Sunday, June 09, 2013

அதிரை மேலதெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்


07.06.13 வெள்ளியன்று அசர் தொழுகைக்கு பிறகு  மேலத்தெரு சவுக்கு கொள்ளையில்   பெண்கள் பயான் நடை பெற்றது  .இதில் சகோதரர் அஷ்ரஃபதின் ஃபிர்தவ்சி  அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் வெட்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்


இதில் ஏராளமான பெண்கள் பங்கு பெற்று பயன் பெற்றனர் 








இஸ்லாத்தின் பார்வையில் வெட்கம்

'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
Volume :1 Book :2 (புகாரி 24)

ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புஹாரி 9)


மனிதனுக்கு மட்டுமே உள்ள உணர்வு வெட்கம் 

. அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான். அவ்விருவரும் அம் மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து ''இம்மரத்தை நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?'' எனக் கேட்டான்  (அல்குர்ஆன் 7:22)

 ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7:26)

பெண் என்றாலே வெட்கம் தான்

    அவர்களில் ஒருத்தி வெட்கத்துடன் நடந்து அவரிடம் வந்து, ''நீர் எங்களுக்குத் தண்ணீர் இறைத்துத் தந்ததற்குரிய கூலியை உமக்குத் தருவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்றாள். அவரிடம் வந்து (தன்னைப் பற்றிய) செய்திகளைக் கூறினார். ''நீர் பயப்படாதீர்! அநீதி இழைக்கும் கூட்டத்திடமிலிருந்து நீர் வெற்றி பெற்று விட்டீர்'' என்று அவர் கூறினார்.(அல்குர்ஆன் 28:25)

மஹ்ரமானவர்கள்

   1.மகன். 2.தந்தை. 3.சகோதரன். 4.சகோதரர் மகன். 5.தகப்பன், தாயுடன், பிறந்தசகோதரன்.  6.பால்குடி மகன். 7.பால்குடி சகோதரன். 8.மகளை திருமணம் செய்த மருமகன். 9.தாயை திருமணம் செய்தவர். 10.கணவனின் தகப்பனார்.

மஹ்ரமில்லாதவர்கள்

   சின்னம்மா  பெரியம்மா மகன்,  மாமா மகன்,  சகோதரியின்  கணவர்,  வட்டிக்கடைக்காரன்,  பால்காரன்,  சிறு  வயதிலிருந்தே  வீட்டிர்க்கு  வரும்  இளைஞன் ....

இவர்கள் முன்னிலையில் அரை குறை ஆடை கூடாது !

   இது பெண் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் தடையாக இல்லை ஏன்னா இது உங்களுக்கு தெரியாது . படைத்தவனுக்கு தெரியும்.(ANTI VIRUS மாதிரி சொல்கிறான் .)


 நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக் கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (33:59)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்(24:31)

வெட்கத்தை தொலைத்தால் நரகமே பரிசு 

முஸ்லிம்3971

(இருக்கமான ஆடை மெல்லிய ஆடை கூடாது )

இதை இவ்வளவு கடுமையாக சொல்லக் காரணம் நல்ல ஆம்பிளை கூட இதனால் கேட்டுப் போய் விடுவான் 

தனிமை கூடாது !

உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.(புஹாரி 5232)

கணவனின் நண்பன் ,சின்னம்மா பெரியமா மகன் ,மாமா மகன் சிறு வயதிலிருந்தே வீட்டிற்கு வரும் இளைஞன் ....... இவர்களுடன் தனிமை கூடாது 

கட்டிட வேலை பார்ப்பவன்,வட்டிக்காரன், ஆட்டோ, கார், பயணம், பஞ்சாயத்து பேச வரும் இயக்க தொண்டன் ,மவ்லித் ஓத வரும் ஆலிம்சா .. 

அஹ்மத் 109 

யூசுப் நபியும் இதில் விதி விலக்கல்ல ...

இதை சொல்ல காரணம் பாதிப்பு பெண்களுக்கு தான் .

குலைந்து பேச கூடாது !

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (33:32)

அந்நாளில்1 அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர் களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.(24:24)


(தொலைபேசி அரட்டை ... ஆட்டோக்காரன் முதல் ஜவுளி  இன்னும் நகைக் கடைக்காரன் என அனைவரிடமும் நம்பர் கொடுக்கும் கெட்ட  பழக்கம் )

*இது உங்களை ஏமாற்றி நாசமாக்குவதற்கு (விபசாரத்திற்கு) உதவுமா ?இல்லையா? 

*குடும்ப பெண்களை ஏமாற்றி செல்போன் பேச்சை பதிவு செய்து அதை வைத்து மிரட்டுவதிலும் கற்பை பறிக்கவும் ஒரு கும்பல் முயற்சிகிறதா? இல்லையா?

தவறான பார்வை கூடாது !

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்(24:31)

பிறர் வீட்டினுல் எட்டி பார்ப்பது கூடாது !

ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார். 
ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது; அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது 'என்னை நீ பார்க்கிறாய் என்று நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்ட மாக்கப்பட்டது' என்று கூறினார்கள். (புஹாரி 6901)

அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
உன் அனுமதியின்றி ஒருவர் உன்னை எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உன் மீது எந்தக் குற்றமுமில்லை. புஹாரி6902)

தொலைகாட்சிக்கு முன்னால் வெந்து போகும் வெட்க உணர்வுகள் 

வெட்கம் என்றால் என்ன? 

*வெட்கம் பொம்பளைகளுக்கு உள்ளது என்று ஆக்கி விட்டோம் 

*வெட்கம் என்பது உடல் ரீதியான விஷயம் என்று எல்லோரும் சொல்லி கொண்டு இருகிறார்கள்

வெட்கம் என்றால் இழிவு தரும் காரியத்திலிருந்து ஒதுங்கி கொள்வது 

*மனிதர்களுக்கு பயந்து தீமைகளை விடுவது தவறல்ல . அது ஈமானில் உள்ள கிளை

*மனிதனுகாக வணக்கத்தை செய்து விட கூடாது

திர்மிதி


இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள், 'நாணம் நன்மையே தரும்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள். அப்போது புஷைர் இப்னு கஅப்(ரஹ்) அவர்கள், 'நாணத்தில் தான் கம்பீரம் உண்டு; நாணத்தில் தான் மன அமைதி உண்டு எனத் தத்துவ(ப் புத்தக)த்தில் எழுதப்பட்டுள்ளது' என்று கூறினார். அப்போது அவரிடம் இம்ரான்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கூறியது) பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் ஏட்டில் உள்ளவை குறித்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே! என்று கேட்டார்கள்.  (புகாரி 6117)

 வெட்கம் உள்ளவன் சபையில் அழகாக சாப்பிடுவன் . டீ குடிக்கும் போது அழகாக குடிப்பான் . படுக்கும் போது தொடை தெரிவது மாறி படுக்க மாட்டான் 

வெட்கம் யாரிடமிருந்தாலும் நல்லவர்கலாக வாழ வைக்கும் 

அபுசுஃப்யான் ஹெர்குலிஸ் மன்னரிடம் உண்மை பேசியது

   (குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து சேர்ந்தார்கள். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தம் அவைக்கு அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரையும் அழைத்து வரக்கூறினார். 
அபூ சுஃப்யான் இது குறித்துக் கூறும்போது, (எங்களிடம்) மன்னர் 'தம்மை இறைவனின் திருத்தூதர் என்று கருதிக் கொண்டிருக்கும் அம்மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?' எனக் கேட்டார். நானே அவருக்கு மிக நெருங்கிய உறவினன் எனக் கூறினேன். உடனே மன்னர், (தம் அதிகாரியிடம்) 'அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் நிறுத்துங்கள்' என்று ஆணையிட்டார். பின்னர் தம் மொழி பெயர்ப்பாளரிடம், 'நான் அந்த மனிதரைப் பற்றி (அபூ சுஃப்யானிகிய) இவரிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறி விட வேண்டும் என்று அவருடன் வந்திருப்பவர்களிடம் மொழி பெயர்த்துச் சொல்' என ஆணையிட்டார். நான் பொய் கூறினார்கள் என இவர்கள் சொல்லி விடுவார்களோ என்ற நாணம் மாத்திரம் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யுரைத்திருப்பேன். 
பிறகு மன்னர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி,.... (புஹாரி 7)

நபிமார்களின் போதனைகளில் எஞ்சியது

          buhari 3224

நிதனமாகச் செய்பவன் தவறைச் செய்ய மாட்டான்

வெட்கம் இருந்தால்...

*குடிப்பானா ? திருடுவானா ? விபச்சாரம் செய்வானா?
*வட்டி வாங்குவானா? வரதட்சனை வாங்குவானா?
*ஃபிராட் பண்ணுவானா ? ஊழல் பண்ணுவானா?
*தேர்தலில் அளித்த வாக்குருதிகளை மீறுவானா?
*கோள் சொல்லுவானா? கெட்ட வார்த்தை பேசுவானா?
*கடன் வாங்கி விட்டு ஏமாற்றுவானா?

                                                        வெட்கங்கெட்ட காரியங்கள்

*குளத்தில் குளிப்பது, ஜட்டியுடன் குளிப்பது, பொது இடங்களில் மல ஜலம் கழிப்பது
*இல்லறத்தின் போது கணவன் மனைவியின் உருப்புகளைப் பார்ப்பது தவறல்ல

திர்மிதி (2693)

நசாயி (403)

பூப்புனித நீராட்டு விழா, கத்னா

நபி (ஸல்) அவர்களின் குணம் வெட்கப்படுவது

  அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார் 
  நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர். ஷுஅபா(ரஹ்) இதே போன்றதை அறிவித்துவிட்டு, 'நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்" என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள். (புஹாரி 3562)

. நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தர வாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதை யேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக் கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக் குப் பின் ஒரு போதும் அவரது மனைவி யரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது (அல்குர்ஆன் 33:53)

நசாயி(17)

உஸ்மான் அவர்களின் வெட்கம்

முஸ்லிம்(4413)

கல்வியைத் தேடும் விசயத்தில் வெட்கம் கூடாது

 நன்மை விட சிறுவர்களிடம் கேள்வி கேட்கும் போது நாம் வெட்கப்படுகிறோம்

 முஸ்லிம் (500),(4042)


        'உம்முஸுலைம்(ரலி) என்ற பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டதற்கு 'ஆம்! அவள் நீரைக் கண்டால்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா(ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, 'பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?' என்று கேட்டார்கள்" என ஸைனப் பின்து உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.(புஹாரி130)

     'மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். 'அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)' என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்" என அலீ(ரலி) அறிவித்தார்.(புஹாரி132)

அஹ்மத் (19773)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்." 
ஸுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி) அறிவித்தார்.(புஹாரி1471)

2 கருத்துரைகள் :

இன்ஷா அல்லாஹ் .... இந்த பயானின் வீடியோ அப்லோட் செய்ய முடியுமா?

இந்த வீடியோ ரெகார்ட் பண்ணப் பட வில்லை .இன்ஷா அல்லாஹ் இனி வரும் பெண்கள் பயான் வீடியோ போட முயற்சிக்கிறோம்

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.