Tuesday, January 17, 2012

உடலை பாதுகாப்போம்

بسم الله الرحمن الرحيم

உங்கள் மீது மேகத்தை நிழ­டச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். ''நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!'' (என்று கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். அல்குர்ஆன் 2:57

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள். அல்குர்ஆன் 2:168

நாம் பலவிதமான உணவுகளை உட்கொள்கிறோம். சாதாரண பிஸ்கெட்டில் இருந்து பிரியாணி வரை சுவை சுவையாய்.. வகை வகையாய் சாப்பிடுகிறோம். ஆனால் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நமக்கு எவ்வளவு கலோரி சக்தி கிடைக்கிறது என நமக்குத் தெரியுமா?

கலோரி என்றால் என்ன?

சரி, கலோரி (Calorie) என்றால் என்ன தெரியுமா? கலோரி என்பது உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி. அதாவது, உட­ல் சீரான இயக்கத்துக்கு இந்த கலோரியும் முக்கிய பங்கை செலுத்துகிறது. வியர்வை சிந்தி வேலை செய்வோருக்கு அதிகமாகவும், ''சீட்''டில் உட்கார்ந்து வேலை செய்வோருக்கு குறைவாகவும் தேவைப்படும். கர்ப்பிணிப் பெண்கள் உட்பட சில பெண்களுக்கு என்று இவ்வளவு கலோரி என்று கணக்கு உண்டு.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், கலோரி என்பது தேவையான சக்தியின் அளவு. இதற்கும் சத்துக்கும் சம்மந்தமில்லை.

''டீன் ஏஜ்'' வரை கலோரி கணிசமாக தேவை தான். ஆனால், நாற்பது வயதை தாண்டிவிட்டால், உடல் எடை கூடிவிட்டால், ''அடடா, கொழுப்பு கூடிவிட்டதே'' என்று கலோரியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஒரு கிராம் எடையுள்ள தண்ணீரை ஒரு டிகிரி சூடாக்கத் தேவைப்படும் வெப்ப சக்தியின் அளவு ஒரு கிலோ கலோரி.

மனிதன் வேலை செய்ய, உயிர் வாழ சக்தி தேவை. வேலை செய்யும் போது உடம்பில் உள்ள சத்து எரிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யச் சாப்பிட வேண்டும். உணவில் உள்ள சத்து உடம்பில் சேர்கிறது. மீண்டும் வேலை செய்யும் பொழுது மீண்டும் சத்து எரிக்கப்படுகிறது. இது ஒரு சுழற்சி. உணவில் இருந்து கிடைக்கும் இந்த சக்தியும் 'கிலோ கலோரி' என்ற அதெ அளவிலேயே அளக்கப்படுகிறது. நடைமுறையில் சுருக்கமாகக் 'கலோரி' என்றே குறிக்கப்படுகிறது.

சுலபமாக புரியும் ஒரு எடுத்துக்காட்டைப் பார்த்தால் விசயம் விளங்கிவிடும்.

ஒரு இட்­லிக்கு - 75 கலோரி கிடைக்கிறது.

ஒரு மணி நேரம் நடந்தால் - 160 கலோரி செலவாகிறது.

பொதுவாக ஒரு மனிதன் இயங்குவதற்கு அவரது உடல் அமைப்பு, செய்யும் வேலையைப் பொறுத்து 4000 முதல் 7000 கலோரிகள் வரை தேவைப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதென்ன கலோரி... ஏதோ புதுசா எல்லாம் சொல்றாரே டாக்டர் என்று பலரும் எண்ணலாம். உடல் எடை கூடிவிட்டால், சில கிலோ எடையை குறைக்க வேண்டுமானால், முத­ல் அதற்கு கலோரியை குறைக்க வேண்டும். அதுக்காகத்தான், நம்மில் சிலர், உடற்பயிற்சி, ட்ரெட்மில், வாக்கிங் என்று என்னவெல்லாமோ செய்கின்றனர். அப்படி கலோரிக்களை ''எரிக்க எரிக்க''த்தான் உட­ல் எடை குறையும். நீங்களும் ''ஸ்­ம்''மாக இருக்க முடியும்.

உடலை குறைக்க சில வழிகள்...

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சங்கடம், உடல் பருமன். அதிலும், பெண்கள் மத்தியில் அதிகமாக நடக்கும் விவாதம், எப்படி இளைப்பது என்பது தான்.

உடல் பருமனால் ஏற்படும் தொந்தரவுகள் பல. முதலாவதாக, நாம் விரும்பிய வண்ணம் உடையணிய இயலாது. எந்த உடையும் பொருத்தமாகத் தோன்றாது. அடுத்து உடல் பருமனால், உட­ல் பற்பல பிரச்னைகள் தோன்றலாம். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தமும், இதயக்கோளாறுகளும் வரும் வாய்ப்பு அதிகம். பொதுவாக, உடல் பருமனாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும். கால்களால், உட­ன் அதிக பருமனைத் தாங்க முடிவதில்லை என்பதால், ஓடியாடி வேலை செய்வதோ, சட்டென்று, எழுந்து அமர்வதோ சிரமமாகத் தோன்றும். சோம்பல் அதிகரிக்கும், அதன் விளைவாக, எடை மென்மேலும் அதிகரிக்கத் தொடங்கும். உடல் மிகப் பெருத்துவிடுமாயின், தாழ்வு மனப்பான்மை உண்டாகும். இப்படிப் பலப்பல தொல்லைகள் தொடர வாய்ப்புண்டு.

இத்தனை பின்விளைவுகளும் எங்களுக்குத் தெரியும். ஆனால் என்ன செய்வது? உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, உண்ணாமல் இருக்கவும் முடியவில்லை. என்னதான் செய்வது என்று சொல்வார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான். வருத்தப் படவேண்டாம். நிரம்பவும் கஷ்டப்படாமல் இளைக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று இங்கு பார்க்கப்போகிறோம்.

முதல் மற்றும் முக்கியத் தேவை என்ன தெரியுமா? உடலை இளைக்க வைத்தே தீருவது என்று தீர்மானித்துக் கொள்வதும், அதி­ருந்து பின்வாங்காமல் இருப்பதும்தான்.


1. எதிர்மறைக் (negetive)  கலோரி உணவு வகைகளை உட்கொள்ளுதல்:

பட்டினி கிடந்தால் இளைக்கலாம் என்ற ஒரு தவறான கருத்து பலரிடம் நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் உணவு அருந்தவில்லை என்றால் நமது உடல் சோர்வடையுமே தவிர இளைக்காது. அது மட்டுமின்றி, உணவு உட்கொள்ளும் ஆர்வத்தைக் கட்டுக்குள் வைப்பது மிகக் கடினம்.

இதற்குப் பதிலாக, நாம் எதிர்மறைக் கலோரி உணவினைச் சாப்பிடவேண்டும். அது சரி, நெகடிவ் கலோரி உணவு என்றால் என்ன? அதைப்பற்றி முத­ல் தெரிந்துகொள்வோம்.

நெகடிவ் கலோரி உணவு என்றால் என்ன?

நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு, நம் உட­ல் ஆற்றலாகச் சேமிக்கப் படுகிறது. வேலை செய்கையில், இந்த ஆற்றல் செலவழிக்கப்படுகிறது. உணவின் மூலம் பெறும் ஆற்றல் அதிகமாகவும், நாம் செய்யும் வேலைகளில் செலவு செய்வது குறைவாகவும் உள்ளபொழுது, அளவுக்கு அதிகமான ஆற்றல் கொழுப்பாக மாறி நம் உடம்பில் தங்கி, நம்மை குண்டாக்கிவிடுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும், ஒவ்வொரு அளவில் நமது சக்தி செலவாகிறது என்று சொன்னேனல்லவா? அதில், உணவைச் செரிக்கச் செய்யும் வேலையும் அடக்கம்.

பொதுவாக, நாம் உட்கொள்ளும் உணவில் அடங்கியுள்ள கலோரிகளை விட, அந்த உணவைச் செரிக்கத் தேவைப்படும் கலோரிகள் குறைவுதான். இதனால், உட­ன் ஆற்றல் அளவு ( இந்த ஆற்றல் / சக்தியை, நாம் பணி புரியவோ, நீண்ட தூரம் நடக்கவோ தேவைப்படும் சக்தியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) அதிகரித்து, உடலைப் பருக்க வைக்கிறது.

ஆனால், நாம் சாப்பிடும் சில உணவுகளில் உள்ள கலோரிகள் குறைவாகவும், செரிமானத்திற்கு நம் உடம்பால் பயன்படுத்தப்படும் சக்தி அதிகமாகவும் இருக்கும். அதாவது, நம் உட­ல் சேமிக்கப்பட்டுள்ள அதிகப்படி சக்தியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு, நம் உடலை இவ்வகை உணவுகள் ஆளாக்குகின்றன. இவற்றையே நெகடிவ் கலோரி உணவுகள் என்கிறோம். இந்த வகை உணவுகளை எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் உட்கொள்கிறோமோ அந்த அளவு, உட­ல் சேமிக்கப்பட்டுள்ள அதிகப் படியான கொழுப்பு எரிக்கப்படுகிறது.

பொதுவாக, அநேகமான காய்கறிகள், பழங்கள் நெகடிவ் கலோரி வகையைச் சேர்ந்தவையே. (காய்கறிகள் - காரட், பீன்சு, முட்டைக்கோசு (cabbage), பூக்கோசு (cauliflower), வெள்ளரிக்காய், கீரைவகைகள், தண்ணீர் விட்டான் கிழங்கு (asparagus), பீட்ரூட் முதலி­யன. பழங்கள் - ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி முத­லியன). வாரத்தில் ஒரு நாள் வெறும் பழங்கள் காய்கறிகளை மட்டும் சாப்பிடுவது அல்லது இரவில் பழங்கள் மட்டும் சாப்பிடுவது என்று பழக்கமாக்கிக் கொண்டால், கணிசமாக எடை குறைவதைக் காணலாம். அது மட்டுமன்று. இத்தகைய உணவுகள் உங்கள் செரிமான உறுப்புக்களை சுத்தம் செய்கின்றன. உங்கள் சருமத்தைப் பாதுகாக்கின்றன. மொத்தத்தில் உங்கள் உடல் எடை குறையவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் நெகடிவ் கலோரி உணவுகள் உதவுகின்றன.

பட்டினி கிடப்பதற்குப் பதில், நிறையச் சாப்பிடுங்கள், நெகடிவ் கலோரி உணவுகளை.

உடல் பருமன் சுட்டி (BMI) என்றால் என்ன?

உடல் நிறைக்கும், உயரத்திற்கு இடையிலான விகிதம், சுகாதாரத்தில் ஒரு காட்டியாக ஏற்றுகொள்ளப்படும். இது உட­லுள் கொழுப்பின் விகிதாசாரத்தை கணிக்காது.

உடல் பருமன் சுட்டி (BMI) உடல் நிறையை (கிலோ கிராமில்) உயரத்தின் வர்க்கத்தால் (மீற்றரில்) வகுப்பதால் கணிக்கப்படும்.

18-23 இலான உடல் பருமன் சுட்டியே (BMI) - வயது வந்தோரின் சாதாரணமாகும்.

உடல் பருமன் சுட்டி (BMI = நிறை (Kg) / உயரம் (m2)

உடல் பருமன் சுட்டி (BMI) கூட்டம் (பிரிவு), சுகாதர பிரச்சினை

18 வயதிற்குள் குறைநிறை அதிகம்

18-23 சாதாரண நிறை குறைவு

23-25 அதிக நிறை அதிகம்

25 வயதிற்க்கு மேல் மிக அதிக நிறை மிக அதிகம்

காரணங்கள்:

* சீரற்ற உணவு பழக்கவழக்கங்கள்..

* உண்ணுதல் சம்பந்தமான நோய்கள் (Anonexin, Bulimia)
* நோய்கள் - (காச நோய், புற்று நோய், நீரிழிவு நோய்)

* மன உளைச்சல, படபடப்பு.

* தைரொயிட் செயற்பாடு அதிகரித்தல்.

* எயிட்ஸ்.

அதிக நிறை என்றால் என்ன?

உடல் பருமன் சுட்டி 23-25 Kg/ m2  இடையில் இருத்தல்.

இது சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது.

காரணங்கள்:

* அதிகம் உண்ணுதல்.

* குறைவான உடற்பயிற்சி.

* சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை.

* வேறு உணவுகள் உட்கொள்ளல்.

* தைரொயிட்ட செயற்பாடு குறைதல்.

* மன உளைச்சல்

மிக அதிக உடல் பருமன் என்றால் என்ன?

அதிகப்படியான காணப்படும் கொழுப்பு, உட­ல் சேகரிக்கப்படுவதால் அது சுகாதாரத்தில் ஒரு பாதிபை ஏற்படுத்தும், மற்றும் மனிதனின் ஆயுட்காலத்தை அது குறைக்கும்.

குறைநிறை என்றால் என்ன ?

உடல் பருமன் சுட்டி 18Kg/m2 இலும் குறைவாக காணப்படுதல்.

பாதிக்கும் லி வயிற்று சுற்றளவு (Waist Circumference)
ஆண்களில் > 89 Cm

பெண்களில் > 79 Cm

-வயிற்று - இடுப்பு விகிதம் (Waist hip ratio)

 0.8 (ஆண்களில்)

 0.7 (பெண்களில்)

உடல் பருமன் சுட்டி 25 Kg/m2  என்பது மிக அதிக நிறை உடையவர்கள்.

நல்ல சுகாதார பழக்க வழக்கங்கள்

1. உடல் பயிற்சி. உட­லுள் கலோரிகள் எரிக்கப்படுவதற்கு அசைவு தேவை. அன்றாட, மெதுமையான உடற்பயிற்சி இதற்கு உறுதுணையாக இருக்கும்.

விளையாட்டு: எதாவது ஒரு விளையாட்டு ( நீச்சல், சையிக்கிள் ஒட்டம்.)

2. கால தாமதமற்ற தூக்கம். தூக்கம் உட­ன் செயற்பாட்டில் மிக முக்கியம், எனவே, அன்றாடம் சரியான தூக்கம் அவசியம்.

3. மரக்கறி பழ வகைகள் உண்ணுதல்; மாமிசம், உப்பு, சீனி குறைத்து கொள்ளுதல். மரக்கறி பழ வகைகளில், உடலுக்கு தேவையான விட்டமின்களும், கனியுப்புக்கள் மற்றும் நார் பொருட்டகள் காணப்படும். இவை, பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும். மற்றும் உட­ல் கலோஸ்ட்ரோல் சமநிலைக்கும், உணவு கால்வாய் தொகுதியின் செயற்பாட்டிற்கும் உதவும். எனவே, உணவுகளில் மரக்கறிகளை அதிகரித்து கொள்ளுங்கள். ஸீன்று நிறங்களிலான பழ மற்றும் மரக்கறி வகைகளை தேர்ந்தெடுத்து கொள்க. ஐந்து வேறுபட்ட பழ மற்றும் மரக்கறிகள். பச்சை இலைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்க. வேறுபட்ட தாவர பகுதிகளை உட்கொள்க, இலைகள், தண்டு, வேர், பூ மற்றும் பழம்.

4. மன உளைச்சலை தவிர்த்து கொள்க. உங்கள் பிரச்சினைகளை நம்பத்தகுந்த ஒருவரிடம் பகிர்ந்து கொள்வது.

5. நீர் பருகுதல் - ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்து குவலை நீர் அருந்த வேண்டும். இது உயிரின் முக்கிய ஒருகூறு என்பதால் அதிகம் தேவைப்படும்.

வெற்றுக்கலோரி (Empty calories)  உணவு என்றால் என்ன?

வெற்றுக்கலோரி உணவு என்பது அதிக கலோரியும், குறைந்த அத்தியாவசிய நுண் சத்துக்களும் கொண்ட உணவு ஆகும்.

வெற்றுக்கலோரி உணவுகளில் சில::

* வறுத்த, பொரித்த கோழி

* சிப்ஸ்

* எண்ணெயில் பொரித்த உணவுகள்

* துரித உணவு வகைகள்

* மிட்டாய், பதப்படுத்தப்பட்ட இனிப்புகள், ஐஸ்கிரீம்

* வெள்ளை கோதுமை ரொட்டி, அரிசி சாதம்

* வெண்ணை, நெய்

மாறாக,

* பொரித்த உணவுக்கு பதில் அவித்த உணவுகள் - அவித்த தோ­ல்லாத கோழி, அவித்த காய்கறிகள்

* இனிப்பான குளிர்பானங்களுக்கு பதில் புதிய இனிப்பு சேர்க்காத பழச்சாறு

* முழு தானிய ரொட்டிகள், முழு தானிய உணவுகள்  இவற்றில் நார்ச்சத்து மற்றும் நுண் சத்துகள் அதிகம் உள்ளன.

* கொறிக்கும் உணவுகளூக்கு பதில் பழங்களைச் சாப்பிடலாம்.

''ப்ரைடு'' உணவுகளால் பாதிப்பா?

''ப்ரைடு'' உணவுகளா? உஷார் நீங்கள் ஆணா, பெண்ணா, டீன் ஏஜா, அடிக்கடி ''ப்ரைடு'' அயிட்டங்கள் வெளுத்துக்கட்டுவீர்களா? ஆண்களாக இருந்தால், அவர்களுக்கு ஐம்பதை தாண்டியவுடன் சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று தான் வரும். ஆனால் பெண்களுக்கு, அவர்கள் திருமணத்துக்கு பின்னர் ''வேலையை'' காட்டிவிடும்.

இதை அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக பொதுசுகாதார ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்லும் சில எச்சரிக்கை தகவல்கள்:

* சில ''ப்ரைடு'' உணவு வகைகளில் அதிக கொழுப்பு உள்ளது. இது ஆரோக்கியமற்ற கொழுப்பு. ஆண்களை விட பெண்களை தான் அதிகம் பாதிக்கும்.

* இதை ''டிரான்ஸ் ஃபேட்'' என்பர். ப்ரைடு ரைஸ் (Fried rice), ப்ரைடு சிக்கன் (Fried chicken),  குக்கீஸ், பாஸ்ட்சுஸ் போன்றவற்றில் இருக்கும். இது ரத்த நாளங்களில் பதிந்து சுருக்கிவிடும்.

* கருப்பை தொடர்பான மலட்டுத் தன்மையை இந்த ''ப்ரைடு'' உணவுகளால் ஏற்படும் ''டிரான்ஸ் பேட்'' எனப்படும் கொழுப்பு அதிகரிக்கும்.

* வெறும் இரண்டு சதவீதம் அளவுக்கு இந்த கொழுப்பு சேர்ந்தால் போதும், அதனால் இரண்டு மடங்கு மலட்டுத் தன்மை பாதிப்பு வரும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான கலோரிகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு தினமும் அதிகமாக 300 கலோரி தேவை.

16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு முழு உடல் எடைக்கு தினமும் 2200 கலோரி தேவை.

''நகரத்தில் உள்ள ஒருவர் சராசரியாக 2100 கலோரி சக்தி அளிக்கும் உணவை சாப்பிட வேண்டும். கிராமத்தில் உள்ளவர் சராசரியாக 2400 கலோரி சக்தி அளிக்கும் உணவை சாப்பிட வேண்டும்.

சுமார் ஒரு ­ட்டர் கொள்ளளவு உள்ள கிண்ணத்தில் இருக்கும் சோற்றில் 700 கலோரி சக்தி இருக்கிறது.

ஒரு வேளைக்கு ஒரு கிண்ணம் என்று மூன்று வேளைக்கு மூன்று கிண்ணம் வெறும் சோறு சாப்பிட்டால் 2100 கலோரி சக்தி கிடைத்துவிடும்.

அதேபோல் நாம் செய்யும் வேலையைப் பொறுத்து தேவையான அளவும் வித்தியாசப்படும்.

உட்கார்ந்த இடத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு 1200 கிலோ கலோரி தேவைப்படும் என்றால் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு 1500 வரை தேவைப்படும். ஆண்களுக்கு வேலையைப் பொறுத்து 1800 ­ருந்து 2000 கிலோ கலோரி தேவைப்படும்.

ஒருவருக்கு எவ்வளவு கலோரி தேவைப்படுகிறது

ஒருவருக்கு எவ்வளவு கலோரி தினமும் தேவைப்படுகிறது என்பதை ''ஹாங்ஸ் பெனடிக்ட் பார்முலா''படி டாக்டர்கள் முடிவு செய்கின்றனர். உடலுக்கு கலோரியும் தேவை, உடல் எடையும் கூடிவிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த கலோரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

* உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் (Carbohydrates), புரோட்டீன், கொழுப்புகள் ஆகியவற்றில் இருந்து கலோரி கிடைக்கிறது.

* உட­ன் எரிசக்தியான கலோரி (Calorie),  பல வகை இயக்கங்களுக்கும் தேவை என்றாலும், அது அதிகமாகிவிட்டால், கொழுப்பாக மாறிவிடும்.

* புரோட்டீன் (protein), கார்போஹைட்ரேட்டின் ஒரு கிராமில் நான்கு கலோரி (Calorie)  உள்ளது. கொழுப்பில் தான் அதிக கலோரி, அதாவது, ஒன்பது கலோரி உள்ளது.

* நீங்கள் சாப்பிடும் முறை, அதனால், உடல் கூடுவது, உடல் உழைப்பு போன்றவற்றால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உட­ல் கலோரியை சேர்க்கக் கூடாது. சேர்ப்பதால் தான் கொழுப்பு கூடி, உடல் எடை கூடுகிறது.

* ஒருவருக்கு எடை கூடிவிட்டது என்றால், அதை போக்க கலோரியை ''எரிக்க'' வேண்டும். உடற்பயிற்சி, ட்ரெட் மில், வாக்கிங் என்று வியர்வை சிந்தி தான் உட­ல் ''கொழுப்பாக தேங்கிய'' கலோரியை எரிக்க முடியும்.

* ஒருவர் ஒரு பவுண்ட் எடையை குறைத்துள்ளார் என்றால், 3500 கலோரியை எரித்து இருக்கிறார் என்று அர்த்தம். உடற்பயிற்சியால், ஒரு வாரத்தில் இதை செய்ய முடியும்.

அதனால், உங்கள் உடல் இயக்கத்துக்கு தேவையான கலோரிகளை சீராக பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்க சீரான உணவுப் பழக்கங்கள் தேவை. அதிக கலோரி உள்ள உணவுகளாக சாப்பிட்டால், அதிக கலோரி சேர்ந்து, அதிக கொழுப்பு சேரும்.

அப்படி கொழுப்பு சேர்ந்தால், அப்புறம் கேட்கவே வேண்டாமே, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி என்று தொடர்ந்துக்கொண்டே செல்லும்.

கலோரி என்றால், எங்கிருந்தும் கிடைக்கவில்லை. நாம் உண்ணும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் கார்போஹைட்ரேட் மூலம் 50 முதல் 60 சதவீதம் வரை கலோரி கிடைக்கிறது. புரோட்டீன் மூலம் 20 சதவீதம், கொழுப்பு மூலம் 15 முதல் 20 சதவீதம் கிடைக்கிறது.

கலோரின் உணவுக்கு உணவு மாறுபடும். அதேபோல் நாம் செய்யும் வேலையைப் பொறுத்து, தேவையான அளவும் வித்தியாசப்படும்.

பொதுவாக நாம் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள் விவரம்

உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள் விவரம்

பால் பொருட்கள்:

பால் ஒரு கப் - (225 மி­) 150 கலோரி

வெண்ணெய் 1 டீ ஸ்பூன் - 150

நெய் 1 டீ ஸ்பூன் - 45

தயிர் - 51

பசும்பால் - 65

டீ (ஒரு கப்) - 79

காபி (ஒரு கப்) - 98

ஸ்கிம் மில்க் - 35

பழங்கள்:

ஆப்பிள் (சிறியது) - 50-60

வாழைப்பழம் (நடுத்தரம்) - 100-120

திராட்சை பழங்கள் (சிறியது) 15-50-60

மாம்பழம் (சிறியது) - 100-120

ஆரஞ்சு (நடுத்தரம்) - 50-60

ஜூஸ் வகைகள்

ஆப்பிள் ஜூஸ் - 55

திராட்சை ஜூஸ் - 55

மாம்பழ ஜூஸ் - 58

ஆரஞ்சு ஜூஸ் - 44

பைனாப்பிள் ஜூஸ் - 52

கரும்பு ஜூஸ் - 36

தக்காளி ஜூஸ் - 17

தேங்காய் பால் - 76

இளநீர் - 24

சமைத்த பண்டங்கள்:

அரிசி 25 கிராம் - 80

சப்பாத்தி 1-க்கு - 80

காய்கறிகள் 150 கிராம் - 80

வெஜிடபிள் பிரியாணி ஒரு கப் - 200

அசைவ உணவுகள்:

மீன் 50 கிராம் - 55

இறைச்சி - 75

முட்டை - 75

மட்டன் பிரியாணி ஒரு கப் - 225

கோழிக்கறி 100 கிராம் - 225

மற்ற பண்டங்கள்:

இனிப்பு பிஸ்கட் 15 கிராம் - 70

கேக் 50 கிராம் - 135

கேரட் அல்வா 45 கிராம் - 165

ஜிலேபி 20 கிராம் - 100

ரசகுல்லா - 140

இப்படிக்கு
என். ராஜ் முஹம்மது எம்.ஐ.எஸ்.ஸி,

Monday, January 16, 2012

கிறித்தவ விவாதம் நேரடி ஒளிபரப்பு

இன்ஷா அல்லாஹ், நாளை தொடங்கி இரண்டு நாட்கள் கிறித்தவர்களுடன் நடைபெறும் விவாதம் ஆன்லைன் பீஜே மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

ஆங்கில மொழிபெயர்ப்புடன் நடைபெறும் இவ்விவாதத்தை பாருங்கள் மற்றவர்களையும் பார்க்க செய்யுங்கள். 

தானே புயல் நிவாரண களத்தில் TNTJ (வீடியோ)

தானே புயலின் பாதிப்பை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடனே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை நேடியாக வழங்கி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் நேர்காணல், சேதமைந்த காட்சிகள், முதல் கட்ட நிவாரண உதவிகள் வழங்கும் நிகழச்சிகள் உள்ளிட்ட வீடியோ தொகுப்பு




தானே புயல் நிவாரண களத்தில் TNTJ (வீடியோ







குறிப்பு தானே புயலி்ல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் அதிரை கிளை நிர்வாகிகளிடம் உங்கள் உதவிகளை அளித்தால் அதை தலைமையிடம் ஒப்படைத்து அதற்குரிய ரசீது பெற்றுத்தரப்படும்

தொடர்புக்கு  9943447195, 9677630322, 9629533887,

Sunday, January 15, 2012

வரதட்சணை ஒழிப்பு மாநாடு - அதிரை (வீடியோ)

பாகம்-1



பாகம்-2


Saturday, January 14, 2012

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்

அப்துன் நாஸர் M.I.Sc, பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி
மேலப்பாளையம்.



இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும்.

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

நம் தமிழகத்தைப் பொறுத்த வரை பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்ந்து வருகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் வெறுக்கத்தக்க வகையில் தீமைகளும் நிறைந்து தான் காணப்படுகின்றன.

கூட்டுக் குடும்பமாக நாம் வாழ்ந்து வந்தாலும் அதில் மார்க்கம் கூறுகின்ற ஒழுக்க மாண்புகளை முறையாகப் பேணிப் பின்பற்றினால் இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகளிலிருந்தும் நம் சமுதாயத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தங்கை உறவா? தடுக்கப்பட்ட உறவா?

கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பெரியப்பா, சித்தப்பாமார்களின் பெண் மக்களை உடன் பிறந்த அக்கா, தங்கை போன்று கருதி அவர்களோடு நெருங்கிப் பழகி வருகின்றனர். வீடுகளில் தனிமையில் அவர்களோடு பேசிக் கொண்டிருப்பது, வாகனங்களில் பின்னால் வைத்து அழைத்துச் செல்வது போன்று பல விதங்களில் கலந்து பழகி வருகின்றனர். இத்தகைய பழக்க வழக்கங்கள் பல நேரங்களில் அவர்களுக்கு மத்தியில் தவறான தொடர்புகள் ஏற்படுவதற்குக் காரணமாகவும் அமைந்து விடுகின்றது.

ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் அல்லது ஒரு தந்தைக்குப் பிறந்தவர்கள் மற்றும் பால்குடிச் சகோதரர்களுக்கு மத்தியில் தான் அண்ணன் தங்கை உறவு ஏற்படுமே தவிர மார்க்க அடிப்படையில் வேறு யாருக்கு மத்தியிலும் அண்ணன் தங்கை உறவு ஏற்படாது.

திருமணம் செய்வதற்கு தடுக்கப் பட்ட உறவுகளை திருமறைக் குர்ஆன் விவரித்துள்ளது. இந்த உறவினர்களை மணக்க அனுமதியில்லை.

ஆண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்

1. தாய், 2. மகள், 3. சகோதரி, 4.தாயின் சகோதரி, 5. தந்தையின் சகோதரி, 6. சகோதரனின் புதல்விகள், 7. சகோதரியின் புதல்விகள், 8. பாலூட்டிய அன்னையர், 9. பாலூட்டிய அன்னையின் புதல்விகள், 10. மனைவியின் தாய், 11. மனைவியின் புதல்வி, 12. மகனின் மனைவி, 13. இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்

பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்:

1. தந்தை 2. மகன் 3. சகோதரன் 4. தாயின் சகோதரன் 5. தந்தையின் சகோதரன் 6. சகோதரனின் மகன் 7. சகோதரியின் மகன் 8. பாலூட்டிய அன்னையின் கணவன் 9. பாலூட்டிய அன்னையின் மகன் 10. கணவனின் தந்தை 11. கணவனின் புதல்வன் 12. புதல்வியின் கணவன் 13. சகோதரியின் கணவனை, சகோதரியுடன் வாழும் போது மணப்பது ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன் 4:23 வசனத்திலிருந்து இதை அறியலாம்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:23

இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.

அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாது.

அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களானால் அவர்களை மணக்கக் கூடாது.

இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவு முறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 2451, 4719

இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது.(பார்க்க: புகாரி 4719)

மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகிவிட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.

மேற்கண்ட பட்டியலில் பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் இடம் பெறவில்லை. இதிலிருந்து பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் அந்நியப் பெண்களே என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களைத் திருமணம் செய்வது ஆகுமானதாகும்.

ஆனால் ஷாஃபி மத்ஹபினர் இதனை ஹராமாக்கி வைத்துள்ளனர். இதனை எந்த ஆலிம்களும் வெள்ளி மேடைகளில் கண்டித்து உரையாற்றுவது கிடையாது. யாராவது பேசினாலும் அவர்களை ஒரு விதமாக பார்க்கக் கூடிய நிலை தான் காணப்படுகிறது.

எனவே கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அந்நிய ஆணும் பெண்ணும் அண்ணன் தங்கை போன்று கலந்து வாழ்கின்ற இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

அண்ணி ஓர் அந்நியப் பெண்ணே:

அது போன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அண்ணியை அன்னை போன்றோ அக்கா போன்றோ கருதி அவர்களோடு நெருங்கிப் பழகக்கூடிய நிலையும் அதிகமாகக் காணப்படுகிறது. இத்தகைய உறவும் பலவிதமான தவறுகள் நிகழ்வதற்குக் காரணமாக அமைகின்றது. இவ்வாறு கலந்துறவாடுவது மார்க்கம் காட்டுகின்ற மாண்பிற்கு எதிரானதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகüல் ஒருவர், ''அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: புகாரி 5232


அனுமதி கோரல்:

கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் மார்க்கத்திற்கு எதிரான பல்வேறு நடைமுறைகள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் ஒன்று, வீடுகளுக்குள் நுழையும் போது பேண வேண்டிய ஒழுக்கங்கள் பின்பற்றப் படுவதில்லை.

கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் அதற்குரிய தனித்தன்மை காக்கப்பட வேண்டும். அண்ணன் தம்பிகள் திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் தனித் தனி அறைகளை ஏற்பாடு செய்து, மார்க்கம் கூறுகின்ற ஒழுக்கங்களை அங்கு மிகவும் கண்டிப்புடன் கடைப்பிடித்தால் பல்வேறு விதமான ஒழுக்கச் சீர்கேடுகள் அரங்கேறுவதை விட்டும் நம் குடும்பத்தினரை பாதுகாத்துக் கொள்ளலாம். அதில் ஒன்று தான் வீடுகளுக்குள்ளோ மற்றவரின் அறைகளுக்குள்ளோ செல்லும் போது அனுமதி பெற்றுச் செல்வதாகும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:27)

அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக வீட்டில் உள்ள பெண்களிடம் ஏதாவது ஓர் உறவு முறையில், ஊர் பழக்கத்திற்குத் தக்க மச்சி, மாமி, மதினி என்று கூறிக் கொண்டு உரிமையுடன் உத்தரவின்றி உள்ளே நுழைந்து விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் வசனத்தின் அடிப்படையில் இது தடை செய்யப்பட்ட காரியமாகும்.

கணவன், மனைவி என இருவரும் இணைந்திருக்கும் போது, அல்லது ஆணோ, பெண்ணோ தனியாக இருக்கும் போது பல்வேறு விதமான அசவுகரியங்களில் இருப்பார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அல்லாஹ் தன் திருமறையில், அனுமதி இல்லையேல் திரும்பி விடுங்கள் என்று கூறுகின்றான்.

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! ''திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். (அல்குர்ஆன் 24:28)

இந்தக் கட்டளையின் படி, உள்ளே வர அனுமதியில்லை என்றால் கண்ணியமான முறையில் திரும்பி விட வேண்டும். இன்று இது போல் வீட்டுக்கு வந்தவரிடம் வீட்டில் உள்ளவர் தெரிவித்து விட்டால் வந்தவர் கோபித்துக் கொள்கின்றார். 'நான் வாசல் தேடி வந்தேன்; உள்ளேயிருந்து கொண்டே என்னை வாசற்படியில் நிற்க வைத்தே அனுப்பி விட்டார்' என்று வந்தவர் வீட்டுக்காரரைப் பற்றிக் குறை கூறிப் பொறுமுகின்றார். இந்த வசனத்தின் பொருளை உணர்ந்து கொண்டால் இந்தப் பொறுமலுக்கு அவர் இடமளிக்க மாட்டார்.

தெளிவாகப் பெயரைச் சொல்லுதல்:

வாசலில் வந்து அனுமதி கேட்பவர், தான் இன்னார் என்று குறிப்பிட்டுத் தன் பெயரை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். மொட்டையாக 'நான் தான்' என்று கூறக் கூடாது.

என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், ''யாரது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், ''நான் தான்'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''நான் தான் என்றால்...?'' என்று அதை விரும்பாதவர்கள் போல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 6250

மூன்று முக்கிய நேரங்கள்:

கூட்டாக வாழ்கின்ற வாழ்க்கையில் நம்முடைய குழந்தைகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். அவர்களுக்குரிய ஒழுங்கங்களையும் நாம் அவர்களுக்கு முறையாகக் கற்பிக்க வேண்டும். பின்வரும் வசனத்தில் மூன்று நேரங்களில் குழந்தைகள் கூட அனுமதி பெற்றுத் தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என இறைவன் கட்டளையிடுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 24:57, 58)

இந்த நேரங்கள் பெண்கள் தங்கள் படுக்கைக்கு ஒதுங்குகின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற நேரங்களாகும். இந்நேரங்களில் வீட்டில் பணியாற்றும் அடிமைகள் மற்றும் பருவ வயதை அடையாத பாலகர்கள் கூட அனுமதி பெற்றுத் தான் வரவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான் என்றால் மற்றவர்கள் அனுமதி பெறாமல் வரலாமா?

மூன்று முறை அனுமதி கோரல்:

நான் அன்சாரிகளின் அவை ஒன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூஸா (ரலி) அவர்கள் வந்தார்கள். ''நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களது வீட்டிற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே நான் திரும்பி விட்டேன். பின்பு உமர் (ரலி), ''(உங்களை வரச் சொல்லியிருந்தேனே) நீங்கள் ஏன் வரவில்லை?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், ''மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப் படவில்லை. ஆகவே நான் திரும்பி வந்து விட்டேன். (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும். அவருக்கு அனுமதி வழங்கப் படவில்லை என்றால் அவர் திரும்பி விடட்டும்'' என்று கூறியுள்ளார்கள்'' என்று கூறினேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வர வேண்டும்'' என்று கூறினார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?'' என்று அபூமூஸா (ரலி) கேட்டார்கள்.

அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சி சொல்ல) வருவார்'' என்று சொன்னார்கள். அங்கு நான் தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே நான் அபூமூஸா (ரலி) அவர்களுடன் சென்று, ''நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்'' என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 6245



பார்வையை உள்ளே செலுத்தாதிருத்தல்:

ஒருவர் இன்னொருவர் வீட்டிற்கு வரும் போது, வீட்டில் நுழைவதற்கு அனுமதி பெறுவதற்கு முன், வீட்டுக்குள் பார்வையைச் செலுத்தக் கூடாது. வீட்டில் இருக்கும் அந்நியப் பெண்களின் மீது பார்வை பட்டு விடக் கூடாது என்பது தான் நபி (ஸல்) அவர்களது கட்டளையின் முக்கிய நோக்கமாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்ப்பதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ''நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலுள்ளவர்கள் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி 5294



பார்வையைப் பறித்தாலும் பாவமில்லை:

இதனையும் மீறி பார்வையை உள்ளே செலுத்துபவர் மீது கையில் இருப்பதை விட்டெறிந்து கண்ணைப் பறித்தால் கூட தப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களது கட்டளை அமைந்துள்ளது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்முனையுடன் அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவருடைய கண்ணில்) குத்துவதற்குச் சென்றதை இப்போதும் நான் பார்ப்பது போல் உள்ளது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 6242


உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்த போது அவர் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உன் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அபுல்காஸிம் (முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6902

அடுத்தவர் வீட்டுக்கு ஒருவர் செல்லுகையில் மேற்கண்ட அல்லாஹ்வின் கட்டளைகளையும், அவனது தூதருடைய கட்டளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திரையைத் தொங்கவிடுதல்:

வீட்டிற்கு வருபவருக்கென்று ஒழுங்கு முறைகள் இருப்பது போல் வீட்டில் உள்ளவருக்கும் அனுமதியளிக்கும் விஷயத்தில் வரைமுறைகள், ஒழுங்கு முறைகள் உள்ளன. வீட்டில் இருப்பவர்கள் வருவோர், போவோர், தெருவில் கடந்து செல்வோர் யாரும் பார்வைகளைச் செலுத்துவதற்கு வசதியாக வாசலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. திரைகளைத் தொங்கப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட வசனங்களிலும், ஹதீஸ்களிலும் வீட்டில் இருப்பவர்களும் இது போன்று அடுத்தவர் பார்வையில் படும்படி இருக்கக் கூடாது என்பதையும் சேர்த்தே தெரிவிக்கின்றன. நபி (ஸல்) அவர்களது வீட்டிலும், அவர்களது மகளார் பாத்திமா (ரலி) வீட்டிலும் திரைகள் தொங்கிக் கொண்டிருந்ததை புகாரி மற்றும் இதர நூல்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.

தமிழகத்தின் சில பகுதிகளிலுள்ள முஸ்லிம் பெண்களிடம் ஒரு வழக்கம் உண்டு. அவர்கள் பேருந்துகளில் செல்லும் போது தாடி, தலைப்பாகையுடன் யாரேனும் பேருந்தில் ஏறினால் அப்பெண்கள் தங்கள் புர்க்காவை நன்கு இழுத்துப் போர்த்திக் கொள்வார்கள். வெட்கப்படுவதற்கு இவர்கள் மட்டும் தகுதியானவர்கள், மற்றவர்கள் கிடையாது என்ற போங்கில் இவர்களது இந்தச் செயல் அமைந்திருக்கும். அது போல் இன்று புர்கா சட்டத்தைப் பேணக் கூடிய முஸ்லிம்கள் குறிப்பாக குர்ஆன், ஹதீஸைப் பேணக் கூடியவர்களின் வீட்டிலும் ஒரு விநோதம் நடக்கின்றது.

ஓரளவுக்கு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள் வந்தால் ஒழுக்க மரியாதையுடன் முறைப்படி அனுமதி அளிக்கின்றனர். பேணுதலுடன் நடந்து கொள்கின்றனர்.

ஆனால் அதே சமயம் கார் டிரைவர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், காய்கறி வியாபாரிகள், பால்காரர்கள், பூக்காரர்கள், வளையல்காரர்கள், சிட்டை வட்டிக்காரர்கள், தங்கள் வயல்களில் உழும் விவசாயிகள், வயர்மேன்கள், பிளம்பர்கள் குறிப்பாக பொற்கொல்லர்கள் ஆகியோர் சர்வ சாதாரணமாக வீட்டிற்கு வந்து செல்கின்றார்கள். இவர்களைப் பெண்கள் கண்டு கொள்வதே கிடையாது. இத்தகையவர்கள் சமையலறை வரை சர்வ சாதாரணமாகப் பவனி வருகின்றார்கள்.

பெண்கள் அடுக்களையில் சமையல் பணியில் இருக்கும் போது முற்றிலும் தங்கள் ஆடைகளைச் சரி செய்து கொண்டு நிற்க இயலாது. இது போன்ற கட்டங்களைப் பெண்களும் வெட்கப்படுவதற்குரிய கட்டங்கள் என்று கருதுவது கிடையாது. இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்நிய ஆண்களை சர்வ சாதாரணமாக வீட்டிற்குள் அனுமதிப்பது இறைக் கட்டளைக்கு மாற்றமானதாகும்.

இதற்கெல்லாம் காரணம், அல்லாஹ்வின் கட்டளையை முழுமையாக உணர்ந்து செயல்படாதது தான்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். அல்குர்ஆன் 24:31

இந்த இறைக் கட்டளையைப் பெண்கள் பேணி நடக்க வேண்டும். இந்த இறைக் கட்டளைகளைப் பேணி நடந்தால் நம்முடைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாக, ஒழுக்கமான வாழ்க்கையாக, மறுமையில் வெற்றி பெறக் கூடிய வாழ்க்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Friday, January 13, 2012

சுயபரிசோதனை




நபிவழித் திருமணம்

அதிரை கிளைச்சார்பாக கடற்கரைத்தெருவில் சகோதரர் Y அன்வர் அலி (மாவட்டத்தலைவர்) அவர்களின் சகோதரியின் மகன் அஸ்வத்கான் அவர்களுக்கு நபிவழிப்படி 11.01.2012 புதன் அன்று காலை 11.00 மணிக்கு மஹர் கொடுத்து திருமணம் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாத்தில் இல்லாத திருமண சடங்குகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.




Thursday, January 12, 2012

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ரூ.10 லட்சம் நிதியுதவி


சென்னை: தானே புயல் பாதித்த கடலூர் மற்றும் புதுவை பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிதியுதவி அளித்துள்ளது. 

இது குறித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தானே புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் டிசம்பர் 31ம் தேதி முதல் அந்தப் பகுதிகளில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையைச் சேர்ந்தவர்கள் உடனடியாகக் களமிறங்கி அந்த மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களின் அத்தியாவசியத் தேவையான தண்ணீர், பால், உணவு ஆகியவற்றை உடனடியாக அவர்களுக்கு ஏற்பாடு செய்து தந்தனர். இன்னும் சில கிளைகளில், பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்கள். ஆனால் தானே புயலால் வீடுகளை இழந்தவர்களும், கூரைகள் இடிந்தவர்களும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

10 லட்சம் நிதியுதவி 

அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமையில் மாநிலச் செயலாளர்கள் எழும்பூர் சாதிக், அம்பத்தூர் யூசுப், மவ்லவி ஜமால், சமூக ஆர்வலர் தஸ்தகீர், துறைமுகம் கிளைத் தலைவர் ஷரீப் ஆகியோர் அடங்கிய நிவாரணக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறங்கியது. தானே புயலால் கடும் சேதத்தைச் சந்தித்த கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளையும் பார்வையிட்டனர். 

பண்ருட்டி பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து எவ்வித ஆதரவும் இன்றி நின்ற மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தலா ரூ. 2,000த்தை முதல் கட்ட நிவாரண உதவியாக வழங்கினார்கள். இதுவரை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மற்றும் புதுவையில் உள்ள தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகின்றனர்.

நன்றி: தட்ஸ்தமிழ்

மேலும் விபரங்களுக்கு:


கீழத்தெரு தெருமுனை பிரச்சாரம் (விடியோ)

கீழத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் நிகழ்த்திய உரை

தமுமுக தவ்ஹீத் ஜமாஅத் பிளவு ஏன்?

தவ்ஹீத் ஜமாஅத் தமுமுக பிளவுக்கு என்ன காரணம்? விபரத்திற்கு இங்கே சொடுக்கவும்.

Wednesday, January 11, 2012

பதில் அளிக்க முடியாமல் ஒடி ஒளிந்த ஸலஃபி மத்ஹபினர்!

அதிரை ஸலஃபிகள் என்ற ஜாகில்கள் கூட்டம் எவ்வாறு ஒட்டம் எடுத்தது என்பதை அறிய கீழே உள்ள ஆக்கங்களை பார்வையிடவும்.


ஆர்ப்பாட்டம் ஹராமா? கூறுகெட்ட ஸலஃபிகளின் குதர்க்கவாதம்

அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் தரக்கூடாது, ஆனால் தரலாம் - உளறும் குழப்பி கூட்டம்

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்று கூறுவது சரியா? ஸலஃபி பக்தர்களின் அறியாமை!

ஸலஃபிகளே ஸஹீஹான ஹதீசை செயல்படுத்துங்கள் (மறுக்காதீர்கள்)!

அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்பதின் பொருள் என்ன?

பிஜேவின் ஆசிரியர் யார்? ஆசிரியரை வைத்து தான் நேர்வழி தீர்மானிக்கபடுமா?

ஸலஃபி கொள்கை சரியா?

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா?

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

குர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன?

யஹ்யா சில்மியின் விமர்சனம் என்ன?

ஆர்ப்பாட்டம் ஹராமா? கூறுகெட்ட ஸலஃபிகளின் குதர்க்கவாதம்


ஆர்பபாட்டம் ஹராம் என்று மார்க்கத்தின் அடிப்படை கூட தெரியாத அதிரை குழப்பிகள் கூட்டம் ஃபத்வா வழங்கியுள்ளது.

பொதுவாக, தவ்ஹீத் ஜமாஅத் மெண்டல்களை கண்டுகொள்வது இல்லை. அந்த அடிப்படையில், இவர்களை நாம் கண்டுக்கொள்ளவில்லை. ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்ற கருத்தில் சிலர் இருப்பதால், இவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், எமது தெளிவான பதில்களை நாம் கொடுத்தேம். நமது பதில்களில் மரணஅடி வாங்கிய இந்த குழப்பி கூட்டம், இப்போது தலை கால் புரியாமல் உளறுகிறது.

கப்ர் வணங்கி கூட தனக்கு பதில் தெரியாவிட்டால், வெட்கப்படுவான். இந்த குழப்பி கூட்டத்திற்கு வெட்கம் மானம் சூடு சுரனை என்று எதுவுமே கிடையாது. நாம் எங்களின் கேள்விகளுக்கு பதில் கொடுங்கள் என்றால், பழைய சரக்குகளை காப்பி போஸ்ட் செய்வதை தவிர இவர்களால் ஒன்று செய்ய முடியாது. 

இவர்கள் இறுதியாக எடுத்துவைத்த வாதம், ஆர்ப்பாட்டம் ஹராமாம். குர்ஆன் ஹதீஸில் அடிப்படையில் தவறு என்று நிறுவ வேண்டும். அதைவிடுத்து, இவர்கள் மார்க்க அறிஞர் என்று கருதும் ஒருவரின் ஃபத்வாவை அப்படியே உண்டு கக்கியிருக்கிறார்கள்.

இவர்கள் எடுத்துவைத்த ஃபத்வா இது தான்:

கேள்வி : இஸ்லாமிய உம்மத்தின் பிரச்சனைகளை தீர்க்க ஆர்ப்பாட்ட பேரணிகளை உருவாக்குவது தஃவா வழிமுறையை சார்ந்ததா ? 

பதில் : எங்களுடைய மார்க்கம் குழப்பமானது அல்ல . எங்களுடைய மார்க்கம் ஒழுக்கமானது, ஒழுங்கானது, சாந்தமானது, அமைதியானது. இந்த பேரணி ஆர்பாட்ட ஊர்வலங்கள் முஸ்லிம்களின் நடவடிக்கைகளை சேர்ந்தது அல்ல.இன்னும், முஸ்லிம்கள் அதற்கு பரீட்சியமானவர்களும் அல்ல . 

எனவே, இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், கருணையான மார்க்கம், ஒழுக்கமான மார்க்கம். குழப்பமான , ஒழுங்கில்லாத , பித்னாக்களை உண்டு பண்ணக் கூடிய மார்க்கம் அல்ல . அது தான் இஸ்லாம். உரிமைகள் , ஷரியாவில் சொல்லித்தரப்பட்ட, அனுமதித்த வழிமுறையில் கேட்டு பெறப்படும். இந்த பேரணி ஊர்வலங்கள் முஸ்லிம்களின் இரத்தங்களை ஓட்டும், முஸ்லிம்களின் சொத்துக்களை அழிவில் கொண்டு சேர்க்கும். எனவே, இவைகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல. 

ஷேக் ஸாலிஹ் அல் பவுஸான் ஹபிதஹுல்லாஹ்.
மஜ்மூ ' பதாவா வ ரசா 'இல் பாகம் 2 , இலக்கம் 141, 143, 146

நமது விளக்கம்:

//கேள்வி : இஸ்லாமிய உம்மத்தின் பிரச்சனைகளை தீர்க்க ஆர்ப்பாட்ட பேரணிகளை உருவாக்குவது தஃவா வழிமுறையை சார்ந்ததா ? 

பதில் : எங்களுடைய மார்க்கம் குழப்பமானது அல்ல . எங்களுடைய மார்க்கம் ஒழுக்கமானது, ஒழுங்கானது, சாந்தமானது, அமைதியானது. இந்த பேரணி ஆர்பாட்ட ஊர்வலங்கள் முஸ்லிம்களின் நடவடிக்கைகளை சேர்ந்தது அல்ல.இன்னும், முஸ்லிம்கள் அதற்கு பரீட்சியமானவர்களும் அல்ல . 

எனவே, இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், கருணையான மார்க்கம், ஒழுக்கமான மார்க்கம். குழப்பமான , ஒழுங்கில்லாத , பித்னாக்களை உண்டு பண்ணக் கூடிய மார்க்கம் அல்ல . அது தான் இஸ்லாம். உரிமைகள் , ஷரியாவில் சொல்லித்தரப்பட்ட, அனுமதித்த வழிமுறையில் கேட்டு பெறப்படும்.//

மேலே சொல்லப்பட்டுள்ள எல்லா விஷயத்தையும் நாங்கள் ஏற்கிறோம்.

//இந்த பேரணி ஊர்வலங்கள் முஸ்லிம்களின் இரத்தங்களை ஓட்டும், முஸ்லிம்களின் சொத்துக்களை அழிவில் கொண்டு சேர்க்கும். எனவே, இவைகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல. //

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய எந்த பேராட்டத்திலும் இதுவரை இரத்தம் ஒட்டப்படவில்லை. முஸ்லிம்களின் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தப்படவில்லை என்பது மெண்டல்களாகிய அதிரை குழப்பி கூட்டம் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்களின் புஷ்வான ஃபத்வா இது தான். இந்த ஃபத்வா வழங்கிய அறிஞரை நாம் குறை கூறவில்லை. காரணம், இந்த ஃபத்வா முஸ்லிம்களின் நாடுகளில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்ற பெயரில் மக்களும் அரசுகளும் மோதிக்கொண்டன, அதை தான் ஃபத்வா கண்டிக்கிறது.

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்ற உங்களின் அடிப்படையில் கொள்கைக்கு ஆதாரம் தர முடியாத நீங்கள், இது போன்று சம்பந்தம் இல்லாத ஃபத்வாகளை காட்டி மக்களை மடையர்களாக ஆக்க வெட்கப்பட வேண்டும்.

மேலே உள்ள ஃபத்வாவை காட்டி உளறிவிட்டு, மட ஸலஃபி சில அவதூறான வரிகளை எழுதியுள்ளார்.

மட ஸலஃபியின் வரிகள்:

//இந்த ஆர்பாட்ட வழிமுறைகள் உலகுக்கு அறிமுக படுத்தியவர்கள் காந்தியும் லெனின் போன்றவர்களும் ஆவார்கள். இந்த வழிமுறைகளை கையாண்டு , தமது உரிமை வெல்ல என்ற பெயரில் முஸ்லிமான ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்குகின்றனர். அத்தோடு , இஸ்லாம் வன்மையாக தடுத்த உருவம் 
செதுக்குவதை கூட கையாண்டு , அந்த உருவங்களை எரித்து முழுமையாக இறை மறுப்பாளர்களின் வழிமுறையை கையாண்டு அமைதி போராட்டம் என்று வேறு பெயரிட்டு கொள்கிறார்கள். //

ஒரு விஷயத்தை பற்றி எழுதும் போது, செய்திகளை ஆராய்த்து எழுத வேண்டும். இந்த மட கூட்டத்திற்கும் மார்க்க அறிவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உலக அறிவும் சைபர் தான்.

பேராட்டத்தை அறிமுகம் செய்தவர்கள் காந்தியும் லேனினுமாம். என்ன ஒரு கண்டுபிடிப்பு. நீங்கள் பயன்படுத்தும் கணிணியை அறிமுகம் செய்தது யார் தெரியுமா? நீங்கள் அணியும் பேண்ட என்ன யஹ்யா சில்மியின் கண்டுபிடிப்பா? 

பெண்கள் வீதிக்கு வருகிறார்களாம். என்ன ஒரு தத்துவம். நபி (ஸல்) அவர்கள் போரில் உதவி செய்வதற்கு பெண்களை அழைத்து வந்துள்ளார்கள் என்பது மடாதிபதிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பேராட்டங்களில் உருவ பொம்மையை எரித்ததை நீர் பார்த்ததுண்டா? அல்லது உங்கள் மடாதிபதி பார்த்துள்ளரா?  அல்லது தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் போராட்டங்களுக்கு சிலை செதுக்கி தருவது தான் உம் வேலையா? தவ்ஹீத் ஜமாஅத் உருவ பொம்மையை எரிப்பதை ஏற்கவும் இல்லை, அதை செய்யும் இல்லை. இந்த மார்க்கம் தெரியாத மட கூட்டம் உண்மையை ஆய்வு செய்து எழுத வேண்டும்.

இத்துடன் எமது பதில்கள் நிறுத்தப்படுகின்றன. நீங்கள் எமது வாதங்களுக்கு பதில் சொன்னால், பதிலடி தொடரும். இல்லாவிட்டால், கொடுத்த அடியே போதும் என்று கருதுகிறோம்.

அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் தரக்கூடாது, ஆனால் தரலாம் - உளறும் குழப்பி கூட்டம்


தன்னை மடையன் என்று கருதுபவனுக்கு ஒரு விஷயத்தை புரியவைத்துவிடலாம், ஆனால், தன்னை அறிவாளி என்று நினைக்கும் மடையர்களுக்கு என்ன தான் செய்தாலும், எந்த விஷயத்தையும் புரியவைக்க முடியாது. 

மார்க்க அறிவு இல்லாத மடையர்களாக இருந்து கொண்டு, தாங்களை அறியாளிகள் என்று கருதுபவர்களில் முதன்மையானவர்கள் யஹ்யா சில்மி என்ற படித்த ஜாகிலை பின்பற்றும் முரிதுகள். இந்த கூட்டத்தில் தமிழ் உலகத்திலேயே முதன்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முப்பது ஜாகில்கள் உள்ளனர். இவர்களில் சிலர் தான் இப்போது பிஜேவின் ஆய்வுகளை, ஆய்வு செய்கிறார்கள். 

இவர்கள் வைத்த வாதங்களுக்கு நாம் அடுக்கடுக்கான பதில்களை தந்துள்ளோம். அவைகளை படிக்காமல் (அல்லது படித்துவிட்டு, படிக்கதாது போல்) அது எங்கே இது எங்கே என்று முக்கியமான குற்றச்சாட்டுகளை பற்றி பேசாமல், உணவில் உப்பு கம்மி, காரம் அதிகம் என்பது போல சம்பந்தம் இல்லாத விஷயங்களை பேசி மழுப்பி வருகிறார்கள்.

ஒரு விஷயத்தை பற்றி விவாதிக்கும் போது, நமது வாதங்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு பதில் சொல்ல வேண்டும், நமது வாதங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் தர வேண்டும். இதைவிடுத்து, கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தராமல், சம்பந்தம் இல்லாத விஷயங்களை பேசுவது, நாம் தவறான கொள்கையில் உள்ளோம் என்பதற்கு சான்று. இதை தான் குருட்டு ஸலஃபிகள் செய்துகொண்டுள்ளார்கள்.

குருட்டு ஸலஃபிகள் வைத்த எல்லா வாதத்திற்கும் நாம் பதில் அளித்துள்ளோம், அவர்களின் வாதங்களில் நாம் கேள்வியும் கேட்டுள்ளோம். இவற்றுக்கு பதில் சொல்ல முடியாத குருட்டு ஸலஃபிகள், படித்த ஜாகில் யஹ்யா சில்மி உளறி தள்ளிய சம்பந்தம் இல்லாத செய்திகளை பதில் என்ற பெயரில் போட்டு பக்கத்தை நிரப்பி வருகிறார்கள்.

ஸஹாபாக்களை பின்பற்றுவது, குர்ஆனோடு முரண்படும் ஸஹீஹான ஹதீஸ்களை நிறுத்திவைப்பது போன்ற விஷயங்களுக்கு நமது மரணஅடி பதிலுக்கு பிறகு அவற்றை விட்டுவிட்டார்கள்.

இப்போது அவர்கள் பிடித்துக்கொண்டுள்ள விஷயம் என்னவேனில், அதாவது அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் கொடுக்க கூடாது. இதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம் அதே நேரத்தில், சில ஹதீஸ்கள் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரணாக இருப்பதை போன்று வரும் ஹதீஸ்களை வேறு வகையில் விளங்க வேண்டும். இதை ஸலஃபி அறிஞர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

புகாரியில் நாம் அல்லாஹ்வை நோக்கி நடந்தால் அவன் நம்மை நோக்கி ஓடிவருகிறான் என்று ஒரு ஹதீஸ் இடம்பெறுகிறது. இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் பண்பை குறிக்கிற ஹதீஸாகும்.

ஹதீஸ்:

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான் என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி (7405)

இந்த ஹதீசை குருட்டு ஸலபிகள் கூட்டம் உள்பட பெரும்பாலானவர்கள், அல்லாஹ் நம்மை நோக்கி ஒடி வருவான் என்றே அல்லது நடந்து வருகிறான் என்றே நம்பவில்லை. அல்லாஹ்வின் அருள் நம்மை நோக்கி வருகிறது என்று கூறுகிறார்கள். அல்லாஹ்வின் பண்பிற்கு விளக்கம் தரக்கூடாது என்றால் இதற்கு ஏன் அப்பா விளக்கம் கொடுக்கிறீர்கள்? அல்லாஹ் முதல் வானத்திலும் உள்ளான், அல்லாஹ்வின் அருளை தேடி ஓடுபவர்களை நோக்கி ஓடவும் செய்கிறான் என்று கூற வேண்டியது தானே?

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தர காரணம் என்னவென்றால், அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் கருத்திற்கு எதிராக இந்த ஹதீஸின் கருத்து இருக்கிறது. அதனால், இந்த ஹதீஸ்சை நாம் அல்லாஹ்வின் அருள் நம்மை நோக்கி வருகிறது என்று சமீபத்தில் வாழ்ந்த அறிஞர்கள் விளக்கம் தந்துள்ளனர். இந்த முட்டாள் ஸலஃபிகளுக்கு இந்த ஹதீஸும் தெரியவில்லை, இதற்கு அறிஞர்கள் கொடுத்த விளக்கமும் தெரியவில்லை.

அதைபோல், கீழ் உள்ள ஹதீசையும் நாம் விளங்க வேண்டும் என்று பிஜே கூறுகிறார்:

இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: புகாரி 1145, 6321, 7494

இந்த ஹதீஸின் நேரடி பொருளை எடுத்தால், உலகில் எந்த ஒரு விணாடியிலும், இரவின் முன்றாம் பகுதி இருந்துகொண்டே இருப்பதால், அல்லாஹ் முதல் வானத்திலேயே தான் இருக்கிறான் என்றாகிவிடும். இந்த விளக்கம் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற குர்ஆன் ஹதீஸின் கருத்துடன் போதும். இதனால், பிஜே அவர்கள் அல்லாஹ்வின் அருள் இரவின் முன்றாம் பகுதியில் இறங்குகிறது என்று விளங்க வேண்டும் என்கிறார். இந்த விளக்கத்தை எங்கள் முன்னோர்கள் சொல்லாமல் பிஜே எப்படி சொல்லாலாம் என்கிறது ஸலபி பக்தர்கள் கூட்டம். 

பூமி உருண்டை என்பதும், உலகின் எதாவது ஒரு பகுதியில் இரவின் முன்றாம் பகுதி இருந்துக்கொண்டே உள்ளது என்பதும் ஸஹாபாக்களுக்கும் அதற்கு பின்னர் வந்தவர்களுக்கும் தெரியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதனால், அவர்களுக்கு இந்த விளக்கம் முரணாக இருந்து இருக்காது.

முன்னோர்கள் மேல் கொண்ட பக்தியின் காரணத்தினால், ஸலஃபிகளின் விளக்கம் குர்ஆனுடன் மேதினாலும் பரவயில்லை என்று இந்த மடையர்கள் கூட்டம் குதிக்கிறது. 

குர்ஆன் ஹதீஸ் ஞானம் உள்ளவர்களுக்கு பிஜே அவர்களின் விளக்கம் எத்தகையது என்பது புரியும். முட்டாள்களாக இருப்பதால் தான், சில்மி என்ற மாங்கா மடையரிடம் மாட்டிக் கொண்டு தவிர்க்கிறார்கள், இந்த மார்க்க தெரியாத அதிரை குழப்பிகள்.

ஸலஃபிகள் இதற்கு பதில் தருவாரா?

சகோதரர் மனாஸ் இலங்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் ஹதீஸ்களை மறுக்கிறார்கள். என்று சொல்லி எங்களை விமர்சிக்கும்  நீங்கள் மக்களுக்கு சத்தியத்தைச் சொல்லும் யோக்கியத்தனத்தை மக்களுக்கு நாங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டவேண்டும். உங்கள் அறிவுக் கடலைக்கொண்டு குர்ஆனுக்கு மாற்றமாக படுபாதகமான செய்திகளையும் நபிகளாருக்கு இழுக்கு ஏற்படும் செய்திகளுக்கு நீங்கள் விளக்கம் தருகிறேன் என்று சொல்லும் உங்கள் வார்த்தைக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அல்லாஹ்வுக்குப் பயந்து எங்களை விமர்சிக்கும் முன்னர். ஒரு கணம் உங்கள் நிலையை யோசிக்க வேண்டும் சலபி சலபி என்று மூச்சு விடும் நீங்கள் இந்த சலபி என்ற வார்த்தையை எங்கிருந்து எடுத்தீர்கள். முதலில் இந்த வார்த்தை எப்போது பிரயோகிக்கப்பட்டது. யாருக்குப் பிரயோகிக்கப்பட்டது என்பதை விளக்கவேண்டும்?

இப்போது விசயத்திற்கு வருவோம்.

நீங்களும் நானும் அனைத்து முஸ்லீம்களும் ஏற்றுக் கொண்ட ஒரு செய்திதான் அல்குர்ஆன் முழுமைப் படுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். அல்குர்ஆன்:15:09

இதில் யாருக்கும் கூட்டல் குறைத்தல் செய்யமுடியாது என்பதை அல்லாஹ் திருமறையில் தன்னுடைய வேதத்தை தானே பாதுகாப்பேன் என்று சொல்கிறான். அப்படி இருக்கும் போது அல்குர்ஆனில் ஒரு வசனம் இருந்தது. அது ஓதப்பட்டுக்கொண்டும் இருந்த நிலையில்தான் நபியவர்கள் மரணித்தார்கள். என்று அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதோ அந்த செய்தி:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்'' என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப் பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.(முஸ்லிம் 2876)

அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள் இந்த ஒரு செய்திக்கு முதலில் நீங்கள் பதில் தரவேண்டும் பத்து வசனமாக இருந்து மாற்றப்பட்ட ஐந்து வசனங்கள் எங்கே?

உங்கள் கூற்றின் படி குர்ஆனுக்கு ஹதீஸ் முரண் படவில்லையென்றால் அந்த வசனங்கள் இன்றுள்ள குர்ஆனில் இருக்கின்றதா? உங்களால் காட்ட முடியுமா? அல்லது மாற்றுமதத்தவர்கள் இதை காட்டி விமர்சிக்கும் போது உங்களால் பதில் சொல்ல முடியுமா?அல்லது இது தான் அந்த வசனம் என்று காட்ட முடியுமா?

அடுத்தவர்களை விமர்சிக்கும் முன்னர் நான் இருக்கும் கொள்ளை சரிதானா? என்பதை ஒரு கணம் அல்லாஹ்வையும் மறுமை வாழ்வையும் முன்னிறுத்தி ஆழமாக சிந்தியுங்கள். அப்போது புரியும் குறை பிடிக்கத்தெரிந்த உங்களுக்கு நிறைகாணத் தெரியுமா? விமர்சிப்பதென்றால் ஏராளமான செய்திகள் உள்ளது.

முதலில் நீங்கள் இதற்கு மறுப்புக் கொடுங்கள் அடுத்தடுத்து கேள்விக்கணைகள் உங்களை நோக்கி எறியப்படும். உங்கள் வாதத்தின் படி ஹதீஸ் முரண்படாது என்றால் அல்லாஹ் தன்னுடைய வேதத்தைப் பாதுகாக்கவில்லை அல்லாஹ்வின்தூதரும் மார்க்த்தை முழுமைப் படுத்தவில்லை என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்

சலஃபி அவர்களே உங்கள் அறிவுக் கண்னைக் கொஞ்சம் திறக்க முடியுமா?

Tuesday, January 10, 2012

அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவா பணியும்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி (இலங்கை)

சகோ: ஹபில் ஸலபி அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமாவார். இவர் இலங்கையில் பிறந்து தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபிக் கல்லூரியில் கல்வி கற்று தற்போது மத்திய கிழக்கில் வசித்து வருகிறார். இவர் நட்புக்கு இலக்கணம், சிறுவர்களுக்கான இஸ்லாமிய நன்னெறிக் கதைகள்,இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள் போன்ற காலத்தின் தேவையை பூர்த்தி செய்த புத்தகங்களை எழுதியதின் மூலமாக இஸ்லாமிய எழுத்துலகில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்தவர்.இவர் சகோ: பி.ஜெ அவர்களின் பேச்சுக்களையும் புத்தகங்களாக மாற்றியுள்ளார்.அதில் இஸ்லாத்தின் பார்வையில் ஆபாசம் என்ற புத்தகம் ஆபாசம் என்றால் என்ன?அதை எப்படி புரிய வேண்டும்? எப்படி அனுகவேண்டும்? என்பதைப் பற்றியெல்லாம் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கதே. இவர் தற்போது சகோ: பி.ஜெ யைப் பற்றி அறிஞர் பி.ஜெ பண்முக ஆளுமையும்,தஃவாப் பணியும் என்ற தொடர் கட்டுரையை எழுதி வருகிறார்.(அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும்) வாசகர்களின் நலன் கருதி அதனை நாமும் வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்.

இந்த நூற்றாண்டில் தமிழ் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முக ஆளுமை நிறைந்த அறிஞர் பீஜேவுடைய வரலாற்று ஆய்வு பற்றிய தொடர் இது. கடல் கடந்த அண்மை நாட்டிலுள்ள ஒருவனால் இம்முயற்சி முழமையான சாத்தியமா என்ற அச்ச உணர்வோடுஇ எனக்குக் கிட்டிய தகவல்களை மையமாக வைத்து எழுத ஆரம்பிக்கின்றேன். இதில் உங்கள் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. குறிப்புக்கள் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இத்தொடருக்குள் நுழைவதற்கு முன்னர் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். ஏனெனில்இ நான் அழைப்புப் பத்திரிகை ஆசிரியராக இருக்கும் போதுஇ பல அறிஞர்களைப் பற்றி எழுத ஆசைப்பட்டேன்.எனினும்இ சிலரைப் பற்றித்தான் எழுத முடிந்தது.

உமர் பின் அப்துல் அஸீஸ், இமாம் இப்னுத் தைமிய்யா, முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் போன்றோர் பற்றி எழுதினேன். அப்போது எந்த விமர்சினத்தையும் முன்வைக்காத சிலர், அறிஞர் பீஜே பற்றி நான் எழுத முனையும் போது மடடும் என்மீது தக்லீத் சாயம் பூசுவதுண்டு. இது இவர்களின் நுணிப்புல் மேதாவித்தனத்தையும் காழ்ப்புணர்வையும் வெளிக்காட்டுகிறது.

அறிஞர் பீஜே பற்றிய இத்தொடரின் நோக்கம் தக்லீத் பண்ணுவதற்கோஇதனிமனித வழிபாட்டை ஆதரிப்பதற்கோ அல்ல.குறுட்டு தக்லீதைத் தகர்த்துஇ தனிமனித வழிபாட்டை ஒழிப்பதில் அவரது பணி மகத்தானது. இந்த நுற்றாண்டில் சுதந்திரமாக சிந்திக்கும் ஒரு பெரும் சமூகத்தை அல்குர்ஆன் – சுன்னாவின் நிழலில் உருவாக்கிய அன்னவரின் மகத்தான பணியை மதிப்பீடு செய்வதோடுஇ தமிழ் உலகில அவர் ஏற்படுத்திய ஏகத்துவப் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவத்தை எதிர்கால தலைமுறைக்கு ஆவணமாக வழங்க வேண்டும் என்பதுமாகும்.

1992ம் ஆண்டு பீஜே அவர்கள் முதல் தடவையாக இலங்கை வந்தார்கள். அப்போதுஇ நான் ஸலபிய்யாக் கலாபீடத்தில் இரண்டாம் வருடத்தில் மாணவனாகக் கற்றுக்கொண்டிருந்தேன்.அவர் எங்களோடு ஸலபிய்யாக் கலாபீட வளாகத்தில் கழித்த நாட்கள் என் நினைவில் இன்றும் பசுமையாக உள்ளது. அதன் பின்னர் அவர் இலங்கை வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் சந்திக்கத் தவறியதில்லை. 2005ம் ஆண்டு அவர் கலந்து கொண்ட காத்தான்குடி மாநாட்டில் எனக்கும் உரையாற்ற வாய்ப்புக்கிடைத்தது. அண்மையில் இரண்டு தடவைகள் இந்தியா சென்று அவரோடு நீண்ட நேரம் பல விடயங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. அதேபோல்இஅவரது உரைகள்இஎழுத்துஇசிந்தனைஇபத்வாக்ள் அனைத்தாலும் நான் தாக்கமுற்றிருக்கின்றேன்.அவற்றைத் துணையாகக் கொண்டு இப்பணியைத் தொடங்குகின்றேன்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும்இ அந்தக் கால சூழ்நிலை சவால்களை முறியடித்துஇ சத்திய இஸ்லாத்தை உயிர்ப்பித்துஇ அதன் போதனைகளைத் தெளிவுபடுத்திஇ செயல்திறன் மிக்க கொள்கைவாதிகளை உருவாக்கிஇ மக்களை மூட நம்பிக்கையிலிருந்து விடுவித்துஇ அனாச்சாரங்களிலிருந்தும் அழிவிலிருந்தும் காத்திடஇ அல்லாஹ் சிலருக்குப் பன்முக ஆளுமை அருளாக வழங்குகின்றான்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் மார்க்கத்தை உயிர்ப்பிப்பதற்காக இந்த உம்;மத்திற்குஇ ஒரு சீர்த்திருத்தவாதியை அல்லாஹ் அனுப்புகின்றான் என நபி அவர்கள் கூறிய செய்தி ஒன்று அபூதாவூதில் பதிவாகியிருக்கின்றது.

அதேபோல்இ தெளிவான மார்க்க ஞானம் என்பதும் அல்லாஹ்வின் மிகப்பெரிய அருள். ‘அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோஇ அவருக்கு மார்க்கத்தில் தெளிவை வழங்குகின்றான்’ (புகாரி)

அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாளேயே சமூகத்தில் கொள்கை மாற்றங்களை ஏற்படுத்த முடிகிறது. இவர்களால் எத்தகைய கேள்விகளுக்கும் மார்க்கத்தின் மூலாதார நிழலில் பட்டென்று பதில் சொல்ல முடிகிறது.இஸ்லாத்தின் பெயரால் தோன்றும் வழிகேட்டுக் கொள்கைகளுக்கு மறுப்பு அளிக்க முடிகிறது. விவாதிக்க அழைப்புவிடுத்துஇ அவர்களோடு விவாதித்துஇ அவர்களின் கொள்கை தவறு என்று நிரூபித்து மக்களுக்குத் தெளிவை வழங்க முடிகிறது. ஏனென்றால்இ இவை அல்லாஹ்வின் மகத்தான அருளகள்.

மார்க்கத்தில் தெளிவுபெற்ற சீர்திருத்தவாதிகளின் வரிசையில்இ எழுச்சிமிக்க அறிவு வெடித்துச் சிதறிஇ வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் பிரவாகமெடுக்கின்ற நடப்பு நூற்றாண்டின் சீர்திருத்தவாதியாக அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் காணப்படுகின்றார்கள்.

எழுத்தாற்றல்இ பேச்சாற்றல்இ விவாதத்திறமைஇ ஆய்வு நுணுக்கம்இ அரசியல் வியூகம்இ நவீன விஞ்ஞான அறிவுஇ பத்திரிகா தர்மம்இ இதழியல் ஞானம்இ தலைமைத்துவத் தகைமை போன்ற இன்னோரன்ன பன்முக ஆளுமைப் பண்புகள் அவரிடம் ஒருங்கே ஒன்றிணைந்துள்ளன. இதுஇ வெறும் வீரவணக்கமன்று. அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றஇ அதே வேளை பொறாமையின் காரணமாக சிலாகித்துச் சொல்ல மனம் வராத விடயங்கள்.எனினும்இ அவரது தஃவா மற்றும் சமுதாயப் பணிகளை மணமங்கொள்ளும் பலரால் ஆங்காங்கே சிலாகிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவரது தஃவாவின் தொடக்கத்திலிருந்து துணை நின்று இன்றுவரை பீஜேவுடைய மகத்தான பணிகளுக்குப் பக்க துணையாக நிற்கும் எஸ்.ஷம்ஷூல் லுஹா அவர் ஏகத்து எழுச்சியில் பீஜேவுடைய பங்களிப்பை மதிப்பீடு செய்துள்ளார்.இன்னொருவர் தனது முதுகலைமாணிப் பட்டத்திற்கு பீஜேவுடைய வரலாற்றை ஆய்வாக சமர்ப்பித்துள்ளார். நான் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளமாணிப் பட்டப் படிப்பிற்கு சமர்ப்பிக்கும் ஆய்வுக்கு இத்தலைப்பை பெரிதும் ஆசைப்பட்டேன்.எனினும்இ அதற்கான வாய்ப்பு அப்போது எனக்குக் கிடைக்கவில்லை.இப்போது அதைவிட விரிவாக எழுதக் கூடிய வாய்ப்பை அல்லாஹ் வழங்கியுள்ளான்.அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாமிய தஃவாவிலும்இ ஆய்விலும்இ எழுத்துப் பணியிலும்இ சமூக விடுதலைப் போராட்டத்திலும் 25 ஆண்டுகளுக்கும் மேலாகஇ இடைவிடாது மகத்தான பங்களிப்பாற்றிவரும்இ அறிஞர் பி.ஜைனுலாப்தீன் அவர்களின் ஆழமான இஸ்லாமிய அறிவும்இ விரிந்தஇ செழுமையானஇ சீரிய சிந்தனையும்இ தர்க்கரீதியானஇ எளிய இனிய உரையும் தமிழ் கூறும் நல்லுலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திவரும் இற்றை நாளில்இ பல பரிமாணங்களைக் கொண்டஇ பல்வேறு துறைசார்ந்த அன்னாரின் பணிகள் பற்றி எழுந்தமானமாகஇ தரக்குறைவாக காழ்ப்புணர்வைக் கக்குகின்ற சிலருக்குஇஉண்மை தெளிவுபடுத்தப்பட வேண்டும். அவர் பற்றிய உண்மைகளை ஊர்வலமாக்க வேண்டியது உண்மை அறிந்தவர்களின் கடமையுமாகும். அதனால்இ அவரது பணிகளை மதிப்பீடு செய்யும் பணியை நான் துவக்கிவைக்கின்றேன்.

அவர் மீது இன்று பலராலும் பரப்படும் வதந்திகள்இஅவதூறுகள் என்பன பத்திரிகைகள்இமீடியாக்கள்இ மிம்பர் மேடைகள்இகுறுந்தகடுகள் என பல்வேறு ஊடகங்கள் மூலம் மக்களை சென்றடைகிறது.இருபக்கங்களையும் பார்ப்பதற்குரிய ஆய்வறிவில்லாத மக்கள் நம்பவும் செய்கின்றனர். எதிர்கால சமூகத்திற்கு இந்த நிலை ஏற்படக் கூடாது என்ற ஆதங்கமும் இதை எழுத என்னைத் தூண்டிய காரணங்களில் ஒன்று.
:
ஜனனமும் கல்வியும்
பீர் முஹம்மதுஇ மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ம் ஆண்டுஇ பெப்ரவரி மாதம்இ பத்தாம் திகதி இராமநாதபுரம் மாவட்டம்இ தொண்டியில்இ எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர்இ காலம் சென்ற தனது மூத்த சகோதர் பீ.எஸ்.அலாவுதீன் (மன்பஈ) போன்றுஇ மார்க்கக் கல்வியையே தேர்ந்தெடுத்துக் கற்றுஇ பட்டம் பெற்றார்.

இஸ்மாயீல் ஸலபிக்கு மறுப்பு எழுதும் போது தனது கல்வி பற்றி பீஜே குறிப்பிட்ட சில விடயங்களை இங்கு தருகின்றேன்.

(என்னைப் பற்றியும் என் சகோதரர் பற்றியும் சில விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும். நானும் என் சகோதரர் பீ ஷைக் அலாவுதீன் என்ற பி.எஸ்.அலாவுதீனும் மதீனாவில் படிக்கவில்லை. உம்ராபாத்திலும் படிக்கவில்லை. மத்ஹப்இ ஷிர்க்இ தரீக்கா மற்றும் எல்லா பித்அத்களையும் ஆதரிக்கும் கல்விக் கூடங்களில் தான் பயின்றோம். அது தான் மார்க்கம் என்று போதிக்கப்பட்டோம். படித்து முடித்து வெளி வந்தவுடன் நாங்கள் நண்பர்களாக விவாதித்துக் கொண்டே இருப்போம். அப்போது தான் தர்கா வழிபாடு தவறு என்று எங்களுக்குத் தோன்றியது. இது குறித்து நாங்களே ஆய்வு செய்துஇ ஆதாரங்களைத் திரட்டிஇ ஷிர்க்கை மட்டும் எதிர்த்தோம். மத்ஹப்இ தரீக்கா இன்ன பிற பித்அத்களை அந்தக் கால காட்டத்தில் நாங்கள் எதிர்க்கவில்லை. அவற்றைத் தவறு என்று கூட அறியவில்லை.

தர்காவை எதிர்க்கின்ற அனைவரும் தவ்ஹீத் வாதிகள் என்று கருதியதால் அது போன்ற எல்லா இயக்கங்களிலும் தொடர்பு வைத்தோம். இதனால் தான் 280 நாட்கள் நான் தப்லீக் ஜமாஅத்தில் இந்தியா முழுதும் சென்றேன். அதுபோல்இ என் சகோதரர் ஜமாஅதே இஸ்லாமிஇ சிம் போன்ற இயக்கங்களில் ஈடுபாடு காட்டினார். அந்தக் கால கட்டத்தில் நாங்கள் தப்லீகையும் விரும்பினோம். ஜமாஅதே இஸ்லாமியையும் விரும்பினோம். தர்கா வழிபாட்டை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்தால்.

இந்தக் கால கட்டத்தில் தான் ஃபீ ழிலாலில் குர்ஆன் என்ற சையித் குதுப் எழுதிய நூலை ஒரு நிறுவனத்துக்காக என் சகோதரர் மொழி பெயர்த்துக் கொடுத்தார்கள். தர்கா வழிபாட்டை சையித் குதுபும் எதிர்த்ததால்இ அந்த நூலிலும் தர்கா வழிபாட்டுக்கு ஆதரவான கருத்து இல்லாததால் நாங்கள் சரி என்று நம்பிய போதுஇ அது மொழி பெயர்க்கப்பட்டது.

குர்ஆன் ஹதீஸில் உள்ள பல விஷயங்களை தப்லீக் ஜமாஅத்இ ஜமாஅதே இஸ்லாமீ ஆகியவை நிராகரிப்பதையும் மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கியதையும் படிப்படியாக கண்டுஇ வெறுத்து ஒதுங்கிய சில மாதங்களில் என் சகோதரர் இளம் வயதில் மரணித்த்து விட்டார். இதன் பின் என் சகோதரர் மொழி பெயர்த்த அந்த நூலை சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று பாக்கர் வெளியிட்டார். அது எனக்குத் தெரிய வந்த போதுஇ அது குறித்த விளம்பரத்தை உணர்விலும் வெளியிட மறுத்தேன். அவர் நடத்திய தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் அந்த விளம்பரத்தைப் போடக் கூடாது என்றேன். எனது மூன் பப்ளிகேஷனில் மட்டுமன்றிஇ அவரது மீடியா வேல்டிலும் விற்கக் கூடாது என்று கண்டிப்புடன் தடுத்து விட்டேன். தவறான கருத்து அதில் இருக்கும் போது அதை விற்பது எப்படி ஹலாலாகும் என்பதே இதன் காரணம். ஆயிரக்கணக்கில் அந்த புத்தகம் பாகரிடம் தேங்கி இருந்தது.)

சமூகத்தில் பெரும் மாற்றங்களை நிகழ்திக் காட்டிய பெரிய அறிஞர்களின் வரலாற்றை ஆய்வு செய்யும் போதுஇ ஓர் உண்மையையை நான் உணர்ந்து கொண்டேன்.அவர்கள் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டததைக் கற்று பட்டம் பெறவர்களில்லை.இமாம் இப்னுத்தைமிய்யாஇமுஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்இஅல்பானி போன்ற அறிஞர்கள் குடும்ப சூலழில் கற்று தமது சுய ஆய்வு முயற்சியால் மகத்தான் பணியாற்றியவர்கள்.அந்தப் பின்னணியிலேயே பீஜேவுடைய பணியும் மதிப்பிடப்படவேண்டும்.

பல்கலைக்கழகக் கோட்பாட்டுப் பாடத்திட்டத்திற்குள் சிறைப்பட்ட பலரின் நிலையை நாம் இன்று பார்க்கின்றோம்.அவர்கள் கோட்பாட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள்.

சத்தியத்திற்கு மாற்றமான பாடத்திட்டத்தைப் போதிக்கின்ற ஓரு மதரசாவில் பீஜே கல்வி கற்றாலும்இ உண்மையை விளங்கிக் கொண்ட நாள் முதல் சந்தனக் கூடுஇ முரீது வியாபாரம்இ வரதட்சணைக் கொடுமைஇ தரீக்காஇ ஷிர்க்-பித்அத்இ சமூகக் கொடுமைகள்இ ஆட்சியாளர்களின் அராஜகம் போன்றவைகளைக் கடுமையாக எதிர்த்து வருகின்றார். இதனால்இ பலமுறை கடுமையான தாக்குதலுக்கும் வெட்டுக்குத்துக்கும் உள்ளாகிஇ உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார். பல முறை சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.

திருமணம்:

1980ஆம் ஆண்டு வரதட்சணை வாங்காமலே திருமணம் செய்தார். வரதட்சணைக் கொடுமை தாண்டவமாடும் ஒரு நாட்டில்இ வரதட்சணை வாங்காத இவரின் வீரமிக்க இச்செயல்இ அன்று வினோதமாக நோக்கப்பட்டுக் கொச்சைப்படுத்தப்பட்டது. அதை அவர் கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவாக பலவாயிரம் இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யத் துணிவு பெற்றுள்ளனர். அத்தோடுஇ வரதட்சணைக் கொடுமையை அறியாமல் அப்போது வாங்கிய தொகையைஇ பகிரங்கமாக திருப்பிக் கொடுக்கின்றனர்.

பீஜே அவர்களும் அவரது அண்ணன் அறிஞர் பீ.எஸ். அலாவுத்தீன் மன்பயீ அவர்களும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ததற்கு ஒரு வாத்தியாரின் பரிதாபகரமான தற்கொலை முடிவு காரணமாக அமைந்தது. பல பெண் குழந்தைகளையுடைய அவர் தனது பெண் குமருகளை கரை சேர்க்கப் வரதட்சணைப் பணம் இல்லாததால் ஆயுள் காப்புறுதி செய்து விட்டுஇ லாரியில் மோதி தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை என்பதால் அவரது குடும்பம் குடும்பத் தலைவனையும் இழந்து காப்புறுதிப் பணமும் கிடைக்காமல் தவித்தது. வரதடசணையின் இக்கோர முகம் இவர்களது வாழ்வில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அப்போது ஏகத்துவக் கொள்கையில் பெரியளவு தெளிவு கிடைக்காத நேரம். இப்போது வரட்சணைக்கு எதிரான பிரச்சாரத்தை பீஜே அளவுக்கு யாரும் செய்யவில்லை. அறியாமல் வாங்கிய வரத்சணையை திரும்பக் கொடுக்கும் அளவு பெரும் தாக்கத்தை அவரது பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார நிலை :

மார்க்கப் பிரசாரப் பணியில் ஈடுபடுகின்றவர்களின் பொருளாதாரம் சரியானதாக இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.அதனால் பீஜேவுடைய பொருளாதார நிலை பற்றி முதலில் இங்கு குறிப்பிடுகின்றேன்.

இன்று மார்க்கப் பிரச்சாரத்திற்காக பலர் அறபு நாடுகளில் சம்பளம் பெற்றுஇ தமது வாழ்வை வழப்படுத்திக் கொள்கின்றனர். இன்றைய உலமாக்களில் பலர் மார்க்கப் பிரசாரம் செய்கிறோம் என்ற பெயரில் வெளிநாடுகளில் ரியால்இதீனார்இதிர்ஹம் எப்பவற்றிற்காக தஞ்சமடைந்தவர்களாகவே உள்ளனர். அல்லது வெளிநாட்டுக் காசை நம்பி உள்நாட்டில் மார்க்க வியாபாரம் செய்பவர்கள். யு.ஊ. அறைகளில் இருந்து கொண்டுஇ ஒன்றிரண்டு பயான்கள் செய்துஇஉப்புச் சப்பில்லாத கட்டுரை எழுதிக் கொண்டுஇ பிரசாரம் செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள்.இத்தகையவர்களில் ஒருவராக இருந்துகொண்டுஇ தனது எஜமானுக்கு ஜால்ராப் போடும் ஒருவர் பீஜே பொருளாதாரம் பற்றி அண்மையில் கேள்வி எழுப்பினார்.அதற்குப் பீஜே அளித்த பதிலை இங்கு தருகின்றேன்.

‘எனது சொத்து எனது பொருளாதார நிலை குறித்து பொதுவாக நான் அதிகம் பேசுவதில்லை இது போல் சீண்டும் போது மட்டுமே நான் பேசி இருக்கிறேன். இது குறித்துப் பேசும் போது நான் எதையோ எதிர்பார்ப்பதாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்துஇ பேசுவோர் பேசிக் கொள்ளட்டும் என்று இருந்து வருகின்றேன். இப்போது நாம் யுத்த களத்தில் நிற்கும் போது நீங்கள் கேட்பதால் நான் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

முதல் எனது சொத்து விபரத்தைத் தந்து விடுகிறேன்.

நான் 25 ஆண்டுகளில் சம்பாதித்த எனது மொத்த சொத்தின் மதிப்பு நீங்கள் ஒரு பள்ளிவாச்ல் கட்டுவதற்குக் கமிஷன் அடிக்கிறீர்களே அதை விடக் குறைவு தான். மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நிஜமாகத் தான் சொல்கிறேன். உள்ளது. இரண்டு கிரவுன்ட் அளவு.

நான் தற்போது சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன்.

எனது சொந்த ஊரில் எனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு செண்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது எனது சம்பாத்தியம் அல்ல.

எனது குடும்ப நகைகளை விற்று மதுரையில் நான் ஒர் அச்சகம் நடத்தினேன். மிஷினை நானே இயக்குவேன். பண்டிங் செய்வேன். இன்னும் அச்சு சம்மந்தமான அனைத்து வேலைகளையும் நானே செய்து வந்தேன். இதனிடையே தான் தாஃவா பணியையும் செய்து வந்தேன்.

தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் நான் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றேன். எனது ஊரைச் சேர்ந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒரு வீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினேன்.

எனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று நான் நினைத்த போதுஇ அதற்கான நிதி என்னிடம் இல்லை. அப்போது நான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதை விற்று விட்டு உங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலி ஆலோசனை கூறினார். அதை விற்று (அப்போது ஐந்து இலட்சம் என்று நினைவு) அதில் தான் எனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள சிறு வீடு கட்டினேன்.

அந்த வெள்ளை மாளிகையைப் பற்றி இலங்கையைச் சேர்ந்த ரஸ்மி (முஜீப் விவாதத்துக்காக தொண்டி வந்திருந்தார்.) அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.

(இவரும் இவரது நண்பர்கள் சிலரும் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டாலும்இ எனது பொருளாதார நிலையை அறிந்து கொள்வதற்காக இரகசிய வருகை தந்தனர். இஸ்மாயீல் ஸலபி வகையறாக்கள் பணம் பண்ணுவதற்காக தவ்ஹீத் பேசுவது போல் பீஜேயும் பேசுகிறாரா என்று ஆராய்வதற்காகவே ஒரு குழுவாக வந்தார்கள். எனக்குத் தெரியாமல் நான் வாடகைக்குக் குடியிருக்கும் சிறிய வீட்டையும் எனக்கு என்று சொந்தமாக எந்தச் சொத்தும் இல்லை என்பதையும் விசாரித்து அதன் பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாட்டுடன் உள்ளனர். பிற்காலத்தில் இதை என்னிடம் அவர்களே சொல்லிக் காட்டினர்.)

வீடு கட்டுவதற்குப் போக மீதமுள்ள தொகை ஒர் இலட்சத்துடன் முப்பதாயிரம் சேர்த்து ஒர் இலட்சத்தி முப்பதாயிரம் ரூபாய்க்கு ஹைதர் அலி ஆலோசனையின் பேரில் எனது ஊருக்கு அருகில் ஒரு வயல் வாங்கினேன்.

எனது பூர்வீக வீடும் அந்த வயலும் தான் என்னிடம் உள்ள அசையாச் சொத்துக்கள்.

மதுரையில் இருந்த போதுஇ நல்லூர் என்ற கிராமத்தின் அருகில் மிகக் குறைந்த விலைக்கு மணை கிடைக்கிறது என்று சிலர் கூறியதை நம்பி (1990 இருக்கும் என்று நினைக்கிறேன்.) 3000 ரூபாய்க்கு ஒரு மனை வாங்கினேன். மக்கள் குடியேறாத பகுதியில் உள்ள அந்த இடம் இருக்கிறதா? யாரும் ஆக்ரமித்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.

என் பெயரிலோ என் மனைவியின் பெயரிலோ எந்த வங்கிக் கணக்கும் இல்லை. வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளாதவன் இந்தக் காலத்தில் நானாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எனது மூன் பப்ளிகேஷன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் புத்தகங்கள் விற்பது தொடர்பான வரவு செலவு தவிர வேறு எந்த வரவு செலவும் இல்லை. அதை நான் இயக்குகிறேன்.

என் மகன் பத்துக்கு பத்து அளவில் சிறிய கடை வைத்துள்ளார். இரண்டாம் மகன் இந்து சகோதரருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.

நாங்கள் மூவரும் உழைத்துத் தான் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் மூவரும் உழைப்பது சொத்துக்கள் வாங்குவதற்குப் போதுமானது அல்ல. இதைத் தவிர வேறு ஏதாவது சொத்துக்கள் என் பெயரிலோ என் மனைவி பெயரிலோ என் பிள்ளைகள் பெயரிலோ இருந்தால் இஸ்மாயீல் சலபிக்கு நான் இலவசமாக அளிக்கத் தயாராக இருக்கிறேன். அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறாரோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன். அவர்கள் இது தவிர என் பெயரிலோ என் மனைவி மக்கள் பெயரிலோ சொத்துக்கள் இருந்தால் இலவசமாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

எனக்கு இருக்கும்(?) சொகுசு பங்களாக்கள்இ கார்கள்இ பண்ணை வீடுகள் அனைத்தையும் இஸ்மாயீல் ஸலபிக்குத் தந்து விடுகிறேன்.

இது போன்ற கிறுக்குத் தனங்களுக்கு ஒரு மனிதன் பதில் சொல்லாமல் இருந்தால் எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா?

நான் மதுரையில் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த போதுஇ சில இளைஞர்கள் வந்தனர். பத்துப் பேர் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அவர்கள் வந்த போதுஇ கையால் இயக்கப்படும் கட்டிங் மிஷினில் நான் பேப்பர் கட்டிங் செய்து கொண்டிருந்தேன். வந்தவர்கள் என் காலையே பார்த்தார்கள். என்ன விபரம் என்று கேட்ட போதுஇ நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் செருப்பு போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அதைத் தான் பார்க்க வந்தோம் என்று கூறினார்கள். நான் ஹவாய் செருப்பு அணிதிருந்ததையும் உடலுழைப்பு செய்ததையும் பார்த்து விட்டு அதன் காரணமாக தவ்ஹீதுக்கு வந்தார்கள்.

இது போல் நீங்கள் அவதூறு பரப்பியதால் தால் சத்தியம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படி எல்லாம் சிலர் நினைப்பதற்குக் காரணம் உள்ளது.(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர் (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (திருக்குர்ஆன் 2:273)

மூடர்கள் பார்த்தால் செல்வந்தர்கள் என்று நினைக்கும் அளவுக்கு நபித்தோழர்கள் சுயமரியாதையுடன் நடந்ததை அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான். அதை இஸ்மாயீல் ஸலபி மூலம் அல்லாஹ் என் விஷயத்திலும் மெய்யாக்கி விட்டான்.

அல்ஜன்னத்தில் 2000 சம்பளம் வாங்கிக் கொண்டைருந்தவன் தானே என்று அவர் கூறுவதன் உள் நோக்கம் அனைவருக்கும் தெரிந்ததே அதாவது மார்க்கப் பணியின் மூலம் நான் பணம் திரட்டினேன் என்று சொல்லாமல் சொல்கிறாராம்.

எனவேஇ இது குறித்தும் நான் விரிவாகச் சொல்லும் நிலையை ஏற்படுத்தி விட்டார்.

நான் மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் செல்வந்தர்கள் வீடுகளுக்குச் சென்று வாசலில் காத்துக் கிடப்பதையும் செல்வந்தர்களைக் கண்டதும் எழுந்து நிற்பதையும் மலேசியா சென்று கவுரவப் பிச்சை எடுத்ததையும் கண்ட போதுஇ நானும் சுய மரியாதை உள்ள என் சக மாணவர்களும் கூனிக் குறுகி விடுவோம். இந்தப் பணத்தாசை தானே உண்மையைச் சொல்வதை விட்டும் இவர்களைத் தடுக்கிறது என்று பேசிக் கொள்வோம். இவ்வாறு பேசிக் கொண்டவர்களில் முஹம்மது கான் பாக்கவி மட்டும் என் நினைவில் இருக்கிறார். மற்றவர்கள் நினைவில் இல்லை. சின்ன வயசில் நான் அப்போதே சபதம் எடுத்தேன். எந்த நிலையிலும் செல்வந்தர்களிடம் போய் நிற்கக் கூடாது. கூனிக் குறுகக் கூடாது. நமக்காக் எதையும் கேட்கக் கூடாது என்றெல்லாம் தீர்மானம் செய்து கொண்டேன். அல்லாஹ்வின் அருளால் 29 ஆண்டுகள் இந்த சபதத்தில் உறுதியாக இருந்து வருகிறேன்.

மிக மிக நெருக்கமான சில நண்பர்களிடம் கடன் வாங்கியதுண்டு. அல்லாஹ்வின் அருளால் இன்று என் உறவினர் தவிர வேறு எவருக்கும் நான் பத்துப் பைஸா கூட கடனாளி இல்லை.

எத்தனையோ தடவை வெளி நாடுகளுக்கு நான் பிரச்சாரத்துக்குச் சென்றுள்ளேன். எனக்கு எந்த அன்பளிப்பும் தரக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் சென்று வந்தேன். சில பொருட்களை நான் வாங்கி வந்தேன் என்றால் எனது சொந்தப் பணத்தில் வாங்கியது தான்.

அதனால் பணத்துக்காக சத்தியத்தை மறைக்கும் இஸ்மாயீல் ஸலபீ போன்றவர்களின் செயல் எனக்கு வெறுப்பாகத் தெரிகிறது.

அதனால் தான் நீங்கள் கற்பனை செய்வது போல் நான் சொத்து சேர்க்கவில்லை.

அனைத்துச் செல்வத்தையும் விட தன்மானத்தையே நான் பெரிய செல்வமாகக் கருதுகிறேன்.

நான் செய்யும் மார்க்கப் பணிக்காகவோஇ சமுதாயப் பணிக்காகவோ எந்த ஊதியமோ வேறு ஆதாயமோ அடையக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருக்கின்றேன். மார்க்கத்துக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொருளாதாரத்தை வழங்கலாம் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. மேற்கண்ட வசனத்திலேயே அதற்கு அனுமதி உள்ளது. இல்லாவிட்டால் தாவா ப்ஃணிகள் அறவே நடைபெறாத நிலை ஏற்படும் என்பதையும் நான் அறிவேன். ஆனாலும்இ நான் அந்த நிலையை என் விஷயத்தில் தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆனாலுமஇ; துவக்க காலத்தில் எனக்கு வேறு வழி தெரியாத நிலையில் நஜாத் பத்திரிகையில் ஐஏசி அமைப்பின் மூலம் மாத ஊதியம் (சுமார் ஒருவருடம் இருக்கலாம்) வாங்கினேன். அப்போது கூட அந்த ஊதியம் எனது மார்க்கப் பணிக்காக இருக்கக் கூடாது என்பதற்காகப் பத்திரிகைகளை சந்தாதாரர்களுக்கு அனுப்புதல்இ ஸ்டாம்ப் ஒட்டுதல்இ பார்சல் கட்டுதல் ப்ரூஃப் திருத்துதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வாங்கிய ஊதியத்துக்காக உடல் உழைப்பு செய்தேன்.

அடுத்துஇ அல்ஜன்னத் பத்திரிகையை நான் தான் நடத்தினேன். அதில் நட்டம் ஏற்பட்டதால் நடத்த முடியவில்லை. எனது அச்சகத்தின் வருமானத்தையும் அது சாப்பிடக் கூடிய நிலை ஏற்பட்ட போதுஇ மக்களிடம் நன்கொடை கேட்டால் தருவார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள்.

ஒரு இயக்கம் நன்கொடை கேட்கலாம். தனி நபர் நன்கொடை கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவேஇ ஜாக் இயக்கமே எடுத்துக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறி ஒப்படைத்து விட்டேன். அது வரை எனது அல்ஜன்னத் அச்சகத்தில் அச்சிட்டு நான் தான் நடத்தி வந்தேன்.

இதன் பிறகு தான் அல்ஜன்னத் பத்திரிகை சென்னைக்கு மாறியது. அப்போது தான் 2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அதைத் தான் ஸலபி குறிப்பிடுகிறார்.
அந்த உறுத்தலைத் தவிர்பபதற்காக எழுத்துப் பணி அல்லாத வேறு பணிகளையும் நான் செய்தேன். (அது ஒரு தனிக் கதை)

சில காலம் (எவ்வளவு காலம் என்பது நினைவில் இல்லை.) இந்த ஊதியத்தைப் பெற்றாலும் சமுதாயப் பணிகள் செய்ய ஜாக் இயக்கம் முட்டுக்கட்டை போட்டதாலும் ஆசிரியரான எனது எழுத்துச் சுதந்திரத்தைப் பறித்ததாலும் நான் விலகிக் கொண்டேன். சென்னையில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த எனக்கு அந்தச் சம்பளம் வாடகைக்குக் கூட போதுமானதாக இல்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.சென்னை வந்ததும் நூல்கள் எழுதிஇ தனியார் புத்தக வெளியீட்டாளர்களிடம் கொடுத்துஇ வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் இலாபம் தான் எனது வருமானமாக இருந்தது. அதன் பின் நானே புத்தகம் வெளியிடலானேன்.


எனக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டு சீரியஸான நிலையில் தமுமுக நிர்வாகிகள் என்னை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போதுஇ அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவானது. அதை உணர்வு இதழில் இருந்து செலுத்தினார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியும் அவர்கள் மறுத்து விட்டனர். இவ்வளவு காலம் உணர்வு பணியைச் சம்பளம் இல்லாமல் செய்தீர்கள். அதற்கான ஊதியமாக இருக்கட்டும் என்று கூறியதை அப்போது நான் ஏற்றுக் கொண்டேன். தர்மமாக வாங்காமல் உழைப்புக்காக வாங்கினோம் என்ற மனத் திருப்தி ஏற்பட்டது.

ஆனால் நூல்கள் வெளியிட ஆரம்பித்த பின் கிட்டத் தட்ட பத்து ஆண்டுகளாக நான் எந்தப் பணிக்கும் எந்த ஊதியத்தையும் பெற்றதில்லை. உணர்வில் கட்டுரை எழுதுதல்இ கேள்வி – பதில் எழுதுதல்இ பிழை திருத்தல்இ மற்றவர்களின் கட்டுரைகளைத் தணிக்கை செய்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் நான் செய்து வந்த போதும் இந்தப் பத்து ஆண்டுகளில் எந்த ஊதியமும் பெற்ற்தில்லை. தஃவா சென்டரில் பாடம் நடத்திய போதும் அதற்காக நான் எந்த ஊதியமும் பெற்றதில்லை.

தவ்ஹீத் ஜமாஅத் தலைமைப் பொறுப்பில் எனது முழு நேரத்தையும் செலவிட்ட போதும் அதற்காக ஊதியமோ ஊக்கத் தொகையோ நான் பெற்றதில்லை.

நான் பொறுப்பு வகித்த எந்த இயக்கத்திலும் பண வரவு – செலவை நான் கையாள்வதில்லை. சில நெருக்கடியான் நேரத்தில் கையாள வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னொரு நிர்வாகிஇ அல்லது சில நிர்வாகிகள் துணயுடன் தான் கையாண்டிருக்கிறேன். எந்தக் கடனும் ஜமாஅத்தில் பெற்றதில்லை.

தலைமைப் பொறுப்பின் மூலம் நான் ஆதாயம் அடைந்தவனாக இருந்தால் நான் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகாமல் தொடர முடியும். நான் பொறுப்பில் தொடர்வதைத்தான் மக்களும் விரும்பினார்கள். ஆதாயத்துக்காக பொறுப்பில் உள்ளவன் என்றால் இதை விட்டு விலகிக் கொள்ள மாட்டார்.

ஜாக் தலைமைப் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

தமுமுக பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

இப்போதுஇ அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகியதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எனது தேவைகளுக்கு ஏற்ப சம்பாதிக்க இந்தப் பொறுப்புக்கள் தடையாக இருப்பதும் முக்கிய காரணமாகும்.

தேர்தல் திருவிழாக்கள் வரும் போதுஇ இயக்கத் தலைவர்களுக்கு நல்ல அறுவடை கிடைக்கும். ஆனால்இ எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் தனியாக எந்த அரசியல் தலைவரையும் சந்தித்தது இல்லை. பல நிர்வாகிகள் அல்லது பல இயக்கத்தினருடன் தான் சந்தித்துள்ளேன். கடந்த தேர்தல் திமுகவை ஆதரித்தோம் இட ஒதுக்கீட்டுக்காக தேர்தல் முடிந்த சில மாதங்களில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டம் அறிவிக்க முடிந்ததற்குக் காரணம்இ எனக்கோ நான் சார்ந்துள்ள இயக்கத்துக்கோ எந்த ஆதாய எதிர்பார்ப்பும் இல்லாததே காரணம்.

ரமலான் மாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விளம்பரம் மூலம் நடத்தப்பட்ட போதுஇ பல இலட்சங்கள் லாபம் கிடைத்தது. உங்கள் உரை தானே ஒளிபரப்பாகிறது. இதை நீங்களே விளம்பரம் பிடித்து நடத்தலாமே என்று பல நண்பர்கள் என் நிலைமை அறிந்து என்னிடம் கூறினார்கள். நான் மறுத்து விட்டேன். அந்த வருவாய் அப்போது தமுமுகவுக்கு பயன்பட்டது. இப்பொது தவ்ஹீத் பணிக்குப் பயன்படுகிறது. இதை நான் நடத்தினால் யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால்இ இவன் ஆதாயத்துக்குத் தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று ஒருவன் நினைத்துஇ சத்தியத்தை மறுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த நிலைப்பாட்டை எடுத்தேன்.

மீடியா வேல்டு மூலமும் தொலைக்காட்சி மூலமும் குறுந்தகடுகள் விற்பனை மூலமும் தனி நபர் சம்பாதிக்கிறார். நீங்களே நடத்தலாமே என்று கூறிய போது அதையும் நான் மறுத்து விட்டேன்.

என்னால் ஜமாஅத் ஆதாயம் அடையும் வகையில் தான் அன்றும் இன்றும் நடந்து வருகிறேன். இனியும் நடக்க துஆ செய்யுங்கள்.

ரமலானுக்கு முன் ஒரு சிறு கடையை வாடகைகுப் பேசி வைத்திருந்தேன். எனக்கு என்று தெரிந்தவுடன் தர மறுத்து விட்டனர். வாடகைக்கு வீடு பேசிவிட்டு வந்தால்இ மறு நாள் இல்லை என்று கூறி விடுவார்கள். இதற்கெல்லாம் கூட இடையூறு செய்பவர்கள் உள்ளனர். இப்படி பல விதமான இழப்புகள் தான் எனக்குக் கிடைத்துள்ளது.

மார்க்கத்தை தொடர்புபடுத்தி நான் சம்பாதிப்பதாக யாரேனும் கூறுவதாக இருந்தால் நான் புத்தகம் எழுதி விற்பனை செய்வதைத் தான் கூற முடியும். புத்தகத்தின் எழுத்துக்காக நான் எந்த விலையும் வைப்பதில்லை. பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் 40 பக்க புத்தகம் 100 ரூபாய் விலை போடப்படும். அப்படி எல்லாம் நான் போடவில்லை.

புத்தகம் தயாரிக்கும் செலவுஇ அதை விற்பனை செய்யும் இடத்துக்கான வாடகை, அட்வான்ஸ், மின் கட்டணம், ஊழியர் சம்பளம் ஆகிவற்றுக்கு நான் முதலீடு செய்த அடிப்படையில் தான் அதில் லாபம் கிடைக்கிறது. மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அதில் எனக்கு வருமானம் வருகிறது. அதில் உள்ள முதலீட்டை எடுத்து வேறு ஏதாவது வழியில் பயன்படுத்தினால் எனக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும். அது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய நூல்கள் பலவற்றை சவூதியிலுள்ள ஜாலியாத்கள் இலவசமாக வெளியிட்டுள்ளன. அதனால்இ எனக்குப் பாதிப்பு என்று நான் சிந்திக்காமல் அனுமதித்தேன். பீஜே நூல்களுக்கு சவூதியில் தடையா என்ற கட்டுரையில் இதை விளக்கியுள்ளேன்.                                                      
தொடரும்

நன்றி
rasminmisc.tk