Saturday, March 27, 2010

மரைக்காயர் (அக்ஸா) பள்ளி அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

மரைக்காயர் (அக்ஸா) பள்ளி மற்றும் ரஹ்மானிய மதரஸா அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக 25.03.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'புகழை விரும்பாத நபி (ஸல்)' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 


தனது உரையில் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு புகழை விரும்பாதவர்களாக இருந்தார்கள் என்பதை விளக்கினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் தனக்காக யாரும் எழுந்து நிற்க கூடாது என்று கட்டளையிட்டதை எடுத்துக் காட்டினார். இன்று மார்க்க அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில போலி முல்லாக்கள், தங்களுக்கென்று குடை பிடிக்க ஒரு கூட்டத்தை உருவாக்கியிருப்பதை தவறு என்று விளக்கி பேசினார்.

இதில் அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.  மரைக்காயர் (அக்ஸா) பள்ளியில் இருந்த சகோதரர்களும் உரையை கேட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.