Saturday, February 22, 2014

தவ்ஹீத் ஜமாஅத்தின் இடஒதுக்கீடு போராட்டமும் நிருபர்களின் உளரல்களும்! - காப்பி பேஸ்ட் செய்து வசமாக மாட்டிய அறிவாளிகள் (?)

இவ்வளவு கூட்டம் கூடுதே! வயிறு எரியுதே என்ன செய்யலாம்?
கட்டுரை காப்பி அடிக்கலாமா?
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்க்காரன் என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்தது. இந்த பழமொழியை மாற்றி சிலர் பேனா எடுத்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்று காட்ட துவங்கியுள்ளார்கள்.

சமீபத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய சிறை செல்லும் போராட்டத்தை வஞ்ச புகழ்ச்சியோடு ஒரு கட்டுரையை ஒரு  தளம் உளறி  இருந்தது. அந்த கட்டுரையை படிக்கும் எவரும் இவர் என்ன தான் சொல்ல வருகிறார். ஆரம்பத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை பாராட்ட வேண்டும் என்கிறார். கடைசியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை கண்டிக்க வேண்டும் என்கிறார். நடுவில் இடஒதுக்கீடு அவசியம் என்கிறார், கடைசியில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்கிறார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளும் (?) அளவில்தான் கட்டுரை ஆக்கியவரும் உருவாக்கியவரும் சொல்லுகிறார்கள் (ஆக்கியவருக்கும் உருவாக்கியவருக்கும் என்ன வித்தியாசம் என்று எல்லாம் யாரும் எங்களிடம் கேட்டுவிடாதீர்கள்). 

தாங்கள் ரொம்ப நடுநிலையாளர்கள் என்று காட்டுவதற்காக யார்மீதுள்ள வெறுப்பின் காரணத்தினால் இதை நாங்கள் எழுதவில்லை என்ற அண்டபுளுகளுடன் ஆரம்பமாகிறது கட்டுரை. நாணயத்தின் இருபக்கத்தையும் பார்க்க வேண்டுமாம்.

தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏழு சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததும், அதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தியதும் தவ்ஹீத் ஜமாஅத்தும் அதன் முக்கியஸ்தர்களும் தான். இதன் தொடர்ச்சியாக தான் கடந்த 2007 ஆம் ஆண்டு நமக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் கட்டுரையாளர் இந்த போராட்டங்களை முழுவதுமாக மறைத்து விட்டு திமுக, அதிமுக என்று மாறி மாறி வந்த ஆட்சியாளர்களுடன் ஒட்டுறவாக இருந்த முஸ்லீம் அரசியல் கட்சிகளாலும் இயக்கங்களாலும் உணர்த்தபடவுமில்லை என்று சொல்லி விட்டு சும்மா இருந்த கருணாநிதி தூக்கத்தில் கனவு கண்டு இடஒதுக்கீடு கொடுத்தது மாதிரி சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு 2008ல் இடஒதுக்கீடு கருணாநிதி கொடுத்தார் என்று சொல்கிறார் 2007 எப்படி 2008 ஆனது என்பதை பிறகு பார்போம்.

இன்று முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கிடு வேண்டும் என்று எல்லா முஸ்லிம் இயக்கங்களும் கேட்கின்றன. மேலும், அவர்களும் அவர்கள் பங்கிற்கு ஏதோ பேராட்டம் நடத்துகிறார்கள். இந்த நிருபர்கள் மற்ற இயக்கங்கள் இட ஒதுக்கிட்டிற்காக போராட்டம் நடத்தும் போது எல்லாம் மவுனமாக தான் இருந்தார்கள், இருப்பார்கள். தவ்ஹீத் வேடம் போடும் இந்த நிருபர்களின் நடுநிலை வேஷம் விரைவில் அம்பலப்படுத்தப்படும்.

ஒன்றுமே இல்லாத விஷயத்தை வான் அளவிற்கு உயர்த்தி எழுதுவது இந்த நிருபர்களின் தன்மை என்பதனால், ஒரு மிகப்பெரும் பொய்யுடன் பீடிகை போடுகிறார் கட்டுரையாளர். அதாவது, 'இட ஒதுக்கீடு வேண்டும் என்று சிறை நிரப்பும் போராட்டம் தேவையா? என்று வாதப்பிரதிவாதங்கள் ஊடங்களையும் கட்டுரை எழுதிய அண்ணன்மார்களையும் குலுக்கி எடுத்துவிட்டதாம். உடனே, பொங்கி எழுந்துவிட்டார்களாம். ஏன் இப்படி பில்டப்? எந்த ஊடங்களை இந்த விவாதம் உலுக்கியது? எத்தனை நபர்களை இந்த விவாதம் குலுக்கி எடுத்தது? விரல் விட்டு எண்ணக்கூடிய சில கிறுக்கர்களை தவிர, மற்ற அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை ஆதரித்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தை கடுமையாக எதிர்க்கக்கூடியவர்கள் கூட தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த போராட்டத்தை ஆதரித்தார்கள். உண்மை இப்படி இருக்கையில், இந்த நிருபர்கள் சற்றும் கூசாமல் பொய்களை அள்ளிவிசுகிறார்கள். இவர்களின் நோக்கம் ஏதாவது எழுதி பக்கத்தை நிரப்ப வேண்டும், கிறுக்குத்தனமாக எதை எழுதினாலும், ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுத சிலர் இருக்கிறார்கள் என்ற புகழ் போதை தான் இவர்களை இப்படி உளற வைக்கிறது. இட ஒதுக்கீட்டிற்காக சிறை நிரப்பும் போராட்டம் தேவையா என்று இவர்கள் கேட்க வரும் கேள்வி என்னவென்றால், சிறைகளை நிறைக்க வேண்டுமா? என்பது தான். இந்த மெத்த படித்த அறிவாளிகளுக்கு பொது அறிவு சற்றும் கிடையாது என்பதற்கு இவர்களின் கேள்வி சான்று. இவ்வளவு இலட்சம் மக்களை எந்த சிறைகளிலும் அடைக்க முடியாது, அடைக்கவுமில்லை.

படிக்க வேண்டியவர்களை சிறையில் ஏன் போய் அடைக்க பார்க்கிறீர்கள் என்பது போலத்தான் இவர்கள் கேட்கிறார்கள். அப்படியே சிறையில் அடைத்தாலும் நல்ல விஷயத்திற்காக சிறைக்கு சென்றால் என்ன தவறு? இவர்கள் பினாமியாக செயல்படும் தமுமுக ரயில் மறியல் போராட்டம் என்றெல்லாம் நடத்தியது, அப்போது கட்டுரை காப்பி வந்து ஏய் ரயிலை மறித்தால் ரயில் நிற்குமா? ஏன் இடஒதுக்கீட்டிற்காக தற்கொலை செய்ய போகிறீர்கள், ரயில் உங்கள் மேலே ஏறும் என்றல்லவா கேட்டு இருக்க வேண்டும். இந்த கேள்வி குறித்தும் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டம் குறித்தும் சலீம் என்ற தறுதலையின் வாதத்தை எடுத்து காட்டியுள்ள கட்டுரையாளரின் உளறல்களை தனி ஆக்கமாக வெளியிடுவோம், இன்ஷா அல்லாஹ்.

அடுத்து, கட்டுரை எழுதிய ஆக்கிய உருவாக்கிய அண்ணன்மார்கள், முஸ்லிம்களுக்கு தழிழகத்தில் இருந்த இட ஒதுக்கீட்டின் வரலாற்றை அப்படியே புட்டு புட்டு வைக்கிறார்கள். அவர்கள் வரலாற்றை எடுத்து வைக்கும் விதம், வரலாற்று ஆசிரியர்களை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது. நம்ம அண்ணன்மார்களுக்கு அந்த அளவுக்கு சுய புத்தி எல்லாம் கிடையாதே, எப்படி இப்படி வரலாற்றை அள்ளி அடுக்குகிறார்கள் என்று சற்று தேடிப்பார்த்தால்தான், அண்ணன்மார்கள் வரலாற்றை எங்கிருந்து ஆட்டை போட்டார்கள் என்று தெரிய வருகிறது. தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை நிரப்பும் போராட்டம் ஆளும் வர்க்கத்தினரை ஒரு கலக்கு கலக்கியது. சிறை நிரப்பும் போராட்டம் குறித்த செய்திகளை அனைத்து மீடியாக்களும் தங்களின் முக்கிய செய்தியாக்கி இருந்தன. புதிய தலைமுறை தொலைகாட்சி, தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தின் நான்கு நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களையும் நேரலையில் ஒளிப்பரப்பினார்கள். கேப்டன் நியுஸ் தொலைக்காட்சி, தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டம் குறித்த அரை மணி நேர ஒரு ஆவணபடத்தையே தயாரித்து வெளியிட்டது.

இதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை குறித்தும், முஸ்லிம்களுக்கு தழிழகத்தில் இருந்த இட ஒதுக்கிடு குறித்தும், அது பறிக்கப்பட்ட வரலாறு, 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்த பிண்ணணி என்று தெளிவான ஒரு நிகழ்ச்சியை வெளியிட்டது. இது கேப்டன் டிவி நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் இட ஒதுக்கீடு குறித்து வந்த தகவல்கள் எல்லாம் சகோதரர் பிஜே அவர்கள் இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் எடுத்துவைத்த தகவல்களின் கோர்வைதான் என்பது அந்த நிகழ்ச்சியை பார்த்த யாவரும் புரிந்து கொள்வார்கள்.

இந்த கேப்டன் டிவி நிகழ்ச்சியில் வந்த இடஒதுக்கீடு குறித்த தகவல்களை ஏதோ இவர்கள் தொகுத்ததை போல பில்டப் கொடுத்து எழுதியுள்ளார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறவில்லை என்றால், கட்டுரை என்ற பெயரில் உளறியுள்ள வரலாற்று ஆசிரியர்களுக்கு (?) இட ஒதுக்கீடு குறித்த வரலாற்று தகவல்களும் கிடைத்து இருக்காது. பெரிய அறிஞர்களைப்போல நடிக்கும் இந்த எழுத்தாளர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதற்கு இவர்கள் கேப்டன் டிவியில் இருந்து அடிச்ச ஈ அடிச்சான் காப்பி இவர்களை காட்டி கொடுத்துவிட்டது, இவர்கள் எப்படிப்பட்ட வரலாற்று ஞானம் உள்ளவர்கள் என்பதை இந்த ஈ நிரூபிக்கிறது.

அதாவது, தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு எப்போது கிடைத்தது என்ற தகவலை கேப்டன் டிவி தவறாக 2008 என்று சொல்லியது (2007 ஆம் ஆண்டில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது). இவர்கள் ஒரு அறிவும் இல்லாதவர்கள்
 என்பதற்கு இந்த ஈ அடிச்சான் காப்பி ஒரு ஆதாரம். (தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளங்களில் இருந்து தகவல்களை திருடி இவர்கள் போடும் கட்டுரைகள் குறித்த தனி ஆக்கம் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ்).
இது தான் அண்ணன்மார்கள் அடித்த ஈ அடிச்சான் காப்பி வரிகள். கீழுள்ள வீடியோவில் ஆரம்பத்தில் வரும் வரலாற்று தகவல்களையும் அண்ணண்மார்களின் மேலே உள்ள எழுத்துகளை பாருங்கள், வார்த்தை கூட மாற்றாமல் காப்பி.... கேப்டன் டிவி கூட இவ்வாறு இஸ்லாமிய இயக்கங்கள் தெரிவிக்கின்றன என்று சொல்லுகிறது. அதையும் அண்ணன்மார்கள் வசதியாக மறைத்துள்ளார்கள். இந்த வரலாற்று தகவல்களை எடுத்து வைத்ததே பிஜே தான் என்பது ஊரறிந்த உண்மை.
அண்ணன்மார்கள் இட ஒதுக்கீடு பற்றிய வரலாற்றை சுட்ட வீடியோ!

இந்த இடஒதுக்கீட்டுக்காக நாம் நடத்திய போராட்டங்களின் விளைவாக நமக்கு இடஒதுக்கீடு கிடைத்தது என்பதை மறைக்க தெரிந்தவர்கள், கிடைத்த இடஒதுக்கீடுக்கு தகுந்தாற்போல வேலை வாய்ப்பு கிடைக்க வில்லை என்பதை உணர்த்த நாம் எடுத்த போராட்டங்களை மறைக்க தெரிந்த இவர்கள், சுலபமாக முஸ்லீம்கள் எடுத்து சொன்னார்கள் என்று ஒற்றை வார்த்தையில் சொல்ல தெரிந்த இவர்கள், தெரிந்தோ தெரியாமலோ ரோஸ்டர் பூஸ்டர் என்ற தொல்லையினால் கைக்கு கிடைத்து வாய்க்கு கிடைக்க வில்லை என்று உளறி விட்டார்.

"ரோஸ்டர்" என்றால் என்ன, "பூஸ்டர்" என்றால் என்ன, அதை வைத்து சப்பைகட்டு கட்ட முயற்சித்து கரியை யார் முகத்தில் பூசிகொண்டது? என்பன போன்ற விளக்கங்களையும் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் நடுநிலையாளர்கள்(?) அவர்களிடம் இதை எதிர்ப்பார்க்கக்கூடாது. இவ்வாறு அங்கும் இங்கும் சுட்டு எழுதப்படும் உளறல் தொடர்கள் முடிவு பெற்றவுடன் அது தனி புத்தகமாக வெளியிடப்படும் (பாவம் அதை படிப்பவர்கள்). காசு பார்க்க தான் இந்த வேலை என்று யாரும் தவறாக எண்ணிவிடாதீர்கள்.

இட ஒதுக்கீட்டிற்க்காக தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய முதல் போராட்டம் சமீபத்தில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் தான் என்பதை போல கிறுக்கியிருக்கிறார்கள். உங்களுக்கு ஏன் இந்த வேலை? தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஆலோசனை கேட்டுவிட்டு தான், கலைஞரே இடஒதுக்கீடு கொடுத்தார் தெரியுமா?

அடுத்து, தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாக ஒரு அபாண்டத்தை போடுகிறார். அதாவது, தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த போராட்டத்தின் மூலம் உள்நோக்கம் உள்ளதாம். தனிப்பட்ட பிரதிபலங்களும் உள்ளதாம். இதற்கு ஆதாரமாக தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட ஒரு தறுதலையின் உளறல்களை ஆதாரமாக காட்டுகிறார் கட்டு கதையை உருவாக்கியவர். ஒருவன் ஒரு இயக்கத்தின் மீதோ அல்லது தனிப்பட்ட நபர் மீதோ குற்றச்சாட்டுகளை வைக்கும் போது, அதை மற்றவர்கள் ஆதாரமாக காட்ட வேண்டும் என்றால், அந்த தகவல் உண்மையா என்று விசாரிக்க வேண்டும்,

ஒரு செய்தியின் பின்னணியை தெரிந்துக் கொள்ள முயற்சிக்காமல், 'இவ்வாறு ஒருவர் சொல்லுகிறார்' என்று கயவாளித்தனமாக எடுத்துக் காட்டக்கூடாது. நிருபர் கும்பல் பிஜேபியிடம் காசு வாங்கிக்கொண்டு தான் முஸ்லிம்களுக்கு கிடைக்க இருக்கும் இட ஒதுக்கீட்டை தடுக்க பார்க்கிறது என்று யாரே சொல்லுகிறார் என்று நாங்களும் எடுத்து காட்டலாமா? பெண் பொருக்கிகளை வைத்து மட்டும் நிகழ்ச்சிகள் நடத்தும் நிருபரின் முக்கியஸ்தரும் அதே மாதிரி ஆளு என்று நாங்கள் பரப்பலாமா?
ஆனால் செய்யமாட்டோம். ஏனெனில்,

'ஒருவர், தான் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: முஸ்லிம் 6

நீங்கள் வரம்பு மீறினால் நாங்களும் வரம்பு மீறுவோம் என்பதை சொல்லி வைக்கிறோம்.

அண்ணன் அவர்கள் காப்பி பேஸ்ட் தொடர் தொடராக போடுகிறார், பின்னர் அதையே புத்தகமாக போட்டு விற்பனை செய்கிறார், எனவே இது எல்லாம் பணம் படுத்தும் பாடு என்று சந்தேகத்தை நாமும் கிளப்ப முடியும். கட்டுரை எழுதியவர்கள், அதை வெளியிட்டவர்கள், அதை பரப்பி பெருமிதம் கொள்ளுபவர்கள் ஆகிய அனைவருக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஒரு சவாலை முன்வைக்கிறது. உங்களுக்கு மானம், சூடு, சுரனை இதில் அத்தனையும் இருந்தாலோ அல்லது இதில் ஏதாவது ஒன்று இருந்தாலோ ஒன்றை செய்யுங்கள். நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முன்வாருங்கள். இது என்ன நாங்களா? சொன்னோம் யாரோ சொல்லுகிறார்கள். நாங்கள் எடுத்து காட்டுகிறோம் என்று அவர்கள் சொல்லுவார்கள் என்றால், அதே முறையை நாங்களும் கையாலுவோம். நாங்கள் பொய்களை சொல்ல மாட்டோம், உண்மைகளை போட்டு உடைப்போம்.
  • நிருபரின் முக்கியஸ்தவர் ஒருவர் பொம்பளையை வலையில் வீழ்த்தும் வேலையில் அடிக்கடி சிக்கும் மார்க்க அறிஞர்(?)களை மட்டும் தர்பியா நடத்துவது என்பதை கொள்கையாக வைத்துள்ளர்கள்.
  • கட்டுரை போட்டு, அதையே புத்தகமாக ஆக்கி காசு பார்க்கிறார்கள்.
  • பெருநாள் சந்திப்பு என்ற பெயரில் இஸ்லாத்தில் இல்லாத கட்டு கதைகளை அள்ளிவீசுகிறார்கள்.

பெண் பொறுக்கிகளை வைத்து உங்களுக்கு தர்பியா நடத்த வேண்டுமா? தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. அதிரை முகவரி கேட்டால் தருகிறோம்.
இப்படி அடுக்கி கொண்டேபோகலாம். இனி நாற்றம் எல்லாம் வெளியே வரும், தயாராக இருங்கள்.

அடுத்து, கட்டுரையாளர் சம்சுதீன் விஷமி பற்றிய பிரச்சினை பற்றி கேள்வி எழுப்பகிறார், இது பற்றி நமது தளத்திலேயே எற்கனவே விரிவான விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சம்சுதீன் விஷமியே தவ்ஹீத் ஜமாஅத் அவன் மீது வைக்கும் அனைத்து குற்றச்காட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க தயார் என்றும், அவன் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சொல்லும் அவதூறுகளை பொய் என்று பகிரங்கப்படுத்தி வெளியிட்ட பதில்களை கண்டு, விஷமியே நான் இவர்களுக்கு இனி பதில் தர மாட்டேன் என்று ஓடிவிட்டான் என்பது தனிச்செய்தி. இது பற்றி அதிகமாக விளக்கம் தர வேண்டியது இல்லை.

அடுத்தாக, தவ்ஹீத் ஜமாஅத் தனியாக தைரியமாக போராட்டம் நடத்தியதை கட்டுரையாளர் பாராட்டுகிறாராம் (தவ்ஹீத் ஜமாஅத் தனியாக போராட்டம் நடத்துவது சரியல்ல என்றும் சொல்லியுள்ளார் கட்டுரையாளர்). தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை பாராட்டும் இவர், போராட்ட செயல்முறையை பாராட்ட மாட்டாராம், காரணம் ஜெயலலிதாவிடம் தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீடு கேட்கிறதாம். ஜெயலலிதா கலைஞர் முஸ்லிம்களுக்கு கொடுத்த 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தாராம். இது எவ்வளவு பெரிய பொய்! இதை நிரூபிக்க முடியுமா?

தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது நீங்கள் கொண்ட குரோதம் ஏன் உங்களை இவ்வாறு புழுக வைக்கிறது?. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் போது, அதை தமிழகத்தில் யாரும் எதிர்க்கவில்லை, எதிர்பதற்கான வழிகளை அடைத்து விட்டு தான் இடஒதுக்கீட்டை வாங்கினோம் என்பது வரலாறு. இப்படி எந்த கப்சாக்களையும் படித்து அருமை அருமை என்று புகழும் அப்பாவிகள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போதுதான் வேதனையாக உள்ளது. இதில் நீங்கள் உண்மையாளராக இருந்தால், கடந்த சட்டமன்ற தேர்தலில் தமுமுக மம கட்சினர், ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவேன் என்ற சொன்ன அடிப்படையில், தமுமுக மம கம்பெனி அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்களே, அப்போது ஏன் நீங்கள் கட்டுரை போடவில்லை. நீங்கள் தமுமுக பினாமி என்பதாலா? அல்லது தமுமுகவின் பினாமி இணையதளம் என்பதாலா? ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார் என்றும் ஒரு தகவலை பதிந்துள்ளார் கட்டுரையாளர். இது உண்மை தான். தவ்ஹீத் ஜமாஅத் ஒரு விஷயத்தில் தெளிவாக உள்ளது, மக்கள் மத்தியில் அதை பிரச்சாரமும் செய்கிறது. அதாவது, கலைஞரோ அல்லது ஜெயலலிதாவோ முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் அல்ல. அவர்கள் முஸ்லிம்களுக்கு என்று எதையும் விரும்பி செய்பவர்கள் இல்லை. ஓட்டு என்ற ஒரு ஆயுதம் நம்மிடம் உள்ளதால்தான் அவர்கள் நமக்கு எதையும் செய்வார்கள்.


ஆனால், கட்டுரையாளர் ஒரு செய்தியை திட்டமிட்டு மறைத்துள்ளார். முஸ்லிம் கட்சியின் முக்கியஸ்தரான அப்துல் லத்தீப் அவர்கள் சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தாருங்கள் என்று கேட்ட போது, கலைஞர் என்ன தெரியுமா சொன்னார்? நாட்டில் கலவரம் உண்டுபண்ண பார்க்கிறீர்களா? என்றார், இப்படி சொன்ன கலைஞர் எப்படி இட ஒதுக்கீடு தந்தார் என்று கேள்வியை எழுப்பி இருக்க வேண்டும். 3.5 சதவீதம் கொடுக்கவே யோசித்த கலைஞர்,  மேலும் ஏற்றி எப்படி 7 சதவீதம் தருவார் என்ற கேள்வி உங்களுக்கு ஏன் வரவில்லை? நீங்களா நியாயமானவர்கள்? நடுநிலையாதிகள்? தவ்ஹீத் ஜமாஅத் ஜெயலலிதாவிடம் மட்டும் இட ஒதுக்கீடு கேட்கவில்லை, ஆட்சி கட்டிலில் யார் உள்ளார்களோ அவர்களிடம் கேட்கிறது. ஜெயலலிதா சொன்ன வாக்குறுதியையும் எடுத்துக்காட்டி கேட்கிறது. கலவரம் உண்டு பண்ண பார்க்கிறீர்றா? என்று வினவிய கலைஞர் அவர்களிடம் எப்படி தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீட்டை வாங்கியதோ, அதே போராட்ட வழிமுறையில் ஆட்சியாளர்களிடம் இட ஒதுக்கீட்டை பெற்று தரும் இன்ஷா அல்லாஹ்.

அடுத்ததாக எல்லா முஸ்லிம் இயக்கங்களும் ஒன்று சேர்ந்தால்தான் இட ஒதுக்கீடு கிடைக்குமாம். அப்படி என்றால் ஒன்றுபடாமல் 3.5 இட ஒதுக்கீடு கிடைத்தது எப்படி? ஒற்றுமையாக இருப்பதாக சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத மற்ற இயக்கங்கள் தேர்தல் நேரத்தில் சிதறிப்போவது ஏன்? முதலில் நீங்கள் ஒற்றுமையாக ஆகுங்கள். பின்னர் எங்களிடம் வந்து ஒற்றுமை பற்றி பேசுங்கள். ஒன்றுபட்டால்தான் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றால், இட ஒதுக்கீடே கிடைக்காது என்று சொல்லிவிடலாம், தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பவர்கள் அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை வராது, எனவே இட ஒதுக்கீடும் கிடைக்காது. இட ஒதுக்கீடு பற்றி புத்தகம் எழுதியவருக்கு மட்டும் நல்ல ஒதுக்கீடு கிடைக்கும்.

கடைசியாக, கட்டுரை எழுதிய அண்ணன்மார்கள், இட ஒதுக்கீட்டினால் மட்டும் எந்த பலனும் இல்லை என்கிறார், அந்த பத்தியை படித்து முடித்தவுடனே இடஒதுக்கீடும் கல்வி மேம்பாடும் பிரிக்க முடியாதது என்கிறார், இட ஒதுக்கீடு அவசியம் என்கிறார். என்ன சொல்ல வருகிறார் என்று அவருக்கே சரியாக புரிந்தது போல் தெரியவில்லை. இவர் ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார், அதாவது, ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளில் ஒரு முஸ்லிம் கூட வரவில்லை, எனவே, இட ஒதுக்கீட்டினால் என்ன பயன் என்கிறார். நமக்கு கல்விலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு உள்ளது. இடஒதுக்கீட்டின் மூலம் எத்தனை சமுதாய மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் கோடி கோடியாய் பணம் தரமால் சீட் வாங்கி இருக்கிறார்கள் என்று ஈ அடிச்சான் காப்பியாளர்களுக்கு எப்படி தெரிய போகிறது. எத்தனை பேர்கள் பயன் அடைந்துள்ளார்கள் என்ற விபரமும் தவ்ஹீத் ஜமாஅத் வசம் உள்ளது. இது பற்றி தவ்ஹீத் ஜமாஅத்துடன் நேரடியாக வந்து விவாதிக்க தயாரா? 

ஒரு விஷயத்தை பற்றி தெரியாமல், கற்பனையில் இப்படி கதை எழுதி ஏன் சமுதாய துரோகம் செய்கிறீர்கள்? தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் பல்லாயிரம் பேர்கள் அன்றாடங்காய்ச்சிகள், ஒரு நாள் வேலைக்கு போகாவிட்டாலும், அன்று பட்டினிதான். அவர்கள் இந்த பேராட்டத்திற்காக கடந்த நான்கு மாதங்களாக இரவு பகலாக எவ்வாறு உழைத்தார்கள் என்று தெரியுமா? அவர்களின் சந்ததிகள் பலன் பெறுகிறதோ இல்லையோ, சமுதாயத்தில் பலர் அந்த பலனை அனுபவிக்கிறார்கள், அனுபவிக்க போகிறார்கள். அந்த அன்றாடங்காய்ச்சிகள் எத்தனை நாட்கள் இரவுகளில் கடும் குளிரில் கஷ்டப்பட்டு இருப்பார்கள். அவர்களின் தியாகத்தை எல்லாம் குப்பையில் வீச நீங்கள் யார்? நீர் புத்தகம் போட வேண்டும் என்பதற்காக ஏன் சமுதாய துரோகம் செய்கிறீர்கள்? இவ்வாறு கடும் குளிர்களில் இரவு பகலாக உழைத்த தவ்ஹீத் ஜமாஅத்தினரில் எத்தனை பேர் முதியவர்கள் தெரியுமா? 

முதியவர்களை ஏன் குளிர் காலத்தில் போராட்டத்திற்கு அழைத்து செல்லுகிறீர்கள் என்று எகத்தாளமாக கேட்கிறீர்கள். எங்களின் அழைப்பிற்கு முதியவர்களும் தயார் என்று வருகிறார்கள். அந்த முதியவருக்கு தெரியும், அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று, அந்த கஷ்டம் அவரின் வாரிசுகளுக்கு வரக்கூடாது என்று எண்ணி தான் அவர் தானாக வருகிறார், இதில் உங்களுக்கு ஏன் வயிறு எரியுது? அந்த முதியவர்களை நாங்களா குண்டு கட்டாக கட்டி, போராட்டத்திற்கு அழைத்து சென்றோம்? எங்களின் அழைப்பின்மீது உள்ள நியாயத்தை உணர்ந்து வந்தவர்களை தான அழைத்து சென்றோம். தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை நிரப்பும் போராட்டத்தில் செருப்பு கூட இல்லாமல் வந்த பெண்மணி உண்டு தெரியுமா? ஊனமானவர்கள் எத்தனை பேர் வந்தார்கள் தெரியுமா? அவர்களிடம் போய் கேளுங்கள் ஏன் குளிர் காலத்தில் போராட்டத்திற்கு செல்கிறாய் என்று, செருப்பு கூட போட வழி இல்லாத அந்த பெண்ணின் போராட்ட உணர்வை கொச்சை படுத்தி சொகுசாக உட்கார்ந்து கட்டுரை எழுத எப்படி முடிகிறது உங்களால், அவர்களின் கஷ்டங்கள் அவர்களுக்கு தான் தெரியும்.
சொகுசாக அமர்ந்து கட்டுரை காப்பி அடிப்பவர்களுக்கு தெரியுமா? இந்த முதியவர்களின் தியாகம்
தனது எதிர்கால சந்ததி செருப்பு அணிந்து நடக்க வேண்டும் என்பதற்காக கொளுத்தும் வெயில் செருப்பு கூட அணியாமல் பேராட்ட களத்தில் ஒரு வயதான பெண்!
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளில் யாரும் தேர்வாக வில்லை என்றால், அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே தவிர, இட ஒதுக்கீடு போராட்டத்தின் வீரியத்தை குறைக்க முயல்வது பெரியதொரு சமுதாய துரோகம். ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் வாய்ப்பு கிடைத்து, யாருக்கும் தகுதி இல்லாத காரணத்தினால் தான் முஸ்லிம்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்று காப்பி பேஸ்ட் அறிஞர்களுக்கு (?) எப்படி தெரிந்தது? ஆதாரம் வைத்து நிருபிக்க முடியுமா? இட ஒதுக்கீடு மட்டும் தீர்வல்ல என்று காப்பி பேஸ்ட் கோமாலிகள், கல்வி முன்னேற்றத்திற்காக என்ன கிழித்தார்கள் என்று பட்டியல் போட முடியுமா?

இட ஒதுக்கீடு அடிப்படையில் 10 இடம் கிடைத்து அதை பிடிக்க சமுதாயத்தில் யாரும் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று ஒரு அற்புதமான கேள்வியை முன்வைக்கிறார். கட்டுரையை நிரப்ப எவன் எதை சொன்னாலும், அதை அப்படியே காப்பி அடிக்கும் இவர்கள், இட ஒதுக்கீடு அடிப்படையில் கிடைத்த இடத்தை முஸ்லிம்கள் பிடிக்க முடியவில்லை என்று நிருபிக்க முடியுமா? எந்த புள்ளி விபரத்தை வைத்து இப்படி ஒரு கருத்தை முன்வைக்கிறீர்கள், சங்பரிவாரத்தின் வேலையை நீங்களே செய்ய காரணம் என்ன? இட ஒதுக்கீட்டின் பலனை கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சமுதாய மக்கள் அனுபவிக்கிறார்கள். வேலை வாய்ப்பில் உள்ள இடஒதுக்கீட்டில் அவ்வபோது சில குளறுபடிகள் நடந்தாலும், கல்வியில் சரியாக கிடைக்கிறது. இட ஒதுக்கீட்டினால் பலன் அடைந்த பலர் தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டத்திற்கு வாரி வழங்கினார்கள் என்பது அண்ணன்மார்களுக்கு வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தும் செய்தி.

பெண்களை போராட்ட களத்திற்கு அழைத்து செல்வதையும் காப்பி பேஸ்ட் கட்டுரையாளர் விமர்சனம் செய்கிறார். பெண்கள் போராட்ட களத்திற்கு போகலாமா என்பது தனி தலைப்பு அது பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது.

பெண்களை முஸ்லிம் இயக்கங்கள் பெரும்பாலனவை போராட்ட களத்திற்கு அழைத்து செல்லுகின்றன, இது தவறு என்றால், மற்ற இயக்கங்கள் பெண்களை அழைத்து செல்லும் போது நீங்கள் ஏன் கட்டுரை போடவில்லை? உங்களின் வேஷம் இப்போது களைகின்றது. என்னடா... இவ்வளவு கூட்டம் கூடிவிட்டார்கள் என்ற வயிற்றெரிச்சல் தான் இப்படி எழுத தோன்றியுள்ளது.

குளிராவது வெயிலாவது, எவன் எங்களின் போராட்ட உணர்வை தடுக்க இயலும்!
இட ஒதுக்கீடு எப்போது கிடைத்தது என்று கூட தெரியாத நீங்கள் ஏன் இவ்வாறு உளற வேண்டும்? இட ஒதுக்கீட்டின் பலன் சமுதாயத்திற்கு கிடைக்க வில்லை என்று பகிரங்கமாக நிரூபிக்க தயாரா? 

மேலும், சிறை செல்லும் பேராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் கடிதம் மூலம் அழைப்பு விடுத்தது, காரைக்கால் கயவனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியதாம். அவனின் வாந்தியில் குளித்த நிருபர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாம். ஏன் இப்படி புழுகுகிறீர்கள்? இதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா? இவ்வாறு ஒரு செயல் நடக்கவுமில்லை, உங்களால் இதை நிரூபிக்கவும் முடியாது.

கட்டுரையில் பாதி காரைக்கால் கயவனின் வாந்தி, பாதி கேப்டன் டிவி வீடியோவில் வந்த செய்தி, தலைப்பும் கடைசி பத்தியும் தான் இவர்களுடையது போல தெரிகிறது. இப்படி காப்பி அடிச்சு கட்டுரை தேவையா?

யாரோ செய்யும் செயலை தங்களின் செயல் போல் காட்டி புகழ் தேடும் இவர்களை எச்சரிக்கிறது கீழ்காணும் குர்ஆன் வசனம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது. 

திருக்குர்ஆன் 3:188 

இறுதியாக, ஒரு விஷயம், அதாவது சமுதாய இயக்கங்கள் கல்விக்காக எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். ஏன் உங்களால் ஒரு கல்லூரி ஆரம்பிக்க முடியவில்லை என்கிறார். தவ்ஹீத் ஜமாஅத்திடம் எந்த அளவுக்கு நிதி சேருகிறதோ அந்த அளவுக்கு கல்வி உதவி செய்கிறது. ஒவ்வோரு வருடமும் கோடிக்கணக்கில் கல்விக்காக சமுதாய மாணவர்களுக்கு உதவி செய்கிறது. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கல்வி உதவி கேட்டு வரும் அனைவருக்கும் உதவி செய்யும் அளவிற்கு முடியவில்லை என்றாலும், தமிழகத்தில் யாரும் செய்யாத அளவிற்கு கோடிக்கணக்கில் கல்வி உதவி செய்கிறது. இன்னும் செய்யும், இன்ஷா அல்லாஹ். தன்னிடம் வரும் நிதிகளை பொருத்து தனது பணிகளை தொடர்ந்து விரிவுப்படுத்தும். 

இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட அனைத்தும் சவால்களே, கட்டுரை ஆசிரியர் உட்பட உளறும் நிருபர்கள் உட்பட யாரும் இந்த ஆக்கத்தில் விவாதிக்க முன்வரலாம்.

நாங்கள் உண்மையாளர்கள் என்றும் கட்டுரையாளர்கள் பொய்யர்கள் காழ்ப்புணர்வின் காரணமாக எழுதிறார்கள் என்றும் நிருபிக்கப்படும், இன்ஷாஅல்லாஹ்.

குறிப்பு: தவ்ஹீத் ஜமாஅத்தை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்பது கிடையாது. எங்களில் யாரும் அப்படி சொல்லியதுமில்லை. தவ்ஹீத் ஜமாஅத்திடம் தவறு இருந்தால் யாரும் சுட்டிக்காட்டலாம், தவறு எங்களிடம் இருந்தால் இது தவறு என்று அறிவித்து எங்களை திருத்தி கொள்வோம், இன்ஷா அல்லாஹ். அதேசமயம் நடுநிலை வேஷம் போட்டுக்கொண்டு, காழ்ப்புணர்வின் காரணமாக பொய்களை எழுதுபவர்களை தக்க முறையில் எதிர்கொள்ள தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்று சொல்லி வைக்கிறோம்.

இட ஒதுக்கீடு சம்பந்தமாக இவர்கள் இனி உளரினாலும் அவற்றை தக்க முறையில் மக்கள் மத்தியில் எடுத்து வைத்து முகத்திரையை கிழிப்போம் என்பதையும் சொல்லிவைக்கிறோம்.

இந்த கட்டுரையில் சில கடினமான சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தது. தவறு செய்பவர்களை அதற்கு தகுந்த வார்த்தைகளை பயன்படுத்துவது தான், அவர்களின் தவறை சரியான முறையில் காட்டும் என்ற அடிப்படையில் அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தோம். எனினும், ஒரு சில சகோதரர்கள், அவர்கள் தவறு செய்தாலும், மென்மையான சொற்களை பயன்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் கடினமான வார்த்தைகளை மாற்றியுள்ளோம், இது தவறு செய்பவர்களுக்கு இது போன்ற கயமைத்தனமான செயல்களில் இருந்து திருத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று திருமண பத்திரிக்கை அடிக்கலாமா?

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று திருமண பத்திரிக்கை அடிக்கலாமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆவுக்கு பரக்கத் உள்ளது என்பது உண்மை தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்து அவர்கள் நமக்காக தனிப்பட்ட முறையில் துஆ செய்தால் அது பற்றி பேசும் போது நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று கூறலாம். ஏனெனில் இதில் உண்மை உள்ளது. இதில் எந்தக் குற்றமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்காக பொதுவாக துஆ செய்திருக்கிறார்கள். அந்த துஆவின் பரக்க்கத் எங்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இப்படி கூறுகிறார்கள் என்றால் அதுவும் தவறாகும்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மக்களுக்காக சில துஆக்களைச் செய்துள்ளார்கள். நாம் அந்த நன்மக்கள் பட்டியலில் இருக்கிறோமா என்பது நமக்குத் தெரியாது.  இவ்வாறு திருமணப்பத்திரிகை அடிக்கக் கூடியவர் அந்தப் பட்டியிலில் இருக்கிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல், இப்படிக் கூறினால், நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டிய குற்றம் சேரும். நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டினால், அதற்கான பரிசு நரகமாகும்.

நல்ல முஸ்லிமாக வாழ்பவர்களின் நிலையே இது தான். ஆனால் நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று திருமணப் பத்திரிகை அடிப்பவர்களில் அதிகமானவர்கள் இஸ்லாத்தை கடைப்பிடிப்பதில்லை. எந்த திருமணத்துக்காக பத்திரிகை அடிக்கிறார்களோ அந்த திருமணத்தையாவது நபிகள் நாயகம் காட்டிய வழியில் நட்த்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை.

அல்லாஹ் மஹர் கொடுக்கச் சொன்னால், இவர்கள் வரதட்சணை வாங்கி திருமணம் நடத்திக் கொண்டு, நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத் என்று போட்டால், இவர்கள் நபிகள் நாயகத்தைக் கேலிப் பொருளாக ஆக்குகிறார்கள் என்று தான் பொருள்.

வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் உடன் பிறப்புக்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். இவர்கள் ஷைத்தானின் தம்பிமார்களாக இருக்கும் வகையில் நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று கூறுவதும் நபிகள் நாயகத்தை மேலும் அவமரியாதை செய்யும் செயலாகும்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் பரக்கத்துக்கு உரியது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்திருக்க, பரக்கத்தின் வாசலை இழுத்து மூடும் வகையில் நடந்து கொண்டு நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று கூறினால், அது நபிகள் நாயகத்தை இவர்கள் கேலிப்பொருளாக ஆக்குகிறார்கள் என்று தான் பொருள்.

திருடச்செல்லும் ஒருவன் பிஸ்மில்லாஹ் கூறி திருடுவது போல், பிஸ்மில்லாஹ் கூறி பன்றி இறைச்சி சாப்பிடுவது போல், அல்லாஹும்ம ஜன்னிப்னா என்ற துஆவை ஓதி விபச்சாரியுடன் செலவ்து போல் இவர்களின் முரண்பாடு அமைந்துள்ளது. திருமணத்தில் நபி வழியை மீறுவதுடன் நபிகள் நாயகத்தைக் கேலி செய்த குற்றத்துக்கும் இவர்கள ஆளாகிறார்கள்.

Friday, February 21, 2014

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 19) - சந்தேகமானதை விட்டு விடுதல்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 19) - சந்தேகமானதை விட்டு விடுதல்


இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.

Thursday, February 20, 2014

விஸ்வரூபம் அடுத்து என்ன? (வீடியோ)

விஸ்வரூபம் அடுத்து என்ன? (வீடியோ)

Wednesday, February 19, 2014

நடுத்தெரு ஆயிஷா மகளீர் அரங்கில் நடைபெற்ற பெண்கள் பயான்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று (19.2.2014) நடுத்தெரு அயிஷா மகளிர் அரங்களில் பெண்களுக்காக வரந்திர பயான் மாலை 5 மணிமுதல் 6 மணிவரை நடைபெற்றது. இதில் சகோதர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் 'சைத்தானின் ஊசலாட்டம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த பயான் நிகழ்ச்சியில் ஆரவத்துடன் பெண்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்

இனி வரும் அடுத்தடுத்த வாரங்களில் 'நபிமார்களின் வரலாறுகள்' என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடைபெறும்.

Tuesday, February 18, 2014

அதிரை கடல்கரைத் தெருவில் நடைபெற்ற நபிவழித் திருமணம்!

தொண்டியை சேர்ந்த முஹம்மது பாருக் அவர்களின் மகன் முஹம்மது செய்யது மணமகனுக்கு அதிரை கடற்கரைதெருவில் நேற்று [17-02-2014] மாலை 5 மணியளவில் நபிவழி திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன் 11 பவுன் தங்க நகையை மஹராக மணமகளின் வீட்டாரிடம் கொடுத்து மணமுடித்தார்.

இதில் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தாயி Y.அன்வர் அலி அவர்கள் 'மஹரின் அவசியம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் கடற்கரைத்தெரு ஜமாஅத்தினர் உட்பட பல கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு காலத்தில் ஆடம்பர திருமணங்கள் மட்டுமே நடைபெற்று வந்த நிலை மாறி, நபிவழித் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது மட்டுமின்றி, சுன்னத் வல் ஜமாஅத்தின் பள்ளி நிர்வாகிகளும் நபிவழித் திருமணங்களுக்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்க ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சிகரமான செய்தி. பிலால் நகர் பள்ளிவாசலின் நிர்வாகத்தினர் தங்களின் பள்ளியிலேயே நபிவழித் திருமணங்களுக்கு அனுமதி தந்து, ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தினர். அதை தொடந்து தற்போது, கடல்கரைத் தெரு ஜமாஅத்தினர் நபிவழித் திருமணத்தில் பங்கேடுத்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். அதிரையில் உள்ள மற்ற ஜமாஅத்தினரும் இந்த செயலை செய்ய முன்வர வேண்டும்.


இனி, நாங்கள் வரதட்சனை மற்றும் அனாச்சாரங்கள் இல்லாத நபிவழித் திருமணங்களை மட்டும் தான் நடத்தி வைப்போம் என்று ஜமாஅத்தினர் முடிவு எடுக்க வேண்டும். வரதட்சனையும் ஆடம்பர திருமணமும் நமது ஊரை விட்டு, விரட்டப்பட்டு நபிவழித் திருமணம் மட்டுமே நடந்தால், திருமணம் செய்து சிறிது காலத்திலேயே வெளிநாடுகளுக்கு சென்று, தங்களின் சகோரிகளின் திருமணத்திற்கு செல்வம் திரட்ட செல்லும் நமது சகோதர்களின் கண்ணீர் கதை முடிவுக்கு வரும், இன்ஷா அல்லாஹ்.





Monday, February 17, 2014

TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்


TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம். 

அபுதாபி அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் 07.02.2014 வெள்ளிக் கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 7.15 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது. அதிரை அபுதாபி TNTJ கிளையின் கடந்த மஷூராவில் (ஆலோசனைக் கூட்டத்தின்) செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம்செய்தும், அதனையடுத்து புதிய முக்கிய தீர்மானங்களும் பேசப்பட்டன. கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல பல ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

ஜசாக்கல்லாஹ்..

Saturday, February 15, 2014

நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் பயான்!

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19.2.14 முதல் நமதூர் நடுத்தெருவில் உள்ள ஆய்ஷா மகளிர் அரங்கில்  வாரம் வாரம் புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு பெண்களுக்கான வாராந்திர பயான் நடைபெறவுள்ளது இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள். அனைவரும்  கலந்துக் கொள்ளவும்.

Thursday, February 13, 2014

நடுநிலையா? நயவஞ்சகமா? (வீடியோ)

நடுநிலையா? நயவஞ்சகமா? (வீடியோ)

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?

கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.


எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்.

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.

உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6243

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.

நூல்: நஸயீ 3183

மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல்  பாதுகாக்க வேண்டும்.

ஆனால்  மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை  பார்க்கின்றனர்.

விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க  யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி 8-5-2010).

என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசி ஊற்றினான் போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். 

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு  ஏற்படுமா?

வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை”  அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு  தெரியும்.

இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடசமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக்  கொண்டிருப்பதினால்  தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.

ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

பிப்ரவரி 14  ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).

அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல்  கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.

Tuesday, February 11, 2014

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 18) - ஹராமில் இருந்து விலகும் வழிமுறை

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 18) - ஹராமில் இருந்து விலகும் வழிமுறை


இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.

Friday, February 07, 2014

சம்சுதீன் விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்! (வீடியோ)

சம்சுதீன் விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்! (வீடியோ)


தமிழன் டிவி உரிமையாளருக்கு தவ்ஹீத் ஜமாஅத் கொலை மிரட்டல் விடுத்ததா? 

சம்சுதீன் காசிமியை கொல்ல பீஜே சதி திட்டம் தீட்டியுள்ளாரா?

பீஜேவையும் சமுதாய பெண்களையும் படுகேவலமான முறையில் விஷமி திட்டியதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள்...

போராட்டத்திற்கு போக வேண்டாம் என்று கெஞ்சிய சம்சுதீன் விஷமிக்கு, நமது போராட்டத்தில் கலந்து கொண்டு மரண அடி கொடுத்து பேட்டி கொடுத்துள்ளான் அவரது பேரன். (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) 

சம்சுதீன் விஷமி என்பவர் ஓரினச்சேர்க்கை செய்ததை அம்பலப்படுத்தும் ஆதாரங்கள் மற்றும் அதற்கான பகிரங்க அறைகூவல்.

சென்னை மக்கா பள்ளி நிர்வாகத்திலும், நிதியிலும் புகுந்து விளையாடும் விஷமியின் உண்மை முகம் அம்பலம்!

உள்ளிட்ட அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்... கூடுதல் விளக்கங்களுடன் விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்! 

12 மைல்களுக்குமேல் பெண்கள் தனித்து பயணிக்க கூடாது என பிஜே சொன்னார் என்று ஒரு வீடியோவை பரப்பி வருகின்றனர். இது சரியா? 

பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் ஆண் துணையில்லாமல் தனித்து பிரயாணிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?

பீஜேவை நாம் தக்லீது செய்கின்றோம் என்று சொல்வோருக்கு மரண அடி பதில்கள்...

மஹரமான ஆண்இல்லாமல் பெண்களை விஷமி அழைத்துச் சென்றது அம்பலம்! : 
- வெளிவரும் உண்மைகள்! அதிர்ச்சித் தகவல்கள்!

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் போராட்டங்களுக்கு பெண்கள் வருவது குறித்து அவதூறு சொன்ன விஷமி, தான் நடத்தக்கூடிய ஹஜ் உம்ரா சர்வீஸில் உம்ராவிற்கு விண்ணப்பித்த பெண்களை மஹரமான ஆண் துணையில்லாமல் தனியாக அழைத்து சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது. 

யாராவது ஒரு மஹரமான ஆள் இருந்தால்தான் சவூதி அரசாங்கம் உம்ரா செய்ய அனுமதிப்பார்கள்; தனது உம்ரா சர்வீஸில் வந்த பெண்களுக்கு அந்நிய ஆண்களை கள்ள மஹரமாக போட்டு இந்த விஷமி தனது கேவலத்தனத்தை அரங்கேற்றியுள்ளார்.

போராட்டத்திற்கு பெண்கள் வந்தால் மட்டும் கசக்கும்; இவரது உம்ரா சர்விஸில் இவரோடு பெண்கள் தனித்து பயணம் செய்தால் மட்டும் இவருக்கு இனிக்குமோ?

ஹஜ் செய்ய வைப்பதாக பணத்தை வாங்கிக்கொண்டு ஹஜ் பயணிகளை மண்ணடியில் ஹஜ் செய்யச் சொன்ன விஷமியின் கேடுகெட்ட செயலை யாரும் மறந்திருக்க முடியாது.

சமுதாய பெண்களை மிக கேவலமாக பேசும் இந்த விஷமி, பெண்கள் மாணிக்கம் போன்றவர்கள் என்று சொல்லும் இந்த அயோக்கியன் இவரது உம்ரா சர்வீஸில் பெண்களை மஹரமில்லாமல் அழைத்துச் சென்று அட்டூழியம் செய்யும் போது மட்டும் முத்து, பவளம், மாணிக்கம் எல்லாம் மறந்துவிடுமோ?

இரட்டை நாக்கு விஷமியே! முஃமின்களின் மானம் கஃபத்துல்லாவை விட புனிதமானது என்பது இப்போதுதான் உனக்கு தெரிந்ததா? 

பீஜே பற்றி அவதூறு சொல்லும் போதும், முஸ்லிம் சகோதரிகளை சேரிப்பெண்கள் என்றும் ஒழுக்கங்கெட்டவர்கள் என்றும் விமர்சிக்கும் போது எங்களது மானம் புனிதமானதாக தெரியவில்லையா? 

இப்போது முஸ்லிம்களின் குறையை மறைக்க வேண்டும் என்று உனது குறையை மறைக்கச் சொல்லி மண்டியிடும் மரமண்டையே! உன்னைப்போல சமுதாய துரோகிகளை, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏஜெண்டுகளை இந்த சமுதாய மக்களுக்கு அம்பலப்படுத்தியே ஆக வேண்டும். இல்லையேல் இந்த சமுதாயம் கெட்டு சீரழிந்துவிடும் என்பதால் சமுதாய நலன் கருதி, உன்னிடம் பாடம் படிக்க வரும் மாணவர்கள், உனது பள்ளியில் தொழ வரும் சகோதரர்களது மானம் காக்கப்பட வேண்டும்; நீ அவர்களது கையை பிடித்து இழுத்துவிடக்கூடாது என்பதால்தான் உனது ஒரினச்சேர்க்கை விஷயத்தை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.

நீ செய்த மோசடிகளும், நீ செய்த காம்ச்சேட்டைகளும் வண்டி வண்டியாக வந்து கொண்டிருக்கின்றன. 

ஏற்கனவே இருக்கின்ற ஆதாரங்களுடன் இந்த ஆதாரங்களும் இணைந்து குவிகின்றன. உனது வீச்சம் தாங்கவில்லை.

அனைத்திற்கும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு திருந்தி விடு. ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தை உரியவர்களிடம் கொடுத்துவிடு. இல்லையேல் இம்மை மறுமை ஈருலகிலும் உனக்கு கேடுதான் என விஷமியை எச்சரிக்கும்

பாகம்-1

பாகம்-2

பாகம்-3

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 17) - பொருளீட்ட இஸ்லாம் காட்டும் வழி


இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 17) - பொருளீட்ட இஸ்லாம் காட்டும் வழி



இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.

Tuesday, February 04, 2014

அத்தஹிய்யாத் ஓத ஆதாரம் உண்டா?


அத்தஹிய்யாத் ஓத ஆதாரம் உண்டா?

தொழுகையில் அத்தியாத்தில் இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாது ஓதினார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது பதில் தெரிவிக்கவும்.

பதில்:

தொழுகையில் இருப்பின் போது அத்தஹிய்யாத்து ஓத வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 

"அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு' என தொழுகையில் அமரும் போது நபி (ஸல்) அவர்கள் கூறச் சொன்னார்கள். 

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),

பொருள்:
சொல், செயல் பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், சுபிட்சமும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரிவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

நூல்கள்: புகாரீ (1202), 
முஸ்லிம் (609)

"நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி... கூறுங்கள். (பின்னர்) தமக்கு விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: நஸயீ 1151

Monday, February 03, 2014

தமுமுக இட ஒதுக்கீடு வாங்கி தந்தாகலாமே! - அதிரை கழக கண்மணிகளுக்கு அறைகூவல்!

தமுமுக இட ஒதுக்கீடு வாங்கி தந்தாகலாமே! - அதிரை கழக கண்மணிகளுக்கு அறைகூவல்!

தமுமுக தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தது என்று தடுமாறும் தமுமுகவின் கழக கண்மனிகள் சிலர் ஒரு இணையதளத்தில் உளறுவதாக அறிகிறோம்.

அந்த தமுமுக கண்மனிகளை நமது இணையதளத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தை பற்றி பேசவும், தமுமுகவின் துரோகங்களை பற்றி பேசவும் இங்கே அழைக்கிறோம்.

நமது இணையதளத்தில் கருத்துகளின் மூலம் உங்களின் வாதங்களை எடுத்து வைக்க தயாரா? கண்மனிகளே!

தமுமுக இடஒதுக்கீடு விஷயத்தில் எவ்வளவு துரோகம் செய்துள்ளது என்பதை அறிய கீழ்காணும் வீடியோவை பாருங்கள்.



என்னை யாராலும் ஜால்ராவில் வெல்ல முடியாது! அடுத்த பிரதமர் அம்மா தான்!! சமுதாய மானம் காக்கும் தமுமுக MLA(?) ஜவாஹிருல்லாஹ்








ஸஹாபாக்களை பீஜே விமர்சித்தாரா?

ஸஹாபாக்களை பீஜே விமர்சித்தாரா?


பரேலவிசத்தின் பயங்கரவாதம் இறைத்தூதர் இறக்கவில்லையாம்!

பரேலவிசத்தின் பயங்கரவாதம் இறைத்தூதர் இறக்கவில்லையாம்

அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் ஒரு பரேலவியாவார். மக்கள் பரேலவிசத்திலிருந்து படிப்படியாக விலகி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சரியான பாதைக்கு, சத்திய வழிக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை சமாதி வழிபாட்டிலும் அசத்திய வழிகேட்டிலும் கொண்டு போய் தள்ளி விடுவதற்கு சகலவிதமான தகிடுதத்தங்களை, தப்பர்த்தங்களைச் செய்து கொண்டிருப்பவர் தான் இந்த அப்துல்லாஹ் ஜமாலி.

அவர் அண்மையில் பரேலவிச பரிவாரத்தின் பல கடவுள் கொள்கை கொண்ட ஒரு பத்திரிகையில், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை; உயிருடன் தான் உள்ளார்கள் என்ற ஒரு பயங்கர வாதத்தை வைத்துள்ளார். இது குர்ஆனுக்கு எதிரான யுத்தப் பிரகடனமாகும். அப்பட்டமான இறை நிராகரிப்பு வாக்குமூலமாகும்.

அவரது இந்தக் கூற்றை நம்பி, அவரது பாட்டையில் செல்பவர் நிரந்தர நரகப் படுகுழியில் வீழ்ந்து விடுவார் என்பதால் இந்த நரகத்தின் ஏஜெண்டிடமிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவரது இந்த அபத்தங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுகிறோம். அப்துல்லாஹ் ஜமாலியின் அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் திருத்தூதரான நபி அவர்கள் முஃமின்களுக்கு அவர்களின் உயிர்களை விடவும் மேலானவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:6)

இவ்வசனத்தின் மூலம் பயனுள்ள பல பாடங்களை அல்லாஹ் நமக்குச் சொல்லித் தருகிறான்.

தன்னை ஒரு முஃமின் என்று பறைசாற்றிக் கொள்ளும் ஒவ்வொருவரும் தன்னுடைய உயிரைவிடவும் உயர்ந்தவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும். அவ்வாறு மதிக்காதவன் உண்மையான முஃமின் அல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மைப் போன்றவர்களல்ல. நமது உயிரை விடவும் உயர்ந்தவர்கள்.
ஆனால் நம்மிலே புறப்பட்டிருக்கின்ற ஒரு கூட்டம் நன்றாய் கதை அளந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் உள்ளங்களில் விஷ விதைகளைத் தூவப் பார்க்கின்றது. அவற்றில் ஒன்று:

நபிகள் நாயகம் (ஸல்) நம்மைப் போன்றவர்களே!

இதைக் கூறுகின்ற போது அவர்களின் தொனியில் அலட்சியம் தென்படுகின்றது. இதைக் கேட்கின்ற உண்மையான முஃமின் உள்ளம் புண்படுகின்றது.

இந்த அபத்தமான கூற்றுக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பதில் கொடுத்துவிட்டார்கள்.

உங்களில் யாரும் என்னைப் போன்றில்லை.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரீ, முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியது யாரைப் பார்த்து? ஸஹாபாப பெருமக்களைப் பார்த்து. ஸஹாபா பெருமக்கள் யார்?

நபிமார்களுக்கு அடுத்த மனித சமுதாயத்தில் மிகச் சிறந்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள்.

இவர்களைப் பற்றி இறைவன் கூறுவதாவது:

இறைவன் இவர்களைப் பொருந்திக் கொண்டான். இவர்களும் இறைவனைப் பொருந்தினார்கள்.

(அல்குர்ஆன் 98:8)

இத்தனை சிறப்பும், உயர்வும் பெற்றுள்ள ஸஹாபா பெருமக்களே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போன்றில்லை என்கிறபோது, தற்போது புறப்பட்டிருக்கிற இக்கூட்டம் எம்மாத்திரம்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் நமக்குமிடையே இருக்கின்ற வேறுபாடுகள் ஏராளம். அதற்குண்டான ஆதாரங்கள் தாராளம்.

நமது விளக்கம்:

அல்லாஹ்வின் தூதரை மதிப்பது என்றால் அவர்களுடைய கட்டளையை முழுமையாகப் பின்பற்றுவது தான் என்று திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது.

"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:31

ஆனால் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கின்றோம் என்று சொல்கின்ற இந்த பரேலவிச (ஆ)சாமிகள் நபி (ஸல்) அவர்களது கட்டளைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் மாற்றுமதக் கலாச்சாரம் கூடாது என்று கூறினால் இவர்கள் கோயில் திருவிழாக்களைப் பின்பற்றி சந்தனக்கூடு, யானை வழிபாடு என அத்தனையும் செய்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் ஆட்காட்டி விரலை அசைத்தார்கள் என்ற ஹதீஸை நாம் செயல்படுத்தினால் அதை இவர்கள் பின்பற்றாவிட்டாலும் பரவாயில்லை, அதைச் செயல்படுத்துபவர்களை நரம்புத் தளர்ச்சி என்று கேலியும் கிண்டலும் செய்கின்றார்கள். இவர்கள் தான் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிச்கிறார்களாம்.

அதே சமயம் இவர்கள் விரலை வெட்டி விடுவோம் என்று சொன்னாலும், உயிரை எடுத்து விடுவோம் என்று சொன்னாலும் அதற்கு அஞ்சாமல் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அந்த நபிவழியை செயல்படுத்துகின்றனர். யார் நபியை உயிரினும் மேலாக மதிக்கின்றார்கள்; யார் அவமதிக்கின்றார்கள் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மாநாபி (ஸல்) அவர்கள் மனிதரே!

நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் என்று நாம், நமது சுய விருப்பப்படி கூறுவது போல் ஒரு போலித் தோற்றத்தை இந்த பரேலவி பயங்கரவாதி ஏற்படுத்துகின்றார்.

உண்மையில் இது எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்ற கூற்றாகும்.

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

இதைத் தான் நாம் கூறுகின்றோம். நமக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் உள்ள வேறுபாடு வஹீ என்ற இறைச்செய்தியாகும். அந்த உயர்ந்த தகுதியை இந்த உலகத்தில் அவர்களுக்குப் பின் வேறு யாரும் பெற முடியாது என்று அடித்துச் சொல்கிறோம். இப்படிக் குர்ஆன் கூறுகின்ற வேறுபாட்டுடன் புரிந்திருக்கின்ற நம்மைத் தான் சுய விருப்பத்தின் அடிப்படையில் கூறுவதாக விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர். இதிலிருந்து இவர்களது விஷமத்தனத்தை, விஷச் சிந்தனையைப் புரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் இல்லை என்பதற்கு புகாரியிலிருந்து ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வந்துள்ளார்கள். அந்த ஆதாரத்திலும் அவர்கள் ஒரு பயங்கர மோசடியைச் செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியைச் சொல்லிவிட்டு, மற்றொரு பகுதியை இருட்டடிப்பு செய்துள்ளனர்.

இது தொடர்பாக புகாரியில் இடம்பெறும் ஹதீஸைப் பார்ப்போம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்!'' என்று (மக்களிடம்) கூறியபோது, "நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?' என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்'' என்றோ "உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்'' என்றோ கூறினார்கள்.

நூல்: புகாரி 1961

இந்த ஹதீஸ் புகாரியில் 1922, 1962, 1963, 1964, 1965, 1966, 1967, 6851, 7241, 7242, 7299 ஆகிய எண்களிலும் முஸ்லிமில் பல இடங்களிலும் பதிவாகியுள்ளது.

இவை அனைத்திலும், எனக்கு என்னுடைய இறைவன் உணவளிக்கிறான்; குடிப்பதற்குத் தண்ணீரும் கொடுக்கின்றான் (அதாவது, நான் பட்டினி கிடக்கவில்லை) என்பதையும் சேர்த்தே சொல்கின்றார்கள். இதை வசதியாக, தங்களுக்குச் சாதகமாக மறைத்துவிட்டு ஹதீஸ் முதல் பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளனர். ஹதீஸில் உள்ளதை மறைப்பது மோசடியாகும்.

இத்தகைய மோசடி செய்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், மலக்குகள், நபிமார்களுடைய சாபமும் இறங்குகின்றது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.

அல்குர்ஆன் 2:159

இதிலிருந்து இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இப்போது நபி (ஸல்) அவர்கள் மனிதர் தான் என்பதற்கான குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் பார்ப்போம்.

வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், இவர்களாகவே நபி (ஸல்) அவர்கள் மனிதர் அல்ல என்று முடிவெடுத்துவிட்டு அதற்குத் தக்க குர்ஆன், ஹதீஸை வளைக்க முயற்சிக்கின்றனர். அதற்குத் தான் ஹதீஸின் ஒரு பகுதியை விட்டு விட்டு, மற்றொரு பகுதியை மட்டும் ஆதாரமாக எடுக்கின்றனர். ஆனால் அல்லாஹ் தெளிவாக, முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்று ஆணித்தரமாகச் சொல்கின்றான்.
மர்யமுடைய குமாரர் ஈஸா (அலை) அவர்களை கிறித்தவர்கள் கடவுளாக ஆக்கிவிட்டனர். இதை அல்லாஹ் கண்டிக்கிறான்.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

அல்குர்ஆன் 5:75

ஈஸா நபி அவர்களும், அவர்களது தாயாரும் மனிதர்கள் தான். அவர்களுக்குப் பசி, தாகம் இருந்தது. அதனால் உணவு சாப்பிட்டார்கள். சாப்பிட்ட அவர்கள் மல, ஜலம் கழித்தார்கள். அவ்விருவரும் கடவுளாக முடியாது என்பதற்கு இவ்விரு குறைபாடுகளையும் ஆதாரமாகக் காட்டுகின்றான். உணவு உட்கொள்ளுதல் என்பது நேர்முக ஆதாரம். சாப்பிட்டு விட்டு மலஜலம் கழித்தாக வேண்டும் என்ற மறைமுக ஆதாரத்தையும் மக்களுக்குப் புரியும் படி தெளிவாக இறைவன் குறிப்பிடுகின்றான்.

இதே விஷயத்தைத் தான் நபி (ஸல்) அவர்களுக்கும் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

"இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?'' என்று கேட்கின்றனர்.

அல்குர்ஆன் 25:7

நபி (ஸல்) அவர்களும் உணவு சாப்பிடுபவர் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இங்கு நபி (ஸல்) அவர்கள் உணவு சாப்பிடுபவர்கள் என்று நேரடியாகவும், மலஜலம் கழிப்பவர்கள் என்று மறைமுகமாகவும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

சாப்பிடுபவர் கடவுளாக இருக்க முடியாது என்ற ஆதாரம் இதில் பெறப்படுவதுடன் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்ற கருத்தையும் இவ்வசனம் தெளிவாக விளக்குகின்றது.

நபிவழிச் சான்றுகள்:

அல்குர்ஆனில் இதுபோன்று ஏராளமான சான்றுகள் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்றைக் கூறியுள்ளோம். இனி, ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்பதற்குரிய சான்றுகளைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் தம்மை மனிதர் என்று பல்வேறு இடங்களில் பதிவு செய்கின்றார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (லுஹ்ரையோ அஸ்ரையோ வழக்கத்திற்கு மாறாகத்) தொழுதார்கள்.

(இதன் அறிவிப்பாளர்கüல் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் (அத்தொழுகை யின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா அல்லது குறைத்துவிட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

(தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்தபோது அவர்கüடம், "இந்தத் தொழுகையின்போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?)'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்)'' என்றனர்.

உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பியபோது, "ஓர் விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் மாற்றங்க(ளை அறிவிக்கும் இறை அறிவிப்பு)கள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்துவிடுவேன். ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; (சில நேரங்கüல்) நீங்கள் மறந்துவிடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும்போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்; என்று கூறிவிட்டு, "உங்கüல் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்ததாகவோ குறைத்துவிட்டதாகவோ) சந்தேகிக்கும் போது சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து சலாம் கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சஜ்தாக்கள் செய்யட்டும்'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 401

நபி (ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்பட்டதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.  தொழுகையின் ரக்அத்துகள் நபி (ஸல்) அவர்களுக்கு மறந்து போனதை இது தெளிவுபடுத்துகின்றது. "உங்களைப் போன்ற மனிதன் தான்; உங்களைப் போலவே நானும் மறக்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது.

ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் (எங்கüடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:

யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் (பள்üவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில் லைலத்துல் கத்ர் இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கடிக்கப்பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்கüல் ஒற்றைப்படையான நாüல் உள்ளது.

நூல்: புகாரி 813

இந்த ஹதீஸ் லைலத்துல் கத்ரு மறந்து போனதை விளக்குகின்றது.

இதுபோன்று புகாரி 482, 2358, 6967, 7169, 7181, 7185 ஆகிய ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி தெரிவிக்கின்றன.

"அல்லாஹ்வே! முஹம்மது மனிதர் தான். மனிதர்கள் கோபப்படுவது போன்றே அவர் கோபப்படுகின்றார். நான் உன்னிடத்தில் ஓர் வாக்குறுதி பெற்றிருக்கிறேன். எனக்கு நீ அதில் மாற்றம் செய்ய மாட்டாய். யாரையாவது ஓர் இறைநம்பிக்கையாளரை நான் நோவினை செய்திருந்தால் அல்லது அவரைத் திட்டியிருந்தால் அல்லது அவரை அடித்திருந்தால் அதை அவருக்கு இறுதிநாளில் (அவரது பாவத்திற்கு) பரிகாரமாகவும், அதைக் கொண்டு அவரை உன்னிடம் நெருங்க வைக்கும் வணக்கமாகவும் ஆக்குவாயாக!'' என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4708

இந்த ஹதீஸ்கள் தெள்ளத் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் தான் என்று தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலும் ஆதாரங்களை இதே இதழில், "இணை கற்பித்தல்' என்ற தொடரில் "மாநபியும் மனிதரே!' என்ற தலைப்பில் காண்க!

நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம், நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் வஹீ எனும் இறைச் செய்தியாகும் என்பதை மேலே நாம் கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் இன்னும் ஏராளமான ஆதாரங்களும் உணர்த்துகின்றன.

ஆனால் இந்த பரேலவிச பயங்கரவாதிகள் நபி (ஸல்) அவர்களை மனிதத் தன்மையிலிருந்து உயர்த்தி, இறைத்தன்மைக்குக் கொண்டு செல்கின்றனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"நபி (ஸல்) அவர்கள், "கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) "அல்லாஹ்வின் அடியார்' என்றும் "அல்லாஹ்வின் தூதர்' என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்'' என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

நூல்: புகாரி 3445

இந்த பயங்கரவாதிகளுக்கு நபி (ஸல்) அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கை எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. இந்த லட்சணத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக மதிக்கிறோம், நேசிக்கிறோம் என்ற வெற்றுப் பேச்சு வேறு! இவர்களின் இந்த லட்சணத்தையும் இவர்கள் முன்வைக்கின்ற ஆதாரங்களின் லட்சணங்களையும் இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் பார்ப்போம்.

நன்றி :  http://onlinepj.com/egathuvam/2014/ega-2014-feb/

மகன் என்றால் மகிழ்ச்சி மகள் என்றால் இகழ்ச்சியா?

மகன் என்றால் மகிழ்ச்சி மகள் என்றால் இகழ்ச்சியா?



தமிழகத்தில் "தொட்டில் குழந்தை' என்ற திட்டத்தை முதன் முதலில் 1992ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகளைத் தொட்டிலிலாவது வீசட்டும் என்ற நோக்கில் இது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது.
கன்றைப் பிரிந்த பசு, குட்டியைப் பிரிந்த ஆடு, குஞ்சைப் பிரிந்த கோழி போன்ற உயிரினங்கள் கூட கத்தி, கதறி அழுகின்றன. அப்படிப்பட்ட ஒரு பாசப் பிணைப்பு! நேச இணைப்பு!  அந்த உயிரினங்கள் தங்கள் குட்டிகளை அம்போவென்று விட்டு விட்டுப் போய்விடுவதில்லை. தனது சந்ததிகள் சொந்தக் காலில் நிற்கின்ற வரை, தங்கள் உணவை தாங்களே தேடிக் கொள்கின்ற வரை அவற்றைப் பாலூட்டி, உணவு கொடுத்துப் பராமரிக்கின்றன.
ஆனால் பாழும் மனித இனம் தான், இந்த லட்சணத்தில் இது பகுத்தறிவு இனமாம்; இந்த இனம் தான் பெற்ற குழந்தைகளைப் பாழும் கிணற்றிலும் பாதாளச் சாக்கடைகளிலும் வீசி எறிகின்றது.
இதில் இன்னொரு வேதனை என்னவென்றால், இந்த ஐந்தறிவு மிருகங்களில் வளர்ப்புப் பிராணிகளாகட்டும், அல்லது காட்டு விலங்குகளாகட்டும். தங்களுக்குப் பிறந்த குட்டிகளை, தாங்கள் பொறித்த குஞ்சுகளை ஆண், பெண் என்ற பேதம் பார்ப்பதில்லை. வஞ்சனையில்லாமல் பாசப் பிணைப்போடும் நேச உணர்வோடும் வளர்க்கின்றன. ஆணா? பெண்ணா? என்று பார்க்காமல் தன்னுடைய பிள்ளை என்பதை மட்டுமே பார்க்கின்றன. ஆனால் மனித மிருகமோ தரம் பிரித்துப் பேதம் பார்க்கின்றது. இந்த அட்டவணையைப் பாருங்கள்:
தொட்டில் குழந்தை திட்டத்தில் பெறப்பட்ட குழந்தைகள்
ஆண்டு              ஆண்          பெண்          மொத்தம்
2009                            5                     80                   85
2010                            4                     60                   64
2011                            5                     42                   47
2012                            4                     27                   31
2013                            2                     27                   29
மொத்தம்            20                  236                 256
ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் உள்ள வேறுபாட்டையும் வித்தியாசத்தையும் பாருங்கள். இந்தத் திட்டத்தின்படி அரசுத் தொட்டிலில் அனாதையாக விடப்படும் குழந்தைகளில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண் குழந்தைகள். அதாவது, ஒருசில ஆண் குழந்தைகளைத் தவிர மீதி அனைவருமே பெண் குழந்தைகள் தான். இந்த வேதனை சொல்லி மாளாது.
அண்மையில் தர்மபுரியில் ஒரு தாய், இல்லை... நாயை விடவும் கீழான, பெண்ணுருவில் அமைந்த பேய், தனது 9 மாதப் பெண்குழந்தையைக் கொன்று விட்டாள்.
இதனைத் தொடர்ந்து மகளிர் கிராம சபை தனது கூட்டத்தைக் கூட்டி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தொட்டில் குழந்தை திட்டத்தில் கொண்டு வரப்படும் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது. தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அதற்கான உத்தரவை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும். பிறப்பித்துள்ளார். இந்தச் செய்தி கடந்த ஜனவரி 13 அன்று தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளியானது.
 தர்மபுரியில் உள்ள 251 பஞ்சாயத்துகளிலும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், திருமண உதவித் திட்டம் போன்ற திட்டங்களைத் தெளிவுபடுத்தி விளக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் இருப்பதாகவும், அதில் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களை எடுத்துக் கொண்டால் 1000க்கு 913 என்ற விகிதத்தில் பெண் குழந்தைகள் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இது மிகவும் கவனிக்கத்தக்க விஷயம்.
பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் அழிக்கப்படுகின்ற அக்கிரமத்தையும் அநியாயத்தையும் தான் இந்தப் புள்ளிவிபரம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
பெண் குழந்தைகள் ஏன் இப்படி தொட்டி-லும் தொட்டியிலும் வீசியெறியப்படுகின்றார்கள்? அல்லது ஒரேயடியாக ஏன் தொலைத்து ஒழிக்கப்படுகின்றார்கள்?
பெண் என்றால் செலவு, அதனால் அது ஓர் இழவு என்று கருதப்படுகின்றது. வரதட்சணை தான் இதற்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது. இதை உணர்ந்து தான் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமண உதவித் திட்டத்தைப் பிரச்சாரம் செய்யச் சொல்கின்றார்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:
என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது...
அல்குர்ஆன் 81:8, 9
மறுமை நாளில் நடக்கும் விசாரணையின் போது, அது கொல்லப்பட்டதற்கான காரணத்தைக் கேட்கும் போது, அந்தக் குழந்தை உண்மையைப் போட்டு உடைக்கும். அப்போது வரதட்சணை வாங்குவோர், கொடுத்தோர் மட்டுமல்ல! அதற்குக் கூட்டாக இருந்தவர்கள், அந்தத் திருமணத்தில் போய் கலந்து கொண்டவர்கள் அத்தனை பேருமே இறைவனிடம் மாட்டிக் கொள்வார்கள்.
அதனால் தான் தவ்ஹீத் ஜமாஅத் அதுபோன்ற தீமைகளைப் புறக்கணிக்கச் சொல்கின்றது. இவ்வாறு புறக்கணிப்பதால் மறுமையில் அல்லாஹ்விடம் மாட்டாமல் தப்பித்து விடுவர். இது மறுமையில் கிடைக்கும் நன்மையாகும்.
இதுபோன்ற புறக்கணிப்புகளால் பெண்ணினம் அழிவதை விட்டும் காக்கப்படும். இது உலகம் சீராக இயங்குவதற்கு உதவும். இல்லையேல் அல்லாஹ் படைத்த இயற்கை சமன்பாடு முற்றிலும் அழிந்து விடும். ஆணினம் பெருகி பெண்ணினம் அழிந்து விடும். உலகம் செயல்படாமல் ஸ்தம்பித்துவிடும்.
பெண்ணைக் காக்கின்ற அந்தப் புரட்சிப் பணியை தவ்ஹீத் ஜமாஅத் கடைப்பிடிக்கின்ற தூய இஸ்லாத்தின் மூலம் மட்டும் தான் செய்ய முடியும்.
இஸ்லாம் வருவதற்கு முன்னால் அரபக நிலை அப்படித் தான் இருந்தது.
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தென அவன் கருதும்) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் 16:58, 59
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வந்து அந்த நிலையைத் தலைகீழாக மாற்றினார்கள். உலக நாடுகள் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்காமல் இதற்கு எந்தவொரு தீர்வையும் ஒருபோதும் காணவே முடியாது.



நன்றி :   http://onlinepj.com/egathuvam/2014/ega-2014-feb/

விரலசைக்காமல் தொழுதால் தொழுகை கூடுமா ?

விரலசைக்காமல் தொழுதால் தொழுகை கூடுமா ?



ஸீனத்
பதில்

தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் விரலசைக்காமல் தொழுபவர்கள் இரண்டு வகையினராக இருக்கின்றனர்.

ஒரு வகையினர் விரலசைப்பது தொடர்பாக வரும் நபிமொழியை அறியாது இருத்தல் அல்லது அந்தச் செய்தி பலவீனமானது என்று கூறும் சிலருடைய தவறான கூற்றைச் சரி என்று நம்புதல் இது போன்ற காரணங்களால் விரலசைக்காமல் தொழுவார்கள்.

இவர்கள் குறிப்பிட்ட இந்த நபிவழியை விட்டது தவறு என்றாலும் இவர்களின் இத்தவறை இறைவன் மன்னிப்பதற்குத் தகுந்த காரணங்கள் உள்ளன. எனவே இறைவன் இவர்களை மன்னித்து விடலாம்.

இன்னொஆனால் இன்னொரு வகையினர் இருக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் விரலசைத்தார்கள் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பர். மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு அநியாயமாக இந்த நபிமொழியைப் புறக்கணிப்பர்.

மேலும் சிலர் தனது தொழுகையை நபியவர்கள் எவ்வாறு காட்டித் தந்தார்கள் என்று பார்க்காமல் மத்ஹபுகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்வார்கள். இவர்களிடம் நபிமொழியைக் காட்டினால் அதைப் படித்துப் பார்ப்பதற்குக் கூட முன்வர மாட்டார்கள். இவர்களும் நபியவர்களைப் புறக்கணிப்பவர்கள். இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டிய முறைப்படி மதிக்கவில்லை. இதனால் இவர்களின் தொழுகையை இறைவன் மறுத்து விடலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்தால் அவர்களின் அமல்கள் அழிந்து போய்விடும் என அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ (2)49

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.

அல்குர்ஆன் (49: 2)

02.08.2011. 16:51

Sunday, February 02, 2014

மஹ்ரமான உறவினர் துணை இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யலாமா? (வீடியோ)

 மஹ்ரமான உறவினர் துணை இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யலாமா? (வீடியோ)

மஹ்ரமான உறவினர் துணை இல்லாமல் ஒரு பெண் from Adiraitntj on Vimeo.

மஹ்ரமான உறவினர் துணை இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யலாமா?


மஹ்ரமான உறவினர் துணை இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யலாமா? (மறு ஆய்வு)

கணவன். அல்லது மஹ்ரமான உறவினர் துணை இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யலாமா? செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எதுவும் உள்ளதா என்பதில் அறிஞர்கள் மத்தியில் நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பரவலாகக் கோரிக்கை வந்ததன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் குழு சென்னையில் கூடி 15.02.2011 மற்றும் 16.02.2011 ஆகிய இரண்டு நாட்கள் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு குறித்து மக்களுக்கு விளக்குவதற்காக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.

ஒரு பெண், திருமணம் முடிக்கத்தகாத ஆண் உறவினர் இல்லாமல் பயணம் செய்வது பற்றிப் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

குறிப்பிட்ட தூரம் வரை பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம்; அதற்கு மேல் பயணம் மேற்கொண்டால் மஹ்ரமான துணை அவசியம் ஒரு சாரார் கூறுகின்றனர்.

பெண்ணின் உயிர், உடைமை, கற்பு ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு இருக்கும் காலத்தில் அவள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம் என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

மேலும் சிலர், ஒரு பெண் எந்தச் சூழ்நிலையிலும் இவ்வாறு பயணம் செய்யக் கூடாது என்று கூறுகின்றனர்.

இது தொடர்பாக வரும் செய்திகளில் ஒன்றை ஏற்று, மற்றதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதால் தான் கருத்து வேறுபாடு உருவாகின்றது. அனைத்து ஆதாரங்களையும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்தால் குழப்பமின்றி தெளிவான முடிவுக்கு வரலாம்.

இது தொடர்பாக வரும் செய்திகளை நாம் ஆய்வு செய்யும் போது ”அச்சமற்ற காலத்தில் பெண் தனியே பயணம் மேற்கொள்வதில் தவறல்ல' என்ற இரண்டாவது சாராரின் கருத்தே சரியானது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

நமது நிலைபாட்டுக்குரிய ஆதாரங்களை அறிந்து கொள்வதற்கு முன்னால் ”குறிப்பிட்ட தூரம் வரை பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம்' என்று கூறுவோர் ஆதாரமாகக் கருதும் செய்திகளின் உண்மை நிலையை முதலில் அறிந்து கொள்வோம்.

முரண்பட்ட செய்திகள்:

பெண்கள் மஹ்ரமான துணை இல்லாமல் அதிகப்பட்சமாக எவ்வளவு தூரம் செல்லலாம் என்பது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறான அளவுகள் கூறப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

1. ஒரு நாள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது.

2. இரண்டு நாட்கள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது.

3. மூன்று நாட்கள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது.

4. ஒரு பரீத் தூரத்திற்கு ஒரு பெண் தனியே பயணம் செய்யக் கூடாது. (ஒரு பரீத் என்பது 12 மைல்களாகும். ஏறத்தாழ 19 கிலோ மீட்டார் இதன் தொலைவாகும்)

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் ஒரு நாள் தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: புகாரி (1088)

”ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி (1995)

”அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் மூன்று நாட்கள் தொலைவுடைய பயணத்தை மணமுடிக்கத்தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் (2382)

”ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) ஒரு பரீத் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: சஹீஹ் இப்னி குஸைமா (2350)

இந்த நான்கு விதமான அறிவிப்புகள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறான தூர அளவுகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றை ஏற்றால் மற்றவற்றை மறுக்கும் நிலை ஏற்படும். எனவே இந்தச் செய்திகள் ஒன்றுக்கொன்று முரணாக அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றை ஏற்று மற்றவற்றைப் புறக்கணிக்கவும் முடியாது. ஏனென்றால் இவை அனைத்தும் சமமான தரத்திலமைந்த செய்திகள்.

இரண்டு செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டால் அந்த முரண்பாடு நீங்கும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்க முடியாத வகையில் முரண்பாடு இருந்தால் அந்த இரண்டில் எது தரத்தில் உயர்ந்தது என்று பார்த்து உயர்ந்த தரத்தில் அமைந்த செய்தியை ஏற்று, தரத்தில் குறைந்த செய்தியை விட்டுவிட வேண்டும்.

முரண்பாடு நீங்காமலும் ஒன்றை விட மற்றொன்றை முற்படுத்த முடியாத வகையில் தரத்தில் சமமாகவும் அவை இருந்தால் இவற்றில் முந்தியது எது? பிந்தியது எது? என்று பார்க்க வேண்டும். முந்திய சட்டத்தை மாற்றப்பட்ட சட்டமாக முடிவு செய்து அதை விட்டுவிட வேண்டும். பிந்திய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

முந்தியது எது? பிந்தியது எது? என்பதை முடிவு செய்ய முடியாவிட்டால் ஒரே தரத்தில் அமைந்த, முரண்படும் இந்தச் செய்திகளை அமல்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.

பெண் தனியே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட தூரத்தைப் பற்றிப் பேசும் மேற்கண்ட செய்திகள், இணைத்து விளக்கம் கூற முடியாத வகையில் முரண்படுகின்றன. இவை அனைத்தும் சமமான தரத்தைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் முந்தி கூறப்பட்டது எது? பிந்தி கூறப்பட்டது எது? என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே இந்தச் செய்திகளில் எந்த ஒன்றையும் செயல்படுத்தாமல் இவை அனைத்தையும் விட்டுவிட வேண்டும்.

முரண்படாத செய்தி:

ஒரு குறிப்பிட்ட தூரத்தை வரையறுக்காமல் பொதுவாக, பெண் எவ்வளவு தூரமானாலும் தனியே பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று ஒரு ஹதீஸ் கூறுகின்றது.

”மணமுடிக்கத் தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மணமுடிக்கத்தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போது தான் ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (1862)

ஒன்றுக்கொன்று முரண்படுவதாக முன்பு நாம் எடுத்துக் காட்டிய நான்கு வகையான செய்திகளில் ஒரு பெண் தனியே பயணம் மேற்கொள்வது கூடாது என்ற அம்சம் மட்டுமே சரியானது. ஒரு குறிப்பிட்ட தூரத்தை வரையறுப்பது தவறு என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் இந்தச் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

எனவே ஒரு பெண் தக்க துணை இல்லாமல் தனியே எவ்வளவு தூரமானாலும் பயணம் செய்யக்கூடாது என்பதே சரியான நபிமொழி.

அச்சமற்ற சூழ்நிலையில் அனுமதி உண்டு:

மணமுடிக்கத்தகாத ஆண் துணை இல்லாமல் பெண் தனியே பயணம் செய்யக் கூடாது என்ற இச்சட்டம் பெண்ணுடைய பாதுகாப்புக் கருதியே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இயற்கையாக பெண் என்பவள் உடல் அளவிலும் மன அளவிலும் பலவீனமானவளாக இருக்கின்றாள். இவள் தனியே பயணம் செய்யும் போது இவளுடைய உயிர், உடைமை, கற்பு ஆகியவற்றுக்குத் தீயவர்கள் பங்கம் விளைவித்தால் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் இவளிடம் இல்லை. எனவே தான் இஸ்லாம் இந்தத் தடையை விதித்துள்ளது.

பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லாத அச்சமான காலகட்டத்தில் தான் இந்தத் தடை பொருந்தும். பாதுகாப்பு உள்ள அச்சமற்ற சூழ்நிலையில் ஒரு பெண் மஹ்ரமான ஆண் துணை இல்லாமல் தனியே பயணம் செய்தால் அதை இஸ்லாம் தடை செய்யவில்லை. மாறாக இதற்கு அனுமதி வழங்குகின்றது.

நான் நபி (ஸல்) அவர்கüடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்கüடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்கüடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், ”அதீயே! நீ ”ஹீரா'வைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். ”நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது” என்று பதிலüத்தேன். அவர்கள், ”நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவி-ருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று சொன்னார்கள். நான் என் மனத்திற்குள், ”அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட ”தய்யி' குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று கேட்டுக் கொண்டேன்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)
நூல்: புகாரி (3595)

மேற்கண்ட சம்பவத்தில் கூறப்படும் பெண் மஹ்ரமான ஆண் துணையில்லாமல் தனியே பயணம் செய்வாள். அப்போது வழிப்பறி கொள்ளை இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கின்றார்கள்.

இந்தப் பெண் இறையில்லமான கஅபாவை தவாஃப் செய்து இறைவனை வணங்கக்கூடியவள் என்றும், ஏக இறைவனுக்கு அஞ்சக்கூடியவள் என்றும் புகழாரம் சூட்டுகிறார்கள்.

அச்சமற்ற நிலையிலும் ஒரு பெண் தனியே பயணம் செய்யக் கூடாது என்று மார்க்கம் கூறுமேயானால் இந்தக் காரியத்தைச் செய்யும் இப்பெண்ணைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு புகழ மாட்டார்கள். இப்பெண் செய்த இந்தக் காரியத்தை நல்லாட்சிக்கு அடையாளமாக நபியவர்கள் கூறியிருக்கவும் மாட்டார்கள்.

ஆனால் நபியவர்கள் இப்பெண் இறையச்சமுள்ளவள் என்று சான்று தருவதிலிருந்து அச்சமற்ற பாதுகாப்பான சூழ்நிலையில் பெண் தனியே பயணம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பதை அறிய முடிகின்றது.

மக்காவிற்கு மட்டும் உரிய அனுமதியா?

மேலுள்ள சம்பவத்தில் அந்தப் பெண் கஅபாவிற்கு வருகை தருவாள் என்று கூறப்பட்டுள்ளதால் பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம் என்ற சட்டம் இறையில்லம் கஅபாவிற்குச் செல்வதற்கு மட்டுமே பொருந்தும். இதைத் தவிர மற்ற இடங்களுக்குச் செல்லும் போது பெண் மஹ்ரமான துணையுடனே செல்ல வேண்டும் என்று நாம் முன்னர் கூறி இருந்தோம்

ஆனால் நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட முன்னறிவிப்பைப் போன்று இன்னொரு முன்னறிவிப்பையும் செய்துள்ளார்கள். இந்த முன்னறிவிப்பு இந்த அனுமதி மக்காவிற்கு மட்டும் உரியதல்ல என்பதை தெளிவுபடுத்துகின்றது.

பொதுவாக எந்த ஊராக இருந்தாலும் நாடாக இருந்தாலும் பாதுகாப்பு நிலவும் பட்சத்தில் மார்க்கம் இந்த அனுமதியை பெண்ணுக்கு வழங்குகின்றது. இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அதீ பின் ஹாதிமே! ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் அல்லாஹ்வையும் தனது ஆடுகள் விஷயத்தில் ஓநாயையும் தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் எமன் நாட்டுக் கோட்டையிலிருந்து ஹியராவிற்கு வருகை தருவாள்” என்று கூறினார்கள். நான், ”(வழிப்பறி கொள்ளையர்களான) தய்யி குலத்தினரும் அவர்களின் குதிரைப் படையும் இருக்குமே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ”அப்போது அக்கூட்டத்தினரையும் (வழிப்பறியில் ஈடுபடும்) மற்றவர்களையும் அல்லாஹ் பார்த்துக் கொள்வான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)
நூல்: தப்ரானீ (14039)

இந்தச் செய்தியில் யமன் நாட்டிலிருந்து ஹியரா வரை பெண் தனியே பயணம் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு உள்ள காலத்தில் பெண் தனியே மக்காவிற்கு மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கும் ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள அனுமதி உண்டு என்பதை அறிய முடிகின்றது.

இன்றைக்கு ஒரு பெண் அச்சமில்லாமல் தனியே பயணம் மேற்கொண்டு தன் உயிர், உடைமை, கற்பு ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படாமல் திரும்பி வர முடியும்.

சில நேரங்களில் ஏதாவது ஒரு பகுதியில் இதற்கு மாற்றமான நிகழ்வு நடக்கலாம். ஆனால் இவை அரிதாக நிகழக் கூடியதாகும். பயணம் செய்யும் அனேக பெண்களைக் கவனத்தில் கொண்டால் அவர்கள் பாதுகாப்புடன் சென்று வருகிறார்கள் என்பதே உண்மை.

எனவே தற்காலத்தில், திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட மஹ்ரமான உறவினர் இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்தால் அது மார்க்க அடிப்படையில் தவறல்ல. இதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.

விமர்சனமும் விளக்கமும்:

அச்சமற்ற காலத்தில் பெண் யாருடைய துணையுமின்றி தனியே பயணம் மேற்கொள்ளலாம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இதற்கு எதிராக பின்வரும் ஹதீஸை சுட்டிக் காட்டுகின்றனர்.

”மணமுடிக்கத் தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மணமுடிக்கத்தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போது தான் ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், ”அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னின்ன இராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக!” என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (1862)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண் தனியே ஹஜ் செய்ய நாடிய போது அதை நபியவர்கள் அங்கீகரிக்கவில்லை. அப்பெண் தனது கணவனுடன் தான் ஹஜ்ஜுக்குப் புறப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள். எனவே பெண் மஹ்ரமான துணை இல்லாமல் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள், எதிர் காலத்தில் பெண்கள் அச்சமின்றி பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என்று முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். இதிலிருந்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் அச்சமின்றி தனியாகப் பயணம் செய்யும் நிலை ஏற்படவில்லை என்பதை அறியலாம். எனவே தான் அந்த நபித்தோழரை மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அச்சமான காலத்தில் சொல்லப்பட்ட விதியை அச்சம் நீங்கிய காலத்திற்குப் பொருத்தக் கூடாது.

அதாவது இந்த நிகழ்வு நடந்த போது பாதுகாப்பான, அச்சமற்ற நிலை இருக்கவில்லை. எனவே தான் தன் மனைவியுடன் சேர்ந்து ஹஜ்ஜுக்குப் புறப்படுமாறு அந்த நபித்தோழருக்கு நபியவர்கள் உத்தரவிட்டார்கள் என்று இதை முரண்பாடில்லாமல் புரிந்து கொள்ளலாம்.

பெண்கள் அச்சமற்ற காலத்தில் தனியாகப் பயணம் செய்யலாம் எனும் போது, அவர்கள் தவறான வழியில் செல்வதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று சிலர் காரணம் கூறுகின்றனர். இந்தக் காரணத்தை நாம் ஏற்க முடியாது.

ஏனெனில் தவறான நடத்தையில் ஈடுபட நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற தேவை இல்லை. இருக்கும் இடத்திலிருந்தே தீய நடத்தையில் ஈடுபட முடியும். மேலும் ஒரு நாள், இரு நாள் அல்லது சில நாட்கள் தூரம் பெண்கள் தனியாகப் பயணம் செய்யலாம் என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர். ஒரு பெண் தீய நடத்தையில் ஈடுபட விரும்பினால் இது போதுமான அவகாசம் தான்.

எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தையிலிருந்து பெறப்படும் அனுமதியை இதுபோன்ற காரணங்களைக் கூறி தள்ளுபடி செய்ய முடியாது.

மஹ்ரமான ஆண் துணையின்றி பெண் தனியாகப் பயணம் செய்யலாமா? என்பது குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மேற்கண்டவாறு முடிவு எடுக்கப்பட்டது.

நன்றி :ஏகத்துவம் மார்ச் 2011

Saturday, February 01, 2014

கண்ணியமான முறையில் போனில் பேசுபவரிடம் ங்கோத்தா என்று பேசும் கேடி சம்சுதீன் காஸிமி!

கண்ணியமான முறையில் போனில் பேசுபவரிடம் ங்கோத்தா என்று பேசும் கேடி சம்சுதீன் காஸிமி!


கேடி சம்சுதீன் காஸிமிக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பகிரங்க அறைகூவல்!

கேடி சம்சுதீன் காஸிமிக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பகிரங்க அறைகூவல்

சம்சுதீன் விஷமிக்கு டிஎன்டிஜே பகிரங்க அறைகூவல் - சென்னை முழுவதும் இன்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

சென்னை மக்கா பள்ளி முன்னால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரைத்தான் இப்போது நீங்கள் காண்கிறீர்கள்!

அதிமுகவிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக சொன்ன குற்றச்சாட்டு முதல் தவ்ஹீத் ஜமாஅத் மீது சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க நேரில் வாருங்கள்.

சின்னப்பசங்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருவது முதல் மக்கா பள்ளி நிர்வாகத்திலும், நிதியிலும் செய்துவரும் மோசடிகள் வரை விஷமி மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்துடன் நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று இந்த போஸ்டர் சம்சுதீன் விஷமியை ப்கிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றது.

வருவாரா? வரமாட்டாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.