Wednesday, July 01, 2009

அதிராம்பட்டிணத்தில் பல பகுதிகளில் நடைபெற்ற தர்ஹா எதிர்ப்பு பிரச்சாரம்

அதிராம்பட்டிணத்தில் தர்ஹா வழிபாட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த தமிழ்நாடு தவ்ஹீ்த் ஜமாத்தின் அதிராம்பட்டிணம் கிளை பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகிறது. இதன் விளைவாக அல்லாஹ்விற்கு இணைவைக்கும் இந்த செயல் நாளுக்கு நாள் பலகீனம் அடைந்து வருகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! 





இந்த ஆண்டு கந்தூரி விழா தொடங்குவதற்கு முன்பு இந்த கந்தூரி விழாவை குறித்து மக்களிடம் எவ்வாறு பிரச்சாரம் செய்வது என்பதை ஆலோசிக்க அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் கிளை தலைவர் ராஜிக் முஹம்மது தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் தெருமுனை பிரச்சாரம் மற்றும் டிஜிட்டல் பேணர் போன்றவற்றின் முலம் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை கிளையின் துணைத் தலைவர் Y. அன்வர் அலி, தஞ்சை மாவட்ட தாயி மௌலவி யாசிர் இம்தாதி, புதுக்கோட்டை மாவட்ட தாயி மௌலவி முஜாஹித், திருவாருர் மாவட்ட தாயி அல்தாஃப் ஹீசைன் ஆகியோர் ஒவ்வோரு நாளும் அதிராம்பட்டிணத்தின் பல பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் செய்தனர். இதில் மக்கள் ஆர்வத்தடன் கலந்து கொண்டனர்.

மேலும், அதிரையில் பல பகுதிகளில் ”வேண்டாம் தர்ஹா வழிபாடு” என்ற தலைப்பில் தர்ஹா வழிபாட்டை கண்டிக்கும் குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்ட டிஜிட்டல் பேணர்கள் வைக்கப்பட்டுள்ளன.