Sunday, December 26, 2010

ஹஜ் பெருநாள் உரை - 2010

அதிரையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையில் நடைபெற்ற சொற்பொழிவு.

உரை: மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி

Tuesday, December 21, 2010

ஒடுக்கத்து புதன் உண்டா?

இஸ்லாமிய திருமணம் - தொடர் 3

முந்தய தொடர்கள்:

தொடர் 3:


திருமண ஒப்பந்தம்:

இஸ்லாம் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கருதுகின்றது.

அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர்.
(அல்குர்ஆன் 4:21)

திருமணம் என்பது சடங்குகளின் தொகுப்பன்று; அது வாழ்க்கை ஒப்பந்தம் என்று இந்த வசனம் தெளிவாக்குகின்றது.

ஒப்பந்தம் என்பது அதில் சம்மந்தப்பட்ட இரு சாராருக்கும் புரியக் கூடிய மொழியில் அமைந்திருக்க வேண்டும். புரியாத பாஷையில் எவரும் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள்.

நான் என் மகளை இவ்வளவு மஹருக்கு அவரது பரிபூரண சம்மதத்துடன் உங்களுக்கு மணமுடித்து தருகின்றேன் என்று பெண்ணின் தந்தை (அல்லது அவளது மற்ற பொறுப்பாளர்) கூற, மணமகன் அதை ஏற்றுக் கொள்வதாகக் கூறியவுடன் ஒப்பந்தம் முடிந்து விடும்.

அல்லது உங்கள் மகளை அவளது பூரண சம்மதத்துடன் இவ்வளவு மஹருக்கு மணமுடித்துத் தருகிறீர்களா? என்று மணமகன் கேட்க, பெண்ணின் பொறுப்பாளர் ஏற்றுக் கொண்டாலும் ஒப்பந்தம் முடிந்து விடும்.

இதற்கென்று குறிப்பிட்ட எந்த வாசகமும் கிடையாது. அரபு மொழியில் தான் அந்த வாசகம் அமைய வேண்டும் என்பதும் கிடையாது.

(குத்பா) திருமண உரை:

திருமணத்தின் போது குத்பா எனும் உரை நிகழ்த்தும் வழக்கம் பரவலாக உள்ளது. ஆனால் திருமணத்தின் போது குத்பா எனும் உரை நிகழ்த்த வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்துவதற்காக எந்தத் திருமணத்திற்கும் சென்றது கிடையாது. அழைக்கப்பட்டதும் கிடையாது.

தமது மகளின் திருமணத்தின் போது கூட அவர்கள் உரை நிகழ்த்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆயினும் மக்கள் கூடும் இடங்களில் தேவை எனக் கருதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர். இந்தப் பொதுவான அனுமதியின் அடிப்படையில் திருமண உரையினால் மக்கள் பயன் பெறுவார்கள் என்று கருதினால் அதைத் தடுக்க முடியாது. ஆனால் குத்பா எனும் உரை ஏதும் நிகழ்த்தப்படாவிட்டால் திருமணத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.

சாட்சிகள்:

திருமணத்தின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. எனினும் அவையனைத்தும் பலவீனமானவையாக உள்ளன. ஆயினும் கொடுக்கல் வாங்கலின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு குர்ஆன் கூறுகிறது.

கடன் கொடுக்கும் போது இரண்டு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் 2:282 வது வசனம் கூறுகிறது.

அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் 4:6 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

மரண சாசனம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இறைவன் கூறுகிறான். (திருக்குர்ஆன் 5:106)

இதை அடிப்படையாகக் கொண்டு திருமணத்திற்கும் சாட்சிகள் அவசியம் என்பதை அறியலாம்.

திருமணம் செய்த பின் ஒரு தரப்பினர் பிறகு மறுத்து விடக் கூடும் என்பதாலும், விபச்சாரத்தில் ஈடுபடுவோரும் மாட்டிக் கொள் ளும் போது தாங்கள் கணவன் மனைவியர் என்று கூறித் தப்பித்து விடாமல் இருப்பதற்காகவும் ஏனைய கொடுக்கல் வாங்கலின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்வது போலவே திருமணத்திலும் குறைந்தது இரு சாட்சிகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.

நாளை விவகாரம் ஏற்பட்டால் உள்ளதை உள்ளபடி சொல்வதற்கே சாட்சிகள் தேவைப்படுகின்றனர். சடங்குக்காக சாட்சிகள் ஏற்படுத்தப் படவில்லை.

உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டுமானால் திருமணத்தின் முக்கியமான பேச்சுவார்த்தைகள், கொடுக்கல் வாங்கல் அனைத்தும் அவர் பார்வையில் நடக்க வேண்டும். அவர் தான் சாட்சியாக இருக்கத் தக்கவர்.

மணப் பெண்ணின் சம்மதம் பெறப்பட்டதும், மஹர் கொடுக்கப்பட்டதும், எவ்வளவு மஹர் என்பதும் அவருக்குத் தெரிய வேண்டும். இந்த விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் திருமணத்திற்கு வந்திருக்கும் இரண்டு நபர்களை சாட்சிகளாக ஆக்குவது அர்த்தமற்றதாகும்.

எளிமையான திருமணம்:

திருமணங்கள் மிகவும் குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது. பிறர் மெச்ச வேண்டுமென்ப தற்காகவும், தம்முடைய செல்வச் செழிப்பு உலகுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் திருமணங்கள் நடத்தப்படக் கூடாது.

வீண் விரயத்தையும், பிறர் மெச்ச வேண்டும் என்று காரியங் கள் செய்வதையும் திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கின்றது. வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.

(திருக்குர்ஆன் 6:141)

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

(திருக்குர்ஆன் 7:31)

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

(திருக்குர்ஆன் 17:26, 27)

குறிப்பாக திருமணங்கள் குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388

திருமண விருந்து:

திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும்.

பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 டீ லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)
நூல்: புகாரி 5172

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த பெரிய வலீமா விருந்தில் ஒரு ஆட்டை வலீமாவாகக் கொடுத்தார்கள். இதுதான் அவர்கள் வழங்கிய பெரிய விருந்தாகும். எனவே விருந்தின் பெயரால் செய்யப்படும் ஆடம்பரங்களையும் தவிர்க்க வேண்டும்.

வலீமா விருந்துக்கு அழைக்கும் போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு காட்டக் கூடாது.

செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5177

வலீமா விருந்துக்கு ஒருவர் அழைக்கப்பட்டால் அதை மறுக்கக் கூடாது. மேற்கண்ட ஹதீஸின் தொடரில் யார் வலீமா விருந்தை ஏற்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

விருந்தை ஏற்பது அவசியமென்றாலும் விருந்து நடக்கும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடந்தால், அல்லது தீய நடத்தை உடையவரால் விருந்து வழங்கப்பட்டால் அதைத் தவிர்க்கலாம். தவிர்க்க வேண்டும்.

நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப் படத்தைக் கண்ட போது திரும்பி சென்று விட்டார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: நஸயீ 5256

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழியைப் பின்பற்றி நபித்தோழர்களும் இந்த விஷயத்தில் கடுமையான போக்கை மேற்கொண்டுள்ளனர்.

அபூமஸ்வூத்(ரலி) அவர்களை ஒருவர் விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்கள் வீட்டில் உருவச் சிலைகள் உள்ளனவா? எனக் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்படியானால் அதை உடைத்து எறியும் வரை வர மாட்டேன் என்று கூறி விட்டு, உடைத்து எறிந்த பின்னர் தான் சென்றார்கள்.

நூல்: பைஹகீ பாகம்:7, பக்கம் : 268

என் தந்தை காலத்தில் ஓர் விருந்துக்கு ஏற்பாடு செய்தோம். என் தந்தை மக்களை அழைத்தார். அழைக்கப் பட்டவர்களில் அபூ அய்யூப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். வீட்டிற்கு வந்த போது பட்டுத் துணியால் சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டதைக் கண்டார்கள். என்னைக் கண்டதும் அப்துல்லாஹ்வே! நீங்கள் சுவர்களுக்கு பட்டால் அலங்காரம் செய்கிறீர்களா? எனக் கேட்டார்கள். பெண்கள் எங்களை மிகைத்து விட்டனர் என்று என் தந்தை கூறினார். அதற்கு அபூ அய்யூப் (ரலி) அவர்கள் உம்மை பெண்கள் மிஞ்சி விடுவார்கள் என்று நான் அஞ்சவில்லை என்றார்கள். மேலும் உங்கள் உணவைச் சாப்பிடவும் மாட்டேன். உங்கள் வீட்டிற்குள் வரவும் மாட்டேன் என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றார்கள்.

தப்ரானியின் கபீர் பாகம்: 4, பக்கம்: 118

மிகச் சாதாரணமாக நாம் கருதுகின்ற இந்தக் காரணத்திற்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் விருந்தைப் புறக்கணித்துள்ளனர்.

இதை விட பல நூறு மடங்கு ஆடம்பரங்களும், அனாச்சாரங்களும், வீண் விரயங்களும் மலிந்து காணப்படும் விருந்துகளில் எவ்வித உறுத்தலும் இல்லாமல் நாம் கலந்து கொள்கிறோம். இது சரி தானா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

நாள் நட்சத்திரம் இல்லை:

திருமணத்தை நடத்துவதற்கு நல்ல நாள், கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. அவரவரின் விதிப்படி நடக்க வேண்டியவை யாவும் நடக்கும் என்ற நம்பிக்கையுடையவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் நல்லது ஏற்படும் என்றோ, குறிப்பிட்ட இன்னொரு நாளில் கெட்டது ஏற்படும் என்றோ நம்ப முடியாது.

வளர்பிறையில் திருமணம் நடத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்றோ, தேய் பிறையில் நடத்தினால் தேய்ந்து விடும் என்றோ கிடையாது. இப்படியெல்லாம் நம்புவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

வளர்பிறை பார்த்து, நல்ல நாள் பார்த்து செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் முறிந்து விடுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இதிலிருந்தும் இது மூட நம்பிக்கை என்பதை உணரலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த அரபியர் ஷவ்வால் மாதத்தை பீடை மாதம் என நம்பி அந்த மாதத்தில் நல்ல நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள்.

இதுபற்றி ஆயிஷா (ரலி) குறிப்பிடும் போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்திலேயே திருமணம் செய்தார்கள். ஷவ்வால் மாதத்திலேயே உறவும் கொண்டார்கள். அவர்களின் மனைவியரில் என்னை விட அவர் களுக்கு விருப்பமானவர் எவர் இருந்தார்? என்று குறிப்பிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 2551, நஸயீ 3184

எனவே திருமணத்தை எந்த மாதத்திலும் நடத்தலாம். எந்த நாளிலும் நடத்திலாம். எந்த நேரத்திலும் நடத்தலாம். குறிப்பிட்ட நாளையோ, நேரத்தையோ கெட்டது என்று ஒதுக்குவது கடுமையான குற்றமாகும்.

ஆதமுடைய மகன் காலத்தைக் குறை கூறுகிறான். காலத்தைக் குறை கூறுபவன் என்னையே குறை கூறுகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என் கையில் தான் அதிகாரம் இருக்கிறது. இரவு பகலை நான் தான் மாறி மாறி வரச் செய்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4826, 6181, 7491

எனவே ஒரு நாளை கெட்ட நாள் என்று கூறினால், நம்பினால் அல்லாஹ்வையே கெட்டவன் எனக் கூறிய, நம்பிய குற்றம் நம்மைச் சேரும்.

திருமண துஆ:

நமது நாட்டில் வழக்கமாக திருமணத்தின் போது ஒரு துஆ ஓதி வருகின்றனர். அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா..... என்று ஓதப்படும் அந்த துஆ நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலோ ஸஹாபாக்கள் காலத்திலோ, தாபியீன்கள் காலத்திலோ, நான்கு இமாம்களின் காலத்திலோ நடைமுறையில் இருந்ததில்லை. தமிழகத்தைச் சேர்ந்த சிலரது கண்டுபிடிப்பாகும் இது.

ஆதம்-ஹவ்வா போல் வாழ்க! அய்யூப்-ரஹிமா போல் வாழ்க! என்ற கருத்தில் பல நபிமார்களின் இல்லறம் போல் வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக இந்த துஆ அமைந்துள்ளது.

அந்த நபிமார்களும் அவர்களின் மனைவியரும் எப்படி இல்லறம் நடத்தினார்கள் என்ற விபரமோ, அவர்களின் மனைவியர் அவர்களுக்கு எந்த அளவு கட்டுப்பட்டு நடந்தனர் என்ற விபரமோ நமக்குத் தெரியாது. அவர்களின் இல்லறம் எப்படி இருந்தது என்பது தெரியாமல் அது போன்ற வாழ்க்கையைக் கேட்பது அர்த்தமற்றதாகும்.

உனக்கு அறிவில்லாத விஷயங்களை நீ பின்பற்ற வேண்டாம் என்று அல்குர்ஆன் கூறுகிறது.

(அல்குர்ஆன் 7:38)

எனவே இது போன்ற துஆக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டாக வேறு துஆக்களை ஓதுவதற்கும் ஆதாரம் இல்லை.

மணமக்களுக்கு நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் பல துஆக்களைச் செய்துள்ளனர்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது பாரகல்லாஹு லக (அல்லாஹ் உனக்கு பரகத் - புலனுக்கு எட்டாத பேரருள் - செய்வானாக) எனக் கூறினார்கள்.

(புகாரி 5155, 6386)

இதை ஆதாரமாகக் கொண்டு பாரகல்லாஹு லக என்று கூறி வாழ்த்தலாம்.
பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும் என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது. (அஹ்மத் 15181)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர் என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599

அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக என்பது இதன் பொருள். ஒவ்வொருவரும் இந்த துஆவை வாழ்த்தைக் கூற வேண்டும்.

தவிர்க்கப்பட வேண்டியவை:

திருமணத்தின் போது பல்வேறு சடங்குகள் முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. இஸ்லாத்திற்கும் அந்த சடங்குகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எனவே அது போன்ற சடங்குகளைத் தவிர்க்க வேண்டும்.

* தாலி கட்டுதல் - கருகமணி கட்டுதல்

* ஆரத்தி எடுத்தல்

* குலவையிடுதல்

* திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து வாழ்த்துதல்

* ஆண்களும் பெண்களுமாக மணமக்களைக் கேலி செய்தல்

* வாழை மரம் நடுதல்

* மாப்பிள்ளை ஊர்வலம்

* ஆடல், பாடல், கச்சேரிகள் நடத்துதல்

* பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர் வரிசை என்ற பெயரில் கேட்டு வாங்குவது.

*முதல் குழந்தைக்கு நகை செய்து போடுமாறு பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துதல்.

* தலைப்பிரசவச் செலவை பெண் வீட்டார் தலையில் சுமத்துவது.

* பல்வேறு காரணங்களை காட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண் வீட்டாரிடம் விருந்துகளைக் கேட்பது.

* பிற மதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்தக் கொடுமைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்பது நபிமொழி.

நூல்: அபூதாவூத் 3512

இந்த ஆக்கம் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின்'இஸ்லாமிய திருமணம்' என்ற நூலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த நூல் முழுவதும் இங்கு தொடராக வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ். அந்த நூலை முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Saturday, December 18, 2010

வித்ரு தொழுகையின் சட்டங்கள்

Wednesday, December 08, 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு கண்டனப் போராட்டம் தேதி மாற்றம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து ஜனவரி 4ல் அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, December 06, 2010

அநீதிக்கு மேல் அநீதி.. அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 27ல் ஆர்த்தெழுவோம்!

அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 27ல் சென்னையில் / மதுரையில் ஆர்த்தெழுவோம்

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது முதல் அதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜிதை இடித்த பாவிகளை சட்டத் தின்படி தண்டிக்க வலியுறுத்தியும் நாம் உள்பட பல்வேறு இயக்கங்கள் டிசம்பர் ஆறாம் நாளில் போராட்டங்களை விடாமல் நடத்தி வந்தோம். நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்கக் கோரி நாம் நடத்திய அனைத்து போராட்டங்களையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அர்த்தமற்றதாக்கி விட்டது.

சொத்துரிமைக்கும், மத உரிமைக்கும் விரோதமாக அமைந்த தீர்ப்பு உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றமும் நியாயப் படுத்தப்பட்டு விட்டது. ஆரம்பம் முதலே அங்கே கோவில்தான் இருந்தது என்ற தவறான தீர்ப்பின் மூலம் பாபர் பள்ளிவாசலை யாரும் இடிக்கவில்லை என்ற தவறான நிலையை ஏற்படுத்தி விட்டது.

நீதிமன்றங்கள் மீது நாம் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கை கேள்விக்குறியாகி விட்டது. எனவே இனி நீதிமன்றங்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம்தான் எதிர் காலத்தில் முஸ்லிம்களின் உரிமையைக் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டு விட்டனர். நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சனத்திற்கு உட்பட்டவை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. டிசம்பர் 6 அன்று போராட்டம் நடத்துவதை விட இன்ஷா அல்லாஹ் ஜனவரி 4ம் தேதியன்று சென்னையிலும் மதுரையிலும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அந்தத் தீர்ப்பை ஆட்சேபணை செய்யும் வகையில் ஆர்ப்பரித்து எழ தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறது.

வெள்ளையன் ஆட்சியில்:

பாபர் மஸ்ஜித் பிரச்சினையில் ஆள்வோரும் அதிகார வர்க்கமும் முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வந்ததை முஸ்லிம் சமுதாயம் தெளிவாகப் புரிந்துவைத்துள்ளது.

ஆனால் அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தையும் மிஞ்சும் வகையில் நீதிமன்றங்களும் தவறு இழைக்கும் என முஸ்லிம் சமுதாயம் அறிந்து கொள்ளவில்லை.

நீதிமன்றங்களின் தீர்ப்புகளை விமர்சிக்கக் கூடாது என்ற அறியாமை காரணமாகவும்,  நீதி மன்றத்தின் தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வோம் என்று சில முஸ்லிம் இயக்கங்கள் பிரச்சாரம் செய்ததன் காரணமாகவும் நீதி மன்றங்களின் நியாயங்கள் முஸ்லிம் சமுதாயத்துக்குச் சென்றடையவே இல்லை.

நீதிமன்றங்கள் இப்போதுதான் முதன் முதலில் தவறாகத் தீர்ப்பளித்து விட்டது போலவும், அதற்கு முன்பு நீதிமன்றங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையான முறையில் நடந்து கொண்டது போலவும் என்ற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் உண்மை என்ன? பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்குகள் அனைத்திலும் ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்றங்கள் மத உரிமை, உணர்வு ஆகியவைகளுக்கு விரோத மாகத்தான் தீர்ப்பு வழங்கி வந்துள்ளன.

நீதிமன்றங்கள் எத்தகைய தவறான தீர்ப்புகளை வழங்கினாலும் ஏமாந்த முஸ்லிம் சமுதாயம் அதைக் கண்டு கொள்ளாது என்று நீதி மன்றங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே இந்த விபரீதங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.

நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவை தான்; அவை அநீதி இழைக்குமானால் அவை கண்டனத்திற்குரியவைதான் என்று தெள்ளத் தெளிவாக உணர்த்தினால்தான் எதிர் காலத்தில் மதவெறி பிடித்து சட்டத்தை மீறும் நீதித்துறைக்கு எச்சரிக்கையாக அமையும்.

இதற்காகத்தான் ஜனவரி 4ம் தேதியன்று நீதிமன்றத்தின் நியாயமற்ற தீர்ப்புக்கு எதிராக ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ய உங்களை அழைக்கிறோம்.

உரிமை காத்த வெள்ளையர்கள்!

பாபர் மஸ்ஜித் குறித்து நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் வெள்ளையர் ஆட்சியி லும் வழக்குகள் தொடரப்பட்டன. முதல் வழக்கு மகந்த் ரகுபர் தாஸ் என்பவர் 61/280/1885 என்ற வழக்கு தொடுத்தார். பாபர் மஸ்ஜிதுக்கு அல்லது அதைச் சுற்றியுள்ள சொத்துகளுக்கு உரிமை கோரி அந்த வழக்கு தொடரப்பட வில்லை. பாபர் மஸ்ஜித்துக்குச் சொந்தமான காலி இடத்தில் ராமர் பாதம் உள்ளது. அந்த இடத்தில் பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் நின்று கஷ்டப்படுகிறார்கள். எனவே அந்த இடத்தில் மேற்கூரை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த வழக்கு.

அந்த வழக்கில் கோரப்பட்ட இடம் 21 X 17 = 357 சதுர அடி. பாபர் மஸ்ஜிதைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தில் வழக்குத் தொடுத்தவர் சொந்தம் கொண்டாடியது 357 சதுர அடிதான். ஒரு செண்டுக்கும் குறைவான இடத்தின் மீது கட்டடம் கட்டத்தான் அனுமதி கேட்டு வழக்கு போடப்பட்டது.

அப்போது பைஸாபாத் நீதிபதியாக இருந்த பண்டிட் ஹரி கிருஷ்ணன் இந்த வழக்கில் பிப். 27, 1885ல் தீர்ப்பு அளித்தார்.

அந்த இடம் (357 சதுர அடி) வழக்குத் தொடுத்தவருக்குச் சொந்தமானது என்றாலும் அங்கே பள்ளிவாசல் இருந்து வருவதால் கோவில் கட்ட அனுமதிக்க முடியாது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பது அவரது தீர்ப்பு. மேல் முறையீடு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மகந்த் ரகுபர் தாஸ் மேல் முறையீடு செய்தார். அப்போது பைஸாபாத் மாவட்ட நீதிபதியாக எஃப்.இ.ஏ. சேமியர் இருந்தார். இவர் சம்பந்தப்பட்ட இடத்தை நேரடியாக ஆய்வு செய்து விட்டு 1886 மார்ச் 18ல் தீர்ப்பளித்தார்.

அந்த இடம் ரகுபர் தாசுக்குச் சொந்தமானது அல்ல என்று தீர்ப்பளித்ததுடன் 357 சதுர அடியில் கோவில் எழுப்பவும் தடை விதித்தார்.

இரண்டாம் மேல் முறையீடு:

இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து மகந்த் ரகுபர் தாஸ் மேல் முறையீடு செய்தார். நீதிபதி டபிள்யூ. யங்க் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆவணங்களின்படியும், சட்டப்படியும் அந்த 357 சதுர அடி நிலம் தனக்குச் சொந்த மானது என்பதற்கு மகந்த் ரகுபர் தாஸ் தக்க ஆதாரம் எதையும் காட்டவில்லை எனக் கூறி அந்த வழக்கை 1886 நவம்பர் 1ல் தள்ளுபடி செய்தார்.

வெள்ளையர்கள் ஆட்சியில் வெறும் 357 சதுர அடி நிலத்திற்குக் கூட இந்துக்களுக்குச் சட்டப்படி உரிமை இல்லை என்று தெளிவாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டு முழு இடமும் முஸ்லிம்களுக்கே சொந்தமானது என்று சட்டப்படி தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது.

சுதந்திர இந்தியாவில் காவி நீதிமான்கள்!

ஆனால் நாடு விடுதலை அடைந்த பின்னர் நாட்டு விடுதலைக்கு அதிகமதிகம் பாடுபட்ட மக்களுக்கு ஆள்வோரை மிஞ்சும் வகையில் நீதிமன்றங்கள் தொடர்ந்து அநீதியை இழைத்து வந்தன. அந்த வரலாறுகளையும், முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாகும்.

நீதிமன்ற அநீதி – 1:

1949 டிசம்பர் 22ம் தேதி இரவோடு இரவாக பாபர் பள்ளியில் ராமர், சீதை, லட்சுமணன் சிலைகளைக் கொண்டு போய் வைத்த சமூக விரோதிகள் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தனர்.

ஒரு விநாடியில் அதைத் தூக்கி வெளியே போடுவது தான் சட்டப்படி செய்ய வேண்டிய காரியம் என்ற போதும் நீதிபதி அந்தஸ்தில் உள்ள கே.கே நய்யார் அதை அப்புறப்படுத்த மறுத்து உத்தரவிட்டார். நீதியின் பெயரால் நடந்த முதல் அநீதி இது. இந்த நீதிபதி பின்னாளில் ஜனசங்கம் என்ற சங்பரிவார இயக்கத் தில் சேர்ந்தார்.

நீதிமன்ற அநீதி – 2:

சிலைகளை அப்புறப்படுத்தக் கோரியும், அந்த இடத்தை முஸ்லிம்கள் வசம் ஒப்படைக்கக் கோரியும் முஸ்லிம்கள் வழக்குத் தொடுத்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் சிலைகளைக் காப்பாற்ற ரிஸீவரை நியமித்து தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. இது இரண்டாவது அநீதியாகும்.

நீதிமன்ற அநீதி – 3:

1950 ஜனவரி 16 அன்று சிலைகளை அகற்றக் கூடாது என்று கோரி கோபால் சிங் விஷாரத் பைஸாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது கோரிக்கையை ஏற்று சிலைகளை அகற்றக் கூடாது என்று இடைக்கால உறுத்துக் கட்டளை உத்தரவு பிறக்கப்பட்டு மூன்றாவது அநீதி அரங்கேற்றப்பட்டது.

நீதிமன்ற அநீதி – 4:

மகந்த் பரமஹம்ஸ ராமச்சந்திர தாஸ் என்பவர் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சிலைகளுக்குப் பூஜை செய்ய அனுமதி கேட்டு வழக்குத் தொடுக்கிறார். 1950 டிசம்பர் 5ல் இதற்கு அனுமதிக்கப்படுகிறது. அதாவது சட்ட விரோதமாக பள்ளிவாசலுக்குள் சிலையை வைத்து விட்டு அந்தச் சிலைகளுக்கு பூஜை செய்ய அனுமதித்ததற்கு மதவெறி தவிர வேறு சட்டக் காரணம் ஏதுமில்லை. இது காவி நீதிமான்கள் செய்த நான்காவது அநீதியாகும்.

நீதிமன்ற அநீதி – 5:

இந்த வழக்கில் நிர்மோகி அகாரா என்ற அமைப்பு தன்னையும் நுழைத்துக் கொண்டது. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் வகையில் அது வழக்கு தொடுத்தபோது எடுத்த எடுப்பிலேயே அதைத் தள்ளுபடி செய்ய வேண்டிய நீதிபதிகள் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதன் மூலம் ஐந்தாவது அநீதியை அரங்கேற்றினர். பாபர் பள்ளிவாசல் என்ற ஒன்று இல்லை; அது ஆரம்பம் முதல் எங்களிடம்தான் உள்ளது. கோவிலாகத்தான் இருந்து வருகிறது. பாபர் இடிக்கவும் இல்லை; மசூதி கட்டப்படவும் இல்லை. அது கோவிலாகத்தான் இருக்கிறது; இதில் முஸ்லிம்கள் இடையூறு செய்யக் கூடாது என்பதுதான் அந்த வழக்கு.

1950  டிசம்பர் 17ல் இந்த வழக்கு தொடரப் பட்டது. உண்மைக்கு மாறான இந்த வழக்கை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்யாமல் இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அநீதியை நிலை நாட்டியது. (இந்த அமைப்புக்குத்தான் மூன்றில் ஒரு பங்கு என்று அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது)

முஸ்லிம்கள் தரப்பிலும், வக்ஃபு வாரியத் தின் தரப்பிலும், இந்துக்கள் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு உ.பி. அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படை யில் அலஹாபாத் உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. கீழமை நீதிபதிகளிடம் இருக்கும் அளவுக்கு மதவெறி மேல் நீதிமன்ற நீதிபதிகளிடம் இருக்காது என்று முஸ்லிம்கள் குருட்டு நம்பிக்கை வைத்திருந்தனர். அதிலும் தோல்விதான்.

நீதிமன்ற அநீதி – 6:

ஒரு இடம் யாருக்குச் சொந்தம் என்பதை முடிவு செய்வதற்கு அந்த இடத்தை அகழ்வா ராய்ச்சி செய்யுமாறு சட்டத்தில் கூறப்பட வில்லை. உலகத்தில் எந்த நாட்டிலும் இத்தகைய சட்டம் இல்லை. ஆனால் நீதிபதிகள் சட்ட விரோதமாக அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யுமாறு உத்தரவிட்டனர்.

நீதிமன்ற அநீதி – 7:

இந்த வழக்கை வக்ஃபு வாரியம் – பாபர் மஸ்ஜித் கமிட்டி, நிர்மோகி அகாரா என்ற அமைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் புதிதாக யாரும் சட்டப்படி உரிமை கோர முடியாது. ஆனால் பார்ப்பன சங்பரிவாரக் கும்பல் உலகமே காரித்துப்பும் வகையிலான கேவலமான செயல் மூலம் மேலும் சிலரை வழக்கில் நுழைத்தது. இதுதான் நடந்த அநியாயத்திலேயே மிகப் பெரியது.

ஒரு சொத்து சம்பந்தமாக வழக்குப் போடுவதாக இருந்தால் அந்தச் சொத்தில் விவகாரம் ஏற்பட்டு 12 ஆண்டுக ளுக்குள் வழக்குப் போட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இந்தச் சட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மைனர்களுக்கும், மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் விலக்கு உண்டு.

ஒரு மைனரின் சொத்தை ஒருவர் அபகரித்துக் கொண்டால் அவர் 12 ஆண்டுகள் கழித்த பின்பும் வழக்குப் போடலாம். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்தச் சொத்து குழந்தை ராமருக்கு உரியது. குழந்தை ராமர் காலாகாலம் மைனராவார். எனவே ராமர் என்றும் மைனராக உள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம்.

மைனர் நேரடியாக வழக்குத் தொடர முடியாது என்பதால் அவர் சார்பில் அவரது கார்டியன் வழக்குத் தொடரலாம் என்று வாதிட்டு ராமர் பெயரில் வழக்கு தொடரப்பட்டது.

அதாவது எனக்குச் சொந்தமான இடத்தில் பாபர் என்பவர் 450 ஆண்டுகளுக்கு முன் கோவிலைக் கட்டினார். இதற்கு நீதி வழங்க வேண்டும் என்பதுதான் வழக்கு.

ராமர் பிறந்த இடம் மக்களால் வழிபாடு நடத்தப்படுகிறது என்றும் அது மனித அந்தஸ்தை அடைந்து விட்டது என்றும் அந்த மைனரும் வழக்குத் தொடரலாம் என்றும் வாதிட்டு அதன் காப்பாளர் என்ற பெயரில் 1989ல் வழக்குப் போட்டு தங்களையும் வழக் கில் சேர்க்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. தியோகி நந்தன் அகர்வால் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்தான் இந்த வழக்கைத் தொடர்ந்தவர். அதாவது மைனரான ராமர் சார்பிலும், மைனரான காவி இடம் சார்பிலும் அதன் பாதுகாவலர் என்ற பெயரில் இவர் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

உலக மக்கள் இதை அறிந்தால் இந்நீதித்துறையைப் பற்றி என்ன நினைப்பார்கள். காரித்துப்புவார்களே என்ற குறைந்த பட்ச கூச்சம் இன்றி குழந்தை ராமரும், மைனர், காலி மனையும் வழக்கில் சேர்க்கப்பட்ட அதிசயம் நடந்தது.

உலக நீதிமன்ற வரலாற்றில் இதுபோன்று நீதிமன்றங்கள் செயல்பட்டிருக்காது. ஆயினும் உள்ளார்ந்த மத உணர்வின் காரணமாக இவர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

இந்தக் கோமாளித்தனத்தின் அடிப்படையில்தான் மைனர் ராமருக்கு மூன்றில் ஒரு பங்கு என்று தீர்ப்பளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற அநீதி – 8:

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடிப்படை இல்லாமலும், உள்நோக்கத்துடனும் அகழ்வாராய்ச்சிக்கு உத்தரவிட்டதன் மூலமும், ராமரை வாதியாக ஆக்கியதன் மூலமும் இப்போதைய தீர்ப்புக்கு அடித்தளம் அமைத்தனர்.

அதன் அடிப்படையில் மைனர் ராமருக்கு மூன்றில் ஒரு பங்கு, நிர்மோகி அகாராவுக்கு மூன்றில் ஒன்று, முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒன்று எனத் தீர்ப்பளித்து மாபெரும் அநீதியை இழைத்தனர்.

அதாவது இல்லாத ராமரை வழக்கில் சேர்த்து அவரையும் அடுத்தவர் சொத்துக்கு பங்காளியாக்கி விட்டனர்.

பள்ளிவாசலே அங்கே இருக்கவில்லை. பாபர் மசூதியை இடிக்கவும் இல்லை. இது கோவிலாகத்தான் இருக்கிறது என்ற புளுகு மூட்டையை அப்படியே நம்பி அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு, பள்ளிவாசலின் உரிமையாளர்களுக்கு மூன்றில் ஒன்று. இப்படி அநியாயத் தீர்ப்பளித்த அத்தனை பேரையும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் தாட்சண்ய மின்றி கண்டிக்கிறது!

நீதிமன்ற அநீதி – 9:

அகழ்வாராய்ச்சி அறிக்கையில் கோவில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதாகக் கூறப்படாத போதும் கோவிலை இடித்து விட்டு பாபர் பள்ளிவாசலைக் கட்டினார் என்ற அவதூறை நீதிமன்றம் கூறியது ஏற்புடைய தில்லை.

நீதிமன்ற அநீதி – 10:

அகழ்வாராய்ச்சியில் விலங்குகளின் எலும் புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பின்பும் அது கோவிலாக இருந்திருக்க முடியாது என்பது இதன் மூலம் நிரூபணமான பின்பும் அது கோவில்தான் என்று கூறியதன் மூலம் பத்தா வாது அநீதி அரங்கேற்றப்பட்டது.

நீதிமன்ற அநீதி – 11:

எந்த இடத்தில் பள்ளிவாசலின் மையப்பகுதி இருந்ததோ அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார். எனவே அது அவருக்குத்தான் சொந்தமானது என்றும் இந்த நீதிபதிகள் தவறாக தீர்ப்பளித்து விட்டனர். 18 லட்சம் ஆண்டுக்கு முன்னால் ஒருவர் இந்த இடத்தில் பிறந்தார் என்று ஒருவன் கூறினால் அதை சிந்தனையுள்ள எவரும் ஏற்க முடியாது.

நீதிமன்ற அநீதி – 12:

பாபர் பள்ளிவாசல் இஸ்லாமியச் சட்டப்படி பள்ளிவாசலே அல்ல என்று கூறிய நீதிபதி நீதி வழங்குவதில் தவறி விட்டார். இப்படி அடுக்கடுக்கான அநீதிகளைத்தான் நீதிபதிகள் பாபர் மஸ்ஜித் வழக்கில் தொடர்ந்து கடைப்பிடித்து வந்துள்ளனர். எனவே இது போன்ற அநீதிகளை அம்பலப்படுத்தி நீதித்துறையை தட்டிக் கேட்கத் தவறினால் நம்முடைய பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படும். நீதி வழங்குவதில் தவறிய நீதிபதிகளைத் துணிவுடன் கண்டிக்கவும், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தானாக மறு விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தியும், எந்தப் பள்ளிவாசல் பிரச்சினையையும் நீதி மன்றத்துக்குக் கொண்டு செல்ல பயப்படும் நிலைமை இனியும் நீதிமன்றங்களால் ஏற்படக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்தவும்,

இருக்கின்ற பள்ளிவாசல்கள் இதுபோன்று நீதித்துறையால் பறிக்கப்படாமல் இருக்க நம் முழு பலத்தையும் திரட்டி கண்டனங்களைப் பதிவு செய்வோம்.

நீதித்துறை சட்டத்தை மீறினால் நீதிமன்றங்களையும் கண்டிக்க தயங்க மாட்டோம் என்பதை உலகறியச் செய்வோம். ஜனவரி 27ல் நம் உணர்வை வெளிப்படுத்துவோம்.


நன்றி: ததஜ இணையதளம்

Thursday, December 02, 2010

தடம் புரண்ட டவுன் காஜி

தமிழகத்தில் கடந்த 07.11.10 அன்று சந்தேகத்திற்குரிய நாளில் பிறை எங்குமே தென்படாததைத் தொடர்ந்து துல்காயிதா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, 18.11.10 வியாழன் அன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவுப்பு செய்தது.

ஆனால், எந்த ஒரு மார்க்க நெறிமுறையையும் பேணாத தமிழக டவுன் காஜியோ மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை பார்த்ததன் அடிப்படையில் தமிழகத்தில் 17.11.10 அன்று பெருநாள் என்று தறிகெட்ட அறிவிப்பைச் அறிவித்தார். தமிழக டவுன் காஜியின் அறிவிப்பு எந்த ஒரு நெறிமுறையும், மார்க்க வரைமுறையும் அற்ற அறிவிப்பு என்பதை, பிறை குறித்த டவுன் காஜியின் கடந்த கால அறிவிப்புகளோடு ஒப்பிட்டு பார்த்தால் விளங்கிக் கொள்ளலாம்.

கடந்த ரமாலான் மாதம் முதல் பிறை தமிழகத்தில் தெரிவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் தென்பட்டது. இப்போது தமிழகத்திற்கு அருகிலுள்ள கர்நாடகாவையும் தாண்டி மஹாராஷ்டிராவிற்கு தாவிய தமிழக டவுன் காஜி, சென்ற ரமலானில் கேரள மாநிலத்தில் பார்க்கப்பட்ட பிறையை நிராகரித்தார். தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டால் தான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறிவிட்டு இப்போது மஹாராஷ்டிராவை ஆதாரமாகக் கொண்ட மர்மம் நமக்கு விளங்கவில்லை.

உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த டவுன் காஜியின் பேட்டி:

”சமுதாய ஒற்றுமை” என்ற மாத இதழுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்திலிருந்து பிறை பர்க்கப்பட்டதாக தகவல் கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும், ”இந்தியாவில் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திரா காந்தி அவர்கள் தனது ஆட்சியின் போது ஹிலால் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினார்கள். சில மார்க்க காரணங்களினால் அதன்படி செய்ய முடியாமல் போனது” என்று அந்த பேட்டியில் இந்தியா முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதற்கு சில மார்க்க காரணங்கள் தடையாக இருக்கின்றன என்று தெரிவித்துவிட்டு, தற்போது ”அவர் சொன்ன நிலைபாட்டிற்கு அவரே முரண்பட்டு” மஹாராஷ்டிரா பிறையை அறிவித்து மக்களைக் குழப்பியுள்ளார். அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து அவரே குழம்பி விட்டு, மக்களையும் குழப்பி விட்டுள்ளார்.

சென்ற ரமலானில் அருகிலுள்ள கேரள மாநிலத்தில் தெரிந்த பிறையையே ஏற்காத தமிழக டவுன் காஜி தற்போது மஹாராஷ்டிர பிறையை ஏற்றுக் கொண்டு மக்களைக் குழப்பியுள்ளாரே இவரது நிலைப்பாடு தான் என்ன? இவர் விளங்கித் தான் செய்கிறாரா? அல்லது விளங்காமல் நிலை தடுமாறியுள்ளாரா? என்று அறிந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்திலிருந்து மாநிலச் செயலாளர்கள் கானத்தூர் பஷீர் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் கடந்த 15.11.10 திங்கள் அன்று மாலை 5மணிக்கு டவுன் காஜியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்கச் சென்றனர்.

டவுன் காஜியின் அற்புத(?) விளக்கம்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளை அவரது அலுவலகத்தில் சந்தித்த டவுன் காஜியிடம், எந்த அடிப்படையில் 17.11.10 அன்று பெருநாள் என்று அறிவித்தீர்கள்? என்று கேட்டதற்கு, தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை, மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை தென்பட்டதன் அடிப்படையில் தான் அறிவித்தேன் என்றும், ஆந்திரா, கர்நாடகா என்று இந்தியாவில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை அறிவிப்பேன் என்று அவர் கடந்த காலத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு மாற்றமாகவும், அவர் அளித்த பேட்டிக்கு மற்றமாகவும் கூறியுள்ளார். அப்படியனால் கடந்த காலங்களில் டெல்லியில் பார்க்கப்பட்ட பிறையை ஏற்று பெருநாள் அறிவிக்காதது ஏன் என்று நமது நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதற்கு, டெல்லியில் இருந்து வரும் அறிவிப்பை ஏற்க மாட்டேன் என்று ஒரு அற்புத(?) விளக்கத்தைக் கூறியுள்ளார். டெல்லி என்பது இந்தியாவில் தானே உள்ளது, உங்கள் நிலைப்பாட்டின் படி அது என்ன வேறு நாடா? என்று நமது நிர்வாகிகள் கேட்டதற்கு, டெல்லியைப் பொறுத்த மட்டிலும் அவர்கள் அவர்களாக அறிவிப்பது கிடையாது. அவர்கள் கலகத்தாவை வைத்து அறிவிப்பார்கள் என்ற அறிவிப்பூர்வமான (?) விளக்கத்தைக் கூறியுள்ளார். கல்கத்தாவும் இந்தியாவில் தானே உள்ளது என்ற நமது நிர்வாகிகளின் கேள்விக்கு தகுந்த பதில் இல்லை.

டவுன் (DOWN) காஜியான, டவுன் (TOWN) காஜி?

இந்த முறை பெருநாளை நாங்களும் அறிவித்து விட்டோம், நீங்களும் அறிவித்து விட்டீர்கள் எனவே அடுத்த வருடம் 6 மாதங்களுக்கு முன்பாகவே வாருங்கள். நாம் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம் என்று சமாளிப்பு பதில் தான் அவரிடத்திலிருந்து வந்ததே தவிர, ஒரு மார்க்கக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வை அஞ்சி முடிவெடுக்க வேண்டுமே என்ற பொறுப்புணர்வோடு உள்ளவர் போன்று அவர் நடந்து கொள்ளவில்லை. ஆகமொத்தத்தில் தடம்புரண்ட தனது பெருநாள் அறிவிப்பின் மூலம் டவுன்(TOWN)காஜி – டவுன்(DOWN)காஜி யாக மாறிவிட்டார்.

இதைப்போன்று கடந்த சில வருடக்களுக்கு முன்பாக தமிழகத்தைத் தாண்டி அந்தர்பல்டி அடித்து ஒரு பிறை அறிவிப்பைப் செய்த டவுன் காஜியிடம் அப்போது தலைமைப் பொறுப்பிலிருந்த சகோதரர் பீ.ஜே அவர்களும், பாபாஜான் என்ற சகோதரரும் நேரில் சென்று விளக்கம் கேட்டு, “உங்களது மத்ஹபு சட்டத்தில் கூட நீங்கள் கூறுவது போல, இல்லை” தத்தமது பகுதியில் பிறை பார்த்துத் தான் பிறையை அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே என்று பீஜே கூறிய போது மத்ஹப் கிதபுகளில் அப்படி இல்லை என்று அவர் மறுத்தார். உடனடியாக ஆதாரத்தைக் கையில் எடுத்துச் செல்லாததால் நாளை இதற்கான ஆதாரத்தை எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு பீஜே வந்து விட்டார். மறுநாள் ஹனபி மத்ஹபின் ஏராளமான சட்டநூல்களில் இருந்து ஆதாரத்தை பிரிண்ட் எடுத்துக் கொண்டு போய் காட்டிய போது அதை அவரால் மறுக்க முடியவில்லை. “இனி வரக்கூடிய காலங்களில் தமிழகத்தில் காணப்படும் பிறையை மட்டும் தான் ஏற்றுக் கொள்வேன்” தமிழகத்திற்கு வெளியிலிருந்து வரும் அறிவிப்புகளை ஏற்க மாட்டேன்” என்ற நிலைப்பாட்டை ஒப்புக் கொண்டவர் தான் இந்த டவுன் காஜி என்பதையும் நாம் சுட்டிக் காட்டிக் கொள்கின்றோம்.

அதே நேரத்தில், கர்நாடக மாநிலம் குல்பர்காவில் பிறை பார்க்கப்பட்டதாக இந்த டவுன் காஜி அறிவிப்பு வெளியிட்ட போது, அதே நாளில் தாம்பரத்திலும் பிறை தென்பட்டது. பிறை பார்த்த நமது சகோதரர்கள் பிறை தென்பட்ட செய்தியை இந்த டவுன் காஜியிடம் தெரிவித்த போது நம் சகோதரர்கள் பார்த்த பிறையை ஏற்க மாட்டேன். குல்பர்க்கா பிறையைத் தான் ஏற்றுக் கொள்வேன் என்று தடுமாறி தறிகெட்டவர் தான் இந்த டவுன் காஜி என்பதையும் பதிவு செய்கின்றோம்.