Friday, March 13, 2015

அ த த வினருக்கு அறை கூவல்!

நாம் எதை கேள்வியாகக் கேட்டாலும் பதில் அ த த வின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடுவதில்லை. கள்ள வெப்ஸைட்டில் வரக் காரணம் அவர்கள் சொல்லும் பதில் சரியில்லை என்பது அவர்களுக்கே தெரியும். பாவம்!

திராணியிருந்தால் மேலத்தெரு சுன்னத் வல்ஜமாஅத் பள்ளிவாசல் குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் பின்பற்றும் ஜமாஅத் என்பதையும் அப்துல் மஜீத் மவ்லவி பக்கா தவ்ஹீத்வாதி என்பதையும் உங்கள் அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் வெளியிடுங்கள். நபிவழியில் ஜனாஸா தொழுகை நடத்தியது தவறு. சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் தான் ஜனாஸா தொழுகை நடத்தியிருக்க வேண்டும் என்பதையும் தர்காவை வழிபடுபவர் இணைவைக்கும் இமாம் அல்ல என்பதையும் உங்கள் அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் வெளியிடுங்கள். பதில் சொல்கிறோம் .

இன்னொரு அறைகூவலையும் அ த தவினருக்கு வைக்கிறோம். உங்கள் கருத்துப் படி மேலத் தெருவில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  ஜும்மா பள்ளிவாசல் இயங்கும் போது நீங்கள்  ஜும்மாவுக்கென தனியாக பள்ளிவாசல் உருவாக்கியது ஏன்? ஜும்மா பள்ளியில் தொழுவோர் உங்கள் பார்வையில் முஸ்லிம்கள் இல்லையா? நீங்கள் அவர்களை முஸ்லிமென ஒத்துக் கொண்டால் உங்கள் பள்ளியைக் கலைத்து விடத் தயாரா?

இன்னொரு அறைகூவலையும் அ த தவினருக்கு முன் வைக்கிறோம்.

அ த தவினர் அப்துல் மஜீத் மௌலவியை தொழுகை நடத்தும் வேலைக்கு அழைத்து வந்தால் நாங்கள் சேர்த்துக் கொள்ளத் தயார்! அழைத்து வர அ த த தயாரா?

இன்னொரு அறை கூவலையும் முன் வைக்கிறோம். நீங்கள் சொல்கிற அதே ஜும்மா பள்ளியில் இமாமத் செய்யும் இமாமை உங்கள் தனிப் பள்ளியில் இமாமாக சேர்த்துக் கொள்ளத் தயாரா?

நாங்கள் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் கேள்வி மட்டுமே கேட்கக் கூடாது. அது உங்களிடம் பதில் இல்லை என்பதையே காட்டுகிறது. உங்களுக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும். பதில் சொல்லத் தெரியாது என்பது எங்களுக்கு தெரியும். அதை உண்மைப்படுத்தும் வகையில் இல்லாமல் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலை சொல்ல வேண்டும். அதுவும் உங்கள் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலிருந்து சொல்ல வேண்டும்.

முடியும் இல்லாமல், மூலையும் இல்லாமல், வேறு வேலையும் இல்லாமல், அ த த வின் சம்மதமும் இல்லாமல் உளரும் தனி நபர்களின் தனிப்பட்ட விமர்சனங்களுக்கு இனி பதில் தர மாட்டோம். எதுவாக இருந்தாலும் அதிகாரப் பூர்வமாக வந்தால் மட்டுமே பதிலளிப்போம் என்பதை சொல்லிக் கொள்கிறோம்.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.
அல்குர்ஆன். 21:18

1 கருத்துரைகள் :

நரக நெருப்புக்கு அஞ்சாத அ த த நெஞ்சங்கள்
தான் நாங்கள் ஆனால் சத்தியத்திற்க்கு முன்னாள் கோளைகள் என்பதை நிருபித்துள்ளார்கள்,சரியான பதில்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.