Wednesday, February 15, 2012

முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் மற்ற மாவட்டங்கள்

 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் பிப்ரவரி 14  அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள்

வட சென்னை மாவட்டம் சார்பாக முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் கலக்கட்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது







மதுரை மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது



 கடலூர் மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது





நாகை வடக்கு மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது





வேலூர் மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது



நாமக்கல் மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது





நெல்லை மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது




தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது




 திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது






 நாகை தெற்கு மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது








காஞ்சி கிழக்கு மாவட்டத்தில்  இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது








திருவாரூரில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது










ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது






கோவை மாவட்டத்தில் கடந்த 14-2-2012 அன்று தடையை மீறி முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது.








பேரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது





தேனி மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது.





புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது









குமரி மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது





புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது





புதுவையில் கடந்த 14-2-2012 அன்று முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது



விழுப்புரம் மேற்கு மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்



ராமநாதபுரத்தில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது





திருச்சி மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது












Tuesday, February 14, 2012

முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் தஞ்சை

முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக தஞ்சை ரயில் நிலையம் எதிரில் சரியாக 4.00 மணிக்கு துவங்கியது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அன்வர் அலி அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள் அதனை தொடர்ந்து மாநில செயலாளர் முகம்மது ஒலி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள் இதில் 2000 க்கு அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்துக்கொண்டார்கள் முடிவில் மாவட்ட செயலாளர் பாஷா நன்றி உரையுடன் முடிவடைந்தது .



















 







Sunday, February 12, 2012

தானே புயல் வராதா என ஏங்கும் தமிழக மக்கள் (?) – சொன்னது யார் தெரியுமா ?

தலைப்பைப்பார்த்தவுடன் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படலாம்! புயலால் பாதிக்கப்பட்டு ஒவ்வொருவரும் வீடு வாசல் என ஒவ்வொன்றையும் இழந்து பரிதவிக்கும் போது இது போன்ற புயல் நம் ஊருக்கு வராதா? என ஏங்கும் மதிகெட்ட மடையர்கள் யார்? என்று உங்களுக்கு ஒரு கனம் கோபம் கூட வரலாம்!

ஆனால், இப்படி “தானே” புயல் தங்களது மாவட்டத்திற்கு வராதா என புயல் வராத மாவட்டங்களில் வசிக்கும் தமிழக மக்கள் ஏங்கித்தவிப்பதாக மமகட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாஹ் என்பவர் சட்ட சபையில் முழங்கியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிறகு, முதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்கினார். பதிலுரையில் அறிவிக்கப்பட்ட சலுகைகளுக்கு நன்றி தெரிவித்து, அரசியல் கட்சிகளின் சார்பில் கட்சித் தலைவர்கள் சட்டசபையில் பேசினர்.

அப்போது ஒவ்வொருவரும் தங்களது தகுதிக்கு ஏற்ப முதல்வருக்கு ஜால்ரா தட்டிப் பேசினார்கள். அப்போது தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட வாத்தியார் அவர்கள் அதிமுக காரர்களே மூக்கின் மேல் விரல் வைக்கக்கூடிய அளவிற்கு முதல்வருக்கு ஜால்ரா தட்டி, அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட அனைவரையும் ஜால்ரா தட்டுவதில் விஞ்சி புதிய சாதனை படைத்துள்ளார்.

தானே வந்த வார்த்தைகள் :

ஆம்! : “தானே’ புயல் பாதித்த மாவட்டங்களில் முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களைப் பார்க்கும் போது, பிற மாவட்டங்களில் வசிப்போர், நமது மாவட்டத்தில் புயல் வரவில்லையே என்று, ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி ஜால்ரா தட்டுவதில் என்னை விஞ்ச ஆள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் வாத்தியார்

இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த எம்.எல்.ஏ :

இதற்கு முன்பு எத்தனையோ எம்.எல்.ஏக்கள் இஸ்லாமிய சமுதாயத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு சட்டசபைக்கு சென்றுள்ளார்கள். அவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக உள்ளது வாத்தியார் அவர்களின் வர்ணனை

தானே புயலால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாகிக் கிடக்கும் வேலையில், அந்த மக்களின் மனம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீளாதிருக்கும் இவ்வேளையில் இது போன்ற புயல் தங்களது மாவட்டத்தில் வரவில்லையே என்று பிற மாவட்ட மக்கள் ஏங்குவதாக இவர் கூறியிருக்கும் கருத்தை பார்த்தால் ”தானே” புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை விட, அம்மா அவர்கள் மீதும், எம்.எல்.ஏ பதவி சுகத்தின் மீதும் இவர் கொண்ட பாசப்புயலின் காரணமாக இவரது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது நமக்கு பளிச்சென்று தெரிகின்றது.

இவர் இருக்க வேண்டிய இடம் சட்டசபையல்ல; கீழ்பாக்கம் மருத்துவமனைதான் என்பதும், தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதோடு இவருக்கும் இவரது மனநிலையை சரி செய்ய மருத்துவ உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் சமுதாய அக்கறை உள்ளவர்களின் தற்போதைய ஆசை.

சொன்னாலும் சொல்வார்:

நல்ல வேளை பிச்சைக்காரர்களுக்கு முதல்வர் அவர்கள் ஏதேனும் சலுகைகளை அறிவிக்காமல் போனார். அப்படி முதலைமைச்சர் பிச்சைக்காரர்களுக்கு ஏதேனும் சலுகைகளை அறிவித்தால், பிச்சையெடுக்காத மற்ற மக்கள் அனைவரும் தாங்களும் பிச்சைக்காரர்களாக இருந்திருக்கக் கூடாதா? என ஏங்குவதுதாக முதல்வருக்கு புகழாராம் சூட்டினாலும் சூட்டுவார்.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கும், கேன்சர் நோயாளிகளுக்கும் ஏதேனும் புதிய திட்டத்தையோ, புதிய சலுகைகளையோ முதலமைச்சர் அறிவித்தாரேயானால், நாமும் எய்ட்ஸ் நோயாளியாகவோ, கேன்சர் நோயாளியாகவோ இருந்திருக்கக் கூடாதா? என அனைத்து மக்களும் ஏங்குவதாகச் சொன்னாலும் சொல்வார்.

விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு கூட அடிக்கடி முதலமைச்சர் நிவாரண உதவித்தொகைகளை அறிவித்து வருகிறார். எனவே அதையெல்லாம் தொகுத்து வைத்துக் கொண்டு அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் கொடுத்த உதவித் தொகைகளை பார்த்து தமிழக மக்கள் தங்களது வீட்டிலும் இழவு விழக்கூடாதா? என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று இவர் ஜால்ராத்தட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த அளவுக்கு மானம்கெட்டுப்போய் ஜால்ராத்தட்டும் ஒரு சட்டசபை உறுப்பினரை தமிழக முஸ்லிம் வரலாறு இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கின்றது.

சாதனை(?) பயணத்தில் ஒரு தனிமுத்திரை :

இதற்கு முன்பு இருந்த சுயநல எம்.எல்.ஏ க்கள் மற்றும், சிறந்த ஜல்ராத்தட்டி எம்.எல்.ஏ க்கள், மற்றும் சிறப்பாக அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்த முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் அனைவரது சாதனை(?)களையும், தான் எம்.எல்.ஏ வாகப் பதவியேற்ற சிறிது காலத்திலேயே வாத்தியார் அவர்கள் முறியடித்திருப்பது இவரது சாதனை(?) பயணத்தில் ஒரு தனிமுத்திரை. இந்த தனித்துவ(?) முத்திரையின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தையும், ஜால்ரா தட்டுவதிலும், அடிமைச்சாசனம் எழுதிக்கொடுப்பதிலும், முதல் இடத்தைப் பிடித்துள்ளார் வாத்தியார்.

இவரது இந்த அம்மா புகழ்மாலையைக் கேட்டுவிட்டு தானே புயலால் பாதிக்கப்படாத மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தானே முன்வந்து துடைப்பத்துடனும், பிய்ந்த செருப்புகளுடனும் வாத்தியாருக்கு வரவேற்பளிக்கக் காத்துக் கொண்டுள்ளனர். தானே புயல் வராதா? என தமிழக மக்கள் தற்போது எதிர்பார்க்கவில்லை; இவர் துடப்பத்தால் அடிவாங்க தங்கள் மாவட்டத்திற்கு வரமாட்டாரா? என்றுதான் தமிழக மக்கள் தற்போது எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

மானம் என்பது துளியளவு கூட இல்லை:

உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடனான கூட்டணியில் மமகட்சி இல்லை என்று ஜெயலலிதா அறிவித்த பிறகும் கூட மானம் கெட்டுப்போய் கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர். அப்போதே தமிழக முஸ்லிம்கள் விளங்கிக் கொண்டனர் இவர்களுக்கு மானம் என்பது துளியளவு கூட இல்லை என்று.

அடித்து துவைத்தாலும், எட்டி மிதித்தாலும், காரித்துப்பினாலும், எங்களுக்கு எல்லாமே அம்மாதான் என்று இவர்கள் மானம்கெட்டு நிற்கும் நிலைபார்த்து சமுதாயம் இவர்களைக் காரி உமிழ்கின்றது. இருந்த போதிலும் நாங்கள் மானமிழந்து மரியாதை இழந்து, இன்னும் எதை வேண்டுமானாலும் அடகு வைத்தாவது எங்களுக்கு அம்மாவிடத்திலிருந்து வாரியத்தை வாங்கிவிடலாம் என்பதுதான் இவர்களது கனவு என்பது யாருக்கும் தெரியாமல் இல்லை. இப்படியெல்லாம் அதிமுக காரர்களையே விஞ்சக்கூடிய அளவுக்கு நீங்கள் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தினாலும் உங்களுக்கு வாரியப்பதவி கிடைக்குமா என்பது சந்தேகமே. அம்மா காலில் சாஷ்டங்கமாக விழுந்தால் எப்படியும் வாரியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தால் வாத்தியார் அதையும் செய்யத் தயாராகவே இருப்பார் என்பதற்கு இது அச்சாரமாக அமைந்துள்ளது

எட்டி மிதிக்கும் போது, எட்டி மிதிப்பவரது காலைக் கட்டிப்பிடித்து, ”பார்த்து மிதியுங்கள் ஐயா, உங்கள் கால் வலிக்கப் போகின்றது” என்று சொல்லும் மானம் கெட்டவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதையும் தாண்டி இவர்கள் ஒருபடி கீழே போய், ”உங்களிடம் இப்படி மிதிவாங்க பல பேர் ஏங்கிக் கொண்டுள்ளார்கள்” என்று சொன்னால் அது எப்படி இருக்குமோ அப்படிதான் இவர்களது மானம்கெட்ட செயல்பாடு அமைந்துள்ளது.

விஜயகாந்துக்கு சொன்னது தான் வாத்தியாருக்கும் :

ஏதோ முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் நாம் வெற்றி பெற்றுள்ளோம். எனவே முஸ்லிம்களின் பிரதிநிதியாக நாம் இருக்கின்றோம். எனவே அம்மாவுடைய நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்துவிடலாம் என்று வாத்தியார் தப்புக் கணக்கு போடுவாரேயானால், அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றோம்.

விஜயகாந்த் வெற்றி பெற்றதே அதிமுகவை வைத்துத் தான். தேமுதிகவிற்கு ஒதுக்கிய சீட்டுக்களில் அதிமுக நின்றிருக்குமேயானால் அதிமுக இன்னும் அதிக இடங்களை பிடித்திருக்கும் என்று சட்டசபையில் ஜெயலலிதா சொன்னது தேமுதிகவிற்கு மட்டுமல்ல; உங்களைப் போல ஜால்ரா தட்டிக் கொண்டு பீற்றிக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கும் சேர்த்துத் தான் என்பதை தற்போதைக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

இவ்வளவு சொன்ன பிறகும், இவ்வளவு கேவலப்பட்ட பிறகும் அம்மா அம்மா என்று இவர் தனது சுயநலனுக்காக அம்மா புராணம் இவர்கள் பாடுகிறார் என்றால் மம கட்சியில் உள்ள மற்றவர்கள் இதை எப்படி சகித்துக் கொள்கிறார்கள்?

அரசியல் தான் தேவை என்று கருதும் மம கட்சியினர் இது போன்ற மானத்தை முழுமையாக கப்பலேற்றும் மம கட்சிக்கு முழுக்கு போட்டு விட்டு இவர்கள் அளவுக்கு மானத்தை விற்காத முஸ்லிம் லீக், தேசிய லீக் போன்ற கட்சிகளை நாடலாமே?

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது “நம்பிக்கை கொண்டுள்ளோம்” எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது “நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே” எனக் கூறுகின்றனர். அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுகிறான். அவர்களே, நேர் வழியை விற்று வழி கேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர் வழி பெற்றோரும் அல்லர்.
அல்குர்-ஆன் 2 : 14 முதல் 16 வரை

நன்றி : உணர்வு வார இதழ்



Saturday, February 11, 2012

காதலர் தினம் - காதல் செய்வோம்

காதல் செய்வோம்


காதலர் தினமா? கழிசடை தினமா?





கா(தல)முகர் தினம்

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: புகாரி 6243

எப்படி வந்தது என்றே தெரியாமல் நம் நாட்டினுள் நுழைந்து கலாச்சாரத்தை சீரழித்து சின்னாபின்னமாக்கி, இளைஞர்களின் முன்னேற்றத்தை கேள்விக்குள்ளாக்கியதோடு மட்டுமின்றி இன்று ஊடகங்கள் மூலம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது காதலர் தினம். பருவ வயதை அடைந்த இளைஞர்கள், இளைஞிகளை மட்டுமல்லாது பேரன் பேத்தி எடுத்த தாத்தா பாட்டிக்களையும் காதலர் தின கொண்டாட்டங்களில் மூழ்க வைக்க வேண்டுமென சபதம் எடுத்து பெரும்பாலான தொலைக்காட்சிகள் பிப்ரவரி 14 அன்று காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கி இந்திய சமூகத்தின் தொல்லைக்காட்சிகளாய் அவதாரம் எடுக்கின்றன. 

பரந்து விரிந்திருக்கும் இந்திய சந்தைகளை கபளீகரம் செய்ய மேற்கத்திய வல்லூறுகள் தங்களின் கழுகுப் பார்வைகளை நம் நாட்டின் மீது ஆழமாக பதித்திருக்கின்றன. சொந்த நாட்டில் விலை போகாத தங்களின் சரக்குகளை விற்றுத் தீர்க்கும் களமாக நம் நாட்டை மாற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் பன்னாட்டு பணமுதலைகள் தினமும் ஒரு தினத்தை கொண்டாட்ட தினமாக மாற்றினாலும் ஆச்ச்சர்யபடுவதற்க்கில்லை. சீரழிந்த கேடுகெட்ட மேற்கத்திய கலாச்சாரத்தையும் மேற்கிலிருந்து இறக்குமதி செய்கின்றனர். இந்த நாட்டின் பண்பாட்டுத்தளத்தை பாழ்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட பணம் பறிக்கும் கொள்ளையர்களால் உருவாக்கப்பட்டது தான் "காதலர் தினம்" என்ற கழிசடைகளின் தினம். இவர்களின் பணம் பறிக்கும் பித்தலாட்டங்களுக்கு நம் நாட்டின் பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் ஒத்து ஊதுகின்றன. இணைய ஊடகங்கள் பலவும் தம்மை இத்தகைய அயோக்கியத்தனத்தில் தான் நிலைநிறுத்திக் கொள்கின்றன. தம்மைத் தாமே முற்போக்காளர்கள் என்று அழைத்துக் கொள்வோர் காதலர் தின கேளிக்கைகளை ஆதரிப்பதோடு மட்டுமின்றி எதிர்ப்பவர்களை பிற்போக்குவாதிகள் என்றும் அழைக்கின்றனர் என்பது கவலைக்குரிய செய்தியாகும். 

"விழியில் நுழைந்து , இதயம் கலந்து , உறவில் கலந்த உறவு" என கவிஞர்களால் உயர்த்தி பிடிக்கப்படும் காதல் இச்சமூகத்தில் எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்று நாம் ஆய்வு செய்து பார்த்தோமேயானால் காதலில் விழுகின்ற பெரும்பாலான பெண்கள் தம் கற்பை மணமாகும் முன்னரே பறிகொடுத்து விட்டு "திருடனுக்கு தேள் கொட்டிய" கதையாக பலர் அமைதியாக இருந்து விடுகின்றனர் என்ற உண்மை விளங்கும். இவர்களில் பலர் சில காலம் கழித்து வேறொரு நபரை மணமுடித்து வாழ்க்கை நடத்தினாலும் தம் கணவனுக்கு செய்த துரோகத்தை எண்ணி எண்ணி தம்முடைய அமைதியை இழக்கின்றனர்.  கற்பை இழந்து விட்ட அவமானத்தில் சிலரோ தம் வாழ்வையே முடித்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் காதலன் வீடு முன்னர் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம், தர்ணா என்று ஊடகங்களுக்கு தீனி போடுகின்றனர். காதலால் ஏற்படும் அவலங்களால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறவர்களும் உண்டு. 

காதல் என்பது விரும்பிய பெண்ணை மனம் முடிக்க ஒரு சிறந்த வழி என்றே கழிசடை ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் காதல் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாட பெரும் பட்டாளமே காத்திருப்பது இவர்களின் காமாலை கண்களுக்கு தெரியவில்லை. தெரிந்தாலும் தெரியாதது போல நடிக்கின்றனர். இன்டர்நெட், சின்னத்திரை சீரியல்,  சினிமா போன்ற பல்வேறு ஊடகங்கள் பெண்களின் கற்பை எவ்வாறு லாவகமாக பெண்ணின் சம்மதத்துடன் பறிப்பது என்ற கலையை ஆண்களுக்கு கற்றுத்தருகிறது. செல்போன் , சாட் போன்றவற்றின் மூலம் ஆபாசமான பேச்சுக்களை பேசி பெண்களை தன்வயப்படுத்துகின்றனர்  காமுகர்கள். தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இவைதான் இன்றைய காதலில் பிரதானமான அங்கங்களாக இருக்கின்றன. பின்னர் பெண்ணைக் காணவில்லை, வீட்டை விட்டு ஓடி விட்டாள் என பெண்ணின் பெற்றோர்கள் காவல்துறையிடம் முறையிடுகின்றனர். சிலர் அவமானத்திற்கு அஞ்சி கூனிக்குறுகி தம் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். 

உண்மையிலேயே ஒரு பெண்ணை மணமுடிக்க ஒருவர் விரும்பினால் அப்பெண்ணின் பொறுப்பாளரிடம் சென்று பேசி, அந்த பெண்ணையும் நேரில் பார்த்து பின்னர் அப்பெண்ணுக்கும் அந்த நபரை பிடித்திருக்குமானால் மணமுடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது தான் இஸ்லாமிய வழிமுறை. 

"முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்." - (நூல்: நஸயீ 3183)

இத்தகைய வழிமுறைகளின் வழியாக மட்டுமே பெண்கள் தம் கற்பை பாதுகாத்துக் கொள்ள முடியும். பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கும் இத்தகைய அறிவுரைகளை கூறி வளர்க்க வேண்டும். மாறாக தம் பிள்ளைகளுடன் அமர்ந்து சினிமா , காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் பெற்றோர்கள் பிற்காலத்தில் தம்முடைய பிள்ளைகள் காதல் என்ற பெயரில் ஏற்படுத்தும் அவலங்களையும் சந்தித்து தான் ஆக வேண்டும். நோய் வரும் முன்னர் காப்பது தான் புத்திசாலித்தனம். ஏனெனில் இன்றைய காதல் என்பது செல்போன், சாட் அல்லது சில சந்திப்புகளில் ஆரம்பித்து இரவு நேரங்களில் சென்னை மெரீனா பீச்சில், ஈ.சி.ஆர் சாலையில், திருச்சி முக்கொம்புவில் அல்லது இன்னபிற நகரங்களில் தனிமையாக சந்திக்க வாய்ப்பிருக்கும் பகுதிகளில் முடிகிறது. காதலின் முடிவு கற்பை இழத்தல் மட்டுமே. ஆகையால் பெண்களை போகப் பொருளாக்கும் காதலை ஒழிப்போம். கண்ணியமான நமது கலாச்சாரத்தை பேணிப் பாதுகாப்போம்.

பெற்றோர்களே! சமூக அக்கறையுள்ளவர்களாக நமது பிள்ளைகளை வளர்ப்போம். காதல் என்ற சாக்கடையில் விழாமல் அவர்களை கண்ணியமிக்கவர்களாக வார்த்தேடுப்போம். இளைஞர்களே, இளைஞிகளே  சமூக அக்கறையுள்ளவர்களாக நாம் வாழ்ந்து இந்த தேசத்திற்கும் சமூகத்திற்கும் நன்மை செய்வோம். நம் நாட்டின் பண்பாட்டுத்தளத்தை , கலாச்சாரத்தை சீரழிக்கும் மேற்கத்திய இறக்குமதியான காதலர் தினத்தை புறக்கணிப்போம்.

Friday, February 10, 2012

ஜூம்ஆ உரை ஆடியோ - 10.02.2012








Tuesday, February 07, 2012

தடை போட்ட காவல்துறை! தகர்த்தெறிந்த டிஎன்டிஜே!


கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக வரதட்சணை என்னும் சமூகக் கொடுமையை எதிர்த்து, “மாபெரும் வரதட்சணை ஒழிப்பு – விழிப்புணர்வு பேரணி” மற்றும் பொதுக்கூட்டம் நடத்த கோவை மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

வரதட்சணையின் கேடுகளை விளக்கி கோவையில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாக ஆண்களும், பெண்களும் ஊர்வலமாகச் சென்று, வீடுவீடாக தெருக்கள் தோறும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தும், தட்டி பேனர்களைக் கையில் ஏந்தியும், முக்கிய தெருக்களில் 6 இடங்களில் தெருமுனைக் கூட்டத்துடனும், பேரணியின் இறுதியில் மாநில பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றும், மாபெரும் வரதட்சணை விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தையும் நடத்த நமது நிர்வாகிகள் முடிவு செய்து முறையாக காவல்துறை அனுமதி கேட்டிருந்த நிலையில், பல்வேறுகட்ட இழுத்தடிப்புகளுக்கு பிறகு நிகழ்ச்சி நடைபெற இருந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று அனுமதி மறுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெகுண்டெழுந்த டிஎன்டிஜே :

வரதட்சணை ஒழிப்பு – விழிப்புணர்வு பேரணிக்கும், பொதுக்கூட்டத்திற்கும் தடை போட்டுள்ளோம் என்றால் நமது மக்கள் தலையாட்டிக் கொண்டு சும்மா சென்றுவிடுவார்களா என்ன? தடை என்ற வார்த்தையைக் கேட்டாலே, அததகைய தடைகளை வல்ல இறைவனின் கிருபையால் தகர்தெறிந்து சாதனை படைக்கும் டிஎன்டிஜே சகோதரர்கள், காவல்துறை போட்டுள்ள இந்த்த் தடையைத் தகர்த்தெறிந்து பேரணியாகச் சென்று சமுதாய விழிப்புணர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என முடிவெடுத்து களத்தில் குதித்தனர்.

காவல்துறை குவிப்பு :

இது போன்ற சமூகத்தீமைகளை எதிர்த்து களம் காணும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஆதரவாக காவல்துறையும் களத்தில் நின்று இத்தகைய நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், இதை ஊக்குவிக்க வேண்டிய காவல்துறையே, இத்தகைய ஒரு நிகழ்ச்சிக்கு தடைபோட்டது பெரிய ஆச்சரியமான விஷயமாக உள்ளது. டிஎன்டிஜே சகோதரர்கள் தடையை மீறி பேரணி செல்ல இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே, தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மர்கஸைச் சுற்றி 200க்கும் மேற்பட்ட போலீஸ் படையைக் குவித்தனர்

காவல்துறையின் தடையையும் மீறி ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கோவையின் முக்கிய பகுதியாக உள்ள மதீனா நகர், வள்ளல் நகர், பிலால் நகர், பாத்திமா நகர், ராயல் நகர், சாரமேடு, பொன்விழா நகர், இலாஹி நகர், பிஸ்மி நகர், அல் அமீன் காலனி, ஆகிய பகுதியில் பேரணியாக வந்து உக்கடம் லாரி பேட்டை பகுதியில் வந்து குழுமினர்.

பொதுச்செயலாளரின் எழுச்சி உரை :

ஆயிரக்கணக்கணக்கான மக்கள் காவல்துறையினர் போட்ட தடையையும் மீறி ஆண்களும், பெண்களுமாக அதுவும் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் இந்தப் பேரணியில் கலந்து கொண்டது இந்த சமுதாயம் மறுமை வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளது என்பதை பறைசாற்றுவதாக அமைந்தது.

நமது மக்கள் உக்கடம் லாரிப்பேட்டைப் பகுதியில் குழுமியவுடன் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார். இத்தகைய சமூகத்தீமைகளுக்கு எதிராக களம் காணுபவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டிய காவல்துறை அதற்குத் தடைபோடுவது வெட்கக்கேடு என்றும், எத்தகைய தடைகளைப் போட்டாலும் அதைத் தகர்த்தெறிய தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தனது உரையில் வரதட்சணை எனும் சமூகத்தீமையின் அவலங்களையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் அவர் பட்டியலிட்டார். அவரது கண்டன உரைக்குப் பிறகு கைதுப்படலம் ஆரம்பமானது.

கைது செய்ய வாகனங்கள் போதாமல் காவல்துறையினர் திணறல் :

காவல்துறையினர் தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனங்கள் அனைத்திலும் நமது சகோதர, சகோதரிகளைக் கைது செய்து மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். நமது சகோதரர்களைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் கொண்டு வந்த வாகனங்கள் போதாத காரணத்தினால், கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் போல் தடைகளைத் தகர்த்தெறிந்து பேரணி சென்ற நமது சகோதரர்களைக் கைது செய்ய முடியாமல் திக்குமுக்காடிய காவல்துறையினர் கூடுதல் வாகனங்களை வரவழைத்து பிறகு கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.


தடையை மீறி நீங்கள் பேரணி நடத்தியுள்ளதால் உங்கள் அனைவர் மீதும் எஃப்.ஐ.ஆர் போட்டு 15 நாட்கள் ரிமாண்டில் வைக்கப் போகின்றோம் என்று போலீஸார் பயம் காட்டியுள்ளனர். அதற்குப் பதிலடியாக, “எங்கள் அனைவர் மீதும் எஃப்.ஐ.ஆர் போட்டு ஜெயிலில் தள்ளுங்கள்; அதற்கெல்லாம் இந்த சமுதாயம் பயப்படாது; மேலும், அவ்வாறு எஃப்.ஐ.ஆர் போட்டால் பெயிலுக்கு கையெழுத்துப்போட வரும் போதெல்லாம் அதுவும் பேரணியாகத்தான் இருக்கும்” என்று காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தெரிவிக்க தக்பீர் முழக்கம் விண்ணைத் தொட்டது.

அதைத் தொடர்ந்து பின்வாங்கிய காவல்துறை ஒரு பேரணிக்கு தடைபோட்டால் வாராவாரம் இவர்கள் பேரணி நடத்தினாலும் நடத்துவார்கள் போல என்று அஞ்சி நம் சகோதரர்கள் அனைவரையும் இரவு 9மணிக்கு விடுதலை செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

தடை போடக் காரணம் என்ன?

இத்தகைய சமூக அவலத்தைத் துடைத்தெறியும் தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப்பணிக்கு காவல்துறை ஏன் தடை போட வேண்டும் என நாம் ஆய்வு செய்ததில், சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களை சொல்லிக் கொள்ளக்கூடியவர்கள் தான் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்த பின்புலமாக இருந்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.


வரதட்சணை ஒழிப்புப் பிரச்சாரம் வீரியமடைந்தால் தங்கள் ஜமாஅத்துக்கு வரும் வரதட்சணை பணத்திற்கான கமிஷன் கிடைக்காமல் போய் விடும் என்று பதறிவிட்டார்களோ என்னவோ! பெரும்பாலும், இவர்கள் நம்மை எதிர்ப்பதற்கு இவர்களது வருமானம் தடைபடுகின்றது என்பதுதான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

பெண்ணுரிமைக்கு எதிராக ஒரு பெண் அதிகாரி :

வரதட்சணை என்னும் இந்த சமூகக் கொடுமையால், பெண்கள்தான் பெருவாரியாக பாதிக்கப்படுகின்றனர். அதை பெண்களே உணர்ந்த பாடில்லை. இந்த வரதட்சணை ஒழிப்பு – விழிப்புணர்வு பேரணிக்கு தடைபோட்டது துணைஆணையாளராக உள்ள ஹேமா என்ற பெண் அதிகாரிதான் என்பது இன்னுமொரு துயரமான செய்தி.

Monday, February 06, 2012

தவ்ஹீத் எழுச்சி - சந்ததியற்றுப் போன ஜலீல் முஹைதீன்கள்!


1974 வாக்கில் தமிழகத்தில் நூரி ஷாஹ் என்ற தரீக்கா தோன்றியது. இது பரேலவிஸம் என்ற விஷத்தின் ஒரு கிளையாகும்.

இந்தத் தரீக்கா, ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் காலூன்றியது. லால்பேட்டை போன்ற பெரிய பெரிய மதரஸாக்கள் உள்ள ஊரிலும் இந்தத் தரீக்கா தோன்றியது.

தோன்றிய சிறிது காலத்திலேயே நாகப்பட்டிணத்திற்கு அருகிலுள்ள பொரவாச்சேரியில் ஒரு மதரஸாவையே தனது கேந்திரமாக ஏற்படுத்தியது.

இந்தத் தரீக்காவினர் புகைப்படம் எடுத்து அதற்கு மரியாதை செய்வதை அனுமதித்தனர்; இசையில் மூழ்கினர். எல்லாவற்றிற்கும் மேலாக சித்தம் கலங்கிப் போன பக்த பித்தர்களைத் தங்கள் கால்களில் விழுந்து சாஷ்டாங்கம் செய்ய வைத்தனர். இவர்களது அநியாயம் இத்துடன் நின்று விடவில்லை. யா முஹம்மது' என்ற திக்ரை அறிமுகம் செய்து அதை அரங்கேற்றவும் செய்தனர்.

இதைக் கண்டு மனம் வெறுத்த ஆலிம்கள் கூத்தாநல்லூரில் ஷரீஅத் மாநாட்டை நடத்தி, இந்தத் தரீக்காவாதிகளை வெளுத்துக் கட்டினர்.

தமிழகத்தின் அனைத்து மதரஸாக்களில் உள்ள ஆலிம் பெருமக்கள் வந்து மாநாட்டில் கலந்து கொண்டு, இந்தத் தீமைக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர். யா முஹம்மது என்று திக்ரு செய்வது இறை மறுப்பு, இணை வைப்பு என்றெல்லாம் தீர்ப்பு வழங்கினர்.

ஆக மொத்தம், கூத்தாநல்லூர் ஷரீஅத் மாநாட்டில் நூரி ஷாஹ் தரீக்காவைப் பொரிந்து தள்ளி விட்டனர். யா முஹம்மது என்ற திக்ரை எதிர்த்துப் போர் தொடுத்தனர்.

அதன் ஒரு கட்டமாக மவ்லவி நிஜாமுத்தீன் மன்பஈ, தமிழகத்தில் ஒவ்வொரு மத்ரஸாவாக ஏறி இதற்கு எதிரான ஃபத்வாவை, மார்க்கத் தீர்ப்பைப் பெற்றார். அத்தனை மத்ரஸாக்களின் மார்க்கத் தீர்ப்பையும் திரட்டி இர்ஃபானுல் ஹக் - உண்மை விளக்கம் என்று நூல் வடிவிலும் வெளியிட்டார். அப்போது இந்த நூல் ஓரளவுக்கு மக்களிடம் வரவேற்பையும் பெற்றது.

முஹம்மது திக்ரும், முஹ்யித்தீன் திக்ரும்:

யா முஹம்மது திக்ருக்கு எதிராகக் கிளம்பிய இந்த ஆலிம்களிடம் அப்போது தான் பி.ஜே. ஒரு கேள்வியை எழுப்பினார்.

யா முஹம்மது' என்று திக்ரு செய்வது கூடாது எனும் போது 'யா முஹய்யித்தீன்' என்று திக்ரு செய்வது எப்படிக் கூடும்?

யாகுத்பா என்ற மவ்லிதுப் பாடலில், ஆயிரம் தடவை என்னை அழைத்தால் நான் ஓடோடி வந்து பதிலளிக்கிறேன்' என அப்துல்காதிர் ஜீலானி கூறியதாக ஒரு கவிதை வரி வருகின்றதே! அதை வீடு வீடாகப் போய் பாடுகின்றீர்களே! இது எப்படி நியாயமாகும்? என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்கு அந்த ஆலிம்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

யாகுத்பாவை எதிர்த்து அப்போதே தனது யுத்தத்தை பி.ஜே. தொடங்கி விட்டிருந்தார். இந்த யுத்தத்தைத் தொடங்குவதற்கு சவூதிய அல்லது மதனியப் பின்னணி எதுவுமில்லை.

இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம் தான் ஜமாஅத்துல் உலமா சபையிலிருந்து பி.ஜே., பி.எஸ் போன்றோரை வெளியே தள்ளியதாகும். அதற்குப் பிறகும் மதனிகளின் பின்புலம் எதுவும் கிடைக்கவில்லை.

இதன் பின்னர் தான் இஸ்லாமிய எழுச்சி மையத்தின் தொடர்பு கிடைத்தது. அதன் பிறகு மதனிகள் தொடர்பு என அதன் வட்டம் விரிந்தது.

சத்தியப் பிரச்சாரமும் சவூதிய சம்பளமும்:

இந்தக் காலகட்டத்தில் கமாலுத்தீன் மதனி, தமிழகத்தின் தென்கோடியில் குமரி முனையில் பிரச்சாரம் செய்கிறார் என்று அறிய முடிந்தது. அவருடைய பிரச்சாரம் குமரி மாவட்டத்தை மட்டும் மையமாகக் கொண்டிருந்தது. தமிழகத்தில் திருச்சியில் மதனிகள் சேர்ந்து மண்டபங்களில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அது தமிழகத்தில் எங்கும் எதிரொலிக்கவில்லை.

மதனிகளின் பிரச்சாரம் தமிழக முஸ்லிம்களைக் கவராததற்குக் காரணம், அவர்கள் மதீனாவில் பெற்ற ஊதியம் தான். பொதுவாக மக்களிடம், அவர்கள் கொண்ட கருத்துக்கு நேர் எதிரான கருத்தைப் பிரச்சாரம் செய்கின்ற போது அதற்கு உள்நோக்கம் கற்பிப்பார்கள். இதை நாம் இறைத்தூதர்களின் வாழ்க்கையிலேயே காணலாம்.

நூஹ் (அலை) அவர்கள் பிரச்சாரம் செய்த போது இது போன்ற உள்நோக்கத்தைக் கற்பித்தார்கள்.

அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் 'இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை' என்றனர்.

அல்குர்ஆன் 23:24

மூஸா, ஹாரூன் ஆகிய இருவரின் தூய பிரச்சாரத்திற்கும் ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் இது போன்ற உள்நோக்கத்தைக் கற்பித்தனர்.

'இவ்விருவரும் சூனியக்காரர்கள். தமது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறந்த உங்கள் வழி முறையை அழிக்கவும் நினைக்கின்றனர்' எனக் கூறினர்.

அல்குர்ஆன் 20:63

இவ்வாறு உள்நோக்கம் கற்பித்தல் என்பது ஏகத்துவப் பிரச்சாரப் பாதையில் கண்டிப்பாக நடந்தே தீரும்.

இந்தச் சந்தர்ப்பத்தில், பிரச்சாரம் செய்பவர் அந்தக் குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். இறைத் தூதர்கள் அப்படித் தான் இருந்தனர்.

குமரி மாவட்டத்தில் கமாலுத்தீன் மதனி பிரச்சாரம் செய்யும் போது இந்தக் குற்றச்சாட்டு குறுக்கே வந்து நின்றது. கமாலுத்தீன் சொன்னது உண்மையான கருத்து எனினும் மக்கள் கற்பிக்கும் உள்நோக்கத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல முடியாத நிலையில் இருந்தார். அதற்குக் காரணம் அரபு நாட்டுச் சம்பளம்!

அரபு நாட்டில் சம்பளம் வாங்காமல் பிரச்சாரம் செய்பவர்களை நோக்கி இன்றளவும் இந்தக் குற்றச்சாட்டு கூறப்படுவதற்கும் இது தான் அடிப்படைக் காரணமாக அமைந்தது. கமாலுத்தீன் மதனியின் பிரச்சாரம் தமிழக அளவில் எட்டாமல் ஆனதற்கு இது முதல் காரணம்!

பொதுவாக சத்தியப் பிரச்சாரம் செய்யும் போது அதை எதிர்த்து வலுவான வாதங்கள் வைக்கப்படும். அந்த வாதங்களுக்கு முறையான பதிலை அளிக்க வேண்டும். அசத்தியவாதிகளின் அந்த வாதங்களுக்கு சாமர்த்தியமாகவும், எளிமையான நடையிலும் சொற்பொழிவு மேடைகளிலேயே பதில் சொல்ல வேண்டும். அல்லது அசத்தியவாதிகளை விவாதக் களங்களுக்கு அழைக்க வேண்டும்.

இந்த அணுகுமுறை நமது சொந்தக் கற்பனை அல்ல. திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 16:125

இந்த அணுகுமுறையைக் கமாலுத்தீன் மதனி கையாளவில்லை. அவரது பிரச்சாரம் தமிழக அளவில் சென்றடையாமல் போனதற்கு இது மற்றொரு காரணமாகும்.

பி.ஜே.வை நோக்கி, அரபு நாட்டுப் பணம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்ட போது அதை அவர் மிக எளிதாக எதிர் கொண்டார். இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்ததால் அவரது பிரச்சாரத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட்ட போது அதை அவர் உளப்பூர்வமாக மறுப்பதற்கு இது உதவியாக அமைந்தது.

அடுத்து, பி.ஜே.யின் பேச்சில் எளிமை இருந்தது. எதிரிகள் வைக்கும் வாதங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி, அவற்றுக்கு அழகிய முறையில் அதே சமயம் ஆணித்தரமான பதில்களைச் சமர்ப்பித்தார். எதிரிகளை விவாதக் களத்திற்கு அழைத்து, அவர்களைக் களத்தில் சந்திப்பதற்கும் முழு வேகத்தில் தயாரானார்.

பி.ஜே. அழைப்புப் பணிக்கு வந்த பின்பு தான் கோட்டாறு விவாதத்தைச் சந்திக்க நேரிட்டது. இதில் கமாலுத்தீன் மதனியும் கலந்து கொண்டார். இந்த விவாதம் தொடர்பாக, பி.ஜே. மலை போல் நினைத்திருந்த ஒரு மதனியிடம் பேசிய போது, ஆடை மடிப்பு கலையாத அந்த மதனி, 'இவர்களிடம் எல்லாம் நாம் விவாதம் செய்வதா?' என்ற கருத்தில் பதிலளித்தார். இந்தப் பதிலால் அவர் மீதிருந்த மதிப்பு மரியாதை எல்லாம் நொறுங்கிப் போனது.

இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், அழைப்புப் பணிக்கு அவசியமான, இன்றியமையாத இந்த அணுகுமுறையைக் கூட மதனி வட்டாரங்கள் கடைப்பிடிக்கத் தயாரில்லை என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத் தான்.

மதனிகள் அனைவரும் சேர்ந்து, ஜம்யிய்யத் தஃவத்துல் இஸ்லாமிய்யா என்ற சங்கத்தைத் தங்களுக்குள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். இந்தச் சங்கத்திலுள்ள ஒரு மதனி, மதரஸாவுக்கு வரும் பிள்ளைகளுக்குக் குர்ஆன் ஓதிக் கொடுத்துக் கொண்டு காலத்தைத் தள்ளிய வரலாறும் உண்டு.

சம்பளம் வழங்கும் சவூதிய தூதரகத்திற்கு மட்டும், அழைப்புப் பணி செய்வதாக இவர்களது சங்கத்திலிருந்து அறிக்கை அவ்வப்போது தாக்கலாகிக் கொண்டிருக்கும்.

இவர்களுடைய சம்பள அடிப்படையிலான சம்பிரதாயப் பணி எவ்வாறு தமிழக மக்களைத் தட்டியெழுப்பும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முபாஹலா:

குமரி முனையில் கமாலுத்தீன் மதனி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, காயல்பட்டிணத்தில் ஜலீல் முஹைதீன் என்பவர் ஒரு சவால் விட்டிருந்தார்.

குத்பியத் கூடும் என்பது அவரது வாதம். குத்பியத் என்றால் இரவில் விளக்கை அணைத்து விட்டு, யாமுஹ்யித்தீன், யாமுஹ்யித்தீன் என்று திக்ர் செய்வதாகும்.

இதைக் கூடாது என்பவர் என்னிடத்தில் வந்து முபாஹலா செய்யலாம் என்று அறைகூவல் விடுத்திருந்தார்.

இந்த அறைகூவலை தப்லீக் இயக்கம் கண்டுகொள்ளவில்லை.

எஸ்.ஐ.எம். இயக்கம் கண்டு கொள்ளவில்லை.

எஸ்.ஐ.எம். இயக்கத்தின் தாய் ஜமாஅத்தே இஸ்லாமியும் கண்டு கொள்ளவில்லை.

ஜம்யிய்த்து தஃவத்துல் இஸ்லாம் என்ற சவூதிய சம்பள சங்கமும் கண்டு கொள்ளவில்லை.

ஓர் அசத்தியவாதி, அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்தனை செய்யக்கூடிய ஒருவர், சத்தியத்திற்கு எதிராகச் சவால் விடுகிறார்.

இதைச் சந்திப்பதற்கு எந்தவொரு சத்தியவாதியும் முன்வரவில்லை.

அவருடைய சவாலுக்குப் பதில் அளிக்கப்படாமலேயே காலம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

அல்லாஹ்வை மட்டும் அழைக்க வேண்டும்; முஹ்யித்தீனை அழைக்கக் கூடாது என்று சொல்லக் கூடிய கொள்கைவாதி எவன் வருகிறான் என்று பார்ப்போம் என ஜலீல் முஹைதீன் காத்திருக்கின்றார். யாரும் வரவில்லை என்றதும் அவருக்குத் திமிர் ஏறுகின்றது.

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள்.

அல்குர்ஆன் 2:165

அவ்லியாக்களை நேசிப்பவர்களுக்கு முபாஹலா செய்யுமளவுக்கு அழுத்தம் இருக்கும் போது மேற்கண்ட வசனத்தின்படி, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இதை விட அழுத்தமும் ஆழ்ந்த அன்பும் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இல்லை.

காயல்பட்டிணத்திற்கு பிஜே. ஒரு பொதுக்கூட்டத்திற்காக வருகிறார். அடிதடி வரும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு பாரூக் ஹாஜியார் வீட்டில் விருந்து கிடைத்தது ஓர் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அன்று இரவு பி.ஜே. பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது துண்டுச் சீட்டு ஒன்று அவரது கைக்கு வருகிறது.

இவ்வளவு பேசுகிறீர்களே! என்னுடன் முபாஹலா செய்யத் தயாரா?' என்று ஜலீல் முஹைதீன் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பார்த்த பி.ஜே. அங்கேயே மக்களைக் கண்டிக்கிறார்.

ஒரு அசத்தியவாதி ஆட்டம் போடுகிறார். முபாஹலாவுக்கு வா என்று அழைக்கிறார் அதற்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை என்றால் அது மிகப் பெரும் வெட்கக்கேடும், வேதனையும் ஆகும்' என்று மக்களைச் சாடுகிறார். அதற்குப் பின் அந்தச் சவாலை ஏற்றுக் கொள்கிறார்.

முதலில் முஜாதலா:

இந்தச் சவாலை ஏற்பதற்கு முன், 'முபாஹலா என்பது கடைசி ஆயுதம்; அதற்கு முன்பு முஜாதலா உள்ளது. அதாவது விவாதக் களம் உள்ளது. அதை முதலில் முடிப்போம். அதில் முடிவு கிடைக்கவில்லை என்றால் முபாஹலாவுக்குச் செல்வோம்' என்று பி.ஜே. தன் உரையின் போது குறிப்பிடுகின்றார்.

கூட்டம் முடிந்ததும் அது போல் விவாதத்திற்குரிய முயற்சிகள் நடக்கின்றன. பொதுவாக எந்த விவாதக் களமாக இருந்தாலும், விவாதப் பொருள், ஆதாரங்கள், விவாத முறை, நாள், இடம், நேரம் இவையனைத்தும் குறித்து ஓர் ஒப்பந்தம் செய்யாமல் விவாதிக்க முடியாது. அது போன்று ஜலீல் முஹைதீனிடம் ஒப்பந்தம் தொடர்பாகப் பேசப்பட்டது.

இஜ்மாஃ, கியாஸ்:

இவ்வாறு பேசுகையில் ஆதார நூற்கள் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ், நான்கு இமாம்கள், இன்னபிற இமாம்கள் என்று ஜலீல் முஹைதீனின் ஆதாரப் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. பி.ஜே. தரப்பில் குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டே இரண்டு ஆதாரங்களின் அடிப்படையில் தான் விவாதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் பிறகு, ஜலீல் முஹைதீன் தப்பிவிடக் கூடாது என்பதற்காக பி.ஜே. சில நிபந்தனைகளைத் தளர்த்தியும் பார்த்தார். ஆனால் அது பயனளிக்கவில்லை.

முஜாதலாவுக்கு வாய்ப்பில்லாமல் முபாஹலாவே உறுதியானது; இறுதியானது.

26.09.1985 என்று முபாஹலாவுக்கு நாள் குறிக்கப்பட்டது.

முபாஹலா செய்வதற்கான இடம் காயல்பட்டிணம் அப்பா பள்ளி தெருவிலுள்ள ரெட் ஸ்டார் சங்கம் என்றும் முடிவானது.

முபாஹலா நடப்பதற்கு முன்பு, நிகழ்ச்சி நடப்பது உறுதி தான் என்பதைத் தெரிவிப்பதற்காக பி.ஜே.வுக்கு ஒரு தந்தி கொடுக்க வேண்டும் என்றும், அந்தத் தந்தியின் வாசகங்கள் சங்கேத மொழியில் இருக்க வேண்டும் என்றும் பேசிக் கொண்டோம். அந்த சங்கேத வார்த்தை, புக் ரெடி' என்பதாகும்.

வேண்டாதவர்கள், விரோதிகள் சதியில் ஈடுபட்டு அதன் மூலம், பாருங்கள்! முபாஹலா செய்ய வரும் போது பி.ஜே.யின் குடும்பம் ஆபத்தில் மாட்டிக் கொண்டு விட்டது; அசம்பாவிதத்தில் சிக்கிக் கொண்டது. அவ்லியாக்களுக்கு எதிராகக் கிளம்பியவர்களின் கதி இது தான்' என்று பிரச்சாரம் செய்ய வழிவகுத்து விடக் கூடாது அல்லவா? அத்துடன் இது போன்ற சந்தர்ப்பத்தைத் தான் ஜலீல் முஹைதீன் வகையறாக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் முபாஹலாவுக்கு அழைப்பு விடுத்த ஜலீல் முஹைதீனுக்கு இத்தகைய சந்தர்ப்பம் சாதகமாகி விடக் கூடாதல்லவா?

பாதையில் விபத்து ஏற்படுவதெல்லாம் இறைவனின் நாட்டப்படி உள்ளது. எனினும் மனித சக்திக்கு உட்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதால் அன்றைய காயல் சகோதரர்கள் இந்த ஏற்பாடுகளை நுணுக்கமாகச் செய்திருந்தனர்.

பேசிக் கொண்டபடி சங்கேத வார்த்தைகளைத் தாங்கி தந்தி வந்தது.

நான்கு நாள் கைக்குழந்தையுடன்:

உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் 'வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 3:61

இந்த வசனத்தின் அடிப்படையில் குடும்பத்துடன் முபாஹலாவுக்குச் செல்ல வேண்டும். அப்படித் தான் ஒப்பந்தமும் அதற்குரிய ஏற்பாடும் ஆகியிருந்தது. தந்தி வந்த நேரத்தில் பி.ஜே.யின் மனைவி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றிருந்தார்.

பிரசவத்தைக் காரணம் காட்டி அவகாசம் கேட்டால், அதைச் சாக்காகக் கூறி ஜலீல் முஹைதீன் தப்பி விடக் கூடாது. அத்துடன், பி.ஜே. வர மறுத்து விட்டார் என்று விஷமப் பிரச்சாரமும் பரப்பப்பட்டு விடக் கூடாது. எனவே வேறு வழியில்லாமல், முஹம்மது என்ற 4 வயது மகனுடனும், யாஸிர் என்ற 4 நாள் கைக்குழந்தையுடனும் பிரசவமான பச்சை உடலுடன் தன் துணைவியாரை அழைத்துக் கொண்டு காயல்பட்டிணத்திற்கு பி.ஜே. வந்து சேர்கின்றார். ஜலீல் முஹைதீனும் தனது குடும்பத்தாருடன் வந்திருந்தார்.

காயல்பட்டிணத்திலுள்ள ரெட் ஸ்டார் சங்கத்தில், அஸர் தொழுகைக்குப் பிறகு, வரலாற்றில் மிக முக்கியமான அந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

(முபாஹலா நடந்து முடிந்த பின் ரெட் ஸ்டார் சங்கத்தினர் வெளியிட்ட பிரசுரம் தனிக் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.)

இஸ்லாமிய வரலாற்றிலேயே நடந்த முபாஹலாக்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவை தான்.

அப்படி மிக முக்கியத்துவம் வாயந்த இந்த முபாஹலா, தமிழக வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும்.

இன்று கடை வீதிகளில் சீரழியும் வீடியோக்கள் அன்று கையில் கிடைக்காத காலம் அது! அதனால் அந்த நிகழ்ச்சியை வீடியோவில் பதிவு செய்ய முடியாமல் போனது. ஆடியோ கேஸட்டில் தான் பதிவானது. அந்த ஆடியோ கேஸட்டுகளும் அன்றைய தினம் ஒளி, ஒலி நாடாக்களைத் தங்கள் வசம் வைத்திருந்தவர்களிடம் தான் இருந்தன. அவர்கள் ஜமாஅத்தை விட்டுச் சென்றதும் இந்த முபாஹலா, இன்னும் இது போன்ற முக்கிய ஒளி, ஒலிப் பதிவுகள் அவர்களுடன் சென்று விட்டன.

எனவே இதற்கென்று இனி வரலாற்றில் இடம் பெறப் போவது எழுத்து ஆவணம் தான். அதனால் அதை இப்போது எழுத்தில் தந்திருக்கிறோம்.

அதுவும் எப்போது?

தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி என்ற பெயரில், ஜாக் அமைப்பு ஒரு நூல் வெளியிட்டுள்ளது. அந்த நூலில், தமிழகத்தில் தவ்ஹீது வளர்ச்சிக்கு கமாலுத்தீன் மதனியும், அவரது சங்கமும் தான் காரணம்' என்று குறிப்பிட்டு, இந்த வரலாற்று நிகழ்வை இருட்டடிப்பு செய்த பிறகு, இந்த முபாஹலாவை தமிழக முஸ்லிம்களின் பார்வைக்குத் தருகிறோம்.

முறையாக ஜலீல் முஹைதீனின் இந்தச் சவாலை, முபாஹலா அழைப்பை, தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சியை நாங்கள் தான் ஏற்படுத்தினோம்' என இன்று மார் தட்டும் இவர்கள் ஏற்றிருக்க வேண்டும். ஏற்றார்களா? அதை ஏறெடுத்தும் பார்த்தார்களா? இல்லை.

சம்பளம் வாங்கும் இந்தச் சங்கத்தினருக்கு, 2:165 வசனம் கூறுவது போன்று அல்லாஹ்வின் மீது அதிக நம்பிக்கை இருந்திருந்தால் ஜலீல் முஹைதீனின் சவாலைச் சந்தித்திருப்பார்கள்.

மதீனாவில் பி.ஏ. படித்தவர்கள், எம்.ஏ. படித்தவர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் இந்தப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் ஜலீல் முஹைதீனின் இந்தச் சவாலின் பரிமாணத்தை, அதன் பாதிப்பைப் புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள். இங்குள்ள சாதாரண மதரஸாவில் படித்த பி.ஜே. அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு அதைக் களத்தில் சந்திக்கவும் செய்தார்.

முபாஹலாவின் பலன் என்ன?

இதன் மூலம் அசத்தியத்தின் உச்சிக் கொடுமுடியிலிருந்து கொக்கரித்துக் கொண்டிருந்த ஒரு குராபியின், குத்பியத் தலைவனின் கொக்கரிப்புக்குப் பதில் கொடுக்கப்பட்டது. அவரது ஆணவம், அகங்காரம் இதன் மூலம் அடக்கப்பட்டது. அதுவரை படமெடுத்து ஆடிய அந்த விஷப் பாம்பின் பல் பிடுங்கப்பட்டது.

சத்தியம் இது தான் என்று தெரிந்த பின்பும் என் போன்றவர்களுக்குக் களமிறங்குவதற்குத் தயக்கம் இருந்தது. அதைப் போக்கி, இந்த சத்தியக் களத்தில் இறக்கி விட்டவர் பேராசிரியர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் தான். அத்தகைய அறிஞரிடம் இந்த முபாஹலா பற்றிக் கேட்டதற்கு அவர் தெரிவித்த பதில் இது தான்.

உலக ரீதியிலான விபத்துக்கள், மரணங்கள் இதன் விளைவுகள் ஆகாது. இதன் விளைவு, சத்தியம் வளரும்.

இந்தப் பதிலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அதன் பின்னர் அல்லாஹ் இந்தச் சத்தியத்திற்கு ஏறுமுகத்தைத் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறான். சத்தியம் இதுவரை எழுச்சி கண்டு கொண்டிருக்கின்றது.

அதற்கு இந்த முபாஹலா ஓர் அடிக்கல்! ஆட்டம் காணாத அஸ்திவாரம்!

இந்த முபாஹலாவைச் சந்தித்ததன் மூலம் குராபிகளுக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது. அசத்தியவாதிகள் மார்க்கத்திற்கு உட்பட்ட எந்த அறைகூவலை விடுத்தாலும் அதைச் சந்திக்க ஒரு கூட்டம் தயாராகி விட்டது என்பது தான் அந்த விஷயமாகும். அது தான் வளர்ச்சிக்கு வித்திட்டது.

இந்த வரலாற்று உண்மையை தவ்ஹீது எழுச்சி என்ற நூலில் வசதியாகவே மறைத்து விட்டார்கள் என்பதால் இந்த நிகழ்வை உங்களுக்குப் பதிவு செய்து கொள்கிறோம்.

இந்தக் கட்டுரைக்கு, சந்ததியற்றுப் போன ஜலீல் முஹைதீன்கள்' என்று தலைப்பிட்டுள்ளேன். ஏகத்துவத்தை எதிர்த்தவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் நின்றதில்லை.

இதைத் திருக்குர்ஆனின் 108வது அத்தியாயமான இன்னா அஃதைனா கல்கவ்ஸர்... என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் வரலாற்றில் நிற்கிறார்கள். அவரது எதிரிகள் நிற்கவில்லை.

முஹம்மது (ஸல்) அவர்கள் வரலாற்றில் நிற்கிறார்கள். அவர்களது எதிரிகள் தான் சந்ததியற்றுப் போனார்கள். அதற்கு இந்தச் சிறிய அத்தியாயமே சாட்சி!

இது போன்றே உலகத்தில் சத்தியத்திற்கு எதிராக நிற்பவர்கள் சந்ததியற்றுப் போய் விடுகிறார்கள். ஆனால் சத்தியத்திற்காக நின்றவர்கள் சத்திய சந்ததியுடன் தனியொரு சமுதாயமாக உருவாகி நிற்கின்றார்கள்.

அன்று ஜலீல் முஹைதீன் அசத்தியத்திற்கு ஆதாரமாக நின்றார். ஆனால் அவர் யாரென்றே தமிழகத்திற்குத் தெரியாமல் ஆகி விட்டார். அவரது பரேலவிஸக் கொள்கை பல முனைகளிலும் சாவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

பி.ஜே. சத்தியத்திற்காக நின்றார்; இப்போதும் நிற்கின்றார். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! நாளை பி.ஜே. இறந்தாலும் சத்தியத்தை, ஏகத்துவத்தைப் பின்பற்றும் ஒரு சந்ததி, சமுதாயம், ஜமாஅத் இறைவனின் அருளால் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

மவ்லூது ஓதும் பள்ளியில் தொழுவலாமா?


அதிரையில் ஒரு சில பள்ளிகளில் மவ்லூது ஓதப்படுகிறது இந்த பள்ளிகளில் (தக்வா பள்ளி, செக்கடிபள்ளி, முகைதீன் பள்ளி, மிஸ்கீன் பள்ளி, மேலத்தெரு ஜும்ஆ பள்ளி) தொழுவலாமா?
 

Saturday, February 04, 2012

மௌலூதின் மகிமை (வீடியோ)

மௌலூதின் மகிமை (வீடியோ)



ஆடியோ:


பிப்ரவரி 14 2012 - முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம்


பிப்ரவரி 14 2012 அன்று தஞ்சாவூரில் நடைபெறும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை பேராட்டத்தில் பங்கேற்க தயாராகிவிட்டிர்களா? 

இந்த பேராட்டதிற்கு நிதி உதவி செய்ய அதிரை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுங்கள். 

அதிரையில் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்(வீடியோ)

கடந்த மாதம் மேலத்தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் 'இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவின் வீடியோ.





மரண அறிவிப்பு: அபுல்ஹாசன் காக்கா (நடுத்தெரு EPMS பள்ளி நிறுவனர்)

நடுத்தெருவைச் சார்ந்த EPMS பள்ளியின் நிறுவனர், அபுல்ஹசன் காக்கா அவர்கள் நேற்று இரவு வஃபாத் ஆகிவிட்டார்கள். அவர்களின் மறுமை வாழ்விற்காக துவா செய்வோம்.

அபுல்ஹசன் காக்கா அவர்கள் தவ்ஹீத் கொள்கையில் அதிகம் பிடிப்பு கொண்டவர். இந்த பிரச்சாரம் எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதிலும் இறுதி வரை உறுதியாக இருந்து, அதற்கு பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தென்பது நாடுகளில் ஒதப்படும் மௌலூது!!

பத்தென்பது நாடுகளில் ஒதப்படும் மௌலூது!!


Thursday, February 02, 2012

வெளிநாட்டு உழைப்பும், ஆண்கள் கவனிக்க வேண்டியவைகளும்

வெளிநாட்டில் வேலை பார்க்கும் சகோதரர்களுக்காக இணைய தளம் மூலம் சகோதரர் பி.ஜெ அவர்கள் “வெளிநாடு செல்வோர் கவணத்திற்கு” என்ற தலைப்பில் ஆற்றிய உரையை சகோதரர் ஹிஷாம் M.I.Sc எழுத்து வடிவமாக்கியுள்ளார். அழைப்பு மாத இதழில் வெளியிடப்பட்ட இவ்வாக்கத்தை காலத்தின் தேவை கருதி இங்கும் வெளியிடுகிறோம். (M.I.Sc)

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் அனைத்து சமுதாயத்திற்கும் சோதனை இருந்தது.எனது சமுதாயத்தின் சோதனை செல்வம் ஆகும்.

அறிவிப்பவர் : கஅப் பின் இயாழ் (ரழி) அவர்கள். ஆதாரம்: அஹ்மத் 17137

இன்றைய நாட்டு விலை வாசி அதிகரிப்பின் காரணமாக அதிகமான வருமானம் இருந்தால் தான் குடும்பத்தை நல்ல முறையில் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இன்று நம்முடைய சமுதாயத்தில் அதிகமான மக்கள் வெளிநாட்டிக்கு சென்று உழைத்து வெளிநாட்டு வருமானத்தையே நம்பி இருப்பதை நாம் காணமுடிகிறது.

அவ்வாறு இருந்தாலும் சிலர் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளிநாட்டி வருமானத்தையே நம்பி இருக்கின்றார்கள்.எனவே வெளிநாடு செல்லக்கூடியவர்கள் சில விடயங்களை மனதில் பதிய வைத்துக்கொண்டு உழைப்பை தொடர்ந்தால் அவர்கள் விரைவாக தங்கள் தாய் நாட்டிற்கு வந்து குடுப்பத்துடன் வாழ்கையை மகிழ்ச்சியாக தொடர முடியும் என்ற நம்பிக்கையில் சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்களாம் என்று நினைக்கிறோம்.

முதலில் வெளிநாடு செல்லாமல் தாய் நாட்டில் இருந்தே உழைப்பதற்கு முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.அவ்வாறு முடியாமல் நிர்பந்தமாகும் கட்டத்தில் அங்கு உழைக்கக்கூடியவர்கள் குறிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது.

செலவைக் கட்டுப்படுத்துதல்.

வெளிநாடு சென்று உழைக்கக்கூடியவர்கள் பெரிய தியாகத்தையே மேற்கொள்கின்றனர். நமது நாட்டில் குறைந்த வருமானத்திற்கு தொழில் செய்து கொண்டு இருந்தவர்கள் வெளி நாட்டுக்குச் சென்று உழைக்க ஆரம்பிக்கும் போது பணத்தை வீனாக செலவு செய்வதைப் பார்க்கலாம்.

இதன் விளைவாக வெளிநாட்டில் இருந்து உழைக்கக்கூடிய காலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே வெளிநாடு செல்லக்கூடியவர்கள் முதலில் அவர்கள் நினைக்க வேண்டியது என்வென்றால் நாம் பல வருடங்கள் வெளிநாட்டில் கழித்துவிடக் கூடாது. சில குறிப்பிட்ட காலங்கள் மாத்திரம் அங்கு இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பொருளாதாரத்தை உழைத்துவிட்டு தாயகம் சென்று ஒரு சிறந்த தொழிலை ஏற்படுத்தி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

இந்த சிந்தனையிலே அங்கு இருக்கக்கூடியவர்கள் பணத்தை சேமிக்க முயற்ச்சி செய்ய வேண்டும். அதற்கு எந்த வழிமுறையை கையால முடியும் என்றால் வீட்டுக்கு பணம் அனுப்பும் போது அதிமாக அனுப்பாமல் தாய்நாட்டில் இருக்கும் போது உங்களால் எவ்வளவு உழைக்க முடியுமோ அந்த தொகையையே வீட்டுக்கு அனுப்பி வைக்களாம். அப்படியிருந்தால் நீங்கள் தாயகம் திருப்பிய போதும் உங்கள் குடும்பத்தை சுலபமாக நல்ல முறையில் வழி நடத்தலாம்.

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது அதிகமாக பணம் அனுப்பி அதிகமாக செலவு செய்ய பலக்கினீர்கள் என்றால் உங்களுக்கு எதிர் காலத்தில் இலகுவாக வாழ்கையை கொண்டு செல்லமுடியும்.எனவே குறிப்பிட்ட தொகையை மட்டும் அனுப்பிவிட்டு மீதியை சேமித்து வைப்பதற்கு முயற்சி செய்யவேண்டும். இன்றைக்கு அதிகமானவர்களின் நிலை என்வென்றால் ஒரு தொழிலை ஆரம்பிக்கவேண்டும் என்ற சிந்தனையில் தாயகம் வருகிறார்கள்.

ஆனால் அவர்கள் தாயகத்தில் இருக்கின்ற காலத்தில் செலவை கட்டுப்படுத்த முடியாமல் மூலதனமாக வைத்திருந்து பணத்தையும் செலவு செய்துவிட்டு கடனாளியாக மீண்டும் வெளிநாட்டு புரப்படுகிறார்கள். ஆரம்பத்தில் இருந்து மனைவியிடம் செலவை குறைத்துக் கொள்வதற்கு முயற்ச்சிகளை மேற்கொள்ளாமல் இருந்ததுதான் காரணம். எனவே இந்த தகவலை மனதில் பதிந்து கொள்ளவேண்டும்

அடுத்தவர்களுக்கு பொருட்களை கொண்டு வருதல்.

அடுத்ததாக வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் போது குடும்பத்தினருக்கு பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் போது அதிகமான பொருட்களை வாங்கி கொண்டு வந்து அவர்கள் சேமித்து வைத்து இருந்த பணத்தை இழந்து விடுகின்றனர்.இன்றைய காலத்தை பொருத்த அளவில் அனைத்து பொருட்களையும் தாய் நாட்டிலே வாங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் இருக்கின்றன.வெளிநாட்டை விட குறைவாகவே வாங்கமுடியும்.வெளிநாட்டில் இருந்து வரும் போது அடுத்தவர்கள் தன்னை தரக்குறைவாக நினைத்து விடுவாரகள் என்ற எண்ணத்தில் விலை அதிகமாக இருந்தாலும் அங்கு இருந்து வாங்கி கொண்டு வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் உறவினர்களுக்கும் எதாவது கொடுக்கவேண்டும் என்ற பெயரில் அவர்களுக்கு ஆடை வகைகள், வேறு பொருட்கள் பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கி வருகின்றார்கள் அவற்றையும் நமது நாட்டில் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.

இப்படி தேவை அற்ற செலவுகள் பல இருக்கிறன எனவே அவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக செலவு செய்யும் பணத்தை சேமித்தால் பெரிய தொகை பணத்தை சேமித்து வைக்கமுடியும். ஆரம்ப காலத்தில் தான் வெளிநாட்டில் உள்ள பொருட்களுக்கு மதிப்பாக இருந்தது இப்போது அனைத்தையும் தாய் நாட்டில் வாங்க முடியும் என்பதனால் பெரிதாக எந்து மதிப்பும் இல்லை. அதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே அங்கு இருக்கக்கூடியவர்கள் குறிப்பிட்ட காலத்தில் பணத்தை திரட்டி விட்டு நாடு திரும்பி ஒரு தொழிலை தொடங்குவதற்கு ஏற்பாடு செய்வேண்டும்.இல்லை என்றால் வெளிநாட்டிலேயே காலம் கழிந்துவிடும்.

சொத்துக்களை சேமிக்கும் விதம்.

வெளி நாட்டில் உழைக்கக்கூடியவர்கள் ஒரு மிகப்பெரிய தவறு செய்து விடுகின்றனர். அதாவது சொத்துக்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகமான சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். அது பிழையில்லை ஆனால் எங்கு பிழை செய்கிறார்கள் என்றால் சொத்ததுக்களை வாங்கும் போது தங்கள் மனைவிமார்களின் பெயரிலும் உறவினர்களின் பெயரிலும் வாங்கி விடுகின்றனர். அவர்கள் மீது வைத்துள்ள அதிகப்படியான நம்பிக்கையால் இவ்வாறு செய்து விடுகின்றனர்.

இறுதியில் சொத்துக்கள் மனைவியின் பெயரில் இருக்கின்ற காரணத்தினால் மனைவி கணவனுக்கு கட்டுப்பட மறுக்கிறாள் ஏதாவது ஒன்று என்றால் கணவனை கூட மதிக்காமல் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு கணவனின் சொத்துக்களை சுரையாடிக்கொண்டு சென்று விடுகின்றாள்.

அனைவரும் அப்படி இல்லவிட்டாலும் இன்று பணத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக இவ்வாறு செய்து விடுகின்றனர்.இறுதியில் கணவன் பல வருடங்கள் வெளிநாட்டில் சென்று உழைத்த பணத்தை எல்லாம் இழந்து விட்டு நடுத்தெருவில் நிற்கின்றனர். எனவே அடுத்தவர்களை அதிகமாக நம்பாமல் தன்னையே நம்பி உங்களது பெயரிலேயே சொத்துக்களை வாங்கி கொள்ளுங்கள்.

ஒருவர் நல்லவராக இருந்தாலும் நீங்கள் அவர்கள் மீது வைக்கின்ற அதிகப்படியான நம்பிக்கையின் காரணமாக அவர்கள் வழி தவறி விடுகின்றனர். இன்று அடுத்தவர்களை நம்பி அனைத்து சொத்துக்களையும் இழந்தவர்கள் பலர் இருக்கின்றனர். எனவே உங்கள் குடும்பத்தினர்களின் பெயரிலோ உங்கள் நண்பர்களின் பெயரிலோ சொத்துக்களை வாங்கி ஏமாற்றம் அடையாமல் உங்கள் பெயரிலேயே வாங்கி கொள்ளுங்கள்.அனைவரும் நம்பிக்கை மோசடி செய்வார்கள் என்பதல்ல ஒரு பாதுகாப்புக்காக இவ்வாறு பண்ணிக்கொள்ளுங்கள்.

மனைவி விஷயத்தில் அதிக கவனம் செலுத்துதல்.

வெளி நாடு செல்லும் போது தங்கள் மனைவியை, மனைவியின் தாயின் வீட்டில் அல்லது யாரும் இல்லா பகுதிகளில் தனியாக விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதன் விளைவாக இன்று பல தவறான காரியங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.மனைவியை கணவனின் தாயார் வீட்டில் விட்டுச் செல்வதால் தவறுகள் நடக்க வாய்ப்புக்கள் மிகக் குறைவு. இயற்கையிலே மாமியார் மருமகளை அதிகமாகவே கண்காணிப்பது வழக்கம்.

எனவே அவர்களுக்கும் தவறு செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படாது. மனைவியின் தாயார் வீட்டில் இருக்கும் போது தவறுகள் நடந்தாலும் தன் மகள் என்ற காரணத்தால் அதனை பெரியதாக நினைக்கமாட்டார்கள்.

இன்று பல இடங்களில் கணவன் மனைவியை தனியாக விட்டுச் சென்றதின் காரணமாக தவரான தொடர்புகள் ஏற்படுகின்றன.எனவே தவறுகள் செய்வதற்கு நாம் எந்த விதத்திலும் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடாது. வெளிநாடு செல்பவர்களின் மனைவியர் அனைவரும் தவறு செய்வார்கள் என்று கூறவில்லை. சமுக சுழல்தான் ஒருவர் தவறு செய்வதற்கு காரணமாக அமைகிறது அதை நாமே ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது.

அது மாத்திரம் இல்லாமல் மாமியார் வீட்டில் இருக்கும் போது காசை வீனாக செலவு செய்வதற்கும் யோசனை செய்வார்கள். வீனாக செலவு செய்தால் மாமியார் கண்டிப்பார் அல்லது கணவணிடம் சொல்லுவார் என்ற பயம் உள்ளத்தில் இருக்கும்.

எனவே இது போன்ற விஷயங்களை கவணத்தில் கொண்டு வெளிநாட்டில் இருக்ககூடியவர்கள் உழைக்கச் நினைத்தால் தன் குடும்பத்தையும் பாதுகாத்து விரைவாக தன் தாய்நாட்டிற்கு வந்து தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கையை தொடரலாம்.

நன்றி
Rasmin Misc

மனிதன் தன்னைப் பற்றி முத­ல் சிந்திக்கட்டும்

சகோதரர் : ராஜ் முகம்மது M I S C

முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் 19:67)

மனிதன் எதிலி­ருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். (அல்குட்;ஆன் 86:5)

முதல் மனிதர் மண்ணால் படைக்கப்பட்டார்

களிமண்ணின் சத்திலி­ருந்து மனிதனைப் படைத்தோம் (அல்குர்ஆன் 23:12)

....மனிதனின் படைப்பைக் களிமண்ணி­ருந்து துவக்கினான். (அல்குர்ஆன் 32:7)

பின்பு விந்தி­ருந்து படைக்கப்பட்டான்

மனிதனை விந்துத் துளியால் அவன் படைத்தான்.... (அல்குட்;ஆன் 16:4)

மனிதனை விந்தி­ருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா?... (அல்குர்ஆன் 36:77)

கார்ப்பப்பையில் சுமக்கப்பட்டான்

(மனிதனை) அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். (அல்குர்ஆன் 31:14)

மனிதர்களில் ஆண்களையும் பெண்களையும் படைத்தான்!

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவா்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49,50)

மனிதன் அழகான அமைப்பில் படைக்கப்பட்டான்

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.(அல்குர்ஆன் 95:4)

மனிதனுடைய படைப்பில் பல அதிசயங்கள் திகழ்கிறது. மனிதனுடைய உறுப்பில் இருக்க கூடிய ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும் இனிமேல் அறிவோம்.

 கண்ணின் அதிசயம்

அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் அமைக்கவில்லையா? அல்குர்ஆன் 90:8

1. கண்ணிலுள்ள செல்கள் மொத்தம் 13.7 கோடி. 13 கேடி செல்கள் கறுப்பு வெள்ளைப் பொருட்களையும், மீதம் உள்ள கூம்பு வடிவ செல்கள், கலர் பொருட்களைப் பார்ப்பதற்கும் உதவுகின்றன. லட்சகணக்கில் செல்கள் லென்ஸில் இருந்தாலும் செல்களுக்கு தெரிந்த மொத்தமே 3 கலர்கள் தான். சிவப்பு, பச்சை, ஊதா. மற்ற கலர்களை எப்படி காட்டுகிறது என்றால் ஒரு ஓவியர் பல வண்ணங்களைக் கலந்து, அழகிய ஓவியம் தருவதைப் போல கண்கள் செல்களின் உதவியுடன் மின் வேதி மாற்றம் செய்து, பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை கலர்களையும் காட்டுகிறது.

2. கண்ணில் இரு அறைகள் உள்ள. ஒன்று முன்பக்கம் தண்ணீர் போலவும், பின்பக்கம் முட்டை வெள்ளைக் கருபோலவும் அந்தத் திரவங்கள் இருக்கும். ஒளிக்கதிர்கள் எப்படி இருந்தாலும் இதனுடைய கண்பார்வை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும். நல்ல வெளிச்சத்தில் லென்ஸ் சுருங்கிக் கொள்ளும். வெளிச்சம் குறைவான நேரத்தில் இருட்டாக இருக்கும் போது விரிந்து கொள்ளும்.

3. ஒரே நேரத்தில் 15 லட்சம் செய்திகளை கையாளும். நிமிடத்திற்கு 6 அல்லது 8 முறை கண்ணடித்துக் கொண்டிருக்கும்.

4. பார்வை நரம்புகள் அனைத்தும் தலையின் பின்புறமே உள்ளன. அதனால் தான் தலையின் பின்புறம் பலமாக அடிப்பட்டால் பார்வை இழப்பு ஏற்படுகிறது.

5. தினமும் 50 மைல் நடந்தால், நமது கால் தசைகள் எப்படி இருக்கும். அதே போன்று பார்வை எல்லாம் சரியாக காட்ட வேண்டும் என்பதற்காக லட்சம் முறை கண்களில் தசைகள் இயங்குகிறது.

6. பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் தாக்காமல் இருக்க லைசோசைம் என்ற உயிர்க் கொல்­யை கண் உற்பத்தி செய்து கொள்கிறது.

தொடரும்......

Wednesday, February 01, 2012

'பைபிள் இறைவேதமா?' விவாத வீடியோ

'பைபிள் இறைவேதமா?' என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஜெர்ரி தாமஸ் என்பவரின் குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற விவாத வீடியோவை பார்வையிட இங்கே சொடுக்கவும்.

'குர்ஆன் இறைவேதமே' என்ற தலைப்பில் விவாதிக்க முடியாமல் ஜெர்ரி தாமஸ் ஓட்டம் எடுத்தது ஏன்? என்பதை அறிய இங்கே சொடுக்கவும்.

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.

அல்குர்ஆன் (74:49-51)