Tuesday, July 20, 2010

இறைவனுக்கு உருவம் உண்டா? சென்னையில் நடந்த பரபரப்பான விவாதம்

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை ஆனால் இருக்கிறது. நிலை தடுமாறிய கோமாலி

உண்மை வந்தது. பொய் அழிந்தது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது. 

(அல்குர்ஆன் 17:81) 

17,18.07.2010 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் விவாதம் ஆரம்பமாகியது.

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை.இறைவன் உருவமற்றவன் என்ற தலைப்பில் சு.ஜமாத் தரப்பில் அப்துல்லாஹ் ஜமாலியும் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெ அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.

விவாதத்தின் நிபந்தனைகளில் முக்கியமானது விவாதிக்கும் இருவரும் தங்கள் கருத்தை நிரூபிப்பதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் வசனங்களையும்,ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் எடுத்து வைத்து விவாதிக்க வேண்டும் என்பதாகும்.

முதலில் விவாதிக்க ஆரம்பித்த பி.ஜெ அல்லாஹ் உருவம் உள்ளவன் என்பதற்கு ஆதாரமாக புகாரியின் 2440ம் ஹதீஸை ஆதாரம் காட்டி (இலக்கம் பதிப்புகள் வித்தியாசத்தினால் வித்தியாஸப்பட வாய்ப்புண்டு.ஹதீஸ் தேவையானவர்கள் நமது மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்) தனது வாதத்தை முன்வைத்தார்.


ஆனால் அடுத்ததாக வாதிக்க ஆரம்பித்த அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் தனது கருத்தை உருதிப்படுத்த எந்த ஒரு ஆதாரத்தையும் முன்வைக்காமல் வெரும் வாதத்தை மாத்திரம் எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

உளரிக் கொட்டிய ஜமாலி.

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று வாதிக்க வந்த ஜமாலி தனது வாதத்திற்கு ஆதாரம் வைக்கவும் இல்லை.பி.ஜெ வைத்த வாதத்தை ஆதாரத்தின் அடிப்படையில் மறுக்கவுமில்லை.

ஆனால் தாராளமாக உளரிக் கொட்டிக் கொண்டேயிருந்தார்.அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று சொல்ல வந்த ஜமாலி அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று பி.ஜெ காட்டிய புகாரியில் இடம் பெரும் ஹதீஸிற்கு பொருள் சொன்னார்.

மீண்டும் பி.ஜெ அவர்கள் உங்கள் கருத்து அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்பது அப்படியெனில் ஏன் இந்த ஹதீஸிற்கு அல்லாஹ்வின் உருவம் என்று பொருள் சொன்னீர்கள் என கேட்டார்.

மீண்டும் உடனே அல்லாஹ்வுக்கு உருவம் இல்லையென்று தான் நான் கூறுகிறேன் என்று தனது தலைப்பிற்கு தாவினார்.

தொடர்ந்தும் இப்படியே அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை ஆனால் இருக்கிறது என்ற பாணியில் தான் ஜமாலி அல்ல தான் ஒரு கோமாலிதான் என்பதை உருதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

குர்ஆனையே மறுத்த கோமாலி.

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வாதிட்ட பி.ஜெ அதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் பல ஆதாரங்களை அடுக்கினார்.

அல்லாஹ்வுக்கு கைகள் இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு கண்கள் இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு செவி இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு கால் இருப்பதாக வரும் வசனங்கள். என்று பல வசனங்களை ஆதாரம் காட்டி அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது.அதனால் தான் இறைவனுக்கு கை கால் முகம் கண் செவி போன்றவையெல்லாம் இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான் என்று தனது வாதத்தை ஊன்றி நிருத்தி விட்டார்.

அதற்கெல்லாம் பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அல்லாஹ்வின் திருமறையையும் நபியவர்களின் வார்த்தைகளையும் தாருமாறாக கிண்டலடிக்க ஆரம்பித்தார்.

இறைவனை இழிவாக்க முயன்ற கோமாலி.

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக பி.ஜெ ஆதாரத்தை வைத்துப் பேச ஆரம்பித்த மறுகணத்திலிருந்து அல்லாஹ்வையும் அவனுடைய தூதருடையவும் வார்த்தைகளை கேலி செய்ய ஆரம்பித்தார் அல்லாஹ்வின் எதிரி கோமாலி அவர்கள்.

கோமாலி அல்லாஹ்வை கிண்டலடித்துப் பேசி கேட்ட கேள்விகள்.(நவூது பில்லாஹ்)

1.அல்லாஹ்வுக்கு உருவம் இருப்தாக வைத்துக் கொண்டால் நமக்கும் உருவம் இருப்பதால் நாமும் அல்லாஹ்வும் ஒன்றாகி விடுவோம்.

2.அல்லாஹ் ஒற்றைக் கால் உடையவனா?

3.அல்லாஹ்வின் மற்ற கால் எங்கே?

4.அல்லாஹ் திறையை விளக்கி தனது காலைக் காட்டுவான் என்றால் அல்லாஹ் எந்த ஆடையை உடுத்திருந்தான்?

5.ஆடை உடுத்திருக்கவில்லை என்றால் அல்லாஹ் நிர்வாணமானவனா? 

6.அல்;லாஹ்வுக்கு இரண்டும் வலது கை என்றால் இடது கை எங்கே?

7.ஒரே பக்கத்தில் இரண்டு கைகள் அல்லாஹ்வுக்கு இருக்க முடியுமா?

8.இறைவனின் ஒரு காலைக் காட்டுவான் என்றால் மற்றக் கால் இல்லாத நொண்டியாக இறைவன் மாற மாட்டானா?

9.அல்லாஹ்வுக்கு எத்தனை விரல்கள்.

10.அல்லாஹ் விரல்களில் எப்படி உலகத்தை வைத்திருக்க முடியும்?

11.அல்லாஹ் எப்படி வானத்தை சுருட்டுவான்?

12.வானத்தை இறைவன் சுருட்டினால் தானும் சேர்ந்து சுருட்டப் படுவானே?

13.மரங்களை எப்படி ஒரு விரலில் அல்லாஹ் வைத்திருக்க முடியும்?

14.அல்லாஹ் ஒற்றைக் கண்ணனா?

15.அல்லாஹ்வுக்கு இரண்டு கண்களும் இல்லை என்றுதான் புரிய வேண்டும்.

16.அல்லாஹ்விக் கைகளில் இரத்தம் ஓடுகிறதா?

17.அல்லாஹ்வின் கைகளில் தசைகள் உண்டா?

18.இறைவனின் கைகளில் நரம்புகள் உண்டா?

19.உலகத்தை அழிக்கும் போது தன்னைத்தானே அல்லாஹ் அழித்துக் கொள்வானா?

20.உலகம் அழிக்கப் படும் என்றால் இறைவனின் கை கால்கள் அழிக்கப் படுமா?

21.அல்லாஹ் ஆதம் நபியவர்களை போட்டோ எடுத்தானா?

22.அர்சின் எடை 8 மலக்குகள் தூக்கும் அளவு தானா?

இது போன்ற இன்னோரன்ன கேள்விகளை அல்லாஹ்வின் விஷயத்தில் கேட்டு அல்லாஹ்வை கேளிப் பொருளாக மாற்றிட முயன்றார் ஜமாலி என்ற இந்த கோமாலி.

அல்லாஹ் தனது திருமறையில் இப்படிக் கூறுகிறான்.

அவர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசினோம் என்று கூறுவார்கள். அல்லாஹ் வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்பீராக!(9:65)

அல்லாஹ்வைப் பற்றி திருமறையிலும் நபிமொழிகளிலும் வருகின்ற செய்திகளை பி.ஜெ எடுத்துக் காட்டும் போதெல்லாம் அவைகளை கேலி கிண்டல் செய்த இந்த கேடு கெட்டவனுடைய மறுமை நிலையை அறிந்து கொள்ள இந்த வசனம் ஒன்றே போதுமான சான்றாகும்.

விவாதத்தின் சில முக்கிய விஷயங்கள்.

1.களியக்காவிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இந்த கோமாலியுனும் அவனுடைய கூட்டத்தினறோடும் செய்த விவாதத்தை பாத்து விட்டு தவ்ஹீத் ஜமாத் சொல்வது தான் உண்மை என்பதை அறிந்து ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சகோதரர் பி.ஜெயிடம் கேள்வி கேட்டார்.

அவர் கேள்வியைக் கேட்க்கும் போது நான் களியக்காவிலை விவாதத்தின் பின் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டேன்.

தற்போது உங்களிடம் விவாதம் செய்பவர் அவருடன் இருப்பவர்கள் எல்லோரும் மத்ரஸாவில் எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் தான்.

இங்கு விவாதத்தை பார்க்க வந்திருப்பவர்களில் பெரும்பாலான ஆலிம்கள் என்னிடம் படித்த மாணவர்கள் தான்.


நான் எப்படி களியக்காவிலை விவாதத்தின் பின்னர் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டு இவர்களின் மூட நம்பிக்கைக் கொள்கையை விட்டும் வெளியில் வந்தேனோ அது போல் இன்ஷா அல்லாஹ் வெகு சீக்கிரமாகவே இங்கு இருப்பவர்களில் அதிகமானவர்கள் இந்தக் கொள்கையை ஏற்று தவ்ஹீத் ஜமாத் சொல்வது தான் சரியானது என்பதைப் புரிந்து ஜமாலி போன்றவர்களின் கேடு கெட்ட கொள்கையை விட்டே வெளியில் வருவார்கள். என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்தார்.

2.அசத்தியத்திற்கு ஆதரவாக வாதிட வந்த ஜமாலி பல சந்தர்ப்பங்களில் தன்னைத் தானே கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு உளரிக் கொட்டினார்.

3.அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று சொல்ல வந்தவர் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று வரும் வசனங்களுக்கெல்லாம் அல்லாஹ்வின் பண்பு என்று விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

அரபியல் அல்லாஹ்வின் உருவம் என்று வரும் இடத்தில் எல்லாம் பண்பு என்று பொருள் வைத்துக் காட்டுங்கள் என்று பி.ஜெ சவால் விட்டார்.

பாவம் அத்வைதம் போட்ட பந்தியில் மந்தியாய்க் குந்தியெலுந்த கோமாலியால் கடைசி வரை அந்த ஹதீஸிற்கு பண்பு என்று பொருள் வைக்கவே முடியவில்லை.

3.விவாதத்தின் முதல் நாள் கோமாலியின் சுன்னத் ஜமாத் தரப்பால் வந்தவர்களின் பாதிப் பேரை அடுத்தனால் அதாவது ஞாயிற்றுக் கிழமை காணவேயில்லை.

மேலதிக தகவல்களுக்கு விவாதத்தின் வீடியோவைப் பார்க்கவும்.

Thursday, July 15, 2010

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர்.

குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.

ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.

இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.

இன்று முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக எண்ணி பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.

ஸபர் குளி என்ற பெயரில் ஆற்றில் போய் குளித்து பீடையை நீக்குகின்றனர்.

இன்னும் சிலர் மாவிலைகளில் “சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்” என்ற திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்துக் குடிப்பார்கள். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று கருதுகிறார்கள்.

இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக் கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இது போன்று ஏராளமான மூட நம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து காப்பி அடித்துள்ளார்கள்.

மேலும் ஸபர் மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால் மாதமும் சபர் மாதமும் பீடையாகக் கருதப்பட்டது.

பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். 

ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)

சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.

தொற்று நோயும், பறவைச் சகுனமும், ஸபர் பீடை என்பதும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5707, 5717

ஸபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகிவிடும் என நம்பி அதைப் பீடை பிடித்த மாதமாக அன்றைய மக்கள் கருதினர். இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் என்பது இல்லை என்று கூறினார்கள்.

கெட்ட நாள் உண்டா?

காலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்.

தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம். (அல்குர்ஆன் 54:19)

பீடை நாள் உண்டு என்பதற்கு ஆதாரமாக இந்த வசனத்தைக் கொள்கிறார்கள். இவர்கள் நினைக்கும் கருத்தை இவ்வசனம் தரவில்லை.

இவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர்.

ஆனால் இவ்வசனம் இந்தக் கருத்தைத் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்று வீசியதாகவும், ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. (41:16)

ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

மேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.

உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல.

எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.

இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.

உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவரும் தரித்திர நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.

“ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா
நூல்: புகாரி 4826

எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.

பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 10:107)

மாற்று மதக் கலாச்சாரம்

இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.

இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.

(புகாரி 3456)

இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.

மாற்று மதத்தினர் தேரிழுப்பதையும். விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப்பதையும், கந்தூரி கொண்டாடுவதையும் வழமையாக்கிக் கொண்டனர்.

இது போன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.

இதைப் பார்த்துத் தான் முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதி, அந்த மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத நடைமுறைகளை மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பியடித்து செய்து வருகின்றனர்.

இது போன்று மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றார்கள்.

இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டுவதாக அமைந்துள்ளது.

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்” என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து” என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்!. அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்; என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலி)
நூல்:திர்மிதி

தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: 
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ 1560

எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, ஸஃபர் மாதம் உள்ளிட்ட எந்த மாதத்தையும் கெட்ட நாளாகக் கருதாமல், மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றாமல் வாழ்ந்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

Wednesday, July 14, 2010

Tuesday, July 13, 2010

Thursday, July 08, 2010

சன் நியுஸ் வீடியோ: பிரதமர் & சோனியா காந்தி சந்திப்பு (நியு டெல்லி பிரஸ் மீட்)

கடந்த 6-7-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இது பற்றிய செய்தி இன்று (8-7-2010) சன் நியுஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

Tuesday, July 06, 2010

சோனியாகாந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த TNTJ நிர்வாகிகள்! (முழு விபரம்)

பிரதமருடன் தவ்ஹீத் ஜமாஅத் சந்திப்பு

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள்.

பகல் 12.25 முதல் 12.35 வரை காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து இட ஒதுக்கீட்டை  வலியுதித்தினார்கள்.

இது குறித்த முழு விபரம் வருமாறு:

மாநாட்டுக்கு முதல் நாள் ஜூலை மூன்றாம் தேதியன்று பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தனி இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்துவதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கோரும் இரு கடிதங்கள் தயார் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் மூலம் இருவருக்கும் சேர்ப்பிக்கச் செய்தோம்.

மாநாடு நடத்துவது மட்டும் போதாது. இட ஒதுக்கீடு தரும் இடத்தில் இருப்பவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? இட ஒதுக்கீடு தரும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா? இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுப்பூர்வமான மாநாடு மற்றும் பேரணி குறித்த தகவல்கள் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்தச் சந்திப்பை விரும்பினோம்.

பிரதமரும் சோனியா காந்தி அவர்களும் நேரம் ஒதுக்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நேரம் ஒதுக்கினாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நேரம் ஒதுக்குவார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கவில்லை.

மாநாடு முடிந்த மறுநாளே ஆறாம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.

தமிழக வரலாறு காணாத அளவுக்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் உணர்ச்சிப் பிளம்பாகக் கலந்து கொண்ட தகவல் உளவுத்துறை மூலமும் மாநாட்டில் கலந்து கொண்ட சகோதரர் ஜெ. எம். ஹாருன் அவர்கள் மூலமும் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவருக்கும் செய்திகள் சென்றடைந்ததே இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் காரணமாக இருந்தது. பிரதமரி சந்திப்பின் போது இதைக் கண்டு கொண்டோம்.

தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் பி. ஜைனுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம் ஹாரூன், தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அஹமது ஆகியோர் காலை 7.00 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு குறித்த நேரத்தில் பிரதமரை சந்திக்கச் சென்றோம். வழக்கமான பாதுகாப்பு சோதனை முடிந்தபின் பிரதமர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டோம்.

அனைவரிடமும் பிரதமர் கைகுலுக்கி வரவேற்றார். திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பி. ஜே. வழங்கினார்கள். குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பிரித்துப் பார்த்து கண்களில் ஒற்றிக் கொண்ட பின் நன்றி நன்றி நன்றி எனக் கூறினார்.

இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் பிரதமருக்கு சால்வை வழங்கினார்கள். தேசிய லீக் தலைவார் பஷீர் அஹமது அவர்கள் ஏல்க்காய் மாலை வழங்கினார்கள்.

இதன் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லட்டர் பேடில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி எழுதப்பட்ட கோரிக்கை மனுவை வழங்கினோம்.

பிரதமருக்கு அருகில் பிரதமர் இருக்கை போல் ஒரு இருக்கையும் வலது இடது புறங்களிலும் எதிரிலும் சோபாக்கள் போடப்பட்டு இருந்தன.

தனது அருகில் போடப்பட்ட இருக்கையில் பி. ஜே. அவர்களை பிரதமர் அமரச் செய்தார்கள். இந்த இருக்கையில் மத்திய கேபினட் அமைச்சர் தவிர யாரும் அமர வைக்கப்பட மாட்டார்கள். இந்தக் கண்ணியத்தை பிரதமர் தங்களுக்கு மட்டும் வழங்கினார் என்று பின்னா ஹாரூன் அவா;கள் பீஜேயிடம் கூறினார்கள். ஆனால் இது பீஜேவுக்கு வழங்கப்பட்ட கண்ணியம் அல்ல. மாநாட்டுக்கு வந்த இதற்காக உழைத்த துஆ செய்த அனைவருக்குமான கண்ணியமே இது என்று பீஜே கூறினார்.

பதினைந்து நிமிட நேரம் முஸ்லிம்களின் அவல நிலையையும், காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியையும் பி. ஜே. தமிழில் கூற, ஹாரூன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார்கள்.

மாநாட்டைப் பற்றியும், கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்டத்தைப் பற்றியும் பி. ஜே. தெரிவித்த போது தெரியும், ரிப்போர்ட் வந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்கள்.

ஷம்சுல்லுஹா, அப்துல் ஹமீது, ரஹ்மத்துல்லா ஆகியோரும், பஷீர் அஹமது, ஹரூன் பாய் ஆகியோரும் ஆங்கலத்தில் இட ஒதுக்கீடு குறித்து பல வகையிலும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தார்கள்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிரதமர் நீதிபதி மிஸ்ரா அவர்களின் அறிக்கை வந்தது முதல் அது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தருவோம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்துக்கு பிரதமர் தந்த மரியாதையும் முக்கியத்துவமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தன. லட்சக்கணக்கான மக்கள் பட்ட கஷ்டமும் உழைப்பும் துஆக்களுமே இதற்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.

நின்று கொண்டே மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பக் கூட நேரமில்லாத பிரதமர் நாங்களாக எழும் வரை கலகலப்பாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள். காரணம் தீவுத் திடலை நிறைத்த மக்கள் சக்தி தான் என்பதை நாங்கள் எங்களுக்குள் நினைவுபடுத்திக் கொண்டோம்.

அடுத்ததாக காங்கிரஸ் தலைமை அதிகார மையத்தின் நம்பர் ஒன் ஆகக் கருதப்படும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களைச் சந்திக்கச் சென்றோம். ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டதால் குறித்த நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டது.

எத்தனையோ வேலைப் பளுவில் இருக்கும் பெரும் தலைவர்கள் மற்றவர்களுக்காகக் காத்திருக்க மாட்டார்கள். ஒரு விநாடி காலதாமதமானாலும் யாரையும் சந்திக்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் செக்யூட்டிகள் நமது சந்திப்பை கேன்சல் செய்து விட்டதாகக் கூறினார்கள். ஆனால் ஹாரூன் பாய் அவர்கள் தொடர்பு கொண்டு தாமதத்துக்கான காரணம் பற்றி தெரிவித்தவுடன் எங்கள் காலதாமதத்தைப் பொருட்படுத்தாமல் உடனே எங்களை வரச் சொன்னார்கள்.

சோனியா காந்தி அவர்களை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தோம். அவருக்கும் குர்ஆன் ஆங்கில மொழிபெயா;ப்பு மற்றும் அந்த மாமனிதா ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுத்தோம். கோரிக்கை மனுவையும் அளித்தோம். பிரதமரிடம் எடுத்துச் சொன்னது போல் முழுமையாக கோரிக்கைகளை அவர்களுக்கும் விளக்கினோம்.

அபுல்கலம் ஆஸாத் அறக்கட்டளை மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் மீது தமக்கு உள்ள அக்கரையை சோனியா விளக்கிக் கூறினார். இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள்.

இருபெரும் தலைவர்களின் சந்திப்பும் இட ஒதுக்கீடு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

சந்திப்பு இனிப்பாக இருந்தாலும், வாக்குறுதி நம்பும்படி இருந்தாலும் இட ஒதுக்கீடு தான் அடுத்த தேர்தலில் மையக் கருத்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இட ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றினால் அதன் பலனக் காங்கிரஸ் அறுவடை செய்யும். இட ஒதுக்கீடு அளிக்கத் தவறினால் இந்தச் சந்திப்பு எந்த வகையிலும் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.

புது டில்லியில் இருந்து கோவை ரஹ்மதுல்லாஹ்.

குறிப்பு:
ஜேஎம் ஹாரூன் அவார்களுக்கும் நமக்கும் கொள்கையில் வேறுபாடு இருந்தாலும் இந்த மாபெரும் மக்கள் திரளை சமுதாய நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வம் எங்கள் ஆர்வத்தை விட குறைந்ததாக இல்லை. மேலும் தேசிய லீக் தலைவர் பஷீர் அவர்கள் மாநாட்டூக் நீங்கள் அழைக்காவிட்டால் கூட நான் உரிமையுடன் வந்து கலந்து கொள்வேன் எனக் கூறி ஹாரூன் அவர்களுடன் சேர்ந்து இந்த சரித்திரம் காணாத மக்கள் சக்தியக் காட்டி மக்களூக்கு நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும் என்று முனைப்பு காட்டியது குறிப்பிடத் தக்கது.

பிரதமர் அலுவகத்தில் இருந்து TNTJ விற்கு அழைப்பு: சோனிகாந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த TNTJ நிர்வாகிகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மிகப் பிரம்மாண்டப் பேரணி மாநாட்டின் உடனடி பிரதிபளிப்பாக இந்திய பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அழைப்பு வந்ததன் பேரில் மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வழியுறுத்துவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் பி.ஜைனுல் ஆபிதீன், அப்துல் ஹமீத், கோவை ரஹ்மதுல்லாஹ், ஷம்சுல்லுஹா ஆகியோர் இன்று (6-7-2010) காலை 11.15 மணிக்கு டெல்லி சென்று காங்கரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரத பிரதமர் மன்மோகங் சிங் ஆகியோரை நேரில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் முஸ்லிம்களுக்கு மத்தியில் 10 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு வழங்கிட கோரி ஜுலை 4 அன்று லட்சோப லட்சம் மக்கள் சென்னையில் கூடியதை சுட்டிக்காட்டி இதை உடனடியாக சட்டமாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் வழியுறுத்தினர்.

புகைப்படம் மற்றும் மேலதிக விபரம் விரைவில் இன்ஷா அல்லாஹ்.

Monday, July 05, 2010

வரலாறு காணாத மிகப் பிரம்மாண்டப் பேரணி மாநாடு! மக்கள் வௌ்ளத்தில் மூழ்கிய சென்னை! புகழ் அனைத்தும் இறைவனுக்கே!




தீர்மானங்கள்

ஜூலை 2010ம் ஆண்டு 4ம் தேதி சென்னை தீவுத்திடல் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் எழுச்சியுடன் பங்கேற்ற, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாட்டில்’ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

நீதிபதி மிஸ்ரா, சச்சார் ஆகியோருக்கு நன்றி

1. இந்திய நாட்டை உருவாக்குவதிலும், இந்தியாவின் அடிமைத் தளையை உடைத்தெறிவதிலும் பெரும் பங்கு ஆற்றிய முஸ்லிம்கள் நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளன. முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மிஸ்ரா கமிஷன் தெளிவான பரிந்துரை யையும் வழங்கியுள்ளது. முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இதற்காக இம்மாநாடு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

கல்வியில் இட ஒதுக்கீடு

2. முஸ்லிம்களின் இந்த அவல நிலை மாறிட ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்.சி. உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து மாநிலங்களில் உள்ள கல்லூரிகளிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க வேண்டும் என்று முஸ்ம் சமுதாயம் சார்பில் இம்மாநாடு மத்திய அரசை வயுறுத்துகிறது.

வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு

3. அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மத்திய அரசுப் பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தனியார்கள் நடத்தும் பெரிய நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க இம்மாநாடு மத்திய அரசை வயுறுத்துகிறது.

பாதுகாப்புத்துறையில் இட ஒதுக்கீடு

4. நாட்டில் நடக்கும் வகுப்புக் கலவரங்களின்போது, காவல்துறை, உளவுத்துறை, மத்தியக் காவல் படை, துணை இராணுவம் மற்றும் இராணுவம் ஆகிய அனைத்து துறைகளும் பாரபட்சமாகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நடந்துள்ளனர். இதை மத்திய அரசு அமைத்த பல்வேறு கமிஷன்கள் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளன. எனவே மத்திய அரசின் இராணுவம், உளவு உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளிலும் மாநில அரசுகளின் காவல் மற்றும் உளவுத்துறையிலும் 20 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

அரசியல் அதிகாரத்தில் தனி இட ஒதுக்கீடு

5. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் முஸ்ம்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அனைத்துக் கட்சிகளும், பெரும்பான்மை சமுதாய வேட்பாளரையே நிறுத்துவதால் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற இயலவில்லை. இந்த நிலை மாறிட தத் சமுதாய மக்களுக்கு ரிசர்வ் தொகுதிகள் இருப்பதுபோல் உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளு மன்றம், மாநிலங்களவை, மாநில மேலவைகள் அனைத்திலும் பத்து விழுக்காடு தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ் தொகுதிகளாக அறிவித்து சட்டமியற்ற மத்திய அரசை முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இம்மாநாடு வயுறுத்துகிறது.

நலத்திட்டங்களிலும் இட ஒதுக்கீடு

6. மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்டங்களிலும், இலவசத் திட்டங்களிலும் அதிகாரிகள் முஸ்லிம்களைப் புறக்கணித்து துரோகம் செய்து வருகின்றனர். எனவே நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப அனைத்து நலத்திட்டங்களிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

முஸ்லிம் பல்கலைக் கழகம்

7. உத்தரப்பிரதேசத்தில் இருப்பதுபோல் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று நீதிபதி மிஸ்ரா அவர்களின் பரிந்துரையை ஏற்று ஆவண செய்ய வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

காங்கிரஸின் தார்மீகக் கடமை

8. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தன் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியது. அதை நம்பி முஸ்லிம்கள் வாக்களித்ததால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ரங்கநாத் மிஸ்ரா அறிக்கைக்காக மட்டுமின்றி காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிக்காகவும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் தார்மீகப் பொறுப்பு கங்கிரசுக்கு உள்ளது என்பதையும் காங்கிரசுக்கு இம்மாநாடு சொல்லிக் கொள்கிறது.

சட்டத்தில் தடை இல்லை

9. முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்க சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை என்பதையும் அதற்கான வமுறைகள் எவை என்பதையும் இந்தியாவின் மாபெரும் சட்டவல்லுனர் ரங்கநாத் மிஸ்ரா தெளிவுபடக் கூறியுள்ளார். எனவே சட்ட ரீதியாக எந்தச் சிக்கலும் இல்லாமல் தனி இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்பதை காங்கிரசுக்கு இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

சட்டமாக்க பெரும்பான்மை உள்ளது

10. மேலும் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க காங்கிரஸ் முன் வந்தால் திமுக, இடதுசாரிக் கட்சிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கூட அதைச் சட்டமாக்க ஆதரவு தரும் வாய்ப்பு உள்ளது. பாஜக, சிவசேனா தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வாய்ப்பு உள்ளதையும் காங்கிரசுக்கு நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

தள்ளிப்போட எந்தக் காரணமும் இல்லை

11. முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிப்பதைத் தள்ளிப் போட எந்தக் காரணமும் இல்லை என்பதையும், சாக்குப் போக்கு சொல்வதை முஸ்லிம்கள் இனி நம்ப மாட்டார்கள் என்பதையும் முஸ்ம் சமுதாயத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இட ஒதுக்கீட்டை அடையும் வரை ஓய மாட்டோம்

12. 60 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் முஸ்லிம் சமுதாயம் மற்ற சமுதாய மக்களைப்போல் முன்னேற முஸ்லிம்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு வழங்குவதைத் தவிர வேறு வ கிடையாது என்றும், நாடு முழுவதும் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய முஸ்லிம் சமுதாயம் தயார் என்றும் இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.

முஸ்லிம் வாக்குகளை இட ஒதுக்கீடே தீர்மானிக்கும்

13. அடுத்து வரும் தேர்தல் இந்திய முஸ்ம்கள் வாக்களிக்கும்போது தனி இடஒதுக்கீட்டைத் தவிர வேறு எதையும் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். வேறு எதன் மூலமும் திருப்தி அடைய மாட்டார்கள் என்ற ஒட்டுமொத்த முஸ்ம்களின் குரலை இம்மாநாடு எதிரொக்கிறது.

அனைத்து மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு

14. முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளித்து வரும் கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களை முன்மாதிரியாகக் கொண்டு அனைத்து மாநில அரசுகளும் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

புதுவை ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை

15. 2009 தேர்தன்போது இட ஒதுக்கீடு வழங்குவதாக எழுத்து மூலம் வாக்குறுதி அளித்து விட்டு முஸ்லிம்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் புதுவை அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அடுத்து வரும் தேர்தல் இதற்கான விலையை புதுவை ஆளும் கட்சி கொடுத்தே தீர வேண்டும் என்று இம்மாநாடு புதுவை ஆளும் கட்சியை எச்சரிக்கிறது.

தமிழகத்தில் குளறுபடிகளை சரி செய்க!

16. தமிழக முஸ்ம்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று முஸ்லிம்களில் பிற்பட்டோருக்கு தமிழக அரசு மூன்றரை விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளித்தது. முஸ்லிம் சமுதாயம் இதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டாலும், சில அதிகாரிகள் பிற்பட்டோர் பட்டியல் இல்லாத முஸ்லிம்களின் உரிமையைப் பறித்து வருகின்றனர். எனவே பொதுப் பிரிவில் தகுதி உள்ள முஸ்லிம்கள் வாய்ப்பு பெற அதிகாரிகள் குறுக்கே நிற்காதவாறு தமிழக முதல்வர் தெளிவான கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில் அதிகப்படுத்துக…

17. நாடு முழுவதும் பத்து சதவீத இட ஒதுக்கீடு அளிக்குமாறு ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை கூறியதை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ஏழு விழுக்காடாக உயர்த்தித் தருமாறு இம்மாநாடு தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறது.

திமுக தலைவருக்கு…

18. இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், மத்திய அரசில் எதையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவருமான தமிழக முதல்வர் மரியாதைக்குரிய கருணாநிதி அவர்கள் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையைச் சட்டமாக்க மத்திய அரசை வயுறுத்துமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது..

பறிக்கப்பட்ட உரிமை…

19. வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்டபோது முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியிருந்தனர். ஆனாலும், வெள்ளையர் களை விரட்டியடிப்பதற்காக ஆங்கிலம் படிக்க மாட்டோம் என்று முஸ்லிம்கள் முடிவு செய்தனர். மேலும், ஆங்கிலேய அரசில் பெற்றிருந்த வேலை வாய்ப்பையும் உதறினர். தேச விடுதலைக்காக முஸ்லிம் முன்னோர்கள் செய்த தியாகத்தால்தான் முஸ்லிம்கள் இன்று பின்தங்கி யுள்ளனர். இதை கவனத்தில் கொண்டு முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கையை ஆள்வோர் பரிவுடன் பரிசீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இட ஒதுக்கீடுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி!

20. முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவை என்று பல வகையிலும் குரல் கொடுத்து வரும் அனைத்து கட்சி தலைவர்களையும், சமுதாயத் தலைவர்களையும், இயக்கங்களையும், பத்திரிகைகளையும், எழுத்தாளர்களையும், தனி நபர்களையும் மன நிறைவுடன் இம்மாநாடு பாராட்டுகிறது. அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

சட்டத்திருத்தம் செய்திடு!

21. அரசியல் சட்டத்தின் பிரிவு 15(டி) மற்றும் 16(4) பின்தங்கிய – அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் பெறாத வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கியுள்ளது. இதில் வகுப்பினர் என்ற வார்த்தை சிறுபான்மை’ மக்களைத்தான் குறிக்கும் என்று அரசியல் சாசனம் உருவாக்கும்போது விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அதற்கு வேறுவிதமான விளக்கம் அளித்து சிலர் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, “வகுப்பினர்’ என்பதை சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர்’ என்று தெளிவாக திருத்தம் செய்யுமாறு இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.  நன்றி! நன்றி!! இம்மாநாடு சிறப்புற நடந்திட தனது பேரருளை வாரி வழங்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லா வேறுபாடுகளையும் மறந்து கடும் சிரமங்களுக்கு மத்தியில் எழுச்சியுடன் கலந்து கொண்ட தாய்மார்களுக்கும், பெரியோர்களுக் கும், பொருளுதவி செய்த மக்களுக்கும், வளைகுடாவில் அற்ப ஊதியத்தில் பணிபுரியும் நிலையிலும் சமுதாயத்தின் உரிமைப் போராட்டத் துக்காக வாரி வழங்கிய சொந்தங்களுக்கும், முஸ்லிம்களின் உணர்வை மதித்து பங்கேற்ற சிறப்பு பார்வையாளர்களுக்கும், அனைத்து ஊடகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், கேமராமேன்கள் ஆகியோருக்கும் நன்றிகள். இம்மாநாடு சிறப்புற நடைபெற அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய காவல்துறை, தீயணைப்புத்துறை, உளவுத்துறை, தமிழக அரசின் அனைத்து துறையினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேடை, ஒளி ஒலி அடிப்படை வசதிகள் செய்து தந்த தொல் நுட்ப வல்லுனர்களூக்கும் நன்றிகள். இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற அருள்புரிந்த இறைவனுக்கே புகழனைத்தும்.


நன்றி: www.tntj.net

அதிரையில் பொய்யன் டீஜெக்கு பொதுமக்கள் செருப்படி

அதிரையில் பொய்யன் டீஜெக்கு பொதுமக்கள் செருப்படி

பொய்யன் பாக்கர் மங்கிஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்பதற்காக கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் பாக்கரும் மங்கிஸ்கானும் வடிகட்டிய பொய்யர்கள் என்பதை பொய்யன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையிலேயே அறிந்து கொள்ளலாம். வேலூரில் 5000 பேர் பொய்யன் டீஜே சார்பில் கலந்து கொள்ள அனுமதி கேட்டதாக மங்கிஸ் கான் கூறியது ஒன்றே போதுமானது. இவனுகளுகு மாநிலம் முழுவதும் இந்தியா முழுவதும் 1000 பேர் கூட கிடையாது. வேலூரில் 5000 பேர் வருவதாகக் கூறியுள்ளதில் இருந்து இவனுக்கு நிகரான பொய்யன் உலகில் கிடையாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதிரை கூட்டம் குறித்து செய்தி போடுவதாக இருந்தால் முழுமையாக போட வேண்டும். மங்கி புளுகிக் கொண்டிருக்கும் போது ஆதிரமடைந்த பொது மக்கள் மேடையில் ஏறி கேள்விகள் கேட்டனர். பெண்கள் மாநாட்டுக்கு போகக் கூடாது என்று சொல்லும் பொய்யன் ரதி மீனா பஸ்ஸில் அன்னியப் பெண்ணுடன் பயணம் போகலாமா? என்று கேட்டு பொம்பளப் பொறுக்கி பாக்கரி லீலைகளை பொது ம்க்கள் மைக் பிடித்து அம்பலப்டுதினார்கள். இதனால் பாக்கர் மங்கிஸ்கானை உட்கார வைத்துவிடுகிறேன் என்று கூறி விட்டு பேச ஆரம்பித்தார். பாக்கர் கூட்ட மேடையிலேயே ஏறி பாக்கரி லீலைகளை அம்பலப்ப்டுத்திய அதிரை சம்பவம் இனி எந்த ஊரில் கூட்டம் நட்த்தினாலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். மங்கிஸ்கான் பீஜேயுடன் நெருங்கிய பழக்கம் உள்ளவன் என்றும் மங்கிஸ்கான் கூறி வருகிறான். இவனுடன் பீஜேக்கு எந்த நெருக்கமும் இல்லை. இவனை பீஜே தனியாக ஒரு தடவை கூட சந்தித்தது இல்லை. இவனுக்கும் பீஜேக்கும் எந்த நெருக்கமும் இருந்தது இல்லை. தென் சென்னை மாவட்டத்தி நிர்வாகிகளாக இருந்தவர்களில் இவனைத் தவிர மற்ற நிர்வாகிகளாவது சில தடவை பீஜேயை சந்தித்துள்ளனர். மாவட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் எதிலாவது இவன் பீஜேயை பார்த்திருக்கலாமே தவிர இவனுடன் பீஜெக்கு எந்தப்பழக்கும் கிடையாது என்பதை பொய்யன் பாக்கரே அறிவார். மாநாடு குறித்து பொய்யன் கூறும் குற்ற சாட்டுக்களூக்கு தலமை மூலம் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

பொய்யன்கள் மங்கிஸ்கான், பாக்கர் கூட்டங்களில் இனிமேல் புளுகினால் அதிரை அதிரடி நடவடிக்கை தொடரும் என்று எச்சரிக்கிறோம்.


மன்மத ராசாவின் லீலைகள், ஊழல்கள்  பற்றி அறியவும் மற்றும் மன்மத ராசாவின் பக்தர்கள் பரப்பும் பொய்களுக்கு முதுகெழும்பை முறிக்கும் பதில்களை காணவும் இங்கே சொடுக்கவும்.

Friday, July 02, 2010

ஜூலை மாநாட்டிற்கு தயாராகிவிட்டீர்களா?


ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு



வெள்ளையன் அளித்த இடஒதுக்கீட்டை விடுதலைப்போரில் வீசியெறிந்தது, நம் சமுதாயம். இது முஸ்லிம்களின் தேசாபிமானம்!

விடுதலைக்குப் பின் அந்த இடஒதுக்கீட்டை பிடுங்கி எறிந்தது, இந்திய அரசாங்கம். இது இந்த தேசத்திற்கே அவமானம்!

இன்னும் தொடரலாமா இந்தத் துரோகம்!

முஸ்லிம் சமுதாயமே தீவுத் திடலுக்கு விரைவீர்! திருப்புமுனை காண்பீர்!!

நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல், சென்னை


வளைகுடாவில் இந்திய முஸ்லிம்களின் நிலை




அதிரையில் இருந்து மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் மாநாட்டிற்கு வர கீழ்காணும் நபர்களை தொடர்பு கொள்ளவும்.

ராஜிக் அஹமது (99434-47195)

அப்துல் ஜப்பார் (99769-20828)

ஹைதர் அலி (96776-26656)

அப்துர் ரஹ்மான் (99945-38590)

நெய்னா (97895-82547)