Tuesday, March 25, 2014

அ தி மு கவிற்கு ஆதரவு ஏன்?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை சார்பாக இன்று (25.3.14) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளிவாசல் அருகில் தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவிற்கு ஆதரவு ஏன் என்பதை விளக்கி தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் கிளைச் செயலாளர் அன்வர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் அதிகமான மக்கள் கலந்துக்கொண்டார்கள்








31 கருத்துரைகள் :

பள்ளிகளுக்கான அரசு பொதுத் தேர்வு நடக்கும் இத் தருணத்தில், இப்படி தெருமுனை பிரச்சாரம் தேவைதானா?

நூர் அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்

தவ்ஹீத் ஜமாஅத் எதை செய்தாலும் அதில் குற்றம் காண வேண்டும் என்ற உங்களின் உயரிய கொள்கை உங்களின் இந்த கருத்து மூலம் வெளிப்படுகிறது.

பள்ளி நடப்பது காலையில் தெருமனை பிரச்சாரம் நடைபெற்றது இரவு நேரத்தில். இது எந்த வகையில் மாணவர்களை பாதிக்கும்? இவ்வாறு பாதிக்கும் என்றால் மற்ற இயக்கத்தினர் இவ்வாறு செய்யும் போது நீங்கள் இவ்வாறு கேள்வி கேட்காதது ஏன்? பள்ளி பள்ளியாக மௌலூது ஓதி மாணவர்களுக்கு இடையுறு செய்த போது நீங்கள் எங்கே போனீர்கள்? மற்ற இயக்கத்தினர் தேர்வு நேரத்தில் பொதுக்கூட்டம் நடத்தும் போது நீங்கள் சந்தினுக்கு போய்விட்டீர்களே?

பள்ளிகளில் ஆண்டு நிறைவு தேர்வு நடைபெறுவதால், குறிப்பாக அரசு பொதுத் தேர்வும் நடைபெறுவதால், மாணவ மாணவியர்கள் தத்தம் இல்லங்களில் சிறப்பு கவனம் செலுத்தி படித்துக் கொண்டிருகின்றனர் என்பதை அனைவரும் அறிவர்.

இந்த தெருமுனை பிரச்சாரத்தினால், மாணவ மாணவியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்வது பாதிக்கப் படுகின்றன.

இதைத்தான் //பள்ளிகளுக்கான அரசு பொதுத் தேர்வு நடக்கும் இத் தருணத்தில், இப்படி தெருமுனை பிரச்சாரம் தேவைதானா?// என சுருக்கமாக சுட்டிக் காட்டினேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோ நூர்முகம்மது அழகாக ஒரு கேள்வி கேட்டு இருக்கோம் என்ற நினைப்பில் வந்து ஒரு கேள்வி கேட்டு இருக்கார் அவர் தான் எந்த அளவு கூமுட்டை தனமான கேள்வி இது என்பதை விளங்காமல் கேட்கிறார் என்றால் அதையும் மதித்து பதில் சொல்ல வேறு செய்து இருக்கிறீர்கள்

பள்ளிகூட பரீட்சை நேரத்தில் ஏன் தேர்தல் வைத்தீர்கள் என்று அடுத்தபடியாக தவ்ஹீத் ஜமாத்திடம் கேள்வி கேட்பார் அதற்கும் பதில் சொல்லி கொண்டு இருங்கள்

சகோ. நைனா முஹம்மது அவர்கள் கல்வி என்றால் கிலோ எவ்வளவு என விலை கேட்கும் இயக்கத்தின் மயக்கத்தில் மூழ்கியவர் என தெளிவாகிறது. சொற்களை கையாள்வது எப்படி என கற்றவனே அறிவான். அந்த கல்விக்கும் கல்வி சாலைக்கும் இடையூறு கொடுப்பத்தைப் பற்றியதே இந்த ஆக்கம்.

கற்றவனும் கல்லாதவனும் சமமாக முடியுமா?

//கற்றவனும் கல்லாதவனும் சமமாக முடியுமா? //

பணக்காரனும் ஏழையும் சமமாக முடியாது என்தான் நீங்கள் போடவேண்டும் உங்கள் கிலபில் (பைத்துல்மாலில்) பொறுப்புக்கு வரவதற்கு ஓரே தகுதி பணம் தானே?

//கற்றவனும் கல்லாதவனும் சமமாக முடியுமா?//

அடடே வாங்க வாத்தியாரே முன்னாள் மாணவருக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் உளறி கொட்டி விட்டு பிறகு இந்த தளத்தின் மூலம் திருத்தி கொடுக்கப்பட்ட பிறகு திருத்திய வரலாறு இன்றும் இருக்கு

கற்றவரும் கல்லாதவரும் சமமா என்று கேள்வியை கேட்டுவிட்டால் நீர் மேதை என்று நான் நினைக்க வேண்டுமா ?

நீர் கேட்டது அறிவுகெட்ட கேள்வி என்பதை நீர் புரிந்து கொள்ள மாட்டீர் என்பது எனக்கு தெரியும் ஏனெனில் கற்றாரும் கல்லாதாரும் சமமாக முடியுமா என்பதின் அர்த்தம் விளங்கியவன் நான்

//நீர் கேட்டது அறிவுகெட்ட கேள்வி என்பதை நீர் புரிந்து கொள்ள மாட்டீர் என்பது எனக்கு தெரியும் ஏனெனில் கற்றாரும் கல்லாதாரும் சமமாக முடியுமா என்பதின் அர்த்தம் விளங்கியவன் நான்//

கற்பஸ்திரிக்குதான் பிரசவ வேதனை தெரியும். அதுபோல் ஆண்டு முழுதும் படித்து பரீட்சைக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்குதான் அந்த வேதனை புரியும். தெருத் தெருவாய் இடையூறு கொடுக்கும் ததஜ வினருக்கு அந்த மாணவ மாணவியர்களின் வேதனை தெரியுமா?

அதனால்தான் //பள்ளிகளுக்கான அரசு பொதுத் தேர்வு நடக்கும் இத் தருணத்தில், இப்படி தெருமுனை பிரச்சாரம் தேவைதானா?// எனக் கேட்டேன்.


//கற்பஸ்திரிக்குதான் பிரசவ வேதனை தெரியும். அதுபோல் ஆண்டு முழுதும் படித்து பரீட்சைக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்குதான் அந்த வேதனை புரியும். தெருத் தெருவாய் இடையூறு கொடுக்கும் ததஜ வினருக்கு அந்த மாணவ மாணவியர்களின் வேதனை தெரியுமா? //

சகோ நூர்முகம்மது உங்களுக்கு தெரியாத சில விசயங்களை தெளிவு படுத்த வேண்டி இருக்குது இப்போ நடப்பது பாராளுமன்ற தேர்தல் இது இந்தியா முழுதும் நடக்கும் இதற்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கும்

அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்கின்றது

இந்தியாவில் எத்தனை மாநிலம் என்பதோ அதில் எத்தனை தொகுதி என்பதோ இப்போ உங்களுக்கு சொல்ல வேண்டாம் ரொம்ப குழம்பி விடுவீர்கள் கற்றவனும் கல்லாதவனும் சமமா என்று உள்ள வரியை மட்டும் சொன்னால் பத்தாது அதற்கு அர்த்தம் தெரியனும்

அதனால தமிழ்நாட்டுக்கு வருவோம் ஆஹா இங்கேயும் 39 தொகுதி இருக்குதே என்ன பண்ண சரி நம்ம தொகுதிக்கு வருவோம்

அது கூட அதிகம் நம்ம ஊருக்கு மட்டும் வருவோம் .இங்க மட்டும் எத்தனை தேர்தல் பிரச்சாரம் நடக்குது எத்தனை குத்தாட்டம் நடக்குது என்பன போன்ற விசயங்களை பார்த்து விட்டு மற்றவர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்கும் ததஜ வின் தேர்தல் பிரச்சாரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணருங்கள் அதற்கு மேலும் ததஜ ஏன் தேர்தல் பிரச்சாரம் தேர்வு நடக்கும் நேரத்தில் பண்ணுது என்று நீங்கள் கேட்டீர்களானால் நீங்கள் இருக்க வேண்டிய இடம் வேறு

சகோ. நைனா முஹம்மத், என்னை யார் என ஏற்கனவே அறிமுகப் படுத்திக் கொண்டு, இத்தனை நாட்களாக இத்தளத்தில் என் கருத்தை பதிகின்றேன். நீங்கள் யார் என அறிமுகப் படுத்த்துங்கள். அதற்கேற்ப என் கருத்தை தொடர்கிறேன்.

அட போங்க சார் ,நீங்கள் யாராக இருந்தால் எனக்கென்ன நீங்கள் இங்கே வைத்த வாதம் தவறு என்று சொல்கிறேன் தேர்தலுக்கும் ததஜ வுக்கும் தொடபில்லை என்று சொல்கிறேன்

இந்த கேள்வியை இங்கு வந்து கேட்பது உங்களுக்கு உள்ள ததஜ எதிர்ப்பினால் தான் சொல்கிறேன் அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் நான் யார் என்று சொல்லு என்று கேள்வி கேட்க வந்து விட்டீர்கள்

கற்றவனும் கல்லாதவனும் சமமாக முடியாது என்ற பேச தெரிந்த உங்களிடம் கேள்விக்கு பதில் சொல்ல தெரியா விட்டால் நீ யார் சொல்லு என்று இங்கே இருந்து அங்கே பாய ஆரம்பித்து விட்டீர்கள்

இங்கு விதண்டாவாதம் பண்ண வேண்டாம் தேவையில்லாமல் ததஜ தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் பண்ணுவது தேவையா என்ற உங்களின் கேள்விக்கு நான் பதில் கொடுத்தேன் எனது பதிலில் தவறு இருந்தால் உங்களால் முடிந்தால் சுட்டி காட்டுங்கள் அதைவிடுத்து நீ யார் என்பது எல்லாம் வீண் வேலை

Mohamed Ashraf & Naina Mohamed - ததஜ விற்காக வரிந்து கட்டிக் கொண்டு பதில் கூறும் நீங்கள், தைரியமாக தங்களை அறிமுகம் செய்யத் தயங்குவது ஏன்? திரை மறைவில் நின்று கொண்டு ஏன் திருட்டு விவாதம் செய்கிறீர்கள். இதுதான் ததஜ வின் வழிமுறையா? அல்லது உங்களின் தானைத் தலைவர் கற்றுத் தந்த நெறி முறையா?

தயவு செய்து திருந்துங்கள்! திருந்துங்கள்!! துருந்துங்கள்!!!

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

கேள்விக்கு பதில் சொல்ல தெரியாவிட்டால் ,சம்மந்தமில்லாமல் இங்கே வந்து தேவையற்றவற்றை பேசிவிட்டு அதில் இருந்து தப்பிபதற்கு நீங்கள் யார் உங்களை அடையாளம் காட்டுங்கள் என்று இழு இழு என்று இழுக்க தெரிந்து இருக்கிறீர்கள்

நான் என் அடையாளத்தை சொல்லி எங்கு இருக்கிறேன் என்று சொன்ன பின்னால் நீங்கள் சொன்னது முட்டாள் தனம் தான் என்பதை ஒத்து கொள்ள தயாரா ?

இல்லை அதற்கு மேலும் ஜவ்வாக இழுப்பீன்களா ? தப்பிக்கிறதுக்கு என்ன என்ன வழிய தான் கண்டுபிடிக்க போறீங்களோ

அடையாளத்தை கூறுங்கள்! உங்களுக்கேற்ப பதிலைத் தருகின்றேன்.

என்னுடைய அடையாளத்திற்கு ஏற்ப நான் உங்களிடம் பதிலை எதிர்பார்க்க வில்லை நீங்கள் வைத்த வாதம் தவறு என்பதை ஒத்து கொள்ள மனமில்லாமல் அடையாளத்தை சொல்லு ஆட்டு குட்டிய சொல்லு என்று திசை திருப்புவது தான் உங்களுக்கு வேலையா ?

சரியான கேள்வியை கேட்டு அதற்கு அறியா பதில் தந்த ததஜ விற்கு முறையான விளக்கத்தை நான் கொடுத்திருக்க, அதை திரை மறைவில் நின்று திசை திருப்பியது யார்?

//சரியான கேள்வியை கேட்டு அதற்கு அறியா பதில் தந்த ததஜ விற்கு முறையான விளக்கத்தை நான் கொடுத்திருக்க, அதை திரை மறைவில் நின்று திசை திருப்பியது யார்? //

அடடே சரியான கேள்வியா ?நீங்கள் கேட்ட கேள்விக்கு அதிரை ததஜ கொடுத்த பதில் அறியா பதிலா ???

ஆமாம் உங்களை பற்றி அறியா பதில் கொடுத்த ததஜ என்பதை இப்போது நானும் ஏற்று கொள்கிறேன்

முன்னாள் மாணவர்கள் என்று சொல்லி கிச்சு கிச்சு மூட்டிய போதே உங்களை பற்றி அறிந்து இருக்க வேண்டும் ஆனால் இப்போது தான் தெரிகிறது

கையை பிடிச்சி இழுத்தியா ? என்று வடிவேலுவையும்

நான் சொன்னேனா என்று சொன்ன ராசாவையும் நான் ஏற்கனவே பார்த்து விட்டேன் இதில் இன்னொன்று வேண்டாம்

ஞேஞே ஞே ஞே பரீட்சை நடக்கும் நேரத்தில் ததஜ தெருமுனை பிரச்சாரம் பண்ணுது ஞே ஞே ஞே என்று சொல்லிகிட்டே போங்க

பதில் என்ற பெயரில், திருடனாய் திரை மறைவில் நின்று கொண்டு, அநாகரிகமான வார்த்தையை பயன்படுத்தி, திசை திருப்பியது யார்?

பதில் என்ற பெயரில், திருடனாய் திரை மறைவில் நின்று கொண்டு, அநாகரிகமான வார்த்தையை பயன்படுத்தி, திசை திருப்பியது யார்?

கேள்வி கேட்போம் கேள்வி மட்டுமே கேட்போம் அதிலும் ததஜ என்றால் கூட இரண்டு மடக்கு தண்ணி குடிச்சி கேள்வி கேட்போம்

இடையில் யாரப்பா நீ இந்த அடி அடிக்கிறா யாருன்னு சொல்லி விட்டாவது அடி என்று சொல்ல வேண்டியது

பிறகு மீண்டும் ஞானோதயம் வந்து நான் கேட்ட கேள்விக்கு ததஜ அறியா பதிலை தந்தது என்று சொல்ல வேண்டியது

போங்க சார் போய் மூலையில் உட்காந்து ஏன் ததஜ என்ன பண்ணினாலும் போய் ஏதாவது பேசி இப்படி குட்டு பட்டு நிக்கிறோம் என்று யோசியுங்க முன்னாள் மாணவர்களே

நூர் முஹம்மது,

தவ்ஹீத் ஜமாஅத் தெருமுனை பிரச்சாரம் நடத்தினால் அது மாணவர்களை பதிக்கும் என்றீர்கள். மற்ற இயக்கங்கள் இவ்வாறு கூட்டங்கள் நடத்தும் போது ஏன் இவ்வாறு கேள்வி கேட்கவில்லை என்றோம், பதில் இல்லை. பள்ளிவாசல்களில் மௌலூது என்ற பெயரில் மைக் போட்டுக்கொண்டு கத்தும் போது நீங்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை என்றோம், பதில் இல்லை. திக்ரு என்ற பெயரில் வார வாரம் வெள்ளிக்கிழமைகளில் மைக் போட்டுக்கொண்டு கத்துகிறார்கள், அதை பற்றி நீங்கள் கேள்வி எழுப்பவில்லை.

தவ்ஹீத் ஜமாஅத் தெருமுனை பிரச்சாரம் நடத்திய அதே இடத்திலும் (தக்வா பள்ளி) மற்றும் மெயின் ரேட்டிலும் தெருமுனை பிரச்சாரம் செய்துள்ளார்கள். இதுவும் தேர்வு நேரத்தில் தான் நடந்துள்ளது. இந்த செய்தி அதிரையின் முக்கிய செய்தி தளங்களிலும் வந்துள்ளது. இது பற்றி நீங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை? நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் எதிர்க்கும் நடுநிலைவாதி என்று ஊருக்கே தெரியும்.

உங்களின் நடுநிலையே ஒரு பக்க சார்பாக இருக்கிறது. மற்ற இயக்கத்தினர் மைக் போட்டு தெருமுனை பிரச்சாரம் செய்தால் அது மாணவ மாணவியர்களின் காதில் கேட்காதோ?

தவ்ஹீத் பள்ளியில் அதிமுக வேட்பாளர் இதய தெய்வம் என்று சொல்லவிட்டார் என்று வேறு தளத்தில் விமர்சித்த உங்களின் வெத்து தைரியம் எங்களின் தளத்தில் அந்த வாதத்தை வைக்க உதவாதது ஏன்?

Adirai TNTJ

உங்கள் கேள்விக்கு நான் விளக்கம் கொடுத்திருக்க, இடையில் ஏன் ததஜ திருடர்கள் அநாகரிகமான வார்த்தைகளால் என்னை திட்டினார்கள்? இதுதான் ததஜ வின் நாகரிகமா? இப்படித்தான் ததஜ பாசறையில் பயிற்சி கொடுக்கின்றார்களா? அதனால்தான் இந்த ததஜ தளத்தில் யாரும் கருத்து கூறுவதில்லையா?

திட்டம் போட்டு திருடர்கள் கூட்டம் திட்டிக் கொண்டே இருக்குது.

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

ததஜ... திருந்துங்கள்!.

நூர் முஹம்மது அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நாங்கள் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள். நாம் படித்தவரை இந்த ஆக்கத்தில் உங்களை யாரும் திட்டியதாக தெரியவில்லை. நீங்கள் தான் திருடர்கள் என்று திட்டியுள்ளீர்கள். நீங்கள் செய்வது உங்களுக்கே தெரியவில்லையா?

எங்களின் இணையதளத்தில் நேர்மையை யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நாங்கள் நடந்து வருகிறோம். யாருமே உங்களை திட்டாது இருக்க, உங்களை பார்த்து கேள்வி கேட்டவர்களை திட்டுகிறார்கள் என்று சொல்லி, அவர்களை திருடர்கள் என்று திட்டி, உங்களை நீங்களே கேவலப்படுத்துகிறீர்கள்.

நைனா முகமது என்கின்ற பெயரில் எழுதிய முதல் கருத்தை படித்துப் பாருங்கள்.


//நைனா முகமது என்கின்ற பெயரில் எழுதிய முதல் கருத்தை படித்துப் பாருங்கள். //


//சகோ நூர்முகம்மது அழகாக ஒரு கேள்வி கேட்டு இருக்கோம் என்ற நினைப்பில் வந்து ஒரு கேள்வி கேட்டு இருக்கார் அவர் தான் எந்த அளவு கூமுட்டை தனமான கேள்வி இது என்பதை விளங்காமல் கேட்கிறார் என்றால் அதையும் மதித்து பதில் சொல்ல வேறு செய்து இருக்கிறீர்கள்

பள்ளிகூட பரீட்சை நேரத்தில் ஏன் தேர்தல் வைத்தீர்கள் என்று அடுத்தபடியாக தவ்ஹீத் ஜமாத்திடம் கேள்வி கேட்பார் அதற்கும் பதில் சொல்லி கொண்டு இருங்கள்//

கற்றவனும் கல்லாதவனும் சமமா என்று கேள்வி கேட்க தெரிந்த முன்னாள் மாணவர்கள் அவர்களே ,

சகோதரர் நூர்முகமது அவர்கள் அழகாக ஒரு கேள்வி கேட்டுள்ளார் ஆனால் அந்த கேள்வி கூமுட்டை தனமான கேள்வி என்பதற்கும்

இந்த நூர்முகம்மது என்னும் கூமுட்டை ஒரு கேள்வி கேட்டு இருக்கு என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளங்காமல் தான் இந்த குதி குதிச்சி திருடன் என்றெல்லாம் வாய விட்டாரா ?

ஐயோ பாவம் நான் வேறு இவருக்கு விளங்காமல் குதிக்கிறார் என்று தெரியாமல் பதில் சொல்லி கொண்டு இருக்கிறேன்

ஐயா முன்னாள் மாணவர்களே இப்போது தெளிவாக சொல்கிறேன் உங்களை நான் கூமுட்டை என்று சொல்ல வில்லை

உங்கள் கேள்வி மட்டுமே கூமுட்டைத்தனமான கேள்வி என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் தவறாக விளங்கி கொள்ளாதீர்கள்

என்னை யார் என இத்தளத்தில் அறிமுகப் படுத்திக் கொண்டு, நான் கேட்கும் கேள்வியை கூமுட்டைத்தனமான கேள்வி என சான்றிதழ் தரும் அறிவாளி நைனா முகமது அவர்களே, மறைவில் திருடனாய் நின்று திருட்டு தனமாக இத் ததஜ தளத்தில் கருத்துக் கூறும், உங்களைப் போன்றோர் கருத்தை ஒப்புதலுக்குப் பின் வெளிவிடும் ததஜ வின் இத்தளத்தின் தரத்தை பார்வையாளர்கள் அறிந்துதான் கருத்து ஏதும் கூறுவதில்லை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று ஒரு தருணத்தில் சொல்லிக்கொண்டு இருந்தீர்கள்.ஆனால் இப்பொழுது ஆ தி மு க விற்கு ஆதரவு தெரிவிக்கீர்கள் அம்மா ஜெயலலிதா அவர்கள் மோடி யின் மற்றொரு முகம் . நம் சமுதாயத்தில் எத்தனை அமைப்புகள் . தமிழ்நாட்டில் முஸ்லிம் மக்கள் மூன்று லட்சம் நபர்தான் இருப்பார்கள் .தேர்தல் நேரத்தில், நம் அமைப்புகள் அனைவரும் ஓன்று கூடி சமய நல்லினக்கவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கலாமே . இப்படி நாம் நம்மளையே குறை கூறுவதால் யாருக்கு நன்மை மீதி ஏழு லட்சம் நபருக்குத்தான்

This comment has been removed by a blog administrator.
This comment has been removed by a blog administrator.

ஒரே கருத்து முன்று முறை வந்துள்ளதால், இரண்டு கருத்துக்கள் நீக்கப்படுகிறது.

சகோ. ரியாஸ்

அஸ்ஸலாமு அலைக்கும்.

தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடாது, அதே நேரத்தில் சமுதாயத்திற்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்து, அதன் அடிப்படையில் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தரும் என்று தான் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. அரசியிலுக்கு அப்பாற்ப்பட்டது என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவிக்கவில்லை. அவ்வாறு அறிவித்து இருந்தால் அதற்கான ஆதாரத்தை தரவும்.

ஜெயலலிதாவே அல்லது கலைஞரே மோடியுடன் கூட்டணி சேர மாட்டார்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் எந்த உத்திரவாதத்தையும் தரவில்லை. இவர்களின் யார் வேண்டுமானாலும், மோடியுடன் கூட்டணி தங்களின் சுயலாபத்திற்க்காக கூட்டணி அமைப்பார்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் தெளிவாக சொல்லுகிறது. இவர்கள் இருவரும் பாஜகவுடன் முன்னர் கூட்டணி அமைத்தவர்கள் தான். திமுக தான் பாஜகவுடன் கூட்டணிக்கு நெருங்குவதை அன்றாடம் வரும் செய்திகள் நமக்கு சொல்லுகின்றன. இருவரும் பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடும் என்ற நிலையில், இட ஒதுக்கீட்டிற்க்காக ஒரு கட்சிக்கு ஆதரவு தருவது எந்த வகையில் தவறு?

எல்லா இயக்கங்களும் ஒன்று சேர்ந்து, ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்தால் என்ன என்று வினவுகிறீர்கள். இது நடக்காத ஒன்றாகும். தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கும் 24 அமைப்புகளும் ஒன்றாக ஒன்றுபட்டு இருப்பதாக சொல்லிக்கொண்டுயிருந்தார்கள், தேர்தல் வந்தவுடன் எல்லாம் தனித்தனியே தங்களின் சுயநலத்திற்க்காக ஓட்டு பொறுக்க சென்றுவிட்டார்கள். தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் சமுதாய கோரிக்கைக்காக தேர்தல் நிலைப்பாட்டை எடுக்கிறது. மற்றவர்கள் தங்களை எம்பி எம்எல்ஏ வாக ஆக்க சமுதாயத்தை ஏமாற்றுகிறார்கள்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.