Thursday, March 11, 2010

அதிரை AJ பள்ளி சுவர் இடிப்பு - கொதித்து எழுந்த முஸ்லிம்கள்

அதிராம்பட்டிணம் பழஞ்செட்டி தெருவில் உள்ள AJ பள்ளியின் சுற்றுப்புற சுவரை ஒரு பாஸிஸ்ட் JCB இயந்திரத்தை வைத்து நேற்று (10.03.2010) இரவு 10 மணி அளவில் இடித்து தள்ளியுள்ளான்.

இதனை அறிந்த முஸ்லிம்கள் AJ  பள்ளியில் திரண்டனர். உடனே, பள்ளி சுற்றுப்புற சுவரை கட்ட ஆரம்பித்தனர்.
 
AJ பள்ளிக்கு பக்கத்தில் வசிக்கும் பாலு என்பவன் தான் இந்த செயலை செய்தது. காவல்துறையையும் சட்டத்தையும் மதிக்காமல் இவ்வாறு செய்த பாலு என்ற ஃபாஸிஸ்ட்டு தலைமறைவாகிவிட்டன. இதன் பின்னர், இவனின் வீட்டை காவல்துறை சோதனையிட்டது. பள்ளியின் சுற்றுப்புற சுவரை உடனே, கட்டுவதற்கு காவல்துறை அனுமதி அளித்தது. பள்ளியின் சுற்றுப்புற சுவரை இடித்த JCB இயந்திரம் அதிகமான வேகத்தில் பட்டுக்கோட்டையை நோக்கி தப்பிவிட்டது.

இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்யவிட்டால், காவல்நிலைய முற்றுகைக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்களும் மற்ற இயக்கத்தினர் பள்ளியை முகாமிட்டுள்ளனர்.
 
விரிவான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் விரைவில்.

தகவல்: அதிரை Y. அன்வர் அலி (தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்)

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.