Wednesday, October 30, 2013

தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி (வீடியோ)

29.10.2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மார்க்க சம்மந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி  தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்று இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.


 
தவ்ஹீத் பள்ளியில் (குறித்தநேரத்தில்) செல்லப்படும் பாங்கு குழப்பமா?

   
00019 from Jahir on Vimeo.



 


  

Tuesday, October 29, 2013

மனித உயிர்களை நேசிப்போம் (வீடியோ )

மனித உயிர்களை நேசிப்போம்

ஹஜ் பெருநாள் உரை 2013

ஜிஹாத்


ஜிஹாத் -ஹஜ் பெருநாள் உரை 2013 from Adiraitntj on Vimeo.

Sunday, October 27, 2013

மேலத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான் !

நேற்று [ 26-10-2013 ] அஸர் தொழுகைக்குப்பின் நமதூர் மேலத்தெரு சானாவயல் பகுதியில் அமைந்துள்ள சகோதரர் SP பக்கீர் முஹம்மது அவர்களின் இல்லத்தில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் சகோதரர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'கேள்வி இல்லாமல் மார்க்கம் இல்லை' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



முஸ்லீம் பெண்களே உன்னில் இஸ்லாம் எங்கே? (வீடியோ)

முஸ்லீம் பெண்களே உன்னில் இஸ்லாம் எங்கே? (வீடியோ)


இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 10) - கிடைத்ததில் மனநிறைவு கொள்ளல்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 10) - கிடைத்ததில் மனநிறைவு கொள்ளல்


இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.


Wednesday, October 23, 2013

தெரு வெறியை தூண்டிவிடும் போலி தவ்ஹீத்வாதிகள்

ஒரு காலத்தில் அதிராம்பட்டிணத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே தெரு வெறியின் காரணமாக பல கலவரம் நடந்துள்ளது. தவ்ஹீத் புரட்சியினால் அதிரையில் நிலவிய தெரு வெறி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுஇ தெரு வெறியின் காரணமாக மோதியவர்களை ஒரே பள்ளியில் நிர்வாகிகளாக ஆகும் அளவுக்கு புரட்சி ஏற்பட்டுள்ளது.

தவ்ஹீத் போர்வையில் நாடகமாடிய சிலர் இன்று தெருவெறியை தூண்டிவிடும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு பக்கம் எல்லா முஹல்லாக்களையும் ஒன்றினைக்க போகிறாம் என்று நாடகம். மறுபுறம்இ நமது தெருவிற்கு தான் செய்ய வேண்டும் என்று வெறி ஏற்றி வருகிறார்கள். இவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்ள கீழ்காணும் வீடியோவை பாருங்கள்...

தெரு வெறியை தூண்டிவிடும் போலி தவ்ஹீத்வாதிகள் from Adiraitntj on Vimeo.


Tuesday, October 22, 2013

நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா?


தவ்ஹீத் போர்வையில் இருக்கும் சிலர் சமீபத்தில் நடத்திய மத நல்லிணக்க நிகழ்ச்சியில் 'நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் படைக்காவிட்டால் இந்த உலகையே படைத்து இருக்க மாட்டான் என்ற இட்டுக்கட்ட பட்ட செய்தியை ஹதீஸ் என்ற பெயரில் எடுத்துக் கூறினார்கள்'. இது தவறு என்று பலருக்கு தெரிந்து இருந்தும், இதை தவறு என்று சொல்லவில்லை. இது பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கீழ்காணும் விளக்கம் வெளியிடப்படுகிறது.

நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா?

இந்த நபியை படைக்காவிட்டால் உலகையே படைத்திருக்கமாட்டேன் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்வதாக பயான் கேட்டேன். இதற்கு ஆதாரம் உள்ளதா?

முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான் படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி இப்னு அசாகீர் என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றது. 

اللآلي المصنوعة - (1 / 249) 

وفضل شهر رمضان والشفاعة كلها لك حتى ظل عرشي في القيامة على رأسك ممدود وتاج الملك على رأسك معقود ولقد قرنت اسمك مع اسمي فلا أذكر في موضع حتى تذكر معي ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك علي ومنزلتك عندي ولولاك ما خلقت الدنيا موضوع أبو السكين وإبراهيم ويحيى البصري ضعفاء متروكون وقال الفلاس يحيى كذاب يحدث بالموضوعات 

الموضوعات لابن الجوزي - (1 / 290) 

ويحيى البصري متروكان. قال أحمد بن حنبل: حرقنا حديث يحيى البصري. وقال الفلاس: كان كذابا يحدث أحاديث موضوعة. وقال الدارقطني: متروك. 

இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர்களும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்களான இப்ராஹீம் அபுஸ்ஸிக்கீன் மற்றும் யஹ்யா ஆகியோர் பலவீனமானவர்கள் என்று இமாம் தஹபீ இமாம் தாரகுத்னீ இமாம் இப்னுல் ஜவ்ஸீ மற்றும் இமாம் அஹ்மது ஆகியோர் குறைகூறியுள்ளனர். 

تلخيص كتاب الموضوعات للذهبي - (1 / 37) 

195-حديث محمد بن عيسى بن حبان المدائني ثنا محمد بن الصباح ثنا علي بن الحسن عن إبراهيم بن اليسع عن العباس الضرير عن الخليل بن مرة عن يحيى البصري عن زادان عن سلمان قال أتى أعرابي جاف بدوي فذكر خبراً طويلاً سمجاً وآخره يا محمد لولاك ما خلقت الدنيا 

قال ابن الجوزي موضوع بلا شك ويحيى البصري تالف كذاب والسند ظلمة 

இந்த செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் இதன் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் பெரும் பொய்யர் என்றும் இமாம் இப்னுல் ஜவ்ஸீ தெரிவித்துள்ளார். மேலும் இதே கருத்தில் திர்மிதீ மற்றும் ஹாகிம் ஆகிய நூல்களிலும் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆதம் அலை அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் 'லாயிலாஹ இல்லல்லாஹூ' என்பதுடன் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்றும் எழுதப்பட்டிருந்ததாம். ''இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்'' என்று ஆதம் (அலை) கேட்டர்களாம். அதற்கு இறைவன் ''அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்'' என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறிய போது சொர்க்கத்தில் பார்த்தது நினைவுக்கு வந்ததாம். ''இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக'' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம். 

இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டடுள்ளது. இச்செய்தி அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர். 

மேலும் இந்த செய்தியின் கருத்து குர்ஆனுடன் முரண்படுகிறது. அல்லாஹ் திருக்குர்ஆனில் இந்த உலகத்தை படைத்ததற்கான காரணத்தை பற்றி கூறும் போது அவனை வணங்குவதற்காகத் தான் இந்த உலகத்தை படைத்ததாக குறிப்பிடுகிறான். 

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِي(56)51 

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. 

அல்குர்ஆன் (51:56) 

இறைவன் தன்னை வணங்குவதற்காகத்தான் மனிதனையும், ஜின்களையும் படைத்திருப்பதாக கூறிக்காட்டும் போது, முஹம்மது நபி(ஸல்) அவர்களை படைக்காவிட்டால் இந்த உலகத்தையே படைத்திருக்கமாட்டேன் என்று கூறுவதாக சொல்லுவது இந்த வசனத்தோடு நேரடியாக மோதுகின்றது. எனவே இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பது இதன் மூலம் மேலும் உறுதியாகிறது.

எல்லாரையும் மேடை ஏற்றுவது எப்படி தவறாகும்? என்று கேட்டவர்கள் இப்போதாவது அது தவறு என்று புரிந்து கொண்டால் போதுமானது. 

Monday, October 21, 2013

மூடநம்பிக்கைகளை ஒழிப்பதே முதல் பணி - இறுதிச்சடங்குகள் செய்யும் முஸ்லிம் பெண்



பாத்திமா தாகிரா... சென்னை மதுரவாயல் பகுதியில் வசிக்கிறார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடன் இணைந்து கடந்த 15 வருடங்களாக ஆன்மிகப் பிரச்சாரம் செய்து வருகிறார். பலரது புருவங்களை உயர்த்தும் வகையில், இறந்தவர்களுக்கான இறுதி சடங்குகளைச் செய்து வருகிறார். அதன்மூலம் 'இஸ்லாம், பெண்களுக்கு எந்தச் சுதந்திரத்தையும் வழங்கவில்லை' எனும் தவறான கற்பிதங்களைக் கட்டுடைக்கிறார். 

"மனிதநேயத்துடன் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டும்’ என்ற நபிகளின் மொழிதான் நான் இந்தப் பணியைச் செய்ய உந்துதலாக இருந்தது” என்று நிதானமாகத் தன் பார்வையை முன்வைக்கிறார் ஃபாத்திமா. 

"சிறு வயதிலேயே அரபு மொழி கற்றுக்கொண்டேன். அதனால் இஸ்லாத்தின் வேத நூல்களை மூல மொழியிலேயே படிக்க முடிந்தது. அவற்றை ஆழ்ந்து கற்கும்போது மதத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளைப் பற்றிய தெளிவும் கிடைத்தது.‘மரணித்த எந்த உயிரும் எவ்வகையிலும் (பேயாகவோ, ஆவியாகவோ) இந்த உலக வாழ்வைத் திரும்பப் பெற இயலாது’ என்று குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பலர் அதைப் புரிந்துகொள்ளாமல் பேய் என்றும் ஆவி என்றும் சொல்லி, உறவினர்கள் இறந்துவிட்டால்கூட அவர்களுக்கான இறுதிச் சடங்குகளைத் தாங்களே முன்வந்து நடத்தாமல் கூலிக்கு ஆட்களை அமர்த்தி சடங்குகளைச் செய்கிறார்கள். இது தவறு. 

இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கவே, பெண்களுக்கான இறுதிச் சடங்குகள் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினோம். முதலில் நான் கற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகள் செய்ய ஆரம்பித்தேன். கடந்த ஐந்து வருடங்களாக 'ஜனாசா' எனும் இறுதிச் சடங்கு செய்யும் முறையை பல பெண்களுக்குக் கற்றுக்கொடுக்கத் துவங்கினேன். 

தாய் இறந்துவிட்டால் மகள்கூட இறுதிச் சடங்கு செய்ய முன்வரமாட்டார். அப்படி இருந்த பலர் இன்று இறுதிச் சடங்குகள் செய்யப் பழகி இருக்கிறார்கள். இதுவரை சுமார் 5,000 பெண்களுக்கு மேல் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு, தங்கள் பகுதிகளில் இஸ்லாமியப் பெண்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்கள் முன்நின்று இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள். 

எங்களது இந்தப் பணியை எங்கள் சமூகத்தினரே சிலர் எதிர்க்கிறார்கள். காரணம், இறுதிச் சடங்கில் நடைபெறும் ஒவ்வொரு சடங்குமே இவர்களுக்கு வருமானம்தான். நாங்கள் இலவசமாக இறுதிச் சடங்கு நடத்துவதால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் தடைபடுகிறது. அதனால் எதிர்ப்புகள். ஆனால் எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து இதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு. 

பெண்களுக்கு ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களிடையே உள்ள பல தவறான கற்பிதங்களை, மூட நம்பிக்கைகளை ஒழிப்பதைத்தான் எங்களின் முதல் பணியாகக் கொண்டுள்ளோம். என்னுடைய இந்தப் பணிக்கு என் கணவர் ஆதரவாக இருக்கிறார். 

இறுதிச் சடங்கு செய்வதால் எந்தப் பிரதிபலனையும் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. அதில் கிடைக்கும் பூரண மன நிறைவு போதுமே என்று புன்னகைக்கிறார் ஃபாத்திமா. 

நன்றி தி இந்து


 

C.M.P லைனில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

அதிராம்பட்டிணம் C.M.P லைனில் சார்ந்த சகோதரர் Y அன்சாரி அவர்களின் மகன் முஹம்மதின் திருமணம் 19.10.13 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மணமகனின் இல்லத்தில் நடைபெற்றது. திருமணத்தில் துவக்கமாக சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்கவேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அதனை தொடர்ந்து மணமகன் 38 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்து நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் எழிமையாக திருமணம் முடிந்தது மணமகன் சார்பாக வலிமாவாக டீ மற்றும் பிஸ்கட் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்









Sunday, October 20, 2013

ஆவணத்தில் கள்ள சுன்னத் வல் ஜமாஅத் ரவுடிகள் வெறியாட்டம்!


தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக போலீஸ் அனுமதியுடன் தெருமுனை பிரச்சாரம் 19.10.13 அன்று நடைபெற்றது. இதில் சகோதரர் முஜாதிர் உரை நிகழ்த்தினார் தெருமுனை பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாவட்ட நிர்வாகிகளும் உள்ளுர் மக்களும் திருப்பி கொண்டுயிருக்கையில் சுன்னத் ஜமாஅத்தை சார்ந்த 40க்கு அதிகமான ரவடிகள் உருட்டுக்கட்டை அறிவாளுடன் தவ்ஹீத் சகோதரர்களை வழிமறைத்து கட்டையாலும் அறிவாளிலும் கடுமையாக தாக்கினார் இதில் 5 சகோதரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர் இதில் ஒருவர் தஞ்சை மருத்துவக்கல்லூரியிலும் மற்ற நான்கு பேர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.






Saturday, October 19, 2013

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் கூட்டுக் குர்பானி வினியோகம்

அதிரைக்கிளை சார்பாக பெருநாள் அதை தொடர்ந்து இரண்டு நாட்கள் குர்பாணி தோல்கள் வசூல் செய்யப்பட்டது ஆதே போல் கூட்டு குர்பாணி 17.10.13 மற்றும் 18.10.13 இரண்டு நாட்கள் தவ்ஹீத் பள்ளியில் வைத்து குர்பாணி பங்குகள் வினியோகம் செய்யப்பட்டது.







Wednesday, October 16, 2013

ஹஜ் பெருநாள் உரை (வீடியோ)

அசத்தியம் அழிந்துபோகும் சத்தியம் வெல்லும்



ஹஜ் பெருநாள் தொழுகை (புகைப்படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நபி வழி பெருநாள் திடல்தொழுகை இன்று (16.10.13) காலை 7.15 மணிக்கு E C R ரோட்டில் அமைந்துள்ள பெட்ரேல் பங்க் எதிரில் கிராணி மைதானத்தில் நடைபெற்றது இதில் மாநில செலயாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி சத்தியமே வெல்லும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் 1500க்கு அதிகமான மக்கள் கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்














Monday, October 14, 2013

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் புதன்கிழமை (16.10.13)அன்று நபி வழி ஹஜ் பொருநாள் திடல் தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சென்ற நோன்பு பெருநாளில் நடைபெற்ற E C R ரோட்டில் அமைந்துள்ள பெட்ரேல் பங்க் எதிரில் கிராணி மைதானத்தில் காலை சரியாக 7.15 மணிக்கு நடைபெறும் பொருநாள் உரை சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள்

கூட்டு குர்பாணி இன்ஷா அல்லாஹ் வியாழக்கிழமை (17.10.13) தவ்ஹீத் பள்ளியில் கொடுக்கப்படும். 

Sunday, October 13, 2013

புகாரி சரீப் ஓதினால் பிளேக் நோய் வராதா ?

புகாரி சரீப் ஓதினால் ஓதினால் பிளேக் நோய் வராதா ?

புகாரி சரீப் ஓதினால் பிளேக் நோய் வராதா? from AdiraiTNTJ on Vimeo.

Saturday, October 12, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 11.10.13(வீடியோ) - புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கப்சாக்களும் நாடகங்களும்!

புகாரி ஹதீஸை தொகுத்தவரின் உண்மையான பெயர் என்ன?
சஹாபாக்கள் காலத்தில் இருந்து யார் யார் எல்லாம் ஹதீஸ்களை தொகுத்தார்கள் அவர்களின் பெயர் என்ன? 

புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கப்சாக்களும் நாடகங்களும்!

 

தொடர்புடையவை:

புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்!

இஸ்லாத்தில் இல்லாத பூமி பூஜை செய்யும் மௌலானா மௌலவி ஹஜ்ரத் கிப்லா முஹம்மது குட்டி (?)!




இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 9) - தேடிவரும் செல்வத்தைப் பெற்றுக் கொள்ளுதல்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 9) - தேடிவரும் செல்வத்தைப் பெற்றுக் கொள்ளுதல்


இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.

Friday, October 11, 2013

TNTJ அதிரை கிளையின் சார்பாக கூட்டுக்குர்பானி திட்டம் !

TNTJ அதிரை கிளையின் சார்பாக எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு கூட்டுக்குர்பானி திட்டத்திற்கான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் தொகையை அதிரை வாழ் ஏழை எளியோரின் வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவிக்காக மாத்திரம் செலவிடப்படும் 
 

 

Thursday, October 10, 2013

நெசவுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் 9.10.13 புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு நெசவுத்தெரு கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் அன்வர் அலி ஜனவரி சிறை நிறைப்பும் போராட்டம் ஏன் என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி இப்ராகீம் நபியின் ஏகத்துவ பிரச்சாரம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் 50க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்