Tuesday, January 28, 2014

அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் - திருச்சியை திணறடித்த முஸ்லிம்களின் சிறை நிரப்பும் பேராட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 28 தமிழகத்தில் நான்கு இடங்களில் சிறை நிறப்பும் போராட்டம் என்று அறிவித்தவுடன் தவ்ஹீத் ஜமாஅத் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள் இட ஒதுக்கீட்டினால் இந்த சமுதாயத்திற்கு ஏற்படும் நன்மைகளை விளக்கி அனைத்து ஊர்களிலும் பொதுக்கூட்டம், தெருமுனை பிரச்சாரங்களை நடத்தி மக்களை அழைத்துகொண்டிருக்கும் வேலையில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக வேலை செய்யும் லெட்டர் பேட் இயக்கங்கள் மற்றும் தனி நபர்கள் இந்த சிறை நிறப்பும் போராட்டத்தை எப்படியாவது பிசுபிசுக்க செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பிரச்சாரம் செய்து வந்தார்கள் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருச்சியில் இன்று நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.










எதிர்ப்பவர்களாலும் நம்பப்படும் தவ்ஹீத் ஜமாஅத்! - கூட்டம் கண்டு ஆணவம் வேண்டாம்; அல்லாஹ்விற்கு அடிபணிவோம்!

எதிர்ப்பவர்களாலும் நம்பப்படும் தவ்ஹீத் ஜமாஅத்! - கூட்டம் கண்டு ஆணவம் வேண்டாம்; அல்லாஹ்விற்கு அடிபணிவோம்!



Sunday, January 26, 2014

சிறை செல்லும் போராட்டத்திற்கான பணிகள் மும்முரம்!

வருகின்ற 28 செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு திருச்சியில் நடைபெற இருக்கும் சிறை செல்லும் போராட்டத்திற்கான பணி அதிரையில் மும்முரமாக நடைபெற்றுவருகிறது ஒவ்வொரு முஹல்லா ஜமாஅத்தினரை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்தார்கள்.








Wednesday, January 22, 2014

இடஒதுக்கீட்டின் மூலம் வேலை கிடைத்து பயன்பெறுபவர்கள் மார்க்கம் தடை செய்த வேலைகளை தேர்வு செய்தால் நம் மீது குற்றம் வருமா?

இடஒதுக்கீட்டின் மூலம் வேலை கிடைத்து பயன்பெறுபவர்கள் மார்க்கம் தடை செய்த வேலைகளை தேர்வு செய்தால் நம் மீது குற்றம் வருமா?



ம.ம.கட்சி திமுகவுடன் கூட்டணி சேரக் காரணம் என்ன?

ம.ம.கட்சி திமுகவுடன் கூட்டணி சேரக் காரணம் என்ன?

முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு, திருமணப்பதிவுச் சட்டம் ஆகிய இரண்டு காரணங்களைத்தான் அதன் தலைவர் வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காகவே கூட்டணி சேர்வார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தாலும், அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நாட்டு மக்களுக்காகவும் சமுதாய நன்மைக்காகவும்தான் இந்த கூட்டணி என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கானது அல்ல.

அதிமுகவில் நாற்பதிலும் தனித்து போட்டி என்று தெளிவுபடக் கூறி விட்டதால் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தாலும் நமக்கு சீட்டு கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளனர். இதையே அவர்கள் வெளிப்படையாக சொல்லி இருக்கலாம். அல்லது பொருந்தக் கூடிய வேறு எதையாவது சொல்லி இருக்கலாம். கடுகளவும் நம்ப முடியாத ஒரு காரணத்தை சொல்லி இருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் திமுக ஆட்சியில் 3.5 இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மமக கட்சி திமுக கூட்டணியில் இருந்தது. திமுகவுடன் இருந்த கூட்டணியைப் பயன்படுத்தி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக பல அடக்குமுறைகளையும் ஏவி விட்டது.

திமுக ஆட்சி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக ஏவிவிட்ட அக்கிரமங்கள் அனைத்தையும் மறந்து விட்டு மறுநாளே திமுக தலைவரை தமிழக முதல்வரைச் சந்தித்து நன்றி அறிவிப்புக் கடிதம் கொடுத்தோம். மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று எழுதிக் கொடுத்தோம். அதன்படி எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திமுக கூட்டணியை ஆதரித்தோம்.

திமுக ஆட்சி இட ஒதுக்கீடு அளித்ததற்காக தமுமுகவும் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தியது.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின்போது இவர்களுக்கு சீட்டு கொடுக்கவில்லை. இட ஒதுக்கீட்டுக்காக ஒரு அணியை ஆதரிப்பதுதான் இவர்களின் கொள்கையாக இருந்தால் 3.5 இட ஒதுக்கீடு கிடைத்ததற்காக அந்த தேர்தலில் திமுகவை ஆதரித்து இருக்க வேண்டும். கிடைத்த இட ஒதுக்கீட்டுக்கு நன்றி செலுத்தாமல் என்ன செய்தார்கள்.?

அதிமுகவில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இவர்கள் இதற்கு செய்த வாதப்படி அதிமுக இட ஒதுக்கீட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று வாதிட்டு பிரச்சாரம் செய்து வந்ததை மறந்து விட்டு அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நோட்டு எவ்வளவு சீட்டு எவ்வளவு என்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம் இட ஒதுக்கீடெல்லாம் ஒரு பிரச்சனை அல்ல என்று அடையாளம் காட்டிக் கொண்டார்கள்.

இவர்கள் ஒரு எம்பி சீட் கொடுக்கும் அளவுக்கு பலமானவர்கள் அல்ல என்று அதிமுகவுக்கு தெரிந்ததால் அதிமுகவும் சீட் கொடுக்க மறுத்து விட்டது.

இதன் பின்னர் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டார்கள். பல முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகள் ஆதரவோடு போட்டியிட்டு அவர்கள் வாங்கிய ஓட்டுக்கள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டார்கள். அதுவும் நாற்பது தொகுதிகளில் முஸ்லிம்கள் பலமாக உள்ள நான்கு தொகுதிகளை தேர்வு செய்து போட்டியிட்டும் பல அமைப்புகள் ஆதரித்தும் சுயேட்சை வேட்பாளர் வாங்கும் ஓட்டைத்தான் வாங்கினார்கள்.

அப்போது அது பிரச்சனை இல்லை. கருணாநிதி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு செய்த அடக்குமுறைகளையும், தமுமுக ஆளும் கூட்டணியில் இருப்பதையும் மறந்துவிட்டு திமுகவை நாம் ஆதரித்தோம் என்பதையும் இடஒதுக்கிடு கொடுத்து அந்த ஈரம் காய்வதற்குள் இட ஒதுக்கீடு கொடுத்த கட்சிக்கு எதிராக போட்டியிட்டதையும் நினைத்துப் பார்க்கும் மக்கள் மமக சொல்லும் காரணத்தை ஏற்றுக் கொள்வார்களா?

அடுத்து திருமணப் பதிவுச் சட்டத்தையும் காரணமாகக் கூறியுள்ளனர். திருமணப்பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களைப் பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாகவும் அதை அதிமுக அரசு சரி செய்யவில்லை என்ற காரணமும் பொய்யான காரணமே.

திமுக ஆட்சியில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியில் இது குறித்து பல முஸ்லிம் அமைப்புகள் முறையிட்டன. தமுமுகவும் அதில் அடங்கி இருந்தது. பல முறை சந்தித்து முறையிட்டும் திமுக ஆட்சி அதை சரி செய்யவில்லை. அதுபோல் அதிமுகவும் செய்யவில்லை.

இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து பல ஆண்டுகள் இவர்கள் கோரிக்கை வைத்தும் சந்திப்புகள் நடத்தியும் கருணாநிதி கண்டு கொள்ளவில்லை என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்தக் காரணத்துக்காக திமுகவுக்கு போய்விட்டோம் என்று சொல்வதை மக்கள் எப்படி நம்புவார்கள் என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை.

எந்தப் பக்கம் சீட்டு கிடைக்கிறதோ அந்தப் பக்கம் சேர்ந்து கொள்ளும் உன்னதமான கொள்கைக்காகவே அணி மாற்றம் என்பதில் சந்தேகமில்லை.

ஜமாஅத் தலைவர்களும் ஜமாஅத் தொழுகைகளும்!

இணைவைப்புக்கு எதிரான வலுவான யுத்தத்தின் உச்சக்கட்டமாக, அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக ஒவ்வொரு ஊரிலும் தனிப்பள்ளிகளைக் கண்டு வருகிறோம். முந்தைய காலகட்டத்தில் பள்ளிக்கு ஏக்கர் கணக்கில் நிலங்களைத் தானமாக வழங்குவது மிகவும் சர்வ சாதாரணமாக நடந்தது. இன்று ஒரு சதுர அடி நிலத்தை வாங்குவதற்குக் கூட தலைகீழாகப் புரள வேண்டியிருக்கின்றது. அந்த அளவுக்கு மண்ணின் விலை விண்ணைத் தொட்டு நிற்கின்றது.

நம்முடைய ஜமாஅத்தில் பணக்கார வர்க்கம் என்பது மைக்ரோ அளவில் தான் உள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் வியர்வைத் துளிகள் தான் பணத்துளிகளாகப் பரிணமிக்கின்றன. ஊர் ஊராக அலைந்து, ஒவ்வொரு பள்ளியாகப் படியேறி, ஒவ்வொரு பைசாவாகச் சேர்த்துத் தான் நாம் ஒரு பள்ளியை நிறுவுகின்றோம்; நிர்மாணிக்கின்றோம்.

இப்படிக் கடின உழைப்பைச் செலுத்தி ஒரு பள்ளிக் கட்டுமானத்தை எழுப்புகின்றோம். எழுப்பிய பின்னால் மின்விளக்குகளை எரிய விடுதல், மின்விசிறிகளை இயக்குதல், தண்ணீர் மோட்டார்களை இயக்குதல் போன்றவை தான் பள்ளிவாசலை நிர்வகிப்பது, பரிபாலணம் செய்வது என்று நாம் விளங்க மாட்டோம்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும்.

அல்குர்ஆன் 9:18

இந்த வசனம் கூறுகின்ற நிபந்தனைகளின்படி செயல்படுவது தான் ஒரு பள்ளியின் உண்மையான நிர்வாகம் என்று நாம் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றோம். இதன் அடிப்படையில் ஒரு பள்ளியின் நிர்வாகிகள் அந்தப் பள்ளியில் நிறைவேற்றப்படும் ஜமாஅத் தொழுகைகளில் சரியாகக் கலந்து கொள்ள வேண்டும்.

இன்று ஒரு சில கிளைகளின் பொறுப்பாளர்கள் ஜமாஅத் தொழுகைகளைப் புறக்கணித்துவிட்டு, அல்லது அலட்சியம் செய்து விட்டுத் தங்கள் வீடுகளிலேயே தொழுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு வருகின்றது. இத்தகைய பொறுப்பாளர்கள், நபி (ஸல்) அவர்கள் ஜமாஅத் தொழுகைக்கு அளித்த முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜமாஅத் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இரவு ஒரு மணி வரை ஏகத்துவப் பொதுக்கூட்டம் நடத்தினோம் என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்கள் காலையில் ஃபஜ்ர் தொழுகையைப் பலியாக்கி, பாழாக்கிவிடுகின்றனர். இந்த நிலை ஒரு நிர்வாகியிடம் இருக்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகியத் தொழுகைகளைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகüலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்)குமாறு பணித்துவிட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, இன்னும், தொழுகைக்கு புறப்பட்டு வராமலிருப்பவரை (நோக்கிச் சென்று, அவரை) எரித்துவிட முடிவு செய்தேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 657

ஃபஜ்ர் தொழுகையைக் கோட்டை விட்டுவிட்டுக் குறட்டை விடுவோரிடம் நயவஞ்சகத்தின் நாற்றம் வீசுகின்றது என்பதை இந்த ஹதீஸில் நமக்கு நபி (ஸல்) அவர்கள் புரிய வைக்கின்றார்கள்.

அத்துடன் ஜமாஅத்திற்கு வராதவர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்த முனைவேன் என்றும் நபி (ஸல்) அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கையை நமது உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும்.

இறை தரிசனமே இலட்சியம்:

ஏகத்துவக் களப்பணியாற்றுகின்ற நமக்கு ஒரே ஒரு இலட்சியம் இறைவனுடைய தரிசனம் தான். அதனால் தான் நாம் அல்லாஹ்வுக்கு எள்ளளவு கூட இணை வைப்பதில்லை.

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

ஏக இறைவனின் இந்தக் கூற்று தான் நமது ஏகத்துவப் பணியின் லட்சியம். இந்த லட்சியம் வெற்றி பெற வேண்டுமா? அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறும் வழிமுறை இதோ:

(முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவைக் கூர்ந்து பார்த்தபடி, "இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெüவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்'' என்று கூறிவிட்டு "சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்'' எனும் (50:39ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி),
நூல்: புகாரி 554

அதனால் அதிகாலைத் தொழுகையில் இனிமேல் அலட்சியம் காட்டாமல் இருப்போமாக!

பார்வை இழந்தவரும் வரவேண்டும்:

பொதுவாகவே அனைத்து ஜமாஅத் தொழுகைகளிலும் ஆர்வமும் அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை'' என்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, "தொழுகை அறிவிப்பு சப்தம் உமக்குக் கேட்கிறதா?'' என்று கேட்டார்கள். அவர் "ஆம்' (கேட்கிறது) என்றார். நபி (ஸல்) அவர்கள் "அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!'' (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1044

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கண் தெரியாத தோழரையும் பள்ளிக்கு வருமாறு பணிக்கின்றார்கள். அல்லாஹ் நமக்குப் பார்வையை அளித்தும் பள்ளிக்கு வருவதைப் புறக்கணிக்கலாமா?

பாத அடிகளுக்குப் பல நன்மைகள்:

பள்ளிக்கு ஜமாஅத் தொழுகைக்காக நாம் வருகின்ற போது எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு எட்டுக்கும் இறைவனிடத்தில் நன்மை பதிவு செய்யப்படுகின்றது. இதன் காரணமாக நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு அருகில் வசிப்பதை விட தூரத்தில் வசிப்பதையே சிறப்பித்துக் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கüல் தொழுகையால் அதிக நற்பலன் அடைபவர் வெகு தொலைவிலிருந்து (பள்üயை நோக்கி) வருபவராவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவராவார். யார் (கூட்டுத்) தொழுகையை இமாமுடன் தொழக் காத்துக் கொண்டிருக்கிறாரோ அவரே (தனியாகத்) தொழுது விட்டு உறங்கிவிடுபவரை அதிக நற்பலன் அடைபவர் ஆவார்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி 651

பனூ ஸலமா கிளையினர் பள்ளிக்கு அருகில் வந்து வசிக்க ஏற்பாடு செய்தனர். இதைத் தெரிந்து நபி (ஸல்) அவர்களை நோக்கிக் கூறுவதைப் அவர்கள் கூறியதாவது:

பனூசலிமா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலருகே குடிபெயர விரும்பினர். மதீனா(வின் மற்ற பகுதிகள்) நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே, "பனூசலிமா குலத்தினரே! நீங்கள் (பள்ளிவாசலுக்கு நடந்து வருவதற்கான) காலடிச் சுவடுகளின் நன்மைகளை (நற்பலனை) எதிர்பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்கள். ஆகவே, பனூசலிமா குலத்தினர் (தாம் முன்பு வசித்துக் கொண்டிருந்த இடத்திலேயே) தங்கிவிட்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 1887

அன்சாரிகளில் ஒருவருடைய வீடு மதீனாவிலேயே (பள்ளிவாசலுக்கு) வெகு தொலைவில் அமைந்திருந்தது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எல்லாத் தொழுகைகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். நாங்கள் அவருக்காக (வெகு தொலைவிலிருந்து சிரமப்பட்டு வருகிறாரே என்று) அனுதாபப்பட்டோம். இதையடுத்து அவரிடம் நான், "இன்னாரே! நீங்கள் கழுதையொன்றை வாங்கி (அதில் பயணம் செய்து வருவீரா)னால் நன்றாயிருக்குமே! கடும் வெப்பத்திலிருந்தும் விஷ ஜந்துக்களிலிருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளலாமே?'' என்று கேட்டேன். அதற்கு அவர், "அறிவீர்: அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இல்லம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இல்லத்துடன் (மஸ்ஜிதுந் நபவீ அருகிலேயே கயிறுகளால் இணைத்துக்) கட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் விரும்பவில்லை'' என்று கூறினார். அவர் அவ்வாறு கூறியது எனக்கு மிகுந்த மன வேதனையளிக்கவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்(து விசாரித்)தார்கள். அவர் முன்பு (என்னிடம்) கூறியதைப் போன்றே கூறினார். மேலும், தம் கால் சுவடுகளுக்கு நன்மை பதிவு செய்யப்பட வேண்டுமெனத் தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் எதிர்பார்த்த நன்மை உங்களுக்கு உண்டு'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி) நூல்: முஸ்லிம் 1066

வருவதற்கும் திரும்புவதற்கும் கூலி:

தேர்தல் காலத்தில் வாக்களிப்பதற்கு வாக்காளர்களை வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள். ஆனால் ஓட்டுப் போட்டுவிட்டுத் திரும்பும் போது வெறுங்காலில் நடக்க விட்டுவிடுவார்கள். ஆனால் அல்லாஹ்விடம் அந்த அற்பத்தனம் இல்லை.

ஒரு மனிதர் இருந்தார். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அவரைவிட வெகு தொலைவிலிருந்து நடந்துவருபவர் வேறு எவரையும் நான் அறிந்திருக்கவில்லை. அவர் எந்தவொரு தொழுகையையும் தவறவிட மாட்டார். எனவே அவரிடம், "நீங்கள் ஒரு கழுதை வாங்கிக்கொண்டால் நன்றாயிருக்குமே! அதன் மீது பயணம் செய்து காரிருளிலும் கடும் வெப்பத்திலும் (தொழுகைக்கு) வரலாமே?'' என்று "கேட்கப்பட்டது' அல்லது "(அவ்வாறு) நான் கேட்டேன்'. அதற்கு அவர், "எனது இல்லம் பள்ளிவாசலுக்கு அருகிலேயே அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. (ஏனெனில்,) நான் பள்ளிவாசலுக்கு நடந்து வருவதும் (பள்ளிவாசலில் இருந்து) இல்லத்தாரிடம் திரும்பிச் செல்வதும் எனக்கு (நன்மைகளாக)ப் பதிவு செய்யப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவை அனைத்தையும் சேர்த்து அல்லாஹ் உங்களுக்கு வழங்கிவிட்டான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)
நூல்: முஸ்லிம் 1065

அபரிமிதமான, அளப்பெரிய நன்மைகளை அள்ளித் தருகின்ற இந்த அரிய ஜமாஅத் தொழுகையை ஒரு தவ்ஹீதுவாதி தொலைக்கலாமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அல்லாஹ்வுக்கு நன்றியுடைய அடியார்களாகத் திகழ வேண்டும்.

ஏகத்துவ அடிப்படையில் பள்ளிவாசல்கள் இல்லாத நிலையில் வீடுகளில் தொழுது கொண்டிருந்தோம்; வேதனைப்பட்டோம்; விசனப்பட்டோம். இன்று நமக்கென்று பள்ளிவாசல்கள் வந்து விட்டன. ஆனால் இப்போதும் நாம் வீட்டில் தொழுகின்றோம் என்றால் இது நன்றி மறக்கும் தன்மையல்லவா?

ஜமாஅத் தொழுகையை விடுவதற்கென்று சில காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணங்கள் இருந்தால் அல்லாஹ்விடம் பதில் சொல்லலாம். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் வீட்டில் தொழலாம். இதுபோன்ற காரணங்கள் ஏதுமின்றி ஜமாஅத் தொழுகையைப் புறக்கணித்தால் இறைவனுக்கு நன்றி செலுத்த மறுக்கின்றோம் என்பது தான் அதன் பொருள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
நன்றி: ஏகத்துவம்

Monday, January 20, 2014

Sunday, January 19, 2014

அதிரையில் நடைபெற்ற மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் !

இந்தியாவில் வாழுகின்ற இஸ்லாமியர்களின் பின் தங்கிய நிலையை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக இடஒதுக்கீடு வழங்க கோரி தமிழகத்தின் முக்கிய மாநகர்களில் எதிர் வரும் ஜனவரி 28ல் நடைபெற இருக்கிற சிறை செல்லும் போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இன்று மாலை 6.30 மணியளவில் நமதூர் தக்வா பள்ளி அருகில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்ட கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சிறை நிரப்பும் போராட்டம் ஏன் ? என்ற தலைப்பிலும், சையது இப்ராஹிம் அவர்கள் அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி ! என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக கூட்டத்திற்கு தலைமை வகித்த அதிரை நகர கிளை செயலாளர் Y. அன்வர் அலி அவர்கள் 'இறையச்சம்' என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. நீதிபதி ரெங்கராஜ் மிஸ்ரா, சச்சார் கமிசன் ஆய்வு அறிக்கைகளை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலதாமதப்படுத்திவரும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை இந்த பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

2. தேர்தலின் போது இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு இஸ்லாமியர்களின் ஓட்டுகளை பெற்று வெற்றிபெற்ற பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கபட நாடகமாடும் அரசியல் கட்சிகளை இந்த பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

3.  ஆட்சிக்கு வந்தால் 3.5 சதவித இடஒதுக்கீட்டை உயர்த்தி தருவோம் என தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார். இதன்படி இவற்றை காலதாமதப்படுத்தாமல் நிறைவேற்றி தர வேண்டும் என இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4. எதிர் வரும் ஜனவரி 28ல் இடஒதுக்கீடு வழங்க கோரி திருச்சியில் நடைபெற உள்ள சிறை செல்லும் போராட்டத்தில் அதிரையில் உள்ள அனைத்து ஜமாத்தார்களும், அனைத்து பொதுமக்களும் பெரும் திரளாக கலந்துகொள்ள இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

5. அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மீது போடப்பட்ட பொய் வழக்குகளுக்கு இந்த பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

6. அதிரை தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக கடந்த இரண்டு பொதுக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அதிரை பேருந்து நிலையம் - பழைய போஸ்ட்ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை சாலை பணிகளை துவக்கிய பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் அதிரை நகர இணைச்செயலாளர் சுலைமான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.










Saturday, January 18, 2014

சிறை செல்லும் போராட்டம் ஏன்? (வீடியோ)

சிறை செல்லும் போராட்டம் ஏன்? (வீடியோ)

பாகம்-1



பாகம்-2

கியாமத் நாள் வரை தொடரும் ஆய்வுகள் (வீடியோ)


கியாமத் நாள் வரை தொடரும் ஆய்வுகள் 

உலகளாவிய அளவில் எழுச்சி பெறும் TNTJவின் அழைப்புப்பணி - உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்

உலகளாவிய அளவில் எழுச்சி பெறும் TNTJவின் அழைப்புப்பணி - உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்

Friday, January 17, 2014

கிறித்தவ போதகர்களுடன் நடந்த கலந்துரையாடல்! – எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு 15.01.14 – புதன் கிழமையன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், கிறித்தவ போதகர்களுக்குமிடையில் விவாத அரங்கம் நடைபெற்றது.
 .
காலை 10.15 மணி முதல் மதியம் 2மணி வரை இந்த அரங்கம் நடைபெற்றது.
சத்திய கருத்தக்கள் தெளிவாக எடுத்து வைக்கப்பட்டன. அல்லாஹ் இந்த விவாதத்தில் நமக்கு மகத்தான அருள்புரிந்தான்.
 
TELC கிறித்தவ சபை சார்பாக 30 போதகர்கள் கலந்து கொண்டனர்.

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக
பக்கீர் முஹம்மது அல்தாஃபி
கலீல் ரசூல்
சையது இப்ராஹீம்
இ.ஃபாரூக்
ஹபீபுல்லாஹ்
கோவை யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வீடியோவை காணும் ஒவ்வொரு சகோதரரும் இஸ்லாமிய மார்க்கத்தை நமக்கு அளித்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு நன்றிகூறி அவனை போற்றிப்புகழ்வோம். அந்த அளவிற்கு சத்தியத்திற்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை அளித்தான்.

இந்த கலந்துரையாடல் வீடியோ விரைவில் இன்ஷா அல்லாஹ் வெளியிடப்படும்.

 

 நன்றி : tntj.net


Wednesday, January 15, 2014

இடஓதுக்கீட்டின் அவசியத்தை விளக்கி தெருமுனை பிரச்சாரம்

வருகின்ற 28 திருச்சியில் நடைபெற இருக்கும் சிறை செல்லும் போராட்டத்தின் அவசியத்தை விளக்கி தெருமுனைப்பிரச்சாரம் இன்று மேலத்தெருவில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது இதில் முஸ்லிம்கள் படுகின்ற அவலங்களை பட்டியலிட்டு இடஓதுக்கீட்டின் அவசியத்தை விளக்கி Y அன்வர் அலி மற்றும் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி உரை நிகழ்த்தினார்கள்.