Saturday, April 13, 2013

மேலத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்

12.04.13 வெள்ளியன்று மேலத்தெரு சவுக்கு கொள்ளையில்  நடைபெற்ற பெண்கள் பயான் .இதில் சகோதரி ஹதிஜா அம்மாள் அவர்கள் நன்மையின் எடையை அதிகரித்துக் கொள்ளுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 



3 கருத்துரைகள் :

மாஷா அல்லாஹ். பெண்கள முகத்தை மறைப்பதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலையை தற்போது நடைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு பாராட்டத்தக்கது.

இதே ஆரோக்கியமான அணுகுமுறை மென்மேலும் ஏற்பட்டு குர்ஆன் சுன்னா அமைப்புகளான ஜாக், அஹ்லே ஹதீஸ் ஆகியவற்றுடன் TNTJ நெருங்கி வரும் காலம் ஏற்படும் என்று பரிபூரணமாக நம்புகிறோம்.

முஹம்மது ஹூசைன்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

//மாஷா அல்லாஹ். பெண்கள முகத்தை மறைப்பதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலையை தற்போது நடைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு பாராட்டத்தக்கது.//

ஒரு விஷயம் கூடுமா அல்லது கூடாதா? என்பதற்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரம் தர வேண்டும். பெண்கள் முகத்தை மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மறைத்தாலும் தவறு இல்லை, மறைப்பதால் ஏற்படும் தவறுகளை கணக்கில் கொண்டு முகத்தை மறைக்காமல் இருப்பது சிறந்தது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு.

பெண்கள் முகத்தை மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லாத போதும், உங்களின் மனோஇச்சை கட்டாயம் மறைக்க சொல்லுகிறது.

பெண்கள் முகத்தை மறைக்க தேவையில்லை என்பதை கூறும் ஹதீஸ்:

சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் 'பனூ ஆமிர் பின் லுஅய்' குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். சஅத் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார். 'விடைபெறும் ஹஜ்ஜின் போது சஅத் (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள். அப்போது 'சுபைஆ' கர்ப்பமுற்றிருந்தார். சஅத் அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்து விட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமான போது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான 'அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக்' (ரலி) அவர்கள் சுபைஆ அவர்களிடம் வந்து, ''திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய 'இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறினார்கள். சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, 'நீ பிரசவித்து விட்ட போதே (மணம் புரிந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்' என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள்.

புகாரி (3991)

குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரம் காட்டாமல், படம் பார்த்து கதை சொல்லும் உங்களின் நிலை பரிதாபமானது.

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் நிகழ்ச்சிகளின் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளுபவர்கள் தங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அவ்வாறு வருவார்கள். இதற்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு மாறுவதற்கும் என்ன சம்பந்தம்?

தவ்ஹீத் ஜமாஅத் மாற்று மத அன்பர்களுக்காக கூட நிகழ்ச்சி நடத்துகிறது. அங்கு பலர் பொட்டு வைத்து, சிலுவை அணிந்து வருகிறார்கள். இதை வைத்து, தவ்ஹீத் ஜமாஅத் பொட்டு வைக்க சொல்லுகிறது என்று எந்த அறிவாளியாவது எண்ணுவானா?

நீங்கள் வைக்கும் வாதப்படி புகைப்படத்தை வைத்து முடிவு செய்தாலும், தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டை தான் உண்மைப்படுத்துவதாக உள்ளது.

தொடாரும்.....

தொடர்ச்சி.....

//இதே ஆரோக்கியமான அணுகுமுறை மென்மேலும் ஏற்பட்டு குர்ஆன் சுன்னா அமைப்புகளான ஜாக், அஹ்லே ஹதீஸ் ஆகியவற்றுடன் TNTJ நெருங்கி வரும் காலம் ஏற்படும் என்று பரிபூரணமாக நம்புகிறோம்.//

குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்ற கொள்கைக்கு ஜாக் மற்றும் அஹ்லே ஹதீஸ் வந்தால், தவ்ஹீத் ஜமாஅத் அவர்களுட்ன நெருங்க நிமிடங்கள் போதும். அவர்கள் குர்ஆன் ஹதீஸ் மட்டும் அடிப்படை இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கும் காலமெல்லாம், தவ்ஹீத் ஜமாஅத் அவர்களுடன் நெருங்காது.

ஜாக் மற்றும் அஹ்லே ஹதீஸ் போன்ற அமைப்புகள் குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மாரக்கம் என்ற அடிப்படையில் இல்லை என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்காது என்று எண்ணுகிறோம்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.