Monday, January 07, 2013

கால்வதுறையை கண்டித்து மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம் – காவல்துறையின் அராஜகம் ஆதாரத்துடன்!

29.12.12 அன்று சென்னை மண்ணடியில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் காவல்துறை செய்த அராஜகங்களை புள்ளிவிபரங்களோடும், ஆதாரங்களோடும் சகோதரர் பீஜே அவர்கள் பட்டியலிட கண்டனப்பொதுக்கூட்டம் கொட்டும் மழையிலும் அனல் பறந்தது. பொதுக்கூட்டத்தில் பிஜே அவர்கள் பேசியதன் முழுவிபரம்:

காவல்துறைக்கு விழுந்த முதல் மரண அடி:

முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என்பதற்காக திட்டம் தீட்டி மிருக வெறியாட்டம் ஆடிய காவல்துறை முற்றுகையிட வந்த ஆண்களையும், கைக்குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்களையும் தடியடி நடத்தி பயமுறுத்தி ஆழம்பார்த்தனர்.

ஆனால் அந்த காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டித்து பல்லாயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும், முதியவர்களும் இங்கு திரண்டிருப்பதே அவர்களுக்கு மிகப்பெரிய மரண அடி.
எந்த ஒரு இடத்தில் தடியடி நடத்தப்பட்டாலும் அந்த இடத்தில் சிறிது நேரத்தில் போராட்டம் நடந்த ஒரு சிறு சுவடு கூட இருக்காது. அந்த அளவிற்கு போராட்டக்காரர்கள் சிதறி ஓடிவிடுவார்கள். போலீஸார் நடத்திய தடியடியின் காரணமாக போராட்டம் நடத்தப்பட்ட இடத்தில் பிய்ந்து போன செருப்புகள் மட்டும்தான் கிடக்கும். இந்த இடத்தில்தானா போராட்டம் நடந்தது என்று பிறர் கேட்கக்கூடிய அளவிற்கு போராட்டக் களமே மயான பூமியைப்போல காட்சி தரும். ஆனால் காவல்துறையைச் சேர்ந்த மனித மிருகங்கள் காட்டுமிராண்டித் தனமாக எங்களது சகோதரர்களை தாக்கியபோதும், எந்த ஒரு சகோதரனும் ஓடாமல் அந்த போராட்டக்களத்திலேயே நின்று சாதித்துக் காட்டினார்களே! அதுவே காவல்துறைக்கு விழுந்த மரண அடி.

எங்கள் சமுதாய பெண்களும் தடியடி நடத்திய இடத்தில் தைரியமாக நின்று, “அல்லாஹு அக்பர்” என்று முழக்கமிட்டார்களே! இதுதான் முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிய உங்களுக்கு விழுந்த முதல் மரண அடி.

எங்களது சகோதர, சகோதரிகள் போராட்டக்களத்தில் பின்வாங்கி ஓடாமல் ஏன் உறுதியாக நின்றார்கள் தெரியுமா? போர்க்களத்தில் பின்வாங்கி ஓடுவது பெரும்பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடத்திய பாடம்தான் எங்களது மக்களை நெஞ்சுறுதியோடு நிற்க வைத்தது.

முஸ்லிம் சமுதாயத்தை மறுபடியும் பழைய நிலைக்கு தள்ளிவிடாதீர்கள்:

இந்த முஸ்லிம் சமுதாயத்தை தவறான பாதைக்கு நீங்கள்தான் தள்ளினீர்கள். 1992களில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து முஸ்லிம்களில் சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேருந்துகளின் மீது கல்வீசித் தாக்கினர். அவர்கள் செய்தது தவறுதான் என்ற போதிலும், அதற்காக உள்ள வழக்கு என்னவோ அதை அவர்கள் மீது போடாமல், பேருந்தின் மீது கல்வீசித் தாக்கியதற்காக அவர்கள் மீது தடா சட்டத்தை ஏவி அநியாயம் செய்தீர்களே! அதுதான் அவனை தவறான பாதைக்குத் தள்ளியது. அதன்பிறகு பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகு காவல்துறையின் அத்தகைய அடக்குமுறைகள் ஒடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் எங்கள் மீது இல்லாத விஷயத்தை பொய்யாகப் புணைந்து எங்களை தவறான வழிக்கு தள்ளிவிடாதீர்கள். இப்போது எங்கள் மீது பொய் வழக்குப்போட்ட ஏ.சி.செந்தில் குமரன் மற்றும் தடியடி நடத்திய டி.சி.கிரி போன்ற காவல்துறை அதிகாரிகளால்தான் மக்கள் தவறான பாதைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.

ஜெயலலிதா செய்த அநியாயம்:

ராஜகோபாலன் என்பவர் மதுரையில் கொலை செய்யப்பட்டபோது, அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது தடா சட்டத்தை ஏவிய ஜெயலலிதா, காசிம் என்ற ஆலிமை கொலை செய்த வழக்கில் பிடிக்கப்பட்ட இந்துத்துவாவினர் 3மாதத்தில் வெளியே வரக்கூடிய அளவிற்கு செக்சனைப்போட்டு பாரபட்சம் காட்டி அநியாயம் செய்தார். இரண்டு தரப்பினர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கைகள் இல்லாததுதான் பாதிக்கப்பட்டவர்களை தவறான பாதைக்குத் தள்ளிவிடுகின்றது.

கருணாநிதியின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமை:

அதுமட்டுமல்லாமல், கருணாநிதியின் ஆட்சியில் டிசம்பர் 6 வந்துவிட்டாலே நள்ளிரவுகளில் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து மிருக வெறியோடு நர வேட்டை யாடிய படலங்களை காவல்துறை அரங்கேற்றியது. டிசம்பர் 6 என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவிகளையெல்லாம் குண்டு வைத்து நாட்டைத் துண்டாட சதித்திட்டம் தீட்டினார்கள் என்று பொய் வழக்குப் போட்டு காவல்துறை உள்ளே தள்ளியது. தனி நபராக இருந்த ஒரு நபர் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டினார் என்று பொய் வழக்குகள் போடப்பட்டு, தனி ஒரு நபராக இருப்பவர் எப்படி குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியிருப்பார்? இந்த அறிவுகூட உங்களுக்கு இல்லையா? என்று நீதிபதிகளால் காவல்துறையினர் கண்டிக்கப்படக்கூடிய அளவுக்கு முஸ்லிம்கள் மீது காவல்துறை பொய் வழக்குகளை போட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்தோம். “யா! அல்லாஹ்! இந்த அக்கிரமக்காரர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்று!” என்று இந்த காட்டுமிராண்டித்தனங்களை காவல்துறை வாயிலாக கட்டவிழ்த்துவிட்ட கருணாநிதிக்கு எதிராக கையேந்தினார்கள். அதன் விளைவு எப்படி முஸ்லிம் சமுதாயத்தை கருணாநிதி நள்ளிரவு கைது செய்து கருவறுத்தாரோ, அதேபோல அவரை நள்ளிரவில் வீடுபுகுந்து அவரது வீட்டுக் கதவை உடைத்து, அவரது படுக்கையறையில் வைத்து காவல்துறை கைது செய்தது.

முதல் எச்சரிக்கை:

பாதிக்கப்பட்டவனுடைய பிரார்த்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்; பாதிக்கப்பட்டவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையே எந்த திரையுமில்லை என்ற நபிமொழிக்கு ஏற்ப அல்லாஹ் கருணாநிதிக்கு அந்த தண்டனையை வழங்கினான்.

ஆட்சியாளனுக்கெல்லாம் ஆட்சியாளன் ஒருவன் இருக்கின்றான்:

அதுபோல இப்போது எங்கள் மீது பொய் வழக்கு போட்டு, எங்கள் சமுதாயப் பெண்களை இழிவாகப் பேசி, எங்களது சகோதரர் களுடைய வீடுகளில் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறை என்ற அதிகாரத்தில் மிருக வெறியாட்டம் ஆடியுள்ளீர்களே! உங்களது கையில் அதிகாரம் உள்ளது என்ற எண்ணத்தில் இப்படி ஆட்டம் போட்டீர்களேயானால், உங்களுக்கும் மேலே, இங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் மேலே அனைத்து அதிகாரத்தையும் தனது கையில் வைத்துள்ள படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான். அவன் நினைத்தால் உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவான்; நீங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவீர்கள் என்று முதல் எச்சரிக்கையை காவல்துறையினருக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் சொல்லிக் கொள்கின்றேன்.

துண்டுப்பிரசுரம் வெளியிட்டது தவறா?:

டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் அழியப் போகின்றது என்று பீதியை பரப்பினார்கள். அந்த பீதியை போக்குவதற்காக நாங்கள் துண்டுப் பிரசுரம் வெளியிட்டோம். அவ்வாறு துண்டுபிரசுரம் வெளியிட்டது தவறா?.

உலகம் அழியப்போகின்றது என்று பீதியைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திராணியற்ற காவல்துறை, அந்த பீதியைப் போக்க துண்டுப்பிரசுரம் வெளியிட்டவர்களை கைது செய்து தனது காவி புத்தியை காட்டியுள்ளது.

சீனாவில் இவ்வாறு பீதி பரப்பிய 1000 பேரை சீன அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. அது அரசாங்கம். ஆனால் இங்கோ அவ்வாறு பீதி பரப்புபவர்களை கைது செய்வதை விட்டுவிட்டு, காவல்துறை செய்ய வேண்டிய வேலையை சமுதாய அக்கறையோடு கையில் எடுத்தவர்களை கைது செய்துள்ளது காவி காவல்துறை.

வள்ளலார் பற்றி எழுதியது தவறா?:

அப்படி என்ன எங்களை கைது செய்யக்கூடிய அளவிற்கு நாங்கள் தவறாக எழுதிவிட்டோம். அந்த துண்டுப்பிரசுரத்தில் எங்கள் மீது வழக்குத்தொடுக்கக்கூடிய வகையில் எந்த வாசகங்களும் இல்லை.
கடலூரில் உள்ள வடலூரில் வள்ளலார் தீபம் அணைந்ததால் உலகம் அழியப்போகின்றது என்று சொல்லி புரளி பரப்பி அந்த பீதியை அனைத்து பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் செய்தியாக வெளியிட்டன. அதை நம்பி பல பெண்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வைத்து பரிகாரம் செய்கின்றார்கள் என்ற செய்தியை பத்திரிக்கைகள் புகைப்படங்களுடன் வெளியிடுகின்றன.


இவர்கள் எந்த உலகம் அழியப்போகின்றதாக சொல்கின்றார்களோ அந்த உலகத்தில் நாங்களும் இருக்கின்றோம். டிசம்பர் 21ஆம் தேதி நாங்களும் சாகப்போகின்றோம் என்று சொல்லி அவர்கள் எங்களுடைய மனதை புண்படுத்துகின்றார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான் வள்ளலார் தீபம் அணைந்ததாக சொல்வதாலெல்லாம் உலகம் அழிந்துவிடாது. 150 ஆண்டுகளுக்கு முன்பே அவர் இறந்து விட்டார். அவரே இறந்துவிட்ட பிறகும் கூட அழியாத உலகம், அவர் ஏற்றி வைத்த தீபம் அணைந்ததாலா அழிந்துவிடும் என்று லாஜிக்காக கேட்டது தவறா?

இந்து முன்னணிக்கும், வள்ளலாருக்கும் என்ன சம்பந்தம்?:

இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் எங்களது இந்துக் கடவுளான வள்ளலாரை இழிவுபடுத்தி நாங்கள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டதால் எங்களை கைது செய்ய வேண்டும் என்று எங்கள் மீது புகார் அளித்ததால்தான் எங்கள் மீது நடவடிக்கை என்று சொல்கின்றீர்களே! உங்களுக்கு மூளை என்பது கொஞ்சமாவது உள்ளதா?

இந்து முன்னணிக்கும், வள்ளலாருக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?

வள்ளலாரின் கொள்கை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உருவ வழிபாடு கூடாது என்பதுதான் வள்ளலாரின் கொள்கை. ஒரே இறைவனைத்தான் வணங்க வேண்டும் என்பதுதான் வள்ளலாரின் கொள்கை. இந்து முன்னணியினருக்கு நேர்முரணான கொள்கையுடைய வள்ளலாரை நாங்கள் இழிவுபடுத்திவிட்டோம் என்று அவர்கள் சொல்லும்போதே இந்து முன்னணியினர் மதக்கலவரத்தைத் தூண்டத்ததான் இந்த வேலையைச் செய்கின்றார்கள் என்பது காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியவில்லையா?.

இதோ வள்ளலார் போதித்த பத்து கொள்கைகள்:

1.கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
2.புலால் உணவு உண்ணக்கூடாது.
3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
4.சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
5.இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
6.எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
7.பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
8.கருமகாரியம், திதி முதலியவை செய்யக்கூடாது.
9.சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
10.எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

மேற்கண்ட வள்ளலாரின் பத்து கொள்கைகளில் பெரும்பாலானவை இந்து மதத்திற்கு எதிரான கொள்கைகள். இந்து முன்னணியினரின் கொள்கைகளுக்கு எதிரானவை.

ஒரே இறைவனைத்தான் வணங்க வேண்டும் என்றும், சிறு தெய்வ வழிபாடு கூடாது என்றும், கடவுளுக்கு எதையும் பலியிடக்கூடாது என்றும் வள்ளலார் கூறிய கருத்துக்கள் இந்து முன்னணியினருக்கும், இந்துக்களுக்கும் எதிரான கொள்கைகள்.

அதுமட்டுமல்லாமல், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும் என்ற வள்ளலாரின் கொள்கைக்கும், இந்துக் கடைகளில்தான் இந்துக்கள் பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லும் இந்து முன்னணியினருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இதைக்கூட காவல்துறை சிந்திக்காதா?

“இறந்தவர்களை எரிக்கக் கூடாது; அவர்களுக்கு திதி செய்யக்கூடாது” என்ற வள்ளலாரின் கொள்கைக்கும், இறந்த இந்துக்களை எரிக்க வேண்டும்; அவர்களுக்கு திதி செய்ய வேண்டும் என்ற இந்து முன்னணியின் கொள்கைக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?

வள்ளலார் இந்து கடவுளா? அவர் தனி ஒரு ட்ராக்கில் சென்றிருக்கும் போது இதை ஒரு புகாராக ஏற்று காவல்துறை எப்படி நடவடிக்கை எடுத்தது.

இந்தக் கேள்வியையெல்லாம் புகார் கொடுக்க வந்திருந்த இந்து முன்னணியினரிடம் காவல்துறை கேட்டிருக்க வேண்டாமா?.

வேறு ஒரு நாட்டில் இந்த துண்டுப்பிரசுரத்தை நாங்கள் வெளியிட்டிருந்தால் எங்களை அழைத்து பாராட்டு விழா நடத்தியிருப்பார்கள். இந்தத் துண்டு பிரசுரம் எந்த அடிப்படையில் தவறு என்பதை காவல்துறை சொல்ல முடியுமா?

இப்படி நாங்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் தவறானதாக இல்லாத நிலையில், யாருடைய மனதையும் புண்படுத்தாத நிலையில் திட்டமிட்டு எங்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டுள்ளது.

இந்த காரணத்திற்காக எங்களை நள்ளிரவு 2.30மணிக்கு வீடு புகுந்து கைது செய்ய வேண்டியஅவசியம் என்ன வந்தது?.

அதற்கு முந்தைய நாள் வரைக்கும் தென்சென்னைமாவட்ட நிர்வாகிகள் அப்துர்ரஹீம் உட்படஅனைத்து நிர்வாகிகளும் காவல்துறை உயர்அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்ற நிலையில்திடீரென்று நள்ளிரவு வீட்டு கதவை உடைத்துஅவர்களை கைது செய்யச் சொல்லி உத்தரவுபோட்டது யார்?
தீவிரவாதிகளுக்கெல்லாம் ஏன் வீடு வாடைக்குவிடுகிறாய்? என்று வீட்டு உரிமையாளரிடத்தில் காவல்துறையை கேட்கச் சொல்லி ஏவியது யார்?

ஆண்கள் இல்லாத வீட்டில் எங்களது முஸ்லிம்சகோதரிகள் மட்டுமே இருந்த வீடுகளுக்குள்அத்துமீறி பெண் காவலர் இல்லாமல் உன்னைநுழையச் சொன்னது யார்?

இரண்டு செல்ஃபோன்களை பிடுங்கச் சொன்னதுயார்? (காவல்துறை செல்ஃபோன் பிடுங்கியதைமறுக்க இயலாது; நாம் காவல்துறை உயர்அதிகாரிகளிடத்தில் புகார் அளித்த பிறகு அவர்களேகொண்டு வந்து இப்போது நம்மிடம் இரண்டுசெல்ஃபோன்களையும் திரும்ப ஒப்படைத்துள்ளனர்)

கமிஷனர் இந்த உத்தரவை போட்டாரா?

டிஜிபி இந்த உத்தரவை போட்டாரா?

இந்த உத்தரவை போட்டது யார்? உள்துறைசெயலாளரா?

அல்லது தலைமைச் செயலாளர் இந்த உத்தரவைபோட்டாரா?

முதல்வர் அவர்கள் இந்த உத்தரவை போட்டாரா?

இவர்களெல்லாம் அந்த உத்தரவை போடவில்லை என்றால் அந்த ஏ.சி.செந்தில் குமரன் மீதும், டி.சி.கிரி மீதும் நடவடிக்கை எடுங்கள். அப்போதுதான் இவர்களுக்கு அதில் பங்கு இல்லை என்பது உறுதியாகும். இல்லாவிட்டால் முதல்வர், டிஜிபி, கமிஷனர் ஆகியோரது உத்தரவுப்படிதான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது என்பது உறுதியாகும். அது உறுதியாகுமேயானால், ஒரு துண்டுப்பிரசுரம் விநியோகித்ததற்காக எங்களை இப்படி ஒடுக்குவீர்கள் என்றால், இன்னுமொரு சுதந்திரப் போராட்டத்திற்கு முஸ்லிம் சமுதாயம் தயார். எங்களது பிரச்சாரத்தை தடுப்பாயேயானால், எந்த தியாகங்களை செய்தும் எங்களது உரிமையை மீட்டெடுப்போம்.

உதயக்குமாரை நெருங்க வக்கில்லாத காவல்துறை:

ஒரு துண்டுப்பிரசுரம் கொடுத்ததற்காக நள்ளிரவு வீடு புகுந்து கைது செய்துள்ளீர்களே! நாட்டில் எவ்வளவு அநியாயங்கள் நடக்கின்றன. அதையெல்லாம் தடுத்து நிறுத்த துப்பில்லாத காவல்துறைக்கு எங்களை மட்டும் கைது செய்ய துப்பு வந்துவிட்டதா?

காவல்துறையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி, காவல்துறையினரை கடல் வழியே தாக்கும் உதயகுமாரை உங்களால் நெருங்க முடிந்ததா?

எவ்வளவோ கொலை, கொள்ளை, கற்பழிப்புகளைச் செய்யும் கயவர்களை கைது செய்யத் துப்பில்லாத காவல்துறையே! அத்தகையவர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தாயா? அவர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ய துப்பில்லாத நீ எங்களை கைது செய்ய வந்துவிட்டாயா? உன் வீரத்தை காட்டுவதாக இருந்தால் அவர்களிடத்தில் போய் காட்டு!

திட்டமிட்ட சதி:

முஸ்லிம்களை திட்டம் தீட்டித்தான் நாங்கள் கருவறுத்தோம் என்பதை சம்பந்தப்பட்ட காவல்துறை உயரதிகாரியே அவரையும் அறியாமல் உளறிவிட்டார்.

அமெரிக்க முற்றுகை போராட்டத்தின்போது, 23அமைப்புகள் செய்த வன்முறையின் காரணமாக முஸ்லிம்களை எல்லாம் இனிமேல் இப்படித்தான் நடத்துவோம் என்று அந்த உயர்அதிகாரி கூறியுள்ளார். அப்படியானால் முஸ்லிம்கள் என்றால் உனக்கு என்ன கிள்ளுக்கீரையா?

கான்ஸ்டபிள் வேலைக்குக்கூட தகுதியில்லாத செந்தில்குமரனும், கிரியும்:

துண்டுப்பிரசுரத்தை கொடுத்ததற்காக கைது செய்கின்றோம் என்று சொல்லி கைது செய்தாயே! நீ எங்கள் மீது எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளாயே! அந்த எஃப்.ஐ.ஆர்-ல் என்ன எழுதியுள்ளாய்?
இதோ நீ போட்ட எஃப்.ஐ.ஆர் காப்பி. நான் வாசிக்கின்றேன்.

எஃப்.ஐ.ஆர்-ல் காவல்துறையின் அயோக்கியத்தனம்:
“தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் இந்து கடவுள்களை இழிவுபடுத்தியும், கேவலப்படுத்தியும், இந்து மதத்தை மிகத்தரக்குறைவாக விமர்சித்தும், இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தியும், இந்துவாக பிறந்ததற்கே கேவலப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், வேண்டுமென்றே மதவெறியைத்தூண்டிவிட்டு, இந்துக்களை மதம் மாற்றியே தீர வேண்டும் என்றும், முஸ்லிம் மதவாத பயங்கரவாத கும்பல் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இவர்கள் கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்றும், விநாயகர் மீது செருப்பு வீசிய பயங்கரவாதிகள் அனைவரும் என்றும், கூட்டாக சேர்ந்து இந்த மத பிட் நோட்டீஸை தயார் செய்து இருந்ததாகவும், இவர்கள் மேலும் திருவல்லிக்கேணியில் திரும்பவும் மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும், இந்துக்களை தாக்கும் நோக்கத்துடனும், பல பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்றும், இவர்கள் பல தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டு அமைதியாக இருக்கும் திருவல்லிக்கேணியில் மதக்கலவரத்தைத் தூண்டி இந்துக்களை தாக்கவும், இந்து பிள்ளையார்களை தாக்கவும் முயற்சியாகவே இந்த நோட்டீஸை விநியோகித்து மதக்கலவரத்தைத் தூண்டி பயங்கரவாதத்தை பரப்புகின்றார்கள் என்றும், அதனால் யாகூப் என்ற இவரை 15நாள் ரிமாண்டில் வைக்கின்றோம்” என்று மேற்கண்ட வரிகளை எஃப்.ஐ.ஆர்-ல் எழுதியுள்ளாயே! இது காவிச்சிந்தனையோடு போடப்பட்ட எஃப்.ஐ.ஆரா? இல்லையா?

இந்த எஃப்.ஐ.ஆர்.-ல் இப்படி நீ எங்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து எழுதியுள்ளதே உன்னுடைய
அயோக்கியத்தனம்தான், காட்டுமிராண்டித்தனம்தான், அராஜகம்தான், கொடுமைதான், காவிச்சிந்தனைதான்,மதவெறிதான் என்பதை காட்டுகின்றது.

நாங்கள் வெளியிட்ட நோட்டீஸில் அப்படி ஏதாவது ஒரு வாசகமாவது உள்ளதா?.

எஃப்.ஐ.ஆர். போடுவதிலும் கூறுகெட்டத்தனம்:

அந்த பொய் வழக்கையாவது ஒழுங்காக நம்பும்படி போடத்தெரிகின்றதா?. அதுவும் இல்லை.
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு மதமாற்றம் செய்ததாக எழுதியுள்ளார்கள். குண்டு வைத்துவிட்டு, பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்துவிட்டு இஸ்லாத்திற்கு வா என்றால் எவனாவது இஸ்லாத்திற்கு வருவானா? அந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் எஃப்.ஐ.ஆர். போட்டு தங்களது கூறுகெட்டத்தனத்தை வெளிக்காட்டியுள்ள இந்த ஏ.சி.செந்தில் குமரனும், கிரியும் சாதாரண கான்ஸ்டபில் வேலைக்குக்கூட தகுதியற்றவர்கள்.

முதல்வருக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றால் தகுதியற்ற காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறை காவித்துறைதான் என்பதற்கான ஆதாரங்கள்:

பல்லாவரத்தில் செய்த அநியாயம்:


இதை ஏற்றுக் கொண்டதற்கான ஆதாரம்


டிசம்பர் 21ல் உலகம் அழியாது என்று நாங்கள் போட்ட துண்டுப் பிரசுரத்தில் வள்ளலார் என்று ஒரு வார்த்தை வந்ததற்காக நள்ளிரவில் எங்களை வீடு புகுந்து கைது செய்தாயே, நீ சரியான ஆளாக இருந்தால் பல்லாவரத்தில் இந்து முன்னணியினர் வெளியிட்டார்களே! மத துவேஷத்தை தூண்டக்கூடிய ஒரு துண்டுப் பிரசுரம். அந்த பிரசுரத்தை வெளியிட்டதற்காக இந்து முன்னணியினர் மீது நாங்கள் கடந்த 18.09.12 தேதியில் கொடுத்த புகாருக்கு இதுவரை ஏதாவது நடவடிக்கை எடுத்தாயா? அதில் எந்த அளவிற்கு மதத்துவேஷத்தை பரப்பியுள்ளார்கள்?.

அந்தத் துண்டுப் பிரசுரத்தில் உள்ள வாசகங்கள் இதோ:


யாரடா தமிழன்?
அம்மா, அப்பா என்பவர்களா?
மம்மி, டாடி, உம்மா, வாப்பா என்பவர்களா?
அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம்என்று சொல்பவர்கள் தமிழர்களா?
ஏசு மட்டும், அல்லாஹ் மட்டும் கடவுள்என்பவர்கள் தமிழர்களா?
வணக்கம் என்று கைகூப்பி அழைப்பவர்கள்தமிழர்களா?
ஸ்தோத்திரம், சலாம் அலைக்கும் என்பவர்கள்தமிழர்களா?
சாணம் முழுகி, கோலம் போட்டு, மாயிலைகட்டுபவர்கள் தமிழர்களா?
இதில் எதையும் கடைப்பிடிக்காமல்சுகாதாரக்கேட்டை உண்டுபண்ணுபவர்கள்தமிழர்களா?
தாலி, மெட்டி, பூ, வளையல் அணிபவள் தமிழச்சியா?
முக்காடும், மூளியாகவும் இருப்பவள்தமிழச்சியா?

என்று இப்படி அப்பட்டமாக மதத்துவேஷத்தை தூண்டக்கூடிய வகையில், முஸ்லிம்களுக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்யக்கூடிய அளவிற்கு, எங்களைப் படைத்த அல்லாஹ்வை நேரடியாக திட்டும் இந்தத் துண்டுப்பிரசுரம் கொடுத்த இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி இதே சென்னை காவல்துறையிடத்தில் புகார் கொடுத்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இது வரை எந்த நடவடிக்கையாவது எடுத்தீர்களா? அவர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தீர்களா?
இது அப்பட்டமான காவிச்சிந்தனைக்கு ஆதரவான போக்கா? இல்லையா?

காரைக்குடியில்…


இந்து முன்னணியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் தாக்கப்பட்ட விஷயத்தில் தாக்கியது யார் என்றே இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், மறுகணமே, திருப்பூர் மாவட்டச் செயலாளரை தாக்கிய முஸ்லிம் பயங்கரவாதிகளை உடனே கைது செய் என்று இந்து முன்னணியினர் காரைக்குடியில் போஸ்டர் ஒட்டினார்களே! அதைக் கண்டித்து நாங்கள் புகார் கொடுத்த போது, இந்த காவல்துறை என்ன செய்தது? அவர்களை தூக்கி உள்ளே வைக்காமல், அவர்களுக்கு அறிவுரை சொல்லுகின்றோம் என்று சொல்லி பூசி மெழுகினீர்களே! இதுதான் நீதியா?. நாங்கள் அறிவிப்பூர்வமாக நோட்டீஸ் வெளியிட்டால் எங்கள் மீது பொய் வழக்கு. இந்து முன்னணியினர் எங்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து போஸ்டர் ஒட்டினால் அவர்களுக்கு அறிவுரையா?

திருவள்ளூரில்…


முஸ்லிம்களுக்கு ஜிஹாத் என்றால் ரத்தம் குடிக்கும் எங்கள் காளிக்கு பலி பூஜை நடத்த நாங்கள் தயார் என்று சொல்லி போஸ்டர் ஒட்டி, இந்துக்களை எதிர்ப்பவர்களை காளி என்ற இந்துக்கடவுளுக்கு இரத்த காணிக்கை தருவோம் என்ற ரீதியில் அப்பட்டமான பயங்கரவாதத்தை தூண்டிவிட்டார்களே! அதைத் தடுக்க நீ எடுத்த நடவடிக்கை என்ன?

ஈரோட்டில்…


ஈரோடு மாவட்டம் கோபியில் முஸ்லிம்களுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்தால் ஒரு முஸ்லிமும் நடமாட முடியாது என்று இந்து முன்னணியினர் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தை குறித்து, நாங்கள் புகார் கொடுத்தால் அங்கு உள்ள சத்தியமங்கலம் டி.எஸ்.பி.முத்துசாமியும், இன்ஸ்பெக்டர் சௌந்தர ராஜனும் கூறுகிறார்கள், “அவ்வாறு துண்டு பிரசுரம் கொடுப்பது அவர்களுடைய கருத்து சுதந்திரம். இதற்கெல்லாமா கேஸ் போடுவார்கள்” என்று.

அப்படியானால், மற்றவர்கள் எங்களை கொல்ல வேண்டும் என்று சொல்லி நோட்டீஸ் போட்டால் அவர்களுக்கு அது கருத்து சுதந்திரம். நாங்கள் அறிவுப்பூர்வமாக நோட்டீஸ் வெளியிட்டால் நாங்கள் தீவிரவாதி; கோவையில் குண்டு வைத்தவர்கள் என்ற பட்டமா?

அப்படியானால் நாங்கள் எந்தப் பிரச்சாரமும் செய்ய அனுமதியில்லை; அப்படி பிரச்சாரம் செய்தால் நாங்கள் தீவிரவாதி என்று சொல்ல வருகின்றீர்களா?

இதுவெல்லாம் திட்டமிட்டு நடந்ததா? அல்லது முதல்வர் கூட்டிய கூட்டத்திற்குப் பிறகு அவ்வாறு உத்தரவு போடப்பட்டதா?

சரியான முறையில் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காக நல்லிணக்கத்திற்காக பாடுபடும் எங்களுக்கே தீவிரவாதி என்ற முத்திரை குத்தப் பார்க்கிறீர்களே! எங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?

நாங்கள் வேறு வழியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எங்களை தள்ளப் பார்க்கின்றீர்களா? அப்படி நாங்கள் வேறு வழியை தேர்ந்தெடுத்தால் இந்த நாடு தாங்காது. எங்களது மார்க்கத்தில் தடுக்கப் பட்டுள்ளதால் நாங்கள் அதைச் செய்யமாட்டோம்.

இப்படிப்பட்ட அநியாயத்திற்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்தினால் முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கைகள் உடையும் அளவிற்கு அடித்து இரத்தக்களறியாக்கி மிருக வெறித்தாக்குதல் நடத்தினீர்களே! நாங்கள் என்ன செய்தோம்?

பேருந்தை கல் வீசித் தாக்கினோமா”?
பொதுச் சொத்துக்களுக்கு சேதம்விளைவித்தோமா?
போலீசைத் தாக்கினோமா?
சாலை மறியல் செய்தோமா?

எங்கள் மீது தடியடி நடத்தினாயே! 50 இந்து முன்னணியினர் சேர்ந்து 20.12.12 அன்று திருவல்லிக்கேணியில் சாலை மறியல் செய்தார்களே! அவர்கள் மீது தடியடி நடத்தினாயா? திருவல்லிக்கேணியை குட்டி பாகிஸ்தானாக முஸ்லிம்கள் உருவாக்க நினைக்கின்றார்கள் என்று பிட்நோட்டீஸ் கொடுத்து மதவெறியைத் தூண்டிய இந்து முன்னணியினரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தாயா?

அப்படியானால் இது திட்டமிட்ட சதியா இல்லையா?

போராட்டம் நடத்துவதற்கு முன்பாகவே பெரும் போலீஸ் படையை குவித்தாயே! இது திட்டமிட்ட சதியா இல்லையா?

போலீஸ்கள் அனைவரும் பேட்ஜுகள் இல்லாமல் திருடர்களைப் போல நின்றார்களே! அயனாவரம் ஏ.சி.கிருஷணசாமி என்பவர் கான்ஸ்டபிள் தரத்துக்கு இறங்கி லத்தியால் முஸ்லிம்களை கொலை வெறியோடு தாக்கினாரே! இதுவெல்லாம் திட்டம் போட்டு முஸ்லிம்க்ளை கருவறுத்ததா? இல்லையா?
27 முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி விட்டு, லேசான முறையில் தடியடி நடத்தி கலைத்தோம் என்று சொல்கின்றாரே உயர் அதிகாரி. கை எலும்புகள் முறியக்கூடிய அளவிற்கு அடிப்பதுதான் லேசான அடியா? 8வயது சிறுவனென்றும் பாராமல் அவனையும் மண்டையை உடைத்துள்ளீர்களே! இது முஸ்லிம்கள் மீது கொண்ட வெறியா? இல்லையா?

இந்த அநியாயத்தை எளிதில் விட்டுவிடமாட்டோம்:

இது அனைத்தையும் சும்மா விடமாட்டோம்.
உச்ச நீதி மன்ற நீதிபதி வரை செய்தியை கொண்டுபோய் சேர்த்துள்ளோம்.
மனித உரிமை கமிஷனுக்கு புகார்கொடுத்துள்ளோம்.
சிறுபான்மை கமிஷனுக்கும் புகார் கொடுக்கடெல்லி வரை செல்லவுள்ளோம்.
டெல்லியிலிருந்து உனக்கு கேள்வி வரும்.
மனித உரிமை கமிஷனிலிருந்து கேள்வி வரும்.
உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம்.
உயர் நீதி மன்றத்திற்கு நீ பதில் சொல்லியாகவேண்டும்.

இதை முஸ்லிம் சமுதாயம் சும்மா விடாது. இதை இப்படியே விட்டுவிட்டால் எந்த முஸ்லிமும் இனிமேல் உரிமை கேட்டு போராட முடியாது. நையப் புடைப்பார்கள். நமது அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற இயலாது. எனவே முஸ்லிம் சமுதாயம் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது.

ஒரு லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கும் சிறைநிரப்பும் போராட்டம்:

எங்களது ஜனநாயக உரிமையை பறித்து, நாங்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட வந்தபோது எங்களை பலவந்தப்படுத்தி எங்களது உணர்வுகளை நாங்கள் சொல்வதற்கு முன்னாலேயே கைது செய்து, எங்கள் மீது தடியடி நடத்தி இரத்த ஆறு ஓட்டினாயே!

இந்த சமுதாயம் சிறைசெல்ல அஞ்சாத சமுதாயம் என்பதை காவல்துறை காட்டுமிராண்டி மிருகங்களுக்கு உணர்த்தும் வகையில், எங்கு நீ தடியடி நடத்தினாயோ அதே திருவல்லிக்கேணியில் வரக்கூடிய ஜனவரி 3ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு ஒரு லட்சம் முஸ்லிம்கள் திரளும் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

நீ எங்களை கைது செய்து உள்ளே வைக்கத்தானே ஆசைப்பட்டாய். ஒரு லட்சம் பேரையும் உன்னால் இயன்றால் கைது செய்து பார். அங்கு வந்து நீ தடியடி நடத்து. இந்த சமுதாயம், ஓடாமல் பின்வாங்காமல் அங்கு நின்று காட்டும். கைது செய்து வேனில் ஏற்றி சிறையில் அடைத்து, எங்களை 15நாள் ரிமாண்ட் பண்ணிப்பார்.

ஜனவரி 3ஆம் தேதிக்குள் திருவல்லிக்கேணி ஏ.சி.செந்தில் குமரன், திருவல்லிக்கேணி சரக டி.சி.கிரி, அயனாவரம் ஏ.சி.கிருஷ்ணசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அந்த போராட்டத்திற்குப் பிறகும் நடவடிக்கை எடுக்க மறுத்தால் அடுத்த கட்டப்போராட்டம் தொடரும்.

முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம்:

அடுத்த கட்ட போராட்டம் என்ன தெரியுமா?. காவித்துறையான காவல்துறை மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம். அது பெயரளவிலான முற்றுகையாக இருக்காது. நிஜமான முற்றுகையாக இருக்கும். அப்போது உன் தடியடிகளுக்கு மட்டுமல்ல; துப்பாக்கி தோட்டாக்களுக்குக்கூட அஞ்சாத கூட்டமாக அந்தக்கூட்டம் அங்கு வந்து நிற்கும் என்பதை குறித்து வைத்துக் கொள்” என்று ஆக்ரோஷமாக பேசி முடித்தார்.

அனைத்து அமைப்புகளும் ஓரணியில்…

1992 ஆம் ஆண்டு பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு அனைத்து இஸ்லாமியர்களும் ஒரே கருத்தில் இருக்கும் நிலை தற்போது முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்ட இந்த தடியடி விஷயத்தில் ஏற்பட்டுள்ளது என்றும், இது தவ்ஹீத் ஜமாஅத் மேட்டராக அல்லாமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாய மேட்டராக மாற்றியுள்ளீர்கள் என்றும், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் காவல்துறையின் இந்த அயோக்கியத்தனத்தை ஒருமித்த குரலில் எதிர்க்கின்றன என்றும், இது போன்ற நிகழ்வுகள் நடப்பது அரிது என்றும் பீஜே தனது உரையில் குறிப்பிட்டார்.

நல்ல அதிகாரிகளும் காவல்துறையில் உள்ளனர்:

காவல்துறையை இந்த அளவிற்கு தாக்குவதை பிற காவல்துறை அதிகாரிகள் தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாது. நாங்கள் தாக்குவது அந்த குறிப்பிட்ட அநீதி இழைத்த அந்த மூன்று அதிகாரிகளைத்தான். காவல்துறைக்கு இழிவை ஏற்படுத்திய அந்த அதிகாரிகளைத்தான் நாங்கள் தாக்குகின்றோமே ஒழிய காவல்துறையில் நல்ல அதிகாரிகளும் உள்ளனர் என்பதையும் பீஜே சுட்டிக்காட்டினார்.

வரலாற்றை புரட்டிப்போட்ட கூட்டம்:

இவ்வளவு கொட்டும் மழையிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பது முஸ்லிம்கள் எந்த அளவிற்கு இந்த விஷயத்தில் பாதிக்கப்படுள்ளார்கள் என்பதை காட்டுகின்றது. மண்ணடி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் மிகப்பெரிய அளவிற்கு மக்கள் திரள் திரண்டது. இதுவரையில் மண்ணடியில் இப்படி ஒரு கூட்டம் நடந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு மக்கள் ஆர்வத்துடன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு வெளியூரிலிருந்து யாரும் வந்துவிட வேண்டாம் என்று அனைத்து மாவட்டங்களுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பி கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். இந்த பொதுக்கூட்டத்திற்கு வரவேண்டாம். 3ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திற்கு வாருங்கள் என்று நாங்கள் மாவட்டங்களுக்கு சொல்லியுள்ளோம் என்பதையும் பீஜே அந்த பொதுக்கூட்டத்தில் பதிவு செய்தார்.

Saturday, January 05, 2013

மாணவிகள் குட்டை பாவாடை அணிய தடைவிதிக்க வேண்டும்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. யோசனை!


மாணவிகள்குட்டைபாவாடைஅணியதடைவிதிக்கவேண்டும்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. யோசனை!


இஸ்லாம் கூறும் பர்தா முறை என்பது பெண்களை இழிவுபடுத்துகின்றது; பெண்களை இஸ்லாம் பர்தா அணியச் சொல்லி அடிமைப்படுத்துகின்றது என்று சொல்லி இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் தற்போது நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளின் வாயிலாகவும் பெண்களுடைய பாதுகாப்பிற்கு இஸ்லாம் கூறும் தீர்வுகள்தான் சரியானது என்பதை உலகமே உணர ஆரம்பித்துள்ளது.

 பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்தியா முழுவதுமுள்ள அனைத்து பெண்களும் முஸ்லிம் பெண்களைப்போல பர்தா அணிய வேண்டும்; அதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பு என்று மதுரை ஆதினம் கூறிய கருத்துக்கள் குறித்து இந்த வார உணர்வலைகளில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

எதிரிகள் மூலம் வலுப்பெறும் இஸ்லாம்:

 அதேபோல இதேபோன்றதொரு கருத்தை இஸ்லாத்தை எதிர்க்கக்கூடிய மதவாத கட்சியான பி.ஜே.பி.யின் எம்.எல்.ஏ கூறியுள்ளார். இஸ்லாத்தை எதிர்க்கும் எதிரிகளைக் கொண்டும் வல்ல ரஹ்மான் இந்த மார்க்கத்தை வலுப்படுத்துவான் என்ற நபிகளாரின் முன்னறிவிப்பை உண்மைப்படுத்தும் விதமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குட்டைப் பாவடைக்கு தடை கோரிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.:

 தனியார் பள்ளிகளில், மாணவிகளுக்கு, குட்டைப் பாவாடையை, சீருடையாக வைத்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல்களுக்கு, வழி வகுக்கும் இதுபோன்ற உடைகளுக்கு, தடை விதிக்க வேண்டும்' என, ராஜஸ்தான் பா.ஜ.க - எம்.எல்.ஏ., பன்வாரி லால் சிங் வலியுறுத்தியுள்ளார்.

 ராஜஸ்தான், அல்வார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வான, பா.ஜ.க.வைச் சேர்ந்த, பன்வாரி லால் சிங், அம்மாநில தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதம்:

 பெரும்பாலான, தனியார் பள்ளிகளில், மாணவியருக்கான சீருடைகள், சற்றும் பொருத்தமற்றதாக உள்ளன.

 மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து வர வேண்டும்' என, வற்புறுத்துகின்றனர். அத்துடன், குட்டைப் பாவாடையை சீருடையாகவும், பல்வேறு பள்ளிகளும், அங்கீகரித்துள்ளன. இதற்கு தடை விதிக்க வேண்டும்.

 மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து வருவது, பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கும், கேலி, கிண்டல்களுக்கும், வழி வகுத்து, ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

 பள்ளிகளுக்கு நடந்து செல்லும்போதும், பஸ் ஏறுவதற்காக, பஸ் ஸ்டாப்புகளில், காத்திருக்கும்போதும், குட்டைப் பாவாடை அணிந்துள்ள மாணவியர், பலரின், கேலி, கிண்டல்களுக்கு ஆளாகின்றனர்.

 ஜெய்ப்பூரை பொறுத்தவரை, பெரும்பாலான பள்ளிகளின், சீருடை, குட்டைப் பாவாடையாகத்தான் உள்ளது.

 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும், தற்போதைய சூழலில், இந்த உடை, சற்றும் பொருத்தமற்றது. குட்டைப் பாவாடைக்கு பதிலாக, வேறு நல்ல உடையை பரிந்துரைக்க வேண்டும்.

 இவ்வாறு அந்த கடிதத்தில், பன்வாரி லால் சிங், வலியுறுத்தியுள்ளார்.

குட்டை பாவாடை அணிந்தால் 6மாதம் சிறைத் தண்டனை:

ஆப்பிரிக்காவில் குட்டை பாவாடை அணியத்தடை :

 ஆப்பிரிக்கா கண்டத்தில் சுவாசிலாந்து என்ற குட்டி நாடு உள்ளது. இது சுமார் 200 கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு இன்னும் மன்னராட்சி நடக்கிறது.

 இந்த நாட்டில் கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புகார்கள் வந்ததால் அதற்குரிய காரணம் ஆராயப்பட்டது.

 பெண்கள் குட்டை பாவடை அணிவதால்தான், ஆண்களின் பார்வை பெண்களிடம் திரும்பி, கற்பழிப்பு குற்றங்கள் அதிகரிப்பதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி எச்லீட்டா கூறியதாவது:

 ஸ்வாசிலாந்தில் பெண்கள் இனி குட்டை பாவடை அணியக்கூடாது. மீறி அணிந்தால் அவர்களுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

 இங்கு பெண்கள் குட்டை பாவாடை (மினி ஸ்கர்ட்) அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதோடு கழுத்து இறக்கமான மேல் சட்டை அணியவும் தடை செய்யப்பட்டுள்ளது.

 இதுபோன்ற ஆடை அணிவதால் ஆண்களுக்கு சபலம் ஏற்பட்டு கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே அவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அரசின் இந்த அறிவிப்பை மீறி குட்டை பாவாடை அணியும் பெண்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அதே நேரத்தில் நாட்டின் பாரம்பரிய விழாக்களின்போது நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் குட்டை பாவாடை அணிய அனுமதி வழங்கி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 இதுபோன்ற விழாக்காலங்களில்தான் அதிகமான சேட்டைகள் நடைபெறும் என்பதையும் அவர்கள் கூடிய விரைவில் உணர்ந்து அந்த விதிவிலக்கையும் மாற்றிக் கொள்வார்கள்.

 ஆடை விஷயத்தில் பெண்களுக்கு கட்டுப்பாடு தேவை என்ற இந்த கருத்தை இவர்கள் மட்டும் சொல்லவில்லை. இதோ இந்த கருத்தை வலியுறுத்துவோரின் பட்டியல்:

தமிழகத்தில்....

ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சுற்றறிக்கை:

 மாணவியரையும், மாணவர்களையும் பாதிக்கும் வகையிலான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது. அது பொதுமக்கள் மத்தியிலும் தவறான கருத்துக்களை ஏற்படுத்த வழி வகுத்து விடும் என்று ஆசிரியைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சில மாதங்களுக்கு முன்பு சுற்றறிக்கை அனுப்பியது.

மணிப்பூரில்....

மாணவ அமைப்புகள் எடுத்த முடிவு :

 மணிப்பூர் மாநிலத்தில் பாதம் வரை அணியப்படும் பானெக் என்கிற பாரம்பரிய உடையைத்தான் மாணவிகள் தங்களுடைய கல்வி நிறுவனங்களுக்கு அணிந்து வர வேண்டும். முழங்கால் தெரியும்படி வடிவமைக்கப்பட்ட எந்தப் பள்ளி, கல்லூரி சீருடையையும் ஏற்க இயலாது என்று மாணவர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்திருந்தது. தங்களது உடலை முழுமையாக மறைக்கக்கூடிய ஆடைகளைத்தான் மாணவிகள் அணிய வேண்டும் என்று அங்குள்ள மாணவர் அமைப்புகள் மாணவிகளுக்கு உத்தரவிட்டன.

மத்திய பிரதேசத்தில்....

மாநில அமைச்சரின் கருத்து:

 கடந்த ஜுலை மாதம் குவாஹாத்தியில் 20 ஆண்கள் சேர்ந்து ஒரு சிறுமியை நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச மாநில தொழில் துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக்கூடாது. பிறர் தங்களைப் பார்த்தாலே மதிக்கும் அளவுக்கு பெண்கள் உடைகள் இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷடவசமாக பெண்களின் ஆடைகள் ஆண்களைத் தூண்டும் வகையில் உள்ளன. இதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

உத்தர பிரதேசத்தில் ....

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சொன்ன உண்மை:

 கொல்கத்தா புறநகரில் அமைந்துள்ள பரசாத் ரெயில் நிலையத்தில் 18 வயது மாணவி ஒருவர் மானபங்கம் செய்யப்பட்டார். 10 பேர் கொண்ட கும்பல் இந்த செயலைச் செய்தது.

 இது குறித்து கருத்துச் சொன்ன திரிணாமுல் காங்கிரஸின் எம்.எல்.ஏ.சிரஞ்ஜித் அந்த சம்பவத்தைக் கண்டித்தார். அதே சமயத்தில் ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது. இளம் பெண்களும், மாணவிகளும் நாகரீகம் என்ற பெயரில் ஆபாசமாக ஆடை அணிகின்றனர். இதுதான் இளைஞர்களை தவறு செய்யத் தூண்டுகிறது. பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அவசியம். மினி ஸ்கர்ட், அங்கங்களை ஆபாசமாக வெளிப்படுத்தும் உடைகளை அணிவதை பெண்கள், மாணவிகள் தவிர்க்க வேண்டும். என்று அவர் கூறினார்.

ஸ்ரீலங்காவில்....

 அரைகுறை ஆடைகளை அணியும் பெண்களே பாலியல் வன்முறைக்கு காரணம். எங்களது நாட்டு பெண்களைப் பாருங்கள். ஒன்று கைகள் இல்லாத அல்லது மிகவும் குட்டையான ஆடைகளை அணிகின்றனர். இதனால்தான் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன என ஸ்ரீலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்” .

இங்கிலாந்தில்....

 பிரிட்டனின் லண்டன் நார்த்தாம்டன்ஷயரில் மவுல்டன் அறிவியல் பள்ளியில் மாணவியர் தொடை தெரியும் அளவுக்கு பாவாடைகளை அணிந்து வருவது அதிகப்படியான கவர்ச்சியாக உள்ளது. இதனால் தேவையில்லாத பிரச்னைகள் உருவாகலாம் என்பதால் குட்டை பாவாடையை ரத்து செய்துள்ளோம் என்று அந்த பள்ளிக்கூட நிர்வாகம் அறிவித்தது.

 மதுரை ஆதினம் முதற்கொண்டு பி.ஜே.பி வரை, ஸ்ரீலங்கா தொடங்கி லண்டன் வரை இஸ்லாம் கூறும் நிலைப்பாட்டை நோக்கி வருகின்றார்கள் என்றால் இந்த பிரச்சனைக்கு மட்டுமல்ல; உலகில் மக்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் கூறும் தீர்வுகள்தான் சரியானவை என்பதை இனி இந்த உலகத்தில் மறுக்க எவரும் உண்டோ!

 இவர்கள் இப்பொழுது சொல்லும் இந்த செய்தியை 1400 ஆண்டுகளுக்கு முன்பாக வல்ல இறைவன் தனது திருமறையில் கூறிக்காட்டுகின்றான்:

 நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்-ஆன் 33 : 59

அதிரை வரதட்சணை ஒழிப்பு மாநாடு (வீடியோ)


அதிரை வரதட்சணை ஒழிப்பு மாநாடு (வீடியோ)


பல ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டிணம் கடல்கரைத் தெருவில் உள்ள தர்கா விற்கு எதிரில் உள்ள கூத்து கொட்டகையில் 'வரதட்சணை ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இதில் சகோதரர் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு அற்புதமான உரையை நிகழ்த்தினார். வரதட்சணையில் ஊரி திளைத்த அதிரை மக்களை சிந்திக்க வைத்தது அவரின் வீரிய பேச்சு . பல இளைஞர்கள் வரதட்சணை வாங்குவதை விட்டும் தங்களை தூரமாக்கி கொண்டார்கள்..

ஒரு காலத்தில் நமக்கு தவ்ஹீத் சிந்தனை வர காரணமாக இருந்த,நமக்கு ஆசானாக இருந்த சகோதரர்கள்இன்று கொள்கையில் தடம்புரண்டு போய் என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்பவர்கள். ஒரு நோட்டிசை வைத்து படம் காட்டுகிறார்கள்.அது சம்மந்தமாக நாம் கேள்வி கேட்கும் போது நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தர்கா கூடாது என்று பிரச்சாரம் செய்தவர்கள் என்றும் அப்போது நாம் பிறந்து கூட இருக்க மாட்டோம் என்று சொன்னார்கள் 


இதற்கு பதிலடி நாம் கொடுத்த பின் ,அனேகமா நீங்கள் பிறந்து இருக்க மாட்டீர்கள் என்று எச்சரிக்கையுடன் தான் கூறினோம் அதை நீங்கள் கவனிக்க வில்லை என்று வார்த்தை விளையாட்டு விளையாடினார்கள்.சத்தியத்தை சொல்ல வயது முக்கியம் இல்லை என்பதை கூட மறந்து விட்டார்கள் .ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது .பழம் பெருமை பேசி ஆக போவது ஒன்றும் இல்லை .அன்று செய்த பிரச்சாரம் இன்று ஏன் செய்யவில்லை என்று நாம் கேட்க .அதற்கு மீண்டும் ஒரு வார்த்தை விளையாட்டு அவர்களின் அமைப்பு ஆரம்பிக்க பட்ட வருடத்தை சொல்லிவிட்டு அதன் பின் கடற்கரை தெருவில் (கவனிக்கவும் கடற்கரை தெருவில் அவர்கள் அமைப்பில் இல்லை) வரதட்சணை மாநாடு நடத்தினோம் என்று மீண்டும் பழம்கதைகளை பட்டியலிட்டார்கள் .
ஆதாரம் கேட்டு பழகிய நாம் மீண்டும் ஆதாரம் கேட்போம் அப்போது எச்சரிக்கையாக கடல்கரைதெருவில் என்று தான் சொன்னோம் நீங்கள் கவனிக்கவில்லை என்று சொல்வார்கள்.ஒரு முஸ்லீம் இரண்டு தடவை குட்டுப் படமாட்டான் 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 6133)

இந்த வரதட்சணை ஒழிப்பு மாநாட்டை எங்கள் சொந்த அமைப்பு (அமைப்பு கூடாது , ஆனா நாங்க ஆரம்பித்தால் கூடும், நாங்க தலைவரா இருந்தா ரொம்பகூடும்) தான் நடத்தியது என்பது போன்று (மேலோட்டமாக பார்த்தால்) ஒரு பெரிய கப்சாவை விட்டுள்ளார்கள்

வரதட்சணை மாநாட்டை நாங்கள் தான் நடத்தினோம் என்பவர்கள் வரதட்சணை திருமணத்தை புறக்கணித்து வாழ்ந்தால் மக்கள் இவர்களை நம்புவார்கள்.

வரதட்சணை மாநாட்டை யார் நடத்தினார்கள், யார் நடத்துவார்கள், யார் இன்றும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை.



அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 04.01.13(வீடியோ )

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 04.01.13




அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 04 01 13 from Adiraitntj on Vimeo.

Friday, January 04, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் - உண்டு சுகிக்கவில்லை, உடுத்தி மகிழவில்லை (தொடர் 4)



இந்த ஆக்கங்கள் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூலிலிருந்து வெளியிடப்படுகிறது.

மாமனிதர் நபிகள் நாயகம் - உண்டு சுகிக்கவில்லை, உடுத்தி மகிழவில்லை (தொடர் 4)

உண்டு சுகிக்கவில்லை:

மனிதனின் முதல் தேவை உணவு தான். உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் அதிகம் சம்பாதிக்கிறான். முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகைய உணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம்.
'மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை' என்பதற்கு அவர்களின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

'எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். 'என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?' என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) 'பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம்' என விடையளித்தார்.

அறிவிப்பவர் : உர்வா
நூல் : புகாரி 2567, 6459

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோல் நீக்கப்பட்ட கோதுமையில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர்களில் ஒருவரான ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) இடம் கேட்டேன். அதற்கு அவர் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதேயில்லை' என்றார். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா?' என்று கேட்டேன். அதற்கவர் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் சல்லடையைப் பார்த்ததில்லை' என்றார். 'தோல் நீக்கப்படாத கோதுமை மாவைச் சக்காமல் எப்படிச் சாப்பிடுவீர்கள்?' என்று நான் கேட்டேன். அதற்கவர் 'தீட்டப்படாத கோதுமையைத் திருகையில் அரைப்போம். பின்னர் வாயால் அதை ஊதுவோம். உமிகள் பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்துச் சாப்பிடுவோம்' என்று விடையளித்தார்.

அறிவிப்பவர் : அபூ ஹாஸிம்
நூல் : புகாரி 5413

'நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை' என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 5374

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை' என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 5416, 6454

'ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக் குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டுக் காலை பதினைந்து நாட்களுக்குப் பிறகு (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவதற்காக) எடுத்து வைப்போம். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். 'இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் சிரித்து விட்டு 'குழம்புடன் கூடிய ரொட்டியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே' என விளக்கமளித்தார்.

நூல் : புகாரி 5423

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலி) இடம் நாங்கள் சென்றோம். ரொட்டி தயாரிப்பவர் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார். எங்களை நோக்கி 'சாப்பிடுங்கள்' என்று அனஸ் (ரலி) கூறி விட்டு 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லை. தமது கண்களால் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட ஆட்டைப் பார்த்ததில்லை' எனக் கூறினார்.

அறிவிப்பவர் : கதாதா
நூல் : புகாரி 5385, 5421, 6457

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து) 'எனது வீட்டிருந்து கோதுமை ரொட்டியையும், வாசனை கெட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோ, அல்லது வேறு ஏதேனும் தானியமோ இருந்ததில்லை' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 2069, 2508

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு சுலைம் (ரலி) இடம் வந்து இதைக் கூறினேன். அதற்கவர் 'என்னிடம் ஒரே ஒரு ரொட்டித் துண்டும், சில பேரீச்சம் பழங்களும் தான் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும் என்றார்' என நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ்
(ரலி) அறிவிக்கிறார்.

நூல் : முஸ்லிம் 3802

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழராக இருந்த அபூ ஹுரைரா (ரலி) ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றார். அவர்கள் முன்னே பொறிக்கப்பட்ட ஆடு வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அபூ ஹுரைராவையும் சாப்பிட அழைத்தனர். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீட்டப்படாத கோதுமை ரொட்டியையே வயிறார சாப்பிடாத போது நான் இதைச் சாப்பிட மாட்டேன்' என அபூ ஹுரைரா (ரலி) மறுத்து விட்டார்.

நூல் : புகாரி 5414

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரிடம் 'குழம்பு ஏதும் உள்ளதா?' எனக் கேட்டனர். 'வினிகரைத் தவிர வேறு ஏதும் எங்களிடம் இல்லை' என்று குடும்பத்தினர் கூறினார்கள். அதைக் கொண்டு வரச் செய்து அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். 'வினிகர் சிறந்த குழம்பாக இருக்கிறதே' என இரு முறை கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 3824

நான் எனது வீட்டின் நிழல் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அவர்களைக் கண்டதும் அவர்களை நோக்கிச் சென்று அவர்களின் பின்னால் நடக்கலானேன். 'அருகே வா' என்று அவர்கள் அழைத்ததும் அருகில் சென்றேன். என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்கள். தமது வீட்டுக்குச் சென்றவுடன் 'காலை உணவு ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். வீட்டிலுள்ளவர்கள் 'இருக்கிறது' என்று கூறி விட்டு மூன்று ரொட்டியைக் கொண்டு வந்து வைத்தார்கள். 'குழம்பு ஏதும் உள்ளதா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். 'சிறிதளவு வினிகரைத் தவிர வேறு ஏதும் இல்லை' என்று குடும்பத்தினர் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அதைக் கொண்டு வாருங்கள்' என்றார்கள். வீட்டிலுள்ளவர்கள் கொண்டு வந்தனர். எனக்கும், அவர்களுக்கும் தலா ஒரு ரொட்டியை முன்னால் வைத்தார்கள். மூன்றாவது ரொட்டியைச் சரி பாதியாக்கி ஒரு பாதியை எனக்கு முன்னால் வைத்து விட்டு இன்னொரு பாதியைத் தமக்கு வைத்துக் கொண்டார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : முஸ்லிம் 3826

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்தில் பசியின் அறிகுறியைக் காண்கிறேன்; எனவே அவர்களுடன் சேர்த்து ஐந்து நபர்களுக்கான உணவைத் தயார் செய்வீராக!' என்று அபூ ஷுஐப் (ரலி) தமது ஊழியரிடம் கூறினார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்களுடன் (விருந்துக்கு அழைக்கப்படாத) இன்னொருவரும் சேர்ந்து கொண்டார். 'இவர் எங்களைப் பின்தொடர்ந்து வந்து விட்டார். இவருக்கும் அனுமதியளிப்பதாக இருந்தால் அனுமதியளிப்பீராக! இல்லாவிட்டால் இவர் திரும்பிச் சென்று விடுவார்!' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ ஷுஐப் (ரலி) 'இவருக்கும் அனுமதி அளிக்கிறேன்' என்றார்.

நூல் : புகாரி 2081, 2456, 5434, 5461

ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைக் கண்டனர். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்ன? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அவ்விருவரும் பசி' என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வந்துள்ளேன்' என்றார்கள்... ஹதீஸ் சுருக்கம்.

நூல் : முஸ்லிம் 3799

இந்த வரலாற்றுச் சான்றுகளைப் பல கோணங்களில் நாம் அலசிப் பார்க்க வேண்டும்.

ஏழ்மையிலேயே காலத்தைக் கழிக்கும் ஒருவர் மிகவும் எளிமையான உணவை உட்கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 25 வயது முதல் நாற்பது வயது வரை மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்கள். காய்ந்து போன ரொட்டியைச் சாப்பிடும் நிலையில் அவர்கள் இருந்ததில்லை.

செல்வச் செழிப்பை ஏற்கனவே அனுபவித்து பழக்கப்படாத, வாய்ப்பும் வசதியும் கிடைக்கப் பெறாத ஒருவர் இத்தகைய உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் நாம் ஆச்சரியப்பட முடியாது.

ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலிமை மிக்க ஆட்சித் தலைவராக இருந்தார்கள். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அனுபவித்தால் யாரும் எதிர்க் கேள்வி கூட கேட்க மாட்டார்கள் என்ற நிலையும் இருந்தது. அவர்கள் உருவாக்கிய அரசாங்கக் கருவூலத்தில் ஒரு வேளை பணம் இருந்திருக்காது என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.

அவர்கள் உருவாக்கிய அரசாங்கம் தன்னிறைவு பெற்றிருந்தது போல் உலகில் இன்று வரை எந்த அரசாங்கமும் தன்னிறைவு பெற்றதில்லை. (இதைப் பின்னர் நாம் விளக்குவோம்)
  • அப்படி இருந்தும் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட்டு அந்த மாமன்னரால் எப்படி வாழ்க்கை நடத்த முடிந்தது?
  • குழம்பு கூட இல்லாமல் வினிகரில் தொட்டு அதையும் ருசித்துச் சாப்பிடுவது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது?
  • காய்ந்த ரொட்டியும், வினிகரும் கூட இல்லாமல் வெறும் பேரீச்சம்பழத்தை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பச்சைத் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு பல மாதங்களை அவர்களால் கழிக்க முடிந்தது எப்படி?
  • அந்த உணவைக் கூட தினமும் சாப்பிட முடியாத நிலையை எப்படி அவர்களால் சகித்துக் கொள்ள முடிந்தது?
  • ஒரு நாள் தயாரிக்கப்பட்ட பழைய குழம்பை பதினைந்து நாட்களுக்குப் பிறகு பயன்படுத்துவதற்கு நிகரான வறுமையான வாழ்க்கையை உலக வரலாற்றில் நம்மால் காண முடியுமா?
  • முதலாளியின் பசியைக் கண்டு அவரிடம் வேலை பார்ப்பவர் பரிதாபப்பட்டு தனது வீட்டிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்கும் நிலையை உலகில் எந்த மன்னரேனும், எந்த முதலாளியேனும் சந்தித்திருக்க முடியுமா?
  • காய்ந்த ரொட்டியையும், தொட்டுக் கொள்ள வாசனை ஏதும் இல்லாத உருக்கிய கொழுப்பையும் தமது வேலைக்காரர் வீட்டிருந்து வாங்கி பசியை நீக்கிய தலைவர் கற்பனைக் கதையில் கூட இருக்க முடியுமா?
  • பசிக் களைப்பை அவர்களின் முகத்தில் கண்டு சாதாரணக் குடிமகன் ஒருவர் விருந்துக்கு அழைக்கும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கை எளிமையாக இருந்துள்ளது எப்படி?

இந்தச் சான்றுகளை ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பாருங்கள்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவில்லை; செல்வத்தைக் குவிக்கவில்லை என்பது விளங்கும்.

இந்த உணவுப் பழக்கத்தை மட்டும் வைத்து நபிகள் நாயகம் தமது பதவியைப் பயன்படுத்தி செல்வத்தைக் குவிக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும்? எளிமையான உணவுப் பழக்கம் உடைய எத்தனையோ பேர் வளமான நிலையில் உள்ளனரே? வேறு வகையான சுகபோகங்களை அனுபவிக்கின்றனரே! அது போல் நபிகள் நாயகமும் தமது பதவியின் மூலம் செல்வத்தைக் குவித்து வேறு வகையான சுக போகங்களை அனுபவித்தார்களா என்றால் அதுவும் இல்லை.

உடுத்தி மகிழவில்லை:

அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன.

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி 'இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்' என்று குறிப்பிட்டார்.

நூல் : புகாரி 3108, 5818

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து 'இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்' என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 1277, 2093, 5810

போர்வையை வேட்டியாக அணிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடை பற்றாக்குறை இருந்துள்ளது என்பதையும், உபரியாக ஒரு ஆடை இருந்தால் நல்லது என்று ஆடையின் பால் தேவை உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

மேலும் உடனேயே அதை வேட்டியாக அணிந்து கொண்டதிலிருந்து எந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடைத் தட்டுப்பாடு இருந்துள்ளது என்பதையும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிரு சந்தர்ப்பங்களில் இறுக்கமான கம்பளிக் குளிராடை அணிந்திருந்ததாகவும், மிகச் சில நேரங்களில் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்ததாகவும் சான்றுகள் உள்ளன. இதைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் ஒரு போர்வையை மேலே போர்த்திக் கொள்வார்கள். இரு கைகளும் வெளியே இருக்கும் வகையில் போர்வையின் வலது ஓரத்தை இடது தோளின் மீதும், இடது ஓரத்தை வலது தோளின் மீதும் போட்டுக் கொள்வார்கள். இதனால் அவர்களின் அக்குள் வரை முழுக் கைகளும் வெளியே தெரியும். பெரும்பாலும் அவர்களின் மேலாடை இதுவாகத் தான் இருந்துள்ளது. போர்வை சிறியதாக இருந்தால் கீழே ஒரு போர்வையைக் கட்டிக் கொள்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை விரித்து வைப்பார்கள்.

நூல் : புகாரி 390, 807, 3654

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையின் போது தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள்.

நூல் : புகாரி 1031, 3565

மக்கள் அனைவரையும் திரட்டி நடத்தப்படும் மழைத் தொழுகையின் போது கூட அக்குள் தெரியும் அளவுக்கு போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக அணிந்திருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் வரியைத் திரட்ட ஒருவரை அனுப்பினார்கள். நிதி திரட்டி வந்த அவர் 'இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இது உங்களுக்கு உரியது' என்றார். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவர் தனது வீட்டிலோ, தனது தாய் வீட்டிலோ போய் அமர்ந்து கொள்ளட்டும்! இவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? என்று பார்ப்போம்' எனக் கோபமாகக் கூறினார்கள். பின்னர் அவர்களின் அக்குளை நாங்கள் பார்க்கும் அளவுக்கு தமது கைகளை உயர்த்தி 'இறைவா! நான் எடுத்துச் சொல்லி விட்டேனா?' எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 2597, 6636, 6979, 7174, 7197

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலாடை பெரும்பாலும் சிறு போர்வையாகத் தான் இருந்தது என்பதையும் இதன் காரணமாகவே அவர்களின் அக்குள் தெரிந்துள்ளது என்பதையும் இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

மாமன்னராகவும், மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நிலையில் தம் பதவியையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி அணிந்து கொள்ளும் ஆடைகளைக் கூட அவர்கள் போதிய அளவுக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.

உணவு, உடை போன்ற வசதிகளுக்காகத் தான் மனிதன் சொத்துக்களைத் தேடுகிறான். எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். மேனியை உறுத்தாத வகையில் மெத்தைகளையும் விரும்புகிறான். இந்த வசதிகளையெல்லாம் நாற்பது வயதுக்கு முன் அனுபவித்துப் பழக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது நினைத்தால் அந்தச் சுகங்களை அனுபவிக்கலாம் என்ற நிலையில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் நேர்மைக்குச் சான்றாக அமைந்துள்ளது. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்

தவ்ஹீத் தலைமை அலுவலக ஜும்மா 04.01.13(வீடியோ )

தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலக ஜும்மா உரை
உரை :சகோ செய்யது இப்ராஹிம்
டெல்லி கற்பழிப்பு தீர்வு என்ன ?
மதுரை ஆதினம் கூறிய கருத்து தவறா ?




Thursday, January 03, 2013

இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா!


இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா!

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

அல்குர்-ஆன் 24 : 2

 திருமணம் முடித்த ஒரு நபர் விபச்சாரம் செய்ததற்காக அவருக்கு மரண தண்டணை வழங்கச் சொல்லி நபிகளார் உத்தரவிட்டார்கள்

(புகாரி : 6828 ஹதீஸின் கருத்து)

 குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினால்தான் குற்றங்கள் குறையும் என்பதும், அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சரியான நீதி கிடைக்கும் என்பதும்தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

 குற்றச் செயல்களுக்கு திருக்குர்-ஆன் கூறும் தண்டனைகளை அதிமேதாவிகளும், அறிவுஜீவிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்வோரும் விமர்சனம் செய்து வந்தனர். திருடியவர்களுக்கு கையை வெட்டுதல், விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கசையடி மற்றும் கல்லால் எறிந்து அவர்களை கொலை செய்யும் சட்டங்கள், கொலைக்குக் கொலை, கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல் என்று இஸ்லாம் கூறும் தீர்வுகள் காட்டுமிராண்டித்தனமானவை. அவைகள் மனித நேயத்திற்கு எதிரானவை. இஸ்லாம் வழங்கச் சொல்லும் தண்டனைகள் மனிதத்தன்மை அற்றவை. இந்தச் சட்டங்களை பின்பற்றச் சொல்லிவரும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஈவுஇரக்கமற்றவர்கள்; பழமைவாதிகள்; அடிப்படைவாதிகள்; பிற்போக்குவாதிகள் என்று குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசினர் இந்த அதிமேதாவிகள்.

 எந்த நாவினால் இஸ்லாத்தைக் குறைகூறினார்களோ! எந்த நாவு இந்த சட்டங்களெல்லாம் மனிததன்மையற்ற செயல்கள் என்று சொன்னதோ அதே நாவுகள் இப்போது இஸ்லாம் கூறும் இத்தகைய சட்டங்கள்தான் தற்போது வேண்டும் என்று சொல்கின்றன. வல்ல இறைவன் அவர்களை அவ்வாறு சொல்லவைத்துள்ளான்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம்:

கடந்த 16.12.12 அன்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் தனது ஆண் நண்பருடன் நள்ளிரவில் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பினார். அவர்கள் இருவரும் கதவுகள் மூடப்பட்ட சொகுசுப்பேருந்தில் பயணித்தனர். அப்போது அந்த 23 வயது மருத்துவக்கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை தாக்கிய ஐந்து பேர் கொண்ட கும்பல் அதே பேருந்தில் இருந்த அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது. இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பரை அந்தக் கும்பல் அடித்து தூக்கி வெளியே வீசி விட்டது.

 பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுள்ளது. அப்பெண் தற்போது அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் அடக்கம்.

 (குறிப்பு : மருத்துவக்கல்லூரி மாணவி நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஊர் சுற்றியது குறித்த தகவல்களை எந்த மீடியாக்களும் கண்டுகொள்ளவுமில்லை; கண்டிக்கவுமில்லை. அதுகுறித்த தகவல்கள் “பதில்கள்” பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதையும் காண்க..)

 தற்போது இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் போடவேண்டும் என இந்தியா முழுவதுமுள்ள அனைவரும் ஒருமித்து குரல் எழுப்பியுள்ளார்கள். போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்தப் பெண்ணை கற்பழித்த கயவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று மாதர் சங்க அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் இவ்வாறு அவர்களுக்கு வழங்கப்படும் தூக்குதண்டனையை அனைவரும் காணும் வகையில் நிகழ்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டத்தில் குதித்த மாணவிகள் வைத்துள்ளனர்.

இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வரச் சொல்லும் பா.ஜ.க:

 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சம்பவத்தைப்பற்றி நீண்ட நேரம் விவாதம் நடந்துள்ளது. நாடாளுமன்ற அவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவராக உள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ், மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர்களை தூக்கிலிட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார். அதே கோரிக்கையை அ.தி.மு.க சார்பில் மைத்ரேயன் வைத்துள்ளார்.

 எந்தவிதமான எதிர்ப்புமின்றி அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கையை வரவேற்றுள்ளனர். உள்துறை அமைச்சர் ஷிண்டேவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

 விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்று இஸ்லாம் கூறிய சட்டம் காட்டுமிராண்டித்தனம் என்று கூறியவர்கள்தான் தற்போது இஸ்லாம் கூறும் தீர்வை அரசியலமைப்புச் சட்டமாக வடிவமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் இஸ்லாம் கூறும் தீர்வை நோக்கி திரும்பியுள்ளது. இஸ்லாம் கூறும் தீர்வுதான் அனைத்து பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வாக அமையும் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் சேர்ந்து தற்போது நிரூபித்துக் கொண்டுள்ளது.

 கற்பழிப்பு என்பது பெண்ணின் சம்மதம் இல்லாமல் நிகழ்த்தப்படும் கொடூரச் செயல். விபச்சாரம் என்பது ஆண் பெண் இருவரும் இணைந்து இருவரும் சம்மதித்துச் செய்யும் ஈனச்செயல். கற்பழிப்புக்கு மரணதண்டனை வழங்கச் சொல்லும் இவர்கள் வெகுவிரைவில் விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண் பெண் ஆகிய அனைவருக்கும் பாகுபாடின்றி மரணதண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இதுமட்டுமே தீர்வாகுமா?:

 கற்பழிப்பு நிகழ்த்தியவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது மட்டுமே இந்த சம்பவங்களுக்கு முழுமையான தீர்வாக அமையாது. மாறாக பாலியல் ரீதியான குற்றச் செயல்களை தூண்டிவிடக்கூடிய வகையில் அமைந்துள்ள அனைத்து மானங்கெட்ட செயல்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிறுத்தப்பட்டால்தான் இதுபோன்ற குற்றச்செயல்கள் குறையும். இஸ்லாம் அதற்கான வழிகாட்டுதல்களையும் தெளிவாக வழங்குகின்றது.

இஸ்லாம் காட்டும் வழிமுறைகள்:

ஆண்களும் பெண்களும் தங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்

பெண்கள் ஆண்களுடன் குழைந்து பேசக்கூடாது

அந்நிய ஆண்களுடன் பெண்கள் தனித்திருக்கக் கூடாது

பெண்கள் தங்களுக்கு மணம் முடிக்கத்தடை செய்யப்பட்ட ஆண்களைத்தவிர மற்றவர்கள் முன்னிலையில் தங்களது உடல் அழகை வெளிக்காட்டக்கூடாது. பர்தாவைப் பேண வேண்டும்.
இதையும் மீறி யாரேனும் விபச்சாரம் செய்து பிடிபட்டு, அது தகுந்த 4 சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டால் அவர் திருமணம் முடிக்காதவராக இருந்தால் அவரை நூறு கசையடி அடிக்க வேண்டும்.
திருமணம் முடித்தவராக இருந்தால் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். அதை ஒருசாரார் பார்க்க வேண்டும்.

 மேற்கண்ட விஷயங்களை சரியாக கடைப்பிடித்தாலே பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு பெண்கள் ஆளாவதை தடுத்துவிடலாம். எய்ட்ஸ் நோயும் பரவாது. எய்ட்ஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கலாம்.

 ஆனால் நம் நாட்டில் விபச்சாரத்தை தூண்டிவிடக்கூடிய அத்தனை விஷயங்களுக்கும் லைசென்ஸ் கொடுத்து அவிழ்த்துவிட்டுவிட்டு, இவர்களே பெட்ரோலை ஊற்றி நெருப்பையும் பற்ற வைத்துவிட்டு அய்யகோ! எரிகின்றதே! என்று கூப்பாடு போடும் நிலைதான் தற்போது நிலவி வருகின்றது. அதற்குரிய ஆதாரத்தை வேறெங்கும் தேடத்தேவையில்லை. இந்த கற்பழிப்பு செய்தியை கண்டித்த போது பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்வே இதற்குச் சான்று பகர்கின்றது.

வேதம் ஓதும் சாத்தான்கள்:

 மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டது குறித்து ஹிந்தி நடிகையும், கூத்தாடி அமிதாப்பச்சனின் மனைவியுமான ஜெயாபச்சன் எம்.பி பேசும்போது கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், இந்த நாடாளுமன்றத்தில் உட்கார எனக்கு அவமானமாக உள்ளது. அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள் என்பதால் இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.

 எல்லோரும் ஓரிரு நாளில் இந்த சம்பவத்தை மறந்து விடுவார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் துரத்தி வரும், ஆறாத வடுவாக அது கூடவே இருக்கும்.

 மனதளவில் அந்தப் பெண் எவ்வளவு துயரத்தை அனுபவிப்பார். இதற்கெல்லாம் எப்படி ஈடு செய்ய முடியும் என்று கூறியபடி அவர் அழுதுள்ளார் என்று மீடியாக்கள் மிகவும் சோகத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.

 இதுபோன்ற மானக்கேடான விஷயங்கள் பரவுவதற்கும், மக்களில் பெரும்பாலானோர் காமவெறி பிடித்த மிருகங்களாக மாறுவதற்கும் ஜெயா பச்சன் போன்ற நடிகைகள் தங்களது சதையை வெளிக்காட்டி ஆட்டம் போடுவதுதான் காரணம் என்பதை யாராலும் மறுக்க இயலுமா? எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஆட்டோ டிரைவரோடு ஓடக்கூடிய அவலங்களுக்குக் காரணம் இது போன்ற நடிகைகள் தங்களது கல்லாவை நிரப்பிக்கொள்வதற்காக ஆபாசமாக நடிக்கும் திரைப்படங்களும், மெகா சீரியல்களும்தான் என்பதை யாராவது மறுப்பார்களா?

 விபச்சாரத்தை தூண்டக்கூடிய வகையில் சதை வியாபாரம் நடத்தும் இத்தகைய சதை வியாபாரிகள்தான் நாட்டில் நடக்கும் கற்பழிப்புகள் உள்ளிட்ட அனைத்துவிதமான பாலியல் ரீதியான குற்றங்களுக்கும் காரணம் எனும்போது காரியத்திற்குக் காரணமான அடிப்படைக் காரணத்தைக் களையாமல் காரியத்தை மட்டும் கண்டித்து எந்தப்பலனும் இல்லை.

 எனவே இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமெனில் விபச்சாரத்திற்கு இஸ்லாம் கூறும் தண்டனைகளை வழங்குவதுடன் அதைத்தடுக்க இஸ்லாம் காட்டும் வழிமுறைகளையும் அனைவரும் கையாள்வதே சரியான தீர்வாக அமையும்.


“இஸ்லாமிய பெண்களை போன்று அனைவரும் ஆடை அணிய வேண்டும்” மதுரை ஆதினத்தின் கருத்து சரியானதே! 82% வினர் ஆதரவு: புதிய தலைமுறையின் கருத்து கணிப்பு



பாலியல் வன்முறைகளை தடுக்க அனைத்து பெண்களும் முஸ்லிம் பெண்களை போன்று சுய கட்டுப்பாட்டுடன் ஆடைகளை அணிய வேண்டும் என்ற மதுரை ஆதினத்தின் கருத்து குறித்து புதிய தலைமை இணையதளம் கடந்த டிச 30 அன்று கருத்து கணிப்பு நடத்தியது.
இதில் 82 சதவிகிதத்தினர் மதுரை ஆதனித்தின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அல்ஹம்மதுலில்லாஹ்.
இஸ்லாமிய சட்டம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பதையும், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பதற்கு பெண்ணியம் பேசியவர்கள் எந்த ஹிஜாப்பை ஆயுதமாக எடுத்தார்ளோ அந்த ஹிஜாப் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு அல்ல அவர்களை ஆண்களின் வக்கிர எண்ணங்களிலிருந்து பாதுகாப்பதற்கு தான் என்பதை இன்றைக்கு உலகம் ஒத்துக் கொண்டுள்ளது. எல்லாபுகழும் இறைவனுக்கே…

Wednesday, January 02, 2013

தஞ்சை மேலக்காவேரியில் இஸ்லாம் எளிய மார்க்கம் மற்றும் பட்டமளிப்பு விழா (வீடியோ )


தஞ்சை மேலக்காவேரியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் மற்றும் பட்டமளிப்பு விழா 
Melakauvery Part 2 from Jahir on Vimeo.
Melakaavery Part 3 from Jahir on Vimeo.

இதில் நமதூரை சேர்ந்த இரு மாணவிகள் பட்டம் பெற்றனர் ,அல்ஹம்துலில்லாஹ் !

pattamalippu from Jahir on Vimeo.

Tuesday, January 01, 2013

அவ்லியாவை மாமாவாக ஆக்கிய அவ்லியா பக்தர்கள்(வீடியோ )

அவ்லியாவை மாமாவாக ஆக்கிய அவ்லியா பக்தர்கள்!




காதலர்களை சேர்த்து வைக்கும் மாமா அவ்லியா from Adiraitntj on Vimeo.

“பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்” இது நாம போட்ட தலைப்பல்ல CNN போட்டது


CNN தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ”பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்” என்ற தலைப்பில் பின் வரும் இணைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
http://religion.blogs.cnn.com/2011/05/13/half-of-new-testament-forged-bible-scholar-says/
இந்த நீண்ட செய்தியின் தமிழாக்கத்தை அப்படியே நேயர்களுக்கு தருகின்றோம்.

பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்
-ஜான் பிலைக் (CNN -தொலைகாட்சியின் செய்தி தொடர்பாளர்)
உடல்பலஹீனமானமுதியவர்ஒருவர்சிறைச்சாலையில், குளுரில்நடுநடுங்கஅமர்ந்துஇருக்கிறார். முன்பு ஒருமுறை மரணத்தில் இருந்து தப்பியவர். ஆனால் இம்முறையோ மரண தண்டனை உறுதி செய்யபட்டுள்ளார்.
“ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.”2 -ம் திமோத்தேயு(4:6-7)
அந்த வயதான முதியவர் வேறு யாருமில்லை அவர் தான் பவுல். மேலே குறிப்பிட்டுள்ள பைபிளின் படி புதிய ஏற்பாட்டின் மிகவும் சோகம் தோய்ந்த பகுதியாக கிருத்தவர்களால் கருதப்படுகிறது. பவுல் மரணிக்கும் முன்பு இறுதி வார்த்தைகளாக மேற்குறிப்பிட்டவாறு கூறினார் என்று பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள் .
ஆனால் அங்கு தான் ஒரு பிரச்சனை. அதுவென்ன பிரச்சனை? அதாவது இதனை உண்மையில் பவுல் கூறவில்லை. அது அவர் சொற்கள் இல்லை !உண்மையில், பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதிக்கும் மேல் உள்ள பகுதிகளை பவுல் என்கின்ற அபோஸ்தல பெயர்தாங்கிகள் தான் எழுதினார்கள்.
“பெய்யைச் சொல்லி நல்லதைப் பரப்பினால் அது மக்களிடம் எடுபடும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் பல மக்களிடம் காணப்பட்டது” என்று மிகவும் பிரசுத்தி பெற்ற பைபிளின் முற்கால கையெழுத்து பிரதிகளையும் ஆய்வு செய்யும், மிகவும் அனுபவமிக்க கிருத்துவ அறிஞர் எஹ்ர்மன்(Ehrman) தனது புத்தகமான “போர்ஜரிஸ்” (போலியாக இட்டுகட்டபட்டவைகள்) என்பதில் கூறுகிறார்.
மொத்தம் உள்ள 27 புதிய ஏற்பாடு புத்தகங்களில் 11 புத்தகங்கள்பொய்யாக இட்டுகட்டபட்டவை.
இயேசுவின் சீடர்கள் எழுதிய புத்தகங்கள் என்று குறிப்பிடப்படும் பைபிளின் புதிய ஏற்பாடுகளில் சில பகுதிகளும் அவர்கள் எழுதியவை இல்லை. ஏனெனில், இயேசுவின் சீடர்கள் படிக்கவும் எழுதவும் தெரியாதவர்களாக இருந்தனர்.
இயேசுவின் சீடர்கள் படிப்பறிவில்லாத விவசாயிகளா?
எஹ்ர்மனின் இந்த புத்தகம் அவரின் மற்ற பல புத்தகங்களை போலவே பல்வேறு விதமான விமர்சனங்களை கிளப்பிய வண்ணம் உள்ளது. அதில் ஒருவர் “பென் வித்தரிங்டன் (Ben Witherington)” இவர் “போர்ஜரி” என்ற எஹ்ர்மானின் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவித்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.ஆனால், அதில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை!
வித்தரிங்டன், எஹ்ர்மனின் புத்தகத்தை “ஒரு மூர்க்க தனமான ஏமாற்று புத்தகம், இதையும் மக்கள் நம்பதான் செய்கிறார்கள்” என்று விமர்சிக்கிறார்.
வித்தரிங்டன் மேற்படி எஹ்ர்மனின் புத்தகத்துக்கு ஒரு நீண்ட விமர்சனைத்தையே எழுதியுள்ளார். அதில், புதிய ஏற்பாட்டில் II பேதுருவைதவிர ஏனையவை இயேசுவின் வாழ்வுக்கும் பவுலுக்கும் சாட்சியாயிருந்த எழுத்தறிவுள்ள மிகச்சிறு கூட்டத்தினரால் எழுதப்பட்டிருக்க முடியும் என்கிறார்.
அடுத்து II திமோத்தேயு-வில் பவுலின் கூற்றாக சொல்லப்படுவது, அவர் எழுதாவிட்டாலும் அவர் சொல்லச் சொல்ல வேறு ஒரு எழுத்தர் வருங்கால சந்ததியினருக்காக எழுதியிருக்கலாம் என்றும்,
தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய, பவுலின் மனதைப் புரிந்து கொண்ட நண்பரோ அல்லது உதவியாளரோ பவுலின் கூற்றை செவியேற்று இருக்கலாம். இது புனையப்பட்டதல்ல! மரணத்தருவாயில் இருக்கும் ஒருவரின் வாக்கு! என்கிறார் வித்தரிங்டன்.
ஆனால்எஹ்ர்மன்,பேதுருவின் (பீட்டரின்) கடிதங்களை மாத்திரம் விமர்சித்துவிட்டு மற்றவைகளை விட்டுவிடவில்லை ! அவர், பரிசுத்த சுவிசேஷங்கலாக கருதப்படும் மத்தேயு, மார்க் மற்றும் யோவான் சுவிஷங்களும் கூட அவர்கள் எழுதியவைகள் இல்லை. இதில் எந்த ஒன்றும் இயேசுவின் சீடர்களால் எழுதப்படவில்லை. அதற்க்கு இரண்டு காரணங்களையும் முன் வைக்கின்றார்.
முற்காலத்தில் எழுத பெற்ற எந்த சுவேஷங்களானாலும் அவைகளில், அதை எழுதியவர்கள் யார் என்று குறிப்பிடப்படவில்லை. ஆக சுவேஷங்களின் பெயர்களை உண்டாக்கியவர்கள் பிற்கால எழுத்தர்கள் தான் என்று கூறுகிறார்.
இதற்கும் ஒரு படி மேலே சென்று இயேசுவின் சீடர்களாக கருதப்படும் பவுல் மற்றும் (பீட்டர்) ஆகிய இருவருக்கும் இன்றைக்கு பைபிளில் அவர்கள் பெயரில் உள்ள அதிகாரங்களுக்கும் எந்த விதமான சம்மதமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் இருவரும் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்று கூறுகிறார்.
இதற்க்கு சான்றாக பைபிளில் அப்போஸ்தலர் 4 : 13 இல் இயேசுவின் சீடர்களான, பேதுரு மற்றும் ஜான் இருவரும் மீனவர்களாக் இருந்தனர். இது பற்றி குறிப்பிடுகையில் “agrammatoi,(அக்ரமத்தொய்)”என்ற கிரேக்க மொழிசொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடி அர்த்தம் “எழுதப்படிக்க தெரியாதவர்கள்” என்று அவர் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
இவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருக்கும்போது எப்படி இந்த ஆகாங்களை இவர்கள் எழுதியிருப்பர் என்பதே எஹ்ர்மனின் வாதம்.
பைபிளில் பவுலின் பெயரால் எழுதப் பட்டவைகள் உண்மையான பவுலால் எழுதப்பட்டது தானா?
புதிய ஏற்பாட்டின் உண்மையான மூல பிரதியான பவுலின் கடிதங்களில் சுமார் சரிபாதி (13 கடிதங்களில் 7 கடிதங்கள்) போலியானவையே என்று ஏர்மன் கூறுகிறார்.
அவரது கடிதங்கைளை நுனுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் போது, பயன்படுத்தப்பட்ட சொற்களின் தரங்கள், மற்றும் தனது போதனைக்கு தேரந்தெடுத்த சொற்களிலுள்ள தெளிவான முரண்பாடே இதற்கு காரணம்.
அதாவது, ஒவ்வொருவரது மொழி நடையும் வித்தியாசமானது. சிலர் ரத்தினச்சுருக்கமாகவும், சில பந்தி பந்தியாகவும் எழுதுவர். ஆனால் பவுலின் கிரேக்க மொழி நடையானது முதல் ரகம். கிரேக்கத்தில் குறுகிய சொற்களையே பயன்படுத்துவார். கனகச்சிதமான வசனங்களை பயன்படுத்துவார். ஆனால் எபேசியரில் (Ephesians) பவுலின் நடைக்கு மாற்றமாக மிக நீண்ட வசனங்களைக் கொண்டதாக காணப்படுகிறது.
இவ்வாறு நீண்ட வசனங்களை பயன்படுத்தவது கிரேக்க மொழியில் உள்ளதுதான். ஆனாலும், பவுலின் மொழிநடை அவ்வாறானதல்ல என்கிறார். இந்த விமர்சனத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக தமிழ் பைபிளில் எபேசியருக்கு வழங்கிய ஆசிரியர் உரை அமைந்துள்ளது.
முதலாம் கொரிந்தியரில் பவுல்,பெண்கள் அனைவரும் தேவாலயங்களில “வாய் மூடிஅமைதியாக இருக்க வேண்டும், கேள்விகள் கேட்கக்கூடாது. அப்படி ஏதேனும் சந்தேகம் இருந்தால் வீட்டில் சென்று தன் கணவனை தான் கேட்க வேண்டும்” என்கின்ற 14ம்அதிகாரத்தின் 34 மற்றும்35 வசனங்களை எஹ்ர்மன் மேற்கோள் காட்டுகிறார்.
மேலும், இதேமுதலாம்கொரிந்தியரில்11ம்அதிகாரத்தின் 5,6 மற்றும்13ஆவதுவசனங்களில் பவுல்,“பெண்கள் திருச்சபைகளுக்கு வந்து இறைவேண்டலில் ஈடுபடும் போது தலையை மறைக்கவேண்டும்” என்று கூறுகிறார்.
பவுல், 11ம்அதிகாரத்தில்பேச அனுமதித்து விட்டு 14ம் அதிகாரத்தில் பேசக்கூடாது என்று எப்படிசொல்வார்? என்று எஹ்ர்மன்கேட்கிறார். இதிலிருந்து இதற்கும் பவுலுக்கும் சம்மந்தமில்லை என்று தெரிகிறது.
ஏன்பொய்யானசெய்தியைபுனைந்தார்கள்?
பைபிளில் பொய்யான செய்திகள் புனயபட்டதற்க்கு முக்கிய காரணம் முற்கால கிறித்துவ தேவாலயங்களுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடுகள் தான் . கிறித்துவ தேவாலயங்கள் பெண்களை நடத்தும் விதம், தலைமைத்துவம் மற்றும் எஜமானர்களுக்கும், அடிமைகளுக்கும் இடையேயான உறவு முறைகள் போன்ற விஷயங்களில் முரண்பட்டு சிதறி கிடந்தனர், என்கிறார் எஹ்ர்மன்.
தாம் எதை நம்ப வேண்டும் என்பதை பற்றி, ஒவ்வொரு கிறிஸ்துவ பிரிவைச் சார்ந்தவருக்கு மத்தியில் பயங்கரமான கருத்து வேறுபாடுகள் நிலவின. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் வாதங்களை நிலை நிறுத்த வேதத்தின் துணையை நாடினர் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் ஒருவர் எந்த பிரிவினரையும் சாராதவராக இருப்பின், அவர் தன்னுடைய பெயரை கொண்டு எந்த ஒன்றையும் எழுதாமல் பேதுரு (பீட்டர்) அல்லது யோவான் (ஜான்)என்கின்ற பெயர்களில் தங்கள் கருத்துகளை எழுதி வெளியிட்டனர்.
ஆக இந்த ஆரம்ப முதல் நான்கு நூற்றாண்டுகளில் தான் பேதுரு, யோவான் என்கின்ற பெயர்களில் பல்வேறு நபர்கள் தங்களை ஏசுவிற்கு மிகவும் நெருங்கியவர்களாக காட்டி கொண்டு தங்களுக்கு தோன்றியதை எல்லாம் பேதுரு, யோவான்என்கின்ற பெயர்களை பயன்படுத்தி போலியாக நூற்றுக்கணக்கான செய்திகளை இட்டுகட்டினர் என்று மதிப்பிட்டு எஹ்ர்மன் கூறுகிறார்.
இதனை வித்தரிங்டன் அவர்களும் மறுக்க முடியாத காரனத்தால், முற்கால கிறித்துவ பிரிவினர்களிடையே பல்வேறு முரண்பாடுகளும் பொய்யான செய்திகளும், கட்டுகதைகளும் மிதந்து கொண்டிருந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொள்கிறார் !
அதே சமயம், பேதுரு (பீட்டர்) என்பவர் மீனவர் என்கின்ற காரனத்தால் அவர் எழுத படிக்க தெரியாதவர் என்று கூறுவது சரி இல்லை என மறுக்கிறார். ஏனெனில் மீனவர்களும் கூட வியாபாரத்தில் ஈடுபடும் பொழுது கொடுக்கல் வாங்கல்களின் ஒப்பந்தங்களை செய்ய எழுத்தை கையாளுகின்றனர் என்று பேட்டி ஒன்றில் கூறுகிறார் வித்தரிங்டன்.
ஊடக பரபரப்பை மக்கள் விரும்புவதால், எர்ஹமனின் ஆக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் என்று வித்தரிங்டன்கூறுகிறார்.
விவிலியத்தை பற்றிய ஞானமே இல்லாத இயேசுவை தேடக்கூடிய கலாச்சாரத்தில் நாம் வாழ்கிறோம். எந்த விதமான வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்து சொல்லலாம்.ஏனெனில் “போர்ஜெட்(Forged)” போன்ற புத்தகங்களை ஆய்வு செய்யும் மக்கள் மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ ஒரு புதிய கருத்துக்கு செல்லவாய்ப்பே இல்லை என்கிறார் வித்தரிங்டன்.
ஆனால் எஹ்ர்மனின்கோணமோ இதற்க்கு மாற்றமானது.
“போர்ஜெட்(Forged)” என்கின்ற புத்தகத்தின் மூலம் பல மக்கள் உண்மையை கண்டு கொள்வர்.நானும் கூட இந்த உண்மைகளை முதலில் ஒப்பு கொள்ள மறுத்தேன். ஆனால் இப்போது இல்லை” என்று முன்னால் கிருத்துவ அடிப்படைவாதியான எஹ்ர்மன் கூறுகிறார். தற்போது அவர் கடவுளை என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்கின்ற கொள்கைக்கு மாறி விட்டார் !
பைபிளின் புதிய ஏற்பாடு கடவுளின் கரம் கொண்டு எழுதப் பட்டதல்ல, மாறாக அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் மனித கரங்களின் அச்சு தான் பதிந்துள்ளது !!
“நான் இதை மக்கள் தூக்கி வீச வேண்டும் என்றோ அல்லது இது பயனுள்ள இறையியல் என்றோ சொல்லவில்லை! மாறாக இதில் பல விடயங்கள் புனையப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது”. இதிலிருந்தே பைபிள் என்பது ஒரு சராசரி மனிதனால் எழுதப் பெரும் புத்தகத்தின் அந்தஸ்தை தான் பிடிக்கும் .!! பைபிள் என்பது இறைவனிடமிருந்து பெற்ற புத்தகம் இல்லை.
ஏனெனில் பைபிளில் பல்வேறு ஆசிரியர்கள் தங்களை யார் என்றே காட்டிகொள்ளாமல் பொய்யான பெயர்கள் கொண்டு எழுதியதே இதற்க்கு போதுமான சான்று என்று கூறி முடிக்கிறார் எஹ்ர்மன் !
பைபிளில் மனிதக்கரங்கள் மலிந்து காணப்படுகின்றன. அது இறைவேதமே இல்லை! என்று நாம் பல வருடங்களாக சொல்லி வருகிறோம். அதை கிறிஸ்வதர்களுடனான நேரடி விவாதத்திலும் நிரூபித்துக்காட்டியிருக்கிறோம்.
ஆனாலும், அதை பல கிறித்தவ சகோதரர்கள் கிறித்தவத்தின் மீது இருக்கும் காழப்புணர்வினால்தான் இவ்வாறு நாம் பேசி வருகிறோம் என்று நம்மை விமர்சனம் செய்கின்றனர்.
அது உண்மையல்ல! நாம் மட்டுமல்ல, இந்த பைபிளை காய்தல் உவத்தலின்றி யார் எக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அது மனிதக்கரங்கள் விளையாடிய ஒரு புத்தகம்தான் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக இந்த கட்டுரை விளக்குவதை மறுக்க முடியாது!!!
-மொழிபெயர்ப்பு உதவி இம்ரான் சரீஃப்
நன்றி :http://www.tntj.net/123728.html

அதிரை ஸலஃபிகள் என்ற காம வெறிபிடித்த கூட்டத்திற்கு எதிராக...


அதிரை ஸலஃபிகள் என்ற காம வெறிபிடித்த கூட்டத்திற்கு எதிராக...

நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது!

அதிரை காம ஸலஃபிகள் 21ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த காம சட்டம்!!

சுயஇன்பம் செய்ய மட்டும் தேவைப்படும் அறிவியலும் பகுத்தறிவும்!!!

ஸஹாபாக்களை பெயரால் கயமைத்தனம் செய்யும் அதிரை காம ஸலஃபிகள்!!!!

காமுகர்களின் உண்மை முகத்தை தோலுரிக்கும் ஆக்கம் முழு விபரம்

வாய்திறக்க முடியாத அதிரை காம ஸலஃபி கூட்டம்!

நோன்பில் சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்பது சரியானது தான் அதிரை சுயஇன்ப காம வெறி ஸலஃபிகளின் வாக்குமூலம்!!