Monday, March 17, 2014

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு - திருடும் நிருபர்களின் உளறல்களும் உண்மைகளும்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வீரியமிக்க போராட்டங்களின் மூலம் சமுதாயத்திற்கு தேவையான கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து, அதை பெற்று தரும் வரை இடைவிடாது போராடும் அமைப்பு. தவ்ஹீத் ஜமாஅத்தின் நேர்மையான செயல்பாடுகளால், தவ்ஹீத் ஜமாஅத்தை அழிக்க நினைப்பவர்கள் கூட தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். 

தவ்ஹீத் ஜமாஅத் என்பது யாருக்கும் விலை போகாத அமைப்பு. இதை அதன் எதிரிகள் கூட விளங்கி வைத்துள்ளார்கள். தவ்ஹீத் ஜமாஅத் விலைபோகாத காரணத்தினால் தான், இட ஒதுக்கீட்டில் துரோகம் செய்த அதிமுக அரசை கண்டித்து ஒரு பெரும் போராட்டத்தை நடத்தியது (அதிமுக கூட்டணயில் இருந்த மமக, தமுமுக அதிமுக அரசு துரோகம் செய்யவில்லை என்று சப்பை கட்டுகட்டி கேவலப்பட்டு போனது). கலைஞர் இட ஒதுக்கீடு வழங்கிய பின், திமுகவை ஆதரித்த தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டில் துரோகம் நடந்த போது, திமுக அரசிற்கு எதிராக போராட்டத்தை நடத்தியது (அப்போது திமுக கூட்டணியில் இருந்த தமுமுக, ரோஸ்டர் என்ற பெயரில் துரோகத்திற்கு சப்பை கட்டுகட்டி, பின்னர் கேவலப்பட்டு போனது). தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் கொடுக்கும் ஆதரவு தேர்தலுக்கு மட்டும் தான், தேர்தலில் ஆதரவு கொடுத்துவிட்டால் அது அடிமை சாசனம் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் கட்சி, சமுதாயத்திற்கு துரோகம் செய்தால், அதற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் பொங்கி எழும். 

தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம்களுக்கு நடைமுறையிலுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கையை வைத்து, அதற்காக தமிழகத்தின் நான்கு நகரங்களில் சிறை செல்லும் போராட்டத்தை நடத்தியது. இதில் திரண்ட கூட்டம் அரசாங்கத்தை கதி கலங்க வைத்தது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தந்தால் அதிமுக அரசிற்கு ஆதரவு என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. இந்த நிலையில் , கமிஷன் அமைத்து அதிகரித்து தருவது தான் பாதுகாப்பானது என்று சட்ட நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில், கமிஷன் அமைத்து அதிகரித்து தாருங்கள் என்ற கோரிக்கை தவ்ஹீத் ஜமாஅத் அரசிற்கு முன்வைத்தது, அதை அதிமுக அரசு ஏற்றுக்கொண்டு கமிஷன் அமைத்துள்ளது (இது குறித்து முழுமையாக இங்கே விளக்கப்பட்டுள்ளது). கமிஷன் இல்லாமல் இட ஒதுக்கீட்டை அதிகரித்தால் நீதிமன்றத்தில் தடை வாங்கும் சாத்தியமும் உள்ளது என்பது தெரிய வந்ததால் இவ்வாறு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைத்தது

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து நடுநிலைவாதிகள் என்ற பெயரில் இருக்கும் சில நடிகர்கள், உப்பு சப்பில்லாத கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அத்தனை விமர்சனங்களுக்கும் இங்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. 

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தகம் மற்றும் ஆக்கங்களில் இருந்து திருடி (காப்பி பேஸ்ட் செய்து). தங்களின் ஆக்கம் போல காட்டி புகழ் தேட திருடும் நிருபர்கள் சில விமர்சனங்களை செய்துள்ளார்கள். நடுநிலை வேடத்தில் இவர்கள் தமுமுகவின் ஏஜண்டுகளாக இவர்கள் உள்ளார்கள் என்பதை நாம் முன்னரே சொல்லியிருந்தோம். இதற்கு ஆதாரமாக இவர்களின் சமீபத்தில் நடந்த சம்பவம் சான்றாக உள்ளது. தமுமுகவின் ஜால்ரா எம்எல்ஏ ஒருவர் முத்துப்பேட்டைக்கு வந்தபோது, இட ஒதுக்கீடு குறித்து உளறிய காப்பி பேஸ்ட் நிருபர், பேட்டி எடுக்கிறேன் என்று சென்று தாங்கள் யார் என்று காட்டினார்கள்.

தமுமுகவின் அரசியல் கட்சியான ம.ம கட்சி, எதை மக்களிடம் சொல்லி அரசியல் கட்சி ஆரம்பித்தது, கடந்த தேர்தலில் அம்மாவை எப்படி புகழ்ந்து, தற்போது அய்யாவை எப்படி புகழ்கிறது என்பது குறித்தோ, தமுமுக சமுதாயத்திற்கு செய்த துரோகங்கள் குறித்தோ அல்லது முஸ்லிம்களை அழித்த விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் ம.ம கட்சி குறித்தோ எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்காத திருடும் நிருபர்கள். தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பொய்யான பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள். 

தமுமுகவை நாங்களும் எதிர்க்கிறோம் என்று காட்ட தமுமுக குறித்து புகழ்ந்து நாலு வரிகள் எழுதிவிட்டு, இவர்களை நடுநிலைவாதிகள் என்று காட்ட முற்பட்டு அதை செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டுள்ளார்கள். தமுமுகவின் தடுமாற்றங்கள் குறித்து இவர்கள் எதிர்ப்பது உண்மையென்றால், மோடியின் சகோதரியை அடுத்த பிரதமர் என்று சொன்ன தமுமுகவை எதிர்த்தார்களா? பிஜேபியின் இல. கணேசனுடன் கைபிடித்துக் கொண்டு தமுமுக ஜவாஹிருல்லாஹ் போராட்டம் நடத்திய போது எங்கே போனார்கள்?

நான் (ஜவாஹிருல்லாஹ்) பிஜேபிக்காரனுடன் கைகோர்த்து நின்றாலும் எந்த நடுநிலைவாதியும் என்னை கேள்வி கேட்க முடியாது (மாட்டார்கள்), விமர்சனம் செய்ய முடியாது (மாட்டார்கள்). பிஜேபிகாரனுடன் கைகோர்க்கும் ம.ம கட்சியின் மாமாவிற்கு முஸ்லிம்களின் ஓட்டு தேவையா? 
இராமேஸ்வரத்தை புனித தளமாக மாற்றி அங்கு பள்ளிவாசல் கூட கட்ட முடியாமல், பாங்கு ஒளி கூட ஒளிக்க முடியாமல் செய்ய வேண்டும் (என்பது கூட தெரியாமல்) கோரிக்கை வைத்த ஜவாஹிருல்லாவை எதிர்த்து எழுதினார்களா? பிஜேபி வானதி சீனிவாசனோடு பக்கத்தில் நின்று கேக் வேட்டிய தமுமுகவின் ஹாஜா கனியை எதிர்த்து எழுதியது உண்டா?

தமுமுகவின் எம்எல்ஏ அஸ்லம் பாஷா அவர்கள் பூஜை புணஸ்காரங்களுடன் ரிப்பன் வெட்டி திறப்பு விழா (இது வேறு பூஜை) செய்ததை இவர்கள் கண்டித்தார்களா?

அரசியல் சாக்கடையில் இணைவைப்பில் திளைக்கும் தமுமுக - மமகவினர்!
அதிரையின் முஹம்மது குட்டி ஆலிம்  பாவம், அவர் தமுமுகவில் சேர்ந்து இருந்தால், திருடும் நிருபர்கள் 'பூமி பூஜை செய்கிறார்' என்று விமர்சனம் செய்து இருக்க மாட்டார்கள்
மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி இஸ்லாத்தின் சட்டத்தை ஒழிக்க நினைக்கும் ஜவாஹிருல்லாவை இவர்கள் கண்டித்தது உண்டா? இதுவெல்லாம் இவர்கள் தமுமுகவின் ஏஜேண்ட்டுகள் என்பதற்கு ஆதாரம்.(இப்போதும் கூட கருணாநிதி தூக்கு தண்டனையை ஒழிப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார்).


அதிரையின் முஹம்மது குட்டி அவர்கள் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட போது, பூமி பூஜை செய்யும் முஹம்மது குட்டி என்று கட்டுரை போட்ட இவர்கள், தமுமுகவின் மூத்த தலைவரும் அம்மா ஜால்ரா புகழுமான ஜவாஹிருல்லாஹ் சந்தனம் தடவி அடிக்கல் நாட்டு விழா செய்த போது, பூமி பூஜை செய்யும் ஜவாஹிருல்லாஹ் என்று ஏன் எழுதவில்லை? இவர்கள் இதை செய்யாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று முஹம்மது குட்டியை தாக்கி எழுதினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். இரண்டு, இவர்கள் தமுமுகவின் ஏஜேண்ட்டுகள். கொள்கை அடிப்படையில் எதிர்க்க கூடியவர்களாக இருந்ததால், இவ்வாறு தவறு செய்யும் அனைவரையும் எதிர்க்க வேண்டும். மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பெண் குடம் என்ற பலமொழிக்கு ஒப்பாக உள்ளது இவர்களின் வேடம். இவர்களுக்கு கொள்கை கிடையாது என்பதற்கு இது ஒரு சான்று.

திருட்டு நிருபர் பதிப்பகம் என்ற பெயரில் உளறிய முதல் உளறல், 7 சதவீதமாக இட ஒதுக்கீட்டை உயர்த்தினால் தான் ஆதரவு என்று சொன்ன ததஜ, எப்படி கமிஷன் போட்டவுடன் அதிமுகவை ஆதரிக்கலாம் என்பதாகும். இதற்கான பதில் எளிமையானது கமிஷன் அமைத்து ஆய்வு செய்து, இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவது தான் பாதுகாப்பானது என்பதல் தவ்ஹீத் ஜமாஅத் இதையே கடைசி நேரத்தில் கோரிக்கையாக வைத்தது. இது பற்றி இங்கு விபரமாக விளக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டிற்காக தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்திய போது, காரைக்கால் சில்லரை ஒருவனின் வாந்தியை தங்களின் மேலே ஊற்றி, என்னா மனம் என்றும், தவ்ஹீத் ஜமாஅத் குளிர் காலத்தில் முதியவர்களை போராட்டத்திற்கு அழைத்து செல்லாமா? என்று உளரிய இந்த கயவர்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி என்ன அக்கரை? இட ஒதுக்கீட்டினால் எந்த பலனும் இல்லை என்று பச்சை பொய்யை சொன்ன கயவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன?

அடுத்து, திருட்டு நிருபர் பதிப்பகம் எடுத்து வைக்கும் வாதம் என்னவெனில், தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பவர்கள் இனி வரும் காலங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு வெளியேறப்போகிறர்களாம். இவ்வாறு திருட்டு நிருபர் கும்பலுக்கு வஹி வந்தாம். தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால் தூக்கி வீசப்படுவார்கள் என்பது உறுதி. ஊழல் பேர்வழிகள், பெண் பித்தர்கள் என பலர் தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு விரட்டப்பட்டுள்ளார்கள். பெண் பித்தர்களை வைத்து தர்பியா (நல்லலொழுக்க பயிற்சி?) நடத்தி வாங்கி கட்டியது யார்? கேடுகெட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தில் இடமில்லை. தவ்ஹீத் ஜமாஅத் தவறு செய்தால், அதை விமர்சிக்கலாம், தவறு செய்வதாக அவர்கள் எண்ணினால் கூட அதை விமர்சிக்கலாம். அதற்கு அழகிய முறையில் விளக்கம் தருவோம். தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது குரோதம் கொண்ட இந்த கும்பல் பொய்யான விமர்சனங்களுடன், தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் வெளியேறுவார்கள் என்று தங்களின் குரோதத்தை வெளிப்படுத்துகிறது. ஏன் இப்படிப்பட்ட குரோதம்? தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் யரோனும் பெண் பித்தர்கள் என தூக்கி விசப்பட்டால், அவர்களை வைத்து தர்பியா நடத்தும் பிளான் எதுவும் உண்டா? ஏன் இப்படி உளறி கேவலப்படுகிறீர்கள். இவ்வாறு தங்களின் வெறியை தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது காட்ட காரணம், இவர்கள் இட ஒதுக்கீடு குறித்து உளரி வாங்கி கட்டியதற்கும், பிஜேவின் நூல்களில் இருந்து திருடி வாங்கி கட்டியதற்கும் வாய்திறக்க முடியாமல் மவுனிகளாக போன இவர்கள், தங்களின் அறிப்பை இவ்வாறு காட்டுகிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வோரு நேரத்திலும் அழிந்துவிடும் என்று பலர் மனப்பால் குடிக்கிறார்கள். ஆனால், தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வின் அருளால் கணிக்க முடியாத அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.

அடுத்து, தமிழகத்தின் தவ்ஹீத் எழுச்சியை தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு பாதித்துவிடும் என்று இந்த கள்ள தவ்ஹீத் கும்பல் அஞ்சுகிறதாம். இன்றைக்கு தவ்ஹீத் கொள்கையில் அடி எடுத்து வைக்கும் ஒரு பாமரனுக்கு கூட தெரிந்த விஷயம், ஹஜ்க்கு சென்றவர்களின் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று எழுதுவது வழிகேடு என்று, இது கூட தெரியாத உங்களுக்கு தவ்ஹீத் எழுச்சியை பற்றி என்ன அக்கரை? மேடைகளில் பலகீனமான ஹதீஸ்களை அள்ளிவிடும் உங்களுக்கு தவ்ஹீத் எழுச்சியை பற்றி என்ன இவ்வளவு பரிவு? முஹம்மது குட்டியை எதிர்க்கும் நீங்கள் அதிரையில் தரீக்கா கொள்கையில் உள்ள கவிஞர் தாஹாவை வானளாவ புகழ்ந்து எழுதியது யாருக்கும் தெரியாதா? கவிஞர் எது செய்தாலும் உங்களுக்கு அது தவ்ஹீதோ? நீங்களே தவ்ஹீத்துக்கு எதிராக இருந்து கொண்டு தவ்ஹீத் எழுச்சியை பற்றி ஏன் பேசுகிறீர்கள்? தவ்ஹீத் வேடத்தில் தவ்ஹீதை அழிக்க உங்களின் திட்டமா? கன்னிபீவி தர்ஹாவிற்கு போஸ்ட் அடிக்கும் கும்பலுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் தவ்ஹீதை பற்றி பேச தகுதியற்றவர்கள். தவ்ஹீத் கொள்கையை அல்லாஹ் பாதுகாப்பான். அது வளர்ந்து கொண்டு தான் இருக்கும். நீங்கள் போய் எதாவது கவிஞருக்கு ஜால்ரா தட்டும் வேலையை பாருங்க.


தவ்ஹீதை யாருக்கும் அஞ்சாமல், தனது எழுத்து, பேச்சு, தியாகம், பிரயாணம் என கஷ்டத்தை பாராமல் உழைத்த சகோதரர் பிஜே அவர்களை புத்தகம் போட்டு பணக்காரர் லிஸ்டில் இடம்பெற்றுவிட்டார் என்று அவதூறு சொல்லி அதை நிரூபிக்கவும் வழியில்லாமல் தவறையும் ஒப்பு கொள்ளாமல் இருக்கும் தவ்ஹீத் நடிகர்களை அல்லாஹ்விடமே விட்டுவிடுகிறோம். இது போன்ற அவதூறுகளை பரப்பும் உங்களுக்கு அல்லாஹ் தண்டனை தரட்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.

அடுத்து, தவ்ஹீத்கான் என்ற பெயரில் ஒரு உளறல் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள் திருட்டு நிருபர்கள் பதிப்பகத்தினர். இவர்கள் தவ்ஹீதை கிண்டல் செய்ய தான் இந்த பெயரை வைத்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை. தவ்ஹீத் கான் என்ற பெயர் யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. தவ்ஹீத் வேடத்தில் இருக்கும் இந்த கும்பல் தவ்ஹீதை கிண்டல் செய்கிறார்கள். நாங்கள் வைத்த வாதத்திற்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதற்க்காக, தவ்ஹீதையே கிண்டல் செய்யும் அளவுக்கு சென்றுள்ளார்கள். தவ்ஹீதை கிண்டல் அடித்தவர்கள் தடம் தெரியாமல் போய் உள்ளார்கள், அந்த லிஸ்டில் இவர்களும் சேர்ந்துள்ளார்கள். 

இவர்கள் காப்பி அடித்த விஷயத்தை அவர்களின் இணையதளத்தில் ஒரு சகோதரர் கேள்வியாக முன்வைக்கிறார். அதற்கு இவர்கள் பதில் சொல்ல முடியாமல், நீங்கள் யார்? உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள், இல்லாவிடில் உங்களின் கேள்விகள் முன் அறிவிப்பு இன்றி காணாமல் போகும் என்று தங்களின் கையலாகாததனத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஒருவர் உங்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டியது தானே, அறிமுகம் செய்தால் தான் பதில் என்பது என்ன விதி? இந்த விதியை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக உங்கள் தளத்தில் எழுதுபவர்களிடம் கேட்டீர்களா? பிஜே அதிமுகவிடம் பணம் வாங்கி கொண்டு ஆதரிக்கிறார் என்று எழுதுபவர்களிடம் ஏன் அறிமுகம் கேட்கவில்லை. பதில் இல்லை என்று இப்படி உளரி மாட்டிக்கொள்கிறீர்கள். இப்படி கேட்ட நீங்கள் தவ்ஹீத்கான் என்பது யார்? ஒரு விஷயத்தை நீங்கள் பின்பற்றாமல் மற்றவர்களை பின்பற்ற சொல்லுவது என்ன வகை வியாதி?
 இவர்களின் திருட்டை அம்பலபபடுத்தினால், அறிமுகம் என்ற பெயரில் மிரட்டல்...! (
குறிப்பு: நாம் இதை சூட்டிக்காட்டிய பின்னர் நிருபர் கும்பல் இதை அவர்கள் தளத்தில் இருந்து நீக்கிவிட்டது)
தவ்ஹீத் ஜமாஅத்தையும் பிஜேவையும் திட்டும் போது அறிமுகம் எல்லாம் தேவையில்லை.....! (குறிப்பு: நாம் இதை சூட்டிக்காட்டிய பின்னர் நிருபர் கும்பல் இதை அவர்கள் தளத்தில் இருந்து நீக்கிவிட்டது)
ரசிக குஞ்சு என்றெல்லாம் தங்களின் அரிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் புகழ் போதையில் அலையும் திருடும் நிருபர்கள். பிஜே மீது இவர்கள் எந்த அளவுக்கு வெறி பிடித்து போய் உள்ளார்கள் என்பதற்கு இவர்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளே சான்று. 'ஸ்டார் பேச்சாளர்', 'அண்ணண்', 'தொண்டரடிப் பொடியாழ்வார்' என்று தங்களின் புகழ் கட்டிடம் இடிந்து போனதால் உளரியுள்ளார்கள்.அண்ணனின் கட்டுரை எப்படி கடந்த வாரம் உங்களுக்கு இனித்தது? பிஜே பித்தலாட்டம் செய்து விட்டார் என்றால், அவரின் நூல்களை திருடும் போது இதே கொள்கை வேண்டும் அல்லவா? இவர்களுக்கு புகழ் கிடைக்கிறது என்றால் பிஜேவின் மலம் கூட மணக்கும் .

இந்த அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைய காரணம் என்ன? இவர்கள் தங்களை பெரிய அறிஞர்களாக காட்டி, அங்கும் இங்கும் தகவல்களை காப்பி அடித்து பக்கத்தை நிரப்பி வருகிறார்கள், இது நமக்கு புதிதாக தெறிந்த விஷயமல்ல. இவர்கள் இதை பல வருடங்களாக செய்து கொண்டுள்ளார்கள், இவர்களை நாம் சீண்டவில்லை, அதற்கான தேவையும் வரவில்லை. சமீபத்தில், தவ்ஹீத் ஜமாஅத்தின் மீதும் சகோதரர் பிஜே மீதும் அவதூறுகளை அள்ளி விசி, இவர்களின் முகத்திரையை கிழித்து தொங்க போட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். அறிஞர்கள் பட்டலாம் என்று பில்டப் கொடுத்த இவர்கள், எங்களின் பதிலடிகளுக்கு ஒரு வார்த்தை கூட பதிலளிக்க முடியாமல் கேவலப்பட்டு போனார்கள். யாரோ எழுதியதை வைத்து புகழ் தேடி வந்த இவர்களின் புகழ் போதை மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போனது. தவ்ஹீத் என்ற இவர்களின் வேடத்தையும் நாம் அடையாளம் காட்டினோம். இவ்வளவு காலமாக இவர்கள் கொடுத்த பில்டப் எல்லாம் உடைந்து போனது. நாம் கொடுத்த அடி, இவர்களின் கட்டுரைகளிலும் அடிவாங்கியவர்கள் கருத்திலும் புலம்புவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். நமது தொழில் ரகசியத்தை வெளியே கொண்டு வந்துவிட்டார்களே, இனி எப்படி பக்கத்தை நிரப்புவது, எப்படி புகழ் தேடி அழைவது என்று பித்து பிடித்து அலைகிறார்கள். இன்னும் சில பேரிடிகள் வர இருக்கிறது, இன்ஷா அல்லாஹ். இவர்கள் அவதூறுகளை சொல்ல சொல்ல நாம் உண்மையை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்.

திருடும் நிருபர்கள் தவ்ஹீத்கான் என்ற பெயரில் எழுதிய கட்டுரையில் உளரியதில் ஒன்று, தவ்ஹீத் ஜமாஅத்திற்கு முதல்வரிடம் இருந்து வர வேண்டிய அழைப்பு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையால் நின்னு போச்சு என்பதாகும். இவ்வாறு ஒரு விஷயத்தை சொல்லுவதாக இருந்தால், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அழைப்பு வரவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்க வேண்டும், ஆதாரம் இல்லாமல் சொல்லப்படுபவை பொய் என்று இந்த கயவர்கள் உணர வேண்டும். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு முதல்வரை வந்து சந்திக்க சொல்லி போராட்டம் முடிந்த பின்னர் பல முறை அழைப்பு வந்தது, இதை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கவில்லை, எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள், பின்னர் சந்திக்கலாம் என்று பதில் தந்தது. இது தான் உண்மை. தவ்ஹீத் ஜமாஅத்தினால் இதை நிரூபிக்க முடியும், பொய் நிருபர்கள் இதற்கு தயாரா? ஆதாரமே இல்லாமல் குற்றம் சுமத்துவதால், அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நாங்கள் சொல்லுவது உண்மை என்று சொல்ல பொய் நிருபர்கள் தயாரா? தவ்ஹீத் ஜமாஅத்திற்கு முதல்வரை சந்திக்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை, கேட்டவுடன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தான் அப்பாய்மென்ட் கிடைக்கும் (ஜெயலலிதா மற்றும் கலைஞரிடம்). ஒரு முறை கலைஞர் அவர்கள் கொடுத்த நேரத்தில் சந்திக்கவில்லை என்பதற்காக, காத்துயிருக்காமல் திரும்பிய திராணியள்ள இயக்கம் தவ்ஹீத் ஜமாஅத் (பின்னர் ஸ்டாலினே தொடர்பு கொண்டு, மன்னிப்பு கேட்டு, மீண்டும் வர சொல்லி கேட்டுக்கொண்டார்). தவ்ஹீத் ஜமாஅத்திற்கு முதல்வரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், சமுதாயத்திற்கு பலன்கள் கிடைத்தால் அதை தான் தவ்ஹீத் ஜமாஅத் விரும்பும். விஸ்வரூப பிரச்சினையில் 24 இயக்கங்கள், அரசு, தவ்ஹீத் ஜமாஅத், கமல்ஹாசன் என நான்கு பிரிவினர் இருந்த போதும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீட்க சொல்லிய நேரத்தில், தவ்ஹீத் ஜமாஅத் தனியாக இருக்காமல், 24 அமைப்பினரிடம் அந்த பொறுப்பை கொடுத்து, தன்னை முன்னிலைப்படுத்தாமல் நடந்ததை, தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான அமைப்புகள் கூட பாராட்டினார்கள்.

அடுத்தாக, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு யார் கடிதம் எழுதினார்கள் என்பதை காட்டி, ஒன்றும் நடக்கவில்லை என்று காட்ட முற்படுகிறார்கள். பார்தீர்களா முதல்வர் கடிதம் எழுதவில்லை யாரோ கடிதம் எழுதியுள்ளார்கள் என்று கொக்கரிக்கிறார்கள். இவர்களுக்கு எந்த அடிப்படை அறிவும் இல்லை என்பதற்கு இந்த கேள்வி சான்று. எப்படியாவது இவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று காட்ட வேண்டும் என்ற இவர்களின் இந்த வெறி இப்படி உளற செய்கிறது. முதல்வர் என்பவர் எல்லா வேலைகளையும் செய்ய மாட்டார். முதல்வரின் கீழ் பல்வேறு துறைகளும் அதற்குகென்று பொருப்பாளர்களும் இருப்பார்கள். ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்கிற போது, அந்த துறையினருக்கு முதல்வர் உத்திவிடுவர், அதன்படி அந்த வேலை உத்திரவிடப்பட்ட துறையினர் செய்வார்கள். இது தான் இந்த இட ஒதுக்கீடு விஷயத்திலும் நடந்துள்ளது. தமிழக அரசின் உத்திரவின் பெயரில் தான் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் முதன்மைச் செயலர் கே.அருள்மொழி என்பவர் கடிதம் எழுதியுள்ளார் என்பது உள்ளங்கை நொல்லிக்கனி. இதற்கு ஆதாரம் வேறு எங்கேயும் தேட தேவையில்லை காப்பி பேஸ்ட் நிருபர்கள் காட்டியுள்ள பத்திரிக்கை செய்தியின் முதல் பத்தியில் 'தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது' என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது (கீழே கோடிட்டு காட்டப்பட்டுள்ள வரிகளை பாருங்கள்). என்ன செய்தி வந்துள்ளது என்று கூட சரியாக படிக்காமல், அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார்கள். யாரும் உத்தரவு இடாமல், கே. அருள்மொழி கடிதம் எழுத அவருக்கு என்ன தேவை வந்தது? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள். மேலும் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் முதல்வர் பொதுக்கூட்டங்களில் எல்லாம் இந்த இடஒதுக்கீடு பற்றி எடுத்து சொல்லி ஆணையம் அமைத்து இருக்கிறேன் என்று சொல்லிவருகிறார் இது அருள்மொழி வார்த்தையா இல்லை முதல்வரின் உத்தரவா என்று இப்போதாவது விளங்குமா ?

அவதூறு மன்னர்கள் காட்டிய ஆதாரம், அவர்களுக்கே எதிராக போன சேதாரம் 
அடுத்து, பத்திரிக்கை செய்தியில் தவ்ஹீத் ஜமாஅத் என்பதற்கு பதிலாக ஜவ்ஹீத் ஜமாஅத் என்று வந்ததை காட்டி. தங்களின் அறிப்பை தீர்த்துகொள்ளுகிறார்கள். மேலும், இட ஒதுக்கீடு டாஸ்மார்க்குக்கு பொருந்துமா என்று கேட்டு தங்களின் புத்தியை காட்டியுள்ளார்கள். இட ஒதுக்கீடு என்பதை பற்றியெல்லாம் இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை, எந்தவிதமான சமுதாய அக்கறையும் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தை குற்றம் சொல்ல வேண்டும், அதற்கு எதையும் செய்வார்கள். இட ஒதுக்கீடு என்பது எல்லா அரசு துறைகளிலும் தான் தருவார்கள், மார்கத்தில் தடுக்கப்பட்ட வங்கி வேலை, டாஸ்மார்க் போன்றவற்றில் இருந்து மார்க்கப்பற்றுள்ளவர் ஒதுங்கி கொள்வார்கள். டாஸ்மார்க்கை குறிவைப்பவர்களுக்கு (அதிக போட்டி இருக்காது என்பதால் - முஸ்லிம்கள் புறக்கணிக்கும் காரணத்தினால்) அது எளிதில் கிடைக்கும்.

இந்த ஆணையம் என்பது ஒன்னுமில்லையாம், காப்பி பேஸ்டர்கள் சொல்லுகிறார்கள். 2006 ஆம் ஆண்டு இதே போன்று ஒரு ஆணையத்தை தான் ஜெயலலிதா அமைத்தார், அதை அப்போது டாய்லட் பேப்பர் என்றார்கள். பின்னர், கலைஞர் ஆட்சிக்கு வந்த போது, இதே போன்று ஒரு கமிஷன் அமைத்து, ஆய்வு செய்து தான் இட ஒதுக்கீட்டை தந்தார். இது அரசு தரப்பினர் இடையே நடந்த கடித பரிமாற்றமாம். அப்படியென்றால், 'தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது' என்று ஏன் நீங்கள் காட்டிய ஆதரத்தில் உள்ளது? சம்பந்தம் இல்லாமல் அரசு துறையினர் ஏன் கடிதம் எழுதிகொள்ள வேண்டும்? (உங்களை மாதிரி புகழ் தேடு திட்டமோ?). இவர்களின் பொய்யை அம்பலப்படுத்தும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா அவர்களே, நான் இந்த ஆணையத்திற்கு உத்திரவுவிட்டேன் என்று சொல்லி, இந்த நிருப பொய்யர்கள் மீது கரியை பூசியுள்ளார். அதிகாரத்தில் உள்ள முதல்வர் சொல்லுவதை கூட, தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். முதல்வர் நான் இதற்கு உத்திரவுவிட்டுள்ளேன் என்பது நடுநிலையான மக்களுக்கு போதுமான சான்று. இதற்கான ஆதாரம் கீழ்காணும் வீடியோவில் உள்ளது.


இறுதியாக, ஒன்றை சொல்லிக்கொள்கிறோம், ததஜவின் எழுச்சி மிக்க போராட்டங்களால் தான் 3.5 சதவீத இட ஒதுக்கீட கிடைத்தது என்பதை திருடும் நிருபர்களே ஒத்துக்கொண்டுள்ளார்கள். இட ஒதுக்கீடு கிடைத்த நேரத்தில் தமுமுக, திமுக கூட்டணியில் இருந்தது. தமுமுகவை கண்டு கொள்ளாத திமுக, தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகி, இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு எவ்வாறு தர முடியம் என்று விளக்கம் கேட்டு, தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிகாட்டுதல் படி தான் 3.5 சதவீத இட ஒதுக்கீடே கிடைத்தது. அதே போல, தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமிக்க போராட்டங்களால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும், இன்ஷா அல்லாஹ். அப்போது இந்த பொய்யர்களின் குரோதமும் வெறியும் இன்னும் உச்சிக்கு போகும்.

தோல்வியை ஒப்புக்கொள்ளும் விமர்சகர்கள்:

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாட்டை தமுமுகவின் மறைமுக தொண்டர்களும், தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழிப்பது மட்டும் தான் எங்களின் கொள்கை என்பவர்களும், நடுநிலையாளர்கள் என்ற போர்வையில் உள்ள அயோக்கியர்களும் விமர்சனம் செய்கிறார்கள். விமர்சனம் செய்பவர்கள் நேருக்கு நேராக நமது இணையதளத்தில் வந்து தங்களின் விமர்சன கனைகளை தொடுக்கலாம். எங்களை பிரித்து மேயலாம். இவர்கள் யாரும் இதை செய்ய முன்வருவது இல்லை. இதை இவர்கள் செய்யாமல் வெருண்டு ஒட காரணம், இவர்கள் பொய்யர்கள் என்று இவர்களே ஒத்துக்கொண்டுள்ளார்கள். நமது தளத்தில் யார் வந்தாலும் அவர்களின் எந்த கருத்தும் தடையின்றி வெளியிடப்பட்டு, அதற்கான பதில் தரப்படும். 

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான தளங்களில் நாம் எதையும் எழுதலாம் என்று வரம்பு மீறுபவர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். வரம்பு மீறுபவர்களின் கருத்துக்கள் இங்கே காட்டப்பட்டு, பதிலடி தரப்படும், இன்ஷா அல்லாஹ்.

பொய் ஒரு போதும் வெல்லாது:

நிருபர் கும்பல் நமது அடுக்கான வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் பதுங்குவதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான். நாம் சொல்லுவது உண்மை, அவர்கள் சொல்லுவது பொய்கள், அவதூறுகள்.


பொய்யார்கள் தோற்று ஓடுவார்கள் என்பதை அழகாக எடுத்துரைக்கும் திருக்குர்ஆன் வசனம்:

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. 
(அல்குர்ஆன் 21:18)


குறிப்பு: 
இட ஒதுக்கீடு குறித்து உளரித்தள்ளிய நிருபர் கும்பலை சார்ந்த ஒரு பெரியவர் தமுமுகவின் ஏஜேண்ட் என்று நாம் குறிப்பிட்டு இருந்தோம். அதை அவர் ஏற்றுக்கொண்டு, தன்னை தமுமுகவின் அனுதாபி என்பதை ஒத்துக்கொண்டுள்ளார். நிருபர் கும்பலில் உள்ள பலர் தமுமுகவின் ஆதரவாளர்கள், சிலர் பாக்கர் கட்சியின் அனுதாபிகள்.

8 கருத்துரைகள் :

ததஜ இந்த முறை அதிமுகவுக்கு ஆதரவளிக்கிறது என்ற உடன், நிறைய இணையதள ஜோசியர்கள் உருவாகி விட்டார்கள் , தேர்தல் முடிந்தவுடன் ஜெயலலிதா பிஜேபியை ஆதரிப்பார் என்று சொல்வதற்கு.......ஜெயை பற்றி ஆரூடம் கூறத்துணிந்த இந்த ஜோசியர்களால், மோடியின் திடீர் நண்பரைப்பற்றிய எந்த ஆரூடமும் சொல்ல முடியவில்லை என்பதுதான் விந்தை....

இதற்கு பதில் தாருங்கள். இது திருடும் நிருபர்கள் தளத்தில் வந்த கருத்து

//adirai ameen சொன்னது…

சிறுவன் கைர் முகம்மதின் உயிரோடு பிணைந்திருந்த 'உணர்வு', இன்று சிலருக்கு ஒரு 'பத்திரிக்கையின் பெயர்' என்ற அளவில் மழுங்கிப் போய்விட்டது நம் சமுதாயத்தின் சாபக்கேடே! தலைவன் எதை வாந்தியெடுத்தாலும் அதை அப்படியே உண்ணுவேன் என சொரணையற்ற ஒரு கூட்டம் உருவாக ஒரு காலத்தில் நானும் என் நண்பர்களும் ஒரு காரணி என்பதால் ஏக இறைவனின் மன்னிப்புக்காக மன்றாடுகிறோம்.

இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களின் வரலாற்று நிரூபங்கள் படித்தோம் ரசித்தோம் ரகமல்ல மாறாக உதவட்டும் இருமுனை சுதந்திரத்திற்கு, ஒன்று மீட்கப்பட வேண்டிய உள்நாட்டு வாழ்வுரிமைகள் இன்னொன்று இயக்க மயக்க விடுதலை.

சமுதாயத்தின் இரத்த சுத்திகரிப்பு வேலையை தங்களின் எழுத்தில் இன்னும் வர இருக்கும் இஸ்லாமிய வரலாற்று நாயகர்கள் நிச்சயம் செய்வார்கள் இன்ஷா அல்லாஹ். //

அன்வர்

நீங்கள் குறிப்பிடும் கருத்துக்கு சொந்தக்காரை பற்றி எல்லாருக்கும் நன்றாக தெரியும். பாக்கர் என்ற மன்மதனை தவ்ஹீத் ஜமாஅத் விரட்டி அடித்த போது, பிஜேவிற்கும் பாக்கருக்கும் கடிதம் எழுதி, நடுநிலையானவர் போல நடித்து கேவலப்பட்டு போனவர் தான் இவர். பாக்கர் என்ற தனிமனிதன் மீது இவருக்கு இருந்த பக்தி, பாக்கர் ஈனச்செயலில் ஈடுப்பட்டபோதும், இவருக்கு அது அறுவறுப்பாக தெரியவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் பாக்கரின் ஈனச்செயல் காரணமாக, பாக்கரை தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு நீக்கிய போது, பாக்கரின் கைக்குலியாக இருந்த இந்த அற்புத மனிதர், நடுநிலையாளர் போல பிஜேவிற்கும் பாக்கருக்கும் கடிதம் எழுதி, பாக்கருக்கு வக்காலத்து வாங்க பார்த்தார், இதை சரியாக கணித்த பிஜே,
'அல்லாஹ்விற்க்காக உன்னை வெறுக்கிறோன்' என்று இவரின் முஞ்சில் கறி புசி அனுப்பிவிட்டார். அன்றிலிருந்து பாக்கர் இயக்கம் முக்கிய புள்ளியாக (மறைமுக) செயல்பட்டு வருகிறார். பாக்கரின் மன்மத இயக்கத்தை அதிரையில் வளர்க்க இவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்மல்ல. இன்று வரை பாக்கரின் பிரியராக தான் இவர் உள்ளார். தவ்ஹீத் ஜமாஅத்தில் இவர் எதே ஒரு நோக்கத்திற்க்காக இருந்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. இவர் இருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திடம் இருந்த பல கொள்கைகளை இப்போது எதிர்க்கிறார்.

அன்று தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உழைத்த இவர், இன்று அப்படியே தலைகீழகாக பேசுவதால், இவரை யாரும் கண்டுகொள்வது இல்லை.

அவ்வபோது எதாவது தளங்களில் வந்து எதையாவது எழுதுவார், யாராவது இவரின் முகத்திரையை கிழித்து எழுதினால், அத்துடன் ஓடிவிடுவார்.

திருடும் நிருபர்கள் நம்மீது உள்ள வெறியில் இவரை காப்பாற்றி விடுவார்கள் என்பதினால் அங்கு இவ்வாறு எழுதியுள்ளார். இந்த மாகானின் உறவினர்கள் கூட இந்த பாக்கரின் வலது கரத்தின் பேச்சை கேட்பது இல்லை.

பாக்கர் ஒரு பெண்ணை தனியாக தள்ளிக்கிட்டு போவது தப்பா? என்று கேட்கும் போது கூட இந்த கருத்து புயல் அதை சரி கண்டது.

இவர்களின் கொள்கையே கேடு கேட்டதுகள், பெண் பெருக்கிகள், ஊழல் பொருச்சாலிகள் போன்றவர்களை சேர்த்து தவ்ஹீத் (?) இயக்கம் நடத்துவது தான்.

இவர்களின் இயக்கத்தில் சேர பாக்கரின் தன்மைகள் இருக்க வேண்டும். பாக்கரின் தகுதியை கீழ்காணும் வீடியோவில் பார்க்கவும்.

http://thowheedvideo.com/pothuvanavai/Poiyan-Tj-Lilai-Sample/

இந்த கருத்து புயலில் தலைவன் பாக்கர் எடுத்த காம வாந்தியை உண்டது யார் என்பதை தேவைப்பட்டால் பின்னால் ஆதாரத்துடன் விளக்கம் தருகிறோம்.

//Adirai Ahmad
March 16, 2014 at 10:10 AM

TNTJ எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ADMK கட்சிக்கு ஆதரவு கொடுக்க, அதன் வேட்பாளர் இந்த அமைப்பின் 'தவ்ஹீத்' பள்ளியில் வைத்துப் பேட்டி கொடுக்கிறார். 'இதய தெய்வம்' என்பது போன்ற வாக்குகளைப் பயன்படுத்துகின்றார் இந்தத் தவ்ஹீத் பள்ளியில்!

இதற்கிடையில், DMK கட்சியைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவருடன் நடுத்தெருவில் தனியமர்வு! இதுதான் உங்கள் அரசியல் கொள்கையா?

என்னப்பா ஒன்னும் புரியலையே!//

த த ஜ அதிமுக கூட்டணியில் இருப்பதால் திமுக சேர்மன் மீது இரண்டு பொய் வழக்கு போடவேண்டும் என்று அதிரை அகமது என்பவர் என்னுகிறார் போல இதற்கு முன் சேர்மன் மீது பொய் வழக்கு போட்டவர் இப்போது அகமதுக்கு ரொம்ப நேருக்கம்

யாரையும் சாடி பேசமாட்டோம் என்று மேடைக்கு மேடை முழுங்களும் தாருத் தவ்ஹீத் அகமது போன்றவர்கள் ஒருவர் மீது பொய் வழக்கு போட்டவரை கண்டிக்காமல் பக்கத்தில் வைத்திருப்பதன் நோக்கம் எதிரிக்கு எதிரி நன்பன் என்பதற்காகவா?

முன்னுக்குப் பின் முரணாகத் தென்பட்டதால், ஏற்பட்ட என் கேள்வி. அதற்கு இப்படிப்பட்ட நாகரிகமற்ற விளக்கம்? போதுமப்பா உங்கள் புண் மொழிகள்.

நமக்கு மத்தியில் ஏன் இந்த பிரச்சனைகள்.முதலில் நாம் இதை களைவோம்.சகோதரத்தை ஏற்படுத்துவோம்.

நமக்கு மத்தியில் ஏன் இந்த பிரச்சனைகள்.முதலில் நாம் இதை களைவோம்.சகோதரத்தை ஏற்படுத்துவோம்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.