Monday, February 24, 2014

தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டம் - விடையில்லா கேள்விகளும் தொடரும் உளரல்களும்!

தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டம் - விடையில்லா கேள்விகளும் தொடரும் உளரல்களும்!


தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்தில் 7 சதவீத இட ஒதுக்கீடும் மத்தியில் 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்க கோரி, கடந்த ஜனவரி 28 2014 அன்று நடத்திய சிறை செல்லும் போராட்டம் பற்றி ஒரு தளம் அங்கும் இங்கும் ஆட்டை போட்டும், பல தவறான தகவல்களை முன்வைத்தும் எழுதப்பட்ட கட்டுரை குறித்து நமது பதிலை வெளியிட்டு இருந்தோம்.

எமது பதில் கட்டுரையில் பல கேள்விகளையும் சவால்களையும் முன்வைத்திருந்தோம். அவற்றில் சில:

1. தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டம் குறித்து வஞ்ச புகழ்ச்சியோடு கட்டுரை எழுதிய நீங்கள், மற்ற இயக்கங்கள் போராட்டம் நடத்திய முன்போ அல்லது பின்போ இவ்வாறு ஏன் விமர்சன கட்டுரை போடவில்லை?

2. தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத மற்ற இயக்கங்கள் பெண்களை அழைத்து சென்று போராட்டம் நடத்துவதை நீங்கள் ஏன் விமர்சனம் செய்யவில்லை (இவர்கள் பின்னால் இருக்கும் தமுமுகவினரும் பெண்களை அழைத்துச் சென்று போராட்டம் நடத்துகிறார்கள். அவற்றில் சில புகைப்படங்கள் 1 2).

3. இட ஒதுக்கீட்டிக்காக சிறை செல்லும் போராட்டம் தேவையா? என்று வாதப்பிரதிவாதங்கள் ஊடங்களை குலுக்கி எடுத்தது என்றீர்களே, எந்த ஊடகங்களை குலுக்கி எடுத்தது? 

4. இட ஒதுக்கீட்டிற்காக படிக்கும் இளைஞர்களை சிறைக்கு அனுப்ப வேண்டுமா? என்று கேள்வி கேட்ட நீங்கள், உங்கள் பினாமி இயக்கம் இட ஒதுக்கீடு கேட்டு ரயில் மறியல் போராட்டம் எல்லாம் நடத்தினார்களே, அப்போது படிக்கும் இளைஞர்களை ரயிலை மறிக்கிறோம் என்று சாக அடிக்க பார்க்கிறீர்களா? என்று ஏன் கேள்வி எழுப்பவில்லை?

5. ஏழு வருடங்களுக்கு (2007) முன் கிடைத்த ஒதுக்கீட்டை கூட 2008 ஆம் இட ஒதுக்கீடு கிடைத்தது என்று ஈ அடிச்சான் காப்பி அடிக்கும் நீங்கள் இட ஒதுக்கீடு பற்றி பேச என்ன அருகதையுள்ளது?

6. இட ஒதுக்கீடு கிடைத்தும் சமுதாயத்திற்கு பலன் ஒன்றும் கிடைக்கவில்லை என்றீர்களே, அதற்கான ஆதாரம் என்ன?

7. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் இட ஒதுக்கீட்டினால் எந்த பலனும் கிட்டவில்லை என்றீர்களே, அதற்கு ஆதாரம் என்ன? எந்த அடிப்டையில் இவ்வாறு சொன்னீர்கள்?

8. கேட்டதை எல்லாம் பரப்புபவன் பொய்யன் என்று ஹதீஸ் உள்ளதே, யார் என்றே தெரியாத ஒருவன் (காரைக்கால் கயவன்), பரப்புவதை அதன் உண்மை தன்மை தெரியாமல் பரப்பும் நீங்கள் பொய்யர்கள் இல்லையா? 

9. தமிழகத்தில் கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கும் போது, அதை ஜெயலலிதா எதிர்த்தார் என்று புழுகிய நீங்கள், சட்டமன்றத்தில் முஸ்லிம் லீக் கட்சியின் அப்துல் லத்தீப் அவர்கள் முஸ்லிம்களுக்கு இட ஒதக்கீடு தாருங்கள் என்று கேட்ட போது, 'நாட்டில் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்கிறீரா?' என்று கலைஞர் கேட்டதை நீங்கள் ஏன் மறைத்தீர்கள்? 

10. ஜெயலலிதா கலைஞர் தந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்தார் என்று விமர்சிக்கும் நீங்கள், கடந்த சட்டமன்ற தேர்தலில் உங்கள் தமுமுக பினாமிகள் ஜெயலலிதாவை ஆதரித்தார்களே, இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவார் என்றார்களே, அப்போது உங்களுக்கு கறந்த பால் மடி புகாது என்பதும் கருவாடு மீன் ஆகாது என்பதும் தெரியாமல் போனது ஏன் ?

11. இட ஒதுக்கீட்டினால் சமுதாயத்திற்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்கிறீர்களே, இதை புள்ளி விபரங்களுடன் முன்வைத்து தவ்ஹீத் ஜமாஅத்துடன் நேருக்கு நேராக வந்து நிரூபிக்க தயாரா? 

12. எல்லா இயக்கங்களும் ஒன்றுப்பட்டால் தான் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்கிறீர்களே, இது உண்மையென்றால் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்து எப்படி? 

13. தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கும் இயக்கங்கள் ஏன் முதலில் ஒன்றுபட கூடாது.

14. சமுதாய அமைப்புகள் மக்களுக்கு கல்வியில் எதையும் செய்யவில்லை என்று சொல்லும் நீங்கள் கல்விப்பணியில் எதை கிழித்தீர்கள்? 

இது அல்லாமல், மற்றும்  பல கேள்விகளையும் சவால்களையும் நமது கட்டுரையில் முன்வைத்து இருந்தோம். இதற்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடிய வரலாற்று ஆசிரியர்கள், வலுவாக மாட்டிக்கொண்டு விட்டோமே என்ன செய்வது என்று யோசித்து பதில் என்ற பெயரில், நாம் கேட்ட மூன்றே கேள்விகளுக்கு மட்டும் பதில் என்ற பெயரில் தங்களின் உண்மை முகத்தை காட்டியுள்ளார்கள். இவர்களின் பதில் இவர்களின் உண்மை முகத்தை இன்னும் வலுவாக தோலுரித்து காட்டியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

வழக்கம்போல, இவர்களின் காப்பி கட்டுரையை பாராட்டி உலகெங்கிலும் இருந்து பலர் தொலைபேசி வாயிலாகவும், இமெயில் வாயிலாகவும், இணையதளத்திலும் பாராட்டினார்கள் என்ற பிம்பத்துடன் ஆரம்பமாகிறது பதில் கட்டுரை. நான் கட்டுரை எழுதியுள்ளேன் படித்தீர்களா? என்று விளம்பரம் செய்து கொண்டு இருப்பது யார்? என்று நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

அடுத்து, பெரும்பான்மை மக்களின் எண்ணத்தைதான் இவர்கள் கட்டுரையாக வடித்தார்களாம். நீங்கள் என்ன கட்டுரை வடித்தீர்கள்? யார் என்றே அறியப்படாத காரைக்கால் கயவனின் உளறல்கள் பாதி, தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தின் மூலமாக வந்த நிகழ்ச்சியில் வந்த வரலாறு பாதி, நிரூபிக்க திராணியற்ற சொத்தை வாதங்கள் இதுவெல்லாம் பெரும்பான்மை மக்களின் எண்ண ஓட்டமாம்.

அடுத்து, பொது வாழ்வில் உள்ளவர்கள் மீது விமர்சனம் வருவது இயல்பு என்கிறார்கள், உண்மைதான். நாமும் அதை ஏற்றுக்கொள்கிறோம். பொது வாழ்வில் உள்ளவர்களை விமர்சனம் செய்ய கூடாது என்று நாம் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டோம். நாம் நமது பதிலில் முன்வைத்த கருத்தும் அதுவல்ல. உங்களுக்கு பிடிக்காத இயக்கம் என்பதால், எவனோ உளறுவதை ஏன் முக்கியத்துவம் கொடுத்து உங்களின் வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள்? கிறுக்கன் வைத்த வாதங்கள் உப்பு சப்பில்லாதவை, அவற்றை உங்களால் நிரூபிக்க முடியுமா?

 இட ஒதுக்கீடு எப்போது கிடைத்தது என்ற வரலாறு கூட தெரியாமல், இட ஒதுக்கீட்டினால் பலன் ஒன்றும் இல்லை, இட ஒதுக்கீட்டிற்கு பாடுபடுவதற்கு முன் வெளிநாட்டு மோகத்தை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் விபரம் தெரியாமல், ஆதாரம் இல்லாமல் ஏன் இப்படி எழுதி சமுதாய துரோகம் செய்கிறீர்கள் என்று அடுக்கி இருந்தோம்.

நாங்கள் நடுநிலைவாதிகள் சம்சுதீன் விஷமியை கூட கண்டித்துள்ளோம் என்று நடிக்கிறார்கள். சமுதாய பெண்களை மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் தள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள் என்று ஜூம்ஆவில் பேசிய சம்சுதீன் விஷமியை, இவர்கள் இவர் ஜும்ஆவில் இவ்வாறு பேசியிருக்கக்கூடாது, வேறு இடத்தில் பேசியிருந்தால் சரி என்று ஓரினச்சேர்க்கைப் புகழ்  சம்சுதீன் காஸிமிக்கு கூஜா தூக்கியுள்ளார்கள். உங்களின் தமுமுக பெண்களை போராட்டத்திற்கு அழைத்து செல்லுகிறார்களே, அதை பற்றி நீங்கள் ஏன் வாய்திறக்கவில்லை? உங்களின் நடுநிலை நாற்றம் உங்களின் மூக்கையே துளைக்கிறது!

மேலும், நாம் எமது பதிலில் இவர்களை கேலி செய்துள்ளோமாம். கேலி செய்தது உண்மைதான். கேலி செய்யும் அளவுக்கு உங்களின் வாதங்கள் இருந்தால் கேலி செய்யாமல் என்ன செய்ய வேண்டும்? உங்களின் கருத்துகள் கேலி செய்யும் வகையில் இருந்து, உங்களிடம் நியாய உணர்வாவது இருந்தால், கேலி செய்து இருக்க மாட்டோம். அதாவது, எல்லா இயக்கங்களும் இட ஒதுக்கீடு குறித்து போராட்டம் நடத்துகின்றன, இது போன்ற போராட்டங்களை மற்ற இயக்கங்கள் நடத்தும் போது, நீங்கள் இவ்வாறு விமர்சனம் செய்து எழுதி, தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தையும் பற்றி எழுதியிருந்தால், நீங்கள் நியாயமானவர்கள். என்ன கேள்வி கேட்டாலும் நளினமாக பதில் சொல்ல நாங்கள் முன்வந்து இருப்போம். தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை பற்றி காரைக்கால் கயவன் ஒருவன் உளரியதை முக்கியத்துவம் கொடுத்து, காரைக்காலில் அவன் நடத்திய கூட்டத்தில் ஐம்பது நபர்கள் கூட இவனின் விமர்சனத்தை கேட்க முன்வராத ஒருவனை முன்னிலைப்படுத்தி, உங்களின் குரோதத்தை வெளிப்படுத்தும் போது அதை தக்க முறையில் தான் எதிர்கொள்வோம்.

விமர்சனம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு தான் நமது பதிலும் இருக்கும். நமது தளத்திலேயே வந்த ஆக்கங்களில் கண்ணியமான முறையில் பதில் தந்துள்ளோம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

கட்டுரை எழுதியவர்களுக்கு வரலாற்று ஞானம் கிடையாது, இட ஒதுக்கீடு எப்போது கிடைத்தது என்று கூட தெரியாது, இப்படிப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டினால் எந்த பயனும் இல்லை என்று புளுகுகிறார்கள் என்று நாம் விமர்சனம் செய்து இருந்தோம். இதற்கு பதில் செல்ல புகுந்தவர்கள், இவர்கள் தங்களின் தவறுகளை மறைக்க எந்த காரியத்தையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்று காட்டியுள்ளார்கள். இதை விளக்குவதற்கு முன், இவ்வாறு ஈ அடிச்சான் காப்பி அடிப்பது தவறா என்று சில உதாரணத்துடன் கேட்டுள்ளார்கள். அதாவது, வரலாற்று சம்பவங்களும் புள்ளிவிபரங்களும் எவ்வாறு வரலாற்றில் உள்ளதோ அவ்வாறு தான் பயன்படுத்த முடியுமாம். அப்படியென்றால், இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் தியாகம் மறைக்கப்பட்டுள்ள வரலாற்றையே நாமும் எடுக்கலாமா? என்ற கேள்வி வருகிறது.

ஓர் உதாரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்கள், அதாவது, திப்பு சுல்தானின் தந்தையின் பெயர் ஹைதர் அலி என்று வரலாற்றில் சொல்லப்பட்டால் அவ்வாறு தான் சொல்ல முடியுமாம்.இப்படி சொன்னால் தவறு இல்லைதான் ஆனால் திப்பு சுல்தானின் தந்தை ஹுமாயுன் என்று இருந்தால் இது தவறு என்று சொல்லி ஹைதர் அலி என்பதுதான் சரி என்று சொல்லி இருந்தால் நீங்கள் வரலாறு தெரிந்த ஆசிரியர். அதை செய்யாமல் ஒரு தளத்தில் வந்த தவறான வரலாறை அப்படியே போட்டுவிட்டு இதுதான் வரலாறு என்று சொல்லி சாதிக்க பார்கின்றீர்கள்

கேப்டன் டிவியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டம் குறித்து வெளியான வீடியோ நிகழ்ச்சியில் வந்த தகவல்களை தான் கட்டுரையாளர் ஈ அடிச்சான் காப்பி அடித்துள்ளார் என்று நாம் சொன்னோம். இதற்கு ஓர் அற்புதமான  கேள்வியை முன்வைத்துள்ளார், அதாவது, எழுத்து வடிவில் உள்ளதைதான் காப்பி பேஸ்ட் செய்ய முடியுமாம், வீடியோவை எப்படி காப்பி பேஸ்ட் செய்ய முடியும் என்று கேட்டுள்ளார்கள். கேப்டன் டிவி நிகழ்ச்சியில் இருந்து தகவல்களை ஆட்டை போட்டுள்ளார்கள் என்றுதான் நாம் சொன்னோமே தவிர, இவர்களின் கணிணி மூலம் டிவி நிகழ்ச்சி வீடியோவை காப்பி செய்து அதை உரைநடையாக பயன்படுத்தினார்கள் என்று நாம் சொல்லவே இல்லை.

கேப்டன் டிவி நிகழ்ச்சியில் இருந்துதான் நீங்கள் காப்பி அடித்தீர்கள் என்ற நமது கூற்றுக்கு நாங்கள் அங்கிருந்து காப்பி அடிக்கவில்லை. வேறு ஒரு தளத்தில் இருந்துதான் காப்பி அடித்தோம் என்றும், நாங்கள் காப்பி அடித்த இடத்தில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு 2008 ஆம் ஆண்டுதான் கிடைத்தது என்று உள்ளது (நாங்கள் என்ன செய்ய) என்றுள்ளார்கள். ஏதோ, தெரியாமல் இவ்வாறு தவறான தகவலை சொல்லிவிட்டோம், தவறுதான் என்று சொல்லியிருந்தால் அதை நாம் கண்டு கொள்ளாமல் விட்டிருப்போம். இவர்கள் காப்பி அடித்த இடத்தில் இருந்துதான், கேப்டன் டிவியே காப்பி அடித்தாக ஒரு மிகப்பெரிய பொய்யை இட்டுக்கட்டியுள்ளார்கள். அதாவது, இவர்கள் குறிப்பிட்ட அந்த இட ஒதுக்கீடு வரலாறு பல்வேறு ஊர் தளங்களில் வெளிவந்ததாம். அந்த தகவல்களை அதே வார்த்தை வைத்து கேப்டன் டிவி அந்த ஊர் தளங்களிலிருந்து எடுத்து நிகழ்ச்சி தயாரித்துள்ளதாம்.

புளுகுபவர்கள் எப்போதும் தங்கள் புளுகல்களை தாங்களே நிரூபிக்கும் வண்ணம் ஏதாவது ஒரு வலுவான ஆதாரத்தை நமக்கு விட்டு செல்வார்கள்

அதாவது, தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டம் நடந்தது கடந்த ஜனவரி 28, 2014 அன்று. கேப்டன் டிவியில் சிறை செல்லும் போராட்டம் குறித்து வெளியான நிகழ்ச்சி நாள் ஜனவரி 28 அல்லது ஜனவரி 29. கட்டுரையாளர் தான் எங்கே இருந்து இந்த தகவல்களை எடுத்தார் என்று குறிப்பிடும் இணையதளத்தில், இட ஒதுக்கீடு குறித்து வெளியான கட்டுரை பிப்ரவரி 1 ஆம் தேதி. ஜனவரி 28 அல்லது ஜனவரி 29 ஆம் தேதி வெளியான கேப்டன் டிவி நிகழ்ச்சியில் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியான தகவல்களை எப்படி காப்பி அடித்தார்கள்? என்ன சொல்ல வருகிறீர்கள்? கட்டுரையாளர் குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியான கட்டுரையில் எப்போது இட ஒதுக்கீடு கிடைத்தது என்பதை பற்றி குறிப்பிடும் போது இந்த தகவலை இரண்டு இடத்தில் பதிவு செய்துள்ளார்கள், ஒரு இடத்தில் எந்த ஆண்டில் இட ஒதுக்கீடு கிடைத்தது என்பதை 2008 ஆம் என்று கேப்டன் டிவியில் வந்த தகவலை கவனமற்று பதிந்துள்ளார்கள், மற்றொரு இடத்தில் 15.09.2009 அன்று தான் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது என்று சரியாக சொல்லியுள்ளார்கள் . ஒன்று தெளிவாகிறது, கேப்டன் டிவி கட்டுரையாளர் குறிப்பிடும் இணையதளத்தில் இருந்து காப்பி அடிக்கவில்லை. அவ்வாறு செய்து இருந்தால் ஒரு இடத்தில் சொல்லப்பட்ட சரியான (15.09.2007 என்ற) தகவல் அடிப்படையில், 2007 என்று சொல்லியிருக்கும், குறைந்தபட்சம் எது சரியான தகவல் என்றாவது பார்த்து இருக்கும். ஜனவரி 28 அல்லது ஜனவரி 29 ஆம் தேதி வெளியான நிகழ்ச்சி பிப்ரவரி 1 ஆம் தேதி வெளிவந்த கட்டுரையை காப்பி அடிக்கும் கால எந்திரம் கண்டுபிடிக்கபடாததால் இது சாத்தியம் அற்றது.
பிப்ரவரி 1 ஆம் தேதி வெளிவந்த ஆக்கம்  - கேப்டன் டிவி நிகழ்ச்சி வெளிவந்த தேதி ஜனவர் 28 அல்லது 29
இப்போது உண்மை புலப்பட்டுவிட்டது, அதாவது கட்டுரையாளர்கள் குறிப்பிடும் இணையதளமும் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்ட வீரியத்தால், வெளி வந்த கேப்டன் டிவி நிகழ்ச்சியில் இருந்து தான் இட ஒதுக்கீடு பறிக்கப்பட்ட மற்றும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்த தகவல்களை எடுத்துள்ளார்கள் என்பது புலப்படுகிறது. கட்டுரையாளர்கள் குறிப்பிடும் இணையதளமும் கேப்டன் டிவி நிகழ்ச்சியில் இருந்து தான் இட ஒதுக்கீடு பற்றி தகவல்களை எடுத்துள்ளது என்று சொன்னால், தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அது வலுசேர்க்கும் என்பதால், கதையை தலைகீழாக மாற்றியுள்ளார் என்ற சந்தேகம் எழுகிறது. இந்த உண்மை எல்லாம் தெரிந்துவிடும் என்பதால் தான், எந்த இணையதளத்தில் அந்த கட்டுரை வந்தது என்பதையும், அந்த கட்டுரையின் தலைப்பையும் குறிப்பிடும் கட்டுரையாளர்கள், அந்த கட்டுரைக்கான லிங்கை அவர்கள் பதிலில் தரவில்லை.

இட ஒதுக்கீட்டினால் சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை என்று நா கூசாமல் புளுகுகிறீர்களே, இடஒதுக்கீடு எப்போது கிடைத்தது என்று கூட தெரியாத நீங்கள், எப்படி இட ஒதுக்கீட்டினால் பலன் இல்லை என்று எவ்வாறு முடிவு செய்தீர்கள், இதை உங்களால் நிரூபிக்க முடியுமா என்ற நமது கேள்விக்கு மவுனமே பதில்.

ஊடக தர்மத்தை பற்றி எல்லாம் பேசும் அண்ணண்மார்கள், வேறு ஒரு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களையும் போட்டு பத்திரிக்கை தர்மத்தை நிலைநாட்டி இருக்க வேண்டும் அல்லவா?

கட்டுரையாளர் குறிப்பிடும் இணையதளத்தில் வந்த கட்டுரை இங்கே.

கேப்டன் டிவி நிகழ்ச்சி சொல்லப்பட்ட தகவல்களை அப்படியே சொல்லி 2008 ஆம் ஆண்டு தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என்பதை சொல்லும் கட்டுரையாளர்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ள வாசகம்
அதே ஆக்கத்தில் கட்டுரையாளர்கள் இடஒதுக்கீடு என்று கிடைத்து என்ற தேதியுடன் சொல்லும் வாசகம்
கட்டுரையாளர்கள் காட்டும் இணையதளம், இடஒதுக்கீடு குறித்த தகவல்களை முன்வைத்து, அது பற்றி ஒரு நடுநிலை பார்வையை முன்வைக்கிறது. 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க பிஜே அவர்களின் முயற்சியையும் தவ்ஹீத் ஜமாஅத்தின் இடைவிடாத போராடத்தையும் கட்டுரையாளர்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் வந்த கட்டுரை தெளிவாக முன்வைக்கிறது. 

தற்போது உள்ள தமுமுக, ஜால்ராக்களாக மாறிவிட்டபோதும், தமுமுக இட ஒதுக்கீட்டிற்காக வீரியத்துடன் இருந்த காலத்தில் செய்த போராட்டங்களை நினைவு கூறுகிறது அந்த கட்டுரை. இதுவல்லவா நடுநிலை?. கட்டுரையாளர்கள் எவ்வளவு கயமைத்தனம் செய்துள்ளார்கள் என்பதற்கு, இவர்கள் ஆதாரம் காட்டும் கட்டுரையில் உள்ள நேர்மையான பார்வையும் ஒரு சான்று. கட்டுரையாளர்கள் சுட்டிக்காட்டிய அந்த இணையதளத்தில் வந்த கட்டுரையில் காரைக்கால் கயவனின் உளறல்கள் இல்லை என்பதும் மறைக்கப்பட்ட ஒரு செய்தி.

அடுத்து, புத்தகம் போட்டு வியாபாரம் செய்கிறார்கள் என்று விமர்சனம் செய்துவிட்டோமாம். கொதிக்கிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் குறித்து யார் என்றே தெரியாதவன் செய்த விமர்சனத்தை அதன் உண்மை தன்மை அறியாமல் பரப்புகிறீர்களே, அது போல நாங்களும் பரப்பலாமா? புத்தகம் போட்டு காசு பார்க்கதான் இந்த வேலையை இவர் செய்கிறார் என்று நாங்களும் பரப்பிவிடலாமா? என்று ஒரு கேள்வியை முன்வைத்தோம். இதற்கு நான் புத்தகம் போட்டு வியாபாரம் செய்கிறேன் என்று சொல்ல வேண்டும் அல்லது செய்யவில்லை என்று சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லாமல், இதை அல்லாஹ் அறிவான் என்கிறார். இதை அவர்கள் இணையதளத்திலேயே படித்துக்கொண்டு வலது புறம் பார்த்தால், புத்தகம் ரூபாய் 75 என்று மினுக்கும் படம் ஒன்று ஜொலிக்கிறது.

பொதுவாக, ஆய்வு செய்தோ அல்லது தகவல்களை திரட்டியோ புத்தகம் எழுதி, அதையே புத்தகமாக வெளியிடுவது நமது பார்வையில் தவறல்ல, தவறு என்று சொல்லவும் இல்லை. நாம் சொன்னது , யாரோ எழுதிய தகவல்களை எடுத்து, பக்கத்தை நிரப்பி, மற்றவர்களின் ஆக்கத்தை தனது ஆக்கம் போல காட்டி, அதை புத்தகமாக போட்டு விற்பனை செய்வது தடுக்கப்பட்டது, நியாத்திற்கு புறம்பானது.

நாம் இவ்வாறு வைத்த விமர்சனத்திற்கு, சரியான பதில் சொல்ல முடியாத கட்டுரையாளர், ஒரு அற்புதமான வாதத்தை முன்வைக்கிறார், அதாவது புத்தகம் எழுதியவர் அதை வெளியிடாவிட்டால், உலகில் ஒரு புத்தகம் கூட வந்து இருக்காதாம். என்ன ஒரு கண்டுபிடிப்பு.(?) புத்தகம் எழுதியவர் அதை வெளியிடுவது கூடாது என்று எங்கே நாம் கூறிப்பிட்டுள்ளோம்?

அடுத்து, நாங்கள் நடுநிலையானவர்கள் என்று நடிக்கும் இவர்களிடம் இருக்கும் விஷம் கேள்வியாக வெளிப்படுகிறது. அதாவது, தவ்ஹீத் ஜமாஅத் 'முதுகு அறித்தால் சொறிவது மார்க்கத்தில் கூடுமா?', 'தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கலாமா? விளக்கெண்ணெய் தேய்க்கலாமா – ஆராய்ச்சி' போன்ற ஒன்றும் இல்லாத தலைப்புகளிலும் எல்லாம் புத்தகம் சீடி போட்டு விற்பனை செய்கிறதாம். ஈ அடிச்சான் காப்பி மன்னர்களுக்கு சூடு, சுரனை இருந்தால் இதை வந்து நிரூபிக்க தயாரா? இவ்வாறு உப்பு சப்பில்லாத தலைப்புகளில் வெளிவந்த புத்தகங்களை பட்டியல் போட முடியுமா? இவ்வாறு எல்லாம் தரம் தாழ்ந்து எழுதும் காப்பி பேஸ்ட் மன்னர்களை, கருத்து போடும் சிங்ஜாங் குஞ்சுகள் கண்டு கொள்வது இல்லை. ஏன் இவ்வாறு பொய்யாக எழுதுகிறீர்கள் என்று யாரும் கேட்பது இல்லை.

மேலும், 'தேவை இருக்கிறதோ இல்லையோ பெயர் போட்டால் விற்பனையாகும் என்பதால் ஒன்றுக்கும் உதவாத தலைப்புகளில் எல்லாம் நூல் வெளியிட்டு பணக்காரர்களின் பட்டியிலில் இடம் பிடித்திருப்பவர்கள் யார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லையாம்'. அதாவது, தவ்ஹீத் ஜமாஅத்தினர், என்ன புத்தகம் போட்டாலும், வாங்க ஆள் உள்ளது என்பதால், கண்ட தலைப்புகளிலும் புத்தகம் போட்டு, பணக்காரர்களின் பட்டியிலில் இடம் பிடித்து இருக்கிறார்களாம். இந்த காப்பி புகழ் மன்னர்கள், பிஜேவை தான் புத்தகம் போட்டு பணக்காரர்களின் பட்டியிலில் இடம்பெற்றுள்ளதாக அவதூறு செய்கிறார்கள். அவர் தான் தன சொத்துக்கணக்கை வெளியிட்டு மேற்கொண்டு இருந்தால் எடுத்துகொள்ளுங்கள் என்று சொல்கிறாரே? இதை நிரூபிக்கும் துணிச்சல் உங்களுக்கு இருந்தால் அந்த சொத்துக்களை வந்து மீட்டு செல்லுங்களேன்! இப்படி அவதூறு சொல்லுகிறீர்களே, இது தவறாயிற்றே என்று நடுநிலை நாடகம் போடும் கோமாளிகள் கேட்பது இல்லை. இவர்களின் உண்மை தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பது தான், நடுநிலை வேடம் போட்டு, தங்களின் குணத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அண்ணண்மார்களுக்கு எந்த குரோதமும் இல்லையாம். நடுநிலைவாதிகளாம். அப்படி என்றால் மற்ற இயக்கங்கள் போராட்டம் நடத்தும் போது உங்களின் கேள்விகள், எந்த சந்துக்குள் ஒளிந்து இருந்தது.

நாமும் ஒன்றை சொல்ல விரும்புகிறோம். எங்களுக்கு எதிரிகள் கிடையாது. எதிரிகளாக இருப்பவர்கள் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் தூண்களாக மாறிவருகிறார்கள். எதிரிகள் நியாயப்படி கேள்வி கேட்டாலும், அதற்கு நளினமான முறையில் பதில் அளிப்பது எங்களின் கடமை. நளினமாக பேசுபவர்களிடம் அதே பாணியில் பதில் தருவோம், வரம்பு மீறுபவர்களிடம் அதே அளவு வரம்பு மீறுவோம்.

தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தபோதுதான் கலைஞர் இட ஒதுக்கீடு தந்தார் அப்போது தமுமுக திமுக கூட்டணியில் இருந்தது. கலைஞர் இட ஒதுக்கீடு கொடுத்தவுடன் கலைஞரை தேடிச் சென்று தனது ஆதரவை தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்தது. தமுமுக அந்த கூட்டணியில் உள்ளார்களே என்று தவ்ஹீத் ஜமாஅத் பார்க்கவில்லை. இட ஒதுக்கீட்டை தந்துள்ளார்களே, அதற்கு நமது நன்றியை வாக்குகளாக தருவோம் என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லி, அதை செயல்படுத்தியும் காட்டியது. இட ஒதுக்கீடு தந்த நேரத்தில் தமுமுக அதிமுக கூட்டணியில் இருந்தது என்ற ஒரு பொய்யையும் காப்பி பேஸ்ட் மன்னர்கள் அவிழ்த்து விட்டுள்ளார்கள், இட ஒதுக்கிடு தந்தவுடன் கலைஞருக்கு தமுமுக நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தியது தெரியுமா?தெரியாதா ? இட ஒதுக்கீடு கிடைத்தபோது, தமுமுக அதிமுக கூட்டணியில் இருந்தது என்று காப்பி பேஸ்டர்கள் நிரூபிக்க தயாரா?

இவர்களின் ஒரே நோக்கம், தவ்ஹீத் ஜமாஅத்தை கறைப்படுத்த வேண்டும், சில வருடங்களுக்கு முன்னர் நடந்த விஷயங்களை மாற்றி சொன்னால் யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்ற அசட்டு தைரியம். இப்போது, அவர்களின் பினாமிகளான தமுமுக, திமுக கூட்டணியில் உள்ளதாம், எனவே, தவ்ஹீத் ஜமாஅத் திமுகவை ஆதரிக்காதாம். இப்படியும் வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள் காப்பி பேஸ்டர்கள். இதையும் நிரூபிக்க தயாரா? நீங்களா யோக்கியர்கள்? இட ஒதுக்கீடு பெரும்பாலும் உயர்த்தி தரப்படும், தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை தான் ஆதரிக்கும் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், திடீர் என்று திமுகவின் பக்கம் நிபந்தனை இல்லாமல் தாவிய தமுமுகவையல்லவா நீங்கள் விமரசனம் செய்ய வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத்தினர், ஊட்டியில் ஒரு தர்பியா நிகழ்ச்சிக்காக சென்று இருந்தபோது, தேர்தலில் ஜெயித்துவிட்டோம், நம்மை எவனும் எதுவும் பண்ண முடியாது என்று உணர்வு அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, இது மனித நேய (?) மக்கள் கட்சி அலுவலகம் என்று போட்டு அராஜகம் செய்தவர்களை நடுநிலைவியாதிகளான நீங்கள் கண்டித்தது உண்டா?

தமுமுகவின் ஜால்ராவை பார்த்து, இனி இவர்களால் சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை என்று சமுதாயம் தெளிவாக உணர்ந்துள்ளது. தமுமுகவினர் இட ஒதுக்கீட்டிக்காக மாநில அளவில் சென்னையில் நடத்திய போராட்டத்தில் முவாயிரம் மக்கள்கூட  கூடவில்லை, இது அவர்களுக்கு உள்ள மக்களின் ஆதரவு. இவர்களின் பினாமிகளான தமுமுகவை நாம் ஆதரிக்காதது தலைகணமாம்! அநியாக்காரர்களை ஜால்ராகளை சமுதாய காவலர்கள் என்று மக்களை ஏமாற்ற வேண்டுமா? உங்கள் பினாமிகள் முஸ்லிம் லீக் மற்றும் மற்ற முஸ்லிம் வேட்பாளர்களை ஏன் ஆதரிக்க சொல்லவில்லை,?அதை வலியுறுத்தி அண்ணண்மார்கள் ஏன் காப்பி பேஸ்ட் கட்டுரை போடவில்லை?

அடுத்து, இவர்கள் தமுமுக என்ற ஜால்ராக்களின் எடுபிடிகள் தான் என்பதை மறைமுகமாக நிரூபிக்கிறார்கள். அதாவது, சேப்பாக்கத்தில் தமுமுகவின் போர்படை தளபதி மண்ணை கவ்வியதற்கு யார் காரணம் என்கிறார்கள். அங்கே, அவர் மண்ணை கவ்வியதற்கு, காரணம், உங்கள் தமுமுகவினர் செய்த அட்டுழியம். முஸ்லிம்கள் நிறைந்துள்ள சேப்பாக்கத்தில், அந்த தோப்புதுறை தம்பி மண்னை கவ்வியது, முஸ்லிம் சமுதாயம், தமுமுகவை ஆதரிக்க தயார் இல்லை என்பதை காட்டவில்லையா? மற்ற இரண்டு தொகுதிகளிலும், தமுமுகவினர் ஜெயித்தார்கள் என்றால், அதற்கும் முஸ்லிம்களின் ஓட்டு காரணம் அல்ல. திமுகவிற்கு எதிரான எதிர்ப்பலையால் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். தமுமுகவை ஏன் முஸ்லிம்கள் ஆதரிக்க கூடாது, என அடுக்கடுக்கான காரணங்கள் முன்வைத்து தேர்தல் நேரத்தில், சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டது, அப்போது அண்ணண்மார்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. தமுமுகவின் சமுதாய துரோகத்தையும் கிழித்து தொங்க போட்டுள்ளோம். இட ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு முட்டு கொடுத்து, கேவலப்பட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும்? சட்டமன்றத்தில் இதுவரை ஜவாஹிருல்லாஹ்வை மிஞ்சும் அளவுக்கு ஓ பன்னீர்செல்வம் கூட ஜால்ரா தட்டியது இல்லை என்று சொல்லும் அளவுக்கு அம்மா புராணம் பாடும்போது நிரூபர்கள் எங்கே சென்று இருந்தார்கள்.

அடுத்து, சமுதாய இயக்கங்கள் சமுதாய மாணவர்களை இயக்க அரசியலில் ஈடுபடுத்தி அவர்களின் படிப்பை கெடுக்கிறார்களாம். மற்ற இயக்கங்கள் என்ன செய்கிறார்கள் என்று நாம் சொல்லவரவில்லை. இதை தவ்ஹீத் ஜமாஅத் செய்கிறதா? இதை புளுகு மன்னர்களால் நிரூபிக்க முடியுமா? தவ்ஹீத் ஜமாஅத்தின் இயக்க பணிகளில் பங்கெடுத்து தங்களின் கல்வியை பாழாக்கிய ஒரு பத்து மாணவர்களின் பெயரை குறிப்பிட முடியுமா? சமுதாயத்தை கல்வியில் முன்னேற்ற வருடத்திற்கு ஒரு கோடிக்கு மேல் நன்கொடை பெற்று, அதை சமுதாய மக்களுக்கு அள்ளிக்கொடுக்கிறது, இது பொய் என்று அண்ணண்மார்கள் நிரூபிக்க தயாரா? சமுதாயத்தை கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக ஊர்கள் தோறும் கல்வி விழிப்பிணர்வு முகாம்களை தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவர் அணி நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி மட்டுமே வருடத்தில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கிறது. இது பற்றிய விபரம் அறிய இங்கே செல்லவும். இதை எல்லாம் அண்ணண்மார்கள் மறைத்துள்ளார்கள்.

இந்த நிருபர்களின் பினாமிகளாக தமுமுக ம.ம. கட்சியினர் திமுக கூட்டணியில் உள்ள காரணத்தினால், தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதிமுகவை ஆதரிக்க தயாராகி வருகிறார்கள் என்று அரசியல் நோக்கர் கணித்து நமது அண்ணண்மார்களிடம் சொன்னார்களாம். ஏன் பொய்யையே பிழைப்பாக வைத்து அழைகிறீர்கள்? இட ஒதுக்கீட்டை உயர்த்தி தந்தால், அதிமுகவிற்கு ஓட்டு, இல்லையென்றால் அதிமுகவிற்கு வோட்டு என்று தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்கமாக அறிவித்து வரும் நிலையில், மனித நேய மக்கள் கட்சி எந்த கூட்டணியில் உள்ளதே அதற்கு எதிரான கூட்டணியில் தான் தவ்ஹீத் ஜமாஅத் இருக்கும் என்ற ஒரு அவதூறை யார் மீதே பழிபோட்டு சொல்லுகிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தை பொறுத்தவரை, சமுதாயத்திற்கு பலன் தரும் கோரிக்கையை முன்வைத்து, அதை நிறைவேற்ற முன்வருபவர்களை ஆதரிக்கும், யார் எங்கு உள்ளார்கள் என்று பார்க்காது. 3.5 சதவீத இட ஒதுகீட்டை கலைஞர் வழங்கிய போது, தமுமுக திமுக கூட்டணியில் இருந்தது, தமுமுக திமுக கூட்டணியில் இருந்த போதும், தவ்ஹீத் ஜமாஅத் திழுகவை இட ஒதுக்கீட்டிக்காக ஆதரித்தது. தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் சொல்லி வரும் போது, அம்மா அம்மா என்று கூவிய மனித நேய மக்கள் கட்சினர், திமுகவிடம் சரண் அடைந்தது ஏன்? என்று என்றாவது அண்ணண்மார்கள் கேட்பார்களா? இது தான் உங்கள் நடுநிலையா? நீங்கள் தான் சமுதாயத்தின் மீது பற்றுள்ளவர்களா? நீங்கள் உண்மையாளர்களா? கொஞ்சமாவது அல்லாஹ்விற்கு அஞ்சமாட்டீர்களா?

அடுத்து, கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்த போது, அதை ஜெயலலிதா எதர்த்தார் என்ற ஒரு பொய்யான கருத்தை வேண்டுமென்றே முன்வைத்து இருந்தார்கள்.

இது குறித்து அவர்கள் எழுதிய வாசகம்:

"தொடக்கமாக தமிழக முதல்வர் இட ஒதுக்கீட்டைத் தந்துவிடுவார் என்று நினைத்து இந்த போராட்டத்தை தன்னந்தனியே ஏற்பாடு செய்த தவ்ஹீது ஜமாத்தின் துணிவைப் பாராட்டலாம். ஆனால் செயல் முறைகளைப் பாராட்ட இயலாது. காரணம் கலைஞர் கொடுத்த இட ஒதுக்கீடையும் ஆந்திர அரசு கொடுத்த இட ஒதுக்கீடையும் கடுமையாக எதிர்த்த ஜெயலலிதா போன்ற ஒருவரிடம் தமிழ் முஸ்லிம்களின் நம்பிக்கையை அடமானம் வைத்து ஏழு சதவீதம் இட ஒதுக்கீடை எதிர்பார்ப்பது கறந்த பால் மடி புகும் - கருவாடு மீன் ஆகும்" என்ற கதைதான்."

கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்த போது அதை ஜெயலலிதா எதிர்த்தார் என்றீர்களே, அதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டோம். இதற்கு இல்லை இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை, நாங்கள் தவறாக அல்லது கவனக்குறைவாக எழுதிவிட்டோம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு பொய்யை சொல்லிவிட்டு, அந்த பொய்யை மறைக்க அதை விட பெரிய பொய்யை சொல்லி தங்களின் தவறை மறைக்க பார்க்கிறார்கள். இவ்வாறு உளறிவிட்டோமே, என்ன செய்வது என்று யோசித்து, சரி, எங்கையாவது ஆதாரம் தேடுவோம் என்று எண்ணி, தீன்குலப் பெண்மணி இதழில், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவேன் என்று ஜெயலலிதா சொன்னார், அதை இத்தனை மாதம் கடந்து அதை நிறைவேற்றவில்லை என்று 2012 ஆம் ஆண்டு எழுதப்பட்ட விஷயத்தை எடுத்து காட்டி, பாருங்கள் ஜெயலலிதா கலைஞர் கொடுத்த இட ஒதுக்கீட்டை எதிர்த்துள்ளார் என்று சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு செய்தியை ஆதாரம் என்று காட்டியுள்ளார்கள். இவர்கள் எவ்வளவு பெரிய யோக்கியவர்கள் என்பதற்கு இவர்களின் ஆதாரம் சான்று. அவர்கள் எடுத்து வைத்த, ஆதாரம் கீழே (அடிக்ககோடு இட்டு காட்டப்பட்டுள்ளது).

கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார் என்று புழுகும் அண்ணண்மார்களின் வைர வரிகள்!
இவர்கள் முன்வைக்கும் ஆதாரத்தில் கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார் என்று ஒரு வாசகமோ அல்லது அந்த கருத்து மறைமுகவாகாவது சொல்லப்பட்டுள்ளதா? எப்படிப்பட்ட அயோக்கியனம் இது. நீங்கள் எதை எழுதினாலும், அருமை அருமை என்று கருத்து போட நாலு பேர்கள் உள்ளார்கள் என்ற வரட்டு தைரியமா? இப்போது கேவலப்பட்டு நிற்கிறீர்களே!

“முஸ்லிம்களுக்கு கருணாநிதி ஆட்சியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. அதை கூடுதலாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைத்தது. யார் இடஒதுக்கீட்டை உயர்த்தி தருவார்களோ அவர்களுக்குத்தான் முஸ்லிம்களின் ஓட்டு. அவர்களின் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்று கூறியபோது ஜெயலலிதா எழுத்துப் பூர்வமாகவோ அல்லது தேர்தல் அறிக்கையிலோ கூறாத காரணத்தாலும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய காரணத்தாலும் திமுகவை கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. ஆனால் (இறைவனின் நாட்டம்) திமுக தோல்வி அடைந்தது அதிமுக வெற்றியடைந்தது. தேர்தல் அறிக்கையில் சொல்ல மறுத்த ஜெயலலிதா முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விடும் என்பதை காலம் கடந்து உணர்ந்தவர், திருச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக இருந்த மர்யம் பிச்சையை ஆதரித்து திருச்சியில் நடந்த பிரச்சாரகூட்டத்தில் தி.மு.க., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு தெரிவித்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது ஆனால் இதுவரை முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக வாய் திறக்கவில்லை. - ஆதாரம் : “onlinepj –January 2012 தீன்குலப் பெண்மணி – தலையங்கம்.

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது எப்படி என்று இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

நாம அடுக்கிய கேள்விகள் மற்றும் சவால்களில், இவர்கள் பதில் தந்தது இரு விஷயங்களுக்கு மட்டும் தான். ஒன்று, கேப்டன் டிவியில் அடித்த காப்பி, இரண்டு, கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார் என்பதற்கு அவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட ஆதாரம். இவர்கள் பதில் என்ற பெயரில் சொல்லியுள்ள தவறான வாதங்களையும் தங்களின் தவறுகளை மறைக்க இவர்கள் பட்ட பாட்டையும் தோலூரித்துள்ளோம். இவர்களால் இது பற்றி இனி வாய்திறக்க முடியாது. மீண்டும் திசை திருப்பினால், உளறல்களை தோலுரிக்கும் இன்னும் பல விஷயங்கள் வெளியே வரும்.

அடுத்து, காரைக்கால் கயவனின் வாந்தி என்று சொல்லக்கூடாதாம். அந்த கயவனின் கேள்விகளுக்கு பதில் தர வேண்டுமாம். யார் என்றே தெரியாத கிருக்கனின் பொய்யான வாதங்களுக்கு பதில் தர வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். காரைக்கால் கயவன் காரைக்களில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, அதில் எடுத்து வைத்த வாதங்களை தான் அண்ணண்மார்கள் எடுத்துகாட்டியுள்ளார்கள். அந்த கயவன் நடத்திய பொதுக்கூட்டத்தில் 50 நபர்கள் கூட, வரவில்லை. இவனின் வாதங்கள் காரைக்களில் கூட எடுபடவில்லை என்பதற்கு காரைக்களில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய சிறை செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள வெல்லம் சாட்சி. யார் வேண்டுமானலும் விமர்சனம் செய்யலாம், பொய்யான உப்பு சப்பில்லாத, பார்த்தவுடன் இவர் என்ன சொல்ல வருகிறார் என்று கேள்வி கேட்கும் அளவுக்கு உளறல்களை கொண்டிருந்தால், இது மக்கள் மத்தியில் எடுபடாது, இவன் சொல்லுவதை மக்கள் யாரும், நம்ப தயாராக இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ள விமர்சனங்களை நாம் அலட்சியப்படுத்திவிடுவோம். காரைக்கால் கயவனின் வாந்தியில் குளித்த அண்ணண்மார்களிடம், அந்த கயவன் செய்த இரண்டு விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தோம், ஒன்று குளர் காலத்தில், முதியவர்களை போராட்டத்திற்கு அழைத்து செல்லுகிறார்கள் என்ற விமர்சனத்திற்கு, நாங்கள் அவர்களை நிர்பந்தப்படுத்தியா அழைத்து சென்றோம், சமுதாயத்தின் அவல நிலையை உணர்ந்து வரும் வயதானார்களுக்கு உள்ள உணர்வு கூட உங்களுக்கு இல்லையே என்றும், பொதுவாக அழைக்கப்பட்ட அழைப்பை ஏற்று அவர்கள் வந்தால் உங்களுக்கென்ன? என்றும் வினவியிருந்தோம். மற்ற இயக்கத்தவர்கள் வயதானவர்களை குளிரிலும் வெயிலிலும் அழைத்து செல்லும் போது உங்களின் நாறும் நடுநிலை எங்கே சென்றது என்றோம். வாய் முடிவிட்டார்கள் அண்ணண்மார்கள். மேலும், காரைக்கால் கயவனின் வாந்தியில் அண்ணண்மார்களுக்கு மனத்த மற்றோரு வாதம், தவ்ஹீத் ஜமாஅத் சிறை செல்லும் போராட்டத்திற்காக எல்லா இயக்கங்களுக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று கடிதம் அனுப்பியதாக சொல்லப்பட்ட கதை. இதற்கு ஆதாரம் இருக்கின்றதா பொய்யர்களே என்றோம், பதில் இல்லை. காரைக்கால் கயவனின் இரண்டு வாதங்கள் சாம்பிலுக்கு எடுத்துக்காட்டி, நமது முந்தைய ஆக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அண்ணண்மார்களால் பதில் சொல்ல முடியவில்லை, கேவலப்பட்டுவிட்டார்கள். மற்ற கேள்விகளையும் போட்டு ஏன் எங்களை இன்னும் கேவலப்படுத்தவில்லை என்று கேட்டுள்ளார்கள், அவர்களின் அந்த கோரிக்கையும் ஏற்கப்படுகிறது.

கிறுக்குத்தனமாக காரைக்கால் கயவன் உளறிய வாதத்தை எடுத்து போட்டு, அந்த கயவனை பெரிய அறிஞர் ரேஞ்சுக்கு காட்டிய இவர்கள் அவனின் அனைத்து வாதத்தையும் சரிகாண்டால், அது பற்றி ஒரு பகிரங்க எழுத்து விவாத்திற்கு தயாரா? மேலும், காரைக்கால் கயவனின் வாந்தி இவர்களுக்கு மனக்கிறது என்று காட்ட, ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். அதாவது, குற்றம்சாட்டுபவர்கள், தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பிரிந்தவர்கள் தானாம், எனவே, அவர்களின் வாதம் உண்மையாம். ,தவ்ஹீத்ஜமாத்தில் இருக்கும் ஒருவன் இந்த இயக்கத்தின் நிலைப்பாடு சரி இல்லை என்று சொல்லி விலகி இருந்தால் அவர்களை நீங்கள் உதாரணம் காட்டலாம் நீங்கள் உதாரணம் காட்டியவர்கள் அவர்களாக பிரிந்து சென்றவர்களா ?, தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவன் நேர்மை, நாணயம் மற்றும் மார்க்கத்தை சரியான முறையில் பேணுபவனாக இருக்க வேண்டும், இவ்வாறு இல்லாதவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விரட்டப்படுவார்கள், அவ்வாறு விரட்டப்பட்டவர்களின் ஒருவன் தான் அந்த காரைக்கால் கயவன். எங்களுடன் இருந்து, விரட்டி அடிக்கப்பட்டவன் சொன்னால், அது உண்மையாகிவிடுமா? என்ன ஒரு தத்துவம்?

ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கினால் இது நன்றாக புரியும். கட்டுரைக்கு பதில் எழுதிய அண்ணண்மார்களில் ஒருவர், தனது வேலைக்காக ஒரு வேலைக்காரனை வேலைக்கு அமர்த்தியுள்ளார் என்று வைத்துக்கோள்வோம், அவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவன், திருடி விடுகிறான், அப்போது வேலைக்கு அமர்த்திய அண்ணண், அந்த வேலைக்காரனை திருடிவிட்டான் என்று பகிரங்கப்படுத்தி, அந்த அண்ணண் வேலையை விட்டு அவனை நீக்கிவிடுகிறார். திருடி பிடிப்பட்டு, வேலையில் இருந்து நீக்கப்பட்ட அவன், என்னை வேலையில் இருந்து நீக்கியவர் எப்படிபட்டவர் தெரியுமா? என்று குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். உடனே, அண்ணண்கூட இருந்தவர் தானே அப்படி கூறுகிறார், எனவே அது உண்மை தான் என்று முடிவு செய்வோமா? அல்லது இவ்வளவு நாள் அவர் கூட இருந்த இவன், இவனை நீக்கிய பிறகு இவ்வாறு குற்றம்சாட்டுகிறான், இவனின் குற்றச்சாட்டுகளில் உள்நோக்கம் இருக்க வாய்ப்புள்ளது, எனவே, அவன் வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும், ஆதாரம் கேட்க வேண்டும் என்றல்லவா சொல்லுவோம். இந்த அடிப்படை கூட இல்லாமல், உங்கள் கூட இருந்தவன் தானே சொல்லுகிறான் என்று கயவர்களை உத்தமர்களாக மாற்றப்பார்க்கிறார்கள். எங்கள் கூட இருக்கும் போது, நாங்கள் நல்லவர்கள் என்றான், விரட்டப்பட்ட பிறகு நாங்கள் கெட்டவர்கள் என்கிறான், இதில் எது உண்மை? எது பொய்?

நான்கு திருமணங்கள் செய்தோடு மட்டுமல்லாமல், அதில் இருவரை விவாகரத்து செய்த கோவை அய்யுப் என்ற பெண் பித்தனுக்கு, தற்போது முன்று மனைவிகள் உள்ளனர். இது போதாது என்று, கணவனை இழந்த ஒரு பெண்ணிடம் போனில் கடலை போட்டு, அந்த பெண்ணை மடக்கி மீண்டும் ஒரு திருமணம் செய்ய முற்பட்ட போது, பதறிய உறவினர்கள் ஜாக் என்ற கேடு கெட்ட இயக்கத்திடம் முறையிட்டுள்ளார்கள். வழக்கம் போல பதில் இல்லை. எனவே, கோவை ஜாக் மர்கஸில் வந்து நியாயம் கேட்டுள்ளார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, பள்ளிக்கு வந்த ஜாக் ஆதரவாளர்களும் சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டார்கள். இந்த சம்பவம் நடந்து ஃபேஸ்புக்கில் தீ போல பரவியது, இதை கேள்விப்பட்ட நிரூபரின் முக்கிய புள்ளி, அவரை வைத்து ஒரு தர்பியா (நல்லெழுக்க பயிற்சி) நடத்தினர். இவ்வாறு செய்யும் உங்களுக்கு மானம் உண்டா? என்று கேட்டிருந்தோம். இவ்வாறு செய்வது தனி மனித சாடலாம். போகும் இடத்தில் எல்லாம் பெண்களை தனது வலையில் சிக்கவைத்து, அவர்களை திருமணம் செய்து, கொஞ்சம் காலத்தில் அவர்களுக்கு தலாக் கொடுத்துவிட்டு, மீண்டும் மற்ற பெண்களை வலையில் சிக்க வைத்து, திருமணம் செய்வது என தொடர்ந்து சல்லாப செயல்களில் ஈடுபட்டு வருபவன் தான் கோவை அய்யுப் என்ற கேடி. பெண்களை தனது வலையில் சிக்க வைத்து, சிரழிக்கும் மார்க்க அறிஞர் என்ற போர்வையில் உள்ள கேடியை அம்பலப்படுத்தினால் தான், அவன் வலையில் விழும் அப்பாவி பெண்களை காப்பாற்ற முடியும் என்பதால் அது தனி மனித தாக்குதல் அல்ல. திருமணத்திற்காக ஒரு ஆணை பற்றி மற்றவர்கள் கேட்டால், நாம் என்ன சொல்லுவோம், அவன் குடிகாரனாக இருந்தால், அவன் குடிகாரன், பெண்ணின் வாழ்க்கை சிரழிந்து விடும் என்போம். இங்கு தனி மனிதனின் குறை என்ற போதிலும், அந்த குறை மற்றவர்களை பாதிக்கும் என்று வரும் போது, அது பற்றி எச்சரிக்கிறோம். இதை எல்லாரும் செய்கிறார்கள். இது தவறும் அல்ல. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் சான்றும் உள்ளது.

கோவைகாரனின் செயலும் அடுத்தவர்களை (அப்பாவி பெண்களை) பாதிக்கும் செயல் என்பதால், அவனின் உண்மை முகத்தை மக்களுக்கு காட்டினால் தான், அவனும் திருந்துவான். இதை காட்ட கோவை வரை சென்று இருக்க தேவையில்லை என்கிறார்கள் தர்பியா மன்னர்கள். நாம் கோவைவரைக்கும் இதைற்காக போகவில்லை. அந்த கோவை கேடியை அழைத்து வந்து தர்பியா, பொதுக்கூட்டம் நடத்துவது யார்? என்றால் நிரூபர்களின் முக்கியஸ்தவர் தான். கேடியை வைத்து தர்பியா நடத்தி, அவனை உத்தம புத்திரனாக அண்ணண்மார்கள் காட்ட முயல்வதால், அது பற்றி உண்மையை நாம் லெசாக சொன்னோம் (கோவை அய்யுப் என்ற கேடியை பற்றி, ஜாக் அமைப்பை சேர்ந்தவர்களே பெரும்பாலனோர் அவன் கேடி என்று ஒத்துக்கொள்வார்கள், கோவையில் சமீபத்தில் கோவை அய்யுபின் செயலாளல் அதிர்ச்சி அடைந்த, கோவை அய்யுவை உத்தமன் என்று நம்பி ஜாக் அமைப்பை சார்ந்தவர்கள் ஒரு உண்மை அறியும் விசாரனையை நடத்தியுள்ளார்கள், அதில் கோவை அய்யுபின் கேடிதனத்தை அவர்கள் வெளியே கொண்டு வந்துள்ளார்கள், அதையும் நாம் எமது தளத்தில் வெளியிட உள்ளோம், அப்போது தர்பியா நடத்துனர்களின் உண்மை முகம் வெளியே வரும், படுத்துக்கொண்டு எச்சில் துப்புபவர்கள் யார் என்று அப்போது தெரியும்).

கோவை அய்யுபின் கேடிதனத்தை சரிகாணும் அண்ணண்மார்கள், கோவை அய்யுப் உங்களுடன் இருந்தவர் தானே என்று வினாவியுள்ளார்கள். அண்ணண்மார்களுடன் இருக்கும் யாராவது தவறான காரியத்தில் ஈடுபட்டால், அண்ணண்மார்களும் அப்படி என்று நாமும் நினைக்கலாமா? இவ்வாறு நினைப்பது தவறு. எங்களுடன் இருந்த ஒருவன் இவ்வாறு கேடு கெட்ட செயலை செய்யும் போது, அதை நாங்கள் ஆதரித்தால், அவனை பதவியில் வைத்து அழகு பார்த்தால், அவனின் கேடித்தனத்தை பற்றியோஅல்லது மற்றவர்களின் கேடித்தனத்தை பற்றியோ நாங்கள் கேள்வியெழுப்ப முடியாது. கோவை அய்யுப் என்ற மகான், நெடும் காலமாக ஜாக் என்ற அமைப்பில் இருப்பவன். பிஜே உள்பட மற்ற தாயிக்கள், ஜாக் என்ற அமைப்மை விட்டு வெளியேறுவதற்கு முக்கியமான காரணங்களில் கோவை அய்யுபின் செயலும் காரணம், ஜாக் அமைப்பில் உள்ள பலர் பெருதாளர மோசடி மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட்டு, தவ்ஹீத் பிரச்சார பணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறார்கள், இவர்களை அமைப்பில் இருந்து நீக்குங்கள் பிஜே உள்பட பலர் ஜாக்கின் அன்றைய தலைவராக இருந்த கமாலுத்தீன் மதனியிடம் கோரிக்கை வைக்கிறார்கள். இதை ஆய்வு செய்து, கமாலுத்தீன் மதனி என்பவர், கேடு கெட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மாவட்ட பொருப்பில் இருந்தால், அவர்களை மாநில பொருப்பில் நியமித்து, கேடுகெட்ட செயல்களுக்கு ஜாக் அமைப்பில் அங்கீகாரம் தந்தார். இதை கண்ட பிஜே உள்பட பல தாயிக்கள் ஜாக் என்ற அமைப்பை விட்டு வெயியேறினார்கள். இது தான் உண்மை. கோவை அய்யுப் போன்றவர்களின செயலை அங்கீகரிக்காதவர்கள், அவனின் கேடுகெட்ட செயலுக்கு எப்படி பொறுப்பவர்கள். இவன் கேடி என்று தெரிந்துக்கொண்டு, அழைத்துக்கொண்டு வந்து தர்பியா நடத்துபவர்கள் தான் அயோக்கியர்கள்.

பாக்கர் என்பவரை பற்றியும் காப்பி பேஸ்ட் மேதை உங்களுடன் இருந்தவர் தானே என்று தனது அறிவின் முதிர்ச்சியை காட்டியுள்ளார். பாக்கர் எங்களுடன் இருந்தவர் தான். அவர் கேடுகெட்ட செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால், அவரை தவ்ஹீத் ஜமாஅத் விரட்டி அடித்து விட்டது (அதாவது பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியை கூட நீக்கி). இதை காட்டி பார்த்தீர்களா? உங்களுடன் உள்ளவர் இவ்வாறு செய்துள்ளார் என்று நீங்கள் சொல்லியுள்ளீர்கள் என்று. அவர் தவறு செய்தது உண்மை, அவர் முதலில் கண்டிப்பட்டு, பிறகு தண்டித்து, விரட்டி அடிக்கப்பட்டது உண்மை. பாக்கரின் கேடுகெட்ட செயலை, நாம் ஆதரிக்கவில்லை, அதனால் தான், அவர் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார். தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்த ஒருவர், தவறு செய்து, அந்த தவறுக்காக அவரை தவ்ஹீத் ஜமாஅத் நீக்கிய பிறகும், அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் எப்படி பொறுப்பாகும்? என்ன வாதம் இது? ஒரு பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன், கேடுகெட்ட செயலை செய்யும் போது, அந்த பள்ளி அந்த மாணவனை பள்ளியை விட்டு நீக்கிவிடுகிறது என்றால், அந்த கேடுகெட்ட செயலுக்கு அந்த பள்ளி பொறுப்பாக ஆகுமா? அல்லது அந்த பள்ளி அந்த தவறை தான் ஆதரித்ததாக ஆகுமா? பாக்கர் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து அவரின் கேடுகெட்ட செயல்கள் நிரூபிக்கப்பட்டு, பாக்கர் தன்னை உத்தமனாக காட்ட ஆரம்பித்த இயக்கத்தின் மூலம் பாக்கரை வைத்து நிகழ்ச்சி நடத்தியது யார்? பாக்கர் போன்றவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துவது யார்? ஜூம்ஆ நடத்துபவர்கள் யார்? துபாயில் உள்ள தர்பியா இல்லம் யாரின் பிண்ணணியில் உள்ளது என்பதை எல்லாம் நாம் வெளியிடும் போது, பல்லை நோண்டி வாங்கி கட்டியது யார் என்று தெரியவரும்.

இவ்வாறு நாம் ஏன் கேடுகேட்டவர்களை எல்லாம் வைத்து தர்பியா நடத்துகிறீர்கள் என்று கேட்டதை கண்டு அண்ணண்மார்கள் அதிகமாக கொதித்துள்ளார்கள். அதாவது, கட்டபொம்பன் ஸ்டைலில் கேள்வி கேட்கிறார்களாம். யாரோ காப்பி போஸ்ட் மன்னர் இடத்தில் போனில் சொன்னார்களாம், தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்த எவரோ ஆசிரியையை வளைத்தாராம், பின்னர் கைவிட்டாராம், இந்த கதை எல்லாம் எடுத்துவிட்டுவிடுவார்களாம். இதோ பாரு, எங்களின் தர்பியா தாயிக்களை பற்றி பேசினால், நாங்கள் உங்கள் ஆட்களை பற்றி பேசுவோம் என்று கொக்கரிக்கிறார்கள். நாம் இவர்களுக்கு சொல்லுவது, (அவர்கள் கேட்ட ஸ்டைலில்), 'அட அந்த கதையை எடுத்துவிடுமய்யா, உங்களின் தர்பியா தாயிக்களின் பேடிதனத்தை பகிரங்கப்படுத்த எமக்கு ஒரு வாய்ப்பு தாருமய்யா'. 

இறுதியாக, முந்தைய கட்டுரையின் ஆசிரியர், ஃபேஸ்புக்கில், தவ்ஹீத் ஜமாஅத் குர்பானி கறியில் இலாபம் பார்ப்பதாக அவதூறு செய்து இருந்ததை எடுத்துக்காட்டியிருந்தோம்.

''Ebrahim Ansari Masthan Samad தப்லீக் தனது சொந்த சகோதரனை தூஷித்துப் போஸ்டர் ஒட்டுவதில்லை, ஜமாத்தில் நடக்கும் விவகாரங்களுக்காக காவல்துறையிடம் புகார் கொடுப்பதில்லை; நோட்டுப் போட்டு அல்லது ரசீது போட்டு வசூல் செய்வது இல்லை. பித்ரா அரிசி வசூளிப்பதோ குர்பானி கறியில் இலாபம் பார்ப்பதோ இல்லை''.

தவ்ஹீத் ஜமாஅத் குர்பானி கறியில் இலாபம் அடிக்கிறது என்று அண்ணண் நிரூபிப்பரா? என்றும் கேட்டிருந்தோம். இதற்கு பதில் சொல்ல புகுந்த அண்ணண், தவ்ஹீத் ஜமாஅத் என்று நான் பெயர் குறிப்பிட்டு நான் சொல்லியுள்ளேனா? என்று கேட்டு தப்பிக்க பார்த்துள்ளார். குர்பானிக்கான பணியை சில அமைப்பு தான் செய்கினறன. அதாவது, இவர் எல்லாரும் தான் குர்பானி கறியில் இலாபம் பார்க்கிறார்கள் என்று சொன்னாராம். எல்லா அமைப்புகளும் என்றால், இவ்வாறு இலாபம் பார்க்கிறது என்றால், அதில் தவ்ஹீத் ஜமாஅத்தும் அடங்கும் அல்லவா? இவ்வாறு எல்லா இயக்கமும் செய்தது என்பதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளார் அண்ணண். தவ்ஹீத் ஜமாஅத்தும் அண்ணண்மார்களின் பினாமி இயக்கமான தமுமுகவை பற்றி, பித்ராவிலும், சுனாமியிலும் ஊழல் செய்தார்கள் என்று சொல்லுகிறது, அதை நிரூபிக்க தயாராக உள்ளது, ஊழல் செய்த ஆதாரத்தை கையில் வைத்துள்ளது (ஆனால், தமுமுக வரவில்லை). ஆதாரம் இல்லாமல் இப்படி புளுகும் இவரை எப்படி ஆதரிக்க நடுநிலை நாயகர்களுக்கு மனம் வருகிறது என்று தெரியவில்லை. ஆதாரமில்லாமல் இப்படி எழுதலாமா? என்று அந்த நடுநிலை யோக்கியர்கள் கேட்கவில்லை, கேட்கவும் மாட்டார்கள், காரணம் நடுநிலை என்பது அவர்கள் போட்டுள்ள வேடம். 

தப்லீக் ஜமாஅத் குர்பானி கறியில் இலாபம் எல்லாம் பார்ப்பது இல்லை என்பதை காட்டத்தான் அண்ணண் மற்ற இயக்கங்கள் மீது குர்பானி கறியில் இலாபம் பார்ப்பதாக அவதூறு சொன்னாராம். நல்லா இருக்கு உங்களின் அவதூறு. [இந்த தகவலை அண்ணண் ஃபேஸ்புக்கில் பதிந்து இருந்தார் என்று சொல்லியிருந்தோம். இந்த செய்தியை அண்ணண் பொய் சொல்ல தயங்காதவர் என்று காட்டத்தான் எடுத்துச்சொல்லி இருந்தோம் . இதற்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய அண்ணண், ஃபேஸ்புக்கில் நான் வேறு இரண்டு செய்திகள் போட்டு இருந்தேனே அது உண்மையா என்று கேட்டுள்ளார். அண்ணண் அவர்களுக்கு தைரியம் என்று ஒன்று இருந்தால், ஃபேஸ்புக்கில் போட்டதை கட்டுரையில் எடுத்துக்காட்டட்டும், பின்னர் வரும் இடி! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அண்ணணுக்கு பொய் தான் பிழைப்பு என்று காட்டத்தான் குர்பானி கறி குறித்து சொன்ன அவதூறுரை எடுத்து காட்டியிருந்தோம். மற்றவை தேவைப்படும் போது எடுத்து காட்டப்படும்.]

இவர் பார்வையில் தப்லீக் ஜமாஅத் மட்டும் தான் சரியானது என்று சொல்லுகிறார். இது உண்மையென்றால், படிக்கும் மாணவர்களையும், வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டியவர்களையும், நாலு மாதம் வா, முடியாவிட்டால் நாற்பது நாட்கள் வா, முடியாவிட்டால் ஏழு நாட்கள் வா, அதுவும் முடியாவிட்டால் மூன்று நாட்கள் வா என்று சமுதாய மாணவர்களின் கல்வியையும், உழைக்க வேண்டியவர்களின் வாழ்வாதாரத்தையும் பாழாக்கி, அவர்களின் குடும்ப செலவுக்கு கூட வழியில்லாமல் ஆக்கும் தப்லீக் ஜமாஅத்தை எதிர்த்து அண்ணண் எப்போது கட்டுரை போடுவார்.

மற்ற இயக்கங்கள் வருடத்தில், அல்லது பல மாதங்களுக்கு பிறகு என்றாவது மாநாடு என்று அழைக்கின்றன, கஸ்து, ஜோடு, போடு, கோடுனு, வாரா வாரம் மாத மாதம் சமுதாய மாணவர்களின் வாழ்வை கேள்வி குறியாக்கும் தப்லீக் ஜமாஅத்தை பற்றி விமர்சன கட்டுரை வருமா? தைரியம் இருந்தால் போடுங்கள் அன்பரே! பெரியார் என்ற பெயரில் கதைகளையும் கப்சாக்களையும் பரப்பும் தப்லீக் ஜமாஅத்தினரை சரிகாணும் இவர்கள் தவ்ஹீத்வாதிகள் என்று வேறு தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டுள்ளார்கள்.

அண்ணணுக்கு ஆஹா ஓஹோ என்று கருத்து போடும் அருமை தம்பிகள் சில வாதங்கள் முன்வைத்து இருந்தார்கள், அதற்கான பதில் தனியாக வரும், இன்ஷா அல்லாஹ். சில கருத்துக்களுக்கான பதில் எமது முந்தைய ஆக்கத்தின் கருத்துக்களில் பதில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் தமிழில் உளறுவது போதாது என்று, ஆங்கிலத்தில் சிலர்  உளறுகிறார்கள். ஆங்கலத்தில் எழுதினால் நமக்கு புரியாதல்லவா என்று கிண்டல் வேறு. தமிழில் நாம் கொடுத்த பதிலுக்கே பதில் தெரியாமல் முழிக்கும் இந்த நிருபர்கள், ஆங்கில உளறல்களுக்கு வேற மரண அடி வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தேவைப்பட்டால் ஆங்கில உளறல்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பபடும்.

இவர்கள் தவ்ஹீத்வாதிகள் என்று தங்களுக்கு தங்களே பட்டம் சூட்டிக்கொண்டு தவ்ஹீத்வாதிகளை ஏமாற்றுகிறார்கள். இதற்கு ஒரு மிகப்பெரிய ஆதாரம், அதிரையில் கவிஞர் தாஹா என்பவரை பற்றி ஒரு அறிமுக  கட்டுரை ஆகே ஓகே என்று புகழ்ந்து எழுதினார்கள். தாஹா அவர்களை பொறுத்தவரை அதிரையில் தரீக்கா கொள்கையும் மற்றும் அவ்லியாக்களிடம் கேட்க வேண்டும் என்ற இணைவைப்பை அதிகமாக பெண்கள் மத்தியில் பிரச்சாரம் செய்பவர். இவரை மிகப்பெரிய மகானாக சித்திரித்து கட்டுரை வரைந்தார்கள், அதற்கு புகழ் மேல் புகழ் மாலைகள். அதில் ஒருவர் கவிஞர் தாஹா அவர்கள் ஹஜ் செய்துள்ளார், எனவே ஹாஜி என்று சேர்த்து எழுதுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார். நமது தவ்ஹீத் வேர்கள் என்ன பதிலாக தந்தார்கள் தெரியுமா? உங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு ஹாஜி என்ற புகழ் மாலை சேர்க்கப்பட்டுள்ளது என்று பதில் தந்தார்கள் (ஆதாரம் கீழே). ஹாஜி என்று எழுதுவது அமலை புகழாக்கி, அதற்கு கிடைக்க வேண்டிய நன்மையை நாசமாக்கும் செயலாகும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டும் இவ்வாறு இவர்கள் செய்கிறார்கள் என்றால் இவர்கள தவ்ஹீத்வாதிகளா? அல்லது வியாதிகளா? இதில் இவர்கள் வேர்களாம், நாம் விழுதுகளாம். ஹாஜி என்று எழுதுவது வழிகேடு என்று சுன்னத் ஜமாஅத்தினர் கூட அவற்றை தவிர்த்து வரும் நேரத்தில், இந்த தவ்ஹீத் நடிகர்களுக்கு இது சாதராண விஷயமாக தெரிகிறது.
ஹாஜி என்று போட்டாச்சு, தவ்ஹீத்வாதிகள் என்று பெயரும் வாங்கியாச்சு.......
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய், அந்த பொய்யை மறைக்க ஆயிரம் பொய் என்று பாவத்தை சேர்க்காமல் உண்மையான நடுநிலை எது அறிந்து அதன்படி நடக்க முன்வாருங்கள் என்று அன்புடன் சம்பந்தப்பட்டவர்களை கேட்கிறோம். உங்களை தரம் தாழ்த்த வேண்டிய எந்த நிர்பந்தமும் எங்களுக்கு இல்லை.

கட்டுரை காப்பியாளரான கட்டுரையாளர் தமுமுகவின் பினாமி என்று எழுதியிருந்தோம். இதை நிருபிக்கும் வகையில் கட்டுரையாளர் தமுமுகவின் எம்எல்ஏவையும், பொதுச்செயலாளரை போட்டிக்கண்டு, தமுமுக எம்எல்ஏ சட்டமன்றத்தில் கிழித்தவைகளை பற்றி அள்ளிவிட்டார், அதை அப்படியே கட்டுரையாளர் ஜால்ரா தட்டி, அட ஆமா அட ஆமா. ஜெயலலிதா தான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவரயிற்றே அப்படி இருக்கையில் அவரிடம் இடஒதுக்கீடு கேட்கலாமா? என்று கட்டுரை எழுதியவர் (சாரி காப்பி அடித்தவர்) கேட்வில்லை. இதிலிருந்தே இவர்களின் யோக்கியத்தனம், மட நிருபர்களின் வேடமும் கிழிந்து தொங்குகிறது. 

6 கருத்துரைகள் :

இந்த கருத்திற்கும் பதில் சொல்லுங்கள்.....

//sabeer.abushahruk சொன்னது…
எந்தக் கட்டுரையின் பேசுபொருளையும் விமரிசிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால்,

தராதரம் பார்க்காமல்,

"நாம் களியாட்டம் போட்ட காலங்களில்கூட ஒழுக்கமாக வாழ்ந்தார்களே" என்றுகூட யோசிக்காமல்,

படிக்கவேண்டிய காலங்களில் படித்து; உழைக்க வேண்டிய காலங்களில் உழைத்து முன்னேறி

மார்க்க நடைமுறைகளை இயன்றவரை நிறைவாகச் செய்து

சமூக நேம்பாட்டுக்கு தொண்டாற்றி வரும் மனிதர்களை விமரிசிக்கு முன்,

படிக்காமல் ஊர் சுற்றி

தண்ணியடித்துக்கொண்டு தறிகெட்டு அலைந்து

பாலியல் முறைகேடுகளில் லயித்து

பணபலம் கொண்டு தன்னைச் சுற்றி இருந்தோரையும் வழிகேட்டில் செலுத்தி வாழ்க்கையைக் கடந்தவர்கள்

தற்போது திருந்தி வாழ்வதாகச் சொன்னாலும் மொழியை உபகரணமாக உபயோகிக்காமல் ஆயுதமாக உபயோகிக்கும் வரை இவர்களுக்கும் இயக்கங்களுக்கும் பின்னடைவு நிச்சயம்.

படிக்கவில்லையெனினும் படிச்சவங்கமாதிரி நாகரிகமாக நடக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.//

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆதாரம் இல்லாமல் புளுகும் இந்த மடையர் யாரை பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. தண்ணி அடித்தல்இ பாலியல் குற்றம்இ களியாட்டம்இ கூட இருந்தவர்களையும் குட்டிச்சுவராக்கி அவர் மாதிரியே எல்லாரும் இருப்பார்கள் என்று சொல்ல வருகிறராரே? இது போன்ற மடையரை நோக்கிஇ நடுநிலைவாதிகளும் தர்பியா மன்னர்களும் தவ்ஹீத் சிங்கங்களும் ஏன் இவ்வாறு அவதூறு சொல்ல வேண்டும் என்று கேட்கவில்லை. இவர்களுக்கு தேவை புகழ் தான். புகழுக்காக எந்த கேடுகெட்ட செயலையும் செய்வார்கள்.

நீங்கள் அப்படி இருந்தீர்கள், இப்படி இருந்தீர்கள் என்று புளுகி கருத்திட்டவரின் முகம் ராஜஸ்தான் மார்பிஸ் போல இருப்பதை பார்த்தாலே தெரியவில்லையா? தற்குறிகள் என்று.

//sheikdawood mohamedfarook சொன்னது…
இடஒதுக்கீடு கேட்டு சிறைநிறப்பும் போராட்டம் நடத்தியபோது அரசு அவர்களைஒரு மணிநேரமாவது சிறையில் அடைத்து வெளியே விட்டிருந்தால்'' நாங்கள் 'சமுதாய நலனுக்காக' சிறைசென்ற தியாகிகள்!'' என்று தம்பட்டம் அடிக்கலாம். அந்த ஆசை கை நழுவிபோனதால் வந்த ஏமாற்றத்தின் விளைவே இந்தக்கோபம்!.

mk Aboobacker சொன்னது…
"இடஒதுக்கீடு கேட்டு சிறைநிரப்பும் போராட்டம்" காவல் துறை அனுமதியுடன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான்கு இடங்களில் நடைபெற்றது.எப்படி கைது செய்வார்கள்?//

ருச்சியில் இந்து முன்னனி சிறை நிரப்பும் போராட்ட நடத்துபவர்களை கைது செய் என்று போஸ்டர் அடித்தார்கள் அதுதான் இவர்களின் ஆசையும்

தடையை மீறி நாங்கள் போராட்டம் நடத்துவோம் நீங்கள் கைது செய்தாலும் நடத்துவோம் என்று நாங்கள் அறிவித்துவிட்டு போராட்டம் நடத்தினோம் எங்களை போலீஸ் கைது செய்யவில்லை நீங்கள் கேட்பதாக இருந்தால் போலீசை பார்த்துதான் இந்த கேள்வியை கேட்டவேண்டும் அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று
(உம்) லைசன்ஸ் இல்லாமல் வாகணம் ஓட்டுபவரிடம் நீ ஏன் போலீஸில் பிடிபடவில்லை என்று யாரும் கேட்கமாட்டார்கள் மாறாக போலீஸிடம் தான் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களை நீங்கள் ஏன் பிடிக்கவில்லை என்று கேட்போம்

அதுபோல எங்களிடம் இந்த கேள்வியை கேட்காமல் காவல்துறையிடம் கேளுங்கள்

//mk Aboobacker சொன்னது
முஹம்மது குட்டிக்கும்,லெப்பைமார்களுக்கும் எதிராக சம்மட்டி அடி பிரச்சாரத்தை எதிர்பார்க்களாம்//

நாங்கள் நடத்தும் சொற்பொழிவுகளில் யாரையும் விமர்ச்சிக்கமாட்டோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நீங்கள் மற்றவர்கள் நடத்தும் பயான்களில் மட்டும் அடுத்தவர்களை விமர்ச்சிக்க கொம்பு சீவிவிடுவது எந்த வகையில் நியாயம்

உங்களின் இந்த கட்டுரைக்கு பதில் தராமல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள், இது பற்றி உங்கள் பதில் என்ன.....

//கடந்த இருவாரங்களாக வெளியான இந்தத்தொடரின் இடஒதுக்கீடு என்கிற பேசுபொருள் மிகப் பலரின் வரவேற்புக்கும் ஒரு சிலரின் எதிர்ப்புக்கும் ஆளானது. நம்மைப் பொருத்தவரை , நமது மனதில் எவ்வித களங்கமும் இல்லை – நடு நிலை தவறவில்லை என்கிற மனசாட்சியின் உறுதிப்பாடு இருப்பதால் எதிர்த்து எழுதியவர்களின் தரங்கெட்ட வரிகள் நம்மை பாதிக்கவில்லை. மாற்றுக் கருத்து கொண்டோரை வசைபாடுவதை வழக்கமாக வைத்து இருப்பவர்களுக்காக நாம் இரக்கப்பட்டு அவர்களுக்காகவும் இறைவனிடம் இறைஞ்சுவோம் என்கிற வரிகளோடு இதற்கு, நம்மைப் பொருத்தவரை முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறோம்.//

அன்வர்

அஸ்ஸலாமு அலைக்கும்.

பதில் இருந்தால் தானே பதில் தர முடியும். எங்களின் முதல் பதில் கட்டுரைக்கு தட்டுதடுமாறி பதில் என்ற பெயரில் உளரித்தள்ளீயிருந்தார்கள், அதற்கு நாம் கொடுத்த பதிலடி இவர்களை பின்வாங்க வைத்துள்ளது. இவர்களின் நடுநிலை வேடம், தவ்ஹீத் வேடம், நல்ல பிள்ளைகள் வேடம் என் அத்தனையும் கழைந்து போய்விட்டது. இனி காப்பி போஸ்ட் பண்ணும் போது உஷாராக இருப்பார்கள்.

மீண்டும் உளரினால் பதிலடி தொடரும்.....

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.