Tuesday, December 18, 2012

U A E ஆலோசனைக்கூட்டம்

U A E தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக ஆலோசனை மற்றும் ஒறுங்கினைப்புக்கூட்டம் அபு துபையில் 14.12.2012 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு அபு துபை மண்டல துனைத்தலைவர் மன்சூர் தலைமையி்ல் நடைபெற்றது. 





இதில் அதிரையில் தவ்ஹீத் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது தெருமுனை பிரச்சாரம் பெண்கள் பயான்களை அனைத்து பகுதிகளில் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் துபை மற்றும் அபு துபைக்கான பொறுப்பாளர்கள் நியமி்க்கப்பட்டனர்.

துபை பொறுப்பாளர்கள்
  கலீல்  0509146760
சாகுல்  0505063755
நெய்னா  0504267341

அபு துபை பொறுப்பாளர்கள்
அப்துல் கபுர் 0506919845
இல்யாஸ்  0559925248
நாகூர் மிரான்  0504388617

Monday, December 17, 2012

டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியாது!


வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? என்ற கேள்விக்குறியோடு பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி செய்தி சேனல்களும் ஏற்படுத்திய பீதிதான் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்த பரபரப்பு செய்தி.

டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியும் என்று சொல்கின்றார்களே! இவர்கள் சொல்லும் இந்த கட்டுக்கதை உண்மையில் சாத்தியமா? அவ்வாறு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் செய்திகளை யாராவது சொல்ல இயலுமா என்ற சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்ததுதான் இத்தகைய செய்திகளை இவர்கள் வெளியிடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

மறைவான விஷயங்களை எவராலும் அறிய இயலாது :
நாளை என்ன நடக்கவுள்ளது?. அடுத்த நிமிடம் என்ன நடக்க இருக்கின்றது? என்பதை அறியும் ஆற்றல் எந்த மனிதருக்கும் இல்லை. இதை சிந்திக்கும் திறன் படைத்த யாரும் விளங்கிக்கொள்ளலாம். அப்படி இருக்கும்போது டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்ற செய்தி எப்படி மற்ற மனிதர்களுக்குத் தெரியும் என்ற சாதாரண சிந்தனைத்திறன் இருந்தாலே இது மிகப்பெரிய கட்டுக்கதை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

வல்ல இறைவன் தனது திருமறையில் கூறிக்காட்டுகின்றான்:
யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
அல்குர்-ஆன் 31 : 34

மேற்கண்ட ஐந்து விஷயங்களையும் படைத்த இறைவனைத்தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள இயலாது.

மற்றொரு இடத்தில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்:
(முஹம்மதே) யுக முடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.

அல்குர்-ஆன் 79 : 42முதல் 45வரை

மறைவான செய்திகளை தனது தூதர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருக்கின்றான். அப்படி சில மறைவான செய்திகளை தனது தூதருக்கு அறிவித்துக் கொடுத்த இறைவன், தனது தூதருக்குக் கூட உலக அழிவு நாள் எப்போது வரும் என்ற செய்தியை அறிவித்துத்தரவில்லை என்றால் வேறு எந்த மனிதருக்காவது இந்த செய்தியை அறிந்து கொள்ள இயலுமா?

அதுமட்டுமல்லாமல், வல்ல இறைவன் தனது திருமறையில் கூறியிருக்கக்கூடிய முன்னறிவிப்புகளின் அடிப்படையிலும், நபிகளார் கூறிக்காட்டியுள்ள முன்னறிவிப்பின் படியும் உலக முடிவு நாள் என்பது இரண்டு மூன்று நாட்களில் நடந்து முடிந்துவிடாது. அது வருவதற்குண்டான சில அடையாளங்களை அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லிச் சென்றுள்ளார்கள். எண்ணற்ற சிறிய அடையாளங்களும், மாபெரும் பத்து அடையாளங்களும் நிகழாதவரை உலக அழிவுநாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

அந்த பத்து அடையாளங்களாவன :
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3 – ஈஸா நபியின் வருகை
4 – யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
5 – அதிசயப் பிராணி
6 – மேற்கில் சூரியன் உதிப்பது
7, 8, 9 – மூன்று பூகம்பங்கள்
10 – பெரு நெருப்பு

மேற்கண்ட பத்து அடையாளங்கள் நிகழாதவரை யுக முடிவு நாள் ஏற்படாது. (குறிப்பு : உலக அழிவு நாள் ஏற்படப்போவதற்கு முன் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும், அது குறித்த முழுமையான முன்னறிவிப்புகள் குறித்தும் முழுவதுமாக அறிய விரும்புவோர் சகோதரர் பீஜே அவர்கள் எழுதியுள்ள “கியாமத் நாளின் பத்து அடையாளங்கள்” என்ற நூலை பார்வையிடவும்)
இவை அனைத்தும் நிகழ்வதற்கு முன்பாகவே உலக அழிவு நாள் ஏற்படும் என்று யாரேனும் சொன்னால் அவர் பொய்யர் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்லிவிடலாம்.

டிசம்பர் 21ஆம் தேதிக்குப்பிறகும் உலகம் அழியாமல் இருக்கும் எனபதே உண்மை. இந்த அறிவு இல்லாமல் மக்களிடம் பீதியைக் கிளப்பி ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தி காசு பார்க்கின்றன.

மாயன் காலண்டர் என்னும் மடத்தனமான காலண்டர்:

டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்பதற்கு இவர்கள் சொல்லும் காரணம்தான் மிகவும் வேடிக்கையானது. மாயன் காலண்டர் எனும் காலண்டர் பிரகாரம் 2012ஆம் ஆண்டின் டிசம்பர் 21ஆம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என்பதுதான் அவர்கள் கூறும் வேடிக்கையான காரணம்.

அது என்ன மாயன் காலண்டர்?:

கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், மாயா என்றோர் இனம் தென்அமெரிக்காவில் இருந்ததாம். மாயா இனத்தைச் சேர்ந்த​வர்கள் வானவியல் சாஸ்திரங்களிலும், கட்டடக் கலையிலும், கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனராம். அதற்கு ஒரே சாட்சிதான் மாயன் காலண்டராம்.

தென்அமெரிக்காவில் வாழ்ந்த மாயா சமூகத்து மக்கள் பயன் ​படுத்திய காலத்தின் கணக்கு முறைகளைக் கொண்டு இந்தக் காலண்டர் உருவாக்கப்பட்டதாம். கி.மு. 3113 தொடங்கி கி.பி. 2012 டிசம்பர் 21-ம் தேதி மாயன் காலண்டர் முடிவுக்கு வருகிறது. அதற்கு பிறகு அந்த காலண்டரில் தேதிகள் இல்லையாம். வான சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்த(?) மாயா இனத்தைச் சேர்ந்தவர்கள், 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியுடன் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம்? “அதற்குப் பிறகு இந்த உலகமே இருக்காது என்பதுதான் மாயன் காலண்டர் சொல்லும் ரகசியம்” என்று பக்கம் பக்கமாக எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் பத்திரிக்கையாளர்கள்.

மாயன் என்ற மூடர்கள் கூட்டம் தங்களது காலண்டரில் 2012 ஆம் ஆண்டின் டிசம்பர் 21ஆம் தேதிக்குப் பிறகு 22ஆம் தேதியை குறிப்பிடாததால் உலகம் அழியப்போகின்றது என்று எவனாவது நம்பினால் அவனைவிட மிகப்பெரிய முட்டாள் இந்த உலகத்தில் யாரும் இருக்க இயலாது. மாயன் கூட்டம் என்ற மூடக்கூட்டம் முட்டாள் கூட்டம்தான் என்பது டிசம்பர் 22ஆம் தேதி நிரூபணமாகிவிடும்.

இந்த கூறுகெட்ட கூட்டம் கூறுவது எப்படி உள்ளது என்றால், சிறுகுழந்தைகள் கையில் காலண்டரை வைத்துக் கொண்டு தினம் தினம் ஒரு டெய்லி காலண்டர் தேதியை தேதிவாரியாக கிழிப்பதற்கு பதிலாக மொத்தமாக ஒரு மாதத்தின் தேதியை முன்கூட்டியே கிழித்துவிட்டு, ஒருமாதம் கடந்து விட்டது என்று சொன்னால் அது எப்படி இருக்குமோ அதுபோலத்தான் இதுவும் உள்ளது.
மேலும் நம்ம ஊர் பத்திரிக்கையாளர்களுக்குச் சொல்லவே வேண்டாம். வெறும் வாய்க்கு அவுல் கொடுத்தது போல, ஒரு புரளி விஷயம் கிளப்பிவிடப்பட்டால் தங்களால் இயன்ற அளவு அதை பரப்பி புளகாங்கிதம் அடைவார்கள். மக்கள் பீதியடைவதில் அவர்களுக்கு என்னே சந்தோசம்?.

உள்ளூர் புரளி:

உலகம் அழியப்போகின்றது என்ற புரளி கிளம்பியதும்தான் கிளம்பியது நம்ம தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளோடு அதை முடிச்சுப்போட்டு பரப்பிவிட்டு அதில் லாபம் அடையும் நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறின.

கடலூரில் நடந்த கூத்து:

இந்த பரபரப்பில் கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் தீபம் அணைந்ததாகவும், அதனால் உலகம் அழியப்போகின்றது என்றும் வதந்தியை பரப்பி விட்டனர்.

வள்ளலார் தான் இறந்த பிறகும் தீபமாக காட்சி தருகின்றார் எனவும், இந்த தீபம் அணைந்து விட்டதாகவும், இது உலக அழிவிற்கு அறிகுறி என்றும் மக்கள் பேசத் துவங்கினர். இந்த செய்தி காட்டுத் தீ போல கடலூர் மாவட்டம் முழுவதும் பரவியது. கடலூர் மாவட்டத்தை யொட்டியுள்ள தஞ்சை மாவட்டத்தை தாண்டியும் இந்த வதந்தி பரவியது. இதனையடுத்து வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி என நகர் புறங்களில் மட்டுமின்றி மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

உலகை அழிவில் இருந்து காப்பாற்ற வள்ளலார் இந்த அருட்பெரும் ஜோதியை ஏற்றி வைத்தார். அது அணைந்து போனதால் அதற்கு பரிகாரமாக வீடுகள் தோறும் விளக்கு ஏற்றியதாக பெண்கள் தெரிவித்தனர். ஏற்கனவே 2012 டிசம்பர் மாதம் உலகம் அழியப்போகிறது என்று புரளி கிளம்பியுள்ள நிலையில் தற்போது வள்ளலார் விளக்கு அணைந்து போனதாக எழுந்த வதந்தி மக்களை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது என்றும் பத்திரிக்கைகள் பரபரப்புடன் எழுதின
.
வள்ளலார் என்ற மனிதரே உயிர் வாழ முடியாமல் செத்துவிட்ட பிறகு அவர் ஏற்றிவைத்த தீபம் இருந்தால் என்ன? அணைந்தால் என்ன என்று கூட இவர்களுக்குச் சிந்திக்கத் தெரியவில்லை. அவர் மிகப்பெரிய அற்புதம் செய்யக்கூடிய அளவிற்கு ஆற்றல் பெற்று தெய்வத்தன்மை பெற்றவராக இருந்திருந்தால் சாகாமல் உயிரோடல்லவா இருந்திருக்க வேண்டும். அவர் செத்துப்போய் விட்டார் என்பதே அவருக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை காட்டுகின்றதா இல்லையா? இந்த ஓர் அடிப்படை அறிவுகூட இல்லாமல் மக்களும் அறியாமையில் இருக்கின்றார்கள். ஊடகங்களும் அறியாமையில் திளைக்கின்றார்கள்.

தங்கள் பங்குக்கு புருடா விட்ட புண்ணியவான்கள்(?):

இந்த பரபரப்பு புரளி குறித்து பத்திரிக்கையாளர்கள் ஜோசியக்காரர்களிடம் சென்று குறிகேட்டு அதையும் வெளியிட்டுள்ளார்கள்.

உலகம் அழியும் என்று சொல்லப்படுவது குறித்து பிரபல ஜோதிடரான கே.பி.வித்யாதரனைச் சந்தித்து கேட்டார்களாம். அதற்கு அவர் கொடுத்த புரூடா இதோ:

“சனி, ராகு இரண்டும் மக்களுக்குத் தொல்லையை உண்டாக்கக்கூடிய கிரகங்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேர்வது அபூர்வம். ஆனால் இப்போது சேர்ந்து இருக்கின்றன. இதனால் பேரழிவுகள் நிச்சயம் இருக்கும். விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நிகழும். மனசாட்​சிக்கு விரோதமான செயல்கள் நடக்கும்.

2014 ஜூன் மாதம் வரை இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேர்ந்து இருக்கின்றன என்பதால், அதுவரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மேஷம், துலாம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்குதான் இந்தக் கிரக மாற்றம் அதிக அளவிலான பிரச் னைகளையும் சோதனைகளையும் கொடுக்கும்.

இந்தக் காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் அசாதாரண திறமையுடன் இருப்பார்கள். ஆனாலும், குழந்தை​களின் உடல்​நலனில் அக்கறை காட்டு​வது அவசியம். மற்றபடி ஒரே நாளில் உலகம் அழியும் என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. நம் ஜோதிடத்திலும் அப்படிக் குறிப்பிடவில்லை” என்று அவர் சொன்னாராம்.

பேரழிவுகள் ஏற்படும் என்று சொல்லிவிட்டு அதில் மேஷம், துலாம், மீனம் ராசிக்காரர்களைத்தான் அது பாதிக்கும் என்று சொல்வதிலிருந்தே இது எவ்வளவு பெரிய கடைந்தெடுத்த பொய் என்பதை அனைவரும் எளிதில் விளங்கிக் கொள்ளலாம். ஒரு மிகப்பெரிய சுனாமியோ, பூகம்பமோ வருவதாக வைத்துக் கொள்வோம். அதில் இவர் குறிப்பிட்ட மேஷம், துலாம், மீனம் ராசிக்காரர்கள் மட்டும்தான் சாவார்களா? வேறு ராசிக்காரர்களோ, அல்லது ராசியே பார்க்காதவர்களெல்லாம் சாகமாட்டார்களா என்ன?

இந்த ஜோதிடக்காரர்களிடத்திலேயே கொள்ளையடிக்கும் நிகழ்வுகள் நடந்து இவர்கள் போய் காவல்துறையில் புகார் கொடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ள நிலையில் இவர்கள் உலக அழிவு குறித்து ஜோசியம் சொல்வது உண்மையிலேயே மகா காமெடிதான்.

இதே போல இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ரமணனிடமும் கேள்வி கேட்டுள்ளனர் பத்திரிக்கையாளர்கள். அது சந்தேகம்தான் என்று அவர் தனது பங்குக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். மழை வருமா? வராதா என்பதையே சரியாகச் சொல்லத்தெரியாதவர்கள் உலக அழிவு நாளைப் பற்றி சொல்லப்போகின்றார்களா என்ன? அந்த கேள்விக்கும் வரும் ஆனா வராது என்ற பாணியில்தான் அவர் பதிலளித்துள்ளார்.

கி.பி இரண்டாயிரமாம் ஆண்டு உலகம் அழியப்போகின்றது என்று இதற்கு முன்பாக இதுபோல ஒரு புரளியை கிளப்பினார்கள். அதுபோல இப்போது இந்தப் புரளியை கிளப்பிவிட்டுள்ளார்கள்.

இப்படி உலகமே மூடநம்பிக்கையிலும், பீதியிலும் உரைந்துள்ள இவ்வேளையில் உண்மையான முஸ்லிம்களுக்கு இந்த புரளி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதே இஸ்லாம்தான் இறைவனின் மார்க்கம் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம்.


 நன்றி                                        http://www.tntj.net/120655.html

Saturday, December 15, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை 07.12.12


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை 07.12.12
 உரை :சகோ அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி
தலைப்பு : தற்கொலை தீர்வாகுமா ?




ஹதீஸ் கலை ஒர் ஆய்வு (வீடியோ)

ஹதீஸ் கலை ஒர் ஆய்வு (வீடியோ)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பேச்சாளர் பயிற்சி முகாமில் சகோதரர் பி.ஜே அவர்கள் ஹதீஸ் கலை சம்பந்தமாக நடத்திய பயிற்சி வகுப்பின் வீடியோ

பாகம்-1

பாகம்-2

பாகம்-3

பாகம்-4

பாகம்-5

பாகம்-6

பாகம்-7

பாகம்-8

பாகம்-9

பாகம்-10

பாகம்-11

பாகம்-12

பாகம்-13

பாகம்-14
 

மாமனிதர் நபிகள் நாயகம் - சொத்தும் சேர்க்கவில்லை, சொகுசாகவும் வாழவில்லை (தொடர் 3)


இந்த ஆக்கங்கள் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூலிலிருந்து வெளியிடப்படுகிறது.

மாமனிதர் நபிகள் நாயகம் - சொத்தும் சேர்க்கவில்லை, சொகுசாகவும் வாழவில்லை (தொடர் 3)

இவ்வளவு மகத்தான அதிகாரமும், செல்வாக்கும் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி பொருள் திரட்டினார்களா? தமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார்களா? சொத்துக்களை வாங்கிக் குவித்தார்களா? அறுசுவை உண்டிகளுடனும், அரண்மனை வாசத்துடனும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்களா? 

 

இதை முதல் நாம் ஆராய்வோம். 



ஏனெனில் அரசியலோ, ஆன்மீகத்திலோ தலைமைத்துவத்தைப் பெற்றவர்கள் அந்தத் தலைமையைப் பயன்படுத்தி இப்படித் தான் நடந்து கொள்கின்றனர்.

 

ஒரு நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றவர் சில மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்து விட்டு பதவி இழந்தார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அப்பதவியைப் பெறுவதற்கு முன் எவ்வளவு சொத்துக்கள் வைத்திருந்தாரோ, அவரது குடும்பத்தினருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தனவோ அதே அளவு தான் இப்போதும் இருக்குமா? நிச்சயம் இருக்காது. அவர் பதவி வகித்த சில மாதங்களிலேயே பல மடங்கு சொத்துக்களைக் குவித்திருப்பார்.

 

இவ்வாறு சொத்துக்கள் குவிப்பதற்கு பிரதமர் பதவி கூடத் தேவையில்லை. பிரதமரை விட அதிகாரம் குறைந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கூட சொகுசான வாழ்க்கை வாழ்ந்து, தமது பெயரிலும், தமது குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்களைக் குவித்துக் கொள்வதை நாம் காண்கிறோம்.



இதை விடக் குறைந்த அதிகாரம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் கூட அதிகாரத்தைத் தமது சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதை நாம் காண்கிறோம்.

 

இவர்கள் இப்பதவிகளைப் பெறுவதற்கு முன் எந்த நிலையில் இருந்தார்களோ, அதை விடப் பல்லாயிரம் மடங்கு வசதிகள் உடையவர்களாக மாறி விடுகிறார்கள்.

 

இதை ஒப்புக்கொள்வதற்கு வரலாற்று அறிவோ, ஆதாரமோ தேவையில்லை. நமது கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைவரும் இதற்கு நிதர்சனமான உதாரணமாகத் திகழ்கிறார்கள். 



எந்த ஒரு தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் 'நான் ஊழல் செய்யவில்லை' என்று அவர் மறுத்ததில்லை. 'நீ ஊழல் செய்யவில்லையா?' என்று குற்றம் சாட்டியவரையே திருப்பிக் கேட்பது தான் அவரது பதிலாகவுள்ளது.

 

கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளும், தண்டிப்பதற்குச் சட்டமும், நீதிமன்றங்களும், அம்பலப்படுத்திட செய்தி ஊடகங்களும் உள்ள இந்தக் காலத்திலேயே இப்படியென்றால், இத்தகைய இடையூறுகள் இல்லாத காலத்தில் அதிகாரத்தைப் பெற்றவர்கள் எவ்வளவு ஆட்டம் போட்டிருப்பார்கள்?

 

இதற்கு வரலாற்றில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவர்கள் களியாட்டம் போட்ட அரண்மனைகளும், கோட்டை கொத்தளங்களும், அந்தப்புரங்களும், ஆடம்பரப் பொருட்களும் இன்றளவும் இதற்குச் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன.

 

அமரும் ஆசனத்தைக் கூட தங்கத்தில் அமைத்துக் கொண்டவர்கள், காதக்காக மக்கள் வரிப் பணத்தில் காதல் மாளிகை எழுப்பியவர்கள் எல்லாம் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். இது போன்ற கேள்வி கேட்பாரற்ற காலத்தில் தான் நபிகள் நாயகமும் ஆட்சி புரிந்தனர். அவர்களைச் சுற்றிலும் கைசர், கிஸ்ரா, ஹெர்குஸ் போன்ற பெரிய மன்னர்களும், சிற்றரசர்களும் ஆட்சி புரிந்தார்கள். அவர்களைப் போல் நபிகள் நாயகமும் ஆட்சி புரிந்திருந்தால் யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள்! 

தலைமைப் பதவியைப் பெற்ற ஒருவர், 
  • வகை வகையாக உண்டு, உடுத்தியிருக்கிறாரா?
 
  • பல வகையான பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறாரா? 
  • 
ஆடம்பரப் பொருட்களைக் குவித்திருக்கிறாரா?
 
  • அண்ணாந்து பார்க்கும் மாளிகைகளைக் கட்டினாரா? 
  • 
ஊரை வளைத்துப் போட்டாரா?
 
  • தனது வாரிசுகளுக்குச் சேர்த்து வைத்துச் சென்றிருக்கிறாரா? 

என்ற கேள்விகளுக்கு இல்லை என்று விடை அளிக்க முடிந்தால் தான் "அவர் பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவில்லை" என்று கூற முடியும். மேற்கண்ட எல்லாக் கேள்விகளுக்கும் நபிகள் நாயகத்தைப் பொருத்தவரை 'இல்லை' என்று தான் வரலாறு விடை கூறுகிறது. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Wednesday, December 12, 2012

ஆலோசனைக்கூட்டம்

U A E  அதிரை T N T J  கிளையின் ஆலோசனை மற்றும் ஒருங்கினைப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் அபு துபையில் வருகின்ற 14.12.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு அல் இப்ராஹீம் ரெஸ்டாரன்ட் பில்டிங்கில் நடைபெற இருக்கிறது.  நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளவும். 

தொடர்புக்கு ஜபரூல்லாஹ்  0507510584, நாகூர் மீரான் 0504388617

Tuesday, December 11, 2012

Sunday, December 09, 2012

Saturday, December 08, 2012

அதிரையில் ஹாஜா முகைதீன் படுகொலை சம்பவம்..?

அதிரையில் ஹாஜா முகைதீன் படுகொலை சம்பவம்..?
SDPI'யின் முகத்திரை கிழிந்தது!
நோட்டிஸ் வெளியீடு!!









Wednesday, December 05, 2012

சாதி ஒழிய இஸ்லாமே வழி


சாதி ஒழிய இஸ்லாமே வழி


கடந்த அக்டோபர் 30, 2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தின விழா நடந்தது. தேவர் ஜெயந்தி என்றழைக்கப்படும் இந்த விழாவுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த டாடா சுமோ வாகனம் வழிமறிக்கப்பட்டு கற்களும் பெட்ரோல் குண்டுகளும் வீசப்படுகின்றன. அதில் பயணம் செய்த 19 பேரும் காயமடைகின்றனர். அதில் 6 பேர் மரணத்தைத் தழுவுகின்றனர். இது ஒரு கலவரமாக வெடிக்கின்றது.
வழக்கமாக இந்தியாவில் கலவரக் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது பேருந்துகளில் கல் வீசுவது தான். இந்தக் கலவரத்திலும் பஸ்கள் மீது கற்கள் வீசப்படுகின்றன. இந்தக் கல்வீச்சில் ஏர்வாடி தர்ஹாவுக்குக் குடும்பத்துடன் வந்த அபூபக்கர் என்பவர் காயமடைகின்றார். அங்குள்ள தனியார் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைகின்றார்.
இந்தக் கலவரத் தீயின் காரணமாக பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்படுகின்றது. இதனால் மக்கள் சொல்ல முடியாத அல்லலுக்கும் அவதிக்கும் உள்ளாயினர்.
ஏற்கனவே செப்டம்பர் 11, 2011 அன்று தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இம்மானுவேல் சேகரன் நினைவு நாளின் போது பரமக்குடியில் வெடித்த கலவரத்தில் 6 தலித்துகள் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டிற்குப் பலியானார்கள். அதற்குப் பதிலடியாகத் தான் தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்ள டாடா சுமோவில் வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதைத் தொடர்ந்தே பரமக்குடியில் மட்டுமல்லாது ராமநாதபுரம், மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் ஆங்காங்கே வன்முறை வெடிக்கின்றது.
இந்தக் கலவரத் தீ ஆறி அடங்குவதற்குள்ளாக தர்மபுரியில் மற்றொரு கலவரத் தீ பற்றிக் கொள்கின்றது.
தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாயில் தலித்துகளுக்குச் சொந்தமான மூன்று காலனிகள் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன.
சாதி இந்துக்கள் 1800 பேர் சர்வசாதாரணமாக இந்தக் காலனிக்குள் சென்று, சாகவாசமாகக் கொள்ளையடித்து, குடியிருப்புகளைக் கொளுத்தியிருக்கின்றார்கள்.
தாங்கள் தாக்கப்படுவோம் என்று அறிந்த இந்தக் காலனி மக்கள் இரவில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவ்வாறு செல்லவில்லை என்றால் அவர்களின் உடைமைகளைப் போன்று உயிர்களும் கொளுத்தப்பட்டிருக்கும்.
இப்படிக் கொடுமையாக உடைமைகளைக் கொள்ளையடிப்பதற்கும் கொளுத்துவதற்கும் காரணம் என்ன?
நத்தம் காலனியில் வசிக்கின்ற தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவர் செல்லான் கொட்டாயில் வசிக்கும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகள் திவ்யாவைக் காதல் திருமணம் செய்தது தான் இந்தக் கலவரத்திற்குக் காரணம்.
தன் மகள் ஒரு தாழ்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் முடித்ததை தாங்கிக் கொள்ள முடியாத மணப்பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொள்கின்றார். இந்தக் காதல் எனும் காமத்தீ கலவரத் தீயாக மாறுகின்றது.
இதனைத் தொடர்ந்து விசாரணைகள், நிவாரண நிதிகள் என்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வழக்கம் போல் தொடர்கின்றன.
இங்கு நாம் பார்க்க வேண்டிய விஷயம், மொழியால் நாம் தமிழர்கள்; அதனால் ஒன்றுபட வேண்டும் என்று சொன்னார்கள். அதிலும் குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோர் தமிழர் ஒற்றுமையைப் பறைசாற்றுபவர்கள்; அதைத் தூக்கிப் பிடிப்பவர்கள். இங்கு தமிழ் இவர்களை ஒன்றுபடுத்தவில்லை.
அதுபோன்று பரமக்குடியில் தேவர்களும் தலித்துகளும் தமிழர்கள் தான். ஆனால் இந்தத் தமிழ் அவர்களை ஒன்றுபடுத்தவில்லை.
இதுபோன்று நாமெல்லாம் இந்தியர் என்று தேசத்தை வைத்து ஒற்றுமை என்பார்கள்.
கர்நாடகாவுடன் காவிரி நீர் விஷயத்தில், கேரளாவுடன் முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகம் நடத்தும் போராட்டத்தை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்தியாவில் தென்னகத்திலுள்ள மூன்று மாநிலங்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. இது உணர்த்துவது என்ன? மனிதர்களை மொழியால், இனத்தால், நிறத்தால், தேசத்தால் ஒருபோதும் ஒன்றுபடுத்த முடியாது.
ஒரே கடவுள் என்ற அடிப்படையிலும், மனிதர்கள் அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற ஆண், பெண்ணிடமிருந்து உருவானவர்கள் என்ற அடிப்படையிலும் மட்டுமே ஒன்றுபடுத்த, ஒற்றுமைப்படுத்த முடியும் என மனித குலத்திற்கு வழிகாட்டியாக வந்த திருக்குர்ஆன் என்ற வேதம் பிரகடனப்படுத்துகின்றது.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
அல்குர்ஆன் 49:13
இந்தக் கொள்கையில் ஒன்றிணைந்தவர்கள் தான் முஸ்லிம்கள். இன்று உலக அளவில் கறுப்பர்கள், வெள்ளையர்கள், பன்னாட்டவர்கள், பன்மொழி பேசுபவர்களை ஒன்றுபடுத்தும் ஓர் உன்னத நடைமுறை, வாழ்க்கைநெறி இஸ்லாம் தான்.
தென்மாவட்டங்களில் மட்டுமல்ல! தென்னிந்தியாவில் மட்டுமல்ல! ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாதியை ஒழிக்க ஒரு தூயவழி, வாழ்க்கை நெறி இஸ்லாம் தான்.

நன்றி ஏகத்துவம் டிசெம்பர் 12

http://onlinepj.com/egathuvam/2012-ega/ega_dec_2012/

Tuesday, December 04, 2012

பைபிள் கடவுளின் வார்த்தை அல்ல! கிறித்துவ போதகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்!!


பைபிள் கடவுளின் வார்த்தை அல்ல! கிறித்துவ போதகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்!!




கடந்த 28.11.12 புதன் கிழமையன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், அனாரியன் சமாஜ் ஊழியங்கள் என்ற கிறித்தவ சபையினருக்கும் இடையில், “திருக்குர்ஆன் இறைவேதமா? பைபிள் இறைவேதமா?” ஆகிய இரு தலைப்புகளில் விவாதம் பரபரப்புடன் நடந்து முடிந்தது.
டிஎன்டிஜே சார்பாக கலீல் ரசூல் அவர்கள் தலைமையில் எம்.எஸ்.சுலைமான், அப்பாஸ் அலி, தாங்கல் ஹபீபுல்லாஹ், சையது இப்ராஹீம் ஆகியோர் அடங்கிய குழுவினர் விவாதித்தனர்.
காலை 9 மணி முதல் இரவு 8.30 வரை நடைபெற்ற இரண்டு தலைப்புகளிலான விவாதம் அனல் பறந்தது. விவாதம் ஆன்லைன்பீஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
திருக்குர்ஆன் இறைவேதமே!:
முதலில் திருக்குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பிலும், அடுத்ததாக பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலும் விவாதிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
விவாதம் ஆரம்பித்த உடனேயே, “இயேசுவுக்கு முன்னதாக வந்த மோசே கொண்டு வந்தது நியாயப்பிரமாணம் என்றும், இயேசு அதை மாற்றி கிருபையின் பிரமாணத்தைக் கொண்டு வந்தார் என்றும், பின்னர் வந்த முஹம்மது என்பவர் கிருபையின் பிரமாணத்தை மாற்றி, பைபிளில் உள்ள “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்ட வேண்டும்” என்ற அழகிய சட்டங்களை மாற்றி, கண்ணுக்குக்கண், பல்லுக்குப் பல் என்று நடைமுறைக்குச் சாத்தியமில்லாத, குர்ஆன் என்று சொல்லக்கூடிய கிரியையின் பிரமாணத்தைக் கொண்டு வந்தார்” என்றும் கிறித்தவத் தரப்பினர் குற்றச்சாட்டு வைத்தனர்.
முதல் அடியே மரண அடி:
திருக்குர்ஆனுக்கு எதிராக அவர்கள் வைத்த முதல் வாதமே சொத்தை வாதமாக அமைந்தது.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று இயேசு சட்டம் கொண்டு வந்ததாகக் கூறுகின்றீர்களே! அது நடைமுறைக்குச் சாத்தியமான சட்டமா? அந்தச் சட்டத்தைச் சொன்ன இயேசுவாவது அந்த சட்டத்தைக் கடைப்பிடித்தாரா? என்று கேள்வியெழுப்பி, பைபிளில் வரக்கூடிய கீழ்க்கண்ட சம்பவம் சுட்டிக்காட்டப்பட்டது.
கன்னத்தில் அறைந்தவனை கேள்வி கேட்ட ஏசு:
சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன் பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
யோவான் 18 : 22, 23
இயேசுவை ஒருவர் கன்னத்தில் அறைந்த போது தனது மறுகன்னத்தைக் காட்டாமல், என்னை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டுள்ளார். அவர் கூறிய போதனையை அவராலேயே நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இந்தப் போதனையை எந்த ஒரு கிறித்தவரும் நடைமுறைப்படுத்துவதுமில்லை.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று இயேசு சட்டம் சொல்லுகின்ற அதே வசனத்தில், உனது வஸ்திரத்தை ஒருவன் கழற்றினால் அவனுக்கு உனது அங்கியையும் கழற்றிக் கொடு என்று இயேசு கட்டளையிடுகின்றார். அப்படியானால் தேவாலயங்களில் உண்டியலில் கொள்ளையடித்த கொள்ளையர்களைத் தேடிப்பிடித்து, அந்தக் கொள்ளையர்கள் ஒரு லட்சம் கொள்ளையடித்திருந்தால் இயேசு சொன்ன போதனையை ஏற்று இன்னுமொரு லட்ச ரூபாயை அவர்களுக்கு அன்பளிப்பாக கிறித்தவர்கள் வழங்க வேண்டும். அப்படி எந்த கிறித்தவர்களும் வழங்குவதில்லையே என்று கேள்வியெழுப்பியவுடனேயே போதகர்கள் பேதலித்துப் போயினர்.
இந்தச் செய்தியை நாங்கள் வாதமாக எடுத்து வைக்கவில்லை. ஒரு தகவலுக்காகச் சொன்னோம் என்று அந்தர் பல்டி அடித்தார்களே பாருங்கள். அப்போது ஆரம்பித்த அந்தர் பல்டி, விவாதம் முழுவதும் தொடர்ந்தது. கடைசி வரைக்கும் அந்தக் கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.
முதல் வாதத்திற்கு கொடுத்தது மரண அடியாக இருந்ததால் முதல் அடியில் விழுந்தவர்கள் கடைசி வரைக்கும் எழுந்திருக்கவே இல்லை.
மோசே கொண்டு வந்த நியாயப் பிரமாணத்தை இயேசு மாற்ற வந்தாரா?:
மேலும், மோசே கொண்டு வந்த நியாயப்பிரமாணத்தை இயேசு மாற்றி கிருபையின் பிரமாணத்தைக் கொண்டு வந்தார் என்று தாங்கள் சொல்வதும் பொய் என்று கூறி இயேசு சொன்ன கீழ்க்கண்ட பைபிள் வசனம் எடுத்துக்காட்டப்பட்டது.
நியாயப்பிரமாணத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
மத்தேயு 5:17
மேற்கண்ட வசனத்தை நாம் எடுத்துக்காட்டியதும், அவர்களது ஆரம்ப வாதமே பொய் என்பது அம்பலமானது.
திருக்குர்ஆன் விடும் சவால்:
நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்!
அல்குர்ஆன் 2 : 23, 24
மேற்கண்ட வசனம் நமது முதல் வாதமாக முன் வைக்கப்பட்டது. திருக்குர்ஆன் இந்த சவாலை 1400 ஆண்டுகளுக்கு முன் விடுத்த போது, அந்த அரபுலகத்தில் அரபி பேசத்தெரிந்த கிறித்தவர்கள், யூதர்கள், இன்னும் பெரும் பெரும் அரபிப் பண்டிதர்கள் எல்லாம் இருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் விடப்பட்ட இந்த சவால் 1400 ஆண்டுகள் ஆகியும் முறியடிக்கப்படாமல் உள்ளது. திருக்குர்ஆன் இவ்வாறு சவால் விட்ட பின்னர் அன்றைய அரபு மொழி பேசும் கிறித்தவர்கள் குர் ஆனை இறைவேதம் என்று ஏற்று இஸ்லாத்தில் இணைந்தார்கள். இதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது என்ற செய்தியை எடுத்து வைத்து திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு பதிலளிக்கத் திராணியற்ற போதகர்கள், திருக்குர்ஆன் அனைத்து விஷயங்களையும் கூறுவதாகச் சொல்லிக்காட்டுகின்றது. ஆனால் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், ஹலால் போன்றவற்றை முழுமையாக அது சொல்லிக்காட்டவில்லை என்ற சொத்தை வாதத்தையே திரும்பத் திரும்ப வைத்துக் கொண்டிருந்தனர்.
திருக்குர்ஆன் அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தும் என்று சொன்னால் அதில் அனைத்தும் இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அனைத்து வரையறைகளும் உள்ளன என்று சொல்கின்றோம். ஆனால், அதில் அனைத்து சட்டங்களும் மிகவும் விலாவரியாக விளக்கப்பட்டு இருக்காது. குறிப்பிட்ட அதிகாரங்களை மாநில அரசுக்கு வழங்கப்பட்டதாகவும், “ஆக்ட்” என்று தனியாகவும் விளக்கப்பட்டு இருக்கும்.
அதுபோலத்தான், தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், ஹலால் போன்றவைகள் இதில் மேலோட்டமாக சொல்லப்பட்டாலும் இறைவன் தனது தூதர் மூலம் அதை விளக்குகின்றான் என்பதை கீழ்க்கண்ட வசனம் தெளிவுபடுத்துகின்றது என்று சொல்லி விளக்கமளிக்கப்பட்டது.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
அல்குர்ஆன் 16 : 44
மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அவைகளை விளக்கும் அதிகாரத்தை இறைவன் தனது தூதருக்கு வழங்கியுள்ளான். இந்த அடிப்படையில் பார்த்தால் அனைத்துமே திருக்குர்ஆனில் விளக்கப்பட்டுவிட்டது என்று விளக்கமளித்தும், விளங்காததுபோல கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர் அந்த பேதகர்கள்.
மேலும், திருக்குர்ஆன் வசனங்களை ஒன்றுகிடக்க ஒன்று தவறாக விளங்கிக் கொண்டு இந்த வசனத்திற்கு அது முரண். அந்த வசனத்திற்கு இது முரண் என்று உளறிக் கொட்டினர். அவற்றிற்கும் தக்க முறையில் நமது விவாதக் குழுவினர் பதிலளித்தனர்.
மேலும், திருக்குர்ஆன் வசனங்களில் குறிப்பிட்ட வாசகங்களை மட்டும் இருட்டடிப்புச் செய்துவிட்டு, சில வசனங்களை வேண்டுமென்றே விட்டுவிட்டு இடையிலிருந்து வாசித்து தங்களது கள்ள வேலைகளை விவாத அரங்கத்திலும் அரங்கேற்றினர்.
அப்படி அவர்கள் இருட்டடிப்புச் செய்து வேண்டுமென்றே விட்டுவிட்டு வாசித்த வசனங்களை நாம் திரும்ப வாசித்துக் காண்பித்தவுடனேயே அவர்கள் சாயம் அந்த இடத்திலேயே வெளுத்தது.
எது ஆபாசம்?:
திருக்குர்ஆனில் பல இடங்களில் மனிதனது படைப்பைப் பற்றி இறைவன் சொல்லிக்காட்டுகின்றான். அப்படிச் சொல்லிக்காட்டும்போது மனிதனை விந்துத் துளியிலிருந்து படைத்ததாகச் சொல்லிக்காட்டுகின்றான். இவ்வாறு விந்துத்துளி என்று சொல்லப்படும் வார்த்தை ஆபாசமானதாம். எனவே குர்ஆன் ஆபாசமாகப் பேசிவிட்டது என்று கூறி குற்றச்சாட்டை வைத்தனர் போதகர்கள்.
இவர்களுக்கு ஆபாசம் என்றால் என்னவென்று தெரியாததுபோலப் பேசினர்.
மனிதனே உன்னை விந்துத்துளியிலிருந்து படைத்தோம். இதை நீ சிந்தித்துப்பார் என்று இறைவன் கேட்பது எப்படி ஆபாசம் என்று தெரியவில்லை. அடுத்த அமர்வில் ஆபாசம் என்றால் என்ன என்று விளக்குகின்றோம். பைபிளில் உள்ள ஆபாசங்களை புட்டு புட்டு வைக்கின்றோம் என்று கூற போதகர்கள் கதிகலங்கிப்போயினர்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் வைத்த விஞ்ஞான ரீதியான அறிவியல் உண்மைகளை திருக்குர்ஆன் சொல்லிக்காட்டுகின்றது என்ற வாதங்களுக்கு அவர்களால் பதிலளிக்க இயலவில்லை. மேலும் அவர்கள் வைத்த வாதங்கள் அனைத்தும் கிறுக்குத்தனமானவை என்பதை அதற்கு நாம் அளித்த பதில்கள் மூலம் அவர்களுக்கு உணர வைத்தோம். அத்துடன் முதல் அமர்வு முடிந்தது.
பைபிள் இறைவேதமில்லை என்பதை நிரூபித்த அமர்வு:
அடுத்ததாக, “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பில் விவாதம் மாலை 4மணிக்கு ஆரம்பமானது.
ஆரம்பமே அதிரடித்தாக்குதல்:
விவாதத்தின் ஆரம்பத்திலேயே அதிரடித்தாக்குதல் பாணியை கையிலெடுத்து கிறித்தவ போதகர்களை நையப்புடைத்தனர் நமது விவாதக் குழுவினர்.
பைபிளை இறைவேதம் என்று சொல்லுகின்றீர்கள். ஓர் இறைவேதம் என்பது எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ, அப்படியெல்லாம் பைபிள் உள்ளது.
அதில் பொய்கள், உளறல்கள், முரண்பாடுகள், சொல்வதற்கே நாக்கூசக்கூடிய ஆபாசங்கள், பொருந்தாத சட்டங்கள், கேடுகெட்ட சட்டங்கள், கடவுளை இழிவுபடுத்தக்கூடிய வசனங்கள் என்று குவிந்து கிடக்கின்றன. அவைகளின் பட்டியல் இதோ என்று நீண்ட பட்டியல் போட மூச்சுத் திணறிப்போன போதகர்கள் விளக்கம் அளிக்கின்றேன் என்ற பெயரில் உளறிக்கொட்டி மேற்கொண்டு ஆபாசங்களையும், அசிங்கங்களையும் தங்களது வாதத்தில் வைக்க விவாதக்களம் சூடுபறந்தது.
கர்த்தர் சொன்னதல்ல; நானே சொல்கின்றேன்:
முதலில் கிறித்துவத்தை நிறுவிய பவுல் மற்றும் லூக்கா ஆகியோர் பைபிளில் சொல்லியுள்ள ஒரு விஷயத்தை முன் வைத்து இப்படிப்பட்ட வாசகங்கள் அடங்கியது இறைவேதமா? என்று கேள்வியெழுப்பப்பட்டது
ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.
லூக்கா 1 : 2,3
மேற்கண்டவாறு லூக்கா கூறியுள்ளார்.  அதாவது நான் விசாரித்து அறிந்ததை இந்த வேத வரிகளாக எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார். இவர் விசாரித்து கேட்டு எழுதியவைதான் வேதமா?
ஒருபுறம் இப்படியென்றால் மறுபுறம், பவுல் என்பவரோ, “மற்றவர்களைக் குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.
முதலாம் கொரிந்தியர் 7:12
மேற்கண்ட வசனத்தில் கர்த்தர் சொல்லவில்லை; நானே சொல்லுகின்றேன் என்று பவுல் கூறுகின்றார் என்றால் இது இறைவேதமாக இருக்கவே முடியாது என்று ஆதாரங்களை வைத்ததும் கிறித்தவ போதகர்கள் ஆடிப்போயினர்.
அதற்கு விளக்கமளிக்கப் புகுந்த போதகர்கள் விளக்கம் சொல்கின்றேன் என்ற பெயரில் மென்மேலும் உளறிக்கொட்டி பைபிள் இறைவேதமில்லை என்பதை அவர்களே நிரூபித்தனர்.
அதாவது லூக்கா விசாரித்து அறிந்து எழுதியதாக சொல்லும் வசனத்திற்கு முந்தைய வசனத்தில்,
“ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்” என்று உள்ளது. இந்த வசனத்தின் அடிப்படையில் கண்ணாரக் கண்டதைத்தான் எழுதினார்கள் என்று போதகர்கள் விளக்கம் கூற அது அவர்களுக்கு எதிராக வந்து அமைந்தது.
அப்படியானால் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு பைபிள் எழுதப்பட்டதாக சொல்வது சுத்தப் பொய்தானே! விசாரித்து அறிந்ததையும், கண்ணாரக் கண்டதையும்தான் எழுதியுள்ளார்கள் என்றால் அது கர்த்தருடைய வார்த்தை அல்ல என்பது நிரூபணமாகிவிட்டது என்று நாம் சொன்னவுடன் சொல்ல பதிலின்றி வாயடைத்துப் போயினர் போதகர்கள்.
பவுல் கூறிய, கர்த்தர் சொல்லவில்லை; நான் சொல்லுகின்றேன் என்ற வசனம் குறித்து கடைசி வரைக்கும் அவர்கள் வாய்திறக்கவில்லை.
உன்னதப்பாட்டுக்கு அளித்த மன்மத விளக்கம்:
கடவுளுடைய வேதத்தில் சொல்லவே நாக்கூசக்கூடிய அளவிற்கு ஆபாசங்களும், அசிங்கங்களும் இருக்கலாமா? இந்த ஆபாசங்களையும், அசிங்கங்களையும் ஒரு மகளும், ஒரு தந்தையும் ஒன்றாக அமர்ந்து படிக்க முடியுமா? என்ற கேள்வியெழுப்பி பைபிளில் உள்ள உன்னதப்பாட்டு என்ற மன்மதப்பாட்டு குறித்து அதிலுள்ள வசனங்களை வாசித்துக் காண்பித்து கேள்வியெழுப்பப்பட்டது.
உன்னதப்பாட்டு என்பது அண்ணன் தங்கைக்கு சொல்லும் ஆறுதல் வார்த்தைகளாம்:
உன்னதப்பாட்டு என்னும் அதிகாரத்தில், ஒரு ஆண் தனது கள்ளக்காதலியை ஆபாசமாக வர்ணிக்கும் மகாமட்டமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இப்படி தனது கள்ளக்காதலியை, “தங்காய்! தங்காய்!” என்று அழைத்து கள்ளக்காதல் செய்யக் கற்றுத்தரும் இந்த கேடுகெட்ட நூல்தான் இறைவேதமா? என்று நாம் கேள்வியெழுப்பினோம்.
அதற்கு ஓர் அற்புதமான விளக்கமளித்த போதகர்கள் கிறித்தவ பார்வையாளர்கள் உட்பட அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.
உன்னதப்பாட்டு என்பது ஓர் அண்ணன் – தங்கை இருவருக்குமிடத்தில் நடைபெறும் பாசத்தின் அடிப்படையிலான பேச்சுக்கள். தங்கையானவள் கறுப்பான நிறத்தில் இருக்கின்றாள். கறுப்பாக உள்ள தனது தங்கையைப் பார்த்து அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் அண்ணன் சொல்கின்றார், “தங்கையே! உன் முலைகள் திராட்சைக் குலைகள் போன்றவை” என்று. இப்படி தனது தங்கைக்கு அவளது அண்ணன் ஆறுதல் சொல்வதை தாங்கள் கொச்சைப்படுத்தலாமா? என்று விவாதத்தில் கிறித்தவ போதகர் கேட்டாரே ஒரு கேள்வி. கிறித்தவ பார்வையாளர்களே அவர்களை காரித்துப்பிவிட்டனர்.
ஓர் அண்ணனும் தங்கையும் இப்படித்தான் கேவலமாகப் பேசிக் கொள்வார்களா? இப்படித்தான் கிறித்தவர்கள் தங்களது தங்கைகளுக்கெல்லாம் ஆறுதல் சொல்லிக் கொண்டுள்ளார்களா? இதையும் சிரித்துக் கொண்டே சொல்கின்றீர்களே! உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கேள்வியெழுப்ப அதற்கும் சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்தனர் கிறித்தவ போதகர்கள்.
உனது வளர்த்தி ஓங்கிய பனையாம், உன் முலைகள் இரண்டும் அதன் குலைகளாம்.
பனை மரமேறி நான் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; உன் முலைகள் திராட்சைக் குலைகள் போன்றவை, உன் மூச்சு கிக்சிலிப் பழங்கள் போல் இனிய மணமுள்ளது
உன்னதப்பாட்டு 7 : 7, 8
மேற்கண்ட வசனத்திலுள்ள, “நீ பனைமரம் போன்றவள். நான் பனை மரத்தில் ஏறி உன் முலைகளைப் பிடிப்பேன். உன் முலைகள் திராட்சைக் குலைகள் போல் ஆகுக!” என்ற உன்னதப்பாட்டு வேத(?) வரியை வாசித்துக் காண்பித்து, இதுதான் இறைவேதத்தின் லட்சணமா என்று நாம் கேள்வியெழுப்பினோம்.
இந்த கேவலப்பட்ட வசனங்களுக்கு விளக்கம் சொன்னால் நாம் நாறிப்போய்விடுவோம் என்று அரண்டு போன போதகர்கள், “முலைகள்” என்ற வார்த்தையே பைபிளில் இல்லை என்றும், நாம் வேதத்தை புரட்டுவதாகவும் அந்தர்பல்டி அடித்து குற்றச்சாட்டு வைத்தனர். முலைகள் என்று பைபிளில் வரக்கூடிய இடங்களையெல்லாம் எடுத்து வாசித்துக் காண்பித்தவுடன் கப்சிப் ஆகிவிட்டனர்.
அடுத்ததாக இதுவெல்லாம் ஓர் ஆபாசமா? என்று கேட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். சாலமோன் என்பவர்தான் இந்த ஆபாச வார்த்தைகளையெல்லாம் பேசியவர். அவரது காலத்தில் இதுவெல்லாம் ஆபாசமே கிடையாது. இதற்கெல்லாம் வெட்கப்படமாட்டார்கள். எப்படி ஒரு சிறுவயது குழந்தை நிர்வாணமாக இருப்பதை தவறாகச் சொல்ல முடியாதோ அதுபோல இதையெல்லாம் தவறாகச் சொல்ல முடியாது என்று அற்புத(?) விளக்கமளித்தனர்.
அதுமட்டு மில்லாமல், காட்டுவாசிகளை இப்போது டிஸ்கவரி சேனலில் காட்டுகின்றார்கள். அவர்களெல்லாம் நிர்வாண கோலத்தில்தான் உள்ளார்கள். அவர்களுக்கு அது தவறில்லை என்பது போல உன்னதப்பாட்டும் தவறில்லை. டிஸ்கவரி சேனலில் தற்போது அந்தக் காட்டுவாசிகளைக் காட்டும் போது அவர்களது குறிப்பிட்ட அந்த பாகங்களை கறுப்படித்துக் காட்டுகின்றார்கள். அதுபோலத்தான் இதுவும் என்று போதகர்கள் விளக்கமளிக்க, வந்திருந்த கிறித்தவ பார்வையாளர்களே முகம் சுளித்தனர்.
சாலமோன் பாடிய உன்னதப்பாட்டு அசிங்கமில்லை; அவர்களுக்கு அது வெட்கமில்லை என்று நீங்கள் சொல்வது சுத்தப் பொய். காரணமென்னவென்றால் உன்னதப்பாட்டின் கடைசி அதிகாரமாக வரக்கூடிய 8வது அதிகாரத்தில் முதல் வசனத்தில் கள்ளக் காதலியானவள் தனது கள்ளக் காதலனைப் பார்த்து சொல்கின்றாள், “நீ எனது தாயின் பால் குடித்த உடன்பிறந்த சகோதரனாக இருந்திருந்தால் நான் கண்ட இடத்திலெல்லாம் உன்னை முத்தமிடுவேனே!” என்று கேட்கின்றாள். அதாவது கள்ளக் காதலனை கண்ட இடத்திலெல்லாம் முத்தமிட்டால் ஊர் மக்கள் இவனை ஏன் முத்தமிடுகின்றாய் எனக் கேட்பார்கள். அதனால் நீ என் கூடப் பிறந்த அண்ணனாக இருந்தால் உன்னை கண்ட இடத்திலெல்லாம் நான் முத்தமிடுவேனே! அப்போது என்னை யாரும் நிந்தனை செய்யமாட்டார்கள் என்று அவள் கூறுகின்றாள். அப்படியானால் அது அசிங்கம் என்பதால்தானே இப்படி கூறுகின்றாள்.
அதுமட்டு மல்லாமல், உன்னதப்பாட்டிற்கு முன்பாகவே மோசேவுடைய நியாயப் பிரமாணத்தில் விபச்சாரம் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது. சாலமோன் சொன்ன நீதிமொழிகளிலும் விபச்சாரத்திற்கு எதிரான வசனங்கள் உள்ளன என்று நாம் விளக்கம் கூற விழிபிதுங்கியது போதகர் கூட்டம்.
அதுமட்டுமல்லாமல் காட்டுவாசிகளைப்போல நிர்வாணமாகத் திரிவது தவறில்லை என்றால், அந்த அசிங்கங்களை தற்போது நீங்கள் வேதமாக வைத்து வாசித்து வருகின்றீர்களே! அப்படியானால் நீங்கள் என்ன காட்டுவாசிகளா? அவர்களுக்குத்தான் வெட்கமில்லை என்றால் அதை வைத்து வாசிக்கும் உங்களுக்கும் வெட்கமில்லையா? என்று கேட்க கடைசி வரைக்கும் பதிலில்லை.
பைபிள் கூறும் இரசம்:
உன் தொப்பூழ் கலப்பு இரசம் குறையாதிருக்கும் கடைந்தெடுத்த கலசம் போன்றது.
உன்னதப்பாட்டு 7 : 2
மேற்கண்ட வசனத்தில் தொப்புளில் இருந்து ரசம் வருவதாக ஒரு வசனம் உன்னதப்பாட்டில் வருகின்றதே! இதுதான் வேதமா? இதை ஒரு தகப்பனும், மகளும் ஒன்றாக எப்படி வாசிக்க முடியும்? என்று கேள்வியெழுப்ப அப்படி ஒரு வசனமே இல்லை என்று அந்தர்பல்டி அடித்தனர் போதகர்கள்.
உன்னதப்பாட்டு 7வது அதிகாரத்தில் 2வது வசனத்தில் தொப்பூளில் ரசம் வருவதாக அவர்கள் வாசித்துக்காட்டினார்கள். அது பொய். இதோ நான் அந்த வசனத்தை வாசித்துக் காண்பிக்கின்றேன் என்று கிறித்தவ போதகர் அவரது பாணியில் கீழக்கண்ட வசனத்தை வாசித்துக் காண்பித்தார்.
உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம் போலிருக்கிறது; உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது.
உன்னதப்பாட்டு 7 : 2
இங்கே எங்கே தொப்பூள் என்று உள்ளது. இதிலே எங்கே ரசம் உள்ளது என்று ஒன்றும் அறியாதவர்கள் போல கேள்வியெழுப்பினர்.
மேற்கண்ட வசனத்தில் வரக்கூடிய, “நாபி” என்ற தூய தமிழ்ச்சொல்லின் பொருள்தான் தொப்பூள் என்பதாகும். அது தமிழ் மக்களுக்குத் தெரியாது என்ற அசட்டுத் தைரியத்தில் இந்த பொய்யை அவர்கள் அவிழ்த்துவிட்டனர்.
அதுபோல, “முலைகள்” என்று வரக்கூடிய இடங்களில் அவைகளை வெளியே தெரியாத வண்ணம், “ஸ்தனங்கள்” என்று மொழிபெயர்த்த மொழி பெயர்ப்பை வாசித்துக் காட்டி இங்கே எங்கே முலைகள் என்று உள்ளது என்று கேட்டு பைபிள் வசனங்களை இருட்டடிப்புச் செய்தனர்.
நாபி, ஸ்தனங்கள் என்று மொழி பெயர்த்தவை புராட்டஸ்டாண்ட் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்த மொழிபெயர்ப்பில் பெரும்பாலன மக்களுக்கு புரியாத வண்ணம் வார்த்தைகளைப் போட்டு மொழிபெயர்த்திருப்பார்கள்.
பைபிளில் உள்ள இது போன்ற நல்ல போதனைகள்(?) மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு மற்றும் பொது மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் கொப்பூழ், முலைகள் என்று மொழிபெயர்த்துள்ளார்கள். அந்த வசனங்களை நாம் வாசித்துக் காண்பித்த பிறகும், “இல்லை; இல்லை; அப்படி இல்லை. இல்லவே இல்லை. இதோ பாருங்கள் நாபி என்றுதான் உள்ளது; ஸ்தனங்கள் என்றுதான் உள்ளது என்று மீண்டும் மீண்டும் புராட்டஸ்டண்ட் பைபிளை எடுத்து வாசித்துக் காண்பித்து நல்ல பிள்ளைபோல நாடகமாடினர் கிறித்தவ போதகர்கள்.
நீங்கள் வாசித்தது கத்தோலிக்க பொது மொழிபெயர்ப்பு அல்ல. நீங்கள் மக்களை ஏமாற்றி பொய் சொல்லுகின்றீர்கள் என்று நாம் இறுதியில் சுட்டிக்காட்ட அவர்களது பொய் வேடம் கலைந்து கிறித்தவ பார்வையாளர்கள் மத்தியில் அவர்கள் அசிங்கப்பட்டனர்
ஆட்டம் காண வைத்த ஆபாசங்களின் பட்டியல்:
அதைத் தொடர்ந்து பைபிள் சொல்லிக்காட்டும் ஆபாச கதைகளின் பட்டியல் அள்ளிப்போடப்பட்டது.
ரூத் என்ற அதிகாரத்தில் நகோமி என்ற ஒரு பெண்மணி ரூத் என்ற பெண்மணியின் மாமியாக உள்ளார். அந்த நகோமி மாமி தனது மருமகளுக்கு ஒரு நல்ல(?) வழிகாட்டுதலை காட்டுகின்றார். போவாசு என்ற வயது போன தாத்தா ஒருவரை வளைத்துப் போடுவது எப்படி என்ற வழிகாட்டுதலை வழங்கும் நிகழ்ச்சியை பைபிள் விலாவரியாக விளக்குகின்றது.
போவாசு என்ற தாத்தா இரவில் படுத்திருக்கும் போது, நன்கு குளித்து எண்ணெய் தடவி அவரது இரு கால்களுக்கும் மத்தியில் அவரது போர்வையை தூக்கிக் கொண்டு உள்ளே தலையைவிட்டு நீ படுத்தால், நீ அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே உனக்கு சொல்வார் மருமகளே! என்று அந்த மாமி தனது மருமகளுக்கு வழங்கும் வழிகாட்டுதல்களும், அவ்வாறு போவாசு உடைய இரு கால்களுக்கு மத்தியில் போர்வையை தூக்கிக் கொண்டு ரூத் என்ற பெண்மணி படுத்த செய்தியையும் நாம் வாசித்துக் காண்பித்து இதுதான் புனித வேதமா என்று கேள்வியெழுப்பினோம்.
அதை மறுத்த அந்த போதகர்கள் கூட்டம், இரு கால்களுக்கு உள்ளே போய் படுக்கச் சொல்லி எங்கே உள்ளது? ஒரு காலுக்கு உள்ளேதான் படுக்கச் சொல்லி பைபிளில் உள்ளது. இவர்கள் வேதத்தை புரட்டுகின்றார்கள் என்று சொல்லி விளக்கமளித்தார்களே பார்க்கலாம். இப்படியுமா இவர்கள் கேடுகெட்டத்தனமாக இருப்பார்கள் என்று அனைவரும் காரித்துப்பினர்.
ஆனால் போவாசு என்பவரது இரு கால்களுக்கு மத்தியில் போர்வையைத் தூக்கிவிட்டுப் படுக்கச் சொல்லித்தான் பைபிளில் உள்ளது. இதோ அந்த வசனம்:
அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
ரூத் 3 : 4
தலையில் குஷ்டம் வந்தால் தீட்டு தீட்டு என்று கத்த வேண்டுமாம்:
அடுத்து பைபிள் சொல்லக்கூடிய ஒரு அற்புதமான(?) சட்டம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
43. அவனுடைய மொட்டைத் தலையிலாவது அரைமொட்டைத் தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாக்கும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக் கண்டால்,
44. அவன் குஷ்டரோகி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.
45. அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, “தீட்டு, தீட்டு” என்று சத்தமிடவேண்டும்.
லேவியராகமம் 13 : 43 – 45
தலையில் ஒருவனுக்கு குஷ்டம் வந்தால் அவன் தனது தாடியை மூடிக்கொண்டு தீட்டு தீட்டு தீட்டு என்று கத்தினால் குஷ்டம் போய்விடும் என்று பைபிள் கூறுகின்றதே! இதுதான் இறைவேதமா எனக்கேட்க அதற்கும் பதில் இல்லை.
ஆடைக்கும், வீட்டுக்கும் குஷ்டரோகம்:
அதுபோல ஆடைக்கு குஷ்ட ரோகம் வந்தால் அதை எரிக்க வேண்டும் என்றும், வீட்டுக்கு குஷ்டரோகம் வந்தால் அதை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்றும் பைபிள் கூறுகின்றதே! இதுதான் இறைவேதமா? எனக்கேட்க தற்போது நாகர்கோவிலில் கூட புளிக்கு குஷ்டம் என்று சொல்கின்றார்கள் அதுபோலத்தான் இங்கும் சொல்லப்பட்டுள்ளது என்று அதையும் நியாயப்படுத்தினார்கள் போதகர்கள்.
அப்படியானால் அந்த குஷ்டரோகம் வந்தால் ஆடையை எரித்து, வீட்டை இடிக்க வேண்டும் என்பதற்கு விளக்கம் என்ன என்று கேட்டதற்கு பதில் இல்லை.
தீண்டாமையை போதிக்கும் பைபிள்:
பின்னும் கர்த்தர்மோசேயிடம் நீ ஆரோனோடும் பேசியதைச் சொல். உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவர்கள் தலைமுறை தோறும் கடவுளின் அப்பத்தைப் படைக்கும் படி கிட்டிவரலாகாது. குருடன், சப்பானி, முகவிகாரமுள்ளவன் அளவுக்கு மிஞ்சி நீண்ட அவையவம் உள்ளவன் கால் ஒடிந்தவன், கை ஒடிந்தவன், கூனன், அதிகம் மெலிந்தவன், பூவிழுந்த கண்ணன், சொறியன், அசருள்ளவன், விதை நசுங்கினவன் ஆகிய இவர்கள் கிட்டிவரலாகாது.
(லேவியராகமம் 21:16-23)
மேற்கண்ட வசனத்தை காண்பித்து தீண்டாமையை அப்பட்டமாக போதிக்கக்கூடிய பைபிள் எப்படி கடவுளுடைய வேதமாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியதற்கு, கூனன், குருடன், நொண்டி ஆகியோர் பலி கொடுக்க இயலாத நிலையில் இருப்பார்கள். அதனால்தான் அவர்களை ஆலயத்திற்குள் வரக்கூடாது என்று கர்த்தர் சொல்லியுள்ளதாகச் சொல்லி மாட்டிக் கொண்டனர்.
அப்படியானால் பலி கொடுக்க இயலாததால்தான் அவர்களை ஆலயத்திற்குள் வரக்கூடாது என்று கர்த்தர் சொல்லியிருபாரேயானால், அதுவும் அநியாயம்தான். காரணமென்னவென்றால், கூனன், குருடனோடு சேர்த்து அங்க அவயங்கள் நீளமாக உள்ளவன் கூட தேவாலயத்திற்குள் வரக்கூடாது என்று கர்த்தர் சொல்லியுள்ளார். அப்படியானால் விவாதத்தில் கலந்து கொண்டுள்ள தங்களுக்குக் கூட மூக்கு நீளமாக உள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால் நீங்கள் கூட தேவாலயத்தில் நுழைய முடியாதே! என்று கேள்வியெழுப்பி, மூக்கு நீளமாக உள்ளவர் பலி கொடுக்க என்ன தடங்கல் உள்ளது என்று கேட்க வாயடைத்துப் போயினர் போதகர்கள்.
அதுமட்டுமல்லாமல், இந்நிலைப்பாடு ஒருவேளைக்கு சரி என்று வைத்துக் கொண்டாலும், இதுபோன்ற குறைபாடு உள்ளவர்கள் தேவாலயத்தினுள் வரக்கூடாது என்றல்லவா கர்த்தர் கூறியுள்ளார். பலி கொடுக்கக்கூடாது என்று கூறுவதுதான் சரியானதாக இருந்திருக்கும்.
மேலும் அப்படிப்பட்ட குறைபாடுள்ளவர்கள் மட்டுமல்ல; அவர்களது தலைமுறை தோறும் யாரும் தேவாலயத்திற்குள் வரக்கூடாது என்று கூறுவது அப்பட்டமான தீண்டாமைதானே என்று கேள்விகேட்க பதிலில்லாமல் திக்குமுக்காடினர் போதகர்கள்.
நாம் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளால் ஆட்டம் கண்ட கிறித்தவ போதகர்கள் கடைசியில் தங்களது வாய்களாலேயே பைபிளில் உள்ள அனைத்தும் கர்த்தரது வார்த்தைகள் என்று நாங்கள் சொல்லவில்லை.
பைபிளில் கர்த்தருடைய வசனங்களும் உள்ளன; அயோக்கியர்களது வசனங்களும் உள்ளன; சாத்தானுடைய வசனங்களும் உள்ளன; மனிதர்களது வசனங்களும் உள்ளன என்று கூறி பைபிள் இறைவேதமில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.
பைபிளில் உள்ள தீவிரவாதத்தைத் தூண்டக்கூடிய வசனங்கள், அடுக்கடுக்கான ஆபாசங்கள், பொய்கள், உளறல்கள், கேவலமான சட்டங்கள், கடவுளை இழிவுபடுத்தக்கூடிய வசனங்கள் என்று இன்னும் அடுக்கடுக்கான பட்டியலை அள்ளிவீச ஆடிப்போன போதகர்கள் கலக்கம் கண்டுவிட்டனர்.

Sunday, December 02, 2012

சமூக விரோதிகளை கண்டித்து அதிரையில் நடந்த ஆர்ப்பாட்டம் (வீடியோ )


அதிரையில் கல்லூரி மாணவன் ஹாஜா முஹைதீன் என்பவரை படுகொலை செய்த கொலை குற்றவாளியை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரி மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்பாட்டம் அதிரை பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது

இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர்.பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...!

போராட்டத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட இயக்கத்தவர்கள் இரவோடு இரவாக கிழித்துள்ளனர் எப்படியாவது கூட்டத்தை தடுத்துவிடலாம் என்று எண்ணியவர்களின் கனவு கனவாகவே போனது. அல்ஹம்துலில்லாஹ்.

அதிரையில் இவர்களால் தாக்கப்பட்டவர்களையும் அல்தாஃபி அவர்கள் பட்டியல் போட்டார்.

இந்த பேராட்டத்தில் இயக்க வேறுபாடுகளை எல்லாம் மறந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர் 





அதிரையில் நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு கண்டன ஆர்ப்பாட்டம்


அதிரையில் கல்லூரி மாணவன் ஹாஜா முஹைதீன் என்பவரை படுகொலை செய்த கொலை குற்றவாளியை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரி மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்பாட்டம் அதிரை பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது

இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர்.பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...!

போராட்டத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட இயக்கத்தவர்கள் இரவோடு இரவாக கிழித்துள்ளனர் எப்படியாவது கூட்டத்தை தடுத்துவிடலாம் என்று எண்ணியவர்களின் கனவு கனவாகவே போனது. அல்ஹம்துலில்லாஹ். 

அதிரையில் இவர்களால் தாக்கப்பட்டவர்களையும் அல்தாஃபி அவர்கள் பட்டியல் போட்டார்.

இந்த பேராட்டத்தில் இயக்க வேறுபாடுகளை எல்லாம் மறந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர் 









Saturday, December 01, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை 30.11.12(வீடியோ )




அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை 30.11.12
உரை :  சகோ யாசர் அரஃபாத் இம்தாதி

நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் ஏற்படுத்திய சகோதரத்துவம்

ஜிகாத் என்றால் என்ன ?
ரசூலுல்லாஹ் செய்த போர் எந்த சூழ்நிலையில் இருந்தது ?
ஒரு முஸ்லீமின் இரத்தத்தை ஓட்ட இன்னொரு முஸ்லீமுக்கு அனுமதியுள்ளதா ?

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 30.11.12 from Adiraitntj on Vimeo.

Thursday, November 29, 2012

கல்லூரி மாணவன் படுகொலையை கண்டித்து விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

கல்லூரி மாணவன் படுகொலையை கண்டித்து விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் 

அஸ்ஸலாமு அலைக்கும் 

அதிரையில் கல்லூரி மாணவன் ஹாஜா முஹைதீன் என்பவரை படுகொலை செய்த சமுதாய துரோகிகளை கண்டித்து மாபெரும் விழிப்புணர்வு  மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் :                           01.12.2012

நேரம் :                        மாலை 4 மணி

தலைமை :                Y. அன்வர் அலி
                                 தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்
                                 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கண்டன உரை :        பக்கீர் முகம்மது அல்தாஃபி
                                 மேலாண்மை குழு உறுப்பினர்
                                  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :   அதிரை பேருந்து நிலையம்

இந்த சமுதாய துரோகிகளுக்கு எதிராக அணி திரண்டு வாரீர்

உங்களை அன்புடன் அழைப்பது தவ்ஹீத் ஜமாஅத் கிளை அதிராம்பட்டிணம்



அதிரையில் அதிரைவாசிகள் ஒட்டி இருக்கும் போஸ்டர்

அதிரையில் பயங்கரம்! கல்லூரி மாணவன் படுகொலை!!

அதிரையில் பயங்கரம்! கல்லூரி மாணவன் படுகொலை SDPI சேர்ந்தவர் வெறிச்செயல்!!

அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் முஹம்மது நூஹு அவர்களின் மகன் ஹாஜா [வயது 20], என்ற சகோதரனை கத்தியால் குத்தி படுகொலை செய்த SDPI சேர்ந்த சமுதாய துரோகி!!

23-11-2012 மாலை சுமார் 5.45 மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே தனியாக நின்றுகொண்டு இருந்த ஹாஜாவை முதுகுக்கு பின்னால் சென்ற காதர் முஹைதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டான்.

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவனை அருகில் நின்றவர்கள் அரசு மருத்துவனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கே போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்களால் முதலுதவி மாத்திரம் செய்யப்பட்டு மேற்கொண்டு சிகிச்சையளிக்க தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உடலில் பல்வேறு இடங்களில் பலமாக காயம் ஏற்பட்டதால் மருத்துவர்களின் சிகிச்சைகள் பலனின்றி 24-11-2012 அதிகாலை சுமார் 4.45 மணியளவில் தஞ்சையில் உயிர் பிரிந்தது பிரத பரிசோதனையடுத்து உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறிப்பு: கடந்த ஆண்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y. அன்வர் அலி அவர்களை வீடு புகுந்து தாக்கிய இந்த ABCD அமைப்பை சேர்ந்தவர்களில் ஐந்து பேரில் ஒருவன் தான் இந்த கொலையாளி காதர் முஹைதீன் எனபது குறிப்பிடத்தக்கது!


முஸ்லிமை கொலை செய்பவனுக்கு நிரந்தர நரகம்!

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 4:93

நன்றி: உணர்வு வார இதழ்.


படுகொலை செய்யப்பட்ட ஹாஜா





அதிரையில் இந்த வன்முறையை கண்டித்து ஒட்டபட்டு இருக்கும் போஸ்டர்



Wednesday, November 28, 2012

ஸலஃபிகளின் மறுபக்கம் (வீடியோ)!


ஸலஃபிகளின் மறுபக்கம் (வீடியோ)

ஸலஃபிகள் என்று சொல்லிக்கொண்டு, முன்னோர்கள் சொன்னால் தான் மார்க்கம் என்று  பல கூட்டங்கள் இருக்கின்றன. ஸலஃபி என்று சொல்லுப்பவர்களிலேயே, ஆயிரம் ஆயிரம் பிரிவுகள் உள்ளது. ஒவ்வொருவரும் மற்றவரை வழிகேடர்கள் என்பர்.

ஸலஃபி கூட்டங்கள் பெரும்பாலும் அரபுநாட்டில் சம்பளம் வாங்கிக்கொண்டு, வாலை ஆட்டுபவர்கள். அரபுநாடுகளில் போடப்படும் எலும்பு துண்டுகளுக்காக, வாலை ஆட்டுவார்கள் (நன்றாக). அரபுநாட்டு அறிஞர்கள் மார்க்கத்தில் விளையாடினால், அவர்களை எதிர்த்து இவர்கள் பேச மாட்டார்கள் (பேட்டா நின்றுவிடும்  அல்லவா).

இந்த ஸலஃபி கூட்டங்களில் சில தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்கின்றன. இவர்களை தவ்ஹீத் ஜமாஅத் நேரடியாக விவாதம் செய்ய அழைக்கிறது. விவாதிக்க வந்தால், இவர்களின் முகத்திரை கிழிந்து போகும் அல்லவா, அதனால், இவர்கள் வரமாட்டார்கள். உலகளவில் புகழ்பெற்ற அறிஞர்கள் என்று சொல்லப்படும், பிலால் பிலிப்ஸ், சினிமா நடிகரை ஆடம்பரத்தில் மிஞ்சும் ஜாகிர் நாயக் போன்றவர்களே, தவ்ஹீத் ஜமாஅத்தை கண்டு ஓடும் போது, இந்த ஸலஃபிகள் ஓட மாட்டார்களா என்ன?

மிகவும் ஆச்சரிப்படும் வண்ணம், பெங்களுரில் உள்ள ஒரு ஸலஃபி கூட்டம் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க தயார் என்று வந்தது. ஒப்பந்தமும் கையெழுத்தானது. இப்போது அந்த ஸலஃபி கூட்டம் ஓட்டமும் எடுத்துள்ளது.

முழு விபரம் அறிய கீழுள்ள வீடியோக்களை பார்வையிடவும்.

மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
பாகம்-1

பாகம்-2