Tuesday, July 31, 2012

பேய் பிசாசுகளைத் துரத்தியடித்த டிஎன்டிஜே!


பேய் பிசாசுகளைத் துரத்தியடித்த டிஎன்டிஜே!



“பேய் நடமாட்டத்தால் மக்கள் பீதி!”, “பிசாசு நடமாட்டத்தால் மக்கள் கலக்கம்” என்று ‎அடிக்கடி பரபரப்பு செய்தி வெளியிட்டு, தங்களது விற்பனையை சூடுபிடிக்க வைத்து ‎பத்திரிக்கைகள் காசு பார்க்கின்றன. அந்த வகையில் கடந்த 12.07.2012 அன்று தினமலர் ‎பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ‎உள்ள ஆத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் பெண் பேய் ஒன்று சுற்றிக் ‎கொண்டிருப்பதாகவும், அது மொபைல் போனில் படம் எடுக்கப்பட்டதாகவும் ஒரு ‎பரபரப்பு செய்தியை வெளியிட்டிருந்தது தினமலர். இதே செய்தியை சன் டிவியும் ‎ஒளிபரப்பியது
‎ 

Saturday, July 28, 2012

அல்லாஹ்வுடைய சட்டத்தை அழிக்க துடிக்கும் ‎இஸ்லாமிய போராளி!‎

தாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் கூறும் ‎வழிகாட்டுதல்கள்தான் சரியான தீர்வு என்பதை உலக நாடுகளில் உள்ள ‎அனைத்து ஆட்சியாளர்களும், அனைத்து மக்களும் உணர்ந்து கொண்டு இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களை தங்களது நாடுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர். ‎அவ்வாறு கோரிக்கை விடுப்பது மட்டுமின்றி பல நாடுகளில் இஸ்லாம் ‎கூறும் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தத் துவங்கியும் விட்டனர்.‎

இப்படி உலகமே இஸ்லாத்தை நோக்கியும், இஸ்லாம் சொல்லக்கூடிய சட்ட ‎திட்டங்களை நோக்கியும் திரும்பிப்பார்த்து அவற்றை ஏற்றுக் கொண்டு வரும் ‎இந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் பாசிசவாதிகள் ‎இஸ்லாம் காட்டித் தந்த சட்டதிட்டங்கள் கொடூரமானவை என்று கூறி ‎இஸ்லாம் சொல்லக்கூடிய சட்டதிட்டங்களை அப்புறப்படுத்த கங்கணம் ‎கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்களது ஊது குழலாக மாறி ‎வரும் ம.ம.கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ் அந்த ‎சங்பரிவாரத்தின் கோரிக்கையை தனது கோரிக்கையாக வாந்தி எடுத்து ‎வருகின்றார்.‎

சமீபத்தில் பிஜேபி தலைவர் இல.கணேசனுடன் ஒரே மேடையில் ‎உற்சாகத்தோடு கைகோர்த்து நின்று போஸ் கொடுத்து தனது பாசிச முகத்தை ‎வெளிப்படுத்தினார்.‎

அதற்கு விளக்கம் சொல்கின்றேன் என்று அவர் விட்ட அறிக்கையைப் ‎பார்த்துவிட்டு அதன் பிறகு பல சகோதரர்கள் அவரைக் காரித்துப்பி விட்டு, ‎ம.ம.கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.‎

இப்படி நிலைமை மோசமாகி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் ‎நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ம.ம.கட்சியின் ஜால்ரா மன்னன் கலந்து ‎கொண்டு மரண தண்டனையை ஒழிப்பதுதான் தனது தலையாய பணி என்று ‎சூளுரைத்துள்ளார்.‎

மரண தண்டனை சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை ‎வைத்து அவ்வாறு, “மரண தண்டனை சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் ‎என்பதுதான் ஒவ்வொரு தமிழனுடைய உணர்வாக இருக்க முடியும்” என்று ‎கூறி தனது மொழி வெறியை வெளிக்காட்டியுள்ளார். இஸ்லாமிய ‎சட்டதிட்டத்தைவிட தனது இனவெறிதான் முக்கியம் என்பதை தனது ‎சூளுரையின் வாயிலாக நிரூபித்துள்ளார்.‎

“மரணதண்டனை வழங்குவது என்பது மிகப்பெரும் கொடூரம்” என்று கூறி ‎திருவாய் மலர்ந்துள்ளார்.‎

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான் :‎

நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) ‎சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை,பெண்ணுக்காக ‎‎(கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி ‎வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு ‎‎(கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ‎ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் ‎‎(இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் ‎எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் ‎அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.‎

அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு ‎உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள் அல்குர்-ஆன் 2 : 178, 179‎

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கொலைக்குப் பகரமாக கொலை என்ற ‎சட்டத்தின் மூலம் நமக்கு வாழ்வு உள்ளதாக சொல்லிக்காட்டுகின்றான்.‎

மேலும்,‎

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு ‎காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு ‎விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது ‎அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் ‎அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள் அல்குர்-ஆன் 5 : 45‎

மேற்கண்ட வசனத்தில் உயிருக்கு உயிர் என்பதுதான் சரியானது என்று ‎அல்லாஹ் சொல்லிக்கட்டுகின்றான். இந்த நாட்டில் உள்ள உருப்படியான ‎சட்டம் ஒன்று உள்ளதென்றால் அது இந்த மரணதண்டனை வழங்கும் ‎சட்டம்தான். மற்ற குற்றவியல் சட்டங்கள் எல்லாம் பல வருடங்கள் குற்றம் ‎செய்தவனுக்கு சோறு போட்டு, அவனை படிக்க வைத்து, அவனுக்கு ‎பாதுகாப்பளித்து, மருத்துவம் பார்த்து, அவனுக்குத் தேவையான அனைத்து சுக ‎போகங்களையும் வழங்கக் கூடிய மானங்கெட்ட சட்டமாகத்தான் உள்ளன.‎

அல்லாஹ் சொல்லக்கூடிய இந்த மரணதண்டனை வழங்கும் சட்டத்தை ‎ஒரு முஸ்லிம் வரவேற்க வேண்டுமா? அல்லது அதை ஒழித்துக்கட்ட களம் ‎காண வேண்டுமா?‎

அல்லாஹ்வுடைய இந்த சட்டத்தை யார் எதிர்ப்பார்கள்? இஸ்லாத்தை ஒழித்துக்கட்டத்துடிக்கும் பாசிசவாதிகள்தான் இந்த சட்டத்தை ஒழித்துக்கட்டத் ‎துடிப்பார்கள். அந்த பாசிசவாதிகளின் ஏஜெண்டாக செயல்படும் ம.ம.கட்சியின் ‎தலைவரோ அல்லாஹ் எந்த ஒரு சட்டத்தில் வாழ்வு இருப்பதாக ‎சொல்லிக்காட்டுகின்றானோ அந்த சட்டத்தை மவுத் ஆக்கப்பார்க்கின்றார்.‎

அல்லாஹ் சொல்லிக்காட்டக்கூடிய சட்டம் கொடூரமானது என்று சொல்லி ‎சங்பரிவாரத்தின் கூற்றை, குற்றச்சாட்டை அப்படியே வாந்தி எடுத்து, தான் ‎தமிழகத்து ஏஜெண்ட்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றார்.‎

‎அதற்காக நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொண்டு, “நான் இஸ்லாத்தை ‎ஒழித்துக்கட்டத்துடிக்கும் இஸ்லாமிய துரோகிதான்” என்று நிரூபித்துள்ளார்.‎

ஜால்ரா மன்னனிடம் சில கேள்விகள்:‎

இந்த ஜால்ரா மன்னனிடம் நாம் சில கேள்விகளைக் கேட்க ‎விரும்புகின்றோம்.‎

மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சொல்லி பிரச்சாரம் ‎செய்கின்றாரே!‎

இவரது நெருக்கமான உறவினரையோ அல்லது குடும்பத்தாரையோ ‎யாராவது கொன்றுவிட்டால் அவனுக்கு 28 ஆண்டுகள் இவர் தனது சொந்த ‎செலவில் சோறு போட்டு, வாரம் ஒரு முறை சிக்கன் வாங்கிக் கொடுத்து ‎அழகு பார்ப்பாரா?‎

மரணதண்டனை என்பது கொடூரமான சட்டம் என்றால், கற்பழிப்பு, கொலை, போன்ற செயல்களை செய்யக்கூடியவர்களை என்ன செய்யச் சொல்லுகிறது ‎இந்த சட்டமன்ற ஜனாஸா?‎

அதுமட்டுமல்லாமல் கடந்த பெருநாள் தினத்தன்று ராஜிவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று ‎தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களது மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானம் போட்டது ‎முஸ்லிம்களுக்கு பெருநாள் பரிசு என்று நாக்கூசாமல் பேட்டி கொடுத்தார்.‎

அது போல இந்தப் பெருநாள் தினத்தன்று, இந்திய அரசாங்கம், மரணதண்டனை என்ற கொடூரமான சட்டத்தை ரத்து செய்து முஸ்லிம்களுக்கு பெருநாள் பரிசளிக்க வேண்டும் என்று கோரிக்கை ‎வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.‎

இந்த ஜால்ரா மன்னன் தற்போது வசூல் மன்னனாக மாறி, சவூதி ‎அரேபியாவில் சரணாகதி அடைந்து, அங்கு சென்று வசூல் வேட்டையில் ‎ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளன.‎

மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதை கொள்கையாகக் ‎கொண்ட இந்தக் கொள்கை குன்று(?), மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சென்னையில் கூட்டத்தில் முழங்கிய தனது ‎வீரமுழக்கத்தை சவூதி அரசாங்கத்திடம் முழங்க திராணி உண்டா? என்று ‎இந்த ஜால்ரா மன்னனுக்கு சவால் விடுகின்றோம்.‎

அப்படி சவூதியில் மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ‎இவர் வீர முழக்கமிட்டால் இவருக்கு அங்கு “முர்தத்” என்ற பட்டம் ‎கொடுத்து மரண தண்டனை கொடுத்து விடுவார்கள் என்பது அவருக்குத் ‎தெரியாமலா இருக்கும்?‎

இந்த சட்டமன்ற ஜனாஸா இதே கோரிக்கையை வலியுறுத்தி சவூதியில் ‎ரகசியக் கூட்டம் போட்டதாகவும் கேள்வி.‎

பிஜேபியின் பிரச்சாரத்தை சவூதியிலும் சென்று செய்யும் இந்த ஜால்ரா ‎மன்னனை இஸ்லாமிய சமுதாயம்

அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.‎

நன்றி tntj.net


Sunday, July 22, 2012

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு (வீடியோ)


மனக்குழப்பதிற்கு மகத்தான தீர்வு ரமளான் தொடர் உரை 2012 
 உரை: 
பி.ஜெய்னுலாபிதீன்

[எல்லா வீடியோக்களையும் காண Playlist என்பதன் மீது சொடுக்கி பார்க்கவும்]


அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 2012(வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 2012-(வீடியோ)


[எல்லா வீடியோக்களையும் காண Playlist என்பதன் மீது சொடுக்கி பார்க்கவும்]

Friday, July 20, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 20.07.2012


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 20.07.2012

உரை: மௌலவி கோவை ரஹ்மத்துல்லாஹ்


Tuesday, July 17, 2012

பா.ஜ.கவுடன் கைகோர்த்த ம.ம.கட்சி (வீடியோ)!

பா.ஜ.கவுடன் கைகோர்த்த ம.ம.கட்சி (வீடியோ)!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணோசணின் கையை பிடித்து கோவிலை பாதுகாக்கும் மானம்காக்கும் (மானம் போக்கும்) சமுதாய MLA.



Friday, July 13, 2012

கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர் முஸ்லிம்களா?


[சுன்னத் ஜமாஅத் ஜக்கிய (அயோக்கிய) பேரவை என்ற பெயரில் இயங்கும் ஒரு கும்பல் இஸ்லாத்தின் பெயரால் மக்களை நரகத்திற்கு அழைத்து வருகிறது. இவர்கள் பெயரில் முஸ்லிம்களாக இருந்தாலும் இவர்களின் கொள்கை குஃபர் (நிராகரிப்பு). இவர்களை மக்களிடம் பல வகைகளில் அடையாளப்படுத்தியுள்ளது தவ்ஹீத் ஜமாஅத். இவர்களுடன் பல விவாதங்கள் நடத்தி, இவர்களின் கொள்கைகளை மக்களிடம் அடையாளப்படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத். இதன் விளைவாக, இவர்கள் தமிழ்நாட்டை விட்டு ஒட்டம் எடுத்து இலங்கையில் பிழைப்பு நடத்த ஆரம்பித்துள்ளார்கள். ஷேக் அப்துல்லாஹ் கோமாலி,  மேலை நாசர், அக்ராம் கான் போன்றோர் இந்த கூட்டத்தை சார்ந்தவர்கள் தான். இதில் கோமாலிக்கு மேலை நாசருக்கும் சண்டை வந்து இரண்டு பிரிவானர்கள். இவர்கள் கொள்கை சார்ந்த பலர் நமது ஊர் பள்ளியில் இமாமாக நின்று தொழகையும் நடத்துகிறார்கள் என்பது தான் வேதனையான செய்தி.

இந்த கோஷ்டி பரேலவி என்பவனின் கொள்கை பின்பற்றி வந்தவர்கள் என்பதையும், இவர்கள் காஃபிர்கள் என்பதையும் தவ்ஹீத் ஜமாஅத் தெளிவாக சொல்லியுள்ளது. இவர்கள் சம்பந்தமாக 'ஏகத்துவம்' மாத இதழில் எழுதப்பட்ட கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம்].

(ஆக்கம்: மௌலவி அப்துந் நாஸீர்)

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

அல்குர்ஆன் 51:56

அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனிதர்களாகிய நம்மைப் படைத்திருக்கிறான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு மத்தியில் ஷைத்தானிய அடிச்சுவடுகளைச் சிறிதும் பிசகாமல் பின்பற்றுகின்ற பரேலவி மதத்தினரால் சமாதி வழிபாடு, தாயத்து, தகடுகள், போன்ற எண்ணற்ற இணை கற்பிக்கின்ற காரியங்கள் புகுந்து விட்டன.

ஆனால் சத்தியத்தை யாருக்கும் அஞ்சாது எடுத்துரைக்கின்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிரப் பிரச்சாரத்தின் காரணத்தினால் ஷைத்தானிய சக்திகளான கப்ரு வணங்கி பரேலவிகளின் சிலந்திக் கோட்டைகள் தகர்த்தெறியப்பட்டுள்ளன

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.

அல்குர்ஆன் 21:18

இன்றைக்கு அதிகமான மக்கள் சத்தியத்தை விளங்கி உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றத் துவங்கி விட்டார்கள். இதனால் முஸ்லிம்களைப் போன்று வேடமிட்டு கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர், "நாங்கள் கப்ரை வணங்கவில்லை. கப்ரு ஸியாரத்தைத் தான் செய்கிறோம்'' என்று கப்ரு வணக்கத்திற்கும் கப்ரு ஸியாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்கள் செய்கின்ற இழிசெயலை நற்செயலாகக் காட்டியுள்ளனர்.

இணை கற்பிக்கின்ற, பெரும் பாவ காரியங்களான சமாதிகளைக் கட்டி அதற்கு விழாக்கள் எடுப்பது, ஊர்வலம் நடத்துவது, சமாதியில் சந்தணம் பூசுவது, மாலையிடுவது, மரியாதை செய்வது, மவ்லூது பஜனைகள் பாடுவது, நேர்ச்சைகள் வழங்குவது, சமாதிகள் பெயரில் சினிமாப் பாட்டுகளை இசையுடன் பாடி கச்சேரி நடத்துவது, யானை என்ற மிருகத்துடன் பரேலவியிஸ மாக்களும் சேர்ந்து மிருக ஊர்வலம் செல்வது, சமாதியில் முறையிடுவது, உண்டியல் வைத்து வசூலிப்பது போன்றவையும் உண்மையான இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற காரியங்களே என்பது இஸ்லாத்தைப் படிக்காத, கப்ரை வணங்கும் பரேலவியிஸ மதத்தினருக்கு விளங்கவில்லை.

உண்மையான இஸ்லாத்தில் கை தட்டுவது, சீட்டியடிப்பது போன்றவை தொழுகையாகக் கருதப்படாது. இதையே பரேலவிகளைப் போன்று அல்லாஹ்வை நம்பிய மக்கா காஃபிர்கள் தாங்கள் வணங்கிய சிலைகளுக்குச் செய்ததால் அக்காரியங்களை அவர்களுடைய தொழுகையாகவே அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) இந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. "நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்).

அல்குர்ஆன் 8:35

இது போன்றே கப்ரை வணங்கும் பரேலவிகள் செய்யும் மேற்கண்ட காரியங்களும், இறைவனுக்கு இணை கற்பிக்கும் வணக்கமாகவே கருதப்படும்.

அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. "அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை'' என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும், ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள் ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்தவொன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் என்று இஸ்லாம் கூறுகிறது.

இவ்வாறு இறைவனுக்கு இணை கற்பித்தல், மனிதர்கள் செய்கின்ற குற்றங்களிலேயே மிகவும் பெரிய குற்றம் எனவும், இக்கொள்கையிலிருந்து திருந்திக் கொள்ளாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை; என்றென்றும் நரகத்தில் கிடப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

இனி பரேலவிகள் கப்ரை வைத்துக் கொண்டு செய்யும் காரியங்கள் கப்ரு வணக்கமே என்பதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

இறந்தவர்களை இறை நேசர்கள் (அவுலியா) என்று தீர்மானிப்பது இணை வைத்தலே!

புத்தன் துறையைச் சேர்ந்த பரேலவி மதத்தினர் அல்ஆரிபுபில்லா என்ற பெயருடைய ஒருவரை இறை நேசர் என்றும் மகான் என்றும் கூறுகின்றனர். இவ்வாறே ஒவ்வொரு தர்ஹாவில் உள்ளவர்களையும் கூறுகின்றனர். இவர்கள் அவுலியா எனக் கூறுபவர்களில் சில குரங்களும், யானையும், அணில்களும், கட்டை பீடி மஸ்தான்களும், அறுபதடி பாவாக்களும் அடங்கியுள்ளனர்.

அல்லாஹ்வும், அவனிடமிருந்து இறைச்செய்தி பெற்றதன் அடிப்படையில் இறைத்தூதரும் யாரையெல்லாம் சுவர்க்கவாசிகள் என்றும் நரகவாசிகள் என்றும் கூறியுள்ளார்களோ அவர்களைத் தவிர வேறு யாரையும் அவர் மரணித்த பிறகு இவர் சுவர்க்கவாசி தான் அல்லது இவர் நரகவாசி தான் என்று தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் யாருக்கும் கிடையாது. இறைத் தூதர்கள் கூட இறைவன் அவர்களுக்கு அறிவித்தவர்களை மட்டும் தான் கூற முடியுமே தவிர வேறு யாரையும் அவர்களாகத் தீர்மானிக்க முடியாது

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்

அல்குர்ஆன் 10:62, 63

இறை நம்பிக்கை, இறையச்சம் கொண்ட அனைவரும் இறை நேசர்களே என மேற்கண்ட வசனம் கூறுகிறது. ஒருவனுடைய உண்மையான இறையச்சத்தையும், இறை நம்பிக்கையையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது. நபியவர்களுக்குக் கூட இந்த அதிகாரம் கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "மக்கüன் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ  அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை''

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)
நூல்: புகாரி 4351

இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்தும் விளங்கிக் கொள்ளலாம்

நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

"(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), "ஸாயிபின் தந்தையே! உம்மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்'' எனக் கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள்  "அவரை அல்லாஹ் கண்ணியப் படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?'' என்று கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத் தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?'' என நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், "இவர் இறந்து விட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.

நூல்: புகாரி 1243

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த சஹாபி. ஹிஜ்ரத் செய்தவர். அவர் மரணித்த பிறகு, அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தி விட்டான் என்று தீர்மானிப்பதை நபியவர்கள் கண்டிக்கிறார்கள். ஒருவன் எவ்வளவு நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நிலை என்னவென்பதை அல்லாஹ் ஒருவன் தான் அறிந்தவன். அவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது

நம்முடைய பார்வைக்கு ஒருவன் நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நல்லவன் தான் என நாம் தீர்மானிக்க முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றன. பின்வரும் ஹதீஸ் இதனை நூறு சத விகிதம் உறுதிப்படுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கüன் வெüப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்)செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்கüன் வெüப் பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸாஇத்(ரலி)
நூல்: புகாரி 2898

ஒருவர் மரணித்த பிறகு அவரை மகான், நல்லவர், அவுலியா, சுவர்க்கவாசி என்று தீர்மானிக்கின்ற அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியதாகும். இதற்கு மாற்றமாக இறை அதிகாரத்தைக் கையிலெடுத்து ஆரிபு என்பவரையும், முஹைதீன் என்பவரையும் அனைத்து தர்ஹாவில் அடக்கப்பட்டவர்களையும் யானைகளையும், குரங்குகளையும், கட்டைப்பீடி மஸ்தான்களையும் இந்த பரேலவி மதத்தினர் அவுலியாக்கள் என்று தீர்மானித்தது இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற காரியமே! இதை உண்மையான முஸ்லிம்கள் தெளிவாக விளங்கியுள்ளனர்.

கப்ரைக் கடவுளாக்கிய பரேலவி மதத்தினர்:

பிரார்த்தனை என்பது வணக்கமாகும். அதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செய்வது கூடாது. அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் நாம் அவர்களைக் கடவுளாக எடுத்துக் கொண்டோம் என்பதே அதன் பொருளாகும்.

"பிரார்த்தனை தான் வணக்கமாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி
நூல்கள்: அஹ்மத், திர்மிதீஹாகிம், அபூதாவூத்

வணக்கங்களில் சிறந்தது எதுவென நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "ஒரு மனிதன் தனக்காக இறைவனிடம் செய்யும் பிரார்த்தனையாகும்'' என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி
நூல்: அல்அதபுல் முப்ரத்

"பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை'' எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அருளியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி
நூல்: ஹாகிம்

இந்த நபிமொழிகள் யாவும் பிரார்த்தனை என்பது ஒரு வணக்கம் என்று கூடச் சொல்லாமல் வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் எனத் தெளிவாக அறிவிக்கின்றன. யார் இறைவனல்லாத மற்றவர்களைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள் இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாகவே இறைவனால் கருதப்படுவர். லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) என்பதில் இவர்களுக்கு நம்பிக்கையில்லை

எனவே கப்ரிடம் பிரார்த்தனை செய்யும் பரேலவி மதத்தினர் கப்ரு வணங்கிகளே!

கப்ரில் உள்ளவர் கேட்கிறார் என்ற நம்பிக்கை:

எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும், எப்போது அழைத்தாலும் செவியேற்றுப் பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அவ்வாற்றல் இருப்பதாக நம்புபவர்கள் இறை வணக்கத்தை இறைவனல்லாத மற்றவர்களுக்குச் செய்தவர்களாவர். இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

அல்குர்ஆன் 35:13,14

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அல்குர்ஆன் 7:194

செத்தவன் செவியேற்க மாட்டான் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

ஆனால் பரேலவி மதத்தினர் ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கானோர் கப்ருக்கு முன்னால் நின்று கேட்கின்றனர். கப்ரில் உள்ளவர் அனைவரின் கூற்றையும் கேட்கிறார் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு பிரார்த்திக்கின்றனர்.

மேலும் எங்கோ வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற ஒரு பரேலவி மதத்தைச் சார்ந்தவன், தமிழே தெரியாத என்றைக்கோ இறந்து பக்தாதில் அடங்கி மண்ணோடு மண்ணாகி விட்ட முஹைதீன் என்பவரை அழைக்கின்றான். எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் செத்தவன் கேட்கின்றான் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு செய்கின்றனர். முஹைதீனை ஆயிரம் தடவை அழைத்தால் அவர் கண்ணெதிரே வருவார் என்றும் மவ்லிதுகளில் எழுதி வைத்துள்ளனர்.

எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும், எப்போது அழைத்தாலும் செவியேற்றுப் பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.  இவ்வாற்றல் கப்ருக்கு இருப்பதாக நம்புவதால் பரேலவிகள் கப்ரு வணங்கிகளே!

கப்ருக் கடவுளிடம் உதவி தேடும் பரேலவி மதத்தினர்:

(அல்லாஹ்வே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

அல்குர்ஆன் 1:4

மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை.

அல்குர்ஆன் 3:126

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

அல்குர்ஆன் 3:160

நபி (ஸல்) கூறினார்கள்: நீ எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டு (மட்டுமே) உதவி தேடு.

அறிவிப்பவர்: இப்னு  அப்பாஸ் (ரலி
நூல்: திர்மிதி 2440

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடும்படி மேற்கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் நமக்குக் கற்றுத் தருகின்றன. எனவே உதவி தேடுதல் என்பது வணக்கமாகும்.

இந்தப் பரேலவி மதத்தினர் இறைவனிடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்பதன் சரியான பொருளைத் திரிக்கின்றனர்.

"நன்மையான காரியங்களிலும் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரியங்களிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!'' 

அல்குர்ஆன் 5:2

இந்த வசனத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கிறான்; வலியுறுத்தவும் செய்கிறான்.

எனவே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வதும், மனிதர்களை மனித நிலையில் வைத்து உதவி தேடுவதும் இணை வைத்தலாகாது.

ஆனால் மனிதனை இறைவனது அம்சம் பொருந்தியவனாகக் கருதும் விதமாக உதவி தேடுவது மட்டுமே இணை வைத்தலாகும். கப்ரில் அடங்கி மண்ணோடு மண்ணாகி விட்ட ஒருவரை, ஒருவன் அழைத்து உதவி தேடும் போது அவர் இறைவனது அம்சம் கொண்டவராக நம்பப்படுகிறார்

எங்கிருந்து அழைத்தாலும் எந்த மொழியில் அழைத்தாலும் எப்போது அழைத்தாலும் செவியேற்றுப் பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது

இவ்வாற்றல் கப்ருக்கு இருப்பதாக நம்புவதாலும் எவ்வித உபகரணங்களும் இல்லாமால் நோய் நீக்குதல்,  குழந்தை பாக்கியத்தை அளித்தல் போன்ற ஆற்றல்கள் இறைவனுக்கு இருப்பதைப் போன்று கப்ருக்கு இருப்பதாக நம்பி இறைவனிடம் மட்டுமே முறையிட வேண்டியவற்றை கப்ரிடம் முறையிடும் பரேலவிகள் கப்ரு வணங்கிகளே!

கப்ருக்கு அறுத்துப் பலியிட்டு நேர்ச்சை செய்தல்:

உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக

அல்குர்ஆன் 108:2

இந்த வசனத்தில் இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்

தொழுகை எப்படி வணக்கமோ அது போல் அறுத்துப் பலியிடுவதும் வணக்கமே! தொழுகைகளை எப்படி இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாதோ, அது போல் அறுத்துப் பலியிடுவதையும் இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாது என்று இங்கே தெளிவுபடுத்தப்படுகின்றது.

"யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் லஃனத் செய்கிறான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)  
நூல்: முஸ்லிம் 4001

"யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ, அதை அவர் நிறைவு செய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ, அதை நிறைவேற்றலாகாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி
நூல்: புகாரி 6696

அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் உயிரே போய் விடும் என்ற நிலை ஏற்பட்டாலும், எதனையும் பலியிடக் கூடாது. அற்ப போன்ற மதிப்பற்ற உயிரினங்களைக் கூட, அல்லாஹ் அல்லாதவர்களுக்குப் பலியிடக் கூடாது; நேர்ச்சை செய்யக் கூடாது  என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

நேர்ச்சையும் அறுத்துப் பலியிடலும் ஒரு இபாதத் - வணக்கம் என்பதை எவர் அறியவில்லையோ, அதன் படி நடக்கவில்லையோ, அவர்கள் இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாக ஆகி நிரந்தர நரகத்திற்குத் தகுதி பெறுகிறார்கள்.

எனவே கப்ருகளுக்கு அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல் என்ற வணக்கங்களைச் செய்யும் பரேலவி மதத்தினர் கப்ரு வணங்கிகளே!

யானையைக் கடவுளாக்கிய கப்ரு வணங்கிகள்:

கப்ரு வணக்கத்தை கப்ரு ஸியாரத் என்று பெயர் மாற்றம் செய்யும் பரேலவிகள் தங்களுடைய வணக்கத் தலங்களாகிய தர்ஹாக்களில் யானையைக் கட்டி வைத்து தீனி போடுகின்றனர். ஆண்களும் பெண்களும் கலர்ஃபுல்லாகக் காட்சி தந்து ஒருவரை ஒருவர் பார்த்து ரசிப்பதற்காவும், சினிமாப் பாட்டுப் பாடி பக்தர்களைக் குஷிப்படுத்தவும், கோயில்களில் சிலைகளுக்காக பாடப்படும் பஜனைகளை தங்களது கோயில்களாகிய தர்ஹாக்களில் பாடுவதற்காவும் இன்னும்  மார்க்கத்திற்கு புறம்பான பல அனாச்சாரங்களை அரங்கேற்றுவதற்காகவும் கந்தூரி விழா என்று ஏற்பாடு செய்வர்.

இதற்குக் கூட்டம் சேர்ப்பதற்காக யானையைத் தெருத் தெருவாக அழைத்து வருவர். இந்த யானையைப் பார்க்கும் போது தான் மக்களுக்கு அவுலியாவின் ஞாபகம் வந்து இவர்களின் வணக்கத் தலங்களாகிய தர்ஹாவில் நடக்கும் லீலைகளில் கலந்து கொள்வார்கள் என்பதற்காவே இவ்வாறு செய்கிறோம் என பரேலவிகள் கூறுகின்றனர்

நபியவர்கள் இவ்வாறு தான் கப்ரு ஸியாரத் செய்தார்களா? என்றெல்லாம் இவர்களிடம் கேள்வி கேட்கக் கூடாது. ஏனென்றால் இவர்கள் பரேலவி மதத்தினர்.

இந்தப் பரேலவி மதத்தினர், யானை தனது தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி ஒரு பக்தனின் மீது சிந்தினால் அவன் பாக்கியம் பெற்றவனாகி விடுவான் என நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த யானை தண்ணீரை உறிஞ்சி அடிப்பதின் மூலமே தர்ஹாக்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் வருமானம் வருகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மேலும் இந்தப் பரேலவி மதத்தினர் யானை ஊர்வலம் வரும் போது அதன் முதுகிலிருக்கும் கொடிக்களையின் பூக்களைப் பெறுவதையும், தங்கள் குழந்தைகளை அதன் முதுகில் ஏற்றி இறக்குவதையும் பெரும் பாக்கியமாகவே கருதுகின்றனர்.

இவர்கள் யானையைக் கடவுளாகக் கருவதுவதாலேயே இது போன்ற வணக்கங்களைத் தங்களுடைய யானைக் கடவுளுக்குச் செய்கின்றனர் என்பதை உண்மையான முஸ்லிம்கள் நன்றாக விளங்கியே வைத்துள்ளனர்.

சந்தனம், கொடிக்களை, நெருப்பை வணங்கும் பரேலவிகள்:

பரேலவி மதத்தினர் தங்களது வணக்கத்தலங்களாகிய தர்ஹாக்களில் அவர்கள் கடவுளாக வணங்கும் கப்ருகளுக்கு சந்தனத்தைப் பூசுகின்றனர். முஸ்லிம் அல்லாதவர்கள் கற்சிலைகளுக்குப் பாலை ஊற்றி அபிஷேகம் செய்கின்றனர். அது போன்று கற்சிலையை விடக் கீழ் நிலையில் உள்ள கப்ருகளுக்கு சந்தன அபிஷேகம் செய்தல், சந்தனம் பூசுதல் என்பது இணை கற்பிக்கின்ற காரியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை

அது போன்ற கப்ருகளில் பூசப்பட்ட சந்தனம் தங்களுக்கு பரக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அதனைக் கழுத்துகளில் பூசிக் கொள்கின்றனர். இறைவனல்லாத ஒரு பொருள் இறைவனைப் போன்று நமக்கு நன்மை ஏற்படுத்தும் என நம்பிக்கை வைப்பதால் இதுவும் இணை கற்பிக்கின்ற காரியமே!

அது போன்று தர்ஹாக்களில் விளக்குகளை ஏற்றி வைத்து   அந்த நெருப்பைத் தொட்டு முத்தமிடுகின்றனர். அதற்கு விளக்கு ராத்திரி என்றும் பெயர் வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதால் துன்பங்கள் நீங்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர். இதே நம்பிக்கையில் தான் கொடிக்களைகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். நமக்கு துன்பத்தையும், இன்பத்தையும் ஏற்படுத்தக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 10:107

சந்தனமும், நெருப்பும், கொடிக் களைகளும் இறைவனைப் போன்று இன்ப துன்பங்களைத் தரக் கூடியவை என பரேலவி மதத்தினர் நம்பிக்கை வைத்திருப்பதால் கொடி ஊர்வலமும், தர்ஹாக்களில் விளக்கேற்றுவதும் இணை கற்பிக்கின்ற காரியங்கள் தாம் என்பதில் சந்தேகமில்லை.

பஜனை பாடுவதும் உண்டியல் வைப்பதும் இணை கற்பித்தலே!

கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர் தங்களுடைய வணக்கத் தலங்களிலே தங்களுடைய கடவுளாகிய கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரைப் புகழ்ந்து பஜனைகளைப் பாடுகின்றனர். இந்த பஜனைகள் அனைத்துமே இறைவனுடைய பண்புகளை இறைவனின் அடிமைகளுக்கு வழங்கி அவர்களைக் கடவுளாக வழிபடக்கூடிய பாடல்களாகவே அமைந்துள்ளன

இதற்கு ஒரு சிறிய உதாரணமாக அனைவரும் அறிந்த யாகுத்பா என்ற பஜனையில் இடம் பெற்ற ஒரு கருத்தைக் கூறலாம். அதாவது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து பாக்தாத்தில் மரணமடைந்த முஹைதீன் அவர்களை, யார், எங்கிருந்து, எந்த மொழியில், எந்த நேரத்திலும் "முஹைதீனே! வந்து விடுங்கள்!' என்று ஆயிரம் தடவை அழைத்தால் அவர் கண் முன்னே காட்சி தருவார் என்று பாடுகின்றனர்
நபிமார்களின் உடல்களைத் தவிர மற்றவர்களின் உடல்களை மண் சாப்பிட்டு விடும் என்று நபியவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மண்ணோடு மண்ணாகி விட்ட முஹைதீன் என்பவர் இறைவனைப் போன்று ஆற்றலுள்ளவர் என பரேலவி மதத்தினர் பஜனை பாடுவதாலும் இவர்களுடைய பஜனைகள் அனைத்தும் இவ்வாறு அமைந்துள்ளதாலும், இந்தப் பஜனைகளை இறந்தவர் கேட்கிறார் என்ற நம்பிக்கை வைத்திருப்பதாலும் பஜனைகள் பாடுவது இணை கற்பிக்கின்ற காரியமே!

இது போன்றே நாம் எந்த ஒன்றைச் செலவு செய்தாலும் இறைவனுக்காக மட்டுமே செலவிட வேண்டும். இறைவனைத் தவிர மற்றவர்களின் திருப்திக்காகவோ அவர்கள் தனக்கு அருள்புரிய வேண்டும் என்ற நம்பிக்கையிலோ ஒருவன் மக்களுக்கு வாரியிறைத்தாலும் உண்டியலில் போட்டாலும் அக்காரியம் இணை கற்பிக்கின்ற காரியமே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் அவனுக்காக மனத்தூய்மையுடனும் அவனுடைய திருமுகத்தை நாடியும் செய்கின்ற செயலைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: நஸயீ 3089

ஆனால் பரேலவி மதத்தினர் தங்களுடைய கப்ருக் கடவுளின் திருப்திக்காகவும், அருளுக்காகவும் உண்டியல் வைத்து வசூலித்து கொள்ளையடிப்பதால் தர்ஹாக்களில் வைக்கப்பட்ட உண்டியல்களில் காசு போடுவதும் இணை கற்பிக்கின்ற காரியமாகும்.

பரேலவி மதத்தினர் கப்ரை வணங்குகிறார்கள் என்பதற்கு இன்னும் பல சான்றுகள் உள்ளன. யூத, நஸராக்களின் கலாச்சாரமாகிய இந்தச் சமாதி வழிபாட்டை ஒழிப்பதற்காகத் தான் நபியவர்கள் பின்வரும் எச்சரிக்கைகளைக் கூறியுள்ளார்கள்.

கப்ரைக் கட்டுவது, பூசுவது கூடாது!

நபி (ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  
நூல்: முஸ்லிம் 1610

கப்ருகளைத் தரைமட்டமாக்குதல்:

அபுல் ஹய்யாஜ் அல் அஸதி அறிவிக்கிறார்கள்

அலீ (ரலி) அவர்கள் என்னிடம், "நபி (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன். எந்தச் சிலையையும் அதனை அழிக்காமலும் எந்தக் கப்ரையும் அதனைத் தரைமட்டம் ஆக்காமலும் விட்டு விடாதே!'' என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1609

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களுடைய கப்ருகளைத் தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.

அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத்(ரலி)  
நூல்: அஹ்மது 22834

அல்லாஹ்வின் சாபம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  யூத, நஸராக்களை அல்லாஹ் சபித்து விட்டான். (ஏனென்றால்) தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை தர்ஹாக்களாக எடுத்துக் கொண்டனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி
நூல்: புகாரீ 1330

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் சமாதிகளை தர்ஹாக்களாக ஆக்கிக் கொண்டார்கள். நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கிறேன்.

அறிவிப்பவர்: சுன்துப் (ரலி)
நூல்:  முஸ்லிம் 827

படைப்பினங்களிலேயே மோசமானவர்கள்:

"அறிந்து கொள்ளுங்கள், மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை தர்ஹாக்களாக ஆக்கிக் கொண்டவர்கள் தான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉபைதா (ரலி)  
நூல்: அஹ்மத் (1599)

எனவே சாபத்தைத் தரும் இந்தச் சமாதி வழிபாட்டைப் புறக்கணிப்போம். சத்தியத்தை நோக்கி அணி திரள்வோம்.

நன்றி: ஏகத்துவம்