மேடைகளாயினும் சரி! அல்லது அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் பங்கு கொள்ளும் மேடைகளாயினும் சரி! நாம் புறக்கணிக்கவே செய்கிறோம்.
இதனால் உறவினர்களுக்கு மத்தியில் விரிசல்! நண்பர்களுக்கு மத்தியில் பகைமை! அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி போன்றவற்றைச் சந்திக்கிறோம்.
இவையெல்லாம் ஒரு தவ்ஹீதுவாதியின் உள்ளத்தில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒரு விதமான சலிப்பு, ஒரு விதமான சங்கடம் நம் உள்ளத்தை ஆட்கொள்கின்றது.
எங்கும் புறக்கணிப்பு! எதிலும் புறக்கணிப்பு! ஏன் இப்படி? என்ற கேள்விக் கணையை நம்முடைய மனம் தொடுக்கின்றது.
இவை அனைத்துமே ஒன்றே ஒன்றுக்காகத் தான். இறைவனுக்கு இணை வைக்கும் பாவத்திற்கு நாம் துணை போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் இந்தப் புறக்கணிப்புகள்!
மற்றவர்களுடன் நாம் பங்கேற்கும் மேடையில் நாம் பேசிய பின்பு வரும் பேச்சாளர் இணை வைப்பைப் பேசி விடும் போது, நாம் இருக்கும் போதே உருவப் படங்களைத் திறந்து வைக்கும் போது, நெருப்பைப் புனிதமாகக் கருதி குத்து விளக்கை ஏற்றும் போது இந்த இணை வைத்தல் நிகழ்ச்சியில் நாமும் பங்கெடுத்தவர்களாகி விடுகின்றோம்.
பிற மதத்தவர்களுடன் இந்த நிலை என்றால், இஸ்லாமிய அமைப்புகளுடனும் இதே நிலை தான். பல பேச்சாளர்கள் தங்கள் பேச்சைத் துவக்கும் போது, முஹ்யித்தீனை அழைத்துப் பிரார்த்திப்பார்கள் அல்லது உரையை முடிக்கும் போது, நபியவர்களைக் கனவிலும் நனவிலும் கண்டு களிப்போம் என்று கூறுவார்கள். இந்த இணை வைப்புக்கு நாம் சாட்சியாக முடியுமா?
எனவே இதில் நாம் எள்ளளவு கூட சமரசம் செய்யாமல் புறக்கணிக்கிறோம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது நம்மைக் கொள்கையில் முடமாக்கி விடுகின்றது. ஏன்? பிணமாகவே ஆக்கி விடுகின்றது. அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.
இந்த பாதுகாப்பு அரணைத் தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கையில் எடுத்தார்கள். இணை வைப்பு ஊரில் பகை கொண்டு குகை சென்ற குகைவாசி இளைஞர்கள் கையில் எடுத்தார்கள்.
உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
அல்குர்ஆன் 60:4
நாளை மறுமையில் அவரவர் வணங்கிய தெய்வங்களுக்குப் பின்னால் செல்லுங்கள் என்று ஒரு குரல் ஒலிக்கும். அவ்வளவு தான்! ஈஸா நபி, உஸைர் ஆகியோரது தோற்றத்தில் அமைந்த உருவங்களுக்குப் பின்னால் அவர்களை வணங்கிய கூட்டத்தினர் சென்று விடுவர். (முஹ்யித்தீன், காஜா முயீனுத்தீன், ஷாகுல் ஹமீது ஆகியவர்களை வணங்கியவர்களின் நிலையும் அதுதான்.) அவர்கள் அனைவரும் நரகத்தில் வீழ்ந்து விடுவர்.
ஆனால் ஒரு கூட்டம் மட்டும் யாருக்குப் பின்னாலும் செல்லாமல் அசையாமல் நிற்பர். இதைப் புகாரியில் இடம் பெறும் ஹதீஸில் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர், அல்லாஹ்வின் தூதரே! மறுமை நால் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம்! மேகமே இல்லாத நண்பகல் வெச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், இல்லை என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், மேகமே இல்லாத பௌர்ணமி இரவின் வெச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். மக்கள் இல்லை என்று பதிலத்தார்கள். நபி (ஸல்) அவர்கள், இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொள்ளாதது போலவே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்: மறுமை நாள் ஏற்படும் போது அழைப்பாளர் ஒருவர் ஒவ்வொரு சமுதாயமும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும் என்றழைப்பார். அப்போது அல்லாஹ்வை விடுத்துக் கற்பனைக் கடவுளர்களையும், கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் (கூட) எஞ்சாமல் (அனைவரும்) நரக நெருப்பில் விழுவர்.
முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்தவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக்கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்கல் மிஞ்சியவர்கள் ஆகியோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவர். அவர்கடம் யாரை நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும். அவர்கள், அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம் என்று பதிலப்பார்கள். அப்போது அவர்களிடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை என்று கூறப்படும். மேலும், இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கப்படும். அதற்கவர்கள் எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக! என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா? என (ஒரு திசையைச்) சுட்டிக் காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போலக் காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்போது அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.
பிறகு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) வணங்கிக் கொண்டிருந்தோம் என்று கூறுவர். அப்போது அவர்களிடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் (தனக்கு) எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை என்று கூறப்பட்ட பின் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கப்படும். முன்பு (யூதர்கள்) கூறியது போன்று இவர்களும் கூறுவர்.
இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்கள் (அடையாளம் கண்டு கொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்). அப்போது எதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வோரு சமுதாயமும் (உலகில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவைகளைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றனரே! என்று கேட்கப்படும். அவர்கள், உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின் தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், நானே உங்கள் இறைவன் என்பான். அதற்கு அவர்கள் நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம் என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவர்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 4581, 7440
இந்தப் பதிலைச் சொல்பவர்கள் யார்? உலகத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் நிகழ்ச்சிகளை அவனுக்காகப் புறக்கணித்தார்களே - அவனுக்காக உறவுகளை, ஊர்களை, வரவுகளை, வாழ்க்கை வசதிகளைப் புறக்கணித்தார்களே இம்மக்கள் தான் இந்தப் பதிலைச் சொல்கின்றனர்.
இப்போது சொல்லுங்கள்! இணை வைப்பு நடக்கும் இடம் எங்கும் புறக்கணிப்பு, எதிலும் புறக்கணிப்பு என்பதில் சலிப்புத் தட்டுமா? என்று இப்போது சொல்லுங்கள்.
எனவே இணை வைப்பு நிகழ்ச்சிகளை, நிரல்களை, விருந்துகளைப் புறக்கணியுங்கள்.
அதிலும் குறிப்பாக இது மவ்லிதுக் காலம்! இந்த மவ்லிதுக் காலத்தில் மவ்லிதுப் பாடல்களைப் பாடுகின்ற சபைகளைப் புறக்கணியுங்கள். அதற்காகச் சமைக்கப்பட்ட நெய்ச் சோறு, புலவு, பிரியாணி போன்றவற்றையும் புறக்கணியுங்கள். சாப்பாட்டுக்கு ஊர் வரி செலுத்தாதீர்கள்.
சாப்பாடு வேண்டாம்; ஆனால் ஊர்க் கட்டுப்பாட்டுக்காக வரியை மட்டும் செலுத்துகிறேன் என்று செலுத்தினாலும் அதுவும் இணை வைத்தலுக்குத் துணை போகும் செயல் தான். எனவே இது போன்ற மவ்லிதுகளுக்கு வரி செலுத்தியோ, அல்லது வரி செலுத்தாமல் இலவசமாகவே வருகின்ற உணவுகளையோ வாங்காதீர்கள். புறக்கணியுங்கள்! புறக்கணிப்பில் புடம் போட்ட தங்கமாக இருங்கள்!
நன்றி: ஏகத்துவம்

பாமரர்களால் குர்ஆனை விளங்க முடியுமா?

இந்த கேள்விக்கு 1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சகோதரர் பிஜே அவர்கள் அல் ஜன்னத் இதழில் பதில் அளித்து இருந்தார். அதன் பதிலை ஆன்லைன் பிஜே இணைய தளம் வெளியிட்டது. அதை நாம் இங்கே வெளியிடுகிறோம்.

கேள்வி : சாதாரணமானவர்களால் குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க முடியும்? மொழிபெயர்ப்புகளைத் தானே நம்ப வேண்டியுள்ளது?

பதில்: மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் ஆதாரமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும். குர்ஆன், ஹதீஸையே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுக்குக் கூட மயக்கத்தை ஏற்படுத்தும் பொய்யான வாதமாகும் இது.

குர்ஆனும், ஹதீஸ்களும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளன என்பது உண்மை தான். அரபு மொழி அறியாத மக்கள் மொழி பெயர்ப்புகளைத் தான் நம்ப வேண்டியுள்ளது என்பதும் உண்மை தான்.

இந்தக் காரணங்களுக்காகத் தான் மத்ஹபுகள் அவசியம் என்றால் மத்ஹபுடைய இமாம்கள் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் மொழியில் தான் சட்டங்களை எழுதினார்களா? நான்கு இமாம்களும் தமது தாய் மொழியாக அரபி மொழியைக் கொண்டவர்களே! அவர்கள் எழுதிய, அல்லது எழுதியதாகச் சொல்லப்படும் நூல்கள் யாவுமே அரபி மொழியில் அமைந்தவையே.

இதே வாதத்தின் அடிப்படையில் இவர்கள் என்ன சொல்ல வேண்டும்? மத்ஹபுகளின் சட்டங்கள் அரபி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதனாலும், அந்த இமாம்களும் அரபியராக இருந்ததனாலும் மத்ஹபுகளும், அதன் சட்டங்களும் விளங்காது என்று கூறியிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்த யாரையாவது இமாமாக ஏற்றிருக்க வேண்டும்.

அப்படிச் செய்யவில்லையே அது ஏன்? இதைத் தான் நாம் சிந்திக்க வேண்டும்.

மத்ஹபுடைய மூல நூல்கள் அரபு மொழியில் இருந்தாலும் அதைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்குப் புரியும் என்று இவர்கள் நம்பியதால் தானே மத்ஹபுகளைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றார்கள்.

அரபு மொழியில் எழுதப் பட்ட மத்ஹபுச் சட்டங்கள் தமிழாக்கம் செய்தால் விளங்க முடியும் என்றால் இந்த நியாயம் குர்ஆன், ஹதீஸ் விஷயத்தில் பொருந்தாமல் போனது ஏன்?

மத்ஹபுகள் மீது இவர்களுக்கு வெறி இருப்பதாலும், குர்ஆன், ஹதீஸ் இவர்களுக்குத் தேவையற்றதாக இருப்பதாலுமே இந்தப் பாரபட்சமான முடிவுக்கு வருகின்றனர்.

தவறுகளும் சரியானவையும் கலந்துள்ள மனிதர்களின் அரபு மொழி வாசகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டால் விளங்க முடியும் என்றால் தவறே இல்லாத முற்றிலும் சரியாகவே உள்ள குர்ஆன், ஹதீஸ்கள் தமிழாக்கம் செய்யப்படும் போது ஏன் விளங்காது?

மொழிபெயர்ப்புகளில், மொழி பெயர்த்தவர்களின் கவனக் குறைவினாலோ, வேறு காரணங்களினாலோ சில தவறுகள் ஏற்படலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. குர்ஆன், ஹதீஸ் மட்டுமின்றி எல்லா மொழி மாற்றத்தின் போதும் இது ஏற்படத்தான் செய்யும். இதை அரபி மொழியறியாதவர்களால் சில வேலை கண்டுபிடிக்கப் படாமலும் போகும்.

ஆனால் அதற்காக குர்ஆன், ஹதீஸை விட்டு விட முடியுமா? விட்டு விட வேண்டும் என்றால் மத்ஹபுகள் உள்பட எந்த மொழி மாற்றத்தையும் விட்டாக வேண்டும்.

நம்மால் இயன்றளவு முயற்சித்துப் பார்த்துவிட்டு மொழிபெயர்ப்பை நாம் நம்புகிறோம். நாம் அறியாத வகையில் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதை அல்லாஹ் மன்னிப்பான். வேண்டுமென்றே குர்ஆன், ஹதீஸை அலட்சியம் செய்வதை மன்னிக்க மாட்டான்.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தக் கருத்துடையவர்கள் தாங்கள் சொற்பொழிவுகளில், குத்பாக்களில் புத்தகங்களில் குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்துகின்றார்களே விளங்காத குர்ஆன், ஹதீஸை ஏன் மக்களிடம் கூற வேண்டும்?

மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்கு மட்டும் குர்ஆன், ஹதீஸ்கள் கூறினால் விளங்கும் மற்ற விஷயங்களுக்கு விளங்காதா?

இதெல்லாம் ஷைத்தானின் மாய வலை. இதில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

Friday, February 19, 2010

வெள்ளிமேடை - 19.02.2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைமையகத்தில் 19.02.2010 அன்று நடைபெற்ற ஜும்ஆ உரையின் வீடியோ.

தலைப்பு: பித்அத்
உரை: மௌலவி அப்துந் நாஸிர்

Visit:
http://www.tntjwebmedia.info/Vellimedai_19-2-2010.wmv

Wednesday, February 17, 2010

இறை இல்லங்களுக்கு இணையான தர்ஹாக்கள்!

இஸ்லாத்தைத் தவிர ஏனைய மதங்கள் அனைத்தும் இசையை ஒரு வணக்கமாகவும் வழிபாடாகவும் கருதுகின்றன. அதனால் தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் இசைக் கருவி வாத்தியங்கள் வாசிக்கப் படுகின்றன. மேள தாளங்கள் முழங்கப் படுகின்றன.

இதற்கு இஸ்லாம் ஒரு விதிவிலக்கு! இஸ்லாம் இதை எதிர்த்து நிற்கின்றது. எனவே உலகெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களில் ஒரு பள்ளிவாசலில் கூட இன்னிசைப் பாட்டுகள் இடம் பெறுவதில்லை.

இந்த அடிப்படையில் தான் தொழுகைக்கு அழைக்கப்படும் இஸ்லாமிய அழைப்பு என்பது மணியோசையாகவோ, ஊதியின் நாதமாகவோ இல்லாமல் ஒரு வித்தியாசமான, செவிக்கு இதமான பாங்கோசையாக அமைந்திருக்கின்றது.

மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது நெருப்பை மூட்டுவதன் மூலமோ மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் என கருத்து சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 606

மாற்று மத நண்பர்கள் கூட தங்கள் திருமணம் மற்றும் இன்னபிற திருவிழாக்களின் ஊர்வலங்கள் பள்ளிக்கு அருகில் வரும் போது மேள தாளங்களை, இசை வாத்தியங்களை நிறுத்திக் கொள்கின்றார்கள். அந்த அளவுக்கு இசைக்கும் இஸ்லாத்திற்கும் தூரம் என்று மாற்று மத நண்பர்கள் கூட விளங்கி வைத்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட இந்த விளக்கம் முஸ்லிம்களுக்குத் தெரியாமல் போய் விடுமா? நிச்சயம் இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால் தான் இஸ்லாம் தடுத்துள்ள இன்னிசைப் பாட்டுக் கச்சேரிகள், மேள தாளங்கள், கரகாட்டங்கள், வெடி முழக்கங்கள், நடிகர் நடிகையரின் நடனங்கள் போன்ற கூத்துக்களை எல்லாம் பள்ளிவாசலில் செய்யாமல் தர்ஹாக்களில் அரங்கேற்றி அவற்றின் மீது இவர்கள் கொண்டுள்ள மோகத்தையும் தாகத்தையும் தணித்துக் கொள்கின்றனர்.

இந்த மோகத்தின் வெளிப்பாடாகத் தான் கந்தூரியில் யானை கொடி ஊர்வலமும், வானை நோக்கிப் பறக்கும் வெடி முழக்க வெறித்தனங்களும் அரங்கேறின. தொடர்ந்து நாயகம் வாப்பா கொடி, அப்துர்ரஹ்மான் தங்கள் கொடி, பஸீரப்பா கொடி போன்ற கொடியேற்றங்களும் கொண்டாட்டங்களும் நடந்தேறுகின்றன.

ஆனை மீது ஆலிம்சா:

ஐதுரூஸ் தங்கள் கொடி ஊர்வலத்தில் வாண வேடிக்கைகளும், டிஜிட்டல் மியூசிக்கும் சிறப்பம்சங்கள் என்றால், நாயகம் வாப்பா எனப்படும் கொடி ஊர்வலம் அதை மிஞ்சும் வகையில் அமைந்திருக்கும்.

துருக்கி குஞ்சா தொப்பி போட்ட கீழக்கரை கிழடுகளின் சுழல் தப்ஸ் ஆட்டமும், வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாட்டு மெட்டில் தூள் பறத்தும் பேண்டு வாத்தியமும், அவற்றுக்குத் தக்கவாறு விசில் அடித்துக் கொண்டு ஆட்டம் போட்ட சிறுவர்கள், இளைஞர்களின் படை பட்டாளங்களும் நாயகம் வாப்பா என்ற கொடியின் சிறப்பம்சங்கள் ஆகும்.

இவை அத்தனைக்கும் மெருகூட்டுவது போல் ஊர்வலத்தில் வந்த யானையின் மீது மதரஸாவில் ஏழு வருடம் படித்து பட்டம் பெற்ற ஆலிம்சா ஒருவர் அமர்ந்து கொண்டு உலா வருவதுதான். இந்தத் தீமையிலிருந்து மக்களைத் தடுக்க வேண்டிய ஆலிம்கள் இதில் பங்கெடுத்துக் கெடுக்க வேண்டிய நிலைக்குப் போய் விட்டதால் தான் இந்தக் கொடியேற்றக் கொண்டாட்டங்களும், வெடி முழக்க வெறித்தனங்களும் வீரியம் பெற்றுள்ளன.

நாயும் மணியும் இருக்கும் ஜமாஅத்தில் மலக்குகள் உடன் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 3949, திர்மிதீ 1625, நஸயீ 5127, அபூதாவூத் 2192, அஹ்மத் 7250

மணி ஷைத்தானின் இசைக் கருவியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 3950, அபூதாவூத் 2193, அஹ்மத் 8428

இந்த ஹதீஸ்களில் சாதாரண மணி ஓசையையே ஷைத்தானின் இசைக் கருவி என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கும் போது இந்தப் பேண்டு வாத்தியங்களைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை.

இந்த ஷைத்தானியப் படை தான் கொடியைத் தூக்கிக் கொண்டு வீதிகளில் உலா வருகின்றனர். இதற்கு ஓர் ஆலிம்சாவின் தலைமை வேறு!

விடலைப் பையன்களின் விசில் ஓசைகள்! குமரிப் பெண்களை நோக்கி அவர்கள் பாய்ச்சுகின்ற காமப் பார்வைகள்! கால்நடைகளும் பறவைகளும், தொட்டிலிலில் தூங்கும் குழந்தைகளும், நோயாளிகளும் அலறும் வண்ணம் முழங்கும் வெடிச் சப்தங்கள்! இத்தனையும் வணக்கம் என்ற பெயரில் அரங்கேறுகின்றன.

இடி முழக்கம் போன்ற இசைகளையும், வெடி முழக்கங்களையும், கரகாட்டங்களையும், கானா கச்சேரிகளையும் சாதாரண முறையில் அரங்கேற்றினால் ஈமான் உள்ள (?) இந்த ஆலிம்கள் சீறிப் பாய்வார்கள்.

அவ்லியாக்கள் பெயரில் அரங்கேற்றினால் ஆலிம்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதற்கு ஆதரவாக யானை மீதேறி உளம் பொங்க, உவகை பெருக்கோடு வலம் வந்து ஆசி வழங்குவார்கள்.

இத்தகைய அலங்கோலங்கள், அனாச்சாரங்கள் மூலம் இந்த ஆலிம்களும் தர்ஹா டிரஸ்டிகளும், தரீக்கா குருட்டு பக்த கோடிகளும் மக்களை அறியாமைக் கால இருட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். அறியாமைக் கால மக்களின் வணக்கம் இப்படித் தான் அமைந்திருந்தது.

சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) இந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)

அல்குர்ஆன் 8:35

அல்லாஹ் எவற்றையெல்லாம் கயமைத் தனம் என்று கழித்துக் கட்டுகின்றானோ அவற்றைத் தான் இவர்கள் அவ்லியாக்களின் பெயரால் மார்க்க வணக்கம் என்று கருதி செய்து கொண்டிருக்கின்றனர்.

தீமைகளின் தீய கூடாரம்

இந்தத் தீமைகளுக்கு அஸ்திவார மாகவும் ஆணி வேராகவும் தர்ஹாக்கள் தான் அமைந்துள்ளன.

சுருக்கமாகச் சொல்லப் போனால் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களுக்கு எதிரான செயல்கள் நடக்கும் இணை (ஷிர்க்) இல்லங்களாக இவை எழுந்து நிற்கின்றன. இன்னும் சொல்லப் போனால் கோயில்களுக்கு மறு பெயர் தான் தர்ஹா என்று கூறி விடலாம்.

அங்கே சிலை வணங்கப் படுகின்றது. இங்கே கல்லறை வணங்கப்படுகின்றது. இரண்டுக்கும் வித்தியாசம், அங்கே நட்டி வைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே படுக்க வைக்கப்பட்டிருக்கின்றது.

அங்கேயும் குத்து விளக்கு! இங்கேயும் குத்து விளக்கு!

அங்கே சூடம்! இங்கே பத்தி, சாம்பிராணி!

அங்கே திருநீறு! இங்கே சந்தனம்!

அங்கே பால் அபிஷேகம்! இங்கே சந்தன அபிஷேகம்!

அங்கே தேங்காய், வாழைப்பழம்! இங்கே வெறும் வாழைப்பழம்!

அங்கே சிலைகளைச் சுற்றி வலம் வருதல்! இங்கே கப்ருகளைச் சுற்றி வலம் வருதல்!

அங்கே தேர்த் திருவிழா! இங்கே சந்தனக் கூடு திருவிழா!

அங்கேயும் யானை! இங்கேயும் யானை!

அங்கே யானையின் நெற்றியில் சூலம்! இங்கே யானையின் நெற்றியில் பிறை!

அங்கேயும் கொடியேற்றம்! இங்கேயும் கொடியேற்றம்!

அங்கே பூசாரி! இங்கே ஆலிம்சா!

அங்கும் வெடி, வாண வேடிக்கைகள்! இங்கும் வெடி, வாண வேடிக்கைகள்!

அங்கு சிலைகளுக்கு மேல் பட்டுப் புடவைகள், பூமாலைகள்! இங்கு கப்ருகளுக்கு மேல் பச்சைப் போர்வைகள், பூமாலைகள்!

திருவிழாவின் போது மேள, தாள வாத்தியக் குழுவினர் ஒரு குவார்ட்டரை உள்ளே தள்ளி விட்டு அந்த நாற்றத்துடன் மேள, தாளம் முழங்கி நாதஸ்வரம் ஊதுவர்.

அதே குழுவினர் தர்ஹாவுக்கும் அழைக்கப்படுகின்றனர். (அண்மையில் மேலப்பாளையத்தில் பஸீரப்பா கந்தூரியின் போது இக்குழுவினர் அழைக்கப்பட்டனர்)

கோயில் கொடை விழாக்களில் டிஜிட்டல் வாத்தியங்கள் உண்டு! இங்கும் டிஜிட்டல் இசை வாத்தியங்கள் உண்டு!

கோயிலை விட இங்கு இசைக் குழுவினர் கூடுதலாக அழைக்கப் படுவர். கீழக்கரை கிழடுகளின் தப்ஸ் குழு, கயிறு சுற்றும் தயிரா குழு, பக்கீர் குழு போன்ற பல்வேறு குழுக்கள் இங்கு அழைக்கப்படுகின்றன. அந்த வாத்தியக் குழுவினர் குவார்ட்டரை உள்ளே இறக்கி விட்டு ஊதுவார்கள். இவர்கள் கஞ்சாவைக் கசக்கி அடித்துக் கொண்டு கொட்டு அடிப்பார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

கோயில் விழாக்களின் போது கிடா அறுத்து சோறு படைப்பார்கள். அது போல் இங்கும் கிடா அறுத்து கடாலப் பானை வைத்து சோறு படைத்து நேர்ச்சை விநியோகம் செய்வார்கள்.

இங்கே பட்டியலிட்ட இந்தக் காரியங்களை அல்லாஹ்வுடைய பள்ளியில் வைத்து அரங்கேற்ற முடியுமா? நிச்சயமாக அரங்கேற்ற முடியாது. அதற்காகத் தான் இந்த தர்ஹாக்கள் எனும் தரித்திர மண்டபங்கள்.

தர்ஹாக்களுக்கு அனுமதி பள்ளிவாசலுக்குத் தடை:

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் பள்ளிவாசல்களுக்குத் தொழ வருவதற்குத் தடை விதிக்கும் இந்த ஆலிம்கள் தர்ஹாக்களுக்குப் பெண்கள் வருவதற்குத் தாராளமாக வாசல்களைத் திறந்து விட்டிருக்கின்றனர். அதனால் இந்த தர்ஹாக்கள் விபச்சாரத்திற்கு வலை விரிக்கும் வலைத் தளங்களாக, விடுதிகளாக மாறியிருக்கின்றன.

இப்படி தீமைகளின் ஊற்றுக்கள் பெருக்கெடுத்து ஓடும் திராவக அருவிகளாக தர்ஹாக்கள் அமைந்திருக்கின்றன. இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடங்களைச் சபிக்கின்றார்கள்.

சாபத்திற்குரிய சன்னிதானங்கள்:

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன் நோயுற்றிருந்த போது, “யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1244

உம்மு ஹபீபா (ரலி) அவர்களும், உம்மு ஸலமா (ரலி) அவர்களும் தாங்கள் அபீசீனியாவில் கண்ட, உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தின் மேல் ஒரு வணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் படைப்பினங்களிலேயே அவர்கள் தாம் மிகவும் கெட்டவர்களாவர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873, முஸ்லிம் 822

இன்று தர்ஹாக்களில் உழைக்காமல் ஊது பத்திகளைக் கொளுத்திக் கொண்டு, உண்டியலை மட்டும் நம்பிக் கொண்டு, தர்ஹாக்களின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டு பரம்பரை ஹக்தார்கள், டிரஸ்டிகள் என்று வயிறு வளர்க்கும் பண்டார சன்னிதானங்களையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பணக்கார சுகவாசிகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பினத்திலேயே கெட்டவர்கள் என்று கூறுகின்றார்கள்.

அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சமுதாய மக்கள் எரி நரகத்திற்குச் சென்று விடக் கூடாது என்ற தூய கரிசனத்துடன், தூர நோக்குடன், தீர்க்க தரிசனத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

“தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 1609, அஹ்மத் 1175, திர்மிதீ 970, அபூதாவூத் 2801

மக்கள் வரிசையாகக் கந்தூரிகள் கொண்டாடி நரகத்திற்குச் செல்வதற்குக் காரணமாக விளங்குவது இந்த தர்ஹாக்கள் தான். இந்த தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பள்ளிவாசல்களில் ஆலிம்கள் சொல்வது கிடையாது.

ஆலிம்கள் இந்த சத்தியத்தை மறைப்பதுடன், தர்ஹாக்களில் போய் அதிலும் குறிப்பாக கந்தூரி தினத்தன்றே போய் பயான் செய்கின்றார்கள். பாழாய் போன இந்த இடங்களில் பயான் வேறு வாழ்கின்றது.

என்ன தான் இவர்கள் சத்தியத்தை மறைத்தாலும் இன்று ஏகத்துவத்தை விளங்கிய ஓர் இளம் தலைமுறை தோன்றியிருக்கின்றது.

அவர்கள் எதிர்காலத்தில் சமுதாய மக்களின் சம்மதத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்கி விட்டு, அவற்றை பாடசாலைகளாக, தொழிற்பயிற்சிக் கூடங்களாக அல்லது வீடின்றி தவிக்கும் ஏழைகள் வசிக்கும் இடங்களாக மாற்றும் அந்த நாள் தூரத்தில் இல்லை, இன்ஷா அல்லாஹ்!

Sunday, February 14, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க கூட்டம்


அதிராம்பட்டிணத்தில் கடந்த 13.02.2010 அன்று மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி அவர்கள் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள்' என்ற தலைப்பிலும், மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'சத்தியத்தை மறைக்காதீர்கள்' என்ற தலைப்பிலும், மௌலவி எம்.எஸ் சுலைமான் அவர்கள் 'இஸ்லாத்தின் பார்வையில் வெட்கம்' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான பதில் எழுதிய முன்று நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குறிப்பு: நல திட்ட உதவிகள் இந்த பொதுக்கூட்டத்தில் வழங்கப்படவில்லை. இந்த உதவிகள் விரைவில் வழங்கப்படும். அவை வழங்கப்பட்டபின், அது தனி செய்தியாக இடம்பெறும்.








Thursday, February 11, 2010

மரைக்காயர் (மஸ்ஜிதுல் அக்ஸா) பள்ளி அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

மரைக்காயர் (மஸ்ஜிதுல் அக்ஸா) பள்ளி மற்றும் ரஹ்மானிய மதரஸா அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக 10.02.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'சிந்திக்க தூண்டும் இஸ்லாம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர். 

ஒரு காலத்தில் அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்வதற்கு பல்வேறு தடைகள் இருந்தது. ஆனால், இன்று அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் எங்கும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைபெறுகிறது. கேரளாவிற்கு பரோவியிசத்தை சப்ளை செய்யும் ரஹ்மானிய மதரஸாவின் அருகில் கூட தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு தடையில்லாமல் ஆகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, February 09, 2010

மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 02.02.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் ‘நாவை பேணுவோம்’ என்ற தலைப்பிலும், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் ‘இறையச்சம்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.



Thursday, February 04, 2010

MSM நகரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 04.02.2010 அன்று MSM நகர் பள்ளிக்கு அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள்.

இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.



Thursday, January 21, 2010

கந்தூரி எதிர்ப்பு பிரச்சாரம்

அதிராம்பட்டிணம் கடல்கரை தெருவில் உள்ள தர்காவில் கந்தூரி விழாவை கண்டித்து கடல்கரை தெருவில் ஜமாத்தின் தடையை மீறி பிரச்சாரம் நடைபெற்றது.

இதே போன்று நடுத்தெருவிலும் கந்தூரி விழாவை விபரிதத்தையும், அதை மக்கள் புறக்கணிக்க வேண்டியும் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள்.

இதில திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.

கடல்கரை தெரு:


நடுத்தெரு:







இதே போன்று 'வேண்டாம் தர்கா வழிபாடு' என்ற தலைப்பில் இணைவைப்பிற்கு எதிரான டிஜிட்டல் போடும் கந்தூரி நேரத்தில் வைக்கப்பட்டது.


Wednesday, January 20, 2010

பேரூராட்சியை கண்டித்து அதிரை ததஜ சார்பாக ஒட்டப்பட்ட கண்டன போஸ்டர்

அதிராம்பட்டினத்தில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து அதிரை நகர் முழுவதும் பேரூராட்சியை கண்டித்து அதிரை ததஜ சார்பாக ஒட்டப்பட்ட கண்டன போஸ்டர்.



Saturday, December 12, 2009

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.







இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழகை நடத்தி சொற்பொழிவுயாற்றினார்கள்.

Thursday, October 01, 2009

அதிராம்பட்டிணத்தில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

அதிராம்பட்டிணத்தில் இந்த வருடம் (2009) ரமலான் ஃபித்ராவாக  ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 530 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.


Monday, September 28, 2009

அதிராம்பட்டிணத்தி்ல் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

அதிராம்பட்டிணத்தில் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் மௌலவி தாஹா அவர்கள் பெருநாள் தொழுகை நடத்தி சொற்பொழிவு ஆற்றினார்கள்.

இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






தவ்ஹீத் போர்வை போர்த்திக் கொண்டு, வரதட்சணை திருமணத்தில் விருந்து திண்பது, மத்ஹபுகளுக்கு வக்காலத்து வாங்கும் ஆலிமை (?) தலையில் வைத்து ஆடுவது, ஒரு பிறை என்று தம்பட்டம் அடித்து கொண்டு அதற்கு மாற்றமாக நடக்கும் பெருநாள் தொழுகையில் உரையாற்றுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வரும் ”ஒற்றுமை கோஷதாரிகளின்” அவதூறுகளை நம்பாமல் மக்கள் தவ்ஹீத் ஜமாத் நடத்தும் தொழுகையில் அதிகமாக கலந்து வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.