Thursday, July 01, 2010

இந்திய முஸ்லிம்கள் அன்றும் இன்றும்

ஜூலை மாநாட்டிற்கு தயாராகிவிட்டீர்களா?

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு


வெள்ளையன் அளித்த இடஒதுக்கீட்டை விடுதலைப்போரில் வீசியெறிந்தது, நம் சமுதாயம். இது முஸ்லிம்களின் தேசாபிமானம்!

விடுதலைக்குப் பின் அந்த இடஒதுக்கீட்டை பிடுங்கி எறிந்தது, இந்திய அரசாங்கம். இது இந்த தேசத்திற்கே அவமானம்!

இன்னும் தொடரலாமா இந்தத் துரோகம்!

முஸ்லிம் சமுதாயமே தீவுத் திடலுக்கு விரைவீர்! திருப்புமுனை காண்பீர்!!

நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல், சென்னை




















Wednesday, June 30, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற ஜூலை 4 மாநாடு பைக் மற்றும் தெருமுனை பிரச்சாரம்

கடந்த 26.06.2010 அன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற (இன்ஷா அல்லாஹ்) இருக்கும் 'ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு' ஏன் என்பதை விளக்கி, அதிரையின் முக்கிய பகுதிகளில் பைக் பேரணியும் மற்றும் தெருமுனை பிரச்சாரமும் நடைபெற்றது.

பைக் பேரணி

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் மௌலவி கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் உரையாற்றினார்கள்.

கீழ்காணும் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது:

1. கடல்கரை தெரு
2. தரகர் தெரு
3. பிலால் நகர்
4. மெயின் ரோடு (பஸ் ஸ்டாண்ட் அருகில்)
5. செக்கடிமேடு
6. மேலத்தெரு
7. நெசவுத்தெரு
8. தக்வா பள்ளி அருகில்

கடல்கரை தெரு
பிலால் நகர்
மெயின் ரோடு (பஸ் ஸ்டாண்ட் அருகில்)
செக்கடிமேடு
நெசவுத்தெரு
தரகர் தெரு
மேலத்தெரு
தக்வா பள்ளி அருகில்

Sunday, June 27, 2010

உரிமையை மீட்க உரிமையுடன் அழைக்கிறோம்

உரிமையை மீட்க உரிமையுடன் அழைக்கிறோம்

உரை: பி.ஜைனுல் ஆபிதீன்

ஜூலை மாநாட்டிற்கு தயாராகிவிட்டீர்களா?


Tuesday, June 22, 2010

அதிரையில் இரண்டு இடங்களில் நடைபெற்ற ஜூலை மாநாடு பிரச்சாரம்

கடந்த 19.06.2010 அன்று கடல்கரைத்தெரு ஜூம்மா பள்ளி அருகிலும் மற்றும் கடல்கரைத்தெரு பெண்கள் மார்கெட் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பழைய போஸ்ட் ஆபிஸ் அருகில் நடைபெற்ற ஜூலை 4 பிரச்சாரம்

கடந்த 17.06.2010 அன்று பழைய போஸ்ட் ஆபிஸ் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளர் மௌலவி முஜாஹித் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி ஆகியோர் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலத்தெருவில் தர்ஹா வழிபாட்டை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்

கடந்த 16.06.2010 அன்று மேலத்தெரு ரஹ்மத் நூலகம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கந்தூரி விழாவை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள்.

இது மேலத்தெருவில் இந்த வருடம் நடைபெறும் கந்தூரி திருவிழாவை கண்டித்து நடைபெறும் முன்றாவது தெருமுனை பிரச்சாரமாகும்.

Monday, June 21, 2010

குர்ஆன் வசனத்தை கிழித்த கப்ர் வணங்கிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக தர்ஹா வழிபாட்டை கண்டித்து மேலத்தெரு தர்ஹா அருகில் கீழ்காணும் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்ட டிஜிட்டல் பேணர் வைக்கப்பட்டிருந்தது. இந்த வசனத்தின் கருத்தை பொறுக்க முடியாத கப்ரு வணங்கிகள் அதை கிழித்தனர்.


மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
திருக்குர்ஆன் 22:73

கிழிக்கப்பட்ட பேணர்


கிழிக்கப்பட்ட பேணரை அகற்றிவிட்டு, மீண்டும் அதே இடத்தில் புதிய பேணர் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

புதிதாக வைக்கப்பட்ட பேணர் கீழே,



குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்ட பேணரை கிழித்த அவ்லியா பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிராம்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Saturday, June 19, 2010

காலத்தால் சிறந்த கல்வி உதவி

ஏகத்துவத்தை, கனி தரும் மரத்திற்கு அல்லாஹ் உவமையாகக் காட்டுகின்றான். இது மனித உள்ளம் என்ற மண்ணில் வேரூன்ற ஆரம்பித்து விட்டால் அது சுவையான கனிகளை, அழகிய அரும் பண்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது. அந்தப் பண்புகளில் ஒன்று ஏழைக்கு உதவி வழங்குவதாகும்.

இந்த ஏகத்துவம், ஓர் இறை நம்பிக்கையாளரிடம் குடிகொண்டு விட்டால் அவர் ஏழைக்கு உதவி செய்யும் இனிய பண்புக்குச் சொந்தக்காரராக ஆகி விடுகின்றார். அதுவும் கைமாறு எதிர்பார்க்காமல், நன்றி வார்த்தைக்குக் கூடக் காத்திருக்காமல் அள்ளி வழங்குகின்றார். இந்த தர்மத்தின் காரணமாக அவரிடத்தில் உள்ள எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்று தான். அது தான் இறை திருப்தியாகும்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

அல்குர்ஆன் 76:8, 9

அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர். மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.

அல்குர்ஆன் 92:18-20

ஏழைகளுக்கு வழங்குவதில் இறையன்பு கிடைக்கின்றது என்று இறைவன் கூறியதும் மக்கள் தங்களுக்கும், தங்கள் வாரிசுகளுக்கும் எதுவுமில்லாமல் எல்லாவற்றையும் செலவு செய்து விடக் கூடாது என்பதற்காக தர்மத்திற்கு மார்க்கம் ஒரு வரம்பைக் காட்டுகின்றது.

'விடைபெறும்' ஹஜ்ஜின் போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! நான் மரணத் தறுவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; எனது ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்'' என்றார்கள். பின்னர் நான் "பாதியைக் கொடுக்கட்டுமா?'' எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்: மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்து விடும். அதுவும் அதிகம் தான்; ஏனெனில் உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட தன்னிறைவுடையர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறைப் பொருத்தத்தையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நன்மையுண்டு'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: புகாரி 1295

மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியைத் தான் தர்மம் செய்யும்படி மார்க்கம் கட்டளையிடுகின்றது.

மூன்றில் ஒரு பகுதியை வழங்கச் சொல்லி விட்டு மீதியைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அதை பெற்றோர்கள், கணவன், மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தினருக்கு வழங்கச் சொல்கின்றது. அதற்கு அதிகம் நன்மை என்றும் கூறி ஆர்வத்தை ஊட்டுகின்றது. உறவினர்களுக்கு வழங்குவதில் இரு மடங்கு நன்மை என்று விளக்குகின்றது.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள், "பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்' எனக் கூறி விட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், "அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் "ஸைனப்' எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் "எந்த ஸைனப்?'' எனக் கேட்டதும் பிலால் (ரலி), "அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி (ஸல்) "ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது'' எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1466

உறவினருக்கு வழங்குவதால் வாழ்நாளில், பொருளாதாரத்தில் வளம் பெருகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 2067

இஸ்லாம் கூறும் இந்தப் போதனையை உலக மக்கள் கடைப்பிடித்தால் உண்மையில் யாசகர்கள் பெருக மாட்டார்கள். அவரவர் தங்கள் சுற்றத்தாருக்கும் சொந்தக்காரர்களுக்கும் வழங்கினால் வீதிகளில் வெள்ளமாய் பெருக்கெடுத்து வருகின்ற பிச்சைக்காரர்களை நாம் காண நேரிடாது. மக்கள் உறவைப் பேணாததால் தான் இந்த அவல நிலை!

ஏழைகளுக்கு உணவளித்தல், உறவினர்களை ஆதரித்தல் என்றால் தங்கள் சொந்த பந்தங்களைத் திருமண விருந்தில் அழைத்து விருந்தளித்து விட்டால் போதும் என்று தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள். திருமண விருந்தில் தங்களின் பண பலத்தைக் காட்டியும், வளத்தைக் கொட்டியும் மகிழ்கின்றார்கள். உண்மையில் இஸ்லாம் இது போன்ற காரியங்களை வரவேற்கவில்லை.

ஒரு சிலர், ரமளானுக்கு ரமளான் சில ஆயிரங்களைச் சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு விளம்புகின்றனர். ஒரு சிலர், வேட்டி, சட்டை போன்ற துணிமணிகளை எடுத்து சிலருக்குக் கொடுத்து விட்டு இத்துடன் தங்களுடைய கடமை முடிந்து விடுகின்றது என்று நினைக்கின்றனர்.

இவையெல்லாம் ஒரு தற்காலிக உதவி தான். இதனால் யாருடைய வறுமையும் அகன்று விடாது. இது நிரந்தர உதவியாக ஆகிவிடாது.

உதவி என்பது நிரந்தரமாக அமைய வேண்டும். ஒருவரது வியாபாரத்திற்காக ஏதேனும் உதவி செய்து அவரது பொருளாதார நிலையை மேம்படுத்தலாம். தனது உறவினர்களின் குடும்பத்திலுள்ள மாணவர்களின் கல்விச் செலவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.

இப்போது கல்லூரிகள் திறந்து விட்டன. மாணவர்கள் கலை, பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் கல்லூரிகளில் சேர்வதற்காக, அதற்கான கட்டணத்திற்காக கையறு நிலையில் இருப்பார்கள்.

இவர்களது நிலையைப் பற்றி மற்றவர்களை விட நெருங்கிய உறவினர்களுக்குத் தான் நன்றாகத் தெரியும். அப்படித் தெரிந்து வைத்திருப்பது அவர்களுக்குக் கடமையுமாகும்.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:272

உறவினர்களை மட்டுமின்றி, சமுதாயத்தில் உள்ள அனைவரையும் இது போன்று அடையாளம் கண்டு உதவி செய்யச் சொல்கிறான். இவ்வாறு அடையாளம் கண்டு கொள்ளாதவர்களை, அறியாதவர்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்றான். சமுதாயத்திலுள்ள பிறருக்கே இந்த நிலை என்றால் உறவினர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

நெருங்கிய உறவினர்களை அடையாளம் கண்டு உதவ முன்வரவில்லை எனில் அவர் உறவைப் பேணாதவர் ஆவார். வசதியிருந்தும் உறவைக் கவனிக்காத குற்றத்திற்கு உள்ளானவர் ஆவார். அல்லாஹ் காக்க வேண்டும்.

கல்வியாண்டின் துவக்கமான இந்தக் கால கட்டத்தில் நம் குடும்பத்தில் ஒரு மாணவனுக்குப் பொறுப்பேற்று நாம் கல்வி உதவி செய்தோம் என்றால் எதிர்காலத்தில் அந்த மாணவன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பதுடன் மட்டுமல்லாமல் இது போன்று பிறருக்கு உதவவும் முன்வருவான்.

இத்தகைய கல்வி உதவிகள் உண்மையில் காலத்தால் மிகச் சிறந்த உதவியாகும். உலகக் கல்வியைப் போன்றே மார்க்கக் கல்வி கற்பதற்கும் பொறுப்பேற்றுக் கொண்டால் அதனுடைய நன்மையின் பரிமாணம் மிகப் பிரம்மாண்டமானது. இதை உணர்ந்து உறவுகளுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் உதவிடுவோமாக!

Wednesday, June 16, 2010

தர்ஹா வழிபாட்டை கண்டித்து மேலத்தெரு தர்ஹா அருகில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேணர்

மேலத்தெரு தர்ஹா அருகில் தர்ஹா வழிபாட்டை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக டிஜிட்டல் பேணர் வைக்கப்பட்டுள்ளது.


கந்தூரி திருவிழாவை கண்டித்து மேலத்தெரு தர்கா அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 12.06.2010 அன்று மேலத்தெரு தர்கா அருகில் சமாதி வழிபாட்டை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் சமாதி வழிபாடு எவ்வகையில் தவறு என்பதை விளக்கி பேசினார்.

இதில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.

Monday, June 14, 2010

அதிரையில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

13.06.2010 அன்று A. அப்துல் (சாகுல்) ஹமீது என்ற சகோதரருக்கு மேலத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நபிவழியில் திருமணம் நடைபெற்றது.

மணமகன் மஹராக 5 பவுன் தங்கம் வழங்கினார். இந்த திருமணம் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.


இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, June 12, 2010

கந்தூரி விழாவை கண்டித்து மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 11.06.2010 அன்று மேலத்தெரு MMS வாடி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கந்தூரி விழாவை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'வேண்டாம் தர்கா வழிபாடு' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். கந்தூரி நடைபெற இருக்கும் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த பிரச்சாரத்தை பலர் பாராட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இணைவைக்கும் இமாம்களை பின்பற்றி தொழலாமா?

பதில்-1:




பதில்-2:


மற்ற கேள்வி பதில்களை காண:
http://onlinepj.com/bayan-video/kelvi_pathil/kelvikal_thokuppu/

Wednesday, June 09, 2010

வங்கியில் தரும் வட்டியை வாங்கலாமா?


மற்ற கேள்வி பதில்களை காண:
http://onlinepj.com/bayan-video/kelvi_pathil/kelvikal_thokuppu/

Wednesday, June 02, 2010

ஸலாதுன்னாரியா ஓதலாமா?


மற்ற கேள்வி பதில்களை காண:
http://onlinepj.com/bayan-video/kelvi_pathil/kelvikal_thokuppu/

Friday, May 28, 2010

Saturday, May 22, 2010

மேலத்தெருவில் நடைபெற்ற ஜூலை 4 பிரச்சாரம்

கடந்த 14.05.2010 அன்று மேலத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி 'வட்டி' என்ற தலைப்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

Tuesday, May 18, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம்

அதிராம்பட்டிணத்தில் கடந்த 25.04.2010 முதல் 11.05.2010 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 80 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த பயிற்சி முகாமை மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் மௌலவி முகம்மது நாசர் ஆகியோர் நடத்தினார்கள்.



பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டது. 

பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 12.05.2010 அன்று 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தலைமை தாங்கினார்.

அந்நூர் பெண்கள் இஸ்லாமிய கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி ரிஜ்வானா மற்றும் ஆயிஷா ஆலிமா ஆகியோர் உரையாற்றினார்கள்.

தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் மற்ற மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பத்து ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, May 12, 2010

ஆலடித்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 26.04.2010 அன்று அதிராம்பட்டிணம் ஆலடித்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இதில் மௌலவி முஹம்மது நாசர் மற்றும் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் உரையாற்றினார்கள்.

Monday, May 10, 2010

பிலால் நகரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 14.04.2010 அன்று அதிராம்பட்டிணம் பிலால் நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி மற்றும் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் உரையாற்றினார்கள்.

Saturday, May 08, 2010

பழைய போஸ்ட் ஆபீஸ் அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹ்வின் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக அதிரையின் பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.


இதன் தொடர்ச்சியாக, அதிராம்பட்டிணம் பழைய போஸ்ட் ஆபீஸ் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி, மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி மற்றும் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் உரையாற்றினார்கள்.

Tuesday, May 04, 2010

அதிரை TNTJ வின் மருத்துவ உதவி

அதிராம்பட்டிணத்தில் ஒரு சகோதரியின் மருத்துவ தேவைக்காக ரூபாய் 2000 வழங்கப்பட்டது. இதை கிளை செயலாளர் ஹைதர் அலி அவர்கள் வழங்கினார்.

Saturday, May 01, 2010

அதிரையில் நடைபெற்ற மார்க்க விளக்க கூட்டம்

கடந்த 24.04.2010 அன்று அதிராம்பட்டிணம் தக்வா பள்ளிவாசல் அருகில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்.


முதலாவதாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர், மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி அவர்கள் 'ஒரிறைக் கொள்கையும், சமுதாய ஒற்றுமையும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர் தனது உரையில், குர்ஆன் ஹதீசை அடிப்படையாக கொண்டு அமையும் ஒற்றுமை தான் உண்மையான ஒற்றுமையாக இருக்க முடியும் என்பதை அழகாக தெளிவுபடுத்தினர்.

பின்னர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'இம்மையும், மறுமையும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். தனது உரையில் முஸ்லிம்கள் எப்படி மறுமையை லட்சியமாக கொண்டு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.

இறுதியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் 'உணரப்படாத தீமைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர் தனது உரையில் முஸ்லிம் சமுதாயம் தீமைகள் என்று உணராத பல்வேறு தீமைகளை பட்டியல் போட்டு விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமனோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இதில் பெண்கள் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.