Sunday, August 18, 2013

தன்னைத் தானே காப்பாற்ற முடியாத பரிதாப அதிரை அவ்லியா!

அதிராம்பட்டிணத்தில் சமீப காலமாக அவ்லியாக்கள் அடங்கி இருப்பதாக சொல்லப்படும் இடங்கள், மற்றும் அவ்லியாக்களின் நேசர்கள் என்று சொல்பவர்களுக்கு   அடிமேல் அடி விழுந்து வருகிறது.

அவ்லியாக்களுக்கு காலம் காலமாக சந்தணம் பூசி வந்த ஒருவர், சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கந்தூரி விழாவில் சந்தனம் பூச சென்ற போது முச்சு திணறி மரணம் அடைந்தார். அவ்லியா பக்தரை அந்த அவ்லியா காப்பாற்றவில்லை, கைவிட்டார்.காரணம் அவரால் அது முடியாது  இந்த சம்பவம் கடல்கரைத் தெருவில் உள்ள தர்ஹாவில் நடைபெற்றது.

அதிரை மேலத்தெருவில் உள்ள தர்ஹாவிற்கு அருகில் நெய்னா பிள்ளை அப்பா ஒலி என்பவருக்கு மினி தர்ஹா ஒன்று உள்ளது. கடந்த 17.08.2013 அன்று அந்த மினி தர்ஹாவின் கீற்று கொட்டகை தீப்பற்றி எரிந்தது. அவ்லியா கப்ரை உடைத்துக்கொண்டு தீயை அணைப்பார் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தீ பற்றிய விஷயத்தை கூட அறிய முடியாத அவ்லியாவை காப்பாற்ற தீ அணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு  இறுதியாக, அவ்லியாவின் அடக்கஸ்தலமாக கருதப்படும் தர்ஹாவில் பற்றிய தீயை தீ அணைப்பு  துறையினர் தான் அனைத்தனர் என்பது சோகமான செய்தி.


கேட்பவர்களுக்கு எல்லாம் கஷ்டத்தை போக்குவார் என்று நம்பப்படும் அவ்லியா, தனது கப்ர் தீ பற்றி எரியும் போது  ஒன்றும்  செய்ய முடியாமல் போனது அந்தோ பரிதாபம். நல்ல வேளை அவ்லியாவின் (?) கப்ர் கல்லால் கட்டப்பட்டு இருந்தது, ஒரு வேளை மரம் போன்ற எறியக்கூடிய பொருளில் அமைந்து இருந்தால், அந்த கப்ரும் சேர்ந்து எரிந்து போயிருக்கும்.

ஒரு வேலை கப்ர் வணக்கத்தை எதிர்ப்பவர்கள் தான் இந்த செயலை செய்தார்கள் என்று கப்ர் வணங்கிகள் கூறக்கூடும். அப்படி கூறினாலும், அவ்லியாவிற்கு எந்த சக்தியும் இல்லை என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

நெய்னா பிள்ளை அப்பா ஒலி அவ்லியாவல் தான் தனது கப்ர் தீ பற்றி எரியும் போது, அதை அணைக்க முடியவில்லை என்றால், நெய்னா பிள்ளை அப்பா ஒலி அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்திற்கு மிக அருகில் இருப்பதாக சொல்லப்படும் ஷேக் நசூருதீன் ஒலியுல்லா அவ்லியா, அதிரை கடல்கரைத்தெருவில் இருக்கும் ஹாஜா ஒலி அப்பா அவ்லியா ஆகியோருக்கும் எந்த சக்தியும் இல்லை என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது.

அதிரையில் உள்ள அவ்லியாக்கள் தான் நெய்னா ஒலி அப்பாவை கைவிட்டார்கள் என்றால், அதிரைக்கு அருகில் இருக்கும் முத்துப்பேட்டை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள அவ்லியாக்கள் கூட தீ அணைப்பு துறை வந்து தீயை அணைக்கும் முன், வந்து தீயை அணைக்கவில்லை.

மேலும், ஆயிரம் முறை அழைத்தால் பாக்கதாதில் அடங்கி இருக்கும் அப்துல் காதர் ஜெய்லானி தனது கப்ரை பொத்து கொண்டு வந்து ஆஜராவர் என்று சொல்லப்படுவரும்  கைவிட்டுவிட்டார்.

அவ்லியாகளுக்கு நாங்கள் தான் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று ஏமாற்றும் அவ்லியா பக்த கள்ள ஆலிம்களும் கூட இந்த தீயை வந்து அணைக்கவில்லை.

மொத்ததில் அவ்லியாக்களுக்கே அல்லது அவ்லியா பக்தர்களுக்கே மறைவான ஞானமே அல்லது சக்தியே இல்லை என்பது இந்த சமபவத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

தலைப்பு ''தன்னைத் தானே காப்பாற்ற முடியாத பரிதாப அதிரை அவ்லியா!'' என்று அதிரை அவ்லியாவை  பற்றி சொல்ப்பட்டு இருந்தாலும், உலகில் உள்ள எந்த அவ்லியாவிற்கும் எந்த சக்தி இல்லை என்று நிரூபணம்.


அவ்லியாக்கள் எனப்படுவர்களுக்கு எந்த விதமான சக்தியும் இல்லை என்பதை அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதை பாருங்கள்.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.  

அல்குர்ஆன் (22:73)

பல தர்ஹாவில் உள்ள கப்ர்களில் உள்ள அடக்கஸ்தலத்தில் அவ்லியாவாக கருத்துப்படுவர் அடக்கம் செய்யப்படவில்லை என்றாலும், அவ்லியாக்கள் என்று நம்ப படுபவர் அங்கே அடங்கியிருந்தாலும் தனது கப்ரே தீ பற்றி எரியும் போது, அதை தடுக்கும் சக்தி அவருக்கு இல்லை என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்று.


தமிழ் முஸ்லிம்களிடம் இருந்த தர்ஹா வழிபாடு என்ற கொடிய இணைவைப்பு காரியம் தழிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீத் புரட்சியின் வாயிலாக பெருமளவில் துடைத்து எறிப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். 

இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் மிச்சம் மீதி இருக்கும் இணைவைப்பு ஆலயங்கள் மக்களால் உடைத்து எறிப்படும்.

படங்கள் உதவி: அதிரை நியூஸ்

8 கருத்துரைகள் :

''அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்போரை வணங்குவதை விட்டும் நான் தடுக்கப்பட்டுள்ளேன்'' என்று கூறுவீராக! ''உங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்ற மாட்டேன். (பின்பற்றினால்) வழி தவறி விடுவேன். நேர் வழி பெற்றவனாக ஆக மாட்டேன்'' என்றும் கூறுவீராக! (6: 56)

கேட்பவர்களுக்கு எல்லாம் கஷ்டத்தை போக்குவார் என்று நம்பப்படும் அவ்லியா, தனது கப்ர் தீ பற்றி எரியும் போது ஒன்றும் செய்ய முடியாமல் போனது அந்தோ பரிதாபம்.............

கேட்பவர்களுக்கு எல்லாம் கஷ்டத்தை போக்குவார் என்று நம்பப்படும் அவ்லியா, தனது கப்ர் தீ பற்றி எரியும் போது ஒன்றும் செய்ய முடியாமல் போனது அந்தோ பரிதாபம்.............

இன்ஷா அல்லாஹ் குர் ஆன் ஹதீஸ் மட்டுமே தூய இஸ்லாமிய மார்க்கம் என்பதை மக்கள் அறிய வரும்பொழுது கப்ரு வணக்கம் போன்ற ஷிர்குகளும் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களிலேயே அரங்கேற்றப்படும் ஷிர்கு பித் அத்களான மவ்லூதுகளும் இன்ஷா அல்லாஹ் ஒழியும்.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

அல்குர்ஆன் (22:73)

unkalukku nanban சொன்னது

தாயிடம் பால் கேட்டதில்லை
தந்தையிடம் உடை வாங்கி கேட்டதில்லை
ஆசிரியரிடம் பாடம் விளாக்கம் கேட்டதில்லை
நண்பர்களிடம் டீ கூட கேட்டதில்லை
டாக்டரிடம் நோய் குணப்படுத்த கேட்டதில்லை
போலீசில் உதவி கேட்டதில்லை
சக்கிளியனிடம் செருப்பு தைத்து கேட்டதில்லை
இப்ப மணியென்ன என்று நேரம் கேட்டதில்லை
புரியா கணக்கு நண்பனிடம் விளக்கம் கேட்டதே இல்லை
விருந்து சாப்பிடும்போது மறு சோறு கேட்டதில்லை
மார்க்க விளக்கம் அவர்கள் தலைவரிடம் கேட்டதே இல்லை
கோசம் போட்டு அரசிடம் எதுவுமே கேட்டதில்லை
பிரச்சனை இல்லாத சொத்தை எனக்கு தராமல் போயிட்டீயே என்று மறைந்த உறவினரை நினைத்ததே இல்லை.(இது போல ஏதும்)
பல் தேய்க்க பிரஸ் கேட்டதில்லை
அது கேட்டதில்லை
இது கேட்டதில்லை

இப்படி எதுவும் யாரிடம் எந்த தேவையும் கேட்காமல் நேரே அல்லாஹ்விடம் கேட்டு இதுவரை வாழ்ந்து வருகிறார் !

பசித்தால் அவர் கேட்டதும் அல்லாஹ் உடனே கொண்டு வந்து கொடுத்துவிட்டுதான் போகிறான்.

என்னே ஆச்சரியம் !

சரி,
தினமும் இவர்கள் நம்பும் இறைவன் இவர்களிடம் வந்து செய்தி சொல்லிவிட்டு போகிறான். இவர்களுக்கு கேட்கிறது. அதனால் காதில் செய்தி வாங்கி பதில் சொல்பவரிடம் தான் இவர்கள் அன்றாட தேவைகளை தினமும் கேட்டு வாழ்க்கை நடத்துகிறார்கள்.

தனியாக உங்களுக்கு உங்கள் பள்ளிவாசல் கட்டினீர்கள். அங்கு ஏன் உங்கள் தொழுகையை தொழாமல் எங்கள் பள்ளியில் வந்து எங்கள் தொழுகை கவனம் சிதரும்வண்ணம் கை விரலை நடனம் ஆடவிட்டு, ஆட்டி, அடிக்கடி கொட்டாவி விட்டு, அடிக்கடி சொறிஞ்சிகிட்டு, எங்கள் தொழுகையை கெடுக்கிறீர்கள் ?

மதுகூரில் உள்ள மலத்தை சுமந்த மனிதன் காலில் விழுகிறவர்களை கேட்கவேண்டும்.
இருந்தாலும் இதற்கும் பதில் எழுதுகிறேன்.
ஆட்சியர் காலில் குடிமகன் விழுகிறான்
மனைவி காலில் கணவன் விழுகிறான்
என் மானம் போய்விடும்! யாரிடமும் சொல்லாதீர்கள்!
உங்களைவிட்டால்!எனக்கு வேறு ஆள் இல்லை!தயவு செய்து காப்பாற்றுங்கள்!
என் கவ்ரவம் கப்பலேறி போய்விடும்!தலைகாட்டமுடியாது!
இது உங்கள் கைகளல்ல!உங்கள் கால்கள், பற்றுகிறேன்!
இந்த உதவி செய்யுங்கள்!

இவர்கள் குர்ஆன், ஹதீஸ் பிரகாரம்...
பிரியானி செய்கிறார்கள்.
பண்பாக எழுதுகிறார்கள்.
வேட்டி கட்டுகிறார்கள்.
குர்லான் மெத்தையில் படுக்கிறார்கள்.
ஏசி வைத்துள்ளார்கள்.
கோல்கேட் பேஸ்ட்டு, பிரஸ் இவற்றால் பல் விளக்குகிறார்கள்.
தர்ஹா வழிபாடு பிளக்ஸ் போர்டு வைகிறார்கள்
ஜெராக்ஸ் எடுகிறார்கள்.
கம்புயுட்டர் பயன்படுத்துகிறார்கள்.
பேட்டரி பயன்படுத்துகிறார்கள்.
.......... இப்படி எல்லாம் செய்கிறார்கள்.

இதுபோன்ற குதர்க்கமான கேள்விகளுக்கு பதில் தரவும்

அஷ்ரப் அவர்களுக்கு,

ஸலாம்.

நீங்கள் குறிப்படும் பெயர் இல்லா மனிதர் மட்டும் தான் அதிராம்பட்டிணத்தில் கப்ர் மற்றும் அவ்லியா வணக்கத்திற்கு கொடி பிடிக்கும் ஒரே நபர். ஒலு காலத்தில் அவ்லியா வழிபாடு, கப்ர் வழிபாடு இவை பற்றி எல்லாம் பேசினால், அவ்லியா பக்தர்கள் சத்திய கொள்கை உடையவர்களை அடித்து துவைத்தார்கள். இன்று சத்தியம் மேலோங்கி இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் சில்லரையை தவிர வேறு யாருக்கும் அவ்லியா வணக்கத்தை சரி என்று பேசும் அளவுக்கு துணிவு இல்லை. நமது தளத்திலேயே அவ்லியா மற்றும் கப்ர் வணக்கம் சம்பந்தமாக பல்வேறு ஆக்கங்களை வெளியிட்டுளோம். அந்த ஆக்கங்களுக்கு கேளரத்து குட்டிகளால் கூட பதில் சொல்ல முடியாது. கப்ர் வணக்கத்தை ஆதரிக்கும் அத்தனை பேர் ஒன்று சேர்ந்தாலும், அவற்றுக்கு பதில் தர முடியாது.

இந்த சில்லரை கேட்கும் கேள்வி, பல முறை கப்ர் வணங்கிகளால் கேட்கப்பட்டது தான். ஆசிரியரிடம் கேட்பது, தாய் இடம் கேட்பது மற்றவர்களிடம் கேட்பதற்கும் அவ்லியாவிடம் கேட்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தாய், ஆசிரியர், மற்றவர்களிடம் கேட்கும் போது அவர்கள் உயிருடன் இருக்கும் போதும், அவர்களுக்கு நாம் கேட்பது, அவர்களின் காதுகளில் கேட்கும் நேரத்தில் தான் கேட்கிறோம். இந்த கேடுகெட்ட அவ்லியா வணங்கி கும்பல், அவ்லியா எனப்படுபர் செத்த பிறகு, அவரின் கப்ர்களிலும் மற்ற இடங்களிலும் இருந்து, செத்து போன அந்த மனிதரிடம் கேட்டால், அவருக்கு கேட்கும் என்றும், அவர் நமக்கு பரிந்துரை செய்து நமது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார் என்றும் நம்புகிறது, செயல்படுகிறது. இவர்கள் கேட்கும் விதத்திற்கும் நாம் கேட்பதற்கும் பெரிய வித்தயாசம் உள்ளது இப்போது புரிகிறாதா? ஒரு ஆசிரியர் இறந்து போன பிறகு அவருக்கு கேட்கும் என்று எண்ணி, அந்த ஆசிரியரிடம் கேட்டால் தான், இந்த கப்ர் வணங்கி கோமாலியின் கேள்வி அர்த்தமுள்ளதாக ஆகும்.

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதை அல்லாஹ் தெளிவாக எடுத்துச்சொல்லும் வேத வசனம்:

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது. (அல்குர்ஆன் 30:52)

குர்ஆன், நபிமொழி இதுவெல்லாம் கப்ர் வணங்கிகளுக்கு ஆதாரமாக அமையாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு அத்தஹியாத்தில் விரலை அசைக்கும் நபிமொழியை இவன் கொச்சைப்படுத்தி, நடனம் என்று குறிப்பிடும் போதுதே அறிந்து கொள்ளலாம்.

அதிரையில் அவ்லியாக்கள் எனப்படுவோரின் கப்ர்கள் மட்டும் எரியவில்லை, கப்ர் வணங்கிகளின் கொள்கையும் சேர்ந்து எரிகிறது. ஒரு காலத்தில், கந்தூரி விழாக்களால் அதிரை களைகட்டியது. இது சமீப காலமாக மாறி, கந்தூரி திருவிழாவிற்கு காசு கூட எவனும் தருவது இல்லை என்றாகியது. இன்று அவ்லியா எனப்படுவோரின் கப்ர் எரிந்தாலும், கேட்க நாதியில்லை (அவ்லியாவும் வழக்கம் போல இது போன்றவற்றை தடுப்பது இல்லை). இன்ஷா அல்லாஹ், வெகு விரைவில் இணைவைப்பு ஆலயங்கள் அதிரையில் ஒன்று அகன்று போகும். இல்லாவிட்டால் மாடுகளுக்கு கழிப்பறைகளாக மாறிப்போகும்.

மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும் ஆக்கத்தை பாருங்கள்

http://www.adiraitntj.com/2013/08/blog-post_29.html

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.