Saturday, September 13, 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் கூட்டுக் குர்பானி திட்டம்



ஏக இறைவனின் திருப்பெயரால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைகிளையின் சார்பாக நபிவழியில் கூட்டுக் குர்பானி திட்டம்


பங்கு ஒன்றுக்கு 1200 ரூபாய் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல் )அவர்களுடன் நங்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டு சேர்ந்தோம்
                              அறிவிப்பாளர் :ஜாபிர் (ரலி )நூல் முஸ்லீம் 2325


நாங்கள் நபி (ஸல் ) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது .ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஓர் ஒட்டகத்தில் பத்து பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்

  அறிவிப்பாளர் :இப்னு அப்பாஸ் (ரலி )நூல் திர்மீதி 1421 நசாயி 4319 இப்னுமாஜா  3122

குர்பானி தோல் மூலம் ஏழைகள் நலம் நாடுவீர் !!
ஒர் ஒட்டகத்தை குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல் ) அவர்கள் ஒப்படைத்தார்கள் .அதன் மாமிசத்தையும் ,தோலையும் அதன்மீது கிடந்த (கயிறு ,சேணம் போன்ற )வை களையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்கு கூலியாக அதில் எதனையும் வழங்கக்கூடாது என்றும் எனக்கு கட்டளை இட்டார்கள் .அதன் கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்
அறிவிப்பாளர் :அலி (ரலி )நூல் புகாரி 1710 முஸ்லீம் 2320

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை வருடம் தோறும் குர்பானி தோல்களை வசூல் செய்து ஏழைகள் முன்னேறும் வகையில் தையல் இயந்திரம் ,கிரைண்டர் ,போன்ற பொருட்களும் ,கல்வி உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளும் அதிரையில் உள்ள ஏழைகளுக்கு வழங்கி வருகிறது .அல்ஹம்துலில்லாஹ் .

காலம் முழுவதும் வசூலில் நடைபெறும் மதரசாக்களும் ,குறிப்பிட்ட ஒரு சிலரும் தோலை வாரிசெல்வதால் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர் .உங்கள் குர்பானி தோல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் வழங்கி ஏழைகளுக்கு அதன் பயனை வழங்கிடுவீர்

குறிப்பு :குர்பானி தோல் விற்ற பணத்தில் ஐந்து பைசா கூட இயக்க வளர்ச்சிக்கோ வேறு எந்த பணிகளுக்கோ செலவிடபடாது என்று உறுதிக் கூறுகிறோம்

உங்கள் குர்பானி தோல்களையும்,பங்கினையும் தருவதற்கு தொடர்பு கொள்ள


செல் :
M K M. ஜமால் முஹம்மது 95971-28886
A. பீர் முஹம்மது 80153-79211
S P பக்கீர் முகைதீன் 95008-21430
 A K. மீரா முகைதீன் 99448-24510

M. அப்துல் ஜப்பார் 96295-33887

Y. அன்வர் அலி 96291-15317
A K S. நவாஸ்  99525-96270


நீங்கள் போன் செய்தால் ,வீடு தேடி வந்து குர்பானி  தோல்களை பெற்றுக்கொள்வோம்

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.