Sunday, May 27, 2012

மேலத்தெரு இளைஞர்களின் அழகிய செயல்!


இந்த ஆண்டு மேலத்தெரு தர்ஹா கந்தூரி திருவிழாவை தவறு என்றும் உணர்த்தும் முகமாக, மேலத்தெரு தவ்ஹீத் சகோதரர்கள், தர்ஹா வழிபாட்டின் தீமைகளை விளக்கி, போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். இதன் விளைவாக, மேலத்தெருவில் அவ்லியா ஊர்வலமாக வரும் போது தாரை தப்பட்டைகளை இயக்காமல், அமைதியாக சென்றார். அல்ஹம்துலில்லாஹ்.

தர்ஹா வழிபாட்டை தவறு என்று உணர்ந்த ஆலிம்கள் கோழைகளாக இருக்கும் போதும், ஆலிம்கள் என்று சொல்லப்படும் மற்றொரு பிரிவினர் தர்ஹா வழிபாட்டை பாத்தஹா ஒதி துவக்கி வைக்கிக்கும் போது, இந்த இரண்டு பிரிவு ஆலிம்கள் மார்க்கத்தை சொல்லிக் கொடுக்கும் இந்த இளைஞர்களின் செயல் பாராட்டத்தக்கது.

பாரம்பரியம் பேசும் ஆலிம்கள் இது தவறு என்று இனிமேலாவது பகிரங்கமாக சொல்வார்களா? சொல்லவிடில், இவர்களை ஆலிம்கள் என்று சொல்லவதை விட மடமை வேறு எதுவும் இல்லை.