Saturday, March 06, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்ட தர்பியா முகாம்


அதிராம்பட்டிணத்தில் உள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் 28.02.2010 அன்று தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகி மற்றும் உறுப்பினர்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது.





இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி அவர்கள் 'தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள்' பற்றி உரையாற்றினார்கள்.

பின்னர், மௌலவி மஸ்வூத் யூசுஃபி அவர்கள் 'தவ்ஹீத்வாதிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்து, தஞ்சை தெற்கு மாவட்ட பேச்சாளர் சகோதரர் உமர் அவர்கள் 'நல்ல பண்புகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி அவர்கள் 'இயக்கங்கள் ஒரு பார்வை' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.